Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஜெர்மானிய கவிஞர் கெத்தா
GOETHE (1749 – 1832)
ஜெர்மானிய எழுத்தாளர்களில் மிகவும் புகழ்பெற்றவர் கெத்தா . இவருடைய முழுப்பெயர் JOHANN WOLFGANG VON GOETHE.
இவர் ஒரு எழுத்தாளர் – கவிஞர் – நாடக ஆசிரியர் – மேதை.
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த இவர் வசதியாக வாழ்ந்தவர். செல்வச் செழிப்பு காரணமாக வீட்டிற்கே ஆசிரியர்கள் வந்து பாடம் கற்பித்தனர். பள்ளிப்படிப்பு இவ்வாறு முடிந்த பின்னர் லீப்ஸிக் பல்கலைகழகம், ஸ்டிராஸ்ப்ர்க் பல்கலைகழகம் ஆகியவற்றில் படித்தார். சட்டப்படிப்பு படித்த போதிலும் வழக்குரைஞராக தொழில் நடத்திய காலம் மிகவும் குறைவே. அவரது கைகள் கவிதை எழுதத் துடித்தன. மிகவும் அழகான கவிதைகளை எழுதினார். ஜெர்மானிய மொழி இலக்கியத்தில் அவை மிகமிக அழகான கவிதைகளாக் கருதப்படுகின்றன.
22 வயதானபோது கெத்தா WETZLAR என்னுமிடத்திற்குச் சென்று வழக்குரைஞராகப் பணியாற்றினார். அப்போது அவருடைய நெருங்கிய நண்பர் தற்கொலை செய்து கொண்டார். இந்தத் துயர நிகழ்ச்சியும், இவர் ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டதும் இவர் புதிய நூல் ஒன்றை எழுத ஊற்றுக் கண்ணாக அமைந்தன. THE SORROWS OF YOUNG WERTHER என்ற அந்த நூல் மூலம் இவரது புகழ் ஐரோப்பா முழுவதும் பரவியது.
ஜெர்மனியின் பண்பாட்டு மையமாகத் திகழ்ந்த WEIMAR நகருக்கு கெத்தா 1775இல் குடியேறினார். அந்த நகரின் சூழ்நிலையில் மனதைப் பறிகொடுத்த அவர் தன் வாழ்நாளின் இறுதிவரை அங்கேயே காலம் தள்ளினார். WEIMARஇல்அவர் PRIVY கவுன்சிலராக ஆனதோடு புகழ் பெற்ற மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது.
FAUST என்ற நாடகத்தையும் WELHELM MEISTER’S APPRENTISSHIP என்ற நூலையும் அவர் எழுதினார், இவைகளை முடிக்க பல ஆண்டுகள் பிடித்தன.
இவருக்கு எழுத்துத்துறையைத் தவிர உடற்கூறு (ANATOMY) தாவரவியல் (BOTANY) வேதியியல் (CHEMISTRY) கட்டடக்கலை (ARCHITECT) பொறியியல் (ENGINEERING) ஆகியவற்றிலும் ஆர்வம் உண்டு.
1786இல் இவர் இதாலி சென்று வந்தார். WEIMAR திரும்பி வந்தவுடன் தனது பணிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இவருடன் வாழ்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
இவருடைய கடைசி கால் நூற்றாண்டுக்கால வாழ்வு இவரை ஜெர்மனியின் மிகப்பெரிய மனிதராக மாற்றியது. ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்தும் பெரிய மனிதர்கள் இவரைக் காணவந்தனர். 83ஆவது வயதில் WEIMAR-இல் கெத்தா உயிர் நீத்தார்.
கெத்தாவுக்கு இந்திய ஸம்ஸ்க்ருத இலக்கியத்தில் பெரும் ஆர்வம் உண்டு. தெய்வீகச் சாகுந்தலம் என்று பாரதி தனது கவிதையில் புகழ்ந்த உலகப் புகழ்பெற்ற காளிதாசனின் சாகுந்தல நாடகத்தைப் புகழ்ந்து கெத்தாவும் கவிதை புனைந்துள்ளார்.
Johann Wolfgang Von Goethe, German poet, dramatist, biologist, theoretical physicist and polymath expressed his admiration in 1792 for Shakulntala as:
Willst du die Blüthe des frühen, die Früchte des späteren Jahres,
Willst du, was reizt und entzückt, willst du was sättigt und nährt,
Willst du den Himmel, die Erde, mit Einem Namen begreifen;
Nenn’ ich, Sakuntala, Dich, and so ist Alles gesagt.—Goethe
Wouldst thou the young year’s blossoms and the fruits of its decline And all by which the soul is charmed, enraptured, feasted, fed, Wouldst thou the earth and heaven itself in one sole name combine? I name thee, O Sakuntala! and all at once is said.
—translation by E.B. Eastwick
It means – If you wish to see the young flowers of Spring and the ready to pluck fruits of Summer at once; or if you wish to see that object which pleases, hypnotises, delights and quenches you at once; or if you wish to see the earth and heaven in one look; I invoke the name of Shakuntala and all quests are answered at once- Goethe
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக் வேதத்தின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளில் ஒன்றைத்தான் இன்னும் ஆராய்ந்து வருகிறோம் . இதில் தேனீக்களுக்கு தேன் கொடுப்பதும் அஸ்வினி தேவர்கள் என்று ஒரு மந்திரம் வருகிறது. இது போல ரிக் வேதம் முழுதும் சோமலதை (Soma Plant) என்னும் அற்புத மூலி கையை பருந்து (Falcon) கொண்டுவந்து தருவதாக மந்திரங்கள் வருகின்றன. இதுபற்றியெல்லாம் மாக்ஸ் முல்லர் கும்பல் மவுனம் சாதிக்கின்றது. அது மட்டுமல்ல அந்தக் கும்பல் சொல்லுவது போல சோம ரசம் என்பது ஒரு போதையூட்டும் பானம் என்பதை நம்புவோமானால் உலகின் முதல் போதை மருந்து நூல் ரிக் வேதம் என்று ஒப்புக்கொள்ள வேண்டிவரும் . ஏனெனில் ரிக் வேதத்தில் பெரும்பாலான மந்திரங்களில் சோம ரஸம் வருகிறது. அதுமட்டுமல்ல சூர்யோதயத்துக்கு முன்னால் , குளித்துவிட்டு, மடி, ஆசாரத்துடன் மந்திரம் சொல்லிக் குடித்ததாக வருகிறது . அது மட்டுமல்ல அரிதான அந்த ரசத்தை கடவுளுக்கும் , குறிப்பாக இந்திரனுக்கும் தீயில் ஊற்றி வீணடித்தையும் நாம் நம்பவேண்டும். சுருக்கமாகச் சொன்னால் மாக்ஸ்முல்லர் கும்பல் முழுக்க முழுக்க அயோக்கியத்தனமான மொழி பெயர்ப்பைச் செய்துள்ளது. ரிக் வேதத்தை அனைவரும் படித்து இந்தக் கும்பலை அம்பலப்படுத்த வேண்டும் .
xxx
தொடர்ந்து இந்தக் கவிதையின் மந்திரங்களைக் காண்போம் (ரிக்.1-112-18)
மந்திரம் 18
இதில் அங்கீரஸ முனிவர், மநு பற்றி வருகிறது; முன்னரே கண்டோம்;
திருடப்பட்ட பசுக்களை “குகையில் ஒளித்து வைக்கப்பட்டதைக் கண்டுபிடித்ததாக” இங்கும் வருகிறது . இதுவும் “கிணற்றில் தள்ளிவிடப்பட்ட முனிவர்களும்” பல இடங்களில் வருவதால் இதை அப்படியே அர்த்தம் செய்யாமல் அதன் மறைபொருளை அறிய வேண்டும். இந்த மந்திரத்தில் அவைகளை மலைகளில் ஒளிந்துகொண்டு இருக்கும் மேகங்கள் என்று உரைகாரர் செப்புவர் .
இந்த மந்திரத்தில் ‘பால் வெள்ளம்’ என்பதை மழைப் பொழிவு என்பர். இதை படிக்கும்போது “பாலுக்கழுத மகனுக்குப் பாற்கடல் ஈந்த பிரான்” என்ற வரி நினைவுக்கு வருகிறது
xxx
மந்திரம் 19
இங்கு விமதன் என்பவருக்கு அஸ்வினி தேவர்கள் மனைவியைக் கொண்டுவந்ததை புலவர் பாராட்டுகிறார். விமதன் என்பவர் ஒரு ரிஷி என்றும் அவருக்கு புருவித்ரன் மகள் மனைவி ஆனதாகவும் உரைகார்கள் உரைப்பர். இதில் அஸ்வினி தேவர்கள் “சிவப்பு வர்ண பசுக்களை” மீட்டதாகப் பாடுகிறார். இதற்கு சிவப்பு நிற மேகங்கள் என்று அர்த்தம் கற்ப்பிக்கப்படுகிறது . அவ்வளவு திருப்திகரமாக இல்லை.
இதைவிட முக்கியமான செய்தி சுதாசுக்கு செல்வம் கிடைக்க வழி செய்த அஸ்வினி தேவர்களே எங்களுக்கும் உதவுங்கள் என்ற வரிகளாகும். சுதாஸ் ஒரு பெரிய மன்னன். மிகப்பெரிய போரில் அவன் வெற்றி பெற இந்திரன் உதவியதாக ஏழாவது மண்டலத்தின் 18-ஆவது பாடலில் நீண்ட வரலாறு கூறப்பட்டுள்ளது .இதற்கு அடுத்த முக்கியக் கவிதை அதுதான். அதைப்பற்றி தனியே எழுதுவேன் . இங்கு ஒரு விஷயத்தை குறிப்பிட்ட விரும்புகிறேன். சு+தாச , திவோ+ தாச /தச என்றெல்லாம் வேத கால மன்னர்களின் பெயர்கள் வருகின்றன. தாச , தஸ்யூ என்பன இழி பொருளில் பயன்படுத்தப்படுவதாக கூறும் கும்பல் இது பற்றி மவுனம் சாதிக்கிறது.
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் 1500 ஆண்டுகளுக்கு ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு செத்து ஒழிந்தது போல வேத கால மன்னர்களிடையேயும் சண்டை நடந்துள்ளது. அதில் பிஜாவான என்ற மன்னரின் மகன் சுதாஸ் வெற்றிபெற்ற செய்தி வருகிறது. வேத காலத்தில் தஸ்யூக்கள் என்னும் திருடர்களுடன் நடந்த சண்டையைக் கூட இனவாதப் போர் என்று மாக்ஸ்முல்லர் கும்பல் சித்தரிப்பது முழுப் பொய். சுதாஸ் சம்பந்தப்பட்ட போரில் பத்து அரசர்கள் சண்டையிட்டதை பின்னர் காண்போம். கரிகாலன் ஏழு அரசர்களை வென்று ஏழாரம் போட்டது போன்ற பெரிய யுத்தம் அது. ஆக சுதாஸ் பற்றிய வெற்றிச் செய்தியையும் இங்கே காண்கிறோம்.
சுதாஸ் பற்றிய ஏழாவது மண்டல துதியில் ஒரு அற்புதமான செய்தி வருகிறது. யமுனை நதி குறிப்பிடப்படுகிறது. மேலை நாட்டுக்கும்பல் இதைப்படித்துவிட்டு நம்ப முடியவில்லையே, புரியவில்லையே என்று பேந்தப் பேந்த முழிக்கிறது . ஏனெனில் ஈரான் நாட்டிலிருந்து டில்லிக்கு அருகில் ஓடும் யமுனை வரையுள்ள உலகின் பிரம்மாண்ட நிலப்பரப்பு பற்றி ரிக் வேத மன்னர் ஆட்சி வருகிறது. இதை மாக்ஸ்முல்லர் கும்பலால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு பக்கம் வேத கால இந்துக்களை நாடோடிக்கும்பல் என்று வருணித்த பயல்கள் இதற்கு விளக்கம் சொல்லமுடியாமல் திணறுகிறார்கள் .
xxx
மந்திரம் 20 (1-112-20)
பூஜ்யு , அத்ரிகு , ருதுஸ் தூபம் ஆகிய மூவர் தொடர்பான அதிசயச் செய்திகள் இங்கே புகழப் படுகின்றன.
அஸ்வினி தேவர்கள் செய்த மிகப்பெரிய சாஹஸச் செயல் புஜ்யுவை நடுக்கடலில் இருந்து கப்பலில் மீட்டதாகும். முன்னரே ஒரு மந்திரத்தில் கண்டோம்.
இங்கு மேலும் இரண்டு செய்திகள் என்னவென்றால் அத்ரிகு, ருதுஸ் துபன் என்ற இரண்டு ரிஷிகளுக்கு அஸ்வினி தேவர்கள் செய்த உதவியாகும். ருதுஸ்தூபனுக்கு உணவு கொடுத்ததாக வருகிறது; இதுபற்றி அதிகம் தெரியவில்லை. அதற்கு முன் வரும் ‘சுபராம்’ என்பதை சாயனர் உரிச் சொல்லாகக் கொண்டு உணவு பற்றி கதைக்கிறார் .
மந்திரம் 21
இந்த மந்திரத்தில் நிறைய அதிசயச் செய்திகள் கிடைக்கின்றன. மற்ற மந்திரங்களில் ‘தேன் சொட்டும் அஸ்வினியர்’ என்று போற்றினர். இங்கே தேனீக்களுக்கு தேன் கொடுத்தவர்களும் அவர்கள்தான் என்கிறார் புலவர்.
ஒரு இளைஞனை குதிரை ரேஸில் வெல்ல வைக்கவும் பாடுகிறார் . அந்த இளைஞன் புருகுத்சன் என்று உரைகாரர் பகர்வர். ஆக இது நாடோடி ஸமூகமல்ல . குதிரை ரேஸ் முதலியன விளையாடிய நாகரீக சமூகம் என்று தெரிகிறது.
கிருசானு யார் ?
இம்மந்திரத்தில் கிருசானுவை அஸ்வினியர் காத்ததாக வருகிறது. இவரை தேவலோக சோம ரஸ பாதுகாவலர் என்று எழுதிவிட்டு 1-155 மந்திரத்தில் இவரை அரக்கர்- ஒரு வேளை அமிர்தமான மழையைத் தடுக்கும் வறட்சி என்னும் அசுரனாக இருக்கலாம் என்று பிதற்றுகின்றனர். மேலை நாட்டு கோமாளிக் கும்பலோ இவரை பார்ஸி மொழி அவஸ்தா புஸ்தகத்தில் உள்ள கெரிசானியுடன் ஒப்பிடுகிறது மேலும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டிய விஷயம் இது.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மோடி அவர்களின் சாதனைகள்!
ச.நாகராஜன்
உலகமே வியக்கும் வண்ணம் தொண்ணூறுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கோவிட் கொள்ளை நோய் பரவிய சமயம் உதவி செய்தவர் பாரத பிரதமர் மோடிஜி. அந்த நாட்டுத் தலைவர்கள் எல்லாம் நெஞ்சு நெகிழ இந்தியாவிற்கு நன்றி தெரிவித்ததை உலகம் அறியும்.
இப்போது கொரானாவின் இரண்டாவது அலை இந்தியாவை வேகமாகத் தாக்கும் போது உலகின் பல்வேறு நாடுகள் நமக்குத் தேவையான எல்லா விதத்திலும் உதவி செய்ய ஆரம்பித்திருக்கின்றன.
ஒரு நல்ல தலைவரை மக்கள் எப்படி ஆதரிக்க வேண்டும்?
மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது அவரை ஊக்குவிக்க வேண்டும். நமக்கு எதிர்பாராத ஒரு ஆபத்து வந்த நிலையில் 130 கோடி பேரும் ஒரே மனதுடன் ஒரே உடலை எடுத்தது போல நின்று ஆபத்தைச் சமாளிக்க வேண்டும்.
ஆனால் இந்தியாவிலோ….
கம்யூனிஸ்டுகளின் கைக்கூலிகளான மாவோயிஸ்டுகள் ஆக்ஸிஜன் வாகன்களை ஏற்றி வரும் தண்டவாளைத்தைப் பெயர்த்து விபத்து ஏற்படச் செய்வதை டிவி காட்சியாகப் பார்த்து திகைக்கிறோம்.
இந்த ஆபத்தை அரசியலாக மாற்றித் தனது ஆதாயத்திற்காகக் “கடுமையாக உழைக்கும்” அரசியல்வாதிகளைப் பார்க்கிறோம்!
போலி செகுலரிஸ்டுகளுக்கோ ஒரே கொண்டாட்டம் – உடனே “எதற்கெடுத்தாலும்” மோடி ராஜிநாமாவை வேண்டுவது அவர்கள் கூடப் பிறந்த பழக்கம்.
தனிப் பெரும் உலகத் தலைவராகத் திகழும் மோடிஜி முதலில் போலி செகுலரிசத்தை உடைத்த முதல் பிரதமராகத் திகழ்கிறார்.
அயோத்யாவில் பூமி பூஜையில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்த முதல் ஹிந்து பிரதமர் அவர் தான்.
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை மீனாக்ஷி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று சொன்னதை நாம் அறிவோம்.
அரசு பணத்தை சோம்நாத் ஆலயத்தை புனர்நிர்மாணம் செய்யப் பயன்படுத்தக் கூடாது என்று காந்திஜி போட்ட நிபந்தனையையும் நாம் அறிவோம்.
இப்படிப் பட்ட “செகுலர் இந்தியாவில்” மசூதி வழிபாட்டு உரிமையில் யாரும் மூக்கை நுழைக்கக் கூடாது; நுழைப்பது இல்லை.
கிறிஸ்தவ சர்ச்சுகள் வழிபாட்டு உரிமையில் யாரும் மூக்கை நுழைக்கக் கூடாது; நுழைப்பதும் இல்லை.
ஆனால் “இளிச்சவாய் ஹிந்துக்களை” எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் புரட்டிப் போட்டு அடிக்கலாம்.
போகட்டும் அயோத்தி ராமர் காப்பாற்றுவார் இந்தியாவை! – பெரும் வல்லரசாக ஆகி வருகிறது இந்தியா என்பதை உலக நாடுகள் அனைத்தும் அறிந்து விட்டன; அங்கீகரித்தும் விட்டன!
இனி மோடிஜி என்ன செய்தார் இதுவரை என்று ஒரு பார்வையைப் பார்த்துத் “தொலைவோம்!
1) 12000 கிலோமீட்டர் நெடுஞ்சாலையை இது வரை அமைத்துள்ளார்
2) 70 லட்சம் வீடுகளைக் கட்டி விட்டார்
3) பல லட்சம் கழிப்பறைகள் பாரதமெங்கும் உருவாக்கப்பட்டு விட்டன
4) 15 புதிய எய்ம்ஸ் – AIIMS- மருத்துவ மனைகள் அமைக்கப்பட்டுள்ளன.
5) புதிய சப்மரீன்கள் கட்டப்பட்டுள்ளன
6) தேஜஸ் விமானம் இந்தியாவிலேயே கட்டப்பட்டுள்ளது
7) ஒரு சர்ஜிகல் ஸ்டிரைக்கை செய்து நமது பலத்தையும் உறுதியையும் காண்பித்துள்ளோம்
8) ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் ஓடி ஒளிந்துள்ளனர்
9) மதமாற்றம் செய்ய கோடிக்கணக்கில் உள் நாட்டில் வெவ்வேறு வழியில் வந்த “கள்ளப் பணம்” தடுக்கப்பட்டுள்ளது
10) முப்படைகளும் வலுவாக்கப்பட்டுள்ளன
11) ராம் மந்திரை அயோத்யாவில் அமைக்கும் கனவு நனவாக ஆகி வருகிறது 12) ஆர்டிகிள் 370 பற்றிய தீர்மானம்
13) 65 நாடுகளுடன் வணிக உறவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன
14) எந்த சீனாவைக் கண்டு நாம் பயந்து வந்தோமோ அந்த சீனா நம்மைக் கண்டு பயப்பட ஆரம்பித்திருக்கிறது
15) க்ரோத் ரேட் மேம்பட்டு வருகிறது (கொரானாவால் ஏற்பட்ட தற்காலிக சரிவு இருக்கிறது என்பது உண்மையே)
16) 12 ரூபாய்க்கு 2 லட்சம் இன்சூரன்ஸ் தொகை உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது
17) டீ மானிடைசேஷன் மூலமாக பாகிஸ்தானுக்கு அடி; நக்ஸலைட்டுகளுக்கும் தீவிரவாதிகளுக்கு அடி. அவர்கள் சேர்த்து வைத்தக் கள்ளப்பணம் அம்போ!
18) சவூதி அரேபியாவில் ஷேக் ஒரு கோவில் கட்ட முனைந்துள்ளார்
19) காஷ்மீரில் அனைவருக்கும் இப்போது சரிசம உரிமை உண்டு; சொத்துக்கள் வாங்கலாம்; விற்கலாம்
20) சொந்தக்காரர்களுக்கும் வாரிசுகளுக்கும் தவறாமல் அளிக்கப்படும் சலுகைகள், பதவிகள் இல்லை சொந்த அம்மா ஆடோரிக்ஷாவில் தான் போகிறார். சகோதரர்கள், உறவினர்கள் அவரவர் சாதாரண வேலைகளைத் தான் பார்த்து வருகின்றனர்.
21) உலகம் வியக்கும் வண்ணம் விண்வெளியில் வலம் வருகிறோம். நமது இஸ்ரோ அபார சாதனைகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. அது வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது!
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
மொத்தத்தில் உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு தனி மரியாதை உள்ளது.
இந்தியன் என்று தலை நிமிர்ந்து கொண்டு சொல்லலாம்.
ஆனால் இது பொறுக்காத அரசியல் தலைவர்கள், போலி செகுலரிஸ்டுகள், அவர்களுக்குத் தாளம் போட்டுப் பிழைக்கும் பத்திரிகைகள், எழுத்தாளர்கள், தொலைக்காட்சிகள், பேச்சாளர்கள் அதிகமாகி வருவதும் உண்மையே!
அவர்களைப் பார்க்க – கைப்புண்ணை கண்ணாடி போட்டுப் பார்க்க வேண்டாம் என்பது போல – பெரிய முயற்சி ஒன்றும் வேண்டாம்.
பார்த்தாலேயே தெரியும் அவர்கள் யார் யார் என்று! இவர்களைப் புறம் தள்ளி ஒதுக்கி வைப்போம்.
மோடிஜி அவர்களுக்கு இந்த கொரானா காலத்தில் கூட இருந்து உறுதுணையாக நிற்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை. செய்வோம்; கொரானாவை வெல்வோம்!
***
NARENDRA MODI’S ACHIEVEMENTS IN SEVEN YEARS
*What PM Modi did in 7 years…*
International Memberships
● EBRD Membership
● International Energy Agency
● Australia Group
● SCO Membership
● Wassenaar Arrangement
● MTCR Membership
● CREN
● Asian Infrastructure Investment Bank
● International Solar Alliance
Security Pacts
● Military Logistic Pact ‘LEMOA’ with USA
● Military Logistic Pact ‘MLSA’ with France
● Military Logistic Pact with South Korea
● Cross Servicing Agreement ‘ACSA’ with Japan.
● MLSA pact with Australia.
● Military Logistic Pact with Russia.
● Access to ‘Sabang Port’ Indonesia
● Naval Base at ‘Assomption Island’
● Military base in ‘Agalega Island’
● Access to ‘Duqm Port’ in Oman
● To Build ‘Trincomalee Port’ Sri Lanka
● Maritime Logistic Pact with Singapore
● White Shipping Pact with Israel.
Big Steps
● OROP for Veterans
● 7th Pay Commission
● MSP Increased For Farmers
● PM Kisan Samman Nidhi
● MSME 1 Crore Loan
● GST Slab Reduction
● MSME 40 Lac Turnover Limit for GST
Financial Saving
● Black Money Recovered : 94K Cr+
● Undisclosed Income : 1.3 lac cr+
● NPA Recovered : 5.63 lac cr+
● Extra Saving for Defence : 1.92 lac cr+
● DBT Saving : 1.78 lac cr+
● Disinvestment Saving : 2.8 Lac cr+
● Auction of Mines : 1.81 lac cr+
Major Defence Deals
● Rafale Multirole Fighter
● S-400 SAM
● Project 17A Frigates
● Barak-8 MRSAM
● ‘Arihant Class’ Nuclear Submarine
● ‘Apache’ & ‘Chinook’ Helicopter
● AKULA-II Nuclear Submarine
● Project 11356 class Frigates
● M777, ‘Dhanush’ Howitzer Artilary
● K-9 Tracked Howitzer
● AK-203 Assault Rifle
● “MH-60R” Naval Helicopter deal signed.
Big 56″ Actions
● Mayanmar Strike
● Surgical Strikes
● Balakot Air Strike
● Banned Jamaat-e-Isl’ami
● Doklam Stand-off
● JKLF Banned
● Sealing of Border with ‘Pak’ & ‘Bangladesh’
● No Major Terrorist Attack on Civilians
● Galwan Stand-Off
Big Changes
● Swiss Bank Deposits Reduced By 91%
● Extreme Poor reduced to 5 Cr from 26 Cr in 2011
● Ease of Doing Business Ranking 63
● UPI transactions 2,641 mn in Apr’21
● Highest Foodgrain Production 303 mn tonne in 2020-21.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Let us continue with the Rigvedic hymn 1-112
Mantra 18 ( RV 1-112-18)
Here Angiras and Manu are referred to.
Angiras is a seer. Manu is a Rajarsi, already dealt with in mantra 16.
Here we come across ‘Flood of Milk’ , also cows shut up in the cave. The explanation given says, the rain clouds prevented from pouring out their water.
Clouds described as cows and ‘their detention in the caves’ is used very often in the Vedas.
Mantra 19
Here we come across two more historical personages
Seer Vimada and King Sudas.
Foreign jokers are silent about Su+ Das, Divo +Dasa.
In other places they describe ‘das’ ‘dasa’ ‘dasyu’ as derogatory terms.
But Vedic kings themselves had these “das and dasa” suffixes
Vimada got a wife through the Asvins. Commentators say it was the daughter of Purumitra. Rishi Vimada’s name occurs in five more hymns.
But the most important name is Sudas, son of Pijavana, King of the Trtsus.
It was one of the historical wars where Sudas won with the help of Indra.
Fully described in the commentaries of Rigveda 7-18
Foreign clowns were surprised and baffled because the Seveth mandala hymn mentioned River Yamuna. Foreign clowns struggle to get the meaning of 7-18. Griffith as usual say it is difficult to understand because of the difficult phraseology.
Rig Veda’s most important war comes upto River Yamnua!!
Several thousand square miles from Iran to Uttarpradesh covered by the Rig Veda.
Anyway I will deal with that’s hymn separately.
Here ruddy cows are described as red clouds!
Mantra 20
Mantra gives more mysterious names in addition to famous Bhujyu, already dealt with here in mantra 6. Asvins’ greatest sea adventure is with Bhujyu.
But here Adhrigu is also said to have been protected by the Asvins.
Sayana says he was another seer .
Another name Rtastup is also portrayed as a seer by Sayana. He got food from the Asvins.
We don’t know much about these seers.
Another word Subharaa is an adjective according to Sayana.
It may also be the name of a person.
Mantra 21
Asvins are always associated with Honey. In this mantra Asvins are said to have provided the delicious honey to the bees!
No commentator explains this!!
Here we come across one more person Krsanu, who is one of the celestial guardians of Soma. RV 4-27-3 where Krsanu occurs is a mysterious hymn which associated Soma with Falcon or Eagle.
Through out the Vedas we see falcons and eagles bringing mysterious Soma. But some half -baked botanists and doctors described it as a mushroom , this and that, 125 years ago. They could not explain why Eagle is associated with Soma. Had the foreigners really identified Soma they would have marketed it like Coca Cola by this time and made billions of dollars. All their identifications are wrong.
Why should Krsanu protect it in heaven?
More over Krsanu is helped in war according to a commentator. What war?
He is identified with Keresani in Avesta, which is doubtful.
This mantra says that Asvins helped a young man to win a horse race. Commentators say it is Purukutsa.
Vedas mentioned Horse races, festivals and dances in addition to Kings.So it was not a nomadic community. They ruled a vast area from Afghanistan/Iran to Uttar Pradesh!
The geography Rig Veda baffled the foreign jesters and so they tried to identify the actual rivers with some imaginary rivers!
Don’t take my word for it. If you read the entire Rig Veda and loot athe commentaries of 25+ jokers , you would also come to the same conclusion. What is it?
Vedas, as the name suggests, is Knowledge, not nomadic poems.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
T S ELIOT தாமஸ் ஸ்டெர்ன்ஸ் எலியட்
(1888 – 1965)
தாமஸ் ஸ்டெர்ன்ஸ் எலியட் (THOMAS STEARNS ELIOT) இந்த நூற்றாண்டின் முக்கியமான கவிஞரும் இலக்கிய விமர்சகரும் ஆவார். அமெரிக்காவில் மிஸ்ஸௌரி மாநிலத்திலுள்ள செயிண்ட் லூயிஸில் பெரிய குடும்பத்தில் பிறந்தார். அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக் கழகத்திலும் பாரிஸில் சார்போன் பல்கலைகழகத்திலும் பயின்றார். 1914இல் ஆக்ஸ்போர்டிலுள்ள MERTON கல்லூரிக்குச் சென்றார்.
பின்னர் இங்கிலாந்தில் பள்ளி ஆசிரியாராகவும் வங்கி ஊழியராகவும் பணியாற்றினார்.
1915இல் அவர் திருமணம் செய்து கொண்டார். அதே ஆண்டில் முக்கியமானதொரு கவிதையை எழுதினார். அதற்கடுத்த ஆறு ஆண்டுகளில் மேலும் பல கவிதைகளையும் இலக்கிய கட்டுரைகளையும் படைத்தார். ஒரு பத்திரிகையின் உதவி ஆசிரியராக அமர்ந்தார்.
1922ஆம் ஆண்டில் முக்கியக் கவிதையான THE WASTE LANDஐ வெளியிட்டு விருதும் வென்றார். அது ஒரு முக்கிய இலக்கிய விருதை வென்றது. இந்த கவிதை நீண்ட சிக்கலான கவிதை. பலருக்கு இந்த கவிதை பிடிக்கவில்லை. இருந்தபோதும் இந்தக் கவிதை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு T S ELIOT அவர்களின் புகழைப்பரப்பியது.
வேஸ்ட் லாண்ட் கவிதையில் இந்திய உபநிஷத வரிகளை பயன்படுத்தியுள்ளார். இந்திய தத்துவ ஞான விஷயங்களில் மிகவும் ஈடுபட்டவர் எலியட்.
THE CRITERION என்னும் பத்திரிகையையும் துவக்கினார்.
1932ஆம் ஆண்டில் அமெரிக்கா சென்றார். 18 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவில் மீண்டும் காலடி எடுத்து வைத்தபோது அவர் ஒரு பிரிட்டிஷ் பிரஜை.
HARVARD பல்கலைகழகத்தில் கவிதைத் துறையில் பேராசிரியராகச் சேர்ந்தார்.
1939ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கான கவிதை நூல் “OLD POSSUM’S BOOK OF PRACTICAL CATS” என்ற நூலை வெளியிட்டார்.
பல நாடகங்களை எழுதத்துவங்கிய இவர் THE FAMILY REUNION, MURDERIN THE CATHEDRAL ஆகிய நாடகங்களை எழுதினார்.
1948ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபெல் பரிசை வென்றார். அதே ஆண்டில் ஆர்டர் ஆஃப் மெரிட் (ORDER OF MERIT) விருதும் வென்றார்.
19 Feb 2014 — But 3000 years before Kanchi Shankaracharya and T S Eliot, the Vedic seers of the Brihad Aranyaka (Big Forest) Upanishad wrote this episode. It …
–SUBHAM–
tags- அமெரிக்க கவிஞர், டி .எஸ். எலியட், Wasteland, T S Eliot
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அதிசயக் கனவுகள் -2 (First part of the speech was posted last Tuesday)
லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 31-5-2021 அன்று ஒளிபரப்பான உரை
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். கனவு பற்றிய அருட் பாசுரங்கள் ஏராளம்.
ஆண்டாள் தமிழை ஆண்டாள்! ஆண்டாள் கண்ட கனவோ தெய்வீகக் கனவு.
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து,
நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்!
என்று ஆரம்பித்து மொத்தம் பத்துப் பாடல்களில் தன் கனவை அழகுத் தமிழில் பாடுகிறார் ஆண்டாள். நாச்சியார் திருமொழியின் வானளாவிய புகழை வர்ணிக்கவும் முடியுமோ! இந்தப் பத்து கனாப் பாடல்களிலும் வல்லவர் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே என்று பலனையும் அவரே சொல்கிறார். இப்படி இலக்கியச் செல்வம் ஒரு புறம் இருக்க அவற்றுடன் பிரபல விஞ்ஞானி ஜங் பற்றிச் சிறிது பார்த்தோம்.
கனவின் மீது தீவிரமான ஆர்வம் அவருக்கு ஏற்பட்டதால் ஜங் கனவுகளைப் பற்றித் அறிவியல் பூர்வமாக ஆராய ஆரம்பித்தார். ஏராளமான சுவாரசியமான கேஸ்களை அன்றாடம் அவர் சந்திக்க வேண்டி இருந்தது. ஒரு சுவையான கேஸ் இது:
ஒரு பெண்மணி அவரிடம் சிகிச்சைக்காக வந்தார். அபாரமான புத்திசாலிப் பெண் அவர்.தனது கனவுகளை ஜங்கிடம் விவரிக்க ஆரம்பித்தார். அவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டார் ஜங்.
ஆனால் அவரிடம் பேசுவதிலிருந்து உருப்படியாக ஒன்றையும் அவரால் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர் கனவுகளுக்கு அவரால் விளக்கமும் கண்டு பிடிக்க முடியவில்லை. ‘சம்திங் ராங். ஒரு வெறுமை இருக்கிறது’ என்பதை அவர் புரிந்து கொண்டார். ஜங் இப்படிப் புரிந்து கொண்டதை அந்தப் புத்திசாலிப் பெண்மணியும் புரிந்து கொண்டார்.
இதைப் பற்றிப் பேசி விட வேண்டியது தான் என்று ஜங் தீர்மானித்தார். பேச வேண்டிய தினத்திற்கு முந்தைய நாள் அவர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவு ……
பிற்பகல் நேரம். நல்ல சூரிய ஒளியில் ஜங் ஒரு பள்ளத்தாக்கில் நடந்து கொண்டிருக்கிறார். அருகே ஒரு செங்குத்தான மலை. அந்த மலையின் மீது ஒரு கோட்டை. அந்தக் கோட்டையின் மேலிருந்த உயரமான கோபுரம் ஒன்றில் ஒரு பெண்மணி தடுப்புச் சுவரின் அருகில் அமர்ந்து கொண்டிருக்கிறார். அவரைப் பார்ப்பதற்காக ஜங் கழுத்தைப் பின்னால் மிக நீட்டிப் பார்க்க வேண்டி இருக்கிறது. ஜங் கழுத்தை நீட்டிய போது……
க்ரிக் என்ற சத்தம் கழுத்தில் கேட்க ஜங் உறக்கம் கலைந்து எழுந்தார். தன் கனவில் பார்த்த பெண்மணி, மறு நாள் பேச நிச்சயித்திருந்த அதே பெண்மணி தான். ஜங்கிற்கு இப்போது விஷயம் புரிந்து விட்டது. அவரை அவ்வளவு தூரம் கழுத்தை நீட்டிப் பார்க்க வேண்டி இருக்கிறதென்றால்…..
ஜங் மறுநாள் தன் கனவை அந்தப் பெண்மணியிடம் அப்படியே சொன்னார். அபாரமான புத்திசாலியான அந்தப் பெண்மணியும் தான் உள்ளபடியே விஷயங்களைச் சொல்லாமல் மறைப்பதை ஜங் கண்டு பிடித்து விட்டார் என்பதைப் புரிந்து கொண்டார். அந்தக் கணத்திலிருந்து அனைத்தையும் ஒழுங்காகச் சொல்ல ஆரம்பித்தார். சிகிச்சை நல்ல முறையில் தொடங்கி முன்னேறியது.
நனவு நிலைக்கும் கனவுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு நோயாளி ஒரு கனவைச் சொல்கிறார் என்றால் அது எப்படி தன்னைப் பாதிக்கிறது என்று பார்ப்பார் ஜங். பாதிப்பே இல்லை என்றால் ஏதோ ஒரு தவறு இருக்கிறது என்று அர்த்தம். ‘காயப்பட்ட சிகிச்சையாளர் தான் -Wonded healer – இதுவே அவர் coin செய்த சொற்றொடர் தான் – சரியான சிகிச்சை தர முடியும்’ என்ற பொருள் பொதிந்த வாக்கியத்தை உளவியல் சிகிச்சையாளரான ஜங் அடிக்கடி சொல்வார்!
உளவியல் டாக்டராக இருந்தாலும் ஜங்கிற்கு ஏராளமான அமானுஷ்யமான அனுபவங்களும் எதிர்காலத்தைச் சுட்டிக்காட்டும் அபூர்வமான கனவுகளும் அடிக்கடி வந்தன.
1913ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு நாள் ஜங் தனியாக பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு ஒரு காட்சி தோன்றியது. வட கடலுக்கும் ஆல்ப்ஸ் மலைக்கும் இடையில் உள்ள பகுதியில் பிரம்மாண்டமான வெள்ளம் வடக்குப் பகுதியில் உள்ள தாழ்வான நிலப்பகுதியில் பிரவாகமாகப் பாய்வது போன்ற காட்சியை அவர் கண்டார். அது ஸ்விட்சர்லாந்தை நோக்கி நகர்ந்து வரும் போது தனது நாட்டைக் காப்பாற்றுவதற்காக அங்கிருந்த மலை உயரமாக வளர்ந்து கொண்டே போவதையும் அவர் பார்த்தார். ஒரு பேரபாயம் நிச்சயமாக வரப் போகிறது என்பதை ஜங் உணர்ந்தார்.
மஞ்சள் அலைகளில் அடித்துச் செல்லப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்தது. பிறகு வட கடல் முழுவதும் இரத்தமாக ஆனது. இந்தக் காட்சி ஒரு மணி நேரம் வரை நீடித்தது. ஜங் குழம்பிப் போய் மயக்கமடைந்தார்.
இரண்டு வாரங்கள் கழித்து அதே காட்சி திரும்பவும் தோன்றியது. இப்போது காட்சி மிகவும் தெளிவாக இருந்தது, அவருக்குள் ஒரு குரல் தெளிவாகப் பேசியது:” இதோ பார் இது நிச்சயமான உண்மை, இப்படித் தான் நடக்கப் போகிறது. நீ சந்தேகப்படாதே!
அந்த ஆண்டு குளிர் காலத்தில் ஒருவர், ‘சமீப காலத்தில் உலகின் அரசியல் நிலவரம் எப்படி இருக்கும்’ என்று ஜங்கிடம் கேட்டார்,”தனக்கு அது பற்றி ஒன்றும் தோன்றவில்லை என்றும் ஆனால் ரத்த ஆறு ஓடுவதைப் பார்ப்பதாகவும்” ஜங் பதில் கூறினார்,
தான் கண்ட காட்சி ஒரு புரட்சியைக் குறிக்கிறதோ என்று சந்தேகப்பட்ட ஜங் அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.
இதே போல 1914ஆம் ஆண்டு கோடை காலத்திலும், வசந்த காலத்திலும் ஆர்க்டிக்கில் குளிர் அலை அடித்து நிலமெல்லாம் பனிப்பாறைகளாக ஆவதாக அவர் மூன்று முறை கனவு கண்டார்.
இப்படி எல்லாம் கனவுகள் வருகிறதே, ஒரு வேளை தனக்கு சைக்கோஸிஸ் வியாதி வந்து விட்டதோ என்று கூடஅவர் எண்ணலானார். ஆனால் நடந்தது என்ன? பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்ட முதலாம் உலகப் போர் அந்த ஆண்டே ஆகஸ்ட் முதல் தேதி அன்று தொடங்கியது. இப்படித் தமது கனவுகள் எல்லாம் பலிப்பதைக் கண்ட அவர் தீவிர ஆராய்ச்சியை மேற்கொண்டு அவற்றின் மூலம் பல்வேறு உண்மைகளைக் கண்டார். கனவுகளுக்கும் நனவு நிலைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதைக் கண்ட அவர், நோயாளிகளைக் குணப்படுத்த அவர்களின் கனவுகளைக் கேட்டு அதற்கு உரிய உண்மைப் பொருளை அவர்களிடம் விண்டுரைத்து அவர்களைக் குணப்படுத்தினார்.
கள்ளம் கபடமற்ற எளியவர்களை அவரால் சுலபமாகக் குணப்படுத்த முடிந்தது, அவரே ஒரு முறை கூறினார் இப்படி:” எனது நோயாளிகளிலேயே நன்றி கெட்டவர்களும் குணப்படுத்துவதில் மிகுந்த கஷ்டங்களைத் தந்தவர்களும் (வழக்கமாகப் பொய் சொல்பவர்களைத் தவிர அவர்களுக்கு அடுத்ததாக உள்ள) புத்திசாலிகள் தாம்! அவர்களின் ஒரு கை என்ன செய்கிறது என்று அடுத்த கைக்குக் கூடத் தெரியாது!”
அவர்களிடம் ஒரு “கம்பார்ட்மெண்ட் சைக்காலஜி” இருப்பதை அவர் அனுபவரீதியாக உணர்ந்தார். எதையும் அறிவு ரீதியாகச் சமாளிக்க முடியும் என்று நம்பும் அவர்கள் உணர்ச்சி கைமீறிப் போகும் சமயத்தில் மிகவும் கஷ்டப்படுகின்றனர் என அவர் கண்டார். எளிதில் மனதில் எந்த எண்ணம் ஓடுகிறது என்பதைக் கண்டுபிடிக்க அரிய முறை ஒன்றை ஜங் வகுத்தார். நூறு வார்த்தைகளை அவர் சொன்னவுடன் எதிரில் இருப்பவர் உடனடியாக அந்த வார்த்தைகளுடன் தொடர்பு கொண்ட தனக்குத் தோன்றும் வார்த்தைகளைச் சொல்ல வேண்டும். பதில் சொல்ல எடுத்துக் கொண்ட நேரம், சொன்ன வார்த்தை இவற்றின் மூலமாக எதிரில் இருப்பவரின் உண்மையான எண்ணம் என்ன என்பதை ஜங்கால் கண்டுபிடிக்க முடிந்தது. இன்று பரவலாக நடைமுறைக்கு வந்து விட்ட இந்த ‘வோர்ட் அசோசியேஷன் டெஸ்டை’ முதலில் வகுத்தவர் ஜங் தான்! ஆக, கனவுக்கும் நனவுக்கும் நிச்சயம் ஒரு தொடர்பு இருப்பதை உறுதி செய்தார் ஜங்! கனவு, ஆவி ஆராய்ச்சி ஆகியவற்றில் ஈடுபட்ட ஜங் அவற்றிற்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிவியல் ரீதியாக அளித்தார். அவரை உலகெங்கும் பல மாநாடுகளிலும் நிகழ்ச்சிகளிலும் பேச அழைத்தனர். விஞ்ஞானி ஜங்கினால் கனவு என்பது அறிவியல் உலகில் ஒரு புது அந்தஸ்தைப் பெற்றது என்பது மட்டும் உண்மை!!
Precognitive Dreaming என்ற வரும்பொருள் உரைக்கும் கனவுகளில் பிரம்மாண்டமான விபத்துக்கள் முன்பேயே கனவில் கண்டு அவை நிகழ்வதற்கு முன்பேயே கூறி இருக்கும் நிகழ்ச்சிகள் ஏராளம் உண்டு. டைட்டானிக் கப்பல் மூழ்கப் போகிறது என்பதை பிரபல நாவலாசிரியரான க்ரஹாம் க்ரீன் (Graham Green) தனது கனவில் கண்டார். அப்போது அவருக்கு வயது ஐந்து தான். இவை போன்ற நிகழ்ச்சிகளால் ஆச்சரியம் அடைந்த உளவியலாளர் ஜே.ஸி.பார்க்கரும் (J.C.Barkar) பத்திரிகையாளர் பீட்டர் பேர்லியும் (Peter Fairley) ஒரு அறிக்கையை வெளியிட்டனர். இப்படி முன்னாலேயே கனவு காண்போர் தங்கள் கனவு விவரங்களைத் தெரிவிக்குமாறு அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு 76 பதில்கள் வந்தன. அதில் 22% நுணுக்கமான விவரங்களோடு கனவுக் காட்சிகள் இருந்தன. இதனால் இன்னும் உற்சாகம் அடைந்த அந்த இருவரும் Premonitions Bureau என்ற ஒரு நிறுவனத்தையே ஆரம்பித்தனர். இதன் முக்கிய நோக்கம் வருங்கால விபத்துக்கள் பற்றிய கனவுக் காட்சிகள் தங்களுக்குக் கிடைத்தால் விபத்துக்களைத் தடுத்து விடலாம் இல்லையா? ஆனால் இந்த ஆய்வு தொடரவில்லை. சில ஆண்டுகளில் இது நின்று போனது. இதே போன்று அறிவியல் அடிப்படையில் இன்னும் பெரிய ஆய்வு ஒன்றை 1947இல் பிரிட்டிஷ் உளவியலாளர் ஆலிஸ் பக் (Alice Buck) என்ற பெண்மணி தொடங்கினார். அவரும் அவரது இரு துணை ஆய்வாளர்களும் விவரமான கனவு டயரிகளைத் தொகுத்து தங்கள் பதிவுகளை ‘பாதி உண்மையானவை’ – Partial Predictions- என்பவற்றோடு பொருத்திப் பார்த்தனர். அவர்களது பிரமிக்க வைக்கும் முடிவுகள் 1954-56 இல் வெளிவந்தது.
இப்படிப்பட்ட கனவுகள் ஏன், எப்போது, யாருக்கு ஏற்படுகிறது என்பதை அறிவியல் கண்டுபிடிக்க முடியவில்லை. அருளாளர்களுக்கோ காட்சிகள் தரிசனங்களாக வருகின்றன. ஸ்வாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்லலாமா, கடலைக் கடப்பது முறையா என்று முடிவெடுக்க முடியாமல் தத்தளித்த நிலையில் அவரது கனவிலே பகவான் ராமகிருஷ்ணர் வந்து கடல் மீது தோன்றி, வா, வா என்று அழைத்தார். அதனால் உள்ளம் பூரித்த ஸ்வாமிஜி குருநாதரின் ஆணை கிடைத்து விட்டது என்று அமெரிக்கா சென்றார். ஹிந்து மதத்தை ஏற்றம் பெறச் செய்தார்; உலகப் புகழ் பெற்றார்.
பிரபல நூலாசிரியரான பால் பிரண்டன் (Paul Brunton) காஞ்சி பரமாசார்யரை செங்கல்பட்டில் தரிசனம் செய்து விட்டு சென்னை திரும்பினார். அன்று இரவு அவர் கனவில் ஒரு தரிசனம் கிடைத்தது. பரமாசாரியர் அவர் கனவில் தோன்றினார். ‘எளிமையாக இரு நீ தேடுவது கிடைக்கும்’ என்று அவர் அருளாசி கூறினார். இதனால் மிக்க மகிழ்ச்சியுற்ற பால் பிரண்டன் அவரது அறிவுரையின் படி திருவண்ணாமலை சென்று பகவான் ரமணரை தரிசித்தார். அதனால் ரமணரை மேலை நாடுகளுக்கு அறிமுகப்படுத்தினார். அதன் மூலமாக உலகெங்கிலுமிருந்து ஆன்மீகத் தேடலில் இருந்தோர் ஏராளமாக திருவண்ணாமலை வரத் தொடங்கினர்.
அரவிந்தரோ பின்னால் தான் சந்திக்கப்போகும் மனிதர்களை முன்பாகவே தனது காட்சிகளில் கண்டார். இதை அவர் ஒரு ‘உள்ளுணர்வு சக்தி’ – It is an intuitive Power – என்கிறார் அவர். ஒரு காட்சியில் அவர் கவர்னராக ஆக வேண்டும் என்று விரும்பிய ஒருவரைக் கண்டார்; அவரை நேரில் காண முயன்றார். ஆனால் அவர் சென்று பார்த்த அலுவலகத்தில் இருந்தவரோ வேறு ஒருவர். அவர் விரும்பியவர் அங்கு கவர்னராக இல்லை. சிறிது காலம் கழித்து அவரது மைத்துனர் போஸ் என்பவர் அரசு அதிகாரி ஒருவருடன் சண்டை போட, அதன் காரணமாக அவரை அரசு அலுவலகம் வரச் சொல்லி சம்மன் ஒன்று வந்தது. ஆனால் கடிதம் போஸ் என்பதற்கு பதிலாக கோஷ் என்று இருக்கவே அரவிந்த கோஷ் தன்னை அழைப்பதாக எண்ணி அங்கு சென்றார். அங்கே தான் யாரைக் கனவில் முன்னர் கண்டாரோ அவரே கவர்னராக வீற்றிருந்தார். இதே போல பின்னால் தன்னிடம் வரப் போகின்ற பிரபல எழுத்தாளர் வ.ரா.வை அவர் முன்னாலேயே தனது காட்சியில் கண்டார். இந்த இரு விவரங்களையும் அவரே பதிவு செய்துள்ளார்.
இந்த தரிசனக் காட்சிகள் எனப்படும் கனவுக் காட்சிகள் ஒரு புறம் இருக்க கனவு என்பதற்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தந்து அனைவரையும் ஆன்மீகத்தில் உயரத்தில் ஏற்றுகிறார் பகவான் ரமண மஹரிஷி. பக்தர் ஒருவர் அவரிடம் கனவு நிலைக்கும் நனவு நிலைக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று கேட்கிறார். அதற்கு பதில் தரும் மஹரிஷி ரமணர், கனவில் ஒருவர் அநேக வெவ்வேறு உடல்களை எடுக்கிறார், புலன் தொடர்பு வந்தவுடன் கனவிலிருந்து விடுபட்டு தனது உடலுக்குத் திரும்புகிறார் என்றார்.
ஜாக்ரத, ஸ்வப்ன, சுஷுப்தி ஆகிய மூன்று நிலைகளைப் பற்றி ஹிந்து சாஸ்திரங்கள் மிக விரிவாக துல்லியமாக, உண்மைகளை எடுத்துரைக்கின்றன. இதை மிகத் தெளிவுற விளக்கி பிரம்மத்தை விளக்கியுள்ளார் ரமண மஹரிஷி. விரிவாக கவனத்துடன் படிக்க வேண்டிய உரைகள் அவருடையவை. கனவு என்பது யாரால் சொல்லப்படுகிறது? விழித்திருக்கும் ஒருவனால் விழிப்பு நிலையில் சொல்லப்படுகிறது அது. ஆனால் கனவு நிலையும் நனவு நிலையும் உண்மைப் பரம்பொருளின் முன்னர் உண்மையற்றவை. Unreal! அத்வைத நோக்கில் உலகம் மாயை!! Unreal என்று உலகை எப்படிச் சொல்லலாம்? மலடி மகன், வானத்துப் பூ என்று சொல்வது போல அது உண்மையற்ற வார்த்தையா? இல்லை. எப்படி ஒருவன் கனவில் தனது தேவைகளை கனவிலேயே பூர்த்தி செய்து கொள்கிறானோ அதே போலத் தான் நனவான நிஜ வாழ்க்கையிலும் நடக்கிறது.
ஒரு எளிய உதாரணத்தைச் சொல்லலாம். இரவிலே கயிறை ஒருவன் பாம்பு என்று நினைத்து பயப்படுகிறான். ஆனால் அது உண்மையில் கயிறே என்று ஒருவன் எடுத்துச் சொல்லும் போது உண்மை தெளிவாகிறது. உலகம் நிலை இல்லாதது என்பது இது போலத் தான். ஆனால் சாஸ்திரங்கள் என்ன கூறினாலும் உலகம் இருக்கத்தானே செய்கிறது; நடக்கிறோம், பேசுகிறோம், உண்கிறோமே! இதற்கு பகவான் ஒரு உதாரணத்தைத் தந்து விளக்குகிறார்: ஒரு கண்ணாடியில் ஒரு காட்சியை நாம் காண்கிறோம். அது பிரதிபிம்பம் என்று தெரிந்தாலும் அதை நம்புகிறோம், அது இருக்கவே செய்கிறது. அதே போலத்தான் பிரதிபிம்பமாகத் தெரியும் உலகமும். கனவில் ஒருவன் எப்படி பொருள்களைப் பார்க்கிறானோ, பேசுகிறானோ, உண்கிறானோ திருப்தி அடைகிறானோ அது போலத்தான் இதுவும்! ஆக உலகம், வாழ்க்கை, நனவு அதாவது -ஜாக்ரத கனவு அதாவது- ஸ்வப்ன, மற்றும் சுஷும்னா ஆகிய நிலையை அறிய நான் யார் என்று ஆன்ம விசாரம் செய் என்று அருளுரை பகன்றார் அவர். எளிய வழியான இது பிரம்மத்தை அறிய அடைய சுலபமான வழி என்பது அவரது அருளுரை!
சாமான்ய மனிதனுக்கு கனவு பற்றி எவ்வளவு ஆர்வம் இருக்கிறதோ அதே அளவு ஆர்வம் விஞ்ஞானிகளுக்கும் இருக்கிறது. இன்னும் வருங்காலத்தை நிகழ்காலத்தில் எப்படி காண முடிகிறது என்பது காலத்தைப் பற்றிய ஒரு ஆய்வாகும். அதன் உள்ளே நுழைந்தால் பிரமிக்க வைக்கும் அரிய உண்மைகளைக் காணலாம். அதை சமயம் கிடைக்கும் போது இன்னொறு முறை பார்ப்போம்.
ஆக, கனவு என்பது சாதாரண ஒரு விஷயம் என்று அதை ஆராயப் புகுந்தால் அது பிரம்ம ஞானம் வரை அடையும் வழியைச் சுட்டிக் காட்டுகிறது. நல்ல கனவு காண்போம்; அந்தக் கனவு மெய்ப்பட வாழ்வோம். நன்றி வணக்கம்.