தமிழ் முரசு, டமாரம் பற்றிய அதிசயச் செய்திகள்

modi in Japan
Prime Minister Modi in Japan trying to play on drums

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1386; தேதி நவம்பர் 3, 2014.

((கட்டுரையின் மற்றொரு பகுதியில் ரிக் வேதத்தில் வரும் அதிசய வாத்தியம் ‘’பூமி துந்துபி’’, ரிக்வேத கால ‘’ஆர்க்கெஸ்ட்ரா’’, தமிழில் உள்ள ‘’ஆடம்பரம்’’ என்னும் சொல்லின் பொருள், பல ஆங்கிலச் சொற்களின் தோற்றம் ஆகியவற்றைக் கூறுவேன்.))

தமிழில் முரசு, பணை, முழவு, பறை பற்றிய பல சுவையான செய்திகள் இருக்கின்றன. முதலில் 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியச் செய்திகளைக் காண்போம்.

1.அரசனுக்குப் பத்து அடையாளச் சின்னங்கள் உண்டு. அதில் ஒன்று முரசு. சங்கத் தமிழ் நூல்களில் முரசுடை மூவேந்தர் என்று சேர சோழ பாண்டியர் பாராட்டப்படுவர். மாணிக்கவாசகப் பெருமான் சிவபெருமானை அரசனாக வைத்துப் பாடிய திருத் தசாங்கத்திலும் பாரதியார், பாரத மாதாவை ராணியாக வைத்துப் பாடிய திருத் தசாங்கத்திலும் முரசு பற்றிய பாடல்களைக் காணலாம் (தச + அங்கம் = தசாங்கம்)
இன்பான் மொழிக் கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன்
முன்பான் முழங்கு முரசு இயம்பாய் — அன்பாற்
பிறவிப் பகை கலங்கப் பேரின்பத் தோங்கும்
பருமிக்க நாதப் பறை (திருத் தசாங்கம், திருவாசகம்)

2.கோட்டை வாயில் கொத்தளங்களில் முரசுகள் வைக்கப்படிருந்தன. கம்ப ராமாயண பால காண்ட, திரு அவதாரப்படலத்தில் கம்பனும் அயோத்தி மாநகர கோட்டையின் மேல் முரசுகள் முழங்கியதைப் பாடினன்.

rajasthani drum
Rajasthani Drum

3.முரசுகள் மூவகைப்படும்: கொடை முரசு, படை முரசு, மண முரசு என்னும் மூவகை முரங்களும் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கு மாகலின் முரசு முழங்கு நெடுநகர் எனப்பட்டது என்று பதிற்றுப்பத்து பாடலுக்கு (2-7) உரை எழுதிய மி.பொன். இராமநாதன் செட்டியார் கூறுவர்.

4.போரில் முழக்கப்படும் வெற்றி முரசினைத் தெய்வமாகவே கருதி வீரர்கள் வழிபட்டதை சங்க இலக்கிய நூல்களில் பரக்கக் காணலாம். வீரர்கள் தாம் பெற்ற வெற்றி மகிழ்ச்சியில் ஆடிக் கொண்டே சென்று முரசை வழிபாட்டனர் என்று பதிற்றுப்பத்து (2-17-5/10) கூறும்

5.முரசில் உறையும் தெய்வத்துக்கு மாமிசம், ரத்தம், சோறு கலந்த பிண்டம் பலியாகத் தரப்பட்டது. இது பற்றி பதிற்றுப்பத்து (3- வரி30/39) உரையில் செட்டியார் அவர்கள் கூறுவதாவது:- தன் படை வீரர்கட்கு கடிய சினம் தோன்றுமாறு பேரொலியுடன் உச்சரிக்கப்படும் மந்திரத்தால் அரிய வெற்றியினைத் தரும் மரபுடைய முரசுறைக் கடவுளை வணங்கும் பொருட்டு, அக்கடவுளை வழிபடுவோன் பெறுதற்கரிய பிண்டத்தினைத் தன்கையில் ஏந்தி நின்றான். அப்பிண்டத்தைக் கண்டு கொடிய கண்களையுடைய பேய்ப் பெண் கைபுடைத்து நடுங்கினாள். அப் பிண்டம் போன்றே இரத்தம் கலந்த, நிறைந்த கள்ளினையுடைய பெரிய பலியினை எறும்பும் மொய்க்காது. பருந்தும் காக்கையும் மட்டுமே உண்ணும்.
nagara,rajasthan
Nagara drum, Rajasthan

6.முரசு வைக்கப்படும் கட்டில் புனிதமானது. மோசிகீரனார் என்ற சங்கப் புலவர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேர அரசனைப் பாடி பரிசில் பெற வந்தார். வந்த களைப்பில் முரசுக் கட்டிலில் படுத்து உறங்கிவிடார். இந்தக் குற்றத்துக்கு மரண தண்டனை கிடைத்திருக்கும். ஆயினும் புலவரின் நிலைமை கண்ட மன்னன் அவருக்கு கவரி வீசி மேலும் நன்றாகத் தூங்க உதவினான். வறுமை கண்டு மனம் இறங்கி அவருக்குப் பரிசு கொடுத்தான் என்று சங்க இலக்கியம் (புறம்.50) மூலம் அறிகிறோம்.

7. முரசுக்குப் போர்த்தும் தோல் வீரம் மிகுந்த காளை மாட்டின் தோலாக இருக்க வேண்டும் என்பது தமிழர் கொள்கை புலியைக் கொன்ற காளை மாட்டின் தோலை வைத்து முரசு தயாரிப்பர். புனை மருபு அழுந்தக் குத்திப் புலியொடு பொழுது வென்ற கனை குரல் உருமுச் சீற்றக் கதழ் விடை (காளை) உரிவை (தோல்) போர்த்த துனை குரன் முரசத் தானை (படை) – என்று சிந்தாமணிச் செய்யுள் கூறும்.

8.இனி ஆ.சிங்காரவேலு முதலியார் அபிதான சிந்தாமணி எனப்படும் தமிழ் என்சைக்ளோபீடியாவில் (கலைக்களஞ்சியம்) சொல்லும் சுவையான செய்திகளைக் காண்போம்: வீர முரசு, நியாய முரசு, தியாக முரசு என்று முரசு, மூன்று வகைப்படும். இதனை ‘’இமிழ் குரல் முரசு மூன்றுடனாளும் தமிழ் கெழு கூடல்’’ என்பதால் அறிக. இதனுள் வீர முரசினை நீராட்டிக் கடலேற்றி ஒலி நெடும் பீலியும், ஒண் பொறி மணித்தாரும் (மயில் தோகை + மாலை ), பொலங் குழை உழிஞையும் பொலியச் சூட்டி ( உழிஞைப் பூ) குருதிப் பலியீந்து (ரத்தம் கலந்த சோறு) பூசித்தல் பண்டைய வழக்கு (புறநானூறு பாடல் 50).

9. புறப் பொருள் வெண்பா மாலையில் முரசவாகை என்னும் துறை — பலியைப் பெறும் முரசு பற்றிக் கூறும் துறை என்றும் —பொன்னால் செய்த உழிஞை அணிந்து ஆடு வெட்டி பலி கொடுக்கும் முரசின் தன்மையைக் கூறும் துறை முரச உழிஞை என்றும் சொல்லப்பட்டுள்ளது.

Thiruvalluvar-
Valluvar with Punul

.
வள்ளுவர் யார்:–
10.வள்ளுவர் யார்:– திருக்குறளை யாத்து உலகப் புகழ்பெற்ற — தமிழுக்கு உலகப் புகழ் பெற்றுத் தந்த — வள்ளுவர், பறை அறிவிக்கும் ஜாதியைச் சேர்ந்தவர் என்று பழைய நூல்கள் பகரும். இது பற்றி சிங்கார வேலு முதலியார் (அபிதான சிந்தாமணி) கூறுவதாவது: பழங்குடியினரில் பாணரை அடுத்து திராவிடரால் மதிக்கப்படவர் இவ்வகுப்பினர். இவர் அரசர் பால் கருமத் தலைவராயும், யானை மேலிருந்து முரசு அறைந்து அரசாணை சாற்றுவோராயும் (அதாவது அரசரின் உத்தரவுகளை யானை மீது ஏறிச் சென்று அறிவிப்போர்) விளங்கினர். இக்குடியினர் இன்றும் உளர்.

இவர் பறையில் சற்று உயர்ந்தவர். இவர்கள் பறையர்களுக்குப் புரோகிதர்கள்— இவர்கள் பிராமணர்கள் புரோகிதர் ஆகாமுன் பல்லவ அரசர்களுக்குப் புரோகிதம் செய்திருந்தவர்கள். இவர்களில் சிலர் புரோகிதம் செய்தும் சோசியம் சொல்லியும் வாழ்கிறார்கள். இவர்களிர் சிலர் தாசிரியராகவும் பூணூல் தரிப்பவராகவும் இருப்பர். இவர்களில் லிங்கதாரிகளும் உண்டு. இவர்களில் இரண்டு பிரிவுகள்: -அறுபது கக்ஷி, நாற்பது கக்ஷி. முதல் கூறியவன் நந்திக்குருக்களின் சந்ததியான்; மற்றவன் சிதம்பர சாயுச்சிய ஐயங்கார் வகையினன்; திருப்பணாழ்வார் குலம் என்பர். இவர்கள் திருவள்ளுவரைத் தங்களினத்தவர் என்பர் (தர்ஸ்டன்)

(அதாவது தர்ஸ்டன் என்பவர் ஜாதிகள் பற்றிச் சேகரித்து ஆங்கிலத்தில் ஏராளமான தொகுதிகளாக வெளியீட்டதில் இருந்து முதலியார் மொழி பெயர்த்தது)
valluva-nayanar1
Valluvar from English book

11.தோல் இசைக் கருவிகள் என்ற தலைப்பில் தமிழ்ச் சொற்றொடர் அகராதி (வீ ஜெ செல்வராசு) தரும் தகவல்:–
முழவு:- குளிர், குடமுழா, முழவம், முழா
முழவு:– பேரிகை, படகம், இடக்கை, மத்தளம், தேசி, சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பரை, தமருகம், தண்ணுமை, தவில், தடாரி, அந்தரி, முழவொடு, சந்திர வளையம்,மொந்தை, முரசு, கண்விடு தூம்பு, நிசாலம், துடுமை, சிறுபறை, அடக்கம், ஆசில், தகுணிச்சம், விரலேறு, பாகம், தொக்க உபாங்கி, துடி, பெரும்பறை,
முழவுக்கான மரங்கள்:- கருங்காலி, செங்காலி, வேம்பு, பலா, கஞ்சம், குரவம், மண்; முழவுக்கான தோல்: இளம் பசுவின் வயிற்றுத் தோல்.

தமிழ்க் கள்ளர் தாக்குதல்கள்

12. ஆப்பிரிக்க நாடுகளில் டமாரம் மூலம் செய்திப் பரிவர்த்தனை செய்வர். — பழங்குடி மக்கள் முரசு ஒலி மூலமே பேசிக்கொள்வர். இது போன்ற செய்தி, இரண்டு சங்கப் பாடல்களிலும் வருகிறது. பாலைவனம் வழியாக அல்லது காடு வழியாக வணிகர்கள் செல்வர். கொள்ளையர் தாக்குவர் என்பதாலும், ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் என்பதாலும் வண்டிகளில் தொடர்ச்சியாகச் செல்லுவர். இவர்களை மரம் அல்லது குன்று உச்சியில் இருந்து உளவு பார்க்கும் கள்ளர்கள் தண்ணுமை என்னும் பறையை முழக்கிக்கொண்டு வந்து தாக்குவர். இது பற்றி குறுந்தொகை (390) அகநானூறு (63) ஆகிய பாடல்களில் கருவூர்க் கண்ணம்புல்லனாரும், உறையூர் முதுகொற்றனும் சில செய்திகளைத் தருவர்:–
காதலனும் காதலியும் பாலைவனம் வழியே போவதைக் கண்ட பெரியோர், “சூரியன் மறைந்து விட்டான், பொழுது சாய்ந்துவிட்டது, ஆறலைக் கள்வரின் தண்ணுமை ஒலி கேட்கத் துவங்கும். போகாதீர்கள்”.
ஒரு தாய் தன் மகளிடம் கூறுகிறாள்:

bangalorebulldrummachine
Bangalore Temple drum operated by machine

காதலனுடன் அவள் போய்விட்டாள் என்பதற்கு நான் வருந்தவில்லை. களவுத் தொழிலை உடைய எயின மறவர் இசைக்கும் தண்ணுமை ஒலி கேட்டு இவள் பயப்படுவாளே என்றுதான் வருந்துகிறேன்.

இது பழைய தமிழகத்தின் நிலையைப் படம்பிடித்துக் காட்டும். இரவுநேரத்தில் வறண்ட பாலை வழியாகச் செல்வோரை கள்ளர்கள் பறை ஒலி எழுப்பிக் கொண்டு வந்து தாக்குவர். அவர்கள் ஒலி கொடுப்பது மற்றவர்களை நடுங்கச் செய்யவும், தனது கூட்டத்தினருக்கு செய்தி கொடுக்கவும் என்று சொல்லலாம்.

TashaF
Marathi drums

Pictures are taken from other websites;thanks.

Bhumi Dundhubi: Drums in Rig Veda and Sangam Tamil Poems

modi in Japan
Prime Minister Modi in Japan with Japanese PM.

Research paper written by London Swaminathan
Research article No.1385; Dated 2nd November 2014.

Very interesting information about musical instruments is available in the Rig Veda, oldest book in the world. Sangam Tamil literature which came 1700 years after the Rig Veda, adds more interesting details about Drums!

Bhagavad Gita begins (1—12 to 19) with musical instruments that were used on the battle ground! “Conches, kettledrums, tabors, drums and trumpets blared forth and the noise was tumultuous. And the terrible sound, echoing through heaven and earth rent the hearts of Dhrtarashtra’s sons”. When we read this description we can imagine the noise it created in the battle field.

(English word tumultuous is derived from the Sanskrit word Dumula)

The use of drums in the war started in the days of the Rig Veda and continued through the Sangam period. Sangam Tamil poems were composed in the first three centuries of modern era. The most interesting information comes from the Rig Veda about Bhumi Dundubhi! It means Earth Drum.

jaffna
Temple Drum in Jaffna in Sri Lanka

Dundubhi is an onomatopoetic word : Dum Dum = dum dum dhubi= drum. (The English word drum must have come from this). It is mentioned in RV 1-28-5; 6-47-29; 6-47-31. Atharva Veda and other Vedic literature repeat it many times. A special sort of drum was the earth drum, made by digging a hole on the ground and covering it with a hide. This was employed in the Mahavrata, a rite performed at the winter solstice, for the purpose of driving away the influences hostile to the return of the sun; bhumi dundubhi is mentioned in the Samhitas and Brahmanas. Taitriya Samhita vii.5-9-3 and other books refers to it. Though drums are found in all ancient civilizations from Egypt to Peru, no where we come across earth drums. Other references in the Rig-Veda are about war drums.

( From Vedic Index by Keith and Macdonell)

kollam
Drums in Kollam, Kerala

Rig Vedic Word Adambara in Tamil!

Another interesting word is Adambara. Even modern day Tamils use this word for pomp and ostentation. Not many people know that it came from the Rig Veda. Tamils say that they celebrated the marriage with Adambara. Actually it was the drum used in such ceremonies. It occurs in Vajasaneyi samhita 30—19
Lambara and Vanaspati are other drums mentioned in the Vedic literature. Of all the Hindu gods, Shiva was the one who is associated with drums like Damaruka. Tamil and Sanskrit language came from this Damaruka sound according to Panini and Tamil poet Paranjothi. The basic 14 sounds of Sanskrit language called Maheswarani Sutrani came from Shiva’s drum.

The English word tomtom also came from India. In India, kings’ and governments’ announcements came through tom toming. I myself have seen it in Madurai during my childhood days. When there is a breakout of infectious disease or 144 ban they announced it by tomtoming! We, children used to stand round the drumme,r and look at him curiously!

chenda vadhya
Chenda Vadhya in Kerala

Vedic Orchestra

During Mahavrata festival, grand music festival was organised. Agnihotram Ramanujachariar gives the following information:

“We have concrete information from the Vedas of prevalence of the orchestral music. A grand music festival with different instruments is associated with the Mahavrata Yaga. In this yaga (fire ceremony) the Udgata is seated in a chair, the Hotha in a swing and the Adhwaryu on a plank. Hotha prays to god while swinging. The wives of the performers of the Yaga sing along with the Udgata with a variety of instruments. The following instruments are mentioned in this connection:

A Vana with 100 Strings ( my comment: Vana might have given the Tamil word Pana- singer; Yaz Pana; P=V=M are interchangeable)

Naady (pipe), Thunava (wooden lute), Shanka (conch)
Kanda Veena, Godha Veenaka ( a small veena covered with the skin of godha)
Agati (cymbals), Pichchola, Apa Ghatalathika, Karkarika
Ghata karkarika, Shambala veena Ghatari with vandanam (plectrum)
Thaluka Veena, Alabu, Kapisharsaki etc.

At the same time women standing in a circle with water pots on their heads singing rhythmically, keeping time with their feet. This is like modern Tamil Karakam dance”
(From “The Hindu Speaks on Music”)

garo tribals of meghalaya
Garo Tribes of Meghalaya, India

Interesting Information on Ancient Tamil Drums

Sangam Tamil literature has hundreds of words about drums (Murasu, Parai, Kinai and Panai). A lot of percussion instruments are listed in Amarakosa and other Nighandu dictionaries in Sanskrit and Tamil.

1.Tamil forts had drums on the top floor of the forts near the entrance. Kamban in his Tamil Ramayana says that the drums were beaten on top of the gate at Ayodhya. Sangam Tamil literature says that there were three types of drums constantly beaten and they were Kodai, Padai, Mana Murasu meaning Donation, Army and Auspicious messages (Pathitru pathu 2- 4/9). In another place in the same book, they are described as Tyaga, Veera, Nyaya Murasus.

2.Drums were considered dwelling place of deities. They were worshipped with flowers and rice and meat balls (Pathitrupathu 2-17 lines 5 to 8).

3. When the person in charge of worship of drums chanted the Mantras holding the offering in his hands, even the ghosts were trembling. Those meat balls mixed with blood and rice won’t be touched even by the ghosts and ants says Pathiru pathu 3—30/39.

4.Murasu or Drum was considered one of the ten royal symbols. When Saivite saints sang about Shiva as a King they included drum in one stanza. Tamil poet Bharati who composed “Bharat Mata Dasanga”, sang about Drums as one symbol of Bharatmata.

???????????????????????????????
Drums in Japan

4. One of the Sangam poets who came to see a king was dead tired and he slept on the cot meant for placing the drum. It is a crime fit for capital punishments. But the king was sympathetic to the poet and rewarded him amply.

5.War drums will be covered with the hide of a heroic bull. The hide of a bull which killed a tiger will be chosen for this purpose. This is repeated in several places in Sangam literature.

6.Abithana Chinthamani, Tamil encyclopaedia, adds that the drums were decorated with garlands, peacock feathers and Uzinjai flowers and took it in a procession.

chinese drums from incredipedia
Chinese drum from increpedia

Communication through Drums
African countries are for famous for communication through drums. The tribes exchanged information through drum beats. It is like a language understood by the tribal communities. Tamils also followed such a system and the poets were aware of it (Akam.63 and Kuruntokai 390). When the robbers saw a caravan of business people crossing through the forest or arid land they started beating the Thannumai drum and attacked the merchants. Even the sound will shake anyone. So they sent waves of fear by beating the drums – say Tamil poets.

The most popular book of Tamil language Tirukkural which is called Tamil Veda was written by a drummer. The author Tiru Valluvar belonged to Valluvar caste who used to announce the orders of the king by beating the drum from top of an elephant. Though he belonged to Pariah caste he held a high position is the caste. Valluvars used to be priests for the caste. The word Parai means a drum and Pariah means an announcer (by beating the drums).

Hundreds of different percussion instruments are available throughout India.

contact swami_48@yahoo.com

மஹாபாரதப் போர் நடந்ததா? எப்போது நடந்தது?

krishna war

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1384; தேதி நவம்பர் 2, 2014.

மஹாபாரதப் போர் நடந்ததா? பகவத் கீதை உண்மையா? போர்க்களத்தில் யாரேனும் உபநிஷத தத்துவங்களை உள்ளடக்கிய கீதையை உபதேசம் செய்திருக்க முடியுமா? நவீன ஏவுகணைகளைக் தோற்கடிக்கும், அணு ஆயுத ஏவுகணை போன்ற பிரம்மாஸ்திரம் உண்மையா? 18 அக்ஷௌகினி சேனைகள் குரு க்ஷேத்திரத்தில் கொள்ளுமா? இவைகளுக்கு ஏன் கொஞ்சம்கூட தொல்பொருட் துறை சான்றுகள் கிடைக்கவில்லை? தேவர்களை, மந்திரம் மூலம் அழைத்து குழந்தைகள் பெறுவது சாத்தியமா? அர்ஜுனன், மாதலியின் தேரில் சென்று சுவர்கத்தில் ஐந்து ஆண்டுகள் வசித்தது உண்மையா? இப்படி வெளிக்கிரத்துக்கு விண்வெளிக் கப்பலில் அந்தக் காலத்தில் சென்றிருக்க முடியுமா? இப்படி நூற்றுக் கணக்கான கேள்விகளை எழுப்பினர்?

இதில் வேடிக்கை என்னவென்றால் மஹாபாரதத்தை வாழ்க்கையில் ஒரு நாளும் தொட்டுப் பார்க்காத— அதைப் படிக்கவேண்டும் என்று முயற்சி கூடச் செய்யாத — அது என்ன என்று கூட ஒரு கருத்து இல்லாத – அதை நம்பிய தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும், ஆயிரக்கணக்கான சாது, சந்யாசி, மகான்களையும் நம்பாத மக்களே — இந்தக் கேள்விகளைக் கேட்டார்கள். அத்தனைக்கும் பதில் சொல்லும் புத்தகங்களும், கட்டுரைகளும் ஆயிரக் கணக்கில் வந்துவிட்டன. நான் எழுதிய 1250 கட்டுரைகளிலும் இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டேன். படித்துவிட்டு கேள்வி கேட்போரை மதிப்போம்— படிக்காமல் கேள்வி கேட்கும் விதண்டா வதிகளை- குதர்க்க வாதிகளை – மிதிப்போம் – கால்களால் அல்ல!!—சொற்களால் மட்டும் !!!

( பத்து ஆண்டுகளுக்கு முன் நான் லண்டன் South Indian Society Annual Souvenir சவுத் இந்தியன் சொசைட்டி மலரில் Is Brahmastra a Nuclear Weapon? பிரம்மாஸ்திரம் உண்மையா? என்று ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை 2011-ல் இந்த பிளாக்கில் போட்டேன். இன்றுவரை அதிகம் பேர் படிக்கும் (highest number of hits) கட்டுரையாக அது நீடித்து வருகிறது! வாழ்க நம் வாசகர் வட்டம்)

krishna-bhishma

அக்குபங்சர் உத்திகளைப் பயன்படுத்தி 58 நாட்களுக்கு பீஷ்மர் இருந்தார்.

உண்மையில் நடந்தது

பாரபட்சமின்றி மஹாபாரதத்தைப் படிப்போர், அதில் உள்ள அத்தனையும் உண்மையில் நடந்தது என்பதை அறிந்து, படித்துச் சுவைத்து ரசித்து, மகிழ்வர். அதன் ஆதி பர்வத்தில் உள்ள ஸ்லோகம் எத்தனை பொருள் பொதிந்தது என்பதை எண்ணி எண்ணி இறும்பூது எய்துவர். அந்த ஸ்லோகம் சொல்கிறது:

உலகில் உள்ள எல்லாப் பொருட்களும் இதனில் உள. இதில் உள்ள எல்லாப் பொருட்களையும் காணும் இடம் உலகில் வேறு இல!!

வ்யாச்சோசிஷ்டம் ஜகத் சர்வம் — என்று சம்ஸ்கிருதத்தில் சொல்லுவர். அதாவது உலகில் நீங்கள் பார்க்கும் எல்லாம் வியாசரின் எச்சில்!

இதன் பொருள் என்ன என்றால் — வியாசர் என்னும் மாமுனிவர் எல்லா விஷயங்களையும் சுவைத்து, ரசித்து, சொல்லால் கடித்து — ராமனுக்கு மலை ஜாதி வேடுவச்சி சபரி என்னும் கிழவி — அன்போடு கடித்துக் கொடுத்த இலந்தைப் பழம் போல — நமக்கு அன்போடு “கடித்துக்” கொடுத்த கதை!

பாரதப் போரின் காலம் என்ன?

பாரதப் போர் – கலியுகம் துவங்கும் கி.மு 3102-க்கு முன் – 36 ஆண்டுகளுக்கு முன்னர் – 3138ல் நடந்தது என்பது இந்துக்கள் நம்பும் கொள்கை. நம்முடைய பஞ்சாங்கங்களும் இதை ஒட்டியே கலி ஆண்டு என்று பிரசுரித்து வருகின்றன.

இதில் வியப்பு என்னவென்றால் இரண்டு கல்வெட்டுகள் – சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே — கலியுகத்தைக் குறிப்பிட்டு கல்வெட்டு வெளியிட்டுள்ளனர். அதாவது அறியாத மக்கள் – கேள்வி கேட்பர் என்றோ, என்னவோ ஒரு தமிழ் செப்பேடும் இந்த ஆண்டை நாட்கள் கணக்கில் எழுதி தமிழன் உலக மகா கணித வல்லுநன் என்பதையும் காட்டி இருக்கிறது!

கோ கருநந்தடக்கனின் பார்த்திவ சேகரபுர செப்பேடு கூறுகிறது:
ஸ்வஸ்தி ஸ்ரீ கலியுகக் கோட்டு நன்னாள் பதினான்கு நூறாயிரத்து நாற்பத்து ஒன்பதினாயிரத்து எண்பத்து ஏழு சென்றநாள்

ஸ்வஸ்தி ஸ்ரீ கோக்கருநந்தடக்கனுக்கு யாண்டு ஒன்பது நாள் பதினைஞ்சு இந்நாளால் முடால நாட்டுப் பசுங்குளத்துப் படுநிலத்தில் முன்சிறைச் சவையாருடைய உழக்குடி விளை————————-

வேணாட்டை ஆண்ட ஆய்குல மன்னன் கோகருந்தடக்கன் இச்செப்பேட்டில் கலியுக ஆண்டு 14,49,087 என்று செப்புவது கலி 3967 ஆடி 15ஆம் தேதி ஆகும். சற்றேறக்குறைய கி.பி.865 ஆகும்.
தமிழர்களுக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னரே கலியுகத்தில் நம்பிக்கை இருந்ததும் அதை மக்கள் புரிந்துகொண்டு நடைமுறைப் படுத்தியதும் இதனால் தெரிகிறது. இதற்கு முந்தைய இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டும் கலி ஆண்டை 3735 (சக 556) என்று கூறும்.

Chakra vyuha
ஹலபேடு என்னும் இடத்தில் சக்ர வ்யூஹம் கல்லில் செதுக்கப்படுள்ளது

முஸ்லீமாகிய அபுல்பாசல் என்பார் தாம் இயற்றிய அயினி அக்பரி என்ற 16-ஆம் நூற்றாண்டு நூலில் கூட கலி ஆண்டை 4696 என்று கூறுவர்.

இந்தியாவின் முதல் வரலாற்று ஆசிரியன் என்று வெளிநாட்டினர் புகழும் காஷ்மீரி பிராமணர் கல்ஹணர் எழுதிய 12ஆம் நூற்றாண்டு ராஜதரங்கிணி நூலில் கூட கலி ஆண்டைக் குறிப்பிடுவர். இவரும் இவருக்கு முந்திய வராகமிஹிரரும் மட்டும் ஒரு 650 ஆண்டைக் கழித்து 2500 என்று சொல்லுவர். இது ஒரு வரலாற்றுப் புதிர். அதைத் தனிக் கட்டுரையில் காண்போம். வராஹமிகிரர் சில வான சாத்திரக் குறிப்புகளைத் தவறாகப் புரிந்தமையே இதற்குக் காரணம் எனச் சான்றோர் பகர்வர்.

இனி மஹாபாரதம் பற்றி நடந்த ஆய்வரங்கங்களிலும் அது தொடர்பான ஆராய்ச்சிப் புத்தகங்களிலும், ஆய்ந்தவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் கூறும் சில ஆண்டுகளைக் கண்போம்:–

mbh-war cambodia
கம்போடியா நாட்டு அங்கோர்வட் ஆலயச் சுவர்களில் மஹாபாரதம் செதுக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.ராய் என்பார் ஆராய்ச்சியாளர்களை நாகு பிரிவுகளாகப் பிரிக்கிறார்:–

முதல் அணி ( சம்பிரதாய கொள்கையினர் கி.மு 3100 க்கு முன்னர்)
டி.ஆர். மங்கட் — 3201
எம்.எம்.கிருஷ்ணமாச்சாரி 3137
சி.வி.வைத்யா — 3102
வி.பி.அத்வாலே – 3016

இரண்டாம் அணி ( கி.மு. 2500 ஆண்டை ஒட்டி)
வராஹமிகிரர்
கல்ஹணர்
பி.சி.சென்குப்தா

Ellora - Mahabhatara
எல்லோரா குகைக் கோவிலில் இருந்து

மூன்றாம் அணி ( கி.மு.1450 அல்லது அதன் கீழ்)
ஏ.கன்னிங்ஹாம் -1424
கே.பி.ஜைஸ்வால் –1424
தாரகேஸ்வர பட்டாசார்யா –1432
கிரிதர சேகர வசு (பாசு) – 1416
பங்கிம் சந்திர சாட்டர்ஜி — 1400
சுவாமி விவேகாநந்தா –1400
ஏ.டி.புசல்கர் – 1400
பால கங்காதர திலகர் – 1400
எச்.டி. தேவ் – 1400
பி.பி.கேட்கர் – 1267
ஸ்ரீ அரவிந்தர் -1191
கே.எல். தப்தாரி –1197
கே.ஜி.சங்கர் – 1197
சீதாநாத் பிரதான் – 1151

நான்காம் அணி ( கி.மு.950)
பர்ஜிட்டர் — 950
ராய் சௌத்ரி – 900

arjuna
அர்ஜுனன் அல்லது பகீரதன் தவம், மாமல்லபுரம்

மார்கசீயவாதிகள் இதை ஒரு வர்க்கப் போராட்டம் என வருணிப்பர். ஆகையால் இடது சாரிகள், இதை ஒரு சிறிய உள்ளூர் சண்டையாகக் காண்பர். எச்.டி.சங்காலியா போன்றோர் இது நடந்திருந்தாலும் கி.மு.1500க்குப் பின்னரே நடந்திருக்க முடியும் என்பர்.

எஸ்.பி. ராய் என்பார் வானியல் கணக்குப்படி 1424 என்றும் மார்டன் ஸ்மித் என்பார் வம்ச கணக்குப்படி 1050 என்றும், சீனிவாச ராகவன் கி.மு 3067 என்றும் செப்புவர்.

எனது கருத்து:–

நாற்பது ஆண்டுக்காலமாக மஹாபாரதம் ஆராய்ச்சி தொடர்பான பத்துப் பதினைந்து புத்தகங்களைப் படித்ததில் எழுந்த கருத்துக்கள் இவை:–

ஆரிய – திராவிட இனவெறி வாதம் என்னும் சகதியில் சிக்காத மெகஸ்தனீஸ் போன்றோரும் அவரது கருத்துக்களை நமக்கு தெரிவித்த கிரேக்க ஆசிரியர்களும் மகத சாம்ராஜ்யத்தின் 143ஆவது மன்னர் ஆட்சிக் காலத்தில் தாங்கள் வந்ததாகச் சொல்லுகின்றனர். இவர்கள் இன்றைய அரசியல் கொள்கைக்கு அப்பாற்பட்டவர்கள் — ஒரு மன்னருக்கு உலகம் முழுதும் பின்பற்றப்படும் சராசரி 20 ஆட்சி ஆண்டு என்று கொண்டாலும் மெகஸ்தனீசுக்கு முன்னர் 2860 ஆண்டுகள் கிடைக்கும். ஆக, கலியுகத்தின் முதல் ஆண்டு கி.மு.3102 என்பது பொருந்தும். அதற்கு 36 ஆண்டுகளுக்கு முன் போர் நடந்தது.

தற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கடலுக்கடியில் மூழ்கிய துவாரகா நகரத்துக்கு கி.மு. 3000 என்று அறிஞர்கள் அறிவியல் முறைப்படி தேதி குறித்துள்ளனர். கிருஷ்ணர் இறந்த பின்னர் சுனாமி தாக்குதலில் துவாரகா கடலுக்கடியில் சென்றதை பாகவதம் முதலிய புராணங்கள் சொல்லும்.

halebedu
ஹலபேடு சிற்பங்கள்

சரஸ்வதி நதி பலைவனத்துக்கடியில் ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டு அதன் தேதியும் உறுதியாகிவிட்டது. வேதங்களைப் பற்றி ஆராயும் இந்திய அமெரிக்க அறிஞர்கள் இப்போது ரிக் வேதம் கி.மு 1700 க்கு முந்தையது என்று காலம் கணித்துள்ளனர். இன்ன பிற காரணங்களாலும் பெரும் பாலான அறிஞர்கள் குறைந்தது இற்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முந்தையது என்று நம்புவதாலும் சம்பிரதாய தேதியான கி.மு 3100 க்கு முந்தையது என்பதே பொருந்தும். அதவது மாபாரதப் போர் இற்றைக்கு 5138 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்று நம்புவோமாக.

contact swami_48@yahoo.com

Date of Mahabharata War

mbh-war cambodia
Mahabharata war in Angkhor wat Temple, Cambodia

Research paper written by London Swaminathan
Research article No.1383; Dated 1st November 2014.

Mahabaharata stands out in the epic literature of the world for various reasons:

1.This is the longest epic in the world with one hundred thousand couplets.
2.It is said that all the subjects under the sun are dealt with by the author Vyasa and the saying goes “Vyasochchishtam Jagath sarvam” i.e. The whole world is the spit of Vyasa. That is nothing is untouched by Vyasa. In the epic itself it is said that what you find elsewhere in the world is already here.
3.The date of the great war is debatable because there is no archaeological proof to confirm the traditional date.

Hindus strongly believed in the traditional date of the war around 3100 BCE. But scholars who believed in archaeology of Gangetic plains think that it was fought around 1500 BCE. Either way it is interesting.

Two inscriptions give the date of Kali Yuga. Both of them believed that Kaliyuga commenced around 3100 BCE!
a)Aihole Inscription of Chalukya King Pulekesi II stated that the inscription was made in the year 3735 of Kali era when the Saka era was 556. This meant that the Kali era began in 3101 BCE.
b)Parthivasekarapuram copper plate Tamil inscription of Ko Karunathadakkan gave the number of days of Kali passed as 1449087! The inscription is dated around 865CE.

Ellora - Mahabhatara
Mahabharata war in Ellora caves

This shows that Hindus believed in the date of 3100 BCE as Kaliyuga year 1. Till this date all South Indian Panchangs (traditional ephemeris) give the date of Saka, Vikrama and Kali era faithfully. Hindus believe that the war happened just before the Kali Yuga began.

Now I will summarise the views of some scholars who attended seminars on Mahabharata or contributed articles on this subject:

16th century Abul fazal’s ‘Ain-i-Akbari’ – the 40th year of din-I Llahi 4696 years have elapsed from the beginning of Kali Yuga. This means war took place in 3137 BCE

12th century Kalhana’s Rajatarangini – Kali 653 i.e 2500 BCE. So the war took place before 2500 BCE.

Kalhana was the first historian according towstern scholars. That Kashmiri Brahmin was the first one to write Indian History with dates. But he did a blunder in calculating the Kali Yuga. Still scholars wonder how he committed this mistake. There are various theories about it.

halebedu
Mahabharata war in Halebedu

R.Morton Smith – 1050 BCE
Srinivas Raghavan 3067 BCE
P C Sen Guptas 2449 BCE
Dr Sankalia – later than 15th century BCE
S B Roy on the basis of astronomical calculations – 1424 BCE
S B ROY in his book “Date of Mahabharata Battle” has beautifully summarised the views of scholars in this field as follows:–

Group A who believed in the date 3100 BCE
D R Mankad- 3201 BCE
M M Krishnamachari – 3137 BCE
C V Vaidya – 3102 BCE
V B Athvale – 3016 BCE

Chakra vyuha
Chakra Vyuha in Bharata battle

Group B (2500 BCE)
Varahamihira (Brihat Samhita)
Kalhana (Rajatarangini)
P C Sengupta (Indian Chronology)

Group C (1450 BCE)
A.Cunningham – 1424 BCE
K P Jaiswal – 1424 BCE
Tarakeshwar Bhattacharya – 1432 BCE
Giridra Sekhar Basu – 1416 BCE
Bankim Chandra Chatterji – 1400 BCE
Swami Vivekananda – 1400 BCE
(Complete Works, Vol.II, PP 27,29
A D Pusalkar 1400 BCE
Bala Gangadhara Tilak – 1400 BCE (in his book Gita Rahasya)
H C Deb – 1400 BCE
B B Ketkar – 1267 BCE
Shri Aurobindo -1191 BCE
(in his book Vyasa and Valmiki)
K L Dapthari 1197 BCE
K G Shankar – 1197 BCE
Sitanath Pradhan – 1151 BCE

arjuna
Arjuna or Bhageeratha doing penance, Mahabalipuram

Group D (950 BCE)
Pargiter – 950 BCE
Roy Chowdhuri – 900 BCE

My comments: Tamil inscription and Pulikesin’s Aihole inscription confirm the traditional date for Kaliyuga i.e.3100 BCE. Our Panchangam also sticks to the traditional date. They were not influenced by the concocted and outmoded theory of Aryan Invasion. They were of pure and unpolluted mind. Moreover Megasthenes of third century BCE said that 143 generations had passed before his time. His statement is repeated by other Greek authors. Even if we give 20 years per king then it would add up 2860. This gives the traditional date 2860+Appr.300 BCE). Inscriptions never lie. Kalhana and Varahamihira lost 600 years in their calculations because of some vague astronomical positions.

It is very interesting to note that scholars differ widely even after several seminars. We must hold one more seminar or conference in the light of new evidence from the submarine Dwaraka, underground Sarasvati River and the revised date of Rig Veda from Shriknat Talegari and American Sanskrit scholars.

krishna-bhishma
Bhisma on acupuncture treatment (Bed of Arrows)

The following three books give lot of information on this topic:
Mahabharata Myth and Reality – Differing Views, Agam Prakashan, New Delhi
Age of Bharata War, Edited by G C Agarwala, Motilal Banarsidas, 1979
Date of Mahabharata battle, S B Roy, The Academic Press, Gurgaon, 197
Long live the Greatest, Oldest and Longest Epic Mahabharata!!

krishna war
Lord Krishna, Military strategist and main architect of the great war.

ரிக் வேதத்தில் ஹரப்பா நகரம்?

harappa2

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1382; தேதி நவம்பர் 1, 2014.

உலகின் மிகப்பழைய நூல் ரிக்வேதம். வியாசர் என்பவர் இதைத் தொகுத்தார். 5200 ஆண்டுகளுக்கு முன் வேதங்கள் அளவுகடந்து பெருகிவிட்டன. யார் எதைப் படிப்பது? எப்படி மனனம் செய்வது? கடல் போலப் பரந்துவிட்டதே? என்று கவலைப்பட்ட வியாசர் வேதத் துதிப்பாடல்களை நான்காகப் பிரித்து நாலு சிஷ்யர்களைக் கூப்பீட்டு நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதிகளை மட்டும் பரப்புங்கள் என்றார். ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களில் மிகப் பழையது ரிக் வேதம் என்று உலகமே ஒப்புக் கொண்டுவிட்டது. அதில் பத்து மண்டலங்கள் உள்ளன. ஒன்று, பத்து ஆகிய மண்டலம் தவிர ஏனையவை ஒவ்வொரு ரிஷியின் குடும்பத்தினர் பாடிய பாடல்களாகும்.

ஆறாவது மண்டலம் பாரத்வாஜ ரிஷியின் மண்டலம் ஆகும். இதில் 27-ஆவது துதியில் ஹரியூபிய என்னும் ஒரு சொல் வருகிறது. வழக்கம் போல வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இங்கேயும் உளறிக்கொட்டி கிளறி மூடியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் எழுதியதாலும், அப்போது பிரிட்டிஷ்காரகள் நம் நாட்டை ஆண்டதாலும் நம் ஊர் மக்குகள், அசடுகள் அவர்கள் சொன்னதை எல்லாம் வேதத்துக்கு மேலான வேதம் என்று நம்பிவிட்டன!!
நல்ல வேளை! இந்துக்கள் செய்த பாக்கியம்! அத்தனை வெள்ளைத் தோல் “அறிஞர்”களும் ஆளுக்கு ஒன்றைத் தத்துப் பித்து என்று எழுதிவிட்டனர். எல்லோரும் ஒரே கருத்தை எழுதி இருந்தால் இவ்வளவு நேரம் இந்துமதத்தையே “த்வம்சம்” செது அழித்திருப்பர். ஆளாளுக்கு ஒவ்வொரு வகையில் உளறியதால் நம் மதம் பிழைத்தது. அவர்கள் சொன்ன ஒரு கருத்து ஹரியூபிய என்பது ஹரப்பா என்பதாகும்.

கிழக்கு பஞ்சாபில் ராவி நதிக்கரையில் ஹரப்பா நகரம் இருக்கிறது. இப்போது இது பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கிறது. இதுவும் மொஹஞ்சதாரோ என்னும் நகரமும் சிந்து சமவெளி நாகரீகத்தின் மிகப்பெரிய இரண்டு நகரங்கள் ஆகும். உலகம் வியக்கும் செங்கற் கட்டிடங்களையும் அருமையான திட்டமிடப்பட்ட நகர அமைப்பையும் உடையன இவ்விரு ஊர்களும்.

Rigvedic_geography

நகரமா? நதியா?

ரிக்வேத சூக்தத்தில் வரும் ஹரியூபிய என்ற சொல்லை நதி என்றும் ஊர்ப்பெயர் என்றும் சொல்லுவர் சிலர். இன்னொருவர் “ஐரோப்பா” என்பதே ஹரியூப்பியவில் இருந்து என்றும் சொல்லி இருக்கிறார். உளறுவதற்கு வெள்ளைக்காரகள் மட்டும்தான் உரிமை வாங்கி இருக்கிறார்களா? நாங்கள் உளறக்கூடாதா? என்று இப்போது “பிளாக்:குகள் எழுதுவோரிடயே ஒரு போட்டி!! தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன்; பிளாக் எழுதுபவன் எல்லாம் அறிஞன் என்று ஆகிவிட்டது. நிற்க.

லுட்விக் என்பவர் இதை யாவ்யாவதி நதியின் மேல் உள்ள நகரம் என்று சொல்வதாக வேதங்களுக்கு இண்டெக்ஸ் தயாரித்த கீத், மக் டொனல் எழுதி வைத்துள்ளனர்.
ஹில்பிராண்ட் என்பவர் குரும் நதியின் உபநதி இது என்று கூறுகிறார்.
வேதத்துக்கு பாஷ்யம் எழுதிய சாயனர் இதை நதி என்பார்.

இந்தத் துதியை மொழி பெயர்த்த கிரிப்பித் என்பவர், அபயவர்த்தின் சாயமான என்ற மன்னன் விரிச்சிவன் என்பவர்களைத் தோற்கடித்த இடம் என்கிறார். ‘’ஹரியூப’’ என்றால் பொன் மயமான யூப தூண்கள் என்று பொருள். ஆகவே ஹரி யூப என்பது வேத கால நகரம் என்ற பொருள் தொனிக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்திலேயே யூப நெடுந்தூண் என்று சம்ஸ்கிருதச் சொல் பயன் படுத்தப்படுகிறது. அந்த அளவுக்கு தமிழ் மன்னர்கள் யாக யக்ஞங்களை செய்து புகழடைந்தனர்.
harppa mohanjo

போர்னியோ தீவில் (இந்தோநேசியா) மனிதர்கள் காலடி படாத காடு என்று நினைத்த அடர்ந்த காட்டுக்குள் மூலவர்மன் என்பவனின் யூப நெடுந்தூன் கல்வெட்டுடன் கிடைத்ததை காஞ்சிப் பெரியவர் 1932 சென்னைச் சொற்பொழிவுகளில் குறிப்பீட்டுள்ளார். ஆகவே யூபம் என்பது சிந்து சமவெளி நாகரீக ஹரியூப்பியவில் மட்டும் இன்றி 2000 ஆண்டுகளாக ஆசியா முழுதும் பரவிவிட்டது தெரிகிறது.

யூப ஸ்தம்பம் என்பது வேதத்தில் ஆகுதியாக்கப்படும் யாகப் பசு கட்டப்படும் இடம் அல்லது வேதச் சடங்கின் வெற்றியின் நினைவாக எழுப்பபடும் தூண் ஆகும். சங்க இலக்கியத்தில் குறைந்தது நான்கு இடங்களில் ரிக்வேதத்தில் பயன்படுத்தப்பட்ட அதே யூப என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியும், கரிகால் பெருவளத்தானும், பெருநற்கிள்ளியும் யாகங்கள் செய்து புகழ் அடைந்ததை சங்க இலக்கியப் பாடல்கள் விதந்து ஓதும். யூப என்ற சம்ஸ்கிருத சொல் வழங்கும் நான்கு பாடல்கள்:—
புறநானூறு- 15, 224
மதுரைக்காஞ்சி – வரி 27
பதிற்றுப்பத்து – 67–10
Samudra-4787v-280.50

Samudra Gupta’s gold coin with Yupa post near the Horse.

ஆக, ஹரியூப்பிய என்பது ஹரப்பாதான் என்று நம்புவோர் பொன் மயமான ஹரி+யூப நெடுந்தூண் நடப்பட்ட நகரம்தான் அது என்பதை ஒப்புக் கொண்டதாக அர்த்தம். அங்கே நடந்த யுத்தமும் ஒரு மன்னன் மற்றொரு மன்னனைத் தாக்கும் சாதாரணப் போராக இருந்திருக்கலாம். இனப் போர், ஆரிய -திராவிடப் போர் என்று பொருள் கொள்ளத் தேவை இல்லை. உலகிலேயே நீண்ட காலம் போரிட்ட — தங்களுக்குள்ளேயே போரிட்ட —- சேர, சோழ பாண்டியர்களுக்கு உள்ளேயே போரிட்ட — 1500 ஆண்டுகளுக்கு இடைவிடாமல் போரிட்ட – இனம் தமிழ் இனம் ஒன்றுதான். அவர்கள் பேசிய மொழி தமிழ்— அவர்கள் வழிபட்ட தெய்வங்கள் இந்துக் கடவுளர்- அவர்கள் பின்பற்றிய பண்பாடு பாரதப் பண்பாடு – அப்படி இருந்தும் முஸ்லீம்களும், வெள்ளைக்காரர்களும் வரும் வரை போரிட்டது தமிழ் இனம் — ஆகவே ரிக் வேத கால போர்களை இனப் பூசல்கள் என்று வருணிப்பது மடமை!!

ujjain333
Ujjain coin with Yupa post

என்னுடைய முந்தைய சிந்துவெளிக் கட்டுரைகள்:

சிந்து சமவெளியில் பேய் முத்திரை
சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் Aug.23, 2012
‘எள்’ மர்மம்: ரிக் வேதம் முதல் சிந்து சமவெளி வரை! Post No 755 dated 23/12/13
பதி – வதி – மதி: சிந்து சமவெளியில் உண்டா? 20-10-2014
தேள்— ஒரு மர்ம தெய்வம்!
சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி1 November 2012
சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு (26/7/13)
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை
(15/10/12)‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’ Post-763 dated 28th Dec. 2013.
சிந்து சமவெளியில் அரசமரம்
சிந்து சமவெளி நாகரீகம் பெயரை மாற்றுக! march 29, 2014
1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி 24-3-14
சிந்து சமவெளி – பிராமணர் தொடர்பு (Post No 1033, Date 10-5-14)

harappa
Harappa buildings
Contact swami_48@yahoo.com