அறிவியல் வியக்கும் ஸ்ரீ சத்ய சாயிபாபா! (Post No.8959)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8959

Date uploaded in London – – 23 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஸ்ரீ சத்ய சாயிபாபா – அவதார தினம் 23-11-1926 சமாதி: 24-4-2011

அவதார தினத்தில் அவரைப் போற்றி வணங்குவோமாக!

அறிவியல் வியக்கும் ஸ்ரீ சத்ய சாயிபாபா!

ச.நாகராஜன்

1

ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் அன்றாட அருள் லீலைகள் அறிவியலை வியக்க வைப்பவை. ஏராளமான விஞ்ஞானிகள் அவரை தரிசித்துள்ளனர். அவரது லீலைகளை அவர்கள் நேரில் பார்த்து அனுபவித்து உணர்ந்து பிரமித்துள்ளனர்.

பல விஞ்ஞானிகள் தங்கள் அனுபவங்களைப் புத்தகங்களாக வெளியிட்டுள்ளனர். ஆயிரக் கணக்கில் கட்டுரைகளும் உலகெங்குமுள்ள பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.

அறிவியல் அறிஞர்கள் ஒரு புறம் இருக்க இதர துறைகளைச் சார்ந்த நிபுணர்களும் அவரை சமீபத்தில் நெருக்கமாகக் கண்டு அவரது லீலைகளைக் கண்டு அனுபவித்துள்ளனர். சாமானிய மக்களோ எனில், கேட்கவே வேண்டாம்.

சில லீலைகளை இங்கு படித்து மகிழலாம்!

2

ஒரு பக்தர். அவர் ஒரு முறை பாபாவை ‘உயிருள்ள ஒன்றை’ சிருஷ்டித்துக் காட்டுமாறு வேண்டினார்.

பாபா உடனே ஒரு குட்டிக் குரங்கை அவர் முன்னாலேயே சிருஷ்டித்தார்.

அது மட்டுமல்ல; அவர் பையில் வைத்திருந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்து அந்தக் குரங்குக்குத் தருமாறு கூறினார். அவரும் அப்படியே வாழைப்பழத்தைக் குரங்குக்குக் கொடுக்க அது மகிழ்ச்சியிடன் அதை உண்டது! பக்தர், அது தனக்கு வேண்டாம் என்றும் அதை பாபாவே திருப்பி அனுப்பி விடலாம் என்று கூறினார்.

பாபா குரங்கை அழைத்து அதைத் தன் கையில் வைத்துக் கொண்டார்.

பூ! குரங்கைக் காணோம்!

3

டர்பனில் வாழ்ந்து வந்த பக்தர் கார்டன் செட்டி! (Gordon Chetty – Durban).பஜனைக்கு வரும் பக்தர்களை அழைத்து வருவதும் அவர்களை பஜனை முடிந்த பின்னர் திருப்பிக் கொண்டு போய் விடுவதும் அவர் மனமுவந்து செய்து வந்த சேவைகளில் ஒன்று.

அவரது ஸ்டேஷன்வாகன் வாகனத்தில் பெட்ரோல் தானாகவே அவ்வப்பொழுது நிரம்பிக் கொள்ளும். அத்துடன் மட்டுமல்ல, அது பெட்ரோல் டாங்கிலிருந்து நிரம்பிக்  கீழே வழிய வேறு ஆரம்பிக்கும்.

அக்கம்பக்கத்தில் வாழும் அண்டை அயலார் ஓடி வந்து அதை தங்கள் கேன்களில் நிரப்பிக் கொள்வர்.

உயிர் பிழைத்து மீண்டு வந்த ராதாகிருஷ்ணன் என்ற பக்தரைப் பற்றி சாயி பக்தர்கள் அனைவரும் அறிவர். ஒரு முறை அவர் பகவான் பாபாவுடன் காரில் சென்று கொண்டிருந்த போது காரில் பெட்ரோல் தீர்ந்து போனது. அருகில் எங்கும் பெட்ரோல் பங்க் இல்லை. பாபா டிரைவரை அழைத்து அருகிலுள்ள குளத்திற்குச் சென்று கொஞ்சம் தண்ணீரை எடுத்து வரச் சொன்னார்.

தண்ணீர் வந்தது. பாபா அதைத் தன் கையால் தொட்டார். அதை டாங்கில் நிரப்பச் சொன்னார்.

“இப்போது போகலாம், காரை எடு” என்றார் பாபா!

ஓ! கார் கிளம்பியது, அது தான் பெட்ரோல் நிரப்பி ஆயிற்றே! ஓட வேண்டியது தானே!!

4

இரண்டு அமெரிக்கர்கள் புட்டபர்த்தி வந்தனர். நீண்ட நெடும் விமானப் பயணம். பங்களூரிலிருந்து காரில் பயணம் வேறு. தங்கள் அறைகளில் நுழைந்த அவர்கள் ரிலாக்ஸ் செய்து கொள்ள மது பாட்டில்களைத் திறந்தனர்.

சியர்ஸ்!

ஆனால் என்ன ஒரு கோளாறு! மது பாட்டிலிலிருந்து வந்த திரவம் தண்ணீர் சுவையுடன் இருந்தது. அடுத்த பாட்டிலை திறந்தனர். அதுவும் தண்ணீர் போலவே இருந்தது.

அதற்குள் தரிசனத்திற்கான நேரம் வரவே அவர்கள் உடனடியாக தரிசனத்திற்கான கியூவில் சென்று சேர்ந்தனர். அவர்கள் அதிர்ஷ்டம் அவர்கள் உட்கார முன் வரிசை கிடைத்தது.

பாபா வந்தார். முதலில் பெண்கள் அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று தரிசனம் தந்தார்.

பின்னர் ஆண்கள் அமர்ந்திருந்த பக்கம் வந்தவர் நேராக அந்த இரு அமெரிக்கர்க்ள் உட்கார்ந்திருந்த இடத்திற்குச் சென்றார்.

கண்களைச் சிமிட்டியவாறே அவர்களைப் பார்த்து, “சியர்ஸ்” என்றார்! அங்கிருந்து நகர்ந்தார்.

இயேசு கிறிஸ்து தண்ணீரை ஒய்னாக ஆக்கினார்!

ஆனால் இந்த பாபாவோ ஒயினை தண்ணீராக மாற்றினார்!!

5

பாபா மனிதனையே “பேக்ஸில்” அனுப்பிய சம்பவம் அறிவியல் அறிஞர்களின் கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒன்று.

ஆஸ்திரேலியாவிலிருது வந்த பக்தர் குழாம் ஒன்றை இண்டர்வியூவிற்காக அழைத்தார் பாபா. அங்கு என்ன நடந்தது என்பதை அனில்குமார் மல்ஹோத்ரா தனது புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.

நடந்தது இது தான்!

ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தவர்களுள் ஒரு இளைஞரும் இருந்தார். அவர் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. அவர் ஆஸ்திரேலியாவில் உள்ள தன் வீட்டிற்குப் போகத் துடித்தார்.

பாபா குழுவினரை அங்கிருந்த சுவரைப் பார்க்கச் சொன்னார்.

அதில் வீடியோ காட்சியில் வருவது போல ஆஸ்திரேலியா மேப் தோன்றியது. பிறகு அந்த இளைஞரின் நகரம் தோன்றியது; பின்னர் அவர் வாழும் தெரு, பின்னர் அவரது வீடு தோன்றியது.

அந்த இளைஞரைப் பார்த்து, “உள்ளே போ” என்றார் பாபா. அந்த இளைஞரும் உள்ளே சென்றார்.

ஆஸ்திரேலிய குழுவினர் இண்டர்நேஷனல் கால் சென்டருக்கு விரைந்தனர். தங்கள் நண்பர் வீட்டிற்கு போனில் தொடர்பு கொண்டனர்.

நண்பர் தான் பேசினார்.”பத்திரமாக வந்து சேர்ந்து விட்டேன்” என்றார் அவர்.

6

இயற்கையை மீறியவர் பாபா – இயற்கையைப் படைத்தவன் நானே என்பார் அவர்.

என்றாலும் சொல்லால் சொல்வது வேறு; செயலால் அனுபவமாக அதை உணர்ந்து அனுபவிப்பது வேறு, இல்லையா!

நூற்றுக் கணக்கில் இப்படி அழகுற பதிவு செய்யப்பட்ட சம்பவங்கள் உள்ளன.

இந்த கட்டுரையில் மேலே கொடுக்கப்பட்ட சம்பவங்கள், Dr. Hiramalini Seshadri எழுதிய GOD – IN OUR MIST என்ற புத்தகத்தில் Avatar- The Magnet என்ற அத்தியாயத்தில் தரப்பட்டுள்ள சம்பவங்கள்!

அவதார புருஷரான பகவான் பாபாவை இந்த பிறந்த நாளில் போற்றி வணங்குகிறோம்!

****

GOD – IN OUR MIST – மூன்றாம் பதிப்பு – திருத்தி வெளியிடப்பட்ட ஆண்டு 2003 நன்றி: திருமதி டாக்டர் ஹீராமாலினி சேஷாத்ரி.

tags– அறிவியல் , சத்ய சாயிபாபா

தூயவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 1 (Post No.7241)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 21 NOVEMBER 2019

Time  in London – 8-31 am

Post No. 7241

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

நவம்பர் 23. பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த தினம். அவரை வழிபட்டுத் துதிப்போம்!

ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த நாள் செய்தி : தூயவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 1

 ச.நாகராஜன்

ஸ்ரீ சத்ய சாயிபாபா பிரசாந்தி நிலையம், புட்டபர்த்தியில் பிறந்த நாளையொட்டி 23-11-2002 அன்று ஆற்றிய அருளுரை.

உரையின் முற்பகுதி சுருக்கமாகத் தரப்படுகிறது.

யார் சூரியனை தினமும் காலையில் உதிக்கச் செய்கிறார்?

யார் தினமும் சூரியனை மாலையில் அஸ்தமிக்க வைக்கிறார்?

இரவில் மட்டும் தாரகைகள் ஏன் கண்ணைச் சிமிட்டுகின்றன?

பகலில்  ஏன் அவைகள் ஒளிந்து கொள்கின்றன?

ஒரு கணமும் ஓய்வெடுக்காமல் இடைவிடாது காற்று ஏன் வீசிக் கொண்டே இருக்கிறது, உயிர்களை வாழ வைக்கிறது!

யார் நதியை இடைவிடாது இன்பம் தரும் ஓசைகளுடனும், குமிழ்களுடனும், சலசலப்புடனும் ஓட வைக்கிறார்?

மாயையையும், படைப்பையும் உருவாக்கியது யார்?

பணம், மதம், சமூகம், தேசம் ஆகியவற்றின் அடிப்படையில் எப்படி நீங்கள் வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்?

யார் இதற்கெல்லாம் எஜமானன்?  யாருடைய ஆளுகையில் இந்த அற்புதங்களெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது?

அவரது வார்த்தைகளைக் கேளுங்கள்!

அவரது ஆணைக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்வீராக!

(தெலுங்குக் கவிதையைப் பாபா பாடி தன் உரையைத் தொடங்குகிறார்)

அன்புத் திருவுருவங்களே!

ஒவ்வொரு மனிதனும் சந்தோஷமாக இருக்கவே நினைக்கிறான். ஒவ்வொருவரும் வாழ்க்கையின் லட்சியத்தை அறியவே விரும்புகிறார்.

பத்து லட்சத்தில் ஒருவரே தன் குறிக்கோளை விடாமல் தொடர்ந்து கடைப்பிடித்து தன் லட்சியம் அடையும் வரை செல்கின்றார்.

சாமான்யரோ இந்த வழியில் தீவிரமாக முயற்சி எடுப்பதில்லை; தங்களுக்கு அப்பாற்பட்ட விஷயம் இது என்று அவர்கள் நினைக்கின்றனர். அவர்கள் உடல் ரீதியான இன்பங்களை அனுபவிப்பதிலேயே தங்கள் வாழ்க்கையைச் செலவிடுகின்றனர். உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்று மட்டுமே வாழ்க்கையின் அம்சங்கள் என்று அவர்கள் நினைக்கின்றனர். இதை விட உயரிய குறிக்கோள் பற்றி அறிய அவர்கள் தவறி விடுகின்றனர்.

அத்வைத அனுபவமே ஞானம்

என்றும் உள்ள ஆனந்தத்தை அடைய மக்கள் பல்வேறு பாதைகளைக் கடைப்பிடிக்கின்றனர். தைத்திரீய உபநிடதம் இது பற்றி பறவையை உவமையாகக் கொண்டு கூறுகிறது. பறவையின் தலையே சிரத்தை.

இடது மற்றும் வலது பக்க இறக்கைகளே ரிதம் மற்றும் சத்யம் ஆகும்.

உடலே மஹாதத்வத்தைக் குறிக்கிறது. வால் யோகத்தைக் குறிக்கிறது.      ரிதம் என்றால் என்ன?

த்ரிகாலபத்யம் ரிதம்!

நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களிலும் மாறாதிருப்பதுவே ரிதம்.

சிரத்தை மிகவும் முக்கியமானது.

ச்ரத்தாவான் லபதே ஞானம்!

பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர், “சிரத்தையுடன் இருக்கும் ஒருவர் என்னை என்னை அடைய முடியும் என்கிறார். மேலும் அவர், “நான் சிரத்தையின் உருவமாக இருக்கிறேன்” என்கிறார்.

சிரத்தை இல்லாமல் இருக்கும் ஒருவன் ஒரு சிறிய விஷ்யத்தைக் கூட அடைய முடியாது.

முக்கியமாக ஆன்மீகத்தில் சிரத்தை என்பது மிகவும் முக்கியமானது. சஞ்சலமில்லாத வலிமையான நம்பிக்கையே சிரத்தையை அடையச் செய்கிறது.

உபநிடதங்கள் சிரத்தை பற்றிய கொள்கையைப் பலவிதமாக விளக்குகின்றன.

சிரத்தை மூலமாக அடையும் ஞானமே தாரகம். (முக்தி)

சிரத்தை இல்லையேல் அது மாரகம். (தளை)

என்றுமுள்ள கொள்கையான தாரகம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும், பயிற்சியில் கொண்டு வரவேண்டும், பரப்பப்பட வேண்டும்.

இதுவே தைத்திரீய உபநிடதத்தின் அடிப்படை உபதேசம்.

அன்புத் திருவுருவங்களே!

தைத்திரீய உபநிடதம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் சிரத்தை கைக்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

ஆன்மீகத்தில் சிரத்தையே தாரக மந்திரம்.

அது சிரஞ்சீவித்வம் கொண்டது; அழியாதது.

மனிதன் ஐந்து அம்சங்களான சிரத்தா, சத்யம், ரிதம், யோகம், மஹாதத்வம் ஆகியவற்றின் மூலமாக இதயத்தைச் சுத்தப்படுத்தினால் மட்டுமே ஞானத்தை அடைய முடியும்.

ஞானம் என்பது புத்தகப் படிப்பல்ல.

அத்வைத தர்சனம் ஞானம்.

பார்க்கின்றபோது (உலகில்) இரண்டாக இருக்கின்றவற்றில் அத்வைதம் அடிநாதமாக இருக்கிறது.

இந்த அடிப்படை உண்மையைத் தான் தைத்திரீய உபநிடதம் போதிக்கிறது.

 ஆதிசங்கரர் ஜய யாத்திரை செய்த போது வட இந்தியாவில் மண்டனமிஸரர் என்ற பெரும் அறிவாளியைக் கண்டார். அவருடன் சங்கரர் ஒரு அறிவுபூர்வமான  விவாதத்தை மேற்கொண்டார்.

மண்டனமிஸ்ரரின் மனைவி உபயபாரதியும் கூட சிறந்த பண்டிதை.

ரிதம், சத்யம், மஹாதத்வம் பற்றி அவர் நன்கு அறிந்தவர்.

மண்டனமிஸ்ரர் வாதத்தில் தோற்றுவிட்டால் சந்யாசியாக வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. சங்கரர் உபயபாரதியையே மத்தியஸ்தராக இருக்கும் படி கேட்டுக்கொண்டார்.

வாதம் நடைபெறும்போது உபயபாரதி வாதத்தையும் பிரதிவாதத்தையும் நன்கு உன்னிப்பாகக் கேட்டு வந்தார். நீதியில் ஒரு தலைப்பட்சமாக இராத அவர், சங்கரர் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

தனது கணவர் வாதத்தில் தோற்றதைப் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை.

மண்டனமிஸ்ரர் சந்யாசத்தை மேற்கொண்டார். மனைவியானதால் அவரில் பாதி என்பதற்கேற்ப – அர்தாங்கியாக இருப்பதால் – அவரும் சந்யாசத்தை மேற்கொண்டார்.

இருவரும் உலகத்தைத் துறந்து ஞானப் பாதையை போதிக்கலாயினர்.

ஞானம் அடையாத மனித வாழ்க்கைக்கு மதிப்பே இல்லை!

                            – உரை தொடரும்