தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்.; இருமல் மருந்து சாப்பிட்டா……………………(Post 10,967)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,967

Date uploaded in London – –   11 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 68

Kattukutty

(இது முழுக்க கடி ஜோக்ஸ் இதழ். சில நீங்க முன்னாடியே

படிச்சிருக்கலாம். இருந்தாலும்இன்னொரு தடவை ரசியுங்களேன்!!!)

ரயில் ஏறணும்னா பிளாட்பாரத்திற்கு வந்துதான ஆகணும்

இதுதான்டா வாழ்க்கை!!!

பஸ் ஸ்டாப்லே வெயிட் பண்ணினா பஸ் வரும்.

புல் ஸ்டாப் கிட்டே வெயிட் பண்ணினா full வருமா???

—இப்படிக்கு தண்ணி வண்டி குருப்

xxx

என்னதான்பொண்ணுங்க வண்டி ஓட்டினாலும், ஹீரோ

ஹோண்டா ஹீரோயின் ஹோண்டா ஆகாது…..

xxxx

என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்

லேடிஸ் பிங்கர் ஜெண்ட்ஸ் பிங்கர் ஆகாது…..

—இப்படிக்கு ஆம்பள-பொம்பள சங்கம்

xxx

பஸ் ஸ்டாப்புல பஸ் நிக்கும்,

ஆட்டோ ஸ்டாண்டுல ஆட்டோ நிக்கும்,

சைக்கிள் ஸ்டாண்டுல சைக்கிள் நிக்கும்,

ஆனா கொசுவர்த்தி ஸ்டாண்டுல கொசு நிக்குமா???

—இரவு முழுவதும் யோசிப்போர் சங்கம்

xxx

இன்ஜினீயரிங் காலேஜ் படிச்சா இன்ஜினீயர் ஆகலாம்

ஆனா பிரஸிடன்ஸி காலேஜுலே படிச்சா பிரஸிடண்ட்

ஆக முடியுமா???

xxxx

ஆட்டோவுக்கு AUTO ன்னு பேர் இருந்தாலும்,

Manual ஆகத்தான் ஓட்டியாகணும்.

xxxx

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்.

இருமல் மருந்து சாப்பிட்டா……..இருமல் வராது…….

–படிச்ச முட்டாள்கள் சங்கம்

xxx

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்,

ஆனா நாம இல்லாம செருப்பு நடக்குமா???

—தீவிரமாக யோசிப்போர் சங்கம்

xxxxx

போலி கடிஜோக்ஸுகளை நம்பாதீர்கள்

எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது!!!

xxxx

இட்லி மாவ வச்சு இட்லி போடலாம்,

சப்பாத்தி மாவ வச்சு சப்பாத்தி போடலாம்,

கடல மாவ வச்சு கடல போட முடியுமா???

—ராவெல்லாம் முழிச்சு கிடந்து யோசிப்போர் சங்கம்

xxxx

உங்க உடம்புல கோடிக்கணக்கான செல்களிருந்தாலும்

ஒரு செல்லுல கூட சிம்கார்டு போட்டு பேச முடியாது.

xxxx

நிக்குற பஸ் முன்னாடி ஓடலாம்,

ஆனா ஓடற பஸ் முன்னாடி நிற்க முடியாது

—–தத்துவ ஞானிகள் சங்கம்

xxx

வண்டியில்லாம டயர் ஓடும்,

ஆனா டயர் இல்லாம வண்டி ஓடுமா???

சைக்கிள்ஓட்டறது சைக்கிளிங்ன்னா

ட்ரெயின் ஓட்றது ட்ரெயினிங்கா???

இல்ல ப்ளேன் ஓடறது ப்ளானிங்கா???

—இப்படிக்கு மல்லாந்து படுத்து யோசிப்போர் சங்கம்

xxxx

TEA / COFFEE – இதுல எது சுகாதாரம் இல்லாதது????

TEA – யில ஒரு ஈ உள்ளது

COFFEE-லே இரண்டு ஈ உள்ளது

xxxx

வாழை மரம் தார் போடும் ஆனா

அந்த தாரை வச்சு ரோடு போட முடியாது

Xxxx

பல்வலின்னு வந்தா பல்ல புடுங்கலாம்

கால் வலின்னு வந்தா கால புடுங்க முடியுமா???

இல்ல தல வலின்னு வந்தா தலையைதான்

புடுங்க முடியுமா???

xxxx

பில்கேட்ஸோட பையனா இருந்தாலும்

கழித்தல் கணக்கு போடும்போது கடன்

வாங்கித்தான் ஆகணும்……

xxxx

கொலுசு போட்டா சத்தம் வரும்

ஆனா

சத்தம் போட்டா கொலுசு வருமா???

xxx

பேக் வீல்ல எவ்வளவு ஸ்பீடா போனாலும்

பிரன்ட் வீல முந்த முடியாது

இது தான்டா ஒலகம்…..

xxxx

T நகர்ல போனா டீ வாங்கலாம்

ஆனா

விருது நகர் போனா விருது வாங்க முடியுமா???

xxxx

என்னதான் பெரிய வீரனா இருந்தாலும்

வெயிலடிச்சா திருப்பி அடிக்க முடியுமா???

xxxx

இள நீர்ல தண்ணி இருக்கு, பூமிலயும் தண்ணி இருக்கு

அதுக்காக

இள நீர்ல போர் போடவும், பூமில ஸ்ட்ரா போட்டு

உறிஞ்சவும் முடியாது!!!

xxxx

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்

சண்டே அன்னைக்கு சண்டை போடமுடியும்,

அதுக்காக

மண்டே அன்னைக்கு மண்டையை போட முடியுமா.???

***

 tags- ஞான மொழிகள் – 68,  கடி ஜோக்ஸ் 

ஹிந்து சாஸ்திரம் : ப்ரதிக்ஞா, ஹேது, திருஷ்டாந்தம்! (Post No.10,966)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,966

Date uploaded in London – –     11 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஹிந்து சாஸ்திரம் : ப்ரதிக்ஞா, ஹேது, திருஷ்டாந்தம்!

ச.நாகராஜன்

குருடர்கள் யானையைப் பார்த்த கதை என்ற ஒரு கதையை அனைவரும் அறிவர். குருடர்கள் தனக்குக் கிடைத்த யானையின் ஒரு பகுதியைத் தொட்டுத் தடவிப் பார்த்து முறம் என்றும் தூண் என்றும் பலவாறாக அனுமானித்தது போல ஹிந்து மத சாஸ்திரத்தையும் முற்றிலும் படிக்காமல், ஆராயாமல் தனக்குக் கிடைத்த அல்லது தனக்குத் தோன்றிய ஒரு பகுதியை மட்டும் படித்து பகுத்தறிவாளர்களும், ஹிந்துமத த்வேஷிகளும் பல கட்டுரைகளையும் ‘நடுநிலை’ உரைகளையும் எழுதி வருகின்றனர்.

இவர்களை யானையைப் பார்த்த குருடர்கள் என்றே சொல்லலாம்.

சிறுவர்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லும் போது அனுபவஸ்தர்களான பெரியவர்கள், ‘இது இப்படி’ என்று சொல்வர்.

பின்னர் அவ்விஷயத்தில் ஒரு நிச்சயம் ஏற்படுவதற்கான அதற்கான ஹேதுவை – ஏதுவை – காண்பிப்பர். ஹேதுவைக் காட்டிய பின்னர் அதற்கான திருஷ்டாந்தத்தையும் சொல்வர்.

ஆக ஹிந்து மதம் எந்த ஒரு விஷயத்தையும் இது இப்படி என்கிற பிரதிக்ஞா, பின்னர் ஹேது, பின்னர் திருஷ்டாந்தம் ஆகிய இந்த மூன்று அடிப்படைகளில் விளக்குகிறது.

நமது ஹிந்து மதத்தில் வேதம் தான் பிரதிக்ஞை.

ஸ்மிருதி, ஸூத்ரங்கள் ஹேது.

இதிஹாஸ புராணங்கள் திருஷ்டாந்தம்.

பிரதிக்ஞா வடிவில் உள்ள வேதம் கர்ம காண்டம், ஞான காண்டம் என இரு பிரிவுகளாக உள்ளன.

கர்ம காண்டத்தில், “இதனைச் செய்; இதனைச் செய்யாதே” என விதிகளும் விலக்குகளும் சொல்லப்பட்டுள்ளன.

ஞான காண்டம், “இது இப்படிப்பட்டது”, “இதனை தியானிப்பாயாக”, “இதனை அறிந்து கொள்” என அறிவு பூர்வமான வாக்கியங்களைக் கொண்டுள்ளதாகும்.

இது வேதாந்தம் என்றும் பரம் பொருளை அடைய வழி வகுக்கும் உபநிஷத் என்றும் சொல்லப்படுகிறது.

வேதமானது ராஜாவின் ஆணை போல அல்லது அரசியல் சட்டம் இடும் ஆணை போல ப்ரதிக்ஞா வாக்கியமாகும்.

அரசன் மக்களை நோக்கி, “இதைச் செய்க” என ஆணையிடுகிறான். அரசன் இல்லாத இந்தக் காலத்தில் அரசியல் சாஸனம் செய்ய வேண்டுவனவற்றையும் செய்யக் கூடாதவற்றையும் சொல்லி மக்களை நல்வழிப் படுத்த உதவுகிறது. ஆனால் இந்த அரசனின் ஆக்ஞையும் அரசியல் சட்ட வழிகாட்டுதல்களும் மனிதனால் செய்யப்பட்டவை. திருத்தங்களுக்கு உட்பட்டவை.

வேதங்களோ எனில் மனிதர்களால் இயற்றப்பட்டவை அல்ல; என்றுமுள்ள நியதிகள். தெய்வீகமானவை.

வித்யாநாதர் உள்ளிட்ட ஆன்றோர் “யாதொன்று இறைக்குச் சமமாகப் ப்ரவர்த்தித்ததும் சப்தத்தைப் ப்ரதானமாகக் கொண்டதுமாகிய வேதத்தினால் அறியப்பட்டு வருகின்றதோ” என்று கூறி வேத மஹிமையைப் போற்றியுள்ளனர்.

இந்த வேதங்களில் உள்ள விஷயங்களுக்கு யுக்தி, திருஷ்டாந்தங்களை ஸ்மிருதி, சூத்ரம், இதிஹாஸம்  ஆகியவற்றைக் கொண்டே உண்மைப் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

வேதத்தின் பூர்வ பாகமாகிய கர்ம காண்டத்தில் உள்ள ப்ரதிக்ஞைக்கு மன்வாதி ஸ்மிருதி முதலான நூல்களே ஹேது க்ரந்தங்கள் ஆகும்.

ராமாயணம் மற்றும் மஹாபாரதம் ஆகிய இதிஹாஸங்கள் திருஷ்டாந்தகளாகும்.

பகவத் கீதையில் பதிமூன்றாம் அத்தியாயத்தில் பகவான் கிருஷ்ணர்,

கூறுவது இது:

ருஷிபிர்பஹுதா கிதம் சந்தோபிர்விவிதை ப்ருதக் |

ப்ரஹ்மஸூத்ரபதைஸ்சைவ ஹேதுமத்பிர் விநிஸ்சிதை ||

“ரிஷிகளால், க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞர்களின் தத்வமானது பலவிதமாகக் கூறப்பட்டுள்ளது. பலவிதமான வேத பாகங்களால் தனித்தனியாகச் சொல்லப்பட்டுள்ளது. யுக்திகளுடன் கூடியவனவாகிய நிச்சயமான ஞானத்தைத் தரக்கூடிய ப்ரஹ்ம ஸூத்ரங்களாலும் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது”. (கீதை அத் 13 ஸ்லோகம் 4)

மஹாபாரதம், பாகவதம், யோக வாஸிஷ்டம் முதலிய நூல்கள் ஞான காண்ட விஷயங்களை த்ருஷ்டாந்த வாயிலாகப் போதிக்கின்றன.

உபாஸனா காண்ட அர்த்தங்கள் சிவ ரஹஸ்யம் முதலிய நூல்களிலும் விஷ்ணு புராணம் உள்ளிட்ட நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளன.

மஹாபாரதத்தில் உள்ள பர்வங்களில் சில கர்ம காண்டத்தை விளக்குபவை; சில பர்வங்கள் ஞான காண்டத்தை விளக்குபவை.

ஆகவே தான் மஹாபாரதம் ஐந்தாம் வேதம் என அனைவராலும் போற்றப்படுகிறது.

வேதத்தில் சொல்லப்பட்டுள்ளவற்றை ஹேதுவாக வந்து ஸ்மரிக்கச் செய்கின்றமையால் ஸ்மிருதி என ஆயிற்று.

ஆகவே வேதம், ஸ்மிருதி, ஸூத்ரங்கள், ராமாயணம், மஹாபாரதம், புராணங்கள் ஆகிய இவற்றையே சாஸ்திரம் எனக் கொள்ள வேண்டும்.

அத்தோடு கர்ம மற்றும் ஞான காண்டங்களை விளக்க வந்துள்ள சிக்ஷை, வியாகரணம், யோகம், ஸாங்கியம், நியாயம் முதலிய மற்ற நூல்களும் சாஸ்திரம் என்ற சொல்லால் வழங்கப்பட்டு வருகின்றன.

இவை அனைத்தையும் கற்றவரே ஹிந்து மதம் கூறும் உண்மைகளை முற்றிலும் அறிந்தவராவர்.

ஏதோ ஒரு நூலின் ஒரு பகுதியை மட்டும் அரைகுறையாகப் படித்து விட்டு வேத மதத்தை – என்றுமுள்ள ஸநாதன தர்மத்தை – விமரிசிக்கக் கூடாது.

அப்படி விமரிசித்தால் அது குருடன் யானையைப் பார்த்த கதையாகவே அமையும்.

இப்படி அனைத்தையும் படிக்க முடியாதவர்கள் வேத வித்துக்களையும், ஆசாரியர்களையும் அணுகி வணங்கி வேண்டிக் கேட்டுக் கொண்டு அவர்களது உபதேச உரைகள் மூலம் இவற்றை உணர முடியும்.

ஒரு நாளைக்குச் சிறிது நேரமாவது ஒதுக்கி இவற்றை முறைப்படி கற்று உணர்வோமாக!

***

Tags-  ஹிந்து சாஸ்திரம்,  ப்ரதிக்ஞா, ஹேது, திருஷ்டாந்தம்,

HIPPOS IN GREEK IS SANSKRIT ‘ASVA’ (Post No.10,965)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,965

Date uploaded in London – –    10 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

The etymology of Hippos/Horse in Greek has strange twists and turns.

Following is the explanation given by linguists. But  It is wrong :-

“before vowels, hipp-, word-forming element meaning “horse,” from Greek hippo-, from hippos “horse,” from PIE root *ekwo- “horse.”

Entries linking to hippo-

*ekwo- 

Proto-Indo-European root meaning “horse.” Perhaps related to *ōku- “swift.”

It forms all or part of: alfalfaEohippusequestrianequineequushippo-hippocampusHippocraticHippocrenehippocrepianhippodromehippogriffHippolytushippopotamusPhilipphilippicPhilippinesXanthippe.

It is the hypothetical source of/evidence for its existence is provided by: Sanskrit açva-, Avestan aspa-, Greek hippos, Latin equus, Old Irish ech, Old Church Slavonic ehu-, Old English eoh, Gothic aihwa- all meaning “horse.”

xxx

MY COMMENTS

The above derivation is wrong.

When linguists say Proto, it means their ‘imagination’, ‘fake construction’; it also means it is ‘not found in any available literature’.

Ekwo is also Proto; that means ‘concocted’, ‘imaginary’, ‘fake invention of western linguists’.

Hippo can be derived from Sanskrit Asva without any difficulty.

We see P=V changes in Tamil, Avestan and Sanskrit; three documented languages ; not Proto!

AsVa = asPa in Avestan

uPama = uVamai in Tamil Tolkappiam, oldest Tamil book according to Tamils

taPas = taVam in Tamil Sangam Literature

Panini also gave examples in Ashtadhyayi

Step 1

PP in Hippo is hiVVos

Xxx

Next Step

H= S (Helios= Surya)

Since S is not in Greek and Persian we got the word Hindu (Sindhu=Hindu)

aSmi= aHmi in Avestan

So

Hippo = SIVVOS

Xxx

Step 3

Addition of A is not uncommon; but here we don’t even need addition of A; S itself changes to A

Rigvedic Sabha becomes Avai in 2000 year old Sangam literature

So  Hippos = Aivvos

Aivvos= Asva/s

xxx

Even if you go for Equs we have IVULI in Tamil for horse.

Coming back to my favourite theory that Sanskrit and Tamil are the two languages that took the culture around the world is proved once again by

Hippos= AiVVos= Asvas

Instead of beating round the bush, we get Asva in straight forward method.

Xxx subham xxx

Tags —    Asva, Hippos, V=P

தமிழனுக்கு முத்தம் கொடுக்கத் தெரியாது ?? (Post.10,964)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,964

Date uploaded in London – –    10 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

சங்கத்தமிழ்  நூல்களில் முத்தம் (கிஸ்) என்ற சொல் இல்லை. அதே  காலத்திலும்  , அதற்கு முந்திய காலத்திலும் ஸம்ஸ்க்ருதத்தில் முத்தக் காட்சிகள் உள்ளன. இந்திய திரைப் படங்களில் முத்தக் காட்சிகளுக்கு தடை விழுந்ததற்கு பரத முனியே காரணம். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்க்ருதத்தில் அவர் எழுதிய பாரத நாட்டிய சாஸ்திர நூலில் முத்தக்காட்சிகள், மரணக் காட்சிகள், கொலை, கற்பழிப்புக் காட்சிகளுக்கு தடை விதித்தார். நாடக மேடைகளில் எவைகளைக் காட்டக்கூடாது என்று அவர் ஒரு பட்டியலே தந்துள்ளார். ஆனால் வாத்ஸ்யாயன மஹரிஷி எழுதிய காம சூத்திர நூலில் முத்தம் கொடுத்தல் (Kissing) பற்றி விரிவான தகவல் உள்ளது.

முத்தம் (கிஸ்) கொஞ்சு, உதடு என்ற சொற்கள் சங்க இலக்கியத்தில் இல்லை உதடு என்பது ஸம்ஸ்க்ருத்ச் சொல் (உஷ்ட்ர = உதடு ; உஷ்ட்ரஹ= ஒட்டகம்/ உதடு பருத்த மிருகம்).

காமத்துப்பால் எழுதிய திருவள்ளுவர் கூட இதை பெரிது படுத்தவில்லை

ஸம்ஸ்க்ருதத்தில் இரண்டு சொற்கள் முத்தம் கொடுப்பதற்குப் பயன்படுகின்றன. சும்பண (CHUMBANA) , க்ரா (GHRAA)

ரிஷ்ய ஸ்ருங்கர் கதை

முத்தம் என்பது பல வகைப்படும். ஒரு தாயார் தன குழந்தையைக் கொஞ்சசும் போது தரும் முத்தம் வேறு; காதலனும் காதலியும் கொடுத்துக்கொள்ளும் முத்தம் வேறு. இரண்டாவது வகை முத்தம் மஹாபாரதத்தில் உள்ளது

உதட்டுடன் உதட்டைச் சேர்க்கும் முத்தம் ரிஷ்ய ஸ்ருங்கர் கதையில் வருகிறது; மஹா பாரத வன பர்வத்தில் வரும் செய்தி இதோ :-

ரிஷ்ய ச்ருங்கர் (கலைக்கோட்டு முனிவன்),  ஆஸ்ரமத்தில் வசித்ததால் பெண்களையே பார்த்தது கிடையாது. அப்பேற்பட்ட தவ சிரேஷ்டரை ஏமாற்றி அழைத்துவர மன்னன், விலைமாதர்களை அனுப்புகிறான். அப்படிப்பட்ட அழகிகளை வாழ்நாளில் பார்த்து அறியாத அம்முனிவன் அவர்களையம் ஆண் என்று நினைத்து கீழ்கணட வசனங்களை மொழிகிறார்:

“அப்பா! அவனை (பெண்ணை) நான் பார்த்தபோது தேவலோகத்தில் இருந்து வந்த புதல்வன் என்றே நினைத்தேன். எனக்கு ரொம்ப சமதோஷம் ஏற்பட்டது. எல்லையில்லாத இன்பம் ஏற்பட்டது.  அவன் என் உடலைக் கட்டிக்கொண்டான். என் ஜடாமுடியைப் பிடித்துக்கொண்டான் ;என் முகத்தைத் தாழ்த்தி அவன் வாயை என் வாயில் வைத்தான். என் வாயுடன் கலந்தபோது ஒரு சப்தம் கொடுத்தான். மிகவும் நன்றாக இருந்தது.”

ஒரு பெண், தனக்கு முத்தம் கொடுத்தது முனிவருக்குத் தெரியவில்லை. தந்தைக்குப் புரிந்துவிட்டது.

மஹாபாரதத்தில் உள்ள இக்கதை மனிதனின் உள்ளத்தைப் படம்பி டித்துக்காட்டுகிறது ; பசி, தாகம் , உறக்கம் என்பன போல செக்ஸ் / காம உணர்வு என்பதும் அடிப்படை உணர்வு என்பதை உலகில் முதலில் கூறிய நூல் மஹாபாரதமே . பாரதியாரும் கூட “சொல்லித் தெரிவது இல்லை மன்மதக் கலை” என்று பாடுகிறார்.

அனுமன் வாலில் முத்தம்

ராமாயணத்தில், அனுமன் சந்தோஷத்தில் தன் வாலில் முத்தம் இட்ட காட்சி வருகிறது.

இரண்டு இதிகாசங்களிலும் முத்தம் இடுதலுக்கு உள்ள ஸம்ஸ்க்ருதச் சொல் ‘க்ரா ராமாயணத்திலும் உதடு முத்தம் வருகிறது சீதையைத் தேடி வந்த அனுமன் ராவணன் அரண்மனையில் ஒவ்வொரு அறையாகப் பார்க்கிறான். கீழ்கண்ட காட்சியை வால்மீகி வருணிக்கிறார் –

அந்தப்புர அழகிகள், ராவணனின் முகத்தில் KISS கிஸ் கொடுப்பதாக நினைத்து சக தோழிகளுக்கே தூக்கக் கலக்கத்தில் முத்தம் கொடுப்பதைக் காண்கிறான்.

அவர்கள் எண்ணம் முழுதும் ராவணன் பற்றியே இருந்ததால் தோழிகளுக்கு தோழிகளே இன்பம் தந்தார்கள்

-வால்மீகி ராமாயணம் 5-7-54/55

வால்மீகி பயன்படுத்திய சொல் -உபாஜிக்ரன் . மற்றோரு ஸம்ஸ்க்ருதச் சொல்லான ‘சும்பண’ (முத்தம்) என்பதை அனுமார் விஷயத்தில் வால்மீகி பயன்படுத்துகிறார்.

சும்பண , க்ரா

அனுமன் , ஓரிடத்தில் இராவணன் மனைவியான மண்டோதரியைக் காண்கிறான்.அழகி; பொன் நிறுத் தோல் கொண்ட உத்தமி;  அவள்தான் சீதை என்று   நினைக்கிறான் அனுமன் . உடனே சந்தோஷத்தில் தன் வாலுக்கே முத்தம் கொடுத்துக் கொள்கிறான்.

இதற்குப் பின்னர் காளிதாசனின் காவியங்கள் வருகின்றன. அவரது காலத்தை ஒட்டி வாழ்ந்த அசுவகோஷர் புத்த சரிதம், சவுந்திராநந்தம் என்ற நூல்களில் முத்தக் காட்சிகளை  எழுதவில்லை; காளிதாசன் அவருக்கு சற்று முந்தியவர் . காளிதாசன் பாடல்களில் முத்தக் காட்சிகள் வருகின்றன.

குமார சம்பவத்தில் மட்டும் நாலு இடங்களில் முத்தம் பற்றி காளிதாசன் பாடுகிறார். இதுதவிர மறைமுகமாக முத்தத்தைக் குறிப்பிடும் சொற்களும் வருகின்றன

சந்திரன் இரவு நேரத்தை முத்தம் இடுவதாக புதிதாக மணந்துகொண்ட உமாதேவியிடம் சிவபெருமான் கூறுவதாக ஒரு இடம்.(8-63)

இன்னொரு இடத்தில் கிம்புருஷன் தனது காதலிக்கு முத்தம் இடுவதை காளிதாசன் பாடுகிறார்.(3-38)

எட்டாவது சர்க்கத்தில்தான் சிவன்- உமா காதல் காட்சிகள் முழு அளவில் மலர்கின்றன .அவைகளை 8-8, 8-19-களில் காணலாம்.

8-23ல் மறைமுகக்குறிப்பு வருகிறது பார்வதியின் வாய் தாமரை என்றும் சிவ பெருமான் தேனீ என்றும் வருணிக்கப்படுகிறது

ரகு வம்சத்தில் கடல் அரசன், நதி அழகிகளை முத்தம் இடும் வருணனை முதல் பல காட்சிகளை 9-31, 13-9, முதலிய பாடல்களில் காண்கிறோம்

சில எடுத்துக் காட்டுகளை மட்டும் பார்ப்போம்

उपहितं शिशिरापगमश्रिया मुकुलजालमशोभत किंशुके ।

प्रणयिनीव नखक्षतमण्डनं प्रमदया मदयापितलज्जया ॥ ९ -३१॥ RAGHU9-31

வசந்த காலம் வந்தவுடன் பலாச மரத்தில் உண்டாக்கப்பட்ட, வளைவான , சிவத்த நிற  மொட்டுக்கள் பெண்கள், அவர்களுடைய காதலன் மீது இட்ட நகக்குறிகள் போல விளங்கின . கலவிக் காலத்தில் பெண்கள், தங்கள்  காதலர் மீது இப்படிச் செய்வதுண்டு நகக்குறிகளை நகக்ஷதம் என்பர். பொதுவாக ஆண்கள்தான் பெண்கள் மீது இக்குறிகளை உண்டாக்குவதாக கவிகள் பாடுவார்கள். காளிதாசர் இங்கே பெண்கள் ‘வெட்கத்தினால்’ இப்படிச் செய்ததாகக் கூறுகிறார்

xxx

मुखार्पणेषु प्रकृतिप्रगल्भाः स्वयं तरंगाधरदानदक्षः ।

अनन्यसामान्यकलत्रवृत्तिः पिबत्यसौ पाययते च सिन्धुः ॥ १३-९॥

13-9 ரகு வம்சம்

கடல், தனது உதடாகிய அலையால் தனது மனைவிகள் ஆகிய நதிகளை ஒரேகாலத்தில் முத்தமிட்டு அனுபவிக்கிறது அவ்வாறே நதிகள் எல்லாம் தங்களுடைய உதடுகளை ஏக காலத்தில் கொடுத்து சுவைக்க வசதி செய்கின்றனவாம்

இந்த ஸ்லோகத்தில் கடலினைக் காதலனாகவும் நதிகளை காதலிகளாகவும் காட்டுகின்றான் கவிஞன்

இவை சில காட்சிகளே. இன்னும் பல காட்சிகளையும் காணலாம்.

குமார சம்பவ ஸ்லோகங்களை தொடர்ந்து  காண்போம்

–தொடரும்

tags-தமிழன், முத்தம், தெரியாது, சும்பண , க்ரா , ரிஷ்ய ச்ருங்கர் அனுமன், வால்

சமையல் என்சைக்ளோபீடியா (Post.10,963)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,963

Date uploaded in London – –   10 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞானமொழிகள் – 67

Kattukutty

சமையலில் செய்யக்கூடாதவை.

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

*காய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது.

*காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டித்தான் தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைக்க வேண்டும்.

கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்குவதைத் தவிர்க்கவும். ஓட்டைகள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் உள்ள கீரைகளையும் வாங்கக்கூடாது.

பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்களில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும். எனவே, இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

பாலைத் திரித்து பனீராக்குவதற்கு எலுமிச்சைச் சாறு ஊற்றுவோம்.

அதற்கு பதில் தயிர் ஊற்றி, பாலைத் திரித்தால் பனீர் புளிக்காமல் சுவையாக ‌இருக்கும்.

பூரிக்கு மாவு பிசையும்போது கால் டீஸ்பூன் ரவையைச் சேர்த்துக் கொண்டால், பூரி புஸுபுஸுவென உப்பலாக இருக்கும்.

எலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிட்டால் சாதம் கசந்து போகும். அதற்கு பதில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும். அதில் தாளித்ததை ஊற்றிக் கலக்கிய பிறகு, சாதத்தில் சேர்த்துக் கிளறினால், சாதம் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

டிப்ஸ்… டிப்ஸ்…

கீரையை வேகவிடும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பச்சை நிறம் மாறாது; ருசியாகவும் இருக்கும்.

தயிர் வடை போன்றே தயிர் இட்லியும் செய்யலாம்! தேங்காய்த் துருவல், பச்சை 11மிளகாய், முந்திரிப்பருப்பு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை அரைத்து தேவையான தயிரும், உப்பும் சேர்த்து வைக்கவும். இட்லிகளை சதுரமான துண்டுகளாக்கி, இந்தக் கலவையில் சில நிமிடங்கள் ஊற வைத்துப் பரிமாறினால்… மணம், சுவை நிறைந்ததாக இருக்கும். விருப்பப்பட்டால், கேரட் துருவல், காராபூந்தி இவற்றையும் மேலே தூவலாம்.

வாழைப்பூவை சமையலுக்கு பயன்படுத்தும்போது மோர் கலந்த தண்ணீரில் பொடியாக நறுக்கிப் போட்டு, பின் அதை ஜல்லி கரண்டியால் அரித்தெடுத்து இட்லி பானையில், இட்லி வேகவைப்பது போல் வேகவைத்தெடுத்தால், பூ கறுக்காமல் இருக்கும்.

தக்காளி சூப் நீர்த்துப் போய்விட்டால் மாவு கரைத்து விடுவதற்கு பதில், வெந்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்து சேர்த்தால் ருசியும் கூடும்; சத்தும் அதிகம் கிடைக்கும்.

தொண்டை கட்டிக்கொண்டால்… கற்பூரவல்லி சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் சரியாகிவிடும்.

அதிக அளவு பாலாடை தேவைப்படுகிறவர்கள் கொதித்து ஆறிய பாலை மூடாமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே அதிக அளவு பாலாடை தோன்றிவிடும்.

கறிவேப்பிலை, கொத்தமல்லியை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது மஸ்லின் துணியில் சுற்றி வைத்தால், நிறம் மாறாமல் பச்சைப்பசேலென இருக்கும்.

துவரம்பருப்புடன் இரண்டு மஞ்சள்பூசணித் துண்டுகள் (அல்லது) சர்க்கரை வள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து வேகவைத்து, மசித்து, சாம்பாரில் சேர்த்தால்… சாம்பாரும் ருசிக்கும்; துவரம்பருப்பின் அளவையும் குறைத்துக்கொள்ளலாம்.

கேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேருங்கள்… பிரமாதமான சுவையில் இருக்கும்.

வடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்தால், வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.

பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள்… பாகற்காயின் கசப்பு தெரியாது; ருசியும் கூடும்.

சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம்பழம், உப்பு சேர்த்து அரைத்து, தயிரில் கலந்தால், சூப்பர் சுவையில் பச்சடி தயார்.

குலாப் ஜாமூன் ஜீரா மிகுந்துவிட்டால், அதில் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி. எண்ணெயில் பொரித்தால்… சுவையான பிஸ்கட் ரெடி! இதை மிக்ஸரிலும் சேர்க்கலாம்.

ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், வித்தியாசமான சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் ரெடி!

வற்றல் குழம்பு செய்யும்போது, கடைசியில் வெங்காய வடகத்தை வறுத்துப் பொடித்துப் போட்டு கிண்டிவிட்டால், குழம்பு கனஜோரா இருக்கும்!

முருங்கை இலைக் காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதை இடிக்கவும். இஞ்சி, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை இடித்து அதனுடன் சேர்க்கவும். இதில் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, பாதியாக்கி வடிகட்டி, சூப் போல குடித்து வந்தால்… உடல் வலி குணமாகும்.

மல்லியை (தனியா) சிறிதளவு நெய் விட்டு வறுத்துப் பொடி செய்து… சாம்பார் செய்து முடித்தவுடன் இந்தப் பொடியை போட்டு மூடிவைத்தால், சாம்பார் நல்ல மணத்துடன் இருக்கும்.

எந்தவிதமான சூப் செய்தாலும், சோள மாவு இல்லாவிட்டால், ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து, பொடித்து, சலித்து, அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால்… சூப் கெட்டியாக, ருசியாக இருக்கும்.

பீட்ரூட்டையும், ரோஜா இதழையும் அரைத்து அடிக்கடி உதடுகளில் தடவிவந்தால்… நாளடைவில் உதடுகள் நல்ல நிறமாகும்.

ஈ, கொசு வராமல் தடுக்க சில வழிகள்… புதினா இலையை கசக்கி அறையின் ஒரு மூலையில் வைக்கலாம்; காய்ந்த கறிவேப்பிலையைக் கொளுத்தலாம்; ஒரு ஸ்பூன் காபி பொடியை வாணலியில் போட்டு சூடுபடுத்தலாம்.

குப்பைமேனி இலையோடு மஞ்சள், கல் உப்பு சேர்த்து அரைத்து தோலில் அரிப்பு, அலர்ஜி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வந்தால்… விரைவில் குணமாகும்.

கற்பூரம், பச்சை கற்பூரம், நாப்தலின் உருண்டை, மிளகு, உப்பு இவற்றை பொடித்து சிறு துணியில் கட்டி அலமாரி, பீரோவில் வைத்துவிட்டால், பூச்சி வராது; நறுமணமாக இருக்கும்.

சப்பாத்தி தேய்க்கும்போது, தொட்டுக்கொள்ள கார்ன்ஃப்ளார் (சோள மாவு) பயன்படுத்தினால் நன்றாக வரும்; மாவும் கொஞ்சமாகத்தான் செலவழியும்.

இட்லிமாவு அரைத்தபின் ஒரு வெற்றிலையைக் கிள்ளிப்போட்டு வைத்தால், மாவு பொங்கி வழியாது.

***

 .

Tags– சமையல் குறிப்புகள்

ஐந்து பவித்ரமான (புனிதமான) பொருட்கள் (Post No.10,962)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,962

Date uploaded in London – –   10 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 65

Kattukutty

ஐந்து பவித்திரமான வஸ்துக்கள்!

ஆன்மீக ஸூதா ரஸம்!

ஐந்து பவித்திரமான வஸ்துக்கள்!

மகாபாரதத்தில் வேதவியாசர் ஐந்து பவித்திரமான வஸ்துக்களை சொல்லியிருக்கிறார்!

உச்சிஷ்டம் சிவ நிர்மால்யம் வமனம் ஸவகர்படம் காகவிஷ்டாதே பஞ்சைதே பவித்ராதி மனோஹரா!

அதாவது ஐந்து பவித்திரமான வஸ்துக்கள்!

1. எச்சில்

2. சிவ நிர்மால்யம்

3. வாந்தி

4. சவத்தின் மேல் விரிக்கும் போர்வை

5. காக்கையின் மலத்தினாலே விளைந்த ஒன்று

இந்த ஸ்லோகத்திற்கு இப்படி ஒரு பொருளா? அபவித்திரமான பொருட்கள். நிஷித்தமான இந்த பொருட்களை வேதவியாசர் எப்படி பவித்திரமான பொருட்கள் என்று சொல்லியிருப்பார்? சொல்லப்பட்ட இந்த ஐந்து வஸ்துக்களும் வைஷ்ணவர்கள் ஒதுக்கி வைத்துள்ளவை. சமஸ்கிருதத்தில் அப்படியே மொழி பெயர்த்தால், இவை விரோதத்திற்கு உண்டான பொருட்கள். நாம் சொல்வதற்கும் இதன் அர்த்தத்தையும் பார்த்தால் துளிக்கூட சம்பந்தம் இல்லை!

வேதவியாசர் சாக்ஷாத் மகாவிஷ்ணுவின் அவதாரம்,

வ்யாஸாய விஷ்ணு ரூபாய வியாச ரூபாய விஷ்ணவே!

18 புராணங்களையும் உப புராணங்களையும் பாகவதம் முதலியனவைகளையும் ரசனை செய்து பாமரர்களுக்கும் ஸ்திரிகளுக்கும் கொண்டு போய் சேர்க்க, ஐந்தாவது வேதமாக மகாபாரதத்தை ரசனை செய்கிறார்!

வேதங்களில் இருக்கும் சப்தங்களுக்கு குறைந்தபட்சம் மூன்று அர்த்தங்கள் உள்ளன. மகாபாரதத்தில் உள்ள ஸ்லோகத்திற்கு குறைந்தபட்சம் பத்து அர்த்தங்கள் உண்டு. அந்த மகாபாரதத்தில் அங்கம் வகிக்கின்ற விஷ்ணு சகஸ்ரநாமத்தில் ஒவ்வொரு நாமத்திற்கும் குறைந்தபட்சம் நூறு அர்த்தம் உண்டு. ஆனந்த தீர்த்த பகவத் பாதாச்சாரியார் விஸ்வ என்ற நாமத்திற்கு 100 அர்த்தங்களை காண்பித்து இருக்கிறார் என்பதை அவருடைய சரித்திரத்தில் காண்கிறோம். தான் எழுதும் வேகத்திற்கு ஏற்றார் போல சொல்ல வேண்டும் என்ற விக்னேஸ்வரரின் வேண்டுதல் படி, வேதவியாசர் சொல்லச்சொல்ல விக்னேஸ்வரர் தன் கொம்பை உடைத்து மகாபாரதத்தை அவருடைய வேகத்திற்கு எழுதினார். அப்போது வேதவியாசர் ஒரு நிர்பந்தம் வைக்கிறார் அதாவது அர்த்தம் புரிந்து கொண்டு எழுத வேண்டும் என்பதே. ஆனால் விக்னேஸ்வரனுக்கு சில இடங்களில் அர்த்தங்கள் புரியவில்லை. ஏனென்றால் அது சில இடங்களில் குஹ்ய பாஷைகளில் சொல்லப்பட்டிருந்தது. அதாவது மறைமுகமாக சிலவற்றை வைத்து சொல்லப்பட்டது தான் இந்த ஸ்லோகம். அப்போது விக்னேஸ்வரர் பிரார்த்தித்ததன் பேரில் வேதவியாசர் அவருக்கு அந்த அர்த்தத்தை தெளிவுபடுத்துகிறார்.!*

*ஐந்து பவித்ரமான வஸ்துக்களை பார்க்கலாம்!*

*முதலாவதாக எச்சில். எச்சில் வஸ்துவான ஒன்று ஸ்ரீமந் நாராயணனுக்கும் மகாலட்சுமிக்கும் தேவதைகளுக்கும் முக்யபிராணருக்கும் அபிஷேகம் ஆக பயன்படுகிறது. அது பசுவினுடைய பால் அதாவது க்ஷீரம் அபிஷேகத்திற்கு எப்படி இருக்க வேண்டும் என்பது சம்பிரதாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது அது பசுவினுடைய பால் ஆக இருக்க வேண்டும், அதுவும் உயிருடன் உள்ள கன்றுடன் கூடிய பசு ஆக இருக்க வேண்டும், (கோபூஜை கூட கன்றுடன் கூடிய பசுவுக்கு செய்வதே சிரேஷ்டம்) மேலும் கன்று பால் குடித்தவுடன் தான் பாலைக் கறக்க வேண்டும். அதாவது கன்று குடித்தவுடன், பசுவின் மடியை அலம்பாமல் அதாவது அந்த எச்சிலை (உச்சிஷ்டத்தை) துடைக்காமல் அப்படியே பால் கறக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அந்த எச்சிலை அலம்பாமல் கறக்கும் பாலைத் தான் ஸ்ரீமன் நாராயணன் மகாலட்சுமி தேவதைகள் எல்லோரும் ஸ்வீகாரம் செய்கிறார்கள். அந்தக் கன்று எச்சில் செய்த பால்தான் தேவதைகளுக்கு அபிஷேகத்திற்கு பவித்திரமான வஸ்துவாக உள்ளது. அதையே தான் வேதவியாசர் உச்சிஷ்டம் என்று எச்சிலை பவித்திரமான வஸ்துவாக சொல்லியுள்ளார்!*

*இரண்டாவது சிவ நிர்மால்யம். பொதுவாக வைஷ்ணவர்கள் சிவ நிர்மால்யத்தை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் அனைவருமே பவித்திரமாக தலையில் தெளித்துக் கொள்ளும் ஒரு சிவ நிர்மால்யம் உள்ளது. அது என்னவென்றால், சகலலோக பாவங்களையும் தீர்க்கக்கூடிய கங்காஜலம். எந்த ஒரு ஜீவோத்தமரான பிரம்மதேவர் தன் கமண்டலத்தில் இருந்து ஸர்வோத்தமனான விஷ்ணுவின் பாதங்களுக்கு அபிஷேகம் செய்தாரோ அந்த தீர்த்தம் . அதை சிவன் தன் சிரமேற்கொண்டு தரிக்கிறார். அவருடைய சிரஸிலிருந்து வரும் அந்த கங்கா ஜலத்தை அனைத்து வைஷ்ணவர்களும் எடுத்துக் கொள்கிறார்கள். அந்த தீர்த்தத்தை பவித்ரமான வஸ்துவாக ஸ்வீகாரம் செய்கிறார்கள்!*

*மூன்றாவதாக பவித்திரமான வஸ்துவாக சொல்லப்பட்டது வாந்தி. அது எப்படி பவித்திரம் ஆகும்? தேவதைகள் அபிஷேகத்திற்கு, ஆயுர்வேதங்களில் ஔஷதமாக சொல்லப்பட்டிருக்கும் மது அதாவது தேன். தேனீக்கள் மகரந்த மலர்களில் உள்ள தேனை தன் வாயினால் உறிஞ்சி எடுத்துக்கொண்டு வந்து தன்னுடைய கூட்டிற்கு வந்து வாயில் உள்ளதை கக்கி வாந்தி எடுத்து சேகரிக்கிறது. அப்படி தேனீக்கள் வாந்தி எடுத்த தேன் தான் தேவதைகளின் அபிஷேகத்திற்கு பவித்திரமான வஸ்துவாக உள்ளது!*

*நான்காவதாக சொல்லப்படும் பவித்ரமான வஸ்து ஸவ கர்படம். அதாவது சவத்தின் மேல் போர்த்திருக்கும் போர்வை. அது எப்படி சவத்தை தொட்டாலே தீட்டு அது எப்படி மடி ஆகும்? எப்பேர்ப்பட்ட பாந்தவ்யமானவர் இறந்தாலும் ஒரே நாள் மூன்று நாள் பத்து நாள் என்று சூதகம் உண்டு. அது என்னவென்று பார்த்தால் பட்டு வஸ்திரம் என்கிறார் வேதவியாசர். அதாவது பட்டுப்பூச்சிகள் கூடுகளில் உள்ள போதே அதை எடுத்துக் கொண்டு வந்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு அதிலிருந்து எடுக்கப்படும் நூலை வைத்து தயாரிக்கப்படுவது பட்டு வஸ்திரம். அதாவது சவதத்தின் மேலிருந்து எடுத்த போர்வை ஆன இது மடி என்பது மட்டுமல்ல மகாவிஷ்ணுவுக்கும் பிடித்த பீதாம்பரம். மேலும் மான் தோல் – கிருஷ்ணாஞ்சனமும் கூட சவத்தின் மேல் போர்த்திய போர்வை. ஜப தப அனுஷ்டானங்கள் மேற்கொள்பவர்களுக்கு மான் தோல் ஆஸனம் மிகச் சிறந்தது. இதுவே நான்காவதாக சொல்லப்பட்ட ஸவ கர்படம் என்னும் பவித்திரமான வஸ்து!*

*ஐந்தாவதாக பவித்திரமான வஸ்து என்று சொல்லப்பட்டது காகவிஷ்டா. அதாவது காக்கையின் மலத்திலிருந்து எடுக்கப்படும் ஒரு வஸ்து. அதாவது காக்கையின் மலத்தினால் வளர்ந்த, கோவில் கோபுரங்களில் மேலே உள்ள அஸ்வத்த செடி. அதாவது காக்கையானது பழங்களை தின்று அந்த விதைகளை மலமாக கழிக்கும்போது மண்ணிலோ கோபுரங்களிலும் அது விழும் போது அவை அஸ்வத்த செடியாக வளர்கிறது. அதாவது அரச மரமாக வளர்கிறது . அரச மரமானது பகவானின் விபூதிகளில் முக்கியமானது. பகவான் கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார் மரங்களிலே அஸ்வத்த மரம் தன்னுடைய விபூதிகளில் முக்கியமானது என்று. ஏனென்றால் அந்த அஸ்வத்த மரத்திலே மும்மூர்த்திகளின் சொரூபம் உள்ளது என்று பிரார்த்தனை செய்கிறோம். அதுவே மும்மூர்த்திகளின் சன்னிதானமான விருக்ஷ ராஜா. ஸ்ரீமுஷ்ணத்தில் வராக ரூபி பரமாத்மா அந்த அஸ்வத்த மர ரூபத்திலே இருக்கிறார். அந்த அஸ்வத்த மரமே காகத்தின் மலத்தில் இருந்து உருவானது, பவித்ரமானது என்று வேதவியாசர் கூறுகிறார். காக்கையினுடைய மலத்திலிருந்து வளர்ந்ததானாலும் அஸ்வத்த விருட்சம் பவித்ரம் ஆனது என்று சொல்கிறார்!*

*இவை ஐந்தையும் வேதவியாசர் பவித்ரமான வஸ்துக்கள் என்று சொல்கிறார். இவைகளை மேலோட்டமாகப் பார்த்தால் நமக்கு அர்த்தம் புரியாது. குஹ்ய பாஷையில் (ரகசியமாக) வேதவியாசர் சொல்லியுள்ளார். மேலோட்டமாகப் பார்த்தால் விருத்தமாக, எதிர்மறையாகத் தோன்றுகிறது. ஆனால் உள்நோக்கி அறிந்து பார்த்தால் விசேஷமான அர்த்தத்தைக் கொடுத்திருக்கிறார் மகாவிஷ்ணுவின் அவதாரமான வேதவியாசர்!

இப்பேர்ப்பட்ட விஷயங்கள் நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் குருவின் அனுகிரகத்தால், முக்யபிராணரின் ஆசியாலும், வேத வியாசரின் அனுகிரஹத்தினாலும் மட்டுமே சாத்தியம். அதற்கு நாம் அனைவரும் பாத்திரராகுவோமாக!

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து!

***

tags- பவித்ரமான, புனித, பொருட்கள்

யாருக்கு எத்தனை நமஸ்காரம்? (Post No10,961)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,961

Date uploaded in London – –     10 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

யாருக்கு எத்தனை நமஸ்காரம்?

ச.நாகராஜன்

ஒவ்வொரு விஷயத்திற்கும் விளக்கமும் விதியும் நம் முன்னோரால் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளன.

நமஸ்கார விதிகளும் அப்படியே!

 சிவனை எப்படி நமஸ்கரிக்க வேண்டும்?

“அம்பிகையோடு கூடியவரும், கணங்களோடு கூடியவரும், விநாயக, குமாரர்களோடு கூடியவரும், நந்தியோடு கூடியவரும், கங்கையை உடையவரும், ரிஷபத்தை உடையவருமாகிய சிவபிரான் பொருட்டு நமஸ்கரிக்கிறேன்.”

“தாராநாயகனை (சந்திரனை) தலையில் ஆபரணமாகக் கொண்டவரும், ஜகங்களுக்கு ஆதாரமாக உள்ளவரும், மேகங்களின் நிறமுள்ள கழுத்தை உடையவரும், கிரிஜையின் ஸங்கத்தையே சிருங்காரமாகக் கொண்டவரும், நதியினால் (கங்கையினால்) சிரோ பூஷணம் உடையவரும், நேத்திரத்தினால் திலகம் உடையவரும், நாராயணனால் பாணத்தை உடையவரும், நாகங்களால் கங்கணம் என்னும் ஆபரணத்தை உடையவரும், மலையையே இல்லமாகக் கொண்டவரும் ஆகிய நாதன் பொருட்டு இந்த நமஸ்காரத்தைச் செய்கிறேன்.”

இப்படிப்பட்ட சிவரஹஸ்யம் உள்ளிட்ட நூல்களில் உள்ள ஸ்லோகங்களைச் சொல்லியவாறே மூன்று முறை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்க வேண்டும்.

சாஷ்டாங்க நமஸ்காரம் என்றால் என்ன?

கால்கள் இரண்டு, கைகள் இரண்டு, மார்பு, முகம், ஆகியவை பூமியில் நன்றாகப் படும்படியாகவும், மனம், புத்தி ஆகிய இரண்டும் வேறு விஷயங்களில் செல்லாமலும், செய்யப்படும் நமஸ்காரமே சாஷ்டாங்க நமஸ்காரம் ஆகும்.

நந்தி பீடத்தின் அடியில் நந்தியின் முகத்திற்கு முன்னால் வடக்கு முகமாக நோக்கி, கர்ப்பகிருஹத்திலுள்ள ஸ்வாமியை உத்தேசித்து சாஷ்டாங்க நமஸ்காரத்தை மேலே கூறியவாறு செய்ய வேண்டும்.

ஸ்லோகங்களை உச்சரித்தவாறே மூன்று முறை செய்த பின்னர் இடது புறமாக பிரதக்ஷணமாகச் சென்று விநாயகரை விநாயக ஸ்லோகம் சொல்லியவாறே ஒரு நமஸ்காரம் செய்ய வேண்டும். விநாயகருக்கு ஒரு நமஸ்காரமே விதிக்கப்பட்டுள்ளது.

பின்னர் விநாயகரை பிரதக்ஷணமாகச் சுற்றி, சுப்ரமண்யரை மும்முறை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்க வேண்டும். பின்னர் பிரகாரத்துடன் வந்து ஆலயத்துக்குள் சென்று சிவபெருமான கர்ப்பகிருஹத்தில் நின்று தரிசித்து ஸ்லோகங்களைச் சொல்ல வேண்டும். ஏராளமான துதிகள் உள்ளன. அவற்றில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.

பிறகு விபூதி ப்ரஸாதத்தைப் பெற்றுக் கொண்டு உட்பிரகாரத்தில் பிரதக்ஷணமாகச் செல்ல வேண்டும்.

தக்ஷிணாமூர்த்திக்கு எதிரில் பஞ்சாக்ஷரத்தை ஜபிக்க வேண்டும்.

பிறகு பிரதக்ஷணமாக வந்து அம்பிகையின் சந்நிதி வந்து ஸ்துதி பூர்வமாக அம்பிகையின் எதிரில் நின்று நமஸ்கரிக்கும் போது கால் பக்கத்தில் தேவதா பிரதிபிம்பங்கள் இல்லாத நிலையில்  சாஷ்டாங்க நமஸ்காரம் மூன்று முறைக்குக் குறையாமல் செய்ய வேண்டும். பிறகு ப்ரஸாதம் பெற்றுத் திரும்ப வேண்டும்.

சிவாலயங்களில் மும்முறையோ அல்லது பதினொரு முறையோ பிரதக்ஷணமாக வெளி பிரகாரத்தில் வலம் வர வேண்டும்.

வெளிப் பிரகாரத்தில் உள்ள சண்டீஸ்வரரிடம்  சண்டீஸ்வர ஸ்துதியைச் சொல்லி, வெளி வந்து கால் பக்கத்தில் தேவதா மூர்த்திகள் இல்லாத மண்டபம் அடைந்து நமஸ்காரத்தை மும்முறை செய்து நந்தியின் கொம்புகள் இரண்டுக்கும் நடுவின் வழியாக கர்ப்பக்ருஹத்தில் உள்ள ஸ்வாமியின் வடிவத்தை நோக்கிக் கொண்டு பிரார்த்தித்து திரும்ப வேண்டும்.

இதுவே சிவ தரிசன விதியாகும்.

சிவாலய தரிசனம் செய்த பிறகு விஷ்ணு ஆலய தரிசனத்தை இரவில் மேற்கொள்ள வேண்டும்.

விஷ்ணுவாலய தரிசனம் செய்த பிறகு சிவாலய தரிசனம் காலையில் செய்ய வேண்டும்.

இப்படி நமஸ்கார விதிகள், தரிசன விதிகள் நமது அற நூல்களில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

***

HOW TAMIL LANGAUGE CHANGED WITHOUT ANY EXTERNAL INFLUENCE (Post No.10,960)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,960

Date uploaded in London – –    9 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Sangam Tamils used Yaan for ‘I’ instead of Naan (used now)

Sangam Tamils used Poosai for ‘cat’ instead of Poonai

Sangam Tamils used Paandil for ‘cart’ instead of Vandi

Sangam Tamils used Ainthu for ‘Five’ instead of Anchu

There are hundreds of such words.

I have made a list of hundreds of words from Sangam Tamil literature which changed in the last 2000 years. No external influence is the reason for these changes. There are many more words which changed because of external influence. Tamil is the junior most language among Sanskrit, Persian, Hebrew, Greek and Latin and the most defective language in this group. Tamils had no Past, Present and Future tenses in Sangam period. Another big defect of old Tamil was, it didn’t have s, sh, j, ha —  sounds in those days . So one couldn’t say James, Harry Potter, Shakespeare, Harsha, Samantha or Sarasvati or most of foreign names of BCE period. Ancient Tamils were banned rom using Sa as initial letter. They were also banned from using R or L as initial letters. In spite of these defects, it had a great literature with 2500 verses by 450 poets two thousand years ago. Five hundred years ago they made up all these defects by inventing Grantha alphabets with Ja, ha, Sha, sa.

During my forty year language research I have found out the following things :-

Use only written works; When you do comparative study use only written works. For instance, if we take written materials Tamil is the junior most. Sanskrit, Hebrew, Persian, Greek and Latin have older books than Tamil

Compare only contemporary works; even when you compare the works from the above languages, you have to compare fifth century BCE works with the same period works in other languages. If you compare two language materials , one written in 5th century BCE and another language work in 5th century CE, you may go wrong.

Reconstructing as Proto/Imaginary language is wrong.

White people created this cunning device to discredit Sanskrit and to justify their Aryan Migration Theory. One Mr Sathur Sekaran came to BBC Tamil Service 30 years ao to be interviewed by me. He published 140 books or booklets to show that all languages came from Tamil. He did follow the same PRTO gimmick. My friends in London say Sumerian came from Tamil or vice verse. They also follow the same PROTO construction tricks. In short, any one can show any language word as their own. The fact of the matter is there re more dissimilar words than similar words in Indo European group. Strangely for Cow we have cognate words but not for milk Corn has different meanings in different European languages.

Changes are universal; Some changes in spelling and pronunciations can be seen in every language. Some common changes in all the ancient languages are also seen. Eg. R=L; D=L=R; B/P= V; V=M=P;

This way we can show even Avesta and Tamil follow the same rule. But no one wrote a common grammar book for those two languages.

Closest language for Tamil is Sanskrit. Both these languages have similar alphabetical order, almost similar sounds, case suffixes, Joining/Sandhi rules, word order (SOV), glyph/script etc. That is the reason North Indian sage living in the Himalayas wrote first grammar in Tamil.

All ancient languages branch out and develop in Tamil way or Sanskrit way. We can track the key words in the ancient languages either to Tamil or Sanskrit.

All old linguistic theories can be exploded, and dust binned with examples from Indian languages Even Prakrit language retain certain archaic Vedic usages where as other north Indian languages including Classical Sanskrit have changed.

Even among South Indian languages some old Sangam Tamil words are used in Malayalam, Telugu and Kannada, but Tamils are not using them anymore. So one must be careful in assessing such languages. One or two words wont make an hypothesis.

There is no Aryan family of languages and Dravidian family of languages. There is only one Indian language family.

Tamil will die if anyone removes Sanskrit words

Now and then Dravidian fanatics who have no knowledge in other languages say that Tamil can exist without Sanskrit words. It was never the condition in ancient Tamil Nadu. If anyone removes the Sanskrit words 500 Tirukkural couplets will die. In fact all the 133 chapters have Adhikaram (Sanskrit word).

2500 Tamil verses will look like rusty iron or virus affected software if one removes Sanskrit words. Tamil dictionaries and Nikandus (thesaurus) will be reduced to one fourth of its present size. Since ancient Tamils treated Tamil and Sanskrit as their own two eyes, they used Sanskrit words without any inhibition (Eg. Kama/m, Mana/m, Ulaka/m, Tava/m

No Indian can speak his language for even five minutes without a Sanskrit word. It includes Tamil too.

Even Dravidian Etymological Dictionary contains about 5000 words only. I can challenge many of the words in it with ample proof.

xxx

GOOD NEWS FOR TAMIL

Scholars believe that Agastya travelled to Tamil Nadu around 750 BCE to do a grammar for Tamil; he came to the south at the request of Lord Shiva. That means Tamil had some literature at that time.

‘Literature comes first; grammar comes later’  is the universal rule

Though the present Sangam Tamil literature covers first three centuries of our period, Tamils believe there were two Tamil Academies in the South which were devoured by the sea during two Tsunami attacks. So the lost literature may be from the first Tamil Academy.

Even Kalidasa of first century BCE talked about the Pandya- Agastya connection. Pandya kings were the sponsors of Three Tamil Academies known as Tamil Sangam.

Foreigners imagined a proto language and bluffed through centuries. Now even the dogs are mocking at them; cocks are mocking at them; same dog or cock make different sounds (cries) in their languages in different countries.

Google for dogs barking and you will have good jokes.

–subham–

  Taags- Tamil , Changes, DED, spelling, Naan, Yaan, defective, Agastya, Grammar

தமிழில் ‘யான்’ எப்படி ‘நான்’ ஆக மாறியது ? (Post No.10,959)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,959

Date uploaded in London – –    9 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

நாற்பது ஆண்டு சொல் ஆராய்ச்சியில் நான் கண்டுபிடித்த விஷயங்கள் :-

தமிழ்- சம்ஸ்க்ருதம் , லத்தீன்-கிரேக்கம் , பாரசீகம்- எபிரேயம் (Hebrew)  ஆகிய மொழிகளில் உள்ள இலக்கியங்களை வைத்து மட்டுமே நாம் ஆராய்சசி செய்ய வேண்டும்.

(use only written work)

சம காலத்தைவை அல்லாத மொழிகளை ஒப்பிடுவது சரியன்று. Compare only contemporary works.

வெள்ளைக்காரர்கள் உருவாக்குவது போல கற்பனை Proto ப்ரோட்டோ மொழி தவறான அணுகு முறை. Reconstructing with Proto/Imaginary language is wrong.

இது அவர்களின் ஆரியக் குடியேற்றக் கொளகைக்காக உருவாக்கப்பட்டட் கற்பனை.

White people created this cunning device to discredit Sanskrit and to justify their Aryan Migration Theory.

இரண்டாவதாக, ஒரு மொழி மாறுவதற்கு வெளியில் இருந்து வரும் தாக்கம்/ செல்வாக்கு மட்டும் காரணம் அல்ல ; தாமாகவே சில மாற்றங்களும் ஏற்படும்

A language can change even without external influence. Change is inevitable. It is natural.

மூன்றாவதாக , சில பொதுவான மாற்றங்களை உலகம் முழுதும் காணலாம் .

Some changes in spelling and pronunciations can be seen in every language. Some common changes in all the ancient languages are also seen. Eg. R=L; D=L=R, B/P= V; V=M=P;

உ.ம். ப=வ ; ர=ல

நாலாவதாக உலகில் ஜ/ ‘J’ சப்தம் உள்ள ஒரே பழைய மொழி சம்ஸ்க்ருதம்;  இதன் வழியைக் கண்டுபிடித்தால் இந்துக்கள் எங்கே எங்கே எக்காலத்தில் குடியேறினர் அல்லது கலாசாரத்தைப் பரப்பினர் என்பதை அறியலாம்.

ஐந்தாவதாக தமிழுக்கு மிக நெருங்கிய மொழி ஸம்ஸ்க்ருதமே ;

Closest language for Tamil is Sanskrit.

சந்தி , வேற்றுமை உருபுகள் , அகர வரிசை அரிச்சுவடி, வாக்கிய அமைப்பு, எழுத்து/லிபி முதலியன சில உதாரணங்கள் . தமிழும் ஸம்ஸ்க்ருதமும்  ஒரே ஊற்றிலிருந்து பெருக்கெடுத்த இரண்டு நதிகள் ; இதனால்தான் இமயமலை முனிவர் அகஸ்தியர் இதற்கு, முதல் இலக்கணத்தை எழுதினார் .

That is the reason Lord Shiva send North Indian Agastya to write a grammar for Tamil

ஆறாவதாக உலகின் பழைய மொழிகள் இரண்டு வழிகளில் வளர்ச்சி அடைவதைக் காணலாம்; ஒன்று சம்ஸ்க்ருத வழி , இரண்டு தமிழ் வழி ; நிறைய எடுத்துக்காட்டுகளை 150 கட்டுரைகளில் கொடுத்துள்ளேன் .

All ancient language branch out and develop in Tamil way or Sanskrit way

ஏழாவதாக மொழியியல் வல்லுநர்கள்  சொல்லும் எந்தக் கொள் கையையும் நிராகரிக்கும் வாதங்களை இந்தியாவில் தமிழ், சம்ஸ்க்ருத, பிராகிருத மொழிகளில் இருந்து காட்டலாம்.

All linguistic theories can be exploded and dust binned with examples from Indian languages

எட்டா வதாக திராவிட- ஆரிய மொழிக் குடும்பம் என்பது பிதற்றல்; மதம் மாற்றவும், நாட்டை ஆளவும் வந்த கும்பல் பரப்பிய வாதம் இது.

There is no Aryan family of languages and Dravidian family of languages. There is only one Indian language.

கடைசியாக இப்பொழுது புழக்கத்தில் உள்ள மொழிகளில் சம்ஸ்க்ருதம் மிகவும் சீனியர். நான் முதலில் குறிப்பிட்ட பழைய மொழிகளின் இலக்கியங்களை வைத்து கணக்கிட்டால் தமிழ்தான் ஜுனியர்; கடைக் குட்டித்த தம்பி .இது கல்வெட்டுகள் மூலமும் நிரூபணம் ஆகிறது./ உறுதி ஆகிறது .

சங்க இலக்கியத்தில் உள்ள ஸம்ஸ்க்ருத சொற்களை அகற்றினால் கறையான் அரித்த மரம் போல அல்லது புஸ்தகம் போல ஆகிவிடும் சங்க இலக்கியம் ; துருப்பிடித்த இரும்பு போல ஆகிவிடும் ; வைரஸ் பாதித்த சாப்டவேர் ஆகிவிடும் சங்கத் தமிழ் (Virus infected software)

குறிப்பாக சம்ஸ்க்ருதம் ஒழிக என்று சொன்னால் அவர்கள் 500 திருக்குறள்களை அகற்ற வேண்டி  இருக்கும் . உல கல் நாகரீகமுள்ள யாருமே ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இன்றி பேச  முடியாது . குறிப்பாகத் தமிழர்கள் யாருமே ஐந்து நிமிடத்துக்கு கூட சமஸ்க்ருதக் கலப்பில்லாமல் பேச முடியாது; அப்படிப் பேசினால் வேறு மொழியைக் கலக்க நேரிடும்; அல்லது செயற்கையாக சில வாக்கியங்களை அமைத்துப் பேசிவிட்டு “பார், கீழே விழுந்தும் மீசையில் மண் ஓட்டவேயில்லை பார்” என்று மார் தட்டிக்கொள்ளலாம்

தமிழ் அகராதி, நிகண்டுகளில் எல்லாம் 50, 60 சதவிகித சம்ஸ்க்ருத சொற்கள் இருப்பது ஏன்?     நம்முடைய முன்னோர்கள் இரண்டு மொழிகளையும் இரண்டு கண்களாகப் பாவித்ததால் இரண்டையும் பயன்படுத்தினர் அகஸ்தியர் – பாண்டியர் தொடர்பை 2100 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காளி தாசனும் உறுதிப் படுத்துகிறான்.

தமிழ் மொழியின் பழமையை இலக்கியங்களும் கல்வெட்டுகளும் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் மட்டுமே எடுத்துச் செல்கின்றன. அதற்குள் லத்தீன், கிரேக்க மொழி இலக்கியங்கள்

பொதிய  மலை அளவு வளர்ந்துவிட்டன ; சம்ஸ்க்ருத இலக்கியமோ இமயமலை அளவுக்கு, அவ்விரு மொழிகளும் பிறப்பதற்கு முன்னரே, வளர்ந்துவிட்டன ; ஸம்ஸ்க்ருத்ச் சொல் நிரம்பிய கல்வெட்டுகளோ கி.மு 1500-ல் எகிப்து, சிரியா, துருக்கி வரை  கிடைக்கின்றன .

தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் ஒரு உண்மையும் இவற்றிடையே புதைந்து கிடக்கிறது. பரஞ்சோதி முனிவர், சிவ ஞான முனிவர், பாரதியார் ஆகியோர், ‘ஆரிய மைந்தன் அகத்தியன் தமிழ் மொழிக்கு மேவு இலக்கணம்’ படைத்ததை பாடுகின்றனர். அப்படியானால் அகத்தியர் காலத்தில  தமிழ் என்று ஒரு மொழி இருந்தது தெரிகிறதல்லவா ? இலக்கணம் அமைவதற்கு முன்னால் இலக்கியம் இருக்கும் என்பது உலகம் முழுதும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம்.

Literature comes first; grammar comes later ஆகையால் அகஸ்தியர் தமிழ் இலக்கணம் படைப்பதற்கு முன்னர் தமிழ் இலக்கியம் இருந்திருக்க வேண்டும் அதுதான் முதற்சங்கம் இருந் காலமோ!!

அகஸ்தியரின் தென்னக விஜய காலம் கிமு 700 அல்லது 800 என்று பல ஆராய்ச் சியாளர்கள் காலம் ஆகும். அப்போது தமிழ் இலக்கியம் இருந்ததால்தான் அவர் இலக்கணம் எழுதினார்.

XXX

‘ஐந்து’ என்று பாடலில் வருவதை திருஞான சமபந்தர் திடீரென்று ‘அஞ்சு’ என்று    பாடலில் அமைக்கிறார். அதாவது பேச்சு வழக்கு சொல்லைப் பாடலில் புகுத்துகிறார் . ‘கள்’ என்பதை பிராணிகள், தாவரங்களுக்கே பயன்படுத்த வேண்டும் என்று தொல்காப்பியர் சொன்னதைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு திருவள்ளுவர் மக்கள் பயன்படுத்துகிறார். நாமோ ‘யான்’ என்பதை விட்டுவிட்டு ‘நான்’ என்கிறோம். திருவள்ளுவரும் சங்கப் புலவர்களும்  “யாரடா இவன் என்று நம்மை முறைத்துப் பார்ப்பார்கள். வண்டி என்று சொன்னால் ‘பாண்டில்’ என்று சொல்லடா முட்டாள் என்று நம்மை ஏசுவர் . மனம், காமம் என்ற சொற்களை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துவர். நாம் அவர்களைப் பார்த்து முறைப்போம் .

நாம் புறா என்றால் புறவு என்று அழகாகப் பேசு என்பர். பூனை என்று சொன்னால் சிரி , சிரி  என்று சிரித்துவிட்டு  பூசை என்று சொல்லடா தமிழா என்பர்; சங்கத் தமிழில் பூனை, நான், வண்டி என்பன இல்லை.

என் மனைவி லண்டலிலிருந்து  டெலிபோனில் பேசுகிறாள் என்று சொன்னால் தொல்காப்பியருக்கு பயங்கரக் கோபம் வந்துவிடும். கடல் கடந்து வெளிநாடுகளுக்கு மகளிர் போகக்கூடாது என்று நான் சூத்திரம் எழுதினேனே ! என்னை மதிக்கவில்லையா என்பார் . அட போ, தொல்காப்பியா ! நீ, ஒரு பார்ப்பனன் தானே! மநு கூட அவர் ஸ்ம்ருதியில் பிராமணர்கள் வெளிநாடு செல்லக்கூடாது என்றார் ; அவர்கள்தானே முதலில் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் வேலைக்குப் போனார்கள் என்று நாம் ஒரு கொக்கி ( ? ) போடலாம். தொல்லும் வள்ளும் (தொல்காப்பியர், வள்ளுவர்) ஓடிப் போய்விடுவார்கள் !!

—subham–

TAGS- யான், பூசை, அஞ்சு , பாண்டில், வெளிநாடு , கடல் கடந்து

Old and New Definitions of Some English Words (Post.10,958)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,958

Date uploaded in London – –   9 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 66

Kattukutty

ᴄᴏʀʀᴇᴄᴛ ᴍᴇᴀɴɪɴɢ ᴏғ “ᴏᴋ” ɪs ᴛʜᴇ ɴᴀᴍᴇ ᴏғ ᴀ ɢᴇʀᴍᴀɴ ᴇɴɢɪɴᴇᴇʀ *ᴏᴛᴛᴏ ᴋʀᴏᴠᴇɴs* ᴡʜᴏ ᴡᴏʀᴋᴇᴅ ғᴏʀ ғᴏʀᴅ ᴄᴀʀ ᴄᴏᴍᴘᴀɴʏ ɪɴ ᴀᴍᴇʀɪᴄᴀ.

ᴀs ᴄʜɪᴇғ ɪɴsᴘᴇᴄᴛᴏʀ ʜᴇ ᴡʀᴏᴛᴇ ʜɪs ɪɴɪᴛɪᴀʟ ᴀs ‘ᴏᴋ’ ᴜᴘᴏɴ ᴇᴀᴄʜ ᴄᴀʀ ʜᴇ ᴘᴀssᴇᴅ.

ʜᴇɴᴄᴇ ɪᴛ ᴄᴏɴᴛɪɴᴜᴇᴅ ᴛɪʟʟ ᴅᴀᴛᴇ ᴀs ᴀʟʟ ᴄᴏʀʀᴇᴄᴛ

 ᴅᴏ ᴡᴇ ᴋɴᴏᴡ ᴀᴄᴛᴜᴀʟ ғᴜʟʟ ғᴏʀᴍ ᴏғ sᴏᴍᴇ ᴡᴏʀᴅs??? 

 ɴᴇᴡs ᴘᴀᴘᴇʀ =  ɴᴏʀᴛʜ ᴇᴀsᴛ ᴡᴇsᴛ sᴏᴜᴛʜ ᴘᴀsᴛ ᴀɴᴅ ᴘʀᴇsᴇɴᴛ ᴇᴠᴇɴᴛs ʀᴇᴘᴏʀᴛ.

ᴄʜᴇss = ᴄᴀᴍᴇʟ, ʜᴏʀsᴇ, ᴇʟᴇᴘʜᴀɴᴛ, sᴏʟᴅɪᴇʀs._

ᴄᴏʟᴅ =  ᴄʜʀᴏɴɪᴄ ᴏʙsᴛʀᴜᴄᴛɪᴠᴇ ʟᴜɴɢ ᴅɪsᴇᴀsᴇ._

ᴊᴏᴋᴇ = ᴊᴏʏ ᴏғ ᴋɪᴅs ᴇɴᴛᴇʀᴛᴀɪɴᴍᴇɴᴛ.

ᴀɪᴍ = ᴀᴍʙɪᴛɪᴏɴ ɪɴ ᴍɪɴᴅ._

ᴅᴀᴛᴇ = ᴅᴀʏ ᴀɴᴅ ᴛɪᴍᴇ ᴇᴠᴏʟᴜᴛɪᴏɴ._

ᴇᴀᴛ = ᴇɴᴇʀɢʏ ᴀɴᴅ ᴛᴀsᴛᴇ.

 ᴛᴇᴀ = ᴛᴀsᴛᴇ ᴀɴᴅ ᴇɴᴇʀɢʏ ᴀᴅᴍɪᴛᴛᴇᴅ

ᴘᴇɴ = ᴘᴏᴡᴇʀ ᴇɴʀɪᴄʜᴇᴅ ɪɴ ɴɪʙ

sᴍɪʟᴇ = sᴡᴇᴇᴛ ᴍᴇᴍᴏʀɪᴇs ɪɴ ʟɪᴘs ᴇxᴘʀᴇssɪᴏɴ

sɪᴍ = sᴜʙsᴄʀɪʙᴇʀ ɪᴅᴇɴᴛɪᴛʏ ᴍᴏᴅᴜʟᴇ

 ᴇᴛᴄ. = ᴇɴᴅ ᴏғ ᴛʜɪɴᴋɪɴɢ ᴄᴀᴘᴀᴄɪᴛʏ

ᴏʀ = ᴏʀʟ ᴋᴏʀᴇᴄ (ɢʀᴇᴇᴋ ᴡᴏʀᴅ)

ʙʏᴇ = ʙᴇ ᴡɪᴛʜ ʏᴏᴜ ᴇᴠᴇʀʏᴛɪᴍᴇ

sʜᴀʀᴇ ᴛʜᴇsᴇ ᴍᴇᴀɴɪɴɢs ᴀs ᴍᴀᴊᴏʀɪᴛʏ ᴏғ ᴜs ᴅᴏɴ’ᴛ ᴋɴᴏᴡ

**

Try to satisfy your soul not the society— mahan

**tags –  words, definitions