தமிழில் பழ மறையைப் பாடுவோம்: பாரதியார்

bharati stamp

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1474; தேதி 11 டிசம்பர், 2014.
Today is Bharathyar’s Birth Day

அமிழ்தம் அமிழ்தம் என்று கூவுவோம்—நித்தம்
அனலைப் பணிந்து மலர் தூவுவோம்
தமிழில் பழமறையைப் பாடுவோம்—என்றும்
தலைமை பெருமை புகழ் கூடுவோம்

பாரதியார் ஒரு தீர்க்கதரிசி. அவர் சொன்னதெல்லாம் நடந்து வருகிறது. சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்றார். நாம் சந்திரனுக்கு விண்கலம் அனுப்பி வெற்றி கண்டு விட்டோம். சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்றார். இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குள் இலங்கைக்கு சாலைப் பாலம் அமைத்து விடுவோம். எல்லோரும் அமர நிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்களிக்கும் என்றார். நாம் வல்லரசு ஆகும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அப்போது நாம் சொல்வதை எல்லோரும் கேட்பர்.

தேமதுரத் தமிழ் ஓசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்றார். இன்று உலகெங்கும் தமிழ் பள்ளிகளும் தமிழ் சங்கங்களும் தமிழ் கோவில்களும் உள. சொல்லில் உயர்வு தமிச் சொல்லே அதை தொழுது படித்திடடி பாப்பா என்றார். இன்று தமிழ் மொழி செம்மொழியாக் கப்பட்டுவிட்டது. மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர் மகிமை இல்லை. திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்றார். இன்று இந்தியர்கள் திறமையை உலகமே கண்டு வியந்து பெரிய பதவிகளைக் கொடுத்து உயர்ந்த சம்பளத்தில் அமர்த்தியுள்ளது.

தமிழில் பழமறையைப் பாடுவோம், வேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே என்றும் பாடினார். வேதத்தின் பெருமைதனை உலகம் போற்றத் துவங்கிவிட்டது. அவர் எதை எதை எல்லாம் மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று எதிர் பார்த்தாரோ அதைத் தானே செய்தும் காட்டினார்.
அவர் பாடல்களில் நிறைய வேத மந்திரங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதோ சில எடுத்துக் காட்டுகள்:

அயம்லோகாஹா ப்ரியதமஹ = அனைத்திலும் இனியது இவ்வுலகம் என்று அதர்வ வேதம் கூறுகிறது. இதை உலகு இன்பக் கேணி என்று மொழி பெயர்த்தார்:
ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகின்பக் கேணி என்றே – மிக
நன்று பல்வேதம் வரைந்த கை
பாரத நாயகி தன் திருக் கை — என்று பாடினார்.

ஏகம் சத் விப்ராஹா பஹூதா வதந்தி = உண்மை ஒன்றே; அறிஞர்கள் அதைப் பலவாறாகப் புகல்வர் – என்று கடவுள் ஒருவரே என்று ரிக் வேதம் சொன்னதையும் மேற்கூறிய வரிகளில் காணலாம்.

இந்துக்கள் பிள்ளையாரைத் தொழாமல் எந்தக் காரியத்தையும் செய்யமாட்டார்கள். சுக்லாம் பரதரம் என்று மந்திரத்தைச் சொல்லித் தலையில் குட்டிக் கொண்டு அமிர்த தாரை விழும் இடத்தில் ‘’அக்யூபிரஸ்ஸர்’’ கொடுத்துவிட்டுத்தான் எல்லா பூஜைகளையும் தொடங்குவர்.. அதை அவர் அழகிய தமிழில்
வெள்ளாடை தரித்த விட்டுணு என்று செப்பிய மந்திரத் தேவனை
=சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் என்று சொல்கிறார்.

Subramanya Bharati

இப்பொழுது எல்லா இந்துக்களுக்கும் ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் சவிதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹீ என்ற காயத்ரி மந்திரம் தெரியும். இதை அவர் அழகிய தமிழில்
“செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்—அவன்
எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” — (காயத்ரி மந்திரம்)
என்று மொழி பெயர்த்தார். சம்ஸ்கிருதம் தெரியாதவர்களும் இந்தத் தமிழ் மந்திரத்தைச் சொன்னால் அறிவு தெளிவு பெறும். நினைத்ததெல்லாம் கைகூடும்.

தர்மம் சர, சத்யம் வத, ……….. என்று தைத்ரீய உபநிஷத் சொல்கிறது. அதைத் தூய தமிழில்,

வேத வானில் விளங்கி, ‘அறம் செய்மின்
சாதல் நேரினும் சத்தியம் பூணுமின்
தீதகற்றுமின் என்று திசை எல்லாம்
மோத நித்தம் இடித்து முழங்கியே — என்று மொழி பெயர்த்தார்.

பிருஹத் ஆரண்யக உபநிஷதத்தில் வரும் புகழ் பெற்ற
அசதோ மா சத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய — என்ற மந்திரத்தை
இருளை நீக்கி ஒளியினைக் காட்டுவாய்
இறப்பை நீக்கி, அமிர்தத்தை ஊட்டுவாய் — என்று அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார்.

பாரதியாரின் பாடலில் அதர்வ வேதத்தின் தாக்கத்தை அதிகம் காணமுடிகிறது.
கண்ணம்மா என் காதலி – என்ற பாடலில்
பாயும் ஒளி நீ எனக்கு, பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு, தும்பியடி நான் உனக்கு
வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நான் உனக்கு
பூணும் வடம் நீ எனக்கு, புது வயிரம் நான் உனக்கு
வான மழை மது நீ எனக்கு, வண்ண மயில் நான் உனக்கு
பானம் அடி நீ எனக்கு, பாண்டமடி நான் உனக்கு

என்பதெல்லாம் அதர்வண வேத (14-2-71) கல்யாண மந்திரத்தின் பாணியில் இருக்கிறது:

இதே போல சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம் என்ற கவிதையில் கை முதல் துவங்கி ஒவ்வொரு அங்கத்தையும் இறைவன் பணியில் பயன்படுத்துவது அதர்வண வேத (19-60) மந்திரத்தின் பாணியில் இருக்கிறது:

ஈசாவாஸ்யம் இதம் சர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத் — என்ற ஈசாவாஸ்ய உபநிஷத வாக்கியம்
துச்சமெனப் பிறர் பொருளைக் கருதலாலே
சூழ்ந்ததெல்லாம் கடவுள் எனச் சுருதி சொல்லும்
என்ற வரிகளில் காணலாம்

இப்படி பாரதி பாடல் முழுதும் வேத முழக்கத்தைக் காணலாம். அவர் பாடியதெல்லாம் வேத மந்திரம் போன்ற சக்தியுடையவை. ஏனெனில் உள்ளத்தில் ஒளி உண்டாகில் வாக்கினிலே ஒளி உண்டாகும் என்று அவரே பாடி வைத்துள்ளார். பாரதி பாடலை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படியுங்கள் உங்கள் உடலிலும், வீட்டிலும் பாசிட்டிவ் வைப்ரேஷன்ஸ் பரவுவதைக் காண்பீர்கள்.

Barathi_by_Kabil
இதோ அவர் எடுத்தாண்ட சில வேத மந்திரங்கள்:
ஜீவா ஜ்யோதிர் அஸுமஹி – ரிக்வேதம்
பொருள்:- அறிவொளி துலங்க நாம் வாழ்வோம்.

ஸர்வ ஆஷா மம மித்ரம் பவந்து
எட்டு திக்கும் என் நண்பர் குழாம் ஆகட்டும் (அதாவது யாதும் ஊரே, யாவரும் கேளிர்)
ஆநோ பத்ராஹா ருதவோ யந்து விஸ்வதஹ – ரிக் வேதம்
அனைத்து திசைகளில் இருந்தும் உயர்ந்த எண்ணங்கள் எங்களை வந்தடைவதாகுக.

அதர்வ வேத மந்திரம் : மணமகளிடம் சொல்கிறான்:–
நம் இருவர் பார்வையும் இனிதாகட்டும்
நம்முடைய முகத்தில் நல் இணக்கம் பிரதிபலிக்கட்டும்
உன் இதயத்தில் எனக்கு இடம் கொடு
நாம் ஈருடல், ஓருயிர்

மணமகள் சொல்கிறாள்:–
இதோ இந்த ஆடையால் உன்னைப் போர்த்துகிறேன்
இது மனுவிடம் இருந்து வந்தது
நீ எனக்கு மட்டுமே சொந்தம் ஆவாயாக
மற்ற எந்தப் பெண்ணையும் புகழாதே
–அதர்வ வேதம் 7-36/37

ஓ இந்திரனே! இந்தப் பெண்ணையும் ஆணையும்
சக்ரவாகப் பறவைகள் போல சேர்த்து வைப்பாயாக
நல்ல வீட்டில் சுகமாக வசித்து
குழந்தைகளுடன் முழு வாழ்வு வாழட்டும்

நான் இது, நீ அவள்
நான் பாட்டு, நீ கவிதை
நான் வானம் நீ பூமி
நாம் இருவரும் கூடி வாழ்வோம்
குழந்திகளுக்கு பெற்றோர் ஆஅவோம்
–அதர்வ வேதம் 14-2

என்னுடைய முந்தைய பாரதி பற்றிய கட்டுரைகள்:
1.மனம் ஒரு பெண், மனம் ஒரு புலி (Posted on 17-2-2014)
2.Quotes from the Greatest Tamil Poet Bharati (11-12-2013)
3.வாழ்க்கையில் வெற்றி பெற பாரதி அட்வைஸ் 10-12-2013
4.பாரதியுடன் 60 வினாடி பேட்டி (16-1-2012 & 10-9-2014)
5.பாரதியின் பேராசை (Posted on 27-12-2012)
6.பாரதி பாட்டில் பகவத் கீதை (Posted on 10-12-2012)
7.பேய்கள் பற்றி பாரதி & விவேகாநந்தர் (Posted on 29-11- 2012)
8.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே (Posted on 10-9-2012)
9.பாரதி பாட்டில் பழமொழிகள் (Posted on 25-6-2012)
10.உங்களுக்கு வள்ளுவனையும் பாரதியையும் தெரியுமா? (27-3-2014)
11.காலா என் காலருகே வாடா! ஞானிகளின் ஞானத் திமிர் (23-3-2014)
12.ஆரிய பாரதி வாழ்க (செப் 10, 2014)

மஹரிஷி கவிஞன் பாரதி!

SM_BHARTHI_2317e(1)

டிசம்பர் 11 மஹாகவி பாரதியாரின் ஜன்ம தினம். அதையொட்டிய சிறப்புக் கட்டுரை இது!

மஹரிஷி கவிஞன் பாரதி!

Wriiten by ச.நாகராஜன்
Post No.1472; Dated 10th December 2014

செய்யு(ள்) நலம் சீரழிந்து செந்தமிழும் வாடுகையில்
உய்யு(ம்) நலம் காட்டியவன் ஓர் கவிஞன் – நெய்யுமொரு
கூட்டிற்கோ தேன் கூடு கொட்டு தமிழ்ச் சந்த மொழிப்
பாட்டிற்கோ பாரதியே தான் – ச.நாகராஜன்

தமிழ் தவம் இருந்து பெற்ற கவிஞன்
தமிழ் தவம் இருந்து பெற்ற பிள்ளை பாரதியார். தேசத்தையும் தெய்வத்தையும் ஒன்றாகப் போற்றி தமிழால் பாடி உயர்ந்த சிந்தனைகளை உலகிற்கு அளித்த மகாகவி அவன்.
தேசமும் தெய்வமும் ஒன்றே என்பதைப் பல இடங்களில் அவன் குறிப்பிடுகிறான்.
எடுத்துக்காட்டாக இரு இடங்களைக் குறிப்பிடலாம்.

குரு கோவிந்த சிங் கூறுவதாக வரும் பின் வரும்வரிகள் அவன் தன் கருத்தைத் தெளிவாகத் தெரிவிப்பது கண்கூடு:

“காளியும் நமது கனக நன்னாட்டுத் தேவியும்
ஒன்றெனத் தேர்ந்த நல் அன்பர்காள்!”

இன்னொரு பாடல் :
“முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்த வில் யாருடை வில்?
எங்கள் அன்னை பயங்கரி பாரத தேவி
நல் ஆரிய ராணியின் வில்”

Barathi_by_Kabil

தேசத்தையும் தெய்வத்தையும் தமிழால் பாட அவன் ஏன் முன் வந்தான்?

அதற்கும் அவனே பதில் கூறுகிறான்:
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்!”
உலக மகா கவிஞர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி அவன் முன்னணியில் இருப்பதற்கான காரணம் கவிதையை ரஸானுபாவத்திற்காக மட்டும் பாடாமல் தேச எழுச்சிக்கும் சமுதாய உயர்வுக்கும் பெண் விடுதலைக்கும் இன்னுமுள்ள பிற நல்ல காரணங்களுக்காகவும் பயன்படுத்தி தன் தனித்தன்மையை உறுதிப்படுத்தியது தான்! உயர்ந்த சிந்தனையிலிருந்து ஒருபோதும் கீழே வராமல் இருந்த கவிதை ரிஷி அவன்.

ஆனால் காலத்தின் மாறுதலுக்கேற்ப யுகாவதார கவியாய் அவனை ஏன் சுட்டிக் காட்ட வேண்டி இருக்கிறது எனில், இது வரை தோன்றிய அனைத்துக் கவிஞர்களிடமிருந்தும் மாறுபட்டு புதிய நடையில் புதிய சிந்தனையுடன் புதிய லட்சியங்களுக்காக புதிய யுகம் தோன்றுவதற்காக அவன் பாடியது தான்.
போகின்ற பாரதத்தை போ போ போ என்று தூற்றித் தள்ளி விட்டு வருகின்ற பாரதத்தை

small bharati
“ஓளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா”

என்று அவன் வரவேற்ற பாங்கே தனி! இந்தப் பாடலை முழுவதுமாகப் படித்தால் புதிய மந்திரத்தைத் தரும் புது மஹரிஷி கவிஞன் பாரதி என்பதை உணர முடியும்.
பழைய புதிய கவிதா இலக்கணத்தின் சங்கமம்!

அதற்காக சம்பிரதாயமான கவிதை ருசியை அவன் தராமல் இல்லை.
கம்பன் அலை புரண்டு ஓடி வரும் தெள்ளிய கோதாவரி ஆற்றைக் கவிதையுடன் ஒப்பிட்டு இப்படிக் கூறுகிறான்:

“சவியுறத் தெளிந்து தண்ணென்று ஒழுக்கமும் தழுவிச்
சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி”
(ஆரணிய காண்டம் சூர்ப்பணகைப் படலம்,1)

ஒரு கவிதை என்றால் அதில் ஒளி, தெளிவு, குளுமை, ஒழுக்கம் ஆகிய பண்புகள் இருக்க வேண்டும் என்பது கம்பனின் கவிதைக் கொள்கை.

பாரதியின் பாடல்கள் அனைத்தும் கோடி சூரிய பிரகாசம் கொண்ட ஒளிப் பாடல்கள். அதில் தெளிவு பற்றிச் சொல்லவே வேண்டாம். எந்த ஒரு பண்டிதரின் உதவியும் அதைப் புரிந்து கொள்ளத் தேவை இல்லை. சிறு குழந்தை கூட அதைப் படித்துத் தெளிந்து உத்வேகம் பெற முடியும். மனதிற்கு இதமான குளுமையைத் தருவதோடு உயர்ந்த சிந்தனையை மனதில் ஏற்றும் ஒழுக்கம் உள்ள பாடல்கள் அவனுடையவை.

shivaji bharati
உலகின் ஒப்பற்ற கவிதா வரிகள்
உதாரணத்திற்கு இரு பாடல் வரிகளை இங்கு குறிப்பிடலாம்;
ஆசை முகம் மறந்து போச்சே – சொற்றொடரே எளிமையானது; புதுமையானது; மனதின் உருக்கத்தை வெளிப்படுத்துவது.

ஆசை முகம் மறந்து போச்சே – இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் –எனில்
நினைவு முகம் மறக்கலாமோ?

பாடலை ஒரு முறை மனம் தோய்ந்து படித்துப் பார்த்தால் இனம் புரியாத ஒரு மேலான உணர்வு தோன்றுகிறது, இல்லையா! இதைத் தொடர்ந்து வரும் வரிகளைப் பார்ப்போம்.

தேனை மறந்திருக்கும் வண்டும் – ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் – இந்த
வையம் முழுதுமில்லை தோழி” -ஆசை முகம் மறந்து போச்சே!!!

jesudas baharati

இதற்கு ஈடான வரிகள் உலக இலக்கியத்தில் எங்கும் இல்லை என உறுதிபடக் கூறலாம்! தேன் – வண்டு, ஒளிச் சிறப்பு – பூ, வான் – பயிர், இப்படி ஒரு அருமையான தொடர் வரிசையை மாபெரும் கவிஞன் ஒருவனால் மட்டுமே பளிச் பளிச் என மின்னல் போலத் தர முடியும். இதில் ஒளி, தெளிவு,குளுமை, ஒழுக்கம் ஆகியவற்றைக் காண முடிகிறது அல்லவா!

இன்னொரு பாடலான கண்ணம்மா என் காதலியில் வரும் அமர வரிகளுக்கு ஈடு இணை உண்டா, என்ன?

பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!

வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறும் நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
எத்தனை நாட்கள் வேண்டுமோ இதன் சிறப்பினை எடுத்துக் கூற! வேதம் ஆழ்ந்து உரைக்கும் மிக மேலாம் சிந்தனைகளை இதில் காணலாம்!

என்னென்று சொல்வது பாரதியாரின் புகழை!
bharati ms

மஹரிஷி கவிஞன் பாரதியை முழுவதுமாகப் பல முறை படித்தவர்கள் அவன் புகழை முற்றிலும் உரைக்க நாள் ஆயிரமும் நா ஆயிரமும் போதா என்றே கூறுவர். என்றாலும் ஹா.கி, வாலம் அம்மையார் பாரதியின் புகழைக் கூறும் சில வரிகளை இங்கே நினைவு படுத்திக் கொண்டு மகிழ்வோம்:

வீரக் கனல் பொங்கும் வெற்றி மணிச் சிங்கம்!
விண்ணாடு மண்ணாடு வியந்து பணி தங்கம்!
கோரப் பகை அடிக்கும் கொடிய மணிக் கதிர்வேல்! ‘
கொடியவர்கள் கொட்டமழி நெடிய மணி நேமி

ஆருக்கும் அஞ்சாத ஆரமர் செல்வன்
அன்புக்கு என்பு தரும் அருளாளன் அண்ணல்

போருக்கு ரகுராமன்! புலமைக்கு வாணி!
பொற்புக்கும் நட்புக்கும் புண்ணியக் கண்ணன்
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்”

என்று அவர் பாரதியின் புகழை நெஞ்சாரக் கூறி மகிழ்கிறார்.
பாரதியின் கவிதா வரிகளில்

“சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொற் புதிது
அது ஜோதி மிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மஹா கவிதை

பாரதியைக் கற்போம்

கற்பார் பாரதி அல்லாது வேறொன்றைக் கற்பாரோ, என்ன!

ஆயுள் முழுவதும் பாரதியைக் கற்போம்; உயர்ந்த மஹரிஷிகளின் சிந்தனையைப் பெறுவோம். தேசமும் தெய்வமும் ஒன்று எனத் தெளிந்து தமிழால் பாடி நலம் பெறுவோம் வளம் பெறுவோம்!

******

ஆரிய பாரதி வாழ்க!

mahakavi

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1279; தேதி: 10 செப்டம்பர் 2014

தமிழுக்கு உயிர் கொடுத்த, தமிழால் உயிர்பெற்ற பாரதியின் நினைவு தினம் செப்டம்பர் 11. அந்தக் கவிஞன் பெயரைச் சொன்னாலேயே போதும். நம் நாவில் தமிழ் பொங்கித் ததும்பும். உடல் முழுதும் சக்தி பாயும்.

சீரிய சிந்தனை!
நேரிய பார்வை!
வீரிய உணர்வு!
பாரிய நோக்கு!
கூரிய மதி படைத்த பாரதியின்
ஆரியப் பாடல்களைக் காண்போமா?

ஆரிய என்றால் ‘பண்பாடுமிக்கவர்’ என்று பொருள். இது பிராக்ருதத்தில் ‘அஜ்ஜ’ என்று மருவி தமிழில் ‘ஐயர்’ என்று புழங்கியது. ஐயர் என்றால் குணத்தால், ஒழுக்கத்தால் உயர்ந்தவர் என்பது ‘பழம் பொருள்’.

தேசிய கவி சுப்பிரமணிய பாரதி 1921 ஆம் ஆண்டிலேயே இறந்து விட்டார். அப்பொழுதுதான் சிந்து சமவெளி நாகரீக அகழ்வாராய்ச்சி துவங்கியது. உலகிற்கு ஹரப்பா நாகரீகம் என்று ஒன்று இருப்பதே அப்போது தெரியாது. ஆனால் ஆரிய- திராவிட இனவெறிக் கொள்கையை அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே வெள்ளைக்காரர்கள் புகுத்திவிட்டனர். சுவாமி விவேகாநந்தர் போன்றோர் இந்தக் கொள்கையை எள்ளி நகை ஆடியதே இதற்குச் சான்று.

பாரதிக்கு இதில் நம்பிக்கை இல்லை என்பதை அவர் பாடல்கள் மூலம் காட்டிவிட்டார். இக்கொள்கையைப் பற்றிப் பாடாமல், பரிகசிக்காமல் நாசசூக்காக — வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல — ஆரிய என்ற சொல்லை ஏராளமான பாடல்களில் பயன்படுத்தி அதன் உண்மைப் பொருளைக் காட்டிவிட்டார். அவர் பாடல்களில் எங்கு எங்கெல்லாம் ஆரிய என்ற சொல் வருகிறதோ அதுதான் வேதத்திலும், இதிஹாசத்திலும் கையாளப்பட்ட பொருள். வடமொழி நூல்களில் கணவனை, மனைவி “ஏ ஆர்ய!” என்று அழைப்பார். “ஐயா, மதிப்புக்குரியவரே, உயர் குணச் செம்மலே” என்பது அதன் பொருள். இன வெறிப் பொருளைப் புகுத்தியது வெள்ளைத்தோல் “அறிஞர்”களே.

mahakavi2

இதோ சில பாரதி பாடல்கள்:
1.தமிழ்த் தாய் பாடலில்……………..
ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தெ – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்

2.ஆன்ற மொழிகளினுள்ளே – உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்

ஆரிய நாடு எது?
3.பாரத தேவியின் திருத் தசாங்கம் பாடலில்…….
பேரிமய வெற்பு முதல் பெண் குமரி ஈறாகும்
ஆரிய நாடென்றே அறி

ஆரியர் யார்?

4.சங்கு என்ற பாடலில்………………
பொய்யுறு மாயையை பொய்யெனக் கொண்டு
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுறவின்றிக் களித்திருப்பவராவர்
ஆரியராம் என்று இங்கூதேடா சங்கம்!

5.பாஞ்சாலி சபதப் பாடலில்…………………
ஆரிய வேல் மறவர் – புவி
யாளுமோர் கடுந்தொழில் இனிதுணர்ந்தோர்
சீரியல் மதிமுகத்தார் – மணித்
தேனிதழ் அமுதென நுகர்ந்திடுவார்

6.வாழிய செந்தமிழ் பாடலில்…………………..
அறம் வளர்ந்திடுக ! மறம் மடிவுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக!

maha3

பாரத மாதா= ஆரிய மாதா
7.பாரத மாதா என்ற பாடலில்…………………….
முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருட வில்? – எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவி நல்
ஆரிய ராணியின் வில்

சித்தமயம் இவ்வுலகம் உறுதி நம்
சித்தத்தில் ஓங்கிவிட்டால் – துன்பம்
அத்தனையும் வெல்லலாம் என்று சொன்ன சொல்
ஆரிய ராணியின் சொல்

8.தாயின் மணிக்கொடி என்ற பாடலில்………………….
அணி அணியாயவர் நிற்கும் – இந்த
ஆரியக் காட்சி ஓர் ஆனந்தம் அன்றோ?

bharathy and Chelamma

9.சத்ரபதி சிவாஜி என்ற பாடலில்…………… (மொகலாயர் பற்றி)
பாரதப் பெரும்பெயர் பழிப்பெயராக்கினர்
சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்
வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையருக்கு அடிமைகளாயினர்

ஆரிய! நீதி நீ அறிகிலை போலும்!
பூரியர் போல் மனம் புழுங்குறலாயினை
அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்
பெரும்பதத் தடையுமாம் பெண்மை எங்கெய்தினை?
பேடிமை அகற்று! நின் பெருமையை மறந்திடேல்!
ஈடிலாப் புகழினோய் எழுகவோ எழுக
(பகவத் கீதையில் கண்ணன் சொன்ன பகுதி)

bharati kutty

10.லாஜபதிராயின் பிரலாபம் என்ற பாடலில்………………..
சீக்கரெனும் எங்கள் விறற் சிங்கங்கள் வாழ்தருநல்
ஆக்கமுயர் குன்றம் அடர்ந்திருக்கும் பொன்னாடு
ஆரியர் பாழாகா தருமறையின் உண்மை தந்த
சீரியர் மெய்ஞான தயானந்தர் திருநாடு

(சீக்கியரை சிங்கங்கள் என்றும், பஞ்சாபில் ஆரிய சமாஜத்தை நிறுவிய தயானந்த சரஸ்வதி வேதத்தின் உண்மைப் பொருளை தந்தார் என்பதையும் பாராட்டும் பாடல் இது)

இவ்வாறு பாரதி பாடல் முழுதும் ‘ஆரிய’ என்ற சொல்லை அதன் உண்மையான ,மேன்மைப் பொருளில் பயன் படுத்தியுள்ளார். ஆரிய- திராவிட இனவெறிக் கொள்கைக்கு பாரதி கொடுத்த சரியான அடி இது என்றால் எதிர்ப்பொரும் உளரோ?

மேன்மை கொள் ஆரிய நீதி விளங்குக உலகமெலாம்!!

kutti bharathi

என்னுடைய முந்தைய பாரதி பற்றிய கட்டுரைகள்:
1.மனம் ஒரு பெண், மனம் ஒரு புலி (Posted on 17-2-2014)
2.Quotes from the Greatest Tamil Poet Bharati (11-12-2013)
3.வாழ்க்கையில் வெற்றி பெற பாரதி அட்வைஸ் 10-12-2013
4.பாரதியுடன் 60 வினாடி பேட்டி (16-1-2012 & 10-9-2014)
5.பாரதியின் பேராசை (Posted on 27-12-2012)
6.பாரதி பாட்டில் பகவத் கீதை (Posted on 10-12-2012)
7.பேய்கள் பற்றி பாரதி & விவேகாநந்தர் (Posted on 29-11- 2012)
8.சொல்லில் உயர்வு தமிச் சொல்லே (Posted on 10-9-2012)
9.பாரதி பாட்டில் பழமொழிகள் (Posted on 25-6-2012)
10.உங்களுக்கு வள்ளுவனையும் பாரதியையும் தெரியுமா? (27-3-2014)
11.காலா என் காலருகே வாடா! ஞானிகளின் ஞானத் திமிர் (23-3-2014)

எனது சகோதரர் ச.நாகராஜன் எழுதியவை
1.பாரதி தரிசனம் (Posted on 10-12-2013)
2.பாரதி தரிசனம்– பகுதி 2 ( Posted on 12-12-2013)

பாரதியுடன் 60 வினாடி பேட்டி

12TH_Bharati_GJ_12_1295977e

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
Post No.1278; Dated 10th September 2014.
September 11 is Bharati Memorial Day.
(( நிலாசாரலில் வெளியிட்ட தேதி 16-1-2012 ))

கேள்விகள் – கற்பனை, பதில்கள் – உண்மை!

* வணக்கம் பாரதியாரே, உமது தொழில்?

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்
இமைப் பொழுதும் சோராதிருத்தல்

* உமது ஜாதி?

காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்

(அடடா, என்ன பரந்த மனப்பான்மை!)

* உமக்குப் பிடித்த நூல்?

பன்னரும் உபநிடத நூல் எங்கள் நூலே
பார் மீது ஏதொரு நூல் இது போலே

bharati kutty

* உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள்?

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கனுமெ பிறந்ததில்லை

(உண்மை.. வெறும் புகழ்ச்சி இல்லை!)

* நீர் ஒரு தீர்க்கதரிசி. நாடு விடுதலை பெறும் முன்னரே நீர் சுதந்திரப் பள்ளு பாடினீர். இனி நடக்கப் போவதை உம்மால் சொல்ல முடியுமா?

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்.
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்.

(பலே.. பலே!)

* மந்திரம் போல் சொல் இன்பம் வேண்டும் என்று தேவியிடம் வேண்டினீர், கிடைத்தது. எங்களுக்கும் அந்த தந்திரத்தைக் கற்றுத்தரக் கூடாதா?

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்

(அட, இதுதான் ரகசியமா?)

bharati new, fb

* சரி, நாளைக்கு உமக்கு பிரதமர் பதவி கிடைத்தால் என்ன செய்வீர்?

இனி ஒரு விதி செய்வோம்
அதை எந்த நாளும் காப்போம்
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
இல்லை என்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன்

(அப்பாடா, இன்னும் உம் பேச்சில் புரட்சிக் கனல் பறக்கிறதே!)

* இந்தியா வல்லரசு நாடாகுமா?

எல்லாரும் அமர நிலை எய்தும் நன் முறையை
இந்தியா உலகிற்களிக்கும் – ஆம்
இந்தியா உலகிற்களிக்கும்

(கேட்கவே இனிக்கிறதே! உம் வாயில் ஒரு மூட்டை சர்க்கரை போட வேண்டும்!!)

* இன்றைய இளைஞருக்கு உமது அறிவுரை?

உடலினை உறுதி செய்,
பணத்தினைப் பெருக்கு,
வையத் தலைமை கொள்

(அம்மாடி, ஒவ்வொரு சொல்லும் அட்சர லட்சம் பெறும்!)

bharati family

* கற்காமல் அறியக்கூடிய கலை ஏதேனும் உண்டா?

சொல்லித் தெரிவது இல்லை மன்மதக் கலை.

(அருமை, அருமை!)

* நீர் இறைவனிடம் வேண்டுவது என்னவோ?

எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த நல் அறிவு வேண்டும்

* சிறுவர்களுக்கு உங்கள் அறிவுரை?

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
அதைத் தொழுது படித்திடடி பாப்பா
தெய்வம் நமக்குத் துணை பாப்பா
நமக்கு ஒரு தீங்கு வரலாகாது பாப்பா

bharati

* இந்தியருக்கு நீவீர் கூற விரும்புவது?

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு
நம்பினார் கெடுவதில்லை
இது நான்கு மறைத் தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்.

* உமது கவிதை பற்றி உமது மதிப்பீடு?

சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது
சொற் புதிது, சோதி மிக்க நவகவிதை
எந்நாளும் அழியாத மா கவிதை

அதுவே எங்கள் மதிப்பீடும்.

bharathy statue

* அனுமனுக்கு மயிர்க்கால் தோறும் ராம நாமம் ஒலிக்குமாம், உமக்கு?

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக.
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

(அடடா, கேட்கவே மயிர்க் கூச்சிடுகிறதே!)

* கடைசியாக ஒரு கேள்வி. இப்போது எல்லா சாமியார்களும் காயத்ரி மந்திரத்தை எல்லோரும் சொல்லலாம் என்று சொல்லிவிட்டார்கள். இதை நீர் முன்னமே தமிழில் சொன்னதாக எனக்கு நினைவு?

செங் கதிர்த் தேவன் ஒளியினைத் தேர்ந்து தெளிகின்றோம்
அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக

நன்றி! உமது தேமதுரத் தமிழோசை என்றும் எங்கள் காதில் ஒலிக்கும்.

kutti bharathi

I have done 25 more 60 second Interviews in Tamil and English with all the famous people including Socrates, Vivekananda, Buddha, Sathya Sai baba, Kamban, Ilango, Appar, Sundarar, Samabandar, Manikavasagar, Andal, Pattinathar, Thayumanar, Tirumular, Tiruvalluvar and Lord Krishna.
Contact swami_48@yahoo.com

Pictures are taken from various websites;thanks.

‘இன்பம் எங்கே, இன்பம் எங்கே என்று தேடு’

 

Pictures are drawn by Maniam Selvam for another book.Thanks.

வணக்கம். என் பெயர் நக்கீரன். சென்ற 4 வாரங்களில் ‘சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை’,  ‘மன்னிக்க வேண்டுகிறேன்”,  “ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை”,  ‘’கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு” என்ற தலைப்புகளில் பேசினீர்கள். இன்று நாம் அலசும் விஷயம் ‘’இன்பம் எங்கே?’’ யார் வேண்டுமானாலும் விவாதத்தைத் துவக்கி வைக்கலாம்.

 

திருமூலர்:

நான் பாடியதை முதலில் படியுங்கள், இன்பம் என்ன என்று விளங்கும்:

“முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்

அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்” (திருமந்திரம்)

“யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின்

ஊன்பற்றி நின்ற உயர் திருமந்திரம்தான்

தான் பற்றப் பற்ற தலைப்படும்தானே”  (திருமந்திரம்)

(இறை வழிபாடே இன்பம் தரும்)

‘’ஆசை விடவிட ஆனந்தம் ஆகுமே’’

 

வள்ளுவர்:

என்னுடைய குறளில் 29 இடங்களில் இன்பம், இன்புறுவது என்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளேன்.

‘’அறத்தான் வருவதே இன்பம்’’ (குறள் 39) (தருமத்தைப் பின்பற்றினால் இன்பம் கிடைக்கும்)

‘’மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’’ (குறள் 65) (குழந்தைகள் இன்பம் தருவர்)

‘’இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்’’ (98) (இன்சொல் இன்பம் தரும்)

‘’இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பம் கெடின்’’ (ஆசையை ஒழித்தால் இன்பம்)

‘’ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப்பெறின்’’ (1330) (கணவன் –மனைவி ஊடல் பின்னர் சமாதானத்தில் முடியும்போது கூடுதல் இன்பம் தரும்)

 

அப்பர்=திருநாவுக்கரசர்

நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்

ஏமாப்போம் பிணி அறியோம் இடர்வோம் அல்லோம்

இன்பமே எந்நாளும் துன்பமில்லை. . . . .

 

மாணிக்கவாசகர்

‘’ இன்ப ஊர்தி ‘’ (சிவ பெருமான்)

‘’பால் நினைந்தூட்டும் தாயினும்

சாலப் பரிந்து நீ பாவியேனுடைய

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி

உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து

புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே’’

 

’ஆராத இன்பம் அருளும் மலை போற்றி’’

 

நம்மாழ்வார்

கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோதுஇல தந்திடும்

என் வள்ளலேயோ (திவ்யப் பிரபந்தம் 3298)

தழை நல்ல இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைக்கவே (திவ்யப் பிரபந்தம் 3834)

 

தாயுமானவர்

‘’எல்லோரும் இன்புற்றிருப்பதேயன்றி

யாமொன்றும் அறியோம் பராபரமே’’

 

பாரதிதாசன்

அட நான் கூடத்தான் இன்பத் தமிழ் பற்றிப் பாடிய பாடலில்

தமிழுக்கும் அமுதென்று பேர்—அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

என்று ஒரே பாடலில் ‘’இன்பத் தமிழ்’’ என்ற சொல்லை எட்டு முறை பயன்படுத்தி தமிழ்தான் இன்பம் என்று நிரூபித்திவிட்டேன்.

பாரதி

என் சீடன் பாரதிதாசன் கூறியது முற்றிலும் உண்மையே. அத்தோடு சுதந்திரமும் ஆனந்தம் தரும். உலகே ஒரு இன்பக் கேணி என்று வேதம் சொல்லுவதையும் கணக்கிற் கொள்ள வேண்டும். இதோ கேளுங்கள்;

‘’செந்தமிழ் நாடெனும் போதினிலே—இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே’’

‘’ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று’’

‘’ஒன்று பரம் பொருள்- நாம் அதன் மக்கள்

உலகு இன்பக் கேணி என்றே- மிக

நன்று பல் வேதம் வரைந்த கை பாரத

நாயகி தன் திருக் கை’’

‘’தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா

உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதையா நந்தலாலா’’

‘’தனமும் இன்பமும் வேண்டும்

தரணியிலே பெருமை வேண்டும்’’

 

அருணகிரி

‘’என் பிறப்பு பங்கம் சிறைப்பங்கம் சிதைத்து உன்றன் பதத்து இன்பம் தருவாயே’’ (முருகன் திரு அடியே இன்பம்)

‘’சுரர்ச் சங்கம் துதித்து அந்தஞ்சு எழுத்து இன்பம் களித்து உன்பண் சுகத்த உய்ந்து இன்பு அலர்’’ (ஐந்தெழுத்தே இன்பம்)

தொல்காப்பியர்:

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும் (தொல்காப்பியம்)

சினிமா பாட்டு

மருதகாசி: ஐயா, என் பெயர் மருத காசி. நான் எழுதிய பாடலில் இன்பம் என்றால் என்ன என்று சினிமா பாட்டு வடிவிலேயே சொல்லிவிட்டேன்; நல்ல மனைவியும் மக்களும் தான் ஒருவனுக்கு இன்பம் தருவர்:

இன்பம் எங்கே இன்பம் எங்கே – (திரைப்படம்: மனமுள்ள மறுதாரம் பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்)

 

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு – அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு (2 முறை)
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை – இதை
எண்ணிடாமல் சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை (2 முறை)
இருக்கும் வரை இன்பங்களை
அனுபவிக்கும் தன்மை
இல்லையென்றால் வாழ்வினிலே
உனக்கு ஏது இனிமை

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

கனிரசமாம் மதுவருந்திக் களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம் (2 முறை)
இணையில்லா மனையாளின் வாய்மொழியே இன்பம் – அவள்
இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம் (2 முறை)

மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம் – உன்
மார் மீது உதைப்பதிலே கிடைப்பது தான் இன்பம்

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

 

நக்கீரன்

நன்றி. தேச சுதந்திரம், ஆன்ம சுதந்திரம், தமிழ் மொழி, நல்ல மனைவி, நல்ல பிள்ளைகள், முருகன் திருவடி, சிவபெருமான், ஐந்தெழுத்து, விஷ்ணு, இறை வழிபாடு, தருமம் என்பன எல்லாம் இன்பம் பயக்கும் என்று அருமையான கருத்துக்களை முன் வைத்தீர்கள். ஆயினும் 29 குறட் பாக்களில் இன்பம் என்ற சொல்லைப் பயன்படுத்திய வள்ளுவனுக்கு எல்லோரும் ஒரு ‘’அப்ளாஸ்’’ கொடுக்கும் படி வேண்டுகிறேன். நமது அடுத்த வார தலைப்பு ‘’வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்’’ (பலே பாண்டியா திரைப் படம்) நன்றி, வணக்கம்.

 contact swami_48@yahoo.com

 

‘ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை’

‘ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை’ (கற்பனைப் படைப்பு- ச.சுவாமிநாதன்)

புலவர்கள் மாநாட்டுக்கு வருகை தந்த அனைவருக்கும் வணக்கம். என் பெயர் நக்கீரன். ‘நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று சிவ பெருமானையே கண்டித்தவன் நான். ‘சங்கு அறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்?’ என்று சிவனையே தட்டிக் கேட்டவன் நான். கவனமாக உண்மையை மட்டும் பேசுங்கள். இன்றைய தலைப்பு:

“ ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை ”:

 

1.சேக்கிழார்: என் பெயர் சேக்கிழார். நான் முதலில் பேசிவிடுகிறேன். நான் எழுதிய பெரிய புராணத்திலிருந்து ஒரு சில வரிகள்:

அளவு கூட உரைப்பரிதாயினும்

அளவிலாசை துரப்ப அறைகுவேன்

Though impossible to reach its limits

Insatiable love(desire) drives me to the task

 

2.கம்பன்: என் பெயர் கம்பன். நான் எழுதிய ராமாயணத்தில் சேக்கிழார் அய்யா சொன்னதையே சொல்லி இருக்கிறேன்:

ஆசைபற்றி அறையலுற்றேன் மற்றிக்

காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ!

 

3.அப்பர் பெருமான் எழுந்தார். கருவில் இருந்தபோதே எனக்கு ஒரு ஆசை:

“கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு

உருகிற்றென் உள்ளமும்…………………….”

 

4.என் பெயர் அருணகிரிநாதன். சுமார் 550 ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலையில் தறுதலைக் காலியாகத் திரிந்தேன். வாழ்க்கையே வெறுத்து தற்கொலை செய்ய கோபுரத்தில் இருந்து குதித்தபோது முருகன் அருள் பெற்று திருப்புகழ் பாடினேன். இதோ ஆசை பற்றி:

புலையனான மாவீனன் வினையிலேகு மாபாதன்

பொறை இலாத கோபீகனந்———- முழு மூடன்

புகழிலாத தாமீகன் அறிவிலாத காபோதி

பொறிகளோடி போய்வீழு————- மதி சூதன்

நிலையிலாத கோமாளி கொடையிலாத ஊதாரி

நெறியிலாத வேமாளி—————-  குலபாதன்

நினது தாளை நாடோறு மனதில் ஆசை வீடாமல்

நினயுமாறு நீமேவி—- யருள்வாயே

4444444

 

சீத தொங்கலழ காவணிந்து மணம்

வீச மங்கையர்கள் ஆட வெண்கரி

சீற கொம்பு குழல் ஊத தண்டிகயில் ——– அந்தமாகச்

சேர்கனம் பெரிய வாழ்வு கொண்டுழலும்

ஆசை வெந்திட உன் ஆசை மிஞ்சி சிவ

சேவை கண்டுனது பாத தொண்டன் என—— அன்புதாராய்.

5555555

 

5.என் பெயர் திருமூலர், ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று புத்தர் மட்டுமா சொன்னார். நானும்தான் பாடி இருக்கிறேன்:

‘ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்

ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்

ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பங்கள்

ஆசை விடவிட ஆனதம் ஆமே’ (திருமந்திரம் 2615)

 

6.என் பெயர் திருவள்ளுவர். இதே கருத்தை நான் இவருக்கும் முன்னரே சொல்லிவிட்டேன். ஆசை என்ற சம்ஸ்கிருத சொல்லுக்குப் பதிலாக பற்று என்ற தூய தமிழ் சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறேன்:

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு (திருக்குறள்)

 

7.என் பெயர் சுப்பிரமணிய பாரதி.இதோ பாருங்கள், நான் பாஞ்சாலி சபதத்துக்கு எழுதிய முன்னுரை: “ காரியம் மிகப் பெரிது; எனது திறமை சிறிது. ஆசையால் இதனை எழுதி வெளியிடுகின்றேன், பிறர்க்கு ஆதர்சமாக அன்று, வழிகாட்டியாக”.

இது மட்டுமா: நான் பாடிய

“ஆசை முகம் மறந்து போச்சே—இதை

ஆரிடம் சொல்வேனடி தோழி?

நேச மறக்கவில்லை நெஞ்சம்—எனில்

நினைவு முகம் மறக்கலாமோ?” என்ற பாடல் மிகவும் கீர்த்தி பெற்றுவிட்டது.

 

நன்று நன்று, வேறு யாராவது ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

8.என் பெயர் கண்ணதாசன். நான் ஒரு கவிஞன். திரைப் படங்களுக்கும் பாடல் எழுதுபவன். என் கருத்தையும் சொல்லிவிடுகிறேன்:

ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே,
ஓடம் போலே ஆடிடுவொமே வாழ் நாளிலே
பருவம் என்னும் காற்றிலே, பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வர் , சுகம் பெறுவர் – அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவர்?

English 
With passions as waves
we dance like the boat
in our passage of life
With the wind of youth,
by flying in the chariot of love,
man and woman make merry, enjoy
and surprise themselves
but who can guess tomorrow’s path
today itself?

 

நன்று நன்று. இன்னும் ஒருவர் பேசலாம். அத்தோடு கூட்டம் முடிவடையும்.

 

9.என் பெயர் வைரமுத்து. என் பாட்டுகளும் தமிழ் கூறு நல்லுலகத்தில் பிரசித்தம். இதோ சாம்பிளுக்கு ஒன்று:

சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை

முத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை

வெண்ணிலவுதொட்டு முத்தமிட ஆசை

என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை.

 

இன்றைய கூட்டம் இத்தோடு நிறைவடைந்தது. அடுத்த வார தலைப்பு: “கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு”.

எல்லா புலவர்களும் பலத்த கரகோஷம் செய்தனர். கூட்டம் இனிதே முடிந்தது.

(முந்தைய கட்டுரை மன்னிக்க வேண்டுகிறேன். அதனையும் படித்து மகிழ்க)

பேய்கள் பற்றி பாரதி & விவேகானந்தர்

 

பயமே இல்லாத பாரதி!

(All Quotes in English are words of Swami Vivekananda. All quotes in Tamil are words of Subramanya Bharathi: Swami)

பாரதியின் தேசபக்திப் பாடல்களும் தமிழ் மொழி வாழ்த்துப் பாடல்களும் பிரபலமான அளவுக்கு அவருடைய தெய்வ பக்திப் பாடல்கள் பிரபலமாகவில்லை. கண்ணன் பற்றிய பாடல்கள் மட்டும் ஓரளவுக்குப் பரவின. அவர் ஞானம் பற்றியும் பயம் ஒழிப்புப் பற்றியும் பாடிய பாடல்கள் மிகவும் பொருள் பொதிந்தவை. இது பற்றி அதிகம் விளக்குவதற்குப் பதிலாக அவருடைய வரிகளைப் படித்தாலே புரியும். இதையே சுவாமி விவேகனந்தரின் வீர வசனங்களிலும் காணும்போது மெய்சிலிர்க்கிறது.

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

இச்சகத்துளோரெல்லாம் எதிர்த்து நின்றபோதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

உச்சிமீது வான் இடிந்து வீழுகின்றபோதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.”

 

Fear is death, fear is sin, fear is hell,
fear is unrighteousness, fear is wrong life.
All the negative thoughts and ideas that are in
the world have proceeded from this evil spirit of fear.

—Swami Vivekananda

“அச்சம் தவிர்

ஆண்மை தவறேல்” (புதிய ஆத்திச்சூடி)

****

 

“பொய்,கயமை, சினம், சோம்பர்,கவலை, மயல்,

வீண்விருப்பம், புழுக்கம், அச்சம்,

ஐயமெனும் பேயையெல்லாம் ஞானம் என்னும்

வாளாலே அறுத்துத் தள்ளி”

Be a hero. Always say, “I have no fear.”
Tell this to everyone — “Have no fear.” –Swami Vivekananda

 

“இன்னும் ஒரு முறை சொல்வேன் பேதை நெஞ்சே

எதற்குமினி உலைவதிலே பயன் ஒன்றில்லை;

முன்னர் நமது இச்சையினாற் பிறந்தோம் இல்லை;

முதல் இறுதி இடை நமது வசத்தில் இல்லை;

மன்னும் ஒரு தெய்வத்தின் சக்தியாலே

வையத்தில் பொருள் எல்லாம் சலித்தல் கண்டாய்!”

 

“The earth is enjoyed by heroes”—this is the unfailing truth. Be a hero. Always say, “I have no fear.”– Swami Vivekananda

 

பேய்கள் பற்றி பாரதியும் விவேகானந்தரும்

“நெஞ்சு பொறுக்குகுதில்லையே—இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

அஞ்சிஅஞ்சிச் சாவார்—இவர்

அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே!

வஞ்சனைப் பேய்கள் என்பார் –இந்த

மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார்;

அஞ்சுது முகட்டில் என்பார்—மிகத்

துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்.”

 

Be strong! Don’t talk of ghosts and devils. We are the living devils. The sign of life is strength and growth. The sign of death is weakness. Whatever is weak, avoid! It is death. If it is strength, go down into hell and get hold of it! There is salvation only for the brave.—–Swami Vivekananda

“அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்

உச்சத்திற் கொண்டாரடீ—கிளியே

ஊமைச் சனங்களடி!

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றும் இல்லா

மாக்களுக்கோர் கணமும்—கிளியே!

வாழத் தகுதி உண்டோ?”

****

பயம்தான் பேய்

“பயம் எனும் பேய்தனை அடித்தோம்—பொய்மைப்

பாம்பைப் பிளந்துயிர் குடித்தோம்;

வியன் உலகனைத்தையும் அமுதென நுகரும்

வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம்”

 

மரணம் பற்றி பாரதியும் விவேகானந்தரும்

“ஆன்ம ஒளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு

அச்சமும் உண்டோடா?—மனமே!

தேன் மடை இங்கு திறந்தது கண்டு

தேக்கித் திரிவமடா!”

 

“Many times I have been in the Jaws of death, starving, footsore, and weary; for days and days I had had no food, and often could walk no farther; I would sink down under a tree, and life would seem to be ebbing away. I could not speak, I could scarcely think, but at last the mind reverted to the idea: “I have no fear nor death; never was I born, never did I die; I never hunger or thirst. I am it! I am it! The whole nature cannot crush me; it is my servant. Assert thy strength, thou Lord of lords and God of gods! Regain thy lost empire! Arise and walk and stop not! ” And I would rise up, reinvigorated; and here I am today, living! Thus, whenever darkness comes, assert the reality, and everything adverse must vanish.

Fear not, and it is banished. Crush it, and it vanishes. Stamp upon it, and it dies.”

Swami Vivekananda

 

“அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்

அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்”

****

“சாகத் துணியிற் சமுத்திரம் எம்மட்டு

மாயையே—இந்தத்

தேகம் பொய் என்றுணர் தீரரை என்

செய்வாய்1—மாயையே”

****

“காலா! உனை நான் சிறு புல் என மதிக்கிறேன்; என்றன்

காலருகே வாடா—சற்றே உனை மிதிக்கிறேன்”

****

நிலவைப் பற்றிப் பாடும் பாடலில் கூட

“அச்சப் பேயைக் கொல்லும் படையாம்

வித்தைத் தேனில் விளயும் களியாய்

வாராய், நிலவே, வா” – என்று பாரதி பாடுகிறார்.

 

நீங்கள் பாரதிப் பித்தன் என்றால் கீழ்கண்ட தலைப்புகளையும் காண்க:

(1).சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே (2).பாரதியுடன் 60 வினாடிகள் (3) பாரதி நினைவுகள் Go to nilacharal.com for items 2 and 3 (4) பாரதி பாட்டில் பழமொழிகள் (5) 60 second Interview with Swami Vivekananda

Pictures from Dinamalar and Facebook. Thanks. Contact: swami_48@yahoo.com

சிட்டுக்குருவி,சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

தேசிய கவி சுப்ரமண்ய பாரதி உயிர் வாழ்ந்த காலத்தில் மிகவும் வறுமையில் வாடினார். அவரது மனைவி சமைக்க அரிசி இல்லாமல் அடுத்த வீட்டில் கடன் வாங்கி வந்தாள். அரிசியைக் கண்ணில் கண்ட பாரதி அதே நேரத்தில் முற்றத்தில் குருவிகளையும் கண்டார். உடனே செல்லாம்மவிடமிருந்து தானியத்தை வாங்கி குருவிகளுக்காக இரைத்தார். செல்லம்மாவின் முகம் வாடியது. குருவிகள் உண்டது கண்டு பாரதியின் முகம் ஆனந்தத்தில் மலர்ந்தது!

காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும்
மலையும் எங்கள் கூட்டம் என்று பாடிய கவிஞனுக்கு,

காக்கைச் சிறகினிலே நந்தலாலா
உந்தன் கரிய நிறம் தோன்றுதையா நந்தலாலா என்று பாடிய கவிஞனுக்கு,
யார் பாடம் கற்பிப்பது?

பலர் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டார்கள். பாரதியோவெனில் இயற்கையின் சிரிப்பில் இறைவனைக் கண்டான். சிட்டுக் குருவி யிடமிருந்து ஆன்மீக பாடங்களையும் கற்றான். அவரது ஆன்மீக தாகத்தைக் காட்டும் பாடல் இதோ:

விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்
சிட்டுக் குருவியைப் போலே.

எட்டு திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு— (விட்டு)

பெட்டையினோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையிலாதொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டை தரும் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த உணவு கொடுத்து அன்பு செய்து இங்கு—(விட்டு)

முற்றத்திலேயும் கழனி வெளியிலும்
முன் கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்ற பொழுது கதை சொல்லித் தூங்கிப்பின்
வைகறை ஆகு முன் பாடிக் களிப்புற்று (விட்டு)

தத்தாத்ரேயர் என்ற ரிஷி இயற்கையில் தான் கண்ட எல்லாவற்றிலும் ஒரு நல்ல பாடத்தைக் கற்றதை பாகவதம் எடுத்துக்கூறும். (Please read my article Let Nature Be Your Teacher: William Wordswoth and Dattatreya in my blogs). வோர்ட்ஸ்வொர்த் என்ற ஆங்கிலக் கவிஞனும் ஏட்டுப் படிப்பு எதற்கும் உதவாது. புத்தகங்களை தூக்கி எறிந்துவிட்டு வெளியே வாருங்கள் என்கிறான். இவை எல்லாவற்றையும் பாரதி செயலிலேயே செய்து காட்டிவிட்டான்.

குரு கோவிந்த சிம்மன் கதை

சீக்கியர்களில் கடைசி குருவான குரு கோவிந்த சிங் மாபெரும் வீரன். மொகலாயப் பேரரசன் அவுரங்க சீப்பின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவன். எத்தனை கஷ்டங்கள் வந்தபோதும் அவைகளைத் துச்சமாக மதித்தவன். அந்த குரு கோவிந்த சிம்மன் ஒரு சிட்டுக் குருவியைக் கூட பருந்தாக்கிக் காட்டுவேனென்று வீர முழக்கம் செய்தார். கால்சா என்னும் சீக்கிய வீரர்களின் அமைப்பை நிறுவி வீரப் படைகளை நிறுவினார். அவர் கூறிய வாசகங்களை பாரதியார் குரு கோவிந்த சிம்மனைப் பற்றி பாடிய பாடலில் ஈயைக் கருட நிலைக்கு ஏற்றுவேன் என்று சிம்ம கர்ஜனை செய்கிறார்.

குரு கோவிந்தன் உண்மையிலேயே இப்படிச் செய்து காட்டினார். அவர் கால்சா வீரர்களுக்காக செய்த அமிர்தம் ஒரு சில துளிகள் கீழே சிந்திவிட்டன. அதைச் சுவைத்த குருவிகள் உடனே வீறு கொண்டெழுந்து வானில் சீறிப் பாய்ந்தன. கழுகுகளை ஓட ஓட விரட்டின. இதைக் கண்ட வீரர்கள் குருவின் மகத்தான சக்தியை உணர்ந்தனர்.

கோவிந்த சிம்மன் எப்போதும் ஒரு வெள்ளைப் பருந்தை வைத்திருந்தார். ஒரு முறை அவர் ஒரு முஸ்லீம் கனவானின் தோட்டத்துக்குப் போனார். அந்த ஆள் ஒரு கறுப்பு பருந்தை வைத்திருந்தார். கோவிந்த சிம்மனின் வெள்ளைப் பருந்தின் மீது ஆசை வந்தது. ஒரு தந்திரத்தின் மூலம் அதைக் கைப்பற்ற எண்ணினான். இரண்டு பருந்துகளுக்கும் போட்டிவைப்போம். தோல்வி அடைந்தவர் அவரது பருந்தை மற்றவருக்கு கொடுத்து விட வேண்டும் என்ற நிபந்தனையும் போட்டார்.
குரு கோவிந்தருக்கு எதிராளியின் உள்நோக்கம் புரிந்தது. உடனே பருந்து என்ன? குருவிகளை அனுப்புகிறேன் அதனோடு உங்கள் பருந்து போடியிடட்டும் என்றார். அந்த முஸ்லீம் கனவானோ உம்முடைய குருவிகள் என் பருந்துக்கு உணவாகிவிடும் என்று சொல்லி சிரித்தார்.
கோவிந்த சிம்மன் மரத்தில் இருந்த இரண்டு சிறிய குருவிகளைப் பிடித்து பருந்தை விரட்ட அனுப்பினார். இரண்டு குருவிகளும் பருந்தை படுகாயப் படுத்தி ஒரு கிலோ மீட்டருக்கு விரட்டிச் சென்றன. படு காயம் அடைந்த பருந்து கீழே விழுந்து இறந்தது. அப்போது குரு கோவிந்தர் சொன்ன சொற்கள் சீக்கியர்களுக்கு உத்வேகம் அளிக்கும் சொற்களாகும்.
சிட்டுக் குருவிகளைப் பருந்துகளாக்கி சண்டையிட வைப்பேன். அப்போதுதான் என்பெயர் கோவிந்த சிம்மன். ஒன்றே கால் லட்சம் பேர் வந்தாலும் அவை எதிர்த்துப் போராடும் என்றார்:
சிடியான் சே பாஜ் பனாவோ

சவா லாக் சே ஏக் லடாவோ
தப் குரு கோவிந்த நாம் சுனாவோ

இதையே சீக்கிய குரு கூறிய சொற்களிலேயே காணலாம்:

சிரியோன் சே மே பாக் லராவுன்
தபே கோவிந்த சிம் நாம் கஹாவுன்

தமிழ் திரைப் படங்களில் சிட்டுக் குருவி

தமிழ் திரைபடங்களும் சிட்டுக் குருவிகளைப் பற்றி பாடல்கள் பாடி அவைகளின் மூலம் கருத்துக்களைப் பரப்பியுள்ளன. சிட்டுக் குருவிக்கு என்ன கட்டுப்பாடு, தென்றலே உனக்கெது சொந்த வீடு, உலகம் முழுதும் பறந்து பறந்து ஊர் வலம் வந்து விளையாடு (படம்: சவாலே சமாளி) என்ற பாடலில் பாரதி பாடலின் தாக்கத்தைக் காண்கிறோம்.
ஏ குருவி குருவி (படம்: முதல் மரியாதை), சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது ( படம்: நல்லவனுக்கு நல்லவன்), சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா, என்ன விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பல்லே ( படம்: டவுன் பஸ்), சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே (படம்: புதிய பறவை) ஆகிய பாடல்கள் தமிழர்களின் னினைவில் நீங்கா இடம் பெற்றுவிட்டன.

பஞ்சதந்திரக் கதைகளிலும் கூட குரங்குக்கு புத்திமதி சொன்ன குருவிகளின் கூட்டுக்கு நேர்ந்த கதி மூலம் ஒரு நீதி புகட்டப்படுகிறது. சங்க இலக்கியத்திலும் குருவிகளைப் பற்றி நிறைய குறிப்புகள் இருக்கின்றன.

இப்படி 2000 ஆண்டுகளுக்கு நமக்கு ஊற்றுணர்ச்சி தரும் சிட்டுக் குருவி இனம் வெகு வேகமாக அழிந்துவருவது கவலை தருகிறது. சிட்டுக் குருவிகளை காப்பது நம் கடமை.
**************