Acharya’s Sandals sent to Banaras Hindu University!

BHU Stamp

Compiled by London swaminathan

Date: 11 November 2015

POST No. 2321

 

Time uploaded in London :– 14-01

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

The respect which His Holiness Sringeri Shankaracharya had for tradition was so deep that he would not give his approval for an innovation even though it was not against the Sastras (scriptures)

Pandit Madan Mohan Malaviya (1861- 1946) sent Dattatreya Krishna Tamale as the representative of himself and others to request His Holiness SRI SACHIDANANDA SIVA ABHINAVA NARASIMHA BHARATI SVAMINH (as the Mutt Chief 1879-1912) to come to Banaras in person and lay the foundation stone for the Hindu University there. He came to Sringeri with a letter of introduction from P.N Krishnamurthi, the then Devan of Mysore. After paying his respects to his H H, he opened the topic and conveyed to H H the earnest prayer of the Pandit and the public of Northern India generally to favour them with a visit which had long been overdue.

MM Malaviya

Tamale: it is long since an Acharya of Sringeri paid a visit to our parts and people are eagerly looking forward to Your Holiness’ visit at least on this occasion.

HH: I am very glad to hear of the noble work which the Pandit has taken up and of the earnest longing of the people there to see me. It is certainly proper that we should consent to carry out your request. But the distance that separates us from Banaras is very great and the date fixed for the laying of the foundation stone is so near that it is not possible for us to conform to our daily duties and yet reach Banaras in time. I am sorry I have to disappoint you.

Tamale: in our anxiety to have your Holiness at Banaras in time for the function, we have deeply thought over this aspect also and have come to a decision. We intend arranging for a special train or a special fleet of motor cars to take your Holiness and retinue without any hindrance to  the performance of the daily rites. I request therefore your Holiness will be pleased to comply with our request.

HH: it certainly gladdens us to know the deep devotion and enthusiasm of the people there to have us visit them. But we are constrained to point out our difficulty. Any kind of vehicle is prohibited for a Sanyasi. It is well known that our founder Sri Shankaracharya Bhagavatpada travelled throughout our country only on foot except on rare occasions when he availed himself of his power of yoga when he had to traverse long distances urgently. His successors also never used any vehicle. It was only during the time of Sri Vidyaranya that the Royal insignia like the palanquin, umbrella, thrown, crown etc were assigned to the head of this mutt. It is not possible to concede that our predecessors who were fully conversant with the Sastras accepted without reason or justification such an innovation.

sringeri previous

It has to be surmised they accepted it not with any selfish motive but only with a view to attract ordinary people who were easily amenable to outward forms. So far as the later Acharyas are concerned, they did right in accepting the same, as it had the sanction of their predecessors. It is definitely stated the obedience to the word of Guru will not operate as a violation of any vow.

Astautaanya vratagnaani aapo muulam grutam payah

Havi braahmanakaamyaa sa gurorvacanam ausadham

Such is our justification for using palanquins.

Now you suggest another kind of vehicle, a train or a motor car. It does not seem to us travelling in either of them more objectionable. The only thig is that our predecessors have not been using it.  Further even though an act may be meritorious, it is not proper to do it if it is likely to be censured by the people. As no Acharya till now has travelled in a train or in a motor car, the people are likely to censure such an innovation.

 

Asvargyam lokavidvishta dharmayaasaret na tu

We are unwilling, therefore, to be the first to adopt this new kind of travel. When Sri Rama who was God incarnate and knew quite well  that Sita was without ant blemish , chose to exile her in deference to a stray popular calumny, how much more careful must be such as ourselves in adopting a method not sanctioned by tradition? I hope you appreciate my position. If instead of asking us to go to Banaras, you take with you the sacred sandals of our revered Guru and have the function done in their holy presence, I am sure all your objects will be fulfilled.

Tamale: I bow to your Holiness’ decision. I am sure that the devotees in the North will be struck with admiration and pleasure when they hear about your Holiness’ firm respect far more than they will be if your Holiness had conceded to our request.

padukas-1

A Model of Sandals (not the orginal one)

(It may be mentioned that Sri Tamale accordingly took the sandals for the function at Banaras and that after its completion Pandit Madan Mohan Malaviya came in person to Sholavandan (in Madurai District) to pay his respects to and thank HH and return the sandals)

Source: Golden Sayings by Shri Jnananda Grantha Prakasana Samiti, Thenkarai, Madura District, Year 1969

–Subham–

“பிராமணா போஜனப்பிரியா, நாரதா கலகப்பிரியா”

IMG_7068 (2)

Compiled by London swaminathan

Date: 11 November 2015

POST No. 2320

 

Time uploaded in London :– காலை 8-16

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

பழைய கால நகைச் சுவை நூலான — பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை!

நூலைக் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

IMG_7072 (2)

போளி வடை சாப்பிட்ட ஸம்வாதம்

தண்டுலபுரம் பட்டாமணியக்காரர் சம்சாரம் அன்னபூரணியம்மாள் வீட்டில் குருவும் சீஷனும் திருப்தியாக புசித்துவிட்டு மீளுகையில் கீழே குனியமுடியாமல் சீஷனைப் பார்த்து, “அடே! பிரமானந்த சிஷ்யா! என் காலில் செருப்பு இருக்கிறதா பாரடா” என்றார். சிஷ்யனும் வயிறு நிரம்ப புசித்திருக்கிறபடியாலே குனிந்து பார்க்கச் சக்தியற்று ஆகாசத்தைப் பார்த்து, “சுவாமி, நட்சத்திர மண்டலம் வரை எங்கும் தேடிப்பார்த்தேன். காணப்படவில்லை” என்றான்.

சீ!சீ! பிருஷ்டா, தலை குனிந்து கீழே தேடடா” என்று குருவானவர் கோபித்துக்கொண்டு சொல்ல, “தங்களைப் பார்க்கிலும் குறைவாகச் சாப்பிட்ட முட்டாளென்று நினைத்தீரோ” என்று சீடன் ஜவாப்பு சொன்னான். இவர்கள் நம்மைப் பார்க்கிலும் போஜனப்ரியர்கள் யார் இருக்கப் போகிறார்கள் என்று நடந்து போகையில் வேறொரு சாப்பாட்டு ராமன், தெருத் திண்ணையில் படுத்துப் புரண்டு வயிற்றைத் தட்டிக்கொண்டு இப்படி அப்படி நெளிந்து அவஸ்தைப் பட்டுக்கொண்டி ருக்கையில் அவனது தாயார் வந்து அருகில் நின்று, “அப்பனே, இரண்டு ஓமம் தரட்டுமா?” என்று கேட்டாள். அதற்கவன் நகைத்துக் கொண்டு ஒரு ஓமத்துக்கு இடமிருந்தால் இன்னும் இரண்டு போளி சாப்பிட்டிருக்கமாட்டேனா? என்றான்.

இதைச் செவியுற்ற சீடனும் குருவும் இது ஏது நம்மைப் பார்க்கிலும் அகாதமாயிருக்கின்றது என்று தங்களிருப்பிடம் சேர்ந்தார்கள்.

IMG_7072 (3)

பிராமணா போஜனப் பிரியா

ஒரு நாள் ஜலக்கரையில் உட்கார்ந்து ஜெபம் பண்ணிக்கொண்டிருந்த பிராமணனண்டை மற்றொரு பிராமணன் வந்து “ஐயா, பெரியவரே! இன்று என் ஆத்தில் திவசம், பிராமணார்த்தத்திற்கு வரவேண்டுமென்று கூப்பிட்டான்.

“பிராமணா போஜனப்பிரியா, நாரதா கலகப்பிரியா” என்றபடி முடாமுழுங்கிப் பிராமணன் வேட்டை கிடைத்ததென்று கனைத்து, கொஞ்சமும் வஞ்சமன்னியில் இடுப்பில் கட்டியிருந்த அரைஞாண் அறுபடும்படியாகச் சாப்பிட்டுவிட்டு அடுத்த வீட்டுத் திண்ணையில் படுத்திருக்கும் பொழுது அவ்வீட்டுக்குரிய ஸ்த்ரீ, “ ஏங்காணும் சாஸ்திரிகளே, இப்படி திண்ணையில் விழுந்து புரளுகிறீர்களே! இரண்டு மினறு ஜலம் குடிக்கிறதுதானே என்று கேட்டதற்கு, “ அம்மா!   இரண்டு மினறு ஜலம் சாப்பிட இடமிருந்தால், இன்னும் இரண்டு வடையாவது திணித்திருக்க மாட்டேனா?” என்று சாவதானமாகப் பதில் சொல்லிவிட்டு எழுந்திருந்து தன் வீட்டை நாடிச் சென்றான்.

–Subham–

பசுமை இயக்கம் பரவட்டும்!

alapuza

எழுதியவர்:–  ச.நாகராஜன்

Date: 11 November 2015

Post No:2319

Time uploaded in London :– காலை- 4-46

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

ச.நாகராஜன்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

Part 1 posted on 6th November 2015;Part 2 posted on 7th Nov.;Part 3 on 8th Nov. ;Part 4 on 9th nov.;Part 5 – 11th Nov.

crop

5.பசுமை இயக்கம் பரவட்டும்!

 

உலகெங்கும் சுற்றுப்புறச்சூழலை மேம்படுத்தும் விதமாக பசுமை இயக்கம் பரவி வருகிறது. பச்சை நிறம் பாரம்பரியம் பாரம்பரியமாக வளத்துடனும், செழிப்புடனும் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடனும் அனைத்து நாகரிகங்களினாலும் போற்றப்பட்டு வருகிறது. ஆகவே பூமியைப் பசுமையாக வைக்க எண்ணும் நல்ல நோக்கத்திற்கு பசுமை  இயக்கம் என்று சூட்டப்பட்டுள்ள பெயர் பொருத்தமானதே!

இந்தப் பசுமை இயக்கத்தின் அங்கமாக புதிதாகக் கட்டப்படும் இல்லங்கள் மற்றும் நிறுவனங்கள் பசுமைக் கட்டிடங்களாக அமைக்கப்படுகின்றன. அதாவது சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு மாசு ஏற்படாவண்ணமும் தூய நீர் தூய காற்று ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படாமலும் ஆற்றலைச் சேமிக்கும் விதத்திலும் இவை அமைக்கப்படுகின்றன. காற்று நீர், ஆற்றல் இவற்றை சிக்கனமாகப் பயன்படுத்துவதோடு இவற்றை அனாவசியமாக வீணாக்காமல் பாதுகாக்கும் நடைமுறைகளை பசுமைக் கட்டிடக் கலை கொண்டுள்ளது.

வானளாவ உயரும் கட்டிடங்கள் ஒரு புறம் இருக்க அருகில் திறந்தவெளியாக நிலப்பரப்பு அதிகம் உருவாக்கப்படுவதும் இதன் ஒரு அம்சம் தான்!

இப்படிப்பட்ட பசுமைப் புரட்சியில் அனைவரும் பங்கு பெறலாம்; தன் அளவு முடிந்தவரை இயற்கை ஆதாரங்களை வீணாக்காமல் பாதுகாக்கலாம்.

தேவையற்றபோதெல்லாம் விளக்குகளை அணைப்பது, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது, குழாயைத் திறந்து விட்டு வேலைகளைச் செய்யாமல் அளவோடு நீரைப் பயன்படுத்துவது,காம்பாக்ட் ப்ளோரஸண்ட் பல்புகளை வாங்கி வீட்டில் பொருத்துவது, நாம் அன்றாடம் வாங்கிப் படிக்கும் செய்தித் தாள்களை மறுசுழற்சிக்கு உரிய முறையில் அனுப்புவது உள்ளிட்ட ஏராளமான எளிய பழக்க வழக்கங்களை ஒவ்வொருவரும் மேற்கொண்டால் ஆற்றல் சேமிப்பு அதிகமாகும்; ஆதார வளங்கள் வீணாவது குறைவாகும்!

தகவல் புரட்சி ஏற்பட்டு கணினி மயமாகி வரும் இன்றைய சூழ்நிலையில் அடுத்த பெரும் புரட்சியாக பசுமை இயக்கப் புரட்சி ஏற்படப்போவதாக அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். உலகைப் பசுமைத் தாயகமாகக் காப்பதற்கெனவே புதிய புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் அவை சுமார் ஒன்றரைக் கோடி பேருக்கு உலகமெங்கும் வேலை வழங்கும் என்ற நல்ல செய்தியையும் அறிவிக்கின்றனர்.

இந்தப் பசுமைப் புரட்சியின் பெருமை வாய்ந்த ஒரு அங்கமாக நம்மில் ஒவ்வொருவரும் ஆவோமாக!

to be continued………………………….

David Cameron’s Diwali Speech

IMG_7674

Compiled by London swaminathan

Date: 10 November 2015

Post No:2318

 

Time uploaded in London :– 18-49

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

BRITISH PRIME MINISTER DAVID CAMERON EXCITED ABOUT MODI’S FRIDAY VISIT:

In his 15 minute Deepavali speech at No10 Downing Street today (10th November 2015), Mr Cameron mentioned that he was excited about Modi’s Friday visit; He mentioned it three times. He is really excited. When he said it there was a big round of applause from the invitees. In an exciting and emphatic tone, he said that there is going to be 60,000 people at Wembley on Friday, which drew another round of applause. By British standards 60,000 for a politician in a foreign country is a very big number. British politicians draw only a few thousands even at their annual party conferences.

I was one of the 100 plus invitees to Diwali Party at Prime Minister’s house today. He gave an excellent speech in 15 minutes. Three times he mentioned that he was excited about Mr Modi’s visit this Friday.

As soon as I shook hands with him and said I am from Hindu Forum of Britain, the umbrella body of Hindu organisations in Britain, he called the photographer and posed with us for a picture. Official photographer will release the picture in three days (the invitation I got says it is only or personal use!)

IMG_7671

“You Hindus have contributed a lot; you have brought good values; Service is your contribution. You serve your family, you serve your community; you do service to the country. Cameron mentioned Ramayana twice in his speech, but with wrong accent:- Ramayaanaa!

Madhu Sastry , President of the Hindu temple organisation, recited Sanskrit mantras and welcomed David Cameron. Preeti Patel, Minister in the British Government, led Mr Cameron through the crowd, introducing all the prominent Gujaratis.

Cameron continued: “India is the largest democracy in the world. We are the most successful multi faith, multi ethnic, and multi religious democracy. Both of us are affected by Islamic State (ISIS) terrorism. India is a large investor in Britain. Britain has invested large amount in India. It is not just commercial relations. Together we can fight terrorism, together we can fight climatic change, and together we can fight poverty. Today the good news is that Burma has become a democracy. This is my sixth Deepavali with you Hindus. I am really excited this time because of Mr Modi’s visit this Friday.

We have to go into the origins of Diwali, meaning of Diwali; I know it stands for victory of good over evil; victory of light over darkness. Sorry I changed the time of Diwali this year to lunch time; this is to prevent my children

eating the Diwali sweets. (Immediately there was a big laughter).

(Today being a working day in Britain all the children are at school during day time)

“Thanks to all the Hindus, Sikhs and Jains attending the Diwali event here today. I know about the food served in the Sikh Gurudwaras 24 hours a day to every one whatever be the circumstances. It is a great service. I know the peace loving Jains. They celebrate Gandhi’ s birth day as a day of peace. You have contributed your values to this country.

IMG_7672

Cameron added: I know how you celebrate Diwali. Leicester has the best Diwali celebrations. They had garlands spreading over half a mile; Birmingham had over fifty events for Diwali. In London many events have taken place. Thanks to the Swaminarayan temple for a beautiful decoration (They arranged Annakut with lot of sweets and Radha Krishna and Swaminarayan statues inside David Cameron’s house.

Racism, Discrimination in Britain

Cameron was honest about the racism and discrimination in Britain. We have Preeti (Patel) in our government representing you. But I wouldn’t say that all walks of life have such representation. I know that there is racism, there is discrimination. Slowly it will change.

Over 100 prominent citizens from the Hindu, Sikh and Jain communities were invited for the event. I attended it as an executive committee member of the Hindu Forum of Britain and Chairman of the Chaplaincy Board in Hindu Forum.

David Cameron

(Picture of David Cameron.This is a file photo)

They served us only finger foods such as onion Bhaji, mini samosas, cakes, Indian sweets, Mutter paneer, Mango Lassi, and plenty of juice. But the girls were bringing the food again and again so that you can take as much you want. We were all standing and chatting till Cameron entered the room. Then nearly one hour was spent with the Prime Minister.

(Since we were not allowed to take any sort of equipment inside No 10 Downing Street, London, for security reasons, I have given you just a gist of the speech that I remembered.)

தீபாவளிக் கட்டுரை: தீப மங்கள ஜோதீ நமோ நம!

diya

Compiled by London swaminathan

Date: 10 November 2015

Post No:2317

Time uploaded in London :– காலை 5-13

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

இன்று தீபாவளித் திருநாள்! பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!

உலகில் இந்துக்களின் தனிச் சிறப்பு கடவுளை ஒளிரூபத்தில் வழிபடுவதாகும்; இதன் முத்தாய்ப்புதான் தீபாவளியும் கார்த்திகையும்! தமிழர்கள் கார்த்திகை நாளன்று வீடெங்கும் தீபங்களை ஏற்றி வைப்பர். வடக்கில் வாழும் நம் சகோதரர்கள் தீபாவளித் திருநாளன்று இவ்வாறு அகல் விளக்கு ஏற்றி வைப்பர்.

இந்த ஒளி வழிபாடு உலகம் முழுதும் இந்துமதம் இருந்த காலத்தில், எல்லா தேசங்களிலும் இருந்தது. மோசஸ் ஒளிரூபத்தில் ஆண்டவனைக் கண்டதும், பிற மதத் தலைவர்கள் ஒளிரூபத்தில் தேவதைகள் வந்ததாகக் கூறுவதும் இதையேதான். இந்துமதம் மறந்துபோன நாடுகளில் இந்த ஒளி வழிபாடு இப்போது இல்லை. ஆனால் பாரதத்தில் இன்று வரை அது நீடிக்கிறது.

சங்க இலக்கியத்தில் கார்த்திகை தீபம் பற்றிய குறிப்புகள் உண்டு; ஆனால் தீபாவளி பற்றி நேரடிக் குறிப்புகள் இல்லாவிடினும் மனைவியைக் குடும்ப விளக்கு என்று பாடும் சங்க இலக்கியப் பாடல்கள், விளக்கின் முக்கியத்துவத்தைக் காட்டும்.

diya2

இது எப்போது துவங்கியது?

உலகிலேயே மிகப் பழைய சமய நூல் ரிக் வேதம்; அதில் காயத்ரீ மந்திரம் இருக்கிறது. அது கடவுளை ஒளி உருவத்தில் வழிபடும் மிகப் பழைய துதி! பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், சிந்து, சரஸ்வதி, கங்கை நதிக்கரையில் ஒலித்த அந்த மந்திரம் இன்று வரை ஒலிக்கிறது. உலகில் வேறெங்கும் காணாத புதுமை இது. காயத்ரீ மந்திரத்தில் துவங்கிய ஒளி வழிபாடு பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷதத்திலும் தொடர்கிறது.

“அஸதோ மா சத் கமய

தமஸோ மா ஜோதிர் கமய

ம்ருத்யோர் மா அம்ருதம் கமய!”

உபநிஷதங்களிலேயே மிகவும் பழையது பிருஹதாரண்யக உபநிஷத்! அதில் “இருளிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்” — என்று வேண்டுகிறோம் (தமஸோ மா ஜோதிர் கமய).

ஆயிரம் தீபம்

பகவத் கீதையில் ஒளி வழிபாடு

அர்ஜுனனின் ஐயங்களை அகற்ற கிருஷ்ணன் விஸ்வரூபம் எடுத்தபோது அது ஆயிரம் சூரியன் ஒரே நேரத்தில் உதித்தது (கீதை 11-12) போலிருந்ததாம்! கீதையைப்படித்து அதில் ஊறிப்போன அணுகுண்டின் தந்தை ஓப்பன்ஹீமர் முதல் அணுகுண்டு சோதனையின் போது தோன்றிய ஒளியைப் பார்த்து அசந்து போய், இந்த (திவி ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய 11-12) ஸ்லோகத்தைச் சொன்னார்.

கண்ண பிரான் ஒளி ரூபத்தில் தோன்றியது மட்டுமின்றி பகவத் கீதையில் ஞானதீபம் (அறிவு ஒளி) என்ற உவமையைப் பல இடங்களில் கையாளுகிறான் (10-11; 4-3, 4-19)

ஆழ்வார்கள், நாயன்மார்கள்

பகவத் கீதையைத் தொடர்ந்து நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஞான விளக்கு பற்றிப் பாடுகின்றனர். விளக்கு, திரி உருவகத்தை அப்பர் பெருமான் தேவாரத்தில் பாடுகிறார். பூதத்தாழ்வார் திவ்யப் பிரபந்தத்தில் பாடுகிறார்.

ஞான தீபம்= ஞான விளக்கு ( பகவத் கீதை 10–11)

“பக்தர்களின் உள்ளத்தில் நிலைபெற்று என் அருளால் பிரகாசிக்கும் ஞான தீபத்தால் அஞ்ஞான இருளை நாசம் செய்கிறேன்:– இதற்கு அண்ணா (ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை) எழுதிய உரையில் சில பாடல்களை மேற்கோள் காட்டுவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது:–

போதாந்தப் புண்ணியர்கள் போற்றி சய போற்றியெனும்
வேதாந்த வீட்டில் விளக்கே பராபரமே – (தாயுமானவர்)

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா – நன்புருகு
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் — (பூதத்தாழ்வார்)

ஞான அக்னி = ஞானத் தீ ( கீதை 4-19 )
“எவனுடைய எல்லா கருமங்களும் ஆசையும், அதற்குக் காரணமான சங்கல்பமும் அறுபட்டு, ஞானத் தீயில் பொசுங்கிய வினைகளை உடைய அவனை பண்டிதன் என்று அறிவாளிகள் கூறுவர்”.

திருமூலர் பாடுகிறார்:

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே
– திருமந்திரம்

DEEPA LAKSHMI, FB

இதற்கெல்லாம் பின்னர்வந்த அருணகிரிநாதர் சந்தத் தமிழில் அழகாகப் பாடுகிறார்:

தீப மங்கள ஜோதீ நமோ நம

தூய அம்பல லீலா நமோநம

தேவ குஞ்சரி பாகா நமோ நம- அருள்தாராய்

பாரதியார், காயத்ரீ மந்திரத்தை தமிழில் மொழிபெயர்த்த வரிகளுடன் கட்டுரையை நிறைவு செய்வோம்:

“செங்கதித் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்ந்து தெளிகின்றோம்–அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக”

–சுப்பிரமணிய பாரதி

–சுபம்–

பாரதி நான் கண்டதும் கேட்டதும்:பி.ஸ்ரீ.

ப்ஹரடி2

எழுதியவர்:–  ச.நாகராஜன்

Date: 10 November 2015

Post No:2316

Time uploaded in London :– காலை- 4-56

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

பாரதி இயல்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! – 11

ச.நாகராஜன்

பாரதி நான் கண்டதும் கேட்டதும்

பாரதியைச் சந்திக்கும் பேறு பெற்றவர்களின் ஒருவரான பி.ஶ்ரீ எழுதிய நூல் இது. 195ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பதிப்பாக வெளி வந்த இந்த நூல் பின்னர் தொடர்ந்து 1963, 1966 என மேலும் பதிப்புகளைக் கண்ட சுவையான நூல்.

பி.ஶ்ரீ பற்றி அறியாத தமிழர்கள் இருக்க மாட்டார்கள். கவிதைச் சுவையை ரஸித்து ரஸித்து அனுபவிப்பவர். மற்றவரை அனுபவிக்கச் செய்பவர்.

முத்தான பத்து அத்தியாயங்கள்

இந்த நூலில் உள்ள அத்தியாயங்கள்:- கவிஞர் திரும்பினார், இதுவோ தமிழ், பாரதியின் நாட்டுப் பற்று, பாரதியாரின் தோழர்களுடன், கடைச் சங்கத்தில் புரட்சிக் கவிஞர், விருந்தும் மறு விருந்தும், பாரதியாரும் டாக்டர் நண்பரும், ஒரு நாளும் இல்லாத திருநாள், பாரதி சித்தாந்தம், மனம் வெளுக்கும் சாணை ஆகிய அருமையான பத்து அத்தியாயங்களை 116 பக்கங்களில் தருகிறது இந்த நூல்.

பாரதியார் பாடும் விதம்

முதல் கட்டுரையில் பாரதி பாடும் விதத்தை பி.ஶ்ரீ குறிப்பிடுகிறார் இப்படி: “இவர் பாட ஆரம்பித்து விட்டால் ஒரே வியப்பு – உணர்ச்சி மேலிட்டு நிற்கும். பாடப் பாட வசீகர சக்தி அதிகரித்துக் கொண்டே போகும். பராசக்தி வீர முரசு கொட்டிக் கோழைகளுக்குத் தைரியத்தை ஊட்டுவது போலவும், தரும முரசு கொட்டி அதருமத்தை வீழ்த்துவது போலவும் தோன்றும். பொதுவாகப் பாரதியாரின் தேசீய கீதங்களையெல்லாம் ஒரு வகையில் ’முரசுப் பாட;ல்கள்’ என்றே குறிப்பிடலாம்.

அடுத்த கட்டுரையில் அவர் பாரதியாரின் தமிழ் பற்றி ‘இதுவோ தமிழ்’ என வியக்கிறார். அவரது சொற்களைப் பார்ப்போம்: “பால கங்காதர திலகர், விபின சந்திரபாலர், லாலா லஜபதிராய் ஆகிய மூவரையும் தேசீய மும்மூர்த்திகளாகத் தமிழ் இளைருலகத்திற்குக் காட்டியவர் பாரதியார். லஜபதி ராய் ‘நாடு கடத்தப்பட்ட’தும் அது குறித்துப் பாரதியார் பாடிய பாட்டை ஒரு மாணாக்கன் இசையோடு உருக்கமாய்ப் பாடக் கேட்ட பின், ‘இதுவோ தமிழ்’ என்று வியந்து போனேன்.

தோழருடன் பாரதியார்

‘பாரதியாரின் தோழர்களுடன்’ என்ற கட்டுரையில் பி.ஶ்ரீ வையாபுரி பிள்ளையின் அனுபவத்தைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

‘என் குருநாதர் பாரதியார்’ என்ற நூலின் பதிப்புரையில் வையாபுரிப் பிள்ளை பின்வருமாறு கூறுகிறார்… பேசிக் கொண்டிருக்கும்போதே ஒரு சிறு சம்பவம் நிகழ்ந்தது. பாரதியாருக்குத் தாகம் அதிகமாயிருக்கிறதென்பதைக் குறிப்பால் உணர்ந்தேன். உடனே ‘ஐஸ்’ இட்டு ஆரஞ்சு நீர் கொண்டு வரும்படியாக ஒருவனை அனுப்பினேன். இதைத் தெரிந்து கொண்டு, ‘தண்ணீர் போதுமானது’ என்று அவர் கூறினார். அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் அந்தணர்கள் அல்லரென்று சொன்னேன். பாரதி கண்ணில் தோன்றிய ஓர் அபூர்வமான ஒளி என்னை வாட்டிற்று. தாம் அவ்வாறான சாதி வேறுபாடுகளைக் பாராட்டுவதில்லையென்று சிறிது கடுமையாக எனக்குத் தெரிவித்தார்.

‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே’ என்றும் ‘எல்லோரும் ஒன்ரென்னும் காலம் வந்ததே’ என்றும் அவர் தமது சுதந்திரப் பள்ளிற் பாடியுள்ளமை என் நினைவிற்கு வந்தது. முடிவில் நான் கொண்டு வரச் சொன்ன பானத்தையே பருகி நீர் வேட்கையைத் தணித்துக் கொண்டார்.

பாரதியின் சித்தாந்தம்

இன்னொரு நிகழ்ச்சியை ‘பாரதி சித்தாந்தம்’ என்ற கட்டுரையில் பி.ஶ்ரீ விவரிக்கிறார். அதில் முக்கியமான ஒரு பகுதி:-“கவிதை என்றால் என்ன? அதனால் என்ன பயன்?’ என்று ஒரு கேள்வி போட்டார் டாக்டர் சஞ்சீவி. பாரதியார் கேள்விக்குப் பதில் சொல்லாமலே ‘ஜயமுண்டு, பயமில்லை’ என்று பாடத் தொடங்யே, ‘பயனுண்டு பக்தியினாலே’ என்று அனுபல்லவியிலேயே தமது சித்தாந்தத்தை வெளியிடத் தொடங்கி விட்டார்…

இப்படியெல்லாம் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே பாரதியார் சிற்றுண்டிச் சாலையிலிருந்து திரும்பி வந்தார். வந்ததும், எங்கள் பேச்சை நிறுத்தி விட்டோம். டாக்டர் சஞ்சீவி கவிஞரை நோக்கி, ‘அந்தப் பாட்டை மறுபடியும் கேட்க ஆசைப்படுகிறோம். பாடுவீர்களா?” என்று வெகு வினயமாய்க் கேட்டார். இந்தத் தடவையும் பாரதியார் பாட்டைக் கமாஸிலேயே பாடிக் கொண்டு வந்தார். ஆனால் ஏதோ ஓர் இராணுவ கீதம் பாடுவது போலத் தோன்றியது. ‘இதை’ பாடிக்கொண்டே எங்கேயோ ஏதோ ஒரு போருக்குப் புறப்பட்டுப் போகலாமென்று தோன்றுகிறதே!’ என்றார் டாக்டர் சஞ்சீவி.

‘ஆம்; சோர்வுடன் போர், பயத்துடன் போர், அவநம்பிக்கையுடன் போர்; மூட நம்பிக்கையுடன் போர்; வறுமையுடன் போர்; செல்வச் செருக்குடன் போர்: தீமையுடன் போர் – இப்படி எத்தனையோ போர்களுக்குப் பட்டாளம் திரட்டி நடத்திக் கொண்டு போக வேண்டியிருக்கிறதே, அது தான் என் தொழில்!” என்றார் பாரதியார்.

இப்படி பல சுவையான நிகழ்ச்சிகளை பி.ஶ்ரீ தனக்கே உரித்தான பாணியில் அழகுறச் சொல்கிறார்.

பி.ஶ்ரீ. யார்?

இனி பி.ஶ்ரீயைப் பற்றி சில விவரங்களைப் பார்ப்போம்.

பி.ஶ்ரீயைப் பற்றி பிரபல எழுத்தாளர் தேவன் அவர்கள் பம்பாய் கோரேகான் தமிழ்ச் சங்க மலருக்காக எழுதிய ‘நான் கண்ட பி.ஶ்ரீ.’ என்ற கட்டுரையில் குறிப்பிடுவது (இந்தக் கட்டுரையை, சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கம் 1959ஆம் ஆண்டு நடந்த மாநாட்டை ஒட்டி வெளியிட்ட சிறப்பிதழில் மறு பிரசுரம் செய்தது)

தமிழ் உலகத்திற்குக் கம்பன் கவிதா நயத்தை திராக்ஷா பாகமாக எடுத்துக் கொடுத்தவர் பி.ஶ்ரீ. அவர்கள் எத்தனை முறை கம்பனைத் திரும்பத் திரும்பச் சொன்னாலும் தெவிட்டாத சுவையுள்ளது ராம காதை என்பதை இன்றும் எடுத்துக்காட்டி வருகிறவரும் அவர் தான்…..

கவி பாரதியாருடன் 1918ம் வருஷம் முதல் மூன்றாண்டுகள் நெருங்கிய தொடர்பு கொண்டு வந்தார். பாரதியார், பி.ஶ்ரீ அவர்களின் இல்லத்திற்கு வருவது வழக்கம் என்பதை நான் அவரிடமிருந்தே கேட்டறிந்திருக்கிறேன். தவிர, பாரதியாரின் இளமைப் பருவத் தோழரான வேதநாயகம் பிள்ளை இல்லத்திலும் வேறு பல இடங்களிலும், பாரதியாரே தம் பாடல்களைப் பாடக் கேட்டுக் கேட்டுப் பரவசமாகி இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக பி.ஶ்ரீ. தம்மை “தமிழின் ஆயுள் மாணவன்” என்று சொல்லிக் கொள்வதில் மிகுந்த திருப்தியும், பெருமையும் கொள்வார்.”

*

தேர்ந்த ஒரு தமிழ் இலக்கிய ரஸிகர், உலக மகாகவி ஒருவரைப் பற்றி எழுதி இருக்கும் இந்த நூலை பாரதி ஆர்வலர்கள் படிக்க வேண்டும்; தம் இல்லத்தில் உள்ள நூலகத்திலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்!

*****************

சுப்பிரமணியர் மீது விகடத் துதி

murugan vattam

Compiled by London swaminathan

Date: 9 November 2015

Post No:2315

Time uploaded in London :– 17-16

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

பழைய கால நகைச் சுவை நூலான — பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த பாடல்.

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

இராகம்- எதுகுல காம்போதி, தாளம்- ஏகம்

பல்லவி

சொல்லையா கந்தா- துரை மகனே அதைச்

சொல்லையா கந்தா

murugam balan

அநுபல்லவி

தெள்ளுமயிலிருக்கத் தெய்வானையும் இருக்க

வள்ளி மயிலுக்காக வனந்தேடிப் போனதென்ன (சொல்லையா…)

சரணங்கள்

தாரமிரண்டிருக்கத் தால மாமனுமிருக்க

ஆருமறியாத அகதிபோலானதென்ன (சொல்லையா…)

அன்னை தந்தைகளிருக்க அம்மான் மகளிருக்கச்

சன்னாசிக் கோலமான சங்கதியெல்லாம எனக்குச் ((சொல்லையா…)

தந்தையைச் சுற்றிவந்து தமையன் கனியெடுத்தான்

மந்தையைச் சுற்றிவந்து மதிகெட்டுப் போனதென்ன (சொல்லையா…)

கூறிய அஞ்சுமுகன் குழந்தை நீயானாக்கால்

ஆறுமுகமான அதிசயத்தையெனக்குச் (சொல்லையா…)

உற்றுவளர்த்த பிள்ளை ஒன்றுக்கிரண்டிருக்க

பெற்றதகப்பன் முந்திப் பிச்சையெடுத்துண்டதென்ன (சொல்லையா…)

வல்லப்புரம் செயிக்க மாட்டாமலுங்களப்பன்

பல்லைத் திறந்துவிட்ட பரியாசத்தையெனக்குச் (சொல்லையா…)

சேமநிதியிருக்கத் திருப்பாற்கடலிருக்க

மாமன் பசித்ததென்று மண்ணைவாரியுண்டதென்ன (சொல்லையா…)

மண்ணையுண்டு மாமன் வயிற்றுக்குப் போதாமல்

வெண்ணைதிருடியுண்ட விபரமெல்லாமெனக்குச் (சொல்லையா…)

சைவசமயத்துக்குத்  தலைவனீயானாக்கால்

தையல் குறத்தியை நீ சம்மந்தஞ்செய்ததென்ன (சொல்லையா…)

மங்கையிருவரையும் மணம் செய்துவைத்துவிட்டுப்

பங்கமில்லாத சடைப் பண்டாரமானதென்ன (சொல்லையா…)

சீப்பிட்ட கூந்தல் வள்ளி தெய்வானையைக் கலந்து

சாப்பிட்டிருக்காமல் சன்யாசியானதென்ன (சொல்லையா…)

தேவியிருவருக்கும்  தீராத சண்டையினால்

கோவித்துக் கொண்டிருந்தக் கோலமெடுத்தாயோ (சொல்லையா…)

-சுபம்-

BIG INDIAN BUCKET ON A LONDON ROAD!

IMG_7661

Article Written by London swaminathan

Date: 9 November 2015

Post No:2314

Time uploaded in London :– 8-35 AM

( Pictures were taken by london swaminathan ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

IMG_7657

Indian artist Subodh Gupta has created an art installation near the famous Victoria and Albert Museum (V&A) In South Kensington, London. This is part of India festival run by the V & A.

This huge bucket has become a huge attraction to the tourist crowd that frequents all the museums in South Kensington area in London.

Subodh Gupta uses everyday objects and turns them in to “sculptures” through this Big Bucket;  Subodh wants to show the world how much natural resources are wasted. Here in this installation, he has shown the stainless steel utensils spill over the bucket like water over flowing  a bucket. He has used lot of ever silver pans, plates, cups, pots and pans to create this. The shiny utensils show the temptation for newer things. The empty vessels also tell us that the world is still a poverty stricken place, but with a bright future. The bucket is shiny. This bucket will be standing on the road until January 2016.

A lot of tourists stand near the bucket and pose for photos. It has become a great attraction.

 IMG_8443

IMG_7656

DIWALI IN LONDON

V and A had arranged two days of Deepavali festival in the museum on 7th and 8th November 2015. Cultural programmes including music and dance were held. Two women from Prakruti Dance organisation in Harrow did a story telling event for children. The story was based on Ramayana. They did a bit of dance and music and made the children to participate in the drama.

Later a musical concert was also held. Famous musicians from India and West Africa presented this concert. Award winning flautist Keith waithe,  Sitar player Mehboob Nadeem, Tabla player Sanju Sahai, Vocalist Pooja Angra presented a fusion music concert. In addition to the music, dance and storytelling, Rangoli  was also done.

Hindu Forum of Britain, the umbrella body of over 130 Hindu organisations, held it its annual Diwali festival inside the Parliament building on 4th of November 2015. David Cameron, British Prime Minister is giving his annual Deepavali lunch on 10th November 2015. Various organisations including South Indian Society, UK hold Diwali dinners separately.

IMG_7631

IMG_7629

IMG_8424IMG_7649IMG_7635

Pictures of V&A Museum Diwali Events in London.

London Mayor organised a Diwali event in Trafalgar Square (London) in October itself to the surprise and opposition from the orthodox Hindus.

IMG_6839IMG_6840

Pictures from Trafalgar Square Diwali event in London.

–SUBHAM—

காற்றையும் நீரையும் தூய்மையாக இருக்கும்படி காப்போம்!

car-batteries

Radio Talk written by S NAGARAJAN

Date: 9 November 2015

Post No:2313

Time uploaded in London :– 7-50  AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT !  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

By .நாகராஜன்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

Part 1 posted on 6th November 2015

Part 2 posted on 7th November 2015

Part 3 on 8th nov. & Part 4 on 9th nov.15

4.காற்றையும் நீரையும் தூய்மையாக இருக்கும்படி காப்போம்!

மின்வெட்டு அதிகம் உள்ள இந்த நாட்களில் நமது அன்றாட தேவைகளுக்காக பாட்டரிகளை அதாவது மின்கலங்களை அதிகமதிகம் பயன்படுத்தும் வழக்கம் நகரங்களிலும் கிராமங்களிலும் அதிகரித்து வருகிறது.

ஆனால் பயன்படுத்தப்பட்ட பின்னர் இந்த மின்கலங்களை அறிவியல் பூர்வமான வழிகளில் அல்லாமல் மனம் போன போக்கில் கழிவாகத் தூக்கி எறிவது  சுற்றுப்புறச் சூழலுக்குப் பெரும் கேட்டை விளைவிக்கிறது! கூடவே ஆரோக்கியக் கேடுகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த மின்கலங்களில் காரீயம் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 14.5 கிலோகிராம் எடையுள்ள ஒரு காரின் மின்கலத்தில் 8.7 கிலோகிராம் அளவு ஈயம் உள்ளது. இதை விடப் பெரிய அளவில் வணிக நிறுவனங்கள் மற்றும் வீட்டுப் பயன்பாடுகளில் உள்ள இன்வர்டர்களில் சுமார் 16 கிலோ எடையுள்ள ஈயம் உள்ளது.

பயன்படுத்தப்பட்ட பின்னர் தூக்கி எறியப்படும் இவைகளைத்  துண்டு துண்டுகளாக்கித் தூக்கி எறியும் போது வெளிப்படும் ஈயத் தூசு, சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும். இந்த ஈயத்திலிருந்து வெளிப்படும் நச்சு இரத்த ஓட்டத்தில் உயர் அழுத்தத்தை ஏற்படுத்தும்.அத்தோடு சிறுநீரகத்தைப் பழுதடையச் செய்யும்.சிறுவர்கள் இந்தப் புகையால் பாதிக்கப்பட்டால் அவர்களின் நடத்தையில் மாறுபாடும் ஏற்படும்.

batteries_mixed_2

இப்படி பல்வேறு மனித அங்கங்களைப் பாதிக்கும் ஈயக் கழிவை உரிய முறையில்  அப்புறப்படுத்த வேண்டும்.

ஈயம் சில அழகு சாதனங்களிலும் சேர்க்கப்படுகிறது. பெயிண்டுகள், சிறுவர்கள் விளையாடும் பொம்மைகள்,சில வகை மண்பாண்டங்கள் ஆகியவற்றிலும் ஈயம் கலக்கப்படுவதால் இவை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் போது நீரும்   நிலமும் காற்றும் மாசுபட வாய்ப்பு ஏற்படுகிறது.

ஆகவே ஈயம் எதிலெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற அடிப்படை அறிவைப் பெறுவதோடு அதைக் கழிவாக அப்புறப்படுத்தும் போது உரிய முறையில் நிபுணர்களின் துணையோடு அப்புறப்படுத்துவதைப் பழக்கமாகக் கொள்ள வேண்டும்.

இதனால் உடல்நலமும் பாதுகாக்கப்படும்; சுற்றுப்புறமும் பாதுகாக்கப்படும்!

****************

வேடிக்கையான தமிழ்ப் பழமொழிகள்!!!

gold necklace

Article Written by London swaminathan

Date: 8 November 2015

Post No:2311

Time uploaded in London :– காலை 7-14

(Thanks for the Pictures ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

“தான் ஆண்ட உலக்கையும், தங்கப் பூஞ்சரடும் தலைமருமகளுக்கு!”

ஒரு பெண்ணை அவளுடைய மாமியார் கொடுமைப் படுத்தி வந்தாளாம். ஒரு நாள் அவள் பொறுமை எல்லைமீறிப் போனது. அப்பொழுது கணவனும் ஊரில் இல்லை. உரலில் மாவு இடித்துக் கொண்டிருந்த போது வழக்கம்போல மாமியார் வந்து வசைமாறி பொழிந்தாள். பின்னர் மாமியார் மத்தியான வேலைத் தூக்கம் போட்டார். அதுதான் தக்க சமயம் என்று கருதி, மருமகள் உலக்கையைக் கொண்டு,  மாமியாரின் மார்பில் ஒரு போடு போட்டார். அவருக்குப் பேச்சு நின்று போய் மூச்சுத் திணறல் வந்தது. மாமியார் போட்ட கூச்சலைக் கேட்டு பக்கத்து வீட்டு, எதிர் வீட்டுக் காரர்கள் எல்லாம் கூடிவிட்டனர்.

பேச்சு நின்று போன மாமியார், இறப்பதற்கு முன்னர், குற்றவாளியைக் காட்டிக் கொடுக்க எண்ணி, தனது மார்பைத் தொட்டுக் காட்டிவிட்டு, உலக்கையைக் கையால் சுட்டிக் காட்டிவிட்டு, பின்னர் மருமகளையும் சுட்டிக்கட்டினாள். அதாவது மாமியார் சொல்ல வந்தது:-

என்னை உலக்கையால் மார்பில் அடித்தது தன் மரு மகளே என்று.

ஆனால் மருமகளோ மஹா கெட்டிக்காரி. எல்லோரும், மாமியார் என்ன சொல்கிறார்? எங்களுக்குப் புரியவில்லையே? என்று கேட்டனர். அவள் சொன்னாள்:–

மாமியாருக்கு என் மீது கொள்ளை அன்பு. நான் மாவு இடிக்கப் பயன்படுத்திய உலக்கை எனக்கே சொந்தம் என்றும் அவர் மார்பில் அணிந்திருக்கும் வைர நெக்லசும் எனக்கே கிடைக்க வேண்டும் என்றும் அவர் சைகை காட்டுகிறார் ; ஏனென்றால் நான் தான் வீட்டுக்குத் தலை மருமகள் என்றாள். இதற்குள் மாமியாரின் உயிரும்பிரிந்தது. எல்லோரும் மாமியாரின் கடைசி ஆசையை நிறைவேற்றுவது நம் கடமை என்று சொல்லி, மருமகளுக்கே உலக்கையையும், வைர நெக்லசையும் அளித்தனர்!!

IMG_4564

அடுப்பே வனவாசம்,கடுப்பே கைலாசம்

மாமியாரின் கொடுமைக்கு உள்ளான ஒரு மருமகளின் புலம்பல் இது. எனக்கு வனவாசமும், கைலசமும் போல இந்த மருமகள் பொறுப்பு இருக்கிறது

அரிசி என்று அள்ளிப் பார்ப்பாருமில்லை, உமி என்று ஊதிப் பார்ப்பருமில்லை

இது இன்னுமொரு மருமகளின் புலம்பல்: யார் என்னைக் கவனிக்கிறார்கள்? என்னை அரிசி போலவும் நடத்துவதில்லை; உமியா என்று ஆராய்வதுமில்லை; ‘உப்புக்குச் சப்பை, ஊருக்கு மாங்கொட்டை’ என்பது போல என் வாழ்வு இருக்கிறது – என்பது இதன் பொருள்.

pestle mortar

சீரங்கத்தில் உலக்கை கொடுத்தது போல

ஸ்ரீரங்கத்தில் கோவிலில் பெண்கள், மாவு இடித்தல் போன்ற வேலைகளைச் செய்வது வழக்கம். இந்தப் பொறுப்பை ஏற்போர், நாள் முழுதும் மாவு இடிக்க வேண்டும். இதை மேற்பார்வையிட ஒரு கண்காணியும் இருப்பார். கொஞ்சதூரத்தில் அவர்களுடைய குழந்தைகளை அந்தப் பெண்கள் மரத்தில் கட்டிய தூலியில் போட்டு வைத்திருப்பர். குழந்தை திடீரென்று அழத்துவங்கினால், யாராவது அந்தப் பக்கம் வருவோர் போவோரிடம், “இந்தாருங்கள், கொஞ்சம் இந்த உலக்கையைப் பிடியுங்கள். இதோ குழந்தை அழுகிறது. என்ன என்று பார்த்துவிட்டு வருகிறேன்” — என்று சொல்லி உலக்கையைக் கை மாற்றுவார். அவ்வளவுதான். குழந்தையைக் கவனிக்கப்போன பெண், வீட்டுக்கே போய்விடுவாள். திரும்பி வரமாட்டாள். யார்  உலக்கை பிடித்தார்களோ அவர்கள் சூரிய அஸ்தமனம் வரை மாவு இடித்தாக வேண்டும்!!

இதுபோன்று எங்கெங்கெல்லாம் ஒருவர் இன்னொருவர் தலையில் வேலையைச் சுமத்திவிட்டு நழுவுகிறார்களோ அங்கெல்லாம் இந்தப் பழமொழி பயன்படுதப்படும்.

razor

திருப்பதி அம்பட்டன் கதை

இதுபோல திருப்பதி பற்றியும் ஒரு கதை உண்டு.திருவிழாக் காலங்களில் நிறைய பேர் முடி காணிக்கை கொடுத்து, மொட்டை அடித்துக்கொள்ள வருவார்கள். அவர்கள் கொடுக்கும் காசு மீது ஆசையுள்ள நாவிதர்கள் எல்லோரையும், ‘இங்கே வா, இங்கே வா’ என்று அழைத்துக் கூலியை வாங்கிக்கொண்டு, ஒவ்வொருவருக்கும் கொஞ்சம் முடியைச் சிரைத்துவிட்டு, அடுத்த மண்டபத்தில் புதிய வாடிக்கை பிடிக்கப் போய்விடுவர். பாதி முடி கொடுத்தவர்கள், வெளியே போனால் நகைப்புக்கு இடமளிக்கும். ஆகையால் அவிழ்த்த துணியோடு அவனுக்காக காத்திருப்பர்.

இப்படி ஏதேனும் ஒரு விஷயத்துக்காக அல்லது சுய லாபத்துக்காக யாராவது ஒருவர் அரைகுறை வேலை செய்தால் அதற்கு திருப்பதி அம்பட்டன் வேலை என்று பெயர்!!

–சுபம்–