Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
HOMER
ஹோமர்- கிரேக்க நாட்டின் புகழ்பெற்ற புலவர். இலியட் (ILIAD) ஒடிஸி (ODYSSEY) ஆகிய இரண்டு காவியங்கள் இவரது படைப்புகள். ஆடிஸி என்றும் சொல்லுவார்கள். அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இரண்டுவித உச்சரிப்புகள்.
எழுத்துகள் தோன்றுவதற்கு முன்னால் இவர் வாழ்ந்ததால் அவர் கைப்பட எழுதியிருக்க வாய்ப்பில்லை. அவர் சிந்தனையில் உதித்த கவிகள் கர்ண பரம்பரையாகி, செவிவழி மூலம் வந்திருக்க வேண்டும்.
அவருடைய படைப்புகளில் மிக நீண்டது இலியட். இது 24 புத்தகங்களை உடையது. அந்தக் காலத்தில் எல்லாரும் வட்டமாக அமர்ந்துகொண்டு ஒருவர் பாடியவுடன் மற்றவர் திரும்பப் பாடுவார்கள். இவ்வழியிலேயே ஹோமரின் காவியங்களும் பரவின.
ஹோமர்- இறந்த 300 ஆண்டுகளுக்குப் பின்னரே இரண்டு காவியங்களும் எழுத்து வடிவில் கொண்டு வரப்பட்டன.
TROY நகரம் வீழ்ச்சியடைந்த பின்னர் ஒடிஸியஸ் மேற்கொண்ட பயணங்களை “ஒடிஸி” கூறுகிறது.
கிரேக்கர்களுக்கும் ட்ரோஜன்களுக்கும் (TROJANS) இடையே நடந்த போரை “இலியட்” வருணிக்கிறது.
கிரேக்க நாட்டுக் கவிஞர்களில் ஹோமர்தான் மிகவும் பிரபலமானவர். ஆனால் அவரைப் பற்றிய முழுவிவரங்களும் கிடைக்கவில்லை. ஹோமரைப் பற்றி பல வரலாறுகள் இருக்கின்றன. அவை உண்மையா என்பதை அறியமுடியவில்லை.
இலியட்டும் ஒடிஸியும் இரண்டு ஆசிரியர்களால் படைக்கப் பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
துருக்கியிலுள்ள ஸ்மிர்னா (SMYRNA) என்ற இடத்தில் ஹோமர் பிறந்ததாகச் சிலரும் CHIOS தீவில் (ISLAND OF CHIOS) பிறந்ததாகச் சிலரும் கூறுகின்றனர்.
ஆனால் இவர் கியோஸ் தீவில் நீண்டகாலம் வழ்ந்ததும் இவர் கண் பார்வையற்றவர் என்பதும் உறுதியாகத் தெரிகிறது.
பழங்கால கிரேக்கத்தில் வாழ்ந்த சில பாடகர்கள், கவிஞர்கள் கண் பார்வையற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
11 Nov 2019 — Blind Poet Homer of Greece. Compiled by London swaminathaan. swami_48@yahoo.com. Date: 11 NOVEMBER 2019. Time in London – 7-15 am. Post No. 7202. Pictures are taken from various sources; beware of copyright …
1 Jun 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). Contact … இயற்றிய ஹோமரை கிரேக்கப் புலவர்கள் தெய்வ ஹோமர் என்று போற்றினர்).
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தொண்டை மண்டல சதகம் பாடல் 55
மனைவி பிணத்தை மூடி விட்டுப் புலவர் திருமணத்தை நடத்திய வடுகநாதர்!
ச.நாகராஜன்
வாயற்பதி வடுகநாத முதலியார் என்பவர் தொண்டைமண்டலத்தில் வாழ்ந்து வந்த பிரசித்தமான ஒரு வள்ளல். அவரது மனைவி மரணமடைய மிக்க துயர நிலையில் அவர் இருந்தார். அப்போது அங்கு ஒரு புலவர் வந்தார். அவருக்கு அன்று கல்யாணம். அதை நடத்தி வைக்க வேண்டியவர் வடுகநாத முதலியார். அவருக்கோ இப்படி ஒரு துயரநிலை. ஆனால் புலவரோ அவரைக் கட்டாயம் தன் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று கூறியதோடு இன்னொரு விஷயத்தையும அவருக்கு ஞாபகப் படுத்தினார். அதாவது வடுகநாத முதலியாரது தந்தையாரின் சகோதரர் இறந்து விட்ட நிலையில் அன்று ஒரு வித்துவான் பசியோடு அவரது இல்லத்திற்கு வர அவர் தனது சகோதரனின் பிணத்தை மூடினார்; வந்த வித்துவானுக்கு அன்னமிட்டார். அப்படிப்பட்ட உத்தமருக்குப் பிள்ளையாக் நீ இருப்பாயாகில் என் திருமணத்தை வந்து நடத்து என்றார் அவர்.
அதை ஒரு பாடலாகவும் பாடி விட்டார் இப்படி:
முந்தவிளை யோன் மாள முத்தமிழோர்க் கன்னமிட்ட
வந்த வடுகன் மகனானால் வந்தென்
றலைக்கலியா ணத்துக்கே தான்பிணத்தை மூடி
யிலக்கணமாச் செய்குவைநீ யே
இந்தப் பாடலைக் கேட்ட வடுக நாதர் தன் மனைவியின் பிணத்தை மூடினார்;அந்தப் புலவருடன் நடந்தார். அவரது கல்யாணத்தை நன்கு நடத்தி வைத்தார்.
இப்படிப்பட்ட மேலானவர் வாழ்ந்தது தொண்டை மண்டலம் என்று தொண்டைமண்டல சதகம் 55 வது பாடலில் கூறுகிறது. பாடல் இதோ:-
நெடுகவிரித்துப் பிணமூடினோன்மக னீ யெனில்வா
கடுகவெனக்குமுன் முந்தவென்றேயோர் கவிதை சொல்லி
முடுகவழைப்ப மனையாள் பிணத்தினை மூடிச்சென்ற
வடுகனளித்த மகன்வாயிலான்றொண்டை மண்டலமே
இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க முடியுமா என ஐயம் கொள்ளவே வேண்டாம். சமீப காலத்தில் சர்தார் வல்லப் பாய் படேல் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை நாம் நன்கு அறிவோம்.
அவர் இளைஞராக இருந்த போது அவரது மனைவிக்கு கான்சர் நோய் வர அவர் தனது மனைவியை பம்பாய்க்கு அழைத்துச் சென்று ஹர்கிஷன் தாஸ் மருத்துவ மனையில் அனுமதித்து விட்டு போர்ஸாத்துக்கு (Borsad) திரும்பி வந்தார். அப்போது அவர் ஒரு ப்ளீடர் (Pleader). கடமை அழைக்க கோர்ட்டுக்குச் சென்றவர் தனது வாதத்தைத் தொடங்கினார். அப்போது அவருக்கு ஒரு தந்தி வந்தது. அதைப் படித்து விட்டு அதைத் தன் சட்டைப் பையில் மடித்து வைந்துக் கொண்ட அவர் வாதத்தைத் தொடர்ந்தார். அந்த தந்தியில் அவர் மனைவி இறந்து விட்ட செய்தி வந்தது.
வாதம் முடிந்த பின்னர் அவர் தந்தியின் வாசகத்தை அனைவரிடமும் கூற அனைவரும் அதிர்ந்து விட்டனர்.
எரிமலை மீது ஐஸ்கீரீம் சாப்பிடுபவர் என்று சொல்வது உண்டு. மௌலானா சௌகத் அலி அவரை ‘எ வொல்கொனா இன் ஐஸ்” (A volcano in ice)- ஐஸில் இருக்கும் எரிமலை – என்று சொன்னார்.
ஆக தொண்டைமண்டல வடுகநாதர் போன்றோர் மிக அதிசயமாக உலகில் தோன்றும் மேன்மக்களே.
இதை தொண்டைமண்டல சதகம் கூறிப் பெருமைப் படுவது நியாயம் தானே!
***
tags- தொண்டைமண்டல சதகம், வடுகநாதர், புலவர் திருமணம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
HEMINGWAY
(1898 – 1963)
எர்னஸ்ட் ஹெமிங்
வே (ERNEST MILLER HEMINGWAY) அமெரிக்க சிறுகதை எழுத்தாளர் – நாவலாசிரியர். இவரது கதாபாதிரங்கள் துணிச்சல்மிக்கவர்கள் – உறுதிபடைத்தவர்கள் அவர்களது உரையாடல்களின் வாயிலாக ஹெமிங்வே தனது எழுத்துத் திறனை வெளிபடுத்தியுள்ளார்.
இல்லினாய்ஸ் மாகாணத்தில் OAK PARK-இல் பிறந்தார். இவரது தந்தை ஒரு டாக்டர். தனது மகனையும் ஒரு டாக்டராக்க வேண்டும் என்பது அவரது ஆசை,
ஆனால் ஹெமிங்வேயுக்கோ செய்தியாளர் ஆக வேண்டும் என்று ஆசை. 16 வயதினிலெயே பள்ளியை விட்டுச்சென்றார். ஒரு பத்திரிகை அலுவலகத்தில் சேர்ந்தார்.
முதல் உலகப்போர் வந்தவுடன் படையில் சேர்ந்து இதாலியர்களுடன் —– கடுமையாகக் காயமடைந்தார். அவருக்கு CROIX DE GUERRE விருது அளிக்கப்பட்டது. இந்த அனுபவத்தை மையமாக வைத்து A FAREWELL TO ARMS என்ற நாவலை எழுதினார். முதல் உலகப்போருக்குப் பின்னர் பாரிஸ் மாநகரம் சென்றார். அங்கு (EZRA POUND) எஸ்ரா பவுண்ட் (JAMES JOYCE) ஜேம்ஸ் ஜாய்ஸ் (GERTRUDE STEIN) ஜெர்ட்ரூட் ஸ்டெய்ன் ஆகிய இலக்கிய உலகப் பெரும்புள்ளிகளைக் கண்டு கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டார்.
பின்னர் அமெரிக்காவிலும் கியூபாவிலும் தங்கினார். கியூபாவில் தங்கிய காலத்தில் DEATH IN THE AFTERNOON என்ற நூலை எழுதினார். முரட்டுக் காளைகளை அடக்கும் விளையாட்டின் பெயரில் நடக்கும் கொடுமைகளை இந்த நூல் சித்தரிக்கிறது.
இவருக்கு வேட்டையாடுவதிலும் ஆர்வம் உண்டு. இதற்காக ஆப்பிரிக்கா சென்ற ஹெமிங்வே வேட்டையாடிய அனுபவங்களை THE GREEN HILLS OF AFRICA என்ற நூலில் வடித்தார். ஆப்பிரிக்காவில் இரண்டு விமான விபத்துகளிலிருந்து அதிசயமாக உயிர் தப்பினார்.
1936ஆம் ஆண்டில் ஸ்பானிய உள்நாட்டுப் போர் (SPANISH CIVIL WAR) பற்றிய செய்திகளை திரட்டுவதற்காக ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றார். அவருடைய மிகவும் புகழ் பெற்ற FOR WHOM THE BELL TOLLS என்ற நாவல் இந்த அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.
ஸ்பானியப் போர் முடிந்த பின்னர் அமெரிக்காவுக்குத் திரும்பியவர், ஏராளமான சிறுகதைகளை எழுதி குவித்தார். அமெரிக்காவின் தலைசிறந்த எழுத்தாளர் வரிசையில் இவரும் ஒருவர்.
1952ஆம் ஆண்டில் THE OLD MAN AND THE SEA என்ற நூலை எழுதினார். 1954ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்.
ஆனால் இறுதிநாட்களில் இவருக்கு எழுதமுடியவில்லை. மனம் தளர்ந்து நின்றார். 1962இல் ஒரு துப்பாக்கிச் சூட்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Let me continue with remaining mantras and finish the hymn RV 1-112
Mantra 22
Asvins are praised as the helpers of heroes who fight for their cattle. Here we get a picture of cattle thieves, the Dasyus. Dasyus are thieves according to Kalidasa and Manu. In every society there are thieves. Sangam Tamil literature call the robbers as Maravars. Kallars were branded as criminals by the British. Kallar is synonymous with thieves in Tamil though it is a caste name. But foreign gang instead of translating Dasyus as thieves put a capital D for dasyus and made it synonymous with the Dravidians or natives. Cattle thieving is a ritual to attack neighbours. All the Tamil kings followed this ritual and it is in the history of Chera, Choza, Pandya kings of Sangam Tamil poems. The ritual is called AANIRAI KAVARTHAL in Tamil – seizing the cattle. It is in Mahabharata as well. After the incognito period, Pandavas and Kauravas clashed after the AANIRAI KAVARTHAL in the epic Mahabharata.
The 20 plus clowns under the gang leader Max Muller poured poison on Vedic Hindus by branding every conflict as Aryan – Dravidian fight. They never branded any group in any fight like this in any other part of the world. That is giving racial tones. None of the gang members criticised anything in their own Bible. In short they were pukka anti Hindus and employed by the British or Oxford University to demolish India and Hinduism in which they failed miserably. Their appointments letters clearly showed their ‘duties and tasks’. The gang’s biggest crime is putting capital A for aryas and capital D for dasyus. When the Rig Veda hymns coupled Simyus with Dasyus, the gang blinked without any explanation.
Who were the Simyus; still they are looking for a scapegoat!!
Shrikant G.Talageri says Simyus are Sarmatians ( Avesta= Sairimas);Sirmiyos (ancient Albanians). He says that they belong to north western periphery of Iran.
Simyus – RV 7-18-5; 1-100-18
But Griffith located them near RIVER PARUSNI/ RAVI in Punjab .
Sudas destroyed them .
My own feeling is they are the baddies in the Vedic Kingdom. The names sound like other Vedic groups Druhyu, Anu, Puru.
xxx
Mantra 23
This Mantra mentioned five more names. Kutsa son of Aarjuni. Here we get one more Arjuna . We already know two Arjunas; one,the companion of Krishna and another Kaartha Veerya Arjuna of Rama period. So we must always remember that Hindus also had the same names in different periods. Indra was wrongly translated as one person in the Vedas by the foreign gang. Kanchi Paramacharya in his scholarly talks pointed out that Indra is not one person.
My view is that it is a title. Whoever was the king at that period was called Indra. In some places it meant natural forces. Also meant God. In Tamil also God and King have the same words (Ko, Irai)
We have Indra Danush for rainbow.
We have Gaja Indra (Elephant King), Kaga Indra (Bird King), ,Naga Indra (snake king) Raja Indra (King of Kings) etc.
When we retranslate the Rig Veda again, we have to use civilised, cultured, literate person for wherever the Max Muller gang used aryas with capital A and dasyus as thieves or criminals wherever the anti Hindu white skinned gang used dasyus with capital D.
In Sangam Tamil literature we come across ARYA in ten places and in the Rig Veda 35 places in the middle of thousands of words. In Sangam literature we see no Racial tone. It meant a person speaking Sanskrit language or living in North where Sacred language of the Vedas is used for communication. Even Himalayan Seers were called as Arya in Tamil Sangam literature. All the commentators gave the meaning without any racial tone.
In addition to Kutsa we come across TURVIITI, DABHIITI, DHAVASANTI AND PURUSANTI . The first three are helped by Indra and others are by Asvins.
Since the poet /seer mix the names with Indra, what he means is ‘divine power’ helped all these people.
About these people we have references in other hymns. They are seers or kings.
xxx
Mantra 24
Here Asvins are requested to help in daytime and night-time. But the foreign gag interpreted it as a help requested in a gambling (luckless) game here we have to go for Sayana’s explanation (day and night) because it fits in very well in the poem. We have such requests in all the Kavacham hymns of Tamil and Sanskrit literature.
We have famous KAVACHAMS/armour poems such as KANTHA SASHTI KAVACHAM and VINAYAKA KAVACHAM in Tamil.
This mantra says clearly, give us protection day and night.
And the prayer ends with
This prayer of ours may Varuna grant, and Mitra and Aditi and Sindhu, and Earth and Heaven.
This line is the end line in his poems (of Kutsa Angiras)
xxx
My comments
We have seen over 60 seers, gods and unknown people in this one hymn!
1400 year old Tamil Hymns (Tevaram) finish with the name of the author (Sambandar for example). Later all music composers like Purandaradasa, Thiygaraja, Muthuswami Dikshitar, Meera bhai, Kabir used their names or certain phrases (E.g. Gurukuha, Giridhaara Nagara) as their mudra/signature. We see the origin for this Mudra in the Rig Veda.
The Kavacham genre of hymns also has its origin in the Rig Veda.
In other words, all the styles and genres in Hindu hymns have their origin in the Rig Veda. It is amazing to see the continuity.
Here is the original hymn and Griffith’s translation :–
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures
உலகின் முதல் வரலாற்று ஆசிரியர்; ரிக்வேதத்தில் வரலாறு- 6 (இறுதிப் பகுதி )
25 மந்திரங்களைக் கொண்ட ரிக்வேத 112-ஆவது துதியின் கடைசி பகுதிக்கு வந்துவிட்டோம் . இது ரிக் வேத முதல் மண்டலத்தில் உள்ளது ;ஏராளமான பெயர்கள் இதில் வந்ததைக் கண்டோம்; பல அற்புதங்களையும் கண்டோம். இதில் குறிப்பிடப்பட்ட பல பெயர்கள் ஆயிரத்துக்கு மேலான துதிகளளைக் கொண்ட ரிக் வேதத்தில் பல இடங்களில் வருகிறது. அவைகளைப் பார்த்தால் மேலும் பல புதிய செய்திகள் கிடைக்கின்றன.
மந்திரம் 22 (1-112-22)
போரில் பசுக்களுக்காகப் போராடும் வீரர்களையும் அவனது மனை, குதிரை, செல்வம் ஆகியவற்றையும் காக்கும் அஸ்வினி தேவர்களே எங்களையும் காப்பாற்றுங்கள் என்பது மந்திரம்..
இங்கு பசுக்கள்தான் பிரச்சினைக்குக் காரணம் என்பது பேசப்படுகிறது. இது உள் சண்டையாகவும் இருக்கலாம் . ஆநிரை கவர்தல் என்பது தமிழ் மன்னர்களிடையே இருந்ததை புறநானூற்றில் காண்கிறோம். மஹாபாரதத்தில் காண்கிறோம். ஆக வெள்ளையர்கள் சொன்னது போல இனச் சண்டையாக இருக்க வேண்டியதில்லை. குறிப்பாக திருடர்களை தஸ்யூக்கள் என்று அழைத்தனர். அவர்களுடன் சி ம்யூக்களும் வேறு சில மந்திரங்களில் பேசப்படுகின்றனர். வெள்ளைக்காரர்கள் அது பற்றி மவுனம் சாதிப்பர்.; அவர்கள் யார் மீது பழியைப் போடுவது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்!
xxx
மந்திரம் 23
இங்கு அர்ஜுனன் என்ற பெயர் வருகிறது. மஹாபாரத அர்ஜுனனுக்கும் முந்தையவர் ; ராவணன் காலத்து கார்த்த வீர்ய அர்ஜுனன் ஒருவன் இருந்ததையும் நாம் அறிவோம். இங்கு அர்ஜுனனின் புதல்வன் குத்சன், மற்றும் துர்விதி, நபிதி, துவசந்தி, புருஷந்தி ஆகியோரை அஸ்வினி தேவர்கள் காப்பாற்றியதைச் சொல்லி, எங்களையும் காப்பாற்றுங்கள் என்று புலவர்/ ரிஷி அழைக்கிறார்.
. குத்ச என்பவர் இந்திரனுக்கு மிகவும் வேண்டப்பட்டவர் . காண்க- மந்திரம் 1-51-6
இவர்கள் எல்லோரும் இந்திரனாலும் அஸ்வினியாலும் உதவப்பட்டவர்கள் என்பதால் பொதுவாக கடவுளால் காப்பாற்றப்பட்டவர்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும். இந்திரன் என்பது ஒரு நபர் அல்ல. கடவுள் அல்லது மன்னன் அல்லது தலைவன் என்றே பொருள். தமிழிலும் இறை, கோ என்பதெல்லாம் மன்னரையும் கடவுளையும் குறித்ததே.
நம்மைப் பொறுத்தவரை இவை அனைத்தும் வரலாற்று நிகழ்ச்சிகள். அதுவும் புராணம் சொல்லும் சந்திர சூரிய வம்சங்களைச் சேர்ந்த 140-க்கும் மேலான தலைமுறைகளுக்கு முந்தையோர்!
xxxx
மந்திரம் 24
நாங்கள் “இரவின் கடைசி ஜாமத்தில்/ யாமத்தில் கஷ்டம் வரும்போது” உங்களை அழைக்கிறோம். எங்களைக் காப்பாற்றுங்கள் என்கிறார் புலவர் . இதற்கு சாயனர் சொல்லும் பொருள்—” அதிக வெளிச்சம் இல்லாத நேரத்திலும் எங்களைக் காப்பாற்றுக” என்பதாகும். அவர் சொல்லுவதே பொருத்தம். சூரியன் உதயமாகும் முன் பிரம்ம முகூர்த்தத்தில் வேத கால முனிவர்கள் யாக யக்ஞங்களைத் துவங்குவதை உஷா முதலிய தேவதை வணக்க பாடல்களால் அறிகிறோம். ஆனால் வெளிநாட்டு குதர்க்கவாதிகள் இது “சூதாட்டத்தில் தோல்வி வரும்போது” என்று பொருள் என்பர்!!!
நம்மூர் அரசியல்வாதிகள் போல, அதாவது ‘பப்ளிசிட்டி’க்காக, ஏதேனும் அவ்வப்போது சர்ச்சசைக்குரிய அறிக்கை அல்லது ட்வீட் (tweet) வெளியிடுவது போல, வெளிநாட்டுக் கோமாளிகள் உளறுவதுண்டு.
xxx
மந்திரம் 25
இதில் தெளிவாக இரவிலும் பகலிலும் எப்போதும் எங்களைக் காப்பாற்றுக என்று வருகிறது..
இந்துக்களுக்கு இது புதிதல்ல. பிற்காலத்தில் கந்த சஷ்டிக் கவசம், விநாயக கவசம் முதலியன இதே மாதிரியில் அமைக்கப்பட்டன .
இந்தத் துதியில் மொத்தத்தில் அறுபதுக்கும் மேலான வேத கால தெய்வங்கள், அரசர்கள்,கொடைவள்ளல்கள், புலவர்கள், ரிஷிகள், வீரர்கள் ஆகியோரின் பெயர்கள் வருகின்றன. மேலும் பிற்காலத்தில் நாம் ஆழ்வார்கள், நாயன்மார்கள், வட இந்திய பக்தர்கள் வாழ் க்கையில் காணும் பல அதிசயச் செய்திகளை இந்தத் துதியிலேயே கேட்கிறோம் ; பிற்கால கவச துதிகளைப் போல வேண்டுதல்கள் தென்படுகின்றன. சம்பந்தர் மற்றும் பிற்கால இசைக்கலைஞர்கள் தன பெயரை முத்திரையாகப் பயன்படுத்துவது போல இங்கும் ரிஷி தன் பெயரைச் சொல்லிப் பாடுகிறார்.
கடைசி மந்திரமாகிய 25 போலவே இந்தப் புலவரின் ஏனைய பல பாடல்கள் முடிகின்றன
“மித்திரனும் வருணனும் அதிதியும் சிந்துவும், பூமியும் வானமும் எங்களுடைய இந்த பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்களாகுக ” என்று இந்த ரிஷி தனது ஏனைய துதிகளை முடிக்கிறார். இப்படி பிற்கால பாடகர்கள் சில சொற்றோடர்களையோ பெயர்களையோ வைத்து கிருதிகள் எட்டுக்கட்டியதை நாம் காணலாம்.
ஆகவே பலவிதங்களிலும் முன்னோடியாகத் திகழும் ரிக்வேத 1-112 துதியை அனைவரும் படித்து மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
இதோ முழு துதியும் அதன் முழு ஆங்கில மொழிபெயர்ப்பும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சோகக் கதை THOMAS HARDY
(1840 – 1928)
தாமஸ் ஹார்டி ஆங்கிலக் கவிஞர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர். பிரிட்டனில் டார்செட் DORSET வட்டாரத்தில் UPPERBROCKHAMPTON-இல் பிறந்தார். சிறுவயதில் பூஞ்சலான (Delicate) உடல்வாகுடைய பையனாக இருந்தாலும் புத்திசாலியாக இருந்தார். பிரெஞ் ச், லத்தீன், ஜெர்மன், கிரேக்க மொழிகளைக் கற்றார். அவரது தந்தையைப் போலவே கட்டி டம் கட்டும் பொறியியல் துறையில் இவருக்கு ஆர்வம். இதனால் 1856 முதல் 1861 வரை DORCHESTER என்னும் இடத்தில் ஒரு கட்டிடக் கலைஞரிடம் பயிற்சியாளராகச் சேர்ந்தார். 1862இல் லண்டனுக்குச் சென்று 5 ஆண்டுகள் கட்டி டக்கலையை பயின்றார்.
முதல் முதலாக இவர் எழுதியது, தான் கட்டிய வீட்டைப் பற்றித்தான்! இவர் எழுதிய முதல் நாவல் ஒரு கொலை பற்றிய கதை. அதை மக்கள் ரசிக்கவில்லை.
மேலும் இரண்டு நாவல்களை எழுதினார். ஆனால் அவையும் வெற்றிபெறவில்லை. பின்னர் இவர் எழுதிய “FAR FROM THE MADDING CROWD” இவருடைய பெயரை பரப்பியது.
THE RETURN OF THE NATIVE, THE MAYOR OF CASTERBRIDGE, TESS OF THE D’URBERVILLES ஆகியன மிகவும் பிரபலமான புதினங்கள். இவர் சோகக் கதைகளை எழுதுவதில் மன்னன்.
இவர் கடைசியாக எழுதிய JUDGE THE OBSCURE என்னும் நாவலில் அந்தக் கால ஒழுக்கக்கேடுகளை கூறினார். இந்த நாவலை மக்கள் புறக்கணிக்கவே அவர் நாவல் எழுதுவதையே நிறுத்திவிட்டார்.
ஆனால் தனது கைவண்ணத்தை நாடகம் எழுதுவதில் காட்டினார். நெப்போலியன் ஆட்சிக்கால போர்களை மையமாகக் கொண்ட THE DYNASTYS என்ற நாடகத்தை எழுதினார். வாழ்நாளின் இறுதிநாட்களில் கவிதைகளை அதிகமாக எழுதினார்.
ஹார்டியின் வாழ்க்கை மேடுபள்ளங்கள் இல்லாமல் சீராகச் சென்றது. இவர் இருமுறை மணம் முடித்தவர். OXFORD, CAMBRIDGE, ST.ANDREWS, ABERDEEN, BRISTOL பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவ பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தன.
WESTMINSTER ABBE-Yயில் (POETS’ CORNER) கவிஞர்கள் மூலையில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.
தாமஸ் ஹார்டி எழுதிய 4 புகழ்பெற்ற புதினங்கள் சோகக் கதைகள் ஆகும். இதனால் இவரை ‘நாவல் எழுதிய ஷேக்ஸ்பியர்’ என்பர் விமர்சகர்கள்.; ஏனெனில் ஷேக்ஸ்பியர் நாடகங்களிலும், சோக நாடகங்கள் புகழ் பெற்றவை.
Hardy has been called the Shakespeare of the English novel and the four great Hardian tragedies — Tess of the D’urbeivilles, Jude the Obscure, The Mayor of Casterbridge and The Return of The Native— have been likened to the four great Shakespearean tragedies.
–subham—
tags- Thomas Hardy, Tragedy Novels, சோகக் கதை, மன்னன், தாமஸ் ஹார்டி ,
சவூதி அரேபியா ஹிந்து இதிஹாஸங்கள், பழக்க வழக்கங்கள், அதன் நடைமுறைகள், மற்றும் புராணங்கள் ஆகியவற்றை தனது கல்வித்திட்டத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.
இனிமேல் அங்கு குழந்தைகளுக்கு ராமாயணம், மஹாபாரதம், யோகா, ஆயுர்வேதம் ஆகியவையும் கற்பிக்கப்படும்.
மத சம்பந்தமான பாட புத்தகங்களில் புத்தமதம், இதரமதங்கள் பற்றிய பாடங்கள் உள்ளிட்டவையும் இடம் பெறும். இளவரசர் முஹம்மது பின் சல்மானின் வழிகாட்டுதலின் படி 2030 தொலைநோக்கு காட்சி பற்றிய ஆவணத்தின் ஒரு பகுதியாக இது அமைகிறது.
இளவரசர் சல்மான் தனது தொலைநோக்கு காட்சியின் படி அதிரடி மாறுதல்களுடன் எப்படி தனது அரசு செயல்படப் போகிறது என்பது குறித்து பரவலான மாறுதல்களை கொள்கை ரீதியாக செய்து வருகிறார். சவூதி அரசு எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட ஒன்று. இளவரசர் பன்முகம் சார்ந்த பொருளாதாரத்தை விரும்புகிறார்.
உலகமயமாக்கப்பட்ட உலகை இளைய தலைமுறையினர் எதிர்கொள்வதற்கு ஆயத்தமாக, ஆங்கில மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சவூதியைச் சேர்ந்த யோகா மாஸ்டர் நௌபஃப் அல்மொர்வாய், ஏப்ரல் 15 தேதியிட்ட தனது ட்வீட்டில் ஒரு ஸ்கிரீன் ஷாட்டில் ஹிந்து மதம் புத்தமதம் பற்றிய வினாத்தாளைக் காண்பித்துள்ளார். சவூதி அரேபியாவில் யோகாவைப் பரப்பியதற்காக அல்மொர்வாய்க்கு பத்ம ஸ்ரீவிருது 2018இல் வழங்கப்பட்டது.
**
இந்தியா ராணுவத்திற்கென உலகில் அதிகம் செலவழிக்கும் மூன்றாவது நாடு!
ராணுவத்திற்கென அதிகம் செலவழிக்கும் மூன்றாவது பெரிய நாடாக உலகில் இந்தியா திகழ்கிறது. 72900 கோடி டாலரை 2020இல் இந்தியா செல்வழித்துள்ளது. இருப்பினும் அது அமெரிக்காவை ஒப்பிட்டால் மிகவும் பின் தங்கியே தான் உள்ளது. அமெரிக்கா இந்தியாவை விட 10 மடங்கு அதிகமாகவும் சீனா நான்கு மடங்கு அதிகமாகவும் ராணுவத்திற்கென செலவழிக்கிறது. உலகளாவிய ராணுவச் செலவை எடுத்துக் கொண்டால் அது 2020இல் 198100 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது. இது 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் 2.6% அதிகமாகும்.
(டைம்ஸ் ஆஃப் இந்தியா 27-4-2021 இதழ்)
நன்றி : Truth, Vo 89 Issue 4 Dated 7-5-2021
இதன் ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம்:-
Snippets
I. Saudi Arabia Introduces Ramayana, Mahabharata, Yoga and Ayurveda in its curriculum : (The Organiser, 23.04.2021)
The Kingdom of Saudi Arabia has introduced Hindu epics, customs, practices and mythology in its curriculum.
Henceforth, children would also be taught about Ramayana, Mahabharata, Yoga and Ayurveda.
The religious study texts would also include chapters about Buddhism and other religions too. It’s all part of the vision 2030 document prepared under the guidance of Prince Mohammad Bin Salman.
Prince Salman, under his vision to bring dramatic changes in how the Kingdom operates, has been implementing widespread change in its policies.
The Kingdom has an overly oil-dependent economy. Prince wants a more diversified economy.
And to prepare the younger generation for a more globalised world, English language has been made compulsory.
Nouf Almorwaai, a Saudi-based Yoga teacher tweeted on April 15 a screenshot of her child’s question paper, which has questions about Hinduism and Buddhism.
Almorwaai was conferred Padma Shri in 2018 for popularising Yoga in Saudi Arabia.
II. India 3rd largest military spender :
India remains the third largest militaryspender, doling out $ 729 billion in 2020, though still far behind US, which spends over 10 times and China (Four times). The total global military expenditure rose to $1981 billion in 2020, an increase of 2.6% from 2019. (TOI, 27.4.2021)