WRITTEN BY S NAGARAJAN Post No. 10,543 Date uploaded in London – – 9 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
பாஞ்சால தேசத்தை ஆண்டு வந்த மன்னன் துருபதன். இளமைக் காலத்தில் துரோணருடன் சேர்ந்து அவன் வில் வித்தை கற்று வந்தான். இருவருக்கும் நல்ல நட்பு உண்டாயிற்று.
பின்னால் பாஞ்சால தேச மன்னனாக துருபதன் ஆன போது ஒரு நாள் பழைய சிநேகத்தை முன்னிட்டு துரோணர் அவனைப் பார்க்கச் சென்றார். ஆனால் அவரைச் சற்றேனும் துருபதன் மதிக்கவில்லை. அவமரியாதைச் சொற்களை வேறு சொன்னான். இதனால் கொதிப்படைந்தார் துரோணர். நேராக ஹஸ்தினாபுரம் சென்று கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் வில் வித்தையை அழகுறக் கற்றுக் கொடுத்தார்.
பாண்டவர்களைக் கொண்டு துருபதராஜனை ஜெயித்தார்; அவனைச் சிறைப்படுத்தவும் செய்தார். பின்னர் பாஞ்சால தேசத்தின் வடக்குப் பகுதியைத் தன் வசம் வைத்துக் கொண்டு தெற்குப் பகுதியை மட்டும் துருபதனுக்குத் திருப்பித் தந்தார். துருபதனுக்குத் தாங்கொணாத துக்கம் ஏற்பட்டது. துரோணரைப் போரில் தோற்கடிக்கக்கூடிய ஒரு மகனைப் பெற அவன் விரும்பினான். இதற்காக பெரும் யாகம் ஒன்றையும் செய்ய அவன் தீர்மானித்தான்.
யாகத்தை யார் செய்வது? அதைத் திறம்படச் செய்யக் கூடியவர் யார்? கங்கை யமுனை நதிக் கரையோரம் அலைந்து திரிந்து தகுந்தவர் யார் என்பதைக் கண்டு பிடிக்க முனைந்தான். அப்போது அங்கு யாஜர், உபயாஜர் என்ற இரு மஹரிஷிகளை அவன் கண்டான். பிராமணர்களான அவர்கள் இருவரும் சகோதரர்கள். யாஜர் அதில் மூத்தவர்.
இவர்கள் இருவருமே யாகம் செய்யத் தக்கவர்கள் என்று தீர்மானித்த துருபதன் அவர்களுக்குப் பணிவிடை செய்ய ஆரம்பித்தான்.
இருவரில் உபயாஜரே அதிகத் தகுதி பெற்றவர் என்பதை அவன் கண்டு கொண்டான். ஒரு நாள் உபயாஜரை அணுகிய துருபதன் அவரை வணங்கி, “ஐயனே! துரோணரைக் கொல்லக் கூடிய வல்லமை படைத்த மகன் ஒருவனைப் பெற விரும்புகிறேன். அதற்கான யாகத்தை நீங்கள் எனக்கு நடத்தித் தர வேண்டும். அதற்காக பதினாயிரம் பசுக்களை உமக்குத் தருகிறேன். தயவு செய்து அருள் புரிய வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான்.
அரசன் சொன்னதைக் கேட்ட உபயாஜர், “ஓ! அரசனே! எனது தமையனாரான யாஜர் ஒரு நாள் காட்டின் வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது வழியிலே கிடந்த பழம் ஒன்றை எடுத்து அது சுத்தமா இல்லையா என்று பரிட்சிக்காமல் அதை உண்டார். கூடவே சென்ற நான் அதைப் பார்த்தேன். சுத்தமா இல்லையா என்று கூடப் பார்க்காமல் அவர் அந்தப் பழத்தை எடுத்த போது அதில் உள்ள பாவத்தை விளைவிக்கும் தவறுதல் இருப்பதை அவர் உணரவே இல்லை. ஒரு விஷயத்தில் சுத்தத்தை அனுசரிக்காதவன் மற்ற விஷயங்களிலும் சுத்தத்தை அநுசரிப்பான் என்று நினைக்க இடமில்லை. அவர் ஆசாரியரின் வீட்டிலிருந்து வேத அத்யயனம் செய்யும் போதும் மற்றவர்கள் உண்ட எச்சிலை எடுத்து உண்பது வழக்கம். உணவு என்று வரும் போது அது எதுவாக இருந்தாலும அதை சிலாக்கியமாகவே அவர் கருதுகிறார். ஆகவே அவர் உலக விஷயங்களில் அதிகப் பற்றுக் கொண்டவர் என்பதை நான் அறிகிறேன்.
ஆகவே, அரசனே, அவரிடம் நீர் சென்று யாகத்தை நடத்த வேண்டிக் கொள்ளும். அவர் உமக்கு வேண்டியதைச் செய்வார்.” என்றார்.
இதைக் கேட்ட துருபதன் யாஜர் மீது அவ்வளவாக நல்ல அபிப்ராயம் கொண்டிராத போதிலும் அவரிடம் சென்று தன் கோரிக்கையைச் சொன்னான். அவருக்கு எண்பதினாயிரம் பசுக்களைத் தருவதாகச் சொன்னான். “ ஓ! மஹரிஷியே! துரோணரிடம் உள்ள எனது விரோதம் என்னை எரிக்கிறது. நீரே என் மனதைக் குளிரச் செய்ய வேண்டும். துரோணர் வேதங்களை அறிந்தவர். பிரம்மாஸ்திரத்திலும் சமர்த்தர். ஆகவே தான் அவர் என்னை ஜெயித்து விட்டார். புத்திமானாகிய அவர் கௌரவர்களுக்கு இப்போது ஆசாரியராக இருக்கிறார். வில் வித்தையில் அவரை வெல்லக்கூடிய க்ஷத்திரியன் இப்போது யாருமே இல்லை. அவரது வில் ஆறு முழம் நீளமுள்ளது. பார்ப்பதற்குப் பயங்கரமானது. அவரது பாணங்கள் எந்தப் பிராணிகள் மீது செலுத்தப்பட்டாலும் தப்பாது அவை குறித்தவற்றைக் கொல்லும் தன்மை படைத்தவை.
துரோணர் பிராமணர்களது ஆசாரங்களை அனுஷ்டித்தாலும் கூட அவரது அஸ்திர சஸ்திர திறமையினால் அவர் எல்லா க்ஷத்திரியர்களையும் நாசம் செய்து வருகிறார். க்ஷத்திரிய வம்சத்தை அழிக்க வந்த இரண்டாவது பரசுராமராக அவர் விளங்குகிறார். அவரது ஆயுதங்களை எதிர்த்துப் போராட வல்லவர் யாரும் இல்லை. நெய்யால் ஆஹுதி செய்யப்பட்ட அக்னி கொழுந்து விட்டு எரிவது போல பிராமண சக்தி, க்ஷத்திரிய சக்தி ஆகிய இரண்டு சக்திகளையும் சேர்த்து வைத்து யுத்தத்தில் எதிர்ப்பவனை அவர் ஹதம் செய்கிறார். ஆனால் உம்முடைய பிராம்மண சக்தியானது துரோணரது பிராம்மண, க்ஷத்ரிய சக்தியை விட வலிமை கொண்டதாக விளங்குகிறது. ஆகவே தான் க்ஷத்திரிய சக்தியில் துரோணருக்குக் குறைவானவனாக நான் இருந்த போதிலும் பிராம்மண சக்தியில் அவரை விடச் சிறந்தவரான உம்மை நாடி வந்திருக்கிறேன். யுத்தத்தில் ஒரு காலும் கொல்லப்படாதவனாகவும் துரோணரைக் கொல்ல வல்லவனுமான ஒரு புத்திரனை நான் அடையத்தகுந்த படி எனக்காக ஒரு யாகத்தைச் செய்து அருளும். உமக்கு வேண்டிய பசுக்களைக் கொடுக்க நான் தயார்” என்று வேண்டினான்.
இதைக் கேட்ட யாஜர் துருபதனுக்காக யாகம் செய்ய ஒப்புக் கொண்டார்.
pictures are only representative; not related to the article below pictures are only representative; not related to the article below
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,542
Date uploaded in London – – 8 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Q & A ON ‘DRAVIDAS’ IN INSCRIPTION; ARE THEY BRAHMINS?
எனது பெயர் XYZ, நான் கன்னியாகுமரி மாவட்டம்…
தமிழர் என்ற அடையாளம் இருக்க திராவிடர் என்ற வேற்று மொழிச் சொல்லின் அடையாளம் நமக்கு எதற்கு என்று தேடத் துவங்கியதில் முக்கியமாக உங்கள் பதிவு கிடைத்தது .. மட்டற்ற மகிழ்ச்சி!!
திராவிடர் என்பவர்கள் பிராமணர்கள் என்பது தெளிவாகிறது!
ஆனால்,
8ம் நூற்றாண்டு சஞ்சன் பட்டையம் சேரன்,சோழன்,பண்டிய மன்னர்களை திராவிட மன்னர்கள் என்று குறிப்பிடுகிறது என்ற வாதம் வருகிறது!!
அப்படி என்றால் நம் மன்னர்கள் பிராமணர்களா ?
உங்கள் பதிலை ஆவலோடு காத்திருக்கிறேன்!
நன்றி
XXXXXXXX
கைபேசி : YYYYYYYYYYYYY
REPLY FROM LONDON SWAMINATHAN , 5TH JANUARY 2022, LONDON, U.K.
அன்புடையீர் ,
கட்டுரைகளைப் படித்தமைக்கு நன்றி.
திராவிட என்பது ‘தெற்கு’ என்று பொருள்படும்.
எங்கெங்கு எல்லாம் திராவிட என்று வருகிறதோ அங்கங்கு எல்லாம் ‘தெற்கு’ என்று போட்டுப் பாருங்கள் பொருள் மாறாது..
குமாரில பட்டர் என்பவர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவரும் திராவிட பாஷைகள் என்ற சொல்லைப் பயன்படுத்திவிட்டு, தமிழ்ச் சொல்லான ‘சோறு’ என்பதை எடுத்துக் காட்டாகத் தருகிறார்.
2130 ஆண்டுகளுக்கு முன்னர் காரவேலன் என்ற கலிங்க மன்னன் வெளியிட்ட ஹத்தி கும்பா கல்வெட்டிலும் ‘த்ரமிள சங்கடன்’ – என்கிறான். ‘தமிழ்க் கூட்டணி’ அல்லது ‘திராவிட கூட்டணி’ என்று பொருள்படும்.
தமிழ்- த்ரமிள- ஆகி – த்ரவிட ஆனது என்பது ஒரு சாரார் வாதம்.
இல்லை , இல்லை தமிழ் என்பதே திராவிட- த்ரமிள- என்ற சொல்லில் இருந்து வந்தது என்பது இன்னொரு சாரார் வாதம். இவை எல்லாம் மிகவும் பிற்பட்ட சொற் பிரயோகம் .
எட்டாம் நூற்ராண்டு முதல்தான், திராவிட என்ற சொல்லைக் காண்கிறோம்.
நான் சொல்ல வந்தது வெள்ளைக்காரர்களும் , பிஷப் கால்டுவெல்களும் கதைப்பது போல, இது ஒரு இனத்தைக் குறிக்கும் சொல் அல்ல. பஞ்ச திராவிடர் என்று பிராமணர்களும் அழைக்கப்பட்டனர். அவர்கள் வட இந்தியாவைச் சேராத பிராமணர்கள். அங்கும் தெற்கு என்ற பொருளே பிரதானம்.
சுருங்கச் சொல்லின் ‘திராவிட’ என்றால் ‘தென்பகுதி’.
அந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லை பல கட்சிகள் வைத்திருப்பது வியப்பான விஷயம்.
திராவிட வேதம் (திவ்யப் பிரபந்தம்), திராவிடாசார்யா என்ற பெயர்களையும் ஒப்பிடுக.
இதையெல்லாம் விட, மிக விந்தையான விஷயம்– திராவிடம் என்பது தமிழ் நாடு அல்ல. 56 தேசங்களில் சேர, சோழ , பாண்டிய நாடுகளை எல்லாம் சொல்லிவிட்டு அதற்கு வெளியே திராவிடத்தைக் காட்டி இருக்கிறார்கள்.
நீங்கள் சொல்லும் கல்வெட்டிலும் தென் பகுதி என்று வாசியுங்கள்; அதற்குள் சேர சோழ பாண்டிய நாடுகள் வந்து விடும் .
சுருங்கச் சொல்லின் திராவிட என்பது இனப் பெயர் அல்ல. “தெற்கு” என்பதே பொருள்.
DRAVIDA= SOUTH INDIA
இதே போல பாரதியார் பாடல் முழுதும் வரும் ‘ஆரிய’ (ARYA IN BHARATIYAR POEMS) என்பது இனப்பெயர் அல்ல. வடக்கிலுள்ள ‘படித்தவர்’, ‘நாகரீகமானவர்’, ‘பண்பாளர்’ (EDUCATED, CIVILIZED PEOPLE OF NORTH INDIA) என்பதே பொருள். புறநானூற்றிலும் வடக்கு வாழ் முனிவர்கள், மன்னர்களுக்கே இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது . “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்” என்றால் “வடக்கிலிருந்து படையெடுத்தவர்ளை” வென்றவன் என்பதே பொருள். ஆரிய மன்னர்களான கனக விஜயன் தலையில் கல்லை ஏற்றி சுமந்து வரச் சொன்னான் சேரன் செங்குட்டுவன் என்றால், அவர்கள் “வடக்கில் வாழ்ந்த” குறு நில மன்னர்கள் என்பதே பொருள்.
ARYA= NORTH INDIA (GEOGRAPHICAL AND NOT RACIAL)
‘திராவிட’ என்ற சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் எங்குமே இல்லை. ஆனால் ‘ஆரிய’ என்ற சொல் சங்கத் தமிழ் காலத்திலேயே வழக்கில் உள்ளது.
நன்றி
Swami/ London swaminathan
XXXXXX
ஐயா, மன்னிக்கவும் , நான் குறிப்பிட்ட அந்த தகடு ஆதாரம் கிடைத்து விட்டது அதில் நான் சொல்வது போல் இல்லை !!
திராவிள என குறிப்பிட்டிருப்பது வேறு மன்னர்களை தான் ..
முகநூலில் ஒருவருடன் விவாதம் செய்யும் போது அவர் குறிப்பிட்டவை இது!! சோழர்களை தான் பிற நாட்டில் உள்ளவர்கள் திராவிட என அழைத்தார்கள் என்று வாதிட்டார் !! அதற்கு சான்றாக இந்த தகடை காட்டினார்!! அவர் ஆயுதமே போலி (அட்டை கத்தி)
உங்களுடன் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி ❤️
பின் நாட்களில் ஏதாவது சந்தேகங்கள் வந்தால் தொடர்பு கொள்கிறேன் …
-ரெXXXXXXX
XXXXX
தமிழ் மன்னர்களை வேற்று மொழியின் குறிப்பிட்டிருக்கும் கல்வெட்டுகள் சான்றுகள் ஏதாவது உள்ளதா ?
சோழ மன்னர்கள் , பாண்டிய மன்னர்கள் அல்லது தமிழ் மன்னர்கள் ? இப்படி ஏதாவது குறிப்புகள் காணக்கிடைக்கிறதா ?
தமிழகத்திற்கு வெளியே ..
நன்றி
RXXXXXXXXX
XXXXX
YES. THERE ARE INSCRIPTIONS OUTSIDE TAMIL NADU.
EARLIEST INSCRIPTIONAL EVIDENCE IS FROM ASOKA.
PERIOD OF EMPEROR ASOKA (304 TO 232 BCE)
HE DID NOT NAME THE KINGS BUT MENTIONED
CODA, PANDIYA, SATIYAPUTO AND KELALAPUTO AS NEIGHBOURS TO HIS KINGDOM IN ROCK EDICT II
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
2014ம் ஆண்டு, 2018ம் ஆண்டில் எழுதிய இரண்டு கட்டுரைகளில் ஹரி = தங்க , யூபம் = நெடுந்தூண் என்ற இரண்டு சொற்களே உலகப் புகழ் பெற்ற ஹரப்பா HARAPPAN CIVILIZATION நாகரீக நகரத்தின் பெயரைக் கொடுத்தது என்று எழுதி, புறநானூறு, ரிக் வேத சான்றுகளை சமர்ப்பித்தேன் . இப்போது அதர்வண வேதத்தையும் படித்து முடித்துவிட்டேன். அதில் மேலும் தெளிவான சான்று கிடைத்து விட்டது. அது மட்டுமல்ல. ஹரி, ஹ்ரீ என்ற சொல்லை வைத்து சிலேடைக் கவி (DOUBLE ENTENDRE= SLESHMA) எழுதிய வேதகாலப் புலவன் பற்றிய வியப்பான தகவலும் கிடைத்துள்ளது.
YUPA POST IN UJJAIN COIN
அதர்வண வேதம் (அ .வே AV-20-30, 31 .) – 20-ஆவது காண்டம் – பாடல் 30, 31 — சூக்த எண் 618, 619 SUKTAS
பாடிய புலவர் பெயர் – வரு சர்வ ஹரிர்வா !
புலவர் பெயரிலேயே ‘ஹரி’ வந்து விடுகிறது !!
இந்தப் பாடலில் 5 மந்திரங்கள் உள்ளன . ஒவ்வொரு மந்திரத்திலும் ஒரே சப்தத்தை வைத்துப் புலவர் சொற் சிலம்பம் ஆடுகிறார்.
ஹ்ரி = எடுத்துக் கொள் TO TAKE
ஹர்யத = மகிழ்ச்சி DELIGHTFUL
ஹர்யன் = அன்புள்ள LOVING, DEAR, DARLING
ஹரி = குதிரை HORSE IN TAWNY OR BAY COLOUR
ஹரித் = பொன் நிறமுள்ள ; GOLDEN, YELLOW; ALSO GREEN
BAY = REDDISH BROWN; TAWNY= ORANGE BROWN; IN SUN LIGHT GOLDEN COLOUR
யூபம் YUPA என்பதை ( Sacrificial Post யூபம் = நெடுந்தூண்) யாகம் செய்யும் மண்டபத்தில் கிழக்கு பக்கத்தில் நிறுவுவார்கள் இதில் நெய்தடவுவார்கள் அல்லது வர்ணம் பூசுவார்கள் . முடிந்த பின்னர் தங்கத் தகடும் அடித்திருக்கலாம் . இப்போதும் கூட கோவில் த்வஜ ஸ்தம்பங்கள் = கொடி மரங்கள் மரத்திலும், உலோகத்திலும் இருப்பதைக் காண்கிறோம். பணக்கார கோவில்களாக இருந்தால், முழுவதும் தங்கத் தகடுகளை அடித்து அழகு செய்கிறார்கள் . இப்படி நடந்திருக்க வாய்ப்பு உண்டு என்பதையும் இந்த துதி காட்டுகிறது ; ஆக தங்கத் தூண் இருந்த நகரம் ஹரப்பா என்பது ஹரி+ யூப என்பதிலிருந்து வந்தது உறுதியாகிறது.
யூபம் என்ற சொல் தெரியாத தமிழன் சங்க காலத்தில் இல்லை . இதை புறநானூறு உறுதி செய்கிறது (கீழே உள்ள இணைப்புகளில் முழு விவரமும் உள்ளது )
இப்போது அ .வே.துதியைக் காண்போம்
மந்திரம் 1
பெரிய அஸெம்பிளியில் / சபையில் நான் உன்னுடைய இரண்டு குதிரைகளைப் புகழ்வேன் . யுத்த வீரனே, உன்னுடைய இனிமையான பானத்தையும் இசைப்பேன்; அவன் நெய்யைப் போல பொற்காசுகளைப் பொழிகிறான். பொன் வடிவமுள்ள உன்னில் என் துதிகள் நுழையட்டும்
மந்திரம் 2
வானுலகத்துக்குச் செல்லும் தங்க குதிரைகளைப் போல , முற்கால ரிஷிகள் பொன் மயமான உன்னைப் புகழ்ந்தது போல , பசுக்களாலும் , புரவிகளாலும் போற்றப்படும் அந்த இந்திரன் பலம் பெறட்டும் .
மந்திரம் 3
அவனுடைய வஜ்ராயுதம் உலோகத்தால் ஆனது. அது பொன் வர்ணம் உடையது அவன் நிறமும் மஞ்சள் தான் / தங்கம்தான் பொற் கைகள் உடையவன் . அவன் சிவந்த கோபத்தாலும் , வலிமையான பற்களாலும் சம்ஹாரம் செய்கிறான். அவன் தொடர்பான எல்லாமே தங்கம்தான்
மந்திரம் 4
வானத்திலும் பொன்மய வஜ்ராயுதத்தைக் காணலாம். அது பொற்கொடி போல பரவுகிறது . பொன் தாடைகள் உள்ள அது அஹி (Ahi) என்னும் பாம்பு அரக்கனை (Dragon) வீழ்த்தியது .பொன் குதிரை உடைய அவன் ஆயிரம் சுவாலைகள் உடையவன் .
மந்திரம் 5
பொன் கேசமுள்ள இந்திரனே , முற்காலத்தில் உன்னைப் பாடிப் பரவியபோதும் நீ மகிழ்ச்சி அடைந்தாய். பிறப்பிலேயே தங்கத்துடன் பிறந்தவன் நீ . நல்ல துதிகளை நீ வரவேற்கிறாய்
இதே புலவர் பாடிய இரண்டாவது துதியிலு ம் இதே கருத்துக்கள் வருகின்றன . இரண்டும் ரிக் வேத 10-96 துதியை இரண்டாக்கப் பகுத்துக் கொடுக்கப்பட்டவையே.
இதில் வரும் முக்கிய சொல் – அய மயன் – இதை இரும்பு இதயம் (Iron Hearted) கொண்டவன் என்று வில்சன் (Prof. Wilson) மொழி பெயர்க்கிறார்
xxxx
எனது வியாக்கியானம்
இந்திரன் என்ற சொல்லை வெளி நாட்டினர் , ‘இடி/மின்னல்’ என்றும்,’ மன்னர்’ என்றும், ‘தேவர் தலைவன்’ என்றும் இடத்திற்குத் தக மொழி பெயர்த்துள்ளனர்.
காஞ்சி பராமசர்ய சுவாமிகளும் இந்திரன் என்பது பல பொருள்களைக் கொண்டது என்கிறார்.
மழை என்று கொண்டால் தங்க நிற மின்னல் நம் கண்களுக்கு முன்னால் வரும்.
அய (Ayas= Iron) என்பதை இரும்பு என்று மொழி பெயர்க்கின்றனர். உண்மையில் இதன் பொருள் – உலோகம் (Metal).
தமிழர்கள் ‘பொன்’ என்ற சொல்லை இன்றும் பல பெயர்களில் பயன்படுத்துகின்றனர் .
திருக்குறளிலேயே பொன் என்பது இரும்பினாலான தூண்டில் முள்ளையும், தங்கத்தையும் குறிக்கிறது கோவிலில் ஐம்பொன் சிலைகள் என்பது ஐந்து உலோகங்களைச் (Five Metals or alloys) சொல்கிறது.
வானிலுள்ள சூரியனையும் இங்கே 1000 சுவாலை என்று வருணிக்கின்றனர்.
கர்ணனும் தங்கமும்
இந்திரன் மூலம் குந்திக்குப் பிறந்த கர்ணனும், தங்க கவசம், குண்டலங்கள் ஆகியவற்றுடன் பிறந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதாரண கோணத்தில் இதை நோக்கினால், அவனை கங்கை நதியில் மிதக்க விடுவதற்கு முன்னர் அவனது தாய் குந்தியே இப்படி கவசம் போட்டிருப்பார் என்று கருதலாம்.
மாய மந்திரம் என்ற கோணத்தில் அணுகினால், இந்திரன் போல பிறப்பிலே யே அவை வந்தன எனலாம்.
இது ரிக்வேதத்தில் (RV.10-96) இருப்பதால் இதன் பழமை நன்கு விளங்கும்
சம்ஸ்க்ருதம் தெரிந்தவர்கள் ஹ்ரீ என்ற வேர்ச் சொல்லை புலவர் எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார் என்று சுவைத்து மகிழலாம்.
இரும்பு இதயம் iron heart அல்லது உலோக இதயம் metal heart என்பது ரிக் வேத காலத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது . இந்தப் பாட்டை எப்படி வேண்டுமானாலும் வியாக்கியானம் செய்யும்படி அமைந்துள்ளது. பிற்காலத்தில் யமகப் பாடல் தோன்ற இது வழி வகுத்தது என்றால் மிகையாகாது. ஆனால் இங்கு சிலேடை என்னும் இரட்டுற மொழிதல் யுள்ளது தெளிவு.
பசு என்பதை சூரியன் என்றும் பசுவின் வீடு என்பது பிரபஞ்சம் என்றும் அங்கு சூரியன் பிரகாசிக்க இந்திரன் வழி செய்கிறான் என்றும் ரிக் வேத வியாக்கியானம் இயம்பும். இந்திரன் என்ற சொல் சக்திவாய்ந்த இறைவன் என்றே பொருள்படும். வேதத்துக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் இதைக் காணலாம்.
இந்திரனை ‘வேந்தன்’ KING என்கிறார் தொல்காப்பியர். கோன், தேவன் என்ற சொற்கள் அரசனையும் இறைவனையும் குறிப்பதை சங்க இலக்கியத்தில் காண்கிறோம். மன்னர்களின் மனைவியரை தேவி (Devi) என்றே புறநானூற்றின் அடிக்குறிப்புகள் காட்டுகின்றன.
5 Jul 2018 — யூபம் பற்றிய சங்க இலக்கிய குறிப்புகள்: … நெடுந்தூண்– அகநானூறு 220. XXX. யூபம் …
என்னுடைய முந்தைய சிந்துவெளிக் கட்டுரைகள்:
WRITTEN BEFORE 2014
சிந்து சமவெளியில் பேய் முத்திரை சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் Aug.23, 2012 ‘எள்’ மர்மம்: ரிக் வேதம் முதல் சிந்து சமவெளி வரை! Post No 755 dated 23/12/13 பதி – வதி – மதி: சிந்து சமவெளியில் உண்டா? 20-10-2014 தேள்— ஒரு மர்ம தெய்வம்! சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி1 November 2012 சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு (26/7/13) கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை (15/10/12)‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’ Post-763 dated 28th Dec. 2013. சிந்து சமவெளியில் அரசமரம் சிந்து சமவெளி நாகரீகம் பெயரை மாற்றுக! march 29, 2014 1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி 24-3-14 சிந்து சமவெளி – பிராமணர் தொடர்பு (Post No 1033, Date 10-5-14)
WRITTEN BY S NAGARAJAN Post No. 10,540 Date uploaded in London – – 8 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
If you are thinking of a divorce, it is wrong! The fault is with you only and not with the other partner! So you have to contemplate on the basics of a Happy Relationship! Please go through this article and jot down your findings. Eradicate the negatives and cultivate the positive qualities.
Every woman wants a person who is rich or in other words at least he must be able to earn that much by which the family will have a decent life. There is nothing wrong in this.
Even the Ganges whom the Lord Siva holds in his head does not touch and kiss his lips but goes to the earth and pave her way to the sea. Because, after all, Lord Siva is not rich! So says a poet!
Generally the women prefer a good looking man with countless virtues. She will bet aside even her good conduct and will offer herself to him. She will brought to a position of helplessness and will be like a boat by a whirlpool.
Remember a young woman give so much pleasure to the five senses of the lovers.
She pleases the eyes by her loving glances. She pleases the body by the softness of her person. She pleases the sense of smell by her fragrance of her mouth. She pleases the ears by her pleasing lovely words. She pleases by the sense of taste by offering her lotus face passionately for kissing.
The great Tamil Poet Thiruvalluvar says in his world famous Thirukkural, (Verse 1101) that “ you may find the simultaneous enjoyments of sight, hearing, taste, smell and touch in one place with bright resplendent armlets bearing damsel!
One should respect a woman for all times! Just for bodily pleasure if you approach a woman, she will not like you. The love should be mutual and should emerge from the heart.
What is happening in the pleasure-house? The young girl will bend her frame slightly stooping due to the weight of her bosom. The lord of her heart and life, that is the husband, united her with youth. Two mutually embracing warmly lovers are entering into the body of each other. And they are thus concealed. And, lo, no one can find their separate identity clearly discernible in this love sports!
And last but not least, the men should understand that the women are like the flames of lamps!
Yes, they are like the flames of lamps shining with soot in the form of their dark hair, and pleasing to the eyes but dangerous to touch (of course without their consent). They burn men as grass. Finally a girl would prefer a youth by considering seven qualities in him, namely, his family back ground, his conduct, his physical constitution, his age, his learning, his wealth and his equality of status.
Man and woman should respect each other and the fundamental point here is to adjust and adopt!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இந்துக்கள் எவ்வளவு பெரிய மேதைகள் என்பதற்கு ஒரு குட்டிக்கதை உண்டு .
சதுரங்கம் எனப்படும் CHESS செஸ் விளையாட்டைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்களே என்பதை உலகமே ஒப்புக்கொண்டுவிட்டது. இதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. ஒரு முனிவர், ஒரு அரசனிடம் சென்று இந்த அற்புதமான விளையாட்டைச் சொல்லிக் கொடுத்தார். நாள் தோறும் நாற்படைகளுடன் கதைக்கும் மன்னனுக்கு வியப்பிலும் வியப்பு! அன்பரே நீங்கள் என்ன கேட்டாலும் தருகிறேன் என்றான் மன்னன்.
முனிவர் சிரித்துக் கொண்டே , அப்படி ஒன்றும் அதிகம் வேண்டாம். இதோ நான் கற்பித்த செஸ் போர்டில் 64 கட்டங்கள் உள்ளன. முதல் கட்டத்தில் ஒரு அரிசி, அடுத்தகட்டத்தில் 2, அடுத்த கட்டத்தில் 4 என்று இரட்டித்துக் கொண்டே போங்கள் ; 64 கட்டங்களில் எவ்வளவு அரிசி இருக்குமோ அது போதும் என்றார் முனிவர்.
பூ இவ்வளவுதானா ! இதோ உடனே தருகிறேன் என்றான் மன்னன்.
முனிவர் மீண்டும் சிரித்தார். 32 கட்டங்கள் தாண்டுவதற்கு முன்னர் அவன் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மூட்டைகளைக் கொண்டுவந்தாலும் போதாது என்பது பல நாட்களுக்குப் பிறகு புரிந்தது.
நீங்களும் 64 கட்டம் உள்ள ஒரு செஸ் போர்டில் முதல் கட்டத்தில் ஒரு பைசா காசு வையுங்கள். பின்னர், 2, 4, 8, 16 என்று அதிகரித்துக் கொண்டே போங்கள் . உலக மஹா பணக்காரர் ஆகி விடுவீர்கள் !
XXXX
பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை – PART 7
அதர்வண வேதம் (அ .வே.) பூமி சூக்தத்தில் உள்ள 63 மந்திரங்களில் 16 மந்திரங்களைக் கண்டோம். மேலும் காண்போம். இதோ வேத கால முனிவர்களின் அபார அறிவை விளக்கும் பகுதிகள் :–
மந்திரம் 17
பூமியைத் தருமமே தாங்கி நிற்கிறது; நாங்கள் அவள் மீது நடக்கிறோம்; அவள் எங்கள் மீது கருணை மழை பொழியட்டும் ; அவள் விளைச்சல் மிகுந்தவள் ; தாவரங்களின் ,மூலிகைகளின் தாய் ; அவள் உறுதியாக நிற்கிறாள்
இந்த அற்புதமான மந்திரம் நமக்கு அரிய பல செய்திகளைத் தருகிறது. இந்த உலகம் நிலை நிற்கக் காரணம் தனக்கென வாழாத மக்கள் இருப்பதுதான் என்றும் பழியைக் கண்டு அஞ்சும் மக்கள் இருப்பதால் தான் என்றும் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி புறநானூற்றில் பாடியது இந்த வேதக் கருத்துதான் . வேத கால புலவன் ஒரே சொல்லில் தர்மம், ருதம் என்று அடக்கிவிட்டான். தாவரங்களும் மூலிகைகளும் , விளைச்சலும் மிக்க பூமி என்பதைப் படிக்கையில் பசுமை மிக்க காடுகள் நிறைந்த, இயற்கை வனப்புமிக்க அழகிய பூமியைக் கவிஞன் நம் மனக் கண் முன் காட்டுகிறான்.
மந்திரம் 17
விஸ்வஸ்வம் மாத ரமோஷதீனாம் த்ருவாம் பூமிம் ப்ருதிவீம் தர்மணா த்ருதாம்
சிவாம் ஸ்யோனாமனு சரேம விஸ் வஹா –17
Xxx
மந்திரம் 18
பூமாதேவியே , நீ மஹத்தானவள்; உன்னுடைய வேகமும் , நடுக்கமும் குலுங்கலும் மஹத்தானது .. பலம் வாய்ந்த இந்திரன் உன்னைப் பிழையின்றி பாதுகாக்கிறான்.ஓ பூமியே , எங்களைத் தங்கம் போல ஜொலிக்கச் செய்வாயாகுக. எவரும் என்னை வெறுக்கக் கூடாது
பூமியின் நடுக்கம் என்னும் பூகம்பம் EARTHQUAKE குறித்து சங்கத் தமிழ் பாடல்களிலும் பிற சம்ஸ்க்ருத புஸ்தககங்களிலும் உள . ஆனால் பூமியின் ‘மஹான் வேகம்’ GREAT SPEED என்ற சொல் ஊன்றி ஆராய வேண்டியவிஷயம் .
சைன்டிபிக் அமெரிக்கன் SCIENTIFIC AMERICAN என்ற புகழ்பெற்ற அறிவியல் பத்திரிக்கை சொல்கிறது :–
பூமி அதன் அச்சில் தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் வேகம் மணிக்கு 1000 மைல் .
பூமி, பிற கிரஹங்களைப் போலவே சூரியனையும் சுற்றுகிறது. அப்போது பூமியின் வேகம் மணிக்கு 67,000 மைல்.
சூரியன் எல்லா கிரஹங்களையும் துணைக்கிரஹங்களையும் இழுத்துக்கொண்டு பால்வெளி மண்டலத்தை வலம் வருகிறது. அப்போது அதன் வேகம் மணிக்கு 4,90,000 மைல்
எப்படி பூமியின் வேகம் பற்றி அதர்வண வேதப் புலவன் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் பாடினான்? இந்த வேகம் என்ற ஒரு சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு நான் வியாக்கியானம் செய்யவில்லை. பிரபஞ்சத்தில் உள்ள பூமி முதல் எல்லாவற்றுக்கும் வடிவம் வட்டமே என்று அறிந்து OVAL, GLOBULAR, CIRCLE அண்டம் (முட்டை) என்றும் வானில் சுற்றும் சூரியன், சநதிரன் , குரு ஆகியவற்றுக்கு ஈர்ப்பு விசை இருப்பதை அறிந்து கிரஹ GRIP, GRAB, GRAVITY என்ற சொல்லை பயன்படுத்தினான். எப்படி மிகப்பெரிய கிரகத்துக்கு குரு (வியாழன், ஜுபிட்டர் ) என்று பெயரிட்டான் என்பதை மனைதிற்கொண்டு இதை ஆராய வேண்டும். . முனிவர்கள் மாபெரும் விஞ்ஞானிகள் !!
இப்போது கடைசி இரண்டு வரிகளைப் பார்ப்போம்.
“எங்களைத் தங்கம் போல ஜொலிக்க வை” என்று புலவன் இறைஞ்சுகிறான். தங்கத்தின் மதிப்பை அறியாதார் உலகில் இல்லை. உலகம் முழுதும் அரசசாங்க வங்கிகளில் ஒவ்வொரு நாடும் குவித்து வைப்பது தங்கக் கட்டிகள்தான் .உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் தங்கம் வருகிறது. ரிக் வேத கால மக்கள் மிகவும் செல்வ செழிப்பில் திகழ்ந்த விவசாயிகள். தானியம், குதிரை, பசு மாடுகள், தங்கம், வீடு, சபை பற்றிய குறிப்புகள் அவர்கள் நாகரீகம் மிக்கவர்கள் , நகர வாழ் மக்கள் என்பதைக் காட்டுகிறது. மேலும் ஒரே மந்திரம், இந்திரன் இருபது மன்னர்களை வென்றதாகச் சொல்லி, 5, 6 மன்னர்களின் பெயர்களையும் சொல்கிறது !
சொர்ணம், ஹிரண்யம், என்ற சொற்களை நாம் இன்றும் பயன்படுத்துகிறோம். 16 வகைத் தானங்களில் ஹிரண்ய தானத்தை தமிழ்க் கல்வெட்டுகளும் செப்புகின்றன. சொர்ணம் என்ற பெயரை இன்றும் பெண்கள் பெயர்களில் காண்கிறோம்.
இதிலுள்ள “மஹா” என்ற சொல் மூலம் ஐரோப்பிய மொழிகளில் மெகா MEGA புகுந்தது.
ஓஷதி என்ற சொல்லை ஓளஷதம் / அவுடதம் என்று இன்றும் தமிழ் மருத்துவ நூல்கள் புகலும் .
என்னை யாரும் வெறுக்க வேண்டாம். ராமலிங்க சுவாமிகளும் ‘திருவருட்பா’வில் இதை இறைவனிடம் வேண்டுகிறார். நான் யாரையும் சீ , நாயே பேயே என்று திட்டக்கூடாது என்று இறைவனிடம் கெஞ்சுகிறார் ; “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் அன்பு” நம்மிடம் இருந்தால் நம்மை யாரும் வெறுக்க முடியாது அல்லவா?
நாம் சிலரைக் கண்டதும் காதல் கொள்கிறோம் . சிலரை காரணம் இல்லாமல் வெறுக்கிறோம். பிள்ளைப் பேறு கூட இல்லாத எம்.ஜி.ஆர் . MGR என்ற நடிகரைக் காண்பதற்காக பல லட்சம் பெண்கள் இரவு மூன்று மணி வரை பொதுக்கூட்ட அரங்கில் காத்திருந்ததை நாம் படித்து இருக்கிறோம். அவரை வீட ஆண் அழகன் உலகில் இல்லையா? இதற்கெல்லாம் ஜாதகமே காரணம். நம் பூர்வ புண்ய பாபம் நம்மை நிழல் போல தொடர்ந்து வரும் என்பது ஆன்றோர் வாக்கு. ஆக நம்மை வெறுக்காமல் இருக்க நாம் யாரையும் வெறுக்காமல் இருக்கவேண்டும். இதை வள்ளுவன் குறளிலோ , வள்ளளாரின் பாடலிலோ காண்பதில் வியப்பில்லை. பூமி சூக்தத்தின் இடையில் இதை நுழைத்தானே வேதப் புலவன், அவனைத்தான் பாராட்டவேண்டும்
மந்திரம் 18
மஹத் சதஸ்தம் மஹதீ பபூவித மஹான் வேக ஏஜதுர்வேபதுஷ்டே
மஹான்ஸ்வேந்த்ரோ ரக்ஷத்ய ப்ரமாதம்
ஸா நோ பூமே ப்ரரோச்ய ஹிரண்யஸ்யேவ ஸம்த்ருசி மா நோ த்விக்ஷத கஸ்சன
ஈயென்று நானொருவரிட நின்று கேளாத இயல்பு மென்னிட மொருவரீ திடுவென்ற போதவர்க் கிலையென்று சொல்லாம லிடுகின்ற திறமும் இறையாம் நீயென்று மெனைவிடா நிலையும் நானென்று முன் னினை விடா நெறியு மயலார் நிதியொன்று நயவாத மனமு மெய்ந்நிலை நின்று நெகிழாத திடமு முலகில்
சீயென்று பேயென்று நாயென்று பிறர்தமைத் தீங்கு சொல்லாத தெளிவும்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Written By B. Kannan, New Delhi
திருப்புகழ்ப் பாடல்களை அடியொட்டி ‘திருப்புகழ் ஞானசச்சிதானந்த வள்ளி கைத்தம்’ எனும் மருத்துவக் குணங்கள் கொண்ட பாடலை இயற்றியுள்ளார். வியாதிகளைக் குணப்படுத்தத் தன்னிடம் எந்தவித விசேஷ சக்தியும் கிடையாது எனவும் தான் வள்ளியின் பாதக் கமலங்களுக்கு அடிமை என்றும் அடிக்கடி கூறுவார். மற்றவர்களுக்குப் பணி செய்வதே தனது தலையாயக் கடமை என்ற உறுதியுடன் இருந்தார்.
திருப்புகழைத் தினமும் குறிப்பிட்ட எந்தப் பாடலுடன் துவக்க வேண்டும் என்பதற்கும் ஒரு வரைமுறை வைத்திருந்தார். ஞாயிறு அன்று ஒரு குறிப்பிட்டப் பாடலுடன் துவங்கி அடுத்த சனிக்கிழமை வரை ஒரு குறிப்பிட்டப் பாடலுடன் முடிப்பதில் யோக சாஸ்திரக் கலையின் அஸ்திவாரம் காணப்பட்டது. தினமும் நம் உடலில் ஒரு குறிப்பிட்ட யோக சக்கரம் ஓடுகின்றது என்றும், சனிக்கிழமை அன்று அனைத்து ஆறு சக்கரங்களும் உடம்பில் ஓடுகின்றன எனவும் கூறுவார். விநாயகர் துதியுடன் தொடங்கி,முருகனை வேண்டுதல், அலங்காரம்,அபிஷேகம் என முடியும். திருப்புகழ்ப் பாராயணத் தவநெறி திருமுறை எனும் இதில் ஆறு படை வீட்டின் பெருமைகள் கூறப்பட்டுள்ளன. பாராயணம் முழுவதும் ஆறு யோக சாஸ்திர அடிப்படையில் அமைந்துள்ளது.
சுவாமிகள் இயற்றிய மற்ற நூல்களின் தொகுப்பு அவரது நூற்றாண்டு விழா மலரில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது “வேல் மாறல் மகாமந்திர”மாகும்.
வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு உண்டாக்கும் வல்லமை உடையது. பொதுவாக மன ஒருமைப் பாட்டுடன் மந்திரங்களை உச்சரித்து வழிபடும்போது உண்டாகிற அதிர்வு அலைகளை வேல் மாறல் பாராயணத்தில் உணர முடியும். பயத்தினாலும், மனச் சிதைவாலும் உண்டாகும் ஏவல், வைப்பு, பில்லி, சூனியம், பேய், பிசாசு பிடித்தல் போன்ற அவஸ்தை துக்கங்களிலிருந்து விடுவிக்க வேல்மாறல் பாராயணம் கைகண்ட மருந்தாகும். ஒரு மண்டல காலம் இதைப் பாராயணம் செய்து வேலாயுதத்தை வழிபட, சகல சௌபாக்கியங்களும் கை கூடும்; சத்ரு பயமும் தீவினைகளும் நீங்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்; சகலவிதமான உடற்பிணிகள் மட்டுமல்ல, மனப் பிணிகளும் அகன்று வாழ்க்கை சிறக்கும்
அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள வேல்வகுப்பின்,ஔஷத (மருந்து) வகுப்பு-பதினாறு அடிகளை மேலும் கீழுமாகவும், முன்னும் பின்னுமாகவும் ஏறி இறங்கி வருவது போல் மாறி மாறி வர அமைத்து , அதனை நான்கு மடங்காக (16×4=64) அறுபத்து நான்கு அடிகளாக அமைய வைத்து, அந்தப்பாராயண முறையை ‘வேல்மாறல்’ என்று தொகுத்து அளித்துள்ளார் வள்ளிமலை சுவாமிகள்.6வது அடியாகிய , ‘திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை விருத்தன் என (து) உள்ளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே’ என்ற வேல் மஹா மந்திர அடி முதலில் 12 முறையும், நிறைவில் 12 முறையும், நடுவில் 64 முறையும் ஆக மொத்தம் 88 முறை ஓதப்பெறுகிறது.
இந்த 16வது அடி எழுவாய் ஆக அமைய, முதல் பதினைந்து அடிகள் யாவும் பயனிலையாக வருமாறு 16ம் அடியை ஒவ்வொரு அடியிலும் சேர்த்துப் படித்தால் அந்த வரி முழுமை பெறுகிறது. இதுதான் இந்த வேல் வகுப்பின் அபூர்வ அமைப் பாகும்.
தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தையே இதற்கு உதாரணமாகச் சொல்கிறார். திரிலோக மந்திரவாதி என்பவன் சுவாமிகள் மீது சூனிய மந்திரம் வைத்துவிட அவரால் பேசமுடியாமல் போயிற்று. முருகனின் அருளால் வேல் காப்பு மந்திரம் மனதில் பதிந்து இருந்ததால்,அந்த 64வரிகளையும் வேறுவகையில் 16 வரிகளாக மாற்றி உச்சரிக்க மந்திரவாதியின் முயற்சி எடுபடவில்லை. மாறாக,அவன் உடல் எங்கும் அனல் தகிக்க அலறியவாறு சுவாமிகளிடம் ஓடோடி வந்து சரணடைந்து. இனி அம்மாதிரி தவறைச் செய்ய மாட்டேன் என உறுதி அளித்தான். அவரது அருளால் பாதிப்பிலிருந்து மீண்டான். அதன் மூலம் இம் மந்திரத்தின் மகத்துவம் பற்றிப் புரிய வந்தது. முருகனின் சில அம்சங்களைப்- வேல், மயில்,பாதம்,வள்ளி போன்றவை-புகழ்ந்துப் பாடுவதால் கிடைக்கப் பெறும் ஒருவித தெய்விக அனுப வத்தை விவரிக்க இயலாது என்றும் குறிப்பிடுவார்.
1941-ம் ஆண்டு முதல் 1950 வரை சென்னையிலும், வள்ளிமலையிலும் மாறிமாறி வசிக்கலானார். வள்ளிமலையில் அவர் தவமியற்றியக் குகை திருப்புகழ்ஆஸ்ரமம் என்றறியப்பட்டு அன்னமிடும் ஆலயமாகத் திகழ்கிறது. சென்னைக்கு வரும்போ தெல்லாம் லிங்கிச்செட்டித் தெருவில் இருந்த தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை இல்லத்தில் தான் தங்குவார். இவர் அருணகிரியாரின் அனைத்து நூல் களுக்கும் உரையெழுதி வெளியிட்டுள்ளார். இவருடையத் தகப்பனார் வடக்குப் பட்டு சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள் திருப்புகழ்ச் சுவடிகளைத் தேடிஎடுத்து முதலில் பதிப்பித்தவர். அதனால் அந்த இல்லத்தைத் திருப்புகழின் தாய்வீடு என்றே சுவாமிகள் கருதினார்.
14-4-1950 அன்று மகான் ரமணமகரிஷி சமாதி அடைந்ததைக் காணும் பெரும் பாக்கியம் சச்சிதானந்தருக்குக் கிடைத்தது. பின்னர் அதே ஆண்டு நவம்பர் மாதம் சென்னைத் தம்புச் செட்டி சாலையில் கந்தர் சஷ்டி ஹோமம் ஒன்றை நடத்தினார்.
ஐந்தாம் நாள் அன்று வள்ளி சன்மார்கம் என்ற தலைப்பில் சங்கீத உபன்யாசம் செய்து கொண்டிருந்த ஸ்வாமிகளினால் இடையே சில நிமிடங்கள் பேச முடியா மல் வாயடைத்துப் போய் விட்டது. மிகவும் களைப்புடன் காணப்பட்டார். அதற் குப் பின் சில மணி நேரம் பொறுத்துச் சீடர்களிடம் பேசியவர் அந்த உபன்யா சத்தின் பொழுது தனக்கு முருகன் நேரில் காட்சி தந்தார் எனவும் அதனால்தான் அப்படி ஒரு நிலை ஏற்பட்டது என்றும் கூறினார். அதன் பின் 12 வது நாள் (1950 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி) கார்த்திகை, அஸ்வினி நட்சத்திரம், திரியோ தசி திதி கூடிய தினத்தன்று மாலை நான்கு மணி அளவில் நெற்றிப் பொட்டின் நடுவில் பிளவு ஏற்பட்டு இரத்தக் கசிவு தோன்ற, அதிலிருந்து ஸ்வாமி களின் ஜீவன் பிரிந்து,சமாதி அடைந்தார்.
வள்ளி மலைப் பகுதியில் ஆலயத்துக்கு அருகில் இருந்த குகையில் (அவர் சமாதி அடைவதற்கு பல நாட்களுக்கு முன்னரே தன்னுடைய சமாதி நிலைக்கு ஏற்பாடு செய்திருந்த இடத்தில்) அவரது பூத உடல் அடக்கம் செய்யப்பட்டுச் சமாதி எழுப்பப் பட்டுள்ளது. ஒரு புண்ணியப் புருஷரின் ஆன்மா அங்குஅடங்கியிருந்துப் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறது.
மகாசமாதி குருபூஜை, திருப்புகழ்ப் பாராயணம், பொங்கி அம்மன் வழிபாடு, அன்னதானம் போன்ற வைபவங்கள் வெகுசிறப்பாக நடந்தேறுகின்றன.
இறைத் திருவருளால் அறிவுமறி தத்துவமும்,அபரிமித வித்தைகளும். இமைப் பொழுதில் கைவரப் பெற்றவர். இவர் ஒரு ஞானி, யோகி,சித்தர், ஏன் ஒரு பக்தரும் கூட! வாகீச கலாநிதி கி.வா.ஜ.அவர்கள் சுவாமிஜி அருணகிரிநாதரின்
மறு அவதாரமே எனப் பாராட்டுகிறார். ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தர் இன்னும் ஓர்படி மேலே போய் திருப்புகழ் சாமி முருகனின்அவதாரமே எனப் போற்றுகிறார்.
WRITTEN BY S NAGARAJAN Post No. 10,536 Date uploaded in London – – 7 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com
காயத்ரியை ஜபித்தால் நாம் பெறும் பேரானந்தம் : டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன் வழங்கும் அருமையான நூல்!
ச.நாகராஜன்
சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயா பார்வை ஆராய்ச்சி நிறுவனத்தில் கௌரவ பேராசிரியராகப் பணியாற்றும் டாக்டர் திரு சி.ராமகிருஷ்ணன் வழங்கும் நூல் : காயத்ரியை ஜபித்தால் நாம் பெறும் பேரானந்தம்!
32 பக்கங்கள் கொண்ட இந்தச் சிறிய நூலை சென்னை வாச்சா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. முதலில் விஸ்வாமித்ர மஹரிஷியின் பெருமையுடன் நூலைத் தொடங்குகிறார் நூலாசிரியர்.
காயத்ரி மஹா மந்திரத்தை உலகிற்கு- அதாவது விஸ்வத்திற்கு – அருளியிருப்பதால் அவர் பெயரே விஸ்வாமித்ரராக ஆகி விட்டது.
காயத்ரியைக் கண்டவர் விஸ்வாமித்ரரே என்று தைத்ரீய உபநிடதம் 4வது பிரஸ்னம் கூறுவதைச் சுட்டிக் காட்டும் ஆசிரியர் ‘காயந்தம் த்ராயதே இதி காயத்ரி’ – தன்னைச் சொல்பவரைக் காப்பாற்றுவது காயத்ரி மந்திரம் என்ற விளக்கத்தைத் தருகிறார். காலையில் ஸ்ரீ காயத்ரியாகவும் நடுப்பகலில் ஸ்ரீ ஸாவித்ரியாகவும் மாலையில் ஸ்ரீ ஸரஸ்வதியாகவும் விளங்கும் தேவியின் தியான சுலோகங்கள் தமிழ் அர்த்தத்துடன் தரப்பட்டுள்ளன.
மொத்தம் 24 எழுத்துக்கள் கொண்ட காயத்ரி மந்திரம், மந்திர தேவதை ஸவிதா, வ்யாஹ்ருதிகள் ஆகியவை பற்றிய விளக்கங்கள் எளிய தமிழில் இனிதே விளக்கப்பட்டுள்ளன. பூ;, புவ:, ஸுவ: ஆகிய மூன்று வ்யாஹ்ருதிகளுக்கு முன் ஜபிக்கப்படும் ஓம் என்னும் பிரணவம் குறித்து, வேத மேற்கோள்களுடன் விளக்கம் தரப்படுகிறது. ஓம் என்ற சொல்லுக்கு வேதங்களின் ஜீவன் என்று பொருள். உயர்ந்த பிரம்மமே ஓம்.
இந்த மந்திரச் சொல்லின் அலைகள் ஆகாயத்தில் எப்போதும் இருப்பதை விஞ்ஞான விளக்கத்துடன் தருகிறார் நூலாசிரியர். ஓம் தன்னை அநுஸந்தானம் செய்பவரை பர ப்ரும்ம ஸ்வரூபமாகவே ஆக்கி விடும்.
எடுத்துக் காட்டு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், பகவான் ரமண மஹரிஷி, காஞ்சி மஹா பெரியவாள்! அ, உ, ம என்ற ஓங்காரத்தில் அ என்பது உலக சிருஷ்டி உ காரம் உலகின் ஸ்திதி மகாரத்தால் உலகை ஒடுக்கும் பிரளயம் ஏற்படுகிறது போன்ற விளக்கங்கள் பல வேத ரகசியங்களைத் தருகின்றன.
காயத்ரியின் ஆவாஹண மந்திரம் ( ஆயாது வரதா தேவி), பின்னர் 24 எழுத்துக்கள் கொண்ட காயத்ரி மஹா மந்திரம் ஆகியவை அர்த்தத்துடன் விளக்கப்படுகிறது. நஹ என்ற காயத்ரி மந்திரச் சொல் கூட்டுப் பிரார்த்தனையைக் குறிப்பிடுகிறது.
காயத்ரியை எப்படி ஜபிக்க வேண்டும்? காலையில் நின்று கொண்டு ஜபித்தல் வேண்டும். நடுப்பகலில் நின்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ ஜபித்தல் வேண்டும். மாலையில் நின்று கொண்டு ஜபித்தல் வேண்டும்.
இதைத் தொடர்ந்து விவேகானந்தர் வேத கால முனிவரைத் தெய்வீகக் காட்சியாகக் கண்ட அனுபவமும் காஞ்சி மஹா பெரியவாளின் அருளுரையும் தரப்படுகிறது.
‘காயத்ரி மந்திரமாகிய இந்தத் தீப்பொறியை ஒரு நாளும் நம் பரம்பரையிலிருந்து அணைய விடக் கூடாது’ என்பது பரமாசார்யாளின் அறிவுரை; அன்புரை; அறவுரை. அழகான அட்டைப் படத்தில் மனதைக் கவரும் காயத்ரி தேவியின் படங்களைக் கண்டு மகிழலாம்.
நேர்த்தியான தாளில் சிறப்பாக அச்சிடப்பட்டுள்ள இந்த நூலை ஒரு முறை படித்தால் காயத்ரி ஜபிப்பவர்கள் அர்த்தம் புரிந்து ஜபிப்பபவர்கள் ஆவர்.
இதுவரை இந்த மந்திரத்தை ஜபிக்காதவர்கள் இனிமேல் ஜபிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைக் கொள்வர். நூலாசிரியருக்கு நமது பாராட்டுகள். வெளியிட்ட வாச்சா பதிப்பகம், நல்ல ஒரு பணியைச் செய்து வருகிறது என்பது குறிப்பிடத் தகுந்தது.
நூலிற்கு விலை இல்லை என்பது ஒரு சிறப்பு அம்சம். ஆனால் மனமுவந்து நன்கொடையாக 20 ரூபாயை தாள் மற்றும் அச்சுச் செலவிற்காக வழங்கலாம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
I am a lover of Nature. I had been to forests in Tamil Nadu and Karnataka as a Botany student. I browse through any book that has bird or animal or trees. I went through three volumes on Indian Forests. Though there are hundreds of images in the book , most of them are not of good quality or reproduceable. So, I am posting here some good pictures, all are in black and white:
Book Title – THE FORESTS OF INDIA , 3 VOLUMES
BY E.P.STEBBLING
PUBLISHER – JOHN LANE THE BODLEY HEAD LIMITED , LONDON.