SEMEN POWER- SPERM POWER IN HINDU AND GREEK LITERATURE (Post.8737)

sperm entering female egg.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8737

Date uploaded in London – –25 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

There are lot of statements about semen and sperm in Tamil and Sanskrit literature . Hindus believed that saving semen would give them strength and good memory power. It is called URDHVA RETAS. Literally sending ‘semen upwards’.

Puranas have many stories of Rishis (seers) shedding semen in cups and leaves and transferring to women. Most of which sounds like Test Tube babies and artificial insemination.

Following is taken from wisdom library:

Urdhva retas

one who lives in perpetual celibacy or abstains from sexual intercourse; यतीनामूर्ध्वरेतसाम् (yatīnāmūrdhvaretasām) Mb.3.233.44. (-m.)

1) Name of Śiva.

2) Bhīṣma (who vowed not to marry)

Ūrdhvaretas is a Sanskrit compound consisting of the terms ūrdhva and retas (रेतस्).

Ūrdhvaretas (ऊर्ध्वरेतस्).—[adjective] chaste (lit. having the semen above).

  1. Ūrdhvaretas (ऊर्ध्वरेतस्):—[=ūrdhva-retas] [from ūrdhva] mfn. keeping the semen above, living in chastity, [Gautama-dharma-śāstra; Mahābhārata; Harivaṃśa; Kathāsaritsāgara] etc.

Xxxx

Sri Ramakrishna and Vivekananda

“If one practises celibacy, a physiological change is produced in the body. A rudimentary nerve known as Medha will develop, the function of which is to transmute the lower energies in to higher. The knowledge of the higher Self is gained after the development of the Medha Nadi”.

Swami Vivekananda added some more interesting details about celibacy:- He says a person who observed celibacy for twelve years obtains tremendous memory power. Swami could remember anything he read, page after page. When someone wanted to test his thought reading power, he told the person even his disciple could do it who was sitting just beside him. The disciple was so scared to hear this, because he did not have that power. But when Swami Vivekananda told his disciple to read the person’s mind, he did it. Swami attributed everything to celibacy. In short, one can develop tremendous powers if one observed celibacy at three levels= Tri Karana Suddhi= word, thought and deed.

Xxxx

Tamil Siddhas on Sex Energy

Gorakkar, one of the 18 great siddhas , advises sick people taking herbal medicine  to have union with women after taking cool milk with palm sugar. He adds ,

The cool milk along with the medicine mentioned earlier will help increase manliness and give joy with women. He talks about ‘lekiyam’ in verses 12 and 13 of karpa cuustiram  (Kalpa sutra)

The commentator explains ,

Lekiyam – medicine brought to the consistency of a paste. This will help manliness and give joy with women without expenditure of semen by emission.  It is like  Tamil Viagra.  In Buddhism ulta- sadhana is referred to as the culture of bodhi -citta , semen virile. In alchemy mercury symbolises semen and alchemist tries to find out ways and means of converting into a hard metal i.e. gold and using it for transubstantiation of body

Ulta- sadhana  (the contrary practice of  sublimating semen)  and alchemy  (a process of hardening semen  )  are the two esoteric and exoteric methods of kaya sadhana – transformation of the body  into an immortal essence. In the previous verses and in this verse

Gorakkar suggests  the medicinal way of sublimating semen to an adamantine body.

—-This is taken from The Yoga of the 18 Siddhas, edited by T N Ganapathy.

Xxx

Greeks on sex and the games

The one time world heavy weight boxing champion Lennox Lewis , arguing that women weakened a boxer, avoided sex for three weeks before a big fight.  The theory has  certainly  been around for some time. In the ancient world it was based on the idea that semen was a vital factor in keeping a man strong.

The doctor    Aretaeus , in the first century CE said-“

“If any man is possession of semen, he is fierce, courageous, and physically mighty like beasts. Evidence for this is to be found in athletes  who practise   abstinence.

Even involuntary nocturnal emissions were thought to be enfeebling, threatening one’s endurance, and breathing. The doctor Galen , in the second century CE recommended that athletes take precautions

Sex before exercise was criticized;

Exercise before sex was strongly recommended.

Xxx

Manu on semen

“Once upon a time the universe was made up of darkness.  Then the lord who is self existent, himself  unmanifest, putting his energy into the great  elements  and everything else, he became visible and dispelled the darkness.  He thought deeply , for he wished to emit various sorts of creatures from his own body. First, he emitted the waters and then he emitted his semen in them.  That semen became a golden egg.  As bright as the sun with his 1000 rays. Brahma himself, the grand father of all people, was born in that egg.

Manu mentioned semen in other places as well.

In short, Greeks identified  semen with  physical strength ; Hindus identified it with spiritual strength.

xxxxx

FOLLOWING ARE NEWS ITEMS FROM LONDON NEWSPAPERS

CHILDREN FROM DEAD BODIES

((I HAVE ALREADY WRITTEN ABOUT SUCH AN INCIDENT IN MAHABHARATA- ‘TEN MEDICAL MYSTERIES IN MAHABHARATA’.))

WHAT ARE THE LAWS FOR SPERM DONATION IN THE UK?

  THE INDEPENDENT

Tuesday 21 January 2020 17:28

A recent report published in the Journal of Medical Ethics has argued that doctors should be able to take sperm from men who have passed away if they have consented to becoming post-mortem donors.

The authors state that doing so is “both feasible and morally permissible”, as it may help to ensure that “sufficient quantities of sperm“ are made available to individuals who wish to become parents through sperm donation.

So where does the law in the UK currently stand with regards to sperm donation? Here is everything you need to know.

Who is eligible to donate sperm?

According to the Human Fertilisation and Embryology Authority (HFEA), sperm donors are usually aged between 18 and 41.

xxxxxxxx

8 foods that increase sperm count

  • Oysters + pumpkin seeds. Both are very high in zinc, which may increase testosterone, sperm motility and sperm count.
  • Oranges. …
  • Dark, leafy vegetables. …
  • Dark chocolate. …
  • Salmon + sardines. …
  • Pomegranate juice. …
  • Brazil nuts. …
  • Water.

Xxxxxxxxxxxxxx

Carrots and lettuce linked to better sperm quality

Thursday 31 October 2013

“The secret to healthy sperm? Carrots,” the Mail Online website declares. The study it reports on found that certain vegetables may help improve sperm quality.

The researchers carrying out the study were interested in two important aspects of sperm quality:

  • sperm motility – how quickly a sperm can swim towards an egg
  • sperm morphology – the size and shape of a sperm (for the best chance of successfully conceiving, a sperm should have an oval head and a long tail)

They looked at young men’s diets and analysed their sperm samples. They found that men who ate a higher amount of three antioxidants found in fruit and vegetables had sperm with better motility and morphology.

The three antioxidants in question were:

  • beta-carotene – found in carrots, lettuce and spinach
  • lutein – found in lettuce and spinach
  • lycopene – found in tomatoes
  •  
  • tags – semen, sperm, Tamil Viagra, Sexy foods

xxxxxxxxxxxxxxxx

தமிழ், சம்ஸ்க்ருத, ஆங்கில இலக்கண அகராதி – 7 (Post No.8736)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8736

Date uploaded in London – –25 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தொடர்ந்து இலக்கண விஷயங்களைக் காண்போம்; இறுதியில் ஒவ்வொன்றுக்கும் உதாரணம் கொடுத்து அது தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் எப்படி அழைக்கப்படுகிறது என்று காட்டவும் ஆசை. முடிந்தவரை செய்கிறேன்

டாக்டர் K.மீனாட்சி, உலக மஹா சாதனை செய்து இருக்கிறார். பாணினியின் அஷ்டாத்யாயியில் உள்ள 4000 சூத்திரங்களையும் மொழிபெயர்த்து சுருக்கமான உரைகளையும் கொடுத்து இருக்கிறார். மூன்று பாகங்களாக வெளிவந்து இருக்கிறது. தொல்காப்பியத்தையும் கற்றவர் அவர். இந்தியாவில் தமிழ் மட்டும் படித்தவன் அரைவேக்காடு. சம்ஸ்கிருதம்   மட்டும் படித்தவனும்  அரைவேக்காடு. இரண்டு மொழிகளையும் கற்றவர்களே அறிஞர்கள் ; அந்தக் காலத்தில் பி.எஸ். சுப்ரமண்ய சாஸ்திரிகள் போன்றோர் இருந்தனர். இக்காலத்தில் டாக்டர் மீனாட்சி, டாக்டர் இரா. நாகசாமி போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய அறிஞர்களே உள்ளனர் 

டாக்டர் என்ற பட்டத்துடன் தமிழ் மொழி பற்றி நூல்களை எழுதிய சிலரைக் கண்டு கண்டு சிரிப்புதான் வருகிறது. கிரேக்க மொழி செத்துப் போச்சு ; ஹீப்ரு மொழி செத்துப் போச்சு , லத்தின்  மொழி செத்துப் போச்சு, ஸம்ஸ்கிருத  மொழி செத்துப் போச்சு என்று உளறு கின்றனர். கிரேக்க மொழி, ஹிப்ரு மொழி பற்றி விக்கிபீடியாவில் கூட உள்ளது. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை ‘தமிழ் வாழ்த்து’ என்று எழுதி வரிக்கு வரி சம்ஸ்கிருதத் சொல்லை புகுத்தி தமிழர்கள் அனைவரையும் முட்டாள் ஆக்கியது போலத்தான் இதுவும் .

நான் லண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்பித்தபோது தமிழ் வினைச் சொற்கள் 75-0ஐப் பட்டியலிட்டேன். ஆனால் அவை அனைத்தும் தற்கால வினைச் சொற்கள். ஸம்ஸ்க்ருதத்திலோ 2700 ஆண்டுகளுக்கு  முன்னர் 1970 வினைச் சொற்களைப் பட்டியலிட்டு விட்டனர். அப்போது கிரேக்க, எபிரேய, சீன, பாரசீக மொழிகளுக்கு இலக்கணம் என்றால் என்ன என்றே தெரியாது. தமிழும் லத்தினும் அப்போது இருந்ததற்குச் சான்றுகள் இல்லை.

இதோ 1970 வினைச் சொற்களின் வகைகள்

தாது பாடம்

பாணினி தனது இலக்கணத்தில் விகரணங்களையும் CONJUGATIONAL SIGNS , அவைகளுக்குரிய ஓட்டுக்கள், அவைகளை நீக்குதல் , ஆகியவைகளை பற்றிப் பேசும்போது அவைகளை தாதுக்களின் வகுப்பு மூலம் குறிப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக 2-4-72, 2-4-75, 3-1-69, 3-1-73, 77, 78, 79, 81 ஆகிய சூத்திரங்களைக் குறிப்பிடலாம்

ஸம்ஸ்க்ருத மொழியில் காணப்படும் தாதுக்கள் அனைத்தையும் அவைகளையடிச் சொல்லாக மாற்றும்போது அவைகளோடிணைக்கப்படும் விகரணங்களின் அடிப்படையில் பத்து வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு தாது பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இத்     தாதுக்களின் மொத்த எண்ணிக்கை 1970 ஆகும்.

பத்து வகைகளும் அதிலுள்ள தாதுக்களின் எண்ணிக்கையும் பின்வருமாறு—

தாது – வினை அடிச் சொல் , வேர் ROOT

1.பூ தாதி  வகுப்பு – 1059

2.அ தாதி  வகுப்பு    – 72

3.ஹூ தாதி  வகுப்பு    – 25

4..தி வாதி   வகுப்பு    – 137

5. ஸ் வாதி  வகுப்பு    – 34

6.து தாதி   வகுப்பு    –  143

7.ரு தாதி  வகுப்பு     –  25

8. த னாதி  வகுப்பு    –  10

9. க்ரீ யாதி  வகுப்பு   – 81

10.கரா தி வகுப்பு     — 395

மொத்தம்        – 1970

பாணினி தனது சூத்திரங்களின் தாதுக்களை ‘கரம்’ அல்லது ‘இத்’  –  தொடர்பாகத்தான் குறிப்பிட்டிருக்கிறார். இத்தகைய ‘கரம்’ பெற்ற தாதுக்கள் ‘இத்’ – தைக் கொண்ட தாதுக்கள்  எவையெவை என்பதை அறிய தாது பாடத்தின் உதவியைத்தான் நாட்டை வேண்டியிருக்கும் ஏனென்றால் தாது பாடத்தில்தான் இவைகளின் பட்டியல் இருக்கிறது . இதனால் அதன் முக்கியத்துவம் விளங்குகிறது .

இதைப்போன்று 4-1-76 தொடங்கி ஐந்தாம் அத்தியாய இறுதிவரையில் ‘தத்தித’ ஓட்டுக்களைப்  பற்றி பாணினி பேசுகிறார். அப்பொழுது ஒரு குறிப்பிட்ட வகுப்பின் பெயரை மட்டும்தான் குறிப்பிடுகிறார்.  அக்குறிப்பிட்ட வகுப்பினுள் அடங்கும் சொற்கள் எவை என்பதை அறிய கண பாடத்தின் உதவியைத்தான் நாட வேண்டியிருக்கும் ..

கணபாடம்

தாது பாடத்தில் தாதுக்களின் வகுப்பைக் கூறியிருப்பது போல், கணபாடத்தில் பெயர்ச் சொற்களை குறிப்பிட்ட ஒரு வரிசைக்ரமப்படி  அமைக்கப்பட்டு இருக்கிறது. இது இரண்டு வகை —

1. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அமைக்கப்பட்ட சொற்கள்

2.பெயர்ச் சொற்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடாமல் அமைக்கப்பட்டவை .

யார் எழுதியது ?

தாது பாடம், கண பாடம்  ஆகிய இரண்டின் ஆசிரியர் பாணினியா அல்லது வேறு ஒருவரா என்ற விவாதம் இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது . ஆயினும் இவை பாணினி காலத்தில் நன்கு அறியப் பட்டிருந்தன. அஷ்டாத்யாயியை விளங்கிக் கொள்ள இவை இன்றியமையாதவை.

tags – இலக்கண அகராதி –7,கண பாடம், தாது பாடம்

TO BE CONTINUED……………………………

பெருமாள் பற்றிய 5 பழமொழிகள் என்ன ?(Post.8735)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8735

Date uploaded in London – –25 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பெருமாள் பற்றிய 5 பழமொழிகள் என்ன ? கட்டத்தில் காணுங்கள்

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

1.பெருமாளைச் சேர்ந்தோர்க்குப் பிறப்பில்லை , பிச்சைச் சோற்றுக்கு எச்சிலில்லை

2.பெருமாள் இருக்கிறவரையில் திருநாள் உண்டு

3.பெருமாள் என்ற பெயர் மாறி பெத்த பெருமாள் ஆச்சுது

4.பெருமாள் புளிச்ச தண்ணீருக்கு அலைகிறான், அனுமார் ததியோதனம் கேட்கிறார்.

5.பிச்சை எடுத்ததாம் பெருமாளு , அதை புடுங்கியதாம் அனுமாரு.

tags–பெருமாள், பழமொழிகள்

–subham–

அடடா தப்பாப் போச்சே…….!!! (Post No.8734)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8734

Date uploaded in London – –25 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அடடா தப்பாப் போச்சே…….!!!

Kattukutty

ரேடியோ ஜாக்கியை கல்யாணம் பண்ணிகிட்டது தப்பாப் போச்சு???

ஏன்???

இரவு லைட்டை அணைத்து, ‘படு’ என்றால் “இன்றைய நிகழ்ச்சிகள் இத்துடன் முடிந்தது. உங்களிடம் வணக்கம் கூறி விடை பெறுவது

உங்கள் அன்பு ஜெயலட்சுமி” என்று சத்தம் போட்டு சொல்றா….

கிராமத்து ஆளை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சு??

ஏன்???

‘36 சைஸ் ப்ரா வாங்கிட்டி வா’ன்னா 36 புறாக்களை வாங்கிட்டு வந்து

நிக்கிறாரு…..

சினிமா டைரக்டடரை கல்யணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சு

ஏன்???

பர்பெக்ஷனை எதிர்பார்த்து என்ன செஞ்சாலும் “கட் கட் “என்கிறார்

ஸ்கூல் வாத்தியாரை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சே

ஏன்???

‘கல்யாணத்திலே மொய் எழதாதவங்க கையை தூக்குங்க’ என்கிறார்……

அரசியல்வாதியை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் பேச்சே??

ஏன்???

ராத்திரிலெ கட்டில்ல ஏறி நின்னுக்கிட்டு கூடி இருக்கும் மக்கள்

அனைவருக்கும் வணக்கம்ன்னு சத்தம் போட்டு சொல்றார்……

பூக்காரியை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சே???

ஏன்???

தினமும் என் தலையில தண்ணி தெளிச்சு எழுப்பறா……

பஸ் கண்டக்டரை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சே??

ஏன்???

கல்யாணம் முடிஞ்சவுடன் எல்லோரும் சில்லரை எடுத்து வைச்சுகங்கறாரே…..

வாரப்பத்திரிக்கை ஆசிரியரை கலயாணம் பண்ணிக்கட்டது தப்பாப்

போச்சே???

ஏன்???

எங்க கல்யாண பத்திரிக்கை அடியிலே மேலே கூறியஅ னைத்தும்

கற்பனையே. ஆசிரியர் எதற்கும் பொறுப்பாக மாட்டார் என்று

அடிச்சிருக்காரே….

காபரே டான்ஸர் வீட்டுக்கு திருடப்போனது தப்பாப்போச்சு…

என்ன ஆச்சு???

மரியாதையா எல்லாத்தையும் கழட்டுன்னு சொன்னத்துக்கு

ஜட்டியும் கழட்டிப்புட்டா……

மாசக் கடைசீல திருடப் போனது தப்பாப் போச்சு

ஏன்??? ஒண்ணும் கிடைக்கலியா???

அதில்ல, அந்த வீட்டுக்காரன் என் கால்ல விழுந்து கதறி அழுது

கெஞ்சி எங்கிட்டேர்ந்து 50 ரூபாய் கடன் வாங்கிட்டாம்பா…..

டாக்டரை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சு???

ஏன்???

தினமும் எனக்கு டெம்ப்ரேச்சர் பார்த்துட்டுத் தான் படுத்துக்கிறார்….

கம்பவுண்டரை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சு

ஏன்???

ரூபாய் 50 குடுத்து டோக்கன் வாங்கின பிறகு தான் பெட் ரூமுக்குள்ளையே விடறார்…..

வாட்சுமேனை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சு

ஏன்???

ரூம் லைட்டை அணைச்சவுடன் ஸ்டூலை தூக்கிக்கிட்டு

வாசல்ல போய் உக்கார்ந்துகிறாரு……..

ஸ்கூல் வாத்தியாரை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சு

ஏன்???

ஏதாவது தப்பா சொன்னா கையில பிரம்பால அடிக்கிறார்…….

நகைக் கடைக்காரர் மகளை கல்யாணம் பண்ணிக்கிட்டது

தப்பாப் போச்சு…

எப்படி????

நீ தங்கச்சிலை மாதிரி இருக்கேன்னு நேத்திக்கு

சொல்லிப்புட்டேன்.இன்னைக்கு அவ அப்பா வந்து செய் கூலி

சேதாரம் கேட்கிறார்.

காமிரா மேனை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சு…

எப்படி???

இரவு “லைட் “போட்டாதான் மூடு வரதுன்னு எல்லா லைட்டையும்

“ஆன் “பண்ணி “ஆக்‌ஷன் “ ன்னு வேற சத்தம் போடறார்……….!

***

போதிசத்வர் கதைகள்! – நாணயத்திற்குக் கிடைத்த பரிசு! (Post.8733)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8733

Date uploaded in London – – –25 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

போதிசத்வர் கதைகள்! – நாணயத்திற்குக் கிடைத்த பரிசு!

ச.நாகராஜன்

போதிசத்வர் பல ஜென்மங்களை எடுத்திருப்பதாகவும் ஒவ்வொரு ஜென்மத்திலும் அவர் ஆற்றிய அற்புதங்கள் ஏராளம் என்று புத்த மத நூல்கள் கூறுகின்றன. இரு கதைகளை இங்கு மாதிரிக்காக பார்ப்போம்.

நாணயத்திற்குக் கிடைத்த பரிசு!

ஒரு சமயம் போதிசத்வர் ஒரு புனிதமான மரத்தில் ஆவியாகக் குடியிருந்தார். ஒருநாள் ஒரு ஏழை அந்த மரத்திற்கு அருகில் வந்தான். ஏழை என்பதால் அந்த புனித மரத்திற்கு எதையும் அவனால் நைவேத்யமாக அர்ப்பணிக்க முடியவில்லை. ஒரு சின்ன ரொட்டித் துண்டு தான் அவன் கையில் இருந்தது. மற்றவர்கள் எல்லோரும் நல்ல விலையுயர்ந்த பொருள்களை அர்ப்பணித்த போது அவனால் ரொட்டித் துண்டை மரத்தின் முன்னால் வைக்க முடியவில்லை. அந்த புனிதமான மரம் இந்த ரொட்டித் துண்டை ஏற்காது என்று அவன் நினைத்தான். அவன் திரும்பிச் செல்ல யத்தனித்தான்.

திடீரென்று போதிசத்வர் அவர் முன் தோன்றினார். “ நண்பனே! எனக்கு ரொம்ப பசியாய் இருக்கிறது. உன் கையிலிருக்கும் ரொட்டித் துண்டை தர முடியுமா?
 என்று கேட்டார்.

இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த அந்த ஏழை தன் கையிலிருந்த ரொட்டித் துண்டை அவரிடம் கொடுத்தான்.

அதைச் சாப்பிட்ட பின்னர் போதிசத்வர் அவனிடம் கூறினார் : “நண்பனே! அதோ இருக்கும் அந்த மரத்தின் அடியில் தோண்டு. தங்கக் காசுகள் கிடைக்கும்!

அந்த ஏழை மரத்தின் அடியில் தோண்ட நிறைய தங்கக் காசுகள் இருப்பதைப் பார்த்தான். ஆனால் அவற்றை அவன் எடுத்துக் கொள்ளவில்லை. மன்னனிடம் சொன்னான்.

மன்னன் அவனது நேர்மையை எண்ணி அவனை மெச்சினான். உடனடியாக அவனுக்குப் பல தங்கக் காசுகளைத் தந்ததோடு தன் பொக்கிஷத்தைக் காக்க நேர்மையான அந்த ஏழையே சிறந்தவன் என்று நினைத்து அவனைத் தனது பொக்கிஷ அதிகாரியாக நியமித்தான்.

நேர்மைக்கு எப்போதுமே பரிசும் மரியாதையும் உண்டு.

*

மதம் பிடித்த யானை!

இன்னொரு சிறிய கதை.

ஒரு சமயம் போதிசத்வர் ஒரு ஜென்மத்தில் துறவியாக இருந்தார். அப்போது அவருக்கு ஏராளமான சீடர்கள் இருந்தனர். அதே கால கட்டத்தில் இன்னொரு துறவியும் வாழ்ந்து வந்தார். போதிசத்வருக்கு இருக்கும் சீடர்களையும் அவருக்கு இருந்த புகழையும் பார்த்து அவர் பொறாமைப் பட்டார்.

அவரை எப்படியாவது தீர்த்துக் கட்ட வேண்டும் என்று அந்த பொறாமை பிடித்த துறவி நினைத்தார். சில மாவுத்தர்களை அணுகி எப்படியாவது யானையை போதிசத்வர் மீது ஏவி விடுமாறு சொன்னார். அவர்களில் ஒரு மாவுத்தன் யானைக்கு மதம் பிடிக்கும் அளவு சாராயத்தை ஊற்றிக் குடிக்க வைத்தான்.  வெறி பிடித்து மதம் கொண்ட யானையை போதிசத்வர் இருக்கும் இடம் நோக்கி விரட்டினான். அது அலறியவாறே போதிசத்வர் இருக்கும் இடம் நோக்கிச் சாலையில் ஓடியது.

மதம் பிடித்த யானை ஓடிவருவதைக் கண்ட மக்கள் தலை தெறிக்க ஓடினர். ஒரு பெண்மணி யானை வரும் வேகத்தைக் கண்டு பயந்து தன் கையிலிருந்த குழந்தையைப் பதற்றத்தில் போதிசத்வரின் காலடியில் கீழே நழுவ விட்டாள்.

வேகமாக ஓடி வந்த யானை அவர்களை நசுக்கி விடும் நிலையில் போதிசத்வர் அந்த யானையின் நெற்றியில் தன் கையைப் பதித்தார்.

அவ்வளவு தான், அந்த யானை சாந்தமடைந்தது. அதைத் தட்டிக் கொடுத்தார் போதிசத்வர்.

யானை அவர் முன்னால் மண்டியிட்டுப் பிளறியது.

அனைவரும் இந்த ஆச்சரியகரமான சம்பவத்தைப் பார்த்து பிரமித்தனர்;

*

இது போன்ற நூற்றுக் கணக்கான சம்பவங்களை போதிசத்வர் கதைகள் தெரிவிக்கின்றன!

tags- tags – போதிசத்வர் கதைகள்

Swami Crossword 24920 (Post No.8732)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8732

Date uploaded in London – –24 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ACROSS

1. – (6 words) Spell, a lot are in the Vedas

4. – (5) One of five elements, but not on the ground

6. – (4)Plough

8. –  (4) darkness

9. – (5) another name for Havan/  Fire sacrifice

10.– (4) Hindu feminine name; shortened form of one of the two queens of Krishna

DOWN

1. – (8 words)- glory, greatness; goes with famous book on Devi

2. – (5) tubular, not enough, unsuitable

3. – (6) not spending, not changing in Sanskrit

5. – (6) Peacock’s tail, bundle, collection of things

7. – (5)in music a tune; general meaning affection

tags — Crossword 24920

–subham—

தமிழ் சம்ஸ்க்ருத ஆங்கில இலக்கண அகராதி – 6 (Post. 8731)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8731

Date uploaded in London – –24 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகில் இந்துக்கள் போல இலக்கணத்தை மதிப்பவர்கள் வேறு எவருமிலர். சம் ஸ்கிருதத்தில் 3000 ஆண்டுகளுக்கும் முன்னரே இலக்கணம் பூஜிக்கத்தக்க நிலையை அடைந்தது என்பதைப் பார்க்கையில் உலகின் மூத்த சமுதாயமும் இந்துக்கள் என்று காட்டுகிறது. உலகில் நாகரீகத்தின் உச்சத்தை அடைந்தவர்களும் இந்துக்களே என்று காட்டுகிறது. அது மட்டுமல்ல சம்ஸ்கிருதத்தில் யாப்பு இலக்கணம், சொல் இலக்கணம் வளர்ந்தபோது உலகில் தமிழோ, லத்தினோ, எபிரேயம் எனப்படும் ஹீப்ருவோ , சீன மொழியோ, பாரசீக மொழியோ இலக்கியப்படைப்பு எதுவும் படைக்கவில்லை. இந்தப் பழைய மொழிகளில் தமிழ் இலக்கியம்தான் கடைசியாக வந்தது. அதாவது கடைக்குட்டி. ஆனாலும் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது. பிற் காலத்தில் தென் கிழக்காசிய நாடுகள் முழுவதிலும் கொ கட்டிப் பறந்தது தமிழ் மொழி. ஆயினும் இவையெல்லாம் 2000 ஆண்டுகளுக்குட்பட்டதே.

இங்கே இலக்கணம் (GRAMMAR) பற்றி மட்டும் காண்போம் . இது ஆறாவது பகுதி.

உலகிலேயே மிகவும் வியப்பான விஷயம் !

இந்துக்களின்  பகவத் கீதையில் இலக்கணம்!

ஆதி சங்கரரின் பஜ கோவிந்தம் துதியில் இலக்கணம்!

ஐயர்கள் நாள் தோறும் முக்காலமும் செய்யும் சந்தியா வந்தனத்தில் இலக்கணம்!!

இதற்கு மூலம் உலகிலேயே பழமையான ரிக்வேதத்தில் உளது .

அதைவிட பெரிய அதிசயம் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் 1970 வினைச் சொற்களின் பட்டியல்!

அதைவிட பெரிய அதிசயம் பத்துவகையான பெயர்ச் சொல் பட்டியல்.

ஆனால் தமிழிலோ சங்க இலக்கியத்தில் ‘இறந்த காலம்’ , ‘இறந்த காலம் இல்லாத காலம்’ என்ற இரண்டுதான்.

அதாவது அப்போதுதான் மொழி துளிர்விடத் துவங்கியது.

நான் சொல்வதெல்லாம் இலக்கணம் (GRAMMAR) பற்றிய விஷயம் என்பதை நினைவிற் கொள் க .

தமிழ் மொழி அதற்கும் முன்னரே இருந்தது. தமிழர்கள் அதற்கும் முன்னரே இருந்தனர். ஆனால் வளர்ச்ச்சி அடைந்த — இலக்கணம் பெற்ற மொழியாக —- தமிழ் இருக்கவில்லை. தொல்காப்பியர் புள்ளி வைத்த எழுத்துக்கள், ஆய்த எழுத்து என்னும் முப்பாற் புள்ளி பற்றிப் பேசுவது எல்லாம் அவரை சங்க இலக்கியத்தை ஒட்டி வைத்துவிடுகிறது.

(தொல்காப்பியர் காலம் என்னும் எனது தொடர் கட்டுரைகளில் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளேன்; கண்டு கொள்க).

தினசரி பிராமணர்கள் செய்யும் சந்தியாவந்தனத்தில் வணங்கும் காயத்ரீ மாதா 24 எழுத்துக்கள் உடைய யாப்பு இலக்கணச் சொல் ஆகும். இதை உறுதிப்படுத்தும் வகையில் காயத்ரீ , உஷ்ணிக் , அனுஷ்டுப், பிருஹதி, பங்க்தி , த்ருஷ்டுப், ஜகதி என்றும் அவர்கள் சொல்லி வணங்குகிறார்கள்

*****

விக்கிபீடியா தகவல்:–

வேத சந்தஸ்கள் (Vedic meter) :-

“இந்து சமய வேத மந்திரங்களில் எத்தனை அடிகள் (பதங்கள்), எத்தனை எழுத்துக்கள் (அட்சரங்கள்) இருக்க வேண்டும் என நிர்ணயிக்கின்ற பகுதியே சந்தஸ் எனப்படும். சமஸ்கிருத மொழியில் பல சந்தங்களைப் பற்றி சந்தஸ் தொடர்பான சாத்திரங்கள் கூறியிருந்தாலும், வழக்கில் ஏழு சந்தங்களே (சந்தஸ்கள்) உள்ளன. அவைகள்:

காயத்திரி சந்தம்: மூன்று அடிகள், ஒரு அடிக்கு எட்டு எழுத்துக்களுடன் மொத்தம் 24 எழுத்துக்களுடன் கூடிய மந்திரங்கள் கொண்டது.

ஊஷ்ணிக் சந்தம்: நான்கு அடிகள், ஓர் அடிக்கு ஏழு எழுத்துக்கள்; மொத்தம் 28 எழுத்துக்களுடன் கூடியது.

அனுஷ்டுப் சந்தம்: நான்கு அடிகள், ஒர் அடிக்கு எட்டு எழுத்துக்கள்; மொத்தம் 32 எழுத்துக்களுடன் கூடியது.

ப்ருஹதி சந்தம்: நான்கு அடிகள், ஒவ்வொரு அடிக்கு முறையே 8, ,, 12, 8 எழுத்துக்களுடன் மொத்தம் 36 எழுத்துக்கள் கொண்டது.

பங்கதி சந்தம்: நான்கு அல்லது ஐந்து அடிகள்; மொத்தம் 40 எழுத்துக்களுடன் கூடியது.

திருஷ்டுப் சந்தம்: நான்கு அடிகளுடன், ஓர் அடிக்கு 11 எழுத்துக்களுடன், மொத்தம் 44 எழுத்துக்களுடன் கூடியது.

ஜகதி சந்தம்: நான்கு அடிகள், ஓர் அடிக்கு 12 எழுத்துக்கள்; மொத்தம் 48 எழுத்துக்களுடன் கூடியது.

புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் அனுஷ்டுப் சந்தஸ் பெருவாரியாக பயன்படுத்தப்பட்டுள்ளது”.

****

பிராமண , க்ஷத்ரிய, வைஸ்யர்கள் ஆகிய மூன்று ஜாதிக்காரர்கள் வேதங்களைப் பயில்வதோடு ஆறு அங்கங்களையும் பயில வேண்டும். அதில் வியாகரணம்(Grammar) என்னும் இலக்கணமும், நிருக்தம் (Etymology) என்னும் சொற்பிறப்பியலும் அடக்கம். உலகில்  வேறு எந்த கலாசாரத்திலும் இப்படி சிலபஸ் Syllabus கிடையாது. இந்துக்களைப் பார்த்து பிளாட்டோவும் அரிஸ்டாட்டிலும் கொஞ்சம் அறிமுகப்படுத்தினர் கிரேக்க நாட்டில்.

இதைவிட வேடிக்கையான விஷயம், உலகில் சிறந்த பொருள்கள் யாவையும் நானே என் று அர்ஜுனனுக்குச் சொல்லிய கிருஷ்ண பரமாத்மா, பகவத் கீதையில் அகாரம் பற்றிப் பேசிவிட்டு ‘சமாசம்’ பற்றியும் பேசுகிறார். கிருஷ்ணனை ‘காப்பி’ copy அடித்த வள்ளுவரும் ஏசுவும் (Jesus)  அகாரம் பற்றிச் சொன்னார்கள் . ஆனால் ‘சமாசம்’ பற்றிச் சொல்லவில்லை !

இதோ சமாசம்!

‘சமாசம்’ என்பது கூட்டுச் சொற்கள்;

பகவத் கீதையில் கிருஷ்ணன் செப்புகிறார் 10-33

“எழுத்துக்களுள் ‘அகார’மாகவும் , ஸமாஸங்களுள் ‘துவந்துவமாக’வும் இருக்கிறேன் . அழிவில்லாத காலமும் (The Time) நானே.. எங்கும் முகமுள்ளவனும் கரும பலனை அழித்துக் காப்பவனும் நானே” . 10-33

இதில் காலம் பற்றியும் , கருந்துளை எனப்படும் BLACK HOLE ‘பிளாக் ஹோல்’ பற்றியும் முன்னமே தனிக் கட்டுரைகளில் விளக்கிவிட்டேன்

சமாசம் பற்றி பேரறிஞர் அண்ணா கூறுவதைக் காண்போம்; இவர் ராமகிருஷண மடத்தின் உரை ஆசிரியர்.

‘த்வந்த்வ’ ஸமாஸம்

சொற்களின் புணர்ச்ச்சி ஸம்ஸ்க்ருதத்தில் நான்கு வகை :

1.அவ்யயீ – (எடுத்துக் காட்டு) – அதிஹரி

2.தத்புருஷம் – ஸீதாபதி

3.பஹுவ்ரீஹி – பீதாம்பரஹ

4.த்வந்த்வ – ராம லக்ஷ்மணெள

த்வந்த்வ ஸமாஸத்தில் புணரும் பதங்கள் இரண்டும் ஸமப்ரதானம் .

இது அறிஞர் அண்ணா உரை.

கீதையில் இலக்கணம் பற்றிக் கதைப்பதிலிருந்து அது எவ்வளவு முக்கியம் என்று அறி கிறோம் .

அதிலும் கிருஷ்ணர், சமத்துவம் போதிக்கும் சமாசத்தை எடுத்தது சாலப்பொருந்தும் . இதையே வள்ளுவனும் , “சமன்  செய்து தூக்கும் கோல் …. “ என்னும் குறளில் எதிரொலிக்கிறான்.

****

பஜ கோவிந்தம் துதியில் பாணினி இலக்கணம்

உலகம் புகழும் தத்துவ அறிஞர் ஆதிசங்கரர் இயற்றிய ‘பஜ கோவிந்தம்’ ஆழ்ந்த தத்துவங்களை, சின்னப் பிள்ளைகள் கற்கும் Nursery Rhyme ‘நர்சரி ரைம்’, போலச் சொல்லும்.

இதை எம். எஸ். சுப்புலெட்சுமியின் குரலில் அனைவரும் கேட்டு மகிழ்கிறோம்.

முதல் பாட்டில்  இலக்கண விவாதங்களில் காலத்தை வீணடிப்போரை இடித்துரைக்கிறார் .

 பஜகோவிந்தம் முதல் பாடல் —

“பஜகோவிந்தம் பஜகோவிந்தம்

.பஜகோவிந்தம் மூடமதே |

சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே

நஹிநஹி ரக்ஷதி டுக்ருஞ் கரணே”

கோவிந்தனைத் துதி. யமன் வந்து கதவைத் தட்டும்போது உன் இலக்கண அறிவு உதவிக்கு வருமா? என்று கேட்கிறார்; இதன் பின்னால் ஒரு கதை உள்ளது .

டுக்ருஞ் – என்பது பாணினி சூத்ரம் 1-3-5 உரையில் உளது; ஒரு நாள் ஆதிசங்கரர்,  காசி நகர தெரு வழியே நடந்து சென்றார். அப்பொழுது  ஒரு கிழவன்  இந்த சூத்திரத்தைத் திரும்பத் திரும்ப சொல்லி விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார் ; தள்ளாத வயதில் இறைவனை நினைத்து — அதிலும் காசி மாநகரத்தில் – வணங்காதபடி, இப்படி இந்தக் கிழவன் நேரத்தைச் செலவிடுகிறானே என்று பாடத் தொடங்கினார் ஆதி சங்கரர்.

27 பாடல்களில் முதல் சில பாடல்களை அவர் பாடியதாகவும் ஏனைய பாடல்களை அவருடன் வந்த சிஷ்யர்கள் பாடி முடித்ததாகவும் உரைகாரர்கள் புகல்வர் . கம்பன் வீட்டுக் கட்டுத் தறியே கவி பாடுகையில் ஆதி சங்கரரின் சிஷ்யர்கள் பாட முடியாதா என்ன?

கட்டுரையின் அடுத்த பகுதியில் ‘தாது’ (Verb Roots) பாடத்தில் வரும் 1970 வினைச் சொற்கள் பற்றியும் பெயர்ச் சொல் கூறும் கண பாடம் பற்றியும் காண்போம்.

tags- இலக்கண அகராதி –

—-TO BE CONTINUED

ருத்ராட்சம்! – 2 (Post No.8730)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8730

Date uploaded in London – –24 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டனிலிருந்து ஞானமயம் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இதில் ஒரு பகுதி.21-9-2020 அன்று ஒளிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியில் ருத்ராட்சம்!  பற்றிய கேள்விக்கு அளித்த பதிலை இங்கு காணலாம்.

கேள்வியை அனுப்ப விரும்பும் அன்பர்கள் facebook.com/gnanamayam -க்கு அனுப்பலாம்.

                                                               By Kattukutty

ருத்ராட்சத்தை யார், யார் அணியலாம்???

பிரும்மச்சாரிகள், இல்லற வாசிகள், வானப் பிரஸ்தர்,

சன்யாசிகள், மற்றும் பெண்களும் அணியலாம்!

மாலை கட்ட வேண்டிய உலோகம்

தங்கம், வெள்ளி, தாமிரம், பட்டு நூல், பருத்தி நூல்.

எதை ருத்ராட்ச மாலையுடன் கட்டலாம்???

தங்கத்தினால் ஆன மணி, வெள்ளியினால் ஆன மணி, பவழம், முத்து, ஸ்படிகம்.

மாலை எப்படி அமைய வேண்டும்???

மாலை கட்டும் போது மணிகள் ஒன்றை ஒன்று தொடக் கூடாது.

மணிகள் அனைத்தும் ஒரே அளவாக (size) இருக்க வேண்டும்

ஒரு மணிக்கும் மற்றொரு மணிக்கும் நடுவில் போடும் முடிச்சு

மூன்று வகைப் படும்

1)நாக பாசம் 2) சாவித்திரி 3) பிரம கிரந்தி

மாலையை அணியும்போது ருத்ராட்சத்தை சிவனைத் துதித்து அணிய

வேண்டும்.

எப்படி ஜபிக்க வேண்டும்???

மேரு மணி( அதாவது மாலையில் உள்ள மணிதவிர தனியாக

உள்ள மணி) தொடங்கி ஒவ்வொரு மணிக்கும மந்திரம. சொல்லி

ஜபிக்க வேண்டும்

உடலை வெறுத்த துறவறத்தார் மணியை மேல் நோக்கி ஜபிப்பார்கள்

போகத்தை விரும்பினோர் மணியை கீழ்நோக்கி ஜபிப்பார்கள்.

மேரு வந்தால் அதைக கண்டிப்பாக தாண்டக் கூடாது

மாலையை திருப்பி செலுத்தி ஜபிக்க வேண்டும்

வீட்டிலிருந்து ஜபித்தால். ஒரு மடங்கு பலன்

பசு மடத்திலிருந்து ஜபித்தால். 10 மடங்கு பலன்

நதிக்கரையிலிருந்து ஜபித்தால் 100 மடங்கு பலன்

ஆலயத்திலிருந்து ஜபித்தால். 1000 மடங்கு பலன்

வனத்திலிருந்து ஜபித்தால் 10,000 மடங்கு பலன்

மலையிலிருந்து ஜபித்தால். கோடி மடங்கு பலன்

சிவன் சன்னிதியிலிருந்து ஜபித்தால் எண்ணிலடங்கா பலன்!!!!

எந்த திசை நோக்கி ஜபித்தால் என்ன பலன்?

கிழக்கு நோக்கி ஜபித்தால். விரும்பிய பொருள் கிட்டும்

தெற்கு நோக்கி ஜபித்தால். செய் வினைகள் விலகும்

வடக்கு நோக்கி ஜபித்தால். வியாதிகள் நீங்கும்

மேற்கு நோக்கி ஜபித்தால். இஷ்ட சித்தி அடையலாம்

ஐபம் செய்யும் மாலையில் 2முகம், 3 முகம், 13 முகம் மணிகள்

இருக்கக் கூடாது.

ஜபம் செய்யும்போது ஆசனம்

தர்பபைப் புல், மான் தோல், புலித்தோல்

ஜபம் செய்ய ருத்ராட்ச மாலை இல்லாத போது,

பொன்னால் செய்த மாலையால் ஜபித்தால் செல்வம் சேரும்

முத்து மணி மாலையால் ஜபித்தால் புகழ் சேரும்

ஸ்படிக மணி மாலையால் ஜபித்தால் பிள்ளைப் பேறு உண்டாகும்

பவழ மணி மாலையால் வசியமும், வெள்ளி மணிமாலை வாகன வசதியும்,

கிடைக்கும்.

ருத்ராட்சத்தை சுத்தம் செய்யும் முறை

ஒரு வார காலம் பசு நெய்யிலோ, நல்லெண்ணெயிலோ ஊற

வைக்க வேண்டும்

பிறகு நீரால் சுத்தப் படுத்தி துடைத்து ஈரம் போனவுடன் திரு நீற்றில்

ஓரு நாள் வைக்க வேண்டும்

பின்பு காய்ச்சாத பசும்பாலில் கழுவி, பின் நல்ல ஜலத்தில் கழுவி,

துடைத்து பூஜையில் வைத்து அணியவும்

அனபர்கள் அனைவரும் பயன் படுத்தி நண்பர்களுக்கும்

தெரியப் படுத்தி அவர்களும் பயன் பெற வேண்டுமாய் கேட்டுக்

கொள்கிறேன்

நன்றி, வணக்கம்.                       

tag- ருத்ராட்சம்! – 2 

                            ***

திருமூலர் யோகமும் பதஞ்சலி யோகமும் ஒன்றா?(Post No.8729)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8729

Date uploaded in London – – 24 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டனிலிருந்து ஞானமயம் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இதில் ஒரு பகுதி.

21-9-2020 அன்று ஒளிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியில் திருமூலர் யோகம் மற்றும் பதஞ்சலி முனிவர் யோகம் பற்றிய கேள்விக்கு அளித்த பதிலை இங்கு காணலாம்.

கேள்வியை அனுப்ப விரும்பும் அன்பர்கள் facebook.com/gnanamayam -க்கு அனுப்பலாம்.

QUESTION ASKED BY SENTHAMANGALAM GANESAN

திருமூலர் யோகமும் பதஞ்சலி யோகமும் ஒன்றா?

ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

இப்போது நம் முன் இருக்கும் கேள்வி : யோகம் பற்றிய கேள்வி.

திருமூலர் யோகமும் பதஞ்சலி யோகமும் ஒன்றா?

சுருக்கமான பதில், ஆம் ஒன்றே தான், ஆனால் அதில் சிறிய வேறுபாடும் உண்டு.

திருமூலர் பற்றி நாம் நன்கு அறிவோம். பதினெட்டு சித்தர்களில் ஒருவர். 63 நாயன்மார்களில் ஒருவர்.

திருமந்திரம் என்ற நூலை உலகிற்குத் தந்தவர். ஆண்டுக்கு ஒரு பாடலாக 3000 ஆண்டுகளில் 3000 பாடல்களை அருளியவர் அவர்.

ஒன்பது தந்திரங்களைக் கொண்ட நூல் திருமந்திரம்.

இதில் மூன்றாவது தந்திரத்தில் யோகம் பற்றிக் காணலாம்.

யோகம் என்ற சொல் மனதையும் ஆன்மாவையும் இணைப்பது என்ற பொருளைத் தருகிறது.

யோகத்திற்கு எட்டு உறுப்புகள் உண்டு. ஆகவே இதை அட்டாங்க யோகம் என்று கூறுகிறோம்.

இயம நியமமே எண்ணிலா ஆதனம்

நயமுறு பிராணாயாமம் பிரத்தியாகாரம்

சயமிகு தாரணை தியானஞ் சமாதி

அயமுறும் அட்டாங்க மாவதுமாமே (திருமந்திரம்)

என்று இந்த எட்டு உறுப்புகளைத் திருமூலர் விளக்குகிறார்.

பதஞ்சலி மாமுனிவர் யோக சூத்ரம் என்ற யோக நூலை உலகிற்கு அருளியவர்.

இதில் 194 சூத்திரங்கள் உள்ளன.

ஸ்வாமி விவேகானந்தர் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விளக்கவுரை அளித்துள்ளார். உலகம் முழுவதும் யோகா பிரபலமாக ஸ்வாமி விவேகானந்தர் முக்கிய காரணமாக அமைந்தார். தியாஸபிகல் சொஸைடியும் யோகாவில் ஆர்வம் காட்டியது.

யோக சூத்ரம் நான்கு பாகங்களைக் கொண்டது. சமாதி பாதம், சாதனா பாதம், விபூதி பாதம், கைவல்ய பாதம் என்ற நான்கு பாதங்களில் சமாதி பாதத்தில் 51 சூத்திரங்களும் சாதனா பாதத்தில் 54 சூத்திரங்களும், விபூதி பாதத்தில் 56 சூத்திரங்களும் கைவல்ய பாதத்தில் 33 சூத்திரங்களும் உள்ளன.

அத யோகானுசாஸனம் என யோக சூத்ரம் ஆரம்பிக்கிறது.

Yogashchittavrittinirodhah -யோக சித்த விருத்தி நிரோத:

Yoga is restraining the mind-stuff (Chitta) from taking various forms (Vrttis)

யோகம் என்பது மனதை சித்த விருத்திகளிலிருந்து அடக்குவது தான்

என்பதை அடுத்த சூத்திரத்தில் இப்படிக் கூறி அருள்கிறார் பதஞ்சலி மாமுனிவர்.

இயமம் பற்றி பதஞ்சலி முனிவர் கூறும் போது கொல்லாமை, வாய்மை, களவு செய்யாமை, வெஃகாமை, புலன் அடக்கம் என்ற ஐந்தைக் கூறும் போது திருமூலரோ நடுநிலைமை, பகுத்துண்ணல், மாசற்ற தன்மை, கள் உண்ணாமை, காமம் இன்மை ஆகிய ஐந்தையும் சேர்த்து பத்து இயமங்களைச் சொல்கிறார்.

ஆசனங்கள் பற்றி பதஞ்சலி முனிவர் குறிப்பாகச் சொல்கிறார்.

ரஜோ குணத்தை அழிப்பது ஆசனம்.

வியாதி, யோகத்தில் வன்மை இன்மை,

இது ஆகும், இது ஆகாது என்ற விருப்பு, வெறுப்பு,

அலட்சியம், வைராக்கியம் இல்லாமை, திரிபுணர்ச்சி

சமாதிக்கு உரிய இடம் கிடைக்காதிருத்தல், கிடைத்த இடத்தில் சித்தம் நிலையாக இல்லாமலிருத்தல் ஆகிய இந்த எட்டும் இல்லாமல் நிலைபேற்றினை அளிப்பது தான் ஆசனம் என்று பதஞ்சலி கூறுகிறார்.

திருமூலரோ 134 ஆசனங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். திருமந்திரத்தில் 563வது பாடலாக மலர்வது இந்தப் பாடல்:

பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி

சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழும்

உத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப்

பத்தொடு நூறு பலஆ சனமே

மிகப் பெரும் பழைய ஆசனம் சுவத்திகம்.

அடுத்து இந்தப் பாடல் கூறும் ஏழு ஆசனங்கள்

இது தவிர எட்டெட்டுப் பத்தொடு நூறு ஆசனங்கள் உண்டு எனக் கூறி அருளுகிறார் திருமூலர்.

எட்டெட்டு என்றால் , ஈரெட்டு பதினாறு. அத்தோடு பத்தைக் கூட்ட வருவது 26. அத்துடன் நூறைக் கூட்டினால் வருவது 126.

இந்த 126 ஆசனங்கள் யாவை?

  1. சுவஸ்திகாசனம்
  2. கோமுகாசனம்
  3. வீராசனம்
  4. கூர்மாசனம்
  5. குக்குடாசனம்
  6. உத்தான கூர்மாசனம்
  7. தனுராசனம்
  8. மச்சேந்திராசனம்
  9. பச்சிமதானாசனம்
  10. மயூராசனம்
  1. சவாசனம்
  2. மச்சேந்திர சித்தாசனம்
  3. சித்தாசனம்
  4. வச்சிராசனம்
  5. பதுமாசனம்
  6. மச்சேந்திர பதுமாசனம்
  7. முக்த பதுமாசனம்
  8. சிம்மாசனம்
  9. பத்திராசனம்
  • வல்லரியாசனம், இப்படிப் போகிறது பெரும் பட்டியல்.

ஆக, மொத்த ஆசனங்கள் நூற்றி இருபத்தாறையும் எட்டையும் கூட்டினால் வருவது 134.

கேசரி ஆசனம் என்றால் வானத்தில் பறப்பது. இப்படி அபூர்வமான ஆசனங்களைச் செய்வதன் மூலம் சித்திகள் பல கிடைக்கின்றன.

யோகத்தின் பயன்களாக சித்திகளை பதஞ்சலியும் விளக்குகிறார். திருமூலர் மூன்றாம் தந்திரத்தில் அஷ்டாங்க யோகத்துடன் அட்டமா சித்திகளையும் விளக்குகிறார்.

அணு மாதி சித்திகளானவை கூறில்

அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை

இணுகாத வேகார் பரகாய மேவல்

அணுமைத் தனையெங்குந் தானாத லென்றெட்டே (பாடல் 668)

என்று எட்டு சித்திகளை இப்படி விளக்குகிறார் திருமூலர்.

அணிமா என்பது அணுவைப் போல சிறிதான தேகத்தை அடைதல்; மகிமா என்பது பெரிய உருவத்தை அடைதல்; லகிமா என்பது காற்றைப் போல லேசாக ஆதல், கரிமா என்பது கனமாக ஆதல்; ப்ராப்தி என்பது அனைத்துப் பொருள்களையும் தன் வசப்படுத்தல், பிராகாமியம் என்பது பர காய பிரவேசம் அதாவது கூடு விட்டுக் கூடு பாய்தல்; ஈசத்துவம் என்பது தேவர்களிடம் கூட ஆணை செலுத்துதல்; வசித்துவம் என்பது அனைத்தையும் தன் வசப்படுத்துதல்

பதஞ்சலி, யோகத்தின் உச்ச பயனாக கைவல்ய நிலையைக் கூறுகிறார்.

திருமூலரோ யோகத்தைச் சிவயோகமாகக் கூறுகிறார். யோகத்தின் உச்ச பயன் சிவனை அடைவதேயாம்.

பதஞ்சலி, யோகத்துடன் தன்னை நிறுத்திக் கொள்கிறார். திருமூலரோ ஒன்பது தந்திரத்தில் உலகியலையும் வாழ்வாங்கு வாழ வேண்டிய நெறிகளையும் புகல்கிறார்.

பதஞ்சலி சம்ஸ்கிருதத்தில் அற்புதமான சொற்றொடர்கள் அடங்கிய 194 சூத்திரங்களைத் தரும் போது திருமூலரோ என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே என்று தமிழுக்குப் பெருமை சேர்க்கிறார்.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும், அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார், உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே, பெரியாருடன் கூடல் பேரின்பமாமே, பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின், நல்லாரைக் காலன் நணுக நில்லானே, நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை, யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி என இப்படி வாழ்வின் ரகசியங்களைக் கொடுத்தருள்கிறார் திருமூலர்.

பதஞ்சலி சிதம்பர ஸ்தலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்; ஆடல் வல்லானின் ஆனந்தத் திருநடனத்தைக் கண்டு களித்தவர்.

திருமூலரோ திருவாவடுதுறையில் அரச மர நீழலில் வெகு காலம் தவம் புரிந்தவர்.

இப்படி இருவரையும் பற்றிச் சொல்ல நிறைய விஷயங்கள் உண்டு.

மிக முக்கியமான குறிப்பு ஒன்று உண்டு. இந்த யோகத்தைத் தகுந்த குரு மூலமாகவே கற்க வேண்டும். பிராணாயாமம் என்பது மூச்சுக் கலை. இதை முறையாக ஆசானிடமே கற்க வேண்டும். இல்லையேல் விபரீதமான பக்க விளைவுகள் ஏற்படும்.

இன்னொன்று, இன்றைய கால கட்டத்தில் யோகா என்ற சொல் தவறாகப் பயன்படுத்தப்படுவது போல வேறெந்தச் சொல்லும் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை.

சிரிப்பு யோகா, அழுகை யோகா, நடக்கும் யோகா, ஓடும் யோகா என்று தமக்குத் தோன்றியபடி பெயரைக் கொடுத்து சுயநல நோக்குடன் பயிற்சிகளை அளிக்கின்றவரை இனம் கண்டு தவிர்த்து பாரம்பரியமாக பதஞ்சலி முனிவர், திருமூலர் ஆகியோர் கூறிய யோகத்தில் பயிற்சி அளிப்பவரையே குருவாகக் கொள்ள வேண்டும்.

இல்லையேல் போலிகள் கற்பிக்கும் யோகம் நம்மை சோகத்தில் ஆழ்த்தி விடும்.

ஸ்வாமி விவேகானந்தர் அருளிய பதஞ்சலி யோக சூத்ரத்தின் விளக்கவுரை, திருமூலரின் திருமந்திரம் ஆகியவை இணையதளத்தில் இலவசமாகத் தரவிறக்கம் – டவுன் லோட் – செய்து கொள்ளலாம்.

படிப்போம்; யோகா பயில்வோம். இரு உலகிற்கும் தேவையானதைப் பெறுவோமாக.

இந்த வாய்ப்பினை நல்கியோருக்கும் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கும்  உளமார்ந்த நன்றி கலந்த வணக்கம் கூறி விடை பெறுவது சந்தானம் நாகராஜன்.

tags– திருமூலர் ,யோகம், பதஞ்சலி ,

***

WHERE THE MIND IS WITHOUT FEAR………(Post No.8728)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8728

Date uploaded in London – –23 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Where the mind is without fear and the head is held high;

   Where knowledge is free;

   Where the world has not been broken up into fragments by narrow domestic walls;

   Where words come out from the depth of truth;

   Where tireless striving stretches its arms towards perfection;

   Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit;

   Where the mind is led forward by thee into ever-widening thought and action

   Into that heaven of freedom, my Father, let my country awake.

sang nobel laureate RABINDRANATH TAGORE IN GITANJALI

Tagore derived his inspiration from Swami Vivekananda who got it from the Vedas.

Swami Vivekananda condemned fear in the strongest terms . He repeated his statement against it in several lectures.

“Fear is a sign of weakness – vol.1, page 47

The greatest sin is fear – 5-35

It is fear that brings misery, fear that brings death, fear that breeds evil  3-160

It is fear that is the greatest of all superstitions -3-321

It is fearlessness that brings heaven even in a moment – same as above

Those who are protected by the Lord must be above fear” -6-342

Swamiji also advises,

“The only religion that ought to be taught is the religion of fearlessness” – 3-160

****

He derived inspiration from our ancient Vedas.

In the Atharva Veda Rishi Atharvan prays ( 19-15)

“Lead us to a free world , wise one,

Where lie the divine lustre, sunlight, and security.

Valiant are your arms , the powerful;

We will take to your vast shelter.

Adorable Indra , our saviour,

Vritra slayer and furtherer of our highest aims

May he be our protector from the end,

From the middle, from behind and from in front “.

Singing like this and chanting such mantras together will make one strong”.

***

Even the greatest of the modern poets Subrahmanya Bharati sings,

In the cart man’s song (Vandikkaaran paattu in Tamil) , he says,

“If robbers do infest the way

That lies across the jungle grey

Our house hold deity—Virammal

To save us all will surely hie.

If robbers vile on us close in

And bid us stop our cart within

We will our dark Maari invoke

Then Death too will quake like one broke”

In another verse Bharati says,

“Beat the drum, beat the drum

Beat the drum of victory!

The demon of fear we have ejected,

The snake Deceit we have killed

The Vedic blaze which lights our days

All earth with bliss has filled”.

His lines points to inspiration from the Vedas.

But his oft quoted song against fear, particularly against British atrocities

Repeats ‘ FEAR we NOT’ (Accham Illai !Accham Illai ! in Tamil)  at least 25 times!!

Just some lines from the song …….

“Fear we not Fear we not Fear we not at all!

Though  all the world be ranged against us

Fear we not Fear we not Fear we not at all

Though we are slighted and scorned by others

Fear we not Fear we not Fear we not at all!

Though fated to a life of beggary and want

Fear we not Fear we not Fear we not at all!

Though all we owned and held as dear be lost

Fear we not Fear we not Fear we not at all!

Though the corset breasted cast their glances

Fear we not Fear we not Fear we not at all!

Though friends should feed us poison brew

Fear we not Fear we not Fear we not at all!

Though spears reeking flesh come and assail us

Fear we not Fear we not Fear we not at all!

Though the skies break and fall on the head

Fear we not Fear we not Fear we not at all!

(My father V Santanam, News Editor, Dinamani, Madurai and a freedom fighter sang such Bharati songs while distributing pamphlets against the British Rule in Chennai Marina beach in the 1940s was arrested and jailed along with national leader K Kamaraj in Vellore Jail)

From my old  post in this blog:–

FEARLESSNESS IN ATHARVAVEDA

1.O Indra! God of Supreme Power! Make us fearless of all such things whereof we are afraid of AV 19-15-1
(Yath Indra Bhayamahe……………………….. AV 19-15-1)

******
2.May the atmosphere give us peace and safety and may both these heaven and earth be secure for us. May we be free from danger from west and east and may there be no fear from north and south AV 19-15-5
(Abhayam Na: ……………………. AV 19-15-5)
*****

3.May we be fearless of our friends and even of those who are unfriendly to us, may we never fall in dread of those whom we know and even of those we don’t know: May we remain free from any apprehension by night and in the day time, and may all the quarters be friendly to us AV 19-15-6
(Abhayam mitradha bhayam ………………. AV 19-15-6)

TAGS- FEAR, FEAT NOT, WHERE THE MIND IS, TAGORE, BHARATI, V.SANTANAM

*******