SODIUM, CALCIUM, POTASSIUM SALTS OF PHOSPHORIC ACID – USED AS FOOD ADDITIVES;
METAL PHOSPHIDES – INDIUM, GALLIUM PHOSPHIDES FOR LIGHT EMITTING DIODES;
DI SODIUM PHOSPATE FOR GLASS, CERAMIC, LEATHER INDUSTRIES;
ZINC PHOSPHIDES FOR RAT POISON;
MAGNESIUM PHOSPHIDES FOR WARNING FLARES IN MID SEA;
SODIUM TRI POLYPHOSPHATES FOR DETERGENTS AND DISHWASER POWDERS/ TABLETS;
PHOSPHORUS TRI CHLORIDE, PHOSPHORIC ACID- FOR INSECTICIDES, WEED KILLERS, FLAME RETARDANTS;
PHOSPHORIC ACID FOR FERTILIZERS;
PHOSPHORUS SULFIDES FOR OIL ADDITIVES, ‘STRIKE ANYWHERE’ MATCHES
RED PHOSPHORUS FOR SAFETY MATCHES;
GAS PHOSPHINE FOR FLAME PROOFING AGENTS, BIOCIDES;
CALCIUM HYDROGEN PHOSPHATES FOR TOOTH PASTE;
BLUE GREEN ALGAE- CYANO BACTERIA;
ZOO PLANKTONS
PHOSPHORUS CYCLE
மருத்துவத்தில் ………………………….
பாஸ்வரம் விஷ சத்துடையது. தீப்பெட்டி, பட்டாசு தொழிற்சாலைகளில் வேலை செய்வோருக்கு, 19-ம் நூற்றாண்டில் பாஸ்வர தாடை(Phossy jaws) நோய் ஏற்பட்டது . முகத்தில் பெரிய வீக்கம் ஏற்பட்டு முகமே கோணலாகிவிடும். பின்னர் இதைத்தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இப்படி இருந்தபோதும் அக்கால மருத்துவ நூல்களில் பாஸ்பரஸ் மருந்துகள் என்று ஒரு அத்தியாயம் இருந்தது. இப்பொழுது பழைய மருந்துகள் கைவிடப்பட்டன .
தற்காலத்தில் BIS PHOSPHONATES பிஸ்- பாஸ்போனெட்ஸ் என்னும் ரசாயன உப்பு கலந்த மருந்துகள் எலும்பு புற்றுநோய்ச் சிகிச்சையிலும் ஆஸ்டியோபோரோசிஸ் சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது.
எல்லா உயிரினங்களுக்கும் பாஸ்பேட் என்னும் பாஸ்வர உப்பு தேவை. எலும்புகளில் கால்சியம் பாஸ்பேட் உளது. டி.என் .ஏ.யில் சிறிதளவு இது உளது. செல்களுக்கு இடையில் உள்ள திரவத்தில் இது இருப்பதால் உடலில் கால்சியம் பரவுகிறது. சக்தியூட்டும் ஏ. டி. பி. மற்றும் தூது போகும் ஜி .எம். பி ஆகியவற்றில் ஆர்கானோ பாஸ்பேட்ஸ் உப்பு இருக்கின்றது. ENERGY MOLECULE – ATP- ADENOSINE TRI PHOSPATE;
நமது உடல் குளுக்கோஸ் என்னும் சர்க்கரைச் சத்தை உடைத்து ஒவ்வொரு மணி நேரத்திலும் ஒரு கிலோகிராம் ATP உற்பத்தி செய்கிறது. அது மீண்டும் பல பொருட்களாக மாறி மறுபடியும் பயன்படுகிறது. இதனால்தான் நமக்கு சக்தி கிடைக்கிறது.
நமது உடலில் எலும்புகள்தான் பாஸ்வர வங்கி (Source of Phosphorus) ஆகும். நாம் நினைக்கிறோம் – எலும்புகள் அப்படியே உரு மாறாமல் இருக்கும் என்று. அது தவறு. சதாசர்வ காலமும் கூட்டல் கழித்தல் கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறது. அதாவது கொஞ்சம கரையும். பின்னர் அதன் மீது மேலும் எலும்பு படியும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு நாளும் 800 மில்லிகிராம் பாஸ்வரம் தேவை . ஆயினும் நாம் தினமும் சாப்பிடும் பொருட்களிலிருந்து 1000 முதல் 2000 மில்லிகிராம் கிடைப்பதால் யாரும் இது பற்றிக் கவலைப்படத்தேவை இல்லை. இறைச்சி , பால், பாலடைக் கட்டி உணவு எண்ணெய் மூலம் கிடைத்துவிடும். சில குழந்தைகளுக்கு எலும்பு வளர்ச்சி இல்லாவிட்டால் டாக்டர்கள் பாஸ்பேட்டுகளை சாப்பிடச் சொல்லுவர். மருத்துவ ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் சாப்பிடுவது கூடாது .
xxxx
பாஸ்வர குண்டு மழை
இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா, பிரிட்டன் முதலிய நேச நாடுகள் ஜெர்மனியின் மீது பாஸ்வர குண்டுகளை வீசி பல்லாயிரம் பொதுமக்களை எரித்துக் கொன்று குவித்தன. ஹாம்பர்க் என்னும் ஜெர்மானிய நகர் மீது வீசிய எரி குண்டுகளால் ஒரே நாளில் 25,000 பேர் எரிந்து கருகினர். எப்போது பார்த்தாலும் ஹிட்லர் செய்த அட்டூழியம் பற்றி மட்டும் பேசுவதால் எதிர்தரப்பு செய்த அக்கிரமங்கள் வெளியாவதில்லை ஒரே நேரத்தில் 25,000 எரி குண்டுகள் போடப்பட்டன. மொ த்தத்தில் ஜெ ர்மா னிய நக ரங்கள் மீது 2000 டன் பாஸ்வர குண்டுகள் வீசப்பட்டன.
Xxxx
பொருளாதாரத்தில்…………………………..
பாஸ்பேட் அடங்கிய பாறைத்தூளை கந்தக அமிலத்தில் கலந்தால் பாஸ்பாரிக் அமிலம் கிடைக்கும். அல்லது மின்சார உலையில் கரியுடன் எரித்தால் பாஸ்வரம் கிடைக்கும். பெரும்பாலும் விவசாய உரம் தயாரிக்கப் பயன்படுகிறது.
பாஸ்பரஸ் ட்ரை குளோரைட் என்பதை பூச்சி கொல்லி , களை கொல்லி திரவத்தில் பயன்படுத்துகிறார்கள்.
சோடியம் ட்ரைபாலி பாஸ்பேட் என்னும் உப்பை வாஷிங் பவுடரில் — சலவைத் தூள் — கலந்தது நல்ல பயன்தந்தது. இதனால் மில்லியன் டன் கணக்கில் இது உற்பத்தியானது.
தீக்குச்சசி , எஞ்சின் பாதுகாப்பு திரவம் ஆகியவற்றிலும் பாஸ்பைட் உப்பு பயன்படுகிறது.
துத்த நாக பாஸ்பைடு , எலிமருந்திலும், மக்னீஷியம் பாஸ்பைடு கடலில் எச்சரிக்கை தீ உண்டாக்குவதிலும், டை சோடியம் பாஸ்பேட் கண்ணாடி, பீங்ககான் , தோல் தொழிற்சாலைகளிலும், கால்சியம் ஹைட்ரஜன் பாஸ்பேட் பற்பசையிலும் பயன்படுகின்றன.
ஒளி உமிழும் டையோடுகளில் காலியம் , இண்டியம் உலோக பாஸ்பைடுகள் இருக்கும்.
டிஷ் வாஷர் எனப்படும் பாத்திரம் கழுவும் எந்திரத்துக்கான மாத்திரைகளிலும் பாஸ்வர உப்புகள் உள்ளன
xxx
புறச் சூழல் பாதிப்பும் பாஸ்வரமும்
பாஸ்வர சுழற்சி (Phosphorus Cycle) என்னும் வினோதம் நம்மை அறியாமலே நடந்து வருகிறது. ஏற்கனேவே எட்டு கோடி டன் பாஸ்வரம் கடலில் உளது. இத்தோடு ஆண்டுக்கு 20,000 டன் பாஸ்பேட் உப்புகளை மனிதர்கள் கலக்கிறார்கள். இதனால் பாசிகள் வளர்ந்து கடலை அசுத்தமாக்குகிறது என்று பலரும் கூச்சல் போட்டார்கள் .ஆயினும் சாக்கடை நீரிலிருந்து பாஸ்பேட்டுகளை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் வந்துவிட்டது. அது மட்டுமல்ல கடலில் ஒரு வினோத சுழற்சி நடைபெறுகிறது. கடலில் சூரிய ஒளி சில மீட்டர்கள் வரைதான் ஊடுருவும். அதற்கு கீழே கும்மிருட்டுதான் . கடலுக்கடியில் பாஸ்பேட் உப்புகள் படிந்து ஒரு கடல் பாலை வனத்தை (Marine Desert) உருவாக்குகிறது. இதனால் பாஸ்பேட் காரணமாக வளரும் பாக்டிரியா, பாசி வகைகள் ஆழமான கடலை பாதிப்பதில்லை . ஆயினும் கடலின் அடி மட்டத்திலிருந்து வரும் வெப்ப நீரூற்றுகளும் கடல் நீரோட்டங்களும் பாஸ்பேட் உப்புக்களை மேலுக்கு கொண்டுவருவதால் பிளாங்க்ட்டான் (zoo planktons) என்னும் நுண்ணுயிர்கள் பெருகுகின்றன. உலகிலேயே மிகப்பிரிய மிருகங்களான திமிங்கிலத்துக்குக் கூட இவைதான் உணவு. ஆக மனிதர்கள் முதலில் கூச்சல் போட்டது போல பாஸ்பேட்டுகள் கடலை அசுத்தமாக்கவில்லை. அதற்கு நேர் மாறாக சிற்றுயிர்கள், வாழ உதவுகின்றன. அவை பேருயிர்கள் வாழ வகை செய்கின்றன.
எதிர்காலத்தில் நமக்குத் தேவையான பாஸ்பேட் முழுவதையும் டிஷ் வாஷிங், மற்றும் வாஷிங் திரவம் (Dishwashers and washing machines) பயன்படுத்தும் கழிவு நீரிலிருந்து எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இதுவரை 29 மூலகம் பற்றி அறிந்தோம் . இன்று முப்பதாவதாக பாஸ்வரம் பற்றிய சுவையான விஷயங்களைக் காண்போம்.
பாஸ்வரம் (PHOSPHORUS)என்ற சம்ஸ்கிருதச் சொல் கிரேக்கம், லத்தின் முதல் ஆங்கிலம் வரை எல்லா மொழிகளிலும் இருக்கிறது ‘முதா கரத்த மோதகம்’ என்ற கணேச பஞ்சரத்ன ஸ்லோகம் முதல் பல சூரிய துதிகளில் ‘பாஸ்வரம்’ வருகிறது. வெளிச்சம், சூரியன், ஒளி என்ற பொருள் கொண்ட சொல். இதே பொருள்தான் பாஸ்வரம் என்ற மூலகத்தின் பொருள். காற்றில் சிறிது நேரம் வைத்தால் தீப்பிடித்துவிடும். இது மஞ்சள்/வெள்ளை பாஸ்வரம் . இதைத் தீப்பிடிக்காமல் வைக்க சிவப்பு பாஸ்வரமாக்கி தீப்பெட்டி, தீக்குச்சி, மத்தாப்பு, பட்டாசு முதலியவற்றில் பயன்படுத்துவர் .
இரண்டாவது சுவையான விஷயம்
இதை சுதந்திரப் போராட்ட வீரர்கள் பயன்படுத்தியதாகும் . அந்தக் காலத்தில் இந்தியர்கள் தயாரித்த துணிகளையே , பயன்படுத்த வேண்டும் என்று சுதந்திர வீரர்கள் வேண்டு கோள் விடுத்தநர். அ தைக் கேளாமல் சிலர் வெளிநாட்டுத் துணிகளை விற்றனர். அத்தகைய பிரிட்டிஷ் ஆதரவு துணிக்கடைகளில் துணிகளை எரிக்க விடுதலை வீரர்கள் அந்த துணிக்கடைகளில் பாஸ்வரத்தை வைத்து விடுவாராம். அன்றிரவு கடைகள் தீப்பற்றி எரியும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
இன்னொரு சுவையான மொழியியல் விஷயம் ‘வ’ என்பது ‘ப’ ஆக மாறும். நாம் ‘வங்கம்’ என்றால் வங்காளிகள் ‘பெங்கால்’ என்பர். அவர்கள் பிரணா’ப்’ குமார் முகர்ஜி என்றால் நாம் அழகாக பிரண’வ’ குமார என்போம்.இதேபோல ஆங்கிலத்தில் பாஸ்’ப’ரஸ் என்பர். நாம் அதை பாஸ்’வ’ரம் என்போம் ‘பரஸ்’ – ‘வரம்’ ஆகும். இதை மாபெரும் சம்ஸ்கிருத அறிஞனான வள்ளுவனும் பயன்படுத்தினான். ‘பாபி’ என்ற சம்ஸ்கிருத சொல்லை அவன் ‘பாவி’ என்று குறளில் மாற்றுகிறான்.
பாஸ்வரம் உடலுக்கும் தேவை; நிலத்துக்கும் தேவை.நமது உடலுக்கு ஏன் தேவை ?
எலும்பும் பல்லும் வளரத் தேவை . மற்றும் பல பணிகளை செய்யும் உடல் என்சைம், டி என் ஏ DNA ஆகியவற்றுக்கும் தேவை .
நிலத்துக்கு ஏன் தேவை?
தாவரங்கள் வளருவதற்கு பொட்டாசியம் நைட்ரஜன் , பாஸ்வரம் அவசியம். பாஸ்வரம் அதிகம் இல்லாத நிலங்களில் தாவரங்கள் போதுமான வளர்ச்ச்சியில்லாமல் சிறுத்துப் போகும். விதைகளும் பலம் குன்றிப் போகும் . அறுவடையும் குறையும். இதற்காக பாஸ்பேட் உரங்கள் அவசியம் . இயற்கையான பாஸ்பேட் உரம் உண்டாக்க தேவையற்ற மக்கிப்போன தாவரப் பொருட்களுடன் பாஸ்பேட் தூ ளைச் சேர்த்தும் இதைத் தயாரிப்பார்கள்.
xxxx
ஒரு எச்சரிக்கை
எந்த மருத்துவக் கட்டுரையைப் படித்தாலும் அதிலுள்ள மருத்துவ விஷயங்களை டாக்டர்களைக் க லந்தாலோசிக்காமல் எடுக்கக் கூடாது. இதை என் எழுதுகிறேன் என்றால் நிலத்துக்குப் போடும் பாஸ்பேட் வேறு. உடலுக்குத் தேவைப்படுவோருக்காக விற்கும் பாஸ்பேட் மாத்திரைகள் வேறு .
குழந்தையின் வளர்ச்சிக்கு போதுமான அளவு உடலில் பாஸ்வரச் சத்து இல்லையென்றால் டாக்டர் சொல்லுவார். அவர் சொல்லிய அளவுப்படி தாய் எடுக்கலாம் .
இனி ரசாயன விஷயங்களைச் சொல்கிறேன்
இது உலோகமல்ல (non-metal) . இது ஒரு உப்பு. இது மஞ்சள்/வெள்ளை , சிவப்பு, கருப்பு என்று மூன்று வகைப்படும். வெள்ளை என்பதை சாதாரணமாக காற்றில் வைத்தாலேயே மஞ்சள் நிறமாகி எரியத் துவங்கிவிடும் ஆகையால் அதை நீருக்குள் வைத்திருப்பர்
வெள்ளை பாஸ்வரத்தை பலநாட்களுக்கு மூடிய கலத்தில் வைத்து சூடாக்கி சிவப்பு பாஸ்வரத்தை உண்டாக்குவர் . அதிக அழுத்தம் கொடுத்தால் கிடைப்பது கருப்பு பாஸ்வரம். மின்சாரத்தைக் கடத்தும் சக்தி கொண்டது.
பாஸ்வரம் – 31 என்ற கதிரியக்கம் இல்லாத ஐசடோப் கிடைக்கிறது இதை வெள்ளை பாஸ்வரம் -32 என்ற கதிரியக்க பாஸ்வரமாக மாற்றி ஆராய்சசிகளில் பயன்படுத்துவர்
பா கிடைக்கும் நாடுகள்
ரஷ்யா , அமெரிக்கா , மொராக்கோ , டுனிஷியா , டோகோ, நவூரு
வெள்ளை பாஸ்வரம் இருக்கும் உணவுப் பொருட்கள்
இறைச்சி , முட்டை , பால், சீஸ் என்னும் பாலாடைக்கட்டி, சூரியகாந்தி விதைகள் , பூசணி விதைகள், கோழிக்கறி.
xxxx
மூத்திரத்தில் பாஸ்வரம் !! கண்டுபிடித்தது யார் ?
1669ம் ஆண்டில் ஜெர்மனியில் ஹென்னிக் பிராண்ட் (Hennig Brandt) என்பவர் இதை மூத்திரத்தை ஆவியாக்கி கண்டுபிடித்தார்
‘வேலையில்லாத அம்பட்டன் பூனையைப் பிடித்து சிரைத்தானாம்’ என்பது தமிழ் பழமொழி . அதுபோல பிராண்ட் , முத்திரத்தைக் காய்சும்போது தங்கிப்போன கசடை ஆவியாக்கி குளிரவைத்தார் பாஸ்பரஸ் கிடைத்தது. மஹா சந்தோஷம் .
ஈயத்தையும் இரும்பையும் தங்கமாக்கும் ரசவாதக் குளிகையைக் (Philosopher’s Stone) கண்டுபிடித்ததாக நம்பி யாருக்கும் சொல்லாமல் ரஹஸ்யம் காத்ததார் .பின்னர் வயிற்றுப் பிழைப்புக்காக டேனியல் கிராப்ட் என்பவரிடம் விற்றார். அவர் அதை ஐரோப்பா முழுதும் தம்பட்டம் அடித்துப் பெயர் பெற்றார். குங்கல் என்ற ஜெர்மனியருக்கு ரஹசியத்தைச் சொல்லிதருவதாக விலை பேசினார். அவர் கேட்ட விலையைத் தராமல் தானே பாஸ்வரத்தை உண்டாக்கத் தெரிந்துகொண்டார். பிறகு காப்ரெய்ட் லீப்னிட்ஸுக்கு சொல்லிக் கொடுத்து காசு வாங்கினார் . இப்படிப் பதுங்கிப் பதுங்கி வேலை செய்ததால் ஏனைய மூவரும் தாங்களே இதைக் கண்டுபிடித்ததாகப் பெருமை அடித்துக் கொண்டனர் .
இரண்டாவது பகுதியில் ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரத்தின் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் பாஸ்வர குண்டுகளை வீசி பல்லாயிரக் கணக்கான பொது மக்களைக் கொன்று குவித்த வன்செயலையும் இந்த மூலகத்தின் பொருளாதார, மருத்துவ, உணவு, போர் உபயோகங்களையும் காண்போம்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புராணத் துளிகள் இரு பாகங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. மிகப் பரந்து விரிந்து கிடக்கும் 18 புராணங்களில் உள்ள சில சிறந்த பகுதிகளைத் தொகுத்துத் தருவதே நமது நோக்கம். அந்த வகையில் மூன்றாம் பாகத் தொகுப்பு இப்போது தொடர்கிறது.
புராணத்துளிகள் மூன்றாம் பாகம் அத்தியாயம் 1 : கட்டுரை எண் 9119 வெளியான தேதி 9-1-2021; அத்தியாயம் 2 கட்டுரை எண் 9123 வெளியான தேதி 9-1-2021
புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 3
ச.நாகராஜன்
7. எள், தர்ப்பையின் முக்கியத்துவம் என்ன?
கருடனை நோக்கி திருமால் கூறுவது : “எள் என்பது எனது வியர்வையிலிருந்து தோன்றியது. ஆகவே அந்த தானியம் மிகவும் பரிசுத்தமானது. எள் இரு வகைப்படும். ஒன்று கறுப்பு நிறமுள்ள எள். இன்னொன்று வெள்ளை நிறமுள்ள எள். இதில் எதை தானங்களோடு சேர்த்துக் கொடுத்தாலும் அது சிறப்புடையதே. சிரார்த்த காலத்தில் கறுப்பு எள்ளைச் சேர்த்தால் பிதிருக்கள் மிகவும் திருப்தி அடைவார்கள். தர்ப்பைப் புல்லானது ஆதியில் ஆகாயத்தில் உருவாயிற்று. அந்த தர்ப்பைப் புல்லின் இரு கோடிகளில் பிரமனும் சிவனும் வாசம் செய்ய நடுவில் ஸ்ரீ ஹரியானவர் வாசம் செய்கிறார். தர்ப்பை இல்லாமல் சிரார்த்தம் உள்ளிட்ட கர்மங்கள் செய்யலாகாது. பிராமணருக்கும், மந்திரத்திற்கும், தர்ப்பைக்கும், அக்னிக்கும், திருத்துழாய்க்கும் நிர்மால்ய தோஷம் என்பது கிடையாது.
– கருட புராணம்
8. பரீக்ஷித் என்று ஏன் பெயர் ஏற்பட்டது?
ஸ்ரீமத் பாகவம் முதலாம் ஸ்கந்தத்தில் பரீக்ஷித் மஹாராஜாவின் ஜனனம் பற்றிய 12ஆம் அத்தியாயத்தில் வருவது இது.
அந்தணர்கள் பலர் தர்மபுத்திரரைச் சந்தித்து பரீக்ஷித்தின் ஜாதகத்தை ஆராய்ந்து பல விசேஷ பலன்களைக் கூறி விட்டு வெகுமதி பெற்றுத் தம் தம் வீடுகளுக்குச் சென்றனர்.
அந்த அந்தணர்களால் பல்வேறு குணங்கள் எல்லாம் கூறப்பட்ட உத்தரையின் புதல்வன், பரீக்ஷித் என்று உலகில் புகழ் பெற்றான், ஏனெனில், திறமையெல்லாம் அமைந்த பிரபுவாகிய அவன், தாய் வயிற்றில் இருக்கும் போது, தான் கண்ட பரம புருஷனை (ஸ்ரீ கிருஷ்ணரை) தியானம் செய்து கொண்டு இவ்வுலகத்தில் மனிதர்களுக்குள் அந்த பரம புருஷன் இருக்கிறானா என்று தேடிக் கொண்டே இருந்தான். அங்ஙனம் தேடிப் பார்த்து ஸ்ரீ கிருஷ்ணரே அந்த பரம புருஷன் என்று நிச்சயித்தான். ஆகவே இவன் பரீக்ஷித் என்று உலகமெங்கும் புகழ் பெற்றான்,
(அதாவது தான் கருப்பையில் இருக்கும் போது கண்ட புருஷன் எவனாய் இருப்பான் என்று பரீக்ஷை செய்து கொண்டே இருந்ததால் அவன் பரீக்ஷித் என்ற பெயரைப் பெற்றான் என்பது பெறப்படுகிறது.)
9) திருதராஷ்டிரனுக்கு விதுரன் கூறிய இறுதி அறிவுரை என்ன?
ஸ்ரீமத் பாகவதம் முதலாம் ஸ்கந்தத்தில் 13ஆம் அத்தியாயத்தில் வருவது இது.
விதுரன் ஹஸ்தினாபுரத்திற்கு வந்து திருதராஷ்டிரனுக்குக் கூறிய இறுதி அறிவுரை :-
“ராஜனே! இந்த இடத்திலிருந்து சீக்கிரம் நீர் புறப்படுவீராக. நமக்குச் சமீபத்தில் நெருங்கி வந்திருக்கும் பயத்தைப் பற்றி ஆலோசிப்பீராக. எவ்வகைக் காரணத்தினாலும் எப்பொழுதும் எதற்குத் தடை செய்ய முடியாதோ அப்படிப்பட்டதும், பகவானுடைய ஆக்ஞைப்படி மாறாமல் நடப்பதும் ஆகிய மரண காலம் நம் எல்லோருக்கும் இதோ சமீபத்து வந்திருக்கிறது. இதோ, தோன்றுகின்ற உயிர்கள் எல்லாம் மரண காலம் நெருங்கி வரப் பெறின் மிகுதியும் பிரியத்திற்குரிய உயிரை விட்டுப் பிரிந்து போகப் பெறுமென்றால், உயிரைத் தொடர்ந்து மற்ற செல்வம் உள்ளிட்ட அனைத்தும் விடுபட்டுவிடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? அப்படிப்பட்ட காலம் நமக்கு இப்போது வெகு அருகில் வந்துள்ளது. உமது தந்தை, உமது உடன் தோன்றல், நண்பர்கள், புதல்வர்கள் ஆகிய இவ்வனைவரும் மரணம் அடைந்தார்கள். வாலிப வயதும் போய் விட்டது. சரீரமும், கிழத்தனத்தால் மூடப்பெற்று விட்டது. ஆயினும் உயிர் வாழ்வதற்காக எதிரியின் வீட்டை அடுத்திருக்கின்றீர்! ஆ! என்ன ஆச்சரியம் இது!! உயிர்களுக்கு உயிர் வாழ வேண்டும் என்ற விருப்பம் மென் மேலும் எல்லையில்லாமல் வளர்ந்து வரும் தன்மையது. நீர் அந்த ஆசையினால் அல்லவோ, பீமன் அவமதித்துக் கொடுத்த பிண்டத்தையும் வாங்கிப் புசித்து விட்டு, வீட்டைக் காக்கும் நாய் போல விழுந்து கிடக்கிறீர்!̀…
எவன் ஒருவன் தன் புத்தியினால் இந்த சம்சாரத்தின் மீது வைராக்கியம் உண்டாகப் பெற்று இந்திரியங்களை ஜெயித்து தன்னையே பற்றி இருப்பவரது சம்சார பந்தத்தைப் போக்கும் தன்மையுள்ள பகவானை மனதில் நிலை நிறுத்திக் கொண்டு பிள்ளை, பெண்டிரது வீட்டை விட்டுப் போவானோ அவனே மனிதர்களுள் சிறந்தவன். ஆகவே, நீர் வடதிசையை நோக்கிச் செல்வீராக!”
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK .
XXX
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -27
3-2-126
Laghu –Light
லகு – இலகுவான , லேசான
Lavate— Float/தெப்பம்
வல்லம் – படகு –
xxx
3-2-129
Vayas— Vayathu வயது
Vayas —V/age; Also AYUSH/Age ஆயுள்
Sakti –Skill, capacity to do
Sakti is used in most of the Indian languages.
சக்தி – விசை
Xxx
3-2-132
Suu– Juice, squeeze
Suu– chew, get the juice out of it.
சாறு பி ழி
Old English ceowan “to bite, gnaw, chew,” from West Germanic *keuwwan (source also of Middle Low German keuwen, Dutch kauwen, Old High German kiuwan, German kauen), perhaps from PIE *gyeu- “to chew” (source also of Old Church Slavonic živo “to chew,” Lithuanian žiaunos “jaws,” Persian javidan “to chew”).
இந்த வழியில் பார்த்தாலும் ஸம்ஸ்க்ருத தொடர்புடையதே ‘ஜம்ப’ என்றால் தாடை என்று பொருள்.
xxxxx
3-2-133
Arha — Fit to
In Tamil Arukathai
அருகதை
Xxx
3-2-136
Ishnu ending is interesting.
12 words are given as examples; few of them
Rosishnu, varthishnu, sarishnu
It sounds like Malayalam present tense
Atikkunnu/ beating, kazikkunnu/eating etc
But the meanings and grammar are different.
இஷ்ன்னு — வில் முடியும் 1 சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மலையாள த்தில் ‘ன்னு’ என்பது நிகழ்கால முடிவு. ஆனால் சம்ஸ்கிருதத்தில் ஒரு செயலைச் செய்கிறவன்
In Panini it meant one who does something – verbal noun
சப்த அளவில் மட்டுமே ஒற்றுமை
Xxx
3-2-138
In the commentary comes Lohita Chandana/ red sandal
L= r
Rohita= red
Chandana – saanthu, saantham in Tamil
ரோஹித சந்தன – செஞ்சந்தனம்
சந்தனம் தமிழ்ச் சொல்
xxxx
3-2-139
Glasnu – one who is tired
Kalaippu in Tamil is tiredness களைப்பு
Xxxx
DRUIDS IN STONEHENGE, ENGLAND
3-2-140
Grusnu- greedy man
Grus- greed
Dhrusnu – bold
It is related English names
Andrew -Drew
“Andrew” is frequently shortened to “Andy” or “Drew”. The word is derived from the Greek: Ἀνδρέας, Andreas, itself related to Ancient Greek: ἀνήρ/ἀνδρός aner/andros, “man” (as opposed to “woman”), thus meaning “manly” and, as consequence, “brave”, “strong”, “courageous”, and “warrior”.
ஆண்ட்ரு , ட்ரு என்பன தமிழும் சம்ஸ்கிருதமும் கலந்த பெயர்
ஆண் என்ற கிரேக்க மொழிச் சொல் தமிழில் இருந்து கிரேக்க நாட்டுக்குச் சென்றது. த்ருஷ்ணு என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு துணிச்சல் மிக்க என்று பொருள். ட்ருய்ட் என்ற மர்மம் மிக்க பழங்குடி மக்கள் துணிச்சல் மிக்கவர்கள் என்பதால் அவர்களுக்கும் காரணப் பெயராக அமைந்திருக்கலாம்.
ட்ருய்ட் என்பதை திராவிடர் என்போரும் உளர்
An – aan in tamil mean man, manly/aanmai
Drew in Irish mean descendant of Druids .
Druids are
Drew (/druː/) is both a surname and a given name. As a surname, it is derived from the Irish Ó Draoi, literally meaning “Descendant of the Druid”.[1] As a male given name, it is a shortened version of Andrew.
In short Drew and Andrew are Tamil- Sanskrit hybrid ords.
Bold man – An Drew
So neither greek is indo European nor tamil is Dravidian
நான் 50-க்கும் மேலான தமிழ்ச் சொற்களை இதுவரை பட்டியலிட்டு கிரேக்க மொழி தமிழ் மற்றும் சம்ஸ்கிருத மொழியில் இருந்து பிறந்தது என்று காட்டியுள்ளேன்.
So far I have listed over50 tamil words in ancient Greek; all other Greek words are from Sanskrit
DRUIDS IN STONE HENGE IN ENGLAND
Xxxx
3-2-142
There are 30 examples with 30 verbs to explain this sutra.
Out of the 30 erbs or verbal nouns, we get familiar words used throughout india
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இந்தப் பிரபஞ்சசத்தை உருவாக்கும் 118 மூலகங்களில் (ELEMENTS) இதுவரை 28 தனிமங்களைக் கண்டோம். இன்று 29ஆவது மூலகத்தை அறிவோம்.
நியான் (NEON) என்ற வாயுவின் சரியான உச்சரிப்பு நீயான் (நியான்= NEENYON நீ- யோன்) . ‘நவ’ என்ற சம்ஸ்கிருத்த் சொல்லில் இருந்து வந்தது நியூ / NEW புதிய என்ற சொல். அதிலிருந்து உதித்தத்தே புதிய= நியான் வாயு.
இந்த வாயுவினால் மற்ற மூலகங்களுடன் இணைந்து பணிபுரிய முடியாது. ஆகையால் இவை மக்கள், பிராணிகள் விஷயத்தில் எந்தப் பங்கும் ஆற்றுவதில்லை இதை போலவுள்ள ஆர்கான், க்ரிப்டான் , ஸெனான் என்ற வாயுக்களும் நோபிள் NOBLE , அதாவது பிரபுக்கள் போன்றவை. அதிகம் மற்றவர்களுடம் கலவாத வகையின.
வில்லியம் ராம்ஸே , மாரிஸ் ட்ராவர்ஸ் (WILLIAM RAMSAY , MORRIS TRAVERS) என்ற 2 விஞ்ஞானிகள் லண்டனில் 1898ல் அபூர்வ வாயுக்கள் எனப்படும் பிரபுக்கள் வாயுக்கள் பற்றி ஆராய்ந்போது திடீரென அதிக ஒளிபடைத்த வாயுவைக் (CRIMSON RED LIGHT) கண்டனர் . ‘புதிய’ என்பதற்கான ‘நியாஸ்’ என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து நாமகரணம் செய்தனர்.
வாயு என்பது தமிழில் ‘வளி’ எனப்படும் ஆகையால் நியானை ‘புதுவளி’ என்றும் சொல்லலாம் என்பது என் கருத்து..
முதலில் நியான் பற்றிய சுவையான கதையைக் கேளுங்கள் .
ராம்சேயும் ட்ராவர்ஸும் இதைக் கண்டு பிடித்ததாக உலகம் நம்பினாலும் அதே லண்டன் யுனிவர்சிட்டி காலேஜில்UNIVERSITY COLLEGE, LONDON பணியாற்றிய விஞ்ஞானி NORMAN COLLIE தான்தான் நியானைக் கண்டுபிடித்தவர் என்று சொல்லிக்கொள்கிறார். அவர் ஹைட்ரஜன் வாயுவில் நிறமாலையைக் கண்டுபிடிக்குமாய்வில் ஈடுபட்டபோது சிவப்பு ஒளி வந்ததை வைத்து புதுவளி என்று அறிந்தார்.
1973ல் வெளியான ஒரு புஸ்தகம் (THE SNOWS OF YESTER YEAR- NORMAN COLLIE BY WILLIAM TAYLOR, 1973) இவரும் தன்னிச்சையாக கண்டுபிடித்திருக்கக்கூடும் என்று சொல்கிறது
ஜே .நார்மன் கோலி (1859-1942) ஆர்கானிக் கெமிஸ்ட்ரி பேராசிரியர் PROFESSOR OF ORGANIC CHEMISTRY, UNIVERSITY COLLEGE .அதுமட்டுமல்ல; அவரை முன் மாதிரியாகக் கொண்டு தான் ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கினார் சர் ஆர்தர் கானன்டாயில் .ஷெர்லாக் ஹோம்ஸும் பல துப்புகளை ரசாய ரீதியில் துலக்குவார்.நார்மன் கோலி சிறந்த ரசாயன நிபுணர். நல்ல மலையேறும் சாகசப் புலி.
நம்மைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் நியான் வளி 65 பில்லியன் டன் உளது. ஆகையால் காற்றைக் கறந்து நியானைப் பெறலாம் . அதிகமாக உள்ள தனிமப்பட்டியலில் இது ஐந்தாமிடத்தில் உளது.
XXXX
நியான் NEON வாயு விளக்குகள்
இதன் முக்கிய உபயோகம் விளம்பர போர்டுகள் ஆகும். நல்ல சிவப்பு வர்ண ஒளி தருவதால் விளம்பரம் செய்யும் விளக்குகளில் இது முதலிடம் வகிக்கிறது.
இது தவிர மூடுபனிக் காலத்தில் சாலைகளிலும், நீர் மூழ்கி சாதனங்களிலும், லேஸர் ஒளிக்கருவிகளிலும் பய படுகிறது. மிகவும் குறைந்த வெப்பத்தில் குளிர் ஊட்டும் திரவம் ஆகவும் இருக்கிறது.
மூவுலக அட்டவணையில் 18-ஆவது குழுவைச் சேர்ந்தது. அதில் மேலும் 6 தனிமங்கள் உண்டு. இவை அனைத்தும் மந்த வாயுக்கள். ஏனைய மூலகங்களுடன் எளிதில் சேரா.
இரசாயனத் தகவல்கள்
குறியீடு Ne என் ஈ
அணு எண் – 10
கொதி நிலை – மைனஸ் -249 Cசி
உருகு நிலை- மைனஸ் -246 Cசி
இதற்கு 3 ஐசடோப்புகள் இருக்கின்றன .
ஐசடோப் என்பது ஒரு தனிமத்தின் மற்றோர் அவதாரம் / பிறப்பு.