
Compiled by London swaminathan
Date: 18 June 2016
Post No. 2905
Time uploaded in London :– 13-26
( Pictures are taken by London swaminathan)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com
எந்த உடல் உறுப்புக்கு யார் தேவதை என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு சொல் வழக்கு உள்ளது.
காது – திசை
தோள் (த்வக்) – காற்று
கண் – சூரியன்
நாக்கு –வருணன்
க்ராணம்(முகர்தல்/மூக்கு) – அஸ்வினி
வாக்கு – அக்னி (வன்னி)
கை (ஹஸ்த) – இந்திரன்
கால்( பாத) – உபேந்திரன்
பாயு: (குதம்) – மித்ரன்
ஜனன உறுப்பு – பிரஜாபதி
மனது – சந்திரன்
இந்திரிய அதிஷ்டான தேவதைகள்:-
ஸ்ரோத்ரஸ்ய திக், த்வசோ வாத:, நேத்ரஸ்ய அர்க:, ரசனாயா வருண:, க்ராணஸ்ய அச்வினௌ, வாகிந்த்ரியஸ்ய வன்னி:

Xxx
உறவினர்கள் (ஆத்ம பந்துக்கள்) யார், யார்?
ஆத்மமாது: ஸ்வசு: புத்ரா ஆத்மபிது: ஸ்வசு: சுதா:
ஆத்ம மாதுல புத்ராஸ் ச விக்ஞேயா ஹி ஆத்மபாந்தவா:
–சப்தகல்பத்ருமம்
சொந்த தாயார், தந்தை, மாமன், அத்தை, சித்தி (சின்னம்மா), பெரியம்மா, அம்மான் பிள்ளைகள் ஆகியோர் நெருங்கிய உறவினர்கள் ஆவர்.
பகவத் கீதையிலும் உறவினர்கள் பட்டியல் இருக்கிறது:-
ஆசார்யா: பிதர: புத்ராஸ் ததைவ ச பிதாமஹா:
மாதுலா: ச்வசுரா: பௌத்ரா: ஸ்யாலா: (1-34)
(ஆசார்யா: – ஆசிரியர்கள்), பிதர: – தகப்பன்மார்கள், புத்ரா: – பிள்ளைகள், பிதாமஹா: – பாட்டன்மார்கள், பௌத்ரா: – பேரன்மார்கள், மாதுலா: – அம்மான்மார்கள், ஸ்வசுரா: – மாமனார்கள், ஸ்யாலா: – மைத்துனர்கள், ஸம்பந்தின: – சமபந்திமார்கள்
(இவ்வளவு உறவினர்களையும் கொல்ல விரும்பவில்லை; அதனால் போர் வேண்டாம் என்கிறான் அர்ஜுனன்)

Xxx
ஆத்ம யாஜீ யார்?
சர்வ பூதேசு ச ஆத்மானம் சர்வபூதானி ச ஆத்மனி
சமம் பஸ்யன் ஆத்ம யாஜி ஸ்வராஜ்யம் அதிகச்சதி (மனு 12-91)
எல்லா உயிர்களிடத்திலும் தன்னையும், தன்னிடத்தில் எல்லா உயிர்களையும் சமமாகப் பார்ப்பவனே தன்னை அறிந்தவன். அவன் முக்தி பெறுகிறான்
ஆத்மயாஜி= தன்னையே தியாகம் செய்பவன், வேள்வி செய்பவன்
கீதையிலும்
இதே போன்ற ஸ்லோகங்கள் பகவத் கீதையிலும் இருப்பது ஒப்பிடற்பாலது:-
சர்வபூதஸ்தமாத்மானம் சர்வபூதானி ச ஆத்மனி
ஈக்ஷதே யோக யுக்தாத்மா சர்வத்ர சமத்ர்சன:
ப.கீதை 6-29
பொருள்:–
யோகத்தில் ஈடுபட்டவன், எங்கும் சம நோக்குடன், எல்லா உயிர்களிடத்திலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லா உயிர்களும் உறைவதாகவும் காண்கிறான்
இதே கருத்து அடுத்த இரண்டு ஸ்லோகன்களிலும் வலியுறுத்தப்படுகிறது.
–சுபம்–
You must be logged in to post a comment.