PROOF FOR PANINI’S KNOWLEDGE OF TAMIL NADU 2700 YEARS AGO (Post No.7923)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7923

Date uploaded in London – 4 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Great Sanskrit scholars like Bhandrakars and Goldstucker dated Panini around 8th century BCE. His coinage which Arthasastra doesn’t know also place him well before Kautilya of fourth century BCE . So whatever he said becomes very important to decide the chronology of many things. One such thing debated by the scholars is his knowledge about Tamil Nadu. He covered several thousand square miles of north India from Afghanistan to Assam in the north and up to Asmaka country in the South on River Godavari.

But for one who reads deeply it becomes clear that he knew the South of India up to land’s end. In one sutra he mentioned black peppercorns and honey coming through the land route. The long list of articles he mentioned in several sutras shows his vast knowledge in economics, commerce, trade routes and wealth of the community.

And supporting evidence comes from Buddhist Jataka tales. Earlier people like Bodhayana and Yaska also talk about south India. Epics Mahabharata and Ramayana mentioned the customs of Southerners.

We have very clear references to the Tamil kingdoms in the inscriptions of Emperor Asoka and Orissa King Kharavela.

First let us look at the trade routes.

Panini  wrote only a grammar book, but yet his references and the commentaries on his book give us very interesting information.

He mentioned roads leading from one city to another city- sutra 4-3-85

Katyayana in his comments mentioned kantara pathika, that is the forest route. In addition to it, he listed Jangala patha, Vari patha and Sthala patha, and they are routes via jungle thickets, water and land. We also hear about Aja patha- goat track, Sanku patha- narrow mountain paths.

In the Devapathathi Gana 5-3-100 we hear about more interesting routes Hamsa patha and Deva patha which relate to air.

He might have meant air -plane route used by Rama, Ravana and Kubera. Or it may be routes used by the migratory birds. Or it may be the routes used by the Siddhas with supernatural powers. We have literary evidence to support every one of the above.

Kalidasa goes one step ahead and listed three different air routes depending upon the height. While returning to Ayodhya from Sri Lanka by thought powered air -plane the three routes are explained in

Raghuvamsa 13-19. He refers to Sura \ Deva patha, Ghana patha and Kagapatha.

My comments

Even a Tamil book that came about 250 years ago mentioned air routes used by siddhas with super natural powers (Tiru Kutrala Kuravanji by Tri Kuta Rasappa Kavirayar).

Raja patha is still the road name in several Indian cities.

English word path also came from Sanskrit ‘patha’.

Now to this particular sutra regarding the black peppercorns and honey—

Kerala known as Chera Nadu 2000 years was the main exporter of peppers. When Panini mentioned it in sutra 5-1-77,

He must have remembered Kerala.

Black Pepper corns from Tamil speaking Chera nadu (now Malayalm speaking Kerala) went up to Rome and Greece. Till today Kerala exports to other places.

Xxxx

VAIDURYA GEM STONE

Sutra 4-3-84 is about the gem-stone Vaidurya, known as cats eye.

It said that it was available in Valavaya mountains and polished at Vidura town and so it was called Vaidurya .

We have some references to Vaidurya, Beryls and others  exported from Coimbatore inT amil Nadu. So we may conclude that pepper and gemstones were exported via Coimbatore about 3000 years ago.

V S Agrawala adds more supporting information—

“As pointed out by Keith, Yaska already mentions a southern use of the Vedic word ‘Vijaamatri’ for a son in law who pays to his father in law the price of the bride.

Vijaa maateti sasvad Dakshinaajaahaa kriitapatim aachaksate

—Nirukta 6-9

My comments

Sangam Tamil literature and later Tamil literature confirm this bride price.

“Secondly, the Deccan was the home of Sanskrit as early as Katyayana’ s time whom Patanjali regards as a southerner on account of his partiality for the Tadhita.

Priya taddhitaahaa Daakshinatyaahaa

(Katyayana lived around 4th century BCE.)

“Thirdly, Panini besides referring to the sea and the islands lying near the coast and in mid ocean , actually mentioned that portion of the country which lies between the tropics as

Antarayana desa 8-4-25

It can refer only to Deccan lying south of the Tropic of Cancer, which passes through Kutch and Avanti.”

My comments

Sri Lankaan history book ‘Mahavamsa’ gives more information about the marriages that took place between the royal families of Madurai Pandyas and the first king Vijaya of Sri Lanka. It happened in the sixth century BCE, not far from Panini’s time

So it is very clear that North Indians had a very good knowledge of Southern India and its peoples.

Tags– Panini , Black pepper, Land routes, Yaskar, ,bride price, Katyayana, ,Taddhita

—SUBHAM—

பாணினிக்கு 2700 ஆண்டுக்கு முன்னரே தமிழ் நாடு தெரியும்! (Post No.7922)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7922

Date uploaded in London – 4 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

உலகப் புகழ் பெற்ற முதல் இலக்கண வித்தகர், முதல் மொழியியல் நிபுணர்  (World’s First Grammarian and Linguist) பாணினி. அவர் தற்போது  பாகிஸ்தானில் இருக்கும் லாகூரில் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் ஸம்ஸ்க்ருத மொழிக்கு இலக்கணம் எழுதினார். அந்த நூலின் பெயர் அஷ்டாத்யாயியீ (அஷ்ட அத்யாயம் , அதாவது எட்டு அத்தியாயம்.). அதில் அவர் கோதாவரி நதிக்கரையில் இருந்த  அஸ்மாக தேசத்தைப் பெயர் சொல்லி எழுதினார்.

ஆப்கானிஸ்தான் முதல் அஸ்ஸாம் வரை தெரிந்த அவருக்கு தமிழ்நாடு தெரியாமலா போகும் ? அவருக்கு 450 ஆண்டுகளுக்குப் பின்னர் வாழ்ந்த அசோகன் தெளிவாகவே கேரளம் பற்றிப் பேசுகிறான். அதற்குப் பின்னர் ஒரிஸ்ஸாவை ஆண்ட காரவேலன் ‘தமிழ் மன்னர் கூட்டணி’ பற்றியும் பேசுகிறான். பாண்டிய மன்னரைத் தோற்கடித்து முத்து முதலியவற்றை கப்பமாகப் பெற்றது குறித்தும் கல்வெட்டில் பொறித்துளான் .

பாணினி வரலாறு எழுதவில்லை. ஆகவே அசோகன், காரவேலன் போல நேரடியாகப் பேசாமல் மறைமுகமாக கேரளா பற்றிப் பேசுகிறான். அக்காலத்தில் கேரளத்தின் பெயர் சேர நாடு. அக்காலத்தில் தமிழ் மட்டுமே அங்கு பேசப்பட்டது.

அங்கிருந்து வந்த மிளகு பற்றி பாணினி சூத்திரம் சொல்கிறது -5-1-77

உத்தர பதே நாஹ்ருதம் ச

வா

ஆஹத ப்ரகரேண  வாரி ஜங்கல ஸ்தல காந்தார பூர்வ பதானுப

ஸம்க்யானம் 

வா

அஜபத சங்கு பதாப்யாம் சோப ஸம்க்யானம் 

வா

மதுக மரிச யோரண் ஸ்தல பத.

இதில் கடைசி வரிதான் மிளகு, தேன் — மரீச, மது — பற்றிப் பேசுகிறது.

அதைப் பார்ப்பதற்கு முன்னால் இதே சூத்திரம் சொல்லும் அதிசய விஷயங்களை முதலில் இயம்புவேன் .

அவர் புராதன இந்தியாவின் போக்குவரத்து பற்றிச் சொல்லும் விஷயங்கள் பாரதம் முழுதும் நடந்த பொருளாதார , வியாபார விஷயங்களை எடுத்துரைக்கிறது. சூத்திரத்தை விளக்க வந்த காத்யாயனர் , பதஞ்சலி , ‘வாமனர் – ஜயாதித்யர் ஜோடி’ கொடுக்கும் விஷயங்கள் நம் மூக்கின் மீது விரலை வைத்து வியக்கச் செய்யும் .

நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து – சூத்திரம் 4-3-85

இந்த சூத்திரத்துக்கு விளக்கம் தந்த காத்யாயனர் தென்னாட்டைச் சேர்ந்தவர் என்று அவருக்குப்பின்னர் வந்த  பதஞ்சலி சொல்வார் . கி.மு 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த காயத்யயனர் சொல்கிறார்-

காண்டார பத (Forest) – பயங்கரக் காட்டு வழிப் போக்குவரத்து ;

ஜங்கல பத (jungle) –  காட்டு வழிப் போக்குவரத்து ;

ஸ்தல பத (Land Route) – நில  வழிப் போக்குவரத்து ;

இதில் பயங்கர காட்டுவழிப் போக்குவரத்து என்பது விந்திய மலை வழியாகச்  செல்லும் அடர்ந்த காட்டுப் பாதை . இதை சிவில் எஞ்சினியரும் மாபெரும் முனிவருமான அகஸ்தியர் , மலையை மட்டமாக்கி, சாலை போட்டதையும் அதை புராணங்கள், விந்திய கர்வ பங்கம் என்று சொல்வதையும் முந்தைய கட்டுரைகளில் கண்டோம்.

‘அஜ பத’ என்றால் ஆட்டுப் பாதை என்று போல். மலைப்பாதையில் ஒரு ஆடு சென்றால் எதிரே இன்னும் ஒரு ஆடு வரமுடியாது. ஒத்தையடிப் பாதை.

இதை காத்யாயனர் 5-1-77, பதஞ்சலி 2-358-ல் விளக்குகின்றனர்.

ஸ்தல பத என்னும் நிலப்பாதை வழியாக — சாலை மார்க்கமாக மிளகு, தேன் வந்தன என்றும் காத்யாயனர் உரைக்கிறார்.

ஆக சூத்திரத்தில் பாணினி பயன்படுத்திய மிளகுக்கு விளக்கம் கிடைத்துவிட்டது .

மிளகுக்குப் புகழ் பெற்ற இடம் மலையாள- கேரள – சேர நாடு என்பதை சங்க இலக்கியமும் பிற்கால ரோமானியர் வணிகமும் காட்டும்.

இத்துடன் அதிமதுரம் தென்னாட்டில் இருந்து போனது .

இது தவிர தேவ பதாதி கண – 5-3-100-ல் மேலும் பல பாதைகளை பட்டியலிடுகிறார்.

வாரி பத, ஸ்தல பத, ரத பத, கரி பத,அஜ பத,சங்கு பத, ராஜ பத ,சிம்ஹ பத, ஹம்ஸ பத, தேவ பத.

இதில் சில சுவையான விஷயங்கள் இருக்கின்றன.

1.இன்றும் கூட டில்லி முதலிய நகரங்களில் ராஜ்பாத் — இராஜ பாட்டை — ரோடுகள் உள்ளன. தமிழ் நாட்டின் பல நகரங்களில் ராஜ வீதிகள் உள .

2. இரண்டாவது  வான வெளிப் பாதைகள். இது ராமன், ராவணன், குபேரன் கைகளில் மாறி மாறி இருந்த விமானங்கள் போன பாதைகள் அல்லது பறவைப் பாதைகள் அல்லது ககன சித்தர் எனப்படும் ஆகாய மார்க்க சித்தர் பாதையாக இருக்கலாம். 250 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திரிகூட  ராசப்ப  கவிராயர் கூட  வான வழி — ககன சித்தர் பற்றிப் பாடுகிறார் திருக் குற்றாலக் குறவஞ்சியில்  .

3. மூன்றாவது சுவையான விஷயம் இன்றும் கூட ஆங்கிலத்தில் Path பாத் = பாதை என்ற பொருளில் புழங்குகிறது

மஹாநித்தேச என்னும் நூலில் மூங்கில் பாதை, எலிப் பாதை, பாலைவன மணல் பாதை, குகைப்பதை  முதலிய நீண்ட பட்டியல் இருக்கிறது ; சம்ஸ்க்ருத மொழியில் இல்லாத விஷயமே உலகில் கிடையாது.

சங்கு பத என்று பாணினி சொல்லும் பாதை , இப்பொழுது மலை ஏறுவோர் ஆணி அடித்து கயிறு கட்டி மலை மீது ஏறும் பாதையாகும் இதை அவருக்குப் பின்னர் வந்த புத்த ஜாதகக் கதைகள் விளக்குகின்றன.

காளிதாசர் ரகு வம்சத்தில் 13- 19-ல் உயரத்துக்கு ஏற்ப, 1.தேவ பத/சுர பத, 2.கண பத, 3.கக பத என்று வகைப் படுத்துகிறார்.

ஒரு உயரமான கோட்டையின் மதில் சுவர் மீதுள்ள பாதையை ‘தேவ பத’ என்று கௌடில்ய அர்த்த சாஸ்த்திரம் விளக்கும்.

உத்தர பத

இந்திய நகரங்களை காந்தாரம் / ஆப்கானிஸ்தானுடன் இது இணைத்தது .தசரதன் இறந்தவுடன் விரைவாக பரதன் அழைத்துவரப்பட்ட  பாதையை வால்மீகி விரிவாக வருணிக்கிறார். 

கங்கா நதி மீதுள்ள பாடலிபுரத்தத்தில் புறப்பட்ட கப்பல்கள் பருவக் காற்றைப் பயன்படுத்தி இலங்கைக்கு எப்படி விரைவாக வந்து போயின என்பதை மகா வம்சம் என்னும் இலங்கை வரலாற்று நூல் காட்டுகிறது.

தென்னகப் பாதை/ தக்ஷிண பத

இனி தென்னகப் பாதையைக் காண்போம் .

பணினிக்கும் முன்னால் வாழ்ந்த சொற்பிறப்பியலின் (Father of Etymology)  தந்தை – உலகின் முதல் சொற்பிறப்பியல்  நூலான நிருக்தத்தை எழுதிய யாஸ்கர் தென்னாட்டு வரதக்ஷிணை முறை பற்றி எழுதி இருக்கிறார். தென்னாட்டில் மட்டும் மன்னர்கள் பெண்களை விலை கொடுத்து வாங்குவார்கள். சேர, சோழ, பாண்டிய மன்னர் வரலாற்றிலும் சங்க இலக்கிய நூல்களிலும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு பெரும் செல்வத்தைக் கொடுத்து கெஞ்சசுவர். . அவரை ‘விஜாமாத்ரி’ என்று வேத இலக்கியம் பகரும் என்கிறார் யாஸ்கர் .

விஜா மாதேதி சஸ்வத் தக்ஷிண ஜாகாஹா க்ரீதா பதிம் ஆசக்ஷதே – நிருக்த 6-9.

மேலும் முதல் முதலில் பாணினீயத்தின் மீது / அஷ் டாத்யாயி மீது – குறிப்புகள் (Vartika)  வரைந்த காத்யாயனரை “இவன் தென்னாட்டுக்காரன்; ஆகையால் அந்த வழக்கத்தை ஆதரிப்பவன்” என்று பதஞ்சலி குற்றம் சாட்டுகிறார். தத்ஹிதத்தைப் போற்றுபவர் இவர் என்பார் .

ப்ரிய தத்ஹிதாஹா தாக்ஷிணாத்யாஹா

காத்யாயனர் கி .மு . நாலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

***

கடல் நடுவிலுள்ள தீவுகள், கடற்கரையை ஒட்டிய தீவுகள் பற்றிக் கதைக்கையில் கடக ரேகை, மகர ரேகைக்கு இடையேயுள்ள பெரு நிலப்பரப்பை அந்தரயண  தேச 8-4-25 என்று பாணினி

சொல்கிறார்.ஆகையால் குஜராத்தின் கட்ச்  பகுதியாகச் செல்லும் கடக்க ரேகைக்கு அப்பாலுள்ள தென்னாடு பற்றி அவர் அறிந்திருக்கிறார்.

கலிங்க தேசம், கோதாவரி மீதுள்ள அஸ்மாக தேசம் ஆகியவற்றை பெயர் சொல்லியே குறிப்பிடுகிறார்.

***

வைடூர்யம்

Cymophane அல்லது Cat’s eye வைடூர்யம் பற்றி 4-3-84ல் பாணினி சூத்திர வியாக்கியானம் கூறும் .

விதுர என்ற இடத்தில் காணப்படும் மணி வைடூர்யம்;

வாலவாய  என்ற மலையில் காணப்படும் கல்லை விதூர என்ற நகரத்தில் இழைத்து வைடூர்யம்  ஆக்கப்படுகிறது . வைடூர்யம் கல், கோயம்பு த்தூர் பகுதியில் வெட்டி எடுக்கப்பட்டு உலகின் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதை வெளிநாட்டார் எழுதிய குறிப்புகளில் காண முடிகிறது

பாணினி எழுதியது இலக்கண புஸ்தகம்.– அவர் சேர சோழ பாண்டிய நாடுகள் பற்றியோ அதிலிருந்து வரக்கூடிய சொற்பிரயோகம் பற்றியோ சம்ஸ்க்ருத இலக்கிய நூலில் பேச அவசியமில்லை .

மேலும் பர்ஜிட்டர் (Pargeter) வேறு ஒரு இடத்தில் எழுதியதை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். “இந்தியாவின் மிகப்பெரிய மரமான ஆலமரம் பற்றி ரிக் வேதம் சொல்லவில்லை. அது போலவே உப்பு, விந்திய மலை, பாரியாத்ர/ ஆரவல்லி மலைகள் பற்றி ரிக் வேதத்தில் குறிப்புகள் இல்லை. இதனால்  அவர்களுக்கு இவை பற்றி அறவே தெரியாது என்று கருதுவது மடைமை ஆகும்”

.

****

வால்மீகியும் புத்த மத ஜாதகக் கதைகளும் தென்னகம் பற்றி நிறையவே பேசுகின்றனர் அவற்றைத் தனியே காண்போம்.

tags – மிளகு, தேன் , மரீச, மது, பாணினி, அஜ பத,

–subham–

ஹிந்தி படப் பாட்டுகள் – 26 – மன்னா டே! (Post No.7921)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7921

Date uploaded in London – – – 4  May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாட்டுகள் – 26 – மன்னா டே!

R.Nanjappa

மன்னா டே

“Good wine needs no bush!” 

இது ஒரு ஆங்கிலப் பழமொழி. தரமுள்ள பொருளுக்கு விளம்பரம் தேவையில்லை; அதன் தரத்தினால் அதைத் தானாகத் தேடி வருவார்கள் என்பது பொருள். வேறு எங்கு எப்படி இருந்தாலும் திரை இசைத்துறையில் இப்படி நடக்கவில்லை.

கிஷோர் குமார் முறையான சங்கீதப் பயிற்சி இல்லாமல் வந்தவர். அவருடைய சங்கீத அறிவும் குரலும் இயற்கையாக அமைந்தவை. அவருடைய அண்ணன் நடிகர் அஷோக்குமார் ஒரு விஷயம் சொல்வார். கிஷோர் குழந்தையாக இருந்தபோது (இருவருக்கும் 18 வயது வித்தியாசம்) ஒரு நாள் மணிக்கணக்கில் அழுதுகொண்டே இருந்தானாம், அதனால் அவன் நுரையீரல் பலப்பட்டு நல்ல பலமான குரல் வந்து விட்டதாம்! நன்றாகப் பாடியும்  நிறைய சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. 20 வருஷங்கள் எப்படியோ ஓட்டினார். பின் இருபது வருஷங்கள் இவரை யாரும் நெருங்கமுடியவில்லை!

மன்னா டே முறையாகப் பயின்று நல்ல தேர்ச்சி பெற்று வந்தார். இவருக்குச் சரியான சந்தர்ப்பங்கள் இறுதிவரை கிடைக்கவில்லை. நமது திரைப் படங்களில் நல்ல பாடல்கள் கதாநாயகன்-நாயகி மேல்தான் வருகின்றன. மன்னா டேவை எந்த முன்னணி ஹீரோவும் முதல் சாய்ஸாக ஏற்றுக் கொள்ளவில்லை.அதனால் இவருக்கு அத்தகைய பாட்டுக்கள் அதிகம் இல்லை. ‘பஸந்த் பஹார்’ என்ற படத்தில் இவர் பாடிய நல்ல பாடல்கள் அமைந்தன. முன்னணி ஹீரோ தேவ் ஆனந்திற்கும் ராஜ் கபூருக்கும் இவர் பாடிய இரு பாடல்களைப் பார்ப்போம்.

ஹம் தம் ஸே கயே !

हम दम से गए  हमदम के लिए
हमदम की कसम  हमदम ना मिला
दम से गए   हमदम के लिए
हमदम की कसम   हमदम ना मिला  

hum dum se gaye, hamdam ke liye
hamdam ki kasam, hamdam na mila
 

நான் என் கடைசி மூச்சைக்கூட அன்பிற்காகப் பணயம் வைத்தேன்.

அன்பின் மேல் ஆணையிட்டேன், ஆனால் அத்தகைய அன்புள்ளம் கிடைக்கவில்லை!

फिर भी कहे जा   तू अपना अफसाना
साथी मिल जाएगा    ना रुक जाना
फिर भी कहे जा   तू अपना अफसाना
साथी मिल जाएगा   ना रुक जाना
दिल तेरी काली  अभी तो नहीं खिली
अभी वो मौसम ना मिला
दम से गए………

phir bhi kahe jaa tu apna afsaana

saathi mil jaayegaa na ruk jaana
o dil teri kali, abhi to nahin khili

abhi wo mausam na milaa

இருந்தாலும் நீ உன் கதையைச் சொல்லிச் செல்

சோர்ந்து எங்கும் நின்றுவிடாதேநிச்சயம் ஒரு துணை கிடைக்கும்!

உன் மனதாகிய மொட்டு இன்னும் மலரவில்லை எனில்

அதற்குரிய பருவம் இன்னும் வரவில்லை போலும்!

சோர்ந்து நின்றுவிடாதே!

दिल चमका  तू अपने दाग़ों को
रोशन किए जा  बुझे चरागों को
दिल चमका  तू अपने दाग़ों को
रोशन किए जा   बुझे चरागों को
तू गाये जा मेरी जान  ये दुनिया है यहाँ
किसी को मरहम ना मिला
दम से गए

ae dil chamka tu apne daaghon ko
roshan kiye jaa bujhe chiraaghon ko
tu gaaye jaa meri jaan, ye duniya hai yahaan

kisi ko marham naa milaa

மனதில் பட்ட கறைகள்அவை இருந்துவிட்டுப் போகட்டுமே!

அணைந்த விள்க்குகளை மீண்டும் ஒளிரச் செய்!

இந்த உலகம் யாருக்காவது அவர்களுடைய ஆசையை நிறைவேற்றி

சுகம் அளித்திருக்கிறதா?

அதனால், மனமே, (இதை உணர்ந்து) நீ உன் போக்கில் பாடிச் செல்!

मोती ना मिले   तो अश्क भरना है
दामन भरना  तेरी तमन्ना है
मोती ना मिले   तो अश्क भरना है
दामन भरना   तेरी तमन्ना है
तो प्यारे तुझे खुशी  अगर नहीं मिली
तो ग़म कुछ कम ना मिला
दम से गए

moti na miley to ashq bharnaa hai
daaman bharnaa teri tamannaa hai
to pyaare tujhe khushi, agar nahin mili

to gham kuchh kam naa milaa 

முத்து கிடைக்கவில்லையா? அதனால் என்ன?

கண்ணீரால் உன் பெட்டியை நிரப்பிக்கொள்!

எதையாவது வைத்து நிரப்பவேண்டுமென்பதுதானே உன் ஆசை?

அன்பனே! உனக்கு மகிழ்ச்சி கிட்டவில்லையெனில்,

துக்கத்திற்குக் குறைவா என்ன?

Song: Hum dum se gaye Film: Manzil 1960 Lyricist: Majrooh Sultanpuri

Music: S.D.Burman  Singer: Manna Dey

What a beautiful song with terrific orchestration. We were floored when we first watched this movie in 1965- the music felt so heavenly in the whole film. Burman broke the rule-one hero one singer consistently. In this film, Hemant Kumar, Rafi and Manna Dey sing for the hero-each one is a special situation. Please listen to the music of this movie- it is sublime. Manna Dey, like KIshore Kumar, could pronounce Hindi like a Hindian! This song is a gem.

The lyrics are superb, with a philosophical touch. The repetition of ‘Hum dum’ in the first line is so innovative. In Hindi, they call it (use of homonyms) yamaka alankar. (I do not know about Sanskrit.)

ஆஜா ஸனம்!

आजा सनम मधुर चांदनी में हमतुम मिले
तो वीराने में भी जाएगी बहार
झूमने लगेगा आसमान
कहता है दिल और मचलता है दिल
मोरे साजन ले चल मुझे तारों के पार
लगता नहीं है दिल यहाँ

ஆஜா ஸனம் மதுர் சாந்த்னீ மே ஹம் தும் மிலே

தோ வீரானே பீ ஜாயேகீ பஹார்

ஜூம்னே லகே ஆஸ்மான்

அன்பே! இந்த மதுர நிலவொளியில்  நாம் சந்தித்தால்

வீணான பூமியில் வசந்தம் வந்துவிடும்!

வானம் மின்மினுக்கும்!

கஹதா ஹை தில் ஔர் மசல்தா ஹை தில்

மோரே ஸாஜன் லே சல் முஜே தாரோ(ன்)கே பார்

லக்தா நஹீ ஹை தில் யஹா(ன்)

அன்பரே! மனம் நடனமிடுகிறது!

அந்தத் தாரகைகளுக்கும் அப்பால் இட்டுச் செல் என்கிறது!

இங்கே மனது பாவவில்லை!

भीगीभीगी रात में, दिल का दामन थाम ले
खोयी खोयी ज़िन्दगी, हर दम तेरा नाम ले
चाँद की बहकी नज़र, कह रही है प्यार कर
ज़िन्दगी है एक सफ़र, कौन जाने कल किधर
आजा सनम मधुर चांदनी

பீகீ பீகீ ராத் மே, தில் கா தாமன் தாம் லே

கோயீ கோயீ ஃஜிந்தகீ, ஹர்தம் தேரா நாம் லே

சாந்த் கீ பேஹதீ நஃஜர், கஹ ரஹீ ஹை ப்யார் கர்

ஃஜிந்தகீ ஹை ஏக் ஸஃபர், கௌன் ஜானே கல் கிதர்

ஆஜா ஸனம்..

நிலவொளியில் நனைந்த இந்த இரவில், மனதைப் பிடித்து நிறுத்திவை!

கழிந்து வரும் இந்த வாழ்க்கையில், ஒவ்வொரு மூச்சிலும் உன் பெயர் தான்!

சந்திரனின் போதை தரும் பார்வை அன்பு செய் என்று சொல்கிறது!

வாழ்க்கை ஒரு பயணம்,   

நாளை எங்கு இருப்போமோ, யாருக்குத் தெரியும்?

……

दिल ये चाहे आज तो, बादल बन उड़ जाऊँ मैं
दुल्हन जैसा आसमां, धरती पर ले आऊँ मैं
चाँद का डोला सजे, धूम तारों में मचे
झूम के दुनिया कहे, प्यार में दो दिल मिल
आजा सनम मधुर चांदनी

தில் யே சாஹே ஆஜ் தோபாதல் ப்ன் உட் ஜாவூ(ன்) மை

துல்ஹன் ஜைஸா ஆஸ்மான், தர்தீ பர் லே ஆவூ(ன்) மை

சாந்த் கா டோலா ஸஜே, தூம் தாரோ மே மசே

ஜூம் கே துனியா கஹே, ப்யர் மே தோ தில் மிலே

ஆஜா ஸனம்

மேகமாக மாறி உயரப் பறந்து சென்றுவிட வேண்டும் என இன்று மனம் சொல்கிறது!.. 

வானம் மணப்பெண் போல் ஜொலிக்கிறது! அதையும் கீழே கொண்டுவந்து விடுவேன்!

நிலவு பொங்கித் ததும்பும்! தாரகைகள் மின்னிப் பொலியும்!

இரண்டு உள்ளங்கள் அன்பில் இணைந்தன என்று உலகம்  மகிழ்ச்சியில் மிதக்கும்!

 Song: Aaja Sanam Film: Chori Chori 1956 Lyricist: Hasrat Jaipuri

Music: Shankar Jaikishan  Singers: Manna Dey & Lata Mangeshkar.

அருமையான டூயட். மிக, இனிய மெட்டு,. இப்படத்தில் இவர்கள் இருவரும் பாடிய மூன்று டூயட் இருக்கின்றன. மூன்றுமே சூப்பர்! இப்பாட்டிற்கு ஹஸ்ரத் ஜய்புரி எழுதிய இனிய கவிதை! See the images evoked! இப்பாட்டில் அக்கார்டியன் இசை அருமை.

இப்பாடலின் பின் ஒரு வரலாறு புதைந்திருக்கிறது!

இது ஏ.வி.எம், எடுத்த படம். It Happened One Night என்று 1934ல் வந்த ஹாலிவுட் படத்தின் தழுவல். இதன் பாட்டுப் பதிவிற்கு ஏ.வி.எம் செட்டியார் ஆஜரானார். ஹீரோ ராஜ் கபூருக்கு முகேஷ் பாடுவார் என எதிர்பார்த்தார். ஆனால் அங்கே  முகேஷ்  இல்லை! பாடப் போவது மன்னா டே என்றதும் செட்டியாருக்குக் கோபம் வந்துவிட்டது. பாட்டுப் பதிவு வேண்டாம் என்று சொல்லி எழுந்துவிட்டார், ஷங்கர் ஜெய்கிஷனும் ராஜ் கபூரும் அவரைச் சமாதானம் செய்ய மிகப் பாடுபட்டனர். [முகேஷ் அப்போது நடிப்பாசையால் பாடக்கூடாது என்ற சட்டச் சிக்கலில் மாட்டியிருந்தார்.] மன்னா டே முறையாக சங்கீதம் பயின்றவர், நல்ல குரல் வளம் கொண்டவர், பல நல்ல பாடல்களைப் பாடியிருக்கிறார்; அவர் பாடுவதைக் கேளூங்கள், பிடிக்கவில்லையென்றால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பலவாறு சொல்லிச் சமாதானம் செய்தனர். மன்னாடே பாடிய மூன்று டூயட்களும் மிகச் சிறப்பாக அமைந்தன, செட்டியாருக்குப் பிடித்துவிட்டது! நமக்கும் இந்த அரிய பொக்கிஷங்கள் கிடைத்தன!.

 [முதலில் வேண்டாம் என்று சொன்னதற்காக செட்டியார் வருத்தம் தெரிவித்தார்- பெரிய மனது!]

யார் பாடுவதையும் மன்னா டே பாடமுடியும்; மன்னா டே பாடுவதை வேறு எவரும் பாடமுடியாது என்று திரை இசை உலகில் பரவலாகப் பேசுவார்கள். 1966. வந்த ‘வக்த்’ படத்தில் வரும் “யே மேரீ ஃஜொஹ்ரா ஜபீன் ” என்ற பாட்டு [பால்ராஜ் ஸாஹ்னி மேல் பாடியது] படு ஹிட் ஆனது! இதை இன்றும் வட இந்தியாவில் கல்யாணங்களில் குஷியாகப் பாடுகின்றனர். 1973ல் வந்த ஃஜஞ்ஜீர் படத்தில் ப்ராணுக்காகப் பாடிய “யாரீ ஹை இமான் மேரா ” என்ற பாட்டும் மிகப் பெரிய ஹிட். இந்தப் பாடல்களை வேறு எவரும் பாடவே முடியாது!. இருந்தும் .இவருடைய தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றார்ப்போல் வாய்ப்புகள் வரவில்லை.

Good wine also needs a big push at times in this commercial world. And it needs an attractive bottle and packaging too!

tags — ஹிந்தி படப் பாட்டுகள் – 26 , மன்னா டே

–subham–

கத்தி முனை உன் பக்கம், கைப்பிடி எதிர்ப்பக்கம் இருக்கட்டும் (Post No.7920)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7920

Date uploaded in London – – – 4 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

கத்தி முனை உன் பக்கமும், கைப்பிடி எதிரிலிருப்பவரிடமும் இருக்க வேண்டும்!

ச.நாகராஜன்

ஸ்வாமி துரியானந்தர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சீடர்களுள் ஒருவர்.

அவரின் வாழ்க்கைச் சரிதம் அற்புதமான ஒன்று. சுவையான சம்பவங்கள் நிறைந்தது.

அதில் சில சம்பவங்களை இங்கு பார்க்கலாம்.

ஹரிநாத் சட்டோபாத்யாயா கல்கத்தாவின் வட பகுதியில் 1863, ஜனவரி 3-ஆம் தேதி பிறந்தார். அவருக்கு மூன்று வயது ஆகும் போது அவரின் தாயார் மறைந்தார். 12 வயதில் அவர் தந்தையை இழந்தார். பின்னர் அண்ணன், மன்னி ஆதரவில் வளர்ந்து வந்தார்.

பதிமூன்று அல்லது பதிநான்கு வயதிருக்கும், ஒரு நாள் அவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரை கல்கத்தாவில் தீனநாத் பாசுவின் வீட்டில் சந்தித்தார்.

அந்த தரிசனம் அவரை ஈர்த்து ராமகிருஷ்ண பரமஹம்ஸருடன்  ஒன்றச் செய்தது.

அவர் பின்னாளில் ஸ்வாமி துரியானந்தர் ஆனார்.

59 வயது வாழ்ந்த ஸ்வாமி துரியானந்தர் பல செயற்கரிய செயல்களை ஆற்றி கல்கத்தாவில் 21-7-1922 அன்று மாலை 6.45 மணிக்கு நிர்வாண நிலையை எய்தினார்.

அதற்கு முதல் நால் ஸ்வாமிஜி தனது அருகிலிருந்தவர்களிடம், “ நாளை தான் எனக்கு கடைசி தினம்” என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டே இருந்தார்.

அதன் படியே நடந்தது!

ஸ்வாமி விவேகானந்தர் மேற்கில் வெற்றி யாத்திரையை முடித்துக் கொண்டு 1897ஆம் வருட ஆரம்பத்தில் கல்கத்தா திரும்பினார். 1897, மே மாதம் முதல் நாள் அவர் ராமகிருஷ்ண மிஷனைத் துவங்கினார்.

ஸ்வாமி துரியானந்தர் விவேகானந்தருடன் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றார்.

தவ வாழ்க்கை வாழ்வதிலேயே அவருக்கு நாட்டம் இருந்தது.

ஒரு நாள், ஸ்வாமி விவேகானந்தர் துரியானந்தரை நோக்கி, “பரமஹம்ஸரின் பணிக்காக என் இறுதி வரை ஒவ்வொரு துளியாக என்னை நான் அர்ப்பணித்துக் கொண்டிருப்பதை நீ பார்க்கவில்லையா? அதை வெறுமனே நீ பார்த்துக்  கொண்டே இருப்பாயா? எனது சுமையைச் சற்று இறக்கி விட மாட்டாயா?” என்று கேட்டார்.

துரியானந்தர் மனம் உருகினார்.

விவேகானந்தர் கூறிய படி 1899இல் ஜூன் மாதம் அமெரிக்கா நோக்கிப் பயணமானார். அங்கு பெரும் பணி ஆற்றினார்.

அமெரிக்கா செல்லும் முன்னர் சகோதரி நிவேதிதையை நோக்கி துரியானந்தர், “எனக்கு மேலை நாட்டு பழக்க வழக்கங்கள் தெரியாதே! அது பற்றிக் கொஞ்சம் சொல்லக் கூடாதா” என்றார்.

நிவேதிதை அவரை நோக்கி, “ஐயனே! எப்பொழுதெல்லாம் நீங்கள் ஒருவருக்கு எதையேனும் கொடுக்க முற்படுகிறீர்களோ அப்போதெல்லாம் வசதியற்ற, விரும்பத்தகாத பக்கங்களை உங்கள் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும். கத்தியின் கூர்மையான முனை இருக்கும் பக்கத்தை உங்கள் கையில் வைத்துக் கொண்டு கைப்பிடியை எதிரிலிருப்பவரிடம் கொடுக்க வேண்டும், அவ்வளவு தான்!” என்றார்.

அதன்படியே அவர் அமெரிக்காவில் சீடர்களுக்கு ஒவ்வொரு கணமும் தன் வசதியை அறவே துறந்து விட்டு அவர்களின் முன்னேற்றத்திலேயே கண்ணும் கருத்தும் செலுத்தினார்.

சின்னச் சின்ன பழக்கங்களையும் அவர் மிருதுவாக அமெரிக்க சீடர்களுக்குச் சொல்லித் தந்தார்.

ஒரு முறை சான்பிரான்ஸிஸ்கோவில் ஒரு பெண்மணி அவரது வேதாந்த வகுப்புகளுக்கு ஆர்வமுடன் வந்து கொண்டிருந்தார். அந்தப் பெண்மணியின் கணவனுக்கோ இது சற்றும் பிடிக்கவில்லை.

இதை அறிந்து கொண்ட துரியானந்தர் அவரிடம், “ ஒரு மனைவியானவள் கணவனின் விருப்பப்படி அவருக்கு அடங்கி நடந்து கொள்ள வேண்டும். அடிக்கடி இங்கு வர வேண்டாம். இங்கு என்ன கற்றுக் கொள்கிறாய் என்பதை கணவனிடம் கூறு. தேவியை பிரார்த்தனை செய். எல்லாம் சரியாகும்” என்று அறிவுறுத்தினார்.

ஆனால் கணவனுக்கோ மனைவி துரியானந்தர் வகுப்புகளுக்கு வருவது பிடிக்கவே இல்லை.

ஒருநாள் துரியானந்தர் அந்தப் பெண்மணியிடம், “உன் கணவனை நான் பார்க்க வேண்டுமே” என்றார்.

“ஐயையோ! அது மட்டும் வேண்டாம்” என்று அவர் அலறினார்.

ஆனால் துரியானந்தர் ஒரு நாள் அவர் இல்லம் சென்றார். அவரது கணவனைப் பார்த்து கைகுலுக்கினார்.

என்ன ஆச்சரியம்! அந்த ஒரே கைகுலுக்கலுடன் கணவனின் வெறுப்பு மறைந்தது. மனைவி வழக்கம் போல வேதாந்த சொஸைடிக்கு வரலானார்.

ஒவ்வொருவரின் மனப்பக்குவம், பழக்க வழக்கத்திற்குத் தக்கபடி அறிவுரை கூறுவது அவர் பழக்கம்.

ஒரு பெண்மணிக்கு அதீத உளவியலில் ஆர்வம் அதிகம். அவர் ஆவிகளுடன் பேசும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்.

அவரது விசேஷ திறமை ஆடோமேடிக் ரைட்டிங் எனப்படும் ஆவி கைகளின் வழியே எழுதும் முறையில் விகசித்தது.

சிறிது நேரம் ஓய்வாக இருந்த பின்னர் அவர் கைகளில் இருக்கும் பென்சில் தானே பேப்பரின் மீது எழுத ஆரம்பிக்கும்.

ஒரு நாள் இதைப் பார்த்த துரியானந்தர் அவரிடம், “ என்ன முட்டாள்தனம்! பிசாசுகளின் கட்டுப்பாட்டில் நீ இருக்க விரும்புகிறாயா, என்ன? இந்த முட்டாள்தனத்தை அடியோடு விடு. நாம் விரும்புவது முக்தி! இந்த  உலகத்தை மட்டுமல்ல, எல்லா உலகங்களையும் கடந்து செல்ல நாம் விரும்புகிறோம். இறந்தவர்களுடன் தொடர்பு கொள்ள ஏன் நீ விரும்புகிறாய்? அவர்களை அமைதியுடன் இருக்க விடு. இதெல்லாம் மாயையே! மாயையை விடு. சுதந்திரமாக இரு” என்றார்.

அன்றுடன் அந்தப் பெண்மணி தன் ஆவி உலகத் தொடர்பை விட்டார்.

இன்னொரு பெண்மணி சமைக்கும் போது உப்பு சரியாகப் போட்டிருக்கிறோமா என்பதைச் சரி பார்க்க உணவில் ஒரு சிறிய பகுதியை எடுத்து சுவைத்துப் பார்த்தார்.

இதைக் கவனித்த துரியானந்தர் அவரிடம் சென்று, “சமைக்கும் போது உணவை ருசி பார்ப்பது  இந்தியாவில் வழக்கமே இல்லை. ஏனெனில் அது சமைக்கப்பட்டவுடன் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. நமது குடும்பத்திற்காக நாம் சமைக்கவில்லை. இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காகத் தான் நாம் சமைக்கிறோம். குளித்து, ஆடை அணிந்து இறைவனைத் துதித்த பின்னரே சமையலறைக்குள் நுழைவது இந்தியரின் பழக்கம்” என்றார்.

ஒவ்வொரு சிறு செயலையும் அவர் தன் மேலை நாட்டு சீடர்களுக்கு மிருதுவான குரலில் அன்பைக் குழைத்துக் கற்றுத் தந்தார்.

தினந்தோறும் காலை எழுந்தவுடன் பகவத்கீதையின் பதினெட்டு அத்தியாயங்களை அவர் ஓதுவார்; பின்னர் தான் காலைச் சிற்றுண்டியை எடுத்துக் கொள்வார்.

1909ஆம் ஆண்டு கங்கைக் கரையோரம் இருந்த நகோல் என்ற இடத்திற்கு அவர் சென்றார். 1910ஆம் ஆண்டில் சில மாதங்கள் வரை அங்கு இருந்தார். ஹரித்வாரின் கீழே சுமார் 60 மைல் தொலைவில் உள்ள கிராமம் நகோல். அதைச் சுற்றி ஒரே காடுகள். இந்தக் காட்டினுள் நுழைந்து சென்று தவம் செய்வது துரியானந்தரின் வழக்கம்.

ஒரு நாள் பாறை ஒன்றின் மீது அவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். கண் விழித்த போது ஜொலிஜொலித்த இரு கண்கள் அவரைப் பார்த்த வண்ணம் இருந்தன. பெரிய புலி ஒன்று அவருக்குச் சற்று தூரத்தில் இருந்தது. முதலில் திடுக்கிட்ட துரியானந்தர் அதைக் கூர்ந்து பார்த்தார். புலி அங்கிருந்து அகன்றது.

என்ன நடந்தது என்று கவலையுடன் கேட்டவர்களிடம் அவர் கூறினார் : “அது என்னைப் பார்த்தது. நானும் நகராமல் அதைப் பார்த்தேன். ஒரு தாவு தாவி அது ஓடி விட்டது” என்றார்.

அவரது வாழ்வில் நடந்த ஏராளமான சம்பவங்களை ஸ்வாமி ரிடஜானந்தா ஸ்வாமி துரியானந்தா என்ற நூலில் எழுதியுள்ளார்.

படித்தால் பரவசமூட்டும் நூல் இது!

Tags –  துரியானந்தர் , கத்தி முனை , உன் பக்கம்

***

PANINI’S AMAZING INFORMATION ON COINS (Post No.7919)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7919

Date uploaded in London – 3 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

HINDUS INVENTED COINS: IT IS IN RIG VEDA AND PANINI- Part 2

Please read the first part posted yesterday and then read the following:

Great Sanskrit scholars like Bhandarkars and Goldstucker place Panini in the 8th century BCE. His words about coins and currencies place him well before Kautilya, author of Artha sastra.

When one looks at Asthtadyayi as a grammar book and Artha sastra as an economics book , it becomes obvious that Panini lived before him. Panini mentioned coins which are not known to Kautilya. So hundreds of years must have elapsed between the two authors.

***

Panini mentioned gold coin ‘Niska’ in three sutras

5-1-20 .It used with purchase, pana/money and masha/measure

5-1-30 purchasing for 2 and 3 nishkams

5-2-119 about a person possessing 100 or 1000 niskas. Upanishads , Mahabarata and later jataka stories also talk about 100 Niskas.

Great Sanskrit scholar Dr D R Bhandarkar adds,

“20,000 paadas offered by king Janaka to a  most learned in Brahmana in the assembly of philosophers were gold coins related to Niskas”.

Panini also mentioned ‘paad’ coin in sutra 5-1-34

‘Pana – paada- maasha -satadyat’

Xxx

Suvarna Coin

In sutra 6-2-55 Panini  hinted at ‘Suvarna’ coin.

In sutra 4-3-153 gold coins are referred to according to commentators.

During Kushana period we came across gold coins with lord Shiva and the king. They were called Kedara and Denarius. Panini mentioned Kedara in 5-2-120

Dinar is used in all Muslim countries even today.

xxx

Satamana

5-1-27 says Satamaana- vimsatika – sahasra – vasanad- an

From Vedic index, it is understood that Satamana weighed 100 rattis.

xxx

Saana

Panini refers to a range of prices and taxes in ‘sanaas’

5-1-35, 5-1-36,7-3-17, 6-2-24, 7-3-10

Mahabharata mentioned a silver saana coin – one eight of a satamana — in Aranyaka parva/vana parva.

 It is calculated as 12 and a half rattis or 22-5 grams.

Xxx

Karsha pana

This word gave us two English words and Tamil words

Karsha = cash= kaasu in Tamil.

Pana = money = Panam in tamil .

Vanika /business man = Phoenicians = Vedic Paanis who were money minded .

Like Napoleon scholded the Britsih a country of businessmen’, Rig Vedic poets also criticised Phoenicians (Panis in RV)

Panini refers to karsha pana . it is punch marked silver coins. Numerous hoards have been found throughout India. They are dated from sixth century BCE .

Sutras 5-1-48; 5-1-34; 5-1-49; 5-1-21, 5-1-27, 5-1-29.

Arthasastra and Jataka stories have numerous references.

Jatakas use it as kahapana; Arthasatra uses it as karshapana and pana.

Word ‘pana’ is used hundreds of times by Kautilya .

It is amazing to see this 2700 year old word is used in Tamil even today; but not in Sangam tamil literature.

Kasu is also not used as coins in Sangam literature. May be later used in the sense of coins and currencies.

Amazing thing about currencies is they are used in units of 1/1 pana , ½  ardha, bhaga, ¼ paada , 1/8 dvi-masha, 1/16ardha masha, 1/32 ardha masha kakani, ardha kakani .

This 2, 4, 8, 16 annas (one rupee) were used till we introduced decimal coinage (100 paise- one rupee)

Xxx

Prati

Prati is used for karsha pana according to Katyayana and Sabha parva of Mahabharata and Nasik cave inscriptions

Xxx

Masha

Sutra 5-1-34

It was both a silver and copper coin. Manu mentioned it 8-135. Silver masha was 1/16th part of karsha pana weight 2 rattis= 3.6 grams

Actual specimens of raupya maasha are discovered in Takshasila

Xxx

Copper coins

Panini refers to  adhyardha masha in sutra 5-1-34.

I.e. One and a half masha . This is a copper coin.

Xxx

Kakani , ardha kakani

Panini does not mention these but Katyayana mentioned them. This may show the time elapsed between Panini and Katyayana

It came into use in post Paninian period. Jatakas mentioned it.

Gold washers in Indus/Sindhu river recovered lot of minute Kakani coins weighing 1-518, 1-132, 1-577, 1-22 grams.

Xxx

Vimsatika

A silver punch marked coin of 20 mashas is Vimsatika.

Actual specimens of vimsatikas are in Lucknow museum

Panini sutra 5-1-32

Trimsatikas are also mentioned by Panini in 5-1-24

Actual specimens are available in silver and copper.

Xxx

Rupa

‘Rupa’ means punch marked symbols , later identified with rupee/ rupya coinage.

A large number of symbols  are found stamped on ancient Karsha pana coins. They have been called punch marked coins and the Greek historian Quintius Curtius  rightly called them ‘signati argenti’

B Durga prasad illustrated about 564 such symbols from a large number of well preserved coins in 1934 according to V S Agrawala .

Panini mentioned rupa in 5-2-120

Ruupaad aahata prasamsayor -yap

Since he used it in singular, we know one symbol was punched at one time.

Rupa itself meant a coin in Mahasupina jataka.

Officers who examined coins and maintained standard are mentioned as Ruupadarsaka and Rupatarka are mentioned by Kautilya and Patanjali respectively.

The information on coinage helps us to fix the chronology authors like Panini, Katyayana and Kautilya. More research is required in this area.

ROMAN COINS
GREEK COINS

tags- Hindus, coins, invention, part-2, Panini, Niska, Satamana, Karshapana.

–SUBHAM–

நிஷ்கா தங்கக் காசுகள் முதல் அலெக்சாண்டர் நாணயம் வரை (Post.7918)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7918

Date uploaded in London – 3 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

உலகிலேயே முதல் முதலில் நாணயங்களை பயன்படுத்தியது இந்தியா. ஆனால்  அவை வட்ட வடிவான நாணயங்கள் அல்ல . நீளமாகவும் சதுரமாகவும், மெல்லிய பல வடிவம் கொண்ட தகடுகளாகவும் இருந்தன. வேத காலத்தில் இருந்தவை வட்ட வடிவத்தில் இருந்திருக்கலாம். ஆயினும் நமக்கு ஒரு மாதிரியும் கிடைக்காததால் ஊகிக்க மட்டுமே முடிகிறது பெண்களின் கழுத்தில் தங்கக் காசு மாலை அணிவதை இன்று வரை நாம் பார்க்கிறோம். வேதகாலத்தில் காலத்தில் நிஷ்கா (Nishka or Niska) என்பது கழுத்தில் அணியும் நெக்லசையும் நாணயங்களையும் குறிப்பதால் காசுகள் வட்டவடிவில் இருந்திருக்கும் எனத்தெரிகிறது. முந்திய கட்டுரைகளில் நிஸ்கா பற்றி கண்டோம். இதோ மேலும் சிலா சுவையான விவரங்கள்.

சிந்து-சரஸ்வதி நதி தீரத்தில் நாணயங்கள் கிடைத்ததாக செய்திகள் இல்லை. வேத காலம் என்பது சுமேரிய பாபிலோனிய நாகரீகங்களுக்கு முன்னர் என்பது பலரின் கருத்து. அப்படிப் பார்த்தோமானால் நாம்தான் உலகிற்கு கணிதத்தைக் கற்பித்தது போல நாணய முறையையும் கற்பித்தோம் என்று சொன்னால் தவறில்லை.

உலக நாணய என்சைக்ளோபீடியாக்களை எடுத்துக் படித்தால் அவை அனைத்தும் லிடியர்கள் அல்லது பைர்ஜியர்கள் (Lydians and Phyrgians) தான் முதலில் நாணயங்களை புழக்கத்திற்குக் கொண்டு வந்ததாகப் பகரும். ஏனெனில் அற்புதமான, அழாகான , ஏராளமான நாணயங்கள் துருக்கி (லிடியர் ), கிரேக்க தேசங்களிலிருந்து கிடைத்திருக்கின்றன. அவைகளின் வடிவங்கள் வியப்பூட்டும்! நம் நாட்டில் கிடைத்த வெள்ளி, தாமிரத் தகடுகள்  அவைகளை விட பழமையானது என்றாலும் கவர்ச்சி கிடையாது.

நாம் நாட்டு நாணயங்களில் பல வடிவ முத்திரைகள் குத்தப்பட்டதால் இவர்களை முத்திரைக் காசுகள் (Punch marked coins) என்று அழைக்கிறோம். இவைகளில் 564 வகையான முத்திரைகள் இருப்பதை 1934ம் ஆண்டிலேயே துர்கா பிரசாத் என்பவர் கட்டுரையாக எழுதியுள்ளார்.

***

இன்னொரு முக்கிய விஷயம் தமிழில் உள்ள நாணயம் தொடர்பான எல்லா சொற்களும் இன்று ஸம்ஸ்க்ருத சொற்களாகவே இருக்கின்றன. இது, வடக்கில் இருந்து இங்கே நாணய முறை வந்ததைக் காட்டுகிறது.

கார்ஷா பணம் என்பது காசு-பணம் ஆகியது. நாணயம் என்பதும் சம் ஸ்கிருத சொல்லே. சங்க இலக்கியத்தில் ‘காசு’ என்ற சொல் வட்ட வடிவ  பொற்காசுகளைக் குறித்ததை பல பாடலகளில் காணலாம். புலவர்களுக்கு  பொற்காசுகள் கொடுத்த செய்திகளையும் காணலாம். ஆயினும் இவைகள் நாணயம் என்பதற்கான சான்று இல்லை. மேலும் பண்ட மாற்று (barter trade)  வணிகம் பற்றி நிறைய குறிப்புகள் உள்ளன.

***

இந்துப் பெண்களுக்கு ஒரு பெரிய வியாதி உண்டு. இன்று வரை அது நீடிக்கிறது . தங்கத்தின் மீது பேராசை. அதில்கூட தவறில்லை. அதை மீண்டும் மீண்டும் உருக்கி புதுப்புது டிசைன்களில் அணியும் வியாதி இன்றுவரை தொடர்கிறது. இது பொற்கொல்லர்கள் தங்கத்தைத் திருடவும் (கூலி சேதாரம்) செய்கூலி வசூலிக்கவும் வகை செய்தது. இதனால் நம்முடைய தங்க நாணயங்கள் அனைத்தும் உருக்கப்பட்டு அழி க்கப்பட்டன.

வெளிநாட்டினர் கொள்ளை அடித்த அல்லது வெளிநாட்டுக்கு நம்மவர்களால் கடத்தப்பட்ட நாணயங்கள் — ஏராளமான தங்க நாணயங்கள் — இன்று பிரிட்டிஷ் மியூசியத்திலும் உலகின் ஏனைய கண்காட்சி சாலைகளிலும் தனியார் பொக்கிஷ அறைகளிலும் உள்ளன.

திருவனந்தபுரம் கோவிலில் கிடைத்த உலக மஹா பொக்கிஷம் பற்றி மேலும் தகவல் கிடைத்தால் புதிய நாணய செய்திகள் கிடைக்கலாம். தற்போது சிவபெருமான் உருவத்துடன் குஷாணர் வெளியிட்ட தங்கக் காசுகளும், குப்தர்கள் லெட்சுமி முதலிய படங்களுடன் வெளியிட்ட தங்க நாணயங்களும் காட்சியில் உள்ளன.

***

நிஷ்கா நாணய அதிசயம்

வேதங்கள், பிராஹ்மண நூல்களுக்குப் பின்னர் நமக்குக் கிடைக்கும் நாணயச் செய்திகள் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பாணினி எழுதிய ‘அஷ்டாத்யாயீ’ என்ற இலக்கண நூலில் கிடைக்கிறது. 5-1-19 முதல் 5-1-37 வரையுள்ள சூத்திரங்களில் இவர் நிறைய விஷயங்களை சொல்கிறார். இதையும் உரைகாரர் தரும் விஷயங்களையும் நாடு முழுதும் கிடைத்த நாணயங்களையும் வைத்து ஒரு என்சைக்ளோபீடியா தயாரிக்கலாம். அவ்வளவு விஷயங்கள் .

கௌடில்யர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் இல்லாத நாணயங்களை பாணினி குறிப்பிடுவதால் இவர் கி.மு 700 அல்லது அதற்கு முந்தியவர் என்பது உறுதியாகிறது. இவர் முதற்கொண்டு பதஞ்சலி வரையான கால கட்டத்தில் வாழ்ந்த 64 இலக்கண ஆசிரியர் பெயர்களை — அதாவது 2200 ஆண்டுகளுக்கு முந்திய 64 ஆசிரியர் பட்டியலை மாக்ஸ்முல்லர் வெளியிட்டதால் நமக்கு நாணய வரலாறும் கிடைக்கிறது. இவர்கள் காலத்தையும் நிர்ணயிக்க முடிகிறது.

ஏனெனில் பாணினி முதல் பதஞ்சலி வரையுள்ள கால கட்டத்தில் நந்தர்கள் புதிய நாணயக் காட்டுப்பாடுகளை விதித்தது, மௌரியர்கள் அதை மாற்றியது, பதஞ்சலி காலத்தில் புதிய நாணயங்கள் புழங்கியது— என்பதை எல்லாம் வைத்து கால வரிசைப்படுத்த முடிகிறது.

‘பண’, ‘பாத’, ‘மாஷ’ , ‘மாண’  என்பதை எல்லாம் விளக்குகையில் எத்தனை நிஸ்காக்களுக்கு ஒரு பொருள் விலைக்கு வாங்கப்பட்டது  என்பதை பாணினி விளக்குகிறார்.

‘த்வி நிஷ்கம் , த்ரி  நிஷ்கம்’ என்பார் .

5-1-20, 5-1-30

சத சஹராந்தாச்ச நிஷ்காத் – 5-2-119

நிஷ்க சஹஸ்ரிகா  என்பவர் – ஆயிரம் பொற்காசுகள் உடையவர் . இன்று நாம் லட்சாதிபதி , கோடீஸ்வரர் என்று சொல்லுவது போல அந்தக் காலத்தில் இது ஒரு செல்வந்தரைக் குறித்தது போலும். .மஹாபாரதம், பதஞ்சலியின் மஹா பாஷ்யம், காசிகா விருத்தி உரை முதலியன இதை உறுதி செய்கின்றன. உத்தாலக ஆருணி என்பவர் ஸ்வைதாயன என்பவருக்கு நிஷ்க அளித்ததை 3000 ஆண்டுப் பழமையுடைய சதபத பிராஹ்மணம் பகரும் .

புத்த ஜாதகக்  கதைகளிலும் நிறைய குறிப்புகள் உண்டு .

ஜனக மாமன்னன் நடத்திய அகில இந்திய தத்துவ  மாநாட்டிற்கு வந்தவர்களில் யார் மிகவும் கற்றறிந்த பிராஹ்மணனோ அவருக்கு 20,000 ‘பாத’ அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது . இது நிஷ்கா தங்க நாணயம் என்று டாக்டர் தி.ஆர். பண்டார்கர் எழுதுகிறார். பாணினி சூத்ரம் 5-1-34 காட்டும் ‘பண – பாத – மாஷா- சதாத்யாத்’ இதற்கு சான்று என்பார் ‘.பண’ என்பதுடன் வருவதால் இது வெறும் தங்கக் காசு அல்ல, நாணய வழக்கில் பயன்படுத்தப்பட்டது என்கிறார். சிலர் இதை வெள்ளிக்காசு என்றும் விளக்குவார்.

மனு ஸ்மிருதியில் 8-137 நிஸ்கா என்பது 4 சுவர்ணம் அல்லது 320 ரத்தி எடை உடையது என்று விளக்கப்படுகிறது . இதிலிருந்து ‘பாத’, ‘நிஷ்கா’ என்பது ஒரு ‘சுவர்ண’ என்று ஊகிக்கப்படுகிறது .

சுவர்ண

சுவர்ண என்பதை பாணினி நேரடியாகக் குறிப்பிடவில்லை. ‘ஹிரண்ய பரிமாணம் தனே’ 6-2-55 சூத்திரத்தில் மறைமுகமாக வருகிறது

கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் ‘சுவர்ண’ என்பது ‘கார்சா பணம்’ எடை உடையது = 80 குஞ்ச= 140 தானியம் என்பார் . ஆனால் உலகம் முழுதும் இன்றும்  கூட நாணயத்தின் எடையும், அளவும், அதிலுள்ள உலோக மதிப்பும் மாறிக்கொண்டே வருவதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

குஷானர் காலத்தில் ‘கேதார’, ‘தினாரியஸ்’  என்ற பெயர்களில் தங்க நாணயங்கள் வெளியிடப்பட்டன. . ‘கேதார’ என்ற சொல் 5-2-120ல் வருகிறது.

முத்திரை குத்தப்பட்ட பாணினி கால நாணயம் கிடைக்கவில்லையாயினும் ஏராளமான குறிப்புகள் வருவதால் உண்மையென்றே நம்புகிறோம்.

உறுதியான சான்றுகள் நம்மிடம் இல்லாததால் வெளிநாட்டினர் இதை ஏற்பது இல்லை. கிரேக்க, லிடிய நாணயங்கள் அவர்களுக்கு நல்ல சான்றுகளைத் தருகின்றன .

பதஞ்சலி எழுதிய மஹா பாஷ்யத்தில் தங்கம் கொடுத்து தானியம் வாங்கியது ,குதிரை வாங்கியது பற்றி உதாரணங்கள் தருகிறார். இது கரன்சி எனப்படும் நாணயங்களாக இருக்கலாம்

***

சுவர்ண மாஷக

இவை பற்றியும் இலக்கியத்தில், ஜாதகக் கதைகளில் மட்டும் தகவல் கிடைக்கிறது. தங்கம் வெள்ளி, தாமிரத்தில் இவை இருந்ததை அறிகிறோம்.

***

சதமான

சதமான எனப்படும் வெள்ளி நாணயம் 5-1-27 சூத்திரத்தில் வருகிறது.

‘சதமான விம்சதிக  சஹஸ்ர வசனாத்’

சதபத ப்ராஹ்மணத்தில் சதமானம் என்னும் தங்க நாணயம் பற்றியும் பேசப்படுகிறது.

சதமானம் என்பது 100 ரத்தி எடை கொண்டது.

ஒரு மனிதன் 100 ஆண்டுகள் வாழ்வதால் அவனுக்கு சதமானம்  வெள்ளி, தங்கம் தக்ஷிணை தரவேண்டும் என்று சதபத ப்ராஹ்மணம் கூறும் —

ரஜதம் ஹிரண்யம் தக்ஷிணா நானா ரூப தயா சதமானம் பவது

ஸதாயுர் வை புருஷாஹா  -13-4-2-10

இது 100 யூனிட் கொண்ட வெள்ளி . மனுவும் சதமான என்பது 10 தாரண அல்லது 320 ரத்தி எடை கொண்டது. என்பார்.

***

அலெக்ஸ்சாண்டர் நாணயம்

1953-ம் ஆண்டு புஸ்தகத்தில் டாக்டர் அக்ரவாலா எழுதுகிறார் –

தட்சசீலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாணயப் புதையலில்  2 அலெக்ஸ்சாண்டர் , ஒரு பிலிப் அரிதேயஸ் காசுடன் வெள்ளி முத்திரை நாணயமும் கிடைத்தன அதன் எடை 177 தானியம் என்று சார் ஜான் மார்ஷல் கூறுகிறார் . .

அங்கு கிடைத்த ‘சலாகா’ நாணயங்கள் வெள்ளி சதமான காசுகள் எனலாம். அவை 100 மான அல்லது குன்றிமணி எடையுடையவை. காத்யாயனர் காலம் வரை இது புழக்கத்தில் இருந்தது அவருடைய வார்த்திகா மூலமும் தெரிகிறது.

***

சாண

‘சாண’ வகை நாணயங்களையும் 5-1-35 எடுத்துக் காட்டாக தருகிறார் .

சரகரும் மருத்துவ நூலில் இதன் எடை  சுவர்ண அல்லது கார்ஷாவில் நாலில் ஒரு பகுதி , அதாவது 20 ரத்தி என்று காட்டுகிறார்.

வெள்ளி சதமானத்தில் எட்டில் ஒரு பகுதி என்று மஹாபாரத அரண்யக / வன பர்வத்தில் வருகிறது.

இந்தியாவின் கிழக்குப் பகுதியில் போட்ட வரிகளில் ‘சாண’ காசு வருவதை பிற்கால காசிகா உரை குறிப்பிடுகிறது .

***

கார்சா பண

சூத்திரம் 5-1-29ல் இதைக் காண்கிறோம். இது வேத காலத்தில் இல்லை.. ஜாதகக் கதைகளில் நிறைய அடிபடும் நாணயம் இது. ‘பிரதி’ என்ற புதிய பெயரில் மஹா பாரதம் குறிப்பிடும் .

இது பற்றிய முழு விவரங்களையும் எடை முதலியவற்றுடன் அக்ரவாலா ,’ பாணினி கால இந்தியா’ (INDIA AT THE TIME OF PANINI)  என்ற தனது நூலில் வெளியிட்டுள்ளார்.

***

மாஷா என்ற நாணயம் வெள்ளி, தாமிர நாணயம். வரிசைக் கிரமத்தில் ‘பண’, ‘பாத’ ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இது வரும்..

காத்யாயனர் குறிப்பிடும் காக்கணி , அர்த்த காக்கணி  ஆகியவற்றை கௌடில்யரும் குறிப்பிடுவதால் அவர்கள் காலம் நமக்கு தெரிகிறது . பாணினி காலத்தில் இவை இல்லை. ஆகையால் பாணினி மிகவும் முற்காலத்தில் வாழ்ந்ததும் அவருக்கும் காத்யாயனர்க்கும்

நல்ல கால இடைவெளி உண்டு என்பதும் தெளிவாகிறது.

ஒருவருடைய காலத்தைக் கணக்கிட எவ்வளவோ சான்றுகள் இருந்தும் நாணயங்கள்தான் மிகவும் துல்லியமாக காலத்தைக் காட்டுகின்றன.அவை காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றால் மிகையாகாது .

tags — பாணினி, நாணயம், நிஷ்கா, சதமான , காசு, கார்சா பண , பதஞ்சலி

–சுபம்–

ஹிந்தி படப் பாடல்கள் – 25 – கிழக்கும் மேற்கும்! (Post No.7917)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7917

Date uploaded in London – – – 3 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 25 – கிழக்கும் மேற்கும்!

R.Nanjappa

கிழக்கும் மேற்கும்!

பண்பாட்டு, தத்துவ இயல்களில் கீழை நாடுகளும் மேலை நாடுகளும் இரு துருவங்களாகக் கருதப்பட்டு வந்திருக்கின்றன. வாழும் கீழை நாகரிகத்திற்கு சிறந்த பிரதிநிதியாகத் திகழ்வது நமது பாரத நாடு. இவற்றினிடையே உள்ள ஒற்றுமை-வேற்றுமைகளைப் பற்றி ஸ்வாமி விவேகானந்தரும் ஸ்ரீ அரவிந்தரும் எழுதியிருக்கிறார்கள். டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனும்  East and West In Religion (1933), Eastern Religion and Western Thought (1939)  ஆகிய புத்தகங்களில் இவ்விஷயத்தை அலசியிருக்கிறார். இவற்றிற்கிடையே, இவற்றின் அணுகுமுறைகளில் வேறுபாடு இருந்தாலும், ஒன்றின் வழியில் மற்றதைப் புரிந்துகொள்வது சாத்தியமே என்று எழுதியிருக்கிறார்.இருந்தாலும் இவை  வெவ்வேறானவை என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. 

East is East, West is West, and never the twain shall meet என்ற வரி வேதவாக்காகக் கருதப்படுகிறது. 1889ல் இதை எழுதிய ருட்யார்ட் கிப்லிங் (Rudyard Kipling), இத்தோடு நிறுத்தவில்லை! அவர் எழுதியது:

Oh, East is East, and West is West, and never the twain shall meet,
Till Earth and Sky stand presently at God’s great Judgment Seat;
But there is neither East nor West, Border, nor Breed, nor Birth,
When two strong men stand face to face, though they come from the ends of the earth!

— lines 1-4. The Ballad of East and West, 1889

இந்த நீண்ட கவிதையில் ஒரு பட்டாணிய கொள்ளைக்காரனும் ஒரு கர்னலின் மகனும் எதிரிகளாகக் கிளம்புகிறார்கள், ஆனால் மற்றவரின் வீரத்தையும் பண்பையும் கண்டு நண்பர்களாகி விடுகிறார்கள். குணமெனும் குன்றேறி  நின்றவர்களுக்கு, கிழக்காவது, மேற்காவது!

நல்ல பண்புகளும் சிந்தனைகளும் உள்ள மக்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள். இத்தகையோரின் பழக்க வழக்கங்கள் வேறுபட்டாலும், ஒழுக்கம் ஒருதன்மைத்தாகவே இருக்கும். Goodness is Universal. அன்னியர் என்பதனாலேயே அவர்கள் விரும்பத் தகாதவர்களாகி விடமாட்டார்கள். மிலேச்சன் என்ற சொல்லை எப்பொழுது இந்தியன் கற்றானோ அப்பொழுதே அவன் மனம் குறுகிவிட்டது என்பார் ஸ்வாமி விவேகானந்தர்!

கிப்லிங், விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர் எழுதியபோது, இந்தியா “வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு பாழ்பட்டு” பிரிட்டனுக்கு அடிமையாக நின்றது.  அப்போது இந்தியர்களுக்கே தம் பெருமை  தெரியாதிருந்தபோது, அதை எடுத்துச்சொல்வது அவசியமாயிற்று. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா பல விஷயங்களில் மேலை நாட்டு முறைகளை கண்மூடிப்  பின்பற்றத் தொடங்கிவிட்டது! மேலை நாட்டைப் பின்பற்றுவதே நவீனமாவது என்று ஒரு எண்ணம் மனதில் ஆழப் பதிந்துவிட்டது! இன்று பள்ளிப் படிப்பு படித்தவர்களெல்லாம் நடையுடை பாவனைகளில் மேலை நாட்டவரே!

நமது கலை, பண்பாட்டு அம்சங்களில் பலவும் மேலை நாட்டு சிந்தனை முறைகளின் தாக்கத்திற்கு இலக்காகிவிட்டன. முக்கிய பொழுதுபோக்கு அம்சமான சினிமாவும் இதற்கு இலக்கானது ஆச்சரியமல்லவே! பலவிதத்திலும் ஹாலிவுட்டே உலக சினிமாவின் மெக்காவாகத் திகழ்கிறது! 

நமது சினிமா இசைவாணர்கள் மேலை நாட்டு சங்கீதத்திலிருந்து கடன் வாங்கியோ, கொள்ளையடித்தோ  [lifted, plagiarised] வந்திருக்கிறார்கள்! 1950 வாக்கில் கோவா இசைவாணர்கள் வந்ததும் chord, prelude, interlude, counter melody, elaborate orchestration, arrangement போன்ற பல மேலை இசை அம்சங்கள் ஹிந்தி திரையிசையில் கலந்து அதை மேன்மைப் படுத்தின! அதற்கும் முன்பிருத்தே நம் இசைஞர்கள் மேற்கத்திய இசையிலிருந்து எடுத்தாளவும், ஊக்கம் பெறவும் – Inspiration! – செய்தார்கள்!  ஹிந்தியில் நூற்றுக்கணக்கில் இப்படிப்பட்ட பாடல்கள் இருக்கின்றன .அதுவும் 70களுக்குப் பிறகு இது மிகவும் அதிகமாகிவிட்டது. (அசிங்கமும் ஆகிவிட்டது.)

 ஆனால் நாம் பொற்காலத்தில் இப்படி  நடந்த இரண்டு பாடல்களைப் பார்க்கலாம்.

தில் தில் ஸே மிலாகர் தேகோ

दिल, दिल से मिला कर देखो
नज़रों में समा कर देखो
अपना तो बना कर देखो
होती है मोहब्बत क्या
दिल, दिल से मिला कर देखो

தில் தில் ஸே மிலா கர் தேகோ

நஃஜ்ரோ(ன்) மே ஸமா கர் தேகோ

அப்னா தோ பனா கர் தேகோ

ஹோதி ஹை மொஹப்பத் க்யா

தில் தில் ஸே மிலா கர் தேகோ

மனதோடு மனது கலந்து பார்

கண்ணொடு கண் கலந்து பார்

உன்னவனாக ஏற்றுக்கொண்டு பார்

அன்பு மலர்கிறதா இல்லையா, பார்


हम प्यार में खो गये ऐसे
परदेस में राही जैसे
उल्फ़त का नशा जब हो ही गया
दामन को छुडा़यें कैसे
नज़रें तो उठाकर देखो
वो तीर चला कर देखो
अपना तो बना कर देखो
होती है मोहब्बत क्या
दिल, दिल ले मिला कर देखो

ஹம் ப்யார் மே கோ கயே ஐஸே

பர்தேஸ் மே ராஹீ ஜைஸே

உல்ஃபத் கா நஷா ஜப் ஹோ ஹீ கயா

தாமன் கோ சுடாயே(ன்கைஸே

நஃஜ்ரே தோ உடாகர் தேகோ

வோ தீர் சலா கர் தேகோ

அப்னா தோ பனா கர் தேகோ

ஹோதீ ஹை மொஹப்பத் க்யா

தில் தில் ஸே……

அன்னிய தேசத்தில் வழி தவறிய பயணி போல

நான் காதலில் தடுமாறுகிறேன்

காதல் என்னும் போதை ஏறியபின்

இடத்தை விட்டுப் போவது எப்படி?

பார்வையைத் தான் சற்று உயர்த்திப் பார்

அந்த பாணத்தைத் தான் செலுத்திப் பார்

உன்னவனாக ஏற்றுக்கொண்டு பார்

அன்பு மலர்கிறதா, இல்லையா பார்!

लहरा के हवा जब आई
फिर डसने लगी तन्हाई
दिल पहुँचा वहाँ दिलबर था जहाँ
लो बजने लगी शहनाई
दिल में तो बैठा कर देखो
कुछ पास तो आकर देखो
अपना तो बना कर देखो
होती है मोहब्बत क्या
दिल, दिल ले मिला कर देखो  

லஹரா கே ஹவா ஜப் ஆயீ

ஃபிர் டஸ்னே லகீ தன்ஹாயீ

தில் பஹுஞ்சா வஹா(ன்) தில்பர் தா ஜஹா(ன்)

லோ பஜ்னே லகீ ஷஹனாயீ

தில் மே தோ பைடாகர் தேகோ

குச் பாஸ் தோ ஆகர் தேகோ

அப்னா தோ பனாகர் தேகோ

ஹோதீ ஹை முஹப்பத் க்யா

தில் தில் ஸே மிலா கர் தேகோ

தென்றல் வீசத் தொடங்கியதும்

தனிமை வாட்டத் தொடங்கியது!

காதலி இருந்த இடத்திற்கே மனது சென்று விட்டது!

பின் மனது கீதமிசைக்கத் தொடங்கி விட்டது!

மனதில் அமர்த்தித் தான் பார்

சற்று அருகில் வந்து தான் பார்

உன்னவனாக எண்ணித் தான் பார்

அன்பு மலர்கிறதா இல்லையா, பார்!

Song: Dil dil se milakar dekho  Film: Mem Sahib Lyricist: Rajinder Krishan

Music: Madan Mohan  Singer: Kishore Kumar [ There is another version with different lyrics sung by Asha Bhonsle.]

எளிய இனிய பாடல், ‘லைட் மூடில்பாடப்பட்டது.

இது 1934ல்  வெளிவந்த Isle of Capri  என்ற பிரபல பாட்டின் மெட்டில் அமைந்தது, இதை பின்னர்

பிரபல ஹாலிவுட் பாடகர்நடிகர் ஃப்ராங்க் ஸினாத்ரா (Frank Sinatra), டீன் மார்டின் (Dean Martin), Bing Crosby இன்னும் பலர் பாடினார்கள்

There is even a nice video clip of Dean Martin singing this song  (dino4ever) In the lyrics, there is a line: “Lady, I’m a rover,

Can you spare a sweet word of love?” which is the theme of this song . But the original song ends differently. It is charming in its own way.

கிஷோரின் குரலைக் கேளுங்கள்! எந்த ஹாலிவுட், கீலிவுட்டும் கிட்ட நெருங்க முடியாது. மதன் மோஹன் மெட்டில் இனிமை அதிகம், கனம் அதிகம். பின்னணி முற்றிலும் வேறு! நம்மை ஆடவைக்கும் இசை!

தண்டீ ஹவா

ठंडी हवा ये चांदनी सुहानी
मेरे दिल सुना कोई कहानी
लम्बी सी एक डगर है जिंदगानी
मेरे दिल सुना कोई कहानी

தண்டீ ஹவா யே சாந்த்னீ ஸுஹானீ

யே மேரே தில் ஸுனா கோயீ கஹானீ

லம்பீ ஸீ ஏக் டகர் ஹை ஃஜிந்தகானீ

யே மேரே தில் ஸுனா கோயீ கஹானீ

இந்தத் தென்றல், இந்த நிலவொளிஆஹா, என்ன அழகு

மனமே, எனக்கு ஏதாவது கதை சொல்!

வாழ்க்கை நீண்ட  ஒரு பாதை

மனமே, எனக்கு ஏதாவது கதை சொல்!

सारे हसीं नज़ारे, सपनो में खो गये
सर रख के आसमां पे परबत भी सो गये
मेरे दिल तू सुना कोई ऐसी दास्ताँ
जिसको सुनकर मिले चैन मुझे मेरी जान
मंज़िल है अनजानी

ஸாரே ஹஸீன் நஜாரே ஸப்னோ மே கோகயே

ஸர் ரக்கே ஆஸ்மா(ன்) பே பர்பத் பீ ஸோ கயே

மேரே தில் தூ ஸுனா கோயீ ஐஸீ தாஸ்தா(ன்)

ஜிஸ்கோ ஸுன் கர் மிலே சைன் முஜே மேரீ ஜான்

மன்ஃஜில் ஹை அன்ஜானி

இந்த அழகிய காட்சிகள்எல்லாம் கனவில் மூழ்கிவிட்டன!

இந்த பர்வதமும் பார்வானின் மடியில் தலைவைத்து உறங்கிவிட்டது!

மனமே நீ எனக்கு ஒரு கதை சொல்

அதைக்கேட்டு  நான் சாந்தி அடைய வேண்டும்!

நமது இறுதி லட்சியம் தெரியாதே!

ऐसे मैं चल रहा हूँ, पेड़ों की छाँव में
जैसे कोई सितारा, बादल के गाँव में
मेरे दिल तू सुना कोई ऐसी दास्ता

जिसको सुनकर मिले चैन मुझे मेरी जान
मंज़िल है अनजानी

ஐஸே மை  சல் ரஹா ஹூன் பேடோ(ன்) கீ சாவ்(ன்) மே

ஜைஸே கோயீ ஸிதாரா, பாதல் கே காவ்(ன்) மே

மேரே தில் தூ ஸுனா கோயீ ஐஸீ தாஸ்தா(ன்)

ஜிஸ்கோ ஸுன் கர் மிலே சைன் முஜே மேரீ ஜான்

மன்ஃஜில் ஹை அன்ஜானீ

மரங்களின் நிழலில் நான் நடந்து போகிறேன்

ஏதோ நட்சத்திரம் மேகங்களின் ஊரில் நடப்பது போலிருக்கிறது!

மனமே, கேட்டால்  சாந்தி  பெறவேண்டும்அப்படி ஒரு கதை சொல்!

நாம் போகுமிடம் தெரியாதே!

थोड़ी सी रात बीती, थोड़ी सी रह गयी
खामोश रुत जाने, क्या बात कह गयी
मेरे दिल तू सुना कोई ऐसी दास्ताँ
जिसको सुनकर मिले चैन मुझे मेरी जान
मंज़िल है अनजानी

தோடீ ஸி ராத் பீதி, தோடீ ஸி ரஹ் கயீ

காமோஷ் ருத் ஜானே, க்யா பாத்  கஹ் கயீ

மேரே தில் தூ ஸுனா கோயீ ஐஸீ தாஸ்தா(ன்)

ஜிஸ்கோ ஸுன் கர் மிலே சைன் முஜே மேரீ ஜான்

மன்ஃஜில் ஹை அன்ஜானீ

இரவு சிறிது கழிந்து விட்டது, இன்னும் சிறிது இருக்கிறது

இந்த பருவம்மவுனமாக எதையோ சொல்லிச் சென்றதே!

மனமே எதாவது ஒரு கதை சொல்

அதைக்கேட்டு சாந்தி பெறவேண்டும்.

நாம் சென்று அடையவேண்டிய இடம் தெரியாதே!

Song: Thandi hawa ye chandni suhani Film: Jhumroo 1961

Lyricist: Majrooh Sultanpuri

Music & Singer: Kishore Kumar.

எத்தனை அருமையான பாடல்! என்ன  அழகான கவிதை! மலை வானத்தில்  தலைவைத்து உறங்கிவிட்டதுஎத்தனை அழகிய கற்பனை!

இது Julius La Rosa பாடிய DOMANI 1955 என்ற பாட்டின் மெட்டில் அமைந்தது. மிக அழகிய பாடல்ஜூலியஸ் ரோஸா நன்றாகவே பாடியிருக்கிறார். கிஷோர் குமார் அனேகமாக முழுதும் ஒரிஜினல் மெட்டையே தொடர்கிறார். அவரது குரல் வளம் பாட்டிற்கு மெருகூட்டுகிறது. தனக்கேயுள்ள சில முத்திரைகளையும் பதித்திருக்கிறார். இரவல் மெட்டுதான், ஆனால் எங்கோ இட்டுச் சென்று விட்டார்!

Kishore has not just lifted the tune, but uplifted the song!

இரண்டு பாடல்களுமே இறுதி அமைப்பில் இந்திய இசை போலவே தெரிகின்றன. பண்டிதர்கள் இவற்றுக்கும் ராகம் சொல்ல முடியும்எல்லாம் அடிப்படையில் ஸ்வரம் தான்! மதுரை மணி ஐயர் ஸ்வரத்தைஇங்கிலிஷ் நோட்என்று பாடுவாரே!

சமீப காலத்தில் மரபு இசை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு தோற்றுவித்த படம் தெலுங்கில் வந்தசங்கராபரணம்“. அதில் இந்தியமேற்கத்திய இசையின் ஒருமைப்பாட்டைப் பற்றி ஒரு சிறிய டயலாக் வரும்.

மேலை நாட்டு அம்சங்களை எடுத்துக்கொள்வது தவறில்லை. எதை, எப்போது, எவ்வளவு, எப்படிஇதில் தான் நமது திறமையையும் பண்பாட்டுப் பிடிப்பையும் காட்டவேண்டும்!

வாழ்க்கை நீண்ட பயணம், வாருங்கள் பாடிச் சிரித்துச் செல்வோம் என்ற பொருளில் ஷகீல் பதாயுனியும்  ஒரு பாட்டில் எழுதியிருக்கிறார்:

लम्बे हैं जीवन के रस्ते –  आओ चले हम गाते हँसते 

லம்பே ஹை ஜீவன் கே ரஸ்தேஆவோ சலே ஹம் காதே ஹஸ்தே!

இப்படிக் கிழக்கும் மேற்கும் இசையில் இணைந்தால் நல்லது தானே! நாமும் டாக்டர் .சிதம்பரநாதன் செட்டியாருடன் சேர்ந்து சொல்லலாம்:

மேல் நாடு வேறு, கீழ் நாடு வேறு-இரண்டும் சேரின் பேறு!

tags – ஹிந்தி படப் பாடல்கள் – 25 , கிழக்கு, மேற்கு,

***

கொரானா போன்ற வைரஸ் வராமல் இருக்க ஹிந்து தத்துவம் தேவை! (Post No.7916)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7916

Date uploaded in London – – – 3 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

கொரானா போன்ற வைரஸ் வராமல் இருக்க ஹிந்து தத்துவம் தேவை!

ச.நாகராஜன்

கொரானா வைரஸ் சீனாவின் லாபரட்டரியில் உருவாக்கப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட பல தலைவர்களும் நம்புகின்றனர்.

வட கொரியா ஹைட்ரஜன் குண்டு தயாராக இருக்கிறது என்று அடிக்கடி மிரட்டுவது வழக்கமாகி விட்டது.

பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் அருமையாகச் சொன்னார் : மூன்றாவது உலக மகா யுத்தம் என்று ஒன்று ஏற்பட்டால் இனி மக்கள் ஒருவருக்கொருவர் பழைய கால முறைப்படி கம்பு, கல் கொண்டு தான் யுத்தம் செய்வர் என்று. ஆம், உலகம் நாசமடைந்து கற்காலத்திற்குத் திரும்பி விடுவோம்.

இந்தச் சூழ்நிலையில் ஆர்னால்ட் டாய்ன்பி சொன்னது போல உலகைக் காப்பாற்ற ஒரே வழி ஹிந்து மதக் கொள்கைகள் தாம்!

அது என்ன ஹிந்து மதக் கொள்கை? சர்வே ஜனா சுகினோ பவந்து!

எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்.

லோகாஸ் ஸமஸ்தா சுகினோ பவந்து!  அனைத்து உலகங்களும் சுகத்துடன் இருக்க வேண்டும்.

வரலாறைப் புரட்டிப் பார்ப்போம்.

ஒரு முறை கனௌஜ் மன்னன் வாரணாசி மீது போர் தொடுத்தான். அப்போது அவனது படையைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஆகாயத்தில் பறக்கும் சாதனம் ஒன்றைச் செய்தனர். (இன்றைய விமானம் அல்லது ட்ரோன் போன்ற ஒன்று). அதில் சிறிய தீக்குண்டுகளை ஏற்றி அனுப்பி வாரணாசி மீது பொழியலாம் என்பது அவர்கள் திட்டம்.

அவர்களின் குரு இளைஞர்களின் சாதனத்தைப் பார்த்துத் திடுக்கிட்டார். சாமான்ய ஜனங்களின் மீதல்லவா இவை விழும்! போருக்குச் சம்பந்தமே இல்லாத அவர்களைக் கொல்வது என்ன நியாயம் என்று கேட்டார். அவர்களுக்கு ஹிந்து மதத்தின் உயர் கொள்கைகளை விளக்கினார். அத்தோடு விட்டு விடாமல் அந்த பறக்கும் சாதனத்தை உடைத்துப் போட்டார்.

கிரேக்க வரலாற்று ஆசிரியனான ஸ்ட்ராபோ (Strapo) சரியாகத் தான் சொன்னார் இப்படி : “ஹிந்து சட்டங்கள் அனைவரின் நலத்திற்குமானவை. அது எப்படியெனில் ஒரு விஷத்தைக் கண்டுபிடித்தவன் அதற்கு மாற்று மருந்தையும் அதைக் கண்டுபிடித்த அதே சமயம் கண்டுபிடிக்கவில்லை எனில் அவனுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும்” என்று அது சொல்கிறது.

“Ultimate good of all is the goal of Hindu laws; so much so, that the inventor of a poison is to be put to death, unless he can invent an antidote at the same time.”

சாஸ்திரம் கூறுவது இதைத் தான் :-

நத்வேகஸ்யாபராதேன ப்ரசங்காத் வஹவோ ஹதா: |

நாயம் மார்கோ ஹி சாதூனாம் த்ருஷ்டிகேஷானுவசித்தநாம் ||

அர்ஜுனன் மஹாபாரதப் போரில் எந்த வித கஷ்டமான சூழ்நிலையிலும் பாசுபாதாஸ்திரத்தை விட அனுமதிக்கப்படவில்லை.

விஞ்ஞான வளர்ச்சியில் உயிரியல் ஆயுதங்கள், ஹைட்ரஜன் குண்டுகள், அணுகுண்டுகள் விஷப் புகைகள் என அபாயகரமான ஆயுதங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

சீனத் தலைமை, வடகொரியத் தலைமை போன்ற விஷமத்தனமான தலைமை என்னவெல்லாம் செய்யும் என்பது கற்பனைக்கும் அப்பாற்பட்ட பயங்கரம்!

ஆகவே தீவிரவாதம், மதவாதம் ஆகியவை இல்லாத, அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற அடிப்படையைக் கொண்ட ஹிந்து தத்துவங்களை, இன்றைய மற்றும் நாளைய உலகிற்கான தேவை என்பதை அடித்துச் சொல்லலாம், இல்லையா?

tags — கொரானா, வைரஸ், ஹிந்து தத்துவம்

***

SWAMI CROSSWORD 252020 (Post No.7915)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7915

Date uploaded in London – 2 May  2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ACROSS

1.–8 letters– Woman who laughed at Duryodhana and suffered.

6. –6–the leaves of this tree are given to cows in south India

8. – -4–the region/ desa ruled by Karna of Mahabharata

9. – 5–philosopher cum sage in Brhad Aranyaka and Chandogya Upanishads

10.  –4– daughter or daughter in law or wife in Sanskrit

11. – 5–Vedic woman who got cured of her skin disease by biting soma plant

XXX

DOWN

1. -7 letters- Krishna shifted to this coastal city 800 miles away from Mathura

2. 7 –Kardama Muni’s daughter and Atri’s wife

3. – 4–piece of garment, falling cloth

4. — 5–seated, aged in  Sanskrit

5. — 6–fort, protected place

7.  — 5–under the control in Sanskrit and Tamil

–subham–

HINDUS INVENTED COINS: IT IS IN RIG VEDA AND PANINI- Part 1 (Post No.7914)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7914

Date uploaded in London – 2 May  2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

If you read encyclopaedias they would tell you that Lydians or Phyrgians of Turkey and Greece used coins for the first time. They are wrong. It is true that they have some of the oldest coins in their museums with heads and animals portrayed. An amazing variety of coins with beautiful drawings! If you turn the leaves of book ‘Encyclopedia of Coins’ you would be wonder struck when you see the pictures; well preserved very good specimens are available.

But we  have older coins as thin, small metal bits with five or six symbols punch marked on them from sixth or seventh century BCE. Our coins are very simple and not that attractive. We had beautiful gold coins in Rig Vedic time according to five foreign scholars who translated Rig Veda in European languages. But Hindu women have always been running after gold. There is nothing wrong in it. That is why I wrote scores of articles proving that India is the richest country in the world. I wrote those articles seven years ago. After my posts, Thiruvanathapuram (Kerala) Temple Treasures came to light. That one treasure trove would itself value more than all other treasures in the world!

Hindu women have a serious disease called ‘melting the gold’. They would always accumulate gold and never keep them intact. They would melt them and make new jewellery. Then again, they would melt them and make new jewellery.  Like Hindus updated all their scriptures except the Vedas they kept on doing it. And the biggest beneficiaries were goldsmiths which gave them an opportunity to take some gold and charge the women for remaking. Even today Hindu women have the disease.

To cut it short 99 % of our gold and silver coins were melted. One percent are in British Museum and other museums and private collections. Every time I enter British Museum in London,  I used to look at the Gupta gold coins displayed in the window cases. They have our biggest coin collection. Thanks to them they are still in the form of coins. In India they would have become necklaces.

Talking about neck—laces there is very interesting information in the oldest book in the world ‘Rig Veda’. According to Herman Jacobi and BG Tilak it is 6000 years old. According to Max muller and Wilson gang it is at least 4000 years old. The Rig Veda talks about Nishka. This is in the oldest portion of the Rig Veda. Nishka meant Necklaces and Nishka meant gold coins which were used as currency.

Vedic Index of Names and Subjects by AA Macdonell and A B  Keith has the following information-

“Niska is frequently mentioned in the Rig Veda and later denoting a gold ornament worn as is shown by the two epithets ‘ niska-kantha and niska-griva’ having a gold ornament on the neck.

A Niska of silver is mentioned in the Panchavimsa Brahmana.

As early as Rig Veda, traces are seen of the use of Niskas as a sort of currency, for a singer celebrates the receipt of a hundred Niskas and a hundred steeds.; he could hardly require the Niskas merely  for personal adornment. Later the use of Niskas as currency is quite clear.

RV -2-33-10; 8-47-15  etc.

AV 5-14-3; 7-99-1; 20-131-8

RV 5-19-3;

AV 5-17-14; 15-3

NISKA COINS – RV1-126-2; AV 20-127-3.

In addition, both of them give lot of references from Brahmanas, Srauta Sutras and Upanishads.

And in description of ‘Krsnala seeds, Mana, Satamana etc more details of coins and their weights are given. Before going in to Panini I would give my views-


***

My Comments

1.Umpteen words for gold, reference of golden necklaces and gold coins explode the views that Vedic Hindus were nomads. When you read 1000s of terms from Agriculture, Mathematics and Metallurgy in the Rig Veda, you will know about the foreign jokers and will have a good laugh.

2.Niska jewellery is nothing but coin necklace. Even today it is used by Hindu women as Kasu Malai (In Tamil meaning coin neclace)

3.The word used by Vedic priests in Blessing Mantras (Satamanam Bhavtu) is 100 coins. Satamanam is 100 or 100 fold. When someone gives a gift to the couple they recite Satamanam bhavatu with two fold meaning.

Let the present/gift multiply in hundreds.

Let you live for 100 years. Since Hindus invented the decimal system and value of Zero they use 100 every day in their Prayers. Brahmins repeat it at least seven times in ONE mantra (in the afternoon oblation Pasyema saradas satam……..)

4.Mana- meaning ‘big’, ‘measure’ is in Sumeria and Tamil literature.

5.The biggest number is found in Vedic literature. Mahavir, the 24th Tirtankara of Jain religion was a businessman and a great mathematician; he improved upon the Vedic numbers and Jain literature later than the Vedas, has bigger numbers.

6.All the words regarding MONEY in history are from Sanskrit . Tamils use all those words even today.

Karsha Panam= Kasu, Panam

Cash = Karsha (panam)

Money = Panam , Sanskrit word (M and V are interchangeable in ancient languages)

Phoenicians = Vaniks/businessmen (M and V are interchangeable in ancient languages)

Mana (Sumerian, Tamil and Sanskrit) – in Sata Mana, Pramana , Pari mana and other words mean measure, quantity, size, fold

Rupee/ Rupai = Rupa in Sanskrit and Uruva in Tamilized Sanskrit is the figure on the coin.

Now let us look at Panini :–

The numismatic data of the Ashtadhyayi  show that it is older than the Arthasasttra of Kautilya .

Kautilya wrote a book on economics and panini wrote a book on grammar; but Kautilya did not know about Panini’s Nishka ,Suvarna,

Saana and Satamana!!

Similarly Kautilya  does not know of the significant coin names Vimsatika and Trimstaka   mentioned in the Ashtadhyayi .

We have discovered the actual coins

**

Satamana must have been in circulation at the time of Panini. This coin is mentioned in Vedic literature. Satapata brahmana and two other brahmanas refer to Satamana. The chronological inference is that the period of Satamana currency was confined to few centuries around 8th century BCE. Kauiya lived around 4th century BCE.

Panini knew two types silver coins including Vimsatika ; Kautilya never mentioned it . Nandas of 5 century BCE made new rules regarding coinage. So Panini must have lived before or during Nandas.

My Comments-

 A book on economics did not even know the coinage mentioned by Panini. So, at least a few centuries must have elapsed between the two authors. More over 64 grammarians’ names are listed by Max Muller in the History of Sanskrit literature who lived between Yaska and Patanjali, a period of roughly 800 years. We did not know anything about their works. Panini himself mentioned ten of his predecessors. We couldn’t get a single book written by them.

His sutras about the first nakshatra/ star in the 27 stars of Hindu astronomy/astrology (Kartika and Dhanishta) also point out that he lived before the new system which placed Sravana and then Asvini.

If Panini had lived in 4th century BCE he would have mentioned Buddha or Mahavira. He never mentioned them by name or their creeds. Only guesses are made with certain words.

All these show that Panini lived in 8th century BCE as proved by Goldstucker and great Sanskrit scholars like Dr Bhandarkar.

tags –Panini, Kautilya, Coinage, Nishka, Karshapana, Satamana, Mana, part 1

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx