Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் அலைவரிசை ‘A’யில் காலைமலர் நிகழ்ச்சியில் தினமும் காலை 6.55க்கு 1-3-2020 முதல் 10-3-2020 முடிய ஒலிபரப்பப்பட்ட பத்து சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு உரைகளில்
எட்டாவது உரை
(8-3-2020 அன்று ஒலிபரப்பானது)
இமயமலை பனிப்பாறைகள் உருகும் அபாயம்!
PICTURES FROM FACEBOOK POSTS BY RADHIKA BALAKRISHNAN
நாளுக்கு நாள் உலகின் வெப்ப நிலை கூடிக் கொண்டே போவதால் இயற்கைச் செல்வம் அழிந்து வருவது கண்கூடு.
பெரும் அரணாக பாரதத்தின் வடக்கே அமையும் இமயமலையும் இதற்கு விதிவிலக்கல்ல.
வெப்பமயமாதலால் இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் கனத்தை இழந்து மெல்லியதாக ஆகி ஐஸை இழந்து வருகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. இமயமலையில் உள்ள 128 பனிப்பாறைகளும் நாளுக்கு நாள் உருகி தமது பழைய நிலையை இழந்து வருவதால் பெருமளவில் நீர் வளம் பாதிக்கப்படும் என்கிறது ஆய்வறிக்கை.
வெப்பமயமாதலுக்குக் காரணமாக அமையும் வாகன நச்சுப்புகையின் வெளிப்பாடு வளிமண்டலத்தில் கலப்பதைத் தடுப்பது நமது தலையாய கடமையாக அமைகிறது.
அண்டார்டிகாவின் மேற்குப் பகுதி கடற்கரை அருகில் உள்ள மிகப்பெரும் பனிப்பாறையும் பெரிய துளை ஏற்பட்டு உருகும் அபாயம் ஏற்பட்டிருப்பதை விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்தத் துளை மன்ஹாட்டன் (Manhattan) நகரின் பரப்பளவில் மூன்றில் இரண்டு பங்கு அளவு இருப்பதாக அவர்கள் கூறுவது திகைப்பையும் அச்சத்தையும் ஊட்டுகிறது.
இதே போல பல்வேறு கடற்கரைகளும் அழியும் அபாயமும் உருவாகிறது. வெப்பமயமாதலால் கடல் மட்டம் உயர்ந்து கடலோரப் பகுதிகள் அழியும் அபாயத்தை விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
கடற்கரையில் உள்ள மண்வளத்தைத் தோண்டி எடுத்து பெரும் கட்டிடங்களை அமைக்க முயல்வதன் மூலமும் கடற்கரைகள் அழிந்து வருகின்றன. அத்துடன் கடற்கரையில் ஒதுங்கும் கடல் ஆமைகளும் இதனால் அழிந்து வருகின்றன.
கடல் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யவும் கரையில் வந்து தங்கவும் இயலாத இந்த நிலையை மாற்றி கடற்கரைகள் காப்பாற்றப் பட்டால் அருகி வரும் கடல் ஆமைகள் இனத்தைக் காத்தவர்கள் ஆவோம்.
மிக நீண்ட கடலோரப் பகுதியைக் கொண்ட நமது நாட்டில் ஆங்காங்கே கடற்கரை ஓரப் பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருந்து மரங்களை வெட்டுவது மண்ணைத் தோண்டி எடுத்துச் செல்வது போன்ற சட்டத்திற்குப் புறம்பான செய்கைகள் இடம் பெறாமல் கண்காணித்து அரசின் நிர்வாகத்திற்கு உதவ முன் வரவேண்டும்; இதனால் இயற்கை வளம் பெரிதும் நல்முறையில் காக்கப்படும்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
Milk is white.
But not all that is white is milk ( a Sutra in Logic)
And my new Sutra/formula is
Greeks are Yavanas.
But not all Yavanas are Greeks!
A new book has come out on ‘Yonas and Yavanas’. (Helsinki, 2015). After reading it I have conclude that there are many types of Yavanas. At least four types- Indian Yavanas, Roman Yavanas, Greek Yavanas and Muslim Yavanas.
Ancient Indian Yavanas have nothing to do with Greece or Rome. Hari Vamsa and Bhgavatha Purana talk about a Black Yavana who was defeated by Lord Krishna. That Kala Yavana (black yavana) was in the middle of India, and not in north west India of India where we had real Greeks ruling for a few centuries following Alexander’s death.
Foreigners believed that all Yavanas mentioned in Sanskrit and Tamil literature were Greeks.
Sangam Tamil literature has at least six Yavana references. All of them refer to Italians, i.e. Romans.
Post Sangam Tamil epics Silappadikaram and Manimegalai refer to another six Yavanas. They are mixed.
Dr R Nagaswamy, in his book Roman Karur, show the Tamil references are about the Yavanas of Rome.
Thousands and thousands of Roman coins are discovered in India, particularly Tamil Nadu. The cross references in Roman works proved two things:-
1.Age of Sangam Tamil Literature- first three centuries of Common Era (CE).
2.The word ‘Yavana’ in Sangam literature is about Romans (Italians and not Greeks) and the trade between India and Roman Empire. tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
Surprise! Surprise! Yavanas are Shudras! Hindus!
But more important references are coming from Mahabharata and Ramayana; foreigners reject them or ignore them because they are not their cup of tea.
There are at least 45 references about Yavanas in Mahabharata spreading over 13 out of 18 Parvams.
There are at least five references in Ramayana spreading over two Cantos.
Kala Yavana slain by Lord Krishna is in Hari Vamsa, appendix of Maha Bharata, and Bhagavata Purana.
How come that we have so many references in these Hindu scriptures? Panini, who lived 2700 years ago, also refer to Yavanas. He lived 400 or 500 years before Alexander’s invasion.
All the above references have nothing to do with Greeks or Romans.
The fact of the matter is Yavanas originated in India and they slowly moved to Ionia. And Ionia is not Greece, it is a small part of Greece inside Turkey!
Foreigners who translated Sanskrit scriptures equated the word Yavanas with Ionians. This blunder led to utter confusion and great mis interpretation.
What is the proof? tamilandvedas.com, swamiindology.blogspot.com
Yavanas are shudras who violated the Vedic code according to Hindu epics.
They are Vedic people who migrated towards west.
Visvamitra, while still a king, tries to take the sage Vasistha’s divine cow Kamadhenu and then what happened is in Adi Parva of Mahabharata:–
“From her (the cow’s) arse she created the Pahlavas; The Sabharas and Sakas from her dung;
From her urine she created Yavanas, as she well high swooned with rage.
“From her foam she brought forth the Pundras, Kiratas, Dravidas, Simhalas, Barbaras, Daradas and Mlechas. And when she had brought forth the manifold hosts of barbarians/mlechas clad in their manifold armour , brandishing arms, she scattered with her furious troops that large enemy forces before Visvamitra’s eyes”.
–Adi parva 165-35, Mahabharata.
There are two beautiful thoughts running here, even if you think that it is later interpolation:-
The entire communities, covering the whole of Asia and Europe are from one source- that is Kamadhenu.
Secondly, they are all from Divine Cow; Cow’s arse is worshipped by Hindus every day. Men are not not supposed to show their buttock to Gods or Saints. They will take backward steps and then turn in temples and Mutts. And all mentioned here as urine, cow dung etc are eaten by Hindus as ‘Go mayam’ to purify themselves before every holy ceremony, but in very small quantities.
So we can interpret them as divine people. Vasudaiva Kudumbakam- entire humanity is one family – is a Hindu concept.
And in second Parvam/book of Mahabharata,
“King Kamala of Kamboja, and the mighty Kampana, who himself continued to terrify the Yavanas, as the thunderbolt wielder (Indra) terrified Kalakeya asuras, … Sumanas, king of Kiratas, Canura, over lord of the Yavanas, Devavrata, Bhoja, Bhimaratha…..”
2-4-20/22
Note all the names are in Sanskrit. Later Mura and Naraka are given as Yavana Kings’ names.
I am not going to reproduce all the 45 references here. It can be summarised as:-
Foreigners who translated Mahabharata interpreted ‘Yavana’ as Greeks and Mlechas as ‘barbarians’. In Tamil these people couldn’t do that damage because of cross references in Roman works. For instance Van Butinen translated Bhagadatta from Pragjyotisa (Assam) came with Greeks (yavanas) to see Yudhisthira. How can there be Greeks in Assam?
Even in Parvam 5, 6 we read “ the Yavanas marched towards Krukshetra and formed part of Kaurava army” etc. tamilandvedas.com, swamiindology.blogspot.com
Ramayana also talks about the creation of Yavana in the same way, ‘from Kamadhenu, the Divine Cow’.
‘Fallen Kshatrias’
‘The Puranic story of the of the origin of Yavanas et al. as fallen Kshatrias, explained as a punishment conferred upon them by Sagara after his victory and a vengeance for his father’ is found in Hari vamsa.
Many of them are 125 or 150 year old translations. The foreign Indologists thought that the ‘Greeks occupied and civilized the entire world’.
pictures are from Dr R Nagaswamy’s book Roman Karur.
My comments
Let me summarise it:–
1.The Yavana references are wrongly translated as Greeks .
2.Yavanas are a clan originated in North West India and then migrated to various places including Ionia. And Ionia was a tiny part of western coast of Turkey.
3.Hindu Shudra (fallen kshatrias) Yavanas occupied Turkey and Greece around 800 BCE.
4.Whoever looked like them from Europe also got the name ‘Yavanas’ slowly, which is confirmed by Sangam Tamil literature. tamilandvedas.com, swamiindology.blogspot.com
5.After the Muslim invasion of India in the eighth century all horse traders were called Yavanas. Later Muslim traders were called ‘Yonas’.
6.The Sanskrit and Tamil references to Yavana lamps, Yavana astrology, Yavana artchitects are not supported by neither Greek nor Roman works. They are from the Yavana clan of North Western India, They started moving westward and north westward under the Vedic people Turvavasu (part of Pancha Jannah of Rig Veda).
Probably some groups had specialised in astrology, construction work, air planes/flying machines in North West India.
Later Sanskrit literature and Tamil literature (Perunkatai) mentioned Yavana lamps, Yavana flying machines, Yavana astrology, Yavana architecture etc. We have no evidence for these things in ancient Greek or Roman writings.
7.Even Panini of 7th century BCE refers to ‘Yavanani’, feminine forms along with pure Hindu Sanskrit words Shivani, Bhavani, Varunani etc. tamilandvedas.com, swamiindology.blogspot.com
Later commentator added Yavanani lipi (script) which is proved by Asoka inscriptions of third century BCE.
8.From fourth century BCE, before Alexander invasion, Yavana got mixed up with Greeks and others. We see those words in Persian inscriptions or writings from Darius and Cyrus periods.
Scope for research
How Vedic Turvavasu (ref.later Puranas) is connected with Yavana clan?
How Ionians of Turkey became synonymous with Greeks? tamilandvedas.com, swamiindology.blogspot.com
How Tamils identified only Romans with Yavanas?
How Yavana became later ‘Yona’ synonymous with Arabic horse traders?
How come there was a black Yavana during Krishna’s time? Does it mean Yavanas are white skinned generally and there was one black person like Krishna?
Why early Yavanas have Sanskrit names?
Why there is no Greek astrology similar to Yavana astrology in Sanskrit?
Why the Greeks are not praising themselves as great architects of India or great constructors of flying machines or great astrologers? Does it show that all went to west from North West Indian Yavana regions? tamilandvedas.com, swamiindology.blogspot.com
Do the foreigners do ulta? Instead of saying from India to West they simply said West to India like fake Aryan Invasion theory?
No one has done any research in depth in these lines.
The present book ‘Yonas and Yavanas in Indian Literature’ by Klaus Karttunen, Finnish Oriental Society, Helsinki, 2015
and the book
Roman Karur by Dr R Nagaswamy, Brahad Prakashan, Madras, 1995
Will help future researchers.
tags – Yavanas, Yonas, Indian references, four types, Indian Yavanas, Greeks, Roman,
கவிஞர் சைலேந்திரா வாழ்வில் … குடியைக் கெடுக்கும் குடி!
R.Nanjappa
தத்துவம்- உண்மையும் போலியும்
பண்பாடு, தத்துவம் என்றெல்லாம் பேசும்போது கவனமாக இருக்கவேண்டும். பல கருத்துக்கள் மனதைக் கவர்வதாக இருக்கும், ஆனால் அவற்றில் அடிப்படை உண்மை எதுவும் இருக்காது.
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாம் கண்டதில்
என்பார் வள்ளுவர். அதேபோல்தான் தத்துவத்திலும். அசலும் உண்டு, போலியும் உண்டு.
முதலில் இந்த ‘தத்துவம்’ என்பது என்ன என்று தெரிந்துகொள்ளவேண்டும்.
தத்துவம் என்ன சொல்லுவாய்-தண்டபாணி
உந்தன் தத்துவம் என்ன சொல்லுவாய்
நித்தமும் நீராடி வெண்ணீர் அணிந்தவா உந்தன்
தத்துவம் என்ன சொல்லுவாய்
என்று சங்கரதாஸ் ஸ்வாமிகளின் பாடலை கே.பீ. சுந்தராம்பாள் அந்த நாட்களில் பாடுவார்,
இந்தச் சொல்லை ‘ஃபிலாஸஃபி’ என்பதன் தமிழாக்கமாகக் கொள்கிறோம். ஆனால் ஃபிலாஸபி என்றால் என்ன என்பதேசரியாகவிளங்காத நிலையில், அதன்தமிழாக்கம் எப்படிச் சரியாக இருக்கமுடியும்?
Philosophy may be taken to mean inquiry into the ultimate nature of things, or into the nature of Ultimate Reality.
ஆனால் இன்று இந்தப்பொருளில் இந்தச்சொல்லை மேலை நாட்டினர் பயன்படுத்துவதில்லை.இன்று இது எந்தத்துறையிலும் அதன்இயல்பைப் பற்றிய ஹேஷ்யமாகவே கருதப்படுகிறது.
Philosophy in the West is today is just speculation about the nature of things, and about the nature of language itself.
இந்தியமரபின் அணுகுமுறை வேறு. நமக்குஹேஷ்யங்களில் ஈடுபாடு இல்லை. “தத்” என்றால் ‘உள்ளது” என்று பொருள். That Which Is- Reality, Satyam. வேத காலம் தொட்டு இதில்தான் நம் நாட்டம்.“உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தேஓதும்வேதம்”என்பார் மஹாகவிபாரதியார்.
“உள்ளதலதுள்ளவுணர்வுள்ளதோ” என்பார் பகவான் ஸ்ரீ ரமணர். இந்த ஒரு பொருளைத்தான் ஞானிகள் பல பெயரிட்டு அழைக்கிறார்கள். “ஏகம் ஸத்-விப்ரா பஹுதா வதந்தி”.
தரிசனம்
இதை எப்படித் தெரிந்துகொள்வது? இது தான் ஞானிகள் நமக்குச் செய்யும் பெரிய உபகாரம். அவர்கள் தங்கள் ஞான சாதனை-தபஸின் வாயிலாக இதைஅனுபவத்தில் உணர்ந்து நமக்கும் உணர்த்துகின்றனர்.
இவர்களை நாம் ரிஷிகள் என்கிறோம். இவர்களே நம் மூதாதையர்கள். இவர்கள் கண்டஞானக்காட்சியே நமக்கு உண்மையைஅறிவிக்கிறது. ‘நாங்கள் இப்படிச் சாதனைசெய்து இதைக்கண்டோம், நீயும் சாதனை செய்து இதைஉணர்ந்துகொள்’ என்பதுவே ரிஷிகள் அருளிய உபனிஷதங்களின் உபதேசம்.
புறநானூற்றில் கணியன்பூங்குன்றனார் இதைத் தெளிவாகச் சொல்கிறார்:
திறவோர் காட்சி= மெய்ஞ்ஞானிகளின் காட்சி. மெய்யனுபவம். Insight. இதைநாம் “தரிசனம்” என்று சொல்வோம். நமக்கு இதுதான்ஃபிலாசஃபியே தவிர எந்த விதஹேஷ்யமும் அல்ல.
ஃபிலாஸஃபி என்ற பெயரில் கண்டகருத்துக்களும் உலாவருகின்றன. நான் எந்த ஃபிலாஸஃபியையும் நம்புவதில்லை என்பார் ஒருவர். இதுவும் ஒரு ஃபிலாஸபிதான் என்பதைஉணரமாட்டார்! கவர்ச்சியான வசனங்கள் உண்மைத்தத்துவமாகாது.
உண்மையான தத்துவம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும்.
Light giving and fruit bearing!
பாடல்களில் போலித் தத்துவம்
சிலபாடல்கள்மிக அருமையான மெட்டுக்களில் அமைந்து அருமையாகப் பாடப்பெற்றுக் கருத்தைக் கவர்கின்றன. சொற்கோர்வையும் அபாரம். அவை உண்மைபோலவே தெரியும்.உதாரணத்திற்கு 1956ல் வந்த“ஜாக்தே ரஹோ” Jagte Raho [விழித்திரு] என்ற படத்தில் வந்தஇந்த அதிரடி ஹிட் பாடலை எடுத்துக்கொள்வோம்.
ज़िंदगी ख़्वाब है ख़्वाब में झूठ क्या और भला सच है क्या ज़िंदगी ख़्वाब है ख़्वाब में झूठ क्या और भला सच है क्या
सब सच है ज़िन्दगी ख्वाब है
दिल ने हमसे जो कहा हमने वैसा ही किया दिल ने हमसे जो कहा हमने वैसा ही किया फ़िर कभी फ़ुरसत से सोचेंगे बुरा था या भला
ज़िन्दगी ख़्वाब है ख़्वाब में झूठ क्या और भला सच है क्या ज़िन्दगी ख़्वाब है
एक कतरा मय का जब पत्थर से होंठों पर पड़ा एक कतरा मय का जब पत्थर से होंठों पर पड़ा उसके सीने में भी दिल धड़का ये उसने भी कहा क्या
ज़िंदगी ख़्वाब है ख़्वाब में झूठ क्या और भला सच है क्या ज़िन्दगी ख़्वाब है
एक प्याली भर के मैंने गम के मारे दिल को दी एक प्याली भर के मैंने गम के मारे दिल को दी जहर ने मारा जहर को मुर्दे में फिर जान आ गयी
ज़िन्दगी ख़्वाब है ख़्वाब में झूठ क्या और भला सच है क्या है
இந்தக் கனவில்பொய் எது, உண்மைதான் எது? ( யாருக்குத் தெரியும்?)
எல்லாம் பொய்தான்!
என் மனம் சொல்லியபடியே எல்லாம் செய்தேன்
பின் ஒரு நாள் நிதானமாக யோசிப்போம்-
இதனால் வந்தது தீமையா, நன்மையா என்று!
வாழ்க்கை ஒரு கனவு…..
கள்ளின் ஒரு துளி-
அது கல் நெஞ்சன் ஒருவனின் உதட்டில் விழுந்தது!
அவன் இதயமும் துடிக்க ஆரம்பித்தது! அவனும் சொன்னான்-
என்ன? வாழ்க்கை ஒரு கனவு!
இதில் பொய் எது, உண்மை எது?
துன்பத்தில் துவண்ட ஒருவன்-
அவனுக்கு ஒரு கப் கள் ஊற்றிக் கொடுத்தேன்!
இந்த விஷம் அந்த விஷத்தை முறித்தது-
அந்தப் பிணத்திற்கும் உயிர் வந்து விட்டது!
வாழ்க்கை ஒரு கனவு.
இதில்பொய் எது, உண்மை எது-யாருக்குத் தெரியும்?
எல்லாம் பொய்!
வாழ்க்கை ஒரு கனவு!!
இது மிகவும் பிரபலமான பாடல். உலகம் கனவு என்ற கருத்தை பலரும் நம்புகிறார்கள். நமது வேதாந்ததத்திலும் இந்த உவமை வருகிறது. ஜாக்ரம். ஸ்வப்னம், ஸுஷுப்தி = விழிப்பு நிலை, கனவு நிலை, கனவற்ற தூக்கம் ஆகிய மூன்று நிலைகள் பேசப்படுகின்றன. நாம் தூக்கத்தில் கனவு காண்கிறோம். புதிய ஒரு உலகை மனது அங்கு ஸ்ருஷ்டிக்கிறது. தூக்கத்தில் அந்த நிலைக்கும் ஒரு உண்மைத் தன்மை இருக்கிறது. கனவில் பசித்தால் கனவு சோறுதான் பலிக்கும்! விழித்தெழுந்தால் கனவு நிலை உண்மையல்ல என்று உணர்கிறோம். ஆனால் கனவுகண்டவன் உண்மை!
ஞானிகள் உலகைத்தாண்டிய -உலகைஊடுருவி நிற்கும்உண்மையை உணர்ந்தவர்கள். அதனால் இவர்கள் உலக உணர்விலிருந்து “விழித்துக்”கொண்டவர்கள். இவர்களுக்கு,நமக்குத் தெரியும் உலகம் ஒரு கனவுபோல் தான் தெரியும்! இது பகவான் ரமணர் நமக்கு விளக்கியது. ஆனால் அதனால் உலகம் கனவு என்று எல்லோருக்குமாகச் சொல்லவில்லை! நாம் உடலை நிஜமெனக் கருதும் வரையில் இந்த உலகமும் நிஜம்தான்.
சரி, ஆதி சங்கரர் இந்த உலகம் மாயை என்று சொல்லவில்லையா என்று சிலர் கேட்பார்கள். முதலில் மாயை என்பது என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும்.உள்ளதை மாற்றிக்காட்டுவது மாயை[ மாயை= யா-மாthat not இருப்பதை மறைப்பது, இல்லாததை இருப்பதாகக் காட்டுவது. இது ஒரு திரிப்பே தவிர, பொய் இல்லை! சங்கரர் கருத்துப்படி, எது சாஸ்வதமோ அதுமட்டுமே உண்மை; ஒரு காலத்தில் இருந்து ஒரு காலத்தில் அழிவது சத்தியமல்ல. இந்த உலகம் ஸ்ருஷ்டியாகி, சில காலம் நிலைத்து நின்று, பிறகு அழிகிறது-தோன்றுவதெல்லாம் மறைகிறது. பின் இது எப்படி உண்மையாகும்? சங்கரரின் அளவுகோல் முற்றிலும் மாறுபட்டது. சங்கரர் இன்னொரு கருத்தும் சொல்கிறார். சத்தியம் இருவகைப்படும். ஒன்று நடைமுறையில் இருப்பது-வியவஹாரிக சத்யம்;, ஒன்று என்றும் இருப்பது- பரமார்த்திக சத்யம். சூரியன் தினமும் உதிக்கிறது மறைகிறது-இது குழந்தைக்கும் தெரியும்- நாம் பிரத்தியக்ஷமாகக் காண்பது. இது உண்மைதானே? அல்ல! விஞ்ஞானப்படி, சூரியன் உதிப்பதுமில்லை, மறைவதுமில்லை! பூமிதான் சுற்றுகிறது! ஆனாலும் நடமுறையில் சூரியன் சுற்றுவதைப் பொய் என்று சொல்வதில்லை. அது ஒரு நிலையில்-லெவலில்-சத்தியம்-அவ்வளவுதான். நிலையான “சத்தியம்” வேறு! எனவே சங்கரர் உலகைப் பொய் என்று சொல்லவில்லை. அதை ஒரு தோற்றம் என்று சொன்னார். நாம் கண்ணாடிக்குமுன் நின்றால் அதில் நம் பிம்பம் வருகிறது. இது உண்மையா, பொய்யா? அது தோற்றம், நிஜமல்ல. ஆனால் அது பொய்யல்ல!.
It is an appearance, illusion, not false. It is unreal, but not false!
எனவே, இங்கு கவிஉலகைக் கனவு, பொய் என்று சொல்வதெல்லாம் உண்மையான தத்துவம் அல்ல!
மேலும் இந்தப் பாடலைப் பாடுபவன் எந்த நிலையில் இருந்து பாடுகிறான்?அவன் சரக்கை உள்ளே தள்ளியிருக்கிறான். அதனால் பொன்மொழியாக உதிர்க்கிறான்.
When the ale is in, the wit is out!
இதில் கடைசி சரணத்தை எடுத்துக்கொள்வோம். கள் குடித்தால் கவலை, துன்பம் போய்விடுமா? போகாது என்றுதான் மருத்துவர்களும் மனோதத்துவ வாதிகளும் சொல்கிறார்கள். கள் ஓரளவு மனஇறுக்கத்தைக் குறைக்கிறது-ஆனால் அதனால் எந்தப் பிரச்சினையும் தீர்வதில்லை.உடல் நலம்தான் கெடுகிறது!
சில பாடல்களை- சில வரிகளை “அறம் விழுந்தது” என்று சொல்வார்கள். இந்தக் கடைசி சரணம் அப்படிப்பட்டது..
இந்த விஷயம் அந்த விஷத்தை அடித்துவிட்டது [ ஜஹர் நே மாராஜெஹர் கோ] என்று சொல்கிறார். இந்தக் கவிஞரின் வாழ்க்கையிலேயே நடந்தது என்ன? இதை எழுதியவர் கவிசைலேந்த்ரா- சிறந்த கவிஞர் . நல்ல மனிதர். இவர் “தீஸ்ரி கஸம்” என்று ஒரு படம் எடுத்தார். படு தோல்வி கண்டது. சொத்தெல்லாம் இழந்தார். வாங்கிய கடனைத் திருப்பித்தர இயலவில்லை. பாட்டிலுக்குத் தஞ்சமானார். இந்த விஷம் அந்த விஷத்தை அடிக்கவில்லை- ஆளையே அடித்துவிட்டது; விஷம் முறியவில்லை, விஷயமே முடிந்து விட்டது. கவிஞர் உயிர் நீத்தார்.
ஆகவே இந்தப்பாடலில் உள்ள கருத்துக்கள் ஒரு குடிகாரனின் சொல்லே தவிர, உண்மையான ஃபிலாசஃபி இல்லை. It is pseudo-philosophy. இதில் நெஞ்சை உலுக்கும் விஷயம் என்னவென்றால். கவிஞரின் மறைவுக்குப் பிறகு இந்தப் படத்திற்கு ஜனாதிபதி விருது கிடைத்தது, மறுபடி திரையிட்டபோது, சிறந்த கலையம்சங்கள் நிறைந்தபடமெனப் பாராட்டுதல்கள் பெற்றது!
உண்மையான தத்துவம் என்பது அப்போதைக்கு கருத்தைக் கவராமல் காலத்திற்கும் வழிகாட்டியாக இருக்கவேண்டும்.
மனம்போன போக்கெல்லாம் போகவேண்டாம் என்பார் ஔவையார். இங்கு கவிஞர் மனம் போன போக்கிலேயே போனேன் ( தில் நே ஹம்ஸே ஜோ கஹா, ஹம்னே வைஸா ஹீ கியா) என்கிறார்!
இது எத்தனை அபத்தம்? இது வழிகாட்டியாகுமா?
கபீரின் அழுகை!
இந்தப் பாட்டில் இந்த வரிகளுக்கு முன்பு கபீர்தாசரின் ஒரு கவிதை இடம் பெற்றிருக்கிறது. அதன் கருத்தைப் பார்ப்போம்.
ரங்கீ என்றால் நல்ல கலர் உள்ளது. நா-ரங்கீ என்றால் கலர் இல்லாதது. ஆனால் நாரங்கீ என்பது ஆரஞ்சுப் பழத்தின் ஹிந்திப் பெயர். நல்ல வண்ணமுள்ள ஆரஞ்சுப் பழத்தை நாரங்கீ- கலர் இல்லாதது என்கிறார்கள்.
பாலை சுண்டக்காய்ச்சினால் வருவது கோவா- இதை ஹிந்தியில் கோயா என்பார்கள். ஆனால் கோயா என்றால் தொலைந்துபோய்விட்டது என்றும் பொருள்! எனவே பாலை இல்லாததாக்கி விட்டார்கள்!
சல்தீ என்றால் வண்டி- சல்= செல்வது இதை காடி என்பார்கள் ஹிந்தியில் ஆனால் கபீர் தாசர் இருந்த வட்டாரத்தில் இந்தச் சொல்லுக்கு ‘நிற்பது’ என்பதும் பொருள். ஆக, செல்லும் வண்டியை நிற்பது என்று சொல்கிறார்கள்.
இதையெல்லாம் பார்த்து கபீருக்கு அழுகை வருகிறது என்று பாடுகிறார்
கபீர்தாசர்!
உலகில் சில விஷயங்கள் தலைகீழாக இருக்கின்றன.இதை க்ருபானந்த வாரியார் அடிக்கடி சொல்லுவார். ஆண்டவன்- பித்தன்- செயல் இப்படித்தான் என்பார். இது நமக்குப் புரிவதில்லை என்பார்!
இங்கு வரும் தத்துவக் கருத்துக்களையும் பாருங்கள்! இவை மெய்யான தத்துவம்!
இந்தப் பாடல் மிக அருமையான பாடல். யூடியூபில் கேட்டு மகிழலாம்.
Song: Zindagi Kwab Hai ( Rangi Ko Narangi Kahe.) Film: Jagte Raho, 1956. Lyricist: Shailendra
Music: Salil Chaudhury Singer: Mukesh.
உலகம் நிஜமா, பொய்யா என்பதைக் கண்டோம், இது நல்லதா, கெட்டதா?
உலகமே இந்த இருகட்சிகளாகப் பிரிந்து நிற்கிறது! இதை அடுத்துப் பார்ப்போம்.
tags — ஹிந்தி படப் பாடல்கள் – 2, கவிஞர் சைலேந்திரா, கபீர்தாசர், சங்கரதாஸ், Raj Kapoor, Jagte raho, Nargis
தொல்லை ஆலமும் அலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு – பழமையாகிய தனக்கு உரியதான ஆலிலை, தாமரை மலர், கைலாய கிரி ஆகியவற்றை விட்டு விட்டு
அயோத்தி வந்தான் – அயோத்தியை இடமாகக் கொண்டு திரு அவதாரம் செய்துள்ளான்
இந்தப் பாடலில் ஆக்கல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழில்களைச் செய்யும் சிவன், பிரமன், விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தி போலன்றி இராமன் முழுமுதற்கடவுளின் மொத்த அம்சம் எனக் கம்பன் குறிப்பிடுவது நம்மை பிரமிக்க வைக்கிறது.
சூலம் – சிவன் கையில் ஏந்துவது
திகிரியும் சங்கும் – விஷ்ணு கையில் ஏந்துவது
கரகம் – ஜலபாத்திரம் அல்லது குண்டிகை பிரமன் ஏந்துவது.
ஆலிலை – திருமால் பிரளய காலத்தில் பள்ளி கொள்ளுமிடம்
திருமாலின் நாபித் தாமரை மலர் – பிரமன் தோன்றி வாழும் இடம்
வெள்ளிப் பொருப்பு – சிவன் உறையும் கைலாயம்
இவற்றை விட்டு அயோத்தி வந்துள்ளான் முழுமுதற் கடவுள் என கம்பன் இப்பாடலில் உணர்த்துகிறான் அநுமன் வாயிலாக.
யார் நீ என்று இராவணன் கேட்க அநுமன் தான் இராமனின் தூதன் (செங்கணோர் வில்லி தன் தூதன்) என்று சொல்லி இராமன் யார் என்பதை அநுமன் விவரித்துக் கூறும் பதிலாக ஒன்பது கவிகள் உள்ளன. அதில் வரும் பாடல்களே இவை.
பிணி வீட்டு படலத்தில் வரும் பாடல்கள் மிக அருமையானவை. ஓர்ந்து படிப்போம்:
Time and Maths – காலமும் கணக்கும் நீத்த காரணனைப் பணிந்து உண்மை உணர்வோம்; உயர்வோம்!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
Whether Laurie Marks, the New York gambler, implicated in the swindle once practised on the Bank of Liverpool, really commit suicide by jumping overboard from a steamer was under discussion by a group of police officials. Ex inspector Byrnes who had known Marks well had the following to say:
“Marks is not dead. He is too much of a gambler for anything like suicide, and if a search was made for him he would be found in some of the great cities. Marks would as soon think of suicide as of going into hiding in a village or backwoods community. Once when he was seriously ill Marks refused to go into a quiet resort , saying he preferred to go to some place where things were moving and sandwiches were two dollars apiece, for then he would know he had a chance to get somebody else’s money.””
Xxxx
Learn a Lesson
A certain merchant prince was raising his small son with an eye to equipping him for the harsh realities and cutthroat competition of the world. As one object lesson he put the younger on the high mantlepiece and coaxed him to jump into his arms. The boy did this repeatedly until he had built up a certain confidence. On the last jump the father stepped and the child crashed to the floor. Lifting up the whimpering youngster the father said,
“Now then, let that be a lesson to you. Never trust anyone— not even your own father.”
Xxx
Sue or Rue
Cornelius Vanderbilt wrote the following letter to certain business rivals,
Gentlemen,
You have undertaken to cheat me. I will not sue you, for law takes too long. I will ruin you.
Sincerely yours
Cornelius Vanderbilt
Xxx
Insurance Joke
Fire insurance is a more delicate legal problem than life insurance, as it is somewhat easier to set fire to your barn than to cut your own throat to collect for it.
A certain merchant heavily insured his warehouse. As he signed the papers concluding the deal, he said in a tone of jocularity,
“Now if this warehouse were to burn down tonight, how much would I get?”
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
11 அதிசய வரலாற்று நிகழ்ச்சிகள்
பாண பட்டன் என்ற சம்ஸ்கிருதப் புலவன் மாமன்னன் ஹர்ஷவர்தனன் பற்றி ஒரு புஸ்தகம் எழுதினான். அதன் பெயர் ஹர்ஷ சரிதம். அதில் மன்னருக்கு ஆறுதல் கூறும் முகத்தான் பல வினோத மரணங்களையும் இந்தியாவில் நடந்த அரசியல் படுகொலைகளையும் பட்டியல் போட்டுக் காட்டுகிறார் புலவர்.
நம் கண்களுக்கு முன்னாலேயே இரண்டு அரசியல் படுகொலைகள் இந்தியாவில் நடந்தன. பிரதம மந்திரி இந்திராகாந்தியை, ‘வேலியே பயிரை மேய்ந்தது’ என்ற கதையாக அவருடைய மெய்க்காவலர்களே — இரண்டு சீக்கியர்கள்- சுட்டுக் கொன்றனர்.
விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் பயங்கரவாதி இந்திராவின் மகனை –ராஜிவ் காந்தியை — வெடிகுண்டு வைத்துச் சிதறடித்தாள்.
பெரிய புராணத்திலும் பல வன்முறைச் சம்பவங்களைப் படிக்கிறோம். முத்தநாதன் என்பவன் ‘மனத்தினுள் கருப்பு வைத்து’, விபூதிப் பைக்குள் வாளை வைத்து ,மன்னர் பெருமானை குத்திக் கொன்றான்.
வேதகாலத்தில் வேனன் என்ற மன்னன் அட்டூழியம் செய்தான். மக்களும் ரிஷிகளும் அவனை அடித்துக் கொன்றனர். அவர் பெயரோடு சுமுகன் முதலிய துஷ்ட மன்னர் பெயர்களையும் மநு நீதி நூல் பட்டியல் இடுகிறது. ஆனால் சுமேரியாவில் மட்டும்தான் அந்த சுமுகன் பெயர் இருக்கிறது! tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஜேம்ஸ் பாண்ட் (007 James Bond) படங்களில் பாண்ட் – ஜக் கொல்ல வில்லன்கள் பல முறைகளைக் கையாளுவதையும் பாண்ட் அவர்களை லாவகமாகக் கொல்லுவதையும் பார்க்கிறோம் . சங்க இலக்கியத்தில் மல்லர் கள் , குறு நில மன்னர்கள் மல்யுத்தத்தில் எதிரியின் உடலைக் கை வேறு, கால் வேறாகப் பிய்த்தெறிந்த பாடல்களைப் படிக்கிறோம்
இது போல பல சம்பவங்களை பாணபட்டன் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லியிருக்கிறார். இதோ அந்தப் பட்டியல் :–
1.“மன்னனே ! கவனக் குறைவால் நடந்த அழிவுகள் பற்றி உனக்கு அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றனவே. பத்மாவதியில் நாக வம்ச மன்னர் நாகசேனன் அழிந்ததை சாரிகா பறவை சொன்னதை நீ அறியாயோ.
2.ஸ்ரவஸ்த்தி நகரில் ச்ருதவர்மன் என்ற மன்னரின் ரகசியத்தை ஒரு கிளி கேட்டதால் அவன் அழிந்தான்; தெரியாதா ?
(இதை நிரூபிக்கும் ஒரு விஷயம் பிரிட்டனிலும் நடந்தது. கள்ளக்காதலி பெயரைக் கிளி கத்திக் கத்திச் சொன்னதால் கணவனை மனைவி கையும் களவுமாகப் பிடித்த செய்தி வந்தது. அதை நான் இந்த பிளாக்கில் கட்டுரையாகத் தந்துள்ளேன்.)
3.மிருத்திகவாதியில் ஒரு அதிகாரி தூ க்கத்தில் உளறியதால் ஸ்வர்ண சூடன் இறந்தானே ; மறந்துவிட்டாயா? tamilandvedas.com, swamiindology.blogspot.com
4.ஒரு யவன ராஜா எப்படி அழிந்தார்? அவர் படித்த கடிதம் கிரீடத்திலுள்ள ரத்தினத்தில் பிரதி பலிக்க, சாமரம் வீசியவள் அவனை அழிக்கவில்லையா ?
(இதை நாம் ஜேம்ஸ் பாண்ட் படங்களிலும் காண்கிறோம். கண்ணாடியில் பிரதிபலிக்கும் உருவத்தைப் பார்த்து பாண்ட் அல்லது வில்லன் மின்னல் வேகத்தில் செயல்படுவதை பார்க்கிறோம்.)
5.நள்ளிரவில் பேராசை பிடித்த மதுரா மன்னன் பிருஹத் ரதன் புதையல் எடுக்க குழி பறித்தான். அப்போது விதுரதனின் படைகள் அவன் தலையைச் சீவின .
6.வத்சபதி என்ற மன்னன் யானைக் காட்டில் (Elephant Forest) உல்லாசப் பயணம் போனான் . அப்போது எதிரி மன்னன் மஹாசேனன் எப்படி அவனைக் கைப்பற்றினான்? யானை போன்ற ஒரு பொம்மையின் வயிற்றிலிருந்து குதித்த வீரர்கள் அவனைக் கைது செய்தார்களே !
(இது மிகவும் புகழ் பெற்ற உத்தி. ஹோமரின் காவியத்தில் வரும் ட்ரோஜன் ஹார்ஸ் TROJAN HORSE பற்றி இலக்கியம் படித்த அனைவரும் அறிவர். ஒரு பொம்மைக் குதிரையின் அடியிலிருந்து சிப்பாய்கள் குதித்த வரலாறு அது. சம்ஸ்கிருத நாடகங்களிலும் இந்த உத்தி கையாளப்படுகிறது. ஷேக்ஸ்பியர் நாடகத்தில் வீரர்கள் செடி கொடிகளை மேலே போட்டுக்கொண்டு (camouflage) காட்டு மரங்கள் போல நின்று தாக்குவதை படிக்கிறோம். tamilandvedas.com, swamiindology.blogspot.com
7.அக்கினிமித்ரனின் மகனான சுமித்ரனுக்கு நாடகம் என்றால் உயிர். அவன் அடிக்கடி நாடகத்துக்கு வருவதை அறிந்த எதிரிகள் நாடக நடிகர் வேட ததில் வந்து அவன் தலையை சோளக்கருது வெட்டுவது போல வெட்டவில்லையா?
8.அஸ்மாக நாட்டு மன்னன் ஒரு இசைப்பிரியன்.எதிரிகள் இசைவாணர்கள் போல வந்து வீணை வாசிப்பது போல வாசிக்கையில் வீணைக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரபனைக் குத்திக் கொன்றார்களே.
9.மௌர்ய மன்னன் பிருஹத்ரதனை புஷ்ய மித்ரன் எப்படிக் கொன்றான்? ராணுவ அணிவகுப்பு மரியாதையின் போது அவனைத் தாக்கிக் கொன்றனனே
10.காக வர்ணன் என்ற மன்னன் மாய மந்திர , இந்திர ஜாலத்தில் நம்பிக்கை உடையவன். அவனுக்கு வேடிக்கை காட்டுவதாகச் சொல்லி, ஒரு யவனர் அவனை விமான பொம்மையில் வைத்துப் பறந்து சென்றானே. பின்னர் அவன் முடிவே தெரியவில்லையே!
11.பட்டப்பகலில் நகரத்தின் நடுத்தெருவில் சிசுநாகன் மகனை வெட்டிக் கொல்ல வில்லையா ?
இப்படிப் பட்டியல் போட்டு மன்னரை அறிவுறுத்துவது போல ஒரு காட்சி . tamilandvedas.com, swamiindology.blogspot.com
இதில் யவனர் பற்றிச் சொல்லப்படும் விஷயங்கள் உண்மையில் நடந்தவை என்பதை வேறு குறிப்புகளில் இருந்தும் அறிய முடிகிறது. ஆதி சங்கரர் கூட தன்னுடைய பாஷ்யங்களில் இரண்டு யவனர் சம்பவங்களை எடுத்துக் காட்டுகிறார்.
சிசுபாலனை கிருஷ்ண பரமாத்மா பட்டப் பகலில் அஸெம்பிளியில் எல்லோர் முன்னிலையிலும் வெட்டிக் கொன்றார். இது போல கம்சன் , சாணுரன் ஆகியோரும் அழிந்தனர்.
நமது காலத்திலேயே விமானங்களும் கப்பல்களும் பயணிகளுடன் மாயமாய் மறைகின்றன. வெளி உலகவாசிகள் கடத்துகின்றனர், அல்லது இன்ஷ்யூரன்ஸ் பணம் பெற இப்படிச் செய்கின்றனர், அல்லது அதிலுள்ள ரகசியம் அறிந்த சிலரைத் தீர்த்துக் கட்டுவதற்காக எல்லாப் பயணிகளையும் கூண்டோடு கைலாசத்துக்கு அனுப்புகின்றனர் என்று பல தியரிக்கள் Theories உண்டு.
xxx
வரலாற்றுப் படுகொலைகள்
அமெரிக்காவில் பல ஜனாதிபதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இது போல 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலும் நடந்தது; மன்னர்களை வெட்டிக்கொன்றனர் tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுங்க வம்சத்தின் கடைசி மன்னன் தேவபூதி ஒழுக்கமற்றவன்; திறமையற்றவன்; இதனால் அவனது அமைச்சர் வாசுதேவன் ஒரு திட்டம் போட்டார். ஒரு அடிமைப் பெண்ணை மஹாராணி போல உடை அணிவிவித்து படுக்கை அறையிலேயே மன்னரைக் கொன்றார். இதையடுத்து வாசுதேவன் தன்னை மன்னர் என்று பிரகடனம் செய்தார் . இது நட தந்தது 2100 ஆண்டுகளுக்கு முன்பு. வாசுதேவன் (72 BCE) கண்வ வம்ச ஆட்சியைத் துவக்கினார்.
மௌர்ய வாசத்தின் கடைசி மன்னனும் திறமையற்றவன். அவன் படைகளைப் பார்வையிட வந்தபோது அவனைப் படைத்த தலைவனான புஷ்ய மித்ர சுங்கன் (187 BCE ) வெட்டிக் கொன்றார். 2200 ஆண்டுகளுக்கு முன்னர் இது நடந்தது. அதிலிருந்து சுங்க வம்ச ஆட்சி துவங்கியது.
அரசியல் என்பது படுகொலைகள், மர்மங்கள் நிறைந்த துறை!
இவைகளில் சொல்லப்பட்ட யவனர் சம்பந்தமான சில சம்பவங்களை வேறு சில நூல்களும் குறிப்பிடுவதால் ஏனைய சம்பவங்களும் உண்மையாக இருக்கக்கூடும். ஆகையால் இவை பற்றி மேலும் ஆராய்ந்தால் மேலும் பல உண்மைகள் வெளிப்படும். 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான நூலில் இருப்பதால் எல்லாம் மிகவும் பழைய சம்பவங்கள் என்பதும் புலப்படும்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்திப் படப்பாடல்களில்பாரதப்பண்பாடு!
R. Nanjappa
ஹிந்தி படப் பாடல்கள் காலம் வென்று நம்மைக் கவர்வது ஏன்?
நீண்ட காலமாக ஹிந்திப் படப் பாடல்கள் என்னை வெகுவாகக் கவர்ந்து வந்துள்ளது. யோசித்துப் பார்த்தால் இதற்கான இரண்டு காரணங்கள் புலப்படுகிறது.
1) பழைய கால ஹிந்திப் பாடல்கள் அருமையான ராகங்களால் அமைக்கப்பட்டுள்ளவையாகும். இதை சீக்கிரமாக உணர்ந்து விடுவதென்பது முடியாது தான் ; ஆனால் இதனால் தான் அவை நெடுங்காலம் நிலைத்திருக்கின்றன.
2) பாடல்களின் சக்தி வாய்ந்த வரிகள். அந்தந்தப் படங்களின் நிலைக்களனுக்குத் தகுந்த படி அமைக்கப்பட்டாலும் கூட இந்தப்
பாடல் வரிகள் சிறந்த கருத்துக்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்துபவை.
சில பாடல் வரிகள் இங்கு தொகுத்து அளிக்கப்படுகிறது. இந்த வரிகள் எதை நம் முன் வைக்கிறது என்பதோடு நம்மை நம்ப வைக்கும் சினிமா காட்சிகளுக்காக இவை எழுதப்பட்டாலும் கூட வார்த்தைகளுக்கு அப்பால் அவை எதை உள்ளடக்கியுள்ளது என்பது இக்கட்டுரையில் குறிப்பிடப்படுகிறது.
பாடல்களைக் கேட்டவர்கள் மலரும் நினைவுகளோடு இதை ரசிப்பர்; பாடல்களைக் கேட்காதவர்களும் அதைக் கேட்க ஆர்வமுறுவர்.
பாடல்களைப் பார்ப்போமா?
இந்திய மண்ணில் ஊறித் ததும்பியது இசை!
பாரதம் தத்துவ ஞானத்தில் சிறந்து விளங்குவது.
ஞானத்தி லேபர மோனத்திலே — உயர் மானத்திலே அன்ன தானத்திலே, கானத்தி லேஅமு தாக நிறைந்த கவிதையி லேஉயர் நாடு —
இந்தப்பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு
என்று முழங்கினார் மஹாகவி பாரதியார்.
இத்தகைய ஞானம் ஏதோ மேல்மட்டத்தில் மட்டும் தேங்கிவிடவில்லை எண்ணற்ற மஹான்கள் நாடுமுழுதும் கால் நடையாகவே சென்று இதை பாமர மக்களிடமும் அவர்கள் மொழியிலேயே கொண்டு சேர்த்தார்கள். கல்வி என்பது பள்ளியில், புத்தகப் படிப்பினால் வரும் விஷயம் என்ற குருட்டு நம்பிக்கை இல்லாத, மெக்காலேவுக்கு முந்தைய அந்த நாட்களில் சாதாரண , எழுத்தறிவில்லாத மக்களும் இத்தகைய உயர் கல்வியை- உண்மை ஞானத்தைப் – பெற்றவர்களாக இருந்தனர். இதை ஸ்வாமி விவேகானந்தரே வியந்து போற்றியிருக்கிறார்.
சென்ற சில பத்தாண்டுகளில் சினிமா, மக்களைக் கவரும் சாதனமாகிவிட்டது. பெரும்பாலும் காசுக்காக நடக்கும் களியாட்டம் என்றாலும், அதில் சில கலையம்சங்களும் இல்லாமல் இல்லை. ஆழ்ந்த கருத்துள்ள கதை,, சிறந்த வசனம், கவரும் காட்சிகள், சிறந்த நடிப்பு,- என பல அம்சங்கள், டைரக்டரின் திறமையைப் பொறுத்து உயர்ந்த கலைப் பாங்குடன் மிளிர்வதைக் காண்கிறோம்.
இதில் இந்திய சினிமாவில் முக்கிய பங்குவகிப்பது இசை. சங்கீதம் நம் ஒவ்வொருவரின் ரத்தத்திலும் கலந்து ஓடுகிறது. நிலத்துக்கு நீர் இறைப்பவனாகட்டும், உழுபவனாக இருக்கட்டும், வண்டியோட்டியாக.இருக்கட்டும், சங்கீதமே பயிலாத , குழந்தையைத் தூங்கவைக்க முயற்சிக்கும் தாயாக இருக்கட்டும்- எல்லோரும் அவரவரளவில் சங்கீத ஈர்ப்பும் ஈடுபாடும் உள்ளவர்களாகவே இருந்திருக்கிறார்கள் என்று சங்கீத வித்தகர் அமரர் டாக்டர் எஸ். ராமநாதன் விளக்குவார்.
சங்கீதம் சாஹித்யத்தால் வளம்பெறுகிறது. பாவத்தை (Bhaava )வெளிப்படுத்த வார்த்தைகள் அவசியம். அதே சமயம் அது கருத்தையும் தூண்டும் விதமாக இருந்தால்.மனதையும் மூளையையும் சேர்ந்தே கவரும். நினைவை விட்டு அகலாது.
பொழுதுபோக்கு அம்சமான ஹிந்தி சினிமாவில் .பல பாடல்கள் உயர்ந்த கருத்தைச் சொல்வதாக இருந்தன.- நமது பண்பாட்டின் முக்கிய அம்சமான ஞானத்தை விளக்குவதாக இருக்கின்றன. இத்தகைய சில பாடல்களை இங்கே காணலாம்.அன்று பக்தர்களும் தெருப்பாடகர்களும் ஊர் ஊராக, வீதிவீதியாக அலைந்து பரப்பிய கருத்துக்கள் இன்று வீடுவீடாக எளிதில் டிவி வாயிலாகச் சென்றடையலாம்!
கர்மமும்கர்மபலனும்
நமது ஞான நூல்களில் தலையாயது ஸ்ரீமத் பகவத் கீதை. இதன் முக்கிய உபதேசங்களீல் ஒன்று- பலனைக் கருதாமல் கடமையைச் செய்- “செய் கருமத்தேயன்றிச் சேரும் பயன்தன்னில் ஐய உனக்கில்லை அதிகாரம்”,என்பது.
कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन ।
मा कर्मफलहेतुर्भुर्मा ते संगोऽस्त्वकर्मणि ॥ 2.47
கர்மண்யேவாதிகாரஸ்தே மா ஃபலேஷு கதாசன
மா கர்மஃபலஹேதுர்பூர்மா தே சங்கோஸ்த்வகர்மணி
உனக்குக் கர்மங்களைச் செய்வதில் மட்டுமே பொறுப்பு உண்டு. அவற்றின் பலனில் உரிமையில்லை.(ஆகவே) நீ கர்மங்களின் பலன் களைக் கோருவதற்குக் காரணமாக ஆகாதே. கர்மத்தில் பற்றில்லாதவனாகவும் ஆகாதே.
இதை எப்படி மிக எளிதாக ஒருவரியில் அடக்குகிறார் கவிஞர் ( கமர் ஜலாலாபாதி Qamar Jalalabadi) என்று பாருங்கள்;
मेहनत मेरा काम देना उसका काम
மேஹ்னத் மேரா காம், தேனா உஸ்கா காம்
உழைப்பதுதான் என் வேலை, பலன் கொடுப்பது ‘அவன்’ ஆண்டவன் கையில்!
[ படம்: சலியா, 1959]
காலச்சக்கரம்
மக்கள் காலத்தின் தன்மையை, மஹிமையை, அருமையை உணர்வதில்லை.
காளோஸ்மி லோக க்ஷயக்ருத் பரவ்ருத்தோ-
உலகங்கள் அனைத்தையும் அழிக்கின்ற பெருகிவரும் மஹாகாலனாக நான் இருக்கிறேன் என்று கீதையில் பகவான் மொழிகிறார்.
ஒவ்வொரு க்ஷணமும் நம் ஆயுள் க்ஷீணிக்கிறது. இதை யாரும் உணர்வதில்லை. ஞானிகள் இதைக்கண்டு வருந்துகிறார்கள். ஆதி சங்கரர் ஓரிடத்தில் ஒரு வயதான பண்டிதர் இலக்கணச் சூத்திரம் ஓன்றை உருப்போட்டுக்கொண்டிருந்ததைக் கண்டார்.. ‘இந்த இலக்கணச் சூத்திரம் இவர் போகும் உலகத்தில் உதவுமா’ என்ற எண்ணம் சங்கருக்கு எழுந்தது. கருணை பிறந்தது. மனமே, கோவிந்தனைப் பஜி, அதுவே போகும் உலகிற்குக் கதி – பஜ கோவிந்தம்” என்று பாடினார். அதில் மக்கள் எப்படிப் பொழுதை வீணாக்குகிறார்கள் என்று ஒரு பாடல்:
குழந்தைப் பருவம் விளையாட்டில் கழிகிறது. குமரப் பருவம் குமரியைப் பற்றிய நினைவில் போகிறது. கிழப்பருவம் கவலைகளில் கழிகிறது. கடவுளைப் பற்றி யார் நினைக்கிறார்கள்?
இந்தக் கருத்தை நமது கவிஞர் சைலேந்த்ரா எப்படி எளிமையாகச் சொல்கிறார் பாருங்கள்:
இதை நம் கவிஞர் சைலேந்த்ரா எப்படிச் சொல்கிறார் பாருங்கள்:
तुम्हारे महल चौबारे यहीं रह जायेंगे सारे अकड़ किस बात की प्यारे ये सर फिर भी झुकाना है सजन रे झूठ…
துமாரே மஹல் சௌபாரே யஹீ(ன்) ரஹஜாயேங்கே ப்யாரே
அகட் கிஸ் பாத் கீ ப்யாரே யே சர் ஃபிர் ஜுகானாரே
உன் பெரிய மாளிகையும் அதன் பெரிய அறைகளும் ( உன் உயிர் போகும்போது) இங்கேயேதானே தங்கிவிடும்! (அவை உன்னுடன் வாராவே) பின் அன்பனே எதற்காகக் கர்வம் கொள்கிறாய்? (மரணத்தின் முன்) உன் தலையைச் சாய்த்துத்தானே தீரவேண்டும்? பொய் சொல்லாதே.
ஓரளவாவது நமது சமய, ஆன்மீக இலக்கியங்களில் பரிச்சயம் இருந்தால் இத்தகைய பாடல் வரிகளில் இருக்கும் நுண்ணிய கருத்துக்கள் விளங்கும்.
இது காந்திஜீக்கு மிகவும் பிடித்த ஸ்லோகம். இதுவே அவருடைய தர்மகர்த்தாக் கொள்கைக்கு ஆதாரம், அவருடைய பொருளாதாரக் கொள்கைகளின் அஸ்திவாரம். மனிதன் பகிர்ந்துண்டு பல்லுயிர் ஓம்பி வாழவேண்டும். ஹிந்து மதத்தின் ஆணிவேரான ஐம்பெரும் வேள்விகளின் மூலாதாரம் இது.
இவ்வளவு பெரிய.விஷயத்தை எவ்வளவு எளிமையாகச் சொல்கிறார் கவிஞர் ஸாஹீர் லுதியான்வி
பாருங்கள்:
बाँट कर जो खाये उसपे अपनी जान ओ दिल लुटा अरे जो बचाये माल उसको जूतियों का हार दे
பாட் கர் ஜோ காயே உஸ்பே அப்னீ ஜான் ஓ தில் லுடா
ஜோ பசாயே மால் உஸ்கோ ஜூதியோ(ன்) கா ஹார் தே
இருக்கும் செல்வத்தை எவன் பகிர்ந்து கொள்கிறானோ அவன் நம் உயிரையும் மனதையும் ஈர்க்கிறான்.
எவன் தனக்கு மட்டும் என்று சேர்த்துவைக்கிறானோ, அவனுக்கு செருப்புமாலை கொடுப்போம்!
‘லைட்’ மூடில் எழுதிய பாடல், ஆனால் எத்தனை பொருள்பொதிந்தது!
கிடைப்பதைக் கொண்டு திருப்திப்படு, கிட்டாதாயின் வெட்டென மற; இடுக்கண் வருங்கால் நகுக என்றெல்லாம் சிறு வயது முதல் கேள்விப்பட்டிருக்கிறோம். இவை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு ஹிந்திப் பாட்டில் கேட்டால் எப்படி இருக்கும்? இதோ அந்தப் பாடல்:
मैं ज़िन्दगी का साथ निभाता चला गया हर फ़िक्र को धुएँ में उड़ाता चला गया
बरबादियों का सोग मनाना फ़जूल था बरबादियों का जश्न मनाता चला गया हर फ़िक्र को…
जो मिल गया उसी को मुकद्दर समझ लिया जो खो गया मैं उसको भुलाता चला गया हर फ़िक्र को…
ग़म और ख़ुशी में फ़र्क़ न महसूस हो जहाँ मैं दिल को उस मुक़ाम पे लाता चला गया मैं ज़िन्दगी का साथ…
மை ஃஜிந்தகி கே ஸாத் நிபாதா சலாகயா
ஹர் ஃபிக்ர் கோ துவேமே உடாதா சலாகயா
பர்பாதியோ(ன்) கா ஸோக் மனானா ஃபஜூல் தா
பர்பாதியோ கொ ஜிஷ்ன் மனாதா சலாகயா
ஹர் ஃபிக்ர் கோ…
ஜோ குச் பீ மில்கயா உஸீ கோ முகத்தர் ஸமஜ்லியா, முகத்தர் ஸமஜ்லியா
ஜோ கோகயா மை உஸ்கோ புலாதாசலாகயா
ஹர் ஃபிக்ர்.கோ…..
கம் ஔர் குஷீ மே ஃபர்க் ந மெஹ ஸூஸ் கோ ஜஹா(ன்)
மை தில் கோ உஸ் மகாம் பே லாதா சலாகயா
மை ஃஜிந்தகீ கே ஸாத்..
நான் வாழ்க்கையுடன் சரி செய்துகொண்டு ஓட்டிவிட்டேன்,
ஒவ்வொரு கவலையையும் புகைபோல் விட்டுவிட்டேன்!..
கஷ்டங்களைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பது அவற்றைக் கொண்டாடுவதாகாதா?
அது வீணே அல்லவா? அதானல் நான் கஷ்டங்களையே கொண்டாட்டமாக்கினேன்! ( இடுக்கண் வருங்கால் நகுக)
கவலையை புகையில் விட்டேன்!
எது கிடைத்ததோ, ‘இவ்வளவுதான் நமக்குக் கொடுத்துவைத்தது” என்று அதில் சமாதான மடைந்தேன்.
கிடைக்காததை வெட்டென மறந்தேன். ஒவ்வொரு கவலையையும் காற்றில் விட்டேன்.
கஷ்டம், சுகம் – இவற்றிடையே வித்தியாசம் பாராட்டவில்லை. [ சம நிலையில் இருந்தேன்]
எப்போதும் என் லக்ஷியத்திலேயே குறியாக இருந்தேன். கவலையைக் காற்றில் விட்டேன்.
வாழ்க்கையுடன் அட்ஜஸ்ட் செய்துகொண்டு விட்டேன்.
[புகை போல் விடுவது என்பதை இக்காலத்தில் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். “Let the birds fly over your head, not build their nest on your head” என்ற பொருளில் எடுத்துக்கொள்ள வேண்டும்]
Poet: Sahir Ludhianvi. Film: Hum Dono, 1961
யாருக்காகஅழுவது?
நமது பிலாசஃபியில் “தாபத்ரயம், முத்தாபம்” என்று சொல்லுவோம். ஆதியாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதி தைவிகம் என்று மூன்று வகையில் கஷ்டங்கள் வருகின்றன. நம் இயல்பினால் வருவது, இயற்கையால் வருவது, தேவச்செயலால் வருவது என மூன்றுவகை.
ஒரு முக்கிய இன்டர்வ்யூவுக்கு டெல்லிக்குப் போகவேண்டும் அலாரம் சரியாக வைத்திருக்கிறோம் அது அடிக்கும்போது அமுக்கிவிட்டு இன்னும் ஐந்து நிமிடம் ஓட்ட நினைக்கிறோம்-அது அரைமணியாகிறது. விமானத்தைத் தவறவிடுகிறோம். இது நமது இயல்பால் விளைவது, சரி சரியாக் கிளம்பி விமானத்தைப் பிடித்து அமர்ந்துவிட்டோம், விமானமும் கிளம்பிவிட்டது; ஆனால் புகை மூட்டத்தால் டில்லியில் தரையிறங்கமுடியவில்லை-ஜெய்பூருக்குப் போகிறது- இது இயற்கையால் நிகழ்வது. சரி, இன்டர்வ்யூ செய்தும் பலனில்லை- இது தெய்வச் செயல்? எதை நினைத்து அழுவது? கவிஞர் பாடுகிறார்:
कभी ख़ुद पे, कभी हालात पे रोना आया बात निकली तो, हरेक बात पे रोना आया कभी ख़ुद पे…..
किसलिए जीते हैं हम, किसके लिए जीते हैं बार-हा ऐसे सवालात पे रोना आया कभी ख़ुद पे…
कौन रोता है किसी और की ख़ातिर ऐ दोस्त सबको अपनी ही किसी बात पे रोना आया कभी ख़ुद पे…
கபீ குத் பே கபீ ஹாலாத் பே ரோனா ஆயா
பாத் நிக்லீ தோ ஹர் ஏக் பாத் பே ரோனா ஆயா
கிஸ்லியே ஜீதே ஹை ஹம், , கிஸ் கே லியே ஜீதே ஹை
பார்-ஹா ஐஸே சவாலாத் பே ரோனா ஆயா
கௌன் ரோதா ஹை கிஸீ ஔர் கீ காதிர் ஹை தோஸ்த்
சப்கோ அப்னீ ஹி கிஸீ பாத் பே ரோனா ஆயா…
கபீ குத் பே…
சில சமயம் நம்மை நினைத்தே அழுகை வருகிறது,
சில சமயம் நம் சூழ்நிலையை நினைத்து அழத்தோன்றுகிறது!
நினைத்துப் பார்த்தால் ஒவ்வொரு விஷயத்திற்கும் அழத்தோன்றுகிறது!
நாம் எதற்காக வாழ்கிறோம்? யாருக்காக வாழ்கிறோம்?
இப்படிப்பட்ட கேள்விகள் எழுந்தால், அழுகைதான் வருகிறது!
அன்பனே! இந்த உலகில் மற்றவர் கஷ்டத்திற்காக கண்ணீர் விடுபவர்கள் யார் இருக்கிறார்கள்?
ஒவ்வொருவரும் ஏதோ அவரவருடைய விஷயத்தையே நினைத்து அழுகிறார்கள்.
எவ்வளவு யதார்த்தமான வரிகள்! இதையும் ஸாஹிர் லுதியான்வி தான் எழுதினார்.அதே படம்-ஹம் தோனோ
நாம்-பிறர்!
இங்கு நமது ஹிந்து மதத் தத்துவம் ஒன்று புதைந்து கிடக்கிறது. நாம் ஏன் பிறருக்கு நன்மை செய்யவேண்டும்? ஏன் பிறருக்காக கஷ்டப்படவேண்டும்? இங்குதான் நமது அத்வைதக் கொள்கை வருகிறது. இந்த உலகில் நாம்-பிறர் என்று உண்மையில் இருக்கிறதா? இருப்பதெல்லாம் ஒரே பிரஹ்மத்தின் வெளிப்பாடுதானே? பின் இந்த நான்-பிறர் என்ற எண்ணம் ஏன் எழுகிறது? இதுதான் அகந்தையின் சொரூபம். இதை நாம் வெற்றீகொள்ளாவிட்டால் நமக்கு சத்தியம் விளங்காது-ஞானம் உதிக்காது. அதற்காகத்தான் நாம் தன்னல மற்ற செயல்களில் சிறிதளவாவது ஈடுபடவேண்டும். ஆத்மா ஒன்றேயானதால் பிறர்க்கென நாம் செய்யும் நன்மை, நமக்கே செய்துகொண்டதாகும். ஸ்வாமி விவேகானந்தர் இதை அடித்துச் சொல்வார். புத்தரும் இதையே சொன்னார்-நாம் பிறருக்குச் செய்வது நமக்கே திரும்பிவரும். நாம்-பிறர் என்று நினைத்துச் செய்வது கடை நிலை charity. நாம் செய்வதெல்லாம் அந்த ஆத்மாவுக்கே அர்ப்பணிப்பு என்ற நினைவில் செய்வது spiritual life.. இதுவே ஹிந்து சமயத்தில் சேவை பற்றிய உயர்ந்த சித்தாந்தம். இதை எளிதாகப் பாடுகிறார் சைலேந்த்ரா.
अपना बेगाना कौन जाना अनजाना कौन अपने दिल से पूछो दिल का पहचाना कौन पल में लुट जाता है यूँ ही बह जाता है
शादी किसी की हो अपना दिल गाता है
அப்னா பேகானா கௌன் ஜானா அஞ்சான கௌன்
அப்னே தில் சே பூசோ தில் கா பஹ்சானா கௌன்
பல் மே லுட் ஜாதா ஹை, யூ ஹி பெஹ்ஜாதா ஹை
ஷாதி கிஸீ கி ஹோ தில் அப்னா காதா ஹை
நம்மவர் யார்? அன்னியர் யார்?
தெரிந்தவர் யார்? தெரியாதவர் யார்?
உன்மனதையே தொட்டுச் சொல்- மனதை அறிந்தவர் யார்?
(என்னைப் பொறுத்தவரை) ஒரு க்ஷணத்தில் என் மனம் இளகிவிடுகிறது.
பிறருடைய மகிழ்ச்சியைக்கண்டு உன் மனம் ஆனந்தம் அடையட்டும்-
பிறருடைய கஷ்டத்தை முடிந்தால் நீ இரவல் வாங்கிக்கொள்-
பிறருக்காக உன் மனதில் அன்பு பொங்கட்டும்-
இப்படி இருப்பதுதான் உண்மையான வாழ்க்கை.
Shailendra. Song: Kisi ki muskurahatOn pe Ho nissar Film: Anadi, 1959
இந்த நிலையை, “His pity gate ere charity began, He forgot their viக்es in their woe” என்றெல்லாம் பாடினார் ஆங்கிலக் கவிஞர் Oliver Goldsmith.
சுகம்–துக்கம்ஏன்?
அது சரி, இந்த உலகில் ஏன். இப்படி சிலருக்கு கஷ்டம் வருகிறது, சிலர் சுகமாக இருக்கின்றனர்? ஏன் ஒருவருக்கே சில சமயம் இந்த “சுக துக்க ஊஞ்சல்?” இது நமக்குப் புரியாத புதிர், தத்துவவாதிகள் இந்த உலகை “மிஸ்ர லோகம்” என்பார்கள்- அதாவது சுக-துக்கக் கலவைதான். இது நம் முன்வினையினாலேயே வருவது- தீதும் நன்றும் பிறர் தர வாரா- என்பது புறநானூறு.. செய்த தீவினையிருக்க தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இரு நிதியம்” என்பார் ஔவையார். உலகம் இரண்டும் கலந்துதான் இருக்கிறது. இதை கவிஞர் ராஜேந்த்ர கிஷன் பாடுகிறார்:
Kabhi Kali Ratiya, Kabhi Din SuhaneKismat Ki Baatein To Kismat Hi JaaneO Beta Jee, Are O Babu JiKismat Ki Hawa Kabhi Naram, Kabhi GaramKabhi Naram Naram, Kabhi Garam-GaramKabhi Naram Garam Naram Garam ReO Beta Ji .
Duniya ke is chidiya ghar me Tarah tarah kaa jalavaa Mile kisi ko sukhi roti Kisi ko puri halavaa Are bhai kisi ko puri halavaa O betaa ji khichadi kaa mazaa Kabhi naram kabhi garam Dard diya to thoda thoda Khushi bhi thodi thodi Waah re maalik vaah re maalik Duhkh aur sukh ki Khub banaayi jodi Are vaah khub banaayi jodi O betaa ji jeevan ka kaa nashaa Kabhi naram kabhi garam.
சில சமயம் பொழுது வீணே கழிகிறது, சில சமயம் உல்லாசமாகப் போகிறது
சில சமயம் குளிர்ச்சி, சில சமயம் சூடு–.
இந்த விதியின் ரகசியம் அந்த விதிக்குதான் விளங்கும்!
உலகமாகிய இந்த பறவை வீட்டில் வித வித முகங்கள்!
சிலருக்கு உலர்ந்த ரொட்டிதான் கிடைக்கிறது-
சிலருக்கோ பூரியுடன் ஹல்வாவும் கிடைக்கிறது!
கிச்சிடி குளிர்ந்தும் இருக்கிறது, சூடாகவும் இருக்கிறது.
ஏன் இப்படி? விதியின் ரகசியம் அந்த விதிக்கே வெளிச்சம்!
கஷ்டம் வந்தால், அதோடு சிறிது குஷியும் வருகிறது!
அப்பனே ஆண்டவா! உன் லீலைதான் என்னே!
சுகத்தையும் துக்கத்தையும் நன்கு ஜோடி சேர்த்துவிட்டாய்!
ஆம், வாழ்க்கை குளிர்ந்தும் இருக்கிறது, சுடவும் செய்கிறது/
இரண்டும் மயக்குகிறது!
இதன் விவரம் அந்த விதிக்கே விளங்கும்!
இப்படி நூற்றுக் கணக்கான பாடல்கள்/வரிகள் இருக்கின்றன. இவை சினிமா சம்பந்தமான காட்சிகளுடன் சம்பந்தப்பட்டிருந்தாலும் இவற்றை தனியே கேட்டும் படித்தும் ரசிக்கலாம். உண்மையில் படத்தைப் பார்ப்பதைவிட பாட்டைத் தனியாகக் கேட்டால் தான் [stand alone] நன்கு ரசிக்க முடியும். திரையில் காட்சி ஓடும்போது நம் கவனம் அதில் தான் போகிறது- பாட்டு incidental. marginal ஆகிறது. பாட்டை பாட்டாகக் கேட்டால்தான் அதன் ஆழம் புரிகிறது.
இப்பாடல்களில் ஒரு சுவாரசியம் – இவை தத்துவப் பாடல்கள் ன்ற முத்திரையிட்டு வரவில்லை. உலகே மாயம் என்று அழுதுகொண்டும் பாடப்படவில்லை. யதார்த்தமான நிகழ்ச்சிகளின் நடுவேயே இத்தகைய கருத்துச் சுடர்கள் ஒளிர்கின்றன. இது சமீப காலம் வரை இந்தியர்களுக்கு இயற்கையாக அமைந்திருந்த தத்துவக் கண்ணோட்டத்தை எளிதில் விளக்கும்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 1 – பஜகோவிந்தம் – கட்டுரை எண் 7579 – வெளியான தேதி 16-2-2020; ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 2 – சிவானந்த லஹரி – கட்டுரை எண் 7611 – வெளியான தேதி 24-2-2020; ஆதி சங்கரர் அருளிய நூல்கள் – 3 – சௌந்தர்ய லஹரி – கட்டுரை எண் 7656 – வெளியான தேதி 6-3-2020; சங்கரர் அருளிய நூல்கள் – 4 தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் வெளியான தேதி 17-3-2020 கட்டுரை எண் 7704
ஆதி சங்கரர் இயற்றியுள்ள ப்ரகரண கிரந்தங்களில் ஒன்று ப்ரச்நோத்தர ரத்நமாலிகா. மனிதன் மனதில் மிக மிக நுட்பமான விஷயங்கள் பற்றித் தோன்றும் கேள்விகளும் (ப்ரஸ்நம்) அதற்கான சரியான பதில்களையும் (உத்தரம்) கொண்டுள்ள நூல் இது.
இது பற்றி காஞ்சி பெரியவாள் (சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி மஹா ஸ்வாமிகள்) அருளியுள்ள உரையில் ஒரு சிறிய பகுதி இது:
“ப்ரச்நோத்தர ரத்னமாலையில் 67 ஸ்லோகங்கள் இருக்கின்றன. அறுபத்தைந்து ஸ்லோகங்கள் தாம் நம் ஆசார்யர்கள் செய்ததாக நான் நினைக்கிறேன்.ஓம் என்று 66ஆம் ஸ்லோகத்தில் சொல்லி இருப்பதுடன் அவர்கள் முடித்து விட்டார்கள். முதல் ஸ்லோகமும் கடைசி ஸ்லோகமும் பக்தர்களால் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். நம் ஆசார்யர்கள் இயற்றிய கிரங்களிலெல்லாம் இது இலகுவானது. இது ஸம்ஸ்கிருதம் படிக்கும் குழந்தைகளுக்கும் உபயோகப்படக்கூடியது.”
இவ்வாறு மயிலை உரை ஒன்றில் ஆசார்யாள் உபதேசித்தருளினார்.
இந்த நூலை இணையதளத்தில் டவுன்லோட் – தரவிறக்கம் – செய்து கொள்ளலாம்.
அனைத்து புத்தகக் கடைகளிலும் கிடைக்கும் நூல் என்பதால் எளிதில் வாங்கிப் படித்து பயனடையலாம்.
சில கேள்விகளும் பதில்களும் இதோ:-
பகவான், கிம் உபாதேயம்?
பகவானே, எதை எடுத்துக் கொள்ள வேண்டும்?
குரு வசனம்
குரு வசனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
க: பத்யதர:?
எது பலனளிக்கக் கூடியது
தர்ம:
தர்மம்
கிம் விஷம்?
எது விஷம்?
அவதீரணா குருஷு
குருவின் ஆக்ஞையை மீறுவது.
கிம் துக்கம்?
எது துக்கம்?
அசந்தோஷ:
சந்தோஷமின்மை.
கிம் அஹர்நிஷம் அனுசிந்த்யம்?
எது எப்போதும் இரவு பகலாக நினைக்கபடவேண்டியது?
பகவச்சரணம் ந சம்ஸார:
இறைவனின் திருப்பாதம், உலகியல் வாழ்க்கை (சம்சாரம்) அல்ல!
கிம் சம்பாத்யம் மனுஜை: ?
எது மக்களால் சம்பாதிக்கப்பட வேண்டியது?
வித்யா, சித்தம், பலம், யஷ: புண்யம்.
வித்யா, செல்வம், பலம், புகழ், புண்யம்.
இப்படி சிக்கலான கேள்விகள் பலவற்றிற்கு டாண் டாண் என்று ஆணி அடித்தாற் போல அருளுரைகள் பதில்களாகப் பரிணமிக்கின்றன.
ஸ்லோகம் எளிமையான சம்ஸ்கிருத பதங்களால் அமைக்கப்பட்டிருப்பதால் சம்ஸ்கிருத ஞானமும் கூடும்.
சில ஸ்லோகங்களை எடுத்துக்காட்டாக இங்கே காணலாம்:
கஸ்ய க்ரியா ஹி ஸபலா? ய: புநராசாரவாந் சிஷ்ட: |
க: சிஷ்டோ? யோ வேதப்ரமாணவாந், கோ ஹத:? க்ரியாப்ரஷ்ட: ||
ஸாது ஜனங்களுடைய உள்ளத்தில் தாபத்தை உண்டாக்கும் செய்கை
யாருடைய சொல் பலிக்கும்?
ஸத்திய விரதம், மௌன விரதம், க்ஷமை ஆகியவற்றை உடையவர் சொல்.
பலமபி பகவத்பக்தே கிம்? தல்லோகஸ்வரூப ஸாக்ஷாத்வம் |
மோக்ஷஸ்ச கோ? ஹ்யவித்யாஸ்தமய:, கள் ஸர்வ வேதபூ:? அதசோம் !!
(ஸ்லோக எண் 66)
ப்கவத் பக்திக்குப் பலன் எது?
அவனுடைய லோக ஸாக்ஷாத்காரம்.
மோக்ஷம் எது?
அவித்யை அழிதல்
ஸகல வேதங்களுக்கும் உற்பத்தி(யும் லயமும்) எது?
ஓம்!
இறுதி ஸ்லோகமான 67வது ஸ்லோகம் இந்த ப்ரஸ்நோத்தர மாலையை எவன் ஒருவன் கழுத்தில் அணிகிறானோ அவன் முக்தர்க்ளுக்குள் சிறந்தவன் போல நல்லோர் நிறைந்த சபையில் பிரகாசிப்பான் என்று உறுதி கூறுகிறது!
அனைவரும் படிக்க வேண்டிய ஒரு வினா-விடை நூல் ப்ரச்நோத்தர ரத்ன மாலிகா!
tags- ஆதி சங்கரர், நூல்கள் – 5, ப்ரச்நோத்தர ரத்நமாலிகா