Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-12 (Post No.15,085)

சத்யவதி,

Written by London Swaminathan

Post No. 15,085

Date uploaded in London –  13 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 இன்றைய படங்கள் பராசர, சத்யவதி, வேத வியாச, திருத ராஷ்ட்ர , பாண்டு 

 வேத வியாச, 

பராசர, 

நேற்று வெளியான படங்கள் தொடர்பான மஹாபாரத கதாபாத்திரங்களைச் சுருக்கமாகக் காண்போம் :க்ருப, த்ருஷ்டத்யும்ன, திரெளபதி, சகுனி, கடோத்கச, சிகண்டி.

இந்தோனேஷியா  வயங் பொம்மலாட்டம்  WAYANG PUPPET SHOW FROM INDONESIA CONTINUED…………………

Part 12

KRIPACHARYA –Twin sister’s name  KRIPI

Shantanu found both in a forest and brought them up in Hastinapura.

Kripa learnt warfare along with Shantanu. After the war he accompanied Aswaththama and set fire to Pandava camps killing all the sons of Draupadi.

கிருபன் கிருபி

இருவரும் காட்டில் கைவிடப்பட்ட இரட்டையர் ; அந்த ஆண், பெண் குழந்தைகளை சந்தனு எடுத்துவந்து ஹஸ்தினாபுரத்தில் வளர்த்தான் கிருபன் சந்தனுவுடன் சேர்ந்து போர்க்கலையைப் பயின்றான்; கெளரவ சேனையில் பதினோரு தளபதிகளில் ஒருவனாக நின்று போரிட்டுப் பல வெற்றிகளை பெற்றான் ; இறுதியில் அஸ்வத்தாமனுடன் சேர்ந்து பாண்டவர் கூடாரத்துக்குத் தீ வைத்து திரெளபதியின் புதல்வர்களை அழித்தான்.

***

DRAUPADI-her other names – PANCHALI, YAJNASENI

Drupada of Paanchaala (Punjab) performed a yagna and Draupadi and her bother  Dhristhtadyumna were born in Yaga fire.

Draupadi married all the five Pandava brothers. When Yuthisthira lost her in a game of dice Duryodhana’s brother Dushasana dragged her in open court and pulled the single garment she was wearing. Krishna saved her modesty by making her garment longer and longer through his divine power.

During 13 year stay in the forest, she worked as a servant maid in the palace of king Vrata pf Matsya desa. Her children were killed by Aswaththama at the end of the war. But he ruled as the queen of Hastinapura for 36 years with her husband Yuthisthira. She walked towards Himalaya along with her five husbands and died.

திரெளபதி

பாஞ்சாலி  என்றும் யக்ஞ சேணி என்றும்   பெயர்கள் . த்ருபத மன்னன் நடத்திய யாகத்தில் சகோதரன் த்ருஷ்டத்யும்னனுடன் தீயில் அவதரித்த பேரழகி; பாண்டவர் ஐவரையும் மணந்தாள் ; சகுனினியின் விஷமத்தால் பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்றபோது திரௌபதியையும் பணயம் வைக்கத் தூண்டினான். யுதிஷ்டிரன் தோற்றுப்போனபோது சபையோர் சொன்ன புத்திமதியைப் புறக்கணித்து திரெளபதியின் புடவையை துசசாசனன் மூலம் அவிழ்த்தனர் கண்ணன் கிருபையால் அவள் புடவை வளரவே கெளரவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை பதிமூன்றாவது ஆண்டு அஞ்ஞாதவாசத்தின்போது மத்ஸ்ய தேச மன்னன் விராடனிடம் சைரந்த்ரி என்ற பணிப்பெண்ணாகப் பணியாற்றினாள் அங்கு அவளைத் துன்புறுத்திய கீசகனை பீமன் வதம் செய்தான். தன்னை அவமத்தித்த துரியோதனின் தொடையைப் பிளந்து  ரத்தத்தை எடுத்து கூந்தலில் தடவும்வரை கூந்தலை அலங்கரிக்க மாட்டேன் என்று சபதம் செய்தாள்; அந்த சபதத்தை நிறைவேற்ற பீமன் உதவினான். ஆயினும் போர் முடிந்த நாள் இரவில் அஸ்வத்தாமன் கும்பல் பாண்டவர் கூடாரங்களுக்குத் தீ வைத்ததில் அவளுடைய புத்திரர்கள் அனைவரும் இறந்தனர் . கடைசி காலத்தில் பாண்டவர் ஐவருடன் வடதிசை நோக்கி நடந்து ஒவ்வொருவராக உயிர் நீத்தனர்.

***

DHRISHTADYUMNA

See above for his birth. He was appointed as the supreme commander of the Pandava army. In the war he beheaded Dronacharya. But at the end of war, he was killed in the arson attack of Aswaththama .

த்ருஷ்டத்யும்னன்

திரெளபதியுடன் பிறந்தவன் ;போரில் பாண்டவர் சேனைத் தளபதிகளில் ஒருவனாக இருந்து பல வெற்றிகளைப்  பெற்றான் . போரில் துரோணரின்  தலையைத் துண்டித்தான்; ஆயினும் அஸ்வத்தாமன் பாண்டவர் கூடாரங்களுக்குத் தீ வைத்ததில்  உயிர் இழந்தான் 

***

GADOTHKACHA

Ghatotkacha means Pot Headed.

As the head of one of the commanders in the Pandava side in the Kurukshetra war he killed many demons like Alambusha, Alayudha, and many gigantic Asuras. He was specifically called out as the warrior who forced Karna to use his Vasavi Shakti weapon, and courted a hero’s death in the great war.

கடோத்கசன்

கடோத்கசன் என்றால் பானைத் தலையன் என்று பொருள்; பாண்டவர் சேனையில் வீர தீரச் செயல்கள் புரிந்து எதிர்த் தரப்பில் போரிட்ட பல ராக்கதர்களை அழித்தான்; போரில் வீரனாக இறந்தான்.

***

SHAKUNI

Wicked brother of Gandhari, wife of Dhritarsahtra, He was an expert in the game of dice, but was very crafty. His evil influence over Kauravas was one of the reasons of Mahabharata war. Bhisma, Drona and Vidura suggested to make peace with Pandavas. But he and his supporters rejected all peace deals. In the last day of 18 day war, Sahadevan killed him.

சகுனி

காந்தாரியின் சகோதரன்;  தாயக் கட்ட சூதாட்டத்தில் வல்லவன். ஆனால் விஷம் நிறைந்த மனத்தினன் . பீஷ்மர், விதுரர் போன்றோர் சொன்ன சமாதான திட்டங்களை துர்யோதனாதிகள் நிராகரித்ததற்கு சகுனி ஒரு காரணம் . இறுதியில் போரில் அவனும் அவனது மகன்களும் ஸஹதேவனால் கொல்லப்பட்டனர்.

***

SHIKANDI

Drupada’s daughter was Shikandini. Through a sex change surgery, he became a male and was called Shikandi. in his previous birth he was Amba who vowed to kill Bhishma. In the ancient Hindu warfare women were not involved, because killing a woman was considered a great sin. in the Mahabharata war Bhisma refused to fight Shikandi saying he was a woman. He was one of the seven commanders of the Pandava army, because he learnt the art of warfare from Drona, he tried to kill Bhishma but unable to pierce his armour. Bhishma did not use any weapons. At Krisna’s suggestion Arjuna stood behind Shikandi and killed Bhisma.

சிகண்டி

த்ருபத மன்னனுக்கு பெண்ணாகப் பிறந்தான் ; செக்ஸ் சேஞ்ச் ஆபரேஷன் மூலம் ஆணாக மாறி துரோணரிடம் போர்க்கலை பயின்றான். பூர்வ ஜன் மத்தில் பீஷ்மரால் அவமானமுற்ற அம்பா, அடுத்த ஜென்மத்தில் பிறந்து பீஷ்மரைக் கொல்வேன் என்று சபதம் செய்திருந்தாள். அந்தக்  காலத்தில் இந்துப் பெண்கள் போரில் பங்கேற்கமாட்டார்கள் ஏனெனில் பெண்களைக் கொல்வதை இந்து மதம் அனுமதிக்காது. பீஷ்மரும் சிகண்டி/னி பிறவியில் பெண் என்பதால் அவனுடன் சண்டை போட மாட்டேன் என்று அறிவித்திருந்தார்; ஏழு பாண்டவ தளதிகளில் ஒருவனான சிகண்டி/னி விட்ட அம்புகள்  பீஷ்மரின் கவசத்தைத்    துளைக்க முடியவில்லை அவன் பெண் என்பதால் பீஷ்மர்  ஏதும் செய்யவில்லை; கண்ணன் சொன்னதன் பேரில் அர்ஜுனன் சிகண்டிக்குப் பின்னால் நின்று வஞ்சகமாக பீஷ்மரை வீழ்த்தினான்; அவர் பின்னர் அம்புப் படுக்கையில் இரண்டு மாதம் படுத்திருந்து உயிர்நீத்தார் .போருக்குப்பின்னர் அஸ்வத்தாமன் வைத்த தீயில் எரிந்து இறந்தான் சிகண்டி.

திருத ராஷ்ட்ர 

 பாண்டு 

To be continued……………………..

Tags- Hinduism through 500 Pictures,  Tamil and English,  படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-12 , சிகண்டி, சகுனி ,கடோத்கசன், திரெளபதி கிருபன் , கிருபி இந்தோனேஷியா, வயங் ,பொம்மலாட்டம்  WAYANG PUPPET SHOW FROM INDONESIA

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL இந்துமத கலைச்சொல் அகராதி -Part 4 (Post No.15,084)

Written by London Swaminathan

Post No. 15,084

Date uploaded in London –  13 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பகவத் கீதை

மஹாபாரத நூலில் உளது; போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் அருளிய உபதேசம் ; உலகம் முழுதும் உள்ள அறிஞர்கள்  கொண்டாடும் நூல். வேதத்தின், உபநிஷதங்களின் சாரத்தை 18 அத்தியாயங்களில் 700 ஸ்லோகங்களில் சம்ஸ்க்ருத மொழியில் கொடுக்கும் அற்புத நூல். அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் ஆகிய மூன்று பிரிவினரும் ஏற்கும் நூல். கர்மயோகம், பக்தியோகம், ஞான யோகம் என்ற மூன்று விஷயங்களை விளக்கும் நன்னூல். இந்து மதத்தின் வற்றாத ஜீவ ஊற்று இது.

BHAGAVAD GITA:

Bhagavad Gita means Divine Song. It is in Sanskrit in the epic Mahabharata It gives the gist of Hindu philosophy in 700 Slokas/couplets n 18 chapters . it deals with Karma, Bhakti, Jnana yogas. Krishna delivered it to Arjuna in the b\attlefield. Alduous Huxley said, “ Gita is one of the  clearest and most comprehensive summaries of perennial philosophy ever to have been made.” Gita restates the central teachings of the Upanishads.

***

பக்தி – இறைவனி டத்தில் ஒருவர் காட்டும் எல்லையற்ற அன்பு, நம்பிக்கை பக்தி ஆகும். இதைப் பாடலின் மூலமோ ஆடலின் மூலமோ கவிதைகளின் வாயிலாகவோ வெளிப்படுத்தலாம் . சங்கரர், அருணகிரிநாதர், அபிராமி பட்டர் ஆகியோரின் துதிப்பாடல்கள் பக்திக்கு எடுத்துக் காட்டாகும். சைதன்யர் போன்ற மகான்களின் செயல்களும் பக்திக்கு எடுத்துக்காட்டு. அப்பரின் தேவாரமும் நாரத பக்தி சூத்திரமும் பக்தியில் மூழ்கிய ஒருவரின் நிலையை அழகாக வருணிக்கின்றன.

அப்பர் தேவாரம் 

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்

பின்னம் அவளுடைய ஆரூர் கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்;

அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தே ஆசாரத்தை

தன்னை மறந்தாள் தன் நாமங் கெட்டாள்

தலைப் பட்டாள் நங்கை தலைவன் றாளே

—–தேவாரம், ஆறாம் திருமுறை, பாடல் 258

பொருள்:-

ஒரு பெண்ணை நினைத்த்ல், அவளைப் பற்றிப் பிதற்றல்,  அவளுடன் விளையடல், அவளைப் பார்த்தல் (அடிக்கடி), அவளுடன் கிசுகிசு ரஹசியம் பேசல் (மொபைல்போன், பேஸ்புக், ஈ மெயில் மூலம்), அவளுடன் அனுபவிக்க வேண்டியது பற்றி எண்ணுதல்/ கனவு காணுதல், அவைகளை அடைய திட்டமிடல்/ முயற்சி செய்தல், இதன் காரணமாக செய்ய வேண்டிய கடமைகளை மறந்துபோதல் என்ற எட்டு வகைச் செயல்கள் பக்தனின் நிலை ஆகும்

DEVOTION- Extreme love towards God is called Bhakti in Sanskrit. A devotee shows it by singing, dancing, composing verses, serving the devotees etc. The physical and mental state of such a devotee are explained in books like Narada Bhakti Sutra, Bhagavata purana and other devotional verses of Alvars and Nayanmars. One Sanskrit couplet narrates the qualities of a devotee.

श्रीप्रह्राद उवाच

श्रवणं कीर्तनं विष्णो: स्मरणं पादसेवनम् ।

अर्चनं वन्दनं दास्यं सख्यमात्मनिवेदनम् ॥ २३ ॥

इति पुंसार्पिता विष्णौ भक्तिश्चेन्नवलक्षणा ।

क्रियेत भगवत्यद्धा तन्मन्येऽधीतमुत्तमम् ॥ २४ ॥

śrī-prahrāda uvāca

śravaṇaṁ kīrtanaṁ viṣṇoḥ smaraṇaṁ pāda-sevanam

arcanaṁ vandanaṁ dāsyaṁ sakhyam ātma-nivedanam

iti puṁsārpitā viṣṇau bhaktiś cen nava-lakṣaṇā

kriyeta bhagavaty addhā tan manye ’dhītam uttamam

śrī-prahrādaḥ uvāca — Prahlāda Mahārāja said; śravaṇam — hearing; kīrtanam — chanting; viṣṇoḥ — of Lord Viṣṇu (not anyone else); smaraṇam — remembering; pāda-sevanam — serving the feet; arcanam — offering worship (with ṣoḍaśopacāra, the sixteen kinds of paraphernalia); vandanam — offering prayers; dāsyam — becoming the servant; sakhyam — becoming the best friend; ātma-nivedanam — surrendering everything, whatever one has; iti — thus; puṁsā arpitā — offered by the devotee; viṣṇau — unto Lord Viṣṇu (not to anyone else); bhaktiḥ — devotional service; cet — if; nava-lakṣaṇā — possessing nine different processes; kriyeta — one should perform; bhagavati — unto the Supreme Personality of Godhead; addhā — directly or completely; tat — that; manye — I consider; adhītam — learning; uttamam — topmost.-Bhagavatam  7.5.23-24

***

சைதன்யம் – அறிவு கடவுள், தத்துவ ஞானம் ;  இத்தகைய உணர்ச்சிகளின் வெளிப்பாடு

CAITANYA – Spirit, Vitality, life.

***

சித் -சத் சித் ஆனந்த = சச்சிதானந்த

உண்மை ஏன்னு  கடவுள் (சத்) , சித்( விழிப்புணர்வு , நான் யார் என்ற அறிவு ) ஆனந்த ( உலப்பிலா ஆனந்தம் ; அதாவது இறைவனை உணர்ந்த பேரானந்தம்).

CIT- citta-  Consciousness , Mind

***

செளலம்- முடி இறக்குதல்; முதல் தடவை குழந்தைக்கு முடிவெட்டுவது சூடாக்கர்ம என்றும் சொல்லப்படும் ; சூடா என்பது குடுமி. அதை வைத்துவிட்டு சிகையை மழித்தல்; இந்துக்களின் நாற்பது ஸம்ஸ்காரங்களில் ஒன்று.

CAULA- CUUDAAKARMA- The first cutting of the hair on the head of a child, leaving a CUUDAA or lock of hair (sikhaa), the remaining part being shaved.

***

சந்தஸ் – வேதம்; வேதப் பாடல்களின் யாப்பிலக்கணம்

CHANDAS- The Vedas; prosody

***

சதுர்த்தி – அமாவாசை அல்லது பெளர்ணமியை அடுத்துவரும் நாலாவது நாள்/திதி. விநாயகருக்குப் பிரியமான நாள் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி-சங்கடஹர சதுர்த்தி.

CHATURTHY- Fourth Day following New moon day or Full moon day. Sankatahara Chaturthy is the Krishnapaksha Chaturthy when Lord Ganesh is worshipped for removal of obstacles.

***

தட்சிணை – தக்ஷிணா- பூஜை அல்லது வேள்வியை நடத்திக் கொடுத்தவருக்கு வழங்கப்படும் தொகை அல்லது பரிசுப்பொருள்.

DAKSHINAA- Fee or gift or present given to the priest who performed a Puja or  Homa .

****

தட்சிணாயணம்-சூரியனின் தென் திசைப்பயணம் – ஆடி மாதம் துவங்கி ஆறு மாதங்கள்  தட்சிணாயண  காலம்- எனப்படும். உத்தராயண காலம் அதிகம் புண்ணியம்  படைத்ததாக கருதப்படுகிறது.

DAKSHINAAYANA-  Dakshina means South. Sun’s apparent southward journey time. It is six months from Mid July and Mid January. Uttarayana is from Mid January to Mid July. Uttarayana is considered  holier than Daksinayana.

To be continued………………………..

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL இந்துமத கலைச்சொல் அகராதி, Part 4 , தட்சிணாயணம், Uttarayanam, சந்தஸ்சங்கடஹர சதுர்த்தி.

GNANAMAYAM 12th October 2025 BROADCAST PROGRAMME

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.

****

Prayer -MRS JAYANTHI SUNDAR TEAM

***

NEWS BULLETIN

VAISHNAVI ANAND from London presents World Hindu News in Tamil

****

MRS Brhannayaki Sathyanarayanan  from Bengaluru speaks on

THERAZUNDUR TEMPLE

****

SPECIAL EVENT-

Talk on Periyapuranam

By

Sri T R RAMESH,

President of Temple Worshippers Association

(Son of ‘ Sekkizar Adippodi’  Dr T N Ramachandran )

 ******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 12 October 2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் — திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்

***

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்

வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் —திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன்

சொற்பொழிவு– தலைப்பு  தேரழுந்தூர் தலம்கோவில்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

பெரிய புராணத் சொற்பொழிவுத் தொடர்:

பேசுனர் – திரு T R  ரமேஷ் அவர்கள்,

(சேக்கிழார் அடிப் பொடி டாக்டர் T N  ராமச்சந்திரன் அவர்களின் புதல்வர்)

ஆலயம் செல்லுவோர் சங்கத் தலைவர்

—subham—

Tags-Gnanamayam Broadcast, 12-10- 2025, programme,

Trr

A-arivom 

News

ஞானமயம் வழங்கும் (12 10 2025)  உலக இந்து செய்திமடல் (Post No.15,083)

ritten by London Swaminathan

Post No. 15,083

Date uploaded in London –  13 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானமயம் வழங்கும் (12 10 2025)  உலக இந்து செய்திமடல்

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்.

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த் வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் மாதம் 12-ம் தேதி 2025-ம் ஆண்டு

****

 முதலில் சபரி மலை கோவில் செய்தி

சபரிமலை கோவில் தங்கம் மாயமான விவகாரத்தில் வெளியான இ-மெயில் கடிதத்தால் புதிய திருப்பம்!; கோர்ட் அதிர்ச்சி

சபரிமலை அய்யப்பன் கோவிலில் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசத்தின் எடை குறைந்ததாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க, கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது.

சபரிமலை தங்கம் கொள்ளை தொடர்பான விசாரணையை சிறப்பு புலனாய்வு பிரிவு ஆறு வாரங்களுக்குள் முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலின் தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரத்தை எழுப்பி, கேரள சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

சபரிமலை அய்யப்பன் கோவில் தங்கம் மாயமான விவகாரத்தில், ‘தங்கக் கவசம் செப்பனிடும் பணிக்குப் பின், மிச்சமான தங்கத்தை உதவி தேவைப்படும் பெண்ணின் திருமணத்திற்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என, தங்கமுலாம் பூசும் செலவை ஏற்ற தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி தேவசம் போர்டுக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் தொழிலதிபருக்கும், தேவசம் போர்டு அதிகாரிகளுக்கும் முறைகேட்டில் தொடர்பு இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இம்மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் கருவறையின் வாயிலில், இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க கவசங்கள், 2019ல் கழற்றப்பட்டு, செப்பனிடுவதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

செப்பனிடும் பூசும் செலவை பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, சென்னையில் உள்ள அவரது ‘ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்’ என்ற நிறுவனத்தில் செப்பனிடும் பணி நடந்தது.

இதற்காக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு கவசங்களை ஒப்படைத்தபோது, அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது. அதை செப்பனிட்டப் பின், சென்னை நிறுவனம் மீண்டும் ஒப்படைத்தபோது, அதன் எடை 38 கிலோவாக குறைந்திருந்தது.

அதாவது தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில் இருந்து 4.54 கிலோ அளவுக்கு தங்கம் மாயமாகி இருந்தது.

பக்தர்கள் மத்தியில் இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உண்மையை கண்டறிய கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த 2019, ஆக., 11ம் தேதி செப்பனிடப்பட்ட கவசங்களை துவாரபாலகர்கள் சிலைகளுக்கு அணிவித்த பின், தொழிலதிபர் உன்னிகிருஷ்ணனிடம் இருந்து, ‘இ – மெயில்’ வாயிலாக கடிதம் ஒன்று தேவசம் போர்டுக்கு அனுப்பப்பட்டது. அது குறித்த ஆதாரம் கேரள உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், உன்னிகிருஷ்ணன் போத்தி கூறியிருப்பதாவது:

சபரிமலையின் கருவறை கதவு மற்றும் துவாரபாலகர்கள் சிலைகளுக்கு தங்க முலாம் பூசும் பணிகள் முடிந்த நிலையில், என்னிடம் தங்கம் மிச்சம் இருக்கிறது.

உதவி தேவைப்படும் ஒரு பெண்ணின் திருமணத்திற்கு, தேவசம் போர்டு ஒத்துழைப்புடன் அந்த தங்கத்தை பயன்படுத்திக் கொள்ளலாமா?  இது தொடர்பாக உங்களது மேலான கருத்துகளை வரவேற்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இதை படித்து பார்த்து கேரள உயர் நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

‘இந்த செயல் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. தேவசம் போர்டு அதிகாரிகளுக்கும், உன்னிகிருஷ்ணனுக்கும் இடையேயான கூட்டு எச்சரிக்கை மணி போல ஒலிக்கிறது.

‘கோவில் சொத்து மீதான புனிதத்தை கெடுத்து, பக்தர்களின் நம்பிக்கைகளுக்கும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது’ என, நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

காணாமல் போனதாக கூறப்பட்ட துவாரபாலகர்கள் தங்கபீடமும், நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் போத்தியின் உதவியாளரிடம் இருந்து மீட்கப்பட்டது. 

துவாரபாலகர்கள் தங்கக் கவசம் குறித்த முறைகேடுகள் தொடர்பாக தேவசம் போர்டில் பணியாற்வந்த மூத்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

****

 திருப்பரங்குன்றம் மலையில் ஆடுகோழி பலியிட தடை

 திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.. 

ஐகோர்ட் மதுரை கிளையில், ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருப்பரங்குன்றம் மலையின் உரிமையாளர் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம். மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் தர்காவிற்கு தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர மலையிலுள்ள பிற பகுதிகள் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானவை என ஆங்கிலேயர் ஆட்சியின்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். 

ஹிந்து மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் ராமலிங்கம், ‘பக்ரீத் பண்டிகையையொட்டி கோயிலுக்குச் சொந்தமான பாதையை மறைத்து நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தர்கா நிர்வாகிகள், முஸ்லிம்கள் முயற்சிக்கின்றனர். தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்,’ என பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இவ்வழக்குகளை ஏற்கனவே நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த ஜூன் 24 ல் நீதிபதி ஜெ.நிஷாபானு பிறப்பித்த உத்தரவில் ‘ அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்கிறேன்’ என்றார்.

 இதிலிருந்து நீதிபதி எஸ்.ஸ்ரீமதி மாறுபட்டு சில மனுக்களை அனுமதித்தும், சில மனுக்களை தள்ளுபடி செய்தும் ஒரு மனுவை பைசல் செய்தும் உத்தரவிட்டார். இந்த சட்டப் பிரச்னையில் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு தகுந்த உத்தரவு பிறப்பிப்பதற்காக இந்த வழக்கு 3வதாக நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. 

இதனை விசாரித்த நீதிபதி விஜயகுமார், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அதனைப் பலியிடத் தடை விதித்து உத்தரவிட்டார். அந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும் எனவும் உத்தரவில் கூறியுள்ளார்.

 ***********************

கோவில் சொத்துக்களை பத்திரப்பதிவு செய்யும் அரசாணைக்கு ஐகோர்ட் தடை

 கோவில் சொத்துக்களை பத்திரப்பதிவு செய்யும் வகையில் வெளியான அரசாணைக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது.

சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: கோவில்களுக்கு சொந்தமான பல சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவை நீதிமன்ற உத்தரவுப்படி மீட்கப்பட்டு வருகின்றன. கோவில் சொத்துக்களை பத்திரப் பதிவு செய்யும் வகையில், தமிழக வருவாய்த்துறை, புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. 

கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பதிவுத்துறையில் பூஜ்ஜியம் மதிப்பில் பதிவேற்றம் செய்ய, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை கொண்ட குழு அமைத்து அரசாணை பிறப்பிக்க, அத்துறைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

பட்டா நிலம், மானிய நிலம், ஊழியம் நிலம் என்ற வகைப்பாடுகளில் கோவில் நிலம் உள்ளது. புது அரசாணை மூலம் கோவில் சொத்துக்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். 

நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஆஜரானார்.

 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. தமிழக வருவாய்த்துறை, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை, ஹிந்து சமய அறநிலையத்துறை செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

****

திருப்பதி போல தமிழக கோவில்களில் ஆன்லைன் முன்பதிவு தரிசனம் வசதிஅரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த தாக்கலான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:

 தமிழக கோவில்களின் நிலத்தை மீட்க, கோவில் சொத்துக்களில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓய்வுபெற்ற நீதித்துறை அதிகாரிகள், அறிவு ஜீவிகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களை கொண்ட குழுவை அமைக்க வேண்டும். 

கோவில் நில வாடகை, குத்தகை, மக்கள் செலுத்தும் பூஜை கட்டணத்தை ஆன்லைனில் வசூலிக்க வேண்டும். கோவில் நிலம் மற்றும் சொத்துக்களை தனி நபர்களின் பெயருக்கு சாதகமாக மாற்றக்கூடாது.கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. நெரிசல் ஏற்படுகிறது. சபரிமலை, திருப்பதி கோவில்களில் உள்ள தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு முறை மூலம் எவ்வித தொந்தரவும் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்யலாம். 

ஊழியர்கள் பணம் வசூலித்து தரிசனம் செய்ய அனுமதிக்கும் முறைகேடுகளை தவிர்க்கலாம். தமிழகத்தின் முக்கிய கோவில்களில் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

 நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆஜரானார். நீதிபதிகள் தமிழக அறநிலையத்துறை செயலர், கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, நவ., 12க்கு ஒத்திவைத்தனர். 

****

 அடுத்ததாக ரஜினி காந்த் பயணச் செய்தி 

ரஜினிகாந்த் இமயமலை பயணம் – புகைப்படங்கள் வைரல்!

நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு பயணம் மேற்கொண்டது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

நடிகர் ரஜினிகாந்த், தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

, ரஜினிகாந்த் ஒரு வார கால ஆன்மிகப் பயணமாக இமயமலை சென்றுள்ளார். பாபா குகைக்குச் செல்லவுள்ள ரஜினிகாந்த் ஒரு வாரம் அங்குத் தங்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ரிஷிகேஷ் ஆசிரமத்தில் இருந்து ரஜினிகாந்த், பத்ரிநாத் செல்லும் வழியில் எடுக்கப்பட்ட படங்கள், இணையத்தில் வைரலாகி வருகின்றன.

****

சமயபுரம் கோயிலில் பக்தர்களை அவமதித்த பெண் ஊழியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியன் வலியுறுத்தல்!

திருச்சி சமயபுரம் கோயிலில் பக்தர்களை அவமதித்த பெண் ஊழியரை பணிநீக்கம் செய்ய வேண்டுமென இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்காக 100 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், கோயில் பெண் ஊழியர் 400 ரூபாய் கொடுத்தால் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்க முடியும் எனக் கூறி பக்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி வெளியாகி உள்ளதாகத் தெரிவித்தார்.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இதுபோன்ற நிர்வாகச் சீர்கெடுகளும், பக்தர்களை மிரட்டும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடைபெறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பக்தியை பணமாக்குவது மட்டுமே அறநிலையத்துறையின் முழு நேர வேலையாக உள்ளது எனக் கூறியுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியன், மன நிம்மதிக்காகக் கோயிலுக்கு வரும் பக்தர்களை கோயில் ஊழியர்கள் அவமதிப்பது என்பது எந்த மாநிலத்திலும் நடக்காத செயல் எனக் கூறியுள்ளார்.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எந்தக் கோயில்களிலும் இனி இது போன்ற ஊழல்களும் பக்தர்களின் அவமதிப்பு செயல்களும் நடைபெறக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இந்து பண்டிகையைச் சீர்குலைக்க இத்தனை சதி? – காடேஸ்வரா சுப்ரமணியம்


இந்து பண்டிகையைச் சீர்குலைக்க இத்தனை சதிகளா என்றும்இந்துக்கள் விழிப்புடன் செயல்பட்டு சதிகளை முறியடிக்க வேண்டும் எனவும் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டடுள்ள அறிக்கையில், இனிப்பு மற்றும் பலகாரங்களுக்குக் கட்டுப்பாடுகளை புதிதாக அறிவித்து உணவு கட்டுப்பாட்டுத்துறை மிரட்டுகிறது எனக் கூறியுள்ளார்

இந்துக்களின் பண்டிகையின்போது அரசு அதிகாரிகள் அறிவுரை, எச்சரிக்கை விடுக்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் அரசு பட்டாசு வெடிக்க அறிவித்திருக்கும் கட்டுப்பாடு, தமிழக பட்டாசு உற்பத்தி தொழிலை பாதிக்கும் என்பதை முதலமைச்சர் உணர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க நடக்கும் திட்டமிட்ட சதிகளை முறியடிக்க மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும், தமிழக அரசும் மக்களின் உணர்வுகளை மதித்துச் செயல்பட வேண்டும் எனவும் காடேஸ்வரா சுப்ரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

****

அமெரிக்காவில் மேலும் ஒரு மாநிலம் தீபாவளியை விடுமுறை நாளாக அறிவித்தது

கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி விடுமுறை!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி தினம், இனி விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படுவதாக அம்மாகாண கவர்னர் கவின் நியூசம் அறிவித்துள்ளார்.

இது இந்தியாவின் தீபாவளி பண்டிகையை, விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த அமெரிக்காவின் மூன்றாவது மாகாணமாகும்.

ஏற்கனவே பென்சில்வேனியா, கனெடிகட் மாகாணங்கள் தீபாவளியை அரசு விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்திருந்தன.

தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவிக்கும் ஏபி 268 என்ற மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அங்குத் தீபாவளி பொது விடுமுறையாகியுள்ளது.

*****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்  வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு அக்டோபர் மாதம் 19 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

வணக்கம்.

—SUBHAM—-

Tags – World Hindu News, 12-10-2025, Gnanamayam, Broadcast, Vaishnavi

ஆலயம் அறிவோம்! தேரழுந்தூர்  ஆமருவியப்பன் (Post No.15,082)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 15,082

Date uploaded in London – 13 October 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 12-10-25 ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பான உரை 

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம். 

ஆலயம் அறிவோம்! 

வழங்குவது ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்.

 வெள்ளத்துள் ஓராலிலை மேல் மேவி அடியேன் மனம் புகுந்தென்

உள்ளத்துள்ளும் கண்ணுள்ளூம் நின்றார் நின்ற ஊர் போலும்

புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடி போன காதல் பெடையோடும்

அள்ளல் செறுவில் கயல் நாடும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே

            திருமங்கை ஆழ்வார் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தமிழ்நாட்டில் குத்தாலம் வட்டத்தில் மாயவரத்திலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் இரண்டாவது ரயில் நிலையமாக அமையும் திருவழுந்தூர்  திருத்தலம் ஆகும்.  இத்தலம் தேரழுந்தூர் என்று அறியப்படுகிறது.

108 வைணவ திவ்யதேச தலங்களில் ஒன்றாக அமையும் இது பல புராணச் சிறப்புகளைக் கொண்டதாகும்.

மூலவர் : தேவாதிராஜன்.

கோசகன் என்று வடமொழியில் இப்பெருமாளைக் குறிப்பது வழக்கம். இச்சொல்லின் தமிழாக்கம் ஆமருவியப்பன் என்பதாகும். 13 அடி உயரமுள்ள சாளக்கிராமத்தில் மூலவர் விக்ரஹம் அமைந்துள்ளது. பெருமாளுடன் இங்கு பிரகலாதனும் கருடனும் உள்ளனர்.

தாயார் : செங்கமலவல்லி

உற்சவர் : ஆமருவியப்பன்

விமானம் : கருட விமானம்

தீர்த்தம் : தர்சன புஷ்கரிணி, காவேரி

இத்தலத்திற்கு வந்து காட்சி கண்டவர்கள் பலர். தர்மதேவதை, உபரிசரவசு, காவேரி, கருடன், அகத்தியர் உள்ளிட்ட பலருமாவர்.

 மூலவர், உற்சவர், தாயார் மூவரும் கிழக்கு நோக்கி இருந்து அருள்பாலிக்கின்றனர்.

மார்க்கண்டேயர் வழிபட்ட தலம் இது.

இந்தத் தலத்திற்கு பெயர் வந்தது பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு.

உபரிசரவசு என்னும் ஒரு அரசன் மிகுந்த தவ வலிமை உடையவன். அவன் தனது விமானத்தில் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் வல்லமை படைத்தவன். ஒரு சமயம் தேவர்களுக்கும் முனிவர்களும் ஒரு விவாதம் ஏற்பட்டது. அதில் ஒருதலைப்பட்சமாக உபரிசரவசு திர்ப்பளிக்க கோபம் கொண்ட ரிஷிகள் அவனை சபித்தனர். ஆகவே விமானத்துடன் அவன் கீழே விழுந்தான். இந்தத் தலத்தில் உள்ள குளத்தில் அவன் தேர் அழுந்தியமையால் இதற்குத் தேரழுந்தூர் என்ற பெயர் ஏற்பட்டது.

கிருஷ்ணாரண்யம் என்று புராணம் இந்தத் தலத்தைக் குறிப்பிடுகிறது.

தேவேந்திரன் ஒரு சமயம் கருடனை அழைத்து ஒரு வைர முடியினையும் ஒரு விமானத்தையும் தந்து அவைகள் எந்தப் பெருமாளுக்கு உகந்தவைகளோ அங்கு சென்று அவரவரிடம் சேர்ப்பிக்குமாறு வேண்டினான். அதன் படி மைசூரில் உள்ள செல்லப்பிள்ளை பெருமாளுக்கு வைர முடியினையும் இங்குள்ள தேவாதிராஜனுக்கு விமானத்தையும் கருடன் அளித்தார். இதனால் மகிழ்ந்த பெருமாள் கருடனைத் தன் பக்கத்திலேயே அமர்த்திக் கொண்டார்.

இத்தலத்தைப் பற்றி விஷ்ணுபுராணம் சிறப்பான ஒரு வரலாற்றைக் கூறுகிறது.

கோகுலத்தில் கோபாலர்களுடன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த கண்ணன் ஒரு நாள் பசுக்களை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு யமுனை நதிக்குச் சென்றான். அப்போது அங்கு வந்த பிரம்மா பசுமந்தையை தேரழுந்தூருக்கு ஓட்டி வந்து விட்டார். இதனை அறிந்த கண்ணன் உடனே அதே போன்ற பசுமந்தையை அவ்விடத்திலேயே உடனே படைத்து விட்டான். தன் தவறை உணர்ந்த பிரம்மா கண்ணனிடம் மன்னிப்பு வேண்ட கண்ணனும் அருளினான். பிரம்ம தேரழுந்தூரில் கோவில் கொள்ள வேண்டுமென்று வேண்ட, அதை ஏற்ற கண்ணன் இங்கு வந்து அருள்பாலிக்க ஆரம்பித்தான்.

இதைத் தெரிவிக்கும் வண்ணம் உற்சவப் பெருமாளுக்கு முன்புறம் கன்றும் பின்புறம் பசுவும் அமைந்துள்ளது.

இன்னொரு வரலாறும் உண்டு. சிவனும் பெருமாளும் ஒரு முறை சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். பார்வதி தேவி நடுவராக இருந்தார். காய் உருட்டும் போது குழப்பம் வர பார்வதி தேவி பெருமாளுக்கு சாதகமாக தீர்ப்பை அளித்தார். இதனால் வெகுண்ட சிவபிரான் பார்வதி தேவியை பசுவாக மாறும்படி சாபமிட்டார். பார்வதி பசுவாக மாற துணைக்கு சரஸ்வதியும் லட்சுமியும் பசுவாக மாறி கூடவே வந்தனர்.  இவர்களை மேய்ப்பவராக “ஆ”-மருவியப்பன் என்ற பெயருடன் பெருமாள் வந்தார். இத்தலத்தில் கோயில் கொண்டார்.

தமிழர் தம் வரலாற்றில் சங்க இலக்கியத்தில் புறநானூற்றுப் பாடலகள் 65, 325,395 ஆகிய பாடல்கள் முதல் கரிகாலன் இந்த ஊரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டதையும், நீடாமங்கத்திற்கு அருகில் உள்ள வெண்ணிப் பறந்தலையில் பதினோரு குறு நிலமன்னர்களையும், சேர, பாண்டியரையும் போரிட்டு வென்றதையும் குறிப்பிடுகின்றன.

மொத்தம் 11 சந்நிதிகள் இங்கு உள்ளன. கோயிலின் எதிரே திருக்குளம் உள்ளது.

இந்தத் தலத்தில் திருமங்கையாழ்வார் 45 பாசுரங்கள் அருளி மங்களாசாசனம் செய்துள்ளார். மணவாளமுனிகளும் தேவாதிராஜனை மங்களாசாசனம் செய்துள்ளார்.

திருவழுந்தூருக்கு இன்னொரு மகத்தான சிறப்பும் உண்டு. இங்கு தான் ராமாயணத்தைப் படைத்த கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்தான்.

கம்பருக்கும் அவர் மனைவிக்கும் இங்கு கோவிலில் சிலைகள் உள்ளன.

கம்பன் பிறந்த ஊர், காவிரி தங்கும் ஊர்

கும்பமுனி சாபம் குலைந்த ஊர் செம்பதுமத்

தாதகத்து நாண்முகனும் தாதையும் தேடிக் காணா

ஓதகத்தார் வாழும் அழுந்தூர் என்ற புலவர் புராணப் பாடல் இப்படி இந்த ஊரின் சிறப்பைத் தெரிவிக்கிறது.

இங்கு காணப்படும் கம்பர் மேடு என்ற பகுதியே கம்பன் வாழ்ந்த இடமாகக் கருதப்படுகிறது.

இப்போது இந்த இடத்தில்  ஒரு அழகான மண்டபம் கட்டி கம்பன் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.

‘திருமணத் தடையை நீக்கும் தலமாகவும் இது திகழ்கிறது.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் தேவாதி ராஜப் பெருமாளும் செங்கமலவல்லித் தாயாரும்

அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

**

ஜென் எக்ஸ், மில்லென்னியல்ஸ், ஜென் இஸட், ஜென் ஆல்ஃபா, ஜென் பீடா? என்னங்க இது? இவர்கள் எல்லாம் யாருங்க?! (Post.15,081)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,081

Date uploaded in London –   13 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

16-7-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

ஜென் எக்ஸ்மில்லென்னியல்ஸ்ஜென் இஸட்ஜென் ஆல்ஃபாஜென் பீடாஎன்னங்க இதுஇவர்கள் எல்லாம் யாருங்க?! 

ச. நாகராஜன் 

உனக்கு ஜென் பீடா பிறந்து விட்டதா என்று மில்லென்னியல் ஜென் எக்ஸைப் பார்த்துக் கேட்க ஆம் என்று அவள் பதில் கூறியவுடன் சைலண்ட் ஜெனரேஷன் அடைந்த சந்தோஷத்தைப் பார்க்க வேண்டுமே, அடடா, அப்படி ஒரு சந்தோஷம் ஏற்பட்டது!

என்ன புரியவில்லையா,

அதற்குத் தான் காலத்தோடு வேகமாக ஓடி எல்லாவற்றையும் அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்பது! இல்லையெனில் இந்தக் காலத்து இளைஞர்கள் பேசுவதும் புரியாது,

பேப்பரை எடுத்துப் படித்தால் அதில் வரும் இந்த மாதிரியான வார்த்தைகளின் அர்த்தமும் புரியாது.

சரி, இப்போது சைலண்ட் ஜெனரேஷன் முதல் ஜென் பீடா வரை ஒரு அலசல் ஆராய்ச்சி செய்து விடுவோமா?

 சைலண்ட் ஜெனரேஷன் Silent Generation (1928 – 1945)

1928லிருந்து 1945 முடிய பிறந்தவர்கள் சைலண்ட் ஜெனரேஷன் என்ற பெயரைப் பெற்றுள்ளனர். 1951ல் முதன் முதலாக டைம் பத்திரிகை இவர்களுக்கு இப்படி ஒரு பெயரை வழங்கியது, 2022ல் இவர்கள் ஜனத்தொகையில் 7% ஆக இருந்தனர். இவர்கள் பண விஷயத்தில் ரொம்ப உஷாரான பேர்வழிகள்!

 பேபி பூமர்ஸ் Baby Boomers (1946 – 1964)

1946லிருந்து 1964 முடிய பிறந்தவர்களுக்கு பேபி பூமர்ஸ் என்று பெயர்.

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் குழந்தைகளின் எண்ணிக்கை பெருக ஆரம்பித்தது. அமெரிக்காவில் மட்டும் 2019 கணக்கெடுப்பின் படி பேபி பூமர்ஸின் எண்ணிக்கை ஏழு  கோடியே பதினாறு லட்சம்!

சென்ற பத்தாண்டுகளாக, “ஓகே, பூமர்” என்ற வார்த்தை இவர்களைக் குறித்து அடிக்கடி பயன்படுத்தப்பட்டது.

 ஜென் எக்ஸ் Gen X (1965 – 1980)

 1965லிருந்து 1980 முடிய பிறந்தவர்களுக்கு ஜென் எக்ஸ் என்று பெயர். ஜனத்தொகை கணக்குப்படி பார்த்தால் இவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. கோல்ட் வார் எனப்படும் பனிப்போருக்குப் பின் பிறந்தவர்கள் இவர்கள்.

வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையே ஒரு சரிசமனான பாதையை வகுத்துக் கொண்டவர்கள் இவர்கள்!

 மில்லென்னியல்ஸ் அல்லது ஜென் ஒய் Millennials (1981 – 1996)

1981லிருந்து 1996 முடிய பிறந்தவர்கள் மில்லென்னியல்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தப் பெயர் எப்படி வந்தது என்றால் 1981ல் பிறந்தவர்கள் 2000ம் ஆண்டு தொடங்கப்பட்டபோது புதிய சகாப்தத்தில் அடி எடுத்து வைத்ததையொட்டி இந்தப் பெயர் பிறந்தது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலில் மாட்டி வாழ்க்கையில் கஷ்டப்பட்ட துரதிர்ஷ்டசாலிகள் இவர்களே! எந்த புதிய தொழில்நுட்பத்திற்கும் இவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொண்டனர்.

 ஜென் இஸட்  (Gen Z 1997-2011)

1997லிருந்து 2012 முடிய பிறந்தவர்களுக்கு இந்தப் பெயர் தரப்பட்டுள்ளது. இவர்களுக்கு இண்டர்நெட், சோஷியல் மீடியா, புது தொழில்நுட்பங்கள் எல்லாம் அத்துபடி. இவர்களுக்கான இன்னொரு பெயர் ஜூமர். (zoomer).

தொழில்நுட்ப முன்னேற்றம் தான் தங்களை மற்றவர்களிடமிருந்து இனம் பிரித்துக் காட்டுகிறது என்கிறார்கள் ஜூமர்கள்!ஜென் இஸட் காரர்களுக்கு சமூக நீதி அத்துபடி. அரசியலும் உள்ளங்கையில்!

 ஜென் ஆல்ஃபா (Gen Alpha 2011 – 2014)

2011லிருந்து 2014 முடிய பிறந்தவர்களுக்கு ஜென் ஆல்ஃபா என்று பெயர். இவர்களுக்கு  ஜென் இஸட் காரர்களை விட டிஜிடல் திரைப்படங்கள் அத்துபடி. ஜென் இஸட்காரர்கள் ஜென் ஆல்ஃபாக்களை ரொம்பவே ஸ்க்ரீன் டைம் எடுத்துக் கொள்கிறார்கள் என்று புகார் செய்கின்றனர். ஆகவே இவர்களுக்கு ஐ பாட் கிட்ஸ் (“iPad kids”) என்று பெயர்!

ஜென் பீடா (Gen Beta 2025லிருந்து பிறப்பவர்கள்)

2025 ஜனவரி முதல் தேதியிலிருந்து பிறப்பவர்களுக்கு ஜென் பீடா என்று பெயர். 2039 வரை பிறப்பவர்களுக்கு இந்தப் பெயர் நீடிக்கும். இவர்களுக்கு கை கொடுக்கப் போவது ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் என்னும் செயற்கை நுண்ணறிவும் ஸ்மார்ட் டிவைஸஸ் எனப்படும் அதி நவீன சாதனங்களும் தான்! இவர்கள் க்ளைமேட் மாறுதலால் பாதிக்கப்பட்டாலும் படலாம்!

 இப்படிப் பல பெயர்கள்! இது தான் இன்றைய உலகப் போக்கு!

 இனிமேல் நீங்களும் இப்படி அவரவர் பிறந்த வருடத்திற்குத் தக்கபடி பெயரிட்டு அவர்களைக் கூறலாமே!

 என்ன ஜென் இஸட், சரி தானே!

**

Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்—11 (Post No.15,080)

கடோத்கஜா

 சகுனி

Written by London Swaminathan

Post No. 15,080

Date uploaded in London –  12 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 WAYANG PUPPET SHOW FROM INDONESIA CONTINUED…………………

 க்ருபா, த்ருஷ்டத்யும்னா, திரெளபதி, சகுனி, கடோத்கஜா ,சிகண்டி 

இந்தோனேஷியா நாட்டின் வயங் பொம்மலாட்டம் 

PART ELEVEN

நேற்று வெளியான படங்கள் தொடர்பான மஹாபாரத கதாபாத்திரங்களைச் சுருக்கமாகக் காண்போம் : பரீக்ஷித், ஜெயத்ரத,  கிருதவர்மா,இந்திரன்,  பூரிச்ரவா

You have seen the pictures of Parikshit, Jayadratha, Kritavarma, Indra and Burishrava yesterday.

திரெளபதி

PARIKSHIT– Posthumous son of Abhimanyu. When he was in the womb of his mother Uttara , Krishna saved him from the weapon of Ashwaththama. When Parikshit went on a hunting expedition he threw a dead snake on the meditating rishi Shamika. His son Shrungi cursed him that he would be killed within seven days by snake king Takshaka naga. Before he died, Shuk , son of Vyasa recited him Bhagavata purana.

பரீக்ஷித்

அபிமன்யு – சுபத்ராவுக்குப் பிறந்தவர் பரீக்ஷித் . சுபத்ராவின் கர்ப்பத்தில் இருக்கும்போதே அபிமன்யு , யுத்தத்தில் இறந்தார் . பரீக்ஷித் மூலமாக சந்திர வம்சம் பிழைத்தது  ஆயினும் அரசனாக இருந்த காலத்தில்  காட்டிற்கு வேட்டையாடச் சென்றபோது  ஷமிகா  என்ற ரிஷியின் மேல் செத்த பாம்பினைத் தூக்கி எறிந்தான். இதைக்கண்டு ஆத்திரம் அடைந்த ரிஷியின் மகன் ச்ருங்கி, ஏழே நாட்களுக்குள் பாம்பினால் கடிபட்டு மன்னன் இறப்பான் என்று சபித்தான். அதன்படியே தக்ஷ நாகன் கடித்தவுடன் பரீக்ஷித் இறந்தான் அந்த ஏழு நாட்களில் வியாசரின் மகன் சுகர், அவனுக்கு பாகவத புராணத்தை விரித்துரைத்தார்

***

 சிகண்டி 

JAYADRATHA– INDUS VALLEY KING-King of Sindhu Desa. Husband of Duschala, sister of Duryodhana . Once he tried to kidnap Draupadi, but Pandavas spoiled it. He did severe penance and asked Mahadeva for a boon to defeat all the Pandavas. Mahadeva told him he would be able to defeat Pandavas except Arjuna. On the fourteenth day of Mahabharata war Krishna created darkness by concealing sun with his Wheel . Thinking that the day’s fighting was over Jayadratha appeared without weapons. Arjuna killed him at once. Scholars believe that Krishna knew about the impending solar eclipse on that day and used it. This episode of Solar eclipse is in Sangam Tamil book Purananuru verse 174. The war took place on alternate days.

ஜெயத்ரதன்

சிந்து தேச மன்னன்; துரியோதணனின் சகோதரி துஸ்சலாவின் கணவன் ; அவன் மஹாதேவனிடம், பாண்டவர்களை அழிக்க வரம் கேட்டபோது , அர்ஜுனனைத் தவிர அவன் வேறு எல்லோரையும் வெல்லலாம் என்று வரம் கொடுத்தார். பதினாலாவது  நாள் யுத்தத்தில் கிருஷ்ண பகவான் தனது சக்கரத்தால் சூரியனை மறைக்கவே யுத்தம் முடியும் மாலை நேரம் வந்து விட்டது என்று எண்ணி, ஜயத்ரதன் பாதுகாப்பின்றி வெளியே வந்த போது, இருள் நீங்கியவுடன் அர்ஜுனன் அவனைக் கொன்றான் ; மகாபாரத யுத்தம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடந்ததால் அந்த நாள் சூரிய கிரகணம் நடந்திருக்கலாம் என்பது சில ஆராய்ச்சியாளரின் கருத்து.. இந்த நிகழ்ச்சி சங்க இலக்கிய புறநானூற்றுப் பாடலிலும் (174) உள்ளது  

***

KRTIAVARMA– a Yadava of the Bhoja lineage. Son of Hradika. In the Mahabharata war,  he fought on the Kaurava side as one of the 11 commanders. At the end of the war, only three of the commanders including him survived. He was against another Yadava commander Satyaki who fought on the Pandava side. Years after the war all Yadava leaders assembled in Dwaraka. During a drinking party they fought among themselves and all of them were killed.

கிருதவர்மா

கெளரவர்களின் பதினோரு படைத் தளபதிகளில் ஒருவர்; பாரத யுத்தத்தின் முடிவில் தப்பிப் பிழைத்த மூன்று தளதிகளில் கிருத வர்மாவும் உள்ளார் . பாரத யுத்தம் முடிந்து நீண்ட காலம் ஆனபோது துவாரகா கடற்கரையில் யாதவர்கள் குடித்துவிட்டச் சண்டை செய்தனர் அதில் கிருதவர்மா, யாதவ தலைவர் சாத்யகி முதலியோர் இறந்தனர்.

***

த்ருஷ்டத்யும்னா

BHURISHRAVA – he was one of the 11 commanders of the Kaurava army. His arch enemy was Satyaki. He caught hold of Satyaki in the battle field and was about to cut his head with his right hand. At that time Arjuna came to help Satyaki and cut off Bhurishrava’s right hand. Saying this was against the rules of war he sat in the middle of the battle field and did Satyagraha. But Satyaki cut off Bhuri’s head without any hesitation.

பூரிஸ்ரவன் .

போர்க்களத்தில் சத்யாக்ரஹம் செய்த முதல் அரசன். சந்தனுவின் சகோதரன் பாஹ்லிக. அவனுடைய புதல்வன் பூரிஸ்ரவன் . கெளரவர்களின் 11  படைத்தளபதிகளில் ஒருவன்; சாத்யகி அவனுடைய பரம எதிரி;  சாத்யகியைப் போர்க்களத்தில் பிடித்து இடது கையால் குடுமியைப் பிடித்து வலது கையால் வெட்டப்போனபோது அரஜுனன் பூரிச்ரவனனின் வலது கையை வெட்டினான். இது போர் விதிகளுக்கு முரணானது என்று சொல்லி ஆயுதங்களைத் தூக்கி எறிந்துவிட்டுப் போர்க்களத்தில் அமர்ந்து சத்யாக்ரஹம் செய்தான்.

சாத்யகி  எழுந்து வந்து பூரிஸ்ரவன் தலையைச் சீவினான்.

****

INDRA : Arjuna was born to Kunti with the grace of Indra. During the war Karna announced that he would donate anything to Brahmins. Just to save his son Arjuna, Indra went in the guise of a Brahmin and asked for his armour. Karna gave it to him without any hesitation. At the end it cost his life;  Karna was killed by Arjuna.

இந்திரன்

இந்திரனின் மந்திரத்தை ஜபித்து கர்ப்பம் அடைந்த குந்தி அர்ஜுனனைப்  பெற்று எடுத்தாள்;  போர் துவங்கும்போது பிராமணர்கள் எல்லோருக்கும் கர்ணன் தானம் வழங்கினான். இந்திரன் தனது மகன் அர்ஜுனனைக் காப்பாறுவதற்காக பிராமணர் வேடத்தில் சென்று கர்ணனின் கவச குண்டலங்களைத் தானமாகப் பெற்றான். அவை கர்ணனிடம் இருந்தால் அவனை யாரும் வெல்ல முடியாது 

 க்ருபா

To be continued…………………………..

TAGS-WAYANG PUPPET SHOW, INDONESIA,  Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்11 , சிகண்டி ,

இந்தோனேஷியா, வயங் ,பொம்மலாட்டம் 

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL இந்துமத கலைச்சொல் அகராதி -Part 3 (Post No.15,079)

Written by London Swaminathan

Post No. 15,079

Date uploaded in London –  12 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Words are compiled in English Alphabetical order.

பகுதி  மூன்று 

பாஷ்யம் – உரை ; உ.ம்.ஆதி சங்கரர் உபநிஷத் , பகவத் கீதை, விஷ்ணு சஹஸ்ரநாமம் முதலிய நூல்களுக்கு பாஷ்யம் எழுதினார் .BHASHYAM- bhaashyam–Commentary on religious scriptures such as Shankara’s Bhaashyam on Upanishads and Bhagavad Gita.

***

பிரம்மச்சர்யம் – மாணவப் பருவம் ; மனம், மொழி மெய் ஆகிய மூன்றினாலும் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தும் பருவம்; முன் காலத்தில் ஆசிரியர் வீடு அல்லது அவருடைய ஆஸ்ரமத்தில் தங்கி அவருக்குப் பணிவிடை செய்து படித்து முடித்த பருவம் .

BRAHMACHARYA- Total discipline to master the Vedic studies; Brahma here means Vedas. Brahmacharya also denotes strict chastity. Celibate; Brahmacharya asrama- student hood.

***

பிரம்மசாரி – முறையாக கல்வி கற்றவன் மாணவன்; பெண்களைப்பற்றி நினைக்காத பருவம் .காம உணர்வு இல்லாதவன் உபநயனம் முடித்த பின்னர் 12 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாகப் படிப்பது.

BRAHMACHAARIN- Student who learns Vedas after Upanayana. He used to stay with the teacher at his residence or Ashram and finish the studies in 12 years or more.

***

பிரம்மன்பிரம்மம் – இறைவன் ஆண், பெண் என்ற வேறுபாடில்லாத கடவுள்

BRAHMAN- The Supreme Godhead; the Ultimate Reality; Genderless; Saguna Brahman – with attributes; Nirguna Brahman- without any attributes; unconditioned.

சகுனப்பிரம்மம் – குணங்கள், உருவம் முதலிய அம்சங்கள் உடைத்து ; நிர்குணப் பிரம்மம் – குணங்களுக்கு அப்பாற்பட்டது; இல்லாதது.

***

பிரம்மா– த்ரிமூர்த்திகளில் ஒருவர் ; படைக்கும் தொழிலைச் செய்பவர் ; த்ரி மூர்த்திகள்- பிரம்மா, விஷ்ணு, சதாசிவன். தாணுமாலயன் சிவன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்)

BRAHMA- One of the Trimurthis; He is in charge of Creation . Trimurtis- Three Gods: Brahma, Vishnu, Sadashiva.


***

பிரம்மோபதேசம்  – பூணுல் அணிவித்து காயத்ரி மந்திரத்தை தந்தையிடமிருந்து பெரும் வைபவம்;  பிராமணர் , க்ஷத்ரியர் வைசியர் ஆகிய மூன்று வர்ணத்திற்கும் உண்டு . தற்காலத்தில்  பிராமணர்கள்  மட்டுமே  பின்பற்றும் சடங்கு ; ஐந்து அல்லது ஏழு வயதுக்குள் காயத்ரியை மந்திர உபதேசம் பெற வேண்டும்.

BRAHMOPADESA- Instruction in the Vedas or Sacred Knowledge. It usually means imparting of Gayatri Mantra during the Upanayana ceremony; Upanayana is wearing sacred thread. Father says/teaches the Gayatri mantra to his son.

***

பகவான் – கடவுள், இறைவன், ஆண்டவன் ; ஆறு குணங்கள் நிரம்பியவன் ;  அவையாவன –  புகழ், செல்வம், அறம்/தர்மம், அறிவு, அழகு, பற்றின்மை

BHAGAWAN- God, One who is possessor of Six Great Qualities: Fame, Wealth, Dharma, Knowledge, Beauty and Detachment

***

பிருந்தாவனம் – உத்தர பிரதேசத்தில் மதுரா ஜில்லாவில் உள்ளது ; கிருஷ்ணன் பிறந்து விளையாடிய (கோகுலம்) இடம் . பிருந்தா என்றால் துளசி. வைணவப் பெரியார்கள் இறந்தால் அவருடைய உடலையோ சாம்பல் முதலிய சின்னங்களையோ புதைத்த இடத்தில் துளசிச் செடியை வளர்த்து பிருந்தாவனம் என்பார்கள் ; சைவப்பெரியார்கள் இறந்தால் அங்கே வில்வ  மரம் வைத்தோ அல்லது சிவலிங்கம் வைத்தோ அதிஷ்டானம் என்பர்.

BRINDAVAN/VRNDAVAN- Krishna’s birth place is in Mathura District of Uttarpradesh. Forest near Gokula; Brinda means Tulsi plant (holy Basil).If any Vaishnavie saint dies, holy basil plant is raised and worshipped where his body was interred. If a Saivite ascetic is interred Vilva plant or Shiva Linga is installed and it is called Adhistanam

***

பாரதம் – 1.மஹா பாரதம் ; 2.இந்தியா என்னும் நாடு; சகுந்தலை பெற்ற பரதன் ஆண்ட பூமி என்பதல் பாரத நாடு என்பார்கள்.

இந்திய நாணயங்களிலும் தபால்தலைகளிலும் பாரத் என்ற சொல்லே இருக்கும். மஹாபாரத ஆதி பர்வ ஸ்லோகமும் பரதனுக்கு முன்னர் பிறந்தோரும் பின்னர் பிறப்போரும் அவன் பெயராலேயே அழைக்கப்படுவார்கள் என்று சொல்கிறது.

***

BHARAT- bhaarat – Mahabharat ; also India’s ancient name is Bharat; even now Indian stamps and coins have tis word.

Shakuntala’s son was Bharata. It is after him this country is called Bhaaratam.

All those born in this land before BHARATA,

All those born after, are called after his name

-Mahabharata 1-69-49

***

பாகவதம் -பதினெட்டு புராணங்களில் ஒன்று ; கிருஷ்ணரின் வாழ்க்கைச் சரிதம் முழுதும் உள்ள நூல். இதை ஏழு நாட்களில் முழுதும் படிப்பதை பாகவத சப்தாஹம் என்பர் ; நாடு முழுதும் இன்றும் இந்த முற்றோதல் நடைபெற்று வருகிறது .

BHAGAVATAM- bhaagavat – One of the Eighteen Puranas. It narrates Lord Krishna’s Life. Reading it in full in seven days is called Bhavata Saptaaham. It is done by devotees all over India.

To be continued…………………

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL ,இந்துமத கலைச்சொல் அகராதி, Part 3, பாகவதம் பகவான், பாரத, பாரத், பிரம்மச்சர்யம், பிரம்மம், பிரம்மா

சிரிக்கும் மனமே சிறந்த மனம்! (MENTAL FITNESS) (Post No.15,078)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,078

Date uploaded in London –   12 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

15-7-2025 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

MOTIVATION

சிரிக்கும் மனமே சிறந்த மனம்! (MENTAL FITNESS) 

ச. நாகராஜன்             

உடல் பயிற்சி போல மனப் பயிற்சியும் மிக முக்கியமானது தான்! 

சிரிக்கும் மனமே சிறந்த மனம்!

அது என்ன சிரிக்கும் மனம்?

சுருக்கமாக இதை MENTAL FITNESS என்று சொல்லலாம்! 

இதை ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் மிகச் சிறப்பாக அமையச் செய்வது தான் என்று சொல்லலாம்!

 உங்களைச் சுற்றி நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை நீங்கள் எப்படி எதிகொள்கிறீர்கள்? 

எரிச்சலுடனா? ஏமாற்றத்துடனா? கோபத்துடனா? திருப்தியுடனா? மகிழ்ச்சியுடனா?

 MENTAL FITNESS இருந்தால் எந்த நிலையையும் சிரித்த முகத்துடன் எதிர் கொள்வீர்கள். MENTAL FITNESS  என்பது சிரித்த மனதுடன் எப்போதும் இருப்பது தான்! 

இதற்கும் உடல்பயிற்சி போல மனப் பயிற்சி தேவை!

 நம்மைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் திறம்பட மனம் நோகாது எதிர்கொள்ளும் திறமை…….

முடிவுகளை எடுக்கும் போது நமக்கு பிரச்சினைகளைத் தீர்க்கும் திறமையும் படைப்பாற்றல் மனமும் வேண்டும்.

 மற்றவர்களுடன் மிக அருமையான ஒரு தொடர்பை எப்போதும் கொண்டிருக்க வேண்டும்.

 நமது பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை உணர்வதோடு அதனால் சமுதாயத்தில் மதிப்பு மிக்க ஒரு இடத்தைப் பிடிக்கும் திறமைகளை வளர்க்க வேண்டும் 

செயல்படும் போதும் ஓய்வாக இருக்கும் போதும் தூங்கும் போதும்

நமது மனதையும் உடலையும் அரவணைத்துச் சிறப்பாக வைத்திப்பதற்கான திறன்கள் வேண்டும். 

MINDFULNESS என்று சொல்கிறோமே அதையும் தாண்டி ஒரு படி மேலே போய் நமக்கு இருக்கும் மனம் சம்பந்தப்பட்ட கருவிகளுடன் அவற்றைச் சரியாகச் செயல்படுத்தும் உன்னதமான ஒரு வாழ்க்கையை அமைப்பது தான் ஸ்மைலிங் மைண்ட் அதாவது MENTAL FITNESS. 

சரி, இதை எப்படி நாம் பயிற்சி செய்து மாஸ்டர் ஆவது?

இதோ வழிகள்:

 ஒவ்வொரு எண்ணமும் உண்மை என்றோ அல்லது உதவிகரமான ஒன்று என்றோ நம்பி விடாதீர்கள். 

ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் நாற்பதினாயிரம் எண்ணங்களை நாம் எண்ணுகிறோம். எல்லாமே உண்மை அல்ல; உதவி செய்வதும் இல்லை. ஆகவே எதிர்மறை எண்ணங்களை இனம் கண்டு அவற்றின் உண்மைத் தன்மையையும், நம்பகத்தன்மையையும் கேள்வி கேட்டு அலசி ஆராயுங்கள்.

 ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தாலும் சீக்கிரமே நெகடிவ் எண்ணங்களை அண்டவிடாமல் செய்து விடலாம்.

 தியானம் மனதை ஒருமுகப்படுத்தும். சிந்தனையை நல்ல விதமாகத் தூண்டும்.

 கவலைப்படும் போதோ அல்லது மன அழுத்தம் ஏற்படும் போதோ உங்கள் சிந்தனை உங்களை எப்படியெல்லாம் பயமுறுத்தி கடைசி எல்லைக்கு இட்டுச் செல்கிறது பார்த்தீர்களா? உடனடியாக மனதை இந்தக் கணத்திற்கு அழைத்து விடுங்கள். ஐந்து புலன்களையும் நிகழ்காலத்தில் இருக்க வையுங்கள். மனதை ஆக்கபூர்வமான சிந்தனைக்குத் திருப்புங்கள்.

 சரியான திருப்திகரமான ஓய்வு மூளைக்குத் தேவை. ஓய்வு எடுத்தால்  நமது திறமை குறைவாக மதிப்பிடப்படுமோ என்று பயப்பட வேண்டாம். ஓய்வு நமது படைப்பாற்றலை மேம்படுத்தும். புத்திகூர்மையை அதிகரிக்கும். ஆற்றலைக் கூட்டும்.

 சோம்பேறித்தனத்தை உதறி சரியான ஓய்வு எடுக்க பயிற்சி தேவை.

 எத்தனை எத்தனை மெஸேஜ்கள்?எத்தனை எத்தனை சோஷியல் மீடியா அழைப்புகள்! எத்தனை தேவையற்ற யூ டியூப் காட்சிகள், மின்னஞ்சல்கள்…. இவற்றைத் துடைத்து எறிவதே ஒரு பெரிய வேலை. இதில் அன்றாட குட் மார்னிங் வேறு பலரிடமிருந்து!!!

 இவற்றைத் தவிர்க்க பல வழிகள் உள்ளன. அவற்றைக் கற்றுக் கொள்ளலாம்.

 அன்றாடத் தூக்கம் மிக மிக இன்றியமையாதது. ஒரே நேரத்தில் படுத்து ஒரே நேரத்தில் எழுந்து விடும் பழக்கம் மிக மிக அருமையான ஒரு பழக்கம். அது உடலையும் மனதையும் ரீ சார்ஜ் செய்யும் நேரம்.

 அன்றாடம் ஒரே மாதிரியாகச் செய்யும் சடங்குகளை விட்டு விட்டு சற்று மாற்றி புதிய வழிகளையும் தொடர்புகளையும் கொள்ளலாம்.

ஒரே ரூட்! ஒரே ஷெட்யூல்… இதைச் சற்று மாற்றுங்கள்.

 சிறிது காலப் பயிற்சிக்குப் பின்னர் உங்கள் மனம் சிரிக்கும்.

 அந்த சிரிக்கும் மனம் தான் MENTAL FITNESS!!

***

Ancient Tamil Encyclopaedia- Part 20; One Thousand Interesting Facts! -Part 20 (15,077)

Written by London Swaminathan

Post No. 15,077

Date uploaded in London –  11 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Akananuru (naanooru) wonders continued……………….

எழுத்துடை நடுகல்

Part twenty

Item 125

Interesting customs found in Akananuru:

Coastal fisher woman worshipping Vedic God Varunan by planting Shark fin bone.

Brahmins sent as messengers as told by Tolkappiar.

Women counting days by marking on the wall;

People are listening to lizard clicks to find out good and bad things to come;

Women worshipping crescent moon;

Girls making false cries to attract male youths; Tamil word Venkai stands for both  tiger and a tree. Girls shout Venaki, Venaki and the youths come running to save them; and the girls laugh at the youths; but one or two youths will be trapped by the tricky girls.

Women’s games are described in several poems: they played with crabs, chased parrots from the paddy fields; built sand castles;

Soldiers worship hero stones before going to battlefield.

Soldiers look for good omens before marching;

Brahmins who dot follow Vedic rituals make bangles by cutting conches.

Bride is bathed by Four Sumangalis who gave birth to children;

Cowherds take food/ pack lunch in bamboo holes and tie them on the neck of the cow;

Placing spear and other instruments used by a hero near the Hero stones.

Coastal people taking salt bags on the back of the donkeys for selling.

***

126

There are more interesting details ; we will look at them now:-

Three Akam poems (53, 67 and 269; also Ainkuru.352) tell us about the Hero stones with Tamil inscriptions. But until very recently such ancient stones were not discovered. So archaeologist K V Sundararajan raised doubts about the age of such poems. At that time the oldest hero stone was dated Sixth century CE. But in 2006 newspapers reported Hero stones with Brahmi letters and experts placed them in BCE period. Old Brahmi inscriptions never mentioned dates, and they were very short. And so, we need more clearcut evidence for Hero stones with Tamil inscription.

Tamils have the habit of pushing all the Brahmi inscriptions to fourth century BCE which is ridiculous. Asoka’s brahmi inscriptions are very long with lot of information, where as Tamil Brahmi inscriptions are not only very short but also in Prakrit or colloquial , ungrammatical Tamil .So they must be later than , much more later than Asoka’s inscriptions.

We know that Orissa king Kharavela marched into Pandya country and defeated the Pandya king according to Hathikumbha cave inscriptions in Orissa. On another side, Mauryans laid road routes in Western Ghats and marched towards or into Tamil Nadu according to Mamular’s Sangam verses. But in that part, that is Karnataka- Tamil Nadu border, we don’t find hero stones with inscription. From Pallava period only we get inscriptions. Jains must have brought it into Tamil nadu. That shows northern origin of Brahmi script.

Karnataka has more documented hero stones than Tamil Nadu. Nearly 3000 hero stones are in Karnataka from sixth century CE

The big question about Tamil Brahmi inscriptions is why didn’t Tamils write legibly like Asoka?

Why didn’t Tamils write at least three lines?

Why do we have to guess the meaning and put words into the mouths of dead people?

Even the very late sixth century CE ones don’t have long sentences.

My guess is Tamils did not practise writing on stones or on any material until sixth or seventh century. Even Lord Shiva’s letter to Cheraman (Kerala King) belongs to post Sangam period.

Some of the references to Hero stones with writings on it:–

விழுத்தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர் 

எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும்

அருஞ்சுரக் கவலை நீந்தி என்றும்,- Akam 53

****

அரம் போழ் நுதிய வாளி அம்பின், 

நிரம்பா நோக்கின் நிரையங்கொண்மார்,

நெல்லி நீளிடை எல்லி மண்டி

நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்

பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்

பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்  Akam- 67

***

ஏறுடை இனநிரை பெயரப்; பெயராது

செறிசுரை வெள்வேல் மழவர்த் தாங்கிய

தறுக ணாளர் நல்லிசை நிறுமார்,

பிடிமடிந் தன்ன குறும்பொறை மருங்கின்,

நட்ட போலும் நடாஅ நெடுங்கல்

அகலிடம் குயின்ற பல்பெயர் மண்ணி,

நறுவிரை மஞ்சள் ஈர்ம்புறம் பொலிய- Akam 269

***

My old articles

Hero Stone Worship in North India (Post No.4286)

Date:9 October 2017; Post No. 4286

***

HERO STONES ON SEA BATTLES (Post No.5163)

Date: 29 JUNE 2018

Post No. 5163

***

To be continued………………………

Tags- Hero stones, with Inscriptions,எழுத்துடை நடுகல், Tamil Encyclopedia, Part 20