MADRID CITY TOUR – HELPFUL TIPS (Post No.11,236)

Picture of Snowy white Julia at Colombus Square

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,236

Date uploaded in London – 3 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Picture of Prado Art Museum

We were in Madrid in the last week of August 2022. Thank God there was no rain in Spain. The day we left Madrid, capital of Spain, it started raining. We stayed in Novotel Hotel in Central Madrid which was good and decent. They cleaned the room every day and changed the towels. The breakfast had a variety of food, but not much for strict vegetarians like me. Pancakes, croissant, and everything has egg. I took some oily rice and started eating it commenting ‘tasty, yummy’, but one of family members said it may be chicken broth and not oil. I left the plate and took another one. Vegetarians have less choice in western countries. They charge a huge amount for our breakfast; at least 15 pounds per head.

Another warning about so called vegetarian restaurants in Western countries. We went to a “Vegetarian” restaurant; as usual the waiter placed the Menu cards/booklets on our table. One of our family members quickly went through the book and got surprised to see the last page, where pictures/emblems of crab, fish, sea shells etc were shown. The person warned all of us before ordering. For them even chicken is vegetarian, leave alone the egg.

Vegan restaurants are worse than the so called Veggys. They serve leaves and bread and charge you too much. More over Vegan concept is Anti Hindu. Vedic Rishis/saints used only Madhuparka to honour the visitors. From Vedic days we have been using Milk and Honey. There was no Vegan concept in ancient India. It is for sick people who have intolerance to milk.

Let me come back to Madrid; Prado Museum in Madrid has valuable paintings of famous painters; but for a Londoner like me , it was not anything important. We have more famous paintings in London galleries. For children it was “boring”. So we skipped Prado museum. Someone told me the Archaeological museum has something to link India and Spain. Unfortunately, I was the only one in our team interested in it. It was “boring” for others; so we skipped it.

Like every European city, Madrid has City Coach Tours with running commentaries in various languages. It was a hop on and hop off bus. You can get down at any point and take another coach at an interval.  Spain is a place where you will see  NO ‘NO’ NO English boards or signs. So better learn a few Spanish words before going to Spain. Spanish fanatics!

There are two different tours, but the ticket is valid for both the tours. We could not board many coaches because we were in six in number with children and a Pram (buggy). So the drivers said ‘Next coach, next coach’. We got some places in the third coach. Third time lucky.

We covered bla, bla, bla, bla. Sorry I will say it in Spanish- Museo del Prado, Puerta de Alcala, Barrio de Salamanca, Plaza de Colon, Plaza de Cibeles, Gran Via 14, Gran Via 30, Gran Via 54, Plaza de Espana, Princesa Esqu. Alberto Aguilera, Plaza de Moncola, Teleferico, Templo de Debod, Puerta de San Vicente, Puente de Segovia, Paseo Pontonese- Madrid Rio, Puente de Toledo, Puerta de Toledo, Granvia des Franscisco,C/Atocha 116, Jardin Botanico, Museo del Prado (circle complete)

Did you understand anything? No, No, No

Neither did I.

We must start a charity to teach English to Spanish people. Even the leaflet they gave us on the coach only has these names. But if you google each name, you will get something in English.

We went to Chinese, Italian and Spanish restaurants. Each time we googled the things we wanted and showed the mobile phone or I pad screen to them. They understood it! Most importantly we googled No Fish, No egg, No meat; V R Vegetarians.

When I was in Lisbon, Capital of Portugal,  a few years ago, I went to Hare Krishna Restaurant, where you get pure veggy food. Madrid also has one Hare Krishna restaurant. But our tight schedule didn’t allow us to visit it; moreover, it was closed for two days every week. So please check before you go.

El Retiro Park

On the first day of visit to Madrid we visited El Retiro park with lot of statues, fountains and a big lake with rowing boats. One can walk leisurely for miles and miles and enjoy fresh air.

If one stays in Madrid for a few days the best way to go about is to buy Metro train tickets and visit each place by train. If one has a Metro map and important locations or land marks it will be easy.

We travelled by Metro trains for two days to visit Royal Palace and shopping centres. (I wrote about Royal Palace visit yesterday)

We did mini shopping near by our hotel. Novotel Hotel in central Madrid is near Retiro station.

xxx

Now to the point. What did we see during our coach tour?

One place was very visible with a huge snowy white statue.

Julia, Snowy White Statue in Columbus Square

Plaza de Colón (which is Spanish for Columbus – you can see him there, on top of his pillar) is an important junction in the centre of Madrid. This monument dates from 1892.

Julia, the serene, towering snowy-white head by Spanish sculptor Juame Plensa, at 12m tall dwarfing Columbus, is equally beautiful no matter where you view her from.

In front of Colón are the Gardens of Discovery where you will see, a statue of Admiral Blas de Lezo, scourge of the British Navy. He defeated the British Navy 300 years ago. He was known as the “half-man” as his wounds resulted in him losing an eye, an arm and a leg. He perceived his wounds and physical limitations as medals, refusing to wear an eye patch to hide his blind eye Spanish and not English is spoken in South America except Brazil, where Portuguese is spoken. Both these countries plundered the world like the English.

(I saw these statues only from the Coach and took pictures with my I Pad)_

Prado Museum

The Prado Museum is one of the most visited sites in the world, and is considered one of the greatest art museums in the world. The numerous works by Francisco Goya, the single most extensively represented artist, as well as by Hieronymus BoschEl GrecoPeter Paul RubensTitian, and Diego Velázquez, are some of the highlights of the collection. Velázquez and his keen eye and sensibility were also responsible for bringing much of the museum’s fine collection of Italian masters to Spain, now one of the largest outside Italy.

The collection currently comprises around 8,200 drawings, 7,600 paintings, 4,800 prints, and 1,000 sculptures, in addition to many other works of art and historic documents. As of 2012, the museum displayed about 1,300 works in the main buildings, while around 3,100 works were on temporary loan to various museums and official institutions. The remainder were in storage

(I saluted the museum through the window of my coach)

The Royal Botanic Garden in Madrid houses over 5,000 different types of flowers and plants, and is one of the capital’s most enjoyable green lungs next to the Prado Museum.

Xxx

Templo de Debod

This is an ancient temple of Egypt, dismantled and rebuilt in the centre of Madrid. When Aswan dam was built across the River Nile, many monuments were facing danger of going under the water. UNESCO saved them by appealing to several countries. And Egypt donated this temple to Spain in 1968.

Xxx

Puerta de Toledo

This triumphal archway, located between the districts of La Latina and Embajadores, was erected to commemorate the arrival of King Ferdinand VII ‘El Deseado’ in Madrid

Xxx

Puerta de Alcala

This is one of the most well-known monuments in Madrid. Built between 1769 and 1778 under the orders of King Carlos III, it was designed by Francisco Sabatini and erected as a triumphal arch to celebrate the arrival of the monarch at the capital.

Xxx

Plaza de Espana

Right in the centre of the square is the monument to Miguel de Cervantes, created at the same time as the square itself.

In front of the statue of Don Quixote and Sancho Panza, a pond of rectangular form is located that forms one of the best known views of the 

If there is no rain in Spain, your trip will shine without any pain.

Picture of Retiro Park

–subham—

Tags- Madrid Tour, Spanish, Vegan, Veggy, Novotel hotel, Prado Museum

டயபடீஸ் ஊட்டச் சத்து சர்ச்சை முடிவுக்கு வந்தது-2(Post.11235)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,235

Date uploaded in London – –    3 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

டயபடீஸ் சம்பந்தமான 5 ஊட்டச் சத்து பற்றிய  சர்ச்சை கருத்துக்கள் முடிவுக்கு வந்து விட்டன!

பகுதி – 2

மூலம் : கிம்பர்லி பி. ஜுக்ஸ்டாட் Ph D (Kimberly B. Bjugstad PhD

தமிழில் : ச. நாகராஜன்

3. உணவு லேபிள்களில் உள்ள ‘நிகர கார்போ ஹைட்ரேட்’ (NET CARB) எனத் தரப்படும் எண்ணிக்கை அர்த்தமுள்ளதா?

1929ஆம் ஆண்டு ஆர்.டொ. லாரன்ஸ் மற்றும் ஆர் ஏ மக்கன்ஸி (RD Lawrence and RA McCance) ஆகிய இருவர் பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னலில் நிகர கார்போஹைட்ரேட் (NET CARB) என்ற வார்த்தையை புதிதாக உருவாக்கினர்.

1972இல் ராபர்ட் அட்கின்ஸன் எழுதிய ‘டாக்டர் அட்கின்ஸ் உணவுத் திட்ட புரட்சி (Robert Atkins book “Dr. Atkins’ Diet Revolution”) என்ற நூல் வெளியாகும் வரை இந்த வார்த்தை அகராதியில் வரும்படி அவ்வளவு பிரபலமாகவில்லை.

உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டில் பைபரும் இனிப்பு ஜீனி ஆல்கஹாலும் (fiber and sugar alcohols) உள்ள அளவு கழிக்கப்பட்டு நிகர கார்போ ஹைட்ரேட் என பெரும்பாலான லேபிள்களில் தரப்படுகிறது. ஆகவே கழிக்கப்பட்ட கார்போ ஹைட்ரேட் அளவை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இன்னும் அதிகம் சாப்பிடலாம் என்று ஒருவரை எண்ண வைக்கிறது.

நிபுணர் கூற்று : உணவு லேபிள்களில் ‘கார்போ ஹைட்ரேட்’ மற்றும் ‘நிகர கார்போஹைட்ரேட்’ என்று குறிப்பிடப்பட்டதைப் படிக்கும் போது இரண்டு பிரச்சினைகள் எழுகின்றன என்று நிபுணர் எவர்ட் உறுதியாகச் சொல்கிறார்.

முதலாவதாக எல்லா பைபர் உணவுகளும்  சமமானதில்லை. கரையும் தன்மை உடைய பைபரானது தருவது போல கரையும் தன்மை இல்லாத (insoluble) பைபரானது கார்போஹைட்ரேட்டைத் தருவதில்லை. ஊட்டச்சத்தைக் காட்டும் லேபிள்கள் பைபரில் எவ்வளவு கரையும் எவ்வளவு கரையாதது என்பதைச் சொல்வதில்லை.

அடுத்து, இனிப்பு ஆல்கஹால் சத்து (Sugar alcohols) இனிப்பிலிருந்து (Sugar) முற்றிலுமாக வேறுபட்டதில்லை. இது இரவு உணவுக்கு முன்னும் பின்னும் உள்ள குளுகோஸ் அளவுகளைப் பாதிக்கக் கூடும். (glucose before and after eating, respectively).

மேலும் வெவ்வேறு வகையான் இனிப்பு ஆல்கஹால் வெவ்வேறு கலோரிகளைக் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக இனிப்பு இல்லாத பசையில் (Sugaless Gum) நிறைய இருக்கும் xylitol -இன் கலோரி அளவு  ஒரு கிராமுக்கு 2.6 ( 2.6 cal/gram ). அதே சமயம் இனிப்பு அற்ற சாக்லேட்டில் உள்ள malitol என்பது ஒரு கிராமுக்கு 2.1 கலோரி என்ற அளவை மட்டுமே கொண்டிருக்கும். (2.1 cal/gram)

இன்சுலின் டோஸ் தரப்படும் போது இனிப்பு ஆல்கஹாலையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர் எவர்ட் யோசனை கூறினார். இந்த லேபிள்களைப் படிக்கும் போது அவர் தரும் இன்னொரு உதவிக் குறிப்பு – இன்னும் அதிக பைபரை உண்ணும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்பது தான். அதாவது உணவில் அதிகம் பைபர்; மற்றவை குறைவாக!

4.  கெடோஜெனிக் உணவுத் திட்டம் (ketogenic (KETO)) அதாவது குறைந்த கார்போஹைட்ரேட் உணவுத் திட்டம் பற்றி என்ன அறிய வேண்டும்?

குறைவான கார்போஹைட்ரேட் உணவுகளுக்கான பொதுவான விதி என்னவெனில் மொத்த கொழுப்பு சக்தியிலிருந்து 50% முதல் 80% வரை பெறுவது தான். மீதி கலோரிகள் புரோடினிலிருந்து பெறப்படும். கார்போஹைட்ரேட் குறைவாக பெறப்படும்.

கெடோஜெனிக் உணவுகள் தரும் விவரம் இது :- ஒரு நாளைக்கு 20 முதல் 50 கிராம் வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஒரு கோப்பையில் உள்ள அரிசியை விடக் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். கெடோ உணவுகள் டயபடீஸ் உள்ளவர்களிடமும் இதர பொது மக்களிடமும் பிரபலமாக உள்ளது.

நிபுணர் கூற்று : நிபுணர் எவர்ட் மிகக் குறைவான கார்போஹைட்ரேட்/ கெடோ (VLCKD – Very low Carb/Keto diet) உணவுத்திட்டத்தால் என்ன நடக்கிறது என்பதை குழுமி இருந்தவர்களிடம்  விளக்கினார்.

முதல் 3 முதல் 6 மாதங்களுக்கும் டயபடீஸ் உள்ளவர்கள் எடை குறைந்து போவதை  க்ளைசெமியா குறைவதையும் அனுபவிப்பர். A1C அளவு கூடுவதைத் தெரிந்து கொள்வர். இன்சுலின் அளவு மற்றும் மருந்து அளவையும் அவர்கள் குறைத்துக் கொள்ளலாம். ஆனால் இவை நீடித்து இருக்காது.

5 முதல் 12 மாதங்களுக்குள் எல்லா நன்மைகளும் குறையும் 12 மாதங்களுக்குள் இப்படிப்பட்ட உணவுத்திட்டத்தால் நன்மை ஒன்றும் விளையாது.

ஒரு மருத்துவத் துறை நிபுணரின் மேற்பார்வையில், ஒரு குறுகிய காலத் திட்டமாக டயபடீஸ் உள்ள நிறைய பேர்கள் இந்த VLCKD  (Very low Carb/Keto diet) எனப்படும் குறைந்த கார்போஹைட்ரேட்/ கெடோ உணவுத் திட்டத்தைப் பின்பற்றலாம்.  அவரது இன்சுலின் தேவைகளையும் லிபிட் மாறுதல்களையும் (Changes in lipid panels), எலக்ட்ரோலைட் அளவு மாறுதல்களையும் நிபுணர் கவனித்துக் கொண்டே இருப்பார். அத்துடன் குடலில் உள்ள மைக்ரோஃபோரா கூட்டுச் சேர்க்கையையும் (micorflora composition in the gut) அவர் கவனிப்பார். (இதில் மாறுதல் இருப்பின் அது மலச்சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும்).

முழங்கால் அறுவை சிகிச்சை செய்ய ஒருவருக்கு அவசியம் நேர்ந்தது எனில் அவருக்கு எடை குறைப்பு செய்வது அவசியமாகலாம். அப்போது  இந்த VLCKD நல்ல ஒரு திட்டமாக அவருக்கு இருக்கும்.

மற்றவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது. ஏனெனில் இதற்கான தகுந்த ஆதாரங்கள் இதுவரை இல்லை.

 5. செயற்கை இனிப்பூட்டிகள் (Artificial Sweeteners) உங்கள் ஆரோக்கியத்திற்குக் கேடு பயக்குமா?

இந்தக் கேள்விக்கு எளிதான விடை இல்லை. செயற்கை இனிப்பூட்டிகளை (Artificial Sweeteners) உணவில் இனம் காண்பது கடினம். இதில் இன்னும் சிக்கல் என்னவெனில் இவை தனியாகச் சாப்பிடப்படுவதில்லை. மற்ற உணவு வகைகளுடனும் பானங்களுடனும் கலக்கப்பட்ட நிலையில் சாப்பிடப்படுவதால் சிக்கல் ஏற்படுகிறது.

2017இல் கனடிய மெடிகல் அசோஸியேஷன் ஜர்னலில் பிரசுரிக்கப்பட்ட ஆய்வறிக்கை, இந்த செயற்கை இனிப்பூட்டிகள் தரும் நன்மைகள் பற்றி ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லை என்று குறிப்பிடுகிறது. மாறாக இவை அதிக கார்டியோ மெடபாலிக் அபாயத்தை ஏற்படுத்துவதோடு நாளடைவில் பாடி மாஸ் இண்டெக்ஸையும்  (Body Mass Index BMI) கூட்டுகிறது.

நிபுணர் கூற்று:  செயற்கை இனிப்பூட்டிகளைப் பற்றிய தெளிவான வழிகாட்டுதல் இல்லாத நிலையில் இவற்றிற்கு பதிலாக தண்ணீர், காபி அல்லது இனிப்புச் சேர்க்காத தேநீர் ஆகியவற்றை ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்ளலாம் என்று நிபுணர் எவர்ட் தனது அபிப்ராயத்தைக் கூறுகிறார்.

கடைசி கடைசியாக பெறப்படுவது இது தான் : டயபடீஸ் உள்ளவர்கள் தன்கள் அடைய வேண்டிய இலட்சிய இலக்கு என்ன என்பதை முதலில் வகுத்துக் கொள்ள வேண்டும். என்ன உணவுத் திட்டத்தை தான்  மேற்கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு ஒத்து வரும் ஒரு திட்டத்தை மேற்கொள்ளுங்கள். டயபடீஸ் நிலை மாறும் போது உங்கள் திட்டத்தையும் மாற்றுங்கள். திறந்த மனதுடன் டயபடீஸை அணுகி அதைத் தீர்க்கும் வழியைக் காணுங்கள்!

மூலம் : கிம்பர்லி பி. ஜுஸ்டாட் Ph D (Kimberly B. Bjugstad PhD)

நன்றி : Kimberly B. Bjugstad PhD

**

புத்தக அறிமுகம் – 45

ஸம்ஸ்கிருத சுபாஷிதம்  200! 

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்

1. ஸம்ஸ்கிருதத்தின் உயர்வு; அதில் சுபாஷிதத்தின் பெருமை!

2. தேவ நிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம்!

3. நிகழ்காலத்தில் வாழ்க!

4. சிறந்த தானம் மூன்று, விடக் கூடாதவர்கள் மூவர், மதிப்பு போடவே முடியாதவர் மூவர்…!

5. அன்னமும் வெள்ளை நிறம், கொக்கும் வெள்ளை நிறமே, இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

6. பதினெட்டு புராணங்களின் சாரம் இரண்டே வரிகளில்!

7. சந்தோஷம் அடைவது எப்படி?

8. என்னே விதியின் கொடுமை!

9. நுண்ணறிவு நான்கு வழிகளில் கிடைக்கிறது!

10. ஆன்ம முன்னேற்றத்திற்காக உலகையே தியாகம் செய்க!

11.நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்க! நாளை என்ன நடக்குமோ, யார் அறிவார்!

12. நாக்கே செல்வத்தைத் தரும் அல்லது சிறைக்கும் இட்டுச் செல்லும்!

13. எப்போதும் சந்தோஷமாக இல்லாத இருவர்; எப்போதும் ஸ்வர்க்க புகழை விட அதிகம் கொள்ளும் இருவர்!

14. நரகத்திற்குச் செல்பவன் யார்? ஸ்வர்க்கமும் போற்றுபவன் யார்?

15. காட்டிலே அனாதையாக கை விடப்பட்டாலும் விதி இருப்பின் அது குழந்தையைக் காக்கும்!

16. கோடி விஷயங்களை விட்டு விட்டு ஹரி பஜனைக்குச் செல்!

17. கிடைத்தற்கரிய ‘பஞ்ச ஜகாரம்’, நல்ல வாழ்க்கைக்கு வழி!

18. உயர்ந்தவர்களின் உள்ளம்!

19. எவனால் உலகம் ஜெயிக்கபடுகிறது?

20. தேவர்களே கவிஞர்களாகப் புவியில் இறங்குகின்றனர்!

21. உருவத்தைக் கண்டு எடை போடாதே!

22. நிலத்திற்கு அழகு விவசாயம்! பெண்ணுக்கு அழகு நல்ல கணவன்!!

23. வாழும் வழி காட்டும் சுபாஷிதம்!

24. பிறரிடமும் தன்னைப் போன்ற குணங்கள் இருப்பதைக் கண்டு மகிழ்பவன் அரிதே தான்!

25.தோட்டத்தில் நுழைந்தாலும் கள்ளிச் செடியையே தான் தேடும் ஒட்டகம்!

26. எவன் உண்மையான சாது?

27. முயற்சியே வெற்றி தரும்!

28. ஒழுக்கமே எல்லா இடத்திலும் செல்வமாகும்!

29. நல்ல ஒரு நண்பனின் குணங்கள் யாவை?

30. சுபாஷிதங்களின் பெருமை!

31. பிரம்மாவினால் கூட ரகசியம் கேட்கப்பட மாட்டாது! எப்போது?!

32. ஒருவனுக்குப் பிடித்திருந்தால் அதுவே அவனுக்கு அழகு!

33. காக்கைகள் கூவும் போது குயில் ஓசை எடுபடுமா?

34. ஸ்வர்க்கத்தை விட உயரத்தில் இருக்கும் இருவர் யார்?

35. மலையின் உயரம், கடலின் ஆழம் ஆகிய இரண்டும் ஒரு புத்திசாலியிடம் உள்ளது!

36. பிறப்பினால் அடைவதல்ல உயர்நிலை! குணங்களினால் அடையப்படுவது அது!

37. யானையே சிங்கத்தின் பலத்தை அறிய முடியும்: ஒரு பலசாலியே இன்னொரு பலசாலியை அறிய முடியும்!

38. கல்வியறிவு பெறுவதைத் தடுக்கும் ஆறு தடைகள் யாவை?

39. ஈனர்களை ஒரு போதும் அண்டாதே!

40.குவித்த கரங்களில் இருக்கும் மலர்களின் வாசனை!

41. ஹரியோ, ஹரனோ யாரானாலும் நெற்றியில் எழுதியதை அழிக்க முடியாது!

42. கள் குடித்த குரங்கைத் தேள் கொட்ட, பேயும் பிடித்தால் அது போடும் ஆட்டம், அடடா!

43. சுபாஷித நூல்களின் பட்டியல்! – 1

44. சுபாஷித நூல்களின் பட்டியல்! – 2

45. முடிவுரை

சுபாஷித ஸ்லோகங்களின் முதல் குறிப்பு அகராதி

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

குமரி முதல் இமயம் வரை உள்ள பாரத தேசத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக ஏராளமான கவிஞர்கள் இயற்றியுள்ள சுபாஷிதங்கள் லக்ஷக்கணக்கில் உள்ளன.

இவற்றைத் தொகுப்பதில் ஆர்வம் ஏற்பட்டு சுமார் 30000 சுபாஷிதங்களைத் தொகுத்தேன்.

சிறந்த சம்ஸ்கிருத சுபாஷிதங்களுக்கான தமிழ் அர்த்தம் கொண்ட நூல்கள் பெரிய அளவில் இல்லை.

இந்தக் குறையை நீக்க அவ்வப்பொழுது சுபாஷிதங்களின் அர்த்தத்தை தமிழில் சிறு கட்டுரைகளாக www.tamilandvedas.com இணையதள ப்ளாக்கில் எழுதி வந்தேன்.

இதை வெளியிட்டு ஊக்கம் தந்த லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

சுபாஷிதங்களை சேகரித்து அச்சிட தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த லுட்விக் ஸ்டெர்ன்பாக் (Ludwik Sternbach – Hon Professor of Dharmasastra, College of France, Paris) அவர்களின் வாழ்க்கை ஆச்சரியகரமானது. அவரை இங்கு பணிவுடன் வணங்கி நினைவு கூர்கிறேன்.

அவருக்கு உறுதுணையாக இருந்து மஹாசுபாஷித சங்க்ரஹா என்ற எட்டு தொகுதிகள் அடங்கிய நூலை திரு எஸ். பாஸ்கரன் நாயர் அவர்கள் ஹோஷியார்பூர் விஸ்வேஸ்வரானந்த் வேதிக் ரிஸர்ச் இன்ஸ்டிடியூட் சார்பாக வெளியிட்டுள்ளார். சுபாஷிதங்களை ஆங்கிலத்தில் திரு A.A.R உள்ளிட்ட அறிஞர்கள் மொழி பெயர்த்துள்ளனர்.

இது உலகளாவிய விதத்தில் சுபாஷிதங்களைக் கொண்டு சேர்த்துள்ளது. இவர்களை எவ்வளவு போற்றினாலும் தகும்.

இது தவிர சிறு சிறு புத்தகங்களாக அவ்வப்பொழுது பல ஆண்டுகளாக ஆங்காங்கே சுபாஷிதங்கள் ஆங்கில மொழி பெயர்ப்புடன் வெளியாகி வந்துள்ளன.

குறிப்பிடத்தகுந்தவையாக அமைந்துள்ளவை கீழ்க்கண்ட நூல்கள்:

Gems of Speech – Manohar Jai (1998)

Subhasita Collection Anthology – N.V.Nayudu (1992)

Subhasita Shatakam – Saroja Bhate (1991)

Subhasitas – RSS வெளியீடு

யாயா யாயா யா யா யாயா (32 தடவை ) – கவிதை (Post.11,234)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,234

Date uploaded in London – 2 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் நிறைய விநோதக் கவிதைகள், விசித்திரக் கவிதைகள் இருக்கின்றன. இதோ மேலும் ஒரு கவிதை :

யா யா யா யா யா யா யா யாயா யா யா யா யா யா யா யா

யா யா யா யா யா யா யா யாயா யா யா யா யா யா யா யா

–வேதாந்த தேசிகர் எழுதிய பாதுகா சஹஸ்ரம், கவிதை எண் 936

இதில் ‘ய’ என்ற (உயிர்) மெய் எழுத்தும்  ‘ஆ’ என்ற உயிர் எழுத்தும் மட்டுமே உள்ளன.

ஸம்ஸ்க்ருத மொழியை நன்கு கற்றோர் இதை பின் வருமாறு பிரித்துப் பொருள் காண்பர்:

யா யா யா, ஆய, ஆயாய , அயாய, அயாய, அயாய, அயாய, ( 4 முறை), அயாயா, யாயாய, ஆயாயாய ,

ஆயாயா ,யா யா யா யா யா யா யா யா (8 முறை)

விஷ்ணுவின் பாதுகைகளை (காலணிகளை)ப்  போற்றும் துதி பாதுகா சஹஸ்ரம். இதில் ஆயிரம் ஸ்லோககங்கள் இருக்கின்றன.

பொருள் –

ஸ்ரீ ரெங்க நாதனின் பாதுகைகள் அவரது கால்களை அலங்கரிக்கின்றன. (அவை எப்படிப்பட்டவை என்றால் ) நல்ல, மங்களகரமான எல்லாவற்றை யும் அடைய எவை உதவுமோ, எவை ஞானத்தைத் தருமோ, எவை இறைவனை தன்னுடைமை ஆக்கிக்கொள்ளும் ஆசையை உண்டாக்குமோ ,எதிர்ப்புகள் அனைத்தையும் அகற்றுமோ, எவை இறைவனை அடைந்தனவோ, எவை உலகெங்கிலும் போக, வர உதவுமோ, இத்தகைய  பாதுகைகளே .

XXX

ஆகஸ்ட் 25ம் தேதி இரண்டு ஸ்லோகங்களை வெளியிட்டேன். அவைகளின் பொருளை இப்போது காண்போம் :-

ஒரே உயிர் மெய்யெழுத்தைப் (Consonant) பயன்படுத்தும் கவிதைக்கு எடுத்துக் காட்டாக தண்டின் (Poet Dandin)  தரும் செய்யுள் ,

நூனம் நுன்னானி நானேன நானநெனா நானானி நஹ

நானேன நனு நானூ நெனை நெனா நானினோ நினீஹி

“கடையன் ஒருவனால் தாக்கப்பட்ட மனிதன் மனிதனே அல்ல .கடையனாக இருப்பவனைத் தாக்குவோனும் மனிதன் அல்ல. ஒருவருடைய தலைவன் தாக்கப்படாதவரை, தாக்கப்பட்ட கீழோனும் தாக்குண்டவன் இல்லை.ஏற்கனவே காயம் அடைந்தவனைத் தாக்குவோனும் மனிதன் அல்ல” .

பாரவி எழுதிய கிராதார்ஜுனியம் 15-15

என் கருத்து

செத்த பாம்பை அடிப்பவன் வீரன் அல்ல. பலமற்றவனைத் தாக்கும் பலசாலியும் வீரன் இல்லை. வீரன்,  காயம் அடைந்தாலும் அரசன் (உயிருடன் ) இருக்கும் வரை அவன் காயம் அடைந்தவன் அல்ல. தனக்கும் கீழேயுள்ளவன் தாக்கிவிட்டால் அது அவமானம். அதைப்  பொறுத்துக்கொண்டு வாழ்பவனும் மனிதன் அல்ல. (சிறைப்பட்ட சேர மன்னன் கணைக்கால் இரும்பொறைக்கு சிறைக் காவலன் தண்ணீர் கொண்டுவர தாமதித்ததால் அவமானம் தாங்காமல் உயிர் நீத்தான் சேரன்).

xxx

ஒரே இடத்தில் பிறக்கும்  எழுத்துக்களை வைத்து (உச்சாரண ஸ்தானாணி) அமைத்த கவிதைக்கான எடுத்துக் காட்டையும் தண்டின் எழுதியுள்ளார் ,

அகா காங்கான் ககா காக காஹகாககஹ

அஹாஹாங்க கான் காக கன்கா கக காகக

–போஜன் எழுதிய ஸரஸ்வதீ கண்டாபரணம்

பொருள்-

பல நாடுகளுக்குச் சென்றுவரும் பயணியை நோக்கிச் சொல்லும் வாசகம் :

“சுழன்று ஓடும் வேகம் மிக்க கங்கையில் குளித்துவிட்டு வரும் ஓ பயணியே! கஷ்டத்தினால் ஓலமிடும் அவலக்குரல் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது.மேரு மலையையே உழும் திறமை உனக்கு உண்டு. விழுத்தாட்டும் புலன்களின் கட்டுப்பாட்டில் நீ இல்லை. பாவங்களை அகற்றுவோனான நீ இந்த தேசத்துக்கு வந்துள்ளாய்.”

இவை அனைத்தும் சம்ஸ்க்ருத இலக்கணத்தை ஒட்டி எழுதப்பட்டவை. பொருளும் உடையவை. வெறும் ஒலிகள்/ சப்தங்கள் அல்ல .

xxx subham xxx

tags- சம்ஸ்க்ருத கவிதை, மெய் எழுத்து, பாதுகா சஹஸ்ரம் , வேதாந்த தேசிகன் , யா யா யா ,

நான் கண்ட ஸ்பானிய அரண்மனை (Post No.11,233)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,233

Date uploaded in London – 2 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் (Madrid, Capital of Spain). அங்கே அனைவரும் பார்க்கவேண்டிய  முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்று பிரம்மாண்டமான அரண்மனை  (Royal Palace) ஆகும். நாங்கள் ஆகஸ்ட் 27ம் தேதி (2022) அரண்மனைக்குச் சென்றோம். லண்டனிலுள்ள  பக்கிங்ஹாம்  அரண்மனை போல இரு மடங்கு பெரியது. அரண்மனைக்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. ஆயினும் முன்பகுதியில் புகைப்படம் எடுக்கலாம். வெளிநாடுகளில் எல்லா சுற்றுலாத் தலங்களிலும் புஸ்தகங்கள், நினைவுப் பொருட்களை விற்பார்கள். இது போல இந்தியாவிலும் செய்யவேண்டும். பிரிட்ஜி Fridgeல் பொருத்தக் கூடிய காந்தத்தில்(Fridge Magnets)  படம் இருக்கும். அங்கே விற்கும் பென்சில், பேனாக்களில் கூட அந்த இடத்திலுள்ள முக்கிய பொருட்களின் படம்தான் இருக்கும்.

ஸ்பானிய அரண்மனையில் 1,50,000 க்கும் மேலான பொருட்கள் இருக்கின்றன. எல்லா முக்கியப் பொருட்களின் படங்களும் இருக்கும் புஸ்தகத்தைத் தேடினேன். அப்படி  ஒரு புஸ்தகமும் இல்லை. கிடைத்த புஸ்தகம் ஒன்றை மட்டும் வாங்கினேன் . அதிலுள்ள விஷயங்களையும் நான் கண்ட விஷயங்களையும் சுருக்கி வரை கிறேன்.

ஸ்பானிய அரண்மனையில் 3400க்-கும் மேலான அறைகள் இருக்கின்றன.இப்போதும் அங்கே ஸ்பானிய அரச குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஆகையால் எல்லா இடங்களுக்கும் நாம் செல்ல முடியாது. உலகத் தலைவர்கள் வரும்போதும், அரசாங்க நிகழ்ச்சிகளின் போதும் அரண்மனைக்குள் செல்லமுடியாது.

எல்லா அரண்மனைகள் போலவே இங்கும் அனுமதிக்க கட்டணம் (Entrance fee) உண்டு. ஆயினும் ஏராளமான பொக்கிஷங்களை காணமுடிகிறது. பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் இப்படிச் செல்ல முடியாது. ஆண்டுக்கு ஒரு முறை கோடைகாலத்தில் ஒரே ஒரு அறையை மட்டும் திறந்துவைத்து காசு வாங்கிவிடுவார்கள் !

மாட்ரிட்டில் உள்ள இந்த அரண்மனையில் அந்த நாட்டின் பிரபல ஓவியர்கள் வரைந்த படங்கள் இருக்கின்றன ; அது மட்டுமின்றி உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள் வரைந்த படங்களும் பல அறைகளை அலங்கரித்தன. இப்போது அவை ப்ராடோ மியூஸியத்தில் (Prado Museum, Madrid) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மன்னருக்குச் சொந்தமான அரண்மனைக் கட்டிடங்கள், வழிபாட்டு இடங்கள், தோட்டங்கள் 20, 500 ஹெக்டேரில் பரந்து விரிந்து கிடக்கின்றன.

அரண்மனைக்குள் நுழைந்தவுடன் உயரமான படிக்கட்டுகளைக் காணலாம்.அதில் ஏறும்போதே மேலேயும் சுவர்களிலும் தீட்டப்பட்ட வண்ண ஓவியங்களைக் காணலாம். உயரமான பளிங்குச் சிலைகளையும் காணலாம். எங்கு நோக்கினும் ராஜா  ராணி சிலைகள்தான். ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு கதை உண்டு. ஏலத்தில் விட்டால் ஒவ்வொரு சிலையும் பொருளும் மில்லியன் கணக்கில் விலை க்குப் போகும்.அடுத்த அறை ஆடல், பாடலுக்காகக் கட்டப்பட்டது ஆனால் மூன்றாம் சார்லஸ் இதை காவலர்களுக்கான அறையாக மாற்றிவிட்டார். ஓவியங்கள் அனைத்தும் தத்ரூபமாக இருக்கும். அடுத்தாற்போல் ஹால் ஆப் காலம்ஸ்- HALL OF COLUMNS  அதாவது தூண்கள் அறை ; இதன் வழியாக மஹாராணி வசிப்பிடத்துக்குப் போகலாம்.

அடுத்தது மகாராஜாவின் ANTEROOM ஆன்டி ரூம் ; முக்கிய மண்டபத்துக்கு  முன்னாலுள்ள அறை ஆன் டிரூம் ; இங்குதான் மூன்றாவது சார்லஸ் சாதாரணக் குடிமகன்களை சந்திப்பாராம். மத்திய உணவு அருந்தும் இடமும் இதுதான் இது பற்றி 1782ம் ஆண்டு வந்த ஒரு யாத்ரீகர் எழுதிவைத்துள்ளார் ; அவர் எழுதியதாவது:-

இங்கேதான் மன்னர் மதிய உணவை சாப்பிடுவார் ; அப்போது மந்திரிகள் வந்து வாழ்த்துவார்கள். அவர் சாப்பிடத் துவங்கியவுடன் இளவரசர் அறைக்குச் சென்று, அங்கே சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் இளவரசரை வாழ்த்துவர்; மன்னர் சாப்பிட்டு முடிக்க ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும். மன்னர் சாப்பிட்டு முடித்த பின்னர் சிலருடன் மட்டும் பேசுவார். முதலில் சாப்பாட்டுத் தட்டுகள் வரும். அதை, ஒருவர் மன்னர் முன்னே வைப்பார். ஒயினும் WINE தண்ணீரும் குடுவையில் வைக்கப்படும். அதை மன்னர் குடிக்கும்போது அதைக் கொண்டுவந்த சேவகர் மண்டியிட்டு வணக்கம் சொல்லுவார். மன்னர் சாப்பிடுகையில், அரசாங்கத்துக்கான போப்பாண்டவர் தூதர் (NUNCIO)  அவருக்கு சற்று பின்னே நிற்பார். சாப்பிடும்போது மன்னன் பேசக்கூடிய ஒரே நபர் அவர்தான்.எல்லோரும் நீல உடை அணிந்திருப்பார்கள். மன்னர் கிறிஸ்தவர்கள் சொல்லும் மந்திரத்தைச் (GRACE)  சொன்னபின்னர் உடம்பின் முன் சிலுவை அடையாளம் போடுவார்”.–இது யாத்ரீகர் எழுதிய குறிப்பு ஆகும்.

இதற்குப்பின் இருப்பது சம்பாஷணை/ உரையாடல் அறை (Conversation hall ; இதுதான் மன்னரின் இரவுச் சாப்பாடு அறை . இங்கே மன்னருக்கு முன்னர் வட்டமாக அமர்ந்து வெளிநாட்டு தூதுவர்கள் பேசுவர்.

 கட்டிடம் முழுவதும் விதவிதமான கடிகாரங்கள், பிரம்மாண்டமான அலங்கார விளக்குகளைக் காணலாம். பல இடங்களில் தங்கம் உ ள்ளது தங்க முலாம் பூசப்பட்ட அ லங்காரப் பொருட்கள் இருக்கும். மஹாராணி அறையில் பெரிய ஓவியங்களும் மன்னரின் சிம்மாசன அறையில் சிங்கச் சிலைகளும்   இருக்கும்   சிம்மானமும் இருக்கும். ஸ் பிங்ஸ் தா ங்கும் பெரிய மேஜைகள் பார்க்க மிக அழகானவை

மன்னர் கேளிக்கையுடன் விருந்து வைக்கும் மேஜையில் ஒரே நேரத்தில் 100 பேருக்கு மேலாக அமர்ந்து சாப்பிடலாம். கிரேக்க புராணங்களில் மற்றும் பைபிளில் வரும் பெரியோர்களும் கதாபாத்திரங்களும் ஓவியங்களிலும் சிலைகளிலும் இருக்கும். அவைகளின் கதை தெரிந்தால் நன்கு பார்த்து ரசிக்கலாம்.

இந்த அரண்மனையின் புதிய கட்டிடங்கள் 300 ஆண்டுப் பழமையானவை . அதற்கு முன்னர் இதற்கு அல் கஸார் (Alazar) என்று பெயர்.மூர்(Moor) மக்களின் கோட்டை ன்று பொருள். வட ஆப் பிரிக்காவில்  வாழ்ந்த முஸ்லீம்கள் மூர் இன மக்கள் ஆவர். அந்த முஸ்லீம்கள் சுமார் 1000 ஆண்டுகளுக்கு ஐபீரிய தீபகற்பத்தை ஆண்டார்கள். ஐபீரிய தீபகற்பம் என்பது போர்ச்சுக்கல்லும் ஸ்பெயினும் சேர்ந்த பிரதேசம். ஸ்பானியர்கள் தென் அமெரிக்காவைக் கொள்ளையடித்தனர். அங்குள்ள அஸ்டெக், மாயன் நாகரீகங்களை அழித்து தங்கத்தைக் கொள்ளை அடித்தனர். போர்ச்சுகல் இந்தோனேஷியா, இலங்கை, இந்தியவரை கொள்ளை அடித்தனர். தென் அமெரிக்க நாடுகளில் பிரேசில் மட்டும் போர்ச்சுகீசிய மொழி பேசும் நாடு. ஏனைய அனைத்தும் ஸ்பானிய மொழி பேசும் நாடுகள்..இதே போல ஆப்பிரிக்காவிலும் இந்த இரு மொழிகள் பேசும் நாடுகள் உண்டு. தென் ஆப்பிரிக்கைவை மட்டும் டச்சுக்காரர்கள் கொள்ளை அடித்தனர். எங்கெங்கு தங்கமும் வைரமும் இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று கொள்ளை அடிப்பது ஐரோப்பியர்களின் குல வழக்கம்..

–subham–

tags- மாட்ரிட், ஸ்பெயின், அரண்மனை, மூர் இனம் பொக்கிஷம் 

டயபடீஸ் ஊட்டச் சத்து சர்ச்சை முடிவுக்கு வந்தது (Post.11232)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,232

Date uploaded in London – –    2 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹெல்த்கேர் ஜூலை 2022 இதழில் வெளி வந்துள்ள கட்டுரை

டயபடீஸ் சம்பந்தமான 5 ஊட்டச் சத்து பற்றிய  சர்ச்சை கருத்துக்கள் முடிவுக்கு வந்து விட்டன!

பகுதி – 1

மூலம் : கிம்பர்லி பி. ஜுக்ஸ்டாட் Ph D (Kimberly B. Bjugstad PhD)

ஜூன் 15,2022 தேதியிட்ட கட்டுரை

தமிழில் : ச.நாகராஜன்

செயற்கை இனிப்புகளைச் சாப்பிடலாமா? கூடாதா?  அமெரிக்க டயபடீஸ் சங்கத்தைச் சேர்ந்த (American Diabates Association ADA) இரண்டு நிபுணர்கள இது பற்றிய அடிப்படையான கருத்துக்களை முன் வைத்து சர்ச்சையை ஒருவாறாகத் தீர்த்துள்ளனர்.

ஊடகங்களில் உடலின் எடைக் குறைப்பு பற்றியும் ஆரோக்கிய மேம்பாடு பற்றியும் வரும் செய்திகளால் நாம் தாக்கப்படுகிறோம், குற்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகிறோம், குழப்பமடைகிறோம் – நாம் செய்வது தவறா இல்லையா என்று. குழம்பிப் போகிறோம்; அதிலும் குறிப்பாக டயபடீஸுக்கு ஆளானவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது.

ஐந்து சர்ச்சைக்குரிய ஊட்டச்சத்து பற்றிய கருத்துக்களுக்கு டயபடீஸ் பற்றிய இரண்டு நிபுணர்கள் 2022இல் ஜூன் முதல் வாரத்தில் நியூ ஆர்லியன்ஸில் நடந்த அமெரிக்கன் டயபடீஸ் சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில், அதற்கான விளக்கத்தைத் தந்துள்ளனர். இவர்கள் சியாட்டில் நகரைச் சேர்ந்த பெரும் நிபுணர்கள் என்பத் குறிப்பிடத்தகுந்தது.

இந்த இரு நிபுணர்களில் ஒருவர் மௌரீன் சொம்கோ என்பவர். இவர் சியாட்டிலைச் சேர்ந்த மருத்துவர். இன்னொரு பெண் மருத்துவரின் பெயர் ஆலிஸன் எவர்ட். இவரும் சியாட்டிலைச் சேர்ந்த மருத்துவரே,

(The presenters were Maureen Chomko, RDN, CDCES, from Neighborcare Health in Seattle, and Alison Evert, RDN, CDCES, FADCES, from University of Washington Medicine, also in Seattle.)

1. எப்போது சாப்பிட வேண்டும், எத்தனை முறை சாப்பிட வேண்டும்?

விஷயம் சாதாரணமானது தான். ஆனால் எப்போது உணவு எடுத்துக் கொள்வது என்பது பற்றிய ஏராளமான கேள்விகள் உள்ளன. டயபடிஸால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி சாப்பிட வேண்டும் – 3 தடவை உணவும் 3 தடவை நொறுக்குத் தீனியும் (3 meals and 3 snacks) எடுத்துக் கொள்ளுமாறு சொல்லப்படுகிறது. ஆனால் இது ஒருவேளை உங்களது வாழ்க்கைமுறைக்கு சரிப்பட்டு வராததாக இருக்கலாம். அல்லது ஒருவேளை உங்களுக்கு இத்தனை முறை உண்ண, பசி எடுக்காமல் இருக்கலாம். ஆகவே ஒரு தடவை உணவையோ அல்லது நொறுக்குத் தீனியையோ விட்டு விடலாமா? காலை உணவைத் தவிர்க்கலாமா?

நிபுணர் சொம்கோ (Chomko) கூறுகிறார் :- இத்தனை தடவை இப்படித் தான் சாப்பிட வேண்டும் என்பது பற்றிய முடிந்த முடிபான ஆராய்ச்சி முடிவுகள் உடல் நலம் பற்றியோ அல்லது குளுகோஸ் மேலாண்மை பற்றியோ இது வரை ஒன்றும் இல்லை.

அடிக்கடி சாப்பிடுவது தேவையற்ற கலோரியிலோ அல்லது தொடரும் ஹைபர்க்ளைசெமியாவிலோ (Chronic hyperglycernia)) கொண்டு விடப்படலாம். மாறாக நிறைய ஆனால் அடிக்கடி சாப்பிடாமல் குறைந்த தடவைகள் சாப்பிடும் உணவு குளுகோஸ் அளவில் விபரீதமான ஏற்ற இறக்கத்தை உருவாக்கக் கூடும். காலை உணவைத் தவிர்ப்பதானது வழக்கமாக அப்படிச் செய்ப்வர்களுக்கு நாளின் பிற்பகுதியில் குளுகோஸைக் கட்டுப்படுத்துவதில் உதவக்கூடும் – ஆனால் காலை உணவை வழக்கமாக எடுத்துக் கொள்பவர்கள் இப்படி அதைத் தவிர்த்தால் கலோரி இழப்பைச் சரிக்கட்டுவதற்காக நாளின் பிற்பகுதியில் சாப்பிட வேண்டி நேரலாம்.

பகல் உணவின் போது இன்னும் கொஞ்சம் கூடச் சாப்பிட வேண்டி நேரலாம். இது கார்டியோவஸ்குலர் அபாயம் எனப்படும் இதயநோய் அபாயத்தை (Cardiovascular risk) அதிகரிக்கக்கூடும்.

டயபடீஸ் டைப் 2 உள்ளவர்களுக்கு உணவை மருந்துடன் இணைத்துச் சாப்பிடுவது முக்கியமாகும். மருந்தானது சில உணவு வகைகளுடன் எடுத்துக் கொண்டால் தான் செயல்படும். அந்த உணவுகள் வயிற்றுக் குமட்டல் மற்றும்

இரத்தத்தில் மாவுச்சத்துக் குறை தடையம் ஆகிய (nausea and hypoglycemia) பக்க விளைவுகளை குறைக்கும். மருந்தை உணவு உட்கொள்ளும் வேளைகளில் எடுத்துக் கொள்வது அது உடலில் சேர்வதை மேம்படுத்தும்.

டயபடீஸ் டைப் 1 உள்ளவர்களுக்கு வழக்கமான ஆனால் சிறிய அளவிலான உணவுத் திட்டம், இடையில் நொறுக்குத் தீனி இல்லாமல் இருப்பது குளுகோஸ் கட்டுப்பாட்டு மேலாண்மையை (Glucose management) மேம்படுத்தும்.

இது தவிர எப்போது சாப்பிடுவது எத்தனை முறை சாப்பிடுவது என்பது பற்றிய அனைவருக்கும் பின்பற்றும்படியான ஒரே மாதிரியான விதி என்று ஒன்று இல்லை.

இப்படித் தெளிவு படுத்தினார் சொம்கோ.

2. எதை உண்ண வேண்டும் – அதாவது எவ்வளவு கொழுப்புச் சத்து Vs புரோடீன் Vs கார்போ ஹைட்ரேட்டுகளை எடுத்துக் கொள்வது?

அமெரிக்க டயபடீஸ் சங்க 2019 அனைவராலும் ஏற்கப்பட்ட ஊட்டச்சத்து அறிக்கை கூறுவது இது: “

கார்போஹைட்ரேட், புரோடீன், கொழுப்புச் சத்து பற்றிய, டயபடீஸ் அபாயம் உள்ளவர்களுக்க்கும் அல்லது அந்த அபாயம் இல்லாதவர்களுக்குமான அனைவருக்கும் பொருந்தும் படியான, ஒரு தீர்க்கமான கலோரி விழுக்காடு இல்லை என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே மாக்ரோநியூட்ரியண்ட் விநியாகமானது ஒவ்வொருவரது தனிப்பட்ட அப்போதுள்ள உணவு எடுத்துக் கொள்ளும் முறை, தனிப்பட்ட விருப்பங்கள், மெடபாலிக் பற்றிய இலட்சிய அளவு ஆகியவற்றைப் பொருத்துத் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.”

நேஷனல் ஹெல்த் அண்ட் நியூட் ரிஷன் எக்ஸாமினேஷன் சர்வே (National Health and Nutrition Examination Survey)  தெரிவிப்பது இது:

“அமெரிக்கர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளில்  சக்தி உள் எடுத்தல் (Energy Intake) 33% கொழுப்பு, 16 % புரோடீன், 50% கார்போஹைட்ரேட்டைக் கொண்டதாக இருக்கிறது.”

இந்த விகிதாசாரமானது டயபடீஸால் பீடிக்கப்பட்டவர்களுக்கும் சுமாராக அப்படியே தான் உள்ளது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக சாதாரணமான ஒருவரின் 42% கார்போ ஹைட்ரேட் பொருள்கள் குறைந்த தரம் உள்ளவையாக உள்ளன. அல்லது சுத்திகரிக்கப்பட்ட மாவு அல்லது சர்க்கரையிலிருந்து பெறப்படுவதாக உள்ளது. அவை உடனடி ஆற்றலைத் தருகிறது ஆனால் மிகக் குறைவாகத் தருகிறது.

முக்கிய குறிப்பு : உங்கள் டாக்டரைக் கலந்து ஆலோசிப்பது முக்கியம் : எத்தனை விகிதம் கொழுப்பு, புரோடீன், கார்பன் ஹைட்ரேட்ஸ் ஆகியவை உங்கள் உடலுக்கு எந்த விகிதத்தில் இருக்க வேண்டும் என்பதை உங்கள் டாக்டரோடு ஆலோசிக்க வேண்டும். அதுவும் அவை நல்ல தரத்துடன் இருப்பதை நீங்கள் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

                      **                    (அடுத்த பகுதியுடன் முடியும்)

 

புத்தக அறிமுகம் – 44

சம்ஸ்கிருதச் செல்வம்

பாகம் 2

(132 நியாயங்கள் பற்றிய விளக்கம்)

பொருளடக்கம்

என்னுரை

1. தராசு முதல் கரும்பு வரை சில நியாயங்கள்!

2. ஆடு முதல் காடு வரை சில நியாயங்கள்!

3. நெக்லஸ் முதல் கிணறு வரை சில நியாயங்கள்!

4.வீட்டு வாசற்படியில் வைக்கும் விளக்கு!

5.மரத்தை அசைத்தால் மற்றதும் தானே அசையும்!

6.குருடன் குருடனுக்கு வழி காட்டினாற் போல!

7.கடலும் பறவையும்!

8.பிறக்காத பிள்ளைக்குப் பெயர்!

9.இறுதியில் என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய்!

10.தண்ணீ ர் கொண்டு வா!

11.குரங்குக் குட்டி நியாயமும் பூனைக்குட்டி நியாயமும்!

12.கௌந்தேய கர்ணன் ராதேயன் ஆனான்!

13.எவ்வழி உலகம் அவ்வழியே அனைவரின் வழியும்!

14. பிச்சை எடுத்தேனும் உயிரைக் காத்துக் கொள்வதே தர்மம்!

15. பட்ட காலிலே படும்!

16. இளமையும் முதுமையும் சேர்ந்து இருக்க முடியுமா!

17. குடத்தினுள் இருக்கும் குத்துவிளக்கு!

18. நீரில் அமிழ்ந்த சுரைக்காய்!

19. எண்ணெய் இல்லாமல் விளக்கை எரிப்பது எப்படி?

20. மாந்தோப்பில் உள்ள மரங்கள்!

21. முள்ளைத் தின்று மகிழும் ஒட்டகம்!

22. வரியை ஏய்க்க நினைத்தவன் வசூலிப்பவன் முன்னால் வந்த கதை!

23. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதை!

24. செம்மறி ஆட்டுக் கூட்டம்!

25. வறுத்த விதை முளைக்குமா?

26. வசந்த கால வருகையும் புண்ணிய பலனும்!

27. தேங்காய்க்குள் இளநீர் எப்படி வந்தது?

28. கொக்கின் தலையில் வெண்ணையை வைத்துப் பிடிக்கலாமா?

29. விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா?

30. முடிவுரை

நூலாசிரியர் பற்றிய குறிப்பு

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

சம்ஸ்கிருத செல்வம் அள்ள அள்ளக் குறையாதது. ஒரு போதும் வற்றாத ஜீவ நதி அது.

நியாயங்கள் அந்தச் செல்வத்தின் ஒரு துளி. சான்பிரான்ஸிஸ்கோவில் 2015ஆம் ஆண்டு இருந்த போது ஒரு சில நியாயங்களைத் தொகுத்து எழுதி ஜனவரி முதல் அவ்வப்பொழுது Www.Tamilandvedas.Com இல் வெளியிட்டு வந்தேன்.

இதை வெளியிட்டு என்னை கௌரவப்படுத்திய லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நூலை நல்ல முறையில் வெளியிட முன் வந்த Pustaka Digital Media வின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

900க்கும் மேற்பட்ட நியாயங்கள் உள்ளன. இதுவரை தொகுக்க முடிந்தது 132 நியாயங்கள் மட்டுமே தான்! வாய்ப்புக் கிடைக்கும்போது மேலும் பல நியாயங்களைத் தொகுத்துத் தமிழ் உலகிற்கு அளிக்க வேண்டுமென்பது என் அவா.

இதைப் படித்து அவ்வப்பொழுது என்னை ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

பங்களூர்                                                                                                      ச,நாகராஜன்
11-1-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852   

**

MY VISIT TO ROYAL PALACE IN MADRID IN SPAIN (Post No.11,231)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,231

Date uploaded in London – 1 SEPTEMBER 2022        

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

I went to Madrid, capital of Spain , with my family on 26th August, 2022 and stayed there for three days. We went to the Royal Palace , the major tourist attraction of Madrid. It is huge and twice the size of Buckingham Palace in London. It took more than two hours to go through the building. In London they don’t allow you inside the palace. They allow you to only one hall or section every summer, through a highly priced ticket. In Madrid you buy a ticket and see thousands of treasures at one go.

There are 21 palaces, monasteries, and convents with huge gardens. More than 1,54,000 historic and artistic pieces are listed and most displayed. They allow photography only up to a point in the entrance section. Then your eyes are the cameras. I tried to buy a book with pictures, but only some important objects are covered in the book.

Official halls

Main staircase- families with children must stand in a long queue to use a small lift. Others have to walk through long steps. Good exercise! One should not miss the beautiful paintings on the ceilings. The royal family still lives in one part of the place complex. Depending upon one’s interests, one can spend hours looking at them. Various types of novel clocks, variety of porcelainwares, Chinaware and musical instruments are displayed. Each object would sell for millions of dollars in auction houses. So, every room has a staff with eagle eyes.

The huge collection and their maintenance in perfect condition show Spanish monarchy’s interest in the collection and patronage of art. Even now the palaces continue to host state ceremonies and visiting dignitaries. It has got over 3400 rooms. It is the largest functioning palace in Europe.

The palace has 500 year history. It was called Alcazar, that is the Moorish castle or fortress. Moors were Muslim tribes of north Africa who occupied Spain and Portugal from 8th century to 15th century. But new buildings were constructed 300 years ago.

After passing the staircase, we entered the Hall of Columns with Flemish tapestries and paintings of famous Spanish painters.

Then we see Chares III’ s Anteroom. This was the hall where the king had lunch and received ordinary audiences. The ministers come and greet the king before the meal; when he started eating, they retire to Prince’s room and greet him. Before king finish eating, they come back and stand. It took more than one hour according to a contemporary traveller who visited the palace in 1780s. During the meal king speaks only to Nuncio (Pope’s ambassador to government) who stood a few steps away from the king.

The portraits of famous painters which decorated the palace halls are now in Prado Museum in Madrid.

Then we see Antechamber or Conversation Room where the king had supper. The ambassadors meet the king here.

Chamber of Charles III or Gasparini Room is the hall where the king met special audiences. It is beautifully decorated. This is where the king dressed himself.

Novel clocks and huge chandeliers are seen in every room. Porcelain room has very big vases and cups.

We go to Yellow Room which owes its name to the drapes ordered by Ferdinand VII. He hung them there. Today the walls are covered by various tapestries.

Banqueting hall is very impressive and surprising for its length. The great hall was used for balls and gala dinners. Over 100 people can sit at this dining table.

The ‘Tram Car’ of Charles III

The long and narrow room received its current layout and name in 1880. It improved the access between the Gasparini Room and Banqueting Hall.

Silverware Room was the Queen’s Ante chamber. Though we can see lot of silver vessels there, they were not ancient. Joseph Bonaparte melted down the old set to face necessities of war.

Queens’ Antechambers, Throne room, Royal chapel and King’s Antechamber have golden decorations. Notables are Sphinx Table, Royal Crown and the throne. It is needless to say the Royal Chambers have golden look. Spanish and Portuguese plundered the gold from ancient Aztec and Inca civilisations. Unless the Europeans plundered and exploited the innocent and rich countries around the world, they would not have become major powers today.

If Europeans claim they are developed countries, one can say it happened with the blood and sweat and silver and gold of the innocent, peace loving, rich countries of Asia and South America (later they plundered South African diamonds and gold).

–subham–

Tags- My visit, Spain, Madrid, Royal Palace

எதிரிகளை ஒழிக்க வழி! (Post No.11,230)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,230

Date uploaded in London – –    1 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எதிரிகளை ஒழிக்க வழி!

ச.நாகராஜன்

 1

எதிரிகளை ஒழிக்க லிங்கனின் வழி!

 ஒரு முறை ஆபிரஹாம் லிங்கன் ஒரு கூட்டத்தில் தன்னை தீவிரமாக எதிர்த்தவர்களைப் பற்றி திட்டாமல் மிக்க அன்புடன் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

இதைப் பார்த்த ஒரு பத்திரிகையாளருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

“ என்ன இப்படி உங்கள் எதிரிகளை நீங்கள் புகழ்ந்து பேசுகிறீர்களே! எதிரிகளை இல்லாமல் அல்லவா செய்ய வேண்டும்” என்று கேட்டார்.

உடனே லிங்கன், “அதைத் தானே நான் செய்து கொண்டிருக்கிறேன். எப்போது அவர்கள் எனது நண்பர்களாகி விடுகிறார்களோ அப்போதே எதிரி இல்லை என்று தானே அர்த்தம்” என்றார்.

 இது தான் லிங்கனின் வழிமுறை!

2

குழுவில் “நான்” இல்லை!

ஒரு தவளைக்குப் பறக்க ஆசை.

அது இரண்டு புறாக்களைப் பார்த்து தனது ஆசையைச் சொன்னது.

புறாக்களோ, “உன்னை எப்படி நாங்கள் தூக்கிச் செல்ல முடியும். நீ விழுந்து விடுவாயே” என்றன.

தவளை, “நாம் ஒரு குழுவாக செயல்பட்டால் இது முடியும். ஒரு ஐடியா சொல்கிறேன். ஒரு சின்ன குச்சியை உங்கள் வாயில் வைத்துக் கொண்டால் போதும். குச்சியின் ஒரு புறத்தை ஒருவரும் இன்னொரு புறத்தை அடுத்தவரும் வைத்துக் கொண்டு பறந்தால் போது. குச்சியின் நடுவில் என் வாயை வைத்து அதைக் கவ்விக் கொள்கிறேன். பறக்கலாம்” என்றது.

ஐடியா நல்ல ஐடியா என்று கூறிய புறாக்கள் ஆளுக்கு ஒரு பக்கம் குச்சியைக் கவ்விப் பிடிக்க தவளை ஜாம் ஜாமென்று குச்சியின் நடுவில் வாயை வைத்து அதைக் கவ்வியது.

புறாக்கள் பறக்க ஆரம்பித்தன.

மற்ற தவளைகளுக்கும் பறவை இனங்களுக்கும் இதர விலங்குகளுக்கும் ஒரே ஆச்சரியம்!  – எப்படி ஒரு தவளை பறக்கிறது என்று!

அதில் கீழே இருந்த ஒரு விலங்கு கூக்குரலிட்டுக் கத்தியது.

“அடடா! இந்த ஐடியாவை யார் சொன்னது!” என்று அது உரக்கக் கேட்டது.

“நான் தான்” என்று கம்பீரமாக தவளை கத்தியது.

அவ்வளவு தான்குச்சியை விட்டு விடவே அது தொபீர் என்று கீழே விழுந்தது.

பாடம்,

குழுவில் நான்” என்பதே கிடையாது! 

3

தலைமைப் பண்பு!

லூயிஸ் ஊர்ஸுவா என்பவர் வட சிலியில் இருந்த ஒரு தாமிர சுரங்கத்தில் போர்மனாக வேலை பார்த்து வந்தார்.

2010ஆம் ஆண்டில் ஒரு நாள்.

திடீரென்று சுரங்கம் சரிந்து இடிந்து விழுந்தது, உள்ளே 33 தொழிலாளர்கள் மாட்டிக் கொண்டனர். 700 மீட்டர் ஆழம் கொண்டது சுரங்கம். அதாவது  சுமார் 2296 அடி ஆழம்.

ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல 70 நாட்கள் அவர்கள் அதில் சிக்கி இருந்தனர்.

லூயிஸ் ஊர்ஸுவா (Luis Urzua) நிலைமையை உன்னிப்பாகக் கவனித்துத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

அவர்களை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் காப்பாற்ற உரிய வழிமுறைகளை அவர் மேற்கொண்டார்.

அத்தோடு தரையிலிருந்து அவர்களை மீட்க வந்த குழுவினருக்கு தக்க வழிமுறைகளையும் அவர் கூற ஆரம்பித்தார்.

சுரங்கத்தின் வரைபடத்தைக் கொண்டு அனைவருக்கும் தக்கபடி அறிவுரைகளை வழங்கிக் கொண்டே இருந்தார்.

அனைவரும் 70 நாட்கள் கழித்து பத்திரமாக மீண்டனர். அனைவரும் லூயிஸ் ஊர்ஸுவாவைப் பாராட்டினர்.

அவரோ சர்வ சாதாரணமாக, “இந்த ஷிப்ட் கொஞ்சம் நீண்ட ஷிப்டாக அமைந்து விட்டது!” என்றார்!

ஒரு தலைவருக்கு புத்தி கூர்மையும், வழிகாட்டும் தன்மையும், பொறுமையும் எல்லாவற்றிற்கும் மேலாக அடக்கமும் வேண்டும்.

அதைக் காண்பித்தார் அவர்!

**

புத்தக அறிமுகம் – 43

உலக வலத்தில் ஒன்பது நாடுகள்

(சியோல் முதல் ரோம் வரை)

பாகம் – 2 

பொருளடக்கம்

என்னுரை

1. செயற்கை அறிவின் சிறப்பு நகரம் சியோல்!

2. உலகை நடுங்க வைத்த நாடு!

3. உலக இயக்கத்திற்கு உதவும் நாடு!

4. உலகின் முக்கிய அதிசயத்தைக் கொண்ட நாடு!

5. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்று மந்திரங்களை உலகிற்கு வழங்கிய நாடு!

6. புத்த பூமி ஹாங்காங்!

7. இரு நாடுகளில் கொட்டும் ஒரு நீர்வீழ்ச்சி! கண்ணைக் கவரும் நயாகரா!

8. கோலாகல கோலாலம்பூர்!

9. இனிக்கும் இத்தாலி!

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

மாலைமலர் நாளிதழில் 22-3-2022 தொடங்கி வாரம் தோறும் உலகை வலம் வரும் விதமாக ஒவ்வொரு நாடு பற்றியும் எனது ‘உலக வலம்’ தொடர் வெளி வர ஆரம்பித்தது. தொடரில் இடம் பெற்ற முதல் ஒன்பது நாடுகள், ’உலக வலத்தில் ஒன்பது நாடுகள்’ என்ற நூலாக வெளி வந்தது.

இந்த முதல் பாகத்தில் ஸ்விட்ஸர்லாந்து, ஜப்பான், அந்தமான் (இந்தியா), அமெரிக்கா, சிங்கப்பூர், பெல்ஜியம், ஶ்ரீலங்கா, லண்டன் (இங்கிலாந்து), நேபாளம் ஆகிய நாடுகளின் அழகிய இடங்கள், காட்சிகள் மற்றும், வரலாறு பற்றி கண்டோம்.

அதைத் தொடர்ந்து வாரந்தோறும் மாலை மலர் இதழில் அடுத்த ஒன்பது நாடுகள் பற்றிய கட்டுரைகள் 7-6-2022 இதழ் தொடங்கி வெளியிடப்பட்டது.

அந்த அடுத்த ஒன்பது நாடுகள் பற்றிய நூலாக இந்த இரண்டாம் பாகம் அமைகிறது.

மாலைமலரில் உலகநாடுகள் பற்றி ஒரு தொடரை எழுத ஒரு நல் வாய்ப்பை அளித்த திரு பாலசுப்ரமண்யன் ஆதித்தன் அவர்களுக்கும், மாலைமலர் CEO திரு ரவீந்திரன் அவர்களுக்கும், வாசகர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதைக் கூறி என்னை ஊக்குவித்த திரு வசந்த்ராஜ் உள்ளிட்ட மாலைமலர் ஆசிரியக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

கட்டுரைகளைப் படித்து இன்னும் தொடருமாறு என்னை உற்சாகப்படுத்தி ஊக்குவித்த அனைத்து வாசகப் பெருமக்களுக்கும் எனது நன்றி.

இந்தக் கட்டுரைகளை நூலாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

எங்கு பயணம் மேற்கொண்டாலும் உங்கள் பயணம் சிறப்பாக அமைய

எமது உளங் கனிந்த வாழ்த்துக்கள்!

சான்பிரான்ஸிஸ்கோ.
9-8-2022

ச.நாகராஜன்

 * 

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

செப்டம்பர் 2022 காலண்டர் – மேலும் 30  மணிமேகலை பொன்மொழிகள் (Post.11229)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,229

Date uploaded in London – 31 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ஆகஸ்ட் காலண்டரில்,  மணிமேகலை காவியத்திலிருந்து 31 பொன்மொழிகளைக் கண்டோம். இதோ மேலும் 30 மேற்கோள்கள் :

பண்டிகைகள் / முக்கிய நாட்கள் :- செப்டம்பர் 1- ரிஷி பஞ்சமி , 3 -ராதாஷ்டமி , 5-ஆசிரியர் தினம்/டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் , 8- ஒணம் பண்டிகை , 10- மாளய பக்ஷம் ஆரம்பம் , 11- பாரதியார் நினைவு தினம், 17- விஸ்வகர்ம பூஜை , 25- மஹாளய அமாவாசை ,26- நவராத்ரி ஆரம்பம் .

பெளர்ணமி – 10, அமாவாசை-25, ஏகாதஸி விரதநாட்கள் – 6, 21;

சுப முகூர்த்த நாட்கள் – 1, 5, 7, 8, 9, 12

செப்டம்பர்  1 வியாழக் கிழமை

மது மலர்க் கூந்தல் சுதமதி உரைக்கும்

‘இளமை நாணி முதுமை எய்தி

உரை முடிவு காட்டிய உரவோன் மருகற்கு

அறிவும் சால்பும் அரசியல் வழக்கும்

செறி வளை மகளிர் செப்பலும் உண்டோ? 04-110

செப்டம்பர்  2 வெள்ளிக் கிழமை

அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல்

வினை விளங்கு தடக்கை விறலோய்! கேட்டி

வினையின் வந்தது வினைக்கு விளைவு ஆயது

செப்டம்பர்  3 சனிக் கிழமை

புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது

மூப்பு விளிவு உடையது தீப் பிணி இருக்கை

பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம்

செப்டம்பர்  4 ஞாயிற்றுக் கிழமை

புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை

அவலம் கவலை கையாறு அழுங்கல்

தவலா உள்ளம் தன்பால் உடையது

மக்கள் யாக்கை இது என உணர்ந்து    04-120

மிக்கோய்! இதனைப் புறமறிப்பாராய்’

செப்டம்பர்  5 திங்கட் கிழமை

தூ மலர்க் கூந்தல் சுதமதி உரைப்ப

சிறையும் உண்டோ செழும் புனல் மிக்குழீஇ?

நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின்?       05-020

செவ்வியள் ஆயின் என்? செவ்வியள் ஆக!’ என

செப்டம்பர்  6 செவ்வாய்க் கிழமை

‘வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி

தீ நெறிப் படரா நெஞ்சினை ஆகு மதி!

ஈங்கு இவள் தன்னோடு எய்திய காரணம் 05-030

வீங்குநீர் ஞாலம் ஆள்வோய்! கேட்டருள்!

செப்டம்பர்  7  புதன் கிழமை

யாப்பு உடை உள்ளத்து எம் அனை இழந்தோன்

பார்ப்பன முதுமகன் படிம உண்டியன்

மழை வளம் தரூஉம் அழல் ஓம்பாளன்

பழ வினைப் பயத்தான் பிழை மணம் எய்திய

எற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின்

செப்டம்பர்  8 வியாழக் கிழமை

குரங்கு செய் கடல் குமரி அம் பெருந் துறைப்

பரந்து செல் மாக்களொடு தேடினன் பெயர்வோன்

கடல் மண்டு பெருந் துறைக் காவிரி ஆடிய

வட மொழியாளரொடு வருவோன் கண்டு ஈங்கு

செப்டம்பர்  9 வெள்ளிக் கிழமை

தனக்கு என வாழாப் பிறர்க்கு உரியாளன்

இன்பச் செவ்வி மன்பதை எய்த

அருளறம் பூண்ட ஒரு பெரும் பூட்கையின்

அறக் கதிர் ஆழி திறப்பட உருட்டி

செப்டம்பர்  10 சனிக் கிழமை

மது மலர்க் குழலாள் மணிமேகலை தான்

சுதமதி தன்னொடும் நின்ற எல்லையுள்

இந்திர கோடணை விழா அணி விரும்பி

வந்து காண்குறூஉம் மணிமேகலா தெய்வம்

செப்டம்பர்  11 ஞாயிற்றுக் கிழமை

‘புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்
உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ!
குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய்
05-100
முற்ற உணர்ந்த முதல்வா என்கோ! 

செப்டம்பர்  12 திங்கட் கிழமை

காமற் கடந்தோய் ஏமம் ஆயோய்
தீ நெறிக் கடும் பகை கடிந்தோய் என்கோ!
ஆயிர ஆரத்து ஆழி அம் திருந்து அடி
நா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன்?’ என்று

செப்டம்பர்  13 செவ்வாய்க் கிழமை

அந்தி அந்தணர் செந் தீப் பேண

பைந் தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்ப

யாழோர் மருதத்து இன் நரம்பு உளரக்

கோவலர் முல்லைக் குழல் மேற்கொள்ள

செப்டம்பர்  14  புதன் கிழமை

ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன்

பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி

செப்டம்பர்  15 வியாழக் கிழமை

காடு அமர் செல்வி கழி பெருங் கோட்டமும்

சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்

அருந் திறல் கடவுள் திருந்து பலிக் கந்தமும்   06-060

செப்டம்பர்  16 வெள்ளிக் கிழமை

அருந் தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும்
ஒருங்கு உடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும்
நால் வேறு வருணப் பால் வேறு காட்டி
இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த
குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன

செப்டம்பர்  17 சனிக் கிழமை

சுடுவோர் இடுவோர் தொடு குழிப் படுப்போர்

தாழ் வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர்

செப்டம்பர்  18 ஞாயிற்றுக் கிழமை

மடைதீ உறுக்கும் வன்னி மன்றமும்
விரத யாக்கையர் உடை தலை தொகுத்து ஆங்கு
இருந் தொடர்ப் படுக்கும் இரத்தி மன்றமும்
பிணம் தின் மாக்கள் நிணம் படு குழிசியில்
06-090

விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும்

செப்டம்பர்  19 திங்கட் கிழமை

அழல் வாய்ச் சுடலை தின்னக் கண்டும்

கழி பெருஞ் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து

மிக்க நல் அறம் விரும்பாது வாழும்

மக்களின் சிறந்த மடவோர் உண்டோ?

செப்டம்பர்  20 செவ்வாய்க் கிழமை

இரும் பேர் உவகையின் எழுந்து ஓர் பேய் மகள்

புயலோ குழலோ கயலோ கண்ணோ

குமிழோ மூக்கோ இதழோ கவிரோ

பல்லோ முத்தோ என்னாது இரங்காது

கண் தொட்டு உண்டு கவை அடி பெயர்த்து

தண்டாக் களிப்பின் ஆடும் கூத்துக்

செப்டம்பர்  21  புதன் கிழமை

பார்ப்பான் தன்னொடு கண் இழந்து இருந்த இத்

தீத்தொழிலாட்டியேன் சிறுவன் தன்னை

யாரும் இல் தமியேன் என்பது நோக்காது

ஆர் உயிர் உண்டது அணங்கோ? பேயோ?

செப்டம்பர்  22 வியாழக் கிழமை

அணங்கும் பேயும் ஆர் உயிர் உண்ணா 06-150

பிணங்கு நூல் மார்பன் பேது கந்தாக

ஊழ்வினை வந்து இவன் உயிர் உண்டு கழிந்தது

மா பெருந் துன்பம் நீ ஒழிவாய்” என்றலும்

செப்டம்பர்  23 வெள்ளிக் கிழமை

தேவர் தருவர் வரம் என்று ஒரு முறை

நான்மறை அந்தணர் நல் நூல் உரைக்கும்

மா பெருந் தெய்வம்! நீ அருளாவிடின்   06-170

யானோ காவேன் என் உயிர் ஈங்கு” என

செப்டம்பர்  24 சனிக் கிழமை

நால் வகை மரபின் அரூபப் பிரமரும்
நால் நால் வகையில் உரூபப் பிரமரும்
இரு வகைச் சுடரும் இரு மூவகையின்
பெரு வனப்பு எய்திய தெய்வத கணங்களும்
பல் வகை அசுரரும் படு துயர் உறூஉம்
06-180
எண் வகை நரகரும் இரு விசும்பு இயங்கும்
பல் மீன் ஈட்டமும் நாளும் கோளும்
தன் அகத்து அடக்கிய சக்கரவாளத்து
 

செப்டம்பர்  25 ஞாயிற்றுக் கிழமை

சூழ் கடல் வளைஇய ஆழி அம் குன்றத்து

நடுவு நின்ற மேருக் குன்றமும்

புடையின் நின்ற எழு வகைக் குன்றமும்

நால் வகை மரபின் மா பெருந் தீவும்

ஓர் ஈர் ஆயிரம் சிற்றிடைத் தீவும்

செப்டம்பர்  26 திங்கட் கிழமை

அந்தரம் ஆறா ஆறு ஐந்து யோசனைத்

தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த

மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம்

அணி இழை தன்னை வைத்து அகன்றது தான் என் 06-214

செப்டம்பர்  27 செவ்வாய்க் கிழமை

மணிமேகலை தனை மணிபல்லவத்திடை

மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி

மணிமேகலை தனை மலர்ப் பொழில் கண்ட

உதயகுமரன் உறு துயர் எய்தி

செப்டம்பர்  28  புதன் கிழமை

திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு” என

கோவலன் கூறி இக் கொடி இடை தன்னை என்

நாமம் செய்த நல் நாள் நள் இருள்

“காமன் கையறக் கடு நவை அறுக்கும்

மா பெருந் தவக்கொடி ஈன்றனை” என்றே

செப்டம்பர்  29 வியாழக் கிழமை

தளர் நடை ஆயமொடு தங்காது ஓடி

விளையாடு சிறு தேர் ஈர்த்து மெய் வருந்தி

அமளித் துஞ்சும் ஐம்படைத் தாலி

குதலைச் செவ் வாய் குறு நடைப் புதல்வர்க்குக்

செப்டம்பர்  30 வெள்ளிக் கிழமை

வலம்புரிச் சங்கம் வறிது எழுந்து ஆர்ப்பப்

புலம் புரிச் சங்கம் பொருளொடு முழங்கப்

புகர் முக வாரணம் நெடுங் கூ விளிப்ப

பொறி மயிர் வாரணம் குறுங் கூ விளிப்ப 7-16

……

நல் மணி இழந்த நாகம் போன்று அவள்

Tags- மணிமேகலை மேற்கோள்கள், மணிமேகலை, பொன்மொழிகள்,  செப்டம்பர்  2022 காலண்டர்

சதகங்கள் கூறும் நோயில்லா நெறி! (Post No.11,228)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,228

Date uploaded in London – –    31 AUGUST 2022         

 Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹெல்த்கேர் ஜூலை 2022 இதழில் வெளியான கட்டுரை

 சதகங்கள் கூறும் நோயில்லா நெறி!

 ச.நாகராஜன்

ஒவ்வொரு மனிதனும் நூறாண்டு வாழ முயற்சியை எடுக்க வேண்டும் என்று ஹிந்து அற நூல்கள் கூறுகின்றன; அத்தோடு வாழ்கின்ற அந்த நூறாண்டுகளும் நோயற்ற, பயனுள்ள வாழ்க்கையாக அமைய வேண்டும் என்றும் வற்புறுத்துகின்றன.

இப்படிச் சொல்லி விடுவதோடு நிற்காமல் பயனுள்ள ஆரோக்கியமான நூறாண்டு வாழ்க்கை அமைய என்ன செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றன.

இப்படிப்பட்ட நூல்கள் கணக்கற்றவை.

இவற்றில் சதகங்களும் தங்கள் பங்கிற்கு சில வழிகாட்டு நெறிகளைத் தருகின்றன.

சதகம் என்றால் நூறு பாடல்கள் அடங்கிய நூலாகும்.

இங்கு அம்பலவாணக் கவிராயர் பாடிய அறப்பளீசுர சதகம் மற்றும் குமரேச சதகம் ஆகிய இரு நூல்களிலிருந்து ஆறு பாடல்களைப் பார்ப்போம்.

குமரேச சதகம்

இந்த சதகத்தில் வரும் 19ஆம் பாடல் உடல் நலம் பற்றிக் கூறுகிறது.

     உடல்நலம்

மாதத் திரண்டுவிசை மாதரைப் புல்குவது,
      மறுவறு விரோசனந்தான்
வருடத் திரண்டுவிசை தைலம் தலைக்கிடுதல்
      வாரத் திரண்டுவிசையாம்

மூதறிவி னொடுதனது வயதினுக் கிளையவொரு
      மொய்குழ லுடன்சையோகம்
முற்று தயிர் காய்ச்சுபால் நீர்மோர் உருக்குநெய்
      முதிரா வழுக்கையிள நீர்

சாதத்தில் எவளாவா னாலும்பு சித்தபின்
      தாகந் தனக்குவாங்கல்
தயையாக உண்டபின் உலாவல்லிவை மேலவர்
      சரீரசுகம் ஆமென்பர்காண்

மாதவகு மாரிசா ரங்கத்து தித்தகுற
      வள்ளிக்கு கந்தசரசா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
      மலைமேவு குமரேசனே.

இதன் பொருள் : பெருந்தவம் புரிந்த  மங்கையும் மான் வயிற்றில் பிறந்தவளுமான வேடர் குல வள்ளியம்மையின் மனதிற்கு இசைந்த மணவாளனே! மயிலில் மீது ஏறி திருவிளையாடல் புரியும் குகனே! திருப்புல்வயலில் உயர்ந்த மலையின்  மேல் எழுந்தருளியிருக்கும் குமரேசனே!

மாதத்திற்கு இரண்டு முறை பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது

குற்றமற்ற பேதி (வயிற்றுக்கழிவு) மருந்தை வருடத்திற்கு இரு முறை எடுத்துக் கொள்வது

எண்ணெயைத் தலையில் தேய்த்து வாரத்திற்கு இரு முறை குளிப்பது

பேரறிவு கொண்டு தன் வயதினுக்கு இளைய அடர்த்தியான கூந்தலையுடைய  ஒரு பெண்ணுடன் சேர்வது (உறவு கொள்வது)

முதிர்ந்த தயிர், காய்ச்சிய பால், நீர் மோர், உருக்கிய நெய், முற்றாத வழுக்கைக் கொண்ட இளநீர், எவ்வளவு உணவானாலும் கூட உண்ட பிறகே தண்ணீரை அருந்துதல்,

உடம்பின் மீது இரக்கம் கொண்டு உண்ட பிறகு உலாவுதல்,

ஆகிய இவற்றை, பெரியோர் உடல்நலம் தருபவை ஆகும் என்று கூறுவர்.

அடுத்து 30ஆம் பாடலில் நோய் வரும் காரணங்கள் பட்டியலிடப்படுவதைக் காணலாம். இவற்றையெல்லாம் தவிர்த்தால் நோயற்ற வாழ்க்கை அமையும் என்பது கவிராயரின் வழிகாட்டு நெறியாகும்.

நோய்க்கு வழிகள்

கல்லினால் மயிரினால் மீதூண் விரும்பலால்
      கருதிய விசாரத்தினால்
கடுவழி நடக்கையால் மலசலம் அடக்கையால்
      கனிபழங் கறிஉண்ணலால்

நெல்லினால் உமியினால் உண்டபின் மூழ்கலால்
      நித்திரைகள் இல்லாமையால்
நீர்பகையி னால்பனிக் காற்றின்உடல் நோதலால்
      நீடுசரு கிலையூறலால்

மெல்லிநல் லார்கலவி அதிகம்உள் விரும்பலால்
      வீழ்மலம் சிக்குகையினால்
மிகுசுமை யெடுத்தலால், இளவெயில் காய்தலால்
      மெய்வாட வேலைசெயலால்

வல்லிரவி லேதயிர்கள் சருகாதி உண்ணலால்
      வன்பிணிக் கிடமென்பர்காண்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
      மலைமேவு குமரேசனே.

இதன் பொருள் :

மயிலில் மீது ஏறி திருவிளையாடல் புரியும் குகனே! திருப்புல்வயலில் உயர்ந்த மலையின்  மேல் எழுந்தருளியிருக்கும் குமரேசனே!

அதிக உணவை விரும்பி உண்ணல்

மனதை வருத்தும் கவலை கொள்ளல்

மிகுந்த தொலைவு நடத்தல்

மலசலங்களை அடக்குதல்

மிகவும் கனிந்த பழம், பழைய கறிகளையும் உண்ணல்

உணவில் நெல்லும் உமியும் இருக்க அதை உண்ணல்

உணவுக்குப் பின் குளித்தல்

தூக்கமில்லாமை

உடலுக்கு ஒவ்வாத நீரிலே குளித்தல்

பனி கலந்த காற்றிலே உடல் வருந்துவதால்

சருகும் இலையும் நீண்டநாள் குடிக்கும் நீரில் ஊரில் கிடக்க அதைப் பருகுவதால்

மெல்லியலார் தம் சேர்க்கையை மிகவும் மனம் கொண்டு விரும்புதல்

கழியும் மலம் சிக்குதல்

பெரும் சுமையைத் தூக்குதல்

காலை வெயிலில் காய்தல்

உடல் தாங்க முடியாத வேலைகளைச் செய்தல்

கொடிய இரவில் தயிர், கள், கீரை போன்ற கறிகாய்களை உண்ணல்

ஆகிய இவை அனைத்தும் கொடிய நோய் உருவாவதற்கான காரணங்களாக அமையும்.

சருகு ஆதி என்பதற்கு இஞ்சி, நெல்லி, பாகற்காய், கஞ்சி என்ற பொருளும் உண்டு.

அடுத்து அம்பலவாணக் கவிராயர் இயற்றிய அறப்பளீசுர சதகத்தில் வரும் நான்கு பாடல்களைப் பார்ப்போம்.

இதில் வரும் 50வது பாடல் எந்த நாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது.

முழுக்கு நாள்

வருமாதி வாரந் தலைக்கெண்ணே யாகாது
          வடிவமிகு மழகு போகும்
    வளர்திங்க ளுக்கதிக பொருள்சேரு மங்கார
          வாரந் தனக் கிடர்வரும்
திருமேவு புதனுக்கு மிகுபுத்தி வந்திடுஞ்
          செம்பொனுக் குயரறிவு போந
    தேடிய பொருட்சேத மாம்வெள்ளி சனியெண்ணெ
          செல்லமுண் டாயு ளுண்டாம்
பரிகார முள தாதி வாரந் தனக்கலரி
          பௌமனிக் கான செழுமண்
    பச்சறுகு பொன்னவற் காவெருந் தூளொளிப்
          பார்க்கவற் காகு மெனவே
அரிதா வறிந்தபே ரெண்ணெய்சேர்த தேமுழுக்
          காடுவா ரருமை மதவே
    ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள
          ரறப்பளீ சுர தேவனே.

இதன் பொருள் : அரிய மதவேள் அனுதினமும் மனதில் வழிபடும்  சதுரகிரியில் உறையும் அறப்பளீசுர தேவனே!

ஞாயிற்றுக்கிழமை தலைக்கு எண்ணெய் இடக்கூடாது. அப்படிச் செய்தால் உருவத்தில் உள்ள அழகு நீங்கும்.

திங்கட்கிழமைகளில் முழுகினால் அதிக செல்வம் சேரும்.

செவ்வாய்க்கிழமைகளில் முழுகினால் துன்பம் உண்டாகும்.

அழகு மிகும் புதன்கிழமைகளில் முழுகினால் சிறந்த அறிவு உண்டாகும்.

நல்ல வியாழக்கிழமைகளில் முழுகினால் அறிவு கெடும்.

வெள்ளிக்கிழமைகளில் முழுகினால் சேர்த்து வைத்த செல்வம் அழியும்.

சனிக்கிழமைகளில் முழுகினால்  செல்வம் சேரும். ஆயுளும் கூடும்.

ஆனால் இப்படி தகாத கிழமைகளில் முழுகினால் பரிகாரமும் உண்டு.

ஞாயிற்றுக்கிழமைக்கு அலரி மலர்

செவ்வாய்க்கு நல்ல மண்

வியாழனுக்கு பசுமையான அருகம்புல்

ஒளியுடைய வெள்ளிக்கு எருப் பொடி.

அருமையாக உணர்ந்தவர்கள் இப்படி எண்ணெயுடன் இவற்றையும் சேர்த்து நீராடுவர்.

அடுத்து 51ஆம் பாடல் மருத்துவன் யார் என்பதற்கான இலக்கணத்தை வரையறுப்பைக் கூறுகிறது:

மருத்துவன்

தாதுப் பரீக்ஷைவரு காலதே சத்தொடு
          சரீரலட் சண மறிந்து
    தன்வந்த்ரி கும்பமுனி தோர்கொங் கணர்சித்தர்
          தமதுவா கட மறிந்து
பேதப் பெருங்குளிகை சுத்திவகை மாத்திரை
          பிரயோக மோடு பஸ்பம்
    பிழையாது மண்டூர செந்தூர லக்ஷம்
          பேர்பெறுங் குணவா கடம்
சோதித்து மூலிகா விதநிகண் டுங்கண்டு
          தூய தைலம் லேகியஞ்
    சொல்பக்கு வங்கண்டு வருரோக நிண்ணயந்
          தோற்றியே யமிர்த கரமாய்
ஆதிப் பெருங்கேள்வி யுடையனா யுர்வேத
          னாகுமெம தருமை மதவே
    ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள
          ரறப்பளீ சுர தேவனே.

இதன் பொருள் :

அரிய மதவேள் அனுதினமும் மனதில் வழிபடும்  சதுரகிரியில் உறையும் அறப்பளீசுர தேவனே!

நாடிப் பரீட்சையையும் காலத்தையும் இடத்தையும் உடலின் இயல்பையும் உணர்ந்து,

தன்வந்திரி, கும்பமுனி, கொங்கணரும் சித்தர்களும் எழுதிய மருத்துவ நூலைக் கற்றுணர்ந்து

பல்வகைப்பட்ட பெருமை மிக்க குளிகைகளையும், மருந்துச் சரக்குகளைத் தூய்மை செய்யும் முறைகளையும், மாத்திரைகளையும், பஸ்மத்தையும் கொடுக்கும் தன்மையையும் தவறாது கற்று

மண்டூரம், செந்தூரம் ஆகியவற்றின் இயல்புகளைப் புகழ் பெற்ற மருத்துவ நூலின் வாயிலாகக் கற்றுத் தேர்ந்து

பல வேர் வகைகளின் நிகண்டையும் அறிந்து,

தூய எண்ணெயும், லேகியமும் செய்யும் முறையைச் சொல்லியவாறு அறிந்து,

வரும் நோய்களின் முடிவை வெளிப்பட உணர்ந்து

கை நலம் உடையவனாக

முற்காலத்திலிருந்து வழிவழியாக வரும் கேள்வி அறிவையும் உடையவனே

மருத்துவன் ஆவான்.

அடுத்து 65ஆம் பாடல் உணவில் எவற்றை விலக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது.

உணவில் விலக்கு

கைவிலைக் குக்கொளும் பாலகப் பால்வருங்
          காரார்க் கரந்த வெண்பால்
    காளான் முருங்கைசுரை கொம்மடி பழஞ்சோறு
          காந்திக் கரிந்த சோறு
கெவ்வையில் சிறுகீரை பீர்க்கத்தி வெள்ளுப்பு
          தென்னைவெல் லமலா வகஞ்
    சீரிலா வெள்ளுள்ளி யீ ருள்ளி யிங்குவொடு
          சிறப்பில்வெண் கத்திரிக் காய்
எவ்வமில் சிவன்கோயி னிர்மா*ல் யங்கிரண
          மிலகுசுட ரில்லாத வூ
    ணிவையெலாஞ் சீலமுடை யோர்களுக் காகா
          வெனப்பழைய நூலுரை செயும்
ஐவகைப் புலன்வென்ற முனிவர்விண் ணவர்போற்று
          மமலனே யருமை மதவே
    ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள
          ரறப்பளீ சுர தேவனே. 65

இதன் பொருள் :

ஐம்புலன்களையும் வென்ற முனிவரும் வானவரும் வாழ்த்தும் தூயவனே! அரிய மதவேள் அனுதினமும் மனதில் வழிபடும்  சதுரகிரியில் உறையும் அறப்பளீசுர தேவனே!

கை விலைக்கு வாங்கும் பால்

ஆட்டுப்பால்

காரா பசுவினிடம் கறந்த வெண்மையான பால்

காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழஞ்சோறு, காந்திக் கரிந்த சோறு,  செவ்வை இல்லாத சிறுகீரை, பீர்க்கு, அத்தி, வெள் உப்பு, தென்னை வெல்லம், பிண்ணாக்கு, சிறப்பில்லாத உள்ளிப்பூண்டு, சிறப்பில்லாத வெங்காயம், பெருங்காயம், சிறப்பு இல்லாத வெள்ளைக் கத்தரிக்காய், குற்றம் அற்ற சிவபெருமான் திருக்கோயிலில் இருந்து கழிக்கப்பட்ட பொருள்கள்,

சூரியன் ஒளியும், விளக்கும் இல்லாத காலத்து உணவு

ஆகிய இவை அனைத்தும்  ஒழுக்கமுடையோருக்கு

ஏற்கத் தகாதவை என பழமையான அற நூல்கள் கூறும்.

தவிர்க்க வேண்டியவற்றை அறிந்து கொண்டோம். இனி 73ஆம் பாடல் எந்த இலையில் உண்ண வேண்டும் என்ற முறையைக் கூறுகிறது.

உண்டியிலையும் முறையும்

வாழையிலை புன்னபுர சுடனற் குருக்கத்தி
          மாப்பலாத் தெங்கு பன்னீர்
    மாகிலமு துண்ணலா முண்ணாத வோவரசு
          வசனஞ் செழும் பாடலம்
தாழையிலை யத்தியா வேரண்ட பத்திரஞ்
          சகதேவ முண் முருக்குச்
    சாருமிவை யன்றிவெண் பாலெருக் கிச்சிலிலை
          தனினுமுண் டிடவொ ணாதலால்
தாழ்விலாச் சிற்றுண்டி நீரடிக் கடிபருகல்
          சாதங்கள் பல வருந்தல்
    சற்றுண்டன மெத்தவீ நணிதனையு மெய்ப்பிணி
          தனக்கிட மெனப் பருகிடார்
ஆழிபுடை சூழுலகில் வேளாளர் குலதிலக
          னாகுமெம தருமை மதவே
    ளனுதினமு மன் தினினை தருசதுர கிரிவள
          ரறப்பளீ சுர தேவனே.

இதன் பொருள்:

நாற்புறமும் கடல் சூழ்ந்த உலகில் வேளாளர் மரபில் சிறப்புற்றவன் ஆகிய எமது அருமை அரிய மதவேள் அனுதினமும் மனதில் வழிபடும்  சதுரகிரியில் உறையும் அறப்பளீசுர தேவனே!

வாழையிலை, புன்னை, புரசு, நல்குருக்கத்தி, மா, பலா, தெங்கு, பன்னீர் ஆகிய இலைகளில் குற்றமற்ற உணவைப் படைத்து உண்ணலாம்.

உண்ணத்தகாதனவோ எனில்,

அரசு, வனசம், செழும்பாடலம், தாழையிலை, அத்தி, ஆல் ஏரண்ட பத்திரம், சகதேவம், முள்முருக்கு ஆகிய இவையோடு

வெண்மையான பாலை உடைய எருக்கிலை, இச்சில் இலைகளிலும் உண்பது கூடாது.

இடைவிடாத சிற்றுண்டி, நீர் அடிக்கடி பருகல், பல் வகையான சோறுகளை உண்ணுதலும், சிறிதாக உண்ணல், மிகுதியாக உண்ணல் ஆகிய இவை அனைத்தும் உடல் நோய்க்கு இடமாகும்

ஆகவே தவிர்க்க வேண்டிய இவற்றைத் தவிர்த்து உண்ணல் வேண்டும்.

மேலே கண்ட பாடல்களில் பல விஷயங்கள் பெரு நகரங்களில் வாழ்வோருக்கு இன்றைய கால கட்டத்தில் பொருந்தாது. ஏனெனில் அவர்களுக்குப் பாலும் இப்படிக் கிடைக்காது; இலைகளில் சோறு உண்ணுதலும் அரிது.

ஆனால் கிராமங்களில் வாழும் லட்சக் கணக்கானோருக்கு இந்த விதிகள் இன்றும் பொருந்தும்; என்றும் பொருந்தும்.

கூடவே மேலை நாட்டு ஆய்வாளர்கள் நமது பழைய நூல்களை அலசி ஆராய்ந்து ஒவ்வொன்றாக கடைப்பிடிக்க ஆரம்பிப்பதையும் மனதில் கொண்டால், இவற்றை கூடிய மட்டில் நாம் கடைப்பிடிப்பது நமது ஆரோக்கியத்தை உறுதிப் படுத்தும் ஆயுளை நீட்டிக்கும் என்பதை அனுபவத்தால் அறியலாம்.

காலத்தால் அழியாத இப்படிப்பட்ட பாடல்கள் நூற்றுக் கணக்கில் நமது நூல்களில் உள்ளன. அவற்றை அறிவோம். ஆரோக்கியம் பெறுவோம். ஆயுளை நீட்டித்துக் கொள்வோம்

***

tags- அம்பலவாணக் கவிராயர் ,அறப்பளீசுர சதகம், குமரேச சதகம், நோயில்லா நெறி

புத்தக அறிமுகம் – 42

மஹாகவி பாரதியார் பற்றி அறிய உதவும் நூல்களும் கட்டுரைகளும்

பாகம் – 2

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்          

31. ஸ்ரீ அரவிந்த தரிசனம் – அமுதன் நினைவு அஞ்சலி!

32. ஸ்ரீ கபாலி சாஸ்திரி ஸ்ரீ அரவிந்தரை தரிசனம் செய்ய உதவிய மஹாகவி பாரதியார்!

33. புதுவை வாழ்க்கை – 1

34. பாரதியாரின் தம்பி – பரலி சு. நெல்லையப்பரின் வாழ்க்கைச் சித்திரம்

35. மஹாத்மாவும் மகா கவியும்! – கல்கியின் கட்டுரைகள்!

36. பாரதிதாசன் கவிதைகள்!

37. நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை கவிதைகள்!

38. பாரதி பற்றிய கட்டுரைகள் – ரா.பி.சேதுப்பிள்ளை

39. காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் – சீனி.விசுவநாதன்

40. மகாகவி பாரதி – சில புதிய உண்மைகள் – சீனி.விசுவநாதன்

41. சுப்பிரமணிய பாரதி – பிரேமா நந்தகுமார்

42. ஆஷ் கொலை வழக்கு – ரகமி

43. மகாகவி பாரதியார் (கட்டுரை) – விஜயா பாரதி

44. வரகவி பாரதியார் – பண்டித வித்துவான் தி.இராமானுசன்

45. மகாகவி பாரதியார் – எஸ்.திருச்செல்வம்

46. பாரதியார் – வரலாறும் கவிதையும் – ப.மீ.சுந்தரம்

47. பாரதியும் உலகமும் – ம.ப.பெரியசாமித் தூரன்

48. பாரதி யுகம் – ப.கோதண்டராமன்

49. இரு மகா கவிகள் – க.கைலாசபதி

50. பாரதி ஆய்வுகள் – க.கைலாசபதி

51. பாரதி சபதம் – மது.ச.விமலானந்தம்

52. பாட்டும் சபதமும் – மது.ச.விமலானந்தம்

53. புதுமைப்புலவன் பாரதி – சுகி சுப்பிரமணியன்

54. பாரதி வழி – ப.ஜீவானந்தம்

55. பாரதி பாடம் – ஜெயகாந்தன்

56. பாரதி கண்ட சித்தர்கள் – சி.எஸ்.முருகேசன்

57. பாஞ்சாலி சபதம் – ஒரு திறனாய்வு – சா.தாசன்

58 பாரதியார் கவிதைகளில் அணிநலம் (1) – (2) சிவ. மாதவன்

59. வீர வாஞ்சி – ரகமி

60 வழி வழி பாரதி – சேக்கிழார் அடிப்பொடி டி.என்.இராமச்சந்திரன்

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

பாரதியார் காலத்தை வென்ற மஹாகவி. அவரது சரித்திரம் ஆதாரபூர்வமாக, முழுமையாக இன்னும் வெளிவரவில்லை. ஆனால் அவரது மனைவி, மகள், அவருடன் பழகியவர்கள், அவரை நேசித்தவர்கள், அவரை அறிந்தவர்கள், அவரது நூல்களைப் படித்தவர்கள் அவ்வப்பொழுது பல செய்திகளைக் கட்டுரைகள் வாயிலாகவும் நூல்கள் வாயிலாகவும் தெரியப்படுத்தி வந்துள்ளனர்.

இந்த பாரதி இலக்கியம் பற்றிய கட்டுரைகளையும் நூல்களையும் படித்தால் அது பாரதியாரை அறிவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

சுமார் அறுபது ஆண்டுகளாகப் பாரதியைப் பயில்பவன் நான். அவருடைய கதைகள், கட்டுரைகள், கவிதைகளைச் சேர்த்து வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவரைப் பற்றி வந்த கட்டுரைகளையும், கவிதைகளையும், நூல்களையும் சேர்த்து வருகிறேன்.

அவரைப் பற்றி போற்றிப் பாடிய கவிதைகள் ஆயிரத்தைத் தொகுத்து பாரதி போற்றி ஆயிரம் என்று ஒரு தொடரில் அவற்றை வெளியிட்டேன்.

பாரதியார் பற்றிய நூல்கள் என்ற தலைப்பில் www.tamilandvedas.com இல் ஒரு தொடரில் அவரை அறிமுகப்படுத்தும் முக்கிய கட்டுரைகள் மற்றும் நூல்களையும் எழுதி வந்தேன். அவற்றில் முதல் முப்பது அத்தியாயங்களின் தொகுப்பு முதல் பாகமாக வெளியிடப்பட்டது. அடுத்த 30 அத்தியாயங்கள் இரண்டாம் பாகமாக மலர்கிறது.

முதல் பாகம் போலவே இந்த இரண்டாம் பாகமும் பாரதி அன்பர்கள் விரும்பும் நூலாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

இதை வெளியிட்ட லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக!

இந்தத் தொடர் வெளி வந்த போது ஏராளமான பாரதி அன்பர்களும் தமிழ் இலக்கியத்தில் பற்றுக் கொண்டோரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் பாராட்டுகளை நல்கினர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி.

பாரதியைப் பயில உதவும் இலக்கியத்தில் அவரை உரிய விதத்தில் அறிமுகப்படுத்த இருக்கும் மேலும் பல நூல்களை இந்த இரண்டாம் பாகத்தில் காண வாருங்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். நன்றி.

பங்களூர்                                               ச.நாகராஜன்

21-3-2022 

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

J P Vaswani’s Quotations; September 2022 calendar (Post No.11,227)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 11,227

Date uploaded in London – 30 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

September 1- Rishi Panchami , 3 Radha Ashtami, 5- Teachers Day, 8 Onam, 
9 Ganesh Visarjan , 10 Pitru Paksha Shradh begins , 11- Subrahmanya Bharatiyar Memorial Day17 Viswakarma puja , 25
Pitru Paksha Shradh ends , 25 Mahalaya Amavasai, 26 -Navratri Begins

Full moon day- September 10, New moon Day- 25, Ekadasi Fasting Days- 6, 21. Auspicious days- 1, 5, 7, 8, 9, 12

Sadhu Vaswani (1879 – 1966), an educationist and philosopher, was a sage of modern India. His disciple was J P VASWANI (1918-2018); following quotations are taken from J P Vaswani’s speeches and books.

September 1 Thursday

When your mind and heart are uncluttered, when they are filled with light, joy-giving thoughts, your spirit too, can soar high!

xxx

September 2 Friday

“The prayer of a pure heart never goes in vain!”

xxx

September 3 Saturday

Thoughts are things, thoughts are forces, and thoughts are the building blocks of life. Therefore we must keep our thoughts clean. Whatever we think about, we bring about.

xxx

September 4 Sunday

“Wealth does not count; words do not count; actions count!”

xxx

September 5 Monday

When you unclutter your mind and cleanse your thoughts, you will find that confidence, hope and optimism fill your mind and you will achieve success and happiness.

xxx

September 6 Tuesday

A good way to overcome stress is to help others out of theirs.

xxx

September 7 Wednesday

The best sleeping pill is a clear conscience

xxx

September 8 Thursday

“The secret of successful relationships is found in an understanding heart, preferably your own.”
xxx

September 9 Friday

“The man of true compassion serves without judgement.”

xxx

September 10 Saturday

All sin and suffering have but one source – man’s denial of his own divinity.

xxx

September 11 Sunday

“It’s wise to burn anger, before anger itself burns your peace and happiness.”

xxx

September 12 Monday

Anger becomes righteous when you use it to defend the rights of another, without nursing any selfish motive.

xxx

September 13 Tuesday

We are so obsessed about external cleanliness that we tend to neglect what’s on the inside, don’t we? And isn’t what’s inside far more important?

September 14 Wednesday

In everything that you do, pour the best that is in you. Therefore, work not for wages, work for love.

Xxx

September 15 Thursday

“Through service of mankind we can wipe away much of our bad karma

Xxx

 September 16 Friday

“Whenever you feel tension mounting up, just smile: you will break the force of tension.”

xxx

September 17 Saturday

The Guru is the “eye” surgeon, who can restore our inner vision.

xxx

September 18 Sunday

Ask yourself these things before you speak:

Is it true?
Is it necessary?
Will it hurt anybody?

xxx

September 19 Monday

If we wish to be happy, we must unclutter our house — the house of our heart. We must throw out all the joy-killers, the negative thoughts of greed, ill will, jealousy, malice and envy. But throwing these out is not enough – we must fill our minds with happy thoughts – thoughts of prayer, love, kindness, prosperity and peace.

xxx

September 20 Tuesday

If the heart be dark, books can teach nothing!

xxx

September 21 Wednesday

“If you want peace of mind, shut the gate behind you. Shut the gate behind you, so that your worries are left behind. Do not touch the past – for remember, the past is dead and gone.”

Xxx

 September 22 Thursday

Two passions specially must be combated and conquered. The first is impurity; the second is anger.

Xxx

September 23 Friday

“To be nervous is to lose half the battle; to be nervous is to burn mental energy to no useful purpose.”

Xxx

 September 24 Saturday

Many people ‘React’ and then ‘Regret’…Learn therefore to Reflect and then Respond.

Xxx

 September25 Sunday

“When you eliminate the ego, you will grow in the realization that all of us are equal in the eyes of God.”

xxx

September 26 Monday

“Faith is illumination, faith is light. Worry, on the other hand, is darkness.”

xxx

September 27 Tuesday

“Keep yourself active all the time. The best of noblest of actions is to bring comfort to the comfortless.”

xxx

 September 28 Wednesday

 “You cannot cheat others without first cheating yourself.”

xxx

September 29 Thursday

 Neither rites nor rituals, neither creeds nor ceremonies are needed to improve the condition of the world. All that is needed is to love one another.

xxx

September 30 Friday

“Silence and solitude are as essential to spiritual growth, as are water and sunshine to a tree.”
xxxxx subham xxxx

Tags- J P Vaswani, Quotes, Quotations, September 2022, Calendar

 SWAMI SIVANANDA JAYANTHI – SEPTEMBER 8