அன்னை பூமியின் உரிமைகளுக்கு ஒரு சட்டம்!

globe india

Radio Talk written by S NAGARAJAN

Date: 8 November 2015

Post No:2310

Time uploaded in London :– 7-05  AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT !  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

ச.நாகராஜன்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

 

சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் விதமாக மனித குலம்  முழுவதும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியின் ஒரு அடையாளமாக பொலிவியா நாட்டின் அன்னைபூமி சட்டம் திகழ்கிறது.

மனிதனுக்குள்ள உரிமைகள் போல அன்னை பூமிக்கும் பதினோரு உரிமைகளை அன்னை பூமி சட்டம் வழங்குகிறது!

வாழ்வதற்கான உரிமை,மனிதனின் சுற்றுப்புறச்சூழல் மாசுகளைத் தடுத்து ஆதார வளங்களைக் காத்துக் கொள்ளும் உரிமை,சுத்த நீரைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை, தூய காற்றை நிலை நிறுத்திக் கொள்ளும் உரிமை,இயற்கையின் சமச்சீரை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை, சுற்றுப்புறச்சூழல் மாசை தடுப்பதற்கான உரிமை,மரபணு மாற்றங்களை இயற்கையின் செல்லுலர் அமைப்புகளில் ஏற்படாமல் பாதுகாக்கும் உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அன்னை பூமிக்கு உண்டு.

இந்தச் சட்டம் உலக மக்களுக்கு உணர்த்தும் ஒரு பேருண்மை என்னவெனில் “அன்னை பூமி ஒரு உயிருள்ள ஜீவன்!” என்பது தான்! அன்னை பூமி தன்னுள் ஆயிரக்கணக்கான உயிர்களை உருவாக்கி அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருகிறாள். பிரபஞ்ச அமைப்புடன் ஒன்றி இணக்கமுடன் சமச்சீரைப் பாதுகாத்து வருகிறாள்! எல்லாவித சுற்றுப்புறச்சூழல் அமைப்புகளையும், உயிர்களையும் அவற்றின் சுய நிர்வாகத்தையும் அவள் கொண்டிருக்கிறாள் என்ற பெரு நோக்கத்தின் அடிப்படையில் அன்னை பூமியின் உரிமைகளுக்கு சட்ட பூர்வமான உரிமைகள் வழங்கப்பட்டு, அன்னை பூமியும் மனித உரிமைகளைக் கொண்டுள்ள மனிதர்களைப் போலவே சட்டபூர்வமாகப்  பாதுகாக்கப்பட்டவள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சட்டங்களை உலகின் பல நாடுகளும், பல நாடுகளில் உள்ள மாநிலங்களும் இப்போது இயற்றி வருவது ஒரு நல்ல செய்தி!

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் உள்ளிட்ட பல நகரங்களின் நகரசபைகள் அன்னை பூமியின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களை இயற்றியுள்ளன.

அன்னை பூமியின் சட்ட ரீதியான உரிமைகளுக்கு மதிப்புக் கொடுத்து மனித குலம் இனியாவது தூய நீரையோ அல்லது தூய்மையான காற்றையோ இதர சுற்றுப்புறச்சூழல் அமைப்புகளையோ மாசுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக்.  கூடாது.

நமக்கு வாழ்வளித்து நம்மைக் காக்கும் நம் அன்னை பூமியை நாம் காப்போமாக!

**************

7 Interesting Classroom Anecdotes!

1960-Childrens_Day

Article Written by London swaminathan

Date: 7 November 2015

Post No:2309

Time uploaded in London :– 18-20

(Thanks for the Pictures ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

1).Faithful Student:

A young woman named Murphy was the teacher of kindergarten grade in Massachusetts school (USA). She had taught her class to repeat together the 23rd Psalm (In the Bible). As the little voices chorused out, she seemed somewhere to detect a false note. She heard the children one by one, until at last she came across one little boy who was concluding the Psalm with the words,

“Surely good Miss Murphy shall follow me all the days of my life.”

(Actual line in the Psalm: “Surely Goodness and Mercy shall follow me all the days in my life.”)

Xxx

61-Dec-UNICEF

2).Lucidity of Description

For sheer lucidity of expression, it is difficult to match the young lady who wrote on her examination paper the following in reply to the question, “What is a bolt and what is a nut?”

“A bolt is a thing like a stick of hard metal, such as iron, with a square bunch on one end and a lot of scratches going round and round the other end. A nut is similar to the bolt only just the opposite, being a hole in a little square of iron sawed off short with rings also around the inside of the hole.”

Xxx

3).Eyes for…………….

What are your eyes for? The little child in the kindergarten was asked.

To see with

And your nose?

To smell with.

And what are your ears for? Was the last question.

To keep clean, the child replied.

Xxx

No5

4).Five years wasted!

After a lecture by the late Francis Wayland Parker, great Chicago (US) educator, a woman asked:

How early can I begin the education of my child?

When will your child be born?

Born? she gasped. Why?  He is already five years old!

My goodness, woman, he cried, don’t stand here talking to me – hurry home; already you have lost the best five years.

Xxx

5).Above Average Student!

A certain mother wished to enter her five year old daughter in a kindergarten, the age requirement of which was six. To the disapproving teacher the mother explained,

She can easily pass the six year old test.

Say some words, the teacher said rather sceptically to the child.

The little girl surveyed the teacher with dignity, and turning to her mother, asked,

Purely irrelevant words?

Xxx

skeleton

6).We saw Dead Circus!

As a special treat the teacher took her class to visit the museum of natural history. The children returned home excitedly, and rushing into his house, one of the little boys greeted his mother exuberantly, saying,

What do you think we did today, mother! The teacher took us to a dead circus.

Xxx

7).Chairman of Udder Committee!

A little girl who was attending a progressive school had a cold one morning and her mother suggested that she remain home from school.

But, I can’t mother, the child insisted, this is the day when we start to make clay model of a cow and I am chairman of the udder committee.

milking by iron raju,fb

–Subham–

லண்டனில் பூனைக்கு ஒரு சிலை! ஒரு எழுத்தாளனின் சுவையான வரலாறு!

IMG_7857

Article Written by London swaminathan

Date: 7 November 2015

Post No:2308

Time uploaded in London :–7-58    AM

(Pictures in this article are taken by London swaminathan) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

IMG_7854

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் உலகப் புகழ்பெற்ற ஒரு நாய்க்கு ஒரு சிலை இருப்பது பற்றி முன்னரே எழுதியுள்ளேன். அதற்கு சிலை பெறும் தகுதி உண்டு. ஒரு பேராசிரியர் தினமும் அந்த நாயை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று ரயில் ஏறுவார். மாலையில் திரும்பி வரும்போது அவரை நாய்  வரவேற்கும். ஒரு நாள் அவர் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு இறந்துவிட்டார். பாவம் ஹசிகோ என்ற பெயருள்ள அந்த நாய்க்கு எஜமானர் இறந்தது தெரியாது. ஒன்பதரை மாதங்களுக்கு தினமும் ரயில் வரும் அதே நேரத்துக்குச் சென்று காத்திருந்தது. பின்னர் இறந்து விட்டது. இன்று ஹசிகோ நாயைத் தெரியாதோர் ஜப்பானில் இல்லை. அது புகழுக்கு உரிய நாய்.

ஆனால் வேடிக்கை! ஒரு செயற்கரிய செயலும் செய்யாமலேயே சிலை பெற்று விட்டது ஹாட்ஜ் (Hodge) என்னும் பூனை. “பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்” – என்பது தமிழ்ப் பழமொழி. ஹாட்ஜ் செய்த புண்ணியம் என்ன தெரியுமா? அது உலகப் புகழ் பெற்ற ஆங்கில அகராதி மன்னன், பெரும் எழுத்தாளன், இலக்கிய விமர்சகன், ஷேக்ஸ்பியர் நாடகத் தொகுப்பாளன், பேச்சு மன்னன், நாவுக்கரசன் சாமுவேல் ஜான்சனின் Samuel Johnson (1709 – 1784) நெருங்கிய தோழன். அவ்வளவுதான். அவர் வளர்த்த பூனை என்பதால் அதற்கு, ஜான்சன் வீட்டுக்கு முன்னால், தெருவிலேயே ஒரு சிலை. அதைக் காண தினமும் ஒரு கூட்டம். நானும் போய்ப் புகைப்படம் எடுத்தேன்.

ஆனால் நான் போனது பூனையைத் தேடி அல்ல. புனைக்கதை மன்னனைத் தேடி! அவர்தான் எழுத்துச் சிற்பி சாமுவேல் ஜான்சன்! அவருடைய வரலாறு மிக மிகச் சுவையூட்டும் வரலாறு. சுருக்கமாகச் சொல்கிறேன்.

IMG_7860

சாமுவேல் என்ன சாதித்தார்? 1930 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி வருவதற்கு முன்னர், மிகப்பெரிய அகராதியைத் தயாரித்து ஆங்கில இலக்கிய வரலாற்றில் அழியாத இடம் பெற்றார். பிரான்சு நாட்டில் 40 அறிஞர்களைக் கொண்ட குழு, 40 ஆண்டுக் காலத்துக்கு உழைத்து பிரெஞ்சு மொழி அகராதியைத் தயாரித்தது. ஆனால் சாமுவேல் ஜான்சனோ மூன்றே ஆண்டுக் காலத்தில் ஒரு அகராதியைத் தயாரித்தார்.

கடன்கார எழுத்தாளன்!

இதற்காக அவரைப் பாராட்டி மூன்றாம் ஜார்ஜ் மன்னர் 300 பவுண்டு வருடாந்திய பென்ஷன் தொகை அளித்தார். அதை ஏற்க ஜான்சன் பயந்தார். மற்றொருவரின் கைப்பாவை ஆகி, எழுத்துச் சுதந்திரம் பறி போய்விடுமோ என்று அஞ்சினார். பின்னர் நண்பர்கள் சொற்படி அதை ஏற்றார். இத்தனைக்கும் அவர் கடன் பாக்கிக்காக இரண்டு முறை கைதானவர்!! ஒரு முறை 4 பவுண்டு, இன்னொரு முறை 40 பவுண்டு கடன் பாக்கிக்காக போலீசார் அவரைக் கைது செய்தனர். ஒவ்வொரு முறையும் அவரை நண்பர்கள் காப்பாற்றினர். அதுவும் எப்படி? இலவச அன்பளிப்புத் தொகை கொடுக்கவில்லை. இவர் ஏதேனும் ஒரு கதை, அல்லது இலக்கியப் படைப்பு எழுதித் தருவதாகச் சொன்னவுடன் அவர்கள் பிணைத் தொகையைக் கொடுத்து இவரை விடுவித்தனர்.

ஆனால் நாளடைவில் ஜான்சனின் புகழ் பரவவே, அவரைச் சுற்றி அறிஞர் கூட்டம் குவிந்தது. அவர் தொடங்கிய வாசகர் வட்டத்தில் சேர ‘கியூ’வில் நிற்கவும். சிபாரிசுக் கடிதம் பெறவும் தேவை ஏற்பட்டது.

ஜான்சனுக்கு ஸ்காட்லாந்துக்காரர்களைக் கண்டால் பிடிக்காது. ஆனால் ஸ்காட்லாந்திலிருந்து வந்த ஜேம்ஸ் பாஸ்வெல் என்ற அறிஞர் இவருடன் நண்பராகி ‘ஜான்சனின் வாழ்க்கை வரலாறு’ என்று புத்தகம் எழுதினார். அதனால் ஜான்சனின் புகழ் உச்சாணிக்குப் போய்விட்டது.

IMG_7865

ஜான்சன் சிறந்த பேச்சாளர்; நகைச்சுவை ததும்ப உரையாற்றுவார். அவருடைய இலக்கிய, அரசியல் விமர்சனத்தைக் கேட்க எப்பொழுதும் ஒரு கூட்டம் அவரைச் சுற்றி நிற்கும். அவர் சொன்னதை எல்லாம் பத்திரிகைகள் வெளியிடுமளவுக்குப் புகழ் பரவியது. அவரே ‘ராம்ப்ளர்’ என்றொரு பத்திரிக்கையும் நடத்தினார். ஆனால் பின்னர் அது மூடு விழா கண்டுவிட்டது.

ஜான்சன் ஆரம்ப காலத்தில் வறுமையில் வாடியதால் 17 வீடுகளுக்கு இடம் மாறினார். பிறந்ததோ லண்டனுக்கு வெளியே. இப்பொழுது அவர் வசித்த ஒரு வீட்டில் மியூசியம் இருக்கிறது அங்கு அவருடைய இரண்டு ஒரிஜினல் அகராதிகள் உள்ளன. மேலும் 4 நகல்கள் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ளன.

IMG_7893

ஷேக்ஸ்பியர் நாடகத்தொகுப்பு

ஜான்சனுக்கு முன்னால் ஷேக்ஸ்பியர் நாடகங்களை வெளியிட்டோரும், நடித்தோரும், ஷேக்ஸ்பியரின் எழுத்துக்களை மக்களின் ரசனைக்கேற்ப அவ்வப்பொழுது மாற்றினர். ஜான்சன் மிகப் பெரிய முயற்சி செய்து ஷேக்ஸ்பியரின் ஒரிஜினலை அப்படியே வெளியிட்டார்.  ஷேக்ஸ்பியர் காலத்தில் அந்தச் சொற்களுக்கு என்ன பொருள் நிலவியதோ அதை விளக்கி எழுதி நல்ல பதிப்பைக் கொண்டுவந்தார். இன்று நாம் காணும் நாடகம் எல்லாம் ஜான்சன் வெளியிட்ட திருத்திய பதிப்பே!

லண்டன் “போர்” அடித்தால், வாழ்க்கையே ‘போர்’!

பிற்காலத்தில் ஜான்சனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிப் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாஸ்வெல், ஸ்காட்லாந்திருந்து லண்டனுக்கு இடம்பெயர்ந்து குடியேறத் தயங்கினார். லண்டனுக்கு வந்துவிட்டால் அது மிகவும் சலிப்பை ஏற்படுத்துமே என்றார். அதற்கு ஜான்சன் என்ன தெரியுமா பதில் சொன்னார்: “ஒருவனுக்கு லண்டன் மாநகரம் களைப்பையோ சலிப்பையோ எற்படுத்துமானால் அவர் வாழ்க்கையே சலிப்பானதுதான்” என்றார். லண்டனில் ‘போர்’ அடித்துப் போனவர் எவரும் இல்லை! . பின்னர், ஜேம்ஸ் பாஸ்வெல்லுடன், ஸ்காட்லாந்து முதலிய இடங்களைச் சுற்றிப்பார்த்தார்.

ஜன்சன் எழுதிய கதைகள், கட்டுரைகள், இலக்கிய விமர்சனக்கள் எல்லாம் புத்தக வடிவில் வந்துவிட்டன. ஆங்கிலக் கவிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை, இலக்கிய விமர்சனத்தோடு ஆறு பகுதிகளாக வெளியிட்டிருக்கிறார்.

IMG_7877   IMG_7878

உருவத்தில் பெரியவர்; விநோத நடை, உடை பாவனை!

1709 ஆம் ஆண்டில் லிட்ச்பீல்ட் என்னுமிடத்தில் பிறந்த ஜான்சன் ஆஜானுபாஹு. பலத்த உடல்வாகு கொண்டவர். கண்பார்வை மங்கியவர். புத்தகங்களை முகத்துக்கு அருகில் வைத்துப் படிக்கக்கூடியவர். ஒரு காதும் கேளாது. விநோதமான நடவடிக்கைகளை உடையவர். இதனால் அவரைப் பலரும் பைத்தியம் என்று நினைப்பர். வில்லியம் ஹோகார்த் என்ற ஓவியர் இவரைப் பார்க்க வந்த போது, சரியான மடையன் என்று நினைத்தார். அவர் பேசத் துவங்கிய பின்னர்தான் அவர் ஒரு அறிஞர் என்று தெரிந்தது. அவருடைய தந்தை புத்தகக்கடை வைத்திருந்தார். அவருடைய கண், காதிலிருந்த குறையை, அவர் மூளை ஈடு செய்தது. எதையும் ஒருமுறை படித்தவுடன் அது அப்படியே மனப்பாடம் ஆகிவிடும். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கப்போனவர், பணம் கட்ட முடியாததால் படிப்பைவிட்டு விட்டு ஆசிரியர் ஆனார். பின்னர் பத்திரிக்கையாளர் ஆனார்.

அவருடைய வாழ்வில் நடந்த இன்னொரு விநோதம், அவர் வயதைப் போல இரு மடங்கு வயதுடைய ஒரு விதவையைத் திருமணம் செய்துகொண்டதாகும். கையில் காசு இல்லததால் காப்பிக் கடைகளிலும், மதுபானக் கடைகளிலும் பொழுதைக் கழித்த அவர் 1738ல் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். அவர் ஒரு கவிஞரும் கூட.

அந்தக் காலத்திலிருந்த ஆங்கில அகராதிகள் தெளிவான விளக்கம் இல்லமல் குறைபாடுகளுடன் இருந்தன. ஆகையால் ஒரு புத்தகக் கடைக்காரர், ஜன்சனிடம் பணம் கொடுத்து, அவருக்கு ஆறு உதவியாளர்களையும் அனுப்பினார். ஜன்சனின் பல்துறை அபார அறிவினால் சில ஆண்டுகளில் அப்பணி முடிந்து அவருக்கு பெரும் புகழைக் கொடுத்தது. 1930 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்ட் அகராதி வெளிவரும்வரை அகராதி என்றால், அது ஜான்சனின் அகராதிதான் என்று பெயர் விளங்கியது. அவர் 43,000 சொற்களுக்கு விளக்கம் கொடுத்தார்.

IMG_7902  IMG_7918

1759 ஆமாண்டில் அவர் தாயார் இறந்தபோது இறுதிச் சடங்குகளுக்கு மட்டுமே அவரிடம் பணம் இருந்தது. ஒரு நாவல் எழுதித் தருவதாகச் சொல்லி பணம் கடன் வாங்கினார். சொன்னபடியே நாவலையும் முடித்துக் கொடுத்தார்.

ஆங்கிலக் கவிஞர்கள் வாழ்க்கையை இவர் எழுதுவதற்கு கொஞ்சம்தான் பணம் வாங்கிக் கொண்டார். தான் முப்பது ஆண்டுக் காலம் படித்ததை நினைவிற்கொண்டு அருமையாக எழுதி முடித்தார். இதைப் பார்த்துவிட்டு சிலர்,  “என்ன அநியாயம் இது? இவ்வளவு பெரிய பணிக்கு கொஞ்சம் பணம் கொடுதிருக்கிறார்களே?” என்று அங்கலாய்த்தனர். அதற்கு ஜான்சன் என்ன தெரியுமா பதில் சொன்னார்:- “அவர்கள் சரியாகத்தான் பணம் கொடுத்திருக்கிறார்கள். நான் தான் கொஞ்சம் அதிகமாக எழுதிவிட்டேன்” – என்றார்

பெருந்தன்மை மிக்கவர். மற்றவர்களுக்கு உதவி செய்தவர். ஆங்கில இலக்கிய உலகில் அழியா இடம் பெற்றவர் சாமுவேல் ஜான்சன்.

IMG_7909

IMG_7912

IMG_7908

–Subham–

தேனீக்களை அழிக்கும் பேப்பர் ‘கப்’புகள்!

Paper-Cups

Radio Talk written by S NAGARAJAN

Date: 7 November 2015

Post No:2307

Time uploaded in London :– 6-03  AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT !  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

  

By ச.நாகராஜன்

 

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

((Part 1 was published yesterday))

flower and bee, IE

இயற்கை படைத்த அரிய உயிரினத்தில் ஒன்றான தேனீக்கள் அழிந்து வருகின்றன என்பது வருத்தமூட்டும் ஒரு உண்மையான செய்தி! இதற்குக் காரணம் மனிதர்களாகிய நமது அஜாக்கிரதையான செயல் தான் என்பது இன்னும் அதிகத் துன்பமூட்டும் உண்மையாகிறது.

அன்றாடம் பேப்பர் ‘கப்’களில் (Paper Cups) அதாவது பேப்பரினால் செய்யப்பட்ட கோப்பைகளில் காப்பியையும் டீயையும் ஏந்திக் குடித்து அவற்றை வீசி எறிகிறோம். இந்த கப்களில் உள்ள காப்பி மற்றும் டீயின் எஞ்சிய இனிப்பை அருந்த வரும் தேனீக்கள் மீண்டும் பறக்க முடியாமல் இறந்து விடுகின்றன.

ஆலைகள் பெருகி வரும் இந்த நாட்களில் இயற்கையான மரங்களும் மரம் சார்ந்த சூழ்நிலையும் இல்லாததால் ஆங்காங்கே தூக்கி எறியப்படும் பேப்பர் கப்களை நாட வேண்டிய கட்டாயத்திற்கு தேனீக்கள் தள்ளப்படுகின்றன.

தமிழ்நாட்டில் மட்டும் காப்பி மற்றும் டீயை விற்கும் விற்பனை நிலையங்களில் தூக்கி எறியப்படும் பேப்பர் கப்களின் எண்ணிக்கை குறைந்தபட்சமாக  ஒரு நாளுக்கு 1225 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இவற்றில் அன்றாடம் சுமார் 680 தேனீக்கள் சராசரியாக இறந்து கிடப்பதை ஆய்வாளர்கள் அண்மையில் கண்டறிந்தனர்.

இயற்கையான சூழ்நிலையில் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி அவற்றை சேகரிக்கும் தேனீக்கள், இப்போது மலர்கள் அடங்கிய தோட்டங்கள் இல்லாத சூழ்நிலையில் தமது உணவுக்காக கழிவாகக் கிடக்கும் கப்களுக்கு வருகின்றன. இப்படி தேனீக்கள் இறப்பதற்கு காலனி கொலாப்ஸ் டிசீஸ் (Colony collapse disease) என்று பெயர்.இந்த தேனீக்களை அழிக்கும் நோய் பல நாடுகளிலும் பரவி தேனீக்களின் இனத்தையே அழித்து வருவது வருத்தமூட்டும் செய்தி.

இத்துடன் மட்டுமின்றி தகவல் தொழில்நுட்பத்தால் ஏற்படுத்தப்பட்ட தகவல் தொலைத் தொடர்புக்கான கோபுரங்களிலிருந்து வரும் மின் அலைகளாலும் தேனீக்கள் அல்லல்பட்டு அழிகின்றன.

honey bee

சுறுசுறுப்புக்கே உதாரணமாக விளங்கும் அற்புத தேனீக்களை அழிக்க நாம் ஒரு போதும் காரணமாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் இனி பேப்பர் கோப்பைகளில் காப்பி  மற்றும் டீ அருந்துவதில்லை என்ற நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம்; அனைவருக்கும் இந்தச் செய்தியைச் சொல்லி அவர்களையும் பேப்பர் கோப்பைகளின் பயன்பாட்டைக் கைவிடச் செய்வோம்!

***************

Bitter gourds and The Meaning of Pilgrimage!

12 jyotirlinga

Picture shows 12 Great Shiva Shrines around India.

Article Written by London swaminathan

Date: 6 November 2015

Post No:2306

Time uploaded in London :– 10-06   AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

There was a great saint named Tukaram. He was a votary of God’s name. Once people from his village decided to go on a long pilgrimage and they requested Tukaram also to follow them. Tukaram expressed his inability, but requested them to be kind enough to take with them to all the places they visited some bitter gourds that he would give them. He wished that the bitter gourds should be given a dip in all the holy waters where they took bath and also have them taken to all the temples they visited.

Not caring to know the significance of what the saint said, the villagers took the bitter gourds from him and carried all along the pilgrimage, obeying the instructions of the saint in regard to dipping them in the holy waters and taking them to the temples.

bitter gourd

In a few months, the party returned from the pilgrimage and handed the bitter gourds back to Tukaram. Tukaram was happy and invited all the members of the party to a feast next day to celebrate the successful completion of their pilgrimage. Tukaram made a special dish out of the bitter gourds which he had sent on the pilgrimage. They were served with various preparations and they started eating. When they tasted the gourd dish, they all remarked it was bitter and asked Tukaram why he served it. Tukaram, as if greatly surprised, asked them how it could be bitter when it was made out of the gourds that had gone on the pilgrimage. It was no doubt bitter when he handed them over to the pilgrims before the pilgrimage, but he wondered why it had not lost its bitterness in spite of pilgrimage. This was a great lesson to all the pilgrims.

There are so many who go on pilgrimage and return as bitter before. But if you go on a pilgrimage as urged by God within, and continuously remember Him all through the pilgrimage and see only purity and goodness of God everywhere, you will achieve purity. Such a pilgrimage will surely beneficial to you.

ashta vinayak

Picture shows Eight famous Ganesh shrines in Maharashtra.

Ramakrishna Paramahamsa on Pilgrimages

As cows, after eating their fill, lie down quietly at a place and chew the cud, so after visiting a sacred spot or a place of pilgrimage, you must take hold of the holy thoughts that arose in the mind while there, sit down in a solitary corner and think of them till you are immersed in them you must not devote yourself to the pursuit of the senses driving away the higher ideas from your mind immediately after you leave the holy places.

Xxx

Travel in all the four quarters of the earth, yet you will find nothing (no true religion) anywhere. Whatever there is, is only here (i.e. in one’s own heart).

Xxx

The milk of the cow in reality pervades the whole body of the animal through its blood, but you cannot milk it by squeezing the eras or the horns; you can get the milk only from the teats. Similarly God pervades the universe everywhere, but you cannot see Him everywhere. He manifests Himself more readily in sacred temples which are full of the spirit of devotion diffused by the lives and spiritual practices of the devotees of former times.

–Subham–

பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் அபாயம்!

plasticproducts

Article Written by S NAGARAJAN

Date: 6 November 2015

Post No:2305

Time uploaded in London :– 8-51  AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT !  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

(நான்காம் பாகம்)

.நாகராஜன்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

 

  1. பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் அபாயம்!

Yuenkong-ltd-plastic-injection-material

பிளாஸ்டிக் பொருள்களினால் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சுற்றுப்புறச் சூழல் கேட்டினை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்வது அவசியம். சுமார் 250 டன்கள் வரை இந்திய நகரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் தினமும் ஏற்படுகிறது என்பது மலைக்க வைக்கும் ஒரு உண்மை. இவற்றில் 50 விழுக்காடு பிளாஸ்டிக் பைகள் என்பதை நாம் உணர்ந்தால் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதில் நமது பொறுப்பு எத்தகையது என்பதை அறிய முடியும்.

பிளாஸ்டிக் பைகள் சுமார் ஆயிரம் வருடங்கள் வரை மட்காது அப்படியே இருக்கும் என்பதால் இது ஆயிரம் வருடம் நீடிக்கும் அபாயம் என்று கூறி விடலாம். கிழிந்த துணிகளும் காகிதங்களும் வெறும் ஐந்தே மாதங்களில் மட்கி விடும் போது குழந்தைகளுக்காக நாம் பயன்படுத்தும் டயபர்கள் 500 முதல் 800 வருடங்கள் வரை மட்காது என்பதையும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அழியவே அழியாது என்பதையும் நாம் உணர வேண்டும்.

மறு சுழற்சிக்கு உட்படும் பிளாஸ்டிக் பொருள்கள் வெறும் 7 சதவிகிதம் தான் என்பதால் இது பெரிய மாற்றத்தை சுற்றுப்புறச் சூழலில் ஏற்படுத்தி விட முடியாது என்பதையும் உணரலாம்.

இந்தப் பெரும் அபாயத்திற்கு ஒரே தீர்வு பிளாஸ்டிக் பைகளை முற்றிலுமாக தவிர்ப்பது தான்!

இதற்கு முன் உதாரணமாக கன்யாகுமரி மாவட்டம் திகழ்கிறது. அங்குள்ள மக்கள் தாங்களாகவே முன் வந்து கடைகளுக்கு துணிப்பைகளையும் சணல் பைகளையும் கொண்டு சென்று தேவையான பொருள்களை வாங்கி வருகின்றனர்.

இதன் மூலம் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அறவே குறைந்து சுற்றுப்புறச் சூழலில் அற்புதமான பெரும் நல்ல விளைவை ஏற்படுத்துகிறது.

நிலத்தில் மட்டுமின்றி நீரிலும் பிளாஸ்டிக் பொருள்கள் கழிவாக தூக்கி எறியப்படுகின்றன. கடலில் மிதக்கும் குப்பைகளில் 90 சதவிகிதம் பிளாஸ்டிக் கழிவுப் பொருள்கள் தான்! இவற்றை உணவுப் பொருள் என நினைத்து உண்ணும் ஜெல்லி மீன்கள் உள்ளிட்ட மீன்களும், ஆமைகளும் இதர கடல் வாழ் உயிரினங்களும் அழிந்து படுகின்றன என்பது வருத்தமூட்டும் ஒரு செய்தி!

சுற்றுலா தலங்கள், கடற்கரைகள் ஆகியவற்றில் பிளாஸ்டிக்கை ஒரு போதும் பயன்படுத்த மாட்டோம் என்று ஒவ்வொருவரும் சபதம் ஏற்க வேண்டும்.கடைகளுக்கு துணிப்பை அல்லது சணல் பையை நிச்சயம் கொண்டு செல்வேன் என்று உறுதி பூண வேண்டும். இந்த நல்ல பழக்கத்தை நம் குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் சொல்லி இதை அவர்கள் மேற்கொள்ளுமாறு செய்தால் வருங்கால சந்ததியினர்க்கு வளமான பூமியை விட்டுச் செல்லும் நன்மையைச் செய்தவர்கள் ஆவோம்!

to be continued……………………..

பாகற்காயின் தீர்த்த யாத்திரை: ஒரு சுவையான சம்பவம்!

ashta vinayak

அஷ்ட சித்தி விநாயக ஸ்தலங்கள், மஹாராஷ்டிரம்.

Article Written by London swaminathan

Date: 6 November 2015

Post No:2304

Time uploaded in London :– 6-12  AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்?

கொங்கு தண் குமரித்துறை ஆடில் என்?

ஓங்கு மா கடல் ஓத நீர் ஆடில் என்?

எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே. (5-99-2 அப்பர் தேவாரம்)

புனித யாத்திரை போவது அவசியம்தான். ஆனால் அதை அர்த்தமில்லாத சடங்காகவோ, சுற்றுலாவாகவோ நடத்தக் கூடாது. காசி, கயிலாயம், பத்ரிநாத், கேதார்நாத், திருப்பதி, சபரிமலை, கன்யாகுமரி என்று யாத்திரை போவோரை நினைத்து அப்பர் பாடிய தேவாரத்தை மேலே கண்டோம். துகாராம் சுவாமிகளின் கதை ஒன்றைக் காண்போம்.

நிவ்ருத்தி, ஞானதேவ், சோபான, முக்தாபாய், ஏகநாத், நாம்தேவ், துகாராம், சமர்த்த ராமதாஸ் என்போர் மகாராஷ்டிர பூமியை பக்தி வெள்ளத்தில் மூழ்கடித்த பெரியோர்களாவர்.

இவர்களில் ஒருவரான துகாராம் செய்வித்த “பாகற்காய் யாத்திரை” கதையைக் கேளுங்கள். ஒரு முறை கிராம மக்கள் எல்லோரும் தீர்த்த யாத்திரை செய்ய முடிவு செய்தனர். துக்காராம் சுவாமிகளிடம் சென்று அவரும் வரவேண்டுமென்று வேண்டினர். அவர் தான் வரமுடியாதென்றும் ஆனால் தன் கொடுக்கும் பாகற்காய்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு சென்று ஆறு, குளம், கடலில் நீராடும்போது அவைகளையும் குளிப்பாட்டி, கோவில்களுக்குச் செல்கையில் பாகற்காய்களையும் தரிசினம் செய்விக்கும்படி செய்யவேண்டுமென்று வேண்டிக்கொண்டார்.

கிராம மக்கள் ஆகையால் ஏன், எதற்காக என்று கேட்காமல் அப்படியே பாகற்காய்களை அவரிடம் பெற்று  தாங்கள் சென்ற எல்லா இடங்களுக்கும் எடுத்துச் சென்றனர்; புனித நீராடச் செய்தனர். கடவுளரை தரிசினம் செய்யும் போதெல்லாம் அதையும் சந்நிதியில் வைத்தனர்.

ஓரிரு மாதங்களுக்குப் பின்னர் யாத்திரை முடிந்தது. எல்லோரும் பரம திருப்தியுடன் ஊருக்குத் திரும்பி துகாராம் சுவாமிகளின் காலில் விழுந்து நம்ஸ்கரித்துவிட்டு பாகற்காய்களையும் பத்திரமாக ஒப்படைத்தனர். அவர் சொன்னார்:

bitter gourd

நீங்கள் எல்லோரும் நான் சொன்னபடி செய்து பாகற்காய்களையும் கொண்டு வந்துவிட்டீர்கள். எனக்கு ரொம்ப சந்தோஷம். உங்கள் அனைவருக்கும் விருந்து தர விரும்புகிறேன். வருகின்ற வெள்ளிக் கிழமை எல்லோரும் என்னுடைய ஆசிரமத்துக்கு வாருங்கள் என்றார்.

அனைவரும் அறுசுவை விருந்துக்கு ஆசைப்பட்டு அங்கு வெள்ளிக்கிழமையன்று சந்தித்தனர். வடை, பாயசம், அப்பளம், பொறியலுடன் அறுசுவை உண்டி படைக்கப்பட்டது. அப்பொழுது துகாராம் சுவாமிகள், யாத்திரைக்குப் போன பாகற்காயையும் பொறியலாகச் செய்து அனைவர்க்கும் இது பிரசாதம் என்று பரிமாறினார். அனைவரும் அதை வாயில் வைத்த அடுத்த கனமே “மகா கசப்பு” என்று முகம் சுழித்தனர்.

துகாராம் சுவாமிகள், வியப்புடன், கசக்கிறதா? என்ன அதிசயம்? எத்தனை புனிதத் தலங்களுக்கு எடுத்துச் சென்றீர்கள்! எத்தனை புனித நீர் நிலைகளில்  நீராட்டினீர்கள்! இன்னும் அதன் பிறவிக்குணமான கசப்பு மாறவில்லையா? என்று வியந்தார். எல்லோருக்கும் சுவாமிகளின் உட்கருத்து விளங்கியது. பின்னர் சொன்னார்: உள்ளன்போடும் தூய்மையோடும் இறைவனை நினைத்துக் கொண்டு செய்வதே தீர்த்த யாத்திரை. அது உல்லாசப் பயணம் இல்லை. மனதில் மாற்றமில்லாமல் செய்யும் யாத்திரை பாகற்காய் யாத்திரை போன கதை போலத்தான் என்றார்.

—சுவாமி ராமதாஸ் சொன்ன கதை

12 jyotirlinga

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன உவமை

பசுவினிடமுள்ள பாலானது, வாஸ்தவத்தில் அதன் சரீர முழுவதிலும் ரத்த ரூபமாய் பரவியுள்ளது என்றாலும் அப்பசுவின் காதுகளையோ கொம்புகளையோ பிசைந்தால் பால் வராது. அதற்கு அதன் முலைக் காம்புகளைப் பிடித்துத்தான் கறக்க வேண்டும் அதுபோல ஈசுவரன் இவ்வுலகில் எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறான். ஆயினும் எல்லா இடத்திலும் அவனை உன்னால் காண முடியாது. பூர்வ பக்தர்களுடைய குண விசேஷம் நிரம்பிய புண்யஸ்தலங்களாகிய கோவில்களில்தான் அவன் சுலபமாய்த் தென்படுகிறான்.

வயிறு நிறைய புல்லைத் தின்ற ஒரு பசு ஓரிடத்தில் சாந்தமாகப் படுத்துக்கொண்டு அசைபோடுவதைப் போல, தீர்த்த யாத்திரைக்கு நீ போய் வந்தால், அந்தந்த திவ்ய ஸ்தலத்தில் உன் மனத்தில் எழுந்த தூய எண்ணங்களைப் பற்றிச் சிந்தித்து தனியிடத்தில் உட்கார்ந்து அவற்றிடையே ஆழ்ந்து போக வேண்டும். அவ்வாறின்றி அங்கிருந்து வந்ததும், அவ்வெண்ணங்கள் உன் மனத்தைவிட்டு அகன்று போகும்படி, நீ உலக விவகாரங்களில் தலையிட்டுக் கொள்ளக்கூடாது

பூமியின் நான்கு திக்குகளிலும் பிரயாணம் செய்தாலும் உண்மையான தர்மத்தை ஓரிடத்திலும் காணமாட்டாய். இருப்பதெல்லாம் உன் உள்ளத்திலேயே இருக்கிறது.

கங்கையில் குளிப்பதால் மட்டுமே மோட்சம் கிடைத்துவிடுமென்றால், கங்கை நதியில் வசிக்கும் மீன்களெல்லாம் மோட்சத்துக்குப் போய்விடுமே!

–ராமகிருஷ்ண உபதேச மஞ்சரி.

Hiring and Firing Anecdotes

Youre-fired

Article Written by London swaminathan

Date: 5 November 2015

Post No:2303

Time uploaded in London :– 11-39 AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Demand for Typists (During World War)

So great has been the demand for typists in the many war bureaus of Washington, that the legend has come to existence that the following test is now the standard by which applicants for such positions are hired:

The girl is shown into a room containing three objects: a washing machine, a typewriter and a machine gun; if she can identify the typewriter, she is hired.

Mark Twain: Idle and Fool!

Mark Twain was always impressed by the story of an industrious boy who became a millionaire. One of the things which remained in his mind was the fact that the boy had gotten his big chance by being noticed by a big business man while in the act of picking up a pin from the sidewalk.

When Mark Twain went to look for a job, he deliberately went to the street in front of an office window and began to pick up some pins which he had surreptiously strewn about. After a while he did succeed in attracting the attention of one of the men in the office. He came out into the street and, instead of the expected praise at such industry, Twain was astonished to hear the man say, “Here you, haven’t you anything better to do than pick up pins in the street? You must be an utterly idle and worthless fool.”

Xxx

Authority !!

In Tamil there is a proverb that says, “If you give power/authority to a scorpion it keeps on stinging.”

The Irish foreman on the construction job was new to his post of dignity. One of his first acts was discharge of one of his erstwhile fellow-workers. Asked why he had fired the man, he said, “I fired him not because I had anything against him, but I had the authority.”

Xxx

hired

Little Work!

A personnel manager found himself confronted with a real problem. He had explained to the applicant that he could not place him because the firm was overstaffed. “That is alright,” said the job seeker. “The little bit of work I would do wouldn’t be noticed.”

–Subham–

லண்டனில் எல்லோருக்கும் 13 கிலோ தங்கம் கிடைக்கும்!

IMG_8016

Article Written by London swaminathan

Date: 5 November 2015

Post No:2302

Time uploaded in London :– 9-20 AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

IMG_7982

லண்டனுக்கு வருவோர் அதிர்ஷ்ட சாலிகள்! லட்சுமி கடாக்ஷம் நிறைந்தவர்கள்!. தங்கக் கட்டி கிடைக்கும்! அதுவும், ஒன்றல்ல, இரண்டல்ல! 13 கிலோ தங்கம், அதாவது 13,000 கிராம் தங்கம்! தொடலாம், எடுக்கலாம், தூக்கலாம். ஆனால் வீட்டுக்கு மட்டும் கொண்டு செல்ல முடியாது! ஏன்?

லண்டனில் த்ரெட்நீடில் தெருவில் இங்கிலாந்து வங்கியின் காட்சியகம் (Bank of England Museum in Thread needle Street, London) உள்ளது. அங்கு ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் 13 கிலோ தங்கக் கட்டியை வைத்துள்ளனர் அதன் கீழே ஒரு கை நுழையும் அளவுக்கு ஓட்டையும் போட்டு வைத்துள்ளனர். எல்லோரும் அதைத் தூக்கிப் பார்க்கலாம். நானும் முயன்றேன். ஒரு கையால் தூக்குவது கடினம்தாம். இவ்வளவுக்கும் அந்தக் கட்டி முக்கால் அடி நீளம் கூட இல்லை.

IMG_7992 IMG_7996

இதன் விலை என்ன?

இந்திய மார்க்கெட்டில் ஒரு கிராம் சொக்கத் தங்கத்தின் விலை

ரூபாய் 2600. அப்படியானால் 13,000 கிராம் x ரூ 2600 = ???

நீங்களே பெருக்கிக் கொள்ளுங்கள்!! இது உங்களுக்கு இன்றைய வீட்டுப் பாடம் (ஹோம் ஒர்க்).

மத்திய லண்டனில் பாங்க் ஸ்டேஷன் அருகில் இந்த மியூசியம் இருக்கிறது. அதனுள்ளே இருக்கும் காப்பகத்தில் டன் கணக்கில் தங்கக் கட்டிகள் இருக்கின்றன. நமக்கு மாதிரிக்காக ஒரு சிறிய கட்டியை மேலே வைத்தூள்ளனர்.

இந்த மியூசியத்துக்கு வருவோருக்கு, குறிப்பாக வணிகவியல், வங்கிகள் பற்றிப் படிப்போருக்கு நிறைய விஷயங்கள் கிடைக்கும். பள்ளி மாணவர்கள், விளையாட்டு மூலம் தெரிந்துகொள்ள பணவீக்கக் கருவி ஒன்று வைத்திருக்கிறார்கள். அதை நெம்புகோல் போல அழுத்தினால் பணவீக்கம் மேலே செல்லும். அருகிலேயே, பணவீக்கம் என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது? இங்கிலாந்து வங்கி அதை இரண்டு சதவிகிதத்துக்குள் கட்டுப்படுத்துவது எப்படி? என்று பல பெரிய போஸ்டர்கள் வைத்துள்ளனர்.

IMG_7991

இங்கிலாந்து வங்கி, இந்தியாவின் ரிசர்வ் பாங்கு போன்றது. 400 ஆண்டுகளுக்கு முன் வங்கி தோன்றியதிலிருந்து இன்று வரை அதன் வளர்ச்சி, மாற்றங்கள், கரன்ஸி, நாணயம் அச்சிடுவது எப்படி? என்பனவற்றை விளக்கி வீடியோ ஆடியோ காட்சிகள் அமைத்துள்ளனர்.

சிறுவர்கள் விளையாடுவதற்காக பல கரன்ஸி துண்டுகளை வெட்டி இணைக்கும் புதிர் வைத்து இருக்கிறார்கள். நான் திங்கட் கிழமை அங்கே போன போது எடுத்த புகைப்படங்களைப் பாருங்கள்.

பாலிமர் (Polymer Currency) கரன்ஸி வருகிறது!!

காகிதத்தில் அச்சடிக்கும் நோட்டுகள் எளிதில் அழுக்கடைந்து சேதம் அடைவதால் உலகில் முப்பதுக்கும் மேலான நாடுகள் பாலிமர் கரன்ஸி நோட்டுகளை அச்சடித்துப் பயன்படுத்துகின்றனர். இனி பிரிட்டனிலும் பாலிமர் நோட்டுகள் அச்சடிக்கப் போகிறார்கள். கொஞ்ச காலத்தில் காகித கரன்ஸி நோட்டுகள் அரிய பொருள் ஆகி விடும்.

இந்த மியூசியத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வந்த தினசரி உபயோக நாணயங்கள், ஆண்டு தோறும் சிறப்பு நிகழ்ச்சிகளின் நினைவாக வெளியிடப்படும் நாணயங்கள் மற்றும் தங்கம், வெள்ளி நாணயங்களை விலைக்கும் விற்கிறார்கள். காசுள்ளவர்கள் வாங்கலாம்.

ஆனால் மியூசியத்தைப் பார்க்க கட்டணம் இல்லை. 13 கிலோ தங்கக் கட்டியைத் தொடவும் தூக்கவும் கட்டணம் இல்லை. அந்த ‘த்ரில்’ ஒன்றே போதுமே. லண்டனுக்கு வந்தால் கட்டாயம் பாருங்கள்.

IMG_7962

இந்தியாவில் உள்ள வங்கி மியூசியங்களிலும் இப்படிப் பல உத்திகளைக் கையாண்டால் மக்களின் பொது அறிவு மிகும்!

இங்கிலாந்து வங்கியில் லெட்சுமி!

பிரிட்டனின் செல்வச் செழிப்புக்கு என்ன காரணம்?

நம்முடைய கோஹினூர் வைரம் போன்ற பல அபூர்வ, அதிர்ஷ்டகரமான வைரங்களையும், செல்வம் கொடுக்கும் பல மர்ம சிலைகளையும் பிரிட்டிஷ்காரகள் வைத்திருக்கின்றனர். பார்ப்பவர்களுக்கு இவையெல்லாம் பொம்மை போலத் தோன்றும். ஆனால் அதன் ரஹசியங்களைத் தக்கோரிடம் அறிந்து இதை வைத்துள்ளனர். இங்கிலாந்து வங்கி மியூசியத்தில் லெட்சுமியின் சிலை கிரேக்க பாணியில் இருக்கிறது. தான்ய லெட்சுமியை, கிரேக்கர்கள் செரிஸ் (Ceres= Sri) என்பர். ஸ்ரீ = திரு என்னும் லெட்சுமியின் பெயரே இப்படி செரி என்று மறுவியுள்ளது. நமது அருகிலுள்ள ஸ்ரீலங்காவில் கூட ஸ்ரீ என்பதை ‘சிரி’ என்பர். சிரிமாவோ பண்டாரநாயகெ (நாயக) என்பர்.

இந்த மியூசியத்தில் ஆடியோ, வீடியோ காட்சிகள் மூலம் பல விஷயங்களைக் கற்றுத் தருகின்றனர். நான் போன போது பிரான்ஸ், ஜெர்மனியிருந்து வந்த பள்ளி மாணவ, மாணவியர் — பல கருவிகளை இயக்கி பல விஷயங்களைக் கற்பதைப் பார்த்தேன். 400 ஆண்டுகளுக்கு   முன் லண்டன் எப்படி இருந்தது, வங்கி எப்படி துவங்கியது போன்றவை பொம்மை உருவில் காட்டப்பட்டுள்ளன. ஹெண்டல் என்ற இசை மேதை ஒரு வங்கிக் கணக்கர் என்ற வியப்பான செய்தியும் படம் மூலம் அறிந்தேன்.

IMG_7984 IMG_7985

மாதத்துக்கு ஒரு வியாழக்கிழமையன்று வங்கியின் கவர்னர்கள் கூட்டம் நடைபெறும். அதை மக்கள் ஆவலுடனும் கவலையுடனும் எதிர்பார்த்து நிற்பர். காரணம் என்னவெனில் வங்கியின் வட்டி விகிதம் உயருமா, குறையுமா, அதேயளவு நீடிக்குமா என்று அக்கூட்டம் முடிவு செய்யும். வட்டி விகிதம் கூடினால், ஒவ்வொரு குடும்பமும் மாதம்தோறும் கட்டும் வீட்டுக் கடன் வட்டி விகிதமும் உயரும். இந்த முடிவு எல்லாம் எப்படி எடுக்கப்படுகிறது என்ற விவரங்களையும் மியூசியத்தில்  அறியலாம். சின்ன மியூசியம்தான். ஒரு மணி நேரத்துக்குள் முடித்துவிட்டால் பக்கத்திலுள்ள கில்ட் ஹால் ஆர்ட் காலரி (இலவசம்),  சாமுவேல் ஜான்சன் மியூசியம் (கட்டணம் உண்டு) ஆகியவற்றையும் பார்க்கலாம். அருகில் லண்டன் மியூசியமும் உளது.

IMG_7951 IMG_7976 IMG_8007 IMG_8013

மாணவர்கள் விளையாடுவதற்காக பண வீக்கக் கருவி, வெட்டி ஒட்டும் புதிரகள் முதலியன வைத்துள்ளனர்.

–சுபம்–

கன்னியருக்கும் இளைஞர்களுக்கும் அறிவியல் தரும் ஆலோசனை!

jeffrey book

Article Written by S NAGARAJAN

Date: 5 November 2015

Post No:2301

Time uploaded in London :–  8-06 AM

(Thanks  for the pictures) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

பாக்யா அறிவியல் துளிகள் தொடரில் வெளி வந்த கட்டுரை

கன்னியருக்கும் இளைஞர்களுக்கும் அறிவியல் தரும் ஆலோசனை!

 

.நாகராஜன்

 

வாழ்க்கையில் ஒரே ஒரு முறை தான் நீங்கள் இளமையோடு இருக்க முடியும். ஆனால் மனமுதிர்ச்சி இன்றி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இருக்கலாம்” –ஆக்டன் நாஷ்

 

திருமணமாக இருக்கும் கன்னியருக்கும் இளைஞர்களுக்கும் அறிவியல் இலவச ஆலோசனைடிப்ஸ் தர முன் வந்துள்ளது.

 

 

    இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்குமே இளம் பெண்களின் எதிர்பார்ப்புகளும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.

 

     இளமையாக, மிக அழகாக இருக்க வேண்டும், உயரமோ அதிகமாக இருக்க வேண்டும். வருடாந்திர வருமானம் பல லகரமாக இருக்க வேண்டும், வீடு மற்றும் இதர சொத்துகள் தன் பெயரிலேயே இருக்கும் டாகுமெண்டைக் காண்பிக்க வேண்டும், முக்கியமாக லக்கேஜுகள் (மாமனார், மாமியார், நாத்தனார் உள்ளிட்ட மூட்டைகள்) எதுவும் இருக்கக் கூடாது.. இத்யாதி, இத்யாதி நிபந்தனைகளை கன்னியர்கள் விதிக்கும் போது பெண்ணின் வீடியோ புரொஃபைலை பார்த்தால் தான் தங்களால் முடிவே எடுக்க முடியும் என்கின்றனர் இளைஞர்கள்!

 

 1139-54aec479aaeec

 

      எல்லா பத்திரிக்கைகளும், இணையதளங்களும், ஜோதிட மற்றும் மேட்ச்மேகிங் நிலையங்களும் அலறுகின்றனஇந்த கண்டிஷன்களைப் பார்த்து. “எங்கள் வருட வருமானம் எவ்வளவு தெரியுமா? நாங்கள் எவ்வளவு படித்திருக்கிறோம் தெரியுமா? இப்போதே எங்கள் பெயரிலேயே த்ரீ பெட்ரூம் அபார்ட்மெண்ட் வாங்கி இருக்கிறோமேஎன்று புன்னகைக்கின்றனர், இளம் கன்னியர்கள்!! இளைஞர்களும் சளைக்கவில்லை, அவர்கள் இவ்வளவு எதிர்பார்க்கும்போது நாங்களும் அவர்களுடன் சாட் செய்து தானே முடிவெடுக்க முடியும் என்கின்றனர்.

 

 

      இந்த எதிர்பார்ப்புகளுக்கான காரணங்களை உளவியலாளர் ஜெஃப்ரி ஜென்ஸன் ஆர்னெட் (Jeffrey Jensen Arnett) அழகாகத் தெரிவிக்கிறார்:” ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் பெண்கள் வேலை பார்க்க அவ்வளவாகச் செல்லவில்லை; பெரும் பணமும் வருமானமாகச் சம்பாதிக்கவில்லை; இன்றைய நிலையோ மாறுபட்ட ஒன்று. பொருளாதார மற்றும் உத்யோக அந்தஸ்து ரீதியாகவும் இளம் பெண்கள் இன்று மிக உயர்நிலையை அடைந்து விட்டனர். ஆகவே அவர்கள் மனைவி, தாய் என்ற நிலைகளோடு தனக்கென ஒரு அடையாளம் இருப்பதை விரும்புகின்றனர். இந்த அடையாளம் தேடும் முயற்சியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே போகின்றனஎன்கிறார் அவர்!

Picture of Jeffrey Jensen Arnett

 

 jeefrey profile

      இவர்கள் இப்படி எதிர்பார்த்து தங்களின் திருமணத்தைத் தள்ளிக் கொண்டே போவது பெற்றோர்களையும் சமூக ஆர்வலர்களையும் கவலைப்பட வைத்துக் கொண்டிருக்கிறது. இப்போது விஞ்ஞானிகள் களத்தில் இறங்கி ஆய்வு நடத்தி முடிவுகளைத் தெரிவித்திருக்கின்றனர்.

 

 

     தன்னுடையவனாக ஒருவனை ஏற்றுக் கொள்வதற்கு மிஸ்டர் பெர்ஃபெக்டை (Mr Perfect) எதிர்பார்ப்பதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருப்பதாக அறிவியல் ஆய்வின் முடிவு ஒன்று வலியுறுத்துகிறது. மிச்சிகன் ஸ்டேட் பல்கலைக் கழகத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் படி பரிணாம தத்துவத்தின் படியும் கூட இது முடியாத ஒன்று என்பது தெரிய வருகிறது!

 

 

        ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வில் ஒரு கணினி மாடலை உருவாக்கினர். இந்த மாடல் அமைப்பு ஆயிரம் தலைமுறைகள் பரிணாம வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்று. அபாயமுள்ள சூதாட்டம் போன்றவற்றில் அதிக ஆதாயம் தரும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் இந்த அமைப்பை தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் சிக்கலான வேலையைச் செய்யும்படி பணித்தனர்!

 

 

       ஆரம்பகால மனிதர்களை இந்த கணினி மூலமாகத் தங்களின் பார்ட்னரைத் தேர்ந்தெடுக்கும்படி செய்து பார்த்து அவர்கள் மிக மிக அருமையான துணைவன் அல்லது துணைவியைத் தேர்ந்தெடுத்தனரா என்பதே கேள்வி!

 

 

     ஆய்வை நடத்திய, மைக்ரோபயாலஜிஸ்டான கிறிஸ் அடாமி ((Chris Adami), “குறைந்த எதிர்பார்ப்புள்ள பார்ட்னரை அவர்கள் மணந்து கொள்ளலாம் அல்லது காத்திருந்துபெர்ஃபெக்டான பார்ட்னரைத்”  தேர்ந்தெடுக்கலாம் என்ற படி மாடல் அமைப்பு உருவாக்கப்பட்டது. மிஸ்டர் அல்லது மிஸ் பெர்ஃபெக்டை

 

விரும்பியோருக்கு அப்படி ஒருவரைத் தேர்ந்தெடுக்கவே முடியவில்லை என்பது ஆய்வின் மூலம் தெரியவருகிறதுஎன்கிறார்.

 

 

     வாழ்க்கையில் ஒரே ஒரு முறை எடுக்கும் முக்கிய முடிவு தனது கணவரை அல்லது மனைவியைத் தேர்ந்தெடுப்பது. இதில் எந்த சூழ்நிலைகள் அவர்களின் முடிவைப் பாதிக்கிறது என்பதையும் பார்த்து விட்டோம் என்கிறார் அடாமி.

 

      ஒரு ஆணோ, பெண்ணோ எந்த சூழலில் அவர்கள் வளர்க்கப்பட்டார்கள் என்பது முடிவை மேற்கொள்வதில் பெரும் பங்கு வகிக்கிறதாம்! 150 பேருக்கு மேல் உள்ள சமுகச் சூழலில் வளர்க்கப்பட்டோர் உடனடி முடிவை மேற்கொள்கின்றனர். மிகச் சிறிய குழுவினருடன் இருப்பவர்கள் மிக மிக அதிக எதிர்பார்ப்புகளைக் கொள்கின்றனர். இவர்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற வழியில்லாமல் போய்விடுகிறது.

 

 

      ஆகவே இந்த ஆய்வின் முடிவின் படி இளம் பெண்கள் மிஸ்டர் ஓகேயை உடனடியாகத் தேர்ந்தெடுத்து விட்டால் அவர்களின் குழந்தை பாக்கியம் உள்ளிட அம்சங்கள் சிறந்து விளங்கும். மிஸ்டர் பெர்ஃபெக்ட் தான் வேண்டுமெனில் அப்படிப்பட்டவர் கிடைக்க வாய்ப்பு மிகவும் அரிதே! இதே முடிவு

 

இளைஞர்களுக்கும் பொருந்தும். அவர்களும் மிஸ் பெர்பெக்டை எதிர்பார்க்காமல் மிஸ் ஓகேக்கு ஓகே சொல்ல வேண்டும் என்கிறது ஆய்வின் முடிவு.

 naga katturai

      இந்த சமயத்தில் பழைய கால ஜோக் ஒன்றை சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் நினைத்துப் பார்த்துச் சற்று சிந்திக்கலாம்.

 

ஒரு இளைஞன் திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தான். ஏன் என்று அனைவரும் கேட்ட போது, ‘தான் மிஸ் பெர்ஃபெக்டை மட்டுமே எதிர்பார்ப்பதாகக்கூறினான்.

 

ஒரு நாள், அவன் சந்தோஷத்தால் துள்ளிக் குதிப்பதைக் கண்ட அவனது நண்பர்கள் சந்தோஷத்திற்கான காரணத்தைக் கேட்டனர்.

மிஸ் பெர்ஃபெக்டைக் கண்டு விட்டேன்!” என்றான் அவன்.

மறுநாள் அவன் மிகவும் சோகமாக இருப்பதைக் கண்ட அவனது நண்பர்கள், அவனிடம்,”என்ன, இன்னுமா மிஸ் பெர்ஃபெக்டிடம் பேசவில்லை!” என்று கேட்டனர். அதற்கு அவன் சொன்னான்:”நேற்றே பார்த்துப் பேசி விட்டேன். ஆனால் அவள் மிஸ்டர் பெர்ஃபெக்டை எதிர்பார்க்கிறாளாம்!”

இந்த ஜோக் இன்று நடைமுறை ஆகி விடக்கூடாது!

 

 

உரிய இளம் வயதில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கின்றன அனைத்து அற நூல்களும் !இதையே இன்று அறிவியலும் வற்புறுத்துகிறது!

 

newton

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

சர் ஐஸக் நியூட்டன் தன் ஆராய்ச்சியில் மூழ்கி விட்டால் அவருக்கு வெளி உலகமோ அல்லது தன்னைப் பற்றிய நினைவோ சிறிதும் இருக்காது. இதை விளக்கும் சம்பவங்களுள் ஒன்று இது.

 

 

ஒருநாள் டாக்டர் ஸ்டக்லி (Doctor Stukely)  என்ற நண்பர் ஒருவர் ஐஸக் நியூட்டனைப் பார்க்க முன்கூட்டியே அவரிடம் நேரம் நிர்ணயித்து விட்டு குறித்த நேரத்தில் அவரைச் சந்திக்க வந்தார். நியூட்டனின் வேலையாள் அவர் ஆராய்ச்சிகூடத்தில் இருப்பதாகவும் தன்னை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று உத்தரவு போட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் அது இரவு நேரத்தில் சாப்பாடு சாப்பிடும் நேரமானதால் அந்த வேலைக்காரர் ஒரு சிக்கனைத் தயார் செய்து அவர் டேபிளின் மீது வைத்து அதை ஒரு மூடியால் மூடி வைத்தார். ஒரு மணி நேரம் ஆனது. நியூட்டன் வரவே இல்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த டாக்டர் ஸ்டக்லி  சிக்கனை எடுத்துச் சாப்பிட்டார். காலி பாத்திரத்தின் மீது மூடியைக் கவிழ்த்து வைத்தார். வேலையாளிடம் இன்னொரு சிக்கனைத் தயார் செய்யுமாறும் கூறி விட்டார். அது தயாராவதற்குள் நியூட்டன் டைனிங் டேபிளுக்கு வந்து விட்டார்.

ஸ்டக்லியை நோக்கி, “ தாமதம் ஆகி விட்டது. மன்னியுங்கள்.  களைப்பாக இருக்கிறது. ஒரே நிமிடத்தில் உணவை முடித்து விட்டு வருகிறேன்” என்று சொல்லியவாறே மூடியைத் திறந்தார். தட்டில் ஒன்றுமே இல்லை. ஸ்டக்லியைப் பார்த்த நியூட்டன், “நான் எப்படிப்பட்ட ஆள் பாருங்கள்!  சாப்பிட்டு விட்டேன் என்பதையே மறந்துபோய் மறுபடியும் சாப்பிடுவதற்கு உட்கார்ந்து விட்டேன்!” என்று புன்னகை செய்தவாறே கூறினார்.

 

நடந்ததை ஸ்டக்லி சொன்னது தனிக் கதை!

 

ஆராய்ச்சியில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தவர் நியூட்டன்!

*******