மறைந்திருந்தே பார்க்கும் மருமம் என்ன? ஒரு யாழ்ப்பாணக் கதை (Post No 2943)

anthaka kavi 1

Written by London swaminathan

 

Date: 4 July 2016

Post No. 2943

Time uploaded in London :– 16-34

( Thanks for the Pictures)

 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

இது, மன்னன் ஏலேலனும் அந்தகக்கவி வீரராகவனும் சந்தித்தது பற்றிய  சுவையான கதை. கண்கள் பார்க்க முடியாதபோதும் ஏலேலன் திரை மறைவிலிருந்து கண்டதைக் கண்டுபிடித்துப் பாடியவுடன் ஏலேலன் அசந்தே போய்விட்டான். மனைவியுடன் கோபித்துக்கொண்ட கவிஞருக்கு ராஜ உபசாரம் கிடைத்தது.

 

 

கதை சுவையானாலும், ஒரு குறை உளது. அது காலவழுவமைதி ஆகும். ஏலேலன் காலம் வேறு. அந்தகக்கவியின் காலம் வேறு. இரண்டு கவிஞர்கள் ஒரே பெயருடன் இருந்திருக்கலாமே என்று வாதாடக் கூடும். ஆயினும் அந்தகக் கவிராயரின் பாடல், நடை முதலியவற்றைக் காணும்போது அது தற்காலத் தமிழ் நடையாகவே இருக்கிறது. ஏலேலன் என்ற மன்னனோ 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன்.

 

இது யாழ்ப்பாண சரிதம் என்ற பழைய நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

 

anthakakavi 2

anthaka kavi 4

 

anthaka kavi5

 

anthaka kavi 6

–subham–

 

நாஸ்தீகருக்கு மனுவும் வள்ளுவரும் தரும் சவுக்கடி! (Post No.2940)

valluvar door

Written by London swaminathan

Date: 3 July 2016

Post No. 2940

Time uploaded in London :– 12-48

( Thanks for the Pictures)

 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

punul valluvar

லோப: ஸ்வப்னோ த்ருதி: க்ரௌர்யம் நாஸ்திக்யம் பின்னவ்ருத்திதா

யாசிஷ்ணுதா ப்ரமாதஸ்ச தாமசம் குண லக்ஷணம்

மனு 12-33

பேராசை, தூக்கம், புலனின்ப கட்டுப்பாடில்லாமை, கொடுமை செய்தல், நாத்திகம், தொழில் செய்யாமை, பிச்சை எடுத்தல், சோம்பேறித்தனம் ஆகியன தாமச குண லட்சணம்.

 

வள்ளுவனும் நாத்திகனை பேய்ப்பயல் என்று திட்டுகிறான்:

 

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து

அலகையா வைக்கப்படும் (குறள் 850)

 

உலக மக்கள் அனைவரும் உண்டு என்று சொல்லுவதை, ஒருவன் இல்லை என்று சொன்னால் அவனை மனித வடிவில் வந்த பேய் என்று கருதவேண்டும்

 

கண்ண பிரானும் கீதையில் இதையே சொல்லி இருக்கிறான்:–

சம்சயாத்மா விநஸ்யதி  சந்தேகபடுபவன் அழிந்தே போய்விடுவான் என்கிறார். மேலும் அத்தகையோருக்கு இக,பர லோகங்களும் இல்லை; சுகமும் இல்லை என்பான் கண்ணன் (4–40)

 

மாணிக்கவாசகரோ நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்’ என்று திட்டுவார்.

manikkavasagar,US

இவை எல்லாம் தமோ குண லட்சணங்கள்.

 

XXX

 

 

மனுவானவர் சத்துவ, ராஜச குணங்களையும் விளக்குகிறார். இவை பகவத் கீதையில் மிக விரிவாக உள்ளது (அத்தியாயம் 14, குணத்ரயவிபாக யோகம்)

 

வேதாப்யச: தப: ஞானம் சௌசம் இந்த்ரிய நிக்ரஹ:

தர்மக்ரியா ஆத்மசிந்தா ச சாத்விகம் குணலக்ஷணம்

மனு 12-31

வேதம் ஓதுதல், தவம், ஞானம், தூய்மை, புலனடக்கம், அறச்செயல் (தர்ம கைங்கர்யம்), ஆத்மசிந்தனை (அகநோக்கு) ஆகியன சத்வ குணத்தின் லட்சணங்கள்

XXX

 

ஆரம்பருசிதா தைர்யம் சத்கார்ய பரிக்ரஹ:

விஷயோபசேவா ச அஜஸ்ரம்  ராஜசம் குணலக்ஷணம்.

தொழிலில் சூரத்தனம், நிலையற்ற தன்மை, கெட்ட செயல்களில் ஈடுபடுதலில் உறுதி, புலன் இன்ப நாட்டம் ஆகியன ராஜச குண லட்சணம்.

XXX

 

இறுதியாக மூன்று குணங்களின் முக்கியக் கொள்கை என்ன என்பதையும் மனு, சுருக்கமாக ஒரே பாடலில் சொல்லிவிடுகிறார்.

 

தாமச குணமுடையோரின் லட்சணம் புலனின்பம், ராஜச குணம் உடையோரின் லட்சணம் செல்வத்தை சேகரித்தல், சத்துவ குணம் உடையோரின் லட்சணம் அறப் பணி செய்தல்.

தமசோலக்ஷணம் காமோ ரஜச: அர்த்தம் உச்யதே

சத்வஸ்ய லக்ஷணம் தர்ம: ஸ்ரோட்யம் ஏஷாம் யதோத்தரம்

மனு 12-38

 

 

-SUBAM-

 

எச்சரிக்கை! ஒன்பது பேர் உங்களை கண்காணிக்கிறார்கள்! (Post No 2938)

hindu wedding

Written by London swaminathan

 

Date: 3 July 2016

Post No. 2938

Time uploaded in London :– 6-38 AM

( Thanks for the Pictures)

 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

egyptian

Egyptian Inscription

 

9 கர்ம சாக்ஷிகள்

சூர்ய: சோமோ யம: காலோமஹாபூதானி பஞ்ச ச

ஏதே சுப அசுபஸ்ய இஹ கர்மனோ நவ சாக்ஷிண:

 

நாம் ரகசியமாக ஒரு காரியத்தைச் செய்தால் யாருக்குத் தெரியப்போகிறது என்று நினைத்துக்கொண்டு தனி அறையிலோ, தனி இடத்திலோ ஒரு காரியத்தைச் செய்கிறோம். ஏனெனில் இரண்டாவது ஆள் ஒருவருக்குத் தெரிந்தால் அதன் பெயர் “ரஹசியம்” அல்ல என்பதும் அந்த ஆள் எவ்வளவுதான் நெருங்கிய உறவினராக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் அது வெளியே பரவ வாய்ப்பு உண்டு என்றும் நமக்குத் தெரியும். ஆனால் இந்துமதம் என்ன சொல்கிறது என்றால் நீங்கள் செய்யும் எதுவுமே ரகசியம் அல்ல; ஏனெனில் ஒன்பது பேர் எப்போதும் உங்களைக் கண்காணிக்கிறார்கள்; அந்த ஒன்பது சாட்சிகளை மீறி எதையும் செய்ய முடியாது.

 

யார் அந்த ஒன்பது பேர்?

 

பஞ்ச பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்(வெற்றிடம்); இது தவிர சூரியன், சந்திரன்,யமன், காலம்(நேரம்).

 

பஞ்சபூதம் என்று சொல்லிவிட்டாலேயே எல்லாம் அடங்கிவிடும். இருந்த போதிலும் சூரியனும், சந்திரனும் நன்கு தெரிந்த பிரகாசமான பொருள் என்பதால் அதைச் சேர்த்தனர். அல்லது இரவும் பகலும் — 24 மணி நேரமும்– என்று பொருள் கொள்ளவும் அவை உதவும்.

 

யமன் என்பவன் யார்? அவனுடைய கணக்குப்பிள்ளை சித்திர குப்தன் என்பர் இதன் பொருள் என்ன வென்றால் நாம் செய்யும், நாம் நினைக்கும் ஒவ்வொரு விஷமும் ஒரு சித்திரத்தை — படத்தை உருவாக்குகிறது. அந்தப் படம் நமக்குத் தெரியாமல் (குப்த=ரகசியமாக) இருக்கிறது. இந்த விஞ்ஞான உண்மையையே இந்துக்கள் ‘சித்திர’ ‘குப்த’ என்றனர்.

 

ஒரு கொசு நீரில் உட்கார்ந்தால் கூட நீரில் அதிர்ச்சி ஏற்பட்டு வளையங்கள் உண்டாகும். ஆனால் நமக்கு கண்ணுக்குத் தெரியாது.அது கொசுவுக்குத் தெரியும். ஒரு எறும்பு ஊர்ந்து சென்றால்கூட ஒரு வழித்தடம் உண்டாகும். அது நமக்குத் தெரியாது. எறும்புக்கு அந்தப் பாதை தெரியும். அதுபோல நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ண்மும் ஒரு படத்தை உண்டாக்கும்; அது நமக்குத் தெரியாது; சித்திரகுதன் அல்லது யமனுக்குத் தெரியும்.

 

சித்திரகுபதன் அல்லது யமன் என்பவன் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர். நம்முடைய எல்லா நல்ல, கெட்ட செயல்கள், எண்ணங்கலையெல்லாம் கூட்டிக் கழித்து பாவ புண்ணியங்களைப் பட்டியல் போட்டுவிடுவர்.

nabonidus-praying-to-the-sun-moon-and-venus

Nabonidus praying to Sun, Moon and Venus

நீர், நெருப்பு, ஆகாயம் முதலியன இல்லாத இடமே இல்லை. அவர்கள் நம்மைக் கவனிக்கிறார்கள் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. இந்துக்களுத் தான் இந்த விஞ்ஞான உண்மைகள் தெரியும். இதுவரை வேறு யாருக்கும் அது தெரியாது.

 

நீரை மந்த்ரம் மூலம் அனுகுண்டாக மாற்றும் வல்லமை நம் ரிஷி முனிவர்களுக்கு இருந்தது. ஒரு உள்ளங்கை நீரை மந்திரம் மூலம் சாபமாகவோ வரமாகவோ மாற்றும் அரிய வித்தை அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதனால்தான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொடுத்தாலும், தானங்களை செய்தாலும் நீரைப் பயன்படுத்தினர். சாபம் கொடுக்கவும் வரம் கொடுக்கவும் நீரைப் பயன்படுத்தினர்.

 

நெருப்பு என்பது இல்லாமல் மனிதன் முன்னேறமுடியாது. உடம்பிலுள்ள அக்னி ஜடராக்னி. வெளியே உள்ள அக்னி சாட்சியாக திருமணம் செய்துவிட்டால் அதை மீறக்கூடாது. பழைய அரசர்கள் அக்னி சாட்சியாக உடன்படிக்கை செய்ததை நமது கல்வெட்டுகள் கூறுகின்றன. அக்கினி சாட்சியாக கோவலன் – கண்ணகி திருமணம் செய்து கொண்டதை தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் சொல்லும். நீர் ஆறாக ஓடும்படி தாரைவார்த்து தானம் செய்ததை சங்க இலக்கியம் செப்பும்.

 

கல்வெட்டுகளில் “சூரியர் சந்திர சாட்சியாக” என்ற சொற்களையோ இரண்டின் படங்களையோ காணலாம்.

 

காலம் (நேரம்) என்பது நம்மைக் கவனிக்கிறது. அதை நிறுத்த யாராலும் முடியாது. கடிகாரம் ஓடிக்கொண்டிருபாது போல ஒவ்வொன்றும் கணக்கிடப்படுகிறது.

 

persian 500 bce

Sun and Moon in Persian Inscription 500 BCE

விண்ணில் உலவும் செயற்கைக் கோள்கள், நம் வீட்டு கொல்லைபுறத்தைக் கூடப் படம் பிடிக்கும்; கூகுள் மேப் மூலம் நம் நண்பர் வீட்டிற்குள் யார் வந்து செல்கிறார்கள் என்பதை நம் வீட்டுக் கம்ப்யூட்டரிலேயே காணமுடியும்; சி.சி. டிவி மூலம் கொலைகாரனைக் கூடக் கண்டுபிடிக்கமுடியும். இன்ப்ரா ரெட் காமிரா, பைனாகுலர் மூலம் இருட்டில் நடப்பதையும் காணமுடியும். ஆனால் இவைகளிடமிருந்து தப்பிக்க வழி உண்டு. இந்துக்கள் சொன்ன ஒன்பது கர்ம சாட்சிகளிலிருந்து தப்பிக்க யாராலும் முடியாது!!!

 

ஆகவே ஒன்பது சாட்சிகளுக்குப் பயந்து நாம் நல்ல காரியங்களையே செய்ய வேண்டும்; நல்ல காரியங்களையே எண்ண வேண்டும்.

 

ஒன்றே செய்க; அதுவும் நன்றே செய்க; அதையும் இன்றே செய்க.

 

–சுபம்–

 

கலியுகத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!! (Post No 2936)

yugas

Written by London swaminathan

 

Date: 2 July 2016

Post No. 2936

Time uploaded in London :–9-56 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

கடைகளுக்குப் போனால் “இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்” என்று பல பொருள்கள் மீது எழுதியிருப்பதைக் காண்கிறோம்.

 

அதே போல “ஐந்து பொருள் வாங்கினால் இவ்வளவு தள்ளுபடி, பத்து வாங்கினால் இவ்வளவு தள்ளுபடி” என்றெல்லாம் விளம்பரங்களைப் படிக்கிறோம்.

 

இதுபோலக் கடவுளும் கூட பக்தர்களுக்கு தள்ளுபடி சலுகைகளை அறிவிக்கிறார். இது விஷ்ணு புராணத்திலுள்ள விஷயம். புராணங்களில் மிகவும் பழமையானதும், புகழ்பெற்றதும் ஆகும். ஆகையால் இந்த செய்திக்கு மதிப்பு அதிகம்.

 

வியாசரிடம் போய்  முனிவர்கள் சந்தேகம் கேட்ட போது அவர் கங்கையில் குளித்துவிட்டு இந்த தகவலைத் தந்தார்.

 

கிருதயுகத்தில் தவம், தானம், பிரம்மசர்யம் முதலிய சிறந்த குணங்களுடன் இருப்பவர்க்கு நீண்டகாலம் தவம் செய்து கிடைக்கக்கூடிய பலன் கலியுகத்தில் சுலபமாகக் கிடைத்துவிடும்.

 

கலியுகத்தில் சங்கமே சக்தி என்பர். ஆதாவது கூட்டாகச் செய்யும் காரியத்துக்குப் பலன் அதிகம். அது மட்டுமல்ல யாக யக்ஞாதிகள் செய்யாமல் வெறும் “சிவ சிவ” அல்லது “ராம ராம” என்று நாம ஜபம் செய்தாலேயே புண்ணியம் சம்பாதித்துவிடலாம்.

 

 

Yugas

 

யத்க்ருதே தசபி: வர்ஷை: த்ரேதாயாம் ஹாயனேன யத்

த்வாபரே யது ச  சமாசேன அஹோராத்ரேண தத்கலௌ

 

தபஸோ ப்ரஹ்மசர்யஸ்ய ஜபதிஸ்ச பலம் த்விஜா:

ப்ராப்னோதி புருஷஸ்தேன கலிகலிஸ்ஸாத்விதி பாஷிணம்

விஷ்ணு புராணம் அங்கம் 6, அத்தியாயம் 2

 

கிருத யுக பத்து வருஷ தவம் = திரேதா யுகத்தில் ஒரு வருஷம் = துவாபர யுகத்தில் ஒரு மாஸம் = கலியில் ஒரே நாளுக்கு ஸமமாகும்.

 

தவம், ஜப , பிரம்மசர்ய பலன்களை இந்த ரீதியில் அடைகின்றனர்.

அதாவது ஒர் ரிஷியோ முனிவரோ பத்து வருஷம் தவம் செய்து கிடைக்கும் பலனை, திரேதாயுகத்தில் பிறந்தவர் ஒரு வருஷம் செய்தாலேயே அடைந்து விடுவார்.

 

அதே முனிவர், த்வாபர யுகத்தில் பிறந்திருந்தால் ஒரு மாதம் யாக, யக்ஞங்களைச் செய்தால் போதும்

 

அவரே கலியுகத்தில் பிறந்தால் ஒரே நாள் தவம் செய்தால் போதும்.

எவ்வளவு சலுகை பாருங்கள்!!

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய புராணத்தில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது.

 

உலகிலேயே மிகவும் அறிவியல் பூர்வமாக அமைந்தது இந்துமதம். முரட்டுத் தனமான, பிடிவாதமான கொள்கைகள் இதில் கிடையா. எல்லாம் செயல் முறைக்கு உகந்த மாதிரி, கால, தேச, வர்த்த மானங்களுக்கு அணுசரனையாக சொல்லப்பட்டிருக்கும்.

 

ஜெட் விமானத்தில் பறந்து, அலுவலக வேலைகளைச் செய்பவர்கள் கிருத யுகம் போல 12 ஆண்டு யாகம், 100 ஆண்டு யாகம் முதலியவற்றை செய்ய வேண்டியதில்லை. செய்யவும் முடியாது என்பதும் நம் முன்னோர்களுக்குத் தெரியும்.

 

ஆனால் கடையில் எவ்வளவுதான் சலுகைகளை அறிவித்தாலும், எத்தனை பொருட்களை வாங்குவது என்பது நம் கையில்தான் உள்ளது. அதாவது அந்த அளவுக்கு பர்ஸில் காசு வேண்டும் அல்லது கிரெடிட் கார்டில் உத்தரவாதம் வேண்டும். அது போல, இவ்வளவு சலுகைகளை கடவுள் அறிவித்தாலும் நல்ல குணமும் நல்ல எண்ணமும் தூய்மையும் வேண்டும். அப்போதுதான் கடவுள் அறிவித்த சலுகை, நமக்குக் கிடைக்கும்.

 

கலியுகத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!!

 

–சுபம்–

 

 

இளம் பெண்களும், கிழட்டு கணவன்மார்களும்! (Post No.2752)

women9

Translated  by London swaminathan

Date: 24 April 2016

 

Post No. 2752

 

Time uploaded in London :– 12-15

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

woman mirror2
பெண்கள் பற்றிய 150 சம்ஸ்கிருதப் பழமொழிகள்- பகுதி 6

87.உயர்குலப் பெண்களின் மனது பூப்போல மென்மையானது

புரந்த்ரீணாம் சித்தம் குசும சுகுமார ஹி பவதி –உத்தம ராம சரிதம்

Xxx

88.காதல் வயப்பட்ட, உயர்குலப் பெண்களின் மனது, புரிந்து கொள்ளமுடியாதது.

புரந்த்ரீணாம் ப்ரேம  க்ரஹிலம் அவிசாரம் கலு மம: –கௌமுதீ மித்ரானந்த

Xxx

89.ஒரு பெண்ணுக்கு கணவனின் மரணம்தான் முதல் அடி.

ப்ரதமம் மரணம் நார்யா  பர்துர் வைகுண்யம் உச்யதே- வால்மீகி ராமாயணம்

Xxx

90.அடாவடியான பெண்களுக்கும் கூட, கணவன் மீது கோபம் கொள்ள சரியான காரணம் தேவைப்படுகிறது.

ப்ரபவந்த்யோபி ஹி பர்த்ருஷு காரண கோபா: குடும்பின்ய: — மாளவிகாக்னிமித்ரம் 1-18, காளிதாசன்

Xxx

91.மனைவியர் , கணவன்களைப் பின்பற்றுவதை முட்டாள்களும், அறிவர்.

ப்ரதமா: பதிவர்த்மகா இதி ப்ரதிபன்னம் ஹி விசேதனைரபி – குமார சம்பவம் 4-33, காளிதாசன்

Xxx

92.கணவனின் அன்பு குறையும்போது, பெண்கள் பெருமூச்சு விடுகிறார்கள்.

ப்ராணாஸ்தூர்ணம் ஹி நாரீணாம் ப்ரியப்ரணயதானவே – ப்ருஹத் கதா மஞ்சரி

Xxx

 

women23

93.வயதான கணவர்களை, அழகான இளம் பெண்கள், திறமையாக சமாளிக்கின்றனர்.

ப்ராய: ப்ராகல்ப்யம் ஆயாந்து தருண்ய: ஸ்தவிரே வரே- ராமாயண மஞ்சரி

Xxx

94.புதல்வியரின் விஷயங்களை மனைவியின் கண்கள் ஊடாகவே கணவர்கள் காண்கின்றனர்.

ப்ராயேண க்ருஹிணீ நேத்ரா: கன்யார்தேஷு குடும்பின: -– குமார சம்பவம், 6-85, காளிதாசன்

Xxx

 

95.காதல் வயப்பட்ட கணவனுக்கு, மனைவியின் கெட்டபுத்தியும் கண்ணுக்குத் தெரிவதில்லை.

ப்ராயேண பார்யாத் ஔசீல்யம்  ஸ்நேஹாந்தோ நேக்ஷதே ஜன: – கதாசரித் சாகரம்

Xxx

96.உயிரையும் விட மேலானவள் மனைவி.

பார்யா ப்ராணேப்யோ அபி அதிகப்ரியா– கதாசரித் சாகரம்

Xxxx

97.பார்யா ரூபவதீ சத்ரு: – சாணக்யநீதி 9-12

அழகான மனைவி – ஒரு எதிரி

Xxx

98.துன்பப்படும் அனவருக்கும் மூத்த சகோதரரின் மனைவி, தாயாராகி விடுகிறார்.

ப்ராத்ருஜாயா ஹி சர்வேஷாம்  தீனானாம்  வாமலோசனா – கஹாவத்ரத்னாகர்

Xxx

99.உங்கள் மனைவியைக் காப்பாற்றுவதுபோல, மாற்றார் மனைவியருக்கும் பாதுகாப்பு அவசியம்.

யதா தவ ததா அன்யேஷாம் தாரா ரக்ஷ்யா – வால்மீகீ ராமாயணம் 5-21-8

Xxx

100.மனைவியர் இருக்கும் வரை, வேலைகளும் இருக்கத்தான் செய்யும்

யாவத் க்ருஹிணீ, தாவத் கார்யம்- கஹாவத்ரத்னாகர்

Xxx

IMG_3350

101.சக்களத்தி என்பவள், துன்பத்தின் ஊற்று

சபத்னீ சர்வதா சிந்த்யா — கதாசரித் சாகரம்.

Xxx

102.காதல் நோய்க்கு அருமருந்து, காதலியின் – அமுதம் போன்ற அணைப்புதான்.

ஸ்மர ஜ்வர சிகித்சா ஹி தயித ஆலிங்கன அம்ருதை: – ப்ருஹத் கதா மஞ்சரி

Xxx

103.வெண்சாமரம் போன்ற ப்ரகாசமான, புன்னகை மிளிரும் அன்புள்ள மனைவியை யார்தான் போற்றமாட்டார்?

ஸ்மேர சாமர  ஹசின்ய: வல்லபா: கஸ்ய ந ப்ரியா:? – பாரத மஞ்சரி

–சுபம்–

 

அழகு பற்றிய 20 சம்ஸ்கிருத பழமொழிகள் (Post No 2649)

 

 

art of k2

Compiled by london swaminathan

Date: 20 March 2016

Post No. 2649

Time uploaded in London :– 15-59

(Thanks for the Pictures; they are taken from various sources)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

தமிழ் மொழியாக்கம் – லண்டன் சுவாமிநாதன்

 

avudaiyar koil pinna alzaki

1.ஆதரோ ஜாயதே த்ருஷ்டே தேஹினாம் சாரு வஸ்துனி – பாரத் கதா கோச
அழகான பொருட்களைப் பார்க்கையில், மரியாதை கொடுக்கத் தோன்றுகிறது

2.இந்தோ: களங்கோ தோஷஸ்ச தஸ்ய யேனைஷ நிர்மித: -கதா சரித் சாகரம்
சந்திரனிலுள்ள களங்கத்திற்கு இறைவனே பொறுப்பு; நிலவு அல்ல.

3.கிமிவ ஹி மதுராணாம் மண்டனம் ந அக்ருதீனாம் – சாகுந்தலம் 1-18
அழகான உருவத்துக்கு எதுதான் அழகைச் சேர்க்காது?

4.குரூபா ரூப சிந்தகா: – பரத சங்க்ரஹ
அழகில்லாதவர்கள்தான், அழகைப் பற்றிக் கவலைப்படுவார்கள்.

5.க்ஷணே க்ஷணே யன்னவதாமுபைதி ததேவ ரூபம் ரமணீயதாயா: – சிசுபாலவதம் 4-17
ஒவ்வொரு நொடியிலும் புதுமையாக இருப்பதே, அழகின் இலக்கணம்.

 

2lotus bloom

 

6.ந ரூபம் ஆஹார்யம் அபேக்ஷதே குணம் – கிராதர்ஜுனீயம் 4-23
அழகானவருக்கு, வேறு அணிகலன்களே தேவை இல்லை.
7.ந ஷட்பத ஸ்ரேணிபிர் ஏவ பங்கஜம் சசைவலாசங்கமபி ப்ரகாசதே – குமாரசம்பவம் 5-9
சேற்றில் முளைத்த செந்தாமரைக்கு, அதைச் சுற்றி வட்டமிடும், தேனீக்கள் மட்டும்தாம் அழகு சேர்க்கிறது என்று எண்ணவேண்டாம். அதைச் சுற்றியுள்ள நீர்த்தாவரங்களும் அழகு செய்யும்.

8.ந ஹி கமனீயானி குசுமானி சிரம் ரத்யாயாம் திஷ்டந்தி.
அழகான மலர்கள், சாலை ஓரத்தில் நீண்ட நேரம் நிலைத்து நிற்கா.

9.ந ஹ்யாக்ருதி:சுசத்ருசம் விஜஹாதி வ்ருத்தம் – மிருச்சகடிகம் 9-16
உடற்கட்டைப் போல கவரக்கூடியது வேறு எதுவுமில்லை.

10.யதேவ ரோசதே யஸ்மை பவேத தத் தஸ்ய சுந்தரம் – ஹிதோபதேசம் 2-53
யாருக்கு எது மிகவும் பிடிக்குமோ, அதுவே அவருக்கு அழகாகத் தோன்றும்.
தமிழ் மொழியாக்கம் – லண்டன் சுவாமிநாதன்

 

bindi, India times

11.யா யஸ்யாபிமதா நாரீ சுரூபா தஸ்ய சா பவேத் –கதா சரித் சாகரம்
எல்லா மனைவியரும், அவரவர் கணவரின் கண்களில் மிக அழகானவர்.

12.யா யஸ்யாபிமதா லோகே சா தஸ்ய அதிக ரூபிணீ – பாரத் கத மஞ்சரி
ஒருத்தியை ஒருவன் விரும்பிவிட்டால், அவளே அவனுக்கு பூலோக ரம்பை!

13.ரம்யாணாம் விக்ருதிபிரபி ஸ்ரியந்தநோதி – கிராதர்ஜுனீயம் 7-5
அழகான எதுவும் நிலை பிறண்டாலும் அழகாக இருக்கும். (அழகான பெண்ணின் கேசம், காற்றில் பறந்து கலைந்தாலும் அதுவும் அழகுதானே!).

14.வினா கண்டாடணத்காரம் கஜோ கச்சன்ன சோபதே.
ஜில், ஜில் மணி இல்லாவிடில், யானைக்கும் அழகு குறைவுதான்.

15.சர்வ ஜன மனோபிராமம் கலு சௌபாக்யம் நாம – ஸ்வப்னவாசவதத்த
ஒருவரிடம் செல்வம் இருக்கும்வரை, எல்லோருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்.

 

elephant blaring 2

16.சர்வ அவஸ்தாசு சாருதா சோபாம் புஷ்யதி – மாளவிகாக்னிமித்ர
அழகு, எப்போதும் வசீகரிக்கும்

17.சர்வாஸ்வவஸ்தாசு ரமணீயத்வம் ஆக்ருதி விசேஷானாம் – சாகுந்தலம்
அழகான உடற்கட்டுடையோர், எப்போதும் வசீகரிப்பர்.

18.சௌந்தர்யம் கஸ்ய ந ப்ரியம்- கஹாவத்ரனாகர்
அழகிற்கு மயங்காதோர் உண்டோ!

19.ஸ்வபாவ ரமணீயானி மண்டிதான்யதிரமணீயானி பவந்தி – அவிமாரக:
அழகான ஒருவருக்கு அலங்காரம் செய்தால், மேலும் அழகு மிளிரும்.

20.ஸ்வபாவ சுந்தரம் வஸ்து ந சம்ஸ்காரம் அபேக்ஷதே – த்ருஷ்டாந்த சதக
இயற்கையில் அழகான ஒரு பொருளுக்கு, மேலும் அணிகலனோ, அலங்காரமோ தேவை இல்லை.
தமிழ் மொழியாக்கம் – லண்டன் சுவாமிநாதன்

 

IMG_4358

-சுபம்-

 

 

 

மார்ச் 2016 காலண்டர் (மன்மத ஆண்டு மாசி/பங்குனி) Post No.2593

siva's 12 shrines

சூரியன் பற்றிய 31 அருமையான சம்ஸ்கிருத,தமிழ் பழமொழிகள்

Compiled by london swaminathan

Date: 2 March,2016

 

Post No. 2593

 

Time uploaded in London :–  9-20 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

முக்கிய நாட்கள்:- 7 சிவராத்திரி, 9 சூர்ய கிரஹணம், 14 காரடையான் நோன்பு, 22- ஹோலி/காமன் பண்டிகை, 23 பங்குனி உத்தரம், 25 புனித வெள்ளி, மேலை நாடுகளில் ஈஸ்டர் விடுமுறை 25 முதல் 28 முடிய.

 

முகூர்த்த நாட்கள்:- 6, 10, 11,18, 25

அமாவாசை:- 8/9

பௌர்ணமி:- 22/23

ஏகாதசி:- 5, 19

 

sivaya nama

மார்ச் 1 செவ்வாய்க்கிழமை

ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத்

உடல்நலம் பெற சூரியனை வழிபடுக

மார்ச் 2 புதன்கிழமை

அம்போஜினீ லோசன முத்ரணம்  கிம் பானு அவனஸ்தங்கமிதே கரோதி-மிருச்சகடிகம் 10-58

சூரியன் மறையாத போது தாமரை மலர் கண்களை மூடுமா? (குவியுமா)

மார்ச் 3 வியாழக்கிழமை

இந்தனம் அப்கதக்த அபி அக்னி: த்விஷா நாத்யேதி பூஷணம் –சிசுபாலவதம் 2-23

பெரும் விறகுக் குவியலைக் கொண்டு ஜகஜ்ஜோதியாக எரியவிட்டாலும், சூரிய ஒளியை விஞ்ச முடியாது.

மார்ச் 4 வெள்ளிக்கிழமை

சூரியனைக் கண்ட பனி போல

சூரியனைக் கண்ட இருள் போல

மார்ச் 5 சனிக்கிழமை

செங்கதிர் முன்னே வெண்கதிர் அடங்கினது போல

 

 

மார்ச் 6 ஞாயிற்றுக்கிழமை

அப்ராத் விமுக்தஸ்ய திவாகரஸ்ய மரீசய: தீக்ஷ்ணதரா பவந்தி- சுபாஷிதரதனாவளி

மேகமில்லாத நாட்களில் வெய்யில் அதிகம் சுடும்.

மார்ச் 7 திங்கள் கிழமை

உதயந்தம் சூர்யம் சர்வே ப்ரணமந்தி

உதய சூரியனை எல்லோரும் வணங்குகின்றனர்.

மார்ச் 8 செவ்வாய்க்கிழமை

சூரியனைக் கண்ட தாமரை போல

மார்ச் 9 புதன்கிழமை

உதிதே ஹி சஹஸ்ராம்சௌ ந கத்யோதோ ந சந்த்ரமா – சுபாஷித ரத்னகண்டமஞ்சுஷா

சூரியன் உதித்து விட்டால், மின்மினிப்பூச்சியுமில்லை, சந்திரனுமில்லை!

மார்ச் 10 வியாழக்கிழமை

சூரியனுக்கு முன் மின்மினி  போல

 

siva girl

மார்ச் 11 வெள்ளிக்கிழமை

சூரியனைப் பார்த்து நாய் குரைத்தாற் போல

மார்ச் 12 சனிக்கிழமை

சூர்யாபாயே ந கலு கமலம்  புஷ்யதி ஸ்வாமபிக்யாம் – மேகதூதம் 2-18

சூர்யன் அஸ்தமித்தபின்னர், தாமரையின் அழகு அதிகரிக்காது

மார்ச் 13 ஞாயிற்றுக்கிழமை

சூர்யே தபதி ஆவரணாய வ்ருஷ்டே: கல்பேத லோகஸ்ய கதம் தமிஸ்ரா – ரகுவம்சம் 5-13

சூரியன் பிரகாசிக்கையில், அடர்ந்த மேகத்தினால் வந்த இருள், நம் பார்வையை மறைக்க இயலுமா?

மார்ச் 14 திங்கள் கிழமை

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

காவிரிநாடன் திகிரிபோல், பொன்கோட்டு

மேரு வலந்திரிதலான் (சிலப்பதிகாரம்)

மார்ச் 15 செவ்வாய்க்கிழமை

ஆனால் ஆதிவாரம், ஆகாவிட்டால் சோமவாரம் (ஆதிவாரம்=ஞாயிற்றுக்கிழமை)

holi,ht

 

மார்ச் 16 புதன்கிழமை

வர்ஷணம் அனுசரதி சூர்யா தப:

மழைக்குப்பின், சூரியனின் ஆட்சிதான்.

மார்ச் 17 வியாழக்கிழமை

சஹஸ்ரகுணம் உத்ஸ்ரஷ்டும்

ஆதத்தே ஹி ரஸம் ரவி: – ரகுவம்சம் 1-18

கதிரவன் (கடல்) நீரை உறிஞ்சுவது

ஆயிரம் மடங்காகத் திருப்பித் தருவதற்குத்தான்!

மார்ச் 18 வெள்ளிக்கிழமை

உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு

பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு

ஓ அற இமைக்கும் சேண்விளங்கு அவிர் ஒளி- (திருமுருகாற்றுப்படை).

மார்ச் 19 சனிக்கிழமை

சூர்யஸ்ய கிம்  தீப ப்ரதர்சனேன – கஹாவத்ரத்னாகர்

சூரியனைக் காட்ட விளக்கு தேவையா?

மார்ச் 20 ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை ஒரு பொழுது, நண்டு வேண்டாம், சாறு விடு.

 

dj-06-holi-02

 

மார்ச் 21 திங்கள் கிழமை

ரஜஸா ரவிர்  அபிபூயதே நஹி – கஹாவத்ரத்னாகர்

தூசிப்புயலால், சூரியனை வெல்லமுடியாது.

மார்ச் 22 செவ்வாய்க்கிழமை

சூரியன் எழுமுன் காரியம் ஆடு.

மார்ச் 23 புதன்கிழமை

சூரியனைக் கிரகணம் பிடித்தது போல, என்னைச் சனியன் பிடித்தான்.

மார்ச் 24 வியாழக்கிழமை

ருதே ரவே: க்ஷாலயிதும் க்ஷமேத க:

க்ஷபாதமஸ்காண்டமலீமசம் நப: – சிசுபாலவதம் 1-38

இருள் சூழ்ந்த ஆகாயத்தைச் சுத்தம் செய்து, விளக்கம்பெறச் செய்ய சூரியனைத் தவிர யாருக்கு இயலும்?

மார்ச் 25 வெள்ளிக்கிழமை

ஞாயிற்றுக்கிழமையை மறைப்பாரில்லை

pasupathinath,nepal

 

மார்ச் 26 சனிக்கிழமை

தாரா நைவ ப்ரகாசந்தே  பானௌ பாதீஹ பாஸ்வரே – கஹாவத்ரத்னாகர்

சூரியன் இருக்கையில் விண்மீன்கள் கண்சிமிட்டாது

மார்ச் 27 ஞாயிற்றுக்கிழமை

க: ப்ரதீபோ ரவே: புர:?- கதா சரித் சாகரம்

சூரியனுக்கு முன் விளக்கு எதற்கு!!!

மார்ச் 28 திங்கள் கிழமை

தமஸ்தபதி கர்மாம்சௌ கதம் ஆவிர்பவிஷ்யதி – சாகுந்தலம் 5-14

சூரியனிருக்கையில் இருள் ஏது?

மார்ச் 29 செவ்வாய்க்கிழமை

க: சக்த: சூர்யம் ஹஸ்தேனாச்சாதயிதும்?

–அவிமாரக

சூரியனைக் கையால் மறைக்கமுடியுமா?

 

holi-hand

மார்ச் 30 புதன்கிழமை

சூரியவிளக்கு இருக்க சுடர் விளக்கு எதற்கு?

மார்ச் 31 வியாழக்கிழமை

சூரியன் முன்னே சந்திரன் தோன்றினது போலே

(சம்ஸ்கிருதப் பழமொழிகளின் தமிழாக்கம் – லண்டன் சுவாமிநாதன்)

–சுபம்–

 

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! (Post No. 2494)

IMG_9761

பிப்ரவரி 2016 (மன்மத தை-மாசி) காலண்டர்

Compiled by london swaminathan

Date: 31 January 2016

 

Post No. 2494

 

Time uploaded in London :–  12-31

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

இந்த மாதக் காலண்டரில் தமிழ் பற்றிய 29 மேற்கோள்கள் இடம்பெறுகின்றன.

 

திருவிழா நாட்கள்: 8-தை அமாவாசை, சீனப்புத்தாண்டு, 14-ரத சப்தமி, காதலர் தினம், 15-பீஷ்மாஷ்டமி, 22-மாசிமகம், கும்பகோணத்தில் மஹாமகம், பல கோவில்களில் தெப்பத் திருவிழா

அமாவாசை:8

பவுர்ணமி- 22

ஏகாதசி: 4, 18

சுபமுஹூர்த்த நாட்கள்- 3,5, 10, 12, 17, 19, 26.

IMG_9765

பிப்ரவரி 1 திங்கட் கிழமை

மாண்ட வரதன் சரண் வணங்க எதிர்வந்தான்

நீண்ட தமிழால் உலகை நேமியில் அளந்தான் (கம்பன்)

பிப்ரவரி 2 செவ்வாய்க் கிழமை

நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்

தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான் (கம்பன்)

பிப்ரவரி 3 புதன் கிழமை

நன்று வரவு என்று பல நல் உரை பகர்ந்தான்

என்றும் உள தென் தமிழ் இயம்பி இசைகொண்டான் (கம்பன்)

 

பிப்ரவரி 4 வியாழக் கிழமை

வடவேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்- தொல்காப்பிய பாயிரம்-பன்பாரனார்

 

பிப்ரவரி 5 வெள்ளிக் கிழமை

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே

தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம் – பாரதியார்

 

 

IMG_9814

பிப்ரவரி 6 சனிக் கிழமை

ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்- பாரதியார்

 

பிப்ரவரி 7 ஞாயிற்றுக் கிழமை

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்- பாரதியார்

பிப்ரவரி 8 திங்கட் கிழமை

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்

துலங்குக வையகமே — பாரதியார்

பிப்ரவரி 9 செவ்வாய்க் கிழமை

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும்வகை செய்தல் வேண்டும்.

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்- பாரதியார்

பிப்ரவரி 10 புதன் கிழமை

தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்

இங்கமரர் சிறப்புக் கண்டார்

 

 

IMG_9816

பிப்ரவரி 11 வியாழக் கிழமை

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

வாழிய பாரத மணித்திருநாடு– பாரதியார்

 

பிப்ரவரி 12 வெள்ளிக் கிழமை

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே- அதைத்

தொழுது படித்திடடி பாப்பா- – பாரதியார்

 

பிப்ரவரி 13 சனிக் கிழமை

இறவாய் தமிழோடிருப்பாய் நீ (பாரதியார்)

 

பிப்ரவரி 14 ஞாயிற்றுக் கிழமை

தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத் தமிழ் இன்பதமிழ் எங்கள் உயிருக்கு நேர் –பாரதிதாசன்

 

பிப்ரவரி 15 திங்கட் கிழமை

சென்றணைந்து மதுரையினில் திருந்திய நூற் சங்கத்துள்

அன்றிருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில் – – பெரியபுராணம்

 

 

IMG_9776

பிப்ரவரி 16 செவ்வாய்க் கிழமை

தெள்ளித் தெளிக்கும் தமிழ்க் கடலின் அன்பினைந்திணை என எடுத்த இறைநூல்—மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்

பிப்ரவரி 17 புதன் கிழமை

சந்நிதியில் வீழ்ந்து எழுந்து தமிழறியும் பெருமாளே! தன்னைச் சேர்ந்தோர் நன்னிதியே! திருவாலவாயுடைய நாயகனே!—திருவிளையாடல் புராணம்

 

பிப்ரவரி 18 வியாழக் கிழமை

அறைகடல் வரைப்பில் பாடை அனைத்தும் வென்று ஆரியத்தொடு

உறழ்தரு தமிழ் தெய்வத்தை உள்நினைந்து ஏத்தல் செய்வாம்- சீகாளத்திப் புராணம்

 

 

பிப்ரவரி 19 வெள்ளிக் கிழமை

கடல் அமுது எடுத்துக் கரையில் வைத்ததுபோல்

பரப்பின் தமிழ்ச் சுவை திரட்டி மற்றவர்க்குத்

தெளிதரக் கொடுத்த தெந்தமிழ்க் கடவுள்- கல்லாடம்

 

பிப்ரவரி 20 சனிக் கிழமை

உலகு அளித்தனை தமிழ் தெளித்தனை

ஒன்றும் ஆயினை, பலவும் ஆயினை – காசிக் கலம்பகம்

 

 

IMG_9820

பிப்ரவரி 21 ஞாயிற்றுக் கிழமை

தமிழால் வைதாரையும் வாழவைப்போன் – கந்தரலங்காரம்

 

பிப்ரவரி 22 திங்கட் கிழமை

பொழிந்து ஒழுகு முதுமறையின் சுவை கண்டும் புத்தமுதம்

வழிந்து ஒழுகும் தீந்தமிழின் மழலை செவி மடுத்தனையே – மதுரைக் கலம்பகம்

பிப்ரவரி 23 செவ்வாய்க் கிழமை

செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை

முத்தமிழும் நான் மறையும் ஆனான்  — தேவாரம்

பிப்ரவரி 24 புதன் கிழமை

தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானை—திருவாசகம்

 

பிப்ரவரி 25 வியாழக் கிழமை

சாறு சுவைஎனக் கூறநின்று இட்ட

ஆரியம் தீந்தமிழ் என்மனார் அவையே

ஓரிருமகாரின் பேறுகண்டு அவற்றுள்

கன்னியந்தமிழின் செவ்வியைப் புணர்ந்தோய் – பொய்கையார்

 

IMG_9764

 

பிப்ரவரி 26 வெள்ளிக் கிழமை

ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலி நீர் ஞாலத்து இருள் அகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏணையது

தன்னேர் இலாத தமிழ் – தொல்லியல்

 

பிப்ரவரி 27 சனிக் கிழமை

இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்- பிங்கலந்தை

 

பிப்ரவரி 28 ஞாயிற்றுக் கிழமை

தமிழ் தழிய சாயலவர் – சிந்தாமணி

 

பிப்ரவரி 29 திங்கட் கிழமை

பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே இங்கு பரிசுரைப்பார்…………..திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்—ஆண்டாள்

 

–சுபம்–

16 வயதினிலே!

donkey1

Compiled by London swaminathan

Post No.2243

Date: 14 October 2015

Time uploaded in London: 10-40 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

1.ந உலூக அபி அவலோகதே யதி திவா சூர்யஸ்ய கிம் தூஷணம்? (பர்த்ருஹரி)

ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது; இது சூரியனுக்கு என்ன குறை?

Xxx

2.பத்ரம் நைவ யதா கரீர்விடபே தோஷோ வசந்தஸ்ய கிம்? (பர்த்ருஹரி)

கரீல செடியில் (துளசி) இலை இல்லாததற்கு வசந்த காலம் என்ன செய்யும்?

Xxx

3.ப்ராணீ ப்ராப்ய ருஜா புனர்ன சயனம் சீக்ரம் ஸ்வயம் முஞ்சதி –ஸ்வப்னவாசவதத்தம்

நோயாளி தானாகவே படுக்கையைவிட்டு உடனடியாக எழுவதில்லை

Xxx

donkey2

4.ப்ராப்தே து ஷோடஸே வர்ஷே கர்தபீ சாப்யப்சராயதே.

16 வயது வந்துவிட்டால் கழுதைகூட அப்சரஸ் (தேவ லோக அழகி) போலத் தோன்றும்!

Xxx

5.மலயேபி ஸ்திதோ வேணு: வேணுரேவ ந சந்தனம்

மூங்கிலானது மலய பர்வதத்தில் வளர்ந்ததால் சந்தனம் ஆகிவிடாது.

Xxx

6.ப்ரம்மசர்யேன தபஸா ராஜா ராஷ்ட்ரம் விரக்ஷதி – அதர்வ வேதம்

பிரம்மசர்யரூப தவத்தினால் அரசன் ஆனவன் நாட்டைக் காப்பாற்றுகிறான்

Xxx

7.மனுர் பவ, ஜனயா தைவ்யம் ஜனம் – ரிக்வேதம்

மனிதனாக இரு; தெய்வீகமான குழந்தைகளைப் பெறு

Xxx

crow nest2

8.ப்ரசாதசிகரஸ்தோபி காக: கிம் கருடாயதே (சாணக்ய நீதி தர்பணம், பஞ்சதந்திரம்)

அரண்மனையின் உச்சியில் உட்கார்ந்தால், காக்கை என்ன கருடன் ஆகிவிடுமா?

ஒப்பிடுக: கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் தன் பொல்லாசி சிறகை விரித்தாடினாற் போலுமே கல்லாதான் கற்ற கவி – அவ்வையாரின் மூதுரை.

Xxx

9.மலயே பில்லபுரந்த்ரீ சந்தனதருமிந்தனம் குருதே – சு.ர.பா.

மலய பர்வத ப்ரதேசத்தில் மலைஜாதிப் பெண்கள், சந்தன மரத்தை விறகாகப் பயன்படுத்துவர்

crow nest

Xxx

10.முண்டே முண்டே மதிர் பின்னா

ஒவ்வொருவர் தலையிலும் ஒவ்வொரு எண்ணம் (புத்தி)

ஒப்பிடுக (இந்தி)

அப்னா அப்னா டங் ஹை

அப்னீ அப்னீ சமக்ஞா ஹை

Xxx

11.யௌவனம் தன சம்பத்தி: ப்ரபுத்வமவிவேகதா

ஏகைகமப்யனர்தாய கிமு யத்ர சதுஷ்டயம் – ஹிதோபதேச

இளமை, அதிகாரம், செல்வம், விவேகமில்லாத போக்கு – இந்த நான்கில் ஒன்று இருந்தாலே கெடுதல் ஏற்படும். நாலும் சேர்ந்து இருந்தால் என்ன கதியோ!!

Xxx

12.ரிக்த: சர்வோ பவதி ஹி லகு: பூர்ணதா கௌரவாய – மேகதூதம்

வெற்றிடமாக உள்ள ஒரு பொருளுக்கு எடை இராது;

பூரணமாக இருந்தால் அதற்கு எடை இருக்கும்

ஒப்பிடுக: குறைகுடம் கூத்தாடும் (தழும்பும்) நிறைகுடம்

தழும்பாது.

பெரியார் அடக்கமாக இருப்பர். அரைவேக்காடுகள் ஆர்ப்பரிக்கும்!!

–Subham–

ஒட்டகங்களுக்கு கல்யாணமாம்! கழுதைகள் கச்சேரியாம்!!

camel-stamp-du-t

Compiled by London swaminathan

Post No.2211

Date: 3rd   October 2015

Time uploaded in London: 13-29

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

கீழே சில அழகான சம்ஸ்கிருதப் பழமொழிகளையும் அவைகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகளையும் கொடுத்துள்ளேன்.

1).அங்குலீ ப்ரவேசாத் பாஹு ப்ரவேசம்

விரல் அளவு இடமிருந்தால் உடலையே (தோள் மூல) நுழைத்துவிடுவர்.

ஒப்பிடுக: இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவர்

இந்தி பழமொழி: அங்குலீ பகங்கர் போங்சா பகட்னா

Xxx

2).அதி கஹனம் தமோ யௌவனப்ரபவம் – காதம்பரி

இளமையில் உண்டாகும் இருட்டு ஆழமானது.

ஒப்பிடுக: தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது

இளமையில் கல்

Xxx

3).அபராதானுரூபோ தண்ட: – சாணக்யநீதி

குற்றத்துக்கேற்ற தண்டணை

Xxx

4).அம்புகர்போ ஹி ஜீமூதஸ்சாதகைர் அபிவந்த்யதே – ரகுவம்சம்

நீர் நிறைந்த மேகத்தைத் தான் சாதக பட்சிகள் வழிபடும்.

ஒப்பிடுக: பழமரத்தை நாடும் பறவைகள்

பணக்காரனைச் சுற்றி பத்துப் பேர் பைத்தியக்காரனை சுற்றிப் பத்துப் பேர்

ஜப் லகி பைசா காண்ட் மேம், தப் லகி தாகோ யார்

Xxx

5).ஆகரே பத்மராகாணாம் ஜன்ம காச்மணே: குத:  — ஹிதோபதேசம்

புஷ்பராகம் இருக்குமிடத்தில் கண்ணாடி மணிகள் எங்கிருந்து வந்தன?

ஒப்பிடுக: இவன் எப்படி இங்க வந்தான்!!!

xxx

camel india   donkey-240x300

6).உஷ்ட்ராணாம் விவாஹேஷு கீதம் காயந்தி கர்தபா:

பரஸ்பரம் ப்ரஸம்சந்தி அஹோ ரூபமஹோ த்வனி: – சமயோசித பத்ய மாலிகா

ஒட்டகத்தின் கல்யாணத்தில் கழுதைகள் பாடுகின்றன. ஒருவருக்கொருவர் புகழ்ந்து தள்ளினர். என்ன அழகு, என்ன குரல் வளம் என்று!

ஒப்பிடுக: ஜைசா கர், வைசா வர்

ஊண்டோம் கே விவாஹ் மேம் கதே கவையே

ஆபஸ் மேம் ஹீ ஏக் தூஸ்ரே கீ பரசம்ஸா கர்னா

Xxx

7).கஞ்சுகமேவ நிந்ததி பீனஸ்தனீ நாரீ

சிறிய மார்பகமுள்ள பெண், ரவிக்கையை வைதாளாம்!

ஒப்பிடுக: ஆடத் தெரியாத ………….ள் , தெருக்கோணல் என்றாளாம்

Xxx

8).கரீ ச சிம்ஹஸ்ய பலம் ந மூஷிகா

யானைக்குத்தான் சிங்கத்தின் பலம் தெரியும்; எலிக்குத் தெரியாது

ஒப்பிடுக: கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை!

Xxx

9).காக யாசகயோர் மத்யே வரம் காகோ ந யாசக: – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

காகம், பிச்சைக்காரர் ஆகிய இருவரில் காக்கையே உயர்ந்தது; பிச்சைக்காரர் அல்ல.

(காகத்தினால் பயனுண்டு; அசுத்தங்களை அகற்றுகின்றன)

crow plate crow plate2

Xxx

10).காகோபி ஜீவதி சிராய பலிம் ச புங்க்தே – பஞ்சதந்திரம்

காகம் கூட பலிச் சோற்றை உண்டே நீண்ட காலம் வாழ்கின்றன.

(மனிதர்கள் வயிறு வளர்க்கவே வாழ்கின்றனர். காகமோ, பலிச் சோற்றை உண்டு நமக்கு நீத்தாரின் அருளைப் பெற்றுத் தரும். ஊரையும் சுத்தமாக வைக்க உதவும்)

Xxx

11).காணேன சக்ஷுசா கிம் வா சக்சு: பீடைவ கேவலம் – சாணக்யநீதி

தொடர்ந்து வலி இருந்தால் காதால் என்ன பயன்? கண்களால் என்ன பயன்?

Xxx

12).கிம் வா அபவிஷ்யத் அருண: தமசாம் விபேத்தா

தம் சேத் சஹஸ்ரகிரணோ துரி நாகரிஷ்யத்- சாகுந்தலம்

இருளைப் பிளப்பவனாகிய சூரியன், அருணனைச் சாரதியாகக் கொள்ளாவிடில் இருளிலா மூழ்கி விடுவான்?

Xxx

13).குகர்மாந்தம் யசோ ந்ருணாம் – பஞ்ச தந்திரம்

மனிதர்களின் புகழ் கெட்ட செயலால் முடிந்துவிடும்

Xxxx

14).க்ஷணே க்ஷணே யன்னவதாம் உபைதி ததேவ ரூபம் ரமணீயதாயா: – சிசுபாலவதம்

அழகின் லக்ஷணம், நொடிக்கு நொடி புதுமை அடைவதாகும்.(எது நொடிக்கு நொடி புதுமை அடைகிறதோ, அதுவே அழகு)

ஒப்பிடுக: பெண்களின் ‘பேஷன்’!!!!!!!!!!!!

Xxx

15).க்ஷதே ப்ரஹாரா நிபதந்தி அபீக்ஷணம் – பஞ்ச தந்திரம்

விழுந்த இடத்திலேயே அடி விழுகிறது

ஒப்பிடுக:- பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்.

Xxx

India-stamp5886asiatic-lion-lioness

16).க்ஷுதார்த்தோ ந த்ருணம் சரதி சிம்ஹ: — சாணக்ய சூத்திரம்

சிங்கம் பசித்தாலும் புல்லைத் தின்னாது

ஒப்பிடுக: புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.

-சுபம்–