மங்களம் தரும் அங்காரகன் !!!- Part 1 (Post.9010)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9010

Date uploaded in London – – 8 DECEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

TALK  BY KATTUKUTY SRINIVASAN  IN FACEBOOK.COM/GNANAMAYAM ON 7-12-2020.

VOICE RECORDING IS AVAILABLE AT GNANAMAYAM AND YOUTUBE.COM/GNANAMAYAM

நவக் கிரகங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்தவரும், சக்தி வாய்ந்தவரும்,

ஆண்மகனுமான அங்காரகனை வணங்கி ஆரம்பிக்கிறேன்.

செவ்வாய் என்றவுடன் செவ்வாய் தோஷம் என நினைத்து

அலறிப் புடைத்துக்கொண்டு, முகத்தை சுளித்துக் கொண்டு ஓடும்

அன்பர்களுக்கே இந்த விளக்கம் சமர்ப்பணம்……

வீரத்தையும் மங்களத்தையும்,அளிக்கும்செவ்வாயின் நற்குணங்களையும்

செவ்வாய் தோஷம் என்றால் என்ன, அதற்கு பரிகாரம் என்ன என்பதன்

விளக்கத்தை தயவுசெய்து

“tamilandvedas“-ஐ  நாளை பார்த்து நன்றாகப் புரிந்து கொள்ள

வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்

செவ்வாயின் பிறப்பு

உஜ்ஜைனி என்ற நகரத்தில் அந்தகாசுரன் என்ற ஒருவன் சிவனை் நோக்கி தவம் புரிந்து

என் இரத்தம் பூமியில் விழுந்தால், ஒவ்வொரு சொட்டிலிருந்தும், என்னை மாதிரி அசுரர்

தோன்ற வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். அன்றிலிருந்து அந்த நாட்டிலிருந்த

முனிவர்களுக்கும், மக்களுக்கும் பிடித்தது பீடை. அவன் அட்டகாசம் தாங்க முடியாமல்

சிவனிடம் முறையிட்டனர்.

நானே வந்து அவனை ஹதம் செய்கிறேன் என வாக்களித்தார் சிவபிரான்.

சண்டையிடும்போது அவர் நெற்றியிலிருந்து விழுந்த வியர்வைத்

துளி அந்த அசுரன் உடலிலிருந்து விழுந்த ரத்தத்தை குடிக்க,

அசுரனைக் கொன்றார் சிவன். அந்த வியர்வைத்துளியை அவர் பூமா தேவியிடம்

ஒப்படைத்தார்.

அதுவே குழந்தையாக வளர்ந்தது.

குஜன் எனப் பெயர் பெற்றது.

செவ்வாய் பற்றிய மற்றொரு கதை

பரத்வாஜ முனிவர் நர்மதை ஆற்றில் குளிக்கச் சென்ற போது ஆற்றில்

குளித்துக் கொண்டிருந்த தேவ கன்னிகையின் மீது மோகம் கொண்டதால் ஒரு

குழந்தை பிறந்தது.

பிறந்த குழந்தையை அப்படியே விட்டுச் செல்ல, அக்குழந்தையை

பூமா தேவி எடுத்து வளர்த்ததாகவும் ஒருகதை உண்டு.

#

பெயர் காரணம்

கு- என்றால் பூமி. ஜன்- என்றால் புத்திரன். ஆகையினால் குஜன்

எனப் பெயர் பெற்றார்.

சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார் குஜன்.உடல் நெருப்பாக

அனல் பறக்கவே, தவத்தை மெச்சி அவருக்கு நவக்கிரக பதவியை அளித்து

“சகோதரகாரகனாக” விளங்குவாய் என அவர் வரமளித்தார்.

அவர் தவத்தின் மகிமையால் உடல் நெருப்பான காரணத்தால் “அங்காரகன்” எனவும்

பெயர் பெற்றார்.

“அங்கார” என்றால் “தணல்” என அர்த்தம்…..

செவ்வாயின் வேறு பெயர்கள்

செந்தீ வண்ணன்,சேய், குருதி, வக்ரன்,பௌமன்,நில மகன்,அழலோன்,

ஆரல், உதிரோன், மங்களன், உக்கிரன், மகா காயன், அர்த்தன்,

சக்தி தரன்,த னப்ரதன், லோகிதாங்கன்

யுத்தக்கடவுள்!!!

கிரேக்கர்களும், ரோமானியர்களும் இவரை “GOD OF WARS”,

“ARIES” என்றும், மேலும் “விவசாயி” என்றும் கூறுகிறார்கள்.

செவ்வாயின் சிறப்பு

செவ்வாய் ஒருவருடைய ஜாதகத்தில் நன்றாக இருந்தால்,

ராணுவத்தில் உள்ள பெரிய அதிகாரிகள்

காவல் துறையில் உள்ள பெரிய அதிகாரிகள்

முதல் வரிசையில் உள்ள அரசியல் தலைவர்கள் ஆவர்.

(சூரியனும் செவ்வாயும் பலம் பெற்று குரு கேந்திரத்தில் இருந்தால்

நாட்டை வழி நடத்திச் செல்லும் அசைக்க முடியாத தலைவராவார்.

சூரியனும் செவ்வாயும் பலம் பெற்று 6,7,9 க்குடையவர்கள் ஆட்சி

பெற்றிருந்தால், சிறுவயதிலேயே அரசியலில் புகுந்து அசைக்க

முடியாத தலைவராவார்……. இதை படிப்பவர்கள் உங்கள் பேரன் பேத்தி ஜாதகத்தை

உடனே பார்க்கவும் ஒருநாள் உங்கள் படமும்

பேப்பரிலும் T V யிலும் வரலாம்)

Top பொறியியல் (civil, elec, mech, electronics)வல்லுனர்கள்,

கண்டிப்பான நீதிபதிகள்,

முன்னிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள்,

எஸ்டேட் ஓனர்கள், விவசாயிகள்,

ரியல் எஸ்டேடில் முன்னிலை வகிப்பவர்கள்,

அறுவை சிகித்சை நிபுணர்கள்,

கால் நடை பராமரிப்பில் உள்ளவர்கள் (வெட்னரி டாக்டர்கள் உள்பட)

இவர்களின் யார் ஜாதகத்தை எடுத்துப் பர்த்தாலும் செவ்வாய்

மிக நல்ல நிலைமையில் இருப்பது தெரியும்!!!

சசிமங்கள யோகம்

மேலும், சந்திரனுக்கும் இவருக்கும் மிக நட்புண்டு.

சந்திரனும் செவ்வாயும் சேர்ந்து ஒருவருடைய ஜாதகத்தில்

இருந்தால் அதை “சசி மங்கள யோகம்” எனக் கூறுவார்கள்.

இடம், நிலம், வீடு, உடையவர்களாவர்கள். திருமணத்திற்குப் பிறகு

ராஜ யோகம்!!!

பெண்களுக்கே உண்டான “மாத விடாய்” யை தீர்மானப்பது செவ்வாயும் சந்திரனுமே……

சற்றேனும் மாறியிருந்தால் அதிக

ரத்தப் போக்கு, அல்லது குறைவாகுதல், முன் அல்லது பின் அல்லது விட்டு ஆதல்

எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறார்கள்.

(இதற்கும் பரிகாரம் உண்டு)

குரு மங்கள யோகம்

குருவுக்கும், செவ்வாய்க்கும் கூட மிக பரிச்சயம் உண்டு. இதை

“குரு மங்கள யோகம் “ என்று சொல்லுவார்கள். இந்த யோகம் உடையவர்கள்

பெரிய பெரிய கம்பேனி முதலாளிகள், தொழிற்சாலை அதிபர்கள், பல விதவருமானம்,

பலவித தொழில்கள் உடையவராய் இருப்பார்கள்.

செவ்வாயின் தாக்கம் சற்று குறைந்தால், கசாப்பு கடையில்,

Non veg hotelலில், தூக்கு தண்டனை நிறைவேற்றும் இடத்தில்

வேலை செய்வார்கள்.

மிக நீசமாகி கெட்ட இடத்தில் இருந்தால், வெட்டு ,குத்து,

திருட்டு, கொள்ளை, ரௌடித்தனம்,கொலை குற்றங்களிலில்

ஈடுபட்டு சிறைத்தண்டனை அனுபவிப்பவர்கள் ஆவார்கள்.

TO BE CONTINUED………….

TAGS- செவ்வாய், அங்காரகன், MARS

கோவில்களில் ராகங்கள்! (Post N0.9009)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9009

Date uploaded in London – – 8 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

கோவில்களில் ராகங்கள்!

ச.நாகராஜன்

பாரத தேசத்தில் இசைக்குத் தனி இடம் உண்டு.

72 மேளாகர்த்தா ராகங்கள் அடிப்படையான ராகங்கள். இதிலிருந்து உதயமாகும் ஜன்ய ராகங்களுக்கு கணக்கே இல்லை. சுமார் 30000 ராகங்கள் என்று சொல்லப்பட்டாலும் கூட பெர்முடேஷன் காம்பினேஷன் படி பல லட்சம் ராகங்கள் உருவாகக் கூடும்.

இவற்றின் பயனையும் நம் முன்னோர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

வியாதி போக ஒரு ராகம், உடம்பின் வலி போக ஒரு ராகம், எழுந்திருக்கும் போது ஒரு ராகம், தூங்க வைக்க ஒரு ராகம், அழுகைக்கு ஒன்று, ஆனந்தத்திற்கு ஒன்று, சக்தி பெற ஒன்று என்று இப்படி ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து அதற்குரிய ராகத்தை நமக்குத் தந்துள்ளனர்.

அதே போல கல்யாணத்தில் பாட வேண்டிய ராகங்கள் உண்டு; ஒப்பாரிக்கு ஒரு இசை உண்டு.

கோவில்களில் பாட வேண்டிய ராகங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆறு கால பூஜை என்பது நமது ஆலயங்களில் ஆறு தடவைகள் நடக்கும் பூஜை நேரத்தைக் குறிக்கும்.

ஒவ்வொரு கால பூஜைக்கு உரித்த ராகங்கள் உண்டு.

ஒரு நாளுக்குரிய 24 மணி நேரத்தை இரண்டு மணி நேரங்களாகப் பிரித்து ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் பாட வேண்டிய ராகங்களைக் கிழே உள்ள பட்டியலில் காணலாம்.

அதிகாலை 4 மணி முதல் 6 மணி முடிய

பூபாளம்

பௌளி

மலயமாருதம்

வலசி

நாதநாமக்ரியை

மாயாமாளகௌளை

காலை 6 முதல் 8 மணி  முடிய

பிலஹரி

கேதாரம்

கௌளிபந்து

ஜகன்மோஹினி

சுத்த தன்யாசி

காலை 8 முதல் 10 மணி  முடிய

தன்யாசி

அஸாவேரி

சாவேரி

ஆரபி

தேவகாந்தாரி

தேவமனோகரி

காலை 10 முதல் 12 மணி  முடிய

சுருட்டி

ஸ்ரீராகம்

மத்தியமாவதி

மணிரங்கு

பிருந்தாவன சாரங்கா

தர்பார்

பகல் 12 முதல் 2 மணி  முடிய

சுத்தபங்காளா

பூர்ணசந்திரிகா

கோகிலதிலகம்

முகாரி

கௌடமல்லார்

பகல் 2 முதல் 4 மணி  முடிய

நாட்டைக் குறிஞ்சி

உசேனி

ரவிசந்திரிகா

வர்த்தனி

ஹம்ஸாநந்தி

மந்தாரி

மாலை 4 முதல் 6 மணி  முடிய

பூர்வி கல்யாணி

பந்துவராளி

வசந்தா

லலிதா

சரஸ்வதி

சீலாங்கி

கல்யாணி

மாலை 6 முதல் 8 மணி  முடிய

சங்கராபரணம்

பைரவி

கரகரப்ரியா

பைரவம்

நாராயணி

ஹம்ஸத்வனி

கௌளை

இரவு 8 மணி முதல் 10 முடிய

காம்போதி

ஷண்முகப்ரியா

தோடி

நடபைரவி

ஹரிகாம்போதி

கமாஸ்

ரஞ்சனி

இரவு 10 மணி முதல் 12 முடிய

சிம்மேந்திர மத்யமம்

சாருகேசி

கீரவாணி

ரீதிகௌளை

ஆனந்தபைரவி

நீலாம்பரி

யதுகுலகாம்போதி

இரவு 12 மணி முதல் 2 முடிய

அடாணா

கேதாரகௌளை

பியாகடை

சாமா

வராளி

தர்மவதி

இரவு 2 மணி முதல் அதிகாலை 4 முடிய

ஹேமாவதி

இந்தோளம்

கர்நாடக தேவகாந்தாரி

ரஸாவளி

பாகேஸ்வரி

மோஹனம்

இந்தப் பட்டியலை பழநி நாதசுர வகுப்பார் தொகுத்து அளித்துள்ளனர். இது 1958, டிசம்பர் திருக்கோயில் இதழில் வெளி வந்துள்ள தொகுப்பு. இதில் 74 ராகங்கள் இருப்பதைக் காணலாம்.

இதே போல ராகங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து நோய் தீர உள்ள ராகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை அடுத்துக் காண்போம்.

 tags–கோவில், ராகங்கள், 

***

‘NAMASKAR’ FROM LONDON 6-12-20 (Post No.9008)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9008

Date uploaded in London – –7 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

6-12-2020 SUNDAY PROGRAMME ON THAMIZ MUZAKKAM  (TAMIL THUNDER FROM LONDON)

1.PRAYER BY  LALITHA MALAR MANIAM FROM KUALALUMPUR, MALAYSIA

2.TAMIL SONG FROM BHARATI POEMS BY PAVITRA FROM CHENNAI

3.THIRUPPUGAZ PRESENTATION BY MRS JAYANTHI SUNDAR GROUP

3.a.Kumari Vidula Natarajan & mother Smt Harini Natarajan 

3.b.Smt Latha Murthy  

3.c.Srinivasan family :– Kumari Shreya Srinivasan, Smt Aruna Srinivasan; Sri Srinivasan 

4.LIVE SPEECH PLUS VIDEO CLIP BY LATHA KUMAR FROM DETROIT TAMIL SANGAM, USA- SHE SPOKE ABOUT  VIPULANANDA’S  YAAZ NUL- BOOK ON TAMIL LYRE.

5.INTRO BY MURALI RAJAGOPAL FROM MISCHIGAN, USA

VAISHNAVI ANAND INTRODUCED S. NAGARAJAN

6.TALK BY BENGALURU S NAGARAJAN- ON BHARATI’S GREAT POEMS

7.TAMIL SONG BY SARASWATHI  CHANDRASEKARAN

8.MRS BRHANNAYAKI SATHYANARAYANAN TALK ON PUDUCHERY MANAKKULA VINAYAKAR TEMPLE.

9.VAAZKA NIRANTHARAM BY MRS HARINI RAGHU AND MRS  UMASHANKAR JEYASHREE

XXXXX

WHAT IS NEW?

INTERNATIONAL BHARATI  CENTENARY MEMORIAL COMMITTEE IS BEING FORMED; PLEASE JOIN US.

SPECIAL STUDENTS PROGRAMMES DURING DECEMBER HOLIDAYS.

(PLEASE SEND UR CHIDREN’S SONGS, SPEECHES ETC.). IT IS SCHEDULED FOR 25TH DECEMBER 2020. IF THERE IS OVERWHELMING RESPONSE, IT WILL BE EXTENDED TO ONE MORE DAY.

54 BHARATI SONGS ARE RELEASED IN NEW RAGAS DURING BHARATI MEMORIAL CENTENARY YEAR 2020- 2021. BHARATI PROJECT WAS LAUNCHED LAST MONTH. WE HAVE ALREADY BROADCAST SOME OF BHARATIYAR’S POEMS/SONGS  IN NEW RAGAS.

Xxxx

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

NOW WE HAVE EXTENDED IT ON ONE MORE DAY, ON SUNDAYS.

BOTH OUR BROADCASTS ARE NON POLITICAL ND NON COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS A ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM

SUNDAYS  FOR TAMIL LANGUAGE

WHO DOES THIS?

I  (LONDON SWAMINATHAN) DO IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM  AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

PLEASE VISIT FACEBOOK.COM/GNANAMAYAM FOR THE PRODUCTIONS OF PAST WEEKS.

tags- namaskar 61220

Xxxx  subham xxxx

மணக்குள விநாயகர் ஆலயம் (Post No.9007)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9007

Date uploaded in London – –7 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து 6-12-2020 தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட

உரை!

ஆலயம் அறிவோம்!     வழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம்

மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு

துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு 

கணபதி சரணம்!

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது  புதுச்சேரி என்றும், பாண்டிச்சேரி என்றும், இன்று அழைக்கப்படும் வேதபுரியில் எழுந்தருளியுள்ள மணக்குள விநாயகர் ஆலயம் ஆகும். இந்த ஆலயம் புதுச்சேரி நகரிலேயே அமைந்துள்ளது. சென்னையிலிருந்து இது சுமார் 160 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

மணல் குளத்தின் மீது அமைந்துள்ளதால் இந்த ஆலயத்திற்கு மணக்குள விநாயகர் ஆலயம் என்ற பெயர் அமைந்தது.

பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பேயே இந்த ஆலயம் இருந்து வந்திருக்கிறது. ஆகவே சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான வரலாறைக் கொண்டுள்ள ஆலயம் இது.

கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் விநாயகரின் முன்னிரு கரங்கள் அபயம் அளிக்கின்றன. பின்னால் உள்ள இரு கரங்கள் பாசம் மற்றும் அங்குசம் ஏந்தி உள்ளன.

பெயருக்கேற்றபடி விநாயகர் குளத்தின் மீது இருப்பதால் நீர் சுரக்கும் ஆலயமாக இது உள்ளது. விநாயகருக்கு அருகில் ஒரு குழி உள்ளது. இதன் ஆழத்தை யாராலும் காணமுடியவில்லை. தொடர்ந்து நீர் மட்டும் இங்கு வற்றிடாமல் சுரக்கிறது.

விநாயகரின் பல்வேறு வடிவங்களும் அவரது திருவிளையாடல்களும் சுதைச் சிற்பங்களாக இங்கு சித்தரிக்கப்பட்டிருப்பது இதன் தனிச் சிறப்பாகும்.

பெரிய ராஜகோபுரம் முழுவதுமே தங்கத்தால் வேயப் பட்டுள்ளது. இந்தப் பிள்ளையாருக்கு ஏழரை கிலோ தங்கத்தால் ஆன தங்க ரதமும் உண்டு; வெள்ளி ரதமும் உண்டு. தங்கத்தினால் அமைந்த கோபுரமும், தங்கத் தேரும் கொண்டுள்ள விநாயகர் ஆலயம் பாரதத்திலேயே இது ஒன்று தான்.

இந்த ஆலயத்தில் பள்ளியறை ஒன்று உள்ளது. பள்ளியறையில் இரவு பூஜை முடிந்தவுடன் விநாயகரின் பாதம் மட்டுமே உள்ள உற்சவ விக்ரஹம் பள்ளியறைக்குள்ளே எடுத்துச் செல்லப்படுகிறது. பள்ளியறையின் உள்ளே விநாயகரின் தாயார் சக்தி தேவியார் எழுந்தருளி இருக்கிறார். இப்படிப்பட்ட சிறப்பையும் கொண்ட கோவில் இது ஒன்று தான்.

மேலும் விநாயகரின் மனைவிகளாக சித்தி, புத்தி ஆகிய இருவரும் இங்கு எழுந்தருளியுள்ளனர். சித்தி புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவமும் இங்கு உண்டு.

பிரெஞ்சுக்காரர்கள்  ஆயிரத்தி அறுநூறாம் ஆண்டுகளின் முற்பகுதியில் இங்கு வந்தனர். அவர்களில் ஆளும் சில பிரபுக்களுக்கு விநாயகர் கோவில் அங்கு இருப்பது பிடிக்கவில்லை.

கோட்டை ஒன்றை அமைக்க எண்ணம் கொண்ட அவர்கள் கோவிலை அகற்ற முனைந்தனர். உடனடியாக அங்கு வாழ்ந்து வந்த பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் குடும்பங்கள அங்கிருந்து செல்லப் போவதாக அறிவித்தனர். இதனால் அரண்டு போன பிரெஞ்சு தலைமை அந்த எண்ணத்தைக் கைவிட்டது.

இருந்த போதும் ஆட்சியாளர்கள் இந்தப் பிள்ளையாரை அருகிலுள்ள கடலில் தூக்கிப் போடுமாறு  பணியாளர்களுக்கு உத்தரவிட்டனர்.

அப்படியே அவர்களும் நள்ளிரவில் பிள்ளையாரைக் கடலில் தூக்கிப் போட்டனர். என்ன ஆச்சரியம்! மறுநாள் தனது வழக்கமான இருப்பிடத்தில், ஆலயத்தில் அமர்ந்து, காட்சி அளித்தார் மணக்குளத்து விநாயகர்.

திடுக்கிட்ட ஆட்சியாளர்கள் விநாயகரின் மஹிமையை உணர்ந்து அவரைச் சரணமடைந்தனர்!;

பாண்டிச்சேரியின் பிரபலமான, கவர்னர் ஜெனராலான, டூப்ளே விநாயகரின் பெரும் பக்தரானார். அவர் உள்ளிட்ட பல வெள்ளையருக்கும் அருள் பாலித்ததால் வெள்ளைக்கார பிள்ளையார் என்ற பெயரையும் மணக்குள விநாயகர் பெற்றார்.

மாபெரும் சித்தர்கள் இங்கு வந்து வணங்குவது வழக்கம். அவர்களில் தொள்ளைக்காது சித்தர் என்பவரும் ஒருவர். விநாயகரின் பேரருளுக்குப் பாத்திரமான அவர், தான் சமாதி அடையும் சமயம் அங்கேயே இருக்க விரும்பியதால் அவரது சமாதி, ஆலயத்தின் அருகிலேயே பக்தர்களால அமைக்கப்பட்டது.

மஹரிஷி அரவிந்தர், மஹாகவி பாரதியார் உள்ளிட்ட பல பெரியார்கள் வணங்கிய பிள்ளையார் மணக்குளத்துப் பிள்ளையார்.

பாரதியார் இவர் மீது விநாயகர் நான்மணி மாலை என்ற நூலை இயற்றினார். அற்புதமான நாற்பது பாடல்கள் அடங்கியுள்ள இந்த நூலில் தான், “நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்ற தன் அமர வரிகளை வடித்தார் அவர். “புதுவை விநாயகனே” என்றும்  “மணக்குளத்து வள்ளல் பாத மணிமலரே” என்றும் போற்றிய அவர், “மங்கள குணபதி மணக்குளக் கணபதி நெஞ்சக் கமலத்து நிறைந்து அருள் புரிவாய்” என்று வேண்டினார்.

காலம் காலமாக ஆயிரமாயிரம் பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கி வரும் மணக்குள விநாயகர் அனைவருக்கும் அனைத்துத் தடைகளையும் நீக்கி சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.    

திரு ஆக்கும்  செய் கருமம் கைகூட்டும் செஞ்சொற்

பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்

ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்

காதலால் கூப்புவர் தம் கை! 

நன்றி. வணக்கம்.

tags- மணக்குள விநாயகர் ஆலயம்

பாரதியார் பா நலம்! (Post No.9006)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9006

Date uploaded in London – – 7 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

லண்டனிலிருந்து தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் 6-12-2020 அன்று ஒளிபரப்பப்பட்ட உரை!

VOICE RECORDING IS AVAILABLE ON  FACEBOOK.COM/GNANAMAYAM

பாரதியார் பா நலம்!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

VOICE RECORDING IS AVAILABLE ON  FACEBOOK.COM/GNANAMAYAM

உலகப் பெருங்கவிஞனான பாரதியாரின் பாடல்களை பாரதி நூற்றாண்டிலே நினைப்பது, போற்றுவது நமது கடமை!

பாரதியாரைக் கற்று விட்டால் உலகக் கவிஞர்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்ட திருப்தி கிடைக்கும். அது மட்டுமின்றி அந்தக் கவிஞர்களையும் தாண்டிய புது கற்பனை ஒளியையும், சிறப்பையும், அவர்கள் சொல்லாத பல புது விஷயங்களையும் அதில் உள்ள நயங்களையும் நாம் காணலாம்.

ஒவ்வொரு பாடலும் ஒரு சுடர் விளக்கு. சில அமுதத் துளிகளை இங்கு பருகி மகிழ்வோம்.

முதலில் பாரதியாரின் ஒரிஜினல் கவித்திறனைப் பார்ப்போம்.

தேனை மறந்திருக்கும் வண்டும், ஒளிச்

சிறப்பை மறந்து விட்ட பூவும்

வானை மறந்திருக்கும் பயிரும் – இந்த

வையம் முழுதும் இல்லை தோழி!   ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி.

இதில் வந்திருக்கும் யாரும் சொல்லாத  சிறப்பான உவமைகள் அவரை கவிதை வானில் உச்சத்தில் ஏற்றி விடுகின்றன.

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்று கொஞ்சி அழைக்கும் கவிஞர், உன் கண்ணில் நீர் வழிந்தால் – என்னெஞ்சில் உதிரம் கொட்டுதடி என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா, என்னுயிர் நின்னதன்றோ என்று சொல்லும் போது அதில் இருக்கும் உருக்கத்திற்கு உவமை உண்டா, என்ன?

காலைக் கதிரழகின் கற்பனைகள் பாட வந்த கவிஞன்,

தங்கம் உருக்கித் தழல் குறைத்து தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ என்கிறான். இது என்ன புது ரஸவாதம்! தங்கத்தை உருக்க வேண்டுமாம். பின்னர் அதன் வெப்பத்தை – சூட்டைத் தணிக்க வேண்டுமாம். அதைத் தேனாக்க வேண்டுமாம். பின்னர் எங்கும் பரப்ப வேண்டுமாம். அது காலைக் கதிரழகாம்! கற்பனையின் எல்லையையும் கடக்கிறான் கவிஞன். செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்றான் அவன். காதிலே தேன் வந்து பாயும் உவமை ஒரு புறம் இனிமையைத் தர ஆடி வரும் தேனே என்று பிள்ளைக் கனியமுதை அவன் அழைக்கும் பாங்கு உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது!

ராமன் சீதை இலக்குவன் நடந்து செல்லும் காட்சியை வர்ணிக்க வந்த கம்பன் பாடுகிறான் இப்படி:

வெய்யோன் ஒளி தன்  மேனியின் விரி ஜோதியின் மறையப்

பொய்யோவெனும் இடையாளொடும் இளையானுடன் போனான்

மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ

ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்

ஐயோ! இவன் அழகை வர்ணிக்க முடியாது என்கிறான் கம்பன். ஐயோ என்னா பந்து வீச்சுடா என்று கிரிக்கெட் மைதானத்தில் பரம ரசிகன் விளையாட்டில் ஒன்றிக் கூறும் ஐயோவில் எத்துணை அழகு இருக்கிறது.

பாரதியோ ஐயோவை விட்டு விட்டு புதுச் சுவையை புதுச் சொல்லில் தருகிறான் குயில் பாட்டில்!

கண் எடுக்காது என்னைக் கணப்பொழுது நோக்கினாள்

சற்றே தலை குனிந்தாள். சாமீ! இவளழகை

எற்றே தமிழில் இசைத்திடுவேன்.

மங்கை அவளின் ஒரு கணப் பார்வை. சற்றே தலை குனிந்த சமயம். சாமீ! இவளழகை எப்படிக் கூறுவேன் என்று கவிஞன் கூறும் போது கம்பனின் ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான் நம் முன் தோன்றுகிறது. ஐயோ, – சாமீ இதில் எது சிறப்பு மிக்க சொல் என்று யாரால் சொல்ல முடியும்?!

ஊழிக் கூத்தை பாரதி கண்டான், பாடினான்:

வெடிபடு மண்டத்திடிபல் தாளம் போட – வெறும்

வெளியில் இரத்தக் களியொடு பூதம் பாடப் – பாட்டின்

அடிபடு பொருள் உன் அடிபடும் ஒலியில் கூடக் களித்து

ஆடும் காளீ! சாமுண்டீ! கங்காளீ!

அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை நாடச் செய்தாய் என்னை!

எத்துணை அற்புதமான கூத்து! எத்துணை அற்புதமான வர்ணனை!

இப்படிப்பட்ட அரும் கவிஞனை எப்படிப் போற்றினாலும் தகும்!

இனி உலகக் கவிஞர்களின் வரிசையிலே சிறப்பான இடத்தைக் கொண்டவன் பாரதி என்பதற்கும் சில உதாரணங்களைச் சுட்டிக் காட்ட முடியும்!

ஷெல்லி தாசன் என்று தன் பெயரைச் சூட்டிக் கொண்ட கவிஞன் ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியிலே திளைத்தவன். To Sophia என்ற கவிதையில் ஷெல்லி

Thy Deep Eyes a Double Planet

என்று கூறுவதை சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ என்ற பாரதியின் அழியாத வரியிலே காண முடிகிறது. நமது பாரம்பரியத்திற்கு ஏற்றபடி டபிள் ப்ளானட் சூரிய சந்திரனாகிறது!

குரு கோவிந்த சிங்கின் கர்ஜனை உரையிலே,

சவா லாக் சே ஏக் லடாவூம் சிடியன் தே மை பாஜ துடாவூம் தபை குரு கோவிந்த சிம்ஹ நாம கஹாவூ (सवा लाख से एक लड़ाऊं, चिड़ियन ते मैं बाज तुड़ाऊं, तबै गुरु गोबिंद सिंह नाम कहाऊं“)

என்று கூறுகிறார். சிடியா என்றால் சிட்டுக் குருவிகள் பாஜ என்றால் ராஜாளி சிட்டுக்குருவிகள் ராஜாளிகளாகும்!

சவா லாக் -ஒன்றே கால் லட்சம் பேருடன்- ஏக்- ஒரே ஒருவன் சண்டையிடுவான். அப்போது குரு கோவிந்த சிங்கின் பெயரை கேளுங்கள் என்றார்.

இதை, பாரதியார் மிக எளிதாக ‘ஈயை கருட நிலை ஏற்றுவாய்’ என்கிறார்.

இலங்கையிலே தங்க மயமான இலங்கையைக் கண்ட ராமர் லட்சுமணனிடம் இது எனக்கு பெரிதாகத் தெரியவில்லை; ருசிக்கவில்லை; பெற்ற தாயும் எனது தாய்நாடும் சுவர்க்கத்தை விடச் சிறந்ததாகும் என்கிறார்.

‘அபி ஸ்வர்ணமயி லங்கா ந ரோசதே லக்ஷ்மணா! ஜனனீ ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரியஸி’       என்கிறார் இராமர்.

இதன் தமிழ் வடிவத்தை ‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்

நற்றவ வானிலும் நனி சிறந்தனவே’ என்று தருகிறான் நம் அருமைக் கவிஞன்.

வேத சூக்தங்களை அரவிந்தரிடமிருந்து கற்ற பாரதியார் அப்படியே அவற்றை தமிழ்க் கவிதைகளாகத் தந்துள்ளார்.

அக்னி ஸ்தோமம் என்ற கவிதையில் ரிஷிகள் எங்கள் வேள்விக் கூடமீதில் ஏறுதே தீ தீ தீ என்று வேள்வியைத் தொடங்குகின்றனர்.

இளையும் வந்தாள் கவிதை வந்தால் இரவி வந்தானே – இந்நேரம்

விளையும் எங்கள் தீயினாலே – மேன்மையுற்றோமே

என ரிஷிகள் ஆனந்தக் கூத்திடுகின்றனர்.

பிரெஞ்சு மொழியில் உள்ள தேசீய கீதத்தையும் கூட இரு விதமாக மொழி பெயர்த்துத் தந்திருக்கிறான் நம் கவிஞன்.

‘அன்னை நன்னாட்டின் மக்காள் ஏகுவம்

மன்னு புகழ் நாளிதுவே’ என ஆரம்பிக்கும் அந்த கீதம்!

ஏராளமான கவிஞர்கள் பாரதியை அண்ணாந்து பார்த்து வியக்கின்றனர்.

ஒரு பெரும் முயற்சியாக பாரதி போற்றி ஆயிரம் என்று ஆயிரம் பாடல்களைத் தொகுக்க ஆரம்பித்தேன். அந்த ஆயிரம் பாடல்களும் http://www.tamilandvedas.comஇல் பிரசுரிக்கப்பட்டன.

மரணத்தை வென்ற மகாகவியை கவியரசு கண்ணதாசன் பாடுகிறான் இப்படி;

சந்திரர் சூரியர் உள்ளவரையிலும்

   சாவினை வென்று விட்டான் – ஒரு

சாத்திரப் பாட்டினில் பாரததேசத்தின்

   தாய்மையை வார்த்து விட்டான்

இந்திர தேவரும் காலில் விழும்படி

  என்னென்ன பாடி விட்டான் – அவன்

இன்று நடப்பதை அன்று சொன்னான் புவி

   ஏற்றமுரைத்து விட்டான்

வங்கத்து நீரினை மையத்து நாட்டுக்கு

   வாரிக் கொணர் என்றான் – அந்த

வானம் அளந்து விஞ்ஞானம் படைத்திட

  வாரும் தமிழரென்றான்

சிங்க மராட்டியர் கற்பனைக்கீடொரு

  சேரத்துத் தந்தமென்றான் – இந்த

தேச பெருமைக்கு ஆரம்பம் செய்தவன்

   பாரதித் தேவன் என்பான்!

பாரதி எனும் பெயரைச் சொல்லு – கெட்ட

பயமெனும் பகைவனை வெல்லு

நேரினி உனக்கு நிகர் இல்லை – உடன்

நீங்கும் அடிமை மனத் தொல்லை என்கிறார் நாமக்கல் கவிஞர்.

பாரதிக்கு வாழ்நாள் முழுவதும் தாசனாக இருந்த பாரதிதாசன் பாரதியைப் பற்றி விரிவாகக் கூறுகிறார் இப்படி:

பைந்தமிழ் தேர்ப்பாகன் அவனொரு

செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை

குவிக்கும் கவிதைக் குயில்! இந்த நாட்டினைக்

கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு

நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா!

காடு கமழும் கற்பூரச் சொற்கோ

கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்

திறம் பாட வந்த மறவன் புதிய

அறம் பாட வந்த அறிஞன் நாட்டிற்

படரும் சாதிப் படைக்கு மருந்து

மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவ்ன்

அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்

என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்

என்கிறார்.

நான் தொகுத்த ஆயிரம் பாடல்களிலே ஒரு சிலவற்றைப் பார்த்தோம்.

பிரான்ஸென்னும் உயர்ந்த புகழ் நாட்டில் உயர் புலவோரும் பிறரும் ஆங்கே விராவு புகழ் ஆங்கிலத் தீம் கவியரசர் தாமும், சுவை புதிது நயம் புதிது, வளம் புதிது, சொற் புதிது, ஜோதி கொண்ட நவ கவிதை, எந்நாளும் அழியாத மஹா கவிதை என்று பாரதியார் கவிதையை வியந்து கூறியுள்ளனர். அதை இப்படி அவரே கூறி இருக்கிறார்.

இனி இதற்கு மேல் நாம் உரைக்க என்ன இருக்கிறது.

இந்தியர் தம் நெஞ்சினிலே தேசப்பற்றை ஊட்டினான்

வஞ்சக வெள்ளையரை நாட்டைவிட்டு ஓட்டினான்

தமிழர்க்குத் தமிழ் போற்றும் வழி காட்டினான்

புகழோங்கு பாரதத்தை நிலை நாட்டினான்

புதியதொரு பாதையைப் புவியினிலே காட்டினான்

புகழவோர் வார்த்தையிலை புகழுக்கே புகழ் ஊட்டினான்

புண்ணியன் சுப்பிரமணி பாரதியின் பெருமையினை

எண்ணியெண்ணி அவன்வழி நடப்போம் உயர்வோம்

கற்க கசடற பாரதி பாக்களை

நிற்க அதற்குத் தக

என்ற எனது இந்த அஞ்சலிச் சொற்களை பாரதியின் தாளில் சமர்ப்பித்து விடை பெறுகிறேன்.   நன்றி வணக்கம்!

 TAGS- பாரதியார்,  பா நலம், 

****

PLEASE JOIN US TODAY — MONDAY 7-12-2020

TODAY’S MENU ON ‘GNANA MAYAM’ BROADCAST 7-12-20

WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH  BY MRS SUJATHA RENGANATHAN

WORLD HINDU NEWS ROUND UP IN TAMIL  BY MRS VAISHNAVI ANAND

XXX

SPEECH BY SRI ANGAJAN IN ENGLISH.

SRI ANGAJAN IS FROM DURBAN, SOUTH AFRICA

XXXX

MR BALASUBRAMANYAN  SINGS KRTIS BY SRI SADASIVA BRAHMENDRAL, THE GREAT SAINT WHO HAS COMPOSED KRTIS IN BEAUTIFUL SIMPLE SANSKRIT.

MR KATTUKUTY SRINIVASAN SPEAKS ON PLANET MARS/ ANGARAKA AS PART OF HIS NAVAGRAHA SERIES.

MRS DAYA NARAYANAN SINGS ALVAR PASURAMS/ TIRUPPAVAI

MRS ANNAPURANI PANCHA NATHAN INTODUCES SRI ANGAJAN, OUR CHIEF GUEST SPEAKER .

WE BEGIN WITH A PRAYER FROM MRS PAVITHRA MAHESH FROM CHENNAI

XXXX

DR NARAYANAN KANNAN TALKS ON ALVARS AND VAISHNAVAM

XXXX

WHAT IS NEW?

INTERNATIONAL BHARATI  CENTENARY MEMORIAL COMMITTEE IS BEING FORMED; PLEASE JOIN US.

SPECIAL STUDENTS PROGRAMMES DURING DECEMBER HOLIDAYS.

(PLEASE SEND UR CHIDREN’S SONGS, SPEECHES ETC.). IT IS SCHEDULED FOR 25TH DECEMBER, 2020. IF THERE IS OVERWHELMING RESPONSE, IT WILL BE EXTENDED TO ANOTHER DAY.

54 BHARATI SONGS ARE RELEASED IN NEW RAGAS DURING BHARATI MEMORIAL CENTENARY YEAR 2020- 2021. BHARATI PROJECT WAS LAUNCHED LAST MONTH. WE HAVE ALREADY BROADCAST SOME OF BHARATIYAR’S POEMS/SONGS  IN NEW RAGAS.

XXXX

EVERY SUNDAY FOR TAMIL

EVERY MONDAY FOR HINDUISM

XXX

SAME TIME ONE PM LONDON TIME;

6-30 PM INDIAN TIME

XXX

WHERE ?  AT FACEBOOK.COM/GNANAMAYAM

Facebook.com/gnanamayam

XXX

V R HERE EVERY SUNDAY, EVERY MONDAY; PLEASE JOIN US LIVE AT FACEBOOK.

IF U MISS OUR LIVE BROADCAST, VISIT OUR SITE AFTER ONE OR TWO HOURS ON THE SAME DAY, U CAN WATCH US.

SAME PLACE, SAME TIME ; EVERY SUNDAY, EVERY MONDAY

THANKS FOR UR GREAT SUPPORT.

PRODUCER- LONDON SWAMINATHAN

TAGS – PUBLICITY 71220

XXXX SUBHAM  XXXX

TAMIL WORDS IN ENGLISH -43 (Last Part)(Post No.9005)

ZEBU = BASU; PASU IS COW AND ANY ANIMAL

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9005

Date uploaded in London – –6 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

We don’t have many words in X,Y,Z; I  am giving them below:-

X.1.XANTHOS/GREEK- SANDAL COLOURED- SANTHANA NIRAM, SANTHIRAN NIRAM

X.2.XENO PHOBIA – ANNIYAR BHAYA; FEAR ABOUT FOREIGNERS

X.1.XANTHOS/GREEK- சந்தன நிற , சந்திர வர்ண, மஞ்சள் , சாந்தள SANDAL COLOURED- SANTHANA NIRAM, SANTHIRAN NIRAM

X.2.XENO PHOBIA – ANNIYAR BHAYA; FEAR ABOUT FOREIGNERS ஜன; அந்ய ஜன பய

XXX

Y

Y.1.YOKE- YOGA; UNITING BODY AND MIND யோக, யுக, நுகத்தடி , யுகம்

Y.2.YVONE – YAVVANA/YOUTH யவ்வன

Y.3.YOUTH, YOUNG – YUVA, YUVATHY,  யுவ, யுவதி

Y.4. YEAR – YAANDU (SEE PURAM VERSE OF PISIR ANTHAIYAAR) யாண்டு ; பிசிர் ஆந்தையார் – யாண்டு பலவாக ந ரையில

Y.5.YEARNING – ENGUTHAL; ஏங்குதல்

XXXX

Z

Z.1. ZEUS – DYAUS IN RIG VEDA ; SKY த்யவ்ஸ் = ஸுஸ் /கிரேக்க கடவுள்; ஆகாய

Z.2. ZERO – SUZI /SULI; R=L சுழி ; ஆர் = எல்

Z.3.ZINGARI/GYPSY- SRUNGARA, SINGAARI சிங்காரி- ஜிப்ஸி பெண்

THEY SELL ALL FASIONABLE GOODS, JEWELLERIES IN THE OLDEN DAYS.

பாசி மாலை , வளையல் முதலிய சிங்காரப் பொருட்களை விற்கும் ஜிப்ஸி பெண்கள் ;

Z.4.ZOIN- JEEVAN , UYIR ஜீவன்

Z.5.ZULUS – SOUTH AFRICAN TRIBES WITH SUULAM சூலூஸ் = தென் ஆப்ரிக்க சூலம் ஏந்திய பழங்குடி மக்கள்

Z.7.ZITHER – SITAR/ GUITAR சிதார் = கிதார்

Z.8. ZEND AVESTA – CHANDAS  COLLECTION.சந்தஸ்

AVASTITHA IN SANSKRIT MEAN WELL ARRANGED, FIXED, CLAIRVOYANT KNOW L EDGE

அவஸ்தித = சேகரிப்பு, முறையான தொகுப்பு

Z. 9.ZOROASTER – ONE WHO IS FROM SAURASHTRA செளராஷ்டிரர் (காஞ்சி பரமாச்சாரியார் உரையைக் காண்க)

Z.10. ZILPAAH / ARABIC = SOLPA, LITTLE சொல்ப அராபிக்

Z.11.ZEBU – CATTLE; IF YOU REVERSE IT IS PASU= BUZE ஷேப= பஷே = பசு

பசு என்பது மிருகங்களுக்குள்ள பொதுப் பெயர்

Z.12. ZEITUNG – NEWS PAPER; ZEI = SEYTHI/NEWS செய்தி/ தாள் ஜெர்மா னிய மொழி

Z.13.ZODIAC – JOTHITA RASI, JYOSYA CHAKRA/CHART சோதிட சக்கரம்

CONCLUSION

PROTO INDIAN LANGUAGE CONSISTING OF SANSKRIT AND TAMIL ROOTS IS THE MOTHER OF MOST ANCIENT LANGUAGES. INDIANS SPREAD CIVILISATION THROUGH OUT THE WORLD.

ANY GREEK OR LATIN ROOT CAN BE TRACED BACK TO THIS PROTO-INDIAN LANGUAGE.

SO THERE IS NO DRAVIDIAN LANGUAGE; IT IS AN ABSURD THEORY. FOUR LANGUAGES HAVE  MORE OR LESS SIMILAR SOUNDS ; BUT ALL OF THEM HAVE MORE SANSKRIT WORDS, WHICH COME FROM 1970 ROOTS LISTED BY PANINI.

I AM GOING TO SHOW IT IN MY NEXT SERIES OF ARTICLES.

XXX

BASIC LINGUISTIC RULES ARE SAME  AND APPLICABLE TO ALL THE  LANGUAGES.

IN THE NEXT SERIES I AM GOING TO SHOW THAT THERE ARE ENGLISH AND TAMIL WORD ROOTS IN 2800 YRAR OLD ASHTDHYAAYI OF PANINI. 

TAGS -TAMIL WORDS- 43

ZULU WAR

–SUBHAM—

வள்ளுவர் வாசுகியைக் கூப்பிட்டா,வாளி அப்படியே நிற்கும்; இப்ப கூப்பிட்டா (Post 9004)

Compiled BY KATTUKKUTY

Post No. 9004

Date uploaded in London – – 6 DECEMBER 2020

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

நவீன ஞான மொழிகள் – 10
Kattukutty

கெட்டவனுக்குக் கூட நன்மை செய், அது தப்பல்ல,
ஆனால், நல்லவனுக்கு மட்டும் கெடுதல் செய்யாதே……
அது தர்மம் அல்ல!
xxx

அன்று வயதைப் பார்த்து வந்தது மரியாதை,
இன்று வசதியைப் பார்த்துத் தான் வருகிறது.

xxxx

தேங்காய் உடைக்கிறார்கள், வாழ்க்கை சிதறிப்போகாமலிருக்க,
தேங்காய் பொறுக்குகிறார்கள், வாழ்க்கை சிதறிப்போனவரகள்…….

xxx

VALLUVAR TEMPLE, MYLAPRE

இதுவே உண்மை
FEMALE ல்ல MALE இருக்கு,
WOMAN ல்ல MAN இருக்கு,
SHE லே HE இருக்கு
MRS லே MR இருக்கு………..
xxx

உடம்புல வலி இருந்தா MOVE தடவலாம், மனசுல வலி இருந்தா
அந்த இடத்தை விட்டு MOVE ஆயிடு………
xxx

கல்யாணத்திற்கும், ஜல்லி கட்டுக்கும் உள்ள ஒற்றுமை என்ன???
வளர்த்தவன் எஸ்கேப் ஆகி விடுவான், அடக்க வரவன், மாட்டிக்குவான்!!!!
xxx

நம்மால் யாரையும் காயப்படுத்தாமல் வாழ முடியும்,
யாரிடமும் காயப்படாமல் தான் வாழ முடிவதில்லை……..

xxxx

எந்த ஒரு கண்ணாடியும் ஒரு பெண்ணை அழகில்லை என்று
சொன்னதில்லை !!!

xxxx

மரம் ஓய்வு எடுக்க விரும்பினாலும் காற்று அதனை சும்மா விடாது……
xxxx

பணம் சம்பாதிப்பது என்பது, குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல
செலவழிப்பது என்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல !!!
xxxx

உன்னை மதிப்பவரிடம் தாழ்ந்து பேசு
உன்னை மிதிப்பவரிடம் வாழ்ந்து காட்டு!!!
xxx

காது குத்திய அடையாளமும், மூக்கு குத்தின அடையாளமும்
தெரிந்து விடுகின்றன.
ஆனால் முதுகில் குத்தியதற்கான அடையாளம் தெரிவதில்லை!!!
xxxx

மௌனத்தின் பெருமை

சும்மா இருத்தல் சுகம்

மோனமென்பது ஞான வரம்பு

பேச்சு என்பது வெள்ளி
மௌனம் என்பது தங்கம்

xxxx

காதைக் கொடு வாயைக் கொடுக்காதே!!!

முட்டாளுக்கு நாக்கால் ஆபத்து,
புத்திசாலிக்கு மௌனத்தால் புகழ்!!!

மௌனத்தை யாரும் எழுதிக் கொடுக்க முடியாது !!!

xxxx

நீ உமிழ்ந்த தீ உன் மடியிலேயே விழும்…….

மௌனம் சர்வார்த்த சாதகம்

xxx

பழக வேண்டியது – முதுகுத் தண்டை நேராக வைத்தல்
மறக்க வேண்டியது – காபி, டீ, சிகரட், மது
செய்ய வேண்டியது – சர்வாங்காசனம்
செய்யக்கூடாதது – கெட்ட சகவாசம்
குறைக்க வேண்டியது – அதிக தூக்கம்
கூடவே கூடாதது – பகலில் தூக்கம்
துலக்க வேண்டியது – பகலிலும், இரவிலும் பற்களை
உடுக்க வேண்டியது – எளிய உடை
சேர்க்க வேண்டியது – ராகியும் கம்பும்

xxxx

கடவுளுக்கு கொடுத்து பக்தனாவதை விட
ஏழைக்குக் கொடுத்து இறைவனாகலாம்!!!

xxx

இறந்தவர்களுக்கு சிலை வைத்து மாலை போடுவதை விட
இல்லாதவர்க்கு இலை வைத்து சோறு போடுங்கள்……..

xxxx

VALLUVAR, VASUKI

அந்தக் காலத்தில் திரு வள்ளுவர் வாசுகியைக் கூப்பிட்டா
வாளி அப்படியே நிற்கும்,
இப்ப கூப்பிட்டா வாசுகி அப்படியே நிற்பா, வாளி பறந்து வரும் !!!

xxxx

காசு ஆணா??? பெண்ணா???
பொண்ணுதான் சார்…..
எப்படி???
தலைக்கு பின்னால் பூ இருக்கே !!!
xxxx

நீ முதலில் திருந்து, அதுவே உனக்கு மருந்து !!!

வல்லவன் பம்பரம் மணலிலும் ஆடும்

xxxx

உலகில் ஏழு பாவங்கள்

1.உழைப்பில்லாத சொத்து
2.மனச்சாட்சியில்லாத சொகுசு வாழ்க்கை
3.ஒழுக்கமில்லாத கல்வி
4.நாணயம் இல்லாத வார்த்தை
5.மனித நேயமில்லாத அறிவியல்
6.தியாகமில்லாத பிரார்த்தனை
7.கொள்கையில்லாத அரசியல்

Xxxx

வருமானம் என்பது தண்ணீர் போல
ஒரே இடத்திலிருந்து தான் வருது
செலவு எனபது வியர்வை போல,
எல்லா இடத்திலேர்ந்தும் வருது……

VALLUVAR, VASUKI PICTURES

Xxxxx subham xxxxxx

  tags — வள்ளுவர்,  வாசுகி, வாளி

நவம்பர் 2020 இல் வெளியான ச.நாகராஜன் கட்டுரைகள் (Post 9003)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9003

Date uploaded in London – – 6 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

நவம்பர் 2020 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு.

November 2020

1-11-20     8877   அயோத்யா சில உண்மைகள் – 2   

2-11-20     8879   அயோத்யா சில உண்மைகள் – 3

3-11-20     8883    அயோத்யா சில உண்மைகள் – 4   

4-11-20     8887    கிறிஸ்தவ பிரசாரத்துக்கு எதிர் பிரசாரம் – ஞானமயம்

              2-11-20 உரை

5-11-20     8891  October 2020 SNR Article Index

6-11-20     8895   கருவூர்ச் சித்தர் வரலாறு – கொங்குமண்டல சதகம் பாடல் 34

7-11-20    8889   மந்திர மலை போன்ற பாவங்கள் போக வழி உண்டா?

8-11-20    8902   ஆயுளைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்!

9-11-20    8905    மஹரிஷி அக்னிபர்! ஐந்து கந்தர்வ மங்கையரைக் கவர்ந்தவர்!!

10-11-20  8910  புராணங்களில் காலப் பயணம் (ஞானமயம் 9-11-20 உரை)

11-11-20  8915   மஹரிஷிகள் பெயர்கள் அடங்கிய பட்டியல் – 1 (1-125)

12-11-20  8920  மஹரிஷிகள் பெயர்கள் அடங்கிய பட்டியல் – 2 (126-214)

13-11-20  8923  மஹரிஷிகள் பெயர்கள் அடங்கிய பட்டியல் – 3 (215-277)

14-11-20  8928  உடல் ஒரு மரம் – அருணகிரிநாதரின் வர்ணனை! உடலே

             கோயில் அப்பரின் சிந்தனை!!

15-11-20   8931   பதார்த்த குண சிந்தாமணி – நவம்பர் 2020 ஹெல்த்கேர் கட்டுரை

16-11-20  8935  விமானங்களை எப்படி அமைப்பது? வைமானிக சாஸ்திரம்

               விளக்குகிறது – 15-11-20 தமிழ் முழக்கம் உரை

17-11-20  8938  சுபாஷித நூல்களின் பட்டியல் – 2 (25873 + பாடல்கள்)

18-11-20 8943  மஹரிஷி சண்ட கௌசிகர் – ஜரா சந்தன் வரலாறு

19-11-20 8947 வரவேற்கத் தக்க ஒர் புதிய அலை உருவாகிறது – வாழ்க ஹிந்து 

              மதம்! மீண்டும் வருக தாய் மதத்திற்கு!

20-11-20  8950   நித்தம் நீலக்குடி அரனை நினை, சிவ கதி பெற, அப்பரின்

             சொந்த அனுபவம்!

21-11-20 8954  கோசர்கள் ஆண்ட கொங்கு மண்டலம்! (கொங்கு மண்டல சதகம்

            பாடல் 40)

22-11-20 8957 அழகு என்பது என்ன?

23-11-20  8959  அறிவியல் வியக்கும் பாபா

24-11-20  8962  எண் 108க்கு முக்கியத்துவம் ஏன்? (22-11-20 தமிழ் முழக்கம் ஒளிபரப்பு உரை)

25-11-20  8966  ஹிந்து கோவில்களை இழிவு படுத்தும் சீரியல்கள், படங்கள்!

26-11-20  8969  மஹரிஷி சமீகர் – மஹாபாரதம் சந்தேகம் தீர்த்த பக்ஷிகள்!

27-11-20  8972  உதவிக் குறிப்புகள் – 14 (171-190)

28-11-20  8975  பெல்காமில் விவேகானந்தரின் அற்புத ஆற்றல் வெளிப்பாடு – 1

29-11-20  8979 பெல்காமில் விவேகானந்தரின் அற்புத ஆற்றல் வெளிப்பாடு – 2

30-11-20 8982  இலக்கியத்தில் கார்த்திகை தீபம்! 29-11-20 தமிழ் முழக்கம் 

            ஒளிபரப்பில் ஆற்றிய உரை

tags — கட்டுரைகள்,  நவம்பர் 2020 , ச.நாகராஜன்

***

PLEASE JOIN US TODAY; SUNDAY 6-12-2020

PLEASE JOIN US TODAY; SUNDAY 6-12-2020

WHAT IS NEW?

INTERNATIONAL BHARATI  CENTENARY MEMORIAL COMMITTEE FORMED; PLEASE JOIN US.

SPECIAL STUDENTS PROGRAMMES DURING DECEMBER HOLIDAYS.

(PLEASE SEND UR CHIDREN’S SONGS, SPEECHES ETC.)

54 BHARATI SONGS RELEASED IN NEW RAGAS DURING BHARATI MEMORIAL CENTENARY YEAR 2020- 2021.

XXXX

TODAY FROM LONDON

TODAY’S MENU ON ‘THAMIL MUZAKKAM’ (Tamil Thunder) BROADCAST (PART OF GNANAMAYAM CHANNEL)

 MRS PAVITHRA MAHESH FROM CHENNAI SINGS BHARATI SONGS

MS LALITHA MALAR MANIAM FROM MALAYSIA SINGING

SPEECH BY MS LATHA RAMASAMI FROM DETROIT, USA;

THIRUPPUGAZ BY JAYANTHY SUNDAR GROUP , MRS SARASWATHY CHANDRASEKARAN’S  TAMIL PAATTU,

BENGALURU NAGARAJAN’S TALK ON BHARATIYAR;

 MRS BRHANNAYAKI SATHYANARAYANAN’S TALK ON NEW TEMPLES

— CO PRODUCED BY MRS VAISHNAVI ANAND AND SRI KALYANASUNDARA SIVACHARYA

EVERY SUNDAY FOR TAMIL

EVERY MONDAY FOR HINDUISM

XXX

SAME TIME ONE PM LONDON TIME;

6-30 PM INDIAN TIME

XXX

WHERE ?  AT FACEBOOK.COM/GNANAMAYAM

Facebook.com/gnanamayam

XXX

V R HERE EVERY SUNDAY, EVERY MONDAY; PLEASE JOIN US LIVE AT FACEBOOK.

IF U MISS OUR LIVE BROADCAST, VISIT OUR SITE AFTER ONE OR TWO HOURS ON THE SAME DAY, U CAN WATCH US.

SAME PLACE, SAME TIME ; EVERY SUNDAY, EVERY MONDAY

THANKS FOR UR GREAT SUPPORT.

XXX SUBHAM XXX