தொண்டை மண்டல வள்ளல் காளத்தி முதலியார்! (Post No.11,063)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,063

Date uploaded in London – –    30 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

தொண்டைமண்டல சதகம் பாடல்கள் 88 & 89

தொண்டை மண்டல வள்ளல் காளத்தி முதலியார்!

ச.நாகராஜன்

தொண்டைமண்டலத்தில் வல்லம் என்ற ஊரில் காளத்தி முதலியார் என்ற தமிழ் அன்பர் வாழ்ந்து வந்தார். புலவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளிக் கொடுக்கும் வள்ளல் அவர்.

திருக்குறுங்குடியில் வாழ்ந்து வந்த திருக்குறுங்குடி நம்பி என்னும் தமிழ்ப் புலவர் வறுமையால் வாடி வதங்கினார்.

தன் வறுமை நீங்கும் பொருட்டு அவர் காளத்தி முதலியார் மீது கவி மாரி பொழிந்தார். அதற்காக யானை உள்ளிட்ட பரிசுகளை அளித்தார் காளத்தி வள்ளல்.

அதை தொண்டைமண்டல சதகம் பாடல் 88இல் தெரிவிக்கிறது.

பாடல் இதோ:

சொல்லையிலாகச் சொரிகவிமாரி சுருதிவல்லான்

செல்லையில்சோலைக் குறுங்குடிவாழ்நம்பி சென்றுகண்ட

வெல்லையினீ டுங் கரடக்கடாக்களி ரென்றுசொன்ன

வல்லையிற்காளத்தி வாழ்வானதுந் தொண்டை மண்டலமே

இப்பாடலின் பொருள்;

வேலாயுதம் போலத் தவறாது பயன்படுத்த வல்ல சொற்கள் அமைந்த கவிகளை மழை சொரிவது போல மிகுதிபடச் சொல்வதிலும், சாத்திர உணர்ச்சியிலும் வல்லவராய்,

மேகம் சென்று தேன் குடித்தற்கு இடமாகிய சோலை சூழ்ந்த திருக்குறுங்குடியில் வாழ்ந்த நம்பி என்னும் புலவர் வல்லம் என்னும் ஊரில் வாழ்ந்த காளத்தில் முதலியாரிடம் சென்று கண்டவுடனே, “கரடக்கடாக் களிற்றாய்” என்னும் சொல் அமைந்த பாடலைத் துரிதமாகச் சொல்ல, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களில் உணர்த்தும் நூல்களைக் குற்றமறக் கற்றோருக்குப் பயனாகும் கணிதமும் இலக்கணங்களும் மனிதருக்கு இரண்டு கண்களாம், இதனைக் கற்றாலே கண்கள் உடையவர் எனப்படுவர். கல்லாதார் கண் இல்லாதவராவார். கற்றவர் கற்றோரையே சேர விரும்புவர். ஆதலால் கற்றோர் உயர்ந்தோர் ஆவர். அழிவில்லாத செல்வம் கல்வியே. இதை உணர்ந்து யானை முதலிய பரிசையும் துரிதமாகக் கொடுத்த வல்ல மாநகர் காளத்தி முதலியார் வாழ்வும் தொண்டை மண்டலத்திலேயே அமைந்ததாகும்.

திருக்குறுங்குடி நம்பி பாடிய பாடல் வருமாறு:-

பொரடக்கயம்பிடி யென்றான்மதனுமிப் பூவையுமா

தரடக்கமுஞ்சற் றறிந்திலனேதனைத் தாள்பணியா

முரக்கவுடக் கெடிமண்டலீகர் முடிபிடுங்குங்

கரடக்கடாக்களிற் றாய்வ்ல்லைமாநகர் காளத்தியே

இதே காளத்தி முதலியார் என்னும் வள்ளலைப் பற்றி அடுத்த பாடலிலும் (பாடல் 89) சொல்கிறது தொண்டை மண்டல சதகம்.

பாடல் வருமாறு:-

கொல்லையிற் பாற்பசு மேய்ப்போன்கறப்பவன் கொண்டு சென்றே

யெல்லையிற்சேர்ப்பவன் பாலடுவோனிவ ரித்தனையும்

சொல்லையிற்பாவல னோரோர்கவிசொல்லி சொல்லநல்கும

வல்லையிற்காளத்தி வாழ்வானதுந் தொண்டை மண்டலமே

கூரிய சொல் அமைந்த கவி பாடும் புலவர் ஒருவர் குழந்தைக்குப்  பால் இல்லாததால் காளத்தி முதலியாரிடம் வந்து கறவைப் பசு பெற்று வரும் பொருட்டு அவர் பேரால் கவி பாடிக் கொண்டு சென்றார்.

செல்லும் வழியிலே, கொல்லையில் பசு நிரை மேய்ப்பவன், கறப்பவன், கொண்டு போவோன், பால் காய்ச்சுவோன் ஆகிய அனைவரும் புலவரை உபசரித்துத் தம்முள் ஒவ்வொருவர் பேரிலும் பாடல் பெற்று ஒவ்வொருவரும் பசு கொடுத்துப் புலவர் வீடு சேர்த்துத் தமது எஜமானனுக்கு அக்கவியை தெரிவிக்க அவரும் அழைத்துப் பசு நிரையையும், திரவியத்தையும் பரிசாகக் கொடுத்தனுப்பினார்.

இத்தகைய வல்லத்துக் காளத்தி முதலியாரும் தொண்டை மண்டலத்தினரே.

குழந்தைக்குப் பால் கொடுக்க வசதி இல்லாத புலவர் காளத்தி முதலியாரைப் புகழ்ந்து பாடி வரும் போதே அங்கு பசுவை மேய்ப்பவன், கறப்பவன் உள்ளிட்ட அனைவரும் ஆளுக்கு ஒரு பசுவைக் கொடுத்தனராம்.

அப்படி ஒரு அருமையான வள்ளல் ஆவார் காளத்தி முதலியார்.

அவரைப் போற்றும் பாடல்கள் இவை.

***,

tags – தொண்டை மண்டல வள்ளல்,  காளத்தி முதலியார்,

MY TRIP TO THIRU VEN KAADU- BUDHA KSHETRA (Post No.11,062)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,062

Date uploaded in London – –    29 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

We had some free time before the Shasti Aptha Purthy ( of a relative) event at Thirukkadaiyur and decided to visit Thiru Ven Kadu (meaning White Forest and Svetaaranyam in Sanskrit. I had the darshan of Lord Shiva on 28th May, 2022.

Ven = Sveta= White

Kaadu = Aranya = Forest

Thiru = Holy = Sri = Sir title in the West

It is a Shiva temple with a special shrine for Budha (Mercury) one of the Nava Grahas (Nine Planets).

It is very near Thirukkadaiyur, just 16 kilometres or 10 miles away. We reached the temple in 20 minutes.

Now, some details in bullet points:-

1.It is 8 miles from Sirkazi. God’s name Svetaranysvarar

Goddess Name- Brahmavidya Nayaki

2. Sung and sanctified by all the Four Saivite Saints- Sambandhar, Appar, Sundadarar and Manikkavasagar.

3. The shrine is at least 1400 year old. Choza inscriptions are available from Later Choza period.

4.Vijaya Nagara kings added new structures to Choza period Temple

5.Thre are three water tanks in the temple- Surya, Chandra and Agni Theerthas.

There are three Trees (Kondrai, Al/banyan and Vilva; three main shrines and three tanks. Under the Banyan tree, there is Rudra patha (foot print of Rudra); but we did not go there.

6.Aghora Murthy with a trident in his hand facing south is a remarkable idol here. Special Pujas are done on Sunday nights.

7.Natarajar shrine and Vishnu shrine, side by side, would remind one of Lord Nataraja of Chidambaram. This temple is called Adi Chidambaram

8. Shiva is in Linga form; it a small village.

9.Students who want good education and who has Jataka doshas (regarding planet Budha/Mercury)come here to get the blessing of the gods.

10.It is a tradition among Bhaktas/devotees to visit all the Nine Planet Shrines in this area, mostly around Kumbakonam.

11.Pillai Idukki Amman, supposed to be goddess Parvati, is holding the child Sambandhar.

–subham–

tags- Navagraha Kshetra, Budha shrine, Mercury, Thiruvenkadu, Svetaranyam, Aghoramurthy

சத்சங்கம்-நல்லோர் சேர்க்கை- பற்றிய 31 பொன்மொழிகள் (Post No.11,061)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,061

Date uploaded in London – –    29 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஜூலை 2022 காலண்டர்

பண்டிகை தினங்கள் – ஜூலை  1- பூரி ஜகந்நாதர் ரத்த யாத்திரை ; 4 சுவாமி விவேகானந்தர் நினைவு நாள் ; 10 பக்ரீத் ; 13- வியாச பூர்ணிமா – குரு  பூர்ணிமா ; 17 தட்சிணாயன புண்ய காலம் ; 28 ஆடி அமாவாசை

பெளர்ணமி  13; அமாவாசை  28;  ஏகாதசி விரத நாட்கள் – 9/10 and 24

ஜூலை 1 வெள்ளிக் கிழமை

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்- 443

ஒருவன் அடையக்கூடிய செல்வங்களுள் தலையாய

செல்வம் அறிவில் சிறந்த பெரியார்கள் சூழ இருப்பதேயாகும்.

xxx

ஜூலை  2 சனிக் கிழமை

ஞாதிஸ்சேத் அநலேன கிம் யதி சுஹ்ருத்திவ்யௌஷதம் கிம் பலம்

உண்மை நண்பன் இருந்தால் மருந்து தேவையா?

தன்னைச் சுற்றிலும் கெட்டவர்கள் இருந்தால் பாம்புகள் எதற்கு?

-பர்த்ருஹரி 21 Niti Sataka

xxx

ஜூலை  3 ஞாயிற்றுக் கிழமை

பெரியார் துணைக்கு ஏங்கு—

உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்- 442

இருக்கும் துன்பத்தைப் போக்கி, இனி துன்பம் வராமல் காக்கும் அறிவிற் சிறந்த பெரியோரை பேணுக

xxx

ஜூலை  4 திங்கட் கிழமை

ப்ரீதிஹி ஸாது ஜனே நயோ ந்ருப ஜனே வித்வத் ஜனே ச ஆர்ஜவம்

புனிதர்களின் உறவுக்கு ஏங்க வேண்டும்;

ஆட்சியாளரின் விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும்;

கற்றோரிடம் பணிவுடன் இருக்க வேண்டும்;

-பர்த்ருஹரி 22 Niti Sataka

xxx

ஜூலை  5 செவ்வாய்க் கிழமை

சேதஹ ப்ரஸாதயதி திஷு தனோதி கீர்த்திம்

ஸத்ஸங்கதிஹி கதய கிம் ந கரோதி பும்ஸாம் 1-23

புனிதர்களின், அறிவாளிகளின் தோழமையானது ஒருவனின் அறியாமையையும் அறிவின்மையையும் நீக்கும்;

-பர்த்ருஹரி 23 Niti Sataka

xxx

ஜூலை  6 புதன் கிழமை

ஆதிசங்கரரும் பஜகோவிந்தம் என்னும் துதியில் நல்லோர் சஹவாசம் முக்தி நிலைக்கு இட்டும் செல்லும் என்கிறார்:-

சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்

நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்

நிர்மோஹத்வே நிஸ்ஸலதத்வம்

நிஸ்ஸலதத்வே ஜீவன் முக்தி – பஜகோவிந்தம்.

xxx

ஜூலை  7 வியாழக் கிழமை

திருவள்ளுவரும் சத்சங்கத்தின் பெருமையை, தொண்டர்தம் கூட்டை, ‘கேள்வி’ என்னும் அதிகாரத்தில் சொல்லுவார்:

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும் (குறள் 416)

கொஞ்சமாவது நல்லது கேளுங்கள்; அது உங்களுக்குப் பயன்படுகிறபோது நல்ல பெருமையைக் கொண்டுவரும் – என்கிறார்.

xxxx

ஜூலை 8 வெள்ளிக் கிழமை

 சறுக்கி விழும் நிலத்தில் நடக்கும்போது பயன்படும் ஊன்றுகோல் போல (walking stick வாக்கிங் ஸ்டிக்), புராண இதிஹாசச் சொற்பொழிவுகள் பயன்படும் என்பார்:

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் – குறள் 415

xxxx

ஜூலை 9 சனிக் கிழமை

“இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
இனிது! இனிது! ஏகாந்தம் இனிது !
அதனினும் இனிது ! ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது ! அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது! அறிவுள்ளோரை
கனவிலும் நனவிலும் காண்பதுதானே!”

ஒளவையார்

xxx

ஜூலை 10 ஞாயிற்றுக் கிழமை

“நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே—நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று” —-(–ஒளவையார்

வாக்குண்டாம்)

xxx

ஜூலை 11 திங்கட் கிழமை

இம்மையில் சுவர்க்கம்
நற்குணன் உடைய வேந்தை
நயந்து சேவித்தல் ஒன்று;

மூன்று வகை சொர்க்கலோக இன்பங்களில் ‘வாசகர் வட்டமும்’ ஒன்று. அந்த வாசகர்கள் நன்னூலை வாசித்து , விவாதித்து பகிர்ந்து கொள்வராம்; அதாவது சத் சங்கம்! —(விவேக சிந்தாமணி)

xxx

ஜூலை 12 செவ்வாய்க் கிழமை

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்– பழமொழி

xxxx

ஜூலை 13 புதன் கிழமை

ஸ்வயம் ஹி  தீர்த்தானி புனைந்தி  ஸந்தஹ

புனிதர்கள் சேர்க்கையால் ஸ்தலங்களும் புனிதம் பெறுகின்றன -பாகவத புராணம் 1-19-8

xxx

ஜூலை 14 வியாழக் கிழமை

ஸ்வம் ஜீவிதமபி ஸந்தோ ந கணயந்தி மித்ரார்த்தே – பஞ்ச தந்திரம்

நண்பர்களைக் காப்பாற்றுவதற்காக நல்லோர் தன்  உயிரையும் பொருட்படுத்தார்

xxx

ஜூலை 15 வெள்ளிக் கிழமை

ஸுமனசோ முசலேன மா ஷோத்சி -பாததாதிக

நல்லோர் மனதை புண்படுத்தாதீர்கள்

xxx

ஜூலை 16 சனிக் கிழமை

ஸபா பாதி சஜ்ஜனை ஹி – ப்ருஹத் கதா மஞ்சரி 

நல்லோர் வருகையால் ஸபையே பிரகாசிக்கும்.

xxx

ஜூலை 17 ஞாயிற்றுக் கிழமை

ஸந்தஸ்து பவந்தி பூஜனீயாஹா – கதா சரித் சாகரம்

பெரியோர்கள் பூஜிக்கத்தக்கவர்கள்.

xxx

ஜூலை 18 திங்கட் கிழமை

ஸதா லோகஹிதா ஸக்தா ரத்னதீபா இவோத்தமாஹா

நல்லோர், அலங்கார விளக்கு போன்றவர்கள் ; எப்போதும் சமுதாயத்துக்கு நல்லது செய்வதையே நோக்கமகாகக் கொண்டவர்கள் – பழமொழி

xxx

ஜூலை 19 செவ்வாய்க் கிழமை

ஸதாம் ஹி ஸங்கஸ் ஸகலம் ப்ரபூதே

நல்லோர் சேர்க்கை நல்லனவெல்லாம் தரும் -சுபாஷிதாவலி.

xxx

ஜூலை 20 புதன் கிழமை

ஸதாம் ஹி ப்ரியவததா குலவித்யா — பழமொழி

இனியவை கூறல், நல்லோர் குல வழக்கம் ஆகும்

xxx

ஜூலை 21 வியாழக் கிழமை

விக்ரியாயை ந கல்பந்தே ஸம்பந்தாஹா ஸதனுஷ்டிதாஹா

நல்லோர் சகவாசம் தவறான வழியில் செல்லாது – காளிதாஸனின் குமார சம்பவம்

xxx

ஜூலை 22 வெள்ளிக் கிழமை

நிர்குணேஷ்வபி ஸத்வேஷு தயாம் குர்வந்தி ஸாதவஹ

குணமற்ற வர்களிடத்தும் கருணை காட்டுவர்  நல்லோர் – ஹிதோபதேசம்

xxx

ஜூலை 23 சனிக் கிழமை

சன்னா பவந்தி புவி ஸத் புருஷாஹா கதஞ்சித் – அவிமாரக

நல்லோர்கள்  எதோ ஒரு காரணத்தால் மறைந்தே நிற்கிறார்கள்

xxx

ஜூலை 24 ஞாயிற்றுக் கிழமை

தோஷாய ஹி விதக்தானாம் ஸ்வபாவ ஸு பகோ ஜனஹ

இயற்கையிலேயே கருணை உள்ளவர்கள் நல்லோருடன் தாமாகவே சேர்ந்துவிடுகிறார்கள்- இனம் இனத்தோடு சேரும்- பாரத மஞ்சரி

xxx

ஜூலை 25 திங்கட் கிழமை

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்- 892

பொருள்
பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்.

xxx

ஜூலை 26 செவ்வாய்க் கிழமை

கர்தவ்யம் ஹி ஸதாம் வசஹ- கதா சரித்  சாகரம்

நல்லோர் சொல்லுவதைப் பின்பற்றுக

xxx

ஜூலை 27 புதன் கிழமை

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்

அல்லற் படுப்பதூஉம் இல் –குறள் 460

நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.

xxx

ஜூலை 28 வியாழக் கிழமை

உணர உணரும் உணர்வுடை யாரைப்

புணரிற் புணருமாம் இன்பம் புணரின்

நாலடியார் 247)

நாம் மனத்தில் நினைத்தைக் குறிப்பால் உணரும் அறிவாற்றல் உடையோரை நண்பராகக் கொண்டால் இன்பம் கிடைக்கும்

xxxx

ஜூலை 29 வெள்ளிக் கிழமை

”தெருண்ட மேலவர் சிறியவர்ச் சேரினும் அவர்தம்

மருண்ட தன்மையை மாற்றுவர்” (கம்ப.வரைக்காட்சி.8)

குணமற்ற சிறியோரையும் மாற்றிவிடுவர் பெரியோர்கள்- கம்பன்

xxx

ஜூலை 30 சனிக் கிழமை

அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறன்அறிந்து தேர்ந்து கொளல்.-குறள் 441

தர்மத்தை நன்கு கற்றறிந்த , அனுபவம் மிக்க அறிஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் நட்புடன் பழகுக

xxx

ஜூலை 31 ஞாயிற்றுக் கிழமை

பெரியாரைத் துணை கொள் . சான்றோர் இனத்திரு – ஆத்தி சூடி

—subham— Tags- சத்சங்கம், நல்லோர் சேர்க்கை,  பொன்மொழிகள்  

உலகை நடுங்க வைத்த நாடு! (Post No.11060)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,060

Date uploaded in London – –    29 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

14-6-2022 தேதியிட்ட மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள

கட்டுரை            

             உலகை நடுங்க வைத்த நாடு!

                                             ச.நாகராஜன்

பிரபல விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை சந்தித்த பத்திரிகையாளர்கள் அவரிடம் ஒரு

 கேள்வியைக் கேட்டனர் :

“அணுகுண்டினால் பாதிக்கப்படாமல், அணுகுண்டு போடப்படுவதிலிருந்து உலக

நாடுகள் தப்பிக்க வழி ஏதேனும் உண்டா?” என்பதே கேள்வி.

உண்டு என்றார் ஐன்ஸ்டீன். அனைவரும் பரபரப்புடனும் மிகுந்த ஆவலுடனும்,

‘அது என்ன, என்ன?’ என்று கேட்டனர்.

ஐன்ஸ்டீன் கூறினார்: ‘சமாதானம்’!

உலகை ஆட்டிய ஜெர்மனி 

உலக வரலாற்றில் மாபெரும் போராகக் கருதப்படும் இரண்டாம் உலக மகா

யுத்தத்திற்கு காரணமான ஜெர்மனி மத்திய ஐரோப்பாவில் 1,37,847 சதுர மைல்

பரப்புடனும் 8.3 கோடி ஜனத்தொகையுடனும் உள்ள ஒரு குட்டி நாடு.

ஆனால் அது உலகையே ஆட்டியது என்னவோ உண்மை தான்!

வடக்கில் டென்மார்க், கிழக்கில் செக் ரிபப்ளிக் மற்றும் போலந்து, தெற்கில்

ஆஸ்திரியா மற்றும் ஸ்விட்ஸர்லாந்து, தென்மேற்கில் பிரான்ஸ் மற்றும்

லக்ஸம்பர்க், வடமேற்கில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகியவற்றை

எல்லை நாடுகளைக் கொண்டது ஜெர்மனி.

வாருங்கள் ஜெர்மனிக்குள் நுழைவோம்.

ஃப்ராங்க்பர்ட் விமானநிலையம்

முதலில் ஃப்ராங்க்பர்ட் விமானநிலையத்தில் இறங்கியவுடன் அதுவே பார்க்க

வேண்டிய இடமாக அமைந்திருப்பது கண்டு வியப்படைவோம்.

ஆம், உலகின் மிக பிரம்மாண்டமான விமான நிலையமான இது ஆறரை கோடி

பயணிகளை வருடத்திற்கு ஈர்க்கும் அதிகப் போக்குவரத்தைக் கொண்ட

நிலையமும் கூட. இங்கு ஓய்வெடுக்க அறைகள் உண்டு. ஸ்பா உண்டு.

குளியலறை வசதி, இலவச சினிமா காட்சி, யோகா அறை என பல வசதிகள்

உண்டு. இங்கிருந்து இயங்கும் புகைவண்டி சேவை அலாதியான ஒன்று.

ஏராளமான கடைகள் உள்ள இந்த விமான நிலையத்தில் ஷாப்பிங் அனுபவமும்

தனி தான்!

ஃப்ராங்க்பர்ட்டிலிருந்து 555 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பெர்லின்.

பெர்லின் சுவர்

ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் உள்ள பெர்லின் சுவரைப் பார்ப்பது

ஜெர்மனியின் வரலாற்றைப் பார்ப்பது போலாகும். சுமார் நான்கு மணி நேர டூர்

இதற்கென உண்டு. இந்த டூரின் போது சிதிலமடைந்த பெர்லின் சுவரைத்

தொட்டும் பார்க்க அனுமதி உண்டு. சுமார் 140 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த

கான்க்ரீட் சுவர் 12 அடி உயரமுள்ளது. இரு பகுதிகளாக  அமைந்த இது 1961இல்

அமைக்கப்பட்டு கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் பிரித்தது.

ஆனால் ஜெர்மானிய மக்களின் ஒருங்கிணைந்த முயற்சியின் காரணமாக

1989-1990இல் இடிக்கப்பட்டு ஜெர்மனி ஒன்றுபட்ட ஜெர்மனி ஆனது.

ஜெர்மனியின் சமீபத்திய வரலாறு

இரு உலகப் போர்களில் தோல்வியுற்ற ஜெர்மனியின் வரலாற்றில் ஹிட்லரின்

பங்கு தனி இடத்தைப் பெறுகிறது. நாஜி கட்சியின் தலைவராக விளங்கிய

ஹிட்லர் யூதர்களை அறவே வெறுத்தார். சுமார் 65 லட்சம் யூதர்களை அவர்

நச்சு வாயு சேம்பரில் அடைத்தும் இதர வழிகளிலும் கொன்று குவித்தார்.

ஜெர்மனியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஹிட்லர் மின்னல் வேகத்

தாக்குதலில் போலந்தைப் பிடித்தார். ஆஸ்திரியா, பிரான்ஸ், கிரீஸ், ஹங்கேரி,

 இத்தாலி, நார்வே, நெதர்லாந்து என சுமார் 25க்கும் மேற்பட்ட நாடுகள்

மீது தாக்குதல் தொடுத்தார். அமெரிக்காவை நேரடியாகப்

போருக்கு அழைத்தார். பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நேசநாடுகளும்

ரஷியாவும் ஒருங்கிணைந்து அவரை எதிர்த்து போரை ஒரு முடிவுக்குக்

கொண்டு வந்தன. 1945 ஏப்ரல் 30ஆம் தேதி இனி நிச்சயம் தோல்வி தான்

 என்பதை உணர்ந்த ஹிட்லர் தன் காதலியான இவா பிரானுடன் தற்கொலை

செய்து கொண்டார். சயனைடு மாத்திரையை விழுங்கியதோடு துப்பாக்கியால்

சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தங்கள் சடலங்களை

உடனேயே எரிக்குமாறும் முன்னமேயே ஆணையிட்டிருந்தார்.

இதையெல்லாம் 96 வயது வரை வாழ்ந்த அவரது மெய்காப்பாளாரான மி

ஷ் மிகத் தெளிவுபட பின்னால் எடுத்துரைத்தார்.

லட்சோபலட்சம் பேரைக் கொன்று குவித்த ஹிட்லர் ‘அறம் வெல்லும் பாவம்

தோற்கும்’ என்ற முதுமொழிக்கிணங்க தற்கொலை செய்து கொண்டு இறக்கவே

ரஷியாவும் பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நேச நாடுகளும்

ஜெர்மனியைப் பிரித்தன. பெர்லின் சுவர் எழுப்பப்பட்டு, அது கிழக்கு

ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் பிரித்தது.

1968இல் எழுந்த மாணவர் கிளர்ச்சி நாஜி கொள்கைகளை வன்மையாகக்

கண்டித்தது. 1989இல் சுவர் ஒருவழியாக இடிக்கப்பட ஜெர்மனி ஒருங்கிணைந்தது.

இந்த வரலாறை எல்லாம் பெர்லின் சுவரைச் சுற்றிக் காட்டும் வழிகாட்டிகள்

மூலம் அறியலாம்.

ஒரு சுவையான செய்தி, ஹிந்து நாகரிகம் பயன்படுத்தும் ஸ்வஸ்திகா

சின்னத்தை வலப்புறச் சுழற்சிக்குப் பதிலாக எதிர்புற சுழற்சியாக மாற்றியதோடு

அதை 45 டிகிரி சாய்த்து வேறு வைத்து ஹிட்லர் பயன்படுத்தினார் என்பதும், 

அது தைவீக ஸ்வஸ்திகாவிற்கு எதிரான அசுர ஸ்வஸ்திகாவாக கருதப்படும்

ஒன்று என்பதும் முதலில் வெற்றி தருவது போல அது காட்டினாலும் இறுதியில்

தோல்வியைத் தந்தது, அறம் வென்றது என்றும் அறநெறியாளர்களும் குறியீடு

வல்லுநர்களும் கூறுகின்றனர்.

ஹிட்லரின் கடைசி நாட்களைச் சித்தரிக்கும் 2004ஆம் ஆண்டு வெளிவந்த

 படமான டவுன்ஃபால் மற்றும் 2018இல் வெளியான ‘தி ஆபரேஷன் ஃபைனல்’ 

படமும் பார்க்கத் தகுந்தவை. இரண்டாம் உலகப் போரைப் பற்றி இன்னும்

நூற்றுக் கணக்கில் திரைப்படங்கள் உண்டு!

லட்சக்கணக்கான யூதர்களை சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பி நச்சுவாயு

சேம்பரில் கொலை செய்த அடால்ப் எய்ச்மேன் போர் முடிந்த பிறகு

அர்ஜெண்டினாவிற்குச் சென்று தலைமறைவாக வாழ்ந்து வந்தான்.

இஸ்ரேலின் உளவுப் பிரிவான மொஸாட் லட்சக்கணக்கான யூதர்களை

‘விரைவாக நச்சு வாயு சேம்பருக்குக் கொண்டு சென்று நச்சு வாயு

செலுத்திக் கொன்ற’ அவனைக் கண்டுபிடிக்க பெரும் முயற்சியை எடுத்தது.

அமெரிக்கா அவனைப் பிடித்த போதிலும் சிறையிலிருந்து தப்பிய எய்ச்மேன்

அர்ஜெண்டினாவில் மெர்சிடென்ஸ் பென்ஸ் தொழிற்சாலையில் ஒரு சாதாரண

போர்மெனாகப் பணி புரிந்து வாழ ஆரம்பித்தான். எய்ச்மேனின் சகோதரரான

ஆட்டோ என்பவர் அச்சு அசலாக எய்ச்மேன் போலவே இருப்பார். ஆகவே தான்

மொஸாட் தங்கள் கண்காணிப்பில் உள்ளது நிஜமான எய்ச்மேன் தானா

என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது. இறுதியாக

 1960ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி அவனை மடக்கிப் பிடித்த மொஸாட் அவன் கண்களைக் கட்டி காரில் தூக்கிப் போட்டது. பின்னர் இஸ்ரேலுக்குக் கொண்டு வந்தது. ஜெருசலத்தில் உள்ள

பெரிய ஆடிட்டோரியத்தில் விசாரணை ஆரம்பித்தது. உலக மீடியாக்கள் எல்லாம்

 அங்கு வரவழைக்கப்பட்டன.  15 பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்கு 56 நாட்கள்

தொடர்ந்தது. 112 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இறுதியில் அவனுக்கு

மரணதண்டனை விதிக்கப்பட்டு 1962, ஜூன் முதல் தேதியன்று அவன்

 தூக்கிலிடப்பட்டான்.

அவனை எப்படி இஸ்ரேல் அரசு பிடித்தது என்பதைச் சித்தரிக்கும் படம் தான்

ஆபரேஷன் ஃபைனல்!

உலகப்போர் மெமோரியல்

உலகப் போர் சம்பந்தமான அனைத்துத் தகவல்களையும் தரும் உலகப் போர்

காட்சியகம் பெர்லினில் பார்க்கத் தகுந்த ஒன்று.

இனி மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று ஏற்பட்டால் அதற்குப் பின்னால்,

மக்கள் கற்கால மனிதர்கள் போல கையினாலும் கல்லினாலும் தான்

சண்டையிட நேரிடும் என்று பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் கூறியதை

நினைவில் கொண்டு இந்த உலகப்போர் மெமொரியலிலிருந்து அனைவரும்

செல்வது வழக்கம்.

உலகப் போர் சம்பந்தமானா இடங்கள் தவிர சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட

ஏராளமான பார்க்கத் தகுந்த மற்ற இடங்கள் ஜெர்மனியில் உள்ளன.

மாடர்ன் ஜெர்மனி என்று சொல்லப்படும் இன்றைய ஜெர்மனி தனது போர்க்கால

வரலாற்றை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து நவீன முறையில் அனைத்து

தொழில்நுட்பங்களையும் உள்வாங்கி முன்னேற ஆரம்பித்தது. ஏராளமான

 புது கட்டிடங்கள் உருவாக ஆரம்பித்தன.

இன்றைய ஜெர்மனியில் உள்ளவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

பெர்லினிலேயே டெஹ்லம் காட்சியகம், ஈஜிப்ஷியன் காட்சியம், நியூ நேஷனல்

காலரி உள்ளிட்ட பல காட்சியகங்கள் உண்டு.

டைர்பார்க்

பசுமையான 520 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள டைர்பார்க் பூங்கா அனைத்து

பயணிகளையும் பெர்லினில் கவரும் ஒன்று.

டைர்பார்க் மிருகக்காட்சிசாலையில் துருவக் கரடிகள் உள்ளிட்ட 650 வகையான மி

ருகங்கள் உண்டு. ஐரோப்பாவின் மிகப் பெரிய மிருகக்காட்சி சாலை இது.

இங்கு 8000 மிருகங்கள் உள்ளன.

திரைப்பட விழா

உலகின் கவனத்தை ஈர்க்கும் மூன்று சர்வதேச திரைப்பட விழாக்களில்

பெர்லின் சர்வதேச திரைப்பட விழா அனைவரையும் கவரும் முக்கியமான

ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் நடக்கும் இதில் பதிவு

செய்யப்பட்ட சுமார் 400 திரைப்படங்கள் இடம் பெறுகின்றன.

பெர்லினில் உள்ள ஹை டெக் மியூஸியம், ஜெர்மனியில் திரைப்பட மற்றும்

தொலைக்காட்சித் தயாரிப்பு பற்றிய அனைத்தையும் காட்சிப்படுத்தும் ஒன்று.

ஜெர்மனி நகரங்கள்

ஜெர்மனியை முழுவதுமாகச் சுற்றிப் பார்த்து விட எண்ணம் கொண்டவர்கள்

மூனிச், ஹெய்டல்பெர்க், நேச நாடுகளின் விமானத் தாக்குதலுக்கு அதிகம்

உள்ளான ட்ரெஸ்டன், ஹாம்பர்க், கொலோன் உள்ளிட்ட ஏராளமான

 இடங்களுக்குச் சென்று மகிழலாம்.

ஹெய்டல்பெர்க் ஜெர்மனியின் மிக அழகிய நகரங்களுள் ஒன்று.

பழைமையான நகரமும் கூட. இங்குள்ள அரண்மனை மற்றும் மலையால்

சூழப்பட்டுள்ள நெக்கர் நதி உள்ளிட்டவை ரம்யமான இயற்கைக் காட்சிகளை

அளிப்பதால் லட்சக்கணக்கான பயணிகளை ஈர்க்கின்றன. ஏராளமான

கவிஞர்களையும் கலைஞர்களையும் உருவாக்கியுள்ள நகரம் இது.

ஹாம்பர்க் நகரம் ஜெர்மனியில் பெர்லினுக்கு அடுத்த பெரிய நகரம். சுமார்

2500 பாலங்கள் இங்கு உள்ளன. இவற்றில் எட்டு பாலங்கள் மிகப் பெரியவை.

புகழ் பெற்ற பல்கலைக் கழகம், 40 தியேட்டர்கள், 60 அருங்காட்சியகங்கள்

ஆகியவை உள்ள   இந்த நகரம் இசைக் கலைஞர்களுக்குப் பிரியமான

ஒரு நகரமாகும்.

ஜெர்மனியின் சிறப்புகள்

ஜெர்மனியை பீர் நாடு என்று செல்லமாகச் சொல்வது உண்டு. இங்கு 5500

பிராண்டு பீர்கள் உள்ளன. மூனிச்சில் பீருக்கான திருவிழாவே நடக்கிறது.

இங்கு ஜெர்மானியர் கட்டைவிரலை நீட்டினால் ஒரு பீர் தாருங்கள் என்று

அர்த்தம். ஆள் காட்டி விரலைக் காட்டினால் இரண்டு பீர் தாருங்கள் என்று

அர்த்தம். அப்படி ஒரு பீர் மோகம் இங்கு உண்டு.

கால்பந்து விளையாட்டு மோகம் கொண்ட நாடு என்பதோடு நான்கு முறை

இது கால்பந்திற்கான உலகக் கோப்பைகளைக் கைப்பற்றியுள்ளது.

நாடெங்கும் மொத்தமாக எண்ணிப் பார்த்தால் இங்கு 2100 அரண்மனைகள்

உள்ளன!

உலகெங்கிலுமிருந்து மாணவர்களை ஈர்க்கும் தரமான பல்கலைக் கழகங்கள்

மொத்தம் 380 இங்கு உள்ளன. இவை 17000 பாடத் திட்டங்களைக் கொண்டுள்ளன.

இத்துடன் உலகின் ஆகச் சிறந்த தரமான கார்களைத் தயாரிப்பதிலும் ஜெர்மனி

குறிப்பிடத் தகுந்த இடத்தை வகிக்கிறது.

ஆக ஜெர்மனியைப் பற்றிச் சொல்லுங்கள் என்றால் உடனே நினைவுக்கு வரும்

சொற்கள், பீர், கால்பந்து, அரண்மனைகள், பாலங்கள், உலகப் போர், கார்கள்,

இலவசக் கல்வி, கலைஞர்கள், காட்சியகங்கள் ….. என இப்படி சொல்லிக்

 கொண்டே போகலாம்!

****

Tags- ஜெர்மனி, ஹாம்பர்க், பெர்லின்

–subham–

PEARL IN FOREIGN LANGUAGES (Post No.11,059)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,059

Date uploaded in London – –    28 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Pearl and coral are found in ancient Sanskrit and Tamil literature with similar sounding words. They may have common origin. Both are taken from sea creatures.

Pearl is taken from oyster shells and corals are collected from coral reefs, which are living animals.

Sanskrit word for pearl is Mukta or Mauktika; similar to Tamil word Muthu.

Paral is also used in Tamil which may be derived from Sanskrit Pravaala. Strangely several European languages have similar words to Paral or Pravaala for pearl.

But Tamil Pavalam/coral can also be derived from Pravala.

In short, there is a confusion in using Paral/Pearl/Pravala/Pavala. It may mean pearl or coral.

But both are the products of sea creatures.

Xxx

Mukta means released, spit out. Mukti for liberation is a popular word in Hinduism

Since it is released (liberated) from the oyster shells, people might have called it Mukta. Both Tamil and Sanskrit use it for the water drops that come out of the body or any other source. Drops of sweat, drops of eye tears are also described as Mukta, Muthu.

These words are available from at least 2000 year old Hindu literatures.

From Vedic days Hindus believed that water drops fallen into the mouths of oyster shells during a particular period becomes pearls. It is in Tamil and Sanskrit literature (See my earlier articles for further details)

Xxx

Pearl in Shakespeare

In Latin a pearl is UNIO. Pliny says it was a unique gem. The reason is pearls are only found singly. In zoology, they belong to Unionidae.

In Middle English, union means, ‘ a pearl of large size, good quality and great value’. Romans bought them for a high prize, because they believed in the magical properties of the pearls. The best Union pearls were called ‘Orient’, because they came from Indian ocean islands. The Arabs traded  in them. They borrowed the Swahili word for pearl LULU .

Lulu now means money. It is in woman’s name as well. Swahili salutation is ‘Hujambo kama lulu?’ which means ‘Are you as well as a pearl?’

Another word for pearl in Europe is Maragarita; woman’s name derived from it is -Margaret.

Hindus also use the name of pearl for men and women ; Muthu lakshmi, Muthu swami, Kalimuthu etc.

Pliny said that Maragarita is a barbarian word; neither Latin nor Greek; may be a Babylonian word?

The Romans believed that pearls dissolved in vinegar was good for health. Pliny says that both Egyptian queen Cleopatra and Roman king Claudius drank that potion.

In Shakespeare’s Hamlet, another Claudius drops an union into a cup of poisoned wine and gives it to Hamlet, who later forces the wine upon the dying Claudius with the pun, ‘is thy union here?’

Xxx

The school boys’ pun on Union and Onion is also interesting. Both have layers. Like the pearl , onion also has layers or coats

Another similarity is between the doors and oyster pearls. Oyster shells open and shut like doors. Folding doors in English were once called Bivalves (sea shells). In the open form, two oyster shells look like Number Eight 8. The French word for oyster is huitre, derived from Latin Octo which is from Sanskrit Ashta (8).

From Number 8 shaped, double door shaped, open oyster shells, we get Margarete alias Muthu!

Source : The Book of Babel , Nigel Lewis (with my inputs)

My old articles on Gems

https://tamilandvedas.com/tag/pearls-in-vedas/

pearls in vedas | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › pearls-in-vedas

17 May 2014 — The qualities of pearl are eight:- 1)Sthula – big 2)Vrtta – round 3) Talarahita – without a flat surface 4) Diptiyukta – Lustrous 5)Sveta – …


pearls | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › pearls

30 Mar 2016 — Posts about pearls written by Tamil and Vedas. … wearing the Peel pearls, was approached by a lady of lineage who said maliciously,


Nagaratna/ Cobra Jewel, Rubies and Emeralds in Brhat Samhita

https://tamilandvedas.com › 2015/02/11 › nagaratna-co…

11 Feb 2015 — Varahamihira devoted sixty six verses for gem stones in his Sanskrit encyclopaedia Brhat Samhita. He was more interested in pearls than any …


hindus and gems | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › hindus-and-gems

15 Nov 2016 — There are said to be nine places in which pearls are found. … about the good gems mentioned by Kalidasa and Varahamihira (Brhat Samhita).


Amazing Encyclopaedia Brhat Samhita! – Tamil and Vedas

https://tamilandvedas.com › 2015/02/07 › amazing-enc…

7 Feb 2015 — Varahamihira (505 –587 CE) was a great astronomer, mathematician, scientist, poet, astrologer and … 81, 82, 83 Pearls, Rubies and Emeralds.

GEM STONES IN KALIDASA & TAMIL LITERATURE

https://tamilandvedas.com › 2012/02/13 › gem-stones-i…

13 Feb 2012 — Kalidasa gives more similes about pearls. He describes the river that is running circling a mountain as a garland of pearls( Ragu.13-48 and …

You’ve visited this page 3 times. Last visit: 11/05/22

Pearl is available from Twenty Sources! (Post No.3538)

https://tamilandvedas.com › 2017/01/12 › pearl-is-avail…

12 Jan 2017 — Biologists know only one place where pearl is born. Sanskrit literature lists only … Kalidasa speaks of pearls from the head of elephants.


Sources of pearls – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › sources-of-pearls

9 Feb 2015 — Today I will give you some interesting information on pearls and compare it with Kalidasa and Sangam Tamil literature.

—subham—

 tags – Hamlet, Cleopatra, Claudius, Peral, Paral, Pravala, Coral, Tamil, Sanskrit, Muthu, Mukta

பறங்கித் தலையன் (Pumpkin headed Englishman) வெள்ளைக்காரன்! (Post.11,058)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,058

Date uploaded in London – –    28 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பறங்கிக் காய் (squash or pumpkin) சிவப்பு நிறத்தில் இருக்கும்; வெள்ளைக்காரனை (Englishman)  நிந்தனை செய்யும்போது பறங்கியன் (பரங்கி) என்று வசை பாடுவதுண்டு. மேம்போக்காகப் பார்த்தால் பறங்கிக்காய் போல நிறமும், தலையும் (Pumpkin coloured head) உடையவன் என்பதால்தான் அவனுக்கு இப்படிப் பெயர் வந்ததோ என்று நினைப்போம்.. உண்மைப்பொருள் வெளிநாட்டுக்காரன் (Foreigner) என்பதே.

இந்தச் சொல்லின் வரலாற்றைக் காண்போம் :-

பிரான்ஸ் நாட்டுக்கு பழைய பெயர் கால். பி(Gaul)ன்னர் ஜெர்மனியிலிருந்து குடியேறிய பிராங்க் (Franks) இன மக்களின் பெயரில் அ தை பிரான்ஸ் என்று ழைத்தனர் அரேபியரும் ரோமானியரும் இதை வெளிநாட்டிலிருந்து குடியேறியோர் என்ற பொதுப் பொருளில் புழக்கத்தில் விட்டனர். அவர்கள் பாஷையில் பிராங்கிஷ் (Frankish) என்றால் வெளிநாட்டுக்காரன் என்பதாகும்.

அராபியர்கள் , உலகம் முழுதும் வணிகத்தில் ஈடுபட்டனர். பல் நாட்டுச் சரக்குகளை வாங்கி விற்பது அவர்கள் தொழில் ஆயிற்று; வணிகர்களிடையே நிலவிய கொச்சை மொழியில் ஆப்ரிக்கா முதல் ஆசியவரை அது ‘பறங்’ farang ஆக மாறி மலேயா, இந்தியாவில் அது ‘பறங்கி’ firangi ஆக மாறியது பாலியல் நோயான சிபிலிஸ் நோயின் பெயர் ஐரோப்பிய நோய் – அதாவது பிராங்கி for franchi !

கிரேக்க நாட்டின் மீதும் பிராங்க் இனத்தினர் படை எடுத்தனர்.அவர்களும் பிராங் frankikos  என்பதை பாரீன் / வெளிநாட்டினர் என்ற பொருளிலேயே பயன்படுத்தினர்.

கிரேக்க நாட்டில் பரவிய கிறிஸ்தவ மதம் கிரீக் ஆர்தடாக்ஸ் Greek Orthodox ஆகும். ஆனால் பிரான்ஸிலோ கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் பரவியது. இதனால் கிரேக்கர்கள் வெளிநாட்டு கிறிஸ்தவ என்னும் பொருளில் கத்தோலிக்க மதப் பிரிவினரை ப்ராங்கோஸ் frankos என்று அழைத்தனர். ப்ராங்கோஸ் பப்பா frankos pappa என்றால் கத்தோலிக்க கிறிஸ்தவ குரு . இதற்குப் பின்னர் வெளிநாட்டு வகை பேரிக்காய், அத்திப்பழம் ஆகியவற்றுடனும் பிராங்கோஸ் ஒட்டிக்கொண்டது .

ஆக, வெளிநாட்டுக்காரன், கத்தோலிக்கன் , பிரெஞ்சுக்காரன் , பாலியல் நோய், வெள்ளைக்கார ஆங்கிலேயன் , தற்காலத்தில் வெளிநாடு ஆகிய எல்லாவற்றிலும் பறங்கி ஒட்டிக்கொண்டது.

Xxxx

கோழியூரும் கோழி நாடும்

சங்கத் தமிழ் நூல்களைப் பயின்றோருக்கு உறந்தை நகரின் மறு பெயர் கோழியூர் என்பதும் அதன் பின்னுள்ள பெரிய கதையும் தெரியும்.

கோழி நாடு என்பது பிரான்ஸ் என்று பலருக்கும் தெரிந்திராது. பிரான்ஸ் நாட்டின் பழைய தபால்தலை கோழி படத்துடன்தான் இருக்கும்.. பிரான்ஸ் நாட்டின் ஒரிஜினல் பெயர் Gaul கால். இதை ரோமானியர்கள் கால்லஸ் / கோழி Gallus என்று அழைத்தனர். கால் என்ற கெல்டிக் மொழிச் சொல்லும் கால்லஸ் என்ற ரோமானியக் கோழியும் ‘ஜாலியாகக் கைகோர்த்துக் கொண்டவுடன்’ பிரான்சும் தனது சின்னத்தை கோழி என்று முத்திரை குத்தியது. தபால்தலைகளிலும், பிற முத்திரைகளிலும் சேவல் கோழி (Cock; Chanticleer) கம்பீரமாகக் காட்சி தந்தது . அதற்கு பிரெஞ்சுக் கொடியின் வர்ணங்களில் பூச்சு கொடுத்து அதை தேசபக்த சேவலை மாற்றிவிட்டனர்.

.

கோழியூர் உறந்தை நகருக்கப் போட்டியாக, இப்படி ஒரு கோழி நாடும் வந்தது!!

–subham– Tags- பரங்கி , பறங்கி , கோழியூர், கோழி  நாடு, பிரான்ஸ் , வெள்ளைக்காரன்

நடந்தவை தான் நம்புங்கள்! – 21 (Post No.11,057)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,057

Date uploaded in London – –    28 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள்! – 21

ச.நாகராஜன்

1

திருமண கவுன்ஸிலிங்!

மனைவியுடன் ஒத்துப் போக முடியாத ஒருவர் மனம் நொந்து திருமண கவுன்ஸிலிங் செய்யும் உளவியல் நிபுணரை நாடினார்.

உளவியல் நிபுணர் அவர் சொன்னதை எல்லாம் கேட்டுப் பிறகு சொன்னார்: “ ஒரு நாளைக்கு ஐந்து மைல் வீதம் ஓடுங்கள்; ஒரு வாரம் கழித்து என்னைக் கூப்பிடுங்கள்” என்றார்.

அவரது அறிவுரையை சிரமேற்கொண்டார் பாதிக்கப்பட்டவர்.

ஒரு வாரம் கழித்து அவர் உளவியல் நிபுணரை அவர் கூறியபடியே போனில் தொடர்பு கொண்டார்.

“மனைவியுடன் இப்போது எப்படி இருக்கிறது நிலைமை?” என்று கேட்டார் நிபுணர்.

“எனக்கெப்படி தெரியும்? நான் நீங்கள் கூறியபடியே ஐந்து மைல்கள் தினமும் ஓடி முப்பத்தைந்து மைல்கள் கடந்து வந்து விட்டேன்” என்றார் நண்பர்!

பெஞ்ஜமின் ஃப்ராங்க்ளினின் அறிவுரை இது:

கல்யாணத்திற்கு முன் இரு கண்களையும் அகலத் திறந்து வையுங்கள்; கல்யாணத்திற்குப் பின்னர் அரைப் பார்வையாகப் பாருங்கள்!”

(Keey your eyes wide open before marriage, half shut afterward – Benjamin Franklin)

2

ட்வெயினின் மனைவியின் கோபம்!

பிரபல எழுத்தாளரான மார்க் ட்வெய்ன் (Mark Twain 1835-1910) ஆடை விஷயத்தில் அவ்வளவாக அக்கறை செலுத்த மாட்டார். இது அவரது மனைவிக்குப் பிடிக்கவில்லை. காலர், டை இல்லாமல் கூடவா ஒரு இடத்திற்கு ஒருவர் போவார் என்று அவர் அங்கலாய்ப்பார்.

ஒரு நாள் அடுத்த வீட்டிற்குச் சென்று திரும்பி வந்த மார்க் ட்வெயினைப் பார்த்து திடுக்கிட்டார் அவரது மனைவி.

காலர், டை இல்லாமல் அடுத்த வீடு சென்று திரும்பி இருக்கிறார் அவர்.

வந்ததே கோபம் அவருக்கு, வெளுத்து வாங்கி விட்டார்.

உடனே மார்க் ட்வெய்ன் ஒரு டையையும் காலரையும் பார்சல் செய்து ஒரு கடிதத்துடன் அடுத்த வீட்டிற்கு ஒரு பையன் மூலம் அனுப்பினார்.

“ஒரு அரைமணி நேரம் இந்த காலர், டை இல்லாமல் உங்கள் வீட்டிற்கு வந்திருந்தேன். இப்போது நான் போடாமல் விடுபட்டதை அனுப்பி இருக்கிறேன். தயவு செய்து இதை நன்றாகப் பார்த்து விட்டு என் மனைவியை சமாதானப் படுத்துங்கள், காலரையும் டையையும் திருப்பி அனுப்பி விடுங்கள்!”

3

பயனுள்ள வாக்கியம்!

எட்டாவது வகுப்பில் படிக்கும் பையனைப் பார்த்து ஆங்கில இலக்கணம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியை ஒரு கேள்வியைக் கேட்டார்: “ஒரு பயனுள்ள வாக்கியத்தைச் சொல்லு பார்ப்போம்!

பையன் தயங்காமல் உடனே கூறினான்: “எல்லோரும் அழகான உங்களைத் தான் அருமையாகச் சொல்லித் தரும் டீச்சர் என்று கூறுகின்றனர்.”

மனம் மகிழ்ந்த டீச்சர், “சரி, அதில் என்ன பயன் இருக்கிறது?” என்று கேட்டார்.

“எனக்கு அதிக பட்ச மார்க் கிடைப்பது தான்!” என்றான் பையன்!

4

கடவுளுக்கான மார்க்!

வில்லியம் லையான்ஸ் பெல்ப்ஸ் (William Lyons Phelps 1865-1943) புகழ் பெற்ற யேல் யுனிவர்ஸிடியின் புரபஸர். ஆங்கிலப் பேராசிரியரான அவர் ஒரு சமயம் ஆங்கிலத்தில் கேள்வித்தாள் ஒன்றைக் கொடுத்து விடை எழுதச் சொன்னார்  மாணவர்களிடம்.

ஒரு மாணவன் எழுதிக் கொடுத்தது இது : “கடவுளுக்கு மட்டும் தான் தெரியும் இந்தக் கேள்விக்கான விடை! கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!”

வில்லியம் பேப்பரைத் திருத்திப் பையனிடம் கொடுத்தார்: “ கடவுளுக்கு ஏ கிரேடு வழங்கப்பட்டிருக்கிறது உனக்கு எஃப் (பெயில்) வழங்கப்பட்டிருக்கிறது. புத்தாண்டு வாழ்த்துக்கள்!”

5

குய்ன் எலிஸபத்திற்குத் தேவையில்லாத புத்தகம்!

இங்கிலாந்து ராணியான குய்ன் இரண்டாம் எலிஸபத் (Queen Elizabeth II

1926- )  க்ளமிஸ் கேஸில் (Glamis Castle) என்ற இடத்தில் இருந்த போது அவரைப் பார்க்க பாதிரியார் ஒருவர் வந்தார். அப்போது எலிஸபத்திற்கு வயது பத்து. திரும்பிச் செல்லும் போது பாதிரியார், “லில்லிபெட்” (Lillibet) என்ற புத்தகத்தை எதிர்கால ராணியாருக்கு அனுப்புவதாக உறுதி அளித்தார்.

உடனே எலிஸபத் கூறினார்: “அது கடவுளைப் பற்றிய புத்தகமாக மட்டும் இருக்க வேண்டாம்.  எனக்கு கடவுளைப் பற்றி எல்லாம் தெரியும்!”

***

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்- 60 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post.11,056)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,056

Date uploaded in London – –    27 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்- Part 60 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம்

ரிபுஹு  6-5 எதிரி, பகைவன்

ருத்ராணாம் 10-23 ருத்திரர்களில்

ருத்ராதித்யாஹா  11-22 ருத்திரர்கள், ஆதித்யர்கள்

ருத்வா 4-29  தடுத்து

ருதிரபிரதிக்தான்  2-5 ரத்தம் தோய்ந்த

ரூபஸ்ய 11-52  ரூபத்தை

ரூபம்  11-3  வடிவத்தை

ரூபாணி 11-5  உருவங்களை

ரோமஹர்ஷணம் 18-74 புளகாங்கிதம்,மயிர் கூச்சரித்தல்

ரோமஹர்ஷஹ 1-29  மயிர்க்கூச்சம்

xxx

ல எழுத்தில் துவங்கும் சொற்கள்

லப்தம்  16-13 அடையப்பட்டது

லப்த்வா 4-39   அடைந்து

லப்தா  18-73 அடையப்பட்டது

லபதே 4-39 அடைகிறான்,

லபந்தே 2-32  அடைகிறார்கள்

லபஸ்வ 11-33 அடை, பெறு

லபே 11-25 அடைதல்

லபேத் 18-8 அடைதல்

லப்யஹ 8-22 அடைதற்குரியவன்

லாகவம் 2-35 எளிமையை, எள்ளி நகையாடும் நிலையை        

லாபம் 6-22 லாபத்தை

லாபாலாபெள 2-38  லாப நஷ்டங்களையும்

லிங்கைஹி 14-21 லட்சணங்களால், அடையாளங்களால்

லிப்யதே 5-7 தொடுதல் , பற்றுதல்

லிம்பந்தி 4-14 பற்றிக்கொள்ளும்

லுப்த பிண்டோ தக்ரியாஹா 1-42

லுப்த ஹ 18-27 லோபியும்

லேலிஹ்யஸே 11-30 நக்கித் துளாவுகிறாய்

லோக க்ஷயக்ருது 11-32 உலகை அழி க்கும்

லோகத் ரயம் 11-20 மூவுலகங்களும்   30 words

லோகத்ரயே 11-43 மூவுலகிலும்

லோக மஹேஸ்வரம் 10-3

லோக  சம்க்ரஹம் 3-20 உலகை நல்வழிப்படுத்தவும்

லோகஸ்ய  11-43 உலகத்திற்கு

லோகம்  9-33 உலகை

லோகஹ 3-9 உலகம்

லோகாத்  12-15 உலகத்திடமிருந்து

லோகான் 6-41 உலகங்களை

லோகாஹா 3-24 உலகங்கள்

லோகெ 2-5 உலகத்தில்

லோகேஷு 3-22 உலகங்களில்

லோபஹ -14-12 பேராசை

லோபோப ஹத சேதஸஹ 1-38

Xxx

வ – வில் துவங்கும் சொற்கள்

வக்தும் 10-16 சொல்லுவதற்கு

வக்த்ராணி 11-27 வாய்களில்

வக்ஷ்யாமி  7-2 சொல்கிறேன்  

வசனம்  1-2  இந்த வார்த்தையை

வசஹ 2-10 வார்த்தையை

வஜ்ரம் 10-28 வஜ்ராயுதம்

வத  3-2  கூறுவாயாக

வததி 2-29  பேசுகிறான்

வதநைஹி 11-30 வாய்களால்

வதந்தி 8-11 கூறுகின்றனர்

வதஸி 10-14 கூறுகிறாய்

வதிஷ்யந்தி  2-36 பேசுவர்

வயம்  1-37 நாங்கள்

வர 8-4   சிறந்தவன்

வருண 10-29 வருணன்

வர்ண சம்கரகாரகைஹி  1-43 ஜாதிக்கலப்பை விளைவிக்கும்

வர்ண சம்கரஹ 1-41  ஜாதிக்  கலப்பு

 60 words added from part 60 of Gita word index

To be continued………………………………

Tags- Gita Index 60

MY VISIT TO NELLAI SHIVA TEMPLE (Post No.11,055)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,055

Date uploaded in London – –    27 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

I VISITED NELLAIAPPAR- KANTHIMATHI TEMPLE ON 5TH JUNE 2022.

Here are some interesting details in bullet points

1.Tirunelveli, shortened as Nellai, is an ancient town situated 100 miles south of Madurai. We covered it in 3 hours by car. Since this was my third or fourth visit to Nellai, I went straight into Shiva’s shrine and goddess’ shrine. During my previous trip, when I went there with Dr R Nagaswamy, world famous historian and archaeologist, as part of an archaeological tour (year 1977??), he gave us a long lecture on the historical significance of the temple.

(We were so hungry on the day and so me and Setupati High School teachers Mr V G Srinivsan and NCC master Srinivasan went to a near by Halwa shop and had good quantity of the sweet as dinner! Nellai is famous for its Halwa. In my city London, we get only corn flour halwa called Bombay Halwa. But it in Madurai and Nellai, they make the Halwa through a laborious process. They take the milk out of pounded wheat and boil it with milk, spices and ghee. During this India trip also we had Nellai Halwa)

2.Nellai Shiva temple is larger than Madurai Meenakshi temple and has as many important sculptures as Madurai temple

3.Sung by Thiru Gnana Smabandar, the greatest of the Saivite saints ; so has a history of at least 1400 years.

4.Like all ancient temples of Tamil Nadu, we have both Shiva (main shrine) and Vishnu shrine. Vishnu statue here is unique in having Shiva inscribed on him. Lord Shiva has two shrines here (Venuvana Nathar and Nellaiappar)

5. Like all Tamil temples, we have Sthala Vrksha (Plant of the Shrine) as Bamboo.

6.Ancient Sangam Tamil book ‘Madurai Kanchi’ refers to this place as Saaliyur. Both Saali and Nel (llai) mean paddy. So the town is at least 2000 year old.

7.Over 50 inscriptions are in the temple, covering a period  from 946 CE until modern times.

8.Like Madurai temple, we have Musical Pillars, 1000 Pillar Mandapa (Stone hall), Vasantha Mandapa etc. Musical Pillars here are considered the oldest among such pillars. We see such musical pillars in Andhra and Karnataka s well.

9.The Ratha/Chariot/ Ther in Tamil is famous for its wooden sculptures. It is one of the ancient wooden Chariots in Tamil Nadu.

10. Madurai has Velli Ambalam (Silver shrine of Nataraja) and Nellai has Thaamira Sabhai (copper shrine). One has to do some research on the copper attached to the river name (Taamrabarani) and Taamra sabha.

11.The sculptures here show Nayak influence. Like Madurai we have Golden Lotus Tank. Zodiac Signs, a woman with a child, Rathi, Manmatha, Arjuna and other sculptures are remarkable.

12.Seven Mandapas (Stony Halls) including the 1000 Pillar Mandapa have many beautiful sculptures. Ravana lifting Kailash is in one Mandapa.

13.Bhadra Deepa (10,000 lamps) and once in six years Laksha Deepa ( 100,000 lamps) festival on Thai Amavasai is an unique festival.

14.Kubera Lingam shrine is also equally famous. Only three temples in Tamil Nadu have Kubera Lingam, which brings wealth to any worshipper.

15.Every famous temple in Tamil Nādu is attached to one Siddha/Saint and this temple is attached to Amavasai Paradeshi who lived for 120 years.

16.Festivals are celebrated throughout the year, most of them covering ten to fifteen days.

17. Many sub shrines in the temple such as Polla Pillayar shrine, Arumuka Nayinar shrine, Thillai Govindar shrine,Jura Devar shrine, Sarasvati shrine, Manjana Vadivamman shrine, Dakshinamurthy Shrine and Pittapurathi Amman shrine are sought by the devotees for getting particular boons from the gods.

18.From Sambandar to Muthu Swami Dikshitar, one of the Karnatka Sangeetha Trinity, all Saivaite saints composed Kritis, Pathikams and Keerthanas on Shiva and Goddess Kanthimathi residing here. Sri Kanthimathim in Hemavathi Raga sung by Sri Muthuswami Dikshitar in Sanskrit, is popular among musicians.

19.There is a story behind the name of the town- Paddy Town/ Tiru Nel Veli. A brahmin by name Vedha Sarma was drying the paddy grains for the offering (Naivedhyam) and there was a flash flood in the river. When he prayed to god Shiva, he came and made a protective fence around the paddy and so the town got the name Tiru Nel/Paddy, Veli/Fence. Tiru stands as an honorific prefix signifying holy shrine or sung by a holy man. Another secular interpretation is the town is surrounded / fenced by paddy fields.

–subham–

tags- 

Nellai, Tirunelveli, Kanthimaathi, wooden sculptures, Thamrasabha, Musical pillars, 

பகவான் ரமணர் அருளிய நடராஜ தரிசனம்! (Post No.11,054)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,054

Date uploaded in London – –    27 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவான் ரமணர் அருளிய நடராஜ தரிசனம்!

ச.நாகராஜன்

பகவான் ரமணரின் அணுக்கத் தொண்டர்கள் அடைந்த திவ்ய அனுபவங்கள் ஏராளம்!

அவர்கள் தங்கள் அனுபவங்களை, புத்தகங்களாகவும் கட்டுரைகளாகவும் வெளியிட்டுள்ளனர்.

டி.கே.சுந்தரேச ஐயர் தனது அனுபவங்களை ‘அட் தி ஃபீட் ஆஃப் பகவான்’ (At the Feed of Bhagavan’ by T.K. Sundaresa Iyer) என்ற நூலில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ள சம்பவம் இது.

1929ஆம் ஆண்டு. தீபாவளிக்கு முதல் நாள் இரவு. ஆசிரமத்தில் செட்டிலான அவரது முதல் ஆண்டு அது.

பகவான் அவரை கங்கா ஸ்நானம் செய்ய வீட்டிற்குப் போகுமாறு கூறினார்.

பகவானின் தரிசனமே கங்கா ஸ்நானம் தானே என்று நினைத்தார் அவர்.

என்றாலும் பகவானின் வார்த்தைகளைத் தட்ட முடியவில்லை.

இரவு வீட்டிற்கு வரைந்தார். இரண்டு மணிக்கு மனைவியையும் குழந்தைகளையும் எழுப்பி கங்கா ஸ்நானத்தை முடித்தார்.

உடனே பகவானின் ஆசீர்வாதம் பெற ஆசிரமத்திற்கு விரைந்தார்.

வழக்கம் போல பகவான் சோபாவில் அமர்ந்திருந்தார். மணி அதிகாலை 3.30 இருக்கும்.

திடீரென்று பகவானின் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தெரிய ஆரம்பித்தது.

ஆலய உற்சவ காலங்களில் விக்ரஹத்தைச்  அமைக்கப்படும் ஒளி வட்டம் போல அது இருந்தது. பகவான் பிரகாசமான புன்னகையுடன் ஒளிர்ந்தார். ஶ்ரீ நடராஜரின் தரிசனத்தை அவர் தருவது போல சுந்தரேச ஐயருக்குத் தோன்றியது. உடனே தேவாரப் பாடலை அவர் பாட ஆரம்பித்தார்.

ஒரு அரை மணி நேரம் இந்த தெய்வீகக் காட்சி நீடித்தது. பிறகு மறைந்தது.

பகவான் நான்கு மணிக்கு சுண்ணாம்பு தடவிய வெற்றிலை பாக்கை வாங்கிச் சுவைக்க ஆரம்பித்தார்.

தான் கண்ட காட்சியை சுந்தரேச ஐயர் பகவானிடம் தெரிவிக்க அவர் புன்னகை பூத்தார்.

இதே விதமான அனுபவத்தை ஆக்டர் வால்தியம் ஆஸ்டார் (Dr. Valtheim-Ostaur) என்பவரும் பெற்றுள்ளார்.

அவர் பெற்ற இந்த அனுபவத்தை புத்த லாமாவான அனாகரிகா கோவிந்தா தனது நூலான ஃபவுண்டேஷன்ஸ் ஆஃப் திபதியன் மிஸ்டிசிஸம் (Foudations of Tibetian Mysticism by Buddhist Lama Anagarola Govinda – page 164) என்ற நூலில் பதிவிட்டுள்ளார்.

வால்தியம் ஆஸ்டார் பகவானின் முன் அமர்ந்து அவர் கண்களைப் பார்க்க திடீரென்று பகவானின் உடல் ஒளிமயமாக ஆரம்பித்தது. ஒளி அதிகமாகி வெள்ளை நிறமாயிற்று. இந்த உருவிலேயே அவர் அமர்ந்திருந்தார்.

ஆஸ்டார் இதை பகவானிடம் தெரிவித்த போது அவர் இதை வழக்கம் போல ஒன்றுமில்லை என்று கூறி விட்டார். இது மனதின் கற்பனை என்று அவர் கூறி விட்டார்.

வழக்கம் போல அவர் இப்படிக் கூறினாலும் ஆஸ்டார் தான் கண்ட காட்சி உண்மையே என்பதை உணர்ந்து ஆனந்தித்தார்.

இது போன்றே பல அன்பர்களும் பல திவ்ய காட்சிகளை பகவான் திருவுருவம் முன்னர் பெறுவது வழக்கம்!

ஒரு தெய்வீக அவதாரமே அவர் என்பதற்கான பல சான்றுகளில் இதுவும் ஒன்று!

***

tags –

tags- ரமணர் ,நடராஜ தரிசனம்,