Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருணகிரிநாதர் தொடர்!
அருள்வாயே! – 6
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.
அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:
படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!
46) திருத்தணிகை
வரிய பதத்தினி னருவி யிருப்பிடம்
அமையு மெனக்கிட முனது பதச்சரண்
மருவு திருப்புக ழருள எனக்கினி யருள்வாயே
பாடல் எண் 263 – ‘குருவி என’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : இசைப் பாக்களோடு கூடிய என் சொற்களின் ஊற்றுப் பெருக்கு பெருகும் இடமாக அமைய வேண்டிய இடம் அடைக்கலம் தரும் உன் திருவடியே ஆகும். ஆகவே அந்தத் திருவடியைச் சேருதற்குரிய திருப்புகழ்ப் பாக்களை நான் பாட எனக்குத் தந்தருள்வாயாக!
47) திருத்தணிகை
பொருள் தீரில்
ஏங்கியி டக்கடை யிற்றளி வைப்பவர்
பாங்கக லக்கரு ணைக்கழல் பெற்றிட
ஈந்திலை யெப்படி நற்கதி புக்கிட லருள்வாயே
பாடல் எண் 266 – ‘கூந்தல் அவிழ்த்து’ என’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : கையில் கொடுப்பதற்குப் பொருள் தீர்ந்து போனால் மனம் வாடுமாறு வீட்டின் வெளிப்புறத்தில் வந்தவரைத் தள்ளி வைப்பவர்களான பொது மகளிருடைய நட்பு ஒழிந்து நீங்கவும், உனது கருணைக் கழலை நான் பெற்றிடவும் நீ அருளவில்லையே! எப்படி நான் நல்ல கதியில் புகுதல் என்று அருள்வாயாக!
48) திருத்தணிகை
கனத்த தத்துவமுற் றழியாமற்
கதித்த நித்தியசித் தருள்வாயே
பாடல் எண் 278 – ‘நினைத்தது எத்தனை’ என’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பெருமை வாய்ந்த தத்துவங்களைக் கடந்து அப்பாலான நிலையை யான் அடைந்து அழியாமல் இருக்கவும், வெளிப்படுகின்ற நிரந்தரமான சித்த நிலையை நீ அருள்வாயாக.
49) திருத்தணிகை
பிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக்
குறிக்கருத் தெனக்களித் தருள்வாயே
பாடல் எண் 280 – ‘பருத்தபற் சிரத்தினை’ என’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : கட்டுப்பட்ட இந்த நோய்ப் பையை, வாழும் போது தாங்குவதும், சாவில் ஆழ்த்துவதுமான இந்தப் பிறப்பு ஒழிந்து போவதற்கான நோக்கத்தைக் கொண்ட கருத்தை எனக்குத் தந்தருள்வாயாக!
50) திருத்தணிகை
ஆரணத் துக்க ணத்து னான்மலர்ப் பொற்ப தத்தை
யான்வழுத் திச்சு கிக்க அருள்வாயே
பாடல் எண் 283 – ‘பூசலிட்டு’ என’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : வேதத்தின் கண் விரும்பிப் போற்றும் புது மலர் அணிந்துள்ள அழகிய திருவடியை நான் போற்றிச் சுகம் பெற அருள்வாயாக!
51) திருத்தணிகை
கடப்பலர் சேர்கிண் கிணிப்ரபை வீசும்
கழற்புணை நீதந் தருள்வாயே
பாடல் எண் 284 – ‘பெருக்க உபாயம்’ என’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (ஆசை, பிறவி, நூல் ஆகிய) கடல்களைக் கடக்க, கடப்ப மலர் சேர்ந்துள்ள, கிண்கிணியின் ஒளி வீசும், திருவடியாகிய தெப்பத்தை நீ கொடுத்து அருள்வாயாக!
52) திருத்தணிகை
அற்பர மட்டைகள் பால்சென்
றக்கண்வ லைக்குள கப்படு புத்தியை
அற்றிட வைத் தருள்வாயே
பாடல் எண் 287 – ‘பொற்குடம் ஒத்த’ என’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : அற்பர்கள், அந்தப் பயனற்றவர்களாகிய பொதுமகளிரிடம் போய், அவர்களுடைய கண் வலைக்குள் அகப்படுகின்ற கெட்ட புத்தியை நீங்கச் செது அருள்வாயாக!
53) திருத்தணிகை
பருத்த மயில்மிசை நினைத்த பொழுதுன
பதத்து மலரினை யருள்வாயே
பாடல் எண் 293 – ‘முடித்த’குழலினர்’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பருமையான மயில் மேல் நினைத்த அந்தப் பொழுதிலேயே
வந்து உனது பாத மலரடி இணைகளைத் தந்தருள்வாயாக!
54) திருத்தணிகை
அவரோடே
உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட
உயர்ச்சிபெறு குணசீல மருள்வாயே
பாடல் எண் 299 – ‘வரிக்கலையின்’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : ஒருவருடன் பகை, வேறு ஒருவரிடம் விருப்பம் என அவர்களோடு சேர்ந்து வாட்டத்தை அடையும் படுபாவியாகிய எனக்கு உன் திருவடிகளைப் பாட உயர்வு பெற்ற நற்குண நல்லொழுக்கத்தைத் தந்தருள்வாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
பிரிட்டிஷ் பத்திரிகைகள் மஹாராஜா (Coronation) பட்டமேற்பு விழா பற்றிய செய்திகளை வெளியிட்டு வருகின்றன. எலிசபெத் மஹாராணி செப்டம்பர் 8- ஆம் தேதி (2022) இறந்தார். இதைத் தொடர்ந்து அவரது மகன் சார்ல்ஸ் மூன்றாவது சார்ல்ஸ் (Charles III) என்ற பெயரில் அடுத்த ஆண்டு 2023 மே 6-ஆம் தேதி (2023) பதவி ஏற்கப்போகிறார். பின்னர் பிரிட்டனின் தபால்தலை, கரன்ஸி , காசுகளில் அவரது உருவப்படம் இருக்கும். பிரிட்டிஷ் அரசன் அல்லது அரசி படங்களுடன் தபால்தலை வெளியிடும் நாடுகளும் அவரது படத்தை வெளியிடலாம்.
செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம்
நேற்றைய செய்தி என்னவென்றால் ராணி அணிந்த பட்டமேற்பு செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம் St Edward’s Crown லண்டனிலுள்ள டவர் ஆப் லண்டன் மியூசியத்திலிருந்தது (Tower of London Museum) அகற்றப்பட்டுவிட்டது என்பதாகும். அவருடைய (Charles) தலை அளவுக்குப் பொருந்துமாறு செய்ய இப்படி அகற்றப்பட்டது என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.
இதில் இந்தியர்களுக்கு சுவையான செய்தியையும் பத்திரிகைகள் கிளப்பிவிட்டுள்ளன . இளவரசி டயானா இறந்தபின்னர் கமில்லா (Camilla) என்ற பெண்மணியுடன் சார்ல்ஸ் வசித்து வருகிறார். அவர் துணைவி என்ற முறையில் அவருடன் அமரும்போது கோஹினூர் வைரம் பிரகாசிக்கும் கிரீடத்தை அணிவாரா? என்பதே கேள்வி. இது பற்றி அரண்மனை வட்டாரம் எதையும் சொல்ல மறுத்துவிட்டதாகப் பிரிட்டிஷ் பத்திரிகைகள் எழுதியுள்ளன . கோஹினூர் வைரம் கடைசியாக பஞ்சாப் மன்னர் ரஞ்சித் சிங்கிடமிருந்து கைமாறியது. அதை பிரிட்டிஷார் கவர்ந்து சென்றனர் என்ற செய்தியும், ‘இல்லை இல்லை அதை ரஞ்சித் சிங்கே பரிசாககக் கொடுத்தார் என்ற செய்தியும் அனைவரும் அறிந்ததே. பிரிட்டிஷாரே மற்ற சில நாடுகளைத் தூண்டிவிட்டு எங்களுடையது என்று நீங்களும் சொல்லுங்கள் என்று ஏவி விட்டதையும் நாம் அறிவோம்.
105 காரட் எடை யுள்ள கோஹினூர் வைரம் தாங்கிய கிரீடத்தை மகாராணியின் அன்னை (Queen Mother) அணிந்து வந்தார் .
இப்போது மஹாராஜா CHARLES பதவி ஏற்கும் நாளன்று அணியப்போகும் செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம் St Edward’s Crown வெள்ளிக்கிழமை இரவில் , அதி பயங்கர செக்யூரிட்டியுடன் ஒரு ரகசிய இடத்துக்கு அகற்றப்பட்டது. இது நடந்த பின்னரே இதை பக்கிங்ஹாம் அரண்மனை, அறிவித்தது . அது வரைக்கும் பரம ரஹசியம்
2017 ஆம் ஆண்டு முதல் Mark Appleby, of Mappin and Webb மார்க் ஆப்பிள் பி நிறுவனம்தான் ராஜ கிரீடங்களைப் பராமரித்து வருகிறது. அவர்கள்தான் ரஹசிய இடத்தில் கிரீடத்தை பெரிதாக்கப் போகிறார்கள். மன்னரின் தலை , ராணி எலிசபெத்தின் தலையைவிடப் பெரியது.
செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம் St Edward’s Crown
1661ம் ஆண்டில் இரண்டாவது சார்ல்ஸ் மன்னருக்காக செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம் செய்யப்பட்டது 1649-ம் ஆண்டில் உருக்கப்பட்டுவிட்ட முந்தைய கிரீடத்தைப் போல அது வடிவமைக்கப்பட்டது. ஒரிஜினல் கிரீடம் பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த , ஜனக மஹாராராஜா போன்ற ஞானி/ அரசர் எட்வர்ட் (royal saint, Edward the Confessor, the last Anglo-Saxon King of England). உடையது
பின்னர் செய்த புதிய கிரீடத்தில் சிலுவையும் பூக்களும் இருக்கின்றன. இந்த கிரீடம் தங்கக் கட்டிக்களால் ஆனது (தங்கத்தகடு அல்ல ; கட்டித்தங்கம்)அதில் மாணிக்கம், நீலம் , புஷ்பராகம் மற்றும் (Semi Precious Stones) அமெதிஸ்ட் கார்னெட் , டோர்மலின் போன்ற நவரத்னங்களுக்கு நிகரான கற்களும் இருக்கின்றன . அதை வெல்வெட் துணியால் up of a solid gold frame set with rubies, amethysts, sapphires, garnet, topazes and tourmalines) போர்த்தியிருப்பார்கள் .
St Edwards Crown (Not Kohinoor Crown)
அண்மையில் மஹாராணி இறுதி ஊர்வலத்தைக் கண்ட கோடிக் கணக்கானோர் இதை டெலிவிஷனில் பார்த்திருப்பார்கள் (made
— subham —
tags–கோஹினூர், கிரீடம், செயின்ட் எட்வர்ட்ஸ், மஹாராஜா , சார்ல்ஸ்
tags- கோஹினூர், கிரீடம், மகாராஜா , செயின்ட் எட்வர்ட்ஸ் கிரீடம்
சூடான ஐஸ்க்ரீம் (Hot Ice Cream) இருக்க முடியாது, கோகுலாஷ்டமியும் குலாம்காதரும், அப்துல்காதரும் அமாவாசையும் என்று தலைப்பிட்டாலும் பொருத்தம் இராது .முஸ்லீம் வெஜிட்டேரியன் என்று சொன்னாலும் ஆச்சர்யத்துடன் புருவத்தை உயர்த்துவார்கள் ; சுருங்கச் சொல்லின் பொருத்த மற்ற இரண்டு விஷயங்கள். இதை அறப்பளீச்சுர சதகம் பல எடுத்துக்கட்டுகளால் விளக்குகிறது
LONDON SWAMINATHAN’S NEW COMMENTARY ON VERSE 11 OF ARAPPALEECHURA SATAKAM
போன்ற கற்புடைய காரிகையரைச் சேர்த்தாய், நிதானம் உள உத்தமர்க்கு இங்கிதம் இலாத கொடு நீலியைச் சேர்வித்தனை – அமைதியான நல்லோர்களுக்குக் குறிப்பறிந்து நடவாத கொடிய புரட்டியைக் (GHOST WOMAN NEELI) கூட்டிவிட்டாய், சாதியில் உயர்ந்த பேர் ஈனர் பின்னே சென்று தாழ்ந்து பரவச் செய்தனை – உயர்குடியிலே தோன்றியவர்கள் இழிந்தவரின் பின்போய் வணங்கிப் போற்றப் புரிந்தாய், தமிழ் அருமை அறியாத
புல்லர்மேல் கவிவாணர் தாம் பாடவே செய்தனை – தமிழின் இனிமையைக் காணாத கயவரைக் கவிஞர்கள் பாடுமாறு புரிந்தாய், இப்படி ஆதரவு இல்லாமல் செய்தது ஏன்? சொலாய்! – இவ்வாறு ஒருவர்க்கொருவர்
பற்றில்லாமற் பண்ணினது ஏன்? கூறுவாயாக.
XXX
. அருந்ததி -வசிட்டரின் மனைவி. கற்புக்கரசி. சங்க இலக்கியத்தில் பலமுறை குறிப்பிடப்படும் கற்புக்கரசி. வானத்தில் மீனாக/ நட்சத்திரமாகக் காட்சி (Northern Star) தருபவள்; அம்மி மிதித்தல் ,அருந்ததி காட்டல் என்ற இந்து மதத் திருமணச் சடங்கின் கதாநாயகி.
xxx
நீலி – வஞ்சகி. நீலியென்பவள் பழையனூரில் ஒரு
வணிகன் மனைவி. இவள் இறந்தபின் பேயானாள். கணவன் காஞ்சிபுரம்
செல்கையில் ஒரு கள்ளிக்கட்டையைக் குழவியாக்கிக்கொண்டு அவன்
மறுமண மனைவியைப்போல் வடிவமெடுத்துப் பின்தொடர்ந்தாள். அவன்
பேயென அஞ்சினான். காஞ்சியிற் சபையோர்முன் தான் அவன்
மனைவியென நம்பச்செய்தாள். அவர்கள் வணிகனுடன் அவளையும்
ஒருவீட்டில் இருத்தினர் கதவைத் தாழிட்டு அவனைக் கொன்று மறைந்தாள். இவளைப்பற்றிய முழுகே கதையையும் என்னுடைய கட்டுரையையிலும் தமிழ்நாட்டை உலுக்கிய பேய் என்ற என் புஸ்தகத்திலும் காணலாம் .
நல்ல குடியில் பிறந்தவர்கள் அரசியல் லாபத்துக்காகவோ பணத்துக்காகவோ ஆட்சியாளர்களுக்குத் துணை போவதை அறிவோம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இப்படி உயர் ஜாதியினர் அவர்களுடைய ஆட்சிக்கு உதவினார்கள் .
கவிஞர்களும் அறிஞர்களும் திடீரென்று சில அரசியல் தலைவர்களை புகழ்ந்து சர்ச்சைக்குள்ளாகின்றனர்.; அண்மைக்கலாத்தில் வாலி (TAMILPOET போன்றோர் மக்களின் நம்பிக்க்கையை இழந்ததைக் கண்டோம்
சில கவிஞர்கள் பொன்னாடைக்கும் அரசாங்க விருதுக்காகவும் ஆட்சியாளருக்கு ஜால்ரா போடுவதையும் இன்னும் பலர் VTICAN MONEY வாடிகன் தரும் கிறிஸ்தவ பணத்துக்காக கர்நாடக இசையை சீர்குலைத்ததையும் , சில பேச்சாளர்கள் இந்து மதத்தை இழித்தும் பழித்தும் பேசியதையும் பத்திரிக்கையில் படித்தோம். இதுகள் மேற்கூறிய பொருத்தமில்லாத சூடான ஐஸ்க்ரீம்கள் தகாத சேர்க்கை
பாரதி போன்ற உலகப் புகழ்பெற்ற கவிஞர்களை வறுமையில் வாடவிட்டு , எச்சிற் கையாலும் காகத்தை ஓட்டாத மக்களிடம் பணத்தைக் கோடிகோடியாக (கடவுள்??பூர்வ ஜென்ம புண்யம் ???) சேர்த்து வைத்ததையும் கண்டோம் .
இவ்வாறு பொருத்தமில்லாத விஷயங்களை இணைத்துப் பாடும் பாடல் ஒன்று விவேக சிந்தாமணியில் உண்டு
68. அறியமுடியாதது
அத்தியின் மலரும் வெள்ளை யாக்கை கொள் காக்கை தானும்,
பித்தர் தம் மனமும் நீரில் பிறந்த மீன் பாதந்தானும்
அத்தன் மால் பிரம தேவ னாலள விடப்பட் டாலும்,
சித்திர விழியார் நெஞ்சம் தெளிந்தவர் இல்லை கண்டீர்.
அத்தி மரத்தில் மலரையும், வெள்ளை உடலை உடைய காக்கையும், பித்தர்களுடைய மனதையும், நீரில் வாடுகின்ற மீனின் பாதச்சுவடையும், பிரம்மாவும் பெருமாளும் காணமுடியாத சிவபெருமானின் முடியையும் அடியையும், காணமுடியாது. இவைகளை காண முடிந்தாலும் பெண்களின் மனதில் உள்ளதை அறிபவர் யாருமில்லை..
இறைவன் வாழும் திருத்தலங்களை – திருக்கோயில்களை – மிதிக்காத கால்கள், சிவனின் திருவடிவணங்காத தலை, இல்லையென்று கேட்பவர்க்குக் கொடாத கைகள், பெரியோர்களின் அன்பான இனிய சொற்களைக் கேளாத காதுகள், தன்னைக் காப்பவர்களுக்கு ஓர் ஆபத்து வந்து கண் கலங்கும் போது உயிரைக் கொடுத்தாவது காக்காத உடல், இருந்தாலும் சுடுகாட்டில் எரித்தாலும் பயனொன்றுமில்லை.
XXX
அற்பரின் இயல்பு பற்றி ஒரு பாடல்:
கதிர்பெறு செந்நெல் வாடக்
கார்குலம் கண்டு சென்று கொதிதிரைக் கடலில் பெய்யும் கொள்கைபோல், குவலயத்தே மதிதனம் படைத்த பேர்கள் வாடினோர் முகத்தைப் பாரார்; நிதிமிகப் படைத்தோர்க்கு ஈவார்; நிலை இலார்க்கு ஈயமாட்டார்.
மேகக் கூட்டம் நெற்பயிர்கள் வாடுவதைக் கண்டும் அப்பயிரிடையே மழையைப் பொழியாமல், அலைகள் வீசும் சமுத்திரத்தில் சென்று பெய்யும். அது போல நிறைந்த செல்வம் படைத்த செல்வந்தர், வறுமையால் வாடுபவர் முகத்தைப் பார்த்தும் அவருக்கு உதவமாட்டார். மிகுதியாகச் செல்வம் படைத்தவர்க்கே அளிப்பார்கள். இது அற்பர் இயல்பு.
இப்படிப் பட்டவரை மாற்றுவது சாத்யமா? இவர்க்கு எடுத்துச் சொன்னால் கேட்டுத் த்¢ருந்துவாரா? மாட்டார். திருத்த முடியாத ஈன ஜென்மங்கள் அவர்கள்.
நாய்வாலை அளவெடுத்து பெருக்கித் தீட்டின் நற்றமிழை எழுத எழுத்தாணியாமோ? பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப் பெரிய விளக்கேற்றி வைத்தால் வீடதாமோ? தாய்வார்த்தை கேளாத சகசண்டிக்கு என் சாற்ற்¢டினும் உலுத்தகுணம் தவிர மட்டான்; ஈவாரை ஈயவொட்டான் இவனும் ஈயான்; எழுபிறப்பினும் கடையனாம் இவன் பிறப்பே.
நாய்¢னது வாலை எழுத்தாணிக்குரிய இலக்கணப்படி அளந்து நீட்டித் தீட்டினாலும் நல்ல தமிழை எழுதவல்ல எழுத்தாணியாக ஆகுமோ? பேய்கள் வாழும் சுடுகாட்டைப் பெருக்கிச் சுத்தப் படுத்தி, அங்கு பெரிய விளக்கொன்றினை ஏற்றி வைத்தாலும் அது வாழ்வதற்குரிய வீடாகி விடுமோ? தாயின் சொல்லைக் கேளாத சண்டிக் குணம் படைத்தவனுக்கு எத்தனை முறை சொன்னாலும் தன் உலோப குணத்தைக் கைவிட மாட்டான்; தானும் கொடுக்க மாட்டான்; கொடுக்கும் குணம் உடையவரையும் கொடுக்க விடமாட்டான். இவனது பிறப்பு எழுவகைப் பிறப்புகளிலும் கீழானது என்று சாடுகிறது பாடல்.
ஒய்வு பெற்ற முது நிலையில் வானப்ரஸ்தம் விதிக்கப்பட்டுள்ளது. 50 முதல் 75 வயது வரை எப்போது வேண்டுமானாலும் ஒருவர் இந்த ஆஸ்ரமத்தை மேற்கொள்ளலாம். வானப்ரஸ்தம் என்றால் வனத்தில் அல்லது காட்டில் வசிப்பது என்று பொருள் படும்.
இதைப் பற்றி விரிவாக ஶ்ரீமத் பாகவதத்தில் காணலாம். (3.12.43)
இதை மேற்கொண்டவர்கள் பின்னர், நான்காவது ஆஸ்ரமமான சந்யாஸ ஆஸ்ரமத்தை மேற்கொள்வர்.
முதலில் இந்த வானப்ரஸ்தம் மனைவியுடன் தொடங்குகிறது. இருவரும் சேர்ந்தே வனத்தில் பயணிப்பர். ஒரு சிறிய குடிசையில் வசிப்பர். புனித தலங்களுக்கு யாத்திரை செய்வர். செக்ஸ் என்பது இருக்காது. பின்னால் மனைவி தனது இல்லம் திரும்புவார். தனது புத்திரர்களின் பராமரிப்பில் வசிப்பார்.
இதைப் பற்றிய நீண்ட விவரணத்தை ஶ்ரீமத் பாகவதத்தில் காணலாம்.
இதில் தானாக சம்பாதிக்கும் செல்வம் ஸ்வார்ஜிதம். இது உத்தமம் எனப்படுகிறது. அடுத்து தந்தை வழியே வருவது மத்யமம் எனப்படுகிறது. அடுத்து சகோதரனின் செல்வத்தை அடைவது அதமம். ஸ்தீரி மூலமாகப் பெறப்படும் செல்வம் எல்லாவற்றையும் விட அதமம் ஆகும்.
5) வித்தை நான்கு வகைப்படும்
வித்தையானது நான்கு வகைப்படும்.
1) ஆன்விக்ஷ்கி 2) த்ரயீ 3) வார்த்தா 4) தண்டநீதி என்று இவ்வாறு அர்த்த சாஸ்திரம் கூறுகிறது.
ஆன்விக்ஷ்கி என்றால் தத்துவம் என்று பொருள்
த்ரயீ என்றால் மூன்று வேதங்கள் என்று பொருள். ரிக், யஜுர், சாம வேதம் ஆகிய மூன்றையும் கற்று உணர்தல்.
வார்த்தா என்றால் பொருளாதாரம் – Economicis
தண்ட நீதி என்றால் அரசியல் – Politics – என்று பொருள்.
ஆன்வீக்ஷிகீ த்ரயீ வார்த்தா தண்டநீதிஸ்சேதி வித்யா:
அர்த்த சாஸ்திரம் 1.2.1
6) வீணாகப் போகின்றவை நான்கு
சமுத்ரேஷு வ்ருஷ்டி:
கடலில் மழை : கடலில் மழை பெய்து யாருக்கு லாபம்? அது வீண் தான். நிலத்தில் பெய்தால் விளைச்சல் உண்டாகும்.
த்ருப்தஸ்ய போஜனம்
ஏற்கனவே நன்கு சாப்பிட்ட ஒருவருக்கு உணவு அளிப்பது.
சமர்தஸ்ய தானம்
நல்ல திறமை உள்ள ஒருவனுக்குக் கொடுக்கப்படும் தானம்.
(ஓரு பொருளின் புறத் தோற்றத்தைக் கண்டு மயங்கிவிடுதல் போற்றுதற்குரிய விஷயமல்லவே) ஒரு கிரந்தத்தை ஆராயும் விமர்சகர்கள் அது எடுத்துக் காட்டும் வெளிப்படையான இயல்பு, பண்புகளால் மட்டும் ஈர்க்கப்படாமல் அதில் அடங்கியி ருக்கும் சாராம்சம் எந்தக் குறைபாடு இன்றிச் சொல்லப் பட்டிருக்கிறதா என்பதையே தேட வேண்டும்- தொட்டால் உடையும் நீர்க்குமிழியா, தொடுவதால் நாதமெழுப்பும் மத்தளமா என அப்போதுதானே தெரியும்?
இப்படியாகத்தானே அவர்களிடையே கடுமையானச் சொற்போர் விவாதம் நடந்தது. சிங்கத்தின் முன் குள்ளநரி எதிர்த்துப் போராட முடியுமா? சுவாமிதேசிகரே முடிவில் வெற்றிவாகைச் சூட, தவறை உணர்ந்த டிண்டிமா கவி அவரிடம் சரணடைந்து, சுவா மியைப் போற்றிப் புகழ்ந்தார், இதோ இப்படித்தான்……
இப்பாடலில் புலவர் செய்யும் வார்த்தைஜாலம் நம்மை வியக்க வைக்கிறது! அவர் பயன்படுத்தியுள்ள மோனை அலங்கார அணி(ALLITERATION) செய்யுளைத் திரும்பத் திரும்பப் படிக்க வைக்கிறது என்பது என்னவோ, உண்மையே!
ஶ்ரீவேங்கடேச தவச்சீலரே! தாங்கள் பங்கேற்ற தர்க்க விவாத நிகழ்ச்சிகள் யாவும் குதிரைப் பந்தயத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் பணயம் வைத்து விளையாடுவது போல் நீண்டுப் போய்க் கொண்டிருக்கும், அல்லவா! மும்முறமாய் கடுமையாக வாதம் செய்வோர் பலர் அதிமேதாவிகள், சமாளிக்க முடியாத அளவுக்கு விதண்டா வாதமிடுபவர்கள், சிலர் மந்தபுத்தியுடையோர், இவர்கள் அனைவரும் தற்பெருமை எனும் மின்னும் மகுடத்தைத் தங்கள் ”தலைப் பெட்டி” மேல் சூடியிருப்பதாகப் பீற்றிக் கொள்வர். இவர்களை வாதத்தில் வென்று, அவர்கள் அணிந்திருக்கும் செருக்குஎன்ற மகுடத்தை வீழ்த்தி, ஆணவம், ஆடம்பரம் மற்றும் வீண் கர்வத்தை அடக்கியுள்ளீர்! தாங்கள் கவிஞர்களுள் தலை சிறந்தவர். இதை அறிந்துகொள்ளாத இச்சிறியோனை மன்னித்து அருள்வீராக!” — எனக் கூறித் தன் கன்னங்களில் “பளார்பளார்” என்று அறைந்து கொண்டு சுவாமி தேசிகரைத் தண்டனிட்டார். பின்பு கீழ்கண்டவாறு போற்றித் துதித்தார்…..
கண்டந கண்டந=கன்னத்தில் போட்டுக் கொண்டு, கண்ட டிண்டிமோ= மத்தளம் தட்டுவது )
ஸ்வாமி! டிண்டிமா என்கிற இந்தப் புலவன் தன் அடாதசெயலுக்கு வருந்தி, மத்தளத் தைத் தட்டுவது போல் கன்னத்தில் அறைந்துகொண்டு தங்களிடம் மன்னிப்பு கோரு கிறான். நீங்கள் அதிசயக் கண்டபேருண்டா விலங்குப் பறவை(!) போன்றவர். தங்க ளுக்குத் தெரிந்த இரண்டு (அ) நான்குச் சொற்களை வைத்துக் கொண்டு கவிதையில் வார்த்தை ஜாலம் காட்டித் தங்களைப் பலமிக்கக் குட்டிச் சிங்கம், யானைக்குட்டி என இறுமாப்புடன் சுற்றி வரும் போலி கவிஞர்களின் மமதையை அடக்கி ஆளுபவர், நீங்கள்! உங்களுக்கு முன் நான் எம்மாத்திரம்?” எனக் கூறி சரணடைகிறான்.
*கண்டபேருண்ட=பயங்கர முகத்தையுடைய மகத்தான மந்திர தந்திரப் பலம் வாய்ந்த இரட்டைத் தலைக் கழுகு. மகேசன் கோபாவேச நரசிம்மரைச் சாந்தப்படுத்த எடுத்த ஷரபேஸ்வரர் வடிவம். தனது கூரிய வளைந்த நகத்தாலும்,அலகாலும் யானையைத் தூக்கிப் பிடித்திருக்கும். சரபேசுவரர் எட்டு கால்களும், இரண்டு முகங்களும், நான்கு கைகளும், மிகக்கூரிய நகங்களும், உடலின் இருபுறங்களில் இறக்கைகளும், சிங்கத் தைப் போல் நீண்ட மயிலிறகு போன்ற முடி கொண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், யானையைப் போன்ற கண்களும், கோரப்பற்களும், யாளியைப் போன்ற உரு வமும் உடையவராகச் சித்தரிக்கப்படுகிறார்.
ஹோய்சால சாம்ராஜ்ஜியத்தின் அரசு சின்னமாக இருந்துள்ளது.
டிண்டிமா சர்வபௌமா அத்துடன் நிற்காமல் தேசிகர் மீது ஒருமங்கல ஸ்லோகத்தை யும் உடனுக்குடன் இயற்றி வணங்கினார். மிகவும் எளிமையான, விரைவில் புரிந்து கொள்ளக் கூடியச் சொற்களையே இங்குப் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. தினமும் ஶ்ரீவேதாந்த தேசிகர் சஹஸ்ர நாமாவளியைச் சொல்லுகையில் இந்த ஸ்லோகத்தைக் கூறி முடிப்பது ஒவ்வொரு வைணவரின் கடமையில்ஒன்றாக விளங்குகிறது.
“वेदेसन्जत –खेदे मुनि जन वचने प्राप्त नित्यावमाने संकीर्णे सर्व वर्णे सति तदनुगुन्णे निश्प्रमणे पुराणे | मायावादे समोदे कलि कलुस वसत सुन्य वादे विवादे धर्म त्राणाय यो भूत स जयति भगवान विष्णु घंटावतार !”||
தர்ம த்ராணாய யோ பூதஸ ஜயதி பகவான் விஷ்ணு கண்டாவதார! ||
கேதே=தளர்வு,நலிவு, அநுகுன்ணே= பரிவர்த்தனை, நிஷ்ப்ரமணே=குழப்ப நிலை,
கலுச=திறமையற்ற, த்ராணாய =ரட்சிக்க, காப்பாற்ற
(எங்கு பார்த்தாலும் கொந்தளிப்பு, கொடுமை,திறமையற்றப் போக்கு என கலிகாலத்து இலட்சணங்கள் தெரிகின்றன.தவறான முறையில் வேதநெறிகள் விளக்கப்படுவதால் அவை தளர்வடைந்து அவதிக்கு உள்ளாகின்றன;அறிஞர்களின் அறிவுரைகள் புறக்க ணிக்கப் படுகின்றன; அனைத்து வகுப்புகளிலும் புனிதமற்றக் கலாச்சார பரிவர்த்த னைக் காணப்படுகிறது; இந்தக் குழப்பமானப் பின்னணியில் நமது புராண-இதிகாசங் கள் அதன் மகத்துவத்தைச் சிறிது சிறிதாக இழக்க ஆரம்பிக்கின்றன; வஞ்சகமும், சூழ்ச்சியும் தலைவிரித்து ஆடுகின்றன; ஆன்மிகம், ஒழுக்கநெறிகள் பின்னடைவைச் சந்திக்கின்றன; நாத்திகவாதம் தலைத்தூக்குவதைக் காணமுடிகிறது; இந்த இக்கட்டா னத் தருணத்தில் தான் ஶ்ரீவேதாந்த தேசிகர், தர்மத்தை நிலைநாட்டவும், தர்மசிந்த னையை ரட்சிப்பதற்காகவும் ஶ்ரீமந்நாராயணனின் ஓங்கி நாதமெழுப்பும் கண்டாமணி யின் மறுபதிப்பாய் இப்பூவுலகில் அவதரித்தார்; அதில் அவர் அடையும் வெற்றியின் பிரகாசத்தில் பிரமாதமாய் ஒளிர்கிறார். அப்படிப்பட்ட அவருக்கு நமது அநேக நமஸ் காரங்கள் உரித்தாகட்டும்! )
PART TEN OF ARAPPALEECHURA SATAKAM WITH LONDON SWAMINATHAN’S COMMENTARY
ஒன்று இல்லாமற் பயன்படாதவை
10.கோவில் இல் லாதவூர், நாசியில் லாமுகம்,
கொழுநன் இல் லாத மடவார்,
குணமதில் லாவித்தை, மணமதில் லாதமலர்,
குஞ்சரம் இலாத சேனை,
காவல்இல் லாதபயிர், பாலர்இல் லாதமனை,
கதிர்மதி யிலாத வானம்,
கவிஞர்இல் லாதசபை, சுதிலயை இலாதபண்,
காவலர் இலாத தேசம்,
ஈவதில் லாததனம் நியமம்இல் லாதசெபம்,
இசை லவணம் இல்லா தவூண்,
இச்சையில் லாதபெண் போகநலம், இவை தம்மின்
ஏதுபலன் உண்டு? கண்டாய்!
ஆவியனை யாட்கிடம் தந்தவா! கற்பதரு
ஆகும்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) ஆவி அனையாட்கு இடம் தந்தவர் – உயிரனைய
உமையம்மைக்கு மெய்யில் இடப்பங்கை அருளியவனே!, கற்ப தரு ஆகும்
– கற்ப தரு என உலகிற்குப் பயன்படுகிற எமது ……. தேவனே!. கோவில்
இல்லாதவூர் – திருக்கோயில் இல்லாத ஊரும், நாசி இல்லா முகம் – மூக்கு இல்லாத முகமும், கொழுநன் இல்லாத மடவார் – கணவன் இல்லாத பெண்களும், குணமது இல்லா வித்தை – நற்பண்பையூட்டாத கல்வியும்,
மணமது இல்லாத மலர் – நறுமணம் இல்லாத பூவும், குஞ்சரம் இல்லாத
சேனை – யானை இல்லாத படையும், காவல் இல்லாத பயிர் –
வேலியில்லாத பயிரும், பாலர் இல்லாத மனை – மழலைச் சிறுவர் இல்லாத இல்லமும், கதிர்மதி இல்லாத வானம் – ஞாயிறுந் திங்களும் உலவாத வானமும், கவிஞர் இல்லாத சபை –புலவர்கள் இல்லாத அவையும், சுதி லயை இலாத பண் – இசையுந் தாள
அளவும் இல்லாத சங்கீதமும், காவலர் இலாத தேசம் – அரசன் இல்லாத நாடும், ஈவது இல்லாத தனம் – கொடையில்லாத பொருளும், நியமம் இல்லாத செபம் – ஒழுங்கு இல்லாத வழிபாடும், இசை லவணம் இல்லாத
வூண் – ஏற்ற அளவு உப்பில்லாத உண்டியும், இச்சை யில்லாத பெண்
போகம் – விருப்பமற்ற மங்கையின் இன்பமும், இவை தம்மின் – ஆகிய இவற்றால், ஏது பலன் உண்டு – என்ன நன்மை யுண்டு? கண்டாய்
(க-து.) கோயில் இல்லாத வூர் முதலானவை பயனற்றவை.
xxxx
கோவில்கள்
தமிழர்களைப் போல கோவில்களைப் போற்றியோர் வேறு எவருமிலர் .
ஆலயம் தொழுவது சாலவும் நன்று, கோபுர தரிசனம் கோடி புண்ணியம், கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற ஆன்றோர் மொழிகளைத் தமிழ் சிறுவர்களும் அறிவார்கள். அதை எல்லாம் வீட தமிழ் நாட்டில்தான் 40, 000 கோவில்கள் உள்ளன. அவற்றில் ஆயிரக்கணக்கானவை வானளாவிய கோபுரங்களை உடையன . பன்னிரு திருமுறைகளும் திவ்வியப் பிரபந்தமும் கோவில்களால் எழுந்த பாடல்களே . இன்று கோவில்கள் மூலம் பிழைப்போர் தொகையும் கோடி கோடியாகும் .
அச்சன்கோவில், நாகர்கோவில், வைத்தீஸ்வரன்கோயில், திருமலைக் கோயில் என்று கோவில் பெயர்களிலேயே ஊர்கள் இருப்பதும் தென்னாட்டில்தான் .
xxxx
கணவன் இல்லாத பெண்கள்
இந்த வகைப் பெண்கள் முதலில் மேலை நாட்டில் மட்டுமே அதிகமாக இருந்தனர் . ஏனெனில் அ ங்கு விவாக ரத்து செய்து / divorce வாழும் பெண்களுக்கு அரசாங்கம் பணத்தை வாரி வழங்குகிறது. மேலும் பணக்காரர்களைக் கல்யாணம் கட்டி ,எட்டி உதைந்தால், ஜீவனாம்சம் alimony என்ற பெயரில், வேலை செய்யாமலே காசு பெற முடிகிறது . பல ஆண்கள் அவர்களைச் சுற்றி வட்டமிட்டு ஏமாறுவதில், அவர்கள் பல காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர். இவ்வளவு இருந்தாலும் அவர்களுக்குப் பின்னால், முதுகுக்குப் பின்புறத்தில், ஆண்களும் பெண்களும் பேசும் ஏச்சுப் பேச்சுக்களால் அவர்கள் பொது நிகழ்ச்சிகளில் முகம் காட்ட முடிவதில்லை.
Xxxxx
நற்பண்பையூட்டாத கல்வி
அந்தக் காலத்தில் ஒருவரை மெத்தப் படித்தவர் என்று அறிமுகப் படுத்தினால் அவர்கள் அந்தக் கல்விக்கு ஏற்ற ஒழுக்கம் உடையவர் என்று அர்த்தம் . இதனால்தான் வள்ளுவனும்
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. — குறள் 391 என்றான் .
மேலும் இப்போதெல்லாம் அறநெறிக் கல்வி moral education மிகவும் குறைந்துவிட்டது . கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்வதால் பிள்ளைகள் வன்முறை மற்றும், ஆபாச வீ டியோக்களில் நேரத்தைச் செலவிடுகின்றனர். ஆசிரியர்களின் ஒழுக்கமோ பத்திரிகைகளில் வரும் கைது செய்திகளில் news about arrests of teachers பிரதிபலிக்கிறது . இதையெல்லாம் எண்ணித்தானோ குணமதில் லாவித்தை என்று அம்பலவாணர் இந்த சதகத்தில் கூறினார் போலும் !
Xxx
சந்திரன் இல்லா வானம், தாமரை இல்லாப் பொய்கை,
மந்திரி இல்லா வேந்தன், மதகரி இல்லாச் சேனை,
சுந்தரப் புலவர் இல்லாத் தொல்சபை, சுதர்இல் வாழ்வு,
தந்திகள் இல்லா வீணை, தனம் இலா மங்கை போல் ஆம்.
என்று விவேகசிந்தாமணியில் ஒரு அருமையான பாடல் உள்ளது. இந்த சதகத்தில் உள்ள. குழந்தைகள் இல்லாத வீடு, இன்பம் தராத மங்கை. முறையற்ற இசை, நிலவு இல்லாத வானம் ஆகியன இதிலும் உளது.
மதகரி இல்லாச் சேனை — மதம் பொருந்திய யானைகள் இல்லாத சேனையும், சுந்தரப் புலவர் இல்லாத் தொல்சபை — சிறந்த புலவர்கள் இல்லாத பழமையான சபையும், சுதர் இல் வாழ்வு — நல்ல மக்கள் பேறு இல்லாத வாழ்வும்,
Xxx
குறள் 66
குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்
[அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு]
என்று சொல்லும் வள்ளுவன் பத்து குறட்பாக்களில் புத்திரப் பெரு பற்றி விளக்கிவிட்டான். இதே கருத்தைப் புறநானூற்றிலும் (168) காணலாம்
படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்
உடைப் பெரும் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்,
நெய்உடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்கு உறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழு நாளே.
—-புறநானூற்றுப் பாடல் 168 . பாண்டியன் அறிவுடை நம்பி பாட்டு.
Xxxx
வள்ளுவனின் செக்சி Sexy உவமை
இன்பம் தர முடியாத மங்கைகள் பற்றி வள்ளுவனும் அறிவான் ; அவன் பயன்படுத்தும் Sexy உவமையில் அது வருகிறது
குறள் 402
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று
[பொருட்பால், அரசியல், கல்லாமை]
Xxx
சூரிய சந்திரர்கள்
சூரியனும் சந்திரனும் எவ்வளவு முக்கியம் என்பதை சிலப்பதிகாரக்
கடவுள் வாழ்த்திலும் காண்கிறோம்
திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!-
கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று, இவ்
அம் கண் உலகு அளித்தலான்.
ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!-
காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு
மேரு வலம் திரிதலான்.
Xxxx
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்ற பழமொழி உப்பின் அவசியத்தைக் காட்டும் (லவணம் = உப்பு)
xxx
நேற்று வெளியிட்ட விளக்க உரையில் பர்த்ருஹரி நீதி சதகப் பாடல்களையும் கருத்திற்கொள்க
13-11-2022 11440 ஆகவராமன் என்ற பட்டத்தைப் பெற்ற சூரிய காங்கேயன்!
-கொங்குமண்டல சதகம் பாடல் 88 -புத்தக அறிமுகம் -112
– அறிவியல் நோக்கில் ஆன்மீக ரகசியங்கள்!
14-11-2022 11442 திருப்புகழில் ராமாயணம்! – புத்தக அறிமுகம் 113 –
வருவார் காந்திஜி!
15-11-2022 11444 திருப்புகழில் கணபதி! புத்தக அறிமுகம் 114 – விலங்கு
உலகப் புதுமைகள்!
16-11-2022 11447 ஆஹா! அதிரடிச் செய்திகள்! – புத்தக அறிமுகம் 115 –
டயானாவின் கதை
17-11-2022 11450 சேவையே பிரார்த்தனை! – புத்தக அறிமுகம் 116 –
நட்சத்திர அதிசயங்களும் மர்மங்களும்!
18-11-2022 11452 அருள்வாயே – 1 – புத்தக அறிமுகம் 117 – ஜோதிடம்
உண்மையா?
19-11-2022 11454 அருள்வாயே – 2 – புத்தக அறிமுகம் 118 – பார்த்ததில்
ரசித்தது படித்ததில் பிடித்தது – 1
20-11-2022 11457 அருள்வாயே – 3 – புத்தக அறிமுகம் 119 திரைப்படப்
பாடல்களோடு ஒரு பயணம் – 1
21-11-2022 11459 அருள்வாயே – 4 – புத்தக அறிமுகம் 119 திரைப்படப்
பாடல்களோடு ஒரு பயணம் – 2
22-11-2022 11462 முயற்சியே வெற்றி தரும் – புத்தக அறிமுகம் 120
அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா!
23-11-2022 11464 கலியுக அவதாரம் ஶ்ரீ சத்ய சாயிபாபா – புத்தக
அறிமுகம் 121/1 அற்புத அவதாரம் சத்யசாயிபாபா
(அம்ருத சாகரம் இணைப்பு)
24-11-2022 11467 ராமாயணத்தில் வரும் நதிகள் – 1 – கலியுக அவதாரம்
ஶ்ரீ சத்ய சாயிபாபா – புத்தக அறிமுகம் 121/2 அற்புத
அவதாரம் சத்யசாயிபாபா (அம்ருத சாகரம் இணைப்பு)
25-11-2022 11471 ராமாயணத்தில் வரும் நதிகள் – 2 – புத்தக
அறிமுகம் 122 – பறக்கும் தட்டுகளும்
அயல்கிரகவாசிகளும்
26-11-2022 11475 அருள்வாயே – 5 – புத்தக அறிமுகம் 123 ஆன்மீக
ரகசியங்கள்!
27-11-2022 11479 வாழ்க்கையின் ஒரு கணத்தைக் கூட கோடி
ரத்னங்களாலும் பெற முடியாது (சுபாஷிதம்) – –
புத்தக அறிமுகம் 124 அறிவியல் வியக்கும் மந்திர
மஹிமை, மனோசக்தி, மறுபிறப்பு, காலம் பற்றிய
உண்மைகள்!
28-11-2022 11481 ராமாயணத்தில் வரும் நதிகள் – 3 – புத்தக அறிமுகம்
125 முன்னேறவும் முன்னேற்றவும் சில கதைகள்,
சம்பவங்கள், கருத்துக்கள்!
29-11-2022 11483 ராமாயணத்தில் வரும் நதிகள் – 4 – புத்தக அறிமுகம்
126 அறிவியல் துளிகள் 18ஆம் பாகம்
30-11-2022 11487 காம கீதா – ஆசை வெல்லுதற்கரியது, அதை
வெல்லும் உபாயம் என்ன? புத்தக அறிமுகம் 127
கடவுளைக் காட்டு!
***
புத்தக அறிமுகம் 130
இத்துடன் எனது 130 புத்தகங்களைப் பற்றிய அறிமுகம் நிறைவடைகிறது. அன்பர்கள் இவற்றை pustaka, amazon, overdrive, scribd, google, storytel ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து வாங்கலாம்.