பெண்ணுக்கு புதிய இலக்கணம்: பெண் – உரிச் சொல்; ஆண் -பெயர்ச் சொல் (Post No.2986)

IMG_3681

Written by London swaminathan

Date:19 July 2016

Post No. 2986

Time uploaded in London :–16-43

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

கேசவ சந்திர சென் என்னும்  பெரியார் பெண்களை உரிச் சொல் (Adjective) என்றும் ஆண்களை பெயர்ச் சொல் (Noun) என்றும் வருணித்துள்ளார்.

 

எந்த மொழி இலக்கணத்திலும் பெயர்ச் சொல்லுக்கு அணுசரனையாக, அழகூட்டுவதாக உரிச் சொல் வரும். (எ.கா. அழகான ஆண், அழகான பெண்).

 

வேதத்திலும் இதுபோன்ற உவமை இருக்கிறது. அக்னிதேவனின் பிரகாசம், ஒரு வீட்டிலுள்ள பெண்மணியின் பிரகாசத்தைப் போல் இருந்தது என்று வேதகாலப் புலவர் பாடுகிறார். மனைவியை குடும்ப விளக்கு என்று சங்க இலக்கியமும், சம்ஸ்கிருத இலக்கியமும் போற்றும்.

 

வால்மீகி ராமாயணத்தில் சீதையும் ராம பிரானிடம் சொல்லுகிறாள்:-

 

உலகம் என்னைப் பற்றி கவலை கொள்ளாது

நானும் உங்கள் ஒருவரையே உண்மை என்று நம்பி இருக்கிறேன்

 

இதையே கொஞ்சம் மாற்றிப்போட்டு, ராமனும் சீதையிடம் நான் உன்னையே உண்மை என்று நம்பியிருக்கிறேன் என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். ஆண்கள், பெண்களிடத்திலும் , பெண்கள் ஆண்க ளிடத்திலும் அவ்வளவு விசுவாசம் கொண்டால், வாழ்க்கையின் துயரங்கள் மறையும்; பள்ளங்கள் மேடுகளாகிவிடும்.

 

இதையெல்லாம் சுட்டிக்காட்டும் அப்துல்லா யூசுப் அலி என்னும் பாரிஸ்டர், ஆணைப் பெயர்ச் சொல் என்றும், அதை செயல்பட வைக்கும் வினைச் சொல் (Verb) பெண் என்றும் வேடிக்கையாக வருணிக்கிறார்.

 

அமெரிக்காவில் ஒரு பொன்மொழி — பெண் மொழி — உளது. பெண்கள், இங்கிலாந்தில் கலியாணத்துக்கு முன்பாக சுதந்திரமானவர்கள்; பிரான்ஸில் கலியாணத்துக்குப் பின்னர் சுதந்திரமானவர்கள்; அமெரிக்காவிலோ எப்போதுமே சுதந்திரமானவர்கள்.

IMG_3686

மனு என்ன சொன்னார்: பெண்கள் எப்போதுமே பாதுகாக்கப்பட  வேண்டியவர்கள்: சிறுமியாக இருக்கையில் தந்தையும், இளமையோடு இருக்கையில் கல்யாணமானவுடன் கணவனும் வயதான காலத்தில் மகனுன்களும் பெண்களைப் பாதுகாக்க வேண்டும்; அவர்களை எப்போதும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்கிறார்.

 

பெண்களுக்கு சகோதரனும், கணவனும் நகை, நட்டுகளையும் துணி மணிகளையும் வாங்கித் தந்து சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்; பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்கும் இடத்தில் தெய்வம் வசிக்கும்; பெண்கள் துயரக் கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் வேரோடு சாயும் என்றும் மனு பாடி வைத்தார்.

 

பெண்களுக்கு குடும்ப பாரம் ஒன்றே போதும்; வேலை செய்யும் பாரம் வேறு வேண்டாம் என்று இந்துக்கள் நம்பினர். ஆனால் தர்மம் என்பது காலத்துக்கு காலம் மாறும் என்று மனு எழுதிவைத்தார். அதன்படி இன்று பெண்களும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

 

ஆனால் அந்த பொருளாதார சுதந்திரம் வந்தவுடனே அடங்காபிடாரித்தனமும், கட்டுப்பாடின்மையும், விவாக ரத்துகளும்  — அதனுடனேயே பவனி வருவதைக் காண்கிறோம். காலத்தின் கோலம் இது.

–SUBHAM–