


Post No. 9975
Date uploaded in London – 14 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற எழுத்தாளர்களில் ஒருவர் பிரான்ஸைச் சேர்ந்த ஆல்பர்ட் காமு ALBERT CAMUS . அவருக்கு 1957-ம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு கிடைத்தது .
வட ஆப்ரிக்காவிலுள்ள அல்ஜீரியா நாட்டில் ஒரு ஏழைத் தொழிலாளர் குடும்பத்தில் 1913-ல் காமு CAMUS பிறந்தார்.அக்காலத்தில் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் அல்ஜீரியா இருந்தது. இதுவே அவருடைய கதைகளுக்கும் அடிப்படையாக அமைந்தது.
காமூவின் தந்தை முதல் உலகப் போரில் கொல்லப்பட்டார்.அதற்குப் பின்னர் அவரை தாயார் வளர்த்தார். அப்போது அவர்கள் அல்ஜீரிய தலைநகரான அல்ஜீயர்ஸில் வசித்தனர். அவர் க்ஷயரோகம் என்னும் காசநோய் கண்டும் கூட, அல்ஜீயர்ஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவம் கற்று, அதில் பட்டம் பெற்றார் .
1942ல் பிரான்சுக்குச் சென்று நாஜி ஆட்சிக்கு எதிரான இயக்கத்தில் காமு சேர்ந்தார். பிரெஞ்சுப் படையில் சேர்ந்து இரண்டாவது உலகப்போரில் கலந்துகொண்டார்.பின்னர் பத்திரிகையாளராகி நாவலும் எழுதத் துவங்கினார்.
29 வயதில் STRANGER ஸ்ட்ரேஞ்சர்/ அந்நியன்/வெளியாள் என்ற நாவலை எழுதி வெளியிட்டார்.மனித வாழ்வின் பொருளற்ற , அவலம் நிறைந்த வாழ்வு பற்றிய கதை அது.
1934 ல் அவர் PLAGUE பிளேக்/ கொள்ளைநோய் என்னும் கதையைப் பதிப்பித்தார். அநீதிகளை எதிர்த்துப் போராடும்படி மக்களுக்கு அறைகூவல் விடுக்கும் கதை அது.
ஷான் பால் சாத்ர JEAN PAUL SATRE போன்ற இடதுசாரி எழுத்தாளர்களைப் போல அவர் புரட்சி செய்யச் சொல்லவில்லை. தார்மீகப் புரட்சி வேண்டும் என்று வாதாடினார். அரசியல் புரட்சியைவிட இது முக்கியமானது என்றார் . புரட்சிக்காரன் என்ற நாவலில் மக்கள் அவர்கள் செய்யும் செயல்களுக்கன தார்மீகப் பொறுப்பை ஈக்கவேண்டும் என்று சொன்னார்.
43 வயதில் அவர் கடைசி நாவலான தி ஃ பால் / வீழ்ச்சி என்ற நாவலை எழுதினார். முயற்சி செய்து, நடத்தை மூலமாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். தனி மனித முயற்சியின்போதும், சமுதாயத்தின் ஒரு அங்கம் என்ற நினைவு வேண்டும் என்கிறார்.
அவர் நாடகங்களை எழுதியபோதும் அவைகளுக்குப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆல்பர்ட் காமு ஒரு விபத்தில் சிக்கி இறந்தார்.
பிறந்த தேதி – நவம்பர் 7, 1913
இறந்த தேதி – ஜனவரி 4, 1960
வாழ்ந்த ஆண்டுகள் – 46



அவர் எழுதிய நூல்கள்,
1938- CALIGULA
1942- THE STRANGER
1942- THE MYTH OF SISYPHUS
1944 – CROSS PURPOSE
1947 – THE PLAGUE
1948- STATE OF SIEGE
1951- THE REBEL
1956- THE FALL
1958- EXILE AND THE KINGDOM



–SUBHAM–
tags- நோபல் பரிசு, பிரெஞ்சு நாவல், நாடக ஆசிரியர் ,ஆல்பர்ட் காமு, Albert Camus