Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great
ஸ்காட்லாந்து நாவல் ஆசிரியர் SIR WALTER SCOTT சர் வால்டர் ஸ்காட்
பிரிட்டனிலுள்ள ஸ்காட்லாந்தைச் சேர்ந்த நாவல் ஆசிரியர், கவிஞர் வால்டர் ஸ்காட் SIR WALTER SCOTT ஆவார் பல காதல் கதைகளையும், துணிகர, சாகசக் கதைகளையும் எழுதியவர். இவருடைய எழுத்துக்கள் இவருக்குப் பின்னர் வந்த அலெக்சாண்டர் துமா, அலெக்சாண்டர் புஷ்கின், கூப்பர் முதலியோர் எழுதிய வரலாற்றுப் புதினங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தின.
ஸ்காட் , எடின்பர்க் EDINBURG நகரில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு வழக்கறிஞர். தாயார் ஒரு டாக்டரின் மகள். எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 26 வயதில் திருமணம் செய்துகொண்டு ஐந்து பிள்ளைகளுக்குத் தந்தையும் ஆனார்.
இரு நுறு ஆண்டுகளுக்கு முன்னர், ஸ்காட் லாந்தின் நாட்டுப்புற மக்கள் பாடிய நாடோடிப் பாடல்களையும் (BALADS) கதைகளையும் அவர் ஒய்வு நேரத்தில் சேகரித்தார். வக்கீல் தொழில் போக எஞ்சியுள்ள நேரத்தில் கிராப்புறங்களுக்குச் சென்றுவிடுவார். சிறுவயதிலிருந்தே அவருக்கு இதில் ஒரு ஈடுபாடு இருந்தது. இங்கிலாந்துக்கும் ஸ்காட்லாந்த்துக்கும் எல்லையாகவுள்ள பகுதியில் அவர் அதிகம் உலாவினார்.
அவருக்கு 31 வயதாகும் போதே அவர் தொகுத்த பாடல்கள் மூன்று தொகுதிகளாக வெளிவந்தன. பின்னர் தனது சொந்தக் கவிதையையும் வெளியிட்டார். இது எல்லைப்புற மனிதனின் வரலாற்றுக் கதையாகும். நீண்ட கவிதை வடிவில் எழுதினார். 40 வயதில் மேலும் இரண்டு வரலாற்றுக் கவிதைகளை எழுதியவுடன் அவருடைய புகழ் திக்கெட்டும் பரவியது.
இங்கிலாந்துக்கும் ஸ்காட்லாந்துக்கும் எல்லையாகவுள்ள பகுதியில் கொஞ்சம் நிலத்தை வாங்கி ஒரு மாளிகையும் கட்டினார். அது ட்வீட் TWEED என்னும் நதிக்கரையில் அமைந்த இடம்.
அவர் எழுதிய 27 நாவல்களில் முதல் நாவல் WAVERLY வேவர்லி ஆகும்.அந்த நாவலின் கதை என்னவென்றால் ஒரு ஸ்காட்டிஷ் குடும்பத்தை பிரிட்டிஷ் சிம்மாசனத்தில் அமரவைக்க நடந்த புரட்சி பற்றியதாகும். ஒரு வீரன் எந்த ஆட்சிக்கு விசுவாசம் செலுத்துவது என்று திண்டாடும் நிலையை இந்த நாவல் படம்பிடித்துக் காட்டுகிறது. அவருடைய மற்ற நாவல்களிலும் இதே போல இரட்டை விசுவாசம் உடைய கதாநாயகர்களைக் காண முடியும்.
காணாமற்போன ராஜாங்க ரத்தினை க்ரீடங்கள் (CROWN JEWELS) நகைகளைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை பிரின்ஸ் ரீஜெண்ட் (பின்னர் நாலாம் ஜார்ஜ் என்று அழைக்கப்பட்ட மன்னர்) இவருக்குத் தந்தார். இவர் 100 ஆண்டுக்கு காலம் மறைந்திருந்த அந்த பொக்கிஷத்தைத் தேடிக்கண்டுபிடித்தார். பின்னர் இவர் ஒரு பிரபு அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார். லண்டனிலும் பிரபுக்கள் சபையில் இடம்பெற்று ‘ஸர்’ பட்டம் பெற்றார்.
இவர் நாடகங்களையும் எழுதியுள்ளார்.
அவர் சம்பந்தப்பட்ட வெளியீட்டு நிறுவனம் பெரிய கடனில் சிக்கிக் கொண்டது. அதைத் திரும்பிச் செலுத்துவதில் முனைப்பு காட்டியதில் அவர் உடல் நலம் குன்றினார்.
பிறந்த தேதி – ஆகஸ்ட் 15, 1771
இறந்த தேதி – செப்டம்பர் 21, 1832
வாழ்ந்த ஆண்டுகள் – 61
அவர் எழுதிய நூல்கள்
1802- MINSTRELSY OF THE SCOTTISH BORDER
1805- THE LAY OF THE LAST MINSTREL
1808 – MARMION
1810- THE LADY OF THE LAKE
1814- WAVERLY
1815- GUY MANNERING
1816- OLD MORTALITY
1817 – ROB ROY
1818- THE HEART OF MIDLOTHIAN
1819- IVANHOE
–SUBHAM–
TAGS- ஸ்காட்லாந்து, நாவல் ஆசிரியர், சர் வால்டர் ஸ்காட் , SIR WALTER SCOTT
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 25-7-2021 அன்று ஒளிபரப்பான உரை!
வசனமிகவேற்றி மறவாதே, மனது துயராற்றில் உழலாதே
இசை பயில் சடாக்ஷரமதாலே இகபர சௌபாக்யம் அருள்வாயே
பசுபதி சிவாக்யம் உணர்வோனே பழநி மலை வீற்றருளும் வேலா
அசுரர் கிளை வாட்டி மிக வாழ, அமரர் சிறை மீட்ட பெருமாளே!
அருணகிரிநாதர் திரு நாமம் போற்றி, போற்றி!
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது முருகனின் ஆறு படைவீடுகளில் மூன்றாவது படை வீடாக அமையும் பழநி என்று அனைவராலும் அறியப்படும் திருவாவினன் குடி ஆகும். இந்தத் தலம் தமிழகத்தில், கொங்கு நாட்டில் திண்டுக்கல் மாவட்டதில் அமைந்துள்ளது. திண்டுக்கல்லிலிருந்து 57 கிலோமீட்டர் தொலைவிலும் மதுரையிலிருந்து இது 123 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. மலையின் அடிவாரத்தில் உள்ள கோவிலின் மூலவர் குழந்தை வேலாயுதர்.
மலை மீதுள்ள கோவிலின் மூலவர் தண்டாயுதபாணி நவபாஷாண மூர்த்தி. தல விருக்ஷம் – நெல்லி மரம். தீர்த்தம் – ஷண்முக நதி.
பழனியில் முருகன் கோவில் கொண்டுள்ளதைப் பற்றிய பிரசித்தமான வரலாற்றை அனைவரும் அறிவர். ஒரு முறை மாம்பழம் ஒன்றை நாரத முனிவர் சிவபிரானிடம் அளிக்க அவருடன் இருந்த இரு குமாரர்களான விநாயகர் மற்றும் முருகனை நோக்கி அவர், “யார் உலகை முதலில் சுற்றி வருகிறாரோ அவருக்கே இந்தக் கனி” என்றார். உடனே முருகன் தன் மயில் வாகனத்தில் ஏறி அதிவேகத்துடன் உலகை வலம் வரப் புறப்பட்டார். ஆனால் விநாயகரோ சிவபிரானையும் பார்வதி தேவியையும் வலம் வந்து “நீவீரே உலகம். உம்மை வலம் வந்து விட்டேன்” என்றார். இதனால் சிவபிரான் அவரிடம் அந்தக் கனியைத் தந்தார். உலகைச் சுற்றி விட்டு அங்கு வந்த முருகன், கனி விநாயகர் கையில் இருப்பதைக் கண்டு, வெகுண்டு அங்கிருந்து அகன்றார். பழநித் தலத்தில் தண்டாயுதபாணியாக நின்றார். பார்வதி தேவியும் சிவபிரானும் அவரை நோக்கி, “பழம் நீ அப்பா ஞானப் பழம் நீ அப்பா” என்று கூறி அவரது கோபத்தைத் தணித்து, இந்தத் தலத்தை முருகன் இருக்கும் தலமாக பெருமையுறச் செய்தனர். திரு ஆவினன் குடி என்ற பெயருக்கான காரணம் திரு – லக்ஷ்மி, ஆ – காமதேனு, இனன் – சூரியன், கு – பூமி, டி – அக்னி ஆகியோர் இந்தத் தலத்தில் வந்து வழிபட்டமையால் இது திருவாவினன் குடி என்ற பெயரைப் பெற்றது.
சங்க இலக்கியத்தில் பொதினி என்று கூறப்படுகிறது இந்தத் தலம்.
மலையின் மீதுள்ள முருகனின் சிலையை பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் ஸ்தாபித்தார். இந்தச் சிலை நவபாஷாணத்தால் ஆனது. சிலை காலப்போக்கில் பழமையானதை ஒட்டி இங்கு விக்ரஹ அபிஷேகம் எதுவும் செய்யப்படாமல் சந்தனப் பூச்சு மட்டும் பூசப்படுகிறது. இந்த சந்தனத்தைப் பெறுவதைப் பெரும் பாக்கியமாகக் கருதி பக்தர்கள் இதைப் பெறுகின்றனர். பழநி முருகனுக்கு பஞ்சாமிர்தம் நைவேத்யம் செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இங்கு பக்தர்கள் காவடி எடுத்து முருகனை வழிபடுவது ஒரு தனிச் சிறப்பாகும்.
தைப்பூசம், பங்குனிஉத்தரம், சூர சம்ஹாரம் உள்ளிட்ட பல திருவிழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். பழநியில் உள்ள தங்கத் தேர் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும்.
இங்கு மலை மீது போகருக்கான சமாதி உள்ளது. முருகன் சந்நிதியிலும் போகர் சந்நிதியிலும் மரகத லிங்கங்கள் உள்ளன. பழநியில் இடும்பனுக்கு ஒரு கோவில் உண்டு. இங்குள்ள சிவசக்தி மலைகளையும் இடும்பனையும் பற்றி, பழநித் தலபுராணமும் கொங்கு மண்டல சதகமும் விரிவாகக் கூறுகின்றன. சூரபன்மனுக்கு அஸ்திர சஸ்திர வித்தைகளைக் கற்றுக் கொடுத்த குரு இடும்பாசுரன்.முருகபிரான் அசுரர்களை அழித்த பின் நல்லறிவு பெற்ற அவன் தன் மனைவி இடும்பியோடு பொதியமலை வந்து, அகத்தியப் பெருமானிடம் அடைக்கலம் புகுந்தான். அகத்தியர் அவனிடம் வடக்கே சென்று, அங்கே கேதாரத்தில் உள்ள சிவ, சக்தி ஆகிய இரு மலைகளைக் கொண்டு வந்தால் அவனுக்கு போகம், முக்தி இரண்டும் கிடைக்கும் என்று கூறி அருளினார். அகத்தியர் கூறியபடியே, இடும்பாசுரன் சிவ, சக்தி ஆகிய இரு மலைகளையும் தோள் சுமையாக, காவடியாகத் தூக்கி வந்தான். வழி தெரியாமல் இடும்பன் திருவாவினன் குடியை – பழனியை- அடைந்தான். பசி, தாகம் இரண்டும் அவனை வருத்த தன் தோளில் இருந்த சிவ,சக்தி,மலைகளைக் கீழே இறக்கி வைத்தான். பசி தாகம் நீங்கிய பின்னர் மலைகளை மீண்டும் தூக்கினான். ஆனால் மலைகள் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. சந்தேகம் கொண்ட இடும்பன் மலைகளின் மீது ஏறிப் பார்த்தான். அங்கே தண்டம் தாங்கி இருந்த குமரவேல், இடும்பனை நோக்கி, “அசுரனே, இந்த மலைகளை இங்கேயே விட்டுச் செல்” என்றார். கோபம் கொண்ட இடும்பன் குமாரவேளின் மேல் பாய, நடந்த சண்டையில் இடும்பன் மாய்ந்தான்.
இதை அறிந்த இடும்பி குமரவேளைத் துதித்து அருள் வேண்டினாள்.
முருகனின் கிருபையால் இடும்பன் உயிர் பிழைத்து அவரைத் துதித்தான். தனக்குக் குற்றேவல் செய்து வருமாறு இடும்பனை முருகன் பணித்தார். ஆக இப்படிப்பட்ட ஏராளமான வரலாறுகள் பழநியைப் பற்றி உண்டு. அருணகிரிநாதர் இந்தத் தலத்தில் முருகனை வழிபட்டு 95 திருப்புகழ் பாடல்களைப் பாடி அருளியுள்ளார். பழநியில் நெடுங்காலம் தங்கி அதன் சிறப்புக்களையும் வரலாறுகளையும் அறிந்த அவர் ‘அதிசயம் அநேகமுற்ற பழநி மலை’ என்று கூறிப் பாராட்டுகிறார். பழநி மலையை வலம் வருவது பாவத்தைப் போக்கும். மலை மீது ஏற யானைப் பாதை ஒன்றும், படிக்கட்டுகள் மீது ஏறிச் செல்லும் வழியும் உண்டு. மலை மீதுள்ள கோவிலை அடைய விஞ்ச் (Winch) வசதியும் உண்டு.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் பழநி முருகன் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். அருணகிரிநாதரின் அருள் வாக்கு இது.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் சென்னை A அலைவரிசை 720 HZ ச.நாகராஜனின் சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகளை 16-7-2021 முதல் 25-7-2021 முடிய ஒலிபரப்புகிறது. நேரம் காலையில் தமிழ்ச் செய்திகள் முடிந்தவுடன், சரியாக 6.55க்கு ஆரம்பிக்கும் காலைமலர் நிகழ்ச்சியில் முதல் ஒலி பரப்பாக இது அமையும். ஆன்லைன் நிகழ்ச்சியாக கணினி, ஐபாட் மூலமாகவும் இதைக் கேட்கலாம்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் மேம்பாட்டிற்கும், ஆற்றல் இன்றியமையாதது. நிலக்கரி, இயற்கை வாயு, எண்ணெய் வளம் உள்ளிட்ட படிம எரிபொருள்களாலேயே உலகில் ஆற்றல் உருவாக்கப்படுகிறது. இந்த படிம எரிபொருள்கள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி நச்சு வாயுக்களை வளி மண்டலத்தில் கலக்கச் செய்கிறது.
ஆகவே மனித குலம் மாற்று முறையில் தயாராகும் ஆற்றலை எதிர்நோக்குகிறது. ஒரு பெரும் வரபிரசாதமாக சூரிய ஆற்றல் தங்கு தடையின்றி எங்கும் இலவசமாகக் கிடைக்கும் ஒரு அரிய சக்தி. இந்த சூரிய சக்தியைப் பயன்படுத்தி சோலார் கார்கள் எனப்படும் சூரிய ஆற்றலில் இயங்கும் கார்கள் வடிவமைக்கப்பட்டு உபயோகத்திற்குத் தயாராக உள்ளன. இதன் மூலம் பெட்ரோல், டீஸல் உள்ளிட்ட படிம எரிபொருள்களிலிருந்து உலகம் விடுதலை பெறும்; சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்படும் மாசும் குறையும்; அபாயமும் மறையும்.
இன்று புழக்கத்தில் வந்துள்ள சோலார் பேனல்கள் (Solar Panels) நச்சு வாயுக்களை வெளிப்படுத்தாது. சோலார் பேனல்களால் உருவாக்கப்படும் 879 மெகாவாட் ஆற்றலானது ஐந்து லட்சத்தி நாற்பதினாயிரம் டன்கள் கழிவுப் பொருளை மறுசுழற்சிக்கு உள்ளாக்கிப் பெறும் ஆற்றலுக்குச் சமம். ஒரு மெகாவாட் என்பது பத்து லட்சம் வாட்களாகும் (Watts). சோலார் பேனல்களை தயாரிக்க நீர் தேவைப்படுவதில்லை என்பதால் அரிய நீர்வளமும் சேமிக்கப்படுகிறது. சூரிய ஆற்றல் தெளிவானது, மாசில்லாதது, அதிகம் செலவில்லாதது. ஒரு ஐந்து கிலோவாட் சூரிய ஆற்றல் மின் அமைப்பை ஒருவர் 25 ஆண்டுகள் பயன்படுத்தினால் அது 2,98,108 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைட் உருவாவதைத் தடுக்கும். புகை மூட்டத்தை உருவாக்கும் நச்சு வாயுவான நைட்ரஜன் ஆக்ஸைடில் 928 பவுண்டுகள் என்ற அளவு தடுக்கும், அமில மழையை உருவாக்குகின்ற சல்பர் டை ஆக்ஸைடில் 840 பவுண்டுகள் உருவாவதைத் தடுக்கும், ஆஸ்த்மாவை உருவாக்கும் துகள்மங்களில் (particulates) 57 பவுண்ட் உருவாவதைத் தடுக்கும். படிம எரிபொருள்களைப் பயன்படுத்தி 25 வருடங்களில் ஒருவர் ஓட்டும் சுமார் மூன்று லட்சம் மைல்களில் வரும் நச்சுப் புகை வெளியேற்றத்தைத் தடுக்கும. இப்படி உலகளாவிய விதத்தில் பல லட்சம் பேர்கள் சூரிய ஆற்றலைப் பயன்படுத்த ஆரம்பித்தால் ஏற்படும் நல்விளைவுகள் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக அமையும். அடுத்த பத்து ஆண்டுகளில் இல்லங்கள், அலுவலகங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட அனைத்து சூரிய ஆற்றல் பயன்படுத்தப்படும் என்ற நல்ல செய்தியை வரவேற்று சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவோம். புவியை மாசில்லாத பூமியாக மாற்றுவோம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை JULY 25 -ஆம் தேதி — ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.
XXXX
அரசு கட்டுபாட்டிலிருந்து கோவில்களை விடுவிக்க விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்
அரசு கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கோவில்களை விடுவிக்க வழிவகுக்கும் சட்டத்தை இயற்றக்கோரி, மத்திய அரசை, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
ஹரியானாவின் பரிதாபாதில் நடந்து முடிந்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இரண்டு நாள் மாநாட்டில், இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் கூறியதாவது:தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு கட்டுப்பாட்டின்கீழ் பல கோவில்கள் உள்ளன.கோவில்களில் யார் பூஜை செய்ய வேண்டும், எப்படி பூஜை செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றை, அரசு ஏன் தீர்மானிக்க வேண்டும்?
எனவே, அரசு கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கோவில்களை ஹிந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க வழிவகுக்கும் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும்.அதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதேபோல் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்படுவதை தடுக்கும் கடுமையான சட்டத்தை இயற்றவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
XXXX
இந்து கடவுள், பிரதமர், அமைச்சரை விமர்சித்த பாதிரியார் கைது
இந்து கடவுளை விமர்சித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது செய்யப்பட்டார். இவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பனங்கரையில் சர்ச் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பிரார்த்தனை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதை கண்டித்து அருமனையில் அருமனை கிறிஸ்தவ இயக்கம், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை, முஸ்லிம் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இந்து கடவுள், , பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசினார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் அவரை கைது செய்ய வேண்டும் என பலர் குரல் எழுப்பினர்.
இந்நிலையில் சென்னைக்கு காரில் 4 பேருடன் தப்பி செல்கிறார் என்ற தகவல் போலீசுக்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து மதுரை கருப்பாயூரணி அருகே சோதனை நடத்திய போது ஒரு காரில் பாதிரியார் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் கைது செய்தனர்.
சென்னை சென்று வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
பாதிரியாருக்கு உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து அவர் பாளையம்கோட்டை சிறையிலுள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கடைசியாக வந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
xxxx
உடுப்பி அருகே ரூ.2 கோடியில் விநாயகர் கோவில் கட்டிய கிறிஸ்தவ தொழில் அதிபர்
உடுப்பியில் ஒரு கிறிஸ்தவ தொழில் அதிபர் ரூ.2 கோடி செலவில் விநாயகர் கோவிலை கட்டி அந்த கோவிலை இந்து பக்தர்களுக்கு அர்ப்பணித்து சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டி உள்ளார்.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
உடுப்பி மாவட்டம் சிருவா பகுதியை சேர்ந்தவர் கேபிரியல் நாசரேத் (வயது 77). இவர் தொழில் அதிபர் ஆவார். கேபிரியலின் தந்தை பேபியன் செபஸ்டின் உயிரிழப்பதற்கு முன்பு கேபிரியலுக்கு 15 சென்ட் நிலத்தை கொடுத்து இருந்தார். பின்னர் உடல்நலக்குறைவால் செபஸ்டினும், அவரது மனைவி சபீனாவும் உயிரிழந்து இருந்தனர்.
ரூ.2 கோடி செலவில்….
இந்த நிலையில் தனது தந்தை, தாயின் நினைவாக 15 சென்ட் நிலத்தில் ஒரு விநாயகர் கோவிலை கட்ட கேபிரியல் முடிவு செய்தார். அதன்படி ரூ.2 கோடி செலவில் சித்தி விநாயகர் கோவிலையும், அதன் அருகே அர்ச்சகர் தங்க ஒரு வீட்டையும் கேபிரியல் கட்டி முடித்தார்.அந்த கோவிலுக்குள் 36 அங்குலம் விநாயகர் சிலை உள்ளது. பின்னர் அந்த கோவிலை இந்து பக்தர்களுக்கு அவர் அர்ப்பணித்தார். இந்த கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு கேபிரியலின் நண்பர்களான சதீஷ் ஷெட்டி, ரத்னாகர் ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
நண்பர்களுக்காக…
இதுகுறித்து கேபிரியல் கூறும்போது, நான் கடந்த 1959-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்ததும் வேலைக்காக மும்பைக்கு சென்றேன். மும்பையில் சித்தி விநாயகர் கோவிலுக்கு தினமும் செல்வேன். அப்போது எனக்கு சொந்த செலவில் விநாயகர் கோவில் கட்ட வேண்டும் என்று ஆசை வந்தது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சிருவாவுக்கு வந்த நான் கோவிலை கட்ட முடிவு செய்து தற்போது கட்டி முடித்து இந்து நணபர்களுக்கு அர்ப்பணித்து உள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
XXXX
கோவில் யானை பராமரிப்பு; அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
-கோவில் யானைகளை பெரிய இடங்களில், இயற்கை சூழலில் பராமரிக்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த, விலங்குகள் நல ஆர்வலரான முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த மனு:தமிழக கோவில்களில் 34 யானைகள், புதுச்சேரியில் உள்ள கோவிலில் ஒரு யானையும் பராமரிக்கப்படுகிறது. அறநிலையத் துறையின் அலட்சியத்தால், 2016 முதல், 2019 வரை, மூன்று கோவில் யானைகள் இறந்தன.
உடல் பருமன், காலில் ஏற்படும் பிரச்னையால், யானைகள் இறக்கின்றன.கோவில் யானைகளை நடை பயிற்சிக்கு கூட்டிச் செல்வதில்லை; முறையான உணவு வழங்கப்படுவது இல்லை., கோவில் அருகில் இயற்கை சூழல் நிறைந்த இடத்தில், யானைகளை பராமரிக்க வேண்டும். ஆண் யானைக்கு துணையாக, பெண் யானையையும் பராமரிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
.மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், விசார ணைக்கு வந்தது. மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்க, தமிழக அரசுக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
Xxxx
விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூ 37 கோடியில் தொங்கு பாலம்
கன்னியாகுமரி; சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 140 மீட்டர் தூரத்திற்கு கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் தொங்கு பாலம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது, கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே 140 மீட்டர் தூரத்திற்கு தொங்கு பாலம் அமைக்கப்படும்
இதற்காக ரூ.37 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. கடலுக்கு நடுவே பாலம் அமைக்க வேண்டியிருப்பதால் சென்னை ஐஐடி பேராசிரியர்களின் கருத்துகளையும் கேட்டுள்ளோம். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சுற்றுலா மாளிகை கட்டப்படும்.
xxxxxxx
திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரி வேண்டுகோள்
திருப்பதியின்புனிதத் தன்மை, இயற்கை சுற்றுச்சூழலையை பாதுகாக்கவும் தேவஸ்தானம் கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளது. ஆயினும் பக்தர்கள் பலர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை கொண்டு வருகின்றனர்.
அலிபிரி சோதனை சாவடியில் பக்தர்களின் உடைமைகள் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் இருந்தால் அங்கேயே அப்புறப்படுத்த ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருமலையில் உள்ள கடைகளிலும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களின் விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியில் பக்தர்கள் பயன்படும் வகையில் குடிநீர் தொட்டி ஆங்காங்கே அமைக்கப் பட்டுள்ளது. அதன் அருகில் கோப்பைகள், டம்ளர்கள் வைக்கப்பட்டுள்ளது. இவை தினசரி சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவே பக்தர்கள் குடிநீர் தேவைக்காக அவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி தெரிவித்துள்ளார்.
Xxx
திருப்பதியில் DRONE டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பம்: தேவஸ்தானம் முடிவு
திருப்பதி கோயிலை Drone டுரோன் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில், டிஆர்டிஓD R D O தயாரித்துள்ள டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை பொருத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
தொழில்நுட்ப செயல் விளக்க கூட்டம், கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 6 ம் தேதி நடந்தது. முப்படை அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் ஊழல் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு துறை தலைவர் கோபிநாத்தும் கலந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து, அந்த drone டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை வாங்க தேவஸ்தானம் முடிவு செய்தது. அத்துமீறி வரும் டுரோன்களை கண்டுபிடித்து, அதனை தடுத்து நிறுத்தி அழிக்கும் வகையில், டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை டிஆர்டிஓ தயாரித்து உள்ளது. 4 கி.மீ., தூரத்தில் வரும் டுரோனை கண்டறியும் இந்த தொழில்நுட்பம், அதன் தொலைதொடர்பு வசதியை துண்டித்து 3 கி.மீ., தொலைவில் அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒரு அமைப்பின் விலை தற்போது ரூ.25 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த தொழில்நுட்பத்தை தயாரித்து உள்ள டிஆர்டிஓ, அதனை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கான உரிமத்தை பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்திடம் வழங்கி உள்ளது. திருப்பதி தேவஸ்தானம் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டியின் ஆலோசனையை தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த தொழில்நுட்பத்தை வாங்குவது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Xxxxx
உலகம் முழுதும் இந்திய பாரம்பரிய கலை: குரு பவுர்ணமி விழாவில் சத்குரு JAGGI VASUDEV பேச்சு
”ஈஷா சம்ஸ்க்ருதி மாணவர்கள் இந்திய பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்வார்கள்,” என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு JAGGI VASUDEV தெரிவித்தார்.
குரு பவுர்ணமியை முன்னிட்டு, சத்குருவின் சிறப்பு சத்சங்கம் ஆன்லைன் வாயிலாக நடந்தது. இதில், ஈஷா சம்ஸ்க்ருதி மாணவர்களின் இசை, நடனம் மற்றும் களரி நிகழ்ச்சி நடந்தது. ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு JAGGI VASUDEV பேசியதாவது:
மனிதர்கள் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருப்பதற்கு ஏராளமான சாகசம் செய்கின்றனர். துன்பம், இன்பம், கோபம், அமைதி என மனித அனுபவங்கள் அனைத்தும் நமக்குள் இருந்து தான் வருகிறது.
ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள், சிறு வயதில் இருந்தே, இசை, நடனம், களரி போன்றவற்றில், தங்கள் வாழ்வை முதலீடு செய்துள்ளனர். 24 மணி நேரமும் இந்த கலைகளுடன், வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கற்ற கலைகளை, தற்போது மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க தயாராகிவிட்டனர். அதற்காக, ‘புராஜக்ட் சம்ஸ்க்ருதி’ என்ற திட்டம், இந்த குரு பவுர்ணமி நாளில் துவங்கப்பட்டுள்ளது. இந்திய பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் எடுத்து செல்வர். இவ்வாறு, JAGGI VASUDEV தெரிவித்தார்.
Xxxxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Namaste , Namaskaram to Everyone
This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.
Compiled from popular newspapers of India
Read by SUJATHA RENGANATHAN .
XXX
This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at
TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.
Even if you miss our live broadcast on SUNDAYS
you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.
Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’
Read by SUJATHA RENGANATHAN .
XXX
VHP passes resolutions on illegal conversions, liberation of monasteries, temples
The Vishva Hindu Parishad (VHP) on Sunday passed resolutions for steps to be taken for protection against Coronavirus pandemic, prevention of illegal religious conversions and liberation of Mutt and Mandirs ; that is monasteries and temples.
The two-day meeting of the Central Board of Trustees and the Governing Council of Vishva Hindu Parishad (VHP) was held at Faridabad in Haryana.
Giving details of the meeting, the Working President of Vishva Hindu Parishad, Senior Advocate Alok Kumar said that this meeting raised the key issue for protection against the Corona infections .
He said, “Illegal religious conversion is a national curse and the nation must get liberated from it. In 11 States there are laws for its prevention, but the problem and conspiracy are nationwide. This international meeting is, therefore, of the unanimous view that a central law should be made against it, and only then there will be freedom from this curse.”
We have also called upon the Hindu society to remain ever watchful about the anti-Bharat and anti-Hindu conspiracies of the Mullah-Missionaries, and prevent it by all Constitutional methods”, he said.
Alok Kumar also said, “a resolution was passed to liberate all monasteries and temples from the control of governments.” This resolution said that the Mutt and Mandirs constitute the nuclei of the belief, faith and worship of the national society of Bharat .
In the meeting, about 50 central and regional office-bearers were personally present while about 350 provincial office-bearers and office-bearers joined the meeting virtually (online) from abroad.
xxxx
Catholic priest arrested in Madurai over controversial remarks for hate speech
Roman Catholic priest George Ponniah, who was recently booked by Kanniyakumari police for making controversial remarks against Hindu deities, Prime Minister Narendra Modi and Home Minister Amit Shah, was arrested in Madurai on Saturday.
Ponniah had made the remarks during a meeting at Arumanai in Tamil Nadu on July 18. The priest was also charged with trying to spread hatred between religious groups and insulting ‘Bharat Mata’.
Following complaints from Hindu outfits and several others, Arumanai police had registered a case against Ponniah under various sections .
When he was allegedly attempting to flee in a car to Chennai, he was arrested by Silaiman police near Pandi Kovil on Saturday.
Tamil Nadu priest apologises after his comment on Hindu religion invites wrath
.
George Ponniah, a priest and consultant to an NGO Jananyaga Christhuva Peravai Amaipu in Kanniyakumari, has apologised after his alleged provocative remarks on the Hindu religion and beliefs created a stir on social media.
Close to 30 complaints were filed in Kanniyakumari and many in other districts of Tamil Nadu.
Xxxx
Christian businessman builds Siddhi Vinayaka temple in Udupi
Gabriel Nazareth, a 77-year old Catholic businessman from Shirva in Karnataka, has become an embodiment of communal harmony by building a temple dedicated to Lord Siddhi Vinayaka for his Hindu brethren. He spent Rs 2 crore to construct the temple, in memory of his parents — Late Fabian Sebastian Nazereth and Sabeena Nazereth — on his 15 cents of ancestral land, and gifted it to the Hindu community.
“I always felt blessed by Lord Siddhi Vinayaka since the time I became a devotee of the deity 60 years ago. I completed by SSLC in 1959 and went to Mumbai in search of a job. I was just 14 years old then and was staying near Prabhadevi in Mumbai. A little further was the famous Siddhi Vinayaka temple where I paid obeisance to the lord every day,” he told The New Indian Express.
After some years, he started a metal dying workshop and became a successful entrepreneur, starting business units in three different places.
At the recently opened temple, a beautiful black coloured 36-inch Ganesha idol was installed. A house for the temple priest has also been built near the temple. The temple administration has been handed over to a three-member committee comprising engineer Nagesh Hegde and Gabriel’s friends Sathish Shetty and Ratnakar Kukyan.
Sathish Shetty said that Gabriel single-handedly built the temple without any donations due to his devotion for Lord Siddhi Vinayaka.
Gabriel, came back to Shirva 12 years ago as he had wound up his business in Mumbai. Eight years back, he had renovated a ‘Naga Bana’ (sacred grove) near Bantakal in Shirva. Though a bachelor, he has financially assisted more than 60 people to get married
Xxxx
Curtains come down on Rath Yatra festival in Puri
Curtains came down on the annual Rath Yatra festival in Puri Jagannath Temple in Odisah, after the Trinity was escorted into the Srimandir’s Garbha Gruha (sanctum sanctorum) in Pahandi procession called Niladri Bije on Friday. The homecoming rituals of the deities started early in the morning with the servitors performing Mangala Alati, before the Gopal Bhog was offered. At noon, Madhyana Dhupa was offered. Bahuda Pahandi began at 5 pm with the idols of Rama, Krishna and Madan Mohan taken inside the Srimandir first followed by Sudarshan, Lord Balabhadra and Devi Subhadra. Lord Jagannath was the last to enter the sanctum sanctorum at 7.45 pm.
Before Lord Jagannath’s return to the Garbha Gruha, His ‘Goti Pahandi’ was obstructed by His consort Goddess Mahalaxmi as she was annoyed for not being allowed to accompany Him on the journey to Gundicha temple. The Goddess was pacified after being offered Rasagola and the Lord was let in.
The administration had created a bio-bubble for carpenters who took 55 days to construct the chariots.
For the second successive year, Rath Yatra was organised without participation of devotees to contain the spread of Covid virus.
Xxxx
High-time we have a music university in Tanjore says Ilaiyaraaja
Legendary music composer Ilaiyaraaja on Thursday said that while there are schools and univerisities for music in foreign countries, Tamil Nadu too should have one in Tanjore.
“Those universities have archived Beethoven’a music collections and have restored and preserved several musical instruments from across the world. We should have one as well in Tanjore as we need to preserve collections starting from Thyagaraja Bhagavathar,” the maestro said.
Recently, videos of his granddaughter Ziya Yuvan playing the keyboard went viral on social media. “It’s in her genes obviously,” he smiled. “She has seen me and Yuvan playing it and has taken it up. When the time comes, I believe we can work together,” Ilaiyaraaja added.
Tell him that music was the best healer for many during the lockdown, he replied, “Absolutely. A music is like a new bloomed flower. It should be fresh and people should be able to listen to it even after several years.”
Ilayaraja who composed for over 1300 films in 45 years, told that his work is in progress.
xxx
Devotees support Sivasankar Baba and oppose his judicial custody
The Chengalpattu Pocso court on Thursday extended for 15 more days the judicial custody of Sivasankar Baba, who was arrested on charges of sexually assaulting students of his residential school in the city.
After the decision came, his supporters, who had thronged the court premises, started shouting and screaming and jumped the barricades to touch and seek Baba’s blessings.
The self-styled godman was arrested by the CB-CID police in June in Delhi after receiving complaints from the former students of his school in Kelambakkam. The police have arrested him in two Pocso cases while an investigation into the third complaint is currently on.
He was brought to the court on Thursday as it was the final day of the earlier extension of judicial custody and the judge extended the custody till August 5.
After Baba was brought out of the court, his supporters, mostly women, started screaming and chanting ‘Siva Shankara’ bhajan and Baba responded with a smile and waving of his hands. The supporters then tried to go close to Baba by pushing the barricades and the policemen on duty stopped them and took Baba to the police vehicle.
Xxx
Rs 25 crore anti-drone technology to safeguard Tirupati temple
The Tirumala Tirupati Temple will be able to repel extremist conspiracies in future. Preparations are being made to make use of drone jammer know-how on Tirumala Hill.
The Défense Research and Development Organization (DRDO) has developed anti-drone know-how to stop drone assaults Venkateswara temple in Thirumala might use it in the future.
Following the terrorist assault on an air pressure in Jammu, DRDO developed anti-drone know-how.
On July 6 at Kolar in Karnataka, three sorts of know-how were shown. The occasion was attended by TTD Vigilance, Security Wing Chief, Gopinath Jatti together with representatives of varied police departments throughout the nation. After that it was determined to purchase this know-how for Rs. 22 crore.
The system detects and assaults drones inside a spread of 4 kilometers.
xxx
Telangana floods: 7 rescued from flood-affected ashram in Nizamabad
Seven persons were rescued in the wee hours of Friday by teams of the National Disaster Response Force (NDRF), from a spiritual ashram in Nizamabad, that was surrounded by floodwaters from the Godavari river.
The Guru Ashram located on the riverbank in Sawel village of Mendora Mandal in the district was left completely surrounded by floodwaters due to heavy outflows from the Sri Ramakrishna Sagar Project reservoir.
The water levels are rising and the ashram is likely to submerge.
The NDRF teams had reached the ashram around midnight with boats from the village and during early hours they rescued all seven persons staying at the ashram.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலகப் புகழ் பெற்ற பிரஞ்சு மொழி நாவல் ஆசிரியர் , நாடக ஆசிரியர், தத்துவ ஞானி ஷான் பால் சார்த்ர JEAN PAUL SARTRE 1964-ம் ஆண்டு இலக்கிய நோபல் பரிசை வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார் “எழுத்தாளர்களை ஒரு நிறுவனம் போல நடத்துவதை தான் ஏற்க முடியாது” என்று சொல்லிவிட்டார்.
இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த சிந்தனையாளர்களில் (THINKER ) ஒருவர்; பெரிய தத்துவ ஞானி (PHILOSOPHER) ; புகழ்பெற்ற புதின எழுத்தாளர் (NOVELIST) ஷான் பால் சார்த்ர, பாரிஸ் நகரில் பிறந்து அங்கேயே கல்வி கற்றார். வாழ்நாளின் பெரும் பகுதியை பாரிஸ் நகரிலேயே கழித்தார். மாணவப் பருவத்திலேயே சிமோன் த பொவ்வார் (SIMONE DE BEAUVOIR) என்ற பெண்ணைச் சந்த்தித்து துணைவராக ஏற்றார் . அவர் இருபதாம் நூற்றாண்டின் பெண்ணிய (FEMINIST WRITER) எழுத்தாளர்களில் முன்னனியில் நின்றவர் ஆவார்.
ஷான் பால் சார்த்ர , பட்டம் பெற்ற பின்னர் ஆசிரியர் பணியில் அமர்ந்தார். தத்துவ இயலைக் கற்பிக்கும்போதே எழுத்துத் துறையில் நுழைந்தார். 33 வயதில் நாசியா NAUSEA என்ற நாவலை எழுதி அச்சிட்டார். அதில் தான் நம்பிய புதிய தத்துவக் கருத்தைப் பரப்பினார். அந்தக் கருத்துக்கள் பிற்காலத்தில் ஒரு தத்துவ நூலாகவும் BEING AND NOTHINGNESS வெளிவந்தது
இரண்டாவது உலகப் போரில் பிரெஞ்சு ராணுவத்தில் பணியாற்றினார். ஹிட்லர் தலைமையிலான ஜெர்மன் ராணுவம் இவரைப் பிடித்தது. ஆனால் அங்கிருந்து தப்பி ஓடினார் . ஜெர்மானிய ஆக்ரமிப்பைக் கண்டித்து எழுதினார். போர் அனுபவத்தால் இவர் அரசியலில் காலடி எடுத்துவைத்தார். இடதுசாரிக் கருத்துக்களை முன்வைத்து, தனது தத்துவ நூல்களில் கம்யூனிச விதைகளை விதைத்தார்; தீவிர இடதுசாரிக் கட்சியைத் துவக்கினார் .
நாவல்கள் எழுதுவதைவிட நாடகம் எழுதுவதில் முனைந்தார். உலக மஹா யுத்தம் முடியும் தருவாயில் அவருடைய நோ எக்சிட் NO EXIT நாடகம் மேடை ஏறியது மூன்று ஆட்கள் ஒரு அறையில் சிக்கிக் கொள்கின்றனர். போகப்போக அது ஒரு நரக வாழ்வு என்பதை அவர்கள் உணர்கிறார்கள் என்பதே இந்த நாடகத்தின் மையக் கருத்து.
அரசியல் பற்றியும் தார்மிக நெறிகள் பற்றியும் சிந்தனையைத் தூண்டும் கருத்துக்களை சுவையான நாடகக் கதைகளிடையே வைத்தார். வாழ்நாள் முழுதும் அரசியல் கருத்துக்களை விடாப்பிடியாக , குரங்குப் பிடியாகப் பிடித்துக்கொண்டார். அமெரிக்கா நடத்திய வியட்நாம் போரையும், ஆப்பிரிக்கக் கண்டத்தில் அல்ஜீரியா நாட்டை பிரான்ஸ் ஆளுவதையும் கண்டித்தார்.
பிறந்த தேதி – ஜனவரி 21, 1905
இறந்த தேதி – ஏப்ரல் 15, 1980
வாழ்ந்த ஆண்டுகள் – 74
எழுதிய நூல்கள் :–
PUBLICATIONS
1938- NAUSEA
1939- INTIMACY
1943- THE FLIES
1943- BEING AND NOTHINGNESS
1944 – NO EXIT
1945 – THE AGE OF REASON
1945 – THE REPRIEVE
1948 – DIRTY HANDS
1959- THE CONDEMNED OF ALTONA
1960 – THE CRITIQUE OF DIALECTICAL MATERIALISM
–SUBHAM—
tags- பிரஞ்சு மொழி ,நாவல் ஆசிரியர் , நாடக ஆசிரியர், தத்துவ ஞானி, ஷான் பால் சார்த்ர, JEAN PAUL SARTRE
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் சென்னை A அலைவரிசை 720 HZ ச.நாகராஜனின் சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகளை 16-7-2021 முதல் 25-7-2021 முடிய ஒலிபரப்புகிறது. நேரம் காலையில் தமிழ்ச் செய்திகள் முடிந்தவுடன், சரியாக 6.55க்கு ஆரம்பிக்கும் காலைமலர் நிகழ்ச்சியில் முதல் ஒலி பரப்பாக இது அமையும். ஆன்லைன் நிகழ்ச்சியாக கணினி, ஐபாட் மூலமாகவும் இதைக் கேட்கலாம்.
அறிவியல் வளர வளர அற்புதமான செய்திகள் நமக்கு ஊக்கத்தையும் எழுச்சியையும் தருகின்றன
சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதில் சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்பு உலகெங்கும் 90 கோடி ஹெக்டேர் அதாவது 220 கோடி ஏக்கர் நிலத்தை மறுபடி காடாக்க முடியும் என்று கண்டிருக்கிறது. இது மனித குலம் வெளியிடும் கார்பன் நச்சுப் புகையில் மூன்றில் இரண்டு மடங்கை உறிஞ்சி விடும். அதாவது மனித குலம் பிழைத்து, தழைத்து வாழும்! ஜூரிச்சை சேர்ந்த விஞ்ஞானிகளின் இந்தக் கண்டுபிடிப்பு எந்தெந்த பகுதியில் என்னென்ன மரங்களை நடலாம் என்பதையும் பரிந்துரைக்கும்.
உலகெங்குமுள்ள பத்து லட்சத்து நாற்பதினாயிரம் தோட்ட உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து உலகளாவிய விதத்தில் பசுமைத் தோட்டங்களை அதிகரிக்கும் திட்டத்தில் ஈடுபட்டிருப்பதும் இன்னொரு நற்செய்தியாகும். இதன் மூலம் அருகி வரும் இனங்களான தேனீக்களும் பட்டாம்பூச்சிகளும் அழிவது தடுக்கப்படுவதோடு மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதாகவும் அமையும்.
பசுமையான காடுகளும் தோட்டங்களும் அதிகமாக ஆக, வளி மண்டல மாசு குறையும், தட்பவெப்ப நிலை சீராக அமையும், அத்துடன் நீர் வளம் அதிகரிக்கும்.
மழைக்காலத்தில் இவை நீரை உறிஞ்சி நிலத்தடியில் சேமிப்பதால் ஆண்டு முழுவதும் நன்னீர் கிடைக்கும். வெள்ளப் பெருக்கையும் தடுக்கும்.
நகரில் ஆங்காங்கே பூங்காக்கள் அமைவதால் நகரின் உஷ்ணநிலையில் ஒரு டிகிரி செண்டிகிரேட் குறைய வாய்ப்புண்டு. அத்துடன் ஒலி மாசும் குறையும். ஒலி பிரதிபலிப்பது குறைந்து, சுமார் 3 டெசிபல் முதல் 8 டெசிபல் வரை ஓசை குறையும். இதனால் அதிக ஓசையினால் ஏற்படும் உடல் கோளாறுகள் நீங்கும்.
ஆங்காங்கே பூங்காக்களும் தோட்டங்களும் இருப்பதாலும் நகர்ப் புறங்களை ஒட்டிக் காட்டு வளம் ஏற்படுவதாலும் மனதிற்கு இனிமையுடன் கூடிய சுகம் ஏற்படும்; மன அழுத்தம் குறையும். உடலுக்குத் தேவையான ஓய்வு ஏற்படும்;
மனோவியாதிகள் குறையும்.
அத்துடன் நமக்குத் தேவையான கீரைகள், கறிகாய்கள், பழங்கள் ஆகியவையும் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் வாய்ப்பும் ஏற்படும். தோட்டங்கள் ஒரு நகரின் ஜீவ நாடி என்றே சொல்லலாம் என்பதால் வீட்டு மாடியில் தோட்டம், வீட்டைச் சுற்றித் தோட்டம் என, வாய்ப்பு உள்ள அனைவரும் இதில் ஈடுபடலாம். உலகெங்கும் பெருகி வரும் ஊக்கமூட்டும் இந்தப் பசுமைக் கலை பரவட்டும்; சுற்றுப்புறம் மாசின்றி ஆரோக்கியமான வாழ்வை அனைவருக்கும் நல்கட்டும்!