நையாண்டிப் பாடல்கள் – சம்ஸ்கிருதத்தில்!

IMG_1625 (2)

DONT REBLOG IT AT LEAST FOR A WEEK. DONT USE PICTURES.

Compiled by S NAGARAJAN

Date: 16th September 2015

Post No: 2162

Time uploaded in London :– 8-20 am

(Thanks for the pictures) 

 

 .நாகராஜன்   நீலகண்ட தீக்ஷிதரின் கலி விடம்பனா பாடல்களில் நையாண்டிப் பாடல்கள் தனி ரகம். அதைப் பாட தனித் திறமை வேண்டும். கூடவே தைரியமும் வேண்டும்.ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரமும் பேச்சு சுதந்திரமும் அபரிமிதமாக இருக்கும் போது இப்படிப்பட்ட பாடல்களை இயற்றுவது சுலபமான விஷயம்.ஆனால் பழைய கால மன்னர் ஆட்சியில் இப்படிப்பட்ட கவிதைகளை ஒருவர் இயற்றியுள்ளார் என்றால் அது ஆச்சரியமான விஷயம் தானே.17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நீலகண்ட தீக்ஷிதர் அற்புதமான கலி விடம்பனா என்ற நூலை இயற்றியுள்ளார். நூறு பாடல்களைக் கொண்ட இதில் நையாண்டிக்குப் பஞ்சமே இல்லை. (சில பிரதிகளில் 102 பாடல்களும் உள்ளன)இவர் மதுரையில் திருமலை நாயக்கர் அரசவையில் மந்திரியாக இருந்தவர். (இவரைப் பற்றி எனது சம்ஸ்கிருதச் செல்வம் தொடரில் நான்காம் அத்தியாயத்தில் படித்திருப்பதை இங்கு நினைவு கூரலாம்)  நையாண்டிப் பாடல்கள் ஜோதிடர், மருத்துவர், கவிஞர், மனைவியின் பிறந்தக உறவினர் என்று அனைவருமே இவரது பாடல்களுக்குத் தப்பவில்லை.சில நையாண்டிப் பாடல்கள் இதோ:-  आयुस्प्रश्ने दीर्घमायुर्वाच्यं मौहूर्तिकैर्जनैस् ।जीवन्तो बहुमन्यन्ते मृताः प्रक्ष्यन्ति कं पुनस् ॥ १६ ॥

ஜோதிடர் ஒருவரிடம் ஒருவர் தன் வாழ்நாளைப் பற்றி ஜோதிடம் கேட்டால், அவர் நீண்ட நாள் வாழ்வார் என்று சொல்ல வேண்டும். அவர் நீண்ட நாள் வாழ்ந்தால் ஜோதிடரைப் பற்றி உயர்வாக நினைப்பார். அவர் செத்து விட்டாலோ கேள்வி கேட்க அவர் உயிருடன் இருந்தால் தானே! (பாடல் 16)

भैषज्यं तु यथाकामं पथ्यं तु कठिनं वदेत् ।आरोग्यं वैद्यमाहात्म्यादन्यथात्वमपथ्यतस् ॥ २५ ॥

ஒரு மருத்துவர் தனது இஷ்டம் போல தனது நோயாளிக்கு மருந்து கொடுக்கலாம். ஆனால் உணவை எப்படி உட்கொள்ள வேண்டும் எதையெல்லாம் சாப்பிடலாம், எதையெல்லாம் சாப்பிடக் கூடாது என்ற கடுமையான நிபந்தனைகளையும் கூடவே சொல்லி விட வேண்டும். நோயாளி ஒரு வேளை குணமாகி விட்டால் அதற்கான புகழை மருத்துவரின் திறமையே காரணம் என்று சொல்லிப் பெற முடியும். ஒருவேளை நோயாளி குணமடையாவிட்டால் அவர் சொன்னபடி பத்தியமாக இருக்க வில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம்!   (பாடல் 25)

लिप्समानेषु वैद्येषु चिरादासाद्य रोगिणम्  ।दायादाः संप्ररोहन्ति दैवज्ञा मान्त्रिका अपि  ॥ २९ ॥

ஒரு மருத்துவர் தொடர்ந்து தன்னிடம் சிகிச்சை பெறும் நீடித்த நோயுடைய ஒருவரிடமிருந்து பணம் பெற நினைக்கும் போது அவர் இன்னும் இரண்டு பேரை நோயாளியிடமிருந்து பண வசூல்  செய்வதைப் பார்ப்பார். ஒருவர் ஜோதிடர். இன்னொருவர் மந்திரவாதி!   (பாடல் 29)

स्तुतं स्तुवन्ति कवयो न स्वतो गुणदर्शिनस् ।कीतः कश्चिदलिर्नाम कियती तत्र वर्णना  ॥ ३५ ॥

ஒரு கவிஞர் தனது சொந்த கவித்வம் இல்லாமல், பல விஷயங்களைப் பற்றி தனக்கு முன்னால் இருந்த கவிஞர்களால் வர்ணிக்கப்பட்டவற்றையே வர்ணிப்பார். தேனீ என்ற ஒரு பூச்சி வகை இருக்கிறதல்லவா! அதைப் பற்றித் தான் எவ்வளவு பிரம்மாண்டமான விவரங்களைப் பார்க்க முடிகிறது!   (பாடல் 35)

IMG_1650 (2)

गृहिणी भगिनी तस्याः श्वशुरौ श्याल इत्यपि  ।प्राणिनां कलिना सृष्टाः पञ्च प्राणा इमेऽपरे  ॥ ४१ ॥

இந்தக் கலியுகத்தில் வாழ்வை நீட்டிக்கும் ஐந்து பிராண சக்திகள் – மனைவி, மனைவியின் சகோதரி, மனைவியின் சகோதரர், அவளது பெற்றோர் ஆவர்     (பாடல் 41)

ज्ञातेयं ज्ञानहीनत्वं पिशुनत्वं दरिद्रता  ।मिलन्ति यदि चत्वारि तद्दिशेऽपि नमो नमस् ॥ ९७ ॥ உறவினர்கள், ஞானஹீனர்கள், வம்பு பேசுபவர்கள், தரித்திர நிலையில் உள்ளவர்கள், ஆகிய இந்த நால்வரின் கூட்டு இருக்கும் திசைக்கே நமஸ்காரம் நமஸ்காரம். (பாடல் 97)

நூறு பாடல்களையும் படித்தால் அது எந்தக் காலத்திற்கும் பொருந்துவதாக இருப்பதைக் கண்டு வியக்கலாம்.

சம்ஸ்கிருதத்தில் பாடலைப் பார்க்க விரும்புவோர் https://docs.google.com/viewer?url=http://www.sanskritworld.in/public/assets/book/book_50dd30263ad34.txt

என்ற தளத்தை அணுகலாம்.

ஆங்கில மொழிபெயர்ப்புடன் கலி விடம்பனாவைப் படிக்க விரும்புவோர்  http://www.vidyavrikshah.org/literature/kalividambana/kalint.html  என்ற தளத்தை அணுகலாம். நன்றி கூறலாம்.

*********

A Foreigner’s comment on Tamil Brahmins

IMG_5608

Compiled by London swaminathan

Date: 15th September 2015

Post No: 2161

Time uploaded in London :– 19-50

(Thanks  for the pictures) 

 

 

I am reading an interesting book titled “South Indian Hours” written by Oswald J. Couldrey I.E.S., sometime Principal of Rajamundry College, published by Hurst and Blackett Ltd., London in 1924. The book has 3 colour and 19 other illustrations by the author.

Here is an excerpt from the book:

“The oxen of Telengana, including the famous Nellore breed, have shortish horns, but those of the further South are one and all crowned as it were with a great stringless lyre of ivory, which lends a silent note of majesty to the traffic of the streets and wharves of metropolitan Madras. Likewise upon the bows of men caste marks, the seals of the national gods, are commoner and larger, and commoner and more conspicuous also are the many forms of that contrarious Hindu tonsure, which leaves a long horse-tail of hair just where the European monk wears nothing.

IMG_5607 (2)

These human fashions mean a greater steadfastness in the old and purely Indian order than the Telingas, in the towns at east, have been able to preserve. Not that the Tamil people are backward; rather they know better than their northern neighbours how to lay hold on the new without relinquishing the old. There is no need for an Andhra man to go to the Tamil country to study the Tamils. The latter visit him at home, and get employment in his offices and schools, faster than he can find room for them in his heart.

For the Tamil Brahmins are a remarkable race, clever and full of enterprise. For all their strict orthodoxy they adopted Western education earlier, and still ensue it more industriously, than the more easy-going men of Andhra-desha. Therefore are they sometimes called by lovers of analogy the Scots of Southern India; but the comparison, though illustrating well enough the point in question, should not be further pressed. It is perhaps chiefly the fear of Tamil penetration which has led the Andhras to agitate for a separate administration.

The Tamil Brahmins shave clean, unlike their Andhra brothers, who largely affect a Maratha-military moustache which hardly fits one’s notion of a Brahmin. True, it is the mark only of the Niyogi, the Brahmin who has renounced the service of religion for professional work in the world; but in the Tamil country even such retain the mask of ancestral holiness. Nothing impressed me more, on first arriving at South India, than the faces of these Tamil Brahmins. They reminded me of a Roman portrait-gallery, where the features of unknown sages, poets and statesmen are assembled, and sometimes the face occurs a Greek God grown thoughtful; all are chiselled in the same clear medium, but here it is darker than old marble, and liker walnut-wood or a very ancient ivory.

IMG_3461

The difference is greater in the South between the higher and lower castes than in Telingana. The common people of the South are far inferior to those of Telengana in refinement of feature, but the Brahmins of the South, Aiyars and Ayangars, are at no such disadvantage beside their northern brother. Feminine beauty in these latitudes is generally held to shine brightest among the Tamil Aiyangars, the Vaishnava Brahmins of Coromandel.

The Southern ladies deserve also this praise, that tjhey still remain staunch to the noble silken flow of their ancestral costume, and robes darkly rich with India dyes, having among them nothing sewn but the sort close bodice; a costume which has not its equal in the world today for dignity and beauty. But the daughters of the Andhras, those at least who pretend to wealth and station, are beginning to coquette with the barbaric fashions of the West, and interpolate half sleeves, puffed and frilled, into such weeds as might have beseemed the mother of the Gracchi.

Altogether the Tamils have a far weightier and more  comfortable body of ancestral culture behind them than the people of the Cirkars. I shall never forget how disgusted I was when, having lately left Tanjore, where they still entertain one with a dance of damsels (unless vulgarity and puritanism have swept them away since 1909), I was asked, by a prominent citizen of an Andhra city of old renown, to an entertainment of card-conjuror and a gramophone were to be respectively the life and soul. Fortunately this was an extreme instance, but the suggested contrast was typical enough. Some are even said to consider the substitution of the gramophone for the dancing girl as a sign of advancing civilisation, because the dancing girls too often sing sweet love-songs over-boldly, or are otherwise no better than they should be.

But the Tamil people excels in every art, in the weaving of soft raiment as well as of alluring gestures, in the graving of brass, the carving of wood, the working of stone, in fact in the devising of all those embellishments which make the life of a  people happier for themselves, and more interesting to others. Such embellishments in a simpler form are still a part of popular life even in Telangana, but for centuries the country has not been rich enough to develop them, and its later prosperity turns away from them away to foreign gewgaws. The new spirit of nationalism, I fear, has come too late to help them.”

IMG_4563

In a footnote, the writer adds,

“I think the Aiyangars must have come largely from Gujerat, a little more than 1000 years ago, for Gujerat was a centre for Bhagavatas, the original Vaishnavas. Gujerati women are likewise famous for their

300 ராமாயணமா? 3000 ராமாயணமா? –Part 1

IMG_3381 (2)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Research Article: Written by London swaminathan

Date: 15th September 2015

Post No: 2160

Time uploaded in London :–14-16

(Thanks  for the pictures) 

 

“300 ராமாயணம்” என்று ஆங்கிலத்தில் ஏ.கே. ராமனுஜம் கட்டுரை எழுதிய பின்னர் கடந்த கால் நூற்றாண்டில் பல நூல்கள் வெளியாகிவிட்டன. நானே புறநானூற்றில் உள்ள இரண்டு ராமாயணக் காட்சிகள், ஆழ்வார் பாடல்களில் வரும் அணிலின் உதவி (இலங்கைக்குப் பாலம் கட்ட) முதலிய பல காட்சிகள் ஒரிஜினல் ராமாயணங்களில் இல்லை என்பதை எழுதி இருக்கிறேன். சென்ற வாரம் ராமன்- யமன் சண்டை பற்றி வசந்தன் உயிர்வரு படலம் என்ற சிறிய நூலை பிரிட்டிஷ் லைப்ரரயிலிருந்து எடுத்து இங்கே வெளியிட்டேன். தியாகராஜர் போன்றோரின் கிருதிகளில் வரும் ராமாயணம், ஆழ்வார் பாடல்களில் வரும் ராமாயணம், திரைப்படப் பாடல்களில் வரும் ராமாயணம், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள பலவகை ராமாயணங்கள் என்று தொகுக்கப் போனால் 3000 ராமயணங்களுக்கும் மேல் கிடைக்கும்!! நமக்குத் தெரிந்தது எல்லாம் கம்பன், வால்மீகி, துளசிதாஸ், எழுத்தச்சன்,மற்றும் அஸ்ஸாமிய, வங்காளி மொழி ராமாயணங்கள்தான். கம்பன் குறிப்பிடும் மூன்று ராமாயணங்களில் போதாயன , வசிஷ்ட ராமாயணங்கள் நமக்குக் கிடைத்தற்பாடில.

பிரிட்டிஷ் லைப்ரரியில் ராமாயணக் கும்மி என்று ஒரு பாக்கெட் சைஸ் நூலைப் பார்த்தவுடன் வியப்பு மேலிட்டு இதை எழுதுகிறேன். எத்தனை பேரோ ராமாயணம் எழுதி இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் நாம் மறந்துவிட்டோம். யாரை நம்பி, திருநெல்வேலி ஜில்லா, தென்காசி தாலுக்கா, குருங்களாவனம், வெங்கட்ராமையர் இப்படி ஒரு ராமாயனக் கும்மி எழுதினார்? யாரை நம்பி அதை லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரி 1902-ஆம் ஆண்டு முதல் காப்பாற்றி வைத்திருக்கிறது? – இதை எண்ணும்போதெல்லாம் புல்லரிக்கிறது. காலத்தால் வெல்ல முடியாத காவியமன்றோ ராமகாதை!!

வெங்கட்ராமையருக்கு பன்முறை நமஸ்காரம் சொல்லி அந்த ராமாயணக் கும்மியை இங்கு வெளியிடுகிறேன். 113 ஆண்டுகளுக்கும் மேலாக அதைப் பாதுகாத்துவைத்து வந்து கேட்போருக்கெல்லாம் அரிய, பெரிய, பல்லாயிரம் தமிழ் நூல்களை இலவசமாக வழங்கும் பிரிட்டிஷ் லைப்ரிக்கு நன்றி சொல்லி இதை வெளியிடுகிறேன். ஆணவமும், அஹங்காரமும், பண வெறியும் பிடித்த தமிழ்நாட்டு நூலகங்கள் இவர்களிடம் பாடம் கற்க வேண்டும்—பயிற்சி பெற வேண்டும். கடவுள் காப்பாற்றுவாராக!

IMG_3382

IMG_3383

IMG_3385 (2)

IMG_3386 (2)

IMG_3388 (2)

IMG_3389 (2)

IMG_3392 (2)

IMG_3393 (2)

IMG_3395 (2)

IMG_3396 (2)

IMG_3397 (2)

IMG_3395 (2)

IMG_3399 (2)

IMG_3402 (2)

IMG_3403 (2)

IMG_3404 (2)

IMG_3405 (2)

IMG_3406 (2)

IMG_3407 (2)

IMG_3410 (2)

IMG_3413 (2)

To be contimnued………………..

ஆறே பாடல்களில் பகவத்கீதை! இரண்டே அடிகளில் கீதையின் சாரம்!

894_Bhagwat_Gita_thumb[13]

மஹாபாரத வழிகாட்டி

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Research Article: Written by ச. நாகராஜன்

Date: 15th September 2015

Post No: 2159

Time uploaded in London :–காலை 7-59

(Thanks  for the pictures) 

 

 

.நாகராஜன்

 

 

வியாசரும் வில்லியும்

ஒரு லட்சம் ஸ்லோகங்கள் அடங்கிய வியாசர் அருளிய மஹாபாரதத்தைத் தமிழில் பாக்களாகத் தர எண்ணினார் வில்லிப்புத்தூரார்.

“குறும்பி அளவாக் காதைக் குடைந்து தோண்டி எட்டினமட்டு அறுப்பதற்கோ வில்லி இல்லை” என்று பின்னால் ஒரு புலவர் பாடும் அளவு புலமை இல்லாதவர்கள் பாடத் துணிந்தால் அவர்களின் காதைக் குடைந்து தோண்டி தண்டிக்கும் அளவு புலமை பெற்றவர் வில்லிப்புத்தூரார்.

வியாசர் பாடிய 18 பர்வங்களில் 10 பர்வங்களை மட்டுமே சுமார் 4350 பாக்களில் தன் காவியத்தில் பாடியுள்ளார். தர்மர் முடிசூட்டியதுடன் வில்லி பாரதம் முடிவடைகிறது.

700 ஸ்லோகங்கள் கொண்டது பகவத் கீதை. வில்லிபுத்தூரார் தனது பாரதத்தில் பகவத்கீதையை ஆறே ஆறு பாடல்களில் தந்துள்ளார்.

பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

மாயை என்று ஒருத்தி தன்பால் மனம் எனும் மைந்தன் தோன்றி,          

தூய நல் அறிவன் தன்னைத் தோற்றம் இன்றாக்கி வைத்தான்           

தாயொடு தந்தை, மக்கள் தாரம், என்று இவர் பால் வைத்த                        

நேயமும் அவன் தனாலே நிகழ்ந்தது ஓர் நினைவு கண்டாய்!

மாயை என்னும் ஒருத்தியிடம் மனம் என்னும் மகன் தோன்றினான். பரிசுத்தமான ஞானம் என்பவனை வெளிப்படாமல் ஆகி வைத்தான். தாய், தந்தை, மக்கள், மனைவி ஆகியோர்  மீதான பாசமும் அந்த மனம் என்பவனின் எண்ணத்தாலே  தான் நிகழ்ந்தது!

குயின்ற ஐம் பொறிவாய் நின்று, குறித்த ஐம்பொருளும் தானே                

அயின்று, முக்குணங்களோடும், அறுவகைப் படைகளோடும்,           

பயின்று, அரசாளும் அந்த மனம் எனும் பகைவன் ஆங்குத்             

துயின்ற போது, ஒளித்து நின்ற தோன்றலும் தோன்றும் கண்டாய்!

உடம்பில் பொருந்தியுள்ள மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து இந்திரியங்களும் ஊறு சுவை. ஒளி. வாசனை, ஓசை என்னும் ஐந்து புலன்களையும் தானே அனுபவித்து, சத்வம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களோடும் காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம், மாற்சர்யம் என்னும் ஆறு வகை சேனைகளோடு பழகி அரசாட்சி செய்யும் மனம் என்னும் பகைவன் தூங்கிய போது,  (அவனால்) தோற்றமில்லாதவனாய் செய்யப்பட்ட அந்த நல்லறிவன் வெளிப்படுவான்.

gita stamp

அந்த நல் அறிவன் தன்னை அறிந்தவர் அறிஞர் ஆவார்,                     

தந்தையால் வகுக்கப்பட்ட சராசரப் பொருள்கள் தோறும்                         

வந்து, அவன், தீம்பால் நெய்போல் உயிர்க்கு உயிர் ஆகி, வாழும்               

பந்தமது உணர்ந்து, நேரே பார்க்குங்கால், பகை யார்? நண்பு ஆர்?

அந்த நல் அறிவன் தன்னை அறிந்தவர்களே அறிஞர் ஆவார். அந்தப் (பரம்பொருள் என்னும்) தந்தையால் வகுக்கப்பட்ட சஞ்சரிப்பதும் சஞ்சாரியாதனவும் ஆகிய எல்லாப் பொருள்களிலும் பசுவின் பாலில் உள்ளே உறைந்திருக்கும் நெய் போல, உயிர்க்கு உயிர் ஆகி, ஜீவாத்மாக்களின் உள்ளே பரமாத்மாவாக உறைந்து வாழும், (இந்த) சம்பந்தத்தை உணர்ந்து நேரே பார்க்கும் போது பகைவன் யார்? நண்பன் யார்? எவருமில்லை!

உம்பரும், முனிவர் தாமும், யாவரும், உணரா ஒன்றை                 

இம்பர், இன்று, உனக்கு நானே இசைவுற உணர்த்தா நின்றேன்,                           

ஐம் பெரும் பூதத்தானும் அமைந்தன உடலம், யார்க்கும்;                        

நம்பனும் ஒருவன்; உள்ளே ஞானியாய் நடத்துகின்றான்!

 

 

தேவர்களும், முனிவர்களும், மற்றும் எல்லோரும் உணராத ஒன்றை, இந்த இடத்தில், இப்போது, உனக்கு நான் பொருந்தும் படி உணர்த்துகின்றேன். எல்லாப் பிராணிகளுக்கும் ஐம்பெரும் பூதங்களால் அமைந்தது உடல். அவற்றினுள்ளே ஞானியாய் இருந்து (ஒப்பற்ற கடவுளாய்) ஒருவன் தானே அனைத்துத் தொழில்களையும் செய்து நடத்துகின்றான்.

வில்லி ப்ஹரதம்

என்னை நீ புகலக் கேண்மோ! எங்கும் ஆய், யாவும் ஆகி                     

மன்னிய பொருளும் யானே; மறைக்கு எலாம் முடிவும் யானே;               

உன்னை யான் பிறிவது இல்லை; ஒரு முறை பிறந்து மேல் நாள் –                     

நல் நிலா எறிக்கும் பூணாய்! – நரனும் நாரணனும் ஆனோம்

 

‘நல்ல சந்திரகாந்தியை ஒத்த ஒளியை வீசும் ஆபரணங்களை அணிந்துள்ள அர்ஜுனா! என்னை யார் என (உனக்கு உணர்த்துமாறு) நான் சொல்வதைக் கேள்! எல்லாப் பொருள்களிலும் பொருந்தி எல்லாப் பொருள்களுமாய் அழியாது நிலை பெற்ற பரம்பொருளும் நானே! வேதங்களுக்கு எல்லாம் முடிவான பொருளும் நானே! உன்னை என்றும் நான் பிறிந்தவன் அல்ல; முன்னொரு சமயம் நரனும் நாராயணனுமாக நீயும் நானும் அவதரித்தோம்!

பின் ஒரு பிறப்பின் யாமே இராம லக்குமப் பேர் பெற்றோம்;             

இந் நெடும் பிறப்பில், நீயும் யானுமாய் ஈண்டு நின்றோம்;

நின்னிடை, மயங்கும் இந்த நேயமும் ஒழிக!” என்று,                                     

 தன் நிலை அவற்குக் காட்டி, தத்துவம் தெளிவித்தானே.

பின்பு ஒரு அவதாரத்தில் நாமே இராமன், இலக்குவனாக அவதரித்தோம். இந்த நீண்ட அவதாரத்தில் நீ அர்ஜுனனாகவும் நான் கண்ணனாகவும் இங்கு இருக்கிறோம். உன்னிடமுள்ள திகைப்பையும் உறவினர், நண்பர் என்ற இந்த அபிமானத்தையும் நீக்குக’ என்று தன் உண்மையான விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டித் தத்துவத்தை அவம் மனம் தெளிவுறும்படி அருளினான்.

ஆஹா! என்ன அருமையான பாடல்கள்! எத்தனை எளிமையாக கீதை ஆறே பாடல்களில் எளிய தமிழில் பொருளாழத்துடனும் சொல் சிக்கனத்துடனும் சூத்திரப் பாங்குடனும் விளக்கப்பட்டுள்ளது.

இதைப் படிப்போர்கள் முழு வில்லி பாரதத்தையும் படிக்க உத்வேகம் பெறுவார்கள் என்பதில் ஐயமுண்டோ!

இந்த விளக்கத்தைப் படித்த பின்னர் மகாகவி பாரதியாரிடம் வருவோம்.

அவசர யுகம் அல்லவா! இரண்டே அடிகளில் அவன் தெள்ளத் தெளிவாக கீதையில் கண்ணன் போதித்ததை இப்படிச் சுருக்கமாகக் கூறி விட்டான்:

rath yatra

பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்;                                  

பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான்

மாம் அனுஸமர (என்னை நினை)

கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன! (கர்மம் புரிவதற்கே உனக்கு அதிகாரம் உள்ளது; அதில் வரும் பயனில் எண்ணம் வையாதே – ஒரு பொழுதும்!)

***********

As you sow, so you shall reap!

cropped_kali

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Article Written by  London swaminathan

Date: 14th September 2015

Post No: 2158

Time uploaded in London :–20-05

(Thanks  for the pictures) 

 

Hindus believe in Karma theory. They know the deeds of one individual will follow the individual in his/her next birth. What a person has done in former birth, will come upon him again. There is a saying in Tamil that “He who sows millet, reaps millet, he who sows deeds (good or bad) will reap accordingly”. Hindus also believe that Brahma, the creator, has already written in one’s head what is going to happen. It cannot be changed.

“That which does not exist will not come into existence, and that which exists will not be annihilated” – is another saying. They have several stories in their folklore and scriptures. Here is a story to show that inherited fate will not expire.

There was a priest in a Kali (goddess) temple. He used to swindle money allocated to make Prasad (Food Offering) for the goddess. Even the Prasad he made for public distribution, was not distributed it to the public. Because of his overeating, he fell sick. Then he prayed to Goddess that he would sacrifice two goats to the goddess if he was cured. His illness was cured in a weeks’ time. Then he sacrificed two animals just to satisfy his hunger.

In the meantime, there was severe drought in the kingdom. So the king and the minister decided to visit the Kali temple. As soon as the priest saw the king and minister coming, he thought that they were coming to punish him for all his bad acts. So he hid himself behind the goddess Kali’s statue.

The king and the minister prayed loudly, “Oh Merciful Mother! The country is suffering from acute drought for a long time. You must save the country and the people by showering timely rain”. Then the goddess replied that she needs a human sacrifice to set things right. Immediately the king told the minister that it was the solemn duty of a king to protect his people. So let me sacrifice myself. But the minister objected to his proposal and said there are several ministers to help the king. But there is only one king so let me die for the sake of the country.

They argued like this for a long time. At last they decided to ask goddess about her choice. Before they opened their mouth, Goddess said loudly, “When I said human sacrifice I did not mean you people. Please sacrifice the priest who is hiding behind me”. Both of them got the priest and took their sword to finish him off. He also said his last prayer, “Oh, Mother! I have been serving you for half a century. And yet you wanted my blood! Why? Why?”

two-goats

Goddess said smilingly, “Dear priest! You became sick because of your over eating. And yet you found an excuse to eat more and sacrificed two innocent animals. As you sow, so shall you reap.”

The king and the minister cut off the head of the priest. Goddess appeared before them and asked what they wanted now. They told her to remove the drought by regular rain and revival of the dead priest. She did both according to their request. The priest behaved from that day. There was copious rain fall which made everyone happy.

This is a folk tale.

வால்டேரும் வள்ளுவரின் திருக்குறளும்!

voltaire guinea

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Research Article: Written by ச. நாகராஜன்

Date: 14th September 2015

Pot No: 2157

Time uploaded in London :–காலை 10-02

(Thanks  for the pictures) 

 

குறள் தெளிவு

 

.நாகராஜன்

 

 valluvar

வள்ளுவர் தபால் தலை படம்

குருடன் ரோஜா செடியைப் பார்ப்பது போல!

வள்ளுவரின் திருக்குறளுக்கும் வால்டேருக்கும் சம்பந்தம் இருக்கிறதா? வியப்பாக அல்லவா இருக்கிறது.

சற்றுப் பொறுங்கள்! கட்டுரையின் கடைசி பகுதியில் தெளிவு பிறக்கும்!

ஒரு சமயம் வால்டேர் (Voltaire) அவரது நண்பரான ஷெர்லாக் (Sherlock) என்பவரிடம் பேசிக் கொண்டிருந்தார். ஷெர்லாக் அவரிடம், “வெளிநாட்டுக்காரர்கள் ஷேக்ஸ்பியரை அனுபவித்து ரஸிக்க முடியாது” என்றார். உடனே வால்டேர், “ஆமாம், அது உண்மைதான்! அவரது படைப்புகளை மொழிபெயர்ப்பின் மூலமாகவே அவர்கள் படிக்க வேண்டியிருக்கிறது. அதில் பிழைகள் ஏராளம் உள்ளன. அத்தோடு மூலத்தில் இருக்கும் அழகுகள் அத்தனையும் போய் விடுகின்றன. ஒரு குருடனை அவன் கைகளை ரோஜா செடியின் முள்கள் குத்திக் கொண்டிருக்கும் போது    ரோஜாவின் அழகைப் பார்த்து அனுபவி என்று வற்புறுத்த முடியாது” என்றார்,

வால்டேரின் இந்தக் கூற்று வள்ளுவரின் குறளுக்கும் நன்கு பொருந்தும்.அருமையான நூல் என்று திருக்குறளைப் பல மொழிகளில் மொழி பெயர்த்தாலும் அதன் அழகையும் அருமையையும் ஆழ்ந்த பொருளையும் தமிழை அறியாதவர்கள் அனுபவித்து ரஸிக்க முடியாது.

coin valluvar

வள்ளுவர் நாணயம் படம்

ஆய்விற்காக ஒரே ஒரு குறள்

எடுத்துக் காட்டாக ஒரே ஒரு குறளை மட்டும் எடுத்து அலசி ஆராய்வோம்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது       (குறள் 45)

இந்தக் குறளுக்கு G.U.Pope மொழியாக்கம் செய்த ஆங்கிலப் பெயர்ப்பு இது.

If love and virtue in the household reign,

This is of life the perfect grace and gain.

If the married life possess love and virtue, these will be both its duty and reward. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் மொழி பெயர்ப்பு சரி தான்.

ஆனால் வள்ளுவரோ தனது குறளை குறள் முழுவதும் உள்ள தேர்ந்தெடுத்து அமைக்கப்பட்ட சொற்களோடு ஒரு மர்மமான அதிசயமான முறையில் நெய்து இருக்கிறார்.

ஒரு குறளை மேலெழுந்தவாரியாகப் படித்துப் பொருளை அர்த்தம் செய்து கொண்டால் அதில் உள்ள ஆழத்தை அறிய முடியாது. அதாவது ஆழ்ந்திருக்கும் கவி உளத்தைக் காண முடியாது..

அன்பு, அறன், உடைத்து ஆயின், இல், வாழ்க்கை, பண்பு, பயன், அது – இந்த ஒன்பது சொற்களையும் அவர் குறளில் எங்கெங்கு எப்படிப் பயன்படுத்தியுள்ளார் என்பதைப் பார்க்க வேண்டும். இல் என்பதை இல்லம் என்றும் பயன்படுத்தலாம் இல்லை என்றும் பயன்படுத்தலாம். இல்லை என்ற பொருளில் அவர் பயன்படுத்தி இருந்தால் இந்தக் குறளுக்குத் தேவையற்ற இல்லை என்று வரும் குறள்களை நீக்கி விடலாம். இப்படி பொருத்தமான அர்த்தமுள்ள குறள்களைத் தனியே ஒப்பு நோக்கித் தொகுக்க வேண்டும். பொருத்தமுள்ள எல்லா குறள்களையும் பொருத்திப் பார்த்தால் பிரம்மாண்டமான அர்த்தம் வெளி வரும்.

அதாவது குறளில் சொல்லப்பட்டிருப்பது பனிக்கட்டியின் முனை போல இருக்க, உண்மையான பொருள் மறைந்திருக்கும் பிரம்மாண்டமான பனிக்கட்டியாக இருக்கிறது குறள் பாக்களில்.

voltaire

 வால்டேர் – அஞ்சல்தலை

772 இடங்களைப் பார்க்க வேண்டும்!

எடுத்துக் காட்டாக மேலே எடுத்துக் கொள்ளப்பட்ட குறளில் உள்ள வார்த்தைகளை ஆராய்வோம்.

அன்பு என்ற வார்த்தை 23 இடங்களில் வருகிறது.

அறன் என்ற வார்த்தை 21 இடங்களிலும் அறம் என்ற வார்த்தை 20 இடங்களிலும் அறத்தான் என்பது ஒரு இடத்திலும் அறத்திற்கு -2, அறத்தின் -2 அறத்து – 2, அறவோர் 1 இடங்களிலும் வருகிறது.

உடைத்து 34 இடங்களிலும் ஆயின் என்பது 35 இடங்களிலும் வருகிறது.

இல் என்ற வார்த்தை மட்டும் 118 இடங்களில் வருகிறது. வாழ்க்கை 19 இடங்களில் வருகிறது.

பண்பு 29 இடங்களிலும், பண்பின் – 3 இடங்களிலும் பண்பினார்கள் – 1 இடத்திலும் வருகிறது.

பயனும் என்பது 31 இடங்களில் வருகிறது.

அது என்ற வார்த்தை மட்டும் திருக்குறளில் எத்தனை இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியுமா?

430 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சுமாராக இதையெல்லாம் கூட்டிப் பார்த்து ஆராய ஆரம்பித்தால் 772 இடங்களை நாம் ஆய்ந்து ஒரு குறளின் உண்மையான ஆழ்ந்த பல்வேறு அர்த்தங்களைக் கண்டு பிடிக்க வேண்டும். அத்தோடு இதையொத்த குறள்கள், இதற்கு விரிவை வழங்கும் குறள்கள் போன்ற பல்வேறு வகைகள் வேறு உண்டு. தமிழனாகப் பிறந்த பேற்றை எண்ணி மகிழ்ந்தவாறே, இந்த ஒரு குறளை மட்டும் ஆராய சற்று நேரத்தை அமைதியாகச் செலவழித்தால் குறளின் கட்டுக் கோப்பும் இதர அருமைகளும் தெரிய வரும்!

இன்னும் மறைந்திருக்கும் பொருளை வேறு ஆய்ந்து உணர வேண்டும்.

ஆகவே தான் இதற்குத் தமிழ் மறை என்று பெயர் வைத்தனர்.

அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் என்ற ஔவையாரின் வாக்கிற்கு அர்த்தம் கண்டு பிடிப்பதற்கு வேறு, இன்னும் எவ்வளவு ஆராய்ச்சி நடத்த வேண்டுமோ!

ஒன்று மட்டும் நிச்சயம்! ஷேக்ஸ்பியரைப் பற்றி வால்டேரின் கூற்றில் ஐயம் இருக்க முடியாது. ஏனென்றால் ஒரு மேதையைப் பற்றிய இன்னொரு மேதையின் கணிப்பு அது. அதில் தவறு இருக்க முடியாது. அதையே ஒரு அடிப்படையாகக் கொண்டு திருக்குறளை நோக்கினால் திருக்குறளுக்கு மொழிபெயர்ப்பு எடுபடாது என்பதில் ஐயமே இல்லை.

வால்டேரின் கொள்கை வள்ளுவர் குறளுக்கும் சிறப்பாகப் பொருந்தும் என்பது தான் அவருக்கும் குறளுக்கும் உள்ள சம்பந்தம்! குறளைத் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் – முழுவதுமாக!

caoin valluvar2

காசுகளில் வள்ளுவர் படம்

தமிழர்கள் பாக்கியசாலிகள்

தமிழ் தெரிந்தவர்கள் உலகிலேயே கொடுத்து வைத்த பாக்கியசாலிகள்!

தெய்வத் தமிழ் மூலம் திருக்குறளைப் படிக்கலாம்; திருக்குறள் மூலம் தெய்வத் தமிழைத் தொழுது உய்யும் வழி அறியலாம்.

வாழ்நாள் முழுவதற்குமான துணையாக இலங்கும் ஒரே வழிகாட்டி நூல் அற்புதத் தமிழ்க் குறளே!

குறளே தான்!

************

கோபக்காரர்களை வெல்வது எப்படி?

angry

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Article: Written by London swaminathan

Date: 14th September 2015

Pot No: 2156

Time uploaded in London :– 9-43 am

(Thanks  for the pictures)

வட கேரளத்தில் காஞ்சன்காடு என்ற இடத்தில் ஆனந்தாஸ்ரமம் உள்ளது. அங்கு நடந்த ஒரு சமபவத்தை சுவாமி ராமதாஸ் சுவைபட வருணிக்கிறார் (தமிழில் மொழிபெயர்ப்பு: லண்டன் சுவாமிநாதன்).

ஆனந்தாஸ்ரமம் எல்லா வகை சாமியார்களுக்கும் புகலிடம் கொடுத்து வந்தது. அங்கு தங்கும் சிலர், “என்னைத் தொடாதே, என் மீது படாதே; தீட்டு வந்துவிடும். சுத்தம் கெட்டுவிடும்” — என்றெல்லாம் அங்கலாய்ப்பர்.

ஒரு முறை காவியுடை தரித்த கட்டையான, குட்டையான ஒரு சாமியார் வந்தார். சடை முடியும், தாடியும் உண்டு. முகத்தில் கோபக்கனல் வீசிக்கொண்டே இருக்கும். துர்வாச முனிவரின் மறு அவதாரம்தான். “நான் யார் தொட்டதையும் சாப்பிட மாட்டேன் ஆகையால் எனக்கு சமையல் வசதிகள் வேண்டும்” என்றார். அவரது அறையிலேயே புதிய பாத்திரங்கள், அரிசி, உப்பு, புளி முதலிய பலசரக்குகள் எல்லாம் வழங்கப்பட்டன. அவரே சமைத்து அவரே பரிமாறிக்கொண்டு சாப்பிட்டு விடுவார். அருகிலேயே ஆஸ்ரமம் பயன்படுத்தும் ஒரு வாளியில் பாதி  தண்ணீரும் நிரப்பி வைத்துக் கொண்டு வாழை இலைக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு சாப்பிடுவது அவரது வழக்கம்.

ஒரு நாள், அந்த சாமியார் சாப்பிட எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு வாளித் தண்ணீரை அருகில் வைத்துக் கொண்டு உட்கார்ந்தார். அந்த வாளி, ஆஸ்ரமத்தில் வரும் வேலைக்காரி வழக்கமாக, பாத்திரங்களைக் கழுவப் பயன்படுத்தும் வாளி. ஆகையால், சாமியாரது அனுமதியின்றி அவர் அதைப் போய் எடுத்தார். உடனே அனத சந்யாசி கோபம் பொங்கி வெடிக்க எழுந்தார். சுடு சொற்களைப் பொழிந்தார். தீட்டுப் பட்டுவிட்டதே என்று தகாத சொற்களை மொழிந்தார். அந்த வேலைக் காரிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் ஓடி ஒளிந்தார்.

ஆஸ்ரமத்தில் அன்பே வடிவான மாதாஜி கிருஷ்ணாபாயும் வசித்து வந்தார். அவரது காதுக்கும் இந்தச் செய்தி எட்டியது. அந்த சாமியாரின் கோபத்தைக் கண்ட எவரும், அவர் அருகில் நெருங்கப் பயந்தனர். இதற்குள் இன்னொரு சீடர் ஓடிவந்து சூடான தலைப்புச் செய்திகளை வாசித்தார்: “அந்த சாமியார், தான் சமைத்த உணவுகளை இலைகளில் பரிமாறி நாய்களுக்கு வைத்து விட்டார். குட்டிபோட்ட பூனை போல இங்குமங்கும் நடந்து திரிகிறார்”.

anger

இதை எல்லாம் அமைதியாகக் கேட்ட மாதாஜி, சமையல் அறைக்குள் சென்று பழத் தட்டை எடுத்தார். அதிலுள்ள முலாம் பழம், மாம்பழம், வாழைப்பழம் முதலிய பழங்களை தோலை எல்லாம் எடுத்துவிட்டு அழகிய வடிவங்களில் வெட்டி ஒரு சுத்தமான தட்டில் வைத்தார். ஒரு தொண்டரை அழைத்து “இதைக் கொஞ்சம் தூக்கிக் கொண்டு வாருங்கள். அந்த சாமியாரின் முன் வையுங்கள்; அச்சம் வேண்டேல்; அடியேனும் உடன் வருவேன்” என்று செப்பினார்.

அந்தத் தொண்டரும் அவ்வாறே செய்ய, அந்த சந்யாசி அதை ஏற இறங்கப் பார்த்துவிட்டு தூரப் பார்வை செலுத்தினார். அங்கே மாதாஜி மெல்ல மெல்ல நடந்து வருவதைக் கண்டார்.

மாதாஜி, அன்பான மெல்லிய குரலில், “அந்த வேலைக்கார பெண், உங்கள் வாளியை அனுமதியின்றித் தொட்டது தவறுதான். தாங்கள் இந்தப் பழங்களை மறுக்காமல் உண்ண வேண்டும்” என்றார். அத்தோடு அவர் கொண்டுவந்த சூடான, சர்க்கரை போட்ட இனிய பசும்பாலை ஒரு ‘ஜக்’கு நிறைய கொடுத்து இதையும் அருந்தி பசியாறுக” என்றார். சந்யாசியும் மறுக்காமல் சுவைமிகு பழத் துண்டுகளை ஒவ்வொன்றாகச் சுவைத்தார்; பாலையும் பருகினார். முகத்தில் கோபம் போய் சாந்தம் என்னும் குணம் படரத் துவங்கியது. மாதாஜியும், அவர் சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமையுடன் காத்திருந்தார். அவர் சாப்பிட்டு முடித்து விட்டுப் பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்தார்.

மாதாஜியும், மெதுவாக, “எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். “என் கோபமெல்லாம் பறந்து ஓடிவிட்டது. நான் சந்தோஷமாக இருக்கிறேன்” என்று விடை பகர்ந்தார். மாதாஜியும் மெதுவாக தனது அறைக்குப் புறப்பட்டார். அந்த சந்யாசி எல்லோரிடமும் வலியச் சென்று மாதாஜி மிக நல்லவர், மிகப் பெரியவர் என்று புகழ்ந்து தள்ளினார்.

anger cartoon

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்துவிடல் – குறள் 314

ஒருவர் தீங்கு செய்தால், அவரே வெட்கப்படும்படி அவருக்கு நன்மை செய்துவிடுங்கள். இதுவே சிறந்த தண்டனை.

கோபத்தை கோபத்தால் வெல்ல முடியாது; அன்பால்தான் வெல்ல முடியும் – தம்மபதம் 5/ புத்தர் சொன்னது

–சுபம்–

Tamil Poet’s Prediction on Akhand Bharat!

akhand baharat 2

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Research Article: Written by London swaminathan

Date: 13th September 2015

Pot No: 2155

Time uploaded in London :–21-21

(Thanks  for the pictures)

Tamil poet Bharati is unquestionably the greatest Tamil poet of the modern times. He is one of the foremost poets of Modern India.

He is more famous for his patriotic songs. But there is no subject that he hasn’t touched. He has sung about all the great freedom fighters of yesteryears. He composed poems on nature, science, social issues, all religions, Hindu devotional poems, Panachali’s Vow from Mahabharata. He has used scores of animals in his poems. He was a person who studied Vedas in Varanasi. He knew French, Hindi, Sanskrit in addition to Tamil. He has sung about many saints. He has even composed poems on Halley’s comet, rain, Sun rise, thunder etc.

His patriotic verses and the verses in praise of Tamil language are sung by every child in Tamil Nadu even today. They are household verses. Lot of his poems have found a place in several feature films. Not many people knew that he was prophetic like Nostradamus. Let us look at his past and future predictions.

Past predictions

1.He sung about India’s freedom , quarter of a century before India actually became free. He died in 1921 singing that let us dance and sing that we have attained our country’s freedom

2.He sung about Chinese attack of 1963 half a century before China attacked India.

3.He has sung about scientific inventions, billions of heavenly bodies etc..

4.His songs on women’s liberation have come true

5.His vision about Tamil being recognised as a classical language and world language also became true. Tamil computer personnel’s migration to different parts of the world and Sri Lankan refugee influx in to countries from Norway to New Zealand have made Tamil a language spoken from North pole to South pole. From the time of World War II, BBC World Service is also broadcasting in Tamil. Bharati was the one who had this perspective outlook even before all these things happened.

Future predictions

He is a poet who strongly believed in the power of words. He prayed to goddess to give him words that are Mantras, like the ancient Vedic seers. His three important predictions are very interesting. All the poets see what even Sun cannot see according to Hindi saying, “Jahan na pahunche Ravi, Wahan pahunche Kavi.”

He visualised three things:

1.India becoming World Guru, i.e, Big Super Power

2.Children worshipping Undivided India (Akhand Bharat)

  1. A Bridge between India and Sri Lanka like Rama setu.

All the three are yet to come true. After looking at his successful past predictions, I am sure his predictions will become true soon.

IMG_3754 (2)

1).India becoming Guru (Super Power)

India was the Guru of the world 2000 years ago which attracted people from Alexander to Columbus. Later the political leadership changed. Now we have five big powers. India would become a big power soon and it wont be a big power because of its nuclear arsenal but because of its moral weapons. Bharati,  in one of his  poems, repeats three times that India would guide the world.

2)Pakistan and Bangladesh will disappear

In a poem to children he ask them to worship Hindustan that was not partitioned. In his days Muslims refused to say Vandemataram and used Allahu Akbar instead. Mohammed Ali Jinna split the country into India and Pakistan in 1947 and then in 1971, we helped the Bengalis of East Pakistan to create one more country named Bangladesh. Now both of them are equally critical of India. But Bharati’s Akhand Bharat prediction means those two countries would disappear from the map of the world and they would merge with India.

Who knows ?  Perhaps even without a war, it may happen peacefully. Forty years ago Rajaji, the first Governor General of India suggested a merger of India and Pakistan. Another possibility is that there may be a Third World War which would redraw the map of the world. Before the two world wars, the world map looked differently. Now we see every ten years a new country is appearing and a few countries are merging.

Third world war will happen in India according to American C I A. and a Hindu Yogi and such a war would place India at the top of the world.

3)Rama Setu to Sri Lanka

In one of his poems he sings that we should level the Setu area and build a bridge to the Singalese island/ Sri Lanka. Following the model of Rama Setu, it would not be difficult to build such a bridge. It will encourage trade and commerce between the two countries and our southern borders would be strengthened. Chinese presence at our southern borders can be avoided.

I give below the three references to his three predictions:

1).The way all men may become immortal (divine)

India, to the world will show

Yes, India to the world will show

Indeed India to the world will show.

2).This is the land of the Vedas

Where great and good heroes were born;

Flawless (unsplit) is Hindustan;

Adore this as God, My dear Child!

(He used two significant words here: Hindustanam and ‘Chedamillaatha’ in Tamil. Cheda is a Sanskrit word meaning ‘cut, split’. Chedamillaatha is uncut, not split, unspoiled, undivided)

3).We will build a bridge to Singhalese Island

And elevate Setu and make it a road;

We will irrigate central regions

With surplus water of Bengal (Ganges in Bengal).

—Subham–

3 ராமர்கள், 3 பரதர்கள், 6 கர்ணர்கள்!

01cp_sampoorna_ram_1129781f

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

WRIITEN BY  ச.நாகராஜன்

Date : 13 September  2015

Post No. 2154

Time uploaded in London: –   காலை 11-19

(Thanks  for the pictures)

 

.நாகராஜன்

விஷய அடுக்கு

எதையும் அடுக்கினாலே அழகு தான். கொலு பொம்மைகளை அடுக்குவதில் தான் எத்தனை ஆயிரம் விதங்கள். வீட்டுக்கு வீடு படைப்பாற்றல் – கிரியேடிவிடி! அது ஒரு அழகு.

வார்த்தைகளையும் விஷயங்களையும் அடுக்குவது இன்னொரு அழகு!

அடுக்கு மொழி என்றாலே ஒரு கவர்ச்சி தான்! (தீயசக்திகள் தமிழகத்தில் தமிழர்களை ஏய்க்கும் அடுக்குமொழி தவிர மற்ற அனைத்தும் நல்லவையே)

ராமன், பரதன், கர்ணன் என்றால் மகிழ்ச்சியுடன் விஷயத்தைச் சற்று அறிந்து கொள்ள ஆவலாக இருக்கும்.

3 ராமர், 3 பரதர் 6 கர்ணர்கள் என்றால்.. ஆவல் பன்மடங்காகும்.

3 ராமர்கள் யார்?

தசரத ராமன், பரசுராமன், பலராமன்!

ராம நாமத்தால் இம்மை மறுமை நலம் பெறலாம். நன்மையும் செல்வமும் பெறலாம். சென்மமும் மரணமும் இன்றி இன்புறலாம்.

தசரத ராமனையா தெரியாது, ராம, ராம, ராம ராமஜயம்!

அடுத்து பரசுராமன். ஜமதக்னி-ரேணுகாவின் புதல்வர்!

பரசுராம பார்கவர்! தசரத ராமன் தந்தை, தாய் சொல்லைத் தட்டவில்லை. ஆனால் பரசுராமன் தந்தை சொல் தட்டவில்லை. தாயின் தலையைத் துண்டிக்க தந்தை ஆணையிட அதை சிரமேற்கொண்டு ஏற்ற தந்தை சொல் தட்டா தனயன் பரசுராமன்!

அடுத்து பலராமன்! கண்ணனின் அண்ணன். மகாபாரதப் போரின் போது தீர்த்த யாத்திரை சென்றவர் கடைசி க்ளைமாக்ஸில் வந்து தன் முத்திரையைப் பதிக்கிறார். துரியோதனன் – பீமன் சண்டையில் கதையை பீமன் துரியோதனனின் இடுப்புக்குக் கீழே துடையில் அடித்தது தவறு என்று ஆட்சேபணை கிளப்பியவர். தரையில் இருந்த போது தான் அடிக்கக் கூடாது, துரியோதனன் ஆகாயத்தில் உயர்ந்த போது கதை அவன் துடையில் பட்டது என்று மாமாயக் கண்ணன் அவரை சமாதானப் படுத்த அமைதியாகிறார். ஆயிரம் சம்பவங்கள் இவரைச் சுற்றி. அறியாமல் இருக்க முடியாதே!

MaharajaRahuganasarcasticallychastisesJadaBharata

பல்லக்கை சுமந்துவரும் ஜடபரதன்

 

மூன்று பரதர்கள் யார்

அடுத்த மூவர் – 3 பரதர்

ராமனின் தம்பி பரதன்

பரத வம்ச பரதன்

ஜட பரதன்

கானகம் வந்த பரதனை முதலில் சந்தேகித்து அவனது உண்மையான ராம பக்தியை அறிந்த பின்னர் குகன் கூறுவது:-

“தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை

தீவினை என்ன நீத்து, சிந்தனை முகத்தில் தேக்கி,

போயினை என்ற போழ்து, புகழினோய் தன்மை கண்டால்

ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியன் அம்மா”

—- (அயோத்தியா காண்டம் குகப் படலம்)

சிந்தனை முகத்தில் தேக்கி, ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, என்றெல்லாம் கம்பரைத் தவிரை வேறு யாரால் தான் சொல்ல முடியும் தெரியன், அம்மா!

அடுத்து பரதன்! பாரத தேசத்தில் பிறந்து பரதனைத் தெரியவில்லை என்றால் அது தேசீய அவமானம். புகழோங்கிய பரதனின் வழித்தோன்றல் என்பதில் தான் நமக்கு என்ன ஒரு பெருமிதம்!

அடுத்து ஜட பரதர். மான் ஈன்ற குட்டி மீது பாசம் வைத்து மறு ஜன்மம் பெற்றவர். பல்லக்கில் மன்னனை எட்டி எட்டி காலை வைத்துத் தூக்க, பல்லக்கு ஆட, மன்னன் கோபப் பட்டு இறங்கி, யார் நீ என்று வினவ, அவனுக்கு அடித்தது யோகம்! ஆன்ம லாபம் பெற வைத்த உபதேசத்தை ஜட பரதர் உபதேசித்த வரலாறு நம்மைப் புல்லரிக்க வைக்கும்.

மூன்று பரதருக்கும் ஒரு ஜே போட்டு 6 கர்ணர்களின் பக்கம் திரும்புவோம்.

karnan

ஆறு கர்ணர்கள் யார்?

 

மஹாரதி கர்ணன்

கௌரவ குலத்தில் பிறந்த விகர்ணன்

க்ஷேத்திரங்களில் சிறந்த கோகர்ண(ம்)

ராட்சஸரில் சிறந்த கும்பகர்ணன்

ஷ்யாம நிறம் படைத்த காதுகள் கொண்ட குதிரைகள்- ஷ்யாம கர்ண (குதிரை)

சரீரத்தில் உன்னதமாக உள்ளுக்குள் இருக்கும் அந்தக் கரண(ம்.

இந்த ஆறின் சிறப்பே சிறப்பு என்று அடித்து, அடுக்கிச் சொல்கிறார்கள் அறிஞர்கள்!

கர்ணனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். குந்தியின் புத்ரன். செஞ்சோற்றுக் கடன் கழிக்கச் சேரக் கூடாதவருடன் சேர்ந்தவன். மஹா ரதி. கொடுத்துச் சிவந்தவன்.

விகர்ணன் கௌரவர் நூற்றுவரில் ஒருவன். திரௌபதியை சபை நடுவே துகில் உரித்த போது யாரும் அதைக் கண்டிக்காத சூழ்நிலையில் வாய் திறந்து கண்டித்த தர்மவான் விகர்ணன். கடைசியில், இவனைக் கொல்ல நேர்ந்ததே என்று மனம் துக்கப்பட்டவாறே பீமன் கொன்றான். விகர்ணன் தீயோருடன் சேர்ந்த பாவத்தால் அழிந்து பட்டான்.

சிவ க்ஷேத்திரங்களுள் துளுவ நாட்டில் உள்ள சிறந்த கோகர்ணம் சிவ ஸ்தலங்களுள் பிரசித்தி பெற்றது. சிவபிரானின் காதுகள் பசுவின் காது போலக் குழைந்து இருப்பதால் இந்த புனிதத் தலம் கோகர்ணம் என்ற பெயரைப் பெற்றது.

இன்ன உரு என்று அறிவு ஒணாதான் காண்

ஏழ்கடலும் ஏழ் உலகும் ஆயினான் காண்

மன்னும் மடந்தை ஓர் பாகத்தான் காண்

மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே

என்பது அப்பர்,,வாக்கு (6ஆம் திருமுறை –சந்திரனும் தண்புனலும் எனத் தொடங்கும் பதிகத்தில் 8ஆம் பாடல் காண்க)

ஆறு சமயங்களும் விரும்பி அடி பேணி அரன் ஆகமம் மிகக்

கூறு மனம் ஏறு இரதி வந்து அடியர் கம்பம் வரு கோகரணமே

என்பது ஞானசம்பந்தர் அருளிய பாடல். (3ஆம் திருமுறை என்றும் அரியான் எனத் தொடங்கும் பதிகத்தில் 6அம் பாடல் காண்க).

ராவணனின் தம்பி கும்பகர்ணன்! சீதையைத் தூக்கி வந்தது தப்பு என்று அண்ணனை இடித்து உரைத்தவன். இவன் கூறுவதாக கம்பன் இயற்றிய பாடல் மிகவும் புகழ் பெற்றது. ‘பேசுவது மானம் இடை பேணுவது காமம்’ என்ற இவனது சாட்டையடிச் சொற்கள் ராவணனது அரசவையில் ஒரு நாடகக் காட்சியையே தோற்றுவிக்கிறது.

ஷ்யாம வர்ணம் பொருந்திய குதிரைகள் மிகச் சிறந்தவை என்று அஸ்வ சாஸ்திரம் கூறுகிறது.

சரீர உறுப்புகளில் மிகவும் நுட்பமானது அந்தக் கரணம் – மனச் சாட்சி. இறைவனின் குரலே மனச்சாட்சியின் குரல்.

ஆக இந்த ஆறு கரணங்கள் சிறப்பானவை என்று அழகுற அடுக்கிச் சொல்லும் போது ஏராளமான சிறப்பான விஷயங்களை ஒரு அலசு அலசித் தெரிந்து கொள்ள முடிகிறது.

ஹிந்து இலக்கியத்தை சுவைபடப் புரிந்து கொள்ள இப்படி ‘3 ராமர், 3 பரதர், ஆறு கர்ணர்’ போன்ற சொற்றொடர்கள் உதவுகின்றன இல்லையா!

***************

நடிகர்களைத் தேர்வு செய்வது எப்படி? ஹாலிவுட் டைரக்டர்கள் வைக்கும் தேர்வுகள்

12 disciples

Picture of 12 Disciples of Jesus Christ

WRIITEN BY london swaminathan

Date : 13 September  2015

Post No. 2153

Time uploaded in London: – 10-47 am

(Thanks  for the pictures)

பிரபல ஹாலிவுட் டைரக்டர்கள் பற்றிய சில சுவையான சம்பவங்கள்:

ரஷ்யாவின் புகழ் பெற்ற டைரக்டர் கான்ஸ்டன் டின் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி. அவரைச் சந்தித்த அமெரிக்க நடிகர் ஜான் பாரிமோர், ஒரு கேள்வி கேட்டார்: “அன்பரே, நீங்கள் எப்படி அருமையான நடிகர்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்? இதன் ரஹசியம் என்ன?”

இப்படி அவர் கேள்வி கேட்கும் போதே ஸ்டானிஸ்லாவ்ஸ்கி, ஒரு குண்டூசியைக் கையில் எடுத்துக்கொண்டார். கொஞ்சம் வெளியே போங்கள் – என்று நடிகர் பாரிமோரிடம் கூறினார். அவரும் வெளியே சென்றார்.

அடுத்த நிமிடமே, நீங்கள் இப்போது உள்ளே வரலாம் – என்று ஸ்டானிஸ்லாவ்ஸ்கி அழைத்தவுடன் பாரிமோர் உள்ளே வந்தார். குண்டூசி ஒன்றைப் போட்டுவிட்டேன்; கண்டுபிடித்துத் தாருங்கள் – என்றார்.

பாரிமோர் தேட ஆரம்பித்தார். மேஜையின் மீதிருந்த கோப்பைகளை எல்லாம் தூக்கிப் பார்த்தார். டேபிள் கிளாத் மீது கையால் தடவிப் பார்த்தார். பின்னர் அதன் ஒரு முனையைப் பிடித்துக் கொண்டு தூக்கிப் பார்த்தார். இப்படி தேடத் துவங்கியவுடன், ஸ்டானிஸ்லாவ்ஸ்கி சொன்னார்: நீங்கள் நல்ல நடிகர்; என் படத்தில் ‘சான்ஸ்’ கொடுக்கிறேன் என்றார்.

பின்னர், நடிக்க ஆசைப்பட்டு வருவோருக்கு இப்படித்தான் நான் சில வேலைகளைக் கொடுப்பேன். யார் ஒருவர் இயல்பாக, உண்மையில், தான் இழந்த ஒரு பொருளைத் தேடும் பாணியில், தேடுகிறார்களோ அவரையே நான் சிறந்த நடிகன் என்பேன். மிகைப்படுத்தி, அதிகப் பிரசங்கித்தனமாக இங்கும் அங்கும் ஆடி, ஓடி குண்டூசியைத் தேடியிருந்தால் அவருக்கு என்னிடம் நடிகர் வேலை கிடைக்காது என்றார்.

barrymoreRussia-2000-stamp-Konstantin_Stanislavski_

Baarymore (USA) Stanislavski (Russia) Stamps

உதவாக்கரைகளை வீட்டுக்கு அனுப்புவது எப்படி?

ஆங்கில நடிகரும் தியேட்டர் மானேஜருமான சர் ஹெர்ப்ர்ட் ட்ரீயிடம் ஒரு இள நடிகர், வேலை கேட்டு வந்தார். மேடையில் அவர் தோன்றியபோது, “ஒரு இரண்டடி பின்னால் போங்கள்” – என்றார். கொஞ்சம் நேரம் அவரை உன்னிப்பாகக் கவனித்தபோது “இன்னும் கொஞ்சம் பின்னால் போங்கள்” — என்றார். அவரது நடிப்பையெல்லாம் பார்த்தபோது “இன்னும் இரண்டடி பின்னால் போங்கள்” — என்றார். உடனே அவர், “ஸார், இனிமேல் நான் பின்னால் போனால், மேடையில் இருக்கமாட்டேன்; கீழேதான் இருப்பேன்” – என்றார்.

அது எனக்குத் தெரியும்; அதைத்தான் நான் சொன்னேன் – என்றார் ட்ரீ!

நடிக்கத் திறமையில்லை, வீட்டுக்குப் போங்கள் என்று சொல்ல பல வழிகள் உண்டு; அதில் இது ஒன்று!

jesus 12 disciples

கிறிஸ்துவுக்கே 12 சீடர்கள்தான்!

ஹாலிவுட் டைரக்டர்களில் புகழ்பெற்ற ஜோசெப் வான் ஸ்டான்பெர்க்கிடம்- பிரபல நடிகர் சாம் ஜெப் நடிக்கவந்தார். தி ஸ்கார்லெட் எம்ப்ரஸ் என்ற திரைப்படம் உருவாகிக் கொண்டிருந்தது. நடிகருக்கும், டைரக்டருக்கும் எப்போது பார்த்தாலும் சண்டைதான். சில உத்தரவுகள் நடிகருக்குப் பிடிக்கவில்லை. அதைத் தான் செய்யமுடியாது என்று மறுத்துவிட்டார்.

உடனே ஸ்டான்பெர்க் உரத்தகுரலில், “ என்னை யார் என்று உனக்குத் தெரியாதா? எனக்கு 10,000 சீடர்கள் (ரசிகர்கள்) இருக்கிறார்கள்; உனக்குப் புரிகிறதா? என்று சத்தம் போட்டார்.

உடனே சாம் ஜெப், அப்படியா! நீங்கள் உண்மையிலேயே பெரிய அதிர்ஷ்டசாலிதான்! ஏசு கிறிஸ்துவுக்கே 12 சீடர்கள்தான்!!! என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

–சுபம்—