Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நட்புறவு பற்றியும், விருந்தோம்பல் பற்றியும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எவரேனும் பாட்டு பாடியிருப்பார்களா, அதுவும் ரிக்வேதமும் தமிழ் வேதமும் பாடிய அளவுக்குப் படியிருப்பார்களா என்பது சந்தேகமே . நட்பு பற்றி திருக்குறளில் திருவள்ளுவர் பல அதிகாரங்கள் பாடி இருக்கிறார். ரிக் வேதத்திலோ துதிக்கு துதி நண்பன், நட்புறவு (Friend and Friendship) என்ற சொற்கள் வருகின்றன. அதே போல விருந்தோம்பல் (Hospitality) பற்றியும் இந்தியாவில் மட்டுமே பாடல்கள் இருக்கும். 2300 ஆண்டுகளுக்கு முன்னரே அசோகன் கல்வெட்டுகள் மூலம் நெடுஞ் சாலை நெடுகிலும் சத்திரங்களும் சாப்பாட்டு (Boarding and Lodging) வசதிகளும் இருந்ததை அறிகிறோம்.
ரிக் வேதத்தில் பத்து மண்டலங்களில் ஆயிரத்துக்கும் மேலான துதிகள் உள்ளன. அவற்றில் 10,000 மந்திரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு குறள் போல வரிகள் உள்ளவை. சில குறள்களையும் மந்திரங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்
சம்ஸ்க்ருதத்தில் வேதம் இருந்தது. அது தமிழில் இல்லையே என்ற குறையை தமிழ் மறை, தமிழ் வேதம் நீக்கிவிட்டது என்று திருவள்ளுவ மாலையில் ஒருவர் தமிழ் வேதத்தைப் புகழ்ந்துரைத்துள்ளார்
ரிக்.1-5-1
ரிஷி மதுச் சந்திர வைச்வாமித்திரன் தன்னுடைய சகாக்களை நண்பர்களே! (Comrades) இங்கே வாருங்கள், உட்காருங்கள் இந்திரனைப் பாடுங்கள் என்று அழைக்கிறார்.
1-6-9
அதே ரிஷி வானுறையும் தெய்வங்கள் என்கிறார். நாம் வள்ளுவர் குறளி ல் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்கிறார்
இந்திரனின் தோழர்களான மருத் தேவர்களை அழைக்கும் பொழுது “வானிலிருந்து அல்லது சொர்க்கத்திலிருந்து வாருங்கள்) என்கிறார் .
“தொழுபவனுக்கு இந்திரனுடைய மொழிகள் சத்தியமாகின்றன . அவை பலவித நன்மைகளைத் தரும்.பழுத்த
பழங்களைத் தாங்கும் மரங்கள் போல இருக்கின்றன.”
இதைச் சொல்லும் கவிஞரின் பெயரை தமிழில் மொழி பெயர்த்தால் தேன் கவி (Mr Honey Poem) என்று அமையும்! என்ன பொருத்தம் பாருங்கள்!!
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின் (குறள் 216)
[அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்]
xxxx
1-9-8
தோன்றிற் புகழொடு தோன்றுக என்கிறார் வள்ளுவர். அதாவது புகழ் தரும் செய்கைகளைச் செய்து, உலகை விட்டு நீங்கிய பின்னரும் புகழ் தாங்கிய பெயரை விட்டுச் செல்ல வேண்டும் என்பது வள்ளுவனின் கொள்கை.
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. ( குறள் எண் – 236)
ரிஷி மதுச் சந்தஸும் அதையே விரும்புகிறார்.
“இந்திரனே , சகடங்களில் ஏந்தி வரப்படும் உணவுகளையும் ஆயிரம் வழிகளால் வரும் புகழையும் எங்களுக்கு அளிக்கவும்”.
xxx
1-10-9
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.(குறள் 788)
என்கிறார் வள்ளுவர்.
மதுச்சந்தஸ் சொல்கிறார்
“அனைத்தையும் கேட்பவனே, என் அழைப்புக்கு உடனே செவிகொடுக்கவும். என்னுடைய இந்த துதியை நண்பனின் மொழிகளைப் போல அருகில் வைத்துக்கொள்”.
Xxx
1-16-5
மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் என்று ஒரு குறளில் வள்ளுவர் பாடுகிறார். இப்படி மயிரை இழந்தவுடன் இறக்கும் பிராணி இப்போது எதுவும் இல்லை. இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்போர் சடை எருமை எனப் பொருள்படும் YAK யாக் என்னும் மிருகத்தை குறிப்பிடுகின்றனர்.
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
(அதிகாரம்:மானம் குறள் எண்:969)
இதே பொருளும், குழப்பமும் ரிக் வேதத்திலும் உளது
இதை பாடியவர் மேதாதிதி காண்வர் .
அவரும் கெளரா (கவரி) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.
இதை மொழி பெயர்ப்போர் ‘தாகம் கொண்ட மான்போல’, ‘எருமை போல’ என்று மொழிபெயர்ப்பார்கள்.
கவரி வீசுதல் என்போம். அதிலுள்ள முடி வெண்மையாக இருக்கும். கெளரா என்றாலும் வெண்மையே.
கவரி முடி என்பதில் இருந்துதான் பெண்கள் அணியும் சவுரி முடியும் வந்ததோ?
Xxx
1-20-8
மனிதன் தெய்வமாகலாம் என்ற கருத்தை வள்ளுவர் ஒப்புக்கொள்கிறார்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். (குறள் 50)
ரிஷி மேதாதிதி காண்வன் ரிபுக்கள் என்னும் தேவர்களை போற்றிப் பாடுகையில் சொல்கிறார்
“வேள்வியைத் தங்கும் ரிபுக்கள் (Rhbus) மானிட வடிவங்களில் இருந்தார்கள் அவர்கள் தங்கள் நற் செயல்களால் உயர்ந்து தேவர்களோடு கிடைப்பதை பகிர்ந்து கொண்டார்கள்”.
xxx
1-23-19
நீர் = அமிர்தம்
“நீரில் அமிர்தம் உண்டு. நீரில் மருந்து இருக்கிறது. ஆகையால் அதை போற்றுங்கள்” — ரிஷி மேதாதிதி காண்வன்
1-23-20
“நீரே, நான் நீண்ட காலம் சூரியனைக் காண, என் உடலில் எல்லா நோய் நீக்கும் மருந்துகளையும் நிரப்புங்கள் “–ரிஷி மேதாதிதி காண்வன்
இவ்வாறு ரிக் வேதம் ஆறு மந்திரங்களில் நீரைப் போற்றுவதைக் கண்டு, படித்துத்தான் திருவள்ளுவரும் 10 குறள்களை வான் சிறப்பு என்ற அ திகாரத்தில் பாடினாரோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.
ஒரு குறளில் வேதம் பயன்படுத்தும் அமிர்தம் என்ற சொல் வருவதும், பகவத் கீதையில் வரும் தானம், தவம் என்ற மேலும் இரண்டு ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இன்னொரு குறளில் வருவதும் என் கருத்துக்குச் சான்று பகரும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
இந்தியாவின் அடிப்படையே வேதம், அந்த அஸ்திவாரத்தின் மீதுதான் இந்து மதம் நிற்கிறதது என்று ஆன்றோரும் சான்றோரும் பன்யாசங்களில் சொல்லக் கேட்டிருப்போம். இது முழுக்க முழுக்க சமயம் தொடர்பான விஷயம் என்று எண்ணியிருந்தேன்; அது தவறு; சமயத்துக்கு மட்டுமின்றி இந்தியாவின் ஒவ்வொரு பழக்க வழக்கத்துக்கும் ரிக் வேதமே அடிப்படை என்பது முதல் மண்டலத்தைப் படித்து முடிப்பதற்கு முன்னேரே தெளிவாகிவிட்டது.
இதோ நான் கண்ட அற்புத விஷயங்கள்!
பாரதியார் கடன்வாங்கிய உத்தி
பாரதியார் பாடல்களில் எல்லோரும் மிகவும் ரசித்த பாடல்கள்
கண்ணன் என் தோழன்
கண்ணன் என் தாய்
கண்ணன் என் தந்தை
கண்ணன் என் சேவகன்
கண்ணன் என் அரசன்
கண்ணன் என் சீடன்
கண்ணன் என் சற் குரு
கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளை
கண்ணன் என் காதலன் – 5 பாட்டுக்கள்
கண்ணன் என் காந்தன்
கண்ணன் என் ஆண்டான்
கண்ணம்மா என் குழந்தை
கண்ணம்மா என் காதலி – 6 பாடல்கள்
கண்ணம்மா எனது குலதெய்வம்
என்று 23 பாடல்களைக் காண்கிறோம் ; இவ்வாறு கண்ணன் அல்லது கண்ணம்மாவை பல்வேறு வகையில் உறவு கொண்டாடும் எண்ணம் எப்படி அவருக்கு வந்தது என்று எண்ணிப் பார்த்து வியப்பதுண்டு..
நாரத பக்தி சூத்திரம் முதலியவற்றில் இறைவனை குருவாக, தோழனாக, தலைவனாக பார்க்கும் பாவனைகள் இருந்த போதிலும் அதற்கும் முன்னதாகவே ரிக் வேதத்தில் இந்த அணுகுமுறை இருப்பது என்னை வியப்பில் ஆழ்த்தியது.
ரிக் வேதத்தில் உஷா என்னும் காலைப்பொழுதை , அருணோதய சமயத்தை வருணிக்கும் பாடல்கள் மிகவும் இயற்கை ரசனை மிக்கவை. அதில் உஷை என்னும் செக்கர்வானத்தை சகோதரி, காதலி, மனைவி, தாய், தோழி என்று வேத கால கவிகள்/ ரிஷிகள் வருணிக்கின்றனர்.
இதே போல அக்கினி தேவனையும் தூதன் , அறிஞன், நண்பன், தலைவன், தொண்டன் என்று வருணிக்கின்றனர்.
கம்யூனிஸ்டுகள் எல்லோரையும் ‘காம்ரேட்ஸ்/ தோழர்களே’ COMRADES என்று அழைப்பது போல ரிஷிகளும் “தோழர்களே! வாருங்கள் நாம் அனைவரும் பாடுவோம்” என்று சொல்லிக் கூடுகின்றனர்.
முதல் மண்டலத்தில் 191 துதிகளிலேயே எனக்கு இவ்வளவு விஷயங்கள் கிடைத்துவிட்டன. பத்து மண்டலங்களிலும் உள்ள ஆயிரத்துக்கும் மேலான துதிகளைப் படித்து முடிக்கையில் இன்னும் புதிய விஷயங்கள் கிடைக்கக்கூடும் .
சம்பந்தர், மற்றும் அவருக்குப் பின்னர் வந்த தேவார , திருவாசக, திவ்யப் பிரபந்த பாடகர்கள், தங்கள் பெயரைச் சொல்லி பாடலில்‘முத்திரை’ வைக்கின்றனர் அவருக்கு முன்னால் இப்படி பதிகத்துக்குப் பதிகம் தங்கள் பெயரை எவரும் சொன்னதாகத் தெரியவில்லை. பாரதியார் வேதம் படித்தது போலவே சம்பந்தரும் வேதம் படித்தவர்தான் . பல பாடல்களில் ருக் வேதம் என்று அவரே குறிப்பிடுகிறார். இப்படி பாடலின் இறுதியில் தன பெயரை வைத்து முத்திரை வைக்கும் வழக்கத்தை அவருக்கும் ரிக் வேதமே கற்பித்து இருக்க வேண்டும்.
குத்ஸ ஆங்கீரசன், அகஸ்தியர் போன்றோர் பாடியதுதிகளில் அவர்களுடைய பெயரைச் சேர்த்துப் பாடினார்கள். சில ரிஷிகள் கடைசி வரிகளை ஒரே மாதிரியாக அமைக்கின்றனர். ஆக இப்படி பாட்டில் தன அச்சை, முத்திரையைப்பதிக்கும் வழக்கத்தை ரிக் வேத காலத்திலேயே காண்கிறோம். வேதத்தின் பழமையை மிஞ்சக் கூடிய நூல் எதுவுமில்லை.
புரந்தரதாசர் முதல் பக்த மீரா வரை, தியாகராஜர் முதல் முத்துசாமி தீட்ஷிதர் வரை எல்லோரும் தான் இயற்றிய கிருதியாக் கண்டுபிடிக்க வசதியாக தனது பெயரையோ ஒரு சொல் தொடரையோ சேர்க்கின்றனர்.
இதை ரிக் வேதத்தில் நிறைய காணலாம்.
சில எடுத்துக்காட்டுகள்
குருகுஹ – முத்து சுவாமி தீட்சிதரின் முத்திரை
மீரா கே பிரபு கிரிதர் நாகர — மீராபாய்
கபீர் கஹதா – கபீர் பாடல்கள்
தியாகராஜர், புரந்தரதாஸர், ஜெயதேவர் போன்றோர் தன பெயரை கடைசி வரியில் சொல்லிவிடுவார்கள்.
xxx
பல்லவி, அனுபல்லவி
பல்லவி, அனுபல்லவி, சரணம் என்றெல்லாம் தற்காலப் பாடல்களில், கிருதிகளில், சாஹித்யங்களில் காண்கிறோம். இதையும் அ கஸ்தியர் மந்திரங்களில் , து திகளில் காணலாம். முதல் மண்டலத்திலுள்ள அவரது 26 துதிகளும் கடைசி வேண்டுதல் ஒன்றாகவே இருக்கிறது.
சில ரிஷிகளின் மந்திரம் ஒவ்வொன்றும் ஒரே மாதிரி முடிவதைக் காண்கிறோம் .
Xxx
பஞ்ச தந்திரக் கதைகள்
ஈசாப் என்ற கிரேக்க அடிமை மிருகங்கள் வரக்கூடிய இந்தியாவின் கதைகளைப் பயன்படுத்தினான். அதே போல இந்து மதக் கதைகளை, நாடோடிக் கதைகளைத் திருடி அதில் பொதி சத்துவர் என்ற பெயரை நுழைத்து புத்த ஜாதகக்க தைகளை பெளத்தர்கள் எழுதினார்கள். அதற்கு முன்னரே உபநிஷதங்களில், ராமாயண, மஹாபாரத இதிகாசங்களில் பிராணிகள் பேசும் கதைகள் இருக்கின்றன. இவைகளுக்கும் மூலம் ரிக் வேதம்தான். காடை என்னும் பறவையை ஓநாயின் வாயிலிருந்து அஸ்வினிதேவர்கள் காதத கதை ரிக் வேதத்தில் வருகிறது. அற்புத மூலிகையான சோம லதையை மலையிலிருந்து பருந்துகள், கழுகுகள் கொண்டு தரும் அபூர்வ விஷயங்களும் முதல் மண்டலத்திலேயே கிடைக்கினறன. ஏனைய மண்டலங்களில் அஸ்வினி தேவர்களின் தேரை அன்னப் பறவைகள் இழுப்பதாகவும், மான்கள், இழுப்பதாகவும் வருகிறது. சாண்டா கிளாஸ் கதை போன்ற ரதங்கள் அப்போதே இருந்தன என்றே தோன்றுகிறது!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – 1
ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் (புத்தகங்கள்) உள்ளன. அதில் 1000 பாடல்களுக்கு மேல் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் மந்திரங்கள் இருக்கும்; மொத்த மந்திரங்கள் பத்தாயிரத்துக்கும் சற்று அதிகம். இதில் முதல் மண்டலத்தில் உள்ள 112 ஆவது பாடல் முக்கியமானது. அதில் 25 மந்திரங்களில் ஏராளமான அற்புதங்களின் பட்டியலும், மன்னர்களின் பெயர்களும் வருகின்றன . இந்திய வரலாற்றை எழுதிய ஆங்கில அயோக்கியர்கள் இந்தியாவில் மன்னர்களே இல்லை என்றும் புத்தர் காலம் முதலே மன்னர்கள் பெயர்கள் உள்ளன என்றும் எழுதிவிட்டார்கள். அதை படித்துதான் நானும் மதுரைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் எம்.ஏ. பட்டம் பெற்றேன் . வெட்கக்கேடு.
கி.மு 2500ல் துவங்கிய சரஸ்வதி- சிந்து நதி தீர நாகரிகம் கி.மு 1700ல் வறட்சி, வெள்ளப் பேருக்கு முதலியவற்றால் அழிந்தது . வெள்ளைக்காரன் கணக்குப்படி 2000 ஆண்டுகளுக்கு மன்னரே கிடையாது. பெயரில்லாப் பூச்சி ஆட்சி செய்தது! அனால் இதே காலத்தில் பாபிலோனிய, எகிப்திய, சீன , மாயா மன்னர்களின் பெயர்கள் எல்லாவற்றையும் வெள்ளைத் தோல்களே பட்டியல் போட்டுக் காட்டுகின்றன. புராணங்களோ வேனில் 140 தலைமுறையினரை கி.மு காலத்தில் காட்டுகின்றன. அவற்றை எல்லாம் அயோக்கியர்கள் ஒதுக்கிவிட்டனர். சூரிய வம்ச 140 +++ தலை முறை தவிர சந்திர வம்சம் வேறு உள்ளது !
மாக்ஸ்முல்லர் முதலிய 20 கோமாளிகள் ரிக் வேதத்தை மொழி பெயர்க்கப் புறப்பட்டு “முழி பெயர்த்தனர்”. அவர்களுக்கிடையே மஹா குழப்பம் !!! தெரியாத ஒரு சொல் வந்தால் ஒரு கோமாளி அதை புழு பஎன்பான் . மற்றோரு கோமாளி அதை அரக்கன் என்பான். மூன்றாவது கோமாளி இது ஒரு தெய்வத்தின் பெயர் என்பான். ஒரே ஜோக் Joke மயம் . வாய்விட்டுச் சிரிக்கலாம். 700 ஆண்டுகளுக்கு முன்னர் சாயனர் என்ற மஹான், வேதத்துக்கு பாஷ்யம் எழுதினார். அதை ஆதாரமாக வைத்து எழுதுவதாகச் சொல்லும் ‘’மாக்ஸ்முல்லர் கும்பல்’ ஏராளமான இடங்களில் அவரை மறுப்பதோடு, சாயனருக்குத் தெரியாத ஆரிய- திராவிட வாதத்தை செய்யுளுக்குச் செய்யுள் சேர்த்துள்ளனர். அதாவது இவர்கள் மொழி பெயர்ப்பாளர் அல்ல. நாட்டைப் பிடிக்க வந்த, மதத்தைப் பரப்ப வந்த அயோக்கிய சிகாமணிகள்!
ரிக் வேதத்தை அனைவரும் படிக்க வேண்டும். முதல் மண்டல 112 ஆவது பாடலை (RV 1-112) கட்டாயம் படிக்க வேண்டும்.
உலகிலேயே பழமையான நூல் ரிக் வேதம். ஒவ்வொரு வெள்ளைத்தோல் கோமாளியும் அதற்கு ஒரு காலம் சொல்லுவான். மாக்ஸ்முல்லர் முதலி ல் கி.மு.1200 என்று சொல்லி, மூஞ்சி மொகரை எல்லாம் குத்து வாங்கிய பின்னர் இது. கி.மு 1500 அல்லது அதற்கும் முந்தையது; எவராலும் இதன் காலத்தைக் கணிக்க முடியாது என்று சொல்லிவிட்டுச் செத்துப்போனார். இந்திய மண்ணை மிதிக்க அஞ்சி, வாழ் நாள் முழுதும் இந்தியா வராமலேயே ரிக் வேதத்துக்கு ‘பாஷ்யம்’ (COMMENTARY) எழுதினார். அதாவது கொட்டாம்பட்டி கிராம மேஸ் த்திரி நியுயார்க்கிலுள்ள உயர்ந்த கட்டிடம் பற்றி தீசிஸ் THESIS எழுதியது போல. நியூயார்க்குக்கு போகாமலேயே!!
முதல் மண்டல 112ஆவது பாடலைக் “கேட்டவர்” பெயர் கவிஞர் குத்ச ஆங்கீரசன். அவர் பாடிய கடவுள் உலகிலேயே முதலில் பிறந்த TWINS இரட்டையரான அஸ்வினி தேவர்கள். இவரைப் பற்றி எல்லா வெள்ளைக்கார பயல்களும் ‘இவர்கள் புரியாத புதிர்கள்’ என்று எழுதிவிட்டனர். இவர்கள் செய்த அற்புதங்கள், கப்பல் பயணம், கடல் சாகசங்கள் எண்ணிலடங்கா. இந்த 112 ஆவது பாடலில் நீண்ட அற்புதப் பட்டியலும் மன்னர்களின் பெயர்களும் வருகின்றன. நாம் 25 மந்திரங்களையும் காண்போம் . வேத மந்திரங்கள் வானிலிருருந்து ரேடியோ அலைகள் போல “கேட்க”ப்பட்டவை. அவை கவிகள் எட்டுக்கட்டியதல்ல.
*****
மந்திரம் 1 (1-112-1)
குத்ச ஆங்கீரசன் செப்புகிறார் – நான் முதலில் வானத்தையும், பூமியையும், அக்கினி தேவனையும் வணங்குகிறேன் .அஸ்வினி தேவர்களே ! முன்னர் போரில் வெல்ல எந்த சங்க நாதம் எழுப்பினீர்களோ அத்துடன் வருக.
இதில் போர் வெற்றி, ‘கிடைத்த செல்வத்தைப் பங்கிடல்’ முதலிய செய்திகள் வருகின்றன.
மந்திரம் 2
இதில் ஒரு அருமையான வரி வருகிறது. புனித செயல்களில் ஈடுபட எங்களைத் தூண்டும் உத்திகளுடன் வருக. இன்னும் ஒரு அருமையான வரி வருகிறது ‘சொல் தேர்’-சொல் ரதம் ; தச்சன் தேர் கட்டுவது போல கவிகள் சொற்றேர் கட்டுகின்றனர் . தமிழிலும் இது உண்டு. சொல் தச்சன், கல் தச்சன்.
‘தச்சன்’, ‘தேர்’ என்பதெல்லாம் ஸம்ஸ்க்ருதச் சொற்கள் என்பது பலருக்குத் தெரியாது
தக்ஷ என்ற சொல்லிலிருந்து டெக்கனிகல், டெக்னாலஜி, ஆர்க்கி ‘டெக்ட்’ போன்ற நூற்றுக் கணக்கான சொற்கள் உண்டு. இந்த ஸம்ஸ்க்ருத்ச் சொல் சங்க இலக்கியத்திலும் உண்டு. ஒரே நாளில் எட்டு தேர் செய்த தச்சன் பற்றிய பாடலைக் காண்க. தேர் என்பதன் கண்ணாடி உருவம் ரத . அதாவது ரத என்பதைக் கண்ணாடியில் பார்த்தால் தேர். இதை மொழி இயல் வல்லுநர்கள் Mirror Image மிர்ரர் இமேஜ் என்பர்.
ஜம்புநாதனின் தமிழ் மொழி பெயர்ப்பில் இன்னும் ஒரு உவமை வருகிறது ஆனால் கிரிப்பித் ( R T Griffith ஆங்கில மொழி பெயர்ப்பில் அது இல்லை. அதாவது “அறிஞர்களின் மொழிகளைச் செவியுறும் மாணவர்களை போல அடியார்கள் அஸ்வினி தேவர்களின் தேருக்கு அருகில் நிற்கிறார்கள் ” என்பதாகும். இதற்கு ஆதாரம் எங்கு இருக்கிறது என்பதைக் காண வேண்டும். ஜம்புநாதன் எழுதியது சரி என்றால் ‘மாணவர் உவமை’ அக்கால கல்வி நிலையைக் காட்டுவதாகும்.
வேதம் முழுதுமுள்ள உவமைகள், உருவகங்களைப் பார்க்கையில் உலகிலேயே உன்னதமான கலாசாரம் அதுதான் என்று தலை மேல் அடித்துச் சத்தியம் செய்யலாம். பாட்டுக்குப் பாட்டு தங்கம் (Gold) பற்றி வருகிறது, கணவன் மனைவி காதல், தாய்- பிள்ளை பாசம், அரசன்- மக்கள் அன்பு, சகோதரன்-சகோதரி பாசம் என்ற உவமைகள் எண்ணிலடங்கா.
‘பத்து நூறு அடுக்கிய கோடி’ என்பதை திருக்குறளிலும் சங்கத் பாடல்களிலும் காணலாம். இந்த Decimal System டெசிமல் சிஸ்டம் ரிக் வேதம் முழுதும் நிரம்பி வழிகிறது . ஏனைய கலாசார பழங்கால நூல்களில் இதைக் காண முடியாது.
மந்திரம் 3
மூன்றாவது மந்திரத்தில் மலட்டுப் பசுவை பால் சுரக்கும் கறவை மாடாக அஸ்வினி தேவர்கள் மாற்றிய அற்புதம் வருகிறது. இதை நாம் ஞான சம்பந்தரின் அற்புதத்துடன் ஒப்பிடலாம். ஆண் பனை மரம் காய்க்காது என்று சமண மத ஆள் கிண்டல் செய்யவே அவன் சம்பந்தரிடம் சொல்லி வருத்தப் பட்டான் . அதை அவர் செக்ஸ் சேஞ்ச் SEX CHANGE செய்து காய்க்கும் மரமாக மாற்றினார்.
மந்திரம் 4
இங்கு நிறைய உருவகம் வருகிறது; காற்று என்பதை எங்கும் சுற்றுபவனாகவும் (Wanderer) அதன் குழந்தை (offspring) அக்கினி என்றும் வருகிறது. அத்தோடு அக்கினியை இரு தாய்மார்களின் புதல்வன் என்கிறது (Twin mother)அதாவது இரண்டு கட்டைகளை உரசி தீயை உண்டாக்கியதால் இரட்டைத் தாய். காற்று வீசி தீ பரவுவதால் அதன் புதல்வன் அக்கினி. இப்படியெல்லாம் வியாசர் காலத்துக்கு முன்னே – கி.மு. 3150க்கு முன்னரே கவி பாடினால் அவர்கள் எவ்வளவு அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
மந்திரம் 5
ஐந்தாவது மந்திரத்தில் கிணற்றில் தள்ளப்பட்ட ரேபனையும் வந்தனையும் அஸ்வினி தேவர்கள் காப்பாற்றியதாக ஒரு செய்தி உள்ளது. இது போல கண்வ மகரிஷி மீட்கப்பட்ட குறிப்பும் உள்ளது. முதல் மண்டலத்திலேயே 4 அல்லது 5 ரிஷிக்கள் கிணற்றில் தள்ளப்பட்டு மீட்கப்பட்டதாக பாடல் வருகிறது. “கிணற்றில் தள்ளுதல்” (Idiom and phrase) என்பது ஒரு மரபுச் சொற்றோடராக இருக்கலாம். ஒரு மணப் பெண் தவறான கணவனுக்கு வாக்குப்பட்டால் உடனே அவள் பிறந்தகத்துக்கு வந்து “என்னைப் பாழுங்கிணற்றில் தள்ளி விட்டீர்களே” என்று அழுவாள். அடுத்த வீட்டுக் காரர்களும் “கிளியை வளர்த்து பூனைக்கு கொடுத்துவிட்டார்களே”
என்று அங்கலாய்ப்பர். இது போல “கிணற்றில் தள்ளப்பட்டது” அறியாமை என்னும் கிணறாகவும் ஒளி என்பது ஞானம் என்றும் இருக்கக்கூடும். ஆயினும் அப்பர் வாழ்வில் மஹேந்திர பல்லவன் அவரை சுண்ணாம்பு சூளையில் தள்ளியதையும் அவர் சிவ பெருமான் அருளால் உயிர் பிழைத்ததையும் நாம் அறிவோம். அது போல கண்வ மகரிஷியும் பிழைத்திருக்கலாம்.
ஆனால் ‘ஜோக்’ என்னவென்றால் எந்த ஒரு நிகழ்சசியிலும் 20 அயோக்கிய சிகாமணிகளும் இன வாதத்தைப் புகுத்தி இருப்பதுதான். உலகிலேயே 1500 ஆண்டுகளுக்குச் சண்டை போட்ட இனம் தமிழ் இனம்தான். சேர, சோழ , பாண்டியர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு செத்ததைப் போல உலகில் வேறு எந்த இனமும் 1500 ஆண்டுகளுக்கு ஒருவரை ஒருவர் அழித்ததாக வரலாறு இல்லை.
அங்கு ஒருவரை ஆரியர் என்றும் மறறொருவரை திராவிடர் அல்லது பூர்வ குடிகள் என்றும் சொல்லவில்லை. ரோம சாம்ராஜ்யம், கிரேக்க சாம்ராஜ்ஜியத்தில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு செத்து ஒளிந்ததையும் நாம் வரலாற்றில் படிக்கிறோம். அதை விட்டு விட்டு வில்சன் என்ற ஜோக்கர், ஒரு வேளை பூர்வ குடிமக்கள் இந்து மதம் பரப்ப வந்த கண்வ மகரிஷியை குழிக்குள் தள்ளி இருக்கலாம் என்று எழுதுகிறார்.
இவர்களை ‘ஜோக்கர்கள்’ என்பதை விட விஷமிகள் என்றே சொல்ல வேண்டும். ஆரி ய- திராவிட/தஸ்யூ மோதலை அதி கம் பிரஸ் தாபிப்பவர் மாக்ஸ்முல்லர். அதாவது விஷமிகள் கும்பலின் தலைவன்.
எல்லோரும் ரிக் வேதத்தைப் படிக்க வேண்டும். விருத்திரன், கி, சுஷ்ணன் , சம்பரன் முதலிய 30 அரக்கர்களை இந்திரன் கொன்றான். பத்து பாடல்களில் அவர்களை அரக்கர்கள், அதாவது பூர்வ குடிமக்கள் என்று எழுதிவிட்டு அடுத்த 10 ப்பாக்களில் இது வறட்சி, மேகம் என்று எழுதுகின்றனர். இந்திரன் என்பவனை ஒரே ஆளாக சித்தரிக்கின்றனர். இது பிழை என்பதை காஞ்சி பரமாசார்யார், அரவிந்தர் விவேகானந்தர், மஹாத்மா காந்தி, அம்பேத்கார் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர். இவர்கள் எவரும் ஆரிய- திராவிட மோதல் வாதத்தை ஏற்கவில்லை
ஆறாவது மந்திரம்
இங்கு அந்தகன், பூஜ்யூ , கற்கண்டு, வய்யா ஆகிய நால்வர் பற்றிய செய்திகள் வருகின்றன. இவர்கள் எல்லோரும் அஸ்வினி தேவர்களின் உதவி பெற்றவர்கள். அந்தகன் ஏரியில் தள்ளப்பட்டபோது அஸ்வினிகளால் மீட்கப்பட்டவர். பின்னொரு பாடலில் த்ரிதன் என்பவனை சகோதர்களே கிணற்றில் தள்ளிவிட்டதாக வருகிறது. ஆக “கிணற்றில் தள்ளுதல் ” என்பதன் பொருள் வேறு.
‘வய்யா’ என்பதிலுள்ள ‘ய்யா’ தமிழ் செல்வாக்கைக் காட்டுகிறது. வேதங்களில் பல பெயர்கள் நம்ம ஊர் மாதவையா, அய்யா சாமி , முருகையா என்பது போல முடிகிறது.இது சம்ஸ்க்ருதத்தில் இப்போது இல்லை. அனால் தமிழில் ஐயா ஒட்டு உண்டு. ஆராய்ச்சிக்குரிய விஷயம்.
ஆறாவது மந்திரத்தில் வரும் பூ ஜ் யூ , துக்ரா என்பவரின் மகன். அவனை அவர் கடலில் விட்டவுடன் அஸ்வினி தேவர்கள் மிகப்பெரிய கப்பலில் காப்பாற்றிக் கொண்டுவந்ததாக ரிஷிகள் பாடுகின்றனர். பிற இடங்களில் அவர் பற்றி வரும் செய்தியில் கப்பலின் முழு விவரமும் உள்ளது
ஏழாவது மந்திரம்
இதில் வரும் ஆட்களில் இருவர் பற்றி ஒரு விவரமும் எங்கும் கிடைக்கவில்லை. மாற்வர்களில் அத்ரி மகரிஷியை அசுரர்கள் தீக்குழியில் தள்ளிவிட்டதாகவும் அஸ்வினிகள் காப்பாற்றியதாகவும் செய்திகள் கிடைக்கின்றன. ஆனால் சுச்சந்தி, பிருசினிக்கு பற்றி செய்தி எதுவும் இல்லை. மற்றோருவரான புருகுத்சன் அரசன் என்று தெரிகிறது . இதுவரை குறிப்பிட்ட பெயர்களில் பல, அரசர்களுடைய பெயர்களாக இருக்கலாம். சிந்து – சரஸ்வதி தீர எழுத்துக்களை படித்தால் இந்தப் பெயர்கள் அங்கே கிடைக்கலாம்.
–தொடரும்
tags- முதல் வரலாற்று ஆசிரியர், ரிக் வேதம் , இந்திய வரலாறு
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நேற்றைய முதல் பகுதியில் கீரி -பாம்பு பற்றி சாயனர் கூறியது, 21 பெண்மயில்கள் பாம்பு விஷத்தை இறக்குவது, அதிசய விஷம் உறிஞ்சசும் பறவை, ரிக் வேத பாம்புக்கடி மந்திரம் கொரோனாவைத் தீர்க்க உதவும் என்பதைப் பார்த்தோம்.. முழு மந்திரம் இதோ :-
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
ரிக் வேதத்தில் உள்ள மஹாபாரத, ராமாயண மன்னர்களின் பெயர்கள் அதன் காலத்தைக் கணக்கிட உதவி புரிகின்றன. ராமன், ப ரசுராமன் , ஜமதக்கினி, தேவாபி ஆகிய பெயர்கள் ரிக் வேதத்தின் புதிய பகுதிகளில் காணக் கிடைக்கின்றன . இதைப் பலரும் கவனிக்க தவறி விட்டனர். இதோ சில சுவையான தகவல்களும் அதன் அடிப்படையிலான காலக் கணக்கீடும் :–உலகிலேயே மிகப் பழைய சமய நூல் ரிக் வேதம். இதை ஹெர்மன் ஜாகோபி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சிந்து- சரஸ்வதி நதிக்கரை நாகரீகத்தைச் சேர்ந்த 30 முத்திரைகள் (SEALS) மெசப்பொட்டேமியாவில் கிடைத்துள்ளன. இது மிகப் பழைய செய்தி ; அவைகளில் இரண்டு முத்திரைகள் மிகவும் குறிப்பிடத்தக்கன. அவைகளின் காலம் 4500 ஆண்டுகளுக்கு முந்தையவை. அப்போது வேத கால நாகரிகம் உச்ச கட்டத்தில் இருந்தது. இது எப்படி தெரிகிறது என்றால் ரிக் வேதத்தில் மூன்று இடங்களில் ஊர், உரு, உருக்ஷிதி என்ற சொற்கள் வருகின்றன.. அவைகளை ‘பெரிய இடம்’ என்று சாயனர் 600 ஆண்டுகளுக்கு முன்னர் மொழி பெயர்த்தார். இதில் வியத்தகு விஷயம் என்னவென்றால் உரு, ஊர் என்றால் பெரிய இடம் என்பது 2000 ஆண்டுப் பழமையான தமிச் சங்க இலக்கியத்திலும் உளது. உரு, உரு கெழு என்று நிறைய இடங்களில் புலவர்கள் பயன்படுத்தியுள்ளனர். தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் மூலம் ஒன்றுதான் என்று பரஞ்சோதி முனிவர், சிவஞான முனிவர், காஞ்சி பராமசர்ய சுவாமிகள், இலண்டன் சுவாமிநாதன் ஆகியோர் சொல்லுவது உண்மையே.
SUMERIAN KING NARA SIMHAN OR NARA CHANDRAN LIKE OUR HARICHANDRAN
உரு என்றால் ‘அழகு’. அது சம்ஸ்கிருத்தத்தில் உள்ள ‘ரூப’ என்பதன் மருவு. என் நண்பரின் பெண்ணின் பெயர ‘ரூபா’. உருவத்தைப் பொறித்து நாணயத்தை வெளியிட்டதால் அதை ‘ரூபாய்’ என்று இன்றுவரை சொல்கிறோம்.
‘உரு’ என்பதன் மற்ற பொருள் —
பெரிய, நீண்ட, தோணி, ஒரு நோய் – என்று 1935-ம் ஆண்டு ஆனந்த விகடன் அகராதி சொல்லும் .
சுமேரியாவில் ஊர்,கிஷ் (CITY STATES UR, KISH IN SUMER)
ரிக் வேதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தோர் பெரும்பாலும் சாயன பாஷ்யத்தைப் பின்பற்றிவிட்டு இடை இடையே தங்களுடைய ‘விஷம’ , ‘விஷ’ கருத்துக்களையும் ஊன்றிவைத்துள்ளனர். ஆனால் தற்கால ஆராய்சசிகள் அவர்களை காட்டிக் கொடுத்துவிட்டன .
ரிக் வேதம் 6500 ஆண்டுகள் பழமையானது என்பது பாலகங்காதர திலகர், ஹெர்மன் ஜாகோபி ஆகியோரின் முடிபு. மாக்ஸ்முல்லர் இது கி.மு 1500 அல்லது அதற்கு முன்னதாக இருக்க வேண்டும் என்கிறார். அவரைப் புரட்டிப் புரட்டி அடித்த விண்டர்நிட்ஸ், வில் சன் ஆகிய எல்லோரும் கி.மு 2000 அல்லது அதற்கும் முன் என்றனர்.எது எப்படியாகிலும் இதுவே சிந்து-சரஸ்வதி நாகரிகம் என்பது பி.கே சட்டோபாத்யாயா எக்பர்ட் ரிக்டர் உஷனஸ் ஆகியோரின் துணிபு.
எக்பர்ட் ரிக்டர் உஷனஸ் எழுதிய புஸ்தகத்தில் ஊர், கிஷ் முதலிய சுமேரிய நகரங்களில் கிடைத்த சிந்துவெளி முத்திரைகள் வேத மந்திரங்களின் வாசகம் என்பார் .அதை ஏற்காதவர்களும் ரிக் வேதத்தில் உள்ள உரு , க்ஷிதி = ஊரு கிஷ் என்பதை முழு அளவு விளக்க முடியாமல் திணறுகின்றனர். இதோ ரிக் வேத மந்திரம் —
ரிக் வேதம் 7-100-4
திருப்பாவையிலும் , ஆழ்வார் பாசுரங்களிலும் ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்று விஷ்ணு புகழப்படுகிறார் . அதாவது சின்ன பிராமணப் பையன் வடிவில் வாமனனாக வந்த விஷ்ணு, உருவத்தில் வளர்ந்து ‘த்ரி விக்ரமன்’ ஆனார். அப்போது அவர் அளந்த மூன்று அடி விஷயம் ரிக் வேதத்தில் பல இடங்களில் வருகிறது. இந்தக் கவிதையிலும் RV 7-100-4 வருகிறது
“இந்த விஷ்ணு, மனுவுக்கு இருப்பிடத்தை அளிக்க விரும்பி இந்த பூமியை மூன்று அடியால் அளந்தான். அவனைத் துதிக்கும் மக்கள் நிலையாக வாழ்கிறார்கள் . அவர் மக்களுக்காக பெரிய வீடுகளை செய்தார்” . .
இங்கே மொழி பெயர்ப்பில் வரும் ‘பரந்த மனை’ என்பது சாயனரின் மொழிபெயர்ப்பு. சம்ஸ்கிருதத்தில் உள்ள அதற்கான சொல் ‘உரு க்ஷிதி’ ; இது ஊர் , கிஷ் என்பதன் மருவு. இப்போது இராக் என்று நாம் அழைக்கும் இடத்தின் பழைய பெயர் மெச பொட்டேமியா . அதன் கீழ் பகுதி சுமேரியா . அங்கு இந்துக்கள் என்று வசிக்கத் துவங்கினர் என்பது சிந்து- சரஸ்வதி தீர முத்திரைகளாலும், அங்கு கிடைத்த தேக்கு மரத் துண்டுகளாலும் தெரிகிறது.
மேலும் ஒரு துதி — ரிக் 9-84-1
“சோமனே! தேவர்களை மகிழ்விப்பவனும் , விறுவிறுப்பானவனும் ஆன நீ பாய்ந்து வா. இந்திரனுக்காகவும் வருணனுக்காகவும் வாயுவுக்காகவும் பாய்ந்து வா. எங்களுக்கு பரந்த நிலத்தை மகிழ்ச்சியுடன் தருக . அந்த யக்ஞத்தின் பரந்த நிலத்திற்கு தேவர்களை அழை” .
இங்கும் ‘பரந்த நிலத்தில்’ எல்லோரும் சந்திக்க வேண்டப்படுகிறது. இதற்கான சம்ஸ்கிருதத் சொல் ‘உரு’.
இதையெல்லாம் கூட எல்லோரும் இரு பொருள்பட மொழி பெயர்த்துவிடலாம் ; பத்தாவது மண்டலத்தில் வரும் கவிதையை எவரும் மாற்ற முடியாது. அங்கு உரு க்ஷய வருகிறது
ரிக் RV 10-118-7/8/9
“அக்னியே , உன் அழியாத சுவாலையால் ராக்ஷசர்களை எரித்துவிடு; சனாதன விதிகளை பாதுகாக்கும் நீ சுடர் விட்டுப் பிரகாசி ;
அக்கினியே பரந்த இடத்திலே பிரகாசிக்கும் நீ, உன் ஜோதியால் யாதுதானிகளை சாம்பலாக்கு” .
யாதுதானி =அரக்கி , ராக்ஷஸி
இந்த இடத்தில் மொழிபெயர்ப்பாளர்கள் நீ உருக்ஷ்யர் களினிடையே பிரகாசிக்கிறாய் என்று எழுதுகின்றனர்.
அடுத்த மந்திரத்தில்
“நீ மனித இனத்தில் மிகவும் போற்றப்படுகிறாய். நீ அவர்கள் தரும் அவி ஸை தேவர்களுக்கு எடுத்துச் செல்கிறாய். உன்னை உ ருக்ஸயர்கள் பொரித்த துதிக்கின்றனர்” .
இந்த மந் திரத்தில் உருக்சயர்களை பாடகர் என்றும் அரசன் என்றும் பல மொழி பெயர்ப்பாளர்கள் பல்வேறுவிதமாக வியாக்கியானம் செய்வார்கள்.
XXXX
எப்போதும் நாம் சொல்லும் வியாக்கியானத்துக்கு கூடுதல் சான்றுகள் தேவை.
இதை ஊர் , கிஷ் (CITY STATES URU AND KISH) என்ற இரண்டு சுமேரிய ராஜ்யங்களை தொடர்பு படுத்திப் பேச நமக்கு அங்கு கிடைத்த தேக்கு, சிந்து-சரஸ்வதி நாகரீக முத்திரைகள் உதவுகின்றன. என்னுடைய ஆராய்ச்சி பல மன்னர்களின் பெயர்கள் சம்ஸ்கிருதத்தில் இருப்பதைக் காட்டுகின்றன
XXXX
லண்டன் சுவாமிநாதன் ஆய்வு
Kish கிஷ் ராஜ்யம்
Enmebaragesi – Kesi suffix is very common India ; even Maoris of New Zealand had Uru kesi as a name. we have Neelakesi , Rishikesi etc. he ruled kish in 2650 BCE
‘கேஸி’ என்று முடியும் பெயர்கள் நீல கேசி, ரிஷி கேச முதலியன ;நியூசிலாந்து நாட்டில் மயோரி பழங்குடி மக்களும் ‘உரு கேசி = அழகிய முடி’ என்ற பொருளில் பயன்படுத்துவதை ஆர்யதரங்கிணி நூலில் ஏ. கல்யாணராமன் காட்டியுள்ளார்
Agga is the next king we know of. It is Aja whom we find in Raghuvamsam of Kalidasa and puranas.
அக்கா – அஜ என்ற மன்னன் ராமனுக்கும் முன்னால் இருந்த சூர்ய குல மன்னன். காளி தாசனால் ரகு வம்ச காவியத்தில் அழகாகப் போற்றப்பட்டவன் .
Ur nanshe ruled in 2500 BCE
நஞ்ச என்பது நன்னன்/ சந்திரன் ஆக இருக்கலாம். பல சுமேரிய பெயர்களில் நன்னா உண்டு
Ur in Sumerian means dog as well. But here it may be his town – Ur
உர் என்றால் சுமேரிய மொழியில் நாய் என்ற பொருளும்; உண்டு சம்ஸ்கிருதத்திலும் ‘குர்’ ரம் உண்டு
Tamil poets are called with their town names in Sangam literature.
ஊர் என்பதை முன்னொட்டாக பயன்படுத்துவதை சங்கப் புலவர் பெயர்களிலும் காணலாம். மதுரை, கருவூர், உறையூர் என்ற ஊர் பெயர்களுக்குப் பின்னர் புலவர் பெயர் வரும்
Then we have Akul – shiva’s name followed by 5 names with Natum . it may be Nathan like my name swami Nathan.
அகுல் , ஆகுல – சிவன் பெயர்
xxxx
ஊர் ராஜ்ய மன்னர்கள் (CITY STATE UR)
ஊர் = புரம் =புரி
நாகபுரி = நாக்பூர் ; ஜெயபுரி = ஜெய்ப்பூர்
Kings of Ur
First king is
Ur Nammu – 2112 BCE
ஊரு நம்மு
Shulgi 2094 BCE
சுளகி
Then we have three Sanskrit names
Sin is Chandra / moon in Sumerian ; I read it as sena ; Mahabharata has many sena names
மிகவும் தெளிவான சம்ஸ்கிருதப் பெயர்கள்
We have Ramachandra, Kaushik Chandra, Ravi Chandran and many more chanders
ராம சந்திரன், சரத் சந்திரன், கௌஷிக் சந்திரன், ரவிச் சந்திரன் என்ற பெயர்களை நாம் இன்றும் வைக்கிறோம். சில சுமேரிய பெயர்களில் சந்திரன் முதலில் வருகிறது. அதையும் நாம் சந்திர சேகரன் , சந்திரமோகன், சந்திரகாந்தா என்ற பெயர்களுடன் ஒப்பிட முடிகிறது
In Sumer we have
Amar sin – 2046 BCE அமர சேனன் அல்லது சந்திரன்
Shu sin – 2037 BCE சு சேனன் அல்லது சு சந்திரன்
Ibbi sin – 2026 BCE ரவி சேனன் அல்லது ரவிச் சந்திரன்
‘சின்’ (SIN) என்பது சுமேரிய மொழியில் சந்திரன்.
ஆனால் மஹாபாரத மன்னர் பெயர்கள் சேன (SENA) என்று முடிவதால் நான் சேன என்று எழுதுகிறேன்
I gave only the kings who ruled 4000 years ago.
இவை அனைத்தும் 4000 ஆண்டுக்கு முந்தையவை. இதற்குப் பின்னர் 3500 ஆண்டுகளில் தெளிவான, சுத்தமான சம்ஸ்கிருதப் பெயர்கள் உள .
எ .கா – தசரத, பிரதர்தன
So there is no doubt that they were Hindus who went there and settled and ruled. Later Mitannian kings have very pure Sanskrit names from 1400 BCE.
ஆகையால் அவர்கள் இந்துக்கள் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை
முதலில் அங்கு போனவர்கள் அமைதியாகக் குடியேறியதையும் பின்னர் அவர்களை அசிரியர்கள் ASSYRIANS/ அசுரர்கள் தாக்கியவுடன் அவர்களை நாம் திருப்பித் தாக்கியதையும் ரிக் வேதப் பாடல்களில் காணமுடிகிறது.
ரிக் வேதத்தின் ஏழாம் மண்டலம் காலத்தால் முந்தியது. பத்தாம் மண்டலம் பிந்தியது. அங்கு தாக்குதல், எரித்தல் , அழித்தல் சொற்களைக் காணலாம். முதலில் அவை இல்லை. அசீரிய மன்னர்கள் தங்களை அசுரர் (ASUR) என்றே அழைத்துக் கொண்டனர். ஆக ரிக் வேதம் சொல்லும் அசுரர், ராக்ஷஸர்கள் சுமேரியாவில் நம்மைத் தாக்கியவர்களே என்பதும் தெளிவாகிறது; .ரிக் வேதம் என்பது 500 ஆண்டுக் ஆண்டுக்காலத்தில் படைக்கப்பட்ட கவிதைகள் என்பது ஆன்றோர் கருத்து. தமிழ்ச் சங்கக் கவிதைகள் 2500ம் சுமார் 400 ஆண்டுக்காலத்தில் படைக்கப்பட்டவை
கீழ்கண்ட எனது பழைய கட்டுரைகளையும் படிக்க வேண்டுகிறேன் :
சுமேரிய | Tamil and Vedas
tamilandvedas.com › tag › சும…
4 Dec 2019 — … this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com … சுமேரிய நாகரீகத்தில் கங்கை நதியும் கைலாஷ் பர்வதமும்!
சுமேரிய மருத்துவம் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › சும…
2 Nov 2019 — Tagged with சுமேரிய மருத்துவம். சுமேரிய மருத்துவமும், அதர்வண வேத கால மருத்துவமும் (Post No.7168) … https://tamilandvedas.com › tag › புத்தர்-நோ…
Swami’s Indology Blog: ‘மூன்றில் இரண்டு …
swamiindology.blogspot.com › post-…
2 Feb 2019 — 10 Oct 2014 – இப்போது மேற்காசியாவில் உள்ளசுமேரிய பாபிலோனிய … சுமேரியாவில் களிமண் ஏடுகளில் … https://tamilandvedas.com/2014/05/13/%e0%ae%9a …
11 May 2014 — Picture of Eagle headed genie from Assyria 883 BCE. There are 60,000 lines on clay tablets in chaste Sumerian ’emegir’ and another 60,000 …
19 Sept 2020 — Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com I wrote about Sumukan Mystery six year ago. Now I have got …
2 Aug 2015 — (I have already shown that even the most popular Valentine day symbol of an ‘arrow piercing the heart’ is from the Atharva Veda). bes. image of …
18 Nov 2014 — God Baal of Sumer ( Indra of Sumer) Research paper written by London … of clay which is then brought to life is another image of creation.
Posts about Sumer written by Tamil and Vedas. … Pictures are taken from various sources; thanks. Rig Veda, the oldest book in the world, contains references to …
31 Oct 2019 — 7159 Pictures are taken from various sources; beware of copyright … blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. … I have chosen 30 Sumerian Proverbs which are similar to Indian …
31 Oct 2019 — Posts about Sumerian Proverbs written by Tamil and Vedas. … Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use …
14 Sept 2014 — He is a Hindu god from India travelling to different parts of the world. In my previous article, I published the pictures of Laos and Mongolia stamps …
–subham–
TAGS- சுமேரியா , இந்து தாக்குதல், உரு, ஊர், கிஷ், உருக்ஷிதி , ரிக் வேதம்
Greek SphinxMarble capital and finial in the form of a sphinx, ca. 530 B.C.
Greek, Attic, Archaic
Marble, Parian; H. with akroterion 56 1/8 in. (142.6 cm)
The Metropolitan Museum of Art, New York, Munsey Fund, 1936, 1938 (11.185d, x)
http://www.metmuseum.org/Collections/search-the-collections/248501
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 12 October 2018
Time uploaded in London –9-36 am (British Summer Time)
Post No. 5532
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
உலகின் மிகப் பழைய புஸ்தகமான வேதத்துக்கு முதலில் கி.மு.1200 என்று முத்திரை குத்திவிட்டு, பின்னர் கடும் எதிர்ப்பு கிளம்பவே ‘ஜகா’ வாங்கிய மாக்ஸ்முல்லரை (Max Muller) எல்லோருக்கும் தெரியும்.
அவர் எப்படிக் குத்து மதிப்பாகக் கணக்குப் போட்டார்?
புத்தர் காலம் கி.மு. 600.
பிரம்மாண்டமான வேத இலக்கியங்களில் கடுகளவு கூட புத்த மத வாடை இல்லை. ஆகவே அவருக்கு முந்தைய உபநிஷத இலக்கியத்துக்கு கி.மு.800 என்று ஒரு முத்திரை குத்தினார்.
அதற்கு முந்தைய பிராமண, ஆரண்யக உரை நடை மொழி வேறு என்று சொல்லி, அதற்கு கி.மு 1000 என்று முத்திரை குத்தினார்.
அதாவது, ஒரு மொழி 200 ஆண்டுக்கு ஒரு முறை மாறும் அன்பது அவரது கணிப்பு.
(தமிழில் 200 ஆண்டுக் காலவீச்சில் வைக்கப்பட்டுள்ள தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், சங்க இலக்கியம் இடையே பயங்கர மொழி வேறுபாடு இருந்தும் நாம் அவற்றை
200 ஆண்டுக் கணக்கில் அடக்கி விடுகிறோம்)
பிராமண இலக்கியத்துக்கும் முந்தைய ஸம்ஹிதை எனப்படும் வேத துதிப் பாடல்கள் அவற்றுக்கும் முந்தி இருக்க வேண்டும் என்று சொல்லி, அதற்கு கி.மு 1200 என்று மாக்ஸ்முல்லர் போட்டார் ஒரு போடு.
அவர் சமகாலத்திய வேத விற்பன்னர்கள்– வெள்ளைத் தோல் அறிஞர்கள்- அவரைச் சாடினர். உடனே கி.மு 1500 அல்லது அதற்கு முன்னரும் இருக்கலாம் என்று மாக்ஸ்முல்லர் பின்னோக்கி நடந்தார்.
வின்டர்நீட்ஸ் (Winternitz) என்பவர் சொன்னார்:- சில மொழிகள் வேகமாக மாறுகின்றன. சில மொழிகள் மெதுவாக மாறுகின்றன. ஆகையால் குத்து மதிப்புக் கணக்கு செல்லு படியாகாது.
வேறு சிலர் ஹிந்தி மொழியின் பேச்சு வழக்கான ‘கரி போலி’ கூட 600 ஆண்டுகள் மாறாமல் இருந்ததைச் சுட்டிக்காட்டினர்.
வேறு சிலர் வால்மீகி முதல் ஹர்ஷ மன்னன் வரை 1800 ஆண்டுகளுக்கு ஸம்ஸ்க்ருத மொழி இலக்கியம் மாறவில்லை என்பதைக் காட்டினர்.
இது ஒரு புறமிருக்க, ஜெர்மானிய ஆராய்ச்சியாளர் ஹெர்மன் ஜாகோபி, (Herman Jacobi) வேதத்தில் கிருத்திகா/ கார்த்திகை நட்சத்திரத்தை முதலாவதாகக் குறிப்பதால், வானவியல் கணக்குப்படி அந்த துதி கி.மு.4500 என்று உரைத்தார்.
அவருக்குத் தெரியாமல் வானவியல் குறிப்பை ஆராய்ந்த் பால கங்காதர திலகர் (B G Tilak) , துருவ நட்சத்திரக் கணக்குப்படி ரிக் வேத காலம் கி.மு 6000 என்றார்.
இந்த துதிகளுக்கு பல விதங்களில் வியாக்யானம் செய்ய முடியும் என்பதால் ஏற்பதற்கில்லை என்றார் வின்டர்நீட்ஸ்.
வில்ஸன் முதலானோர் வேத காலம் என்பது கி.மு 2000 என்றனர்.
ரிக் வேதத்தில் உள்ள பூகர்ப்பவியல் குறிப்புகளை (geological factors) காட்டி கி.மு25,000 என்று மொழிந்தார் டாக்டர் ஏ.ஸி. தாஸ் (Dr A C Das). ஆனால் ஒரு மொழி இவ்வளவு காலம் மாறாமல் இருந்ததற்குச் சான்றுகள் இல்லை என்று சொல்லி அறிஞர் பெருமக்கள் அந்த வாதத்தை நிராகரித்தனர்.
புராணங்களில் நந்த வம்ஸ மன்னர்களுக்கு முன்னர் 140 தலை முறை ஆண்ட குறிப்புகள் இருப்பதால், மனு என்று ரிக் வேதம் குறிப்பிடும் மன்னர் கி.மு 3000 வாக்கில் இருந்திருக்க வேண்டும் என்பர் பலர்.
தற்காலத்தில் ஸரஸ்வதி நதி பற்றி விண்கலத்தில் இருந்தும், நிலத்தடி நீரை அணுசக்திவியல் (space and Nuclear science) மூலமும் ஆராய்ந்ததில் கி.மு.2000க்கு முன், அந்த நதியின் கரையில் வேத துதிகள் பாட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.
இது ஸிந்து-ஸரஸ்வதி நதி தீர நாகரீக காலம் ஆதலால் மொஹஞ்சதாரோ- ஹரப்பா வேத கால நாகரீகமே என்றும் தெரிகிறது.
ஆயினும் இப்போது வரும் செய்திகள் மொஹஞ்சதாரோ- ஹரப்பா நாகரீகத்தின் துவக்கம் கி.மு.7000 ஆக இருக்கலாம் என்பதால் இந்திய வரலாறும் பின்னுக்குத் தள்ளிக் கொண்டே போகிறது.
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
வேதம் முதல் தாயுமானவர் வரை அஷ்டமா சித்திகள்! அற்புத சக்திகள்! (Post No.5058)
தாயுமானவர் பாடிய அற்புத சக்திகள் பற்றிய பாடல் நாம் எல்லோரும் அறிந்ததே:
கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்;
கரடி வெம்புலி வாயையுங் கட்டலாம்;
ஒரு சிங்கம் முதுகின் மேற் கொள்ளலாம்;
கட்செவி எடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம் வைத்தைந்து லோகத்தையும்
வேதித்து விற்றுன்ண்ணலாம்;
வேறொருவர் கானாமல் உலத்துலாவரலாம்
விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;
சந்ததமும் இளமையோடிருக்கலாம்
மற்றொரு சரீரத்திலும் புகுதலாம்;
சலமேல் நடக்கலாம்; கனல் மேலிருக்கலாம்
தன்னிகரில் சித்தி பெறலாம்
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது.
அற்புதங்களின் ப்ட்டியலைத் தரும் தாயுமானவர் மனதை அடக்குவதுஅதை விடக் கடினம் என்கிறார்.
இந்த மாதிரி அற்புதங்களை தமிழ் சித்தர்கள் சர்வ சாதாரணமாகச் செய்து வந்தனர். அவர்களுக்கு அது ஒரு விளையாட்டு போல! இறைவனின் அற்புதங்களை சொல்லும் தமிழ் மொழி நூல்களும் அதை திரு ‘விளையாடல்’ என்றே செப்பும். ஸம்ஸ்க்ருதத்தில் அதை லீலா விநோதங்கள் அல்லது விபூதி என்பர்.
இதற்கெல்லாம் மிக மிக முந்தைய அற்புத துதிகள் உலகின் மிகப் பழமையான ரிக் வேதத்தில் உள்ளன.
ரிக் வேதம் 3500 ஆண்டு முதல் 8000 ஆண்டுவரை பழமையுடைத்து என்பது ஆராய்ச்சியாளர்களின் துணிபு. அதில் பத்தாவது மண்டலத்தில் ஜடை தரித்த (கேசீ) முனிவர்களைப் பற்றியும் அந்த முனிவர்களின் சக்தி குறித்தும் வருகிறது
ஏழு ரிஷிகள் சூரியனை முனிவனாக உருவகித்து பாடிய பாடல் அது.
அதில் வரும் சில வரிகளைக் காண்போம்:
கேசீ பூமியையும் சோதியையும் தாங்குகிறான்
முனிவர்கள் மஞ்சள் நிற ஆடைகளை அணிகின்றனர். காற்று போலச் செல்கிறார்கள்.
நாங்கள் காற்றின் மேலே ஏறினோம்; மானுடர்களே; நீங்கள் தூல தேகத்தையே பார்க்கிறீர்கள்
காற்றின் குதிரையும் வாயுவின் நண்பனுமான முனி, தேவனால் ஊக்கம் அடைந்து, கிழக்கு மேற்கிலுள்ள இரு கடல்களுக்கும் செல்கிறான்.
அப்சரஸ், கந்தர்வர்கள் செல்லும் இடங்களிலும் வனவிலங்குகள் செல்லும் இடங்களிலும் ( வானம், காடு) முனிவன் சஞ்சரிக்கிறான்.
கேசீ ஜடையுள்ளவன். அவன் ருத்திரன் விஷத்தை அருந்தினான்.
இந்தப் பாடலில் வரும் விஷம் அருந்தும் வரிகள் நமக்கு விஷம் உண்டு பெயர் பெற்ற திரு நீலகண்டன் (சிவ பெருமான்) கதையை நினைவு படுத்துகிறது.
இந்தத் துதியின் அடிக்குறிப்பில் ரிக் வேதத்தைத் தமிழில் மொழிபெயர்த்த ஜம்புநாதன் கூறுவதாவது:-
முனிவர்கள் தங்கள் நேர்மையான வாழ்க்கை நடைமுறைகளால் வாயு, ருத்திரன் போன்ற தேவர்களின் தன்மையை அடிய முடியும். அவர்களைப் போல சிறந்த சக்திகளையும் பெற முடியும். எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்; நீண்ட அழகான முடியுடைய முனிவர்கள் தவத்தின் போது மழிப்பதில்லை. தீ ஜோதி, பூமி ஆகியவற்றைத் துதிப்பார்கள்.
சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ‘தீக நிகாயம்’ என்ற பௌத்த மத நூலும் ஆறு அதி மானுட சக்திகளை விவரிக்கிறது. ரிக் வேதம் காலத்தினால் பழமையானதால் அவர்கள் மறை பொருளில் பேசுவர். ஆனால் பிற்காலத்தில் எழுந்த பௌத்த, சமண சமய நூல்கள் நமக்குப் புரியும் நடையில் எல்லாவற்றையும் நுவல்வர்.
இதோ புத்த மத நூல் இயம்புவன:
“ஒரு மனிதன் பல மனிதர்கள் ஆகலாம்; பலர் ஒன்றாகலாம்.
மலைகள், சுவர்கள் ஊடே நுழைந்து செல்லலாம்
தண்ணீருக்குள் முங்கு நீச்சல் அடிப்பது போல பூமிக்குள் மூழ்கி எழுந்திருக்கலாம்.
தண்ணீர் மீது நடந்து செல்லல்லாம்
யாருக்கும் தெரியாமல் மாயமாய் உலவலாம்
காற்றின் மீது சம்மணம் போட்டவாறு பறக்கலாம்.
நிலவையும் கதிரவனையும் தொடலாம்;
பிரம்ம லோகம் வரை மானுட உடலில் செல்லலாம்.”
இவை அனைத்தும் சாதாரண மனிதனால் செய்ய இயலாது.
சமண மத நூல்களும் இதையே சொல்லும்.
அஷ்டமா சித்திகள்
ஹேம சந்திரர் எழுதிய த்ரிசதிசலாகா புருஷ சரிதத்தில் வரும் விஷயம் பின்வருமாறு:
“ஊசியின் காதில் நுழையும் அளவுக்கு உருவத்தைக் குறுக்கலாம்.
மேரு மலையை முழங்கால் அளவாகக் காட்டும் வரை உயரலாம்
காற்றை விட லேஸாகலாம்.
இந்திரனின் வஜ்ராயுதத்தை விட வலிமை பெறலாம்.
பூமியில் இருந்தவாறே கிரஹங்களைத் தொடலாம்
நீரின் மீது நடக்காலாம். பூமிக்குள் பு குந்து எழலாம்
பொந்துக்குள் நுழைவது போல மலைகளுக்குள் எளிதில் நுழையலாம்.
உருவமே தெரியாமல் மறையலாம்; வானம் முழுதும் வியாபித்தும் நிற்கலாம்.”
ஆக ரிக் வேதம், பழங்கால மொழியில் பகன்றதை பிற்கால நூல்கள் எளிய மொழியில் செப்பின என்றால் மிகை இல்லை.
அஷ்டமா சித்திகள் என்பதில் மேற் சொன்ன அற்புதங்கள் எல்லாம் அடக்கம். ஆனால் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை எண்வகைச் சித்திகளில் மட்டுமே காணப்படுகிறது. இது பர காயப் பிரவேசம் ஆகும். அதாவது ஒருவர் உடலில் உள்ள உயிர் வேறு ஒருவரின் உடலுக்குள் புகலாம். இதைத் திருமூலர் கதையில் விளக்கியுள்ளேன்
பணம், பணம், பணம்– ரிக் வேதமும் தமிழ் வேதமும் புகழ்மாலை (Post No.4923)
WRITTEN by London Swaminathan
Date: 17 April 2018
Time uploaded in London – 13-53 (British Summer Time)
Post No. 4923
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
‘பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்’ – என்பது தமிழ்ப் பழமொழி. ரிக் வேதமும், தமிழ் வேதமாகிய திருக்குறளும் பணத்தைப் போற்றுகின்றன. தமிழ் வேதம் என்று திருவள்ளுவமாலை போற்றும் திருக்குறளை விடப் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையுடைத்து ரிக் வேதம் . ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபி சுமார் 6000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று வானியல் குறிப்புகளை வைத்து மொழிந்தார். அவர் உரைத்ததை இன்று வரை தகர்த்தார் எவருமிலர். நிற்க
பணம் ஜிந்தாபாத்! பணம் வாழ்க! ஏன்? ஏன்?
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகியாங்கு (குறள் 247)
பொருள்
பணம் இல்லாதவர்களுக்கு இந்த உலகத்தில் நல்ல வாழ்வு இல்லை; அது போல அருள் (கருணை) இல்லாதவர்களுக்கு சுவர்க்கத்தில் இடம் இல்லை.
தொல்காப்பியரும் திருவள்ளுவரும் அதி தீவிர இந்துக்கள். ஆர். எஸ். எஸ்.காரர்கள் தோற்றுப்போவார்கள்!!
ஸம்ஸ்க்ருதத்தில் சொன்ன தர்ம, அர்த்த , காம என்ற வரிசையில் தீவிர இந்துத்வவாதியான திருவள்ளுவர் திருக்குறளை அமைத்தார். த்ருண தூமாக்கினி என்னும் தொல்காப்பிய ரிஷியோ இதைப் பல இடங்களில் அதே வரிசையில் செப்பிச் சென்றார்.
ஆக பொருள் (பணம்) என்பதன் முக்கியத்துவத்தைத் தொல்காப்பிய ரிஷியும் வள்ளுவ முனியும் வலியுறுத்துவர்.
இன்னொரு குறளில் வள்ளுவன் விளம்புவது யாதெனின்,
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார்
அற்றார் மற்று ஆதல் அரிது (248)
உலகில் பணம் இல்லாதவர்களுக்கு திடீரென லாட்டரிப் பரிசு அடிக்க வாய்ப்பு உண்டு; ஆனால் கருணை இல்லாதவர்களுக்குப் பாவம் சேர்வதால் மீண்டும் வளம்பெறுவது கடினமே.
இவ்வாறு பல இடங்களில் வள்ளுவன் நுவல்வதோடு, வாணிகம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை அப்படியே வள்ளுவத்தில் கையாளுவதால் அவர் நல்ல பிஸினஸ்வாதி என்றும் தெளிவு பெறலாம்.
சாணக்கிய நீதியில் சாணக்கியன் பகர்வான்-
கெட்ட வழியில் சம்பாதித்த பணம் பத்து ஆண்டுகளுக்கு இருக்கும். பதினோராவது ஆண்டு துவங்கும் போது அடியோடு, வேரோடு பிடுங்கிக் கொண்டு போய்விடும்.
செல்வம் என்பது சக்கரம் போல. அது மாறி மாறி வரும் என்று ரிக் வேதம் புகலும். அதை மேற்கூறிய (248) குறளில் கண்டோம்.
15-6
அன்யாயோபார்ஜிதம் வித்தம் தச வர்ஷாணி திஷ்டதி
ப்ராப்தே சைகாதசே வர்ஷே ஸமூலம் தத் வினஸ்யதி
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பாலவை – குறள் 659
பிற மக்களை அழ, அழ வைத்து சம்பாதித்த பொருள் எல்லாம், அந்த மனிதனை அழ அழ வைத்துவிட்டுப் போய் விடும்; உண்மையாக உழைத்து சம்பாதித்த பணம் போனாலும், அதில் ஒரு நன்மையே ஏற்படும்.
இனி ரிக் வேதத்துக்குள் நுழைவோம்:-
எங்களுக்குச் செல்வத்தைக் கொடு; அதன் மூலம் தாக்கும் சக்தியையும் கொடு- என்று வேத மந்திரம் சொல்கிறது (ரிக் வேதம் 3-46)
பணம் இருந்தால்தான் எதிரிகளைத் தாக்கும் சக்தியும் கிடைக்கும்.
ஆயினும் பணம் என்பது மோட்ச சாம்ராஜ்யத்துக்கு வழி இல்லை என்பதை பிருஹத் ஆரண்யக (பெருங்காட்டு உபநிஷதம்) உபநிஷத் தெளிவுபடுத்தும்:-
‘செல்வம் மூலம் முக்தி பெற முடியாது’- நாலாவது அத்யாயம், ஐந்தாவது பிராஹ்மணம், பிரு. உபநிஷத்.
xxx
கவச ஐலூஷன் என்ற ரிஷி பாடுகிறார் (10-31-2)
மனிதர்கள் செல்வம் பற்றி சிந்திக்கட்டும்
சட்டபூர்வ வழிகளிலும் வழிபாட்டின் மூலமும் வெல்லட்டும்
நன்கு சிந்தித்து விவேகத்துடன் செயல்படட்டும்
சுய சிந்தனையால் திறமையுடன் செயல்படட்டும்.
க்ருத்ஸமடர் என்ற ரிஷியும் செல்வம் பற்றிப் பாடுகிறார் (2-21-6)
இந்திரா! எங்களுக்கு நல்ல புதையல்கள் கிடைக்கட்டும்
திறமையான சிந்தனையையும் பிரகாசமான புத்தியையும் கொடு
செல்வம் அதிகரிக்கட்டும், உடல் ஆரோக்கியம் பெருகட்டும்
இனிமையான பேச்சு அமையட்டும், நாட்கள் நல்லதாக இருக்கட்டும்.
ஆக செல்வத்திதை வேண்டுவது, உலகின் பழமையான புஸ்தகத்தில் இருப்பது குறிப்பிடத் தக்கது. உலகில் இந்துக்கள் மட்டுமே இப்படி அறம்- பொருள்- இன்பம்- வீடு (மோக்ஷம்) என்று வாழ்க்க்கைக்கு நான்கு தூண்கள் நிறுவியவர்கள். வேறு எந்த ஒரு மதத்திலும் இவ்வாறான தெளிவான வரையறை இல்லை!
1 Mar 2018 – அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும். பிற்பயக்கும் நற்பாலவை – குறள் 659. பிற மக்களை அழ,அழ வைத்து சம்பாதித்த பொருள் எல்லாம், அந்த மனிதனை அழ அழ வைத்துவிட்டுப் போய் விடும்; உண்மையாக உழைத்து சம்பாதித்த பணம் போனாலும், அதில் ஒரு நன்மையே …
You must be logged in to post a comment.