Is God Omnipresent?

Signpost

Once a saint, to test his disciples to find out if they are conscious of God’s presence everywhere, called a few of them, gave them a mango each and asked them to eat it in a place where nobody could see them. They all went with their mangoes and, except one, returned and reported that none saw them eating the mangoes. But the disciple who was an exception came back with the mango and told the Guru that he could not find a place where he was not watched by God, who is an eternal and all pervading witness. God is omnipresent.

—From Stories as told by Swami Ramdas

 

Avvaiyar’s Wisdom

Ancient Tamil poetess Avvaiyar dedicated her life to educate the people. She was a preacher of simple yet profound truths. Her teachings have the validity for the whole world for all time. She has a permanent place in Tamil literature and her name is a household name in Tamil speaking parts of the world. Several poetesses had this name Avvaiyar. The most famous one was the Sangam poetess. This Avvaiyar  was said to be the sister Tiruvalluvar, author of Tirukkural, according to an old legend.

Gods-Direction

‘’An interesting story offers an insight into Avvaiyar’s mind. After long wanderings the poetess arrived at a temple and, sitting down to rest, stretched her legs in the direction of the sanctum (Garba Gruham). The temple priest came to her shouting, ‘’how dare you stretch your feet towards god. Get up and get out’’.

 

Avvaiyar pointedly replied, ‘’Sir I am dead tired and I am urging the ache in my legs to seek relief from god. If you think this is blasphemy, please put my legs in the direction where there is no God. Please, learned priest show me a direction where God is not found ’’.

The priest was nonplussed; soon he acknowledged her wisdom and admitted his ignorance.

 

Story as told by Sri Suddhananda Bharati from London Sri Murugan Temple Consecration Souvenir, year1984.

compass (2)

Compiled by London Swaminathan ;contact swami_48@yahoo.com

 

இசை தரும் நோயற்ற வாழ்வு! -3

indian-figurines-banjara-musician-statues

ச.நாகராஜன்

பண்டைய தமிழ் இலக்கியங்களான புறநானூறு, பரிபாடல் சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல நூல்களில் இசையின் நுணுக்க ங்களையும் இசையின் வலிமையையும் அதனால் நிகழ்ந்த அபாரமான சம்பவங்களையும், ஏராளமாகக் காண முடியும்.புறநானூற்றின் “தீங்கனி இரவமொடு” என்று ஆரம்பிக்கும் பாடல் இசை  மருத்துவமாகப் பயன்படுத்தப்பட்டு புண்பட்ட வீரனுக்கு இதமளித்ததைக் கூறுகிறது.

 

பெருங்கதை என்னும் காப்பியம் உதயணன் என்ற அரசன் யாழ் வாசிப்பதில் விற்பன்னன் என்பதைக் கூறி இசை பற்றிய பல செய்திகளைத் தெரிவிக்கிறது.உஜ்ஜயினி நகரத்தில் பட்டத்து யானை மதம் பிடித்து ஓட, தன் யாழை வாசித்து யானையின் மதத்தை அடக்கினான் உதயணன்.

Jaisalmer-instruments

அக்பர் சபையில் இருந்த பிரபல இசை விற்பன்னர் தான்ஸேன் தீபக் ராகம் பாடுவதில் வல்லவர். அவர் அதைப் பாடினால் இருக்கும் இடமெல்லாம் ஒளிரும். இதை நேரில் பார்க்க விரும்பிய அக்பர் தான்ஸேனை அதன் வலிமையைக் காண்பிக்குமாறு  வற்புறுத்தினார். எவ்வளவோ மறுத்தும் அக்பர் மசியவில்லை. இறுதியில் ஒரு பெரிய ஏரிக்கரையின் முன் மேடையை அமைக்கச் சொன்னார் தான்ஸேன். விவரம் என்னவென்று தெரியாத அக்பரும் அப்படியே மேடையை அமைக்க ஆணையிட்டார். தீபக் ராகத்தை பல்லாயிரக்கணக்கானோர் குழுமி இருக்க அக்பர் முன்னால் உளமுருகப் பாடலானார் தான்ஸேன். என்ன ஆச்சரியம், திடீரென்று ராகத்தின் உச்ச கட்டத்தின் போது அவர் உடல் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனே முன்னால்  இருந்த ஏரியில் குதித்துத் தன்னைக் காப்பாற்றிக் கொண்டார்  தான்ஸேன்.  மிகவும் வியப்படைந்த அக்பர் வருத்தமும் அடைந்தார். நிகழ்ந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதோடு தான்ஸேனை தன் உச்சி மேல் வைத்துப் புகழ்ந்து மிகுந்த  மரியாதை செலுத்தி வரலானார். இந்த சம்பவத்தை விரிவாக அக்பர் கால நூல்கள் எடுத்துரைக்கின்றன. இந்தச் சம்பவம் சைக்கிக் என்சைக்ளோபீடியாவிலும் இடம் பெற்றுள்ளது. ஆகவே இது உண்மையே என்பதை வரலாற்று ஆவணங்கள் சுட்டிக் காட்டுகின்றன!

 

தான்ஸேனின் ஒவ்வொரு நரம்பும் நாடியும் இசை மயம். அவர் இறந்தவுடன் நடந்த நிகழ்ச்சி இதை நிரூபிக்கிறது. கர்நாடக இசையில் உள்ள தோடியைப் போல இந்துஸ்தானி இசையிலும் ஒரு ராகம் உண்டு. அதை இசைப்பதில் தான்ஸேனின் புதல்வர்களுள் ஒருவரான பிலாஸ்கான் வல்லவர். தான்ஸேன் இறந்தவுடன் துக்கம் தாளாமல் அவரைச் சுற்றி இருந்தோர் வருந்தி அழ பிலாஸ்கான் புதுவிதமான தோடி ராகம் ஒன்றைப் பாடலானார். இசைக்காகவே வாழ்ந்து இசையே ஓர் உருவமாக வடிவெடுத்திருந்த தான்ஸேன் சடலமாக இருந்த போதும் அந்த ராகம் இசைக்கப்பட்டவுடன் அவரது தலை மட்டும் அந்த இசையைப் பாராட்டும் வண்ணம் ஆடியது. இதைப் பார்த்தோர் அனைவரும் வியந்தனர்; பிரமித்தனர். ஆகவே அந்த ராகத்திற்கு பிலாஸ்கான் தோடி என்று பெயரிடப்பட்டது. இன்றும் பிலாஸ்கானியா தோடி.யைக் கேட்போர் இந்தச் சம்பவத்தை நினைவு கூர்வர்.

சாம வேதமே இசையின் அடிப்படை என்று வேத விற்பன்னர்கள் கூறுவர். ஸ,ரிக,ம,ப, த,நி ஆகிய ஏழு ஸ்வரங்களும் ஆகாயத்திலிருந்து ஒலிக்கக் கேட்டு பூமியில் இசையின் ஆதாரமாக வடிவெடுத்தது என்று  மஹாபாரதம் கூறும்.ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு தேவதை இருப்பதாக நமது பண்டைய இசை நூல்கள் கூறுகின்றன.

 

இசை ஒலியைக் கூர்ந்து நுட்பமாகக் கேட்டு அனுபவித்தவர்கள் தமிழர்கள். சட்ஜம் மயில் அகவுதலையும் ரிஷபம் மாடு கத்துதலையும் காந்தாரம் ஆடு கத்துவதையும் மத்யமம் அன்றில் பறவை கூவுதலையும் பஞ்சமம் குயில் கூவுதலையும் தைவதம் குதிரை கனைப்பதையும் நிஷாதம் யானை பிளிறுவதையும் ஒத்து இருக்கிறது என்று தமிழர்கள் இனம் கண்டனர்.

திருஞானசம்பந்தரின் தேவாரமோ ஏராளமான அபூர்வமான பண்களைக் கொண்டதாக உள்ளது. யாழையும் முரிக்க வல்ல யாழ்மூரிப் பண்ணையும் அவர் இசைத்ததை அவர் வரலாற்றில் விளக்கமாகப் படித்து மகிழலாம். தேவாரச் சுவடிகளில் உள்ள தேவாரம் பண் முறை வைப்புடன் இருப்பதால் தேவாரம் இன்றும் பாரம்பரிய வழியிலேயே இசைக்கப் படுகிறது.

 

பாரதமெங்கும் உள்ள பல்வேறு கோவில்களில் உள்ள இசைத் தூண்கள் ஹிந்து நாகரிகத்திற்கே உள்ள தனித்தன்மையுடைய இசைச் சின்னங்களாகத் திகழ்கின்றன!.மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,(வடக்கு கோபுர வாயில் வழியே நுழைந்தவுடன் இடப்புறம் திரும்பியவுடன் கம்பி போட்டுக் கட்டப்பட்டுள்ள இவற்றை இன்றும் காணலாம்)தாடிக் கொம்பு, ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட பல இடங்களில் இந்த இசைத் தூண்கள் உள்ளன. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள கல் நாதஸ்வரம் இசைக்கப்பட்டவுடன் அற்புத ஒலியை எழுப்பும். இந்த அதிசய நாதஸ்வரம் இசையையும் சிற்பத்தையும் இணைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும் மாபெரும் “இசை-சிற்ப” அதிசயமாகும்.

music spain

தாளவகைகள் எண்ணில் அடங்காதவை. இருந்தாலும் உச்சபட்சமாக 175 தாளங்களை நம் முன்னோர் இனம் கண்டனர். ஆனால் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரோ இந்த 175 தாளங்களையும் கையாண்டதோடு அதையும் மீறிப் பல புதிய தாளங்களைத் திருப்புகழில் அமைத்துள்ளது இசையின் ஆழமும் அகலமும் எல்லையற்றது என்பதை விளக்கும் ஒரு செய்தியாக அமைகிறது.

 

சோழ மன்னனின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு மாபெரும் அதிசய சம்பவத்தை நாதமுனிகள் வாழ்க்கை வரலாறு விளக்குகிறது.அதைப் பார்ப்போம்.

This is the third part on Music written by Santanam Nagarajan of Bangalore.;already published in Bagya magazine.                                  தொடரும்

********************

contact swami_48@yahoo.com

Why do I Worship Planets Every day?

planets

Hindus are unique in worshipping everything in the sky including ‘’Father in the Heaven’’. I have already written about their worship of trees, cows and elephants, fish, eagle/Garuda, rivers/Ganga Yamuna Saraswati, Shoes (sandals), snakes, earth, bells etc. They see God in everything. Most of their customs are based on hygiene or science. But some are inexplicable; one of them is the worship of Nine Heavenly Bodies known to Hindus as Navagrahas.

 

Believing astrology is different from worshiping them. Billions of people read weekly predictions for their zodiacal signs in India and Western Countries. For many of us it is fun, for some of us it is accurate prediction!! But I am talking about actual worship of Nine Heavenly bodies (planets): Sun, Moon, Mars, Mercury, Jupiter, Venus and Saturn. In Sanskrit we call them Surya, Chandra, Angaraka, Bhudha, Guru/Bruhaspati, Sukra and Sani.

 

As a Brahmin I do Sandhayvandhanam every day at least once on the banks of river Thames in London. I am supposed to do three times– morning, afternoon and evening. It is like a person taking medicine three times a day or vitamin tablets. It is a lifelong tonic for three castes Brahmana (Priestly caste), Kshatriyas (Security forces) and Vaisya (Business men). But now it is the Brahmins who do it on regular basis.

 

The first part of the Sandhayavandhanam or Sun Worship finishes with Deva Tarpanam. This is where I do the worship of Sun, Moon etc in the same order like in English calendar-Sunday to Saturday (The mantra begins with Adityam Tarpayami, Somam tarpayami…..). Foreign scholars wrote that Egyptians and Greeks taught the days of the week to Indians. I doubt it. If it is ‘’Imported’’ from foreign countries my forefathers would not have included it in orthodox Hindu worship. This was started by my forefathers 5000 or 6000 years ago on the banks of mighty Saraswati River. I have got more proofs to justify my statement.

BigDipper

Saptarishi constellation (other names: Big Dipper, Ursa Major, Great Bear constellation)

All South Indian Temples have special places for the Navagrahas. Sun and Moon have been allocated special places in the corridor. There are special Gayatri Mantras for all the Nine ‘Planets’ (strictly speaking Sun is a star; Moon is a satellite of earth; Rahu and Ketu are shadows). There are special shrines for all the nine planets in Tamil Nadu. Millions of people throng the places every day. There nine more Navagraha  shrines around Chennai. There are special Homas (Fire ceremonies) for all the nine planets and 27 Stars (Nakshatras) from Vedic Days. They are not imported. We have nine different special woods, nine different special grains, nine different special colour clothes for this Homa. The mantras are very old.

 

People all over India wear Navagraha rings, set up with nine different gem stones.

 

Proof from 2000 year old Sangam Tamil Literature

Foreigners spread a blatant lie to destabilise India and destroy Hinduism in the name of Aryan-Dravidian Race theory. Those who read Sanskrit and Tamil literature will have a good laugh about this absurd race theory. I can quote over 1000 common customs from old Tamil literature. They are practised by Hindus from Kashmir to Kandy in Sri Lanka and beyond.

 

The Wonder Boy, Child Prodigy, Youngest Poet in History, Tamil saint Thiru Jnana Sambandhar who lived 1300 years ago sang about these nine planets in the same order in his Kolaru Thiru Pathikam. Elderly saint Appar warned the boy about travelling to Madurai. But he said that these nine planets will have no evil influence on the devotees of Shiva. The miracle boy was right. He did miracles in Madurai and re established Hinduism in Tamil Nadu.

planets (1)

I have quoted two wedding songs (Akam 86, 136) in my post Why Do Hindus Worship Moon? There also the poets talk about the evil influence of the planets when they said why the Tamil weddings are done on the day star Rohini  aligned with the moon. There are over six references about Arundhati star ( Vasista’s wife and one of the stars in Ursa Major known as Sapta Rishi Mandalam). All these are slaps on the face o supporters of Racist theories. I have already written about Indra and Varuna worship from the oldest Tamil book Tolkappiam which shows Aryans did not bring them to the south. There was only one culture from the oldest time the Tamils knew.

 

Tamil literature sings about zodiacal signs and planets like Mars ,Venus and Saturn. The most interesting reference about Jupiter and Venus (Brihaspati, Venus) is they are called Two Brahmins (Anthanar Iruvar). According to mythology Guru/Brihaspati (Jupiter) is the teacher for Devas (angels) and Sukra (venus) is the teacher for Asuras (demons). Devas and Demons had Brahmin Gurus!! This also tears the Aryan Dravidian racist cloth in to pieces. Hundreds and Hundreds of mythological stories have direct reference in Kalitokai and Paripatal. Purananuru, an anthology of 400 verses, is the encyclopaedia of Tamil Life. It has innumerable references to Vedic customs. I don’t want to repeat what I have already given in my posts NO BRAHMINS, NO TAMIL and other 600 posts in this blog.

 

Venus link to rains

Ancient Egyptians linked Sirius (the brightest star) to floods in the River Nile. Tamil and Sanskrit literature links Venus with rains. Purananuru have got lots of references to Venus and rains. Tamils had very good knowledge of astronomy. Science has yet to come with a theory for this link. The belief about comets (Dhumaketu) is also same in both the literature.

 

More Proof

There is lots of proof to show that these beliefs are not imported or brought by migrants. The number of words for Nine heavenly bodies (grahas) and 27 stars (Nakshatras) is amazing in Sanskrit and Tamil thesaurus called ‘Nigantu’. No language in the world has some many words for planets and stars!!!! This is the best proof to show India exported this to the world!

 

Silappadikaram is the best known Tamil epic. It is post Sangam period Encyclopedia of tamil culture. Name anything , you will find it like you find in Mahabharat. This has got reference to all the nine planets and tamil’s belief about them.

outside_solar_system

For want of space I will give some of the references from Tamil literature:

Worship of crescent moon: Kuruntokai vers 178;307; Akam. 239; Maduraikanchi- line 193; Puram.60 and Prayer 1;silambu-2—38;

Planet Rahu devouring Moon (Lunar Eclipse): Kural 1146; Kurun.395;Natr 128;Akam 114, 313; Kalitokai has five references

Sun’s one wheel chariot- Akam 360

Suns horses: Akam 363; Pattina. Line 122-124

 

 

Vasishta’s wife Arundhati: Pari 5-44;Pathitru 31-27;89-17;Perum.line 302

About Krithika (Pleiades) numerous references are there.

Two Brahmins (Jupiter and Venus): Kali-99

 

 

Venus-Rain link: Puram 35;117;383;384;386;388Pathitru. 24-24; 69-13;

Oldest Tamil book Tolkappiam has a lot of references to planets and Tamils’  beliefs.

 

For more about Brahmin’s Sandhya Vandanam, please read:

Why Brahmins Deserve an entry in to Guinness Book of Records

325px-Ursa_Major_constellation_detail_map

 

Last but one in the tail area of Sapatarishi mandalam is Mizar (Vashista); it is a double star with aAcor (Arundhati)

Pictures are taken from various websites; thanks

Contact swami_48@yahoo.com  for details about 600+ posts

நிலவு பற்றிய புதிய விஞ்ஞான உண்மைகள்- Part 2

el_010_moon_hare

 

(Hare on moon is in Sanskrit and Sangam Tamil literature; it is in Buddhist Jataka stories and Mayan culture.

(நிலவு பற்றிய தமிழனின் அபார அறிவு Part -1 என்ற எனது முந்திய கட்டுரையைப் படித்துவிட்டு இதனைப் படிக்கவும்:லண்டன் சுவாமிநாதன்)

 

பிரிட்டிஷ் மஹாராணியின் பேரன் வில்லியத்துக்கு ஆண் குழந்தை பிறந்த (July, 2013) நாளன்று பிரிட்டிஷ் பத்திரிகைகள் ஒரு செய்தி வெளியிட்டன. அது மேலை நாடுகளில் சந்திரன் பற்றிய நம்பிக்கை என்ன என்பதைக் காட்டுகிறது. பௌர்ணமியை ஒட்டி புதிய ராஜா பிறப்பார் என்பது எங்களுக்குத் தெரியும் என்று மகப்பேறு தாதிமார்கள் கூறினர்.

 

பிரிட்டனில் பிரசவ ஆஸ்பத்திரிகளில் வேலை பார்க்கும் தாதியர் இப்படி அலுத்துக் கொள்வார்களாம்: ‘’அடடா! இன்று பௌர்ணமி தினம்! நான் இன்று சீக்கிரம் வேலைக்குப் போக வேண்டும். இன்று மிகவும் வேலை வரும்”. அதாவது பௌர்ணமி என்றால் அதிகம் குழந்தைகள் பிறக்கும் என்பது மேலை நாட்டார் நம்பிக்கை. கடல் அலைகள் பௌர்ணமி அன்று பொங்கும், அது போல தாய்மார்களின் கருப்பையில் குழந்தையைச் சுற்றி இருக்கும் நீரும் (பனிக்குடம்) பொங்கி குழந்தையை விரைவில் வெளியே தள்ளும் எனபது இதன் பொருள். ஆயினுமிது விஞ்ஞான உண்மையா எனபதை நிரூபிக்க போதுமான புள்ளி விவரம் கிடைக்கவில்லை.

 

பிராமணர்களும் பௌத்தர்களும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் படிப்பதை விட்டு உபவாசம் இருப்பதில் பொருள் இருப்பதை சமீபத்திய பத்திரிக்கை செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. பௌர்ணமி, அமாவாசை, பிரதமை, அஷ்டமி, சதுர்தசி நாட்களில் பிராமண வேத அத்தியயனம் இருக்காது. இதே போல பவுத்தர்கள் பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி தினங்களில் உபோசத் (உபவாசம்) இருப்பார்கள். இந்த நாட்களில் கடல் அலைகளின் சீற்ற்ம அதிகரிப்பதால் மீனவர்கள் கூட மீன் பிடிக்கச் செல்வதில்லை. ஆக கடலில் ஏற்படும் மாற்றம் உடலிலும் உண்டு என்பதை இந்துக்கள் அறிந்திருந்தார்கள். ‘’அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு’’ என்பது இந்துக்களின் கொள்கை.

pirai sudi

Hindu God Shiva with crescent moon ( in Tamil Pirai Soodi)

 

கடல் அலைகளில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அளந்து பார்த்ததில் பௌர்ணமி நாட்களில் இரு மடங்கு இருப்பது விஞ்ஞானிகளுக்கு வியப்பைத் தந்துள்ளது.( The level of bacteria in water varies with the lunar cycle and highest during a full and new moon, a study of California beaches found). கடலில் வளரும் பவளம் என்னும் பிரணிகளில் இருந்தே நமக்கு நவரத்தினக்களில் ஒன்றான பவளம் கிடைக்கிறது. இந்தப் பவளப்பூச்சிகள் பௌர்ணமி அன்று கோடிக்கணக்கில் முட்டைகளை வெளியிடுகின்றன.

பசிபிக் தீவுகளில் வாழும் நண்டுகள் பௌர்ணமி அன்று கோடிக்கணக்கில் குடியேற்றம் செய்கின்றன. ஆக முழு நிலவு எனபது பெரிய மாற்றங்களை உண்டாக்கும் என்பது உயிரியல் விஞ்ஞானிகள் அறிந்ததே.

 

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்யாதீர்கள். தமிழ்த் தாய் பொறுக்கமாட்டாள்.)

 

சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார்கள் முழு நிலவு (பௌர்ணமி) நாட்களில் நித்திரை/தூகம் கெடுவது உண்மையே. மக்களின் ஹார்மோன் அளவை அளந்து பார்த்ததில் ஹார்மோன் அளவு குறைவதும் இதனால் 20 நிமிடம் தூக்கம் குறைவதும் தெரியவந்துள்ளது. (Despite modern comforts, lunar cycles still alter our brain activity. Swiss researchers found hormones which regulate our sleep drop during a full moon, giving us 20 minutes less in the land of nod).

sikh with crescent moon

A Sikh with crescent moon

சிலருக்கு நிமிடக் கணக்கில் இல்லாமல் மணிக் கணக்கிலும் போகலாம். மொட்டை மாடியில் சந்திரனுக்கு நேரே தூங்கக்கூடாது என்று பாட்டிமார்கள் சொல்லுவதிலும் உண்மை இருக்கிறது.

இந்த ஆராய்ச்சிச் செய்திகள் அனைத்தும் விஞ்ஞான பத்திரிக்கைகளில் வந்தவற்றின் சுருக்கம். மேலும் விவரம் வேண்டுவோர் New Scientist, Nature பத்திரிக்கைகளில் பெறலாம்.

தமிழில் பிறை வழிபாடு பற்றிய பாடல்கள்: குறு.178, நெடும் பல்லியத்தனார்; குறு. 307-கடம்பனூர் சாண்டில்யன்; அகம் 239,எயினந்தை மகன் இளங்கீரனார்; மதுரைக்கஞ்சி.வரி193,மாங்குடி மருதன்; சிலம்பு 2-38; புறம் 1, பாரதம் பாடிய பெருந்தேவனார்; முழு நிலவு-புறம் 60.

ஏற்கனவே ஆங்கிலத்தில் இக்கட்டுரையை எழுதியுள்ளேன்.

 

CylinderSealMoonGod

 

Moon was worshiped as Nanna in Mesopotamia. Pictures are taken from different websites; thanks.

contact swami_48@yahoo.com

நிலவு பற்றிய தமிழனின் அபார அறிவு

supermoon-may-2012-tim-mccord

 

ச. சுவாமிநாதன்

This article is already posted in English: swami

நிலவு பற்றி ஒவ்வொரு நாட்டிலும் பல நம்பிக்கைகள் உள்ளன. ஆனால் பாரத நாட்டில் இமயம் முதல் குமரி வரை ஒரே நம்பிக்கைகள் இருப்பது குறிப்பிடத் தக்கது. ஆரிய திராவிட வாதத்தில் அமுங்கித் திணறும் ‘’அறிஞர்களுக்கு’’ இந்த நம்பிக்கைகள் அடி மேல் அடி கொடுக்கும்.

1.கிரகணம் பற்றிய நம்பிக்கை நாடு முழுதும் ஒன்றே. வட மொழி, தமிழ் மொழி இலக்கியங்கள் ஒன்றே கூறும். பூமியின் நிழல்தான் கிரகணத்துக்குக் காரணம் என்பதை அவர்கள் நன்கு அறிந்ததால்தான் சரியாக பஞ்சாங்கம் கணக்கிட முடிந்தது. இருந்தபோதிலும் பாமர மக்களுக்காக சுவையாக ராகு என்னும் ராக்ஷசன் முழுங்கியதாவும் அவன் தலை பாம்பு வடிவினது என்றும் கூறுவர். இதையே பாம்பு சந்திரனை விழுங்கியதாகவும் கூறுவர்.

 

2.கிரீஸ் அல்லது பாபிலோனியா போன்ற வேறு எந்த நட்டையும் ‘காப்பி’ அடித்து இவர்கள் சோதிடம் பயிலவில்லை என்பதற்கு நிலவு பற்றிய நம்பிக்கைகளே சான்று பகரும். நமது கலாசாரத்தில் நிலவு என்பது ஆண், நட்சத்திரங்கள் என்பவை பெண்கள். இது வேறு எந்த கலாசாரத்திலும் இல்லை. 27 விண்மீன்களையும் தட்சனின் 27 பெண்களாக புராணங்கள் வருணிக்கின்றன. இந்த நம்பிக்கை வேதம், பிராமணங்கள் ஆகியவற்றிலும் உண்டு.

 

3.வேதத்தில் புருஷசூக்த மந்திரத்தில் சூரியனைக் கண்களுடனும் சந்திரனை மனதுடனும் தொடர்புபடுத்தும் மந்திரம் உள்ளது: சந்திரமா மனசோ ஜாத:, சக்ஷோர் சூர்யோ அஜாயத. மேலை நாட்டிலும் முழு நிலவு அன்று பைத்தியங்கள் அதிகரிக்கும், அந்த நாளன்று சிலர் ஒநாய்களாக மாறுவர் என்ற நம்பிக்கைகள் உண்டு. பைத்தியத்தையே ஆங்கிலத்தில் லுனாடிக் என்பர். லூனா என்றால் சந்திரன் என்று பொருள். கண்கள் ஒளிபெற சூரிய நமஸ்காரம் செய்வதும் இந்த மந்திரத்தின் அடிப்படையில்தான்.

 

4.‘’நிலவு’’ என்று சந்திரனுக்கு தமிழன் பெயர் வைத்தது தன்னிச்சையாக நிகழ்ந்ததா அல்லது அறிவியல் அடிப்படையில் நடந்ததா என்பதே வியப்பான விஷயம். ஏனெனில் நிலவு எப்படி தோன்றியது என்ற பலவிதமான கொள்கைகளில் ஒன்று: ஒரு காலத்தில் பூமியிலிருந்து பிய்த்துக் கொண்டு போன துண்டுதான் நிலவு என்று ஒரு கொள்கை உண்டு. பசிபிக் சமுத்திரத்தில் நிலவை அடக்கிவிடலாம் என்பர். இதை அறிந்து தான் தமிழன் நில உலகிலிருந்த பிரிவு= நிலவு என்று வைத்தானோ என்று நான் வியப்பதுண்டு.

 

5.தமிழர்களுக்கு ஜாதகத்திலும் சோதிடத்திலும் அபார நம்பிக்கை இருந்ததை அக நானூற்றின் பாடல்கள் 86, 136 ஆகியவற்றில் காணலாம். தீய கோள்கள் (பார்வை) இல்லாத நாளில் பவுர்ணமி- ரோகிணி நட்சத்திரம் கூடிய நாளில் தமிழர்கள் விளக்கு ஏற்றி ‘’வெஜிட்டேரியன்’’ சாப்பாட்டோடு மணல் தரையில் திருமணம் செய்ததை அப்பாடல்கள் விளக்குகின்றன. அப்போது சுமங்கலிகள் (திருமணமாகி கணவனுடன் வாழும் பெண்கள்) புது மணத் தம்பதிகளை ‘’தீர்க்க சுமங்கலி பவ:’’ என்று வாழ்த்தியதையும் அவை காட்டுகின்றன.

இந்து மத புராணங்கள் முழுதும் சந்திரன் -ரோஹிணீ காதல் கதை விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றியே ரோகிணி நட்சத்திரத்தில் முகூர்த்தம் வைத்தனர் சங்க காலத் தமிழர்கள். ரோகிணி நட்சத்திரதன்று விதை விதைக்க நன்மை என்று பஞ்சாங்கம் சொல்லுவதும் குறிப்பிடத்தக்கது.

 

6.சந்திரனைப் பற்றிய பல நம்பிக்கைகளில் ஒன்று சந்திரனை தெய்வமாக வழிபடுவதாகும். பெரிய கோவில்களில் சுற்றுப் பிரகாரத்தில் சந்திரன் சூரியனுக்கு சந்நிதிகள் இருப்பதைக் காணலாம். உலகில் இப்படி இன்றுவரை சந்திர வழிபாடு எங்கும் இல்லை. குறுந்தொகையில் மூன்றாம் நாள் பிறை வழிபாடு (பாடல் 170) போற்றப்படுகிறது

 

முஸ்லீம்கள் கூட சந்திரனை நாளும் நேரமும் அறியவே பயன்படுத்துவர், வழிபட அல்ல. அவர்கள் அல்லாவைத் தவிர வழிபட அனுமதிக்கப்பட்ட ஒரே உருவம் காபாவில் உள்ள கல் மட்டுமே.

stars and moon

7.நிலவு பற்றி இந்துக்கள் நம்பும் ஒரு முக்கிய விஷயத்தை இதுவரை விஞ்ஞானம் நிரூபிக்கவில்லை. தாவரங்களுக்கு சக்தி கொடுப்பது சந்திரனே என்று வட மொழி நூல்கள் பகரும். சோம ரசம் என்பது சந்திர ஒளியையும் குறிக்கும், சோமலதையில் இருந்து கிடைக்கும் சோம ரசத்தையும் குறிக்கும் . நவக் கிரஹங்களில் சந்திரனுக்கு சோம என்றே பெயர். திங்கட்கிழமையை சோம வாரம் என்றே குறிப்பிடுவர்.

 

8.பன்னிரெண்டு ராசிகளின் படங்கள் ,ஓவியங்கள் தமிழ் அரண்மனைகளில் இருந்ததை முல்லைப்பாட்டில் காணலாம்.

 

9.இந்துக்களின் ஜாதகத்தில்  சந்திரனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பது ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டோருக்கு விளங்கும்.

 

10.சங்க இலக்கியத்திலும் பிற்கால இலக்கியத்திலும் பல உவமைகள் வருகின்றன. இவைகளும் சம்ஸ்கிருத தமிழ் ஒற்றுமைக்குச் சான்று பகரும் ஏன் எனில் இந்திய இலக்கியங்கள் முழுதும் இவற்றைக் காணலாம். நிலவு என்னும் காதலன் 27 காதலிகளுடன் (நட்சத்திரங்கள்) இருப்பது போல என்ற உவமை, நிலவைப் பார்த்த கடல் பொங்கியது போல என்ற உவமை, நிலவு போன்ற குளிர்ச்சி தருபவன் என்ற உவமை எனப் பல உண்டு.

 

11. சிலப்பதிகாரம் போன்ற காவியங்கள் ‘’திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்’’ என்று கடவுள் வாழ்த்தாகவே சூரியன் சந்திரனைச் சேர்த்திருப்பதும் நோக்கத்தக்கது.

 

12.பிராமணர்கள் சில நாட்களில் வேத வகுப்புக்குப் போக மாட்டார்கள். அன்று விடுமுறை. அமாவாசை, பவுர்ணமி, அதற்கு முந்திய, பிந்திய நாட்கள் (சதுர்தசி, பிரதமை) மற்றும அஷ்டமி ஆகிய ஆறு நாட்கள் உதவா. இந்த நாட்களில் கடல் அலைகளின் மாற்றமும் சீற்றமும் உலகறிந்த உண்மைகள்.

 

13. இதேபோல இலங்கையில் பவுத்தர்களும் அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி நாட்களில் உபவாசம் இருப்பர் (உபோசத் தினங்கள்)

 

14. இந்துக்களின் மிகப் பெரிய பண்டிகைகள் ஒவ்வொரு மாத பவுர்ணமியிலேயே வரும். இதற்கு வேண்டுமானால் ‘பிராக்டிகல்’ காரணங்களைச் சொல்ல முடியும். மின்சார விளக்கு இல்லாத காலங்களில் லட்சக் கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து திருவிழவுக்கு வர இவை உதவின எனலாம்.

NY moon

15. நிலவில் முயல் (நற்றிணை 375) இருப்பதாகக் கூறுவதிலும் சம்ஸ்கிருத தமிழ் மொழி நூல்களில் ஒற்றுமையைக் காணலாம். சில கலாசாரங்களில் இதை மான் என்றும் கிழவி என்றும் சொல்லுவர்.

 

16. சங்கட ஹர சதுர்த்தி: சதுர்த்தி (நாலாம் நாள்) க்கும் பிள்ளையாருக்கும் நெருக்கம் மிகவும் அதிகம். கஷ்டங்களைப் போக்கும் சங்கட ஹர விரதம் (உண்ணாநோன்பு) பவுர்ணமிக்கு நாலாம் நாள் அனுஷ்டிக்கப்படும். அன்று மாலை பிறையைப் பார்த்த பின்னரே விரதிகள் சாப்பிடுவர். முஸ்லீம்களும் பிறை பார்த்துச் சாப்பிடும் வழக்கத்தை நம்மிடம்தான் கற்றனரோ!!

 

அமாவாசைக்கு நாலாம் நாள் வரும் சதுர்த்தியன்று பிறை பளிச்செனக் கண்ணில் தெரியும் ஆனால் இதைப் பார்க்ககூடாது என்று ஒரு நம்பிக்கை உண்டு. நாலாம் பிறை பார்த்தவர் நாயாய் பிறப்பார்கள் என்று ஒரு தமிழ்ப் பழமொழி இருக்கிறது ஆயினும் பெரிய பிள்ளையார் சதுர்த்தி அமாவாசைக்கு அடுத்த நாலாம் நாளே வரும். இந்த கணேஷ் சதுர்த்தியை நாடே கொண்டாடும்.

17.இந்து மதத்தில் பிறைச் சந்திரனுக்கு முக்கியத்துவம் அதிகம். பெரிய கடவுளர்களின் தலையில் பிறைச் சந்திரன் இருப்பதை காணலாம். ‘’பித்தா பிறை சூடி’’ என்று அடியார்கள் சிவ பெருமானை போற்றி வழிபடுவர்.

 

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்யாதீர்கள். தமிழ்த் தாய் பொறுக்கமாட்டாள்.)

 

அடுத்த கட்டுரை— சந்திரன் பற்றிய வியப்பான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள்— நம்முடைய மதக் கொள்கைகளை அனுசரித்துப் போவதைக் காட்டும். இவை அனைத்தும் ‘’லேடெஸ்ட்’’ கண்டுபிடிப்புகள். இரண்டாவது பகுதியைப் படிக்கத் தவறாதீர்கள்.

 

தொடர்பு கொள்ள —  swami_48@yahoo.com

படங்கள் பல்வேறு வெப்சைட்டில் இருந்து எடுக்கப்பட்டன; நன்றி.