மகன் பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post No.11,473)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,473

Date uploaded in London – 25 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

Third Part of Arappalichura Satakam with London swaminathan commentary

          3. நன்மக்கட் பேறு

தங்குலம் விளங்கிடப் பெரியோர்கள் செய்துவரு

     தருமங்கள் செய்து வரலும்,

  தன்மமிகு தானங்கள் செய்தலும், கனயோக

     சாதகன் எனப்படுதலும்,

மங்குதல் இலாததன் தந்தைதாய் குருமொழி

     மறாதுவழி பாடு செயலும்,

  வழிவழி வரும்தமது தேவதா பத்திபுரி

     மார்க்கமும், தீர்க்கா யுளும்,

இங்கித குணங்களும், வித்தையும், புத்தியும்,

     ஈகையும், சன்மார்க் கமும்

  இவையெலாம் உடையவன் புதல்வனாம்; அவனையே

     ஈன்றவன் புண்ய வானாம்;

அங்கச விரோதியே! சோதியே! நீதிசேர்

     அரசன்எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

(இ-ள்.) அங்கச விரோதியே – மன்மதனை அழித்தவனே!,

சோதியே – ஒளியே!, நீதிசேர் அரசன் – முறை தவறா அரசனான,

எமது ……… தேவனே!,

தம் குலம் விளங்கிடப் பெரியோர்கள் செய்துவரு

தருமங்கள் செய்து வரலும் – தம் மரபு புகழ்பெற அறிஞர்கள் புரிகின்ற

அறங்களை விடாது புரிதலும், தன்மம் மிகு தானங்கள் செய்தலும் –

பொருளீட்டும் வலிமையற்றோர்க்குச் செய்யும் தருமமும், நல்லோர்க்கு

உதவும் தானமும் ஆகிய இவற்றைச் செய்வதும்,

கனயோக சாதகன் எனப்படுதலும் – பெரும்புகழுக்கேதுவான இலக்கணமுடையோன் என்பதும்,

மங்குதல் இலாத தன் தந்தைதாய் குருமொழி மறாது வழிபாடு செயலும் –

குன்றாத தன் பெற்றோர்களின் மொழியையும் ஆசிரியர் மொழியையும்

தட்டாமற் பணிபுரிதலும்,

 வழிவழி வரும் தமது தேவதா பத்திபுரி

மார்க்கமும் – பரம்பரையாகச் செய்துவரும் தங்கள் தெய்வ வழிபாட்டு

நெறியில் நிற்றலும்,

தீர்க்க ஆயுளும் – நீண்டவாழ்நாளும், இங்கித

குணங்களும் – நற்பண்புகளும்வித்தையும் – கல்வியும், புத்தியும் –

அறிவும், ஈகையும் – கொடையும், சன்மார்க்கமும் – நல்லொழுக்கமும்,

(ஆகிய) இவையெலாம் உடையவன்

புதல்வன் ஆம் – இவற்றை யெல்லாம்

உடையவன் நன்மகனாவான்அவனை ஈன்றவனே புண்யவான் ஆம் –

அவனைப் பெற்றவனே நல்வினை யுடையவன் ஆவான்.

.

     (க-து.) நன்மகன் இங்குக் கூறிய பண்புகளெலாம் உடையோனாவான்.

XXXX

லண்டன் சுவாமிநாதன் வியாக்கியானம்- விளக்கவுரை

நல்ல மகனைப் பெற என்ன தவம் செய்தனையோ என்று பொது மக்கள் வியக்க வேண்டும் . இதை வள்ளுவனும்

என்நோற்றான் கொல் எனுஞ் சொல் — என்று (குறள் 70) பாடுகிறார்.

பெரியோரின் வாழ்க்கையைப் படிக்கையில் இவர் இன்னாரின் தவப் புதல்வர் என்று படிக்கிறோம்

இதே கருத்தை பெரியாழ்வார் திவ்வியப்பிரபந்தத்திலும், திருத்தக்க தேவர் சீவக சிந்தாமணியிலும், கம்பன், ராமாயணத்திலும் கூறுவது ஒப்பிட்டுப் பார்த்து ரசிக்க வேண்டிய பகுதிகளாம்:-

என்ன நோன்பு நோற்றாள் கொலோ

இவனைப் பெற்ற வயிறுடையாள்

என்னும் வார்த்தை எய்துவித்த இருடீகேசா

–பெரியாழ்வார் 2.2-6

எத்துணைத் தவம் செய்தான் கொல்

என்று எழுந்துலகம் ஏத்த — சீவக.2567

வல்லை மைந்தவம் மன்னையும் என்னையும்

எல்லையில் புகழ் எய்துவித்தாய் என்றான்

–கம்ப, சடாயுகாண் படலம் 41

XXXX

யார் நல்ல மகன் ?

குலத்தின் பெருமையை நிலைநாட்ட வேண்டும் ; தோன்றிற் புகழோடு தோன்றவேண்டும்; தான தருமங்கள் செய்யவேண்டும் சான்றோன் என்று மற்றவர் மெச்சவேண்டும்; அப்போது ஈன்றபொழுதும் பெரிது உவப்பாள் தாயார் (குறள் 69).

மாதா பிதா குரு தெய்வம் ஆகியவற்றைப் போற்ற வேண்டும். தந்தையானவர் தவம் செய்து பெற்று இருக்க வேண்டும். மகனானவன் எழுபிறப்பும் தீயவை தீண்டா பண்புடை மகனாக (குறள் 62) வாழவேண்டும்

வள்ளுவன் அழகாக பத்து குறட்பாக்களில் சொன்னதை அம்பலவாணரும் நமக்கு நினைவு படுத்துகிறார்.

XXX

சூரிய குல மன்னர்களின் குணங்கள்- காளிதாசன்

ராமனைப் பெற்றுக்  கொடுத்த சூரிய குலத்தில் எல்லோருடைய மகன்களுக்கும் இருந்த பண்புகளை உலக மஹா கவி காளிதாசன் விளக்குகிறான்

ஆஜன்ம சுத்தானாம்ஆ பலோதய கர்மணாம்ஆசமுத்ர க்ஷிதீசானாம்ஆநாக ரத வர்த்மனாம்

ரகு குல மன்னர்கள் பற்றி நான்கு விஷயங்களை ரகு வம்ச முதல் சர்க்கத்திலேயே காளிதாசன் (ஸ்லோகம் எண்:5) சொல்லி விடுகிறான்:

1.பிறவியிலேயே பரிசுத்தமானவர்கள் (( ஆஜன்ம சுத்தானாம்)).
2.பயன் கிடைக்கும் வரை முயற்சியை உடையவர்கள் (( ஆ பலோதய கர்மணாம்)) — (எடுத்த காரியம் யாவினும் வெற்றி)

3. இரு பக்கமும் சமுத்திரத்தின் கரைகள் வரை ஆட்சி புரிபவர்கள் (( ஆசமுத்ர க்ஷிதீசானாம்)). பரந்த சாம்ராஜ்யம்!

4.அவர்களுடைய தேர்கள் சுவர்க்கத்தின் வாசல் வரை செல்லத் தக்கன (( ஆநாக ரத வர்த்மனாம்)) !!

இனி காளிதாசன் ரகு வம்ச காவியத்தில் முதல் சர்க்கத்தில் என்ன சொல்கிறான் என்பதைப் பார்ப்போம்:–

தெய்வ நம்பிக்கை உடையோர்; தேவ பூஜை செய்தனர்
தானம் கேட்டு வந்தவரின் மனம் வருந்தாத அளவுக்கு தானம் கொடுத்தனர்.

குற்றத்திற்கு ஏற்ற தண்டனை வழங்கினர்.

பிறருக்குக் கொடுப்பதற்காக பொருள் ஈட்டினர்.

காலத்திற்கு ஏற்ற அறிவு பெற்றனர்; அதாவது காலத்திற்கு ஏற்ப புதுப்புது விஷயங்களைக் கற்றனர்.

குறைவாகப் பேசினர்; எதற்காக? அதிகம் பேசினால் வாய் தவறி சத்தியம் பிறண்டு விடுமோ என்று பயந்து சத்தியத்தைக் காக்க மிதமாகப் பேசினர்.

புகழிற்காக மற்ற மன்னர்களை வென்றனர். நாடு பிடிக்க அல்ல; மக்களைக் கொன்று குவிக்க அல்ல.

இளமையில் கல்வி கற்றனர்; “இளமையில் கல்” என்ற ஆத்திச்சூடி வசனம் அவர்களுடைய குறிக்கோள்

யௌவனப் பருவத்தில் (வாலிப வயதில்) இன்பம் துய்த்தனர்.

திருமணம் செய்து கொண்டனர்; எதற்காக—வம்ச விருத்திக்காக!! (செக்ஸுக்காக அல்ல)

வயோதிகப் பருவத்தில் காட்டிற்குப் போய் தவம் செய்து யோகத்தினால் உயிரை விட்டனர்.

XXXXXX

எனக்கு சிறு வயதிலேயே புதுக்கோட்டை ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் ஒரு மந்திரம் சொல்லிக் கொடுத்தார். அவர் உலகப் புகழ்பெற்ற சஹஸ்ர சண்டி ஹோமம் செய்து சென்னை, புதுக்கோட்டை முதலிய இடங்களில் கோவில் கட்டுவதற்கு முன்னர் எப்போது மதுரைக்கு வந்தாலும் எனது தந்தை தினமணி வெ.சந்தானத்தைச் சந்தித்து என் தாயார் திருமதி ராஜலெட்சுமியின் கைகளால் மூன்றே கவளம் மட்டும் உணவை வாங்கிச் சாப்பிட்டுச் செல்வார். அப்போது எங்கள் சகோதரர்கள் அனைவரையும் உட்காரவைத்து கீழ்கண்ட மந்திரத்தை உபதேசித்தார் :

ஸ்ரீ மாதா ஆயுர் தேஹி தனம் தேஹி வித்யாம் தேஹி

மஹேஸ்வரி ஸமஸ்த அகிலம் தேஹீ

தேஹீ  மே புவனேஸ்வரீ

இதில் அம்பலவாணர் சொன்ன ஆயுள், தானத்துக்குத் தேவையான தனம் (பணம்), நீண்ட ஆயுள் வேண்டப்படுகிறது உலகே என் வசமாக வேண்டும் என்பது ஸமஸ்த அகிலம் தேஹீ என்பதில் வந்து விடுகிறது

எல்லோரும் இதை தமிழிலு ம் வேண்டலாம்

அபிராமி பட்டர் அழகாக 16 பேறுகளையும் அடுக்கி வேண்டுகிறார் :

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்

கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையுங் குன்றாத இ­ளமையும்

கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்

தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு

துன்பமில்லாத வாழ்வும்

துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!

ஆதிகட வூரின் வாழ்வே!

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!

அருள்வாமி! அபிராமியே!

XXXX

மற்றவர்கள் உங்களுக்கு வணக்கம் செலுத்தினால், நமஸ்கரித்தால் , கீழ்கண்ட பாடலைச் சொல்லி வாழ்த்துங்கள்

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா

மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா

இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே

கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

இவை எதுவும் புதிதல்ல;  வேத காலம் முதல் ஸம்ஸ்ருதத்தில் இருந்ததை நம்மவர்கள் அழகாக தமிழ்ப் படுத்தியுள்ளனர் .

பிராமணர்கள் மற்றவர்களை ஆசீர்வதிக்கும் போது கீழ்கண்ட வேத மந்திரத்தைச் சொல்லி தலையில் மஞ்சள் அக்ஷதையைப் போடுவார்கள்

ஸ்ரீவர்ச்சஸ்யமாயுஷ்ய மாரோக்யமாவிதாத் பவமானம் மஹீயதே

தனம் தான்யம் பசும் பஹு  புத்ரலாபம் சதஸம்வத்ஸரம் தீர்கமாயு:

மஹாலக்ஷ்மியே, ஆற்றல், வளமான வாழ்க்கை, நல்ல உடல் நிலை இவற்றை எனக்குத் தந்தபடி எப்போதும் காற்று வீசட்டும். செல்வம், உணவுப் பொருட்கள், மிருகங்கள், பிள்ளைச் செல்வங்கள், நூறாண்டுகள் நீண்ட ஆயுள் எல்லாம் எனக்குக் கிடைக்கட்டும்.

XXX subham xxxxx

Tags.மகன் ,அறப்பளீச்சுர சதகம், மக்கட் பேறு, லண்டன் சுவாமிநாதன், விளக்க உரை, புதுக்கோட்டை, சாந்தானந்த சுவாமிகள்

சீதை வணங்கும் 11 பெண்கள் ! (Post No.11,472)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,472

Date uploaded in London – 25 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

சீதையை ராவணனைக் கட்டிக்கொள்ளும்படி அரக்கிகள் (ராக்ஷசிகள்) மிரட்டுகின்றனர். சீதா தேவி பயந்தபோதும் அவர்களுக்கு இணங்கவில்லை. தான் 11 புகழ்பெற்ற பத்தினிகளைப் பின்பற்றப்போவதாக அறிவிக்கிறாள் . அந்த 11 பேரில் தமயந்தி, சாவித்திரி போன்ற பதிவ்ரதைகள் பட்ட கஷ்டத்தை எல்லா இந்து மகளிரும் அறிவர். அதே போல சீதா தேவியும் காட்டில் 14 ஆண்டுக்கு கஷ்டப்பட்டதோடு பட்டாபிஷேகம் முடிந்த பின்னரும் கஷ்டப்பட்டாள் இதைப் படிக்கும் இந்துப் பெண்களுக்கு எதையும் தாங்கும் இதயம் வந்துவிடும் . சீதைக்குப் பின்னர் வந்த திரவுபதியும் கண்ணகியும் போராடி வெற்றி பெற்றதற்கு சீதையும் அவரால் போற்றப்பட்ட 11 பெண்களும் முன்னுதாரணம் என்றால் அது மிகையாகாது.

சீதா தேவி போற்றும் 11 பெண்கள் யார் தெரியுமா?

சூரியனுடைய மனைவி சுவர்ச்சலா

இந்திரனின் மனைவி சசி தேவி

வசிஷ்டரின் மனைவி அருந்ததி

அகஸ்தியரின் மனைவி லோபாமுத்ரா

சத்தியவானின் மனைவி ஸாவித்ரி

நளனின் மனைவி  தமயந்தி

சந்திரனின் மனைவி ரோஹிணி

சியவனரின் மனைவி  சுகன்யா

செளதாசரின் மனைவி மதயந்தி

கபிலமுனியின் மனைவி ஸ்ரீமதி

சகரரின் மனைவி கேசினி

இன்றுவரை வேத கால நாகரீகம் அழியவில்லை என்பதற்கு சான்று?

இப்போதும் இந்து மதப் பெண்கள் இந்தப் பெயர்களைச் சூட்டிக்கொள்வதிலிருந்து வெள்ளிடைமலையாக விளங்குகிறது .இவர்களில் தமயந்தி, சாவித்திரி போன்றோர் பட்ட கஷ்டங்கள், சீதையின் 14 ஆண்டு வனவாசத்தை எளிதாக்கிவிடுகிறது. மகாபாரதத்துக்கு முந்தையது ராமாயணம் என்பதால் திரவுபதி பெயர் இடம்பெறவில்லை. திரவுபதியும் 13 ஆண்டுக்காலம் காட்டில் கஷ்டப்பட்டாள் .

தமிழ்நாட்டில், கண்ணகியின் துயரத்தை அறியாதோர் எவருமிலர். கணவன் கோவலன் வேறொரு பெண்ணுடன் வாழ்ந்துவிட்டுத் திரும்பியபோதும் மனம் கோணாது ,அவனை ஏற்று, தன்னுடைய கால் சிலம்பைக் கொடுத்துப் புது வாழ்வு துவங்குவோம் வாருங்கள் என்கிறாள். அவளும் அக்கினி சாட்சியாக பிராமணர் முன், கல்யாணம் செய்த்தை இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் கூறுவதாலும் வசிஷ்ட மஹரிஷியின் மனைவியான அருந்ததிக்கு நிகரான கற்புடையவள் என்னு இளங்கோ பாராட்டுவதாலும் , கண்ணகியே  புராணத்தில் வரும் சிபிச் சக்ரவர்த்தியின் பெருமையைப் பாராட்டுவதாலும் அவளுக்கும் மேற்கூறிய பெண்களின் கதையும் சீதா தேவி, அஹல்யா, திரவுபதி, தாரா, மண்டோதரி துயரங்களும் தெரிந்திருக்கும்.

XXX

இதோ வால்மீகியின் சொற்களின் வாயிலாகச் சீதா தேவியை செவிமடுப்போம்.

न मानुषी राक्षसस्य भार्या भवितुमर्हति।

कामं खादत मां सर्वा न करिष्यामि वो वचः।।5.24.8।।

ந மானுஷி ராக்ஷஸஸ்ய பார்யா பவிதும் அர்ஹதி

காமம் காதத  மாம் ஸர்வா ந கரிஷ்யாமி வோ வசஹ

–சுந்தர காண்டம், வால்மீகி ராமாயணம் , சர்க்கம் 24

( ராவணனை ஏற்றுக்கொள்  என்ற ) உங்கள் யோஜனையை நான் ஏற்கமாட்டேன் ; ஒரு மனிதப் பிறவி ராக்ஷஸனின் மனைவியாக முடியாது. என்னை நீங்கள் விழுங்கிச் சாப்பிட்டுவிடுங்கள்.

दीनो वा राज्यहीनो वा यो मे भर्ता  मे गुरुः।

तं नित्यमनुरक्तास्मि यथा सूर्यं सुवर्चला।।5.24.9।।

தீனோ வா ராஜ்யஹீனோ வா யோ மே பர்த்தா ஸ மே குருஹு

தம் நித்யம் அனுரக்தாஸ்மி  யதா ஸூர்யம் ஸுவர்ச்சலா

ஆண்டியானாலும் அரசன் ஆனாலும் யார் என் கணவனோ அவனே எனக்கு குரு ; சூரிய தேவனை எப்படி சுவர்ச்சலா தேவி தொடர்ந்து பின்பற்றிச் செல்கிறாளோ அப்படியே நானும் பின்பற்றுவேன் .

यथा शची महाभागा शक्रं समुपतिष्ठति।

अरुन्धती वसिष्ठं च रोहिणी शशिनं यथा।।5.24.10।।

யதா சசி மஹா பாகா சக்ரம் ஸமுபதிஷ்டதி

அருந்ததீ வசிஷ்டம் ச ரோஹிணீ சசினம் யதா

लोपामुद्रा यथागस्त्यं सुकन्या च्यवनं यथा।

सावित्री सत्यवन्तं  कपिलं श्रीमती यथा।।5.24.11।।

லோபாமுத்ரா யதாகஸ்த்யம் ஸு கன்யா ச்யவனம் யதா

ஸாவித்ரீ ஸத்யவந்தம் ச கபிலம் ஸ்ரீமதீ யதா

सौदासं मदयन्तीव केशिनी सगरं यथा।

नैषधं दमयन्तीव भैमी पतिमनुव्रता।।5.24.12।।

செளதாஸம்  மதயந்தீவகேசினீ ஸகரம் யதா

நைஷதம் தமயந்தீவபைமீ பதிமனுவ்ரதா

 இந்த 11 பேரின் பெயர்களை  மேலே கொடுத்துவிட்டேன் ; சக்ர என்பது இந்திரனின் பெயர். நைஷத என்பது நிடத நாட்டு மன்னன் நளன் ; பைமி என்பது பீமனின் மகளான தமயந்திக்கு வரும் அடைமொழி; ஏனைய 11 பேரும் அவர்களுடைய  கணவன்மார் பெயர்களும் மேலே கண்டவாறு..

तथाऽहमिक्ष्वाकुवरं रामं पतिमनुव्रता।

ததா அஹம் இக்ஷ்வாகு  வரம் ராமம் பதிம் அனுவ்ரதா

அவ்வாறே நானும் என் கணவனும் இட்சுவாகு குலத்தில் சிறந்தவருமான ராமனைச் சார்ந்தே நிற்பேன்.

எளிமையான ஸம்ஸ்க்ருதம் ; அற்புதமான கருத்து. இதை ராக்ஷசிகளிடம் சீதை சொன்னபோது மரத்தின் மீது அமர்ந்துள்ள ராமதூதன் ஆஞ்சனேயன் கேட்டுக்கொண்டு இருந்தான். அருமையான காட்சி.

–SUBHAM–

 tags- 

 சுவர்ச்சலா, சுந்தர காண்டம், சீதை ,வணங்கும் ,11 பெண்கள் , தமயந்தி,சத்தியவான், மனைவி,  ஸாவித்ரி

ராமாயணத்தில் வரும் நதிகள்! – 2 (Post No.11,471)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,471

Date uploaded in London – –   25 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

ராமாயண வழிகாட்டி!

ராமாயணத்தில் வரும் நதிகள்! – 2

ச. நாகராஜன்

22) பாவனி: கங்கையின் ஏழு ஓடைகளில் ஒன்று. அவற்றில் கிழக்கு

           முகமாகப் பாயும் மூன்றில் ஒன்று இது.

23) சைலதா : உத்தரகுரு பிரதேசத்தின் அருகில் பாயும் நதி இது. அங்கு   

             கீசகா என்ற ஒரு விசேஷமான மூங்கில் வளர்கிறது.

             அந்த மூங்கில் உதவியுடன் தான் சித்தர்கள் சைலதா

             நதியின் மறுகரைக்குச் செல்வது வழக்கம்.

24. சதத்ரு :   தசரதர் மரணம் அடையவே, அயோத்திக்கு பரதனும்

             சத்ருக்னனும் திரும்பி வருகின்ற வழியில் பாயும் நதி

             இது.

25. சரஸ்வதி : கிழக்கில் பாயும் நதி இது. எல்லையற்ற மகிமை

               கொண்டது.

26. சரயு : பிரம்மாவினால் கைலாயத்தில் படைக்கப்பட்ட மானஸம்

          என்ற புனிதமான ஏரியிலிருந்து உருவான புனித நதி சரயு.   

          அயோத்தியைச் சுற்றி ஓடும் நதி இது. இக்ஷ்வாகு

           வம்சத்தில் பரம்பரை பரம்பரையாக மன்னர்களால்

           வழிபடப்படும் நதி. விஸ்வாமித்திரரின் அறிவுரையின்

          பேரில் ராமரும் லக்ஷ்மணரும் தாடகையை வதம் செய்யப்

          போகும் போது சரயு நதியை வழிபட்டனர். ராமரால்

          கைவிடப்பட்ட நிலையில் லக்ஷ்மணர் தன் உடலை இந்த

          நதியில் உகுத்தார். பின்னர் பரதர், சத்ருக்னர் மற்றும் இதர

          மக்களுடன் ராமர் சரயு நதியில் இறுதியில் பிரவேசித்தார்.    

          மகாகவி பாரதியார் ‘பலர் புகழும் ராமனுமே ஆற்றில்

           மாண்டான்’ என்று இதைக் குறிப்பிடுகிறார்.

27. சிந்து : எல்லையற்ற மகிமை கொண்ட இது கங்கையிலிருந்து

           மேற்கே பாயும் ஒன்று. விந்து சரோவரத்திலிருந்து

           இத்துடன் இன்னும் இரு ஓடைகளான சீதா மற்றும்

           சுகக்ஸு ஆகியவையும் பாய்கின்றன.

28. சிந்து : வடமேற்கே பாயும் நதி இது.

29. சீதா :  விந்து சரோவரத்திலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வது இது.

30. ஸ்தாணுமதி : கேகய நாட்டின் தலைநகரான ராஜக்ரஹத்திலிருந்து

                 அயோத்திக்குச் செல்லும் வழியில் பாய்வது இது.

31. சுகக்ஸு : விந்து சரோவரத்திலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வது

              இது.

32. சுதாமா : கேகயம் மற்றும் அயோத்தி நாடுகளுக்கு இடையே ஓடும்

             நதி இது.

33. ஸ்யாந்திகா : தண்டகா வனத்திற்குப் போகும் வழியில் இந்த

                  நதியை ராமர் கடந்தார்.

34. தமஸா : கங்கையின் அருகே பாயும் தமஸா நதி களிமண், தூசி

            அற்ற தூய நீரைக் கொண்டது. இதன் கரையில் தான்

            வால்மீகி முனிவர் க்ரௌஞ்ச பக்ஷிகளில் ஒன்று தனது

            துணை கொல்லப்பட்ட சமயத்தில் வருந்திப்

            புலம்பியதைக் கண்டார். இதைக் கண்டு வருத்தமுற்ற

            அவர் நான்கு பாதங்கள் கொண்ட ஒரு

             ஸ்லோகத்தைச் சொன்னார். அதுவே ராமாயணம்

             உருவாகக் காரணமாக அமைந்தது.

35. த்ரிபதாகா : கங்கை ஸ்வர்க்கத்திலிருந்து கிளம்பி பூமி வழியே

               பாதாள லோகத்தை அடையும் போது இப்படி

               அழைக்கப்படுகிறது.  இப்படியாக மூன்று

               லோகங்களிலும் கங்கை பாய்கிறது.

36. வைதரணி : வைவஸ்வத யமனின் ஆளுகைக்கு உட்பட்ட

               பிரதேசத்தில் பாய்வது இது. யமனை எதிர்க்க ராவணன்

               இங்கு வந்த சமயத்தில் பாவிகளான பலர் இதை

               மீண்டும் மீண்டும் கடக்கச் செய்வதைப் பார்த்தான்.

               இதே பெயரில் இன்று ஒரிஸாவில் ஒரு நதி பாய்வது

               குறிப்பிடத் தகுந்தது.

37. வாருதி : நந்திகிராமத்தில் இருந்த பரதனிடம் ராமர் திரும்பி

              வருகிறார் என்ற செய்தியைச்  சொல்ல வந்த

               ஹனுமாரால் கடக்கப்பட்ட நதி இது.            .

38. வேதஸ்ருதி : கோசலத்தைத் தாண்டி உள்ள இந்த நதியை ராமர்

                  தண்டக வனம் செல்லும் போது கடந்தார்.

39. விபாஸா; அயோத்தியிலிருந்து கேகயம் செல்லும் வழியில் உள்ள

             நதி இது. தசரதர் இறக்கவே, பரதனையும்

             சத்ருக்னனையும் அழைத்து வருமாறு வஸிஷ்ட

              மஹரிஷி தூதர்களை அனுப்பிய போது அவர்கள் இந்த

              நதியைக் கடந்து சென்றனர்.

40. யமுனா: பாரதத்தின் வடக்கே உள்ள இந்த நதியின் பெருமை

            எல்லையற்றது. இங்கு தான் பரத்வாஜ மஹரிஷி  தவம்

            செய்தார். ப்ரயாகை என்னும் த்ரிவேணி சங்கமமான

            கங்கை யமுனை சரஸ்வதி கூடும் இடத்திற்கு அருகில்

            உள்ளது யமுனா நதி!

ஏரிகளும்குளங்களும்கிணறுகளும்!

41. மானஸம் : கைலாயத்தில் உள்ள புனிதமான ஏரி. பிரம்மாவினால்  

               படைக்கப்பட்டது. மனதிலிருந்து உருவானது என்ற

               பொருளைக் கொண்டது மானஸம் என்ற வார்த்தை. 

               இதிலிருந்து சரயு நதி உற்பத்தியானது.

42. மதங்கஸாரா : மதங்க மஹரிஷியின் பெயரால் அழைக்கப்படும்

                  அழகிய குளம் இது. பம்பாவின் ஒரு பகுதி இது.

                  ரிஷ்யமுக மலைக்குச் செல்லும் போது ராமர் இங்கு

                  குளித்தார்.

43. பம்பா : அனைவரையும் கவரும் அழகிய புனிதமான ஏரி இது.

           தாமரை மலர்கள் நிரம்பியது. ரிஸ்யமுக மலைக்கு மிக

           அருகில் வனபிரதேசத்தில் உள்ளது. இங்கு தான் மதங்க

           மஹரிஷியின் ஆஸ்ரமம் உள்ளது. இந்த அழகிய தூய

           நீரைப் பார்த்தவுடன் சீதையை நினைத்து ராமரின் இதயம்

           உருகியது.

44. பஞ்சப்ஸரா : ஸ்படிகம் போன்ற நீரையும் சிவந்த மற்றும்

                வெள்ளைத் தாமரைகளையும் கொண்ட அழகிய ஏரி

                இது. மந்தகர்னி ரிஷியின் சக்தியால் அன்னங்களும்,

                கொக்குகளும் இதர பக்ஷிகளும் இங்கு கொண்டு

                வரப்பட்டது. அவர் இந்த ஏரியில் தனது அழகிய ஐந்து

                அப்ஸரஸ் மனைவிகளுடன் வசித்து வந்தார். அக்னி

                மற்றும் இதர தேவதைகளால் அந்த அப்ஸரஸ்கள்

                முனிவரின் தவத்தைக் கலைக்க அனுப்பப்பட்டனர்.

                 அவர்களது இனிய கானங்களும் அவர்களது

                 ஆபரணங்களுடன் இசைக்கருவிகள் எழுப்பிய

                 ஓசையும் ஏரியின் அருகில் இருந்த அனைவரையும்

                 மயக்கியது. சீதை, லக்ஷ்மணருடன்  தண்டக வனம்

                 செல்லும் வழியில் ராமரை ஆவல் தூண்ட அவருக்கு

                 இந்த ஏரி பற்றி விரிவாகச் சொல்லப்பட்டது.

45. சால்மலி : அயோத்தியிலிருந்து கேகயம் செல்லும் வழியில் உள்ள

             ஏரி இது. பரதனையும் சத்ருக்னனையும் அழைத்து வரச்

             சென்ற போது அவர்களை அழைத்து வரச் சென்ற 

             தூதர்கள் இந்த ஏரியைப் பார்த்தனர்.

46. சுதர்ஸனா: அன்னங்களும் தாமரை மலர்களும் நிரம்பி உள்ள

              அழகிய ஏரி இது. அப்ஸரஸ்கள், கின்னரர்கள்,

              கந்தர்வர்கள் விளையாடும் புனித நீர் நிலை இது.

47. வனாயு : அழகிய சிறந்த குதிரைகளுக்குப் பெயர் பெற்ற பிரதேசம்.

48. விந்துசரோவரம் : சிவபெருமான் கங்கையைத் தன் தலையிலிருந்து

                     இறக்கி வைத்த இடம் இது.  விந்து

                     சரோவரத்திலிருந்து கங்கை ஏழு பிரிவுகளாகப்

                     பிரிந்து கிழக்கேயும் மேற்கேயும் பாய

                     ஆரம்பித்தது.

49. வ்ரணா : இது ஒரு கிணறு. மருகாந்தார பிரதேசத்தில் ராமரால்

             உருவான கிணறு இது.

***

புத்தக அறிமுகம் 122

பறக்கும் தட்டுகளும் அயல்கிரகவாசிகளும்                                                       

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1.  இனம் தெரியாத பறக்கும் பொருள்கள்

2.  அறிவியல் கூறும் விளக்கங்கள்

3.  அயல் கிரகவாசி பிடிபட்டாரா?

4.  ரஷ்யாவில் இறங்கிய பறக்கும் தட்டு

   5. பறக்கும் தட்டின் வேகம்

   6. செவ்வாய் கிரகத்தில் உயிரினம் உண்டா?

   7. செவ்வாய் பற்றிய அமெரிக்க ஆராய்ச்சி

   8. அயல் கிரகவாசிகள் பேசும் மொழி

   9. வாஷிங்டனில் பறக்கும் தட்டு

   10. பறக்கும் பொருள் சேஸ்!

   11. சந்திரனில் ஓடுபாதை

   12. உண்மையும் பொய்யும்

   13. டெலிவிஷன் குழுவினர் எடுத்த போட்டோ

   14. அயல் கிரகவாசிகளின் தோற்றம்

   15. பறக்கும் தட்டுகள் பரப்பும் மணம்

   16. சஹாரா, சைபீரியா விந்தைகள் 

       17.   விண்வெளிக் கடத்தல்காரர்கள்

   18. நீலப் புத்தகம் ஆய்வுத் திட்டம் – 1

   19. நீலப் புத்தகம் – 2

   20. நீலப் புத்தகம் – 3

   21. நீலப் புத்தகம் – 4

   22. நீலப்புத்தகம் – 5

   23. பிரமிப்பூட்டும் திரைப்படங்கள்

   24. பரபரப்பூட்டிய புத்தகங்கள்

   25. ஜன்னல் கண்காணிப்புகள்

   26. விசித்திரச் செய்திகள்

   27. மெக்ஸிகோ பறக்கும் தட்டு

   28. குறையாத ஆர்வம்

   29. தொடரும் மர்மம்!

 *

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

The unidentified Flying Objects UFO, are unexplainable mysterious objects which are beyond scientific explanation. American researchers have spent millions of dollars to find out the truth behind the UFO. The details of Project Blue Book, the interviews with the people who encountered the UFO’s and Aliens are given in detail in this book in 29 chapters. The Editor of Kalaimagal a leading Tamil monthy praises the book for its style and contents. 

நவீன அறிவியலாலும் விளக்க முடியாத விஷயங்களுள் ஒன்று பறக்கும் தட்டு! அமெரிக்காவில், பல லட்சம் டாலர் செலவழித்துப் பறக்கும் தட்டுகள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ‘ப்ராஜக்ட் ப்ளூ புக்’ என்று பெயரிடப்பட்ட அந்த ஆய்வின் முழு விவரங்கள், பறக்கும் தட்டுக்களைப் பார்த்தோர், அயல் கிரகவாசிகளுடன் பேசியோர், அவர்களால் கொண்டு செல்லப்பட்டோர் என ஏராளமான அதிசய நிகழ்வுகளை விளக்கும் அரிய நூல்! ‘கலைமகள்’ ஆசிரியர் திரு.கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் அவர்கள் இந்நூலுக்கு அளித்துள்ள அணிந்துரையில் “நூலாசிரியரின் பேனா பல இடங்களில் வித்தை காட்டி இருக்கிறது” எனப் பாராட்டுகிறார். பறக்கும் தட்டுக்கள், அயல்கிரகவாசிகள் பற்றியெல்லாம் அறிய விரும்புவோருக்கு ஓர் அற்புதக் கருவூலம்!*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘பறக்கும் தட்டுகளும் அயல்கிரகவாசிகளும்’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

History Flash; Hindus must learn from Today’s Roman Coin Story (Post No.11,470)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,470

Date uploaded in London – 24 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Lord Krishna changed his capital from Mathura in Uttar Pradesh to Dwaraka in Gujarat to defeat Kala/Black Yavana. Krishna moved his capital 800 miles away fearing him. Later Krishna finished him. His move was a tactical one. But we don’t know who that Kala Yavana was.

Puranas talk about an unknown Asoka called Kala Asoka (Black Asoka).

The dancig girl bronze recovered from Indus Valley Site is a black lady with thick lips. We have to analyse the idol chemically and scientifically to know how old it was.

Our most valuable Peacock throne and other treasures are in Tehran (Iran) museum. Madurai Meenakshi’s sapphire was brought to London “to show” it to Quuen Victoria and “broghut back” to Madurai in Tamil Nadu. I don’t think it was brought back to Madurai from London. It is still in Royal treasury here in London.

I have published all these things in my previous articles in this blog. A dramatic robbery story of Sri Rangam temple diamond of Lord Renaganatha is also posted by me here.

Last but not the least, the Shyamantaka, the most murderous diamond reported in the Bhagvata Purana is in American Museum in the name of “Hope Diamond”.

Kanchi Paramacharya  (1894-1994) said Kapilaranya of Sagara/Kapila Muni story is California . Still no one did more research on these things. That is why I wrote “India needs an Indiana Jones”.

Indian history itself remains a mystery; we have to rewrite it.

Read the following story that was featured in all British Newspapers and TV channels this morning and get some inspiration to do more research. Please join me in the research.

Xxx

Daily Mail , London, reports

Ancient Roman coin thought to be FAKE after being discovered in Transylvania over 300 years ago is almost certainly authentic – and proves the existence of ‘forgotten’ leader Sponsian, study claims

·         The coin, unearthed 300 years ago, depicted a leader named Sponsian 

·         It was believed to be a forgery, as it differed from other Roman coins 

·         There are no other historical records that Sponsian ever existed, but new analysis suggests the coin is indeed authentic

A forgotten Roman emperor has been saved from obscurity as a coin long thought to be fake has finally been authenticated.

The coin, unearthed 300 years ago, depicted a leader named Sponsian who was in power during the 260s AD.

It was believed to be a forgery, as it differed from both the manufacture process and general style of Roman coins from the time.

There are no other historical records that Sponsian ever existed, but new analysis suggests the coin is indeed authentic.

The coin comes from a small hoard unearthed in Transylvania in 1713 which found their way into collections around Europe.

Some ended up at The Hunterian museum in Glasgow, where they remained hidden in wooden cabinets until now.

Researchers from University College London closely analysed the coins – three of which depicted other known Roman emperors – using a range of techniques, including light microscopy and ultra-violet imaging.

On the Sponsian coin, they discovered micro-abrasion patterns typically associated with coins that were in circulation for an extensive period of time.

The researchers also analysed earth deposits on the coin, finding evidence that after its use the coin was buried for a prolonged period before being discovered.

Together, the new evidence strongly indicate the coin is authentic, the team said.

They suggest Sponsian was an army commander in the Roman Province of Dacia during a period of military strife during the 260s AD.

Who was Sponsian? 

The team suggest Sponsian was an army commander in the Roman Province of Dacia during a period of military strife during the 260s AD.

Coins have always been an important symbol of power and authority in Rome. 

The researchers believe Sponsian may have authorised the creation of locally produced coins, some featuring his own image.

Only four coins featuring Sponsian are known to have survived to today.

xxxxx

The Guardian News Paper adds

A hoard of gold coins once thought to be fakes have been authenticated by researchers who say the artefacts reveal a long-lost Roman emperor.

The coins bear the name and image of a shadowy historical figure, Sponsian, whose existence was previously placed in doubt by experts who suggested the coins were the work of sophisticated 18th-century fraudsters.

But a scientific analysis has concluded that the coins are genuine third-century artefacts, and the researchers make the case that Emperor Sponsian was also the real deal.

“We’re very confident that they’re authentic,” said Prof Paul Pearson, of University College London, who led the research. “Our evidence suggests Sponsian ruled Roman Dacia, an isolated goldmining outpost, at a time when the empire was beset by civil wars and the borderlands were overrun by plundering invaders.”

The hoard of coins are said to have been unearthed in Transylvania, in modern-day Romania, in 1713. Several depict recognised Roman emperors of the third century, including Gordian III and Philip the Arab. But four coins bear the name and image of Sponsian, who does not appear in any other historical records.

When the coins were discovered, they were initially thought to be genuine. But from the mid-19th century, attitudes changed owing to the coins’ crude designs and jumbled inscriptions. One expert suggested they were the work of a sophisticated Viennese fraudster who had invented an emperor to appeal to collectors, and this became the prevailing view.

Pearson, an earth scientist, learned about the coins and the “fake emperor” while researching a book on Roman history as a lockdown project. He began corresponding with Jesper Ericsson, the numismatics curator at the Hunterian museum in Glasgow, which holds a coin in its collection, and the pair decided to perform a full scientific analysis.

This revealed that simply based on their weight in gold, the coins are valuable – the assemblage would be worth $20,000 (£16,700) in modern value. “If they’re a forgery, that’s a big outlay to start with,” said Pearson.

When examined at high magnification using optical imaging and electron microscopy, the coins showed similar patterns of wear and tear to genuine coins, suggesting they had been in circulation for several years. Minerals on the surface of the coins were consistent with them having been buried for an extended period, and the scientists detected sulphate crystals, which typically form when an object is deprived of oxygen for a long time and then re-exposed to air.

“I believe we have established with a very high degree of confidence that they are genuine,” said Pearson, adding that the question of Sponsian’s identity was “more speculative”.

It is known that the Dacia region was cut off from central command during a period of military strife in the 260s CE. Writing in the journal Plos One, the authors speculate that Sponsian was a military leader who assumed authority over the Roman enclave and established a local coin mint.

“He took on the title imperator – supreme military commander – that was reserved for the emperor,” said Pearson. “There are other precedents of regional emperors. If we allow Roman emperors to self-identify, he was a Roman emperor.”

Dr Adrastos Omissi, of the University of Glasgow, who was not involved in the research, described the analysis as “a brilliant piece of work”. “I think they’ve made a really convincing argument for the existence of Sponsian and of him being a real emperor,” he said, adding that the late 3rd century was a period of such turbulence and unrest that “the bar for being an emperor was very low”.

However, others were more sceptical. “They’ve gone full fantasy,” said Richard Abdy, the curator of Roman and iron age coins at the British Museum. “It’s circular evidence. They’re saying because of the coin there’s the person, and the person therefore must have made the coin.”

 –subham—

Tags-  Roman coin, rewrite history, Sponsian

Sita’s Famous Quotes: I would Follow Eleven Women (Post No.11,469)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,469

Date uploaded in London – 24 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

Sundara Kanda (kaanda) of Valmiki (vaalmiiki) Ramayana has beautiful quotes. When Sita was threatened by the demon women she did not give up. Hanuman was watching all these things from the top of a tree. Sita says she would not yield to their threats. She quotes the eleven great heroines of Hindu scriptures

She says she would follow Suvarchala, Sachi, Arundhati Rohini, Lopamudra ,Sukanya ,Srimati, Kesini, Madayanti, Savitri and Damayanti.

Here is the detail:

[The ogresses chide Sita who resolutely condemned Ravana.]

ततः सीतामुपागम्य राक्षस्यो विकृताननाः।

परुषं परुषा नार्य ऊचुस्तां वाक्यमप्रियम्।।5.24.1।।


ततः then, परुषाः harsh, विकृताननाः hideous, राक्षस्यः नार्यः ogresses, तां सीताम् that Sita, उपागम्य having approached, अप्रियम् unbecoming, वाक्यम् words, परुषम् harshly, ऊचुः uttered.


Then the hideous ogresses approached Sita and spoke these harsh words in an unbecoming manner:

किं त्वमन्तःपुरे सीते सर्वभूतमनोहरे।

महार्हशयनोपेते न वासमनुमन्यसे।।5.24.2।।


सीते O Sita, त्वम् yourself, सर्वभूतमनोहरे delightful for all, महार्हशयनोपेते furnished with fine bedsteads, अन्तःपुरे in the women’s chambers, वासम् residence, किम् why, नानुमन्यसे not willing?


‘O Sita why don’t you agree to dwell in Ravana’s inner apartment furnished with fine bedsteads, and which is delightful?

मानुषी मानुषस्यैव भार्यात्वं बहुमन्यसे।

प्रत्याहर मनो रामान्न त्वं जातु भविष्यसि।।5.24.3।।


मानुषी being a woman, मानुषस्यैव of a man only, भार्यात्वम् being wife, बहुमन्यसे you are holding this in high esteem, रामात् from Rama, मनः mind, प्रत्यहर you may turn, त्वम् you, जातु indeed, न भविष्यसि will not live.


‘You are a woman, wife of Rama, an ordinary mortal you are holding in high esteem. Withdraw your mind from Rama or else you will not survive.

त्रैलोक्यवसुभोक्तारं रावणं राक्षसेश्वरम्।

भर्तारमुपसङ्गम्य विहरस्व यथासुखम्।।5.24.4।।
 


त्रैलोक्यवसुभोक्तारम् enjoy the wealth of the three worlds, राक्षसेश्वरम् demon king, रावणम् Ravana, भर्तारम् as husband, उपसङ्गम्य after uniting yourself, यथासुखम् pleasure, विहरस्व sport with him.


“Accept Ravana as your husband and after uniting with him enjoy all the pleasures of the three worlds.

मानुषी मानुषं तं तु राममिच्छसि शोभने।

राज्याद्भ्र्रष्टमसिद्धार्थं विक्लबं त्वमनिन्दिते।।5.24.5।।


शोभने O charming lady, अनिन्दिते blameless one, मानुषी a woman, त्वं तु you too, राज्यात् from the kingdom, भ्रष्टम् dethroned, असिद्धार्थम् one who is not successful, विक्लबम् distressed, मानुषम् human, तं him, रामम् Rama only, इच्छसि wanting.


‘O charming lady you have an irreproachable beauty and grace. Why do you think of human Rama only who has been dethroned from the kingdom. He is only a human being who is unsuccessful and distressful.’

राक्षसीनां वचः श्रुत्वा सीता पद्मनिभेक्षणा।

नेत्राभ्यामश्रुपूर्णाभ्यामिदं वचनमब्रवीत्।।5.24.6।।
 


पद्मनिभेक्षणा a lady with eyes like lotus petals, सीता Sita, राक्षसीनाम् of the ogresses, वचः words, श्रुत्वा on hearing, अश्रुपूर्णाभ्याम् those filled with tears, नेत्राभ्याम् with both eyes, इदम् this way, वचनम् words, अब्रवीत् spoke.


Hearing the words of the ogresses, Sita with eyes like lotus petals full of tears replied this way:

यदिदं लोकविद्विष्टमुदाहरथ सङ्गताः।

नैतन्मनसि वाक्यं मे किल्बिषं प्रतिभाति वः।।5.24.7।।
 


सङ्गताः joined together, लोकविद्विष्टम् not acceptable to the world, यत् such, इदम् this, मे my, वाक्यम् words, उदाहरथ you spoke, एतत् this way, वः addressed by you, मनसि in mind, किल्बिषम् sinful, न प्रतिभाति not thought.


“All of you joined together and spoke such words that are not acceptable to the world. Your sinful words of advice do not appeal to me.

न मानुषी राक्षसस्य भार्या भवितुमर्हति।

कामं खादत मां सर्वा न करिष्यामि वो वचः।।5.24.8।।
 


मानुषी a human being, राक्षसस्य ogre’s, भार्या wife, भवितुम् to become, न अर्हति ought not to be, सर्वाः all of you, कामम् freely, माम् me, खादत eat, वः addressed by you, वचः words, न करिष्यामि I will not do.


‘ A human being ought not to become wife of a demon. Devour me if you want. I refuse to accept your advice.’

दीनो वा राज्यहीनो वा यो मे भर्ता स मे गुरुः।

तं नित्यमनुरक्तास्मि यथा सूर्यं सुवर्चला।।5.24.9।।


दीनो वा Poor, राज्यहीनो वा or a king , यः he who, मे my, भर्ता husband is, सः he is, मे my, गुरुः lord, सुवर्चला Suvarchala, सूर्यं यथा just as to Sun god, नित्यम् ever, तम् him, अनुरक्ता devoted, अस्मि I am.


‘Poor man or a king of a country, Rama is my Guru. I will ever remain devoted to Rama as Suvarchala, wife of the Sungod is to him.

यथा शची महाभागा शक्रं समुपतिष्ठति।


अरुन्धती वसिष्ठं च रोहिणी शशिनं यथा।।5.24.10।।

लोपामुद्रा यथागस्त्यं सुकन्या च्यवनं यथा।

सावित्री सत्यवन्तं च कपिलं श्रीमती यथा।।5.24.11।।

सौदासं मदयन्तीव केशिनी सगरं यथा।

नैषधं दमयन्तीव भैमी पतिमनुव्रता।।5.24.12।।

तथाऽहमिक्ष्वाकुवरं रामं पतिमनुव्रता।


महाभागा noble, शची Sachi, यथा like, शक्रम् Indra, समुपतिष्ठति is steadfadt, अरुन्धती Arundhati, वसिष्ठं  with Vasistha, रोहिणी Rohini, शशिनम् the moon, यथा likewise, लोपामुद्रा Lopamudra, अगस्त्यम् with Agastya, यथा similarly, सुकन्या Sukanya, च्यवनम् Chayavanam, यथा so also, सावित्री Savitri, सत्यवन्तम् with Satyavan, श्रीमती Srimati, कपिलम् with Kapilamuni, यथा so also, सौदासम् Soudasa, मदयन्तीव Madayanti, केशिनी Kesini, सगरं यथा with Sagara likewise, पतिम् as husband, नैषधम् Nala, king of Naishada, अनुव्रता devoted, भैमी Bhima’s daughter, दमयन्तीव like Damayanti, तथा in the same way, अहम् I, इक्ष्वाकुवरम् foremost of Ikshvaku family, पतिम् a husband, रामम् Rama, अनुव्रता I am devoted.


‘I am steadfast (in love) to my husband Rama, the foremost of the Ikshvaku family in the same manner as noble Sachi to Indra, Arundhati to Vasistha, Rohini to the Moon, Lopamudra to Agastya, Sukanya to sage Chyavana, Savitri to Satyavan, Srimati to Kapilamuni Madayanti to Soudasu, Kesini to king Sagara and Bhima’s daughter Damayanti to her lord Nala, (the king of Nishadas)’.

सीताया वचनं श्रुत्वा राक्षस्यः क्रोधमूर्छिताः।।5.24.13।।

भर्त्सयन्ति स्म परुषैर्वाक्यै रावणचोदिताः।
 


रावणचोदिताः ordered by Ravana, राक्षस्यः by the ogresses, सीतायाः Sita’s, वचनम् words, श्रुत्वा after hearing, क्रोधमूर्छिताः overtaken by anger, परुषैः with harsh, वाक्यैः with statements, भर्त्सयन्ति स्म threatened.


Hearing the reply of Sita, the ogresses ordered by Ravana and overtaken by anger again began to threaten Sita using harsh words.

अवलीनः स निर्वाक्यो हनूमान् शिंशुपाद्रुमे।।5.24.14।।

यसीतां सन्तर्जयन्तीस्ता राक्षसीरशृणोत् कपिः।


कपिः monkey, स: he, हनुमान् Hanuman, निर्वाक्यः speechless, शिंशुपाद्रुमे Simsupa tree, अवलीनः kept concealed, सीताम् Sita, सन्तर्जयन्तीः listened threatening, ताः those, राक्षसीः ogresses, अशृणोत् listened.


Hanuman who kept himself concealed on the simsupa tree speechlessly listened to the ogresses threatening Sita.

—-subham—-

Tags- Sita, follows, 11 women, Suvarchala, Sachi, Arundhati, Savitri, Sukanya, Kesini, Madayanti, Damayanti, Rohini, Lopamudra

மனைவி பற்றி அறப்பளீச்சுர சதகம் (Post.11,468)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,468

Date uploaded in London – 24 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

லண்டன் சுவாமிநாதன் வியாக்கியானம் / விளக்க உரை

First verse was posted yesterday. Following is the second verse.

2. இல்லாளின் சிறப்பு

கணவனுக் கினியளாய்ம்ருதுபாஷி யாய்மிக்க     

 கமலைநிகர் ரூப வதியாய்க்,
  
காய்சினம் இலாளுமாய்நோய்பழி யிலாததோர்
     
கால்வழியில் வந்த வளுமாய்,
மணமிக்க நாணம்மடம் அச்சம் பயிர்ப்பென்ன
     
வரும்இனிய மார்க்க வதியாய்,
  
மாமிமா மற்கிதம் செய்பவளு மாய்வாசல்
     
வருவிருந் தோம்பு பவளாய்,

இணையில்மகிழ் நன்சொல்வழி நிற்பவளு மாய்வந்தி
     
என்பெயர் இலாத வளுமாய்,
  
இரதியென வேலீலை புரிபவளு மாய்ப்பிறர்தம்
     
இல்வழி செலாத வளுமாய்,
அணியிழை யொருத்தியுண் டாயினவள் கற்புடையள்
     
ஆகும்;எம தருமை மதவேள்
  
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     
அறப்பளீ சுரதே வனே!


     (
இ-ள்.) எமது ………… தேவனே! கணவனுக்கு இனியளாய் – கணவன்
பார்வைக்கு அழகியவளாய்,

 மிருது பாஷியாய் – இன்மொழி யுடையவளாய்,
கமலை நிகர்மிக்க ரூபவதியாய் – திருமகளைப்போலச் சாலவும் அழகியாய்,
காய்சினம் இலாதவளுமாய் – வெறுக்கத்தக்க கோபம் இல்லாதவளாய்,
நோய்பழி இல்லாதஓர் கால்வழியில் வந்தவளுமாய் – நோயும் இழிவும்
இல்லாத ஒப்பற்ற மரபிலே பிறந்தவளாய்,

மணம்மிக்க நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்ன வரும் இனிய மார்க்க வதியாய் – புகழத்தக்கநான்கு பண்புகளும் பொருந்திய நல்லொழுக்கமுடையவளாய்,

மாமி, மாமற்கு இதம் செய்பவளுமாய் – மாமிக்கும் மாமனுக்கும் நலம் புரிபவளாய்,
வாசல்வரு விருந்து ஓம்புபவளாய் – வாயிலில் வரும் விருந்தினரை
ஆதரிப்பவளாய்,

இணைஇல் மகிழ்நன் சொல்வழி நிற்பவளுமாய் – ஒப்பற்ற
கணவன் மொழிப்படி நடப்பவளாய்,

வந்தி என் பெயர் இல்லாதவளுமாய் – மலடியெனும் பெயரில்லா தவளாய்,

இரதியெனவே லீலை புரிபவளுமாய் – இரதியைப்போல இன்பக்கலவி செய்பவளாய்,

பிறர்தம் இல்வழி செலாதவளுமாய் – மற்றவருடைய வீட்டுவழி செல்லாதவளாய்,
அணியிழைஒருத்தி உண்டாயின் – அழகிய அணிகலன்களையுடைய ஒரு
மங்கை இருந்தால், அவள் கற்பு உடையளாகும் – அவள் கற்புடையவள்
எனப்படுவாள்.


     
(க-து.) இங்குக் கூறப்பட்டவை கற்புடைய பெண்ணின் பண்புகள்.

xxx

வாழ்க்கைத் துணை நலம்,  இல் வாழ்க்கை ஆகிய தலைப்புகளில் 20 குறள்களில் வள்ளுவர் சொன்னதை அனைவரும் அறிவர்; சில புதிய ஒப்பீடுகளைக் காண்போம்

சகுந்தலைக்கு கண்வர் அறிவுரை

உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசன்–. அவன் எழுதிய நாடகங்களில் உலகமே போற்றி வியந்த நாடக நூல் சாகுந்தலம். அதில் சகுந்தலை என்னும் அழகி உலகம் அறியாத அப்பாவிப் பெண்.அவள் கணவன் வீட்டுக்குப் (அரசனின் அரண்மனை) போவதற்கு முன், வளர்ப்புத் தந்தை கண்வர் சொன்னது: 

“என் அன்பு மகளே. உன் கணவன் வீட்டுக்குச் செல்லப் போகிறாய். அங்கே:-

உன்னை விட வயதில் மூத்த பெரியோருடன் கவனமாகப் பழகி, அவர்களுக்குச் சேவை செய். அரசனின் சக மனைவிகள் இடத்தில் நட்போடு வாழ். கணவன் உனக்கு ஏதேனும் கஷ்டம் கொடுத்தாலும் கோபத்தில் எதையும் சொல்லிவிடாதே. நீ யார் யாருக்குச் சேவை செய்கிறாயோ அவர்களுக்கு எல்லா மரியாதைகளும் கொடு. செல்வத்திலும் சுக போகங்களிலும் வாழப் போகும் நீ அகந்தையும் தலைக்கனமும் ஏறாமல் பார்த்துக்கொள். அப்படி வாழ்ந்தால்தான் பெண்கள் இல்லத்தரசி என்ற பெயர் எடுப்பர். இதற்கு மாறாக நடப்பவர்கள் குலத்தைக் கெடுக்கவந்த கோடாரி என்று பெயர் எடுப்பர்.” (சாகுந்தலம், காட்சி 4)

இதையெல்லாம் சொல்லி முடித்த பின், வயதில் மூத்த ஞானத்தில் முதிர்ந்த மகரிஷி கண்வர், தன் மனைவி இருக்கும் திசையைப் பார்த்து, “அன்பே நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்கிறார். அவள் உடனே, “ஒரு மணப் பெண்ணுக்கு இது அருமையான புத்திமதி. அன்பு மகளே, எப்போதும் இதை நினைவில் வைத்துக்கொள்” என்கிறார்.

xxxxx


சுபாஷிதக்ஞேன ஜனேன ஸாகம்

ஸம்பாஷணம் சுப்ரபு ஸேவனம் ச

ஆலிங்கனம் துங்க பயோதராணாம்

ப்ரத்யக்ஷ ஸெளக்யம் த்ரயமேவ லோகே

உலகில் எல்லோரும் விரும்பும் சுகம் மூன்று வகையானவை

மூன்று சுகங்களே கண்கூடாகப் பயனளிப்பவை

1.அறிஞர்களுடன் பேசி அடையும் மகிழ்ச்சி.

2.அள்ளிக் கொடுக்கும் முதலாளி கீழே வேலை செய்வது

3.அழகு வாய்ந்த நிமிர்ந்து உயர்ந்த மார்பகம் உள்ள பெண்களைத் தழுவுவது

Xxxx

கணவனே கண்கண்ட தெய்வம்

பதிர் ஹி தைவதம் ஸ்த்ரீணாம் பதிர் பந்துப் பதிர் கதிஹி

நான்யம் கதிம் அஹம் பச்யே ப்ரமதாயா யதா பதிஹி

அநு சாசன பர்வம், மஹாபாரதம்

பெண்களுக்குக் கணவனே கண்கண்ட தெய்வம்; கணவன் ஒருவனே உறவினன் ;கணவன் ஒருவனே நற்கதி , அடைக்கலம் ; வேறு ஒருவரும் இல்லை இதுவே என் கண்ணோட்டம் .

சங்க இலக்கியப் பாடலிலும் கணவனைப் போற்றும் பாடல்கள் உள .

குறுந்தொகை 49

அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து

மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப

இம்மை மாறி மறுமை யாயினும்

நீயா கியரென் கணவனை

யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே.    5

– அம்மூவனார்.  

அணிலின் பல்லை ஒத்த முள்ளையுடைய தாது முதிர்ந்த முள்ளிச் செடியையும் நீலமணியினது நிறத்தை ஒத்த கரிய நீரையுமுடைய கடற்கரையை உடைய தலைவ இப்பிறப்பு நீங்கப்பெற்று நமக்கு வேறு பிறப்பு உண்டாயினும் என்னுடைய தலைவன் இப்பொழுது என்பால் அன்பு செய்தொழுகும் நீயே ஆகுக! நின்னுடைய மனத்திற்கு ஒத்த காதலி இப்பொழுது நின் நெஞ்சு கலந்தொழுகும் யானே ஆகுக!

Xxx

வால்மீகி  காட்டும் பெண்

नगरस्थो वनस्थो वा पापो वा यदि वा शुभः। 

यासां स्त्रीणां प्रियो भर्ता तासां लोका महोदयाः।।2.117.22।।

நகரஸ்தோ  வனஸ்தோவா பாபு வா யதி வா சுபஹ

யாஸாம் ஸ்திரீனாம் ப்ரியோ பர்த்தா தாஸாம் லோகா மஹோதயாஹா

यासाम् எந்தப்  , स्त्रीणाम् பெண்கள் , नगरस्थः in the city,நகரத்திலிருந்தாலும்  वनस्थो वा காட்டிலிருந்தாலும் , पापो वा பாவியானாலும் , यदि वा அல்லது , शुभः புண்யவானானா லும் , भर्ता கணவனிடத்தில் , प्रियः அன்புடன் இருக்கிறார்களோ , तासाम् அவர்களுக்கு , महोदयाः மிக உயர்வான , लोकः உலகம் (கிடைக்கும்).


xxxx

நற்றிணை 10

தலைவியைத் தலைவனுடன் அனுப்பிவைக்கும் தோழி தலைவனுக்கு ஒழுக்கநெறி என்று சில கூறுகிறாள்.

பூத்துக் கிடக்கும் செம்மையான ஊரின் தலைவனே,

இப்போது அண்ணாந்து உயர்ந்திருக்கும் இவளது அழகிய முலை மகப்பேற்றுக்குப் பின்னர் தளர்ந்து தொங்கினாலும்பொன்னிறம் கொண்ட இவள் மேனி கருத்து மணிநிறம் கொண்டு நரைத்துப்போன கூந்தலை இவள் முடித்திருந்தாலும்இவளைப் பிரியாமல் இருப்பாயாக.

அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்,

பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த

நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,

நீத்தல் ஓம்புமதி பூக் கேழ் ஊர!

xxxx

கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் பொது என்று பாரதியார் பாடினார் . பிறன் மனை நோக்காத பேராண்மை என்பதை காளிதாசன் முதல் வள்ளுவன் வரை பாடிப் ரவியுள்ளனர் ; மன்னர்கள் மட்டும் பலதார மணம் செய்யலாம் என்பதை சங்க இலக்கியத்திலும் இதிஹாச புராங்களிலும் காண்கிறோம்; கரிகாலன், ஆய் அண்டிரன் போன்ற சங்க கால மன்னர்கள் பல மனைவியருடன் வாழ்ந்ததை சங்க செய்யுட்கள் காட்டுகின்றன. ராமன் ஒருவன் மட்டுமே இந்த இப்பிறப்பில் சிந்தையாலும் இரு மாதரைத்  தொடேன் என்கிறான். ஸீதையும் ராமனின் எல்லை மீறிய கடுமையைத் தாங்கி அவனைத் தெய்வமாகவே போற்றினாள்

தீநோ வா ஹீநோ வா யோ மே பர்த்தா ஸ  மே குரு ஹு

தம் நித்யம் அனுரக்தாஸ்மி  யதா ஸூர்யம் சுவர்ச்சலா

ராமாயணம் சுந்தரகாண்டம்

दीनो वा राज्यहीनो वा यो मे भर्ता स मे गुरुः।

तं नित्यमनुरक्तास्मि यथा सूर्यं सुवर्चला।।5.24.9।।

—-SUNDARA KANDA, VALMIKI RAMAYANA

என் கணவன் ஏழையானாலும் நாடாளும் மன்னன் ஆனாலும் அவனே என் கணவன் ;என் குரு ; அவனை நான் எப்போதும் பின்பற்றிச் செல்வேன் எப்படி சூரியனைத் தொடர்ந்து சுவர்ச்சலா செல்கிறாளோ அப்படி நானும் செல்வேன். (ராவணனைக் கட்டிக்கொள் என்று சொன்ன அரக்கிகளுக்கு ஸீதை  சொன்ன மறுமொழி இது )

xxx

காணி நிலம் வேண்டும் பாடலில் பாரதியும் பத்தினிப் பெண்ணைத்தான் கேட்கிறான்

பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு

பத்தினிப் பெண்வேணும் – எங்கள்

கூட்டுக் களியினிலே – கவிதைகள்

கொண்டுதர வேணும் – அந்தக்

காட்டு வெளியினிலே – அம்மா! நின்றன்

காவலுற வேணும், – என்றன்

பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப்

பாலித்திட வேணும்.

 —subham—-

tags- மனைவி , அறப்பளீச்சுர சதகம், 

ராமாயணத்தில் வரும் நதிகள்! – 1 (Post No.11,467)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,467

Date uploaded in London – –   24 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ராமாயண வழிகாட்டி!

ராமாயணத்தில் வரும் நதிகள்! – 1

ச. நாகராஜன்

உலகின் ஆதி காவியமான ராமாயணம் அதிசயிக்க வைக்கும் காவியம்.

மனிதப் பண்புகளின் உச்ச கட்டத்தையும், மனிதன் கோரமான, அதம ரூபத்தையும் விளக்கிக் காட்டி, அறம், மறத்தை வெல்வதைச் சித்தரிக்கிறது ராமாயணம்.

இது ஒரு கலைக் களஞ்சியம்.

இதை ஆதி காலம் தொட்டு இன்றைய செல்போன், கணினி யுகம் வரை ஆராய்ந்தோர், ஆராய்ந்து வருவோர் ஏராளம்.

ராமாயணத்தில் இடம் பெறும் நதிகளைப் பற்றித் தனியே ஆய்வு நடத்தலாம்.

கம்பன் கோதாவரி நதியை கவிதையுடன் ஒப்பிட்டு கவிதைக்கு இலக்கணம் சொன்னான்.

இதோ வால்மீகி ராமாயணத்தில் இடம் பெறும் 49 நதிகளின் பெயர்களைப் பார்ப்போம்.

1) பாகீரதி : கங்கையின் இன்னொரு பெயர் தான் பாகீரதி. பகீரதன் பிரம்ம பிரயத்தனம் செய்து கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தான். அவர்களது முன்னோர் கடைத்தேற அவன் இந்த மாபெரும் செயலைச் செய்தான். படைப்புத் தெய்வமான பிரம்மா இதனால் மனம் மிக மகிழ்ந்தார். கங்கை பகீரதனின் மூத்த புதல்வியாகக் கருதப் படுவாள் என்றும் அவள் பெயர் பாகீரதி என அழைக்கப்படும் என்றும் அவர் சொன்னார். ஆகவே கங்கை பாகீரதி என்ற பெயரைப் பெற்றாள்.

2) கங்கா : வார்த்தையால் வர்ணிக்க முடியாத மஹிமையைக் கொண்ட தெய்வ நதியான கங்கை சொர்க்கம், பூமி, பாதாளம் என மூன்று லோகங்கள் வழியே பாய்ந்த நதி. இதைப் பற்றிய ஏராளமான வரலாறுகள் உண்டு. அவற்றைச் சித்தரிக்கும் புத்தகங்கள் உண்டு.

அவற்றைப் படித்தால் கங்கையின் மஹிமை ஒரு சிறிது நமக்குப் புரிய வரும்.

3) கோதாவரி : பஞ்சவடிக்கு அருகில் உள்ள நதி கோதாவரி. ராமருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட நதி.  வனவாசத்தின் போது சீதையுடனும் லட்சுமணனுடன் நெடுங்காலம் ராமர் பஞ்சவடியில் கழித்தார். ஆகவே கோதாவரியிலும் குளித்து மகிழ்ந்தார். அகத்திய மாமுனியின் யோசனையைக் கேட்டு தன் முன்னோர்களுக்காக உரிய சடங்குகளையும் இங்கு அவர் செய்தார். தெளிவான, புனிதமான நீரைக் கொண்டது கோதாவரி.  அப்ஸரஸ்கள் – தேவ கன்னிகைகள் – இங்கு வந்து குளித்து நீர் விளையாடலில் ஈடுபடுவதுண்டு. சீதையை மீட்டு அயோத்திக்கு புஷ்பக விமானத்தில் ஏறி ஆகாயமார்க்கமாகத் திரும்பும் போது ராமர் கோதாவரியை சீதைக்குச் சுட்டிக் காட்டுகிறார்.

4) கோமதி : கங்கை வழியே கடலை நோக்கிப் பாய்ந்து கடலில் சேரும் புனித நதி கோமதி. ராமர் சீதை லட்சுமணருடன் இந்த நதியைக் கடக்கிறார். அழகிய பசு மந்தை இருக்கும் இடம் கோமதி நதிக் கரை.

5) ஹ்லாதினி :  கங்கையிலிருந்து கிழக்கு முகமாகப் பாயும் மூன்று ஓடைகளில் இதுவும் ஒன்று. பரதன் கேகய நாட்டிலிருந்து அயோத்திக்குச் செல்லுகையில் இதைக் கடந்து சென்றான்.

6) இக்ஷுமதி : புனிதமான நதி இக்ஷூமதி. ஏராளமான பறவைகள் வசிக்குமிடம் இக்ஷுமதி பிரதேசம். இக்ஷ்வாகு குல மன்னர்களால் காத்து வரப்பட்ட நதி இது. பரதரையும் சத்ருக்னரையும் அயோத்திக்குக் கூட்டி வரச் சென்ற தூதர்கள் இந்த நதியைக் கடந்து கேகயம் சென்றனர்.

7) ஜாஹ்னவி : கங்கையின் இன்னொரு பெயர் ஜாஹ்னவி.  ஜானு என்ற பெரும் தபஸ்வியின் புதல்வி என்ற அர்த்தத்தில் ஜாஹ்னவி என்ற பெயர் ஏற்பட்டது.

8) காலாமாஹி : கிழக்கே பாயும் நதி இது. வனங்களும் மலைகளும் உள்ள பிரதேசம் காலாமாஹி பிரதேசம்.

9) காளிந்தி : சித்ரகூடம் செல்லும் வழியில் உள்ள நதி இது. சீதாதேவி இதைப் போற்றி வணங்குகிறாள்.

10) கபிவதி : கிழக்கே உள்ள நதி இது.

11) கௌஸிகி : இன்று கோசி என்று அழைக்கப்படும் கௌஸிகி கிழக்கே உள்ள நதி. இங்கு தான் விஸ்வாமித்திரர் தனது கடும் தவத்தை மேற்கொண்டார். சுக்ரீவனால் சீதையைத் தேடுவதற்காக அனுப்பப்பட்ட வானரர்களின் குழு இந்த நதியைக் கடந்து சென்றது.

12) காவேரி : தெற்கே தமிழகத்தில் பாயும் புனித நதி. இதன் பெருமை சொல்லில் அடங்காது. அப்ஸரஸ்கள் விளையாடி ஆனந்திக்கும் நதி காவேரி.

13) க்ருஷ்ணவேணி : தென்னிந்தியாவில் பாயும் அழகு நதி இது.

14) குலிகோடிகா: கேகயத்திற்கு அயோத்திக்கும் இடையே பாயும் நதி இது.

15) குலிங்கா : அயோத்திக்கு அடுத்துள்ள மலையில் பாயும் நீரோடை.

16) மாஹி : சீதையைத் தேடி சுக்ரீவன் ஆணையின் பேரில் புறப்பட்ட வானரங்கள் கிழக்கே பாயும் இந்த நதியைக் கடந்து சென்றனர்.

17) மாலினி : கேகய நாட்டின் வடக்கே ப்ரலம்பா பகுதியில் பாய்வது மாலினி.

18) மால்யவதி : மந்தாகினி நதியின் இன்னொரு பெயர் மால்யவதி.

19) மந்தாகினி : சித்ரகூட பிரதேசத்தில் பாயும் அழகிய நதி இது. ஸ்படிகம் போன்ற இதன் தூய நீரைப் பார்த்து ராமரும் சீதையும் ஆனந்தப்பட்டனர். அதில் குளித்தனர். சீதையை மகிழ்ச்சி அடையச் செய்வதற்காக ராமர் மந்தாகினி நதியை வர்ணிக்கிறார். இதன் கரையில் கனி கொடுக்கும் ஏராளமான அழகிய மரங்கள் உள்ளன.

20) நளினி : கங்கையின் ஏழு உபநதிப் பிரிவுகளுள் ஒன்று நளினி. ஹ்லாதினி மற்றும் பாவனியுடன் இது விந்துசரோவரம் நோக்கிப் பாய்கிறது.

21) நர்மதா : புனிதமான அழகிய நதி இது. மாஹிஷ்மதி நகருக்கு அருகே பாயும் நதி இது. மேற்கு நோக்கிப் பாயும் இந்த நதியில் தான் ராவணன் குளித்து விட்டு சிவனை நோக்கி தனது பாவம் தொலைய பிரார்த்தனை செய்தான். அப்போது நர்மதையின் வேகம் மாஹிஷ்மதியின் அரசனான கார்த்தவீர்யார்ஜுனனின் கைகளால் தடுக்கப்பட்டது. அவன் நர்மதாவின் இன்னொரு பக்கம் ஸ்தீரிகளுடன் விளையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். ஆகவே ராவணன் அர்ச்சித்த மலர்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் கோபம் அடைந்தான் ராவணன். ராவணனுக்கும் கார்த்தவீர்யார்ஜுனனுக்கும் இடையே கடும் போர் ஏற்பட்டது. கார்த்தவீர்யார்ஜுனன் ராவணனைத் தோற்கடித்து அவனை மாஹிஷ்மதி நகருக்குக் கைதியாகத் தூக்கிச் சென்றான்.

ராமாயணம் விளக்கமாகக் கூறும் இந்த நதிகளின் பெருமை இன்று வரை பாரத தேசத்தில் வசிக்கும் ஒவ்வொருவராலும் போற்றப்பட்டு வருகிறது.

மீதியுள்ள நதிகளை அடுத்துப் பார்ப்போம்.

                   ***                     தொடரும்

புத்தக அறிமுகம் 121 – 2

அற்புத அவதாரம் சத்யசாயிபாபா

(அம்ருத சாகரம் இணைப்பு)   

பொருளடக்கம்

நூலில் அம்ருத ஸாகரம் என்னும் சாயி உபதேச மஞ்சரி தரப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பாபாவின் 108 அருளுரைகள் இதில் தரப்பட்டுள்ளது. அந்த 108 அருளுரைகளின் தலைப்புகள் ;

1. என்னை பூஜிப்பதன் பலன்

2. சாயி என்றால் அர்த்தம் என்ன?   

3. சாயி மொழிகளும் சாயி வழியும்

4. அவதார காரணம்

5. அவதார பணி

6. பக்தர்களிடம் நான் நேரே வருவேன்! யார் மூலமாகவும்

   செயல்படுவதில்லை!!

7. பிரேமை என்ற கட்டணமே போதும்!

8. பிரேமையே சாயியின் நிதி

9. சாயி நிதி!

10. அவதாரங்களின் நோக்கம்     

11. சாயி பக்தன் யார்?

12. சாயி பக்தர்களுக்கு அறிவுரை  

13. இரும்பு குண்டு போன்ற உறுதி தேவை!

14. கூட்டு பிரார்த்தனையின் மகிமை

15. நாம மகிமை!   

16. ஆதாரமும் ஆதேயமும்

17. நாமம் சக்தி வாய்ந்தது 

18. நால்வகை சங்கீர்த்தனமும் நாமலிகிதமும்

19. நாம ஸ்மரணமே வழி

20. பாரதத்தின் அடிப்படை

21. ஐந்து பிரார்த்தனைகள்!

22. சரணாகதியே நேரடி தொடர்பு  

23. சரணாகதி செய்க

24. அனுக்ரஹம் எப்போது கிடைக்கும்?

25. சத்சங்க மகிமை!

26. மனச்சாட்சியே சத்சங்கம்

27. சனாதன மத ஸ்தாபகர் யார்?  

28. வேதங்களின் மகத்துவம்

29. ஈஸாவாஸ்ய உபநிஷத்

30. ‘ஓம்’கார மகிமை

31. பிரக்ஞானம் என்றால் என்ன?

32. பிரசாந்தி என்றால் என்ன?     

33. தீபத்தின் ஆற்றல்

34. காயத்ரி 

35. காயத்ரி – 2

36. பகவத் கீதை

37. ‘யோகக்ஷேமம்’ என்பதன் உட்கருத்து  

38. கிருஷ்ணரும், அர்ஜுனனும்    

39. குரு பக்தி

40. விநாயக தத்துவம்!     

41. கணபதி வழிபாடு

42. துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி

43. சிவராத்திரி ஏன்?

44. ராதை யார்?

45. எங்கும் உள்ள தெய்வம்!

46. கடவுளின் அஷ்ட ஐஸ்வர்யங்கள்

47. கடவுளுக்கு என்ன வேண்டும்?

48. ஒருமைப்பாட்டை உணர்தல் வேண்டும்

49. தாயும், கடவுளும்

50. அனைத்து மதங்களும் சுட்டிக் காட்டும் இறைத்தன்மை ஒன்றே!

51. எம்மதமும் சம்மதமே!

52. ஐந்து மதங்களும் ஒரு கரத்தின் ஐந்து விரல்களே

53. கர்ம பலன்களிலிருந்து தப்பிக்க வழி!

54. செயலுக்கு ஏற்றபடியே விளைவு இருக்கும்!

55. கர்மம், ஜன்மம், தர்மம், மர்மம்

56. உலகம் ஒரு கண்ணாடி, உன்னையே பிரதிபலிக்கும்!

57. மனித சக்தியும், தெய்வ சக்தியும்

58. சரீரம், மனது, ஆன்மா, மூன்றும் இணைந்து செயல்படுவதே

   மனிதத் தன்மை

59. முயற்சி தேவை

60. ஆறு வகை பக்தி

61. சுவர்க்கத்தின் கதவுகள் எப்போது திறக்கும்?

62. இறைவன் கருணை பெற மாசற்ற பிரேமை தேவை!

63. காமமும் மோகமும்

64. காமம், குரோதம், லோபம்

65. எட்டு வித அகங்காரங்கள்

66. திருப்பதி மொட்டையின் அர்த்தம்

67. கர்மமும், ஞானமும்

68. தியானமே யோகம்

69. மூன்று சரீரங்களும் ஐந்து கோசங்களும்

70. ஆன்மீகம் காட்டும் இறுதி நிலை

71. சேவையே சிறந்த வழிபாடு

72. ஒரே வரியில் 18 புராணங்களின் சாரம்!

73. தியாகம் ஒன்றே வழி!

74. ஆனந்தம் பெற வழி!

75. ராமராஜ்யம் ஏற்பட வழி

76. கலியின் விளைவிலிருந்து விடுபடுங்கள்

77. நீங்கள் அறங்காவலர்களைப் போல

78. தபஸ் என்றால் என்ன?

79. காம்பஸ் போல கடவுளை நோக்கி இரு!

80. ஆசைகளுக்கு வரையறை தேவை

81. சமமாக அனைவரையும் நேசி

82. மூன்று விதத் தூய்மை

83. நிந்திக்காதே

84. பொறுமை

85. உலக அமைதிக்கு வழி தெய்வ ப்ரீதி, பாப பீதி, சங்க நீதி

86. சத்தியத்திலிருந்து சாந்திக்கு

87. வாழ்க்கையின் நான்கு படித்தரங்கள்

88. ஐந்து நியமங்கள்

89. சுத்தம்

90. மனக் கண்ணாடி

91. பாரதத்தின் ஆதாரம் தர்மமே

92. தெய்வ ப்ரீதி, பாப பீதி, சங்க நீதி

93. பெண்ணே ஆதாரம்!

94. மகளிர் கடமை

95. அமரத்வம் அடைய வழி!

96. இயற்கையை ஆராய மூன்று தகுதிகள் தேவை

97. பயமின்றி இருக்க வழி

98. நிகழ்காலத்தில் வாழுங்கள்!

99. உணர்ச்சி வசப்பட வேண்டாம்!

100. நாவு சக்தி இழக்க நான்கு காரணங்கள்

101. இரண்டு

102. வாழும் வழி

103. விஜய சாக்ஷி: வெற்றிக்கு வழி

104. உன் துயரம் போக வழி!

105. தவிர்க்க வேண்டியவை!

106. டி.வி.யினால் ஏற்படும் தீய விளைவுகள்

107. இதய நோய்க்கு இடமே இல்லை

108. ஆன்மீகப் புத்தகங்களைப் படியுங்கள்!

*

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

Linking with the previous incarnation of Shirdi Sai and the expected incarnation of Prema Sai, this book describes in detail the living legend Sri Sathya Sai Baba. The 41 chapters are truly blissful, providing an insight into the miracles of Sathya Sai Baba. Also attached are 108 prime discourses of Sathya Sai Baba. A must read for Sai devotees and spiritually inclined people.

நாம் வாழும் காலத்தில் நம்மோடு வாழ்ந்த அற்புத அவதாரமான ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் வாழ்க்கை வரலாற்றைத் தெளிவாக விளக்கும் நூல். அவருடைய முந்தைய அவதாரமான ஷீர்டி சாயி பற்றியும் அடுத்து அவர் பிரேம சாயியாக அவதரிக்கப் போவது பற்றியும் நூலில் காணலாம். 41 அத்தியாயங்களில் சாயியின் அற்புத வரலாற்றை விரிவாகப் படிப்பது ஆனந்தமான அனுபவம்! அத்துடன் ஸ்ரீ சாயிபாபாவின் 108 முக்கியமான உரைகளின் தொகுப்பும் நூலில் இரண்டாவது பகுதியாக இணைக்கப்பட்டுள்ளது. சாயி அன்பர்களும் ஆன்மீக நாட்டம் உடையவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல்!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘அற்புத அவதாரம் சத்யசாயிபாபா!’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

மனிதப் பிறவி அரிது -அறப்பளீச்சுர சதகம் (Post No.11,466)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,466

Date uploaded in London – 23 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

அறப்பளீச்சுர சதகம் என்னும் நூலில் அருமையான விஷயங்கள் காணக்கிடக்கின்றன ; அம்பலவாணக்  கவிராயர் பாடிய இந்த நூறு பாடல்களும் கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ்வரர் என்ற சிவபெருமானை நோக்கிப் பாடியதாகும். அந்த மலை, சதுர கிரி என்று அழைக்கப்படும். மதுரைக்குப் பக்கத்திலும் ஒரு சதுரகிரி உள்ளது . அது வேறு ; இது வேறு. தமிழ் இணையக் கல்விக்கழகம் இதை நமக்கு இலவசமாக வெப்சைட்டில் வெளியிட்டதற்கு நாம் நன்றிக் கடன்பட்டவர்களாவோம்.. அதற்கு முன்னரே நான் பிரிட்டிஷ் நூலகத்தில் இதைக் கண்டு, இதே பிளாக்கில் பல கட்டுரைகளை எழுதியுள்ளேன். இப்பொழுது முடிந்தமட்டும் எனது வியாக்கியானத்துடன் பாடல்களைக் காண்போம் .

முதல் பாடலில் வரும் சுவையான சொற்களை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறேன் :–

கடலுலகில் வாழும்உயிர் எழுபிறப் பினுள்மிக்க
     
காட்சிபெறு நரசன் மமாய்க்
  
கருதப் பிறத்தலரி ததினும்உயர் சாதியிற்
     
கற்புவழி வருதல் அரிது;
வடிவமுடன் அவயவம் குறையாது பிழையாது
     
வருதலது தனினும் அரிது;
  
வந்தாலும் இது புண்யம் இதுபாவம் என்றெண்ணி
     
மாசில்வழி நிற்றல் அரிது;
நெடியதன வானாதல் அரிததின் இரக்கம்உள
     
நெஞ்சினோன் ஆதல் அரிது;
  
நேசமுடன் உன்பதத் தன்பனாய் வருதல்இந்
     
நீள்நிலத் ததினும் அரிதாம்;
அடியவர்க் கமுதமே! மோழைபூ பதிபெற்ற
     
அதிபன்எம தருமை மதவேள்
  
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     
அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அடியவர்க்கு அமுதமே – அடியவர்களின் துன்பத்தை
நீக்குபவனே!’

மோழை பூபதி பெற்ற அதிபன் – மோழை எனப்படும்
தலைவன் ஈன்ற தலைவன்,

 எமது அருமை மதவேள் – எம் அரிய மதவேள்,

அனுதினமும் மனதில் நினைதரு – எப்போதும் உள்ளத்தில்
வழிபடுகின்ற,

சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே – சதுர கிரியில்
எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!’

கடல் உலகில் வாழும் எழுபிறப்பு
உயிர்களுள் – கடலாற் சூழப்பட்ட நிலத்தில் வாழ்கின்ற எழுவகையாகத்
தோன்றிய உயிர்களுள்;

மிக்க காட்சிபெறு நரசன்மமாய்க் கருதப் பிறத்தல்
அரிது – மிகுந்த அறிவையுடைய மக்கட்பிறப்பாய் நினைக்குமாறு பிறப்பது
அருமை,

அதினும் உயர் சாதியில் கற்புவழி வருதல் அரிது – அப்
பிறப்பினுள்ளும் உயர்குணமுடைய இனத்திலே கற்பொழுக்கமுடைய மரபிலே தோன்றுதல் அருமை,


அதுதனினும் வடிவமுடன் அவயவம் குறையாது பிழையாது வருதல்
அரிது – அவ்வாறு பிறப்பவர்களுள்ளும் அழகுடன் உறுப்புக் குறையாமலும்
பிழை இல்லாமலும் பிறப்பது அருமை,

வந்தாலும் இது புண்யம் இது பாவம் என்று எண்ணி மாசு இல்வழி நிற்றல் அரிது – அவ்வாறு பிறப்பினும் இதுநன்று இது தீது என நினைத்துக் குற்றமில்லாத நெறியில் நிற்றல் அருமை,


நெடிய தனவான் ஆதல் அரிது – (அதனினும்) பெரிய செல்வனாவது
அருமை,

அதின் இரக்கம் உள நெஞ்சினோன் ஆதல் அரிது – அதனினும்
அருட்பண்புடைய உளத்தோன் ஆவது அருமை,

அதினும் உன்பதத்து நேசமுடன் அன்பனாய் வருதல் இந் நீள்நிலத்து அரிது, ஆம் – அதனினும்உன் திருவடிகளிலே அன்புதவழும் அடியவனாக வருதல் இப் பேருலகிலே அருமையாகும்.

     
(வி-ரை.) எழுவகைப்பிறப்பு: வானவர், மக்கள், விலங்கு, பறவை,
ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம். பூ – உலகம், பதி – தலைவன்.
பூபதி – அரசன்; தங்களுக்கு உதவிய வள்ளல்களைப் பூபதி யென்று
புகழ்தல் அக்காலப் புலவர் வழக்கம்.
  (கருத்து) அறிவுடைய மக்கட் பிறப்பாகப் பிறந்து அழகு, செல்வம்,
ஒழுக்கம், கடவுள் வழிபாடுகள் உடையவராக இருப்பது அருமை.

Xxx

லண்டன் சுவாமிநாதன் வியாக்கியானம் / விளக்க உரை

முதலில் விஞ்ஞான விஷயம் ஒன்று: உயிர்வாழ்வன அனைத்தையும் வகை வகையாகப் பிரித்தல் வேண்டும் என்று எண்ணுவது அறிவுடைமை. இது அறிவியல் அணுகுமுறை; காலம்தோறும் இது மாறிவரும். நான் பி.எஸ் சி. தாவரவியல் B.Sc. Botany படித்தபோது  தாவரங்களை லின்னேயஸ் கிளாசிபிகேஷன்படி Linnaeus Classification of Plant Kingdom , படித்தேன்; செம்பருத்திப் பூ என்றால் அதை ஹைபிஸ்கஸ் ரோஸா சைனன்ஸிஸ் என்போம் . வெண்டைக் காயென்றால் ஹைபிஸ்கஸ் எஸ்குலன்டஸ் என்றும் முருங்கைக் காய் என்றால் மொரிங்கா ஆப்லெங்காடா என்றும் சொன்னோம். ரஷ்ய விஞ்ஞானி மெண்டலீவ் (Periodic Table) மூலக அட்டவணையைக் கண்டுபிடிக்கும்வரை அதை வேறு வகையாகப் பிரித்தனர். இன்னும் கொஞ்சம் காலத்தில் இதைவிட முன்னேறிய ஒன் ற வரக்கூடும்.

சம்ஸ்க்ருதத்தில் உயிர்வாழும் பிராணிகளை நாலு வகையயாகப் பிரித்தது மனு ஸ்ம்ருதியில் வருகிறது

1.அண்டஜம்: முட்டையில் இருந்து பிறப்பவை

2.ஜராயுதம்; கருப்பையில் பிறப்பவை

3.உத்பிஜம்: வித்து, வேர், கிழங்கு மூலம் பிறப்பவை

4.சுவேதஜம்: வேர்வையில் (கிருமிகள், பாக்டீரியாக்கள்) பிறப்பவை.

அண்டசஞ் சுவேதசங்கள் உற்பிச்சம் சராயுசத்தோ

டெண்தரு லெண்பத்து நான்கு நூறாயிரந்தான்

உண்டுபல் யோனியெல்லாம் ஒழித்து மாநுடத்துதித்தல்

கண்டிடில் கடலைக் கையால் நீந்தினன் காரியங்காண்”

என்று சிவஞான சித்தியார் கூறுகிறார்.

தாவரம் முதல் தேவர்கள் வரை உள்ளவர்களை ஏழுவகையாகப் பிரித்தனர்:

1.தேவர்

2.மனிதர்

3.விலங்கு: சிங்கம், புலி, யானை, ஆடு, மாடு முதலியன

4.பறவை: காகம்,குயில், மயில், குருவி, கொக்கு முதலியன

5.ஊர்வன: பாம்பு, பூரான், தேள், பல்லி முதலியன

6.நீர்வாழ்வன: மீன், ஆமை, முதலை, திமிங்கிலம் முதலியன

7.தாவரம்: மரம், செடி, கொடி, பாசி, புல், பூண்டு முதலியன

இவைகளை 84 லட்சம் (8400000) வகைகள் என்றும் கூறினர்.

இந்த 84 லட்சம் உயிர்வகைகள் என்பது தற்போதைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு நெருக்கமாக வருகிறது. இதை அப்பர் தேவாரத்திலும் காணலாம். மனிதப் பிறவி அரிதிலும் அரிது , அதிலும் கூன் , குருடு உடலூனம் இல்லாமல் பிறப்பது அரிது என்பதை அவ்வையாரும் அவருக்கு முன்னால் ஆதிசங்கரரும் சொல்லிவிட்டனர்.

அரியது கேட்கின் வரிவடி வேலோய்!

அரிதரிது மானிடர் ஆதல் அரிது

மானிடராயினும் கூன் குருடு செவிடு

பேடு நீக்கிப் பிறத்தல் அரிது

பேடு நீக்கிப் பிறந்த காலையும்

ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது

ஞானமும் கல்வியும் நயந்த காலையும்

தானமும் தவமும் தான்செயல் அரிது

தானமும் தவமும் தான்செய்வராயின்

வானவர் நாடு வழிதிறந் திடுமே

என்று அவ்வைப் பாட்டியும் கூறுவர்.

ஆதிசங்கரர் கூற்று

ஆதிசங்கரர் பல இடங்களில் மாநுடப் பிறவியின் அரிய தன்மை பற்றிக் கூறுகிறார்: “ஜந்தூனாம் நரஜன்ம துர்லபத:” (அரிது அரிது மானுடராதல் அரிது). அவர் எழுதிய விவேக சூடாமணியில் 2, 3, 4– ஆவது ஸ்லோகங்களிலேயே இதைப் பற்றிப் பிரஸ்தாபிக்கத் துவங்கி விடுகிறார்.

அரிது அரிது மனிதப் பிறவி, அதிலும் அரிது பிரம்மத்தை நாடும் பிறவி

அதனிலும் அரிது வேத அறிவு, அதனிலும் அரிது ஆத்ம ஞானம்

முக்தி பெறுவதோ நூறு கோடியில் ஒன்றே!

மூன்றாவது ஸ்லோகத்தில் மூன்று அரிய விஷயங்களைக் கூறுகிறார்: மனுஷ்யத்வம், முமுக்ஷுத்வம், மஹா புருஷர்களின் அருள். மனிதப் பிறவி, வீடு பேற்றை நாடல், பெரிய குருவின் பூரண பாதுகாப்பு என்பதே அவர் கூறுவது.

வேதத்தைப் படித்த பின்னரும் முக்தியை நாடாதவன் தற்கொலை செய்துகொள்வதற்குச் சமம் என்கிறார் நாலாவது ஸ்லோகத்தில்.

जन्तूनां नरजन्म दुर्लभमतः पुंस्त्वं ततो विप्रता

तस्माद्वैदिकधर्ममार्गपरता विद्वत्त्वमस्मात्परम् ।

आत्मानात्मविवेचनं स्वनुभवो ब्रह्मात्मना संस्थितिः

मुक्तिर्नो शतजन्मकोटिसुकृतैः पुण्यैर्विना लभ्यते ॥ २ ॥

दुर्लभं त्रयमेवैतद्देवानुग्रहहेतुकम् ।

मनुष्यत्वं मुमुक्षुत्वं महापुरुषसंश्रयः ॥ ३ 

மானுடப் பிறவி கிடைப்பது அரிது;அதிலும் ஆணாகப் பிறந்து பிரம்மனை நாடும் பிறப்பு கிடைப்பது மேலும்  அரிது  அதிலும் ஆன்ம உணர்வு பெறுவது அரிதரிது; முக்தி அடைவது என்பது நூறு கோடி பிறப்புகளில்தான் கிடைக்கும்

மூன்று விஷயங்கள் மிகவும் அரிதானவை:அவை இறையருளால்தான் கிடைக்கும்::மனிதப் பிறவி, முக்தி அடையும் வேட்கை , நல்ல குருவின் அருள் பார்வை

लब्ध्वा कथंचिन्नरजन्म दुर्लभं

तत्रापि पुंस्त्वं श्रुतिपारदर्शनम् ।

यस्त्वात्ममुक्तौ न यतेत मूढधीः

स ह्यात्महा स्वं विनिहन्त्यसद्ग्रहात् ॥ ४ 

எப்படியோ மனிதப்பிறவி கிடைத்துவிட்டது; வேதங்களைக் கற்கும் பாக்கியமும் கிடைத்துவிட்டது அதற்குப் பின்னரும் அவன் முக்தி அடைய முயற்சி செய்யாதிருப்பது தற்கொலைக்கு ஈடாகும்.

xxxx

மாநுடப் பிறவி எவ்வளவு அரிது என்பதை சிந்தாமணிச் செய்யுள் ஒன்று மிகமிக அழகாகக் கூறுகிறது. இதில் தத்துவம் ஒரு புறம் இருக்க தமிழர்களுக்கு கடல் பற்றி எவ்வளவு அறிவு இருந்தது என்பதையும் இது காட்டும். சீவக சிந்தாமணி என்பது திருத்தக்க தேவரால் எழுதப்பட்ட நூல். தமிழில் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. அவர் கூறுவார்:

பரவை வெண் திரை வடகடல் படு நுகத் துளையில்
திரை செய் தென் கடல் இட்டதோர் நோன் கழி சிவணி
அரச அத்துளை அகவயிற் செறிந்தென அரிதால்
பெரிய மோனிகள் பிழைத்து இவண் மாநிடம் பெறலே” (சீவக.2749)

வட கடலில் நுகத் துளையோடு கூடிய ஒரு கழி தண்ணீரில் மிதந்து செல்கிறது; தென் கடலில் மற்றொரு கழி மிதந்து செல்கிறது. இந்த இரண்டும் ஒன்றை ஒன்று சந்திப்பது மிக மிக அரிது. அப்படியே சந்தித்தாலும் அவ்விரண்டு துளைகளிலும் ஒரு கோல் நுழைவது அரிதினும் அரிது. இந்த இரண்டு கழிகளும் ஒன்றை ஒன்று சந்தித்து ஒரு கோல் நுழைந்துவிட்டால் அது எவ்வளவு பெரிய அதிசயம் ஆகும்? அத்துணை அரிது நமக்கு மாநுடப் பிறவி கிடைத்திருப்பது என்கிறது சிந்தமணிச் செய்யுள்

மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உள்ள பெரிய வேறுபாடு சிந்திக்கும் திறன் ஆகும். எது நல்லது எது கெட்டது என்று மனதினால் சிந்திக்கும் அரிய பண்பு இருப்பதால் மனுஷ்ய என்று சம்ஸ்க்ருதத்தில் சொன்னார்கள். அது ஆங்கிலத்தில் MAN என்றும் தமிழில் மானுடன், மனிதன் என்றும்  ஆயிற்று சிந்திப்பவன் மட்டும் மனிதன் அல்ல. சிந்தித்து நல்லவழியில் செல்பவன்தான்  மனிதன்.

–subham–மனிதப் பிறவி, அரிது ,அறப்பளீச்சுர சதகம்,

Tamil Hindu Encyclopaedia 29: Garuda Purana in Sangam Tamil Books (Post.11,465)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,465

Date uploaded in London – 23 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

It is amazing to see the Rig Vedic Garuda in 2000 year old Tamil Sangam literature. Rig Veda says that the Soma plant was brought by the falcon or eagle in umpteen places. No one can explain the mystery until this day. Whether someone trained eagle or falcon to identify it and bring it or a certain mountainous tribe was called Eagles, we don’t know for sure. Later Ithihasas and Puranas, (epics and mythologies) give different stories about கருடன், Garuda, the white necked bird of prey. Even today Tamils salute it, worship it, whenever it is sighted. If it is sighted during auspicious ceremonies, it is considered a positive YES from the gods.

Paripatal gives a detailed description of Garuda, which coincides with the descriptions in the Puranas.

“A bird with curved wings, with many lines on it.

White teeth with holes full of poison.

Breaths hot air like fire, has enormous strength to attack snakes till they die,

It has another name ‘Snake Enemy’ ( in Tamil பாம்புப் பகை Paampup pakai)- Pari.13-48/50

It can keep thousand headed ஆதி சேஷன் Aadisesha in his beak, is that all? No, it wears snakes as jewels. It is wound with a snake in its belly area, it eats snake and its life

It has snakes on all its body part” s-

Murugu 148-150, Pari 13-38/40; Pari.3-59/60; Pari 4-42/48

That strong Garuda was subdued by the Red Eyed Maal Vishnu

When the Garuda lost its strength it cried

Oh Red Eyed Maal ஓ, செங்கண் மால். Pari 3-60/61

The Garuda story in the Puranas say that it released its mother from slavery. In a competition with its co wife of her husband it lost its freedom. Garuda released her mother Vinata.

Pari 3-16/17 praised the bird One who removed the difficulty of its mother.

How did Garuda do it also explained in Pari 3-16/17

Because of jealousy Kadru wanted to belittle Vinata. During one conversation Vinata said the tail of Indra s horse is white. Kadru said that it was dark. Then both had a bet. If it is not white Vinata must be a slave to Kadru. And the jealous Kadru changed the colour of the tail into black through foul means. Then Kadru put a condition for her release. If she can get her the Amrita from Indra ,Vinata will be released. Garuda did it and got its mother’s freedom back. Probably this is what the Rigvedic poets mean when they sing Garuda brought Soma plant.

If it is correct, we may say Amrita is equal to Soma and vice versa.

If one studies both the literature with its hidden meaning more mysteries may be solved.


சுமேரியாவில் கருடபுராணம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

முதலில் கருடன் கதையைப் பார்ப்போம். … பல மனைவியரில் விநதா என்பவளுக்கு கருடனும் கத்ரு …

Tamil References:-

விடமுடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம்;

அவன் மடிமேல் வலந்தது பாம்பு;

பாம்பு தொடி; பாம்பு முடி மேலன;

பாம்பு பூண்; பாம்பு தலைமேலது;         45

பாம்பு சிறை தலையன;

பாம்பு படி மதம் சாய்த்தோய்! பசும் பூணவை

கொடிமேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு;

பரிபாடல் 4-42-48

Xxx

படர் சிறைப் பல் நிறப் பாம்புப் பகையைக்

கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை;

ஏவல் இன் முது மொழி கூறும்,

பரிபாடல் 13-38/40

Xxx

ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட

சேவல் ஊர்தியும், செங் கண் மாஅல்!   

ஓ!’ எனக் கிளக்கும் கால முதல்வனை;

பரிபாடல் 3-59/60

Xxx

ஏஎர், வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின்,15
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை;
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின்
நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின்

பரிபாடல் 3-16/17

To be continued…………………………..

கலியுக அவதாரம் ஶ்ரீ சத்ய சாயிபாபா! (Post No.11,464)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,464

Date uploaded in London – –   23 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

கலியுக அவதாரம் ஶ்ரீ சத்ய சாயிபாபா!

ச.நாகராஜன் 

இன்று, நவம்பர் 23. ஶ்ரீ சத்யசாயிபாபாவின் அவதார தினம்.

எல்லையற்ற அவதார பெருமைகளை நினைவு கூர்ந்து அவரைப் போற்றி வணங்குவோம்.

1) ஶ்ரீ சத்ய சாயிபாப அவதார தோற்றம் : 23-11-1926  சமாதி : 24-4-2011

   வயது 84

2) ஆந்திர மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் புட்டபர்த்தியில் தோற்றம். சாதாரண சிறு கிராமமாக இருந்த புட்டபர்த்தி லட்சக்கணக்கான பக்தர்களின் யாத்திரை ஸ்தலமாக பகவானின் அருள் விளையாடலால் மாறியது.

3) பாபா நிறுவிய ஶ்ரீ சத்யசாயி சேவா சமிதி ஆயிரத்திதொள்ளாயிரத்து அறுபதுகளில் வீறு கொண்ட இயக்கமாயிற்று. 126 நாடுகளில் சமிதியின் கிளைகள் தோன்றி அரும்பணி ஆற்றலாயின.

4) இதற்கு 1200 கிளைகள் உலகெங்கும் உள்ளன.

5) பகவான் ஆற்றிய உரைகளின் ஆங்கில வடிவம் SathyaSai Speaks என்ற பெயரில் 42 தொகுதிகளாக வெளி வந்துள்ளன. அவற்றை

https://archive.org/details/sathyasaispeaks/sss01%20%28194%29%20%281953%20a%201960%29/ என்ற தளத்தில் படிக்கலாம்.

6) ஷீர்டி சாயியின் அடுத்த அவதாரம் ஶ்ரீ சத்ய சாயிபாபா. அடுத்த அவதாரம் கர்நாடக மாநிலத்தில் பிரேம சாயியாக எடுப்பேன் என்று அவர் அருளுரை பகர்ந்துள்ளார்.

7) வாஹினி என்ற வரிசையில் பகவான் கீதா வாஹினி, ஞான வாஹினி, பிரேம வாஹினி, தியான வாஹினி, தர்ம வாஹினி, பிரசாந்தி வாஹினி, சூத்திர வாஹினி, பாகவத வாஹினி, ப்ரச்னோத்தர வாஹினி ராமகதா ரஸ வாஹினி, சத்ய சாயி வாஹினி, உபநிஷத் வாஹினி, வித்யா வாஹினி உள்ளிட்ட நூல்களைப் படைத்து அருளியுள்ளார்.

7) சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவ மனையை110 கோடி ரூபாய் செலவில் அமைத்து 1991 நவம்பர் 2ஆம் தேதி திறந்து வைக்க சங்கல்பம் கொண்டார் பாபா. மூன்று லட்சம் சதுர அடியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான மருத்துவ மனை இது.

8) அப்போதைய பிரதமர் திரு பி.வி.நரசிம்ம ராவ் இந்த மருத்துவ மனையைத் திறந்து வைத்தார்.

9) உலகில் உள்ள பெரும் விஞ்ஞானிகள் பாபாவை தரிசித்தனர்; அவரது அற்புதங்களை நேரில் கண்டனர்; வியந்தனர்.

10) டாக்டர் ப்ராங்க் பாரனோஸ்கி அரிஜோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர். அவர் பாபாவை தரிசித்தார். அவரது ஒளிவட்டத்தை (அவுரா) கண்டு வியந்தார். அவரை LOVE WALKING ON TWO FEET என்று வர்ணித்தார்.

11. உலகின் பிரபல சைக்கியாட்ரி நிபுணர் டாக்டர் சாமுவெல் சாண்ட்விஸ் பாபாவை தரிசித்தார். அவரது அருளைப் பெற்றார். AMAZING, UNBELIEVABLE, UNTHINKABLE என்று வர்ணித்தார். இனி சைக்கியாட்ரியே இல்லை! சாயிகியாட்ரி தான் என்று சிலேடையாக உரைத்தார்.

12. அமெரிக்காவைச் சேர்ந்த வால்டர் கோவான் 1971ஆம் ஆண்டு இந்தியா வந்தார். பாபாவை தரிசித்தார். திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக டிசம்பர் 25ஆம் தேதி காலை மரணமடைந்தார். உயிர் பிரிந்திருந்த உடலை பாபா காலை பத்து மணிக்குப் பார்க்க வருவதாகச் சொன்னார். சவத்தை மீண்டும் பார்க்க வந்த டாக்டர் அவர் உயிருடன் இருப்பதைப் பார்த்து பிரமித்தார். நாசி துவாரம், காதுகளில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு அகற்றப்பட்டது. உயிர் பிழைத்த கோவான் பாபாவே தன்னை வந்து காப்பாற்றியதாகவும் நடந்ததை விவரமாகவும் குறிப்பிட்டார்.

13. ஹாலிவுட்டில் கொடி கட்டிப் பறந்த திரைக்கதை ஆசிரியர் ஆர்னால்ட் ஷுல்மன் இந்தியா வந்தார். பங்களூரில் ஒய்ட்பீல்டில் பகவானைச் சந்தித்து ஆசி பெற்றார். அவர் கண்ட அனுபவங்கள் அவரைத் திகைக்க வைத்தது.

14. உலகெங்கும் இருந்த பக்தர்களின் வீடுகளில் இருந்த தெய்வீகப் படங்களிலிருந்து ஒரு கால கட்டத்தில் ஏராளமான விபூதி தானாகத் தோன்றியது. இது எப்படி என்று அனைவருக்கும் புரியவில்லை. பாபாவின் அருள் விளையாடல்களில் இதுவும் ஒன்று என்று அவர்கள் தெளிந்தனர்.

15. சிவராத்திரியன்று தனது உடலிலிருந்து லிங்கத்தை பாபா எடுப்பதை லட்சக் கணக்கான பக்தர்கள் கண்டு ஆனந்தித்து வந்தனர்.

16. பாபாவின் அணுக்கத் தொண்டரான கஸ்தூரி 1959தொடங்கி பாபாவுடன் நெருங்கி இருக்க ஆரம்பித்தார். 1982இல் அவர் எழுதிய LOVING GOD அவரது அனுபவங்களைத் தெளிவாகக் கூறும் ஒரு அபூர்வமான நூல்!

17. பிரசாந்தி நிலையத்திலிருந்து (புட்டபர்த்தி) சனாதன சாரதி என்ற ஆன்மீக மாத இதழ் ஆரம்பிக்கப்பட்டது. அதில் ஏராளமான ஆன்மீகக் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன்.

18.உலகில் உள்ள ஏராளமான ஆன்மீகப் பெரியார்கள் பாபாவை தரிசனம் செய்து அருள் பெற்றுள்ளனர்.

19. பாரத ரத்னா திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி பாபாவின் அணுக்க பக்தை. பாரத ரத்னா சச்சின் டென்டுல்கர் பாபாவின் பக்தர். பாபாவின் சமாதி தினத்தன்று நேரில் வந்து அஞ்சலி செலுத்தி அதில் அவர் கலந்து கொண்டார்.

20. பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ், வாஜ்பாயி, மன்மோகன் சிங் ஆகியோர் பாபாவைப் பெரிதும் போற்றியவர்கள். பிரதமராக இருந்த மன்மோகன் சிங் சமாதி தினத்தன்று நேரில் வந்து கலந்து கொண்டார்.

21. HELP EVER, HURT NEVER என்பதே பாபாவின் உபதேசம். MY LIFE IS MY MESSAGE  என்று சுருக்கமாக தனது உபதேச சாரத்தை ஒரே வரியில் அவர் எடுத்துரைத்தார்.

22. DEDICATION, DEVOTION, DISCIPLINE, DISCRIMINATION, DETERMINATION என்று  இப்படி ஐந்து Dக்களைக் கூறிய பாபா இந்த ஐந்து நியமங்களையும் எவர் ஒருவர் நன்றாகப் பின்பற்றித் தேர்ச்சி பெறுகிறாரோ அவர் இறையருள் பட்டமான தெய்வானுக்ரஹம் என்பதை அடைவார் என்றார்.

23. பாபாவின் மஹிமை எல்லையற்றது. எந்த நேரத்திலும் அவரை வணங்கலாம்; அருள் பெறலாம்! அவரவர் அனுபவத்தையும் பெற்று மகிழலாம்!

***

புத்தக அறிமுகம் 121 – 1

அற்புத அவதாரம் சத்யசாயிபாபா

(அம்ருத சாகரம் இணைப்பு) –                                                        

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1. அவதாரம் உதித்தது    

2. பிராமண பாலகன் 

3. செப்பினட்லு சேஸ்தாரா?    

4. நானே சாயிபாபா

5. ஷீர்டி சாயி  

6. ஷீர்டி சாயியின் அற்புத வாழ்க்கையில்

7. பூர்வ ஜென்ம பந்தம்    

8. மீண்டும் அவதரிப்பேன்

9. அவதாரப் பணி துவக்கம்     

10.சித்ராவதி நதிக் கரையில்    

11. பிரசாந்தி நிலையம்    

12. ரிஷிகேச யாத்திரை   

13. சுப்பம்மாவிற்கு அனுக்ரஹம்

14. ஜோடி ஆதிபல்லி ஸோமப்பா     

15. பத்ரிநாத் யாத்திரை    

16. ஸ்வாமி அபேதானந்தருக்கு அருள்     

17. கிழக்கு ஆப்பிரிக்க விஜயம்

18. சனாதன சாரதி   

19. கஸ்தூரி பெற்ற அருள்

20. கஸ்தூரி கண் அன்புக் கடவுள்

21. சிவராத்திரி லீலை     

22. அற்புதங்கள் என் விசிடிங் கார்டுகள்    

23. ராஜ குடும்பத்தின் அனுபவம்     

24. இந்திய விஞ்ஞானிகளின் வியப்பு

25. ஈஸ்வரம்மா     

26. சத்ய சாயி சேவா நிறுவனங்கள்  

27. இந்திரா தேவி பெற்ற அனுக்ரஹம்     

28. ஹோவர்ட் மர்பட்     

29. உல்ப் மெஸ்ஸிங்கிற்கு அனுக்ரஹம்   

30. சுவாமியின் ஒளிவட்டம்    

31. இறந்தவர் எழுந்தார்   

32. சைக்கியாட்ரிஸ்ட் கண்ட சாயிகியாட்ரி

33. விஞ்ஞானிகளை வியக்க வைத்தவ்ர்   

34. அருள் பெற்ற ஆர்னால்ட் ஷுல்மன்    

35. நக்ஸலைட் பக்தரானார்     

36. கேன்ஸர் கேன்ஸல்ட்

37. சூப்பர் ஸ்பெஷாலிடி ஆஸ்பத்திரி

38. பல நாடுகளிலும் சாயி

39. பாபா தன்னைப் பற்றிக் கூறியது!

40. சுவாமியின் அருள் உரைகளும் நூல்களும்   

41. பிரேம சாயி     

*

2002ஆம் ஆண்டு அச்சுப் பதிப்பாக வெளி வந்த நூலில் இடம் பெற்ற முன்னுரை இது:

நாம் வாழும் காலத்தில் அற்புதமான அவதாரம் நிகழ்ந்துள்ளது! ஶ்ரீ சத்ய சாயிபாபா தோன்றிய காலத்திலேயே நாமும் பிறந்து வாழ்ந்து வருவது நாம் செய்த மிகப் பெரும் பாக்கியம்!

ஶ்ரீ ராமருடன் வாழ்வதில் அயோத்திவாசிகள் எவ்வளவு சந்தோஷம் அடைந்தார்களோ, ஶ்ரீ கிருஷ்ணருடன் வாழ்வதில் மதுரா, கோகுலம், பிருந்தாவனவாசிகள் எவ்வளவு ஆனந்தம் அடைந்தார்களோ அவ்வளவு சந்தோஷமும், ஆனந்தமும் சாயி லீலைகளை அனுபவிப்பதில் பெறுகிறோம்.

1965ஆம் ஆண்டு முதல் முதலாக பகவானைத் தரிசிக்கும் பேறு கிடைத்தது. பழம் பெரும் சாயி பக்தரான திரு பி.எஸ்.ஏ. சுப்ரமணிய செட்டியார் அவர்கள்  முன்னின்று ஏற்பாடு செய்த புட்டபர்த்தி யாத்திரையில் என் தந்தையார் தினமணி திரு வெ.சந்தானம் அவர்களுடன் குடும்பம் முழுதும் பயணப்பட்டோம். எல்.ஐ.சி. உயர் அதிகாரி திரு கே.ஆர்.கே.பட் உட்பட மதுரை பக்தர்கள் புட்டபர்த்தியில் அடைந்த ஆனந்த அனுபவம் வார்த்தைகளில் விளக்க முடியாதது! பர்த்தியில் தந்தையாருடன் அந்தரங்க பேட்டி அறையில் குடும்பம் முழுதும் சென்றோம். பகவான் தனது விசிடிங் கார்டை சிருஷ்டித்து எனது தந்தையாருடன் அந்தரங்க பேட்டி அறையில் கொடுத்த போது, சுமார் நூறு நாட்களில் பகவான் பற்றி நூற்றியெட்டு பாடல்களை இயற்றி ராக தாளத்துடன் அதை அச்சிட்டு நூலை சுவாமியிடம் எனது தந்தையார் சமர்ப்பித்த போது அது தோன்றிய அந்தக் கணமே சமர்ப்பிக்கப்பட்டு விட்டது என்ற பகவான் பதங்கள் துள்ளிக் குதித்து வந்துள்ளன என்றும் குறிப்பிட்டார். இது தான் எங்கள் குடும்பம் பகவானுடன் தொடர்பில் வந்த முதல் நிகழ்ச்சி.

சாயி பக்தியில் ஊறித் திளைத்த பக்தர்களுடன் சேவா தளத்தில் இணைந்தேன். காலை நான்கு மணிக்கு நகர சங்கீர்த்தனம், பிறகு மதுரை எர்ஸ்கின் மருத்துவ மனியில் சேவை, பிறகு மேலப் பனங்காடியில் இலவச மருத்துவ முகாம், மாலையில் கோவிலில் உழவாரப் பணி, பிறகு சாயி பஜன், சத்சங்கம் என்று எல்லா நிகழ்ச்சிகளையும் ஒவ்வொரு ஞாயிறு அன்று செய்து வந்தோம். புட்டபர்த்திக்கு சேவாதளத் தொண்டர்களை அழைத்துச் செல்லும் வாய்ப்பு, பல கூட்டங்களிலும் முகாம்களிலும் பங்கு கொள்ளும் பேறும் கிடைத்தது. பாபாவின் திருக்கரத்தால் பரிசு வாங்கும் பேறும் கிடைக்கப் பெற்றேன்.

அவரது அற்புத சரித்திரத்தை எழுத வேண்டுமென்ற எண்ணம் பல வருடங்களாக இருந்த போதிலும் பணியின் பிரம்மாண்டம் மலைப்பைத் தந்தது. வருடங்கள் கழிந்தன.

விநாயகா பதிப்பக உரிமையாளர் திரு சுவாமிநாதன் திடீரென்று ஒரு நாள் இயற்கையாக சர்வ சாதாரணமாக சாயிபாபா சரித்திரத்தை எழுதுங்கள் என்றார்.

பகவானே இந்தப் பணியைச் செய்யத் தூண்டுகிறார் என்று உணர்ந்தேன்.

எனது தந்தையார் சேர்த்த புத்தகங்களும் நான் வாங்கிய புத்தகங்களும் நிறைய இருந்தாலும் நூலுக்குச் சில முக்கிய புத்தகங்கள் தேவையாக இருந்தன. எனது சகோதரர் திரு வி.எஸ். மீனாட்சிசுந்தரிடம் இருந்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு – இல்லை, அள்ளிக் கொண்டு வந்தேன். எடுத்துச் செல்ல அன்புடனும் ஆர்வத்துடனும் அனுமதி கொடுத்த அவருக்கு என் நன்றி.

பாபாவின் சரித்திரம் பல ஆயிரம் பக்கங்கள் எழுதினாலும், சரித்திரத்தின் ஒரு சிறிய பகுதியையே கூறியிருப்பதாக ஆகி விடும்.

அவ்வளவு மகத்தான சரிதம்! கபீர்தாஸரின் “ஏழு சமுத்திர நீரை மையாக ஆக்கினாலும், பூமியையே பேப்பராக ஆக்கினாலும், மரங்களை பேனாக்களாக ஆக்கினாலும், பகவானே! உன் புகழை எழுத முடியாது” என்ற வாக்கின்படி சாயி அவதாரத்தின் மகிமையை முற்றிலுமாக யாரே உரைக்க வல்லார்?!

இதை எழுதுவதற்கு உதவியாக இருந்தும் சாயி சேவாதள பணிகள், பஜனா மண்டலி பணிகள் ஆகியவற்றில் ஊக்கமுடன் ஈடுபட்டு வரும் என் மனைவி சித்ரா நாகராஜன், மற்றும் மகன்கள் திரு நா.சத்யநாராயணன், திரு நா. விஜயகிருஷ்ணன் ஆகியோருக்கு என் நன்றி. சாயி பக்தியை ஊட்டி வளர்த்த என் தந்தை, தாய்க்கு நன்றி!

நல்ல முறையில் இதை அச்சிட்ட திரு சுவாமிநாதன் அவர்களுக்கு என் நன்றி.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்றி மணிவாசகர் கூறியது போல சுவாமியை வணங்கச் செய்த அருளை நினைந்து ஆனந்தம் அடைகிறேன். பரமபாவன நாமமான சாயி நாமத்தை உச்சரித்து, அவரது லீலைகளை அனுபவித்து, அவர் காட்டிய வழியில் சாதனை புரிந்து அவர் அருளுக்குப் பாத்திரர்களாக ஆவோமாக!

சாயி அன்பர்கள் அனைவருக்கும் இந்த நூலைக் காணிக்கையாக்குகிறேன்.

சென்னை                         அன்புடன் ச.நாகராஜன்

1-10-2002

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

Linking with the previous incarnation of Shirdi Sai and the expected incarnation of Prema Sai, this book describes in detail the living legend Sri Sathya Sai Baba. The 41 chapters are truly blissful, providing an insight into the miracles of Sathya Sai Baba. Also attached are 108 prime discourses of Sathya Sai Baba. A must read for Sai devotees and spiritually inclined people.

நாம் வாழும் காலத்தில் நம்மோடு வாழ்ந்த அற்புத அவதாரமான ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் வாழ்க்கை வரலாற்றைத் தெளிவாக விளக்கும் நூல். அவருடைய முந்தைய அவதாரமான ஷீர்டி சாயி பற்றியும் அடுத்து அவர் பிரேம சாயியாக அவதரிக்கப் போவது பற்றியும் நூலில் காணலாம். 41 அத்தியாயங்களில் சாயியின் அற்புத வரலாற்றை விரிவாகப் படிப்பது ஆனந்தமான அனுபவம்! அத்துடன் ஸ்ரீ சாயிபாபாவின் 108 முக்கியமான உரைகளின் தொகுப்பும் நூலில் இரண்டாவது பகுதியாக இணைக்கப்பட்டுள்ளது. சாயி அன்பர்களும் ஆன்மீக நாட்டம் உடையவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல்!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘அற்புத அவதாரம் சத்யசாயிபாபா!’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*