
Article written by London swaminathan
Date: 24 June 2016
Post No. 2916
Time uploaded in London :– காலை 8-34
( Pictures are taken from various sources; thanks)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
சிலாஸ்சகந்தலேபஸ்ச மார்ஜாரோச்சிஷ்ட போஜனம்
ப்ரதிபிம்பேக்ஷணம் நீரே சக்ரஸ்யாபி ஸ்ரியம் ஹரேத்
சிலாஸ்சகந்தலேப: – கல்லின் மேல் வைத்த சந்தனத்தை பூசிக்கொள்பவன்
மார்ஜார: உச்சிஷ்ட போஜனம் – பூனை சாப்பிட்ட மிச்சத்தை உண்பவன்
ப்ரதி பிம்பேக்ஷணம் நீரே – தண்ணீரில் தனது நிழலைப் பார்ப்பவன்
சக்ரஸ்யாபி ஸ்ரியம் ஹரேத்- விஷ்ணுவாக இருந்தாலும் (அவனது) செல்வத்தை லெட்சுமி நீக்குகிறாள்.
Xxx

குசேலினம் தந்த மலாபஹாரிணம் பஹ்வாசினம் நிஷ்டூரவாக்ய பாஷிணம்
சூர்யோதயே சாஸ்தமயே ச சாயினம் விமுஞ்சதி ஸ்ரீரபி சக்ரதாரிணம்
குசேலினம் – அழுக்காடை அணிபவன்
தந்த மலாபஹாரிணம் – பல்லை நோண்டி அழுக்கெடுப்பவன்
பஹ்வாசினம் – பெருந்தீனிக்காரன்
நிஷ்டூரவாக்ய பாஷிணம் – கடும்/ சுடு சொற்களைப் பேசுபவன்
சூர்யோதயே சாஸ்தமயே ச சாயினம்- சூரியன் உதிக்கையிலும், அஸ்தமிக்கையிலும் படுக்கையில் இருப்பவன்
விமுஞ்சதி ஸ்ரீரபி சக்ரதாரிணம் – விஷ்ணுவேயானாலும், லெட்சுமி விட்டுவிட்டுப் போய்விடுவாள்.
–சுபம்–
You must be logged in to post a comment.