சாமியார் தேன் சட்டி உடைத்த கதை!!

honeycomb

Honey comb picture தேன் கூடு படம்

Compiled by London swaminathan

Article No. 1791 Date 10th  April 2015

Uploaded from London at   8-43

 

ஒரு காட்டில் ஒரு சாமியார் இருந்தார். அவர் மிகவும் நல்லவர். இதனால் அவர் புகழ் பரவியது. ஒரு வியாபாரி அவரைக் காண வந்தார். அவர் மீது பக்தி பூண்டு, சுவாமிகளே, காட்டுக்குள் தனியாக வசிக்கிறீர்களே, தங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார். அவர் ஒன்றையும் வாங்கிக் கொள்ள மறுத்தவுடன் நான் உங்கள் பூஜைக்குத் தினமும் தேன் அனுப்புகிறேன், என்று சொல்லி தினமும் ஒரு சட்டித் தேனை அனுப்பி வைத்தார்.

அளவுக்கு அதிகமாக தேன் கிடைத்ததால் சாமியார் அதைப் பெரிய பானையில் கொட்டி உறி கட்டி, அதை மேலே தொங்க விட்டார். நாள் ஆக, ஆக தேன் சாப்பிட்டு அவர் உடம்பும் தினவெடுக்கத் துவங்கியது. கற்பனை வெள்ளத்தில் மிதக்க ஆரம்பித்தார்.

அட, இப்படியே நான் நிறைய தேன் சேகரித்தால் ஒரு நாள் அதை விற்று இரண்டு ஆடுகள் வாங்குவேன். அந்த ஆடுகள் சில ஆண்டுகளில் பெருகியவுடன் அதன் ரோமத்தில் கம்பளி நெய்வேன். அதை விற்றுப் பெரிய பணக்காரன் ஆவேன். பின்னர் ஒரு ராஜகுமாரியைத் திருமணம் செய்துகொள்வேன். எனக்கு குழந்தைகள் பிறக்கும்.

அந்தக் குழந்தைகளை மிகவும் கண்டிப்புடன் வளர்ப்பேன். டேய், மகனே இங்கே வா, இதைச் செய் – என்று கட்டளை இடுவேன். அவன் பணத் திமிரில் எனக்குக் கீழ்ப் படியாமல் இருந்தால், இந்தக் கம்பை வைத்து முதுகில் ஒரு அடி கொடுப்பேன் – என்று சொல்லியவாறே பக்கத்தில் இருந்த கம்பை எடுத்து சுழற்றினார். அது மேலே உள்ள தேன் பானையை கீழே தள்ளி சுக்கு நூறாக உடைத்தது. அவரது கனவெல்லாம் தேன் துளிகள் போலச் சிதறின.

ஆசைப் பட்டு மோசம் போனேனே என்று எண்ணி மீண்டும் தவம் செய்யத் துவங்கினார்.

பேராசை பெரு நஷ்டம்!

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் — என்பது பழமொழி. அளவுக்கு மிஞ்சினால் தேனும் விஷம் என்பது புது மொழி.

தேவைக்கு அதிகமாக எதையும் சேர்க்காதீர்கள்.

swami_48@yahoo.com  

ஆன்மீக அறிவியல் ஆய்வாளர் ச.நாகராஜன் : அறிமுகம்

gold  ganesh

Compiled by London swaminathan

Article No. 1791 Date 10th  April 2015

Uploaded from London at   8-13 am

 

This is an interview given by my brother S NAGARAJAN who contributes regularly to our blogs.

ஆன்மீக அறிவியல் ஆய்வாளர் ச.நாகராஜன் : அறிமுகம்

.நாகராஜன்அறிமுகம்

 

திரு.நாகராஜன் பாரம்பரியமிக்க தேசபக்த குடும்பத்தில் பிறந்தவர்.இவரது தந்தையார் திரு வெ.சந்தானம் சுதந்திரப் போரிலே ஈடுபட்டு சிறை சென்றவர்.மணிக்கொடி திரு பி.எஸ்.ராமையாவுடன் இணைந்து தமிழ் பத்திரிகை உலகில் ஒரு புது சகாப்தத்தைத் தோற்றுவித்தவர். சிறந்த பத்திரிக்கையாளராக விளங்கிய இவர் மதுரை தினமணிப் பதிப்பின் பொறுப்பாசிரியராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவி வகித்தவர்.

 

தஞ்சை மாவட்டம் கீவளூரில் பிறந்த திரு ச.நாகராஜன் இது வரை சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கதைகள், நாடகங்கள், மதிப்புரைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.

 

விண்வெளி சாதனைகள் உள்ளிட்ட அறிவியல் கட்டுரைகள்,ஜோதிடம், வானியல்,வரலாறு, இலக்கியம்,சுற்றுலா இடங்கள்,புலன் கடந்த உணர்வியல்,கடல் வளம், மிருக இயல்,இசை, மந்திரம்,யந்திரம், சாதனையாளர்கள், உடல் ஆரோக்கியம், யோகா, வாஸ்து,ஹாலிவுட் சினிமா, தமிழ் திரை இசைப்  பாடல்கள் உள்ளிட்ட பல பொருள்களிலும் கட்டுரை படைத்திருப்பது இவரது தனிச் சிறப்பு.

 

திருச்சி வானொலி நிலையம் வாயிலாக இவரது நாடகப் படைப்புகள் ஒலிபரப்பாகி உள்ளன.ரேடியோ உரைகளும் மதுரை மற்றும் சென்னை வானொலி மூலமாக ஒலிபரப்பாகி உள்ளன.200க்கும் மேற்பட்ட சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டு உரைகளை சென்னை வானொலிக்காக இவர் படைத்துள்ளார்.ரெயின்போ வானொலிக்காக இல்லத்திலிருந்தே இணைப்பைப் பெற்று வானியலில் முக்கிய நிகழ்வுகள் ஏற்படும் போதெல்லாம் அவை பற்றிய செய்திகளைத் தந்ததோடு நேயர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார்.

 

இவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தமிழ் உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஜயா டி.வியில் சுமார் 50 நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டுள்ளார். திருப்பாவைக்கு 30 நாட்கள் விஞ்ஞான ரீதியில் இவர் அளித்த விளக்கங்கள் நேயர்களின் கவனத்தைப் பெரிய அளவில் ஈர்த்தன.ஜயா தொலைக்காட்சி இவரை காலைமலர் நிகழ்ச்சியில் பேட்டி கண்டு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.

 

வின் டி.வியில் நேரடி ஒளிபரப்பில் பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்சினைகள் பற்றி அறிவியல் ரீதியாகக் கருத்துக்களை அளித்துள்ளார்.வசந்த் தொலைக்காட்சியில் ஹிக்ஸ்போஸன் பற்றிய அறிவியல் விளக்கம் தந்துள்ளார்.

 

சுயமுன்னேற்றம், படைப்பாற்றல் திறன், நிர்வாக இயல் உள்ளிட்ட புதிய உத்திகள் பற்றி உரைகள் ஆற்றியும், பயிற்சி முகாம் நடத்தியும் வந்துள்ளார். பல பொறியியல், கலைக் கல்லூரிகளில் மாணவ மாணவியருக்காக இவர் நடத்திய பயிற்சி முகாம்கள் அவர்களை மேம்பட வழி வகுத்தவை.

 

வாகன கட்டுமானத் துறையில் தென்னகத்தின் சிறந்த நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மேலாளராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இவர் பணியாற்றியுள்ளார்.

 

இலங்கை, பெல்ஜியம், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்று பரந்த அனுபவம் பெற்றிருக்கிறார்.

 

இவரது படைப்புகள் தினமணி, தினமணி கதிர், தினபூமி, ஆனந்தவிகடன், பாக்யா,கலைமகள், மஞ்சரி, மங்கையர் மலர்,கோகுலம் கதிர், இதயம் பேசுகிறது, ஞான ஆலயம், சினேகிதி, சின்னத்திரை,ஜெம்மாலஜியும் ஜோதிடமும், ஆதிபிரான், ஹெல்த்கேர், குவைத் தமிழ் அமுதம்,THE HINDU உள்ளிட்ட பல பத்திரிக்கைகளில் இடம் பெற்றுள்ளன.

 

இவரது அறிவியல் தொடரானவிண்வெளியில் மனித சாதனைகள்’  மூன்று வருடங்களாக பாக்யா இதழில் பிரசுரிக்கப்பட்டு வாசகர்களின் ஆதரவைப் பெருமளவில் பெற்றது. இந்தியப் பத்திரிக்கைகளிலேயே விண்வெளி சாதனைகளைப் பற்றிய மிக நீண்ட தொடர் இவருடையதே என்பது குறிப்பிடத் தகுந்தது.

 

இவரதுமாயாலோகம்தொடர் 78 வாரங்கள் பாக்யாவில் தொடர்ந்து வெளி வந்தது. தற்போது அறிவியல் துளிகள் 210 வாரங்களைக் கடந்து பாக்யா இதழில் தொடர்கிறது.

இவரது படைப்புகள் வாரந்தோறும் http://www.nilacharal.com மின் இதழில் வெளிவருகிறது.

இவரது சகோதரர் திரு ச.சுவாமிநாதனின் swamiindology.blogspot.com மற்றும் tamilandvedas.blogspot.com ஆகிய தளங்களில் இவர் கட்டுரைகள் இடம் பெறுகின்றன.

 s nagarajan

Picture of S Nagarajan

இதுவரை இவர் படைப்புகளானவெற்றிக்கலை, அறிவியல் வியக்கும் ஆன்மீகம், நவகிரகங்கள்,அதிரடிமன்னன் ஜாக்கிசான்.அறிவுக்கும் அப்பால், பறக்கும் தட்டுகளும் அயல்கிரகவாசிகளும், அற்புத அவதாரம் ஸ்ரீ சத்யசாயிபாபா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஆங்கிலம் அறிவோமா, விந்தை மனிதர்கள், சிறுவர்க்கான புராணக் கதைகள், உலகின் அதிசய இடங்கள், நாகநங்கை (சரித்திர நாவல்), விஜயதீபம் (சரித்திர நாவல்), வியப்பூட்டும் விஞ்ஞான புதுமைகள் 100, அறிவியல் நோக்கில் ஆன்மீக ரகசியங்கள், பிரமிட் மர்மங்களும் அதீத புலனாற்றல் அதிசயங்களும், திறன் கூட்டும் தியானம் விண்வெளியில் மனித சாதனைகள், விலங்கியல் உலகம், ஆஹா! அப்படியா (விஞ்ஞான கேள்வி பதில்கள்), ஆன்மீக ரகசியங்கள் உள்ளிட்ட 23 புத்தகங்கள் வெளி வந்துள்ளன.

 

இவரது நூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கிலக் கட்டுரைகள் உலகின் தலை சிறந்த வலைத்தளமான http://www.ezinearticles.com-இல் வெளிவந்துள்ளன. இந்தக் கட்டுரைகளை 100184 வாசகர்கள் படித்துப் பயன்பெற்றுள்ளனர், இந்தக் கட்டுரைகளை பல நாடுகளிலும் உள்ள 1614 மின்னனு பத்திரிக்கைகள் விரும்பி மறுபிரசுரம் செய்துள்ளன.

இவரது ஆங்கிலப் புத்தகமான Breakthrough to Success என்ற வாழ்வியல் நூலை லண்டனிலிருந்து நிலா பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ளனர்.

நிலா பப்ளிஷர்ஸ் இவரது 52 தமிழ் நூல்களை மின்னணு நூல்களாக வெளியிட்டுள்ளனர்.

 

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு சுமார் 10000க்கும் மேற்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கலைச் சொற்களை இவர் தமிழாக்கம் செய்துள்ளார்அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், சீனா, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பலவற்றிலும் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் இவரது மொழியாக்கத் தமிழ்ச் சேவையை விரும்பிப் பெறுகின்றன.

இவர் பெற்ற பாராட்டுரைகளில் சில:

 

இயக்குநர் திரு கே.பாக்யராஜ்

வெற்றி ரகசியத்தை வெளியிடக் கூட விருப்பமின்றி அல்லது நேரமின்றி வெற்றி பெற்றவர்கள் மும்முரமாகச் செயலாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த நூலாசிரியர் நேர் சிந்தனையுடனும், நியாயமாகவும், நளினமாகவும், சிறப்பாகவும், சீராகவும் வெற்றிக்கலையின் ரகசியத்தை வெளியிடும் தன் பணியைச் செய்து முடித்திருக்கிறார்.

(வெற்றிக்கலை நூல் முன்னுரையில்)

***

திரு இராம.கோபாலன் இந்து முன்னணித் தலைவர்

பாரத நாட்டின் ஆன்மீகம் பற்றி நமது நாட்டினர்க்கே தெரிவதில்லை.இதன் காரணமாக தேசீயத் தன்மான உணர்வு கிட்டத் தட்ட இல்லையென்றே கூறி விடலாம். திரு.நாகராஜனின் இந்த அரிய தொண்டுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(அறிவியல் வியக்கும் ஆன்மீக ரகசியம் நூல் வாழ்த்துரையில்)

****

 chicago1

This picture was taken by my eldest brother S SRINIVASAN in Chicago where Swami Vivekananda addressed the World Parliament of Religions.

எழுத்தாளர் திரு அசோகமித்திரன்

பிரமிப்புஎன்ற தலைப்பில்..

திரு நாகராஜன் அவர்கள் எழுதியஆன்மீக ரகசியங்கள்என்ற நூலின் 27 கட்டுரைகளையும் படித்தபோது எனக்குப் பிரமிப்பு தான் முதலில் ஏற்பட்டது. ஆசிரியர் தான் எவ்வளவு விஷயங்களை அறிந்து அவற்றைத் தனதாக்கி இருக்கிறார்! ஒரு பெரிய நூலிலிருந்து மேற்கோள் காட்டி விடுவது எளிது. ஆனால் அதைத் தன் அனுபவபூர்வமாக உணர்ந்து இன்னொருவருக்குக் கூறுவது மிகுந்த, பயிற்சி, சிந்தனை, சிரத்தை இருந்தால் தான் சாத்தியம். நாகராஜனின் ஒவ்வொரு கட்டுரையிலும் உள்ள ஏராளமான விஷயங்கள் இதைக் காட்டுகின்றன.

 

நாகராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

(ஆன்மீக ரகசியங்கள் நூல் முன்னுரையில்)

***

 

தமிழறிஞரும் முன்னாள் டி..ஜியுமான திரு சு. ஸ்ரீபால் அவர்கள்

அதிசயமான சாதனைகள் படைத்தவர்களைப் பற்றி அற்புதமாக நூலாசிரியர் எழுதியிருக்கிறார். எனது பாராட்டுதல்கள்.

(விந்தை மனிதர்கள் நூல் முன்னுரையில்)

***

 

பிரபல விஞ்ஞானியும் DRDOவில் பல்லாண்டுகள் பணியாற்றியவருமான அறிஞர் திரு K.G.நாராயணன் அவர்கள்

ஐந்தாயிரம் ஆண்டுகளாக அறிந்து கொண்ட பொருள்களைவிட  பல மடங்குகள் அதிகமாக கடந்த முன்னூறு ஆண்டுகளில் அறிவியல் மூலமாக அறிந்து கொண்டிருக்கிறோம். இந்த மகத்தான முன்னேற்றங்களைப் பற்றி முடிந்தவரை தெரிந்து கொள்வது நாம் எல்லோருக்கும்  தவிர்க்க முடியாத தேவை ஆகி விட்டது.    திரு நாகராஜன் அவர்களின் அறிவியல் துளிகள் இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் முயற்சிகளில் தலையாயதாகத்  திகழ்கிறது. நம் நன்றிக்கும் பாராட்டுகளுக்கும் உரியவர் திரு நாகராஜன்.

(அறிவியல் துளிகள் நூல் முன்னுரையில்)

****

 

பிரபல விஞ்ஞானியும் ASIEOவில் பல்லாண்டுகள் பணியாற்றியவருமான திரு V தேசிகன் அவர்கள்

விண்வெளியில் மனித சாதனைகள்நூலானது வானவியல், விண்வெளி வீர்ர்கள், விண்வெளிப் பயணங்கள் மற்றும் இவற்றிற்குப் பின்னணியில் இருந்தோர் பற்றிய அனைத்தையும் கலந்து தரும் ஒன்று.

 

மற்ற கிரகங்களில் மனிதனின் குடியேறுவதற்கான ஆர்வமூட்டும் சாத்தியக் கூறுகளையும், பிக் பேங் பற்றிய ஒரு சிறிய சுருக்கத்தையும் நீங்கள் இதில் படிக்கலாம். இந்த நூலானது விண்வெளிக் கொள்கை ஒப்பந்தம் பற்றியும் மனிதன் கற்பனையில் தோன்றிய சுவையான பல சிறிய கதைகளையும், ஒரு விண்வெளி வீராங்கனை தனது ஒப்பனைப் பொருள்களை விண்வெளிப் பயணத்தின் போது கொண்டு சென்றது போன்ற துணுக்குச் செய்திகளையும் கூடத் தருகிறது.

 

சில புத்தகங்களை சுவைக்க வேண்டும்; மற்றவற்றை முழுங்க வேண்டும், ஆனால்  குறைந்த சில புத்தகங்களை மட்டுமே அசை போட்டு ஜீரணிக்க வேண்டும்இந்தப் புத்தகம் மூன்றாவது வகையில் நிச்சயமாகச் சேர்கிறது.

இந்த புத்தகத்தை அசை போட உங்களுக்கு என் இனிய வேண்டுகோள்.

(விண்வெளியில் மனித சாதனைகள் நூல் முன்னுரையில்)

***

 

Professor Benjamin LE BEAU    (Paris) 

If we think that ‘positive thinking’ is a product of the 20th century (thanks to Dale Carnegie, James Allen and or Norman Vincent Peale…), then Mr.S.Nagarajan, the author of  ‘BREAKTHROUGH TO SUCCESS’ has aptly proved that it is an Indian product that existed  ever since thousands and thousands of years.

In short, the book seems to be a cocktail of many individual articles previously published in ezines of the internet. The author certainly armed with patience collected quite a number of quotations & citations and skillfully used them to support his points of view. 

 In many places Mr. Nagarajan gives the gist of the articles in a sentence with simple words and that is his plus point. The author, perhaps a bibliophil merits applauses because he has imbibed in so many books.  Bravo!

(‘BREAKTHROUGH TO SUCCESS’ ஆங்கில நூலின் முன்னுரையில்)

****

அபஸ்வரம் திரு.ராம்ஜி

திரு.நாகராஜன் எழுதிய அதிரடி மன்னன் ஜாக்கிசான் என்ற நூலைப் படிக்கும் நல்ல வாய்ப்பு கிடைத்தது. மிகுந்த ஆராய்ச்சியுடனும் கடின உழைப்புடனும்  இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது.இதன் ஆசிரியருக்கு எனது பாராட்டுதல்கள்

(அதிரடி மன்னன் ஜாக்கிசான் நூல் முன்னுரையில்)

*********

 

டாக்டர் திருமதி கமலி ஸ்ரீபால் (கோகுலம் கதிர் இதழ் ஆசிரியர்)

படிக்கத் தொடங்கினால் படித்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் நூல்.ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நூல். இறைவன் அருளால் திரு ச.நாகராஜன் அவர்களின் இலக்கியப் பணி மேன்மேலும் வளர மனதாரப் பிரார்த்திக்கிறேன்.

(திறன் கூட்டும் தியானம் நூல் முன்னுரையில்)

*******

 

கலைமகள் ஆசிரியர் திரு கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்

விநாயகா பப்ளிகேஷன்ஸ் வெளியிடும் இந்த நூலில் திரு நாகராஜனின் பேனா பல இடங்களில் வித்தை காட்டி பறக்கும் தட்டுகளை நம் கண்முன்னே கொண்டு வந்திருக்கின்றன.அவருக்குப் பாராட்டுக்கள்.பாடத் திட்டத்திற்கும் ஏற்ற நூல் இது.

(பறக்கும் தட்டுகளும் அயல் கிரகவாசிகளும் நூல் முன்னுரையில்)

***********

 

தமிழறிஞரும் இந்திய இயல் ஆராய்ச்சியாளருமான திரு ச.சுவாமிநாதன்

தமிழும் சம்ஸ்கிருதமும் பாரத நாட்டின் இரண்டு கண்கள்.

இவைகளில், பழமை, புதுமை, பெருமை, அருமை ஆகிய நான்கு குணங்களைப் பெற்றது சம்ஸ்கிருத மொழி. அந்த மொழியின் ஆழமான கருத்துக்களை எளிதில் புரிந்துகொள்ள உதவுவது சுபாஷிதங்கள் எனப்படும் பழமொழி அல்லது பொன்மொழிகள். பலாப் பழத்தையோ ஆரஞ்சுப் பழத்தையோ ஒருவர் தனித் தனி சுளைகளாகக் கொடுக்கும்போது நாம் உடனே கையில் வாங்கி வாயில் போடுகிறோம். சம்ஸ்கிருத செல்வம் என்ற தொடரில் வந்த கட்டுரைகள் இத்தகைய பழச் சுளைகள். அதை நாகராஜன் அவர்களின் எழுத்து வடிவில் காணும் போது கொஞ்சம் சர்க்கரையும் தோய்த்துச் சாப்பிட்டது போல் இருக்கிறது. கூடுதல் இனிப்பு! ஆயினும் திகட்டாமல் மேலும் மேலும் சுவைக்கத் தோன்றுகிறது.

சம்ஸ்கிருதச் செல்வம் நூல் (சுபாஷிதங்கள் தொகுப்பு) முதல் பாகம் முன்னுரையில்

***

திருமதி  மஞ்சுளா ரமேஷ் (ஞான ஆலயம், சினேகிதி, ஶ்ரீ ஜோசியம் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர்)

நமது ஆன்மீகத்தில் எத்தனை விஞ்ஞானமும் அதிசயங்களும் நிறைந்துள்ளன என்பதை ஆராய்ந்து அறியும் போது வியப்பும் பிரமிப்பும் தான் ஏற்படுகின்றன.ஆனால் இவற்றையெல்லாம் விளக்குபவர்கள் தான் குறைவாக உள்ளனர்.

  அப்படிப்பட்டவர்களில் மிக அபூர்வமானவர் என்றே திரு ச.நாகராஜன் அவர்களை சொல்லலாம். வேதங்கள், சாஸ்திரங்கள், ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் உள்ள உன்னதமான விஷயங்களை அறிவியல் ரீதியாக விளக்கி, அதே சமயம் சுவாரஸ்யம் குன்றாமல் அவர் ஞான ஆலயத்திற்கு எழுதி அனுப்புவார். வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட அக்கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம் என அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

   எங்களுடைய இன்னொரு பத்திரிகையானஶ்ரீ ஜோசியம்பத்திரிகைக்கு விஞ்ஞானத்துடன் கூடிய ஜோதிட ரீதியான கட்டுரைகளை அனுப்பியிருந்தார். பிரமிக்க வைக்கும் தகவல்களை அவைகள் தந்தன.

    எழுத்துலகில் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு பணியாற்று வரும் ச.நாகராஜன் அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து இலக்கியப் பணியாற்ற வேண்டும் என எல்லாம் வல்ல  இறைவனை பிரார்த்திக்கிறேன். ‘அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மாநூல் முன்னுரையில்

***

 

திருவள்ளூர் N.C.ஶ்ரீதரன், MANAGEMENT CONSULTANT மற்றும் கல்வியாளர்

திரு. நாகராஜன் அவர்களின்சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்நான்காம் பாகம் படித்துப் பார்த்தேன். ஒவ்வொரு பக்கமும் ஒரு பொக்கிஷம்.

சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பற்றி இவ்வளவு எளிமையான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பை வேறு யாராலும் கொடுக்க முடியுமா என்பது சந்தேகம். ஒவ்வொரு பகுதியிலும் அவர் கொடுத்திருக்கும் விவரங்கள் நம்மைப் பிரமிக்க வைக்கிறது. படிப்பவர்கள் மிக மிக எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

   இந்தப் புத்தகம் அனைத்துப் பள்ளியிலும் கட்டாயப் பாடமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இந்தப் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை தினமும் பள்ளிகளில் இறை வணக்க கூட்டத்தில் படிக்க வேண்டும்.

சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்நான்காம் பாகம் முன்னுரையில்

***

 

தற்போது குடும்பத்துடன் சென்னையில் இவர் வசித்து வருகிறார்.

இவரது மின்னஞ்சல் முகவரி : snagarajans@gmail.com

*************************

swami_48@yahoo.com

Do your Good Acts Now! Yudhistira Story!!

sand

Compiled  by London swaminathan

Article No. 1790;  Date 9th April 2015

Uploaded from London at   20–35

What is the most wonderful thing in the world? That was the question put by the Tree Spirit (Yaksha) to Yudhistira. And he answered the question:-

“The fact that people thinking themselves as stable and permanent, in spite of seeing several deaths daily is surprising”.

(Vana Parva, Mahabharata)

But he himself contradicted this at one time which surprised his brothers. There is an interesting story told by Swami Ramdas of Anandashram:-

“Once a poor man approached King Yudhistira, who was also called Dharmaraja, who strictly followed the path of virtue. He asked the king for some help.  Yudhistira said, “Come tomorrow, I will give you what you want”.

Yudhistira’s brother Bhimasena overheard this and at once ran to the place where a huge bell was hanging, and which was rung only when there was something important or in a matter of urgency. Bhimasena straightway rang the bell (Since India has only one culture from Himalayas to Kanyakumari we have a famous bell story in Tamil literature as well. I have given it already where a cow rang the bell at the palace of Manu Neethi Choza)

impermanence

The ringing of the bell created great commotion everywhere. All the people assembled in front of the bell tower to ascertain the reason. Yudhistira was also surprised. Report came to him that Bhimasena had rung the bell. Bhimasena was called and asked for an explanation.

He replied, “We have gained a great victory today, victory over death for 24 hours. My brother Yudhistira asked a man to come tomorrow, saying that he would give him what he wanted.  It means till tomorrow Yudhistira is not going to die – which is triumph over death. This is a great victory”.

Yudhistira was awakened. He called the poor man back, gave him what he wanted and sent him away without waiting for the next day.

 Big_Bell_Bhaktapur_GP4

Tamil poet Valluvar wonders,

“The one, who was here yesterday, is no more today and

That is matter for great wonderment, in this world” – Tirukkural 336

Almost all the Indian poets have sung about the impermanence of life. In Tamil Brahmin houses, mothers would warn children if they say, “Mum, I want to eat it tomorrow or Make me this sweet tomorrow”. Mothers would say, “No don’t say that. You have to say if I live tomorrow” (similar to Insah Allah of Muslims= God Willing).

We are not sure if we shall live the next instant; what then is the meaning of all fancies and fantasies? Shakespeare apparently had the same thought in mind when he wrote about the momentariness of life thus:

“We are such stuff

As dreams are made on and our little life is rounded

In a sleep”

This-transient-world

Indian Plane Accident

Dr S M Diaz in his commentary on the Tirukkural chapter – “Impermanence of the World” adds a sad story:–

“The circumstances of the gruesome Caravelle aircraft on the night of 11th October 1976 illustrates the point the poet had in mind. A hundred and nine passengers from Mumbai to Chennai were already air borne at 6 pm, when their aircraft was hit by a kite and had to return to base. After several hours a Caravelle aircraft was arranged to take only 89 passengers, leaving behind a protesting 20, because of smaller capacity. As the scheduled pilot did not possess a Caravelle licence, another one who had it, was pulled out of bed.

About 1-30 pm soon after taking off, the engine caught fire and the plane had to crash land at Santacruz airport (Mumbai) itself. All the 89 passengers and 6 members of the crew lost their lives.  The twenty who considered themselves unfairly left out escaped. That is life. The co- pilot who was pulled out of bed never knew he was going to die the next minute. It is as if the poet’s words had come true in a dramatic fashion over this unfortunate incident.

Thoughts such as Valluvar’s must have agitated Dag Hammarskjold (Secretary General of United Nations who died in a plane crash) when he recorded in his Markings published posthumously the following lines :-

“Tomorrow we shall meet

Death and I –

And he shall thrust his sword

Into one who is wide awake

But in the meantime how grievous the memory

Of hors frittered away”

Our bank balance (of life span) is depleted every second. No scientific instrument can regain the lost minute. Every minute before us is a bonus. We have to spend it wisely  — is the message of all the poets of the world from Vyasa to Valluvar, from Shakespeare to UN Secretary General.

contempalte.impermanence

Sources:

Tirukkural, Volume 1, Dr S M Diaz

Stories As tod by Swami Ramdas, B V Bhavan,Mumbai, 1969

தொல்காப்பியத்தில் எட்டுவகைத் திருமணங்கள்!!

dd-marriage-stills12

இந்துமதத்தில் 8 வகைத்  திருமணங்கள்

Written by London swaminathan

Research article No. 1789 Date 9th April 2015

Uploaded from London at  10-18 காலை

கட்டுரையின் முதல் பகுதி நேற்று “இந்து மதத்தில் காதல், கடத்தல் கல்யாணங்கள்!!” – என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. முதலில் அதைப் படித்துவிட்டு இதைப் படிப்பது நல்ல விளக்கம் தரும்.

“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக்கூட்டம் காணுங்காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே”.

-தொல்.பொருளதிகாரம்—1038

 

தொல்காப்பியரின் இந்த சூத்திரத்துக்கு “உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் நீண்ட விளக்க உரை எழுதி இருக்கிறார்.

எட்டுவகைத் திருமணங்களின் விவரம்

ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி என்னும் தமிழ் கலைக்களஞ்சியத்தில் இருந்து எடுக்கப்பட்ட விஷயங்கள்:–

1).பிராம்மம், 2).தெய்வம், 3).ஆருஷம், 4).பிராஜாபத்யம், 5).ஆசுரம், 6).காந்தர்வம், 7).இராக்ஷசம், 8).பைசாசம்

பிராம்மம் வகைத் திருமணங்கள்

வேதம் ஓதினனாகவும் நல்லொழுக்கனாகவும் இருக்கின்ற பிரம்மச்சாரியைத் தானாகவே அழைப்பித்து அவனை நூதன வஸ்திரத்தால் (புத்தாடைகளால்) அலங்கரித்து, கன்னிகையையும் அப்படியே நூதன பூஷண அலங்காரம் (பெண்ணையும் நகை, ஆடைகளால் ) செய்வித்து அவ்வரனுக்கு அவளைத் தானம் செய்வது பிராம்மம் ஆகும்.

கார்த்தி ரஞ்சனி

கார்த்தி- ரஞ்சனி கல்யாணம்

தெய்வம் வகைத் திருமணங்கள்

ஆத்யத்தில் தனக்குப் புரோகிதனாக இருப்பவனுக்கு தன் பெண்ணை அலங்கரித்துக் கொடுப்பது

ஆருஷம் வகைத் திருமணங்கள்

தான் செய்ய வேண்டிய யாகாதி கர்மங்களுக்காக வரனிடத்தில் (மாப்பிள்ளைப் பையன் =வரன்) ஒன்று அல்லது இரண்டு ரிஷபங்களையும் (காளை மாடு) பசுக்களையும் வாங்கிக் கொண்டு கல்யாணம் செய்துகொடுப்பது

பிரஜாபத்திய வகைத் திருமணங்கள்

ஒரு பிரம்மசாரியை (கல்யாணம் ஆகாத பையன்) அழைத்துப் பூசித்துத் தன் பெண்ணைத் தானம் பண்ணும்போது நீங்கள் இருவரும் தருமம் செய்யுங்கள் என்று கொடுப்பது. பெண்ணின் தந்தை கேட்கும் பணத்தைக் கொடுத்து, பெண்ணுக்கு நகைகள் வாங்கிப் போட்டுக் கல்யாணம் செய்து கொள்வது.

காந்தர்வ வகைத் திருமணங்கள்

ஸ்த்ரீயும் புருஷனும் ஒருவருக்கு ஒருவர் புணர்ச்சியின் ஆசையால் மனம் ஒத்துச் சேர்தல் (காதல் திருமணம்)

இராக்ஷச வகைத் திருமணங்கள்

ஒருவன் தன் பலத்தினால் கன்னிகை (பெண்) அழும்போது அவள் வீட்டினின்றும் அவளது பந்துக்களை (சொந்தக்காரர்கள்)  அடித்தும், கொன்றும் வலிமையால் கொண்டுபோவது

பைசாச வகைத் திருமணங்கள்

ஒரு கன்னிகை தூங்கும்போதும், குடியினால் வெறித்திருக்கும் போதும், பித்துக் கொண்டவளாய் இருக்கும்போதும் அவளுடன் புணர்வதாம்.

இதற்குப் பின்னர் எந்தெந்த வருணத்தினர் யாரைக் கல்யாணம் செய்யலாம் என்ற விஷயங்களை அவர் சொல்லுகிறார். இவை மனு ஸ்மிருதியில் மூன்றாவது அத்தியாயத்திலும் உள.

மிர்ச்சி செந்தில் ஸ்ரீஜா

மிர்ச்சி – செந்தில் திருமணம்

நச்சினார்க்கினியர் சொல்லும் சில சுவையான விஷயங்கள்:–

பிராம்மம் வகைத் திருமணங்களில் மாப்பிள்ளையின் வயது 48, பெண்ணின் வயது 12. (பெண்ணின் வயது சங்க காலத்திலும் வேத காலத்திலும் 12 முதல் 16 தான். அதில் வியப்பேதும் இல்லை). ஆனால் ஆணுக்கு 48 வயது இருக்கக் காரணம் அவர் அவ்வளவு காலத்துக்கு பிரம்மசாரியாக இருந்து வேதம் மற்றும் அதன் அங்கங்களைப் படித்துப் பின்னர் திருமணம் செய்துகொள்ள வருவர். (திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களின் விளக்க உரைகளில் ஆண்கள் 48 வயது வரை பிரம்மசர்யம் அனுஷ்டிக்கும் அபூர்வ விஷயங்களைக் காணலாம். ஒருவர் மனம், மொழி, மெய் மூன்றினாலும் 12 ஆண்டுகள் ப்ரம்மசர்யம் கடைப்பிடித்தால் அபூர்வ சக்திகள் – குறிப்பாக நினைவாற்றல்—உருவாகும் என்று சுவாமி விவேகாநந்தர் கூறுகிறார். காஞ்சி பரமாசார்ய சுவாமிகள், சுவாமி விவேகாநந்தர் போன்றோர் அபூர்வ நினைவாற்றல் பெற்றதை அவர்களின் புண்ய சரித்திரங்களில் படித்தறியலாம்)

பிரஜாபத்யம் பற்றியும் நச்சினார்க்கினியர் கூடுதல் தகவல் தருகிறார். பெண் வீட்டார் தருவதைப் போல இருமடங்கு வரதட்சிணையை மாப்பிளை வீட்டார் தர வேண்டும்.

ஆர்ஷம் (ஆர்ஷமென்ற சொல் ‘ரிஷி தொடர்புடைய’- என்று பொருள்) வகைத் திருமணங்களில் பெண்ணும் மாப்பிள்ளையும் ஒரு பசு, காளை இடையே நிற்பர். அந்த மாடுகளின் கொம்பும் குளம்பும் தங்கக் கவசத்தால் மூடப்பட்டிருக்கும் இந்த பசு—காளை மாடு போல என்றும் இன்பத்துடன் வாழுங்கள் என்று சொல்லி புனித நீர் அபிஷேகம் செய்வர்.

தெய்வம் வகைத் திருமணங்களில் அக்னி சாட்சியாகத் திருமணம் நடக்கும் (சிலப்பதிகாரத்தில் கண்ணகியும், ராமாயணத்தில் ராமனும் தீ வலம் வந்து மணம் முடித்ததைக் காணலாம்)

ஆசுரம் (அசுரர் போன்ற) வகைக் கல்யாணங்களில் வீரதீரச் செயல்கள் செய்வோருக்குப் பெண் கொடுப்பர். மஹா பாரதத்தில் இதைக் காணலாம். அர்ஜுனன் வில் வித்தையில் வென்று திரவுபதியை வெல்கிறான். யாதவ குல இளைஞர்கள் மஞ்சுவிரட்டு/ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்று பெண் பெறுவர். இது கலித்தொகையில் வருகிறது.

ராக்ஷசம் என்பது கடத்தல் திருமணம்; காந்தர்வம் என்பது காதல் திருமணம் (இது பற்றி நேற்றைய கட்டுரையில் ரிக் வேதம் முதல் புராணம் வரையுள்ள எடுத்துக்காட்டுகளைக் கொடுத்துள்ளேன். சம்ஸ்கிருத காவியங்களில் இதற்கு மேலும் பல எடுத்துக்காட்டுகள் உள).

அட்லி ப்ரியா

திருமண புகைப்படங்கள்

மணம் 1

பாரதம் முழுவதும் ஒரே நாகரீகம்

 

ஆரிய திராவிட வாதம் பேசும் அரை வேக்காடுகளுக்கு சூத்திரம் சூத்திரமாகத் தொல்காப்பியர் அடிமேல் அடி கொடுக்கிறார். ஒரே சூத்திரத்தில் தர்மார்த்த காம (மோக்ஷம்) பற்றிச் சொல்லிவிட்டு அதே மூச்சில் மனு ஸ்ம்ருதியில் உள்ள எண்வகைத் திருமணம் பற்றியும் சொல்கிறார்.

ஆரிய-திராவிட வாதத்துக்குச் சாவுமணி அடிக்கும் கீழ்கண்ட சங்க இலக்கிய விஷயங்களை எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இதுவரை எழுதியுள்ளேன்:-

1.வசிஷ்டர் மனைவி அருந்ததியே உலக மஹா கற்புக்கரசி

  1. ரிக் வேதத்தில் சொல்லியபடி கரிகாலனும் அதியமான் நெடுமான் அஞ்சியும் ஏழு அடி நடந்து சென்றே விருந்தினர்களை வழி அனுப்பினார்கள்
  2. கங்கை நதியும் இமய மலையும் புனிதமானவை. இமயத்தில் கல் எடுத்து கங்கையில் குளிப்பாட்டி கண்ணகிக்குச் சிலை எடுத்தான் செங்குட்டுவன்.
  3. அமிர்தம் என்பது கிடைத்தற்கரியது.(சங்க இலக்கியத்தில் மூன்று வகை ஸ்பெல்லிங் பயன்படுத்தி இந்தச் சொல்லை எழுதியுள்ளனர்)
  4. பருவங்கள் ஆறு
  5. படைகள் நான்கு வகை

7.கொடிகள், சின்னங்கள், வெண்குடை வைத்துக் கொள்வது (மஹாபாரத காலம் போலவே)

  1. ஜம்பு, சால்மலி என்பது போல தாவரங்களின் அடிப்படையில் நிலப் பாகுபாடு (குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை)

eagle-shaped-yagna-kunda

9.கரிகால் சோழன் பருந்து வடிவ யாக குண்டம் வைத்து வேள்வி செய்தது; சோழன் பெருநற்கிள்ளி, ராஜ சூய யாகம் செய்தது; பாண்டியன் பல்யாக சாலை முது குடுமிப் பெருவழுதி அஸ்வமேத யாகம் செய்தது

  1. பிராமணர்கள், நான்மறை (வேதம்) இரண்டுக்கும் மதிப்பு கொடுப்பது.

11.வாழ்க்கையின் லட்சியங்களை அறம், பொருள் இன்பம், வீடு (தர்மார்த்த காமமோக்ஷ) என்று பிரிப்பது

  1. தங்களை சூரிய சந்திர குலத் தோன்றல் என்று அழைத்துக் கொள்வது (புறநானூற்றில் பல இடங்களில் புறா- சிபி கதை)

13.சம்ஸ்கிருத மொழி அடிப்படையில் அகத்தியரைக் கொண்டு இலக்கணம் எழுதியது; அதில் பாணினியைப் பின்பற்றியது.

14.தொல்காப்பியத்தில் வேத கால இந்திரன், துர்க்கை, வருணனை தமிழர் தெய்வங்கள் என்று காட்டியது.சங்க இலக்கியம் முழுதும் சிவனையும் விஷ்ணுவையும் ராமனையும் கிருஷ்ணனையும் பலராமனையும் போற்றியது

15.அரசனைக் கடவுள் என்று போற்றுவது

16.போர் துவக்க துர்யோதனன் செய்தது போல ஆநிரை கவர்தல்

17.சாதகப் பரவை, கிரவுஞ்சப் பறவை, அன்னப் பறவை எடுத்துக் காட்டுகளை அப்படியே சங்க இலக்கியத்தில் புகுத்தியது

18.இறந்தோர்- தெற்குத் திசையில் (தென் புலத்தார்) வாழ்வது

  1. கணவனே கண்கண்ட தெய்வம் என்பது; மறு பிறப்பிலும் நீயே கண்வன் ஆக வேண்டும் என்பது

20.மறுபிறப்பு மற்றும் கர்ம வினைகள நம்புவது

21.ஆண் குழந்தை மூலம் ஈமக் கிரிய செய்து கரை கடப்பது

  1. வேதத்தில் உள்ள முப்பதுக்கும் மேலான பெண் தெய்வங்களை வழிபடுவது

23.சூரியன், சந்திரன் (பிறை) வழிபாடு

24.சோதிடம், சகுனங்களை நம்புவது

25.சம்ஸ்கிருதம் போலவே சந்தி (புணர்ச்சி) விதிகளை இன்று வரை பின்பற்றுவது; எட்டு வேற்றுமைகளை பின்பற்றுவது

26.சதி என்னும் உடன்கட்டை ஏறுவதைப் பின்பற்றியது

27.இறந்தோரை தகனம் செய்வது

28.திருமணத்தில் தாலி கட்டுவது, தீ வலம் வருவது

29.பேய்களை ஓட்ட வெண்கடுகு பயன்படுத்துவது

30.சுப காரியங்களுக்கு மஞ்சள் அரிசியும், அசுப காரியங்களுக்கு வெள்ளை அரிசியையும் பயன்படுத்துவது

31.நீரைப் பயன்படுத்திப் புனிதப்படுத்துவது.

32.போர் துவங்கும் முன் கழுத்தை வெட்டிக் கொண்டு உயிர் பலி கொடுப்பது (மஹாபாரதத்தில் அரவான்; தமிழில் நவகண்டம்)

33.இந்திர விழா கொண்டாடுவது

இது போன்ற நூற்றுக் கணக்கான சங்க இலக்கிய—வேத, இதிஹாச ஒற்றுமைகள், ஆரிய திராவிட வாதத்தை ‘சட்னி’-யாக்கிவிட்டன. ‘’புல்டோசர்’’ கொண்டு புழுதி ஆக்கிவிட்டது. இதை எனது ஆயிரத்துக்கும் மேலான கட்டுரைகளில் மேற்கோள் ஆதாரங்களுடன் விளக்கி இருக்கிறேன். ஆரிய திராவிட பொய்மை வாதத்துக்கு எதிராக தமிழர்கள் கொடுக்கும் செமை அடி இன்னும் நூற்றுக் கணக்கான கட்டுரைகளில் வரும். படித்து இன்புறுக.

ஏக பாரதம் வெல்க!! தமிழும் சம்ஸ்கிருதமும் வாழ்க, வாழ்க!!

முடிவுரை: சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம் (Sanskrit Nyayangal)

tamil muchu

Article written by S NAGARAJAN

Post No. 1788; Date 9th April 2015

Uploaded from London at 6-08 am

  1. முடிவுரை

.நாகராஜன்

 

தொன்று தொட்டு நம் நாட்டிற்கே உரித்தான சிறப்பியல்புகளில் ஒன்று நியாயங்களை எடுத்துக் காண்பித்து ஒரு நிலையை நடுநிலைமையுடன் அணுகுவது.

எனக்கு ஒரு நியாயம் சொல்லுங்க!

இது உங்களுக்கே நியாயமா படுதா?

இது எந்த வகை நியாயத்திலே சேர்த்தி?

இந்த அநியாயம் அடுக்காதப்பா!

கடவுள் உனக்கு ஒரு நியாயத்தைச் சொல்லுவார்!

நியாயமா நடந்து பார்த்துப் பிழை!

இப்படி அன்றாட வாழ்வில் இடம் பெறும் இது போன்ற வாக்கியங்களின் அடிநாதமாக இருப்பது பல்வேறு நியாயங்கள்.

அந்த நியாயங்கள் இன்று தொகுப்பாரின்றி விளக்குவாரின்றி அருகிக் கிடக்கின்றன.

அதைப் போக்கவே இந்த எளிய முயற்சி!

சுமார் 900 நியாயங்கள் இருப்பதாக பல்வேறு அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இன்னும் நுணுகி ஆராய்ந்தால் மேலும் பல நூறு நியாயங்கள் கிடைக்கக் கூடும்.

இவையெல்லாம் பல்வேறு பாஷ்யங்களில்விளக்கவுரைகளில்பல அரிய உண்மைகளை விளக்கும் போது சுட்டிக் காட்டப்படுகின்றன.

ஆழ்ந்த சம்ஸ்கிருத ஞானமும், பல் வேறு நூல்களில் உள்ளவற்றைக் கற்கும் ஆர்வமும், அதற்கான நேரமும் இருப்போருக்கு இந்த நியாயங்கள் எளிதில் பிடிபடும்.

இவற்றில் சிலவற்றையாவது தமிழில் தரவேண்டும் என நீண்ட காலமாக எண்ணி வந்துள்ளேன்.

tamil

அதன் அடிப்படையில் சுமார் 132 நியாயங்களை இது வரை பார்த்துள்ளோம்.

காலம் கனிந்து இறைவன் அருள் கைகூடுமானால் மேலும் பல நியாயங்களைத தமிழில்  அளிக்க முயல்வேன்.

சம்ஸ்கிருத செல்வம் முதல் பாகத்தில் சுபாஷிதங்கள் பலவற்றைப் பார்த்தோம்.

இந்த இரண்டாம் பாகத்தில் நியாயங்களைப் பார்த்துள்ளோம்.(ராமாயண வழிகாட்டியில் வால்மீகி ராமாயணத்தில் முக்கியமான சில ஸ்லோகங்களைப் பார்த்தோம்)

சம்ஸ்கிருதம் ஒரு பாற்கடல்.

சுவைக்கச் சுவைக்க அமிர்தம் தான்!

அமிர்தக் கடலில் நடுவிலும் கூட மூழ்கலாம்! ஏனெனில் அமிர்தக் கடலில் மூழ்கினால் மரணமே தான் கிடையாதே!

ஆகவே சம்ஸ்கிருதப் பாற்கடலில் இன்னும் சற்று மூழ்குவோம்.

அடுத்த பாகம் மலரும்விரைவில்!

அன்புடன்

.நாகராஜன்

snagarajans@gmail.com

சான்பிரான்ஸிஸ்கோ

நாள் : 31-3-2015

இதைப் பரப்புவோர் தயவு செய்து என் சகோதரர் திரு சுவாமிநாதனின் ப்ளாக் பெயரையும் கட்டுரையின் முழு வடிவத்தில் இதை ஆக்கியோன் பெயர் உள்ளிட்டவற்றை அப்படியே வெளியிடுமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி. வணக்கம்.

namaste2

72 Books!

I give below the 72 Books written by my brother S NAGARAJAN. He has written over 2000 articles to Tamil magazines and some blogs:–

 

கீழ்க்கண்ட 52 நூல்கள் நிலா பப்ளிஷர்ஸ், லண்டன் மூலம் மின்னணு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் National Library Board, Singapore- சிங்கப்பூர் தேசீய நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.

நூல்கள் பற்றிய விவரங்களை www.nilacharal.com இணையதளத்திலிருந்து பெறலாம்.

 

ஆங்கில நூல்

Breakthrough to Success

சுய முன்னேற்றம்

வெற்றிக்கலை

ஜோதிடம்

ஜோதிடம் உண்மையா?

ஜோதிட மேதைகளின் வரலாறு!

நவகிரகங்கள்

நட்சத்திர அதிசயங்களும் மர்மங்களும்!

திரைப்படம்

திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்

அதிரடி மன்னன் ஜாக்கிசான்

ஹா! ஹா!! ஹாலிவுட்!!!

உலகம்

உலகின் அதிசய இடங்கள்

அதீத புலனாற்றல்

அறிவுக்கும் அப்பால்

பிரமிட் மர்மங்களும், அதீத புலனாற்றல் அதிசயங்களும்

அதிசய பூமியில் ஓர் ஆனந்தப் பயணம்

பறக்கும் தட்டுகளும் அயல்கிரகவாசிகளும்

விந்தை மனிதர்கள்

மாயாலோகம்! (பாகம் 1)

மாயாலோகம்! (பாகம் 2)

மாயாலோகம்! (பாகம் 3)

வாழ்க்கை வரலாறு

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

டயானாவின் கதை

சரித்திர நாவல்

நாக நங்கை

விஜயதீபம்

அறிவியல் கேள்வி-பதில்

ஆஹா! அப்படியா!! (விஞ்ஞான கேள்வி பதில்கள்)

விலங்கியல்

விலங்கு உலகப் புதுமைகள்!

தொலைக்காட்சி

உலகின் பிரபல சின்னத்திரை சீரியல்கள்

ஆன்மீகம்

சேது தரிசனம் (ராமரின் சேது உண்மையா?)

அற்புத அவதாரம் சத்யசாயிபாபா (அம்ருத சாகரம் இணைப்பு)

திறன் கூட்டும் தியானம்

ஆன்மீக ரகசியங்கள்!

அறிவியல் வியக்கும் ஆன்மீகம்

அறிவியல் நோக்கில் ஆன்மீக அதிசயங்கள்

சிறுவர் புராணக் கதைகள்

புராணத் துளிகள்!

விஞ்ஞானத்தை வியக்க வைக்கும் மெய்ஞானம்!

அறிவியல்

விண்வெளியில் மனித சாதனைகள்! (பாகம் 1)

விண்வெளியில் மனித சாதனைகள்! (பாகம் 2)

விண்வெளியில் மனித சாதனைகள்! (பாகம் 3)

அறிவியல் துளிகள்! (பாகம் 1)

அறிவியல் துளிகள்! (பாகம் 2)

அறிவியல் அதிசயங்கள் (பாகம் 1)

அறிவியல் அதிசயங்கள் (பாகம் 2)

அறிவியல் அதிசயங்கள் (பாகம் 3)

அறிவியல் அதிசயங்கள் (பாகம் 4)

வானொலி உரைகள்

ஏன்? எப்படி? அறிவியல் புதுமைகள்

சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! (பாகம் 1)

சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! (பாகம் 2)

சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! (பாகம் 3)

வானொலி நாடகங்கள்

வருவார் காந்திஜி!

புதிர்கள்

மாயச்சதுரமும் கணிதப் புதிர்களும்

மொழி

ஆங்கிலம் அறிவோமா?

ஆரோக்கியம்

அனைவருக்கும் ஆரோக்கியம்! (பாகம் 1)

அனைவருக்கும் ஆரோக்கியம்! (பாகம் 2)

குறிப்பு:- மேற்கண்ட 52 நூல்களில் 17 நூல்கள் விநாயகா பதிப்பகம் ராயப்பேட்டை, சென்னை, உரிமையாளர், திரு சுவாமிநாதன் அவர்களால் அச்சிடப்பட்டு அச்சுப் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளன.

 

கீழ்க்கண்ட 15 நூல்கள் நிலா பப்ளிஷர்ஸ், லண்டன் மூலம் மின்னணு நூல்களாக வெளியிடப்படத் தயாராக உள்ளன.

அறிவியல்

அறிவியல் துளிகள்! (பாகம் 3)

அறிவியல் துளிகள்! (பாகம் 4)

அறிவியல் துளிகள்! (பாகம் 5)

அறிவியல் துளிகள்! (பாகம் 6)

பெண்ணியம்

ஆனந்தம் ஆரம்பமாக வழிகள்

மாறி வரும் பெண்கள் உலகம்

ஆன்மீகம்

அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா!

புராணத் துளிகள் பாகம் 2

சம்ஸ்கிருதச் செல்வம் பாகம் 1

(சுபாஷித ஸ்லோகங்களின் தொகுப்பு)

ராமாயண வழிகாட்டி பாகம் 1

ஸ்வர்ண லோகம் பாகம் 1

பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!!

ஆரோக்கியம்

அனைவருக்கும் ஆரோக்கியம் பாகம் 3

வானொலி உரைகள்

சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் 4

உலகம்

இன்றைய பார்வையில் சில உலக நாடுகள்

கீழ்க்கண்ட 5 நூல்கள் முடிக்கப்பட்டுள்ளன. மின்னணு நூல்களாக ஆக்கம் செய்யப்படத் தயாராக உள்ளன.

அறிவியல் துளிகள்! (பாகம் 7)

அறிவியல் துளிகள்! (பாகம் 8)

சம்ஸ்கிருதச் செல்வம் பாகம் 2

(நியாயங்கள் பற்றிய தொகுப்பு)

தமிழ் என்னும் விந்தை பாகம் 1

முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்காதீர்கள்!

(சுய முன்னேற்ற நூல் – ஆங்கில நூலின் தமிழாக்கம்)

If you want to buy them, please contact the publishers. You can continue reading his new articles in this blog free of cost—London swaminathan.

(Pictures are taken from different sources;thanks for the pictures)

Poetess and Historian Gangadevi!

madura vijayam

Written by London swaminathan

Research article No. 1787; Date 8th April 2015

Uploaded from London at   21-44

Gangadevi and her Sanskrit poetic work Madura Vijayam have made immense contribution to South Indian History.

Gangadevi was the chief queen of Kumara Kampana II (1343—1379). She accompanied her husband in his southern expedition. Though Kampana had many wives like other Indian kings, Gangadevi was the chief consort.

Gangadevi wrote Madura Vijayam in Sanskrit poetry. The book was brought to light by G.Harihara Sastri and V Srinivasa Sastri of Trivandrum in 1916. S Thiruvankatachary translated into English and Annamalai University published it in 1957. He commented on her poetic merits in the following words, “Being a biographer first and then only a poet, her literary borrowings do not affect the work in any way.”

MapofMadurai

Gangadevi was a learned person. She mentions and pays homage to the ancient poets like Kalidasa, Bhattabana, Bharavi, Bhavabhuti, Dandin along with Valmiki and Vyasa. She gives some interesting information about Agastya. She described him as the author of 74 poetic compositions. She praises Agastya’s nephew Gangadhara, who dramatized the story of Mahabharata. She acknowledges Viswanatha, one of the two sons of Gangadhara, and his influence on her as a guru.

When Kampana invaded South India, it was under Madurai Sultanate. Malik Kafur attacked Madurai in 1311 CE. He just plundered all the temples and went back to Delhi. The second invasion took place under Ghiyasuddin Tughlak and he established Madurai Sultanate. From 1335 to 1371, Madurai suffered a lot. The temple was closed for nearly forty years. Madura Vjaya described the appalling condition of Hindus during that period. Though Hoysala ruler Veera Vallala tried to dislodge the Sultan he was killed in the war. Kampana came with a big army and killed Madurai Sultan Qurbat Hasan Kangu.

Gangadevi gave minute details of her husband’s expedition and the condition of Madurai. Her report was like a modern day war correspondent in the warfront. Even now women rarely go to war fronts to cover the attacks. But Gangadevi did it 700 years ago! Publishers of Madura Vijayam praised her as the first historian of South India like Kalhana of Rajatarangini in North India.

East-Hem in 1400 AD

Chidambaram = Abode of Tigers!

Gangadevi described the political and religious conditions in such a way that the descriptions looks like a faithful portrait of  the real state of affairs in those days. The famous Saivite temple town Chidambaram is called Vyagrapuri (Tiger town). She described the condition, “As a result of the tyrannical rule of Muslims, Vyagrapuri has actually become the Abode of Tigers”. It is a pun on the word Vyagra=Tiger.

It is believed that Kampana got a divine sword from the goddess before invading Madurai. It is in the Madura Vijayam. There are nine chapters. Earlier chapters describe the life of Kampana and later chapters describe his victorious march to Madura. His victory sounded the death knell to Muslim Rule in Madurai.

Source: Madura Vijayam and Kingship: State and Religion in South India by D Sridhara Babu.

இந்து மதத்தில் காதல், கடத்தல் கல்யாணங்கள்!!

rukmini2

ருக்மிணியை   கிருஷ்ணர் கடத்திச் செல்லும் படம்

Written by London swaminathan

Research article No. 1786; Date 8th April 2015

Uploaded from London at   காலை 9-32

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக்கூட்டம் காணுங்காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே.

-தொல்.பொருளதிகாம்– 1038

இந்துமதம் ஒரு அழகான மதம். அதில் காதல்,கடத்தல் திருமணங்களும் உண்டு. மொத்தம் எட்டு வகையான திருமணங்களை மனு நீதி நூல் குறிப்பிடுகிறது. வேதகாலம் முதல் இதிஹாச புராண காலம் வரை இந்த எட்டு வகை மணங்களும் இருந்தன. இதில் இன்னும் ஒரு சுவையான விஷயம் தமிழில் மிகப் பழைய நூலான தொல்காப்பியமும் இதைக் குறிப்பிடுகிறது. அடுத்த வரியிலேயே அறம் பொருள் இன்பம் (தர்ம, அர்த்த, காமம்) என்பதையும் குறிப்பிடுகிறது. இமயம் முதல் குமரி வரை ஒரே தர்மம் இருந்தது என்பதை தொல்காப்பியர் முடிந்த இடங்களில் எல்லாம் சொல்லிக்கொண்டே போகிறார். நிற்க.

1.உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் விமதா என்பவன் புருமித்ர என்பவரின் மகளான காமத்யுவைக் கடத்திச் சென்று கல்யாணம் செய்து கொண்டதைப் பாடி வைத்துள்ளனர் முற்கால ரிஷிகள் ( ரிக் வேதம் 1-112-19, 1-116-1; 1-117-20; 10-39-7; 10-65-12).

2.கிருஷ்ண பரமாத்மா, அவர் மீது காதல் கொண்ட ருக்மிணியைக் கடத்திச் சென்று கல்யாணம் முடித்தார்.

3.கிருஷ்ணரின் தங்கை சுபத்ராவை அர்ஜுனன் கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்ள கிருஷ்ணரே உதவினார்.

4.மஹாபாரதத்தில் பீஷ்மர், காசிராஜனின் புதல்விகளான அம்பா, அம்பிகா, அம்பாலிகா அக்கிய மூவரையும் கடத்திச் சென்று இருவரை விசித்ரவீர்யனுக்கு மணம் முடித்தார்.

bhishma-amba-ambika-ambalika-300x225

அம்பா, அம்பிகா, அம்பாலிகா ஆகிய மூவரையும் பீஷ்மர் கடத்தும் காட்சி

அந்தக் காலத்தில் காதல், கடத்தல் பற்றிய பல சுவையான விஷயங்களை இந்தக் கதைகள் சொல்லுகின்றன. புராணங்கள் பொய்க்கதைகள் அல்ல, அக்கால உண்மைச் சம்பவங்களை அப்படியே சொன்னவை என்பதற்கு இவை எடுத்துக் காட்டுகள்.

கடத்தல் திருமணங்களை ராக்ஷச வகைத் திருமணங்கள் என்பர்.

ருக்மிணியின் தந்தையான ருக்மி, தன் புதல்வியை சிசுபாலனுக்கே கொடுக்க வேண்டும் என்று எண்ணி இருந்தார். ஆனால் அவளுக்கு கண்ணன் மீது காதல். ஆகையால் அவர் கடத்திச் சென்றார். இதனால் சிசுபாலனுக்கும், கண்ணனுக்கும் ஜென்மப் பகை ஏற்பட்டது.

சுபத்ராவை துர்யோதணனுக்குக் கொடுக்க வேண்டும் என்று பலராமன் எண்ணினார். அது அவருடைய தம்பியான கண்ணனுக்குப் பிடிக்கவில்லை. ஆகையால் அர்ஜுனனை ஒர் பிராமணன் போல வேஷம் போட்டு பல நாட்களுக்கு அரண்மனையில் தங்க வைத்தார். பின்னர் சுபத்ராவைக் கடத்திச் செல்ல உதவியும் செய்தார். அர்ஜுனன் போன்ற ஒரு வீரனை வேண்டாம் என்று சொல்ல எந்தப் பெண்ணும் துணிய மாட்டாள். ஆனால் இது கிருஷணருக்கும் பலராமனுக்கும் இடையே உரசலை உண்டாக்கியது.மஹாபாரதப் போரில் எந்தப் பக்கமும் சேர மாட்டேன் என்று சொல்லி பலராமன் தீர்த்த யாத்திரைக்குப் போய்விட்டார்.

subhadra

சுபத்திரையை அர்ஜுனன் கடத்தும் படம்

அம்பா, அம்பிகா, அம்பாலிகா ஆகிய மூன்று பேரழகிகளை நித்திய பிரம்மச்சாரியான பீஷ்மர் கடத்திச் சென்றார்.எதற்காக? பாண்டு வம்சம் தழைக்க வேண்டும் என்று வளர்ப்புத் தாயார் சத்தியவதி சொன்னதால். ஆனால் மூவரில் அம்பா என்ற பெண், “நான் ஏற்கனவே ஷால்வ மன்னரைக்  காதலிக்கிறேன்” என்றாள். உடனே பீஷ்மர் அவளை விடுவித்து, “போய் வா மகளே” என்றார். ஆனால் ஷால்வ மன்னனோ “பிச்சை கேட்டுப் பெண் எடுப்பவன் நான் அல்ல, போய் விடு” என்று அவளை அனுப்பி வைத்தான். இதனால் வெகுண்டெழுந்த அம்பா, பீஷ்மருக்கு கடும் சாபம் போட்டாள்.

“பெண் சாபம் பொல்லாதது. குடும்பத்தையே வேரோடு அழிக்கும்” — என்று மனு தனது நீதி நூலில் எச்சரித்தது சரியாகப் போயிற்று. “பெண்கள் எங்கு மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களோ அங்கேதான் தெய்வங்கள் வாழும்” — என்று மனு ஒரு ஸ்லோகத்தில் திட்டவட்டமாகச் சொன்னது ஏன் என்று புரிகிறது.

மிக வியப்பான விஷயம் நாம் சினிமாக்கதைகளில் பார்ப்பது போலவே அந்தக் காலத்திலும் நடந்திருக்கிறது. நமது சமய நூல்கள் பல நீதிகளைப் புகட்ட இந்த உண்மைக் கதைகளை அப்படியே உள்ளதை உள்ளவாறு இயம்பின. காதலும், கடத்தலும் இப்படி வாழ்நாள் முழுதும் ரணங்களை, தீராத பகையை உண்டாக்கும் என்பதையும் இவை தெள்ளிதின் விளக்கும்.

rukmini

எட்டு வகைத் திருமணங்கள்

மனு ஸ்மிருதியில் மூன்றாவது அத்தியாயத்தில் 20 ஆவது ஸ்லோகம் முதல் எட்டு வகைத் திருமணங்களை விளக்குகிறார். அபிதான சிந்தாமணி என்னும் தமிழ் என்சைக்ளோபீடியாவில் சிங்காரவேலு முதலியார் இவைகளை விரிவாக அளித்துள்ளார். ஆயினும் 700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் என்னும் புகழ்பெற்ற தமிழ்ப் பார்ப்பன உரைகாரர் எழுதிய தொல்காப்பிய உரையில் முழு விவரங்களையும் தருகிறார்.

1).பிராம்மம், 2).தெய்வம், 3).ஆருஷம், 4).பிராஜாபத்யம், 5).ஆசுரம், 6).காந்தர்வம், 7).இராக்ஷசம், 8).பைசாசம் — என்ற எட்டுவகை திருமணம் பற்றி பல சுவையான விஷயங்கள் உள்ளன. இக் கட்டுரையின் தொடர்ச்சியில்  — இரண்டாவது பகுதியில் — எட்டு வகைத் திருமணங்கள் பற்றிய முழு விவரங்களையும் காண்போம்.

விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா?

Mango-Tree

மரத்தில் மாம்பழங்கள்

Article written by S NAGARAJAN

Post No. 1785; Date 8th April 2015

Uploaded from London at 8-21 am

 

சம்ஸ்கிருதச் செல்வம்இரண்டாம் பாகம்

29. விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா?

.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் இறுதி அத்தியாயத்திற்கு வந்து விட்டோம். மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

फलवत्सहकारन्यायः

phalavatsahakara nyayah

பலவத்ஸஹகார நியாயம்

பழுத்துக் குலுங்கும் பழங்களுடன் கூடிய ஒரு மாமரம் பற்றிய நியாயம் இது.

மாம்பழங்கள் பழுத்துக் குலுங்க இருக்கும் ஒரு மாமரத்தின் நிழலில் ஒருவன் தங்கினால் நிழல் மட்டுமா அவனுக்குக் கிடைக்கும். கூடவே பசியாற மாம்பழங்களும் கூடவே கிடைக்கும் அல்லவா! அது போல நிஜமான ஒரு பெரிய மனிதரை அண்டினால், கேட்காமலேயே அறிவு உட்பட அனைத்தும் அல்லவா கிடைக்கும்!

Bael tree

வில்வ மரம்; வில்வம் பழம்

बिल्वखल्वाटन्यायः

bilvakhalvata nyayah

பில்வ கல்வாட நியாயம்

வில்வ மரத்தின் அடியில் அமர்ந்த ஒரு வழுக்கைத் தலையர் பற்றிய நியாயம் இது. இதற்கான கதை ஒன்று உண்டு. ஒரு வழுக்கைத் தலையர் வில்வ மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார். அப்போது வில்வப் பழம் ஒன்று அவர் தலை மீது விழ, அவர் மண்டை உடைபட்டது. அது தற்செயலாக நடந்து விட்ட ஒன்று. இப்படித் தற்செயலாக நடக்கும் சம்பவங்களைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் பயன்படுகிறது.

newton apple

बीजांकुरन्यायः

bijankura nyayah

பீஜாங்குர நியாயம்

பீஜம்விதை

விதையும் முளையும் பற்றிய நியாயம் இது.

விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா என்பது பழமொழி.

எது விதைத்தாயோ அதைத் தான் அறுவடை செய்ய முடியும் என்பது வழக்கமாகச் சொல்லப்படும் ஒரு உண்மை. விதைப்பது தான் முளைப்பதற்கு காரணம். முளைத்து வருவதிலிருந்தே மீண்டும் விதை உருவாகிறது. இப்படி காரணமும் காரியமும் ஒன்றையொன்று பற்றி இருப்பதைக் காட்ட இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படுகிறது.

Germination20of20seeds

விதையும் முளையும்

भुलिन्गपक्षिन्यायः

bhulingapaksi nyayah

பூலிங்க பக்ஷி நியாயம்

பூலிங்கம் என்ற பறவை பற்றிய நியாயம் இது.

பூலிங்கம் என்ற அபூர்வமான பறவை ஒன்று எப்போதும்மா சாஹஸம்” – சாகஸ செயல்களில் ஈடுபடாதேஎன்று சொல்லிக் கொண்டே இருக்கும். ஆனால் அது எப்போதும் தான் சாகஸ செயல்களில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கும். சிங்கத்தின் வாயில் புகுந்து அங்கிருக்கும் மாமிசத் துணுக்குகளை தனக்கு உணவாக அது எடுத்துக் கொண்டு வரும்!

அசாதாரணமான சாகஸங்களைச் செய்வோர் பற்றி இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

bhulinga

(‘மஹாபாரதத்தில் பூலிங்கப் பறவை’, ‘கலியுக    அறிகுறிகள்: குருமார்கள் குலிங்கப் பக்ஷி…. ‘என்ற இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளில் முழு விவரம் காண்க)

भ्रमरन्यायः

bhramara nyayah

ப்ரமர நியாயம்

ப்ரமரம்கருவண்டு

கருவண்டு பற்றிய நியாயம் இது.

கருவண்டு எப்போதும் மலர்களில் உள்ள தேனையே அருந்தும். வேறு எந்த வித சாறையும், அது எவ்வளவு இனிமையாக இருந்தாலும் அருந்தாது.

ஒரு பெரிய மனிதர் எப்போதும் மற்றவரின் நல்ல குணங்களையே எடுத்துக் கொள்வார். கெட்ட குணங்களைப் பெரிது படுத்த மாட்டார்.

அப்படிப்பட்ட அரும் மனிதர்களைச் சுட்டிக் காட்ட ப்ரமர நியாயம் பயன்படும்.

இத்துடன் இந்த நியாய வரிசைத் தொடர் தற்போதைக்கு நிறைவு பெறுகிறது. வாய்ப்பு கிடைக்கும் போது மேலும் பல நியாயங்களை அறியலாம்.

PollenBeetles435

பூவில் வண்டுகள்

நாளை முடிவுரை வெளியாகும்.

****************       முற்றும்

 

Marriage by abducting Girls in Ancient India!

subhadra

Subhadra’s abduction by Arjuna

Written by London swaminathan

Research article No. 1784; Date 7th April 2015

Uploaded from London at   21-40

Taking a woman away by force and marrying her is called “Rakshasa type of marriage”. It is listed as one of the eight approved types in the Hindu law books. This started during Rig Vedic (before 1700 BCE) days.

In the epics and Puranas and also in the Prakrit and Sanskrit literature, we have numerous instances of forcible abductions but the Vedic references of such cases are very few.

1.The Rig Veda (1-112-19, 1-116-1; 1-117-20; 10-39-7; 10-65-12) contains a few references to Vimada who carried off Purumitra’s daughter Kamadyu against her father’s will, but probably with her own consent.

2.Lord Krishna abducted Rukmini and married her.

3.Bhisma abducted Amba, Ambika, Ambalika (daughters of King of Kasi)  and married two of them to Vichitravirya.

4.Arjuna abducted Subhadra, Krishna’s sister, with the connivance of Krishna and married her.

bhishma-amba-ambika-ambalika-300x225

Bhisma’s abduction of Amba, Amabika, Amabalika

In Rukmini’s case her father Rukmi wanted to give her to Sishupala. But Rukmini liked Krishna.

In the case of Subhadra, Balarama wanted to give her to Duryodhana, but Krishna opposed it and helped Arjuna to abduct her. Subhadra liked Arjuna.

In the case of Amba, she told Bhisma that she had already fallen in love with King Shalva. When Bhisma sent her back to Shalva, he refused to accept her. She cursed Bhisma for the failure.

In the case of Ravana, he abducted Sita who is another man’s wife. Though the scriptures accepted abduction marriage (Rakshasa Vivaha) as one of the eight approved types, it never accepted abduction of married women/another man’s wife.

Asvalayana Grhya Sutra and most of the Dharma Sutras have given recognition to this form of marriage. The Baudhayana Dharma Sutra (4-1-15-16) clearly states that “if a damsel has been abducted by force and not has been wedded according to sacred texts, she is to be treated like a maiden and may be lawfully married to another man”.

rukmini2

Rukmini’s abduction by Krishna

Oldest Tamil book Tolkappiyam refers to eight types of marriages which is already said by Manu and other Hindu law books/smrtis. Most famous Tamil commentator Nachinarkiniyar explained them in detail. This gives another blow to the Aryan – Dravidian fake theory. I have already given scores of Tamil customs similar to the ones referred to in the ancient Hindu smrtis.

(1. Performing Rajasuya Yajna, Asvamedha Yajna by Tamil Kings, 2.Worship of Indra and Varuna, Shiva, Vishnu, Durga, Krishna, Balarama in Sangam literature, 3.Four divisions of army, 4.Six divisions of seasons, 5.Four Purusharthas: Dharmartha kamamoksha; 6.Praising Arundhati as the chastest woman; 7.Flags and White umbrella; 8.Sacrificing a human being before the war, 9.Capturing the cattle to start a war; 10.King as God; 11.Praying to Southerners/departed souls; 12.Wishing for a male child to do funeral rites; 13.Cremation, 14.Respecting Brahmins and the Four Vedas; 15.Belief in Karma Theory; 16Belief in Rebirth; 17.Wife respecting husband; 18.Godddess Worship; 19.Worship of sun and moon, 20.Belief in astrology, omens and umpteen other things in the oldest part of Tamil literature bulldozes the Aryan Dravidian theory. 21.Tamil and Sanskrit came from the same source and branched out before 3000 years; both following Sandhi rules until today; Agastya codifying Tamil grammar based on Panini’s Ashtadhyayee; 22.Worshipping nature 23.Using the same alphabet in same order 24.Using Brahmi script 25.Practice of ‘Sati’ etc are given in this blog. These things, not only ridiculed the supporters of Arya- Dravidian Racist theory, but also powdered their theory into dust).

Eight Types of Marriages in Tolkappiyam (Sutra 1038- Porul Adhikaram) and Manu Smrti (3-21)

1.Brahmam

Marriage between a man and a woman according to rules in the scriptures. This is a marriage between a 48 year old man and a 12 year old girl. The man remained a bachelor for 48 years for studying the Vedas and other allied subjects.

2.Prajapatyam (Prajapathi Type)

Giving away the daughter in marriage with double the dowry as given by the bridegroom’s party.

3.Arsam (Rishi Type)

Offering in marriage of a girl decked in jewels to a suitable person. Both the bride and the bridegroom are made to stand between a cow and an ox whose horns and hoof are plated with gold and they are blessed to live in joy like cow and ox. Holy water is poured as a symbol of giving away the daughter.

rukmini

4.Daivam (Divine)

This means the offer of a girl in marriage to the suitable one among those who do the noble sacrifice or yagam  in the presence of fire/agni.

5.Asuram (demonic)

The marriage of valour where a man marries one after proving his manliness by subduing a wild ox, shooting a wandering hog by an arrow or by proving his skill in archery.

6.Rakshasam (demonic)

This means a forced marriage where a person carries away a maid by force without the consent of the woman or her parents

7.Paisasam (ogre Type)

This means the act of union with the old, drunkards or the sleeping ones; also it refers to marrying a woman leading a disgraceful life.

8.Gandharva (Love Marriage; Western Type)

This means a man and a woman falling in love at first sight and then getting married just like the heavenly Gandharvas ( The word Centaurs came from the gandarva)

abduction of Helen

Helen of Troy abduction by Paris

Sources :

A Cultural Index to Vedic Literature

Who is Who in Mahabharata

Manu Smrti (Third Chapter from 3-20 onwards)

Tolkappiam (Tamil Grammar)

Abidana Chintamani (Pages 1240-1243)

பாணினி மாஜிக்!! Panini Magic!!

panini better

Compiled by London swaminathan

Post No. 1783; Date 7th April 2015

Uploaded from London at   8-58 am

பாணினியை ஏன் உலகமே புகழ்கிறது? அவர் அப்படி என்ன செய்தார்?

பாணினி கி.மு ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தார். அதாவது இற்றைக்கு 2700 ஆண்டுகளுக்கு முன் இப்பொழுது பாகிஸ்தானில் உள்ள ஒரு ஊரில் பிறந்தார். சம்ஸ்கிருதத்துக்கு இலக்கணம் செய்தார். அவருக்கு முன்னரும் அந்த மொழி இருந்தது. அவரே நிறைய இலக்கண வித்தகர்களின் பெயர்களைப் பட்டியல் இடுகிறார். ஆனால் இவர் செய்த புதுமை ஒரு கன கச்சிதமான இலக்கணம் எழுதியது ஆகும். அவர் செய்த ஒவ்வொரு புதுமையையும் விளக்க அல்லது விளங்கிக் கொள்ள நமக்கு சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும்.

பின்னர் எப்படி அவர் பெருமையை உணர்வது?

பாரதியார் பாட்டில் படிக்கிறோம்:

நம்பருந்திறலோடொரு பாணினி

ஞால மீதில் இலக்கணம் கண்டதும்…..

 

உலகில் யாரும் நம்பமுடியாத திறமையுடன் இலக்கணம் செய்தார் என்கிறார் நம்முடைய மதிப்பைப் பெற்ற பாரதியார்.அவரோ காசியில் சம்ஸ்கிருதம் கற்றவர்.

அது சரி, ஒரு எடுத்துக்காட்டாவது காட்ட முடியுமா?

பாணினி எழுதிய புத்தகத்தின் பெயர் அஷ்டாத்யாயி (அஷ்ட அத்யாயங்கள் = எட்டு பகுதிகள்). அதில் முதலாவது மஹேஸ்வர சூத்திரம் என்று இருக்கிறது– சிலர் இதை பாணினி புத்தகத்தில் இருந்து வேறாகவும் கருதுவர். ஆனால் 2700 ஆண்டுகளாக வழங்கும் கதை என்ன வென்றால், சிவபெருமான் உடுக்கை அடித்து ஆடியபோது அந்த ஒலியில் இருந்து எழுந்த 14 சூத்திரங்களே இவை. இதை அவர் தனது புத்தகத்தில் பயன்படுத்தியதில் இருந்து இதற்கும் அவருக்கும் உள்ள தொடர்பு தெள்ளிதின் விளங்கும்.

panini fdc

சில எடுத்துக் காட்டுகளைக் காண்போம்:

14 சூத்திரங்கள்:

அ இ உண்

ருலுக்

ஏ ஓங்

ஐ ஔச்

ஹயவரட்

லண்

ஞம ஙணநம்

ஜபஞ்

கடத ஷ்

ஜபகடதஸ்

க ப ச ட த சடதவ்

கபய்

சஷஸர்

ஹல்

–“இதி மாஹேஸ்வராணி சூத்ராணி”.

இவைதான் அவருடைய உடுக்கையில் இருந்து எழுந்த ஒலிகள்.

சம்ஸ்கிருதத்தில் உள்ள எல்லா எழுத்துக்களும் இதில் உள. ஒவ்வொரு சூத்திரத்தின் கடைசியிலும் உள்ள எழுத்து புள்ளிவைத்த மெய் எழுத்து. அது அடையாளத்துக்காக உள்ளது. விதிகளைப் பயன்படுத்தும்போது, அதைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது – அதாவது அது உப்புக்குச் சப்பை ஊருக்கு மாங்கொட்டை.

ஒரு எடுத்துக் காட்டு:—

உயிர் எழுத்துக்கள் சம்பந்தமான ஒரு விதியைச் சொல்ல வேண்டுமானால் “அச்” என்று சொன்னால் போதும். மேலே உள்ள சூத்திரத்தில் “அ” என்பது முதல் எழுத்து; பின்னர். நாலாவது சூத்திரத்தில் “ச்” என்று முடிகிறது. அ – முதல் ச் – வரையுள்ள எழுத்துக்கள் எல்லாம் உயிர் எழுத்துக்கள். முன்னர் சொன்னது போல ஒவ்வொரு சூத்திரத்தின் கடைசியில் உள்ள புள்ளி வைத்த எழுத்துக்களை ( ச் ) மறந்துவிடுங்கள்.

விடை:–

அ இ உ ((ண்))

ருலு  ((க்))

ஏ ஓ ((ங்))

ஐ ஔ ((ச்)),

உயிர் எழுத்துக்கள் (Vowels) அ, இ, உ, ரு, லு, ஏ, ஓ, ஐ, ஔ

Panini,_

இன்னொரு விதியும் இதில் அடக்கம். அது என்ன?

ஒரு குறில் எழுத்தைச் சொன்னால் அது தொடர்பான நெடிலும் அடக்கம். அ என்றால் ஆ, இ என்றால் ஈ, உ என்றால் ஊ என்று சேர்த்துக்கொண்டே போக வேண்டும்.

அட, இது என்ன பிரமாதம்? “அச்” என்று சொல்லுவதற்கு பதில் தமிழில் உள்ளது போல “உயிர் எழுத்து” என்று சொல்லி விடலாமே. இதற்காகவா, பாணினியைப் புகழ்கிறார்கள்? என்று கேட்கலாம்.

இதே போல “ஹல்: என்றால் அது மெய் எழுத்துக்கள் எல்லாவற்றையும் குறிக்கும். ஐந்தாவது சூத்திரத்தில் ஹ என்னும் எழுத்தில் சூத்திரம் துவங்கி 14-ஆவது சூத்திரத்தில் “ல்” என்ற எழுத்தில் முடிகிறது. அது வரை உள்ள எழுத்துக்கள் எல்லாம் மெய் எழுத்துக்கள் (Consonants) — (ஒவ்வொரு சூத்திரத்தின் கடைசியில் உள்ள புள்ளி வைத்த எழுத்துக்களை மறந்துவிடுங்கள்).

அட, இது என்ன பிரமாதம், “ஹல்” என்று சொல்லுவதற்குப் பதிலாக ‘மெய் எழுத்துக்கள்’ என்று சொன்னால் என்ன பெரிய வித்தியாசம் ஏற்பட்டுவிடும்? என்று நீங்கள் கேட்கலாம். உண்மையில் மெய் எழுத்து, உயிர் எழுத்து என்பதற்கு மட்டும் இன்றி, எந்த இரண்டு எழுத்துக்கள் இடையேயும் உள்ள எழுத்துக்களை இப்படி எடுத்துக் கொண்டு விதி செய்யலாம். சம்ஸ்கிருதத்தில் சந்தி விதிகளை விளக்க இப்படிப் பல சூத்திரங்கள் தேவைப்படுகின்றன.

இந்த 14 சூத்திரங்களை வைத்து 281 ‘காம்பினேஷன்’ போடலாம் என்று அறிஞர்கள் சொல்லுவர்!  இதனால் இதை பிரத்தியாஹார சூத்திரம் என்றும் சொல்லுவர். பிரத்தியாஹாரம் என்றால் முன்னர் குறிப்பிட்ட “அச்”, “ஹல்” போன்ற கூட்டு எழுத்துக்கள் (காம்பினேஷன்) ஆகும். சிவ அல்லது மாஹேஸ்வர சூத்திரங்களில் உள்ள எழுத்துக்களைப் பயன்படுத்தி 44 பிரத்தியாஹார சூத்திரங்களை பாணினி பயன்படுத்தியுள்ளார்.

இப்படி அவர் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் இதுபோன்ற புத்திசாலித்தனமான உத்தியைப் பயன்படுத்தினால் இவ்வளவு பாராட்டி இருக்க மாட்டார்கள். சம்ஸ்கிருதம் என்ற மொழியே, முழுக்க முழுக்க இப்படி சில விஞ்ஞானபூர்வ விதிகளின் மேல் அமைந்துளது. அதாவது வேர்ச் சொற்களைத் தெரிந்து கொண்டு விட்டால், அகராதியே இல்லாமல் அர்த்தங்களைத் தெரிந்து கொள்ளலாம். நாமும் புதிய சொற்களை உண்டாக்கலாம். ஒரு வேர்ச் சொல்லுக்கு முன் ஒரு முன்னொட்டு (prefix) அல்லது வேர்ச் சொல்லுக்குப் பின்னர் ஒரு பின் ஒட்டைச் (Suffix) சேர்த்துக் கொண்டால் அர்த்தம் மாறிக்கொண்டே போகும்.

ஆங்கிலத்தில் வண்ணங்களைக் (Colours)  குறிக்க ஏராளமான சொற்கள் உண்டு. பெயிண்ட் விற்கும் கடைக்குப் போய் கேடலாக்- கை (Catalogue) வாங்கிப் பார்த்தால் இவ்வளவு வகையான கலர்கள் உண்டா என்று வியப்பீர்கள். உண்மையில் உலகில் மூன்றே வர்ணங்கள்தான் உண்டு. சிவப்பு, நீலம், மஞ்சள் — இவைகளை வெவ்வேறு விகிதத்தில் கலக்க கலக்கப் புதுப் புது வர்ணங்கள் கிடைக்கும். அதில் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு ஆங்கிலப் பெயர். (Different shades of colours). இதே போல சம்ஸ்கிருதத்தில் ஒரு வேர்ச் சொல்லை எடுத்துக் கொண்டு முன்னொட்டு, பின்னொட்டுகளைச் சேர்த்து அர்த்தத்தை மாற்றிக் கொண்டே போகலாம். உலகில் சம்ஸ்கிருதத்தில் இருந்து தோன்றிய மொழிகளில் இதைக் காணலாம். ஆயினும் சம்ஸ்கிருதத்தில் இன்றும் அதற்கான இலக்கணம் உள்ளது. ஒரு நூறு, இரு நூறு ஆண்டுகளுக்கு முன் வரை சம்ஸ்கிருதத்தில் துதிகள் எழுதப்பட்டுள்ளன. அவைகளும் இதே விதியைத் தான் பயன்படுத்தின.

பாணினியைப் பயிலப் பயில, சம்ஸ்கிருத அமைப்பைப் பார்க்கப் பார்க்க, வியப்பு மேலே மேலே வந்து கொண்டே இருக்கும். தமிழர்களாகிய நாம் சந்தோஷப் படவேண்டிய விஷயம் நம் முன்னோர்கள் காழ்ப்பு உணர்ச்சி எதுவுமின்றி சங்க காலம் முதல் சம்ஸ்கிருதத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். சம்ஸ்கிருதம் இல்லாமல் எந்த இந்தியனும் எந்த இந்திய மொழியையும் பேசவே முடியாது! —- இருதயம், மனம், காமம், நீலம் – இது போன்ற நூற்றுக் கணக்கான சம்ஸ்கிருதச் சொற்களை நாம் ஒவ்வொரு நிமிடமும் பயன்படுத்தி வருகிறோம். தமிழர்கள் பெயர்கள் பலவும், உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் உள்ள சொற்கள்!!!

ஒரே ஒரு எடுத்துக் காட்டு:– யார் யார் பெயர்களில் எல்லாம் ராஜா, இந்திரன், சரஸ்வதி, பாரதி, சோம, சூர்ய, ஆதித்ய, கருணா, நிதி, கீர்த்தி, வீர,மணி, தாச,க்ருஷ்ண, சாந்தி முதலியன வருகின்றனவோ அவை எல்லாம் ரிக்வேதத்தில் உள்ள சொற்கள் என்பதை அறிக.

தமிழுக்கு மிக,மிக, மிக நெருக்கமான மொழி சம்ஸ்கிருதம். இந்த அளவு நெருக்கத்துக்கு வேறு எந்த மொழியும் தமிழுக்கு பக்கத்தில் வரவே முடியாது. கன்னடம், தெலுங்கு, மலையாளம் இருக்கிறதே என்று சொல்லாதீர்கள். அவை எல்லாம் தமிழின் சஹோதர மொழிகள். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்.

-சுபம்-