PLEASE JOIN US TODAY SUNDAY 24-1-2021

THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER (PART OF GNANA MAYAM CHANNEL)

24-1-2021 SUNDAY

PRAYER-

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN TALK ON TEMPLES-

Thiruppugaz  by MRS JAYANTHI SUNDAR MS KEERTHANA RAMALINGAM –

XXX

WORLD HINDU NEWS ROUND UP–

IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN

IN TAMIL BY MRS VAISHNAVI ANAND

XXX

KALYANJI ON THAIPUSAM PROGRAMMES

LONDON SWAMINATHAN’S ARTICLE READ BY MRS VAISHNAVI ANAND

KANU SONG BY MRS SWARNALATHA

KANU SONG BY MRS DAYA NARAYANAN

KANUP PATTU BY MRS ANNA PANCHANATHAN

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

(After Pongal 2021, we do Tamil and Hinduism on both days)

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

(FORMER BBC BROADCASTER, SENIOR SUB EDITOR, DINAMANI, FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL)

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM / GNANAMAYAM

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

TAGS- PUBLICITY24121

என்னப்பா சர்வர் காப்பில ஈ இருக்கறதே???(Post No.9181)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9181

Date uploaded in London – – 24 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

என்னப்பா சர்வர் காப்பில இருக்கறதே???

Kattukutty

இந்த கேள்விக்கு நகைச்சுவையான பதிலை எழுதி அனுப்பமாறு

JUNIOR STATESMEN வார இதழ் கேட்டிருந்தது. போட்டியில் பரிசு

பெற்ற சில பதில்கள்- ரச குண்டு

“மிளகு பொடி தடவி சாப்பிடுங்க சார் ரொம்ப நல்லா இருக்கும்”

“இது சாதாரண காப்பியில்ல சார், ஈயடிச்சான் காப்பி.”

“ஈ தான விடுங்க சார், அடுத்த டேபிள்காரருக்கு எட்டுக்கால் பூச்சியே

கிடச்சுதாம்”!!!!

“என்னது ஈ யா? சாம்பார்ல தானே போடச் சொல்லியிருந்தார்

மேனேஜர்”???

“குளிர்காலமாச்சே சார், பச்சை தண்ணீல குளிச்சா ஜல தோஷம்

பிடிச்சுகிறதுன்னு சூடான காப்பில குளிக்கிறது”!!!

“என்ன சார், அபாண்டமா பழி சொல்கிறீர்கள்? இது வண்டு தானே”???

“நீங்க சும்மா இருங்க சார், உடம்ப கொதிக்கிற காப்பில சுட்டுகிட்டாதான் அந்த

ஈக்கு புத்தி வரும்”……….

“ஏன் சார் இப்படி சொல்றீங்க, இது காப்பி இல்ல சார், குடிக்கிற

வென்னீர்”!!!

“மிஞ்சி மிஞ்சி போனா அதால இரண்டு சொட்டுக்கு மேல குடிக்க

முடியாது. இதுக்கு போய்……….ஏன் சார்…..!

“ஒரே ஒரு ஈ தானே சார், முன்னைக்கு விட எங்கள் ஓட்டல் எவ்வளவு “இம்ப்ரூவ்” ஆயிருக்கிறது என்று இப்போதாவது ஒத்துக் கொள்ளுங்கள்”

“உரக்கச் சொல்லாதீர்கள், அப்புறம் எல்லோரும் கேட்பார்கள்,

இதுதான் எங்கள் ஸ்டாக்குல இருந்த கடைசீ  “ஈ”.!!!!

“வெளில சொல்லாதீங்க, தற்கொலைக்கு தூண்டியதாக

உங்கள் மேல் வழக்கு போட்டாலும் போட்டு விடுவார்கள்”

“கவலை படாதீங்க சார், சும்மா கொஞ்சம் நீச்சல் பழகிட்டு

பறந்து போயிடும்”……….

“ஈ” யா??? ஐய்யையோ , அது நான் வளர்க்குற ஈ சார், அது …….

எங்க காணோமேன்னு தேடிக்கிட்டிருக்கேன்???

“பக்கத்தில இருக்கிற டிஷ்யு பேப்பர்ல தொடச்சிண்டிட்டு

போயிடும் கொஞ்சம் பொறுங்க சார்”…….

“சொல்றேனேன்னு கோபிச்சுக்காதீங்க, நேற்று கொசு இருந்த

போதும் கோச்சுக்கிட்டீங்க, அதுக்காத்தான் இன்னைக்கு

ஈ யைப் போட்டேன்………….

“காப்பில ஈ யா??? இருக்காதே சார், இப்போதான் “ஹிட்”

மருந்து அடிச்சேனே அதுல”????……….

“அந்த “ஈ” ய சாதரணமாக நினைச்சுடாதீங்க சார், ஒலிம்பிக்குல

நீச்சல் போட்டில பரிசு வாங்கினதாக்கும்.”!!!!

நல்ல வேளை, காப்பில ஈ ன்னு சொன்னீங்களே, அதையும்

பில்லுல மறந்துடாம சேர்த்துகிடறேன்….

ரொம்ப ரொம்ப அதிர்ஷ்ட சாலி சார் நீங்க!!! எங்க காப்பில

ஈ ய கண்டு பிடிச்சவருக்கு ரூபாய்ஆயிரம் பரிசுன்னு முதலாளி

சொல்லிருக்கார் !!!

***

tags- சர்வர், காப்பி,  ஈ , 

அன்னமும், கொக்கும் வெள்ளை நிறமே, இரண்டிற்கும் வித்தியாசம்? (9180)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9180

Date uploaded in London – –24 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அன்னமும் வெள்ளை நிறம், கொக்கும் வெள்ளை நிறமே, இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

ச.நாகராஜன்

அருமையான சில சுபாஷித ஸ்லோகங்கள் கீழே தரப்பட்டுள்ளன. எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானவை இவை.

ஹம்ஸ: ஷ்வேதோ தக: ஷ்வேதோ கோ பேதோ தக ஹம்ஸயோ: | நீரக்ஷீரவிவேகே து ஹம்ஸ: ஹம்ஸோ தகோ தக: ||

அன்னம் வெள்ளை நிறம்; கொக்கும் வெள்ளை நிறம் தான்! இந்த இரண்டிற்கும்  என்ன வித்தியாசம்? அன்னமானது பாலுடன் தண்ணீர் கலந்து  அது வெண்மையாக இருந்த போதிலும் கொக்கு போலலல்லாமல் நீரைப் பிரித்து பாலை மட்டுமே குடிக்கிறது.  (இந்த சுபாஷிதம் வெளித் தோற்றம் முக்கியமல்ல. புத்திசாலிகளுக்கு எது முக்கியம் எது முக்கியமல்ல என்பது தெரியும். ஆகவே வெளித்தோற்றத்தைக் கண்டு மயங்காமல் உள்ளிருக்கும் நற்பண்புகளையே பார்க்க வேண்டும் என்கிறது)

The swan is white and so is the crane. Then what is the difference between the two? It is said that the swan is able to separate milk even though diluted with water and drink only milk (unlike the crane). The subhāşita stresses the point that it is the inner qualities that make an object not its outer appearance. The wise precisely know what is useful and what is not.

காக: க்ருஷ்ணோ பிக: க்ருஷ்ணோ கோ பேதோ காகபிகயோ: |         வசந்தசமயே ப்ராப்தே காக: காக: பிக: பிக: ||

காகம் கறுப்பு நிறம் கொண்டது. குயிலும் கறுப்பு நிறம் தான்? இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? வசந்த காலம் வரும் போது குயில் இனிய ஓசையை எழுப்புகிறது. காகத்தால் அப்படி இனிய ஓசையை எழுப்ப முடியவில்லை. காக்கை காக்கை தான்; குயில் குயில் தான்!

The crow is black, so is the cuckoo bird. Then, what is the difference between the two? It becomes evident with the advent of the spring when the cuckoo bird starts singing in sweet voice, which the crow cannot.

அஹம் ச த்வம் ச ராஜேந்த்ர லோகநாதாவுபாவபி |         பஹுவ்ரீஹிரஹம் ராஜன் சஷ்டிதபுரூஷோ பவான் ||

பிச்சைக்காரன் அரசனை நோக்கிப் பிரகடனம் செய்கிறான் இப்படி: “நாம் இருவருமே லோக நாதர்களே. இருவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவெனில் என்னை எடுத்துக் கொண்டால் மக்களே எனக்கு எஜமானர்கள்; அரசனோவெனில் மக்களுக்கு எஜமானன்; அவ்வளவு தான்!

The beggar declares to the king: “Both of us are Lokanatha. The only difference is that in my case people are my master (when the compound Lokanatha is resolved as “Bahuvrihi”); while the king is the master (ruler) of the people (when the compound is resolved as a ‘Shashthitatpurusha).’

சுலபா: புரூஷா: ராஜன் சததம் ப்ரியவாதின: |                       அப்ரியஸ்ய ச ப்த்யஸ்ய வக்தா ஷ்ரோதா ச துர்லப: ||

விதுரன் திருதராஷ்டிரனுக்குக் கூறும் புத்திமதி : “ஹே! அரசனே! இன்பங்களை நாடும் மக்களை சுலபமாகக் காணலாம். ஆனால் அப்ரியமாக இருந்தாலும் உண்மையைப் பேசுபவனையோ அல்லது அவன் சொல்வதைக் கேட்பவனையோ காண்பது அரிதே!

Sage Vidura advises Dhritarashtra, “Your Majesty, people who engage in pleasantries can be easily found. One speaking bitter [truth] and another who listens to him/her are both difficult to find however.  

துர்ஜன: ப்ரியவாதீதி நைதத் விஸ்வாசகாரணம் |                      மதுதிஷ்டதி ஜிஹ்வாக்ரே ஹ்ருதயே து ஹலாஹலம் ||

உன் பக்கமாக பிரிய வார்த்தைகளைப் பேசினாலும் கூட, ஒருபோதும் கெட்டவர்களை நம்பாதே. அவர்கள் நாக்கில் தேன் சொட்டும்; இதயத்திலோ விஷம் நிரம்பியிருக்கும்!

Never believe a wicked person even if he/she speaks in (your) favor because there may be honey on his tongue but poison in his heart.

குறிப்பு : ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் இருக்கும் ஸ்வயம்சேவகர்களுக்காக சுபாஷித தொகுப்பு நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ள சில சுபாஷிதங்களும் அவற்றின் ஆங்கில மொழியாக்கமும் மேலே தரப்பட்டுள்ளன. (தமிழாக்கம் : ச.நாகராஜன்)

நன்றி : Subhashita for Sanga shaka (77 pages)

***

tags- அன்னம், கொக்கு , வெள்ளை நிறம், 

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 29 (Post No.9179)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9179

Date uploaded in London – –23 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK .

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -29

3-2-188

Buddhi– Knowledge

புத்தர் , புத்தி, அறிவு

Rushta/angry = rude

ரோஷம்

Hrusta- hearty

இருதயம் கனிந்த

Kashta- difficult

கஷ்டம்

இவை அனைத்தும் இன்று வரை பயன்படுத்தப்படுகின்றன

Xxx

3-3-1

Kaaru –Artiste

Telegus add Kaaru with names

காரு  என்கிற பின்னொட்டை SUFFIX தெலுங்கர்கள் பயன்படுத்துகின்றனர்.

ஒருவேளை கலைஞர் என்ற பொருள்படும் சொல்லாக இருக்கலாம்?????

Vaayu is used for gas, wind in all India n languages

வாயு- எல்லா இந்திய மொழிகளிலும் உள்ளது.

Xxx

3-3-16

Vesa = vaasal in Tamil

வேச = வாசல்

Roga =Disease

ரோக = நோய்

ரோகம் — எல்லா இந்திய மொழிகளிலும் உள்ளது.

Xxx

3-3-17

Visaarah = Pisces

மீன/ FISH என்ற ரிக்வேதச் சொல் தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் பொதுவான சொல் என்பதை முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் காட்டியுள்ளேன்

பொதுவான மொழியியல் விதி – ப = வ = ம

Pisces = fish

P/F/B = V = M

Xxxx

3-3-22

Rava h – sound

RAVA= ROAR IN ENGLISH

ரவ = சப்தம் – ஒலி Roar

Tamils are called Arava, noisy

தமிழர்களை தெலுங்கர்கள் அரவா ( roaring)  என்று அழைப்பர்

அரவர் = தமிழர் (காண்க 1935ம் ஆண்டு ஆனந்த விகடன் தமிழ் அகராதி )

Xxx

3-3-36

Mushti- mutti in Tamil

M=F

பொதுவான மொழியியல் விதி – ப = வ = ம

P/F/B = V = M

முஷ்டி – பிஷ்ட் /ஆங்கிலம்/ முட்டி, மூட்டு /தமிழ்

Musht =Fist

மல்லர் – சங்கத் தமிழ் இலக்கியத்தில் உள்ளது

மல்யுத்தம் – இன்றும் பயன்படுகிறது

Malla is from commentary

Malla = wrestler in Tamil literature

Xxx

3-3-37

பரிணயம் – திருமணம்

ப= ம ; மணம்

Parinayam- Manam

Thiru manam wedding

P/F/B = V = M

Xxx

3-3-40

Prasaaya- Pari

பிரசாய = பறி

பூப்பறிதல் , பழம் பறித்தல் = புஷ்ப , பலம் ப்ரஸாய

Xxx

3-3-41

Sarira- body

சரீர – உடல்

Nivasa- living place

நிவாஸ – வசிப்பிடம்

ஸ்ரீ = திரு, லக்ஷ்மி ; நிவாஸன்

Sri Nivasa is a common name

Xxx

3-3-42

Sange=  Organised meeting

சங்கம் தமிழ் சொல் அல்ல. சங்க இலக்  யத்தின் 30, 000 வரிகளிலும் இல்லை.

‘சங்கம் – சங்கு’ உளது. அதுவும் தொல்காப்பியர் கருத்துப் படி தப்பு.

ச – வில் சொல்லே துவங்கக்கூடாது .

ஆயினும் தமிழர்கள் 10,000 ஆண்டுகளுக்கு முச் சங்கம் நிறுவியதாக பெருமை பேசுவர்

சங்கம் என்ற தமிழ் சொல்லை இன்று தமிழர்கள் பயன்படுத்தும் பொருளில் 2700 ஆண்டுகளாக சம்ஸ்க்ருத அறிஞர்கள் பயன்படுத்துகின்றனர் ( எனது மூன்று தமிழ் சங்கம் இருந்ததா? என்ற ஆராய்சசிக் கட்டுரையில் மேல் விவரம் காண்க

Sangam is a word used in Tamil for Tamil Academy

Nikaaya is also assembly

நிகாயம் – சபை, கூட்டம் ; பிராமண நிகாயம்

Xx

sonar, sony= sound

3-3-50

Aaraava – roaring ;

சப்தம் – ஒலி Roar

Explained in 3-3-22 under rava= roaring= TAMILS

Aaplava = float

Xxx

3-3-52

Panini used VANIJA for business

Vanika, vaanika are used in sangam tamil literature, tirukkural etc.

This key word  VANIK gave birth to PAANI IN RIG VEDA , MONEY/PANA, PHOENICIANS etc

RIG VEDA WA AGAINST THE MONEY MAKING, GREEDY, BUSINESS MINDED PAANIS.

VANIKA IS USED IN ALL INDIAN LANGUAGES UNTIL TODAY.

வணிக , வாணிகம் — சங்க இலக்கியம், திருக்குறளில் உளது.

இதிலிருந்து மணி/பணம் வருகிறது. ரிக்வேதத்தில் பேராசை பிடித்த பண வெறி இனத்தை பாணி என்று முனிவர்கள் சாடுகின்றனர் . இவர்கள் ஒருவேளை பினிஷியர்களாக இருக்கலாம் .

பிணிஷி  = வணிக

XXX

3-3-54

PRAVARA/ப்ளாங்கெட்/blanket   = PORVAI IN TAMIL

ப்ரவர = போர்வை

Xxx

3-3-58

Panini gives graha/ wandering objects in sky, vara =boon, nischaya = resolution

கிரஹம் – வானத்தில் வலம் வருவன

வச – வசப்படுத்தல்

ரண – போர், ராணா இனத்தினர், Nepalese Ranas, Maha Rana Pratap

விக்னம் – இடையூறு ; விக்கினேஸ்வரன்

ஆயுதம்

Vaarttika adds vasa – obeying, rana- war, vigna- hurdle, aayudha – weapon.

All these words are used in Indian languages for over 2500 years.

Xxx

3-2-61

Japa – reciting mentally, pray ஜப , ஜெப

Used in all Indian languages

Xxx

sonar, sony = sound

3-3-62

Hasa , haasa – laughter, smiling, charming

Used as suffix in names

Svanah, svaanah – sound ;

Latin sonar = sound, speak

Sony, sonar are used in English for sound related words

Sone becomes sol, sonnaan in tamil; coming from sonar

Latin has the tamil verb sol, son – to speak

SON, SONIDO BECOMES TON/SOUND IN DUTCH

WE SEE TION=SION; T=S IN ENGLISH IN 100s OF WORDS

TON IS  DWANI IN SKT

ALL GREEK AND LATIN WORDS HAVE SANSKRIT OR  TAMIL ROOTS!

சொன் , சோன் – சப்தம், ஒ லி சவுண்ட்

லத்தினில் சொல், சப்தம் என்ற இரு பொருளும் உண்டு.

அது தமிழில் சொன்னான்  என்ற வினைச் சொல்லைத்தரும்

சோன் என்பது ட்ச்சு மொழியில் டோன் ஆகும். அது தொனி , த்வனி என சம்ஸ்க்ருதத்தில் உள்ளது.

–SUBHAM—

tags- Tamil in Panini 29

உலகில் அழகான பொய் ‘கவிதை’, சுகமான ஏமாற்றம் “திருமணம்”- ஞான மொழிகள் -19 (9178)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9178

Date uploaded in London – – 23 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வீன ஞான மொழிகள் -19

Kattukutty

உனக்கு நீ நல்லவனாக இருந்தால் போதும், மற்றவருக்கு நீ

கெட்டவனாக தெரிந்தால், அது உன் குற்றமில்லை.

கண்ணில் பிழை இருந்தால், பிம்பமும் பிழை.

அது பார்க்கப்படுபவன் பிழை அல்ல, பார்ப்பவரின் பிழை………..

100 பைசா. 1ரூபாய்

100 சென்ட். 1 ஏக்கர்

100 கடவுள். 1 அம்மா

100 பேய். 1மனைவி

1000 பிசாசு. 1 LOVER

1000 உறவு. 1 நண்பன்

நான் நண்பேன்டா!!!!!

POWER AND MONEY ARE THE FRUITS OF OUR LIFE.

FAMILY AND FRIENDS ARE ROOTS OF OUR LIFE.

WE CAN MANAGE WITHOUT FRUITS,

BUT CAN NEVER STAND WITHOUT ROOTS.

டீச்சர் : கடல் அரிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்???

மாணவன் : சொறிஞ்சு விடணும் டீச்சர்………

நட்பு என்றாலும், காதல் என்றாலும்

இதயத்தில் வைக்க வேண்டிய இரண்டு வரிகள்

பழகும் வரை உண்மையாய் இரு,

பழகிய பின் உயிராய் இரு.

ஊக்குவிக்க ஆள் இருந்தால், இன்று ஊக்கு விற்பவன் கூட

நாளைக்கு தேக்கு விற்பான்!!!

தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை அரை குறையாய் செயபவன்

சாதாரணமானவன்.

தனக்குதரப்பட்ட வேலையை செவ்வனே செய்து முடிப்பவன்

சராசரி மனிதன்.

தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை விட அதிகமாய் சாதிப்பவன்

சாமர்த்தியசாலி.

இட மாற்றம் ( பெண்களுக்கு)

உங்கள் விசாலமான மனதும் குறுகிய இடுப்பும் இடம் மாறும்போது

உங்களுக்கு வயதாகிவிட்டது என்று அர்த்தம்.

ஜெயிலர் ஒரு கைதியைப் பார்த்து :  உன்னைப் பார்க்க நண்பர்களோ, உறவினர்களோ ஏன் யாரும் வருவதில்லை???

கைதி : அவர்கள் எல்லோரும் இங்கேயே இருக்கிறார்கள்………

இல்லற வாழ்க்கையை வெற்றிகரமானதாக்க இருவர் தேவை.

தோல்வியாக்க ஒருவர் போதும்.

நல்ல தம்பதி என்பது ஒரு நல்ல கை குலுக்கலைப் போல

மேல் கீழ் கிடையாது.

குடும்பஸ்தனுக்கு பல துன்பங்கள்உண்டு

பிரும்மச்சாரிக்கு ஒரு இன்பமும் கிடையாது.

இல்லறம் என்பது ஒருவர் கண்களை மற்றொருவர் பார்த்துக்

கொண்டிருப்பதல்ல……..

தோளோடு தோள் சேர்ந்து ஒரே திசையைப் பார்ப்பதாகும்.

ஒரு நல்ல மனைவி கணவன் சொல்லும் ஜோக்குகளை கேட்டு

சிரிக்கிறாள்.

அவை புத்திசாலித்தனமாக இருப்பதால் அல்ல……..

அவள் புத்திசாலியாக இருப்பதால்……..

திருமணமாகி 50 வது ஆண்டு விழாவைக் கொண்டாடிய

ஹென்றி போர்டிடம் “உங்களது இல் வாழ்க்கையின் வெற்றியின்

ரகசியம் என்ன” ??? என்று கேட்டார்கள்.

எனது கார் கம்பேனியின் வெற்றி ரகசியம்தான் இந்த வெற்றிக்கு

காரணம்……..என்றார் அவர்.

அது – “மாடலை மாற்றாதே”

திருமணம் – இருவரை ஒருவராக்குவது………அந்த ஒருவர் யார்

என்று கண்டு பிடிப்பதற்காக வாழ்நாளெல்லாம் போராட வைப்பது !!!

xxxx

உலகில் அழகான பொய்

“கவிதை”

வசீகரமான பாசாங்கு

“காதல்”

சுகமான ஏமாற்றம்

“திருமணம்”

xxxxx

ஒரு ரஷ்ய ஜோக்

ஒரு நல்ல அரசியல ஜோக்கிற்கு சிறந்த பரிசு அளிக்கப்படும்

முதல் பரிசு இருபது ஆண்டுகள்!!!

xxxx

சிகாகோ நகர அச்சகம் ஒன்றின் பலகை

கல்யாணங்கள் சொர்க்கத்தில் நிச்சியிக்கப்படுகின்றன.

ஆனால் நாங்கள் அவற்றை அச்சடிக்கிறோம்.

Xxxx

பையன்

அப்பா : காக்கா கத்தினா விருந்தாளிகள் வருவாங்கன்னியே, அவுங்க எப்ப போவாங்க???

அப்பா : உங்க அம்மா கத்தினா போவாங்க!

xxxx

வாக்களிப்பதில் தாமதமாக இருப்பவன்,

நிறைவேற்றி வைப்பதில்தீவிரமாக இருப்பான்

xxx

பட்டுத்துணியில் கறை பட்டுவிட்டால் அதை செலவில்லாமல்

நீக்க சிறந்த வழி

கத்தரிக்கோலை உபயோகிக்கவும் !!!

xxx

“புகையிலையினால் மரணம் உங்களுக்கு”- ஜோதிடர் சொன்னார்.

ஆசாமி அன்றுமுதல் புகை பிடிப்பது, பொடி போடுவது, புகையிலை

போடுவது எல்லாவற்றையும் நிறுத்தி விட்டார்

ஆனால் புகையிலை லாரி மோதி மரணமடைந்தார்???

xxxx

இரண்டு சுண்டெலிகளை ஒரு விஞ்ஞானி பழக்கினார்.

அந்த சுண்டெலிகளில் ஒன்று மற்றொன்றுடன் பேசியது.

அந்த ஆசாமியை எப்படி பழக்கிவிட்டேன் பார்த்தாயா?

நான் மணி அடித்தவுடன் சாப்பாடு கொண்டுவர

கற்றுக் கொடுத்து விட்டேன்!!!!

xxx

இரண்டு பையன்கள் பேசிக்கொண்டார்கள்

ஒருவன்சொன்னான் – என அப்பாவிற்கும், உன் அப்பாவிற்கும்

கொஞ்சம்தான் வித்தியாசம்……உன் அப்பா கிரிமினல் வக்கீல்.

என் அப்பா கிரிமினல்……..!!!

***

Kindness, a language deaf can hear and dumb can understand! (9177)

Complied  BY S NAGARAJAN

Post No. 9177

Date uploaded in London – –23 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உதவிக் குறிப்புகள் 14 : கட்டுரை எண் 8972 வெளியான தேதி 27-11-2020 (171-190)

உதவிக் குறிப்புகள்! – 15HELPFUL HINTS – 15 (191 to 210)

ச.நாகராஜன்

எனது பழைய நோட்புக்கில் எழுதி வைத்துள்ள, அறிஞர்கள் கூறிய பொன் மொழிகள் இதோ:-

குறிப்பு எண் 191 : Wilbur Right

A parrot talks much but flies little!

குறிப்பு எண் 192 : Senator Paul Douglas

When you differ with a man, show him, with your looks, by your bearing and by everything that you do or say that you love him.

குறிப்பு எண் 193 : Theodore Roosevelt

I have always had a great respect for a Philippine proverb: ” Into the closed mouth the fly does not get”.

குறிப்பு எண் 194 : Russel Sage

The best way for a young man who is without friends or influence to begin is first, to get a position; second to keep his mouth shut; third observe; fourth, be faithful; fifth, make the employer think he would be lost in a fog without him; sixth be polite!

குறிப்பு எண் 195 : Anonymous

Kindness is a language the deaf can hear and the dumb can understand!

குறிப்பு எண் 196 : Senaca

Whenever there is a human being there is a chance for a kindness!

குறிப்பு எண் 197 : Proverb

One kind word can warm three winter months!

குறிப்பு எண் 198 : Ching Sow

He who is determined has half his work done!

குறிப்பு எண் 199 : Ralph Waldo Emerson

Do the thing you fear and the death of fear is certain!

குறிப்பு எண் 200 : Confucious

Our greatest glory is not in never falling, but in rising every time we fall!

குறிப்பு எண் 201 : Napoleon

Impossible is a word only to be found in the dictionary of fools!

குறிப்பு எண் 202 : Senaca

Our fears are always more numerous than our dangers!

குறிப்பு எண் 203 : Anonymous

He that loses money loses little,

He that loses health loses much,

But He that loses courage loses all!

குறிப்பு எண் 204 : Henry Fauconnier

In the last resort nothing is ridiculous except the fear of being so!

குறிப்பு எண் 205 : Publilius Syrus

Courage comes by being brave; fear comes by holding back.

குறிப்பு எண் 206 : Johann Wolfgang Von Gothe

What you can do, or dream you can, Begin it;

Boldness has genius, power and magic in it!

குறிப்பு எண் 207 : Edmund Harry Harriman

It is never safe to look into the future with eyes of fear!

குறிப்பு எண் 208 : Thomas E. Wilson

This is the foundation of success nine times out of ten – having confidence in yourself and applying yourself with all your might to your work!

குறிப்பு எண் 209 : General Omar Bradley

Bravery is the capacity to perform properly even when scared half to death!

குறிப்பு எண் 210 : Charles F. Kettering

I have found that if I have faith in myself and in the idea I am tinkering with, I usually win out!

***

tags- உதவிக் குறிப்புகள்-15 ,  HELPFUL HINTS-15, 

INDEX 46 FOR LONDON SWAMINATHAN’S SEPTEMBER 2016 ARTICLES (Post No.9176)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9176

Date uploaded in London – –22 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9100 PLUS POSTS.

TAMIL ARTICLES

தமிழ்ப் பெண்கள் வெளிநாடு செல்ல தடை! (Post No.3203);செப்டம்பர் 30, 2016

இந்திய நூல்களில் சிகை அலங்காரம் -Part 1 (Post No. 3201)29/9

சீமந்தத்தின் விஞ்ஞான ரகசியம்! அக்கு பங்சர்!! (Post No.3197);28/9

31 தொல்காப்பியப் பொன்மொழிகள் (Post No.3194)27/9

வானவியல் முறையில் வேதத்தின் காலம்! (Post No.3191)26/9

வேதங்களின் காலத்தைக் கண்டுபிடிப்பது எப்படி? (Post No.3188)25/9

சாளக்ராமம் பற்றிய சுவையான தகவல்கள் (Post No.3177)22/9

தமிழ் மொழிக்கு சிவபெருமான் சான்றிதழ்! (Post No.3174) 21/9

மாமிசத்துக்குப் பெயர் வந்தது எப்படி? யோகிகளை

பரமஹம்ச என்று அழைப்பது ஏன்? (Post No.3171) 20/9

அஸ்வமேத யாகத்தில் புரியாத புதிர்கள் (Post No.3168) 19/9

சூரியனிடம் பாடம் கற்றான் அனுமன்: கம்பன் தகவல் (Post No.3165) 18/9

அஸ்வமேத யக்ஞம் பற்றிய அதிசயச் செய்திகள் – பகுதி 1 (POST NO.3162) 17/9

பார்ப்பனர்களை பாரதி சாடியது ஏன்? வர்ணம் வேறு,

ஜாதி வேறு- பகுதி-3 (Post No.3161) 17/9

சூத்திரன் யார்? பிராமணன் யார்? ஜாதி வேறு, வர்ணம் வேறு- Part 2 (Post No.3158) 16/9

ஜாதி வேறு, வர்ணம் வேறு- Part 1, 15/9

ஐயர்கள் உஷார்! பெண்களும் போட்டிக்கு வருகிறார்கள்!! (Post No.3153),14/9

விக்ரம ஆண்டு பற்றிய விநோத தகவல்கள் (Post No.3151)13/9

வாயு பகவான் சொன்ன ரகசியம்: கம்பன் தகவல் (Post No.3146)12/9

‘பிறவிப் பெருங்கடல்’ பற்றி நம்பியும், வள்ளுவரும் (Post No. 3144) 11/9

சாமுத்ரிகா லட்சணம்: கம்பன் தரும் தகவல் (Post No.3142) 11/9

தீப்போல தகிக்கும் ஐந்து விஷயங்கள் (Post No.3141) 10/9

நூறு வயதானவர்களின் மகிமை! (Post No.3136) 8/9

நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ: கம்பன் (Post No.3137) 9/9

வேதத்தில் சுவையான குதிரைக் கதை! (Post No.3134) 8/9

லண்டனில் புதிய இந்திய ஹோட்டல்!(Post No.3133) 8/9

ஆரியம் முதல் பதினெண் பாடையில்…… கம்பன் மொழி (Post No.3130)7/9

வாதாபி கணபதிம் பஜே ஹம் ; புதிய பிள்ளையார் புராணம் – பகுதி 4; 6/9

ராமன்-சுக்ரீவன் நட்புறவு ஒப்பந்தம்! கம்பன் தரும் சுவைமிகு தகவல்(3127); 5/9

புதிய புராணம் பகுதி-3 வலஞ்சுழி,இடஞ்சுழிப் பிள்ளையார்கள் (Post No.3124)5/9

விநாயகப் பெருமானின் 16 நாமங்கள் (Post No.3122);4/9

ராமன் வியப்பு! யார் இந்தச் சொல்லின் செல்வன்? (Post No.3121)4/9

புதிய பிள்ளையார் புராணம்- பகுதி-2; நம்பியின்

உணவுண்ட பொல்லாப் பிள்ளையார்! (Post No 3119)4/9

புதிய பிள்ளையார் புராணம்! பொல்லாப் பிள்ளையார் முதல்

கள்ளப்பிள்ளையார் வரை! – பகுதி 1 (Post No. 3117)3/9

ஞயம்பட உரை; வெட்டெனப் பேசேல்; பழிப்பன பகரேல் (Post No.3114)2/9

பேடி/அலி: வள்ளுவனும் காளிதாசனும் சொல்லும் உவமை (Post No.3112)2/9

வைரத்தில் இட்ட துளை! கம்பனும் காளிதாசனும் ஒப்பீடு (Post No.3110)1 செப்டம்பர் 2016

கெட்ட நண்பர்கள் இருக்கையில் பாம்புகள் எதற்கு? (Post No.3109);  1 செப்டம்பர் 2016

S NAGARAJAN’S TAMIL ARTICLES; ALREADY INDEXED; 3202,3199, 3196, , 3193,3190,3187, 3193,3190, 3176, 3179, 3173,3170, 3167,3164, 3160, 3157,3152,3150, 3147, 3145, 3126,3123, 3116,

XXXXX

LIST OF ENGLISH  POSTS IN SEPTEMBER 2016

Vedic References to Hair Styles – Part 2 (Post No.3205); SEPTEMBER30, 2016

“Politics and Propaganda cannot overthrow Hinduism” (Post No.3204); 30/9

Vedic References to Hair Styles – Part 1 (Post No.3200)29/9

Hindu Hair Style: Why Hindu women put Kunkum on Parting of Hair? (Post No.3198)28/9

Begging and Poverty Anecdotes (Post No.3195);27/9

31 Beautiful Quotations from Mahatma Gandhi (Post No.3192)26/9

Deva Dasis: Dancing Girls of Hindu Temples (Post No.3189)

Astrology, Sorcery and Magic Charms in Kerala (Post

No.3186);24/9

Famous Astrologers of Kerala! (Post No.3178)

Good and Bad Salagrama: How to find it? ( Post No.3175)

Amazing Fire Walking Ceremony! (Post No.3172) 20/9

Music Mystery in Asvamedha Yajna! (Post No.3169) 19/9

Maamsam and Hamsam: Sanskrit Wordplay!(Post No.3166) 18/9

Asvamedha: New Explanation (Post No.3163) 17/9

Interesting Titbits about Asvamedha Yajna- Part 1(Post No.3159)16/9

What is a caste? What is a Varna? (Post No.3156) 15/9

Naga Worship in Afghanistan (Post No.3154) 14/9

Great Sacrifice to Kailang Nag in Himachal (Post No.3149)3/9

Picasso’s Poverty (Post No 3148)12/9

13 Types of Hindu Temples in Bangladesh (Post No.3143) 11/9

Hinduism in Bangladesh: from a new book (Post No.3140)10/9

Dictionary of 10,000 Kings -Part 22: Hindu Rulers of Bangladesh (Post No.3139) 9/9

Long Live Centenarians! (Post No.3138) 9/9

Riddles in the Vedas (Post No.3135) 8/9

LONDON SAMOSA and HINDU NAMASTE! (Post No 3132) 7/9

Interesting Horse Story from the Vedas (Post No.3131) 7/9

Vatapi Ganapathim Bhaje! Part – 4 of Strange Stories of Ganesh Temples! (Post No.3129)6/9

Part- 3 Strange Stories from Ganesh Temples in Tamil Nadu (Post No. 3125)6/9

Ganesh who ate the Prasad: Strange Stories from Tamil Temples-Part 2 (Post No. 3120)4/9

Strange Stories about 50 Ganesh Temples in Tamil Nadu (Post No.3118) 3/9

Jokes from 75-year-old Tamil Magazine (Post No.3115)2/9

Astrology is the Right Hand of Hinduism: Christian Preacher’s attack! (Post No.3113) 2/9

Dravidian Devil Worshippers! J.P.Jone’s attack on Goddess Meenakshi! (Post No. 3111)1 SEPTEMBER 2016

–SUBHAM—

TAGS- INDEX 46, SEPTEMBER 2016, POSTS, LONDON SWAMINATHAN

திருப்பாவை அதிசயம் 2- ‘அல்குல்’ பற்றி ஆண்டாள் பேசலாமா? (Post.9175)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9175

Date uploaded in London – –22 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘திருப்பாவை அதிசயம்-1’ இதே பிளாக்கில் ஜனவரி 18-ம் தேதி வெளியானது.

திருவல்லிக்கேணி தமிழ்ச்சங்க நூறாவது வெளியீடு 1957-ல் வெளியானது. அதன் பெயர் ‘திருப்பாவை மாலை’. அதில் அரிய  விஷயங்கள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன . இதோ மேலும் ஒரு அரிய தகவல்.

பதினோராவது திருப்பாவையில் “புற்றரவல்குல் புனமயிலே” — என்ற வரி வருகிறது.

ஆண்டாள் ஒரு Teen age Girl டீன் ஏஜ் கேர்ல் – பருவப் பெண் ; அவள் அல்குல் (நிதம்பம், பெண்குறி, female genital organ) பற்றிப் பாடலாமா ? அதுவும் மற்ற பருவப் பெண்கள் இடத்தில் ?

திருப்பாவையின் வரிகளின்  பொருள் —

“புற்றிற் கிடக்கும் பாம்பின் படம் போன்ற நிதம்பத்தையும் காட்டில் இஷ்டப்படி திரியும் மயில் போன்ற சாயலையும் உடையவளே” ……………..

சங்கத் தமிழ் பாடல்களில் சுமார் 100 பாடல்களில் ‘அல்குல்’ இடம்பெறுகிறது. தொல்காப்பியரும் விடவில்லை. அவரும் அல்குலைப் பாடுகிறார்.

இதற்கு ‘திருப்பாவை  மாலை’ புஸ்தகம் தரும் விளக்கத்தை முதலில் காண்போம்.

“புற்றரவு அல்குல் புனமயிலே — என்றது மல்லி நாடாண்ட மடமயில் பணிப்பு.

புற்று  அரவு அல்குல்- புறம்பு புறப்பட்டுத் திரிந்து புழுதி படைத்த உடம்புடைத்தாயிருக்கையன்றியே  தன் இருப்பிடந்தன்னிலே கிடக்கும் அரவரசின் படமும் கழுத்தும் போல ஒளியையும் அகலத்தையும் உடைய அல்குலை உடையவளே! என்றபடி. இதனால் அவயவ ஸோபை  கூறப்பட்டது .

இங்கு ஆராய வேண்டுவது ஒன்று உண்டு. அதாவது இவர்கள் தாங்களும் பெண்டிராயிருக்கச்செய்தெ இவளுடைய அல்குலை வருணித்தது பொருந்துமா என்பது. அது அவர்கள் நெஞ்சினால் ஆண்மை பூண்டமையால் என்க.

இவர்கள் இத்தனை சொல்லுவான்  என்னென்னில் ?

‘யாஸ் த்ரியோ த்ருஷ்ட வத்யஸ்தா : பும்பாவம் மனசாயுயு:’

என்னும்படியே  பெண்களை ஆண்களாக்கும் அழகிறே ;

‘பும்ஸாம் த்ருஷ்டி சித்தாப  ஹாரிணம்’ – என்று அவன் ஆண்களை பெண்ணுடையுடுக்கப்  பண்ணுமாப்போலே ” (மூவாயிரப்படி)

முன்னையது மஹாபாரதம் உத்யோக பர்வத்துள்ளது . தாமரையிதழ் போன்ற கண்களுடையவளாய் பாஞ்சாலத்தேசத்தரசன் மகளான திரெளபதி நீராடுகையில் பெரிதான அவள் அல்குலை எந்த ஸ்த்ரீகள் பார்த்தார்களோ அவர்கள் நெஞ்சினால் ஆண்மை அடைந்தனர்  என்பது முழு ஸ்லோகத்தின் பொருள்.  பின்னையது ஸ்ரீ ராமாயணத்துள்ளது (அயோத்யா காண்டம் 3-28).

சந்திரனை விட மனோகரமான திருமுக மண்டலத்தை உடையவரும் அத்யந்தம் இஷ்டமான தோற்றத்தை உடையவருமான செளந்தர்யாதி குணங்கள் என்ன, தானாதி குணங்கள் என்ன, இவற்றால் புருஷர்களுடைய கண்களையும் நெஞ்சையும் கவரா நின்ற ஸ்ரீ ராம மூர்த்தியை தசரத சக்ரவர்த்தி பார்த்தார் என்பது அம் முழுச்  ஸ்லோகத்தின் பொருள் .

சிந்தாமணியார் இலக்கணையின் அழகைப் புகழுமிடத்து ,

‘பெண்டிரும் ஆண்மை வெஃகிப் பேதுறு முலையினாள் ‘, ‘வாண் மதர் மழைக்க நோக்கி , ஆண் விருப்புற்று நின்றாரவ்வளைத் தோளினாரே ‘ என்றது காண்க

கம்ப நாடர் தாடகை வதைப்  படலத்து

…………… கண்ணிற் காண்பரேல்

ஆடவர் பெண்மையை யவாவுந்  தோளினாய்

(தம் தம் கண்களாற் காண்பார்களாயின் ஆண்மக்களும் பெண் தன்மையை விரும்பும் தோள்களின் அழகையுடைய ஸ்ரீ ராமபிரானே ) என ராமனைக் கோசிகர் கூறியதாகக் கூறினர்.

வாராக வாமனனே அரங்கா வட்ட நேமிவல

வாராகவா உன் வடிவு  கண்டால் மன்மதனு மட

வாராக ஆதரஞ்  செய்வன் …………………………

(வராகவதாரம் செய்தவனே ! வாமன மூர்த்தியானவனே! வட்ட வடிவமான சக்ராயுதத்தைப் பிரயோகித்தலில் வல்லவனே! ரகு குல ராமனாகத்  திருவவதரித்தவனே ! நினது திருமேனியழகைப் பார்த்தால் , எல்லோராலும் காமிக்கப்படும் கட்டழகு  உடைவனான மன்மதனும் தான் உன்னைக் கூடுதற்கு மகளிராய்ப் பிறக்க ஆசைப்படுவன் )

என்பது திவ்விய கவி பிள்ளைப் பெருமாளைய்யங்கார் அருளிச் செய்த திருவரங்கத்தந்தாதி

அங்கனம் ஆண் பெண்ணாகிலும் சாதாரணப் பெண்மையேயன்றி  எம் பெருமானுக்கு உரியவளாகும்  ஒரு பிராட்டியின் நிலையை அடையுமாறு எங்கனம் எனில் , கூறுதும் .

பரமாத்மாவினது தலைமையும் , ஜீவாத்மாவினது அடிமையும், ஜீவாத்மா  பரமாத்மாவுக்கே உரியதாயிருக்கையும் புருஷோத்தமனாகிய எம்பெருமானது  பேராண்மைக்கு முன்  உலக முழுதும் பெண் தன்மையாதலாலும் , ஜீவாத்மாவினது சுவாதந்திரியமின்மையும் , பாரதந்திரியமும் , தாம் எம்பெருமானது சேர்க்கையால் இன்பத்தையும், பிரிவினால் துன்பத்தையும் அடைதலும் அவனையே தம் கரணங்கள் எல்லாவற்றாலும் அனுபவித்து , ஆனந்தத்திலும் முதலிய காரணங்களால் தம்மைப் பிராட்டிமாரோடு ஒக்கக் கூறத்தகும் . சிருங்காரரஜப் பிரதானமான அகப்பொருட் கிளவித் துறைகளை  தோத்திரப் பிரபந்த ரூப மான  ஞான நூல்களிற் கூறுதற்குக் காரணம் , கடுத்தின்னாதானைக் கட்டி பூசிக் கட்டத்  தின்பிப்பார் போலச் சிற்றின்பங் கூறும் வகையாற் பேரின்பத்தைக் காட்டி நாட்டுதல் என்பர் ஆன்றோர்.”

Xxxx

என்னுடைய விளக்கம் …

ராமாயணம், மஹாபாரதம் , திருப்பாவை, சங்கத் தமிழ் பாடல் அனைத்திலும் ‘அல்குல்’ வருணனை வருகிறது. ஆதிகால இந்துக்கள் ‘செக்ஸ்’ SEX பற்றிப் பேசுவதற்கு (no taboos) தயங்கவில்லை; அஞ்ச வில்லை. வாத்ஸ்யாயன மகரிஷி காம சூத்திரம் புஸ்தகம் எழுதியத்திலிருந்தே இது தெரியும். உலகின் முதல் செக்ஸ் புஸ்தகம் அதுதான். அதுமட்டுமல்ல 2000 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இது போன்ற முழு நீள விஞ்ஞான அடிப்படையிலான செக்ஸ் SEX புஸ்தகங்கள் வந்தன.

இரண்டாவது விஷயம்0– ஆண் அழகைப் பார்த்து ஆண்களே பெண்களாக மாறி அவரை  அனுபவிக்க ஆசைப்பட்டதும் , இதே போல பெண் அழகைப் பார்த்த பெண்களே ஆண்களாக மாறி அவரை அனுபவிக்க ஆசைப்ப ட்டதும் கவிகளின் அதீத கற்பனையே. அதாவது அவ்வளவு அழகு.!! இது கவிகளின் கற்பனை.

மூன்றாவது விஷயம் – பக்தி இலக்கியத்தில் இது பொருந்துமா ? நாயக – நாயகி பாவம் என்பது இந்துக்களுக்கே உரிய ஒரு சிறப்பு அம்சம் . அப்பர் பாடல் முதல் மீரா பஜன் வரை காணலாம் . மேம் போக்காக காம ரசம் நிரம்பியதாகத் தோன்றும்; ‘கோபி’யர் செயல்பாடு, ஜெயதேவரின் அஷ்டபதி ஆகியவற்றுக்கு விவேகானந்தர் போன்றோர் அளித்த விளக்கங்களைப் படித்தோருக்கு,இது உடல் ரீதியான வேட்கை அல்ல என்பது விளங்கும்.

நாலாவது விஷயம் —கழிசடைகளை வடி கட்ட இது உதவும். கம்பன் 10, 000 பாடல் பாடினாலும் அதிலுள்ள காமரசப் பாடல்களை மட்டும் ரசித்து கம்பரசம் புஸ்தகம் எழுத்தும் கசடுகளை, கழிசடைகளை இனம்பிரித்துப் பார்க்க இப்பாடல்கள் உதவும்.

ஐந்தாவதாக ஒரு விளக்கம்– அழகாக தன பெண்ணுக்கு தாழம்பூ பூச்சூட்டி பின்னல் பின்னும் தாய்மார்கள் குழந்தையின் மீது கண் பட்டு விட கூடாதென்பற்காக கன்னத்தில் ஒரு கறுப்புப் பொட்டு – திருஷ்டி கழிய — வைப்பார்கள் . இனிப்பு பண்டம் செய்யும் சமையற்காரர்கள் , இனிப்பைத் தூக்கிக் காட்ட கொஞ்சம் உப்பு போடுவார்கள் . எங்கள் லண்டனில்  தயாராகும் சாக்லேட்டுகளிலும் கூட கொஞ்சம் உப்பு இருக்கும். இப்படி சில காமப்பாடல்கள் மூலம் கவிஞர்கள் சுவை கூட்டினர் போலும் . அறிஞர்கள் இந்த இரண்டு மூன்று காமப்பாடல்களில் சிக்காமல் மேலே உயர்வர். கழிசடைகள் இவற்றின் ஆராய்ச்சியில் இறங்கி அதல பாதாளத்துக்கு சென்று உழல்வர்.

–subham—

Tags-  திருப்பாவை, அதிசயம்-2, அல்குல், ஆண்டாள் , நிதம்பம்

HUSBANDS HOLD WIFE ‘S HAND IN MALLS,WHY ? நவீன ஞான மொழிகள் -18 (Post 9174)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9174

Date uploaded in London – – 22 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வீன ஞான மொழிகள் -18

Kattukutty

கடவுளே,

எதையும் தாங்கும் இதயம் எனக்கு வேண்டாம்,

இதயம் தாங்கும் எதையும் கொடு,

வாழ்க்கை வலி தாங்க முடியவில்லை…….

WHAT IS WINNING ATTITUDE

THREE ANTS SAW AN ELEPHANT COMING……..

ANT-1 WE WILL KILL HIM

ANT-2. WE WILL BREAK HIS LEGS

ANT-3. FORGIVE HIM, HE IS ALONE, AND WE ARE THREE!!!

உலகத்திலேயே திவாலாக்க முடியாத ஆசாமி யார் தெரியுமா்???

BEGGER

கருப்புக் கோழி வெள்ளை முட்டைதான் இடும்

கவிதை “கள்”

சாராயம் நீ சாப்பிட்டால் உன் வயதை தோராயமாக கடவுளால்

கூட கூற முடியாது.

கலக்கல் உண்டால் வி (ல)க்கல் ஆகிவிடுவாய் !!!

மில்லி உனக்கு கொள்ளி…..

நீ தினமும் பட்டை அடுத்தால் உன் குடும்பம் மொட்டையடிக்கும்!

நீ “பீர்” பருகினால் உயிர் வாழ “கீர்”வேலை செய்யாது !!!

ஒவ்வொரு நாளும் நீ அருந்தும் ஒயின்,

யமதர்ம ராஜனுக்கு “கெயின்” !!!

“ஜின்” நீ பருகினால்உன வாழ்க்கையை முடிக்கத்

தேவையில்லை “கன்”…..

உண்மைக் காதல் எனபது “பேய்” மாதிரி………

எல்லோரும் அதைப்பற்றி பேசினாலும் யாரும் அதை பார்த்ததே

இல்லை !!!

வயதாவதைக் கண்டு பயப்படாதீர்கள்…….

பலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமலே போய்விடுகிறது!!!

PSYCHOLOGIST SAY

  1. IF A PERSON LAUGHS TOO MUCH EVEN FOR STUPID THINGS, HE IS LONELY AND DEEP INSIDE.
  2. IF A PERSON SLEEPS ALONE HE IS SAD.
  3. IF A PERSON SPEAKS LESS, BUT SPEAKS FAST,HE KEEPS SECRET.
  4. IF SOMEONE SAYS, I CANT CRY, HE IS WEAK.
  5. IF A PERSON EATS IN AN ABNORMAL MANNER HE IS WEAK.
  6. IF SOMEONE CRIES FOR LITTLE THINGS, HE IS INNOCENT AND SOFT HEARTED.
  7. IF SOMEONE BECOMES ANGRY OVER SILLY OR PETTY THINGS, IT MEANS HE NEEDS LOVE.

மனிதா நினைவு கொள்

பூமியே வாடகை வீடு தான்.

எல்லோரும் ஒருநாள் வீட்டை காலி செய்துதான் ஆக வேண்டும்.

உன்னிடம் அடுத்தவரைப் பற்றி குறை கூறுபவர், உன்னைப் பற்றியும்

மற்றவரிடம் குறை கூறுவார்……..ஜாக்கிரதை !!!

XXX

IF AN APPLE A DAY KEEPS DOCTOR AWAY,

I WONDER WHAT WILL HAPPEN WHEN A DOCTORS

WIFE EAT AN APPLE A DAY??

XXX

WHEN YOU NEED AN “ADVICE” EVERYBODY IS READY

TO HELP YOU.

WHEN YOU NEED  A “HELP”, EVERYBODY GIVES YOU ONLY ADVICE.

XXX

SOME HUSBANDS HOLD WIFE ‘S HAND IN MALLS,

IF THEY LEAVE THEIR HANDS, SHE WILL GO TO SHOPPING!!!!

XXX

கோடம்பாக்கம் –

ஏராளமான படங்கள் ஷூட்டிங் செய்யப்படும் இடம்.

அப்படியே ஒன்றிரண்டு நடிகைகளையும், நடிகர்களையும்

ஷூட்டிங் செய்தால் நன்றாக இருக்கும்.

XXX

மனிதன், தான் ஆயுளோடு நீண்ட நாட்கள் இருக்க ஆசைப்படுகிறான்

ஆனால் அதே சமயம் வயோதிகத்தைக் கண்டும் பயப்படுகிறான்.

ஆக மனிதனைப் போல் ஒரு முட்டாள் உண்டா உலகினில்???

XXX

எல்லோருக்கும் தலையாட்டுகிறவன்,

ஒரு விஷயத்தைச் சொன்னால்,

அது தலையாட்டுகிற மாதிரி இருக்காது்

XXX

A MOTHER IS ALWAYS A MOTHER

SHE NEVER STOPS WORRYING ABOUT HER CHILDREN,

EVEN WHEN THEY ARE ALL GROWNUP AND HAVE CHILDREN

OF THEIR OWN !!!!

XXX

உனக்காக சிரிக்கும் உதடுகளை விட, உனக்காக கண்ணீர் சிந்தும்

கண்களை நேசி். அது உப்பாக இருந்தாலும் உண்மையாக இருக்கும்.

***

tags- நவீன,  ஞான மொழிகள்18

சின்னச் சின்ன செயல்கள் = பெரிய பெரிய பலன்கள்! (Post.9173)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9173

Date uploaded in London – –22 January  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சின்னச் சின்ன செயல்கள் = பெரிய பெரிய பலன்கள்!

ச.நாகராஜன்

ஜென் புத்தமதப் பிரிவில் ஏராளமான குட்டிக் குட்டி உபதேசங்கள் உண்டு. அவை அன்றாட வாழ்வில் எளிதில் கடைப்பிடிக்கக் கூடியவை; ஆனால் ஆழ்ந்த அர்த்தம் பொதிந்தவை. பார்க்க எளிதாக சுலபமாக இருக்கும் அந்த அன்றாடப் பழக்க வழக்கங்கள் மிக பிரம்மாண்டமான பலனைத் தரும்!

அசோகன் மாமன்னனாக எப்படி ஆனான்?

மாமன்னன் அசோகன் முந்தைய ஜென்மத்தில் ஒரு குழந்தையாக இருந்த போது அவர் புத்தபிரானைச் சந்தித்தார். புத்தருக்குக் கொடுக்க குழந்தையிடம் என்ன இருக்கும்? ஆனால் அந்தக் குழந்தை ஒரு பிடி மண்ணை எடுத்து புத்தபிரானிடம் பயபக்தியுடன் கொடுத்தது. அதை புத்தர் அன்புடன் வாங்கிக் கொண்டார்.

அந்தச் சிறிய செயலின் பலன் அந்தக் குழந்தை மாமன்னன் அசோகனாக உருவெடுத்தது. பெரும் செயல்களைச் செய்தது!

இது தான் ஒரு சிறிய நல்ல செயலின் பலன்!

xxx

பென்னியைச் சேகரித்தவர் கெடிலாக் கார் வாங்கிய சம்பவம்!

ஜென் பழக்க வழக்கங்களைப் பற்றி விளக்கும் ஜென் மாஸ்டர் டைனின் கடகிரி

(Dainin Katagiri) நம்மிடம் இருக்கும் ஒவ்வொன்றும் மதிப்பு மிக்கதே என்கிறார். “நமது வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் படிப்பினைகள் மதிப்பு வாய்ந்தவை. நமக்குக் கிடைக்கும் அர்த்தமுள்ள ஞான மொழிகள் மதிப்பு மிக்கவை. ஒரே ஒரு வார்த்தையாக இருக்கலாம் அல்லது ஒரு சிறு சொற்றொடராக அது இருக்கலாம். ஒரு சின்ன பைசா கூட மதிப்பு மிக்கது தான்” என்று கூறும் அவர் தான் கண்ட ஒருவரைப் பற்றி விவரிக்கிறார் இப்படி:

“எனக்குத் தெரிந்த ஒருவர் பென்னி (Penny Coins) யைச் சேர்ப்பதைப் பழக்கமாகக் கொண்டவர். இப்படி பென்னிகளாகச் சேர்த்து வந்தவர் பல மூட்டைகளில் பென்னி நாணயங்களைச் சேகரித்தார்.  அந்த பென்னிகளைக் கொண்டு அவர் ஒரு கெடிலாக் காரையே வாங்கி விட்டார்.  ஆகவே பென்னி கூட மதிப்பு வாய்ந்தது தான் என்பது தெரிகிறது”

ஒரு புல் கூட மதிப்பு மிக்கது தான். புல் இல்லாமல் உரமான மண் உருவாகாது.

நமது வாழ்க்கைக்கு நாம் உண்மையானவராக இருந்தால் அது மிக்க மதிப்பு மிக்கதாக மாறி விடும். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உன்னதமான எண்ணமும் நமக்கு உருவாகும்.

xxxxx

மன்னர் மந்திரிக்குத் தந்த தாடி!

டாங் (Tang Dynasty) வமிசத்தில் ஒரு மன்னர் இருந்தார். அவரது முக்கியமான மந்திரி ஒருவர் ஒருமுறை நோய்வாய்ப்பட்டு விட்டார். ராஜ வைத்தியர் அவரைப் பரிசோதித்தார். நல்ல ஒரு தாடியை வறுத்து அவரிடம் கொடுத்தால் அந்த வியாதியிலிருந்து அவர் விடுபடுவார் என்றார் வைத்தியர்.

மன்னர் ஆசை ஆசையாக பெரிய தாடியை வளர்த்து வந்தார். அவர் உடனே தன் தாடியை மழித்து அதை வறுத்து மந்திரியிடம் தந்தார். என்ன ஆச்சரியம், மந்திரியின் கொடிய வியாதி நீங்கியது; அவர் குணமடைந்தார்.

மந்திரி தாடியைப் பற்றி, தாடி தானே என்று எண்ணவில்லை. அந்த தாடிக்குப் பின்னே அதை மழித்துத் தரும் மன்னரின் பேரன்பை நினைத்து உருகினார்.

தன் வாழ்நாள் முழுவதும் மன்னருக்குச் செருப்பாக உழைக்கத் தயார் என்று எண்ணிய அவர், அப்படியே வாழ்ந்து காட்டினார்.

ஒரு சிறிய தாடி, ஒருவரின் வாழ்நாள் உழைப்பைப் பெற்றது!

xxxx

ஒபாகுவின் தாழ்ந்த வணக்கம்!

ஒபாகு (Zen Master Obaku) என்பவர் சிறந்த ஜென் மாஸ்டர். அவர் புத்தபிரானைப் பார்த்தவுடன் தலை தாழ்த்திக் குனிந்து வணங்கினார். புத்தர், தர்மம், சங்கம் எதையும் அவர் பதிலாக புத்தரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இடுப்பளவு குனிந்து ஒரு வணக்கம்! அந்தச் சின்ன செயலிலேயே அவர் மிகவும் திருப்தி அடைந்தார். அந்த குனிந்து வணங்கிய சிறிய செயல் என்ன ஆனது? இன்று வரை அனைவராலும் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது செய்யும் வணக்க முறையாகி விட்டது.

சிறிய செயல்; பெரிய பழக்கத்தை உருவாக்கி விட்ட பெரிய பலன்!

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்!

xxx

வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ள வேண்டுமானால் அன்றாடம் சிறிய சிறிய நல்ல செயல்களை விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும் – பயனை எதிர்பாராது!

ஆத்ம திருப்தியுடன் செய்யப்படும் அவை அதற்கு ஈடான சிறிய பலனைத் தராது; நேர்விகித பலனாக சரிக்குச் சரியான அளவாக இல்லாமல் அளவுக்கு மீறிய பிரம்மாண்டமான பலனை அது தரும்!

இது ஜென் பிரிவின் முக்கியமான ஒரு போதனை!

***

 tags- ஜென்,  சின்ன செயல், பெரிய பலன்,