Tamil calendar is solar calendar, i.e. based on the movement of sun. When it enters a zodiac sign the months begins. But other South Indians calculate the beginning of the month from the New moon day called Amavasyai. When Sun enters the first Zodiac sign, first Tamil moth begins.
Strangely the names of the months are lunar based. When the full moon is seen with a prominent star in Zodiac, then the month is named after it. Chitra is named after Star Chitra. That means the full moon happens in star Chitra.
(though stars are thousands of light years away from moon or earth, one can easily see the star and the moon together in the sky)
Tamils have some beliefs about each month; may be they were correct 2000 years ago, when transport facilities, medical facilities and communication facilities were scarce; and the weather condition was also different. If we go through each belief, we can easily find the scientific reason behind it.
For instance, if a person gets married in a month the woman may become pregnant immediately. Then they calculate her delivery time and see what facilities would be available at that time in her area. Then they from a common opinion and that becomes a belief or a proverb. In short all are based on experience. Now that the world has changed, all types of facilities are available in most parts of the world, the beliefs may be considered irrelevant.
xxx
1.Chitra (Tamil Month Chiththirai)
The first sign in the zodiac chart is Aries- Mesha Rasi. The travelling period of sun in this sign is called the month of Chiththirai. This is the first month of Tamil year. First day of this month falls on 14th of April. That is the New Year Day for the Tamils. Many communities celebrate that day in India and South East Asia.
Tamils believe that if a male child is born in this month, the father of the child will suffer a lot and there will be clashes between father and child.
Unless we get some statistics to prove this belief, we may ignore it. This is my opinion.
All full moon days are festival days for Hindus. Full moon days during non -rainy season are more important. Electric lights were not there in the world a few hundred years ago. So Hindus used natural light of sun and moon to celebrate big festivals.
Chitra Pournami or Purnima is one of the famous festival days in Hindu calendar. Madurai Meenakshi Sundareswarar temple Chitra festival attracts million people. Many temples in Tamil Nadu have their important festivals during Chithrai.
Sri Shankara Jayanthi, birth day of the greatest Hindu philosopher Adi Shankara, Rama Navami, Narasimha Jayanthi and Ramanuja Jayanthi are celebrated in this month.
Jayanthi or Thiru Nakshatram means birth day.
Xxx
2.Vaikasi (vaikaasi)
This is the second month in Hindu Solar Calendar. Sun travels in second zodiac sign Rishaba, i.e, Taurus.
Tamil Hindus arrange auspicious events during this month. Marriages, Gruha Pravesa (house warming) , construction of buildings etc take place in this month.
Visaaka Star day (Viasaaka star and Moon together) known as Vaikaasi Visaakam is celebrated in Skanda/ Murugan temples. Millions of people visit Muruga/Kartikeya temples on that day.
For Buddhists Vesak (Visaka) is the most important festival of Buddha Jayanthi.
For Hindus, Tamil saints Sekkizar Jayanthi, Thiru Gnana Sambandar Jayanthi, Kanchi Mahaperiyavar Jayanthi (Shankaracharya of Kanchi Mutt (1894-1994) are important. This month roughly corresponds to May in English Calendar.
To be continued………………………
Tags- Tamil months, importance, beliefs, festivals, Chitrai, Vaikasi
ஒருவனுக்கு கடும் நோய். அந்த நோயாளியைப் பார்த்து ‘குசலம் விசாரிப்பதற்காக’/ சுகம்தானா என்று கேட்பதற்காக தொலை தூரத்திலிருந்து உற்றார், உறவினர் வருகின்றனர். அதில் ஒரு அழகியும் இருந்திருப்பாள் போலும். இதோ அவரது வாய் மொழியாக வந்த ‘காதா சப்த சதி’ கவிதை :
“ஓ காய்ச்சலே ! நீயும் நன்மைதான் செய்திருக்கிறாய். எளிதில் சந்திக்க இயலாத அன்பிற்கினியோரைத் தொலைவிலிருந்து கொண்டுவந்து விட்டாய் அவர்கள் என் உடல் நலத்தை விசாரிக்கிறார்கள்.இனி நீ என் உயிரையே எடுத்துச் சென்றாலும் உன்னைக் குற்றம்சாட்டமாட்டேன்.”
பிராக்ருதக் கவிதையின் சம்ஸ்க்ருத வடிவம் :
முகம் ப்ருச்சகம் ஜனம் துர்லபம் அபி தூராத் அஸ்மாகம் ஆனயன்
உபகாரக ஜ்வர ஜீவம் அபி நயன ந க்ருதாபராதகஹ அஸி
— கவி ஸ்வர்கவர்மண 1-50, காதா சப்த சதி
இந்தப் பாட்டிலுள்ள ஜுரம், ஜனம், துர்லபம், தூரம், உபகாரம், அபராதம் என்பன எளிய ஸம்ஸ்க்ருதச் சொற்கள் ஆகும் . அந்தக் காலத்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்டால் தொலைவிலிருந்துகூட உற்றார், உறவினர், சுற்றத்தார் நலம் விசாரிக்க வந்தனர் என்பது முக்கியமான செய்தி. இப்போது போல போக்குவரத்து வசதிகள், செய்தித் தொடர்பு வசதிகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, கவிதையை வாசித்தால் அதன் ஆழம் புரியும்.
XXX
அடுத்த பாடலையும் காண்போம் 1-51
“என் நலத்தை விசாரிக்க வந்த , நல் மணம் வீசும் அன்பிற்குரியவரே !என்னுடைய வயிற்றுப் போக்குடன் கூடிய காய்சசல் கூடியதா, குறைந்ததா என்று விசாரிக்கத் தேவையே இல்லை. நோயினால் துர்மணம் வீசும் என்னைத் தொடாமல் இருந்தால் போதும்.”
இந்தச் செய்யுளில் உள்ள ஜ்வர, மந்தம், ஜன, சிந்தனை , ஸுகம் சுகந்தம் , கந்தம் ஸ்பரிசம்/தொடுதல் என்பன எல்லோரும் அறிந்த எளிய ஸம்ஸ்க்ருதச் சொற்கள் ஆகும்.
XXX
கள்ளக் காதலியின் தேள் கடி நாடகம்
ஒரு பெண்ணுக்கு, அந்த ஊர் டாக்டர் மேல் கள்ளக்காதல் ; அவள் தன் னைத் தேள் கடித்துவிட்டதாகவும் வலியால் துடி துடிப்பதாகவும் கைகளைச் சுற்றிச்சுற்றி நாடகம் ஆடுகிறாள் . அவளுடைய தோழிகளுக்கு முன்னரே காதல் விஷயம் தெரியும். அவர்களும் அந்த அழகிக்கு உதவுகின்றனர்
“ஒரு தேள் கடித்துவிட்டதாகச் சாக்குச் சொல்லி, அவளுடைய கணவன் கண் முன்னாலேயே , அந்தப் பெண்ணை மருத்துவனாகிய கள்ளக் காதலனின் வீட்டுக்கு அவளுக்கு நெருக்கமானவர்கள் அழைத்துச் செல்ல, அவளோ தன் கைகளை வலியால் துடிப்பது போலச் சுழற்றினாள்.” 3-36 , கவிஞன் மல்ல சேன
இந்தக் கவிதையில் உள்ள பதி /கணவன் , விருச்சிகம்/தேள் , வைத்ய, க்ருஹம், புஜம் ஸகீ /தோழி, கரம் /கை என்பன எல்லோரும் அறிந்த ஸம்ஸ்க்ருத பதங்கள் ஆகும்.
XXX
டாக்டர் இல்லாத ஊரில் வாழ்ந்த காதலி பற்றி கவலையுற்ற ஒருவர் பாடிய பாட்டு;
” நான் யாரிடம் போய்ச் சொல்லி அழுவது? மருத்துவரே இல்லாத இந்த பாழாய்ப்போன ஊரில் அந்த வீ ட்டுப் பெண்ணுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடும் என்பது விவசாயியின் மகனுக்கு கொஞ்சமேனும் தெரியவில்லையே !”
டாக்டர் இல்லாத கிராமங்கள் இப்போதும் உண்டு. அங்குள்ள மக்களின் ஆரோக்கிய கவலைகளை எதிரொலிக்கும் பாட்டு இது
இதிலுள்ள கிராம , வைத்ய ( அ +வைத்ய = மருத்துவர் இல்லாத), ஹலிக (கலப்பைக்காரன்=விவசாயி), க்ருஹ பதி =வீட்டுக்காரன், நந்தன /மகன் என்பன எளிய ஸம்ஸ்க்ருதச் சொற்கள்
XXX
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒரு சொற் கேளீர் !
சேமமுறவேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்
என்று பாரதி பாடினார் ; இதே போல ஒரு பிராக்ருத மொழிப் புலவரும் பாடுகிறார். ஆனால் பாரதி பாடியது தமிழுக்காக ; காதா சப்த சதிப் புலவர் பாடுவதோ காதல் நோய்க்காக.
“இந்தப் பூவுலகில் செவிடர்களும் குருடர்களும்தான் அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் குருடானால் மோசடிப் பேர்வழிகளின் செல்வச் செழிப்பினைக் காணும் தீமை இல்லை; செவிடானால் துரோகிகளின்/ தீயோரின் வார்த்தைகளைக் கேட்கும் கொடுமை இராது”
-7-95, பாடிய கவிஞர் பெயர் கிடைக்கவில்லை காதா சப்த சதி;
இந்தப் பாட்டில் மானுஷ லோகம் /மானிடர் உலகம், ஜீவந்தி /வசிக்கின்றனர், அந்தகர்கள் , பிசுன /பிசினாரிப் பயல்கள் என்பன எளிதில் விளங்கும் சொற்களே
XXX
“எல்லோரும் அப்போது ஊமையராய் ஆகிவிட்டனர். காதல் நோய் விஷம் போல உடல் முழுதும் பரவிய பின்னர் இப்போது தடைபோடுகின்றனர்” – 7-96 பாடிய கவியின் பெயர் கிடைக்கவில்லை
இதானிம் வாரயதி ஜனஹ ததா மூகஹ இவ கதஹ
யதா விஷம் இவ ஜாதம் ஸர்வாங்க ப்ரபவத் ப்ரேம
7-96 , கவிஞர் ஸ்ரீ சுந்தர
இதில் ஜனங்கள், மூக /ஊமை, விஷம் , ஸர்வ அங்கம்/ உடல் முழுதும் பிரேம /காதல் என்பன எல்லோரும் அறிந்த சொற்கள்தான் . பிராகிருத வடிவக் கவிதைகளை ஸம்ஸ்க்ருதம் ஆக்கிப் படிக்கையில் எளிதாக இருக்கும்.
–சுபம்—
tags- பிராகிருத நூல் ,மருத்துவச் செய்திகள், காதா சப்த சதி
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஹிந்துக்களே விழித்தெழுங்கள்!
வரலாற்றில் சரியான தருணத்தில் ஒரு பாடம்! – 1
ச.நாகராஜன்
சுப்ரீம் கோர்ட் அட்வகேட், டாக்டர் ஹரிபன்ஷ் மிஸ்ரா, ‘உங்களுக்குத் தெரியுமா?’ என்ற தலைப்பில், மேற்கின் போலித்தனம் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
அதில் அவர் தரும் உண்மை கருத்துக்கள் இவை:
1. ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதத்தை வெவ்வேறு தரங்களில் 32 நாடுகள் அங்கீகரிக்கின்றன. ஒன்று அரசாங்க மதமாகவோ அல்லது வடிகனால் செய்யப்படும் சமய உடன்பாட்டாலோ அரசியல் சட்டத்தில் விசேஷ சலுகைகள் தரப்பட்டோ உள்ளன. வடிகனுடனான சமய உடன்பாட்டு ஒப்பந்தங்கள் சர்ச்சுகளின் நோக்கங்களை நிர்வகிக்க ஏதுவாக உள்ளவையாகும்.
2. இங்கிலாந்திற்கு ஒரு அதிகாரபூர்வமான அரசாங்க மதமான சர்ச் ஆஃப் இங்கிலாந்து ஏசு கிறிஸ்து ஒருவரே கடவுள் என நம்புகிறது. 21ஆம் நூற்றாண்டில் இன்னும் ஏன் இங்கிலாந்து ஒரு கிறிஸ்தவ ராஜ்யமாக இருக்கிறது? – என்று இப்படி எந்த ஒரு மேலை நாட்டு தாராளக் கொள்கை உடையவரும் கேட்கவில்லை. ஆனால் நான்கு மதங்களுக்குத் தாயகமான இந்தியா மட்டும் காலனியின் அடிச்சுவடான செகுலரிஸத்தைப் பின்பற்ற வேண்டுமாம்!
3. இங்கிலாந்தின் பிஷப்ஸ் ஆஃப் சர்ச்சுக்கு யுனைடெட் கிங்டம் பார்லிமெண்ட் 26 சீட்டுகளை ஒதுக்கி இருக்கிறது. 2015 முடிய கடந்த 400 வருடங்களாக ஒரு பெண் பிஷப்பும் அங்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால் நான்கு நூற்றாண்டுகளாக வெள்ளை கிறிஸ்தவ ஆண்களுக்கு மட்டும் அதன் ஒரு பகுதியை ஒதுக்கியுள்ள போதும் அதன் ஜனநாயக மதிப்பு ஒரு போதும் கேள்வி கேட்கப்பட்டதில்லை!
4. இந்தியா அதன் பாராளுமன்றத்தில் சில சீட்டுகளை மதத் தலைவர்களுக்கு ஒதுக்கியதாக வைத்துக் கொள்வோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி, ஜனநாயகத்தைப் புறம் தள்ளுகிறார் என்று சொல்லும் மேலை உலகம், இங்கிலாந்து நாட்டின் சட்டங்களை இயற்ற வல்ல 26 பிஷப்புகளை சர்ச் நேரடியாக நியமனம் செய்வதை மிகச் சரியானது என்று ஒப்புக் கொள்கிறது. இந்தியர்களுக்கு மட்டும் தான் செகுலரிஸம் போலும்!
5. 92 சீட்டுகள் யுனைடெட் கிங்டம் பாராளுமன்றத்தில் வம்ச அடிப்படையில் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆமாம், உண்மையிலேயே பிறப்புரிமையின் பேரில் இந்த 92 சீட்டுகள் அளிக்கப்படுகின்றன. இந்த சீட்டுகள் ‘பீயர்ஸ்’ (‘peers’) என அழைக்கப்படுகின்றன. இவை இங்கிலாந்தின் அரண்மனைக் குடும்பங்களுக்காக ரிஸர்வ் செய்யப்பட்டவையாகும். இந்திய ஜனநாயகத்திலோ ஒரு வார்டு கவுன்ஸிலர் கூட பிறப்பின் அடிப்படையில் நிரப்பப் பட முடியாது. என்ற போதிலும் இங்கிலாந்து முற்போக்கானது; இந்தியா பிற்போக்கானது! என்ன ஒரு விசித்திரம்!!
6. இங்கிலாந்தின் தேசீயக் கொடி செயின்ட் ஜார்ஜின் கிராஸை அடிப்படையாகக் கொண்ட ஒன்றாகும். கிறிஸ்தவ மதத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஜார்ஜ் ஒரு ராணுவ செயிண்ட்! சிலுவைப் போர்களுக்கு உத்வேகமூட்டிய ஒரு இட்டுக்கட்டப்பட்ட பழங்கதை அடிப்படையிலான ஒரு பாத்திரம் அது! அவ்வளவு தான்.
இப்போது இந்தியாவின் கொடியில் ஓம் என்று பொறிக்கப்பட்டதாக கற்பனை செய்து பாருங்கள். உடனேயே, மத சகிப்புத்தன்மை இல்லை என்று ஐ.நாவினால் அது கண்டனம் செய்யப்படும்!
-அடுத்த கட்டுரையுடன் முடியும்
ஆதாரம், நன்றி கொல்கொத்தாவிலிருந்து வாரந்தோறும் வெளிவரும்
ட்ரூத் இதழ்- 08-07-2022 TRUTH Vol 90 No 13
**
இதன் ஆங்கில மூலத்தைப் படிக்க விரும்புவோருக்கா கட்டுரை ஆங்கிலத்தில் அப்படியே தரப்படுகிறது.
A timely lesson in History – 1
Dr Haribansh Mishra, Advocate Supreme Court writes on the Duplicity of the West, under the caption– DidYou Know?
I. 32 Nations in Europe officially recognize Christianity, to varying degrees, either as state religion or with special privileges in constitution or through a Concordat with the Vatican. Concordats are agreements of nations with Vatican to govern and protect Church interests.
II. England has an official state religion, the Church of England, which believes Jesus is the only god. Why is England still a Christian state in 21st century? asked no western liberal ever. But India despite birthing 4 world religions has to bear colonial vestige of secularism.
III. UK Parliament has 26 seats reserved for Bishops of Church of England. Till 2015, for 400 years there was not one female Bishop chosen. But UK’s democratic reputation is untouched despite reserving a section of its Parliament exclusively for White Christian males for 4 centuries.
IV. Consider if India reserved seats in parliament for its religious heads. A Modi elected by popular vote is a sign of democratic backsliding for west but 26 Bishops nominated directly by Church to make national laws is fair game. Burden of secularism is only for brown shoulders.
V. 92 seats in UK parliament are filled on hereditary basis. Yes, based on birth. These hereditary seats called ‘peers’ are reserved for the royal families of UK. In Indian democracy, even a Ward councillor position can’t be filled based on birth. Yet UK is progressive, India is not.
VI. England’s national flag is based on the Saint George’s Cross. George is venerated as a military saint who died for Christian faith, a mythical inspiration for crusade wars. Imagine if India added a Om to its flag, probably it would get a UN condemnation for religious intolerance.
இன்றைய நவீன உலகில் அறிவியல் பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்
ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்
இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.
எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.
அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.
4-3-2011இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடை போடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க
பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.
இந்த நூல் ஒன்பதாம் பாகம் – 209 முதல் 234 முடிய உள்ள 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும். இந்தக் கட்டுரைகள் அனைத்தும் பிப்ரவரி 2015 முதல் ஜூலை 2015 முடிய வாரா வாரம் வெளியானவை. கூடவே ஒரு க்விஸ்- கடைசியில் இணைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.
இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.
அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்!
நன்றி பங்களூர் 18-3-2022
ச.நாகராஜன்
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
காதா சப்த சதி (GATHA SAPTA SATI ) என்னும் நூல் பிராகிருத கவிதைத் தொகுப்பு நூல். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சாதவாகன மன்னன் ஹாலன் (HALAN) மஹாராஷ்ட்ரி பிராகிருத மொழியில் உள்ள கவிதைகளைத் தொகுத்தான். அவன் எழுதிய நாற்பதுக்கும் மேலான கவிதைகளுடன் மேலும் 260 கவிஞர்களின் செய்யுட்களும் இதில் அடக்கம்; ஏழு பெண் கவிஞர்களும் இருக்கின்றனர்.
காதா கவிதைகள் விரசம் மிகுந்தவை. சங்கத் தமிழ் நூல்களான அக நானுறு , குறுந்தொகை, நற்றிணைப் பாட்லகள் போன்ற அகத்திணைப் பாடல்கள் ஆகும்.
காதா சப்த சதி என்றால் 700 காதா செய்யுட்கள் என்று பொருள்.இதில் சில சுவையான மருத்துவச் செய்திகளைக் காண்போம்.
(நான் கடந்த பத்து ஆண்டுகளில் எட்டு கட்டுரைகளில் இதன் சிறப்பு அம்சங்களைத் தொட்டுக்காட்டினேன் . இதோ இன்னும் ஒரு கட்டுரை)
XXX
காயங்கள், புண்கள் மீது மருந்து தடவிய துணியயைக் கட்டுவது (Bandages) இன்று உலகெங்கிலும் உள்ளது. இதோ அந்த வழக்கத்தைக் காட்டும் ஒரு கவிதை :
“அந்த இளம் பெண் , ஒரு காயம் அடைந்தவர் மெழுகு தடவிய ஒரு துணியைக் கடிபட்ட உதட்டில் கட்டுவது போல , அதை ஒரு நொண்டிச் சாக்காக வைத்து, தன்னுடைய பிஞ்சு விரல்களால் , கட்டினாள்” 5-58
இதை பிராகிருத மொழியில் படிப்பதைவிட சம்ஸ்க்ருதத்தில் படித்தால் புரிந்து கொள்ளுவது எளிதாக இருக்கும். இதோ பிராக்ருதக் கவிதையின் சம்ஸ்க்ருத மொழி வடிவம் :
சநகைஹி சநகைஹி லலிதாங்குல்யா மதன பட லாபன மிஷேண
பத்னாதி தவள வ்ரண பட்டகம் இவ வ்ரணிதாதரே தருணீ
இந்தச் செய்யுளில் வரும் லலித , அங்குலி /விரல் , தவள, பட்டகம் , தருணீ , மதன, அதரம் , பந்தம்/கட்டுதல்/BOND முதலிய சொற்கள் மிகவும் எளிய ஸம்ஸ்க்ருதச் சொற்கள் ஆகும் .
XXX
விவசாயம் செய்யும் ஒரு நோயாளிக்கு ஒரு அழகி சூடான கஷாயத்தை சூடு தணிவதற்காக தனது வாயால் ஊதி , ஊதி கொடுக்கிறாள். அதுவோ கசப்பான மருந்து. ஆயினும் தாமரை இதழ்களால் வாசனையுடன் வந்த காற்று பட்டவுடன் அந்த நோயாளி கொஞ்சமும் முணு முணுக்காமல் அப்படியே வாங்கிக் குடிக்கிறான். அவள், அவனுடைய உடல் நலத்தை விசாரிக்க வந்த பெண்தான் கோப்பையில் கொஞ்சம் கூட மிச்சமில்லை!4-17
இந்தச் செய்யுளில் சுக, கடுக்காய் (கசப்பான), ஒளஷதம்/மருந்து, முக பங்கஜ / தாமரை வாய், பவன/காற்று , சுரபி / வாசனை அல்லது காமதேனு , ஹலிக /கலப்பை ஏந்தியவன் என்ற சொற்கள் எளிய ஸம்ஸ்க்ருத சொற்கள் .
கலப்பையை தோளில் சுமந்து இந்தியா முழுதும் விவசாயத்தைப் பரப்பிய கண்ணன் சகோதரன் ஹலாயுதனை (பலராமன் ) எல்லோரும் அறிவர் . பவன குமாரன் /காற்றின் மைந்தனையும் எல்லோரும் அறிவர்.
தமிழுக்கு முகம் இல்லை; ஸம்ஸ்க்ருதத்துக்கு வாய் இல்லை என்று பாடசாலைகளில் கிண்டல் செய்வார்கள். முகம் என்றால் தமிழில் மூஞ்சி; ஸம்ஸ்ருதத்தில் வாய்.
லண்டனில் ஒரு சுவையான சம்பவம்
நான் லண்டன் நகரத்தில் பார்த்த பகுதி நேர வே லைகளில் ஒன்று மருத்துவ மனையில் தமிழ் பேசாத நோயாளிகளுக்கு மொழி பெயர்ப்பு உதவி செய்வதாகும். கிழக்கு லண்டனில் சில இலங்கைத் தமிழ் அகதிகள் சட்ட விரோதமாக வாழ்ந்து வந்தனர். அதாவது அகதி என்று முத்திரை குத்தப்படாமல் நாடற்றவர்களாக வாழ்ந்தனர். போலீசுக்குத் தெரியாதபடி நண்பர்கள் வீட்டில் உறங்குவதும், அதிகமாகக் குடிபோதை ஏற்பட்டால் பூங்காக்களில் (In Public Parks) உறங்குவதும் அவர்களுடைய வாடிக்கை . ஒரு அகதி / குடிகாரன் அடிக்கடி ஆஸ்பத்திரியில் மிக மோசமான நிலை யில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய கல்லீரல் (liver) மிகவும் சேதமடைந்துவிட்டது. டாக்டர்கள் கேட்டார்கள்: எத்தனை முறை உன்னை எச்சரி த்தும் ஏன் இப்படிக் குடித்துக் குடித்து செத்துக் கொண்டு இருக்கிறாய்? என்று.
அவர் பதில் சொல்லவில்லை
டாக்டர்கள் போனவுடன் நான்பேசிக் கொண்டு இருந்தேன். அப்போது உன்னுடைய உடல் நலனுக்காகத்தானே டாக்டர்கள் குடிக்காதே என்கின்றனர். உன்னை ஆஸ்பத்திரி கம்ப்யூட்டர்கள் சிவப்புப் பட்டியலிட்டுக் (Red listed) காட்டுகிறது. நீ அடிக்கடி ஆஸ்பித்திரியில் அனுமதிக்கப்படுவதை யும் கம்பியூட்டர் ரிகார்டுகளே காட்டிவிடும். ஏன் இப்படிச் செய்கிறாய்? என்று கேட்டேன்.
அவர் மனம் திறந்து சொன்ன பதில்:
அழகான நர்ஸுகள் கைகளில் எனக்கு உணவு கிடைக்கிறதே !!!!
மேலேயுள்ள ப்ராக்ருதக் கவிதையின் பொருள் இப்போது நன்கு விளங்கும் .
XXX
உயிர் காக்கும் மருந்து 4-36
ஒரு மருமகள் நோய்வாய்ப்பட்டு விடுகிறாள் .மாமியார் எல்லா வேலைகளையும் ஒதுக்கிவிட்டு மருமகளைக் காப்பற்ற வருகிறாள் .அவளுடைய உயிர் பிரியும் நேரம்; தன்னுடைய மகனுக்காக, உயிர் காக்கும் மருந்தினைப் போல மாமியார் உதவுகிறாள் . இந்த உதவி வறண்ட நாவுக்குக் கிடைத்த தண்ணீர் போல அல்லது வறண்ட இடத்தில் காணப்பட்ட புதிய மேகம் போல என்று ஒப்பிடப்படுகிறது.
இந்தக் கவிதையில் சஞ்சீவி/உயிர் காக்கும் , ஒளஷதம்/மருந்து , சுத /மகன் , ஸ்நுஷ/ மருமகள் , ரக்ஷதி/காப்பாற்றுகிறாள், அனன்ய வியாபாரா /பிற வேலைகளை விட்டு –முதலிய சொற்கள் எளிய ஸம்ஸ்க்ருதச் சொற்கள்.
XXX
சிகிச்சை அளிக்கப்படாத நோய்
தமிழில் ஒரு பழமொழி உண்டு: பாடப்பாட ராகம், மூட மூட ரோகம் ; அதாவது பாடகர்கள் எவ்வளவு பயிற்சி செய்கிறார்களோ அவ்வளவுக்கு அவர்கள் பெயர் பெறுவார்கள்; பிரபல பாடகரானாலும் தினமும் பயிற்சி செய்வார்கள்; அதைப்போல ரோகத்துக்கு / நோய்க்கு உடனேயும் , தொடர்ந்தும் சிகிச்சை தரவேண்டும். மூடி மூடி வைத்தாலோ / சிகிச்சை தராமல் இருந்தாலோ ஆபத்து. இந்த உவமை ஒரு பிராக்ருதக் கவியில் வருவதிலிருந்து அக்கால மக்களின் மருத்துவ அக்கறையை அறிய முடிகிறது .
“உன்னைப் பிரிந்திருப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை மருத்துவனால் சிகிச்சை தரப்படாத நோய் போல, உறவினர் நடுவில் செல்வம் இல்லாதவன் போல, எதிரிகளிடம் மட்டும் செல்வச் செழிப்பைக் காண்பவன் போல தவிக்கிறேன் “-4-63 கவி வாமதேவ
இதில் உள்ள வியாதி, வைத்தியர் , தன, ஸ்வ ஜனம் , மத்ய , வாச, தரிசனம் என்பன எளிய சம்ஸ்க்ருத சொற்கள் ஆகும்
xxx
பிராகிருதம் என்றால் சம்ஸ்க்ருதத்தின் கொச்சை வடிவம் ; ஆர்ய என்பதை அஜ்ஜ என்பர்; அது தமிழில் ஐயர் ஆனது.
தமிழிலும் பிராகிருதம் உண்டு. இன்றைய தமிழ் நாவல்கள் எல்லாம் தமிழ் ப்ராக்ருதம் ; நான் போய்விட்டு வருகிறேன் என்ற இலக்கிய நடையை நான் போய்ட்டு வாரேன் என்று சொல்லுவது தமிழ் பிராகிருதம் . பிராக்ருதத்தில் பலவகை உண்டு. இந்த நூல் மஹாராஷ்ட்ரா பகுதியில் பேசப்பட்ட கிளை மொழி.
TO BE CONTINUED…………………………………..
Tags- காதா சப்த சதி, பிராகிருத நூல் மருத்துவ, செய்திகள், சுவையான, சம்பவம் , சிகிச்சை ,நோய் , உயிர் காக்கும், மருந்து,
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வேத கணிதம் – ஒரு பார்வை!
ச.நாகராஜன்
வேத கணிதம் என்றால் என்ன?
ஏன் உலகம் முழுவதும் அதை இன்று கொண்டாட ஆரம்பித்திருக்கிறது?
ஏன் உலகில் உள்ள பல சிறந்த பல்கலைக் கழகங்களும் அதை போதிக்க ஆரம்பித்துள்ளன?
ஏனெனில் அது கணிதத்தை வியக்கத்தக்க விதத்தில் சுலபமாகக் கற்பிக்கிறது.
மாதிரிக்காக அதன் மீது ஒரு பார்வையைச் செலுத்திப் பார்ப்போம்.
இணைய தளத்தில் பரவலாகப் பகிரப்படும் இதை இங்கு பார்க்கலாம்.
இதை அனைவருக்கும் பரப்பும்படி இந்த இணையதள வேண்டுகோளை ஏற்று அனைவருக்கும் பரப்பலாம்.
கணித வாய்பாடுகள் எத்தனை உங்களுக்குத் தெரியும்?
குறைந்த பட்சம் பத்தாம் வாய்பாடு வரை அனைவரும் அறிவர்.
மலையையே தாண்டி விட்ட முயற்சி தான் அது – அதை மனப்பாடம் செய்யப்பட்ட பாடு அந்த இளமைக் காலத்தில் ஒரு அரிய சாகஸ காரியம் தான்!
சரி, அதற்கு மேல் உள்ள வாய்பாடுகள் பற்றி இனி கவலைப்பட வேண்டாம்.
11 முதல் 99 முடிய – ஏன் அதற்கு மேலும் உள்ள வாய்பாடுகளைப் பற்றி இனி கவலை இல்லை.
இதோ இருக்கிறது வேத கணிதம் சுட்டிக் காட்டும் எளிய வழி முறை!
வேத கணிதத்தின் வழிப்படி இரண்டு இலக்க வாய்பாடு ஒன்றை அமைத்துப் பார்ப்போம்.
உதாரணத்திற்கு 87ஆம் வாய்பாடு!
08 0 7 (08+0) 87
—————————————
16 1 4 (16+1) 174
24 2 1 (24+2) 261
32 2 8 (32+2) 348
40 3 5 (40+3) 435
48 4 2 (48+4) 522
56 4 9 (56+4) 609
64 5 6 (64+5) 696
72 6 3 (72+6) 783
80 7 0 (80+7) 870
இதன் விளக்கம். முதலில் 8 x 1 = 8
அடுத்து 8 x 2 = 16 போடப்பட்டுள்ளது.
அடுத்து 8 x 3 = 24 போடப்படுள்ளது. இதே போல 8 x 10 = 80 முடிய வரிசையாக போடப்பட்டுள்ளதைக் காணலாம்.
அதே போல 7 x 1 = 7 அடுத்த படி போடப்பட்டுள்ளது.
அதன் கீழே வரிசையாக 7 x 2 = 14, 7 x 3 = 21 என இப்படி 14,21,28 என்று ஆரம்பித்து 70 வரை போடப்பட்டுள்ளது.
அடுத்து முதல் காலத்தில் உள்ள 16ஐயும் அடுத்த காலத்தில் முதலில் உள்ள எண் 1ஐயும் 17 போடப்பட்டிருக்கிறது. இப்போது ஏழாம் வாய்பாடில் உள்ள 14 என்ற எண்ணில் இரண்டாம் எண்ணாக உள்ள 4 ஐ 17இன் பக்கத்தில் போட்டால் வருவது 174.
அவ்வளவு தான், 2 x 87 = 174, 3 x 87 = 261, .. இப்படி போட்டு முடித்து விடலாம், ஒரு சில விநாடிகளில்!
இது தான் வேத கணிதம்.
மாதிரிக்காக இன்னும் இரண்டு வாய்பாடுகள். 38 மற்றும் 92க்கான வாய்பாடுகள்
38ஆம் வாய்பாடு இதோ!
38ஆம் வாய்பாடு
03 0 8 (3+0) 38
06 1 6 (6+1) 76
09 2 4 (9+2) 114
12 3 2 (12+3) 152
15 4 0 (15+4) 190
18 4 8 (18+4) 228
21 5 6 (21+5) 266
24 6 4 (24+6) 304
27 7 2 (27+7) 342
30 8 0 (30+8) 380
33 8 8 (33+8) 418
36 9 6 (36+9) 456
அடுத்து 92ஆம் வாய்பாடு இதோ!
92ஆம் வாய்பாடு
09 02 (09+0) 92
18 04 (18+0) 184
27 06 (27+0) 276
36 08 (36+0) 368
45 10 (45+1) 460
54 12 (54+1) 552
63 14 (63+1) 644
72 16 (72+1) 736
81 18 (81+1) 828
90 20 (90+2) 920
99 22 (99+2) 1012
108 24 (108+2) 1104
இப்படியாக 10 முதல் 99 முடிய வாய்பாடை நாமே உடனடியாக எழுதி விடலாம்!
இந்த வேத கணித வழியை அனைவருக்கும் பரப்புங்கள்.
நமது பாரத தேசத்தின் பிரமாதமான அறிவு அற்புதமான வியக்க வைக்கும் பொக்கிஷங்களைக் கொண்டுள்ளது.
பண்டைய காலத்தில் குருகுலத்தில் குருமார்கள் சிஷ்யர்களுக்கு இதை இப்படித்தான் கற்பித்தார்கள்.
பிரிட்டிஷ் ஆட்சி வந்தவுடன் அனைத்தும் காற்றிலே பறந்து விட்டது!
வேத கணிதம் என்றால் என்ன என்று கேட்டால் இதைச் சொல்லி விளக்குங்கள். இது ஒரு ஆரம்பம் தான். இன்னும் உச்ச பட்ச கால்குலஸ் வரை வேத கணிதம் காட்டும் வழி எளிய வழியே!
நன்றி : கொல்கத்தாவிலிருந்து வாரந்தோறும் வெளிவரும் ஆங்கில வார இதழ் ட்ரூத் 8-7-2022 தொகுதி 90 இதழ் 13
*
இதன் ஆங்கில மூலத்தைப் படிக்க விரும்புவோருக்கு கட்டுரை ஆங்கிலத்தில் அப்படியே தரப்படுகிறது.
Vedic Mathematics- A glimpse
Upto which number do you know your tables?
At least upto 10, awesome!
You have crossed the mountain!
Don’t worry for the rest of the tables!
From 11th to 99th, any table, very easy!
[I didn’t know this. Because this Vedic mathematics was not taught to us in school of this secular country!]
How to write Table of any two digit number?
For example Table of 87:
First write down table of 8 then write
down table of 7 beside it.
08 0 7 (08+0) 87
—————————————
16 1 4 (16+1) 174
24 2 1 (24+2) 261
32 2 8 (32+2) 348
40 3 5 (40+3) 435
48 4 2 (48+4) 522
56 4 9 (56+4) 609
64 5 6 (64+5) 696
72 6 3 (72+6) 783
80 7 0 (80+7) 870
Now table of 38
03 0 8 (3+0) 38
06 1 6 (6+1) 76
09 2 4 (9+2) 114
12 3 2 (12+3) 152
15 4 0 (15+4) 190
18 4 8 (18+4) 228
21 5 6 (21+5) 266
24 6 4 (24+6) 304
27 7 2 (27+7) 342
30 8 0 (30+8) 380
33 8 8 (33+8) 418
36 9 6 (36+9) 456
Now table of 92
09 02 (09+0) 92
18 04 (18+0) 184
27 06 (27+0) 276
36 08 (36+0) 368
45 10 (45+1) 460
54 12 (54+1) 552
63 14 (63+1) 644
72 16 (72+1) 736
81 18 (81+1) 828
90 20 (90+2) 920
99 22 (99+2) 1012
108 24 (108+2) 1104
This way one can make Tables from 10. to 99.
Share this intelligence booster.
The brilliance of our country is full of unthinkable treasures! In olden times in all
schools, Gurus (teachers) used to teach children maths in Vedic way until Britishers and other
anti-forces washed it away.
This is our Vedic Mathematics!!.
(from Social Media)
Thanks : TRUTH Kolkata weekly dated 8-7-2022 Volume 90 No 13
இன்றைய நவீன உலகில் அறிவியல்பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்
ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்.
இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.
எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.
அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.
4-3-2011இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடை போடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.
இந்த நூல் எட்டாம் பாகம் – 183 முதல் 208 முடிய உள்ள 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும். இந்தக் கட்டுரைகள் அனைத்தும் 29-8-2014 முதல் 20-2-2015 முடிய வாரா வாரம் வெளியானவை.
ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.
இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.
அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்!
நன்றி
பங்களூர் ச.நாகராஜன்
11-3-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
GATHA SAPTA SATI (GSS) is an anthology of 700 verses in Prakrit language. It means 700 Gathas. Gathas mean verses in a particular style or genre. It is equal to Arya (aaryaa) metre in Sanskrit. In Prakrit they call the book Sattasai (The 700) or Gathakoso (gaathaakosa- A Treasury of Gathas)
The GSS is written in Maharashtri Prakrit language. Hala, a Sathavahana king, compiled 700 important verses during his time. It includes 44 verses composed by him and 260 poets anterior to Hala including seven women poets. It is erotic in nature and reflects the sentiment of Love. We find many Tamil words like Amma, Akka and Attai (Mother, Elder sister and aunty) in the collection. But Tamil Sangam poems rarely talk about immoral women in families. Only courtesans are referred to in Sangam poems. In the GSS we find immoral characters in the families. But GSS verses touch many areas which the Tamil poems don’t deal with.
I have collected some GSS Prakrit verses which show the importance of village medicine men and women.
In the villages lived physicians of both sex -women and men. We hear about a few diseases as well. Friends and relatives enquired about the health of others. Though it is not a book on medicines like that of Charaka or Susruta, we can at least get a glimpse of village life and the health concerns of ordinary people.
xxx
“Whom shall I tell that the ploughman’s son does not know the least that the daughter of the house holder may meet with a calamity in this wretched village where no physician is available?” 6-100
Prakrit verse is given below in Sanskrit :-
Mandam api na jaanaathi halika -nandanah iha his dagdha graame
Grha pati suthaa ipadhyate avaidhyake kasya saasmah (kathayaamah)
-anonymous
It shows that it is really very hard to live in villages without physicians; there were such villages in some parts.
Xxx
Here we see a physician who was the paramour of a housewife
“Under the pretext that the girl had been bitten by a scorpion, she was led in the presence of her husband to the house of her paramour-physician having been held by the hands of her skilful confidantes while she was swinging round the pair of her hands.3-37 (Poet Mallasena)
Prakrit verse is given below in Sanskrit:
Pati puratah eva neeyate vrschika dashtaa iti jaaravaidhya grham
Nipuna sake kara dhruthaa buja yuga laandolinee bhaalaa
“Separation from you is very much unbearable (to me) like a disease untreated by a physician, like one’s residence in the midst of kinsmen without possession of wealth, and like one observing the opulence of one’s enemy – 4-63
Prakrit verse is given below in Sanskrit:
Vyaadhihi iva vaidhya-rahitah dhana-rahitah sva jana Madhya vaasah iva
Sukha prcchaka and sukha prcchikaa show that men and women enquiring about the health of friends and relatives.
Even today when friends and relatives meet one another after a gap in time ask Are all of you well? Is every one in the family hale and healthy?
Here are two verses:
“O fever! Benefactor (as you are), having brought back from a distance (our dear) one, so difficult to meet with, who enquires after our welfare, you will not be held guilty evn if you take away my life”.1-50
Upakaaraka jwarm jeevam api nayan na krtaaparaadhah asi
1-50 (Poet Swargavarmanah)
Xxx
“O you favoured one enquiring about our welfare, fragrant with perfumes! There is no need of anxiety on anybody’s part to know whether my dysenteric fever is high or low. Do not touch one affected by smell (of fever)”
Graama jwarah me mandah athawaa na mandah janasya kaa chintaa
Sukha prcchaka subaga Sugandha- gandha maa gandhiaam sprsa –
1-50 (Poet Kaala)
Only from the above two verses we hear about kind of diseases.
Xxx
Use of white bandage on sores or wounds is spoken about in 5-58
We have references to deaf and dumb patients in 7-95 and 7-96
People used bitter medicines (4-17 and life restoring drugs (4-36)
Here are those two verses from fourth century (sataka)
“The ploughman quaffs in such a manner the naturally pungent medicine cooled by the fragrant wind blown from the lotus mouth of the lady who enquired about well being, that remains no residue of it.4-17 (Poet Trilochana)
Tathaa pibhathi prakrti kadukam api aushadham yathaa na nitishtati
4-17 (Poet Trilochana)
Xxx
“The mother in law , having left aside any other work , protects the life of daughter in law, as if she were a life restoring medicine for her son, when she ( the daughter in law) is about to lose her life(literally when her life breath is approaching her throat for departure), at the sight of new clouds”.4-36 (Poet Vihvala)
2022 ஆகஸ்ட் 13ஆம் தேதியிட்ட TNN செய்தி அறிக்கை இது:
உத்தர பிரதேசம் : ஹிந்து ராஷ்டிரம் டிராஃப்ட் காசியை தேசத்தின் தலைநகரமாக முன் வைக்கிறது.
பிரதானமான 30 அருளாளர்களும் அறிஞர்களும் ஹிந்து ராஷ்டிரத்தின் முதல் வரைவு அரசியல் சட்டத்தைத் தயாரித்துள்ளனர். ப்ரயாக் ராஜில் பிப்ரவரியில் நடந்த தர்ம சம்ஸத்தில் இது முதன் முதலாக முன் வைக்கப்பட்டது.
32 பக்கமுள்ள இந்த வரைவுத் திட்டம் 2023இல் சங்கம் நகரில் நடக்கவுள்ள மகா மேளாவில் வைக்கப்படும். கல்வி, தற்காப்பு, சட்டம் ஒழுங்கு, ஓட்டுப் போடும் அமைப்பு முறை, அரசின் தலைமைக்கு உள்ள உரிமைகள் உள்ளிட்டவற்றை இந்த வரைவு வழங்குகிறது. இந்த அரசியல் சட்டத்தின் படி நியூ டெல்லிக்குப் பதிலாக தேசீய தலை நகரமாக வாரணாசி இருக்கும்.
இது தவிர காசியில் பார்லிமெண்ட் ஆஃப் ரெலிஜன்ஸ் அமைக்கப்படும். வரைவு, இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்கள் ஒரு குடிமகனுக்குரிய, ஓட்டுப் போடுவதைத் தவிர உள்ள இதர அனைத்து உரிமைகளையும் அனுபவிப்பர். இது தவிர ஒவ்வொரு குடிமகனுக்கும் ராணுவ பயிற்சி கட்டாயமாக வழங்கப்படும். விவசாயத்திற்கு வரி விதிக்கப்பட மாட்டாது.
வரைவைத் தயாரித்த கமிட்டியின் போஷகர்கள் ஸ்வாமி ஆனந்த ஸ்வரூப், சாம்பவி பீடாதீஸ்வர் மற்றும் சங்கராசார்ய பரிஷத்தின் தலைவர்.
இதில் காமேஸ்வர் உபாத்யாய, தலைவர், சுப்ரீம் கோர்ட்டின் சீனியர் அட்வகேட் பி.என்.ரெட்டி, தற்காப்பு நிபுணர் ஆனந்த் வர்தன், சனாதன தர்ம அறிஞர் சந்த்ரமணி மிஸ்ரா, டாக்டர் வித்யாசாகர் உள்ளிட்டோரும் அங்கம் வகிக்கின்றனர்.
அரசியல் சட்டத்தின் முகப்புப் பக்கம் அகண்ட பாரதத்தின் வரைபடத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட அனைத்து நாடுகளையும் காண்பிப்பதற்கான ஒரு முயற்சி இந்த படத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவை எதிர்காலத்தில் இந்தியாவுடன் இணையும். இந்தப் பக்கமானது சில கோவில்களின் உச்சியில் பறக்கும் காவிக் கொடியையும் காண்பிக்கிறது. உள்ளே சாம்பவி மாதாவின் படம் உள்ளது. இதர பக்கங்களில் அரசியல் சட்டம், மற்றும் மாதா துர்கா, இராமர், கிருஷ்ணர் உள்ளிட்டபல தெய்வங்களின் படங்கள், கௌதம புத்தர், குரு கோவிந்த சிங், ஆதி சங்கரர், சாணக்யர், வீர் சவர்கார், ராணி லக்ஷ்மிபாய், ப்ரித்வி ராஜ் சௌஹான், ஸ்வாமி விவேகானந்தார் போன்ற இந்தியாவின் பெரும் ஆளுமைகளைச் சித்தரிக்கிறது.
ஹிந்து ராஷ்டிரத்தின் அரசியல் சட்டம் 750 பக்கங்கள் கொண்டிருக்கும். அதன் அமைப்பு இப்போது விரிவாக விவாதிக்கப்படும். இந்த விவாதமானது மதம் பற்றிய அறிஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள நிபுணர்கள் ஆகியோருடன் நடக்கும்.
“அரசியல் சட்டத்தின் ஒரு பாதி – 300 பக்கங்கள் – 2023இல் ப்ரயாக்ராஜில் நடக்கும் மகா மேளாவில் வெளியிடப்படும். இதற்கென தர்ம சம்ஸத் ஒன்று நடக்கும்” – இவ்வாறு டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்காக வெள்ளியன்று வாரணாசியிலிருந்து போன் மூலமாக ஸ்வாமி ஆனந்த் ஸ்வரூப் கூறினார்.
அரசியல் சட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பற்றி ஸ்வரூப் கூறியதாவது : ஒரு தனி அமைப்பின் மூலம் ஹிந்துக்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் மற்றும் சமண மதத்தினர் தங்கள் ஓட்டுரிமையைப் பெறுவர். தேசத்தில் ஒவ்வொரு ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கும் வசதியும் பாதுகாப்பும் வாழவும் உரிமை உண்டு. 16 வயது முடிந்தவர்களுக்கு ஓட்டுரிமை உண்டு. தேர்தலில் போட்டியிட 25 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பார்லிமெண்ட் ஆஃப் ரெலிஜின்ஸ்குக்கு 543 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். பிரிட்டிஷ் காலத்தில் இருந்த விதிகளும் கட்டுப்பாடுகளையும் இது நீக்கும். வர்ண அமைப்பின் படி அனைத்தும் நடக்கும்.
நன்றி : கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஆங்கில வார இதழ்
ட்ரூத் – தொகுதி 90, இதழ் 20 , 26-8-2022 தேதியிட்ட இதழ்
**
ஆங்கிலத்தில் உள்ள இதன் மூலம் கீழே தரப்பட்டுள்ளது.
TNN reports on Aug. 13, 2022 from Prayagraj, under the caption, “Uttar Pradesh: ‘Hindu Rashtra’ draft proposes Kashi as national capital”, as follows:
A group of 30 eminent seers and scholars has prepared the first draft of the constitution of the Hindu Rashtra, which was first proposed in February at the Dharma Sansad held in Prayagraj. The 32- page draft would be presented at the next Dharma Sansad to be held at Magh Mela–2023 in the Sangam city. The draft mentions in detail provisions in the field of education, defence, law and order, system of voting, rights of the head of state, etc. As per the constitution,Varanasi will replace New Delhi as the country’s capital.
Besides, there is a proposal to build a ‘Parliament of Religions’ in Kashi (Varanasi). It also proposes that Muslims and Christians will enjoy all the rights of a common citizen, barring the right to vote. Besides, every citizen would be given compulsory military training and agriculture would be made completely tax free.
The patron of the drafting committee is Swami Anand Swaroop, Shambhavi Peethadheeshwar and president of the Shankaracharya Parishad. It also consists of Kameshwar Upadhyay, chairman, senior advocate of Supreme Court BN Reddy, defence expert Anand Vardhan, Sanatan Dharma scholar Chandramani Mishra and Dr. Vidya Sagar, etc.
The cover page of the constitution carries the map of the proposed ‘Akhand Bharat’. Through the map, an attempt has been made to show that the countries, which have been separated from India will be merged with it in the future. The page also shows a saffron flag waving atop some temples. Inside is the picture of Shambhavi Mata while the pages carry, besides text, pictures of deities and great personalities of India, including Maa Durga, Lord Ram, Lord Krishna, Gautam Buddha, Guru Gobind Singh, Adi Shankaracharya, Chanakya, Veer Savarkar, Rani Laxmibai, Prithviraj Chauhan, Swami Vivekananda, etc. “The constitution of the Hindu Rashtra will be of 750 pages and its format will be discussed extensively now. Discussions will be held with religious scholars and experts from different fields. Half of the constitution (around 300 pages) will be released at the Magh Mela 2023 to be held in Prayagraj for which Dharam Sansad will be held,” Swami Anand Swarup told TOI over phone from Varanasi on Friday.
Talking of salient features of the constitution, Swaroop said: “There will be an executive system wherein Hindus, Sikhs, Buddhists and Jains will get the right to exercise their franchise. People of every caste will have the facility and security to live in the nation. In this, the right to vote will be given after completing the age of 16 years, while the age of contesting elections has been fixed at 25 years. Altogether 543 members will be elected for the Parliament of Religions. It will abolish the rules and regulations of the British period and everything will be conductedon the basis of the Varna System.”
Source Kolkata Weekly Truth -Issue dated 26-8-2022 (Vol 90 No 20)
Tags- Hindu Rashtra, Varanasi, ஹிந்து ராஷ்டிரம், காசி, வாரணாசி
இன்றைய நவீன உலகில் அறிவியல் வகிக்கும் பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்.
பணி, தகவல் தொடர்பு, போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான துறைகளில் அறிவியல் இல்லாமல் ஒன்றும் சிறப்பாக நடக்காது.
ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்.
இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.
எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசிரியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.
அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.
பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் பேராதரவு என்னை பிரமிக்க வைத்தது. 4-3-2011இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக
வெற்றி நடைபோடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.
இந்த நூல் ஏழாம் பாகம் – 157 முதல் 182 முடிய உள்ள 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும்.
ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.
இதன் முதல் பாகத்திற்கு திரு கே.ஜி. நாராயணன் அவர்கள் அணிந்துரை வழங்கிச் சிறப்பித்தார். எல்லா பாகங்களுக்கும் பொருத்தமாக அமைந்துள்ள அணிந்துரை அது.
முதல் பாகத்தில் அவரைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதை இங்கு வழங்குகிறேன்.
“இந்த அறிவியல் துளிகளுக்கு இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும் எனது சிறந்த நண்பருமான திரு கே.ஜி. நாராயணன் அணிந்துரை அளித்துள்ளது எனது நற்பேறே! எனது இனிய நண்பரும் விஞ்ஞானியுமான திரு தேசிகன் மூலம் அறிமுகமான அவர் டிஆர் டி ஓ என அழைக்கப்படும் Defene R&D Organisation (DRDO) இல் பல்லாண்டுகள் பணியாற்றியவர். இயக்குநராக இருந்து வழி காட்டியவர். நமது பாரத தேசத்தின் பாதுகாப்பிற்கான முக்கிய சாதனங்கள் உருவாக வழி காட்டியவர்.
விமான இயலில் குறிப்பிடத் தகுந்த துறையான வான் பயண மின்னணுவியலில் (Avionics) போர் விமானத்தின் கட்டுப்பாடு சாதனத் துறையில் தேஜஸ் (Tejas) என்ற இந்திய இலகு ரக போர் விமானத்தின் (Indian Light Combat aircraft) பறத்தல் கட்டுப்பாடுகள் (flight control) மற்றும் பறத்தல் ஒப்புச்செயலாக்கத்தில் (flight simulation) அவரது சாதனை குறிப்பிடத் தகுந்தது.
இந்திய விமானப் படையின் முன்னணிப் போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா வான்வழிக் கலங்களுக்கான (front line fighters of India Air Force and Unmanned Air Vehicles) பறத்தல் கட்டுப்பாடுகள் மற்றும் ஒப்புச் செயலாக்கத்திலும் அவரது பணி மகத்தானது.
பெரிய விஞ்ஞானி என்றாலும் கூட இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு அதற்கும் நேரம் ஒதுக்குபவர். பழகுவதற்கு எளிமையானவர். அறிவியல் துறையில் இளைஞர்கள் முன்னேறுவ்தை வெகுவாக ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருப்பவர். கிராமப்புறங்களில் அறிவியல் கல்வியை ஊக்குவித்து அதனைப் பரப்பும் அகஸ்தியா இண்டர்நேஷனல் பவுண்டேஷனில் ஆலோசகராக இருந்து அறிவியல் வளர்ச்சி முன்னேற்றத்தில் இன்றும் அவர் ஈடுபட்டிருப்பது ஒன்றே அவரது அறிவியலைப் பரப்புவதி அவருக்குள்ள ஆர்வத்தை எடுத்துக் காட்டச் சிறந்த சான்றாகும்.
அவரை அணுகி அணிந்துரை நல்க வேண்டியபோது மிகவும் மனமுவந்து அற்புதமான உரையை நல்கியுள்ளார். அவருக்கு எனது உளம் கனிந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.”
இப்படிப்பட்ட உயரிய, ஆகப் பெரும் விஞ்ஞானி தந்த அணிந்துரையில் ஒரு பகுதியை இங்கு வழங்குகிறேன்.
“அறிவியல் முன்னேற்றங்களால் மனித வாழ்க்கை மிகவும் – அளவிட முடியாத முறையில் – மாற்றப் பட்டிருக்கிறது. பொறியியல் துறையிலும் மருத்துவத் துறையிலும் வியக்கம் தரும் பெரும் சாதனைகள் மனிதனின் அன்றாட வாழ்வை மிக ஆழமான முறையில் மாற்றியிருக்கின்றன. அதே சமயத்தில் பிரபஞ்சம் எப்படி உருவாகியது போன்ற அன்றாட வாழ்விலிருந்து வெகு தூரத்தில் உள்ள கேள்விகளுக்கும் சில சின்ன சின்ன விடைகள் கிடைத்திருக்கின்றன. ஐந்தாயிரம் ஆண்டுகளாக அறிந்து கொண்ட பொருள்களைவிட பல மடங்குகள் அதிகமாக கடந்த முன்னூறு ஆண்டுகளில் அறிவியல் மூலமாக அறிந்து கொண்டிருக்கிறோம். இந்த மகத்தான முன்னேற்றங்களைப் பற்றி முடிந்தவரை தெரிந்து கொள்வது நாம் எல்லோருக்கும் தவிர்க்க முடியாத தேவை ஆகி விட்டது
திரு நாகராஜன் அவர்களின் அறிவியல் துளிகள் இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் முயற்சிகளில் தலையாயதாகத் திகழ்கிறது
நூற்றுக்கணக்கான அறிவியல் துளிகளை அனைவரும் அறியக்கூடுமாறு அன்றாட பழக்கத் தமிழில் பகர்ந்து கொண்டிருக்கிறார். தமிழருக்கும் தமிழுக்கும் நாகராஜன் செய்திருக்கும் பாராட்டுக்குரிய பெரும் சேவை இது.
மஹா விஞ்ஞானி நியூட்டன் சொல்கிறார்:
“நான் மற்றவர்களுக்கு எப்படித் தெரிகிறேன் என்று தெரியாது. ஆனால் எனக்கு நான் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறு பையன் போல் தான் தோன்றுகிறேன். பல கோடிக்கணக்கான விந்தைகள் மூழ்கியிருக்கும் பரந்த கடலுக்கு எதிரில் மணலில் கிடக்கும் சில சிப்பிகளையும் வண்ணக் கற்களையும் கண்டு வியப்பு அடைந்து கொண்டிருக்கிறேன்” அதே கருத்தை “கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு” என்று ஔவையார் சொன்னார்கள். அறிவியல் துளிகளும் அது போன்ற மற்ற முயற்சிகளும் எல்லோர்க்கும் கை மண் அளவாவது அறிவியல் அளிக்கின்றன. நம் நன்றிக்கும் பாராட்டுகளுக்கும் உரியவர் திரு நாகராஜன்.
திரு. கே.ஜி.நாராயணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன்.
இந்த புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Media வின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.
அறிவியல் காட்டும் வழியில் முன்னேறி பாரதத்தை உலகின் வல்லரசுகளில் முதன்மை அரசாக ஆக்கிக் காட்டுவோம். அதற்காக அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்.
நன்றி.
பங்களூர் ச.நாகராஜன்
9-3-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
குஜராத்திலுள்ள கிர்னார் மலை மிகவும் சிறப்புடைய இடம். மெளரியர் , குப்தர்,சக வம்ச அரசர்கள் என பல வம்ச அரசர்களின் கல்வெட்டுகள் பாறைகள் தோறும் செதுக்கப்பட்ட பெருமை உடையது. அங்கேயுள்ள ருத்ரதாமன் (RUDRADAMAN INSCRIPTION) என்னும் சக வம்ச அரசனின் கல்வெட்டு சம்ஸ்க்ருத மொழியில் உள்ள சிறப்புடைத்து. ஏனெனில் பொது ஆண்டு (கி.பி) 150 தேதியுடைய இந்தக் கல்வெட்டு ஸம்ஸ்க்ருத மொழியில் உள்ள நீண்ட கல்வெட்டு ஆகும். இதில் 500ஆண்டு வரலாறு கிடைக்கிறது. அத்தோடு மேலும் சில ரகசியங்களை வெளிப்படுத்துகிறது.அதாவது அதுவரை சம்ஸ்க்ருத மொழியில் உள்ள விஷயங்கள் ஓலைச் சுவடிகளிலும் , மரப்பட்டைகளிலும் மட்டும் எழுதப்பட்டன. ருத்ரதாமன் முதல் தடவையாக அதைக் கல்வெட்டில் வடித்தான். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்குக் கோடியிலுள்ள குஜராத்தில் சம்ஸ்க்ருத மொழி எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்தது என்பதையும் இது காட்டும். இது பழந் தமிழ்க் கல்வெட்டுகளைப் போல பிராமி லிபியில் /எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.
ஜூனாகட் என்னும் குஜராத் மாநில நகருக்கு அருகிலுள்ள கிர்னார்(GIRNAR INSCRIPTION) மலை இந்துக்கள், பெளத்தர்கள் , சமணர்கள் ஆகிய மூன்று மதத்தினருக்கும் புனிதமான கோவில்களை உடையது . மன்னர் அசோகன், சக வம்ச அரசன் ருத்ரதாமன், குப்த வம்ச அரசன் ஸ்கந்த குப்தன் ஆகியோரின் கல்வெட்டுகள் இங்கே செதுக்கப்பட்டுள்ளன. இது ஒரு அற்புதம். சுமார் 800 ஆண்டுக்காலம் ஆண்ட மூன்று வம்ஸங்களும் ஏன் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தன என்பதை எண்ணி எண்ணி வியக்காமல் இருக்க முடியாது. உலகில் வேறு எங்கும் இப்படி ஒரு இடம் இருக்குமா என்பது சந்தேகமே.
ருத்ரதாமன் கல்வெட்டு அழகிய சம்ஸ்க்ருத உரைநடையில் அமைந்துள்ளது.
பாசனத்துக்கும் குடிநீருக்கும் பயன்பட்ட ஸுதர்சன (SUDARSANA LAKE) என்ற ஏரியின் பராமரிப்பு பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது. அந்தக் காலத்தில் மக்களுடைய தண்ணீர் தேவை பற்றி மன்னர்கள் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தனர் என்பதும், ஏரி உடைப்பை அடைத்த திறமையான என்ஜினீயர்கள் பற்றியும் இக்கல்வெட்டு பேசுகிறது. மெளரிய சந்திரகுப்தன் காலத்தில் (கி.மு .321-297) அவருடைய மாகாண கவர்னர் வைஷ்யர் புஷ்ய குப்தாவினால் இந்த ஏரி உருவாக்கப்பட்டது.. பின்னர் மன்னரின் பேரனான அசோக சக்ரவர்த்தி காலத்தில் யவனர் துஷாபிவினால் மேலும் செப்பனிடப்பட்டது . ஆயினும் ருத்ரதாமன் காலத்தில் வீசிய கடும் புயல்
மழையில் ஏரி உடைந்து சேதமானது. அதைச் செப்பனிடும் விஷயத்தை விளக்கமாக விளம்பும் கல்வெட்டு இது.
இந்தக் கல்வெட்டை ஆராய்வோர் மேலும் பல அற்புத உண்மைகளைக் கண்டுள்ளனர். இது 500 ஆண்டு கால வரலாற்றைக் கூறுவதால் இந்துக்கள் எந்த அளவுக்குத் துல்லியமாக வரலாற்றுக் குறிப்புகளை நினைவு வைத்திருந்தனர் என்பது தெரிகிறது. அதுமட்டுமல்ல ருத்ராதமனின் புகழ்பாடும் பகுதி (பிரசஸ்தி) அவன் காவியம் செய்வதில் வல்லவன், போர்க்களம் தவிர வேறு எங்கும் உயிர்வதை செய்யாதவன், மக்கள் அனைவரும் அவனை நேசித்தனர், அவன் மகாராஷ்டிரம் வரை ஆண்டவன் என்றும் கூறுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள இந்தியாயவைக் காட்டும் இடம் இது, ஜூனாகட் (JUNAGADH) நகரின் பழைய பெயரை கிரிநாகர என்றும் கிர்னார் மலையின் பழைய பெயர் ஊர்ஜயத் என்றும் சொல்கிறது கல்வெட்டு.
கல்வெட்டு சொல்லும் செய்தி: புயல் மழை வெள்ளத்தில் சுதர்சன ஏரி இருந்த இடம் தெரியாமல் போகவே மக்கள் சாகுபடி பற்றியும் விளைச்சல் பற்றியும் கவலைகொண்டனர். ருத்ரதாமன் பலரை அனுப்பியும் ஏரி உடைப்பை அடைக்க முடியவில்லை. . குலைப என்பவனின் மகனான பஹ்லவன் சுவிசகனை செளராஷ்டிர பிரதேசத்தின் கவர்னராக ருத்ரதாமன் நியமித்தான்; இறுதியில் அந்தப் பஹ்லவன் முயற்சியால் சுதர்சன ஏரி அடைக்கப்பட்டது
இருபது நீண்ட வரிகளில் செதுக்கப்பட்டுள்ள இந்த அதிசயக் கல்வெட்டு நமக்குக் காட்டும் உண்மைகள் என்ன?
1.இந்துக்களுக்கு வரலாற்று உணர்வு இல்லை என்று சொல்லும் மேலை நாட்டினரின் தலையில் குட்டுவைக்கும் சாசனம் இது. ஏனெனில் 500 ஆண்டுக் காலத்தில் ஒரு ஏரிக்கு மட்டும் நிகழ்ந்த வரலாற்றை இயம்பும் ரிக்கார்ட் (RECORD) இது.
2.மேலும் 2000 ஆண்டுக்கு முன்னர் ருத்ராதமன் ஆண்ட பகுதிகளைச் செல்லுகையில் அவன் தென்னாட்டை ஆண்ட சதகர்ணியைத் தோற்கடித்த விஷயத்தையும் சொல்கிறது.
3.அதுமட்டுமல்லாமல் இந்துக்களின் பொறியியல் திறமைக்கும் சான்று பகர்கிறது. புராணத்தில் இந்துக்களின் என்ஜினீயரிங் (ENGINEERING FEATS) சாதனைகள் பற்றி நாம் படித்தாலும் கல்வெட்டு முதலியனதான் வரலாற்றுச் சான்றுகளாக ஒப்புக்கொள்ளப்படுகிறது.
பகீரதன் என்ற மாமன்னன் கங்கை நதியைப் புதிய வழியில் திருப்பிவிட்டு பாசனத்துக்கு உதவியதை நாம் அறிவோம். அதை பார்த்து அகஸ்தியர், காவிரி நதியை, கேரளத்தில் பாய்ந்து கடலில் வீணாவத்தைத் தடுக்க, தமிழ்நாட்டுக்குள் திருப்பிவிட்டதையும், விந்திய மலை வழியாக சாலை அமைத்ததையும், தமிழ் மன்னர்களை வியட்நாம் வரை அழைத்துச் சென்றதையும் நாம் அறிவோம் (இதை புராண பாஷையில் அகஸ்தியர் விந்தியமலைய கர்வ பங்கம் செய்தார் என்றும் அகஸ்தியர் கடல் நீரைக் குடித்தார் எனும் சொல்லுவர்). இதை எல்லாம் அரைவேக்காடுகள் புராணக்கதைகள் என்று ஒதுக்கித் தள்ளும். அத்தகையோரின் வாயை அடைக்கும் ஆற்புதக் கல்வெட்டு கிர்னார் மலை ருத்ரதாமனின் கல்வெட்டு. இந்தியாவின் மேற்குப் பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்க்ருத மொழி இவ்வளவு வளர்ச்சி கண்டதையும் எண்ணி வியக்கலாம்..
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர்.
ஆன்மீகத்தை உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்.
பத்திரிகை துறையில் ஒரு புது நெறியைக் காட்டியவர்.
1998 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று, “கொடி ஏற்றியாச்சா?” என்று கேட்டு ‘ஆம்” என்ற பதிலைக் கேட்ட பின்னர் உயிர் துறந்த தேசபக்தர்.
எனது தந்தையார் தினமணி திரு வெ. சந்தானம் அவர்களுக்கு இந்த நூல் சமர்ப்பணம்.
ச. நாகராஜன்
என்னுரை
ஹிந்து மதத்தின் ஆணி வேராக அமைபவை வேதங்கள், இதிஹாஸங்கள், உபநிடதங்கள் மற்றும் சாஸ்திரங்கள்.
இவை விளக்கும் மர்மங்கள் கணக்கிலடங்கா.
இவற்றை முற்றிலுமாகப் படித்து உணர ஒரு ஆயுள் போதாது.
இவற்றின் சாரத்தை எங்கே படிக்கலாம்? இந்த சிக்கலான கேள்விக்கு சிறந்த விடையாக அமைவது யோக வாசிஷ்டம் என்ற நூல்!
வாழ்க்கையில் நாம் அறிய வேண்டிய அனைத்தின் சாரமும் இதில் உள்ளது; அத்துடன் இன்றைய நவீன அறிவியல் கூறும் உளம் சார்ந்த உண்மைகளும், அதீத உளவியல் பற்றிய வியத்தகு செய்திகளும் அன்றே இந்த நூலில் கூறப்பட்டிருப்பது நம்மை பிரமிக்க வைக்கும்.
விதியா, மதியா என்ற கேள்விக்கு இந்த நூல் தரும் விடை நம்மை வாழ்வியலில் முன்னேற வைக்கும்.
பல காலமாக ஆர்வத்துடன் இந்த நூலைப் பயின்று வருபவன் நான்.
ஆகவே இது பற்றிய கட்டுரைகளை ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் இதழிலும், www.tamilandvedas.com ப்ளாக்கிலும் எழுதி வந்தேன். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
இந்தக் கட்டுரைகளை வெளியிட்ட ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ் மற்றும் லண்டன் திரு சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது உளம் கனிந்த நன்றி.
இந்த நூலை அழகுற அமைத்து வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!
கட்டுரைகளாக வெளி வந்த போது இவற்றைப் படித்து என்னை மேலும் எழுத ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி!
சான்பிரான்ஸிஸ்கோ. ச. நாகராஜன்
15-8-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.