ஆக்னேயாஸ்திரம், பிரம்மசிரஸ் !!

The AGNI-III (Strategic System) passes through the Rajpath during the 60th Republic Day Parade-2009, in New Delhi on January 26, 2009.

The AGNI-III (Strategic System) passes through the Rajpath during the 60th Republic Day Parade-2009, in New Delhi on January 26, 2009.

Research Article  by S NAGARAJAN

Post No.2240

Date: 13 October 2015

Time uploaded in London: காலை 9-34

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

 

ரிஷிகள் சரித்திரம்

 

ஆக்னேயாஸ்திரம், பிரம்மசிரஸ் ஆகியவற்றை துரோணர் யாரிடமிருந்து பெற்றார்?

.நாகராஜன்

 

ராமாயணம், மஹா பாரதம் ஆகிய இதிஹாஸங்களும் நமது புராணங்களும் ஏராளமான ரிஷிகளின் சரித்திரத்தைக் குறிப்பிடுகின்றன.

மஹாபாரதத்தில் ஆதி பர்வம் மற்றும் சல்ய பர்வத்தில் வரும் இரு ரிஷிகளைப் பற்றிய குறிப்புகளை இங்கு பார்ப்போம்.

 

 

அக்னிவேசர்

இவர் அக்னியிலிருந்து ஜனித்தவர். இவர் தவ சக்தியுள்ள ஒரு ரிஷி. பரத்வாஜருடைய சிஷ்யர். இவர் சூத்திரம் இயற்றியவரில் ஒருவர்.

பரத்வாஜரால் தமக்கு உபதேசிக்கப்பட்ட ஆக்னேயாஸ்திர மந்திரத்தை பரத்வாஜருடைய புத்திரரும், தம்முடைய சீடருமான துரோணாசாரியாருக்கு இவர் உபதேசம் செய்தார்.

அதே போல, சாதாரண மனிதர்கள் மேல் பிரயோக்கிக்கக் கூடாததும், உலகையெல்லாம் அழிக்கக் கூடியதும், எப்போது பிரயோகித்தாலும் வீண் போகாததுமான “பிரம்மசிரஸ்” என்ற அபூர்வமான தேவாஸ்திரத்தையும் துரோணருக்குக் கொடுத்தார்.

Agni-II_missile

அதை துரோணர் அர்ஜுனனுக்குக் கொடுத்தார்.

அர்ஜுனனுக்கு மட்டும் துரோணர் இதை ஏன் கொடுக்க வேண்டும்? அதற்கு ஒரு சுவையான வரலாறு உண்டு.

ஒரு நாள் அனைத்து சிஷ்யர்களுடனும் கங்கையில் குளிப்பதற்காக துரோணாசாரியர் சென்றார். குளிக்கும் போது, பலமான முதலை ஒன்று அவரது கணுக்காலைப் பிடித்தது. தன்னை விடுவித்துக் கொள்ளும் சக்தி அவருக்கு உண்டு என்றாலும் அவர் அப்படிச் செய்யவில்லை. “முதலை என்னைப் பிடித்து விட்டது. காப்பாற்றுங்கள்’ என்று கூக்குரலிட்டார். மற்றவர்கள் ஒன்றும் புரியாமல் அங்கும் இங்குமாக ஓடினர். அர்ஜுனனோ ஐந்து அம்புகளை வீசி நீருக்குள் இருந்த முதலையைக் கொன்று துரோணரை விடுவித்தான்.

இதனால் துரோணர் மகிழ்ந்தார்.

அர்ஜுனனுடைய திறமையை அனைவரும் அறிய வேண்டும் என்று எண்ணிய துரோணர், அனைத்து சிஷ்யர்களையும் அழைத்தார்.

துரியோதனன், சித்திரஸேனன், துச்சாஸனன்,விவிம்சதி, அர்ஜுனன், அஸ்வத்தாமா ஆகியோரை முன்னே வரச் சொல்லி, மண்ணால் ஒரு குழந்தையைச் செய்து அதை  சிஷ்யர்கள் பார்க்கும் போதே கங்கையில் போட்டார். அனைவரின் கண்களையும் துணிகளால் கட்டி, வில்லைக் கொடுத்தார். “கண் கட்டியிருக்கும்படியே ஜலத்தில் இருக்கும் பொம்மைக் குழந்தையை அடியுங்கள்” என்றார்.

மற்றவர்கள் பேசாமல் இருக்க, அர்ஜுனன் மட்டும் 15 பாணங்களினால் நீருக்குள் மூழ்கி இருந்த அந்த பொம்மையை அடித்தான்.

அனைவரிலும் அர்ஜுனனே திறமைசாலி என்ற முடிவுக்கு வந்த துரோணர் ‘பிரம்ம சிரஸ்’ என்ற அஸ்திரத்தை உபதேசித்தார். அஸ்திரம் விடுவது, திருப்பி வாங்குவது, அதன் சொரூப நிர்ணயம் ஆகிய மூன்றையும் விதிப்படி அர்ஜுனன் கற்றுக் கொண்டான். அர்ஜுனனிடம், “மனிதர்கள், அற்ப சக்தியுள்ளவர்கள் மேல் இதை பிரயோகிக்காதே! மனிதரல்லாத தேவர் முதலியோர் உன்னை வருத்துவாரானால் இதை நீ பிரயோகிக்கலாம்” என்றார் துரோணர். “உலகில் உன்னைப் போன்ற ஒரு வில்லாளி இன்னொருவன் இனிமேல் இல்லை” என்று புகழாரமும் சூட்டினார். (சல்ய பர்வம் 143வது அத்தியாயம்)

(மஹா பாரதம், ஆதி பர்வம், 140வது, 143வது அத்தியாயம்)

saras2

அரிஷ்டஸேனர் அல்லது ஆர்ஷ்டிஸேனர்

முன்னொரு காலத்தில் பிரம்மா தமது சக்தியால் “லோகாலோகம்” என்ற பர்வதத்தைப் படைத்து அருளினார். அங்கே ஒரு சிறந்த புண்ணீய தீர்த்தம் இருக்கிறது.

அந்த இடத்தில் அரிஷ்டஸேனர் என்னும் பெரும் முனிவர் கடுமையான தவம் செய்து பிராமணர் என்னும் உயர் பதவியை அடைந்தார்.

இவரைப் பற்றிய இன்னொரு செய்தி மஹாபாரதம் சல்ய பர்வத்தில் நாற்பத்தோராவது அத்தியாயத்தில் வருகிறது:

ஆதி காலத்தில் கிருத யுகத்தில் அரிஷ்டஸேனர் என்ற ஒருவர் இருந்தார். அவர் தனது குருவின் வீட்டில் இருந்து கொண்டு கல்வி கற்று வந்தார்.

அவ்வாறு வெகு காலம் கற்றும், குருகுலத்தில் இருந்தும், அவரது வித்தை ஒரு முடிவுக்கு வரவில்லை. வேதங்களும் முடிவு பெறவில்லை. பிறகு கவலையுடன் அவர் பெரும் தவம் புரிந்தார். அந்த தவத்தின் மூலம் வேதங்களை அறிந்தார்.

அவ்வாறு சிறந்த கல்வியையும், வேத ஞானத்தையும் அடைந்து மேலே சொன்ன தீர்த்தத்தில் இருந்து கொண்டு பெரும் பயனைப் பெற்றார்.

அவர் பிறகு அந்தப் புண்ணிய தீர்த்தத்திற்கு மூன்று வரங்களை அளித்தார்.

இன்று  முதல் சரஸ்வதி நதியினுடைய இந்த தீர்த்தத்தில் குளிப்பவன் அசுவமேத யாகம் செய்த பெரும் பயனை அடைவான்.

இன்று முதல் இந்த தீர்த்தத்தில் குளிப்பவர்களுக்கு பாம்புகளாலும், காட்டு மிருகங்களாலும் எவ்வித அபாயமும் நேரிடாது.

சிறிய முயற்சிகளைச் செய்பவனும் கூட இவ்விடத்தில் பெரும் பயனை அடைவான்.”

 

இந்த மூன்று வரங்களையும் கொடுத்து விட்டு அரிஷ்ட ஸேனர் சுவர்க்கத்தை அடைந்தார்.

 

                            (மகா பாரதம், சல்ய பர்வம் அத்தியாயம் 41)

 

சுபம்–

***

திரவுபதியை கிருஷ்ணன் காப்பாற்றியது ஏன்?

Was Draupadi Disrobed

Compiled by London swaminathan

Post No.2239

Date: 13 October 2015

Time uploaded in London: காலை 9-15

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

மஹாபாரதம் உலகிலேயே மிக நீண்ட இதிஹாசம். சமய சம்பந்தமான நூல்களில் இதுவே உலகில் பெரிய நூல். இது ஒரு பெரிய பொக்கிஷம். கடல் போலப் பரந்த விஷயங்கள் இதில் உள்ளன. இதில் எப்போது மூழ்கினாலும் முத்து, பவளம், வலம்புரிச் சங்குகள் கிடைக்கும். ஆனால் இதிலுள்ள விஷயங்களை யாரும் விஷயம் வாரியாகத் தொகுத்து வெளியிடவில்லை. இதிலுள்ள கதாபாத்திரங்கள், உவமைகள் முதலியன பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் உள்ளன. ஆனால் பொன்மொழிகளை விஷயம் வாரியாக (சப்ஜெக்ட்) வெளியிட்டால் நன்றாக இருக்கும். கீழேயுள்ள நான்கு ஸ்லோகங்கள் பல முக்கிய விஷயங்களைத் தரும்:

‘லக்கி’ திரவுபதி

சதுர்பி: காரணை: க்ருஷ்ண த்வயா ரக்ஷ்யாஸ்மி நித்யச:

சம்பந்தாத் கௌரவாத் சக்யாத் ப்ரபுத்வேநைவ கேசவ

(மஹாபாரதம், வனபர்வம்,12-127)

திரவுபதியைக் கிருஷ்ணன், காப்பாற்றியதற்கு நான்கு காரணங்கள் உண்டு:

1.சம்பந்தாத் = உறவு முறை

2.கௌரவாத் = மானத்தைக் காப்பாற்றும் பொருட்டு

3.சக்யாத்= நட்புமுறை

4.ப்ரபுத்வாத்= இறைவன் என்ற முறையில்

longest step

சுவர்க்கத்துக்குப் போக உதவும் படிக்கட்டு எது?

சத்யமே (உண்மை) ஸ்வர்கத்துக்கான மாடிப்படி. அதில் ஏறினால் எளிதில் சொர்க்கத்தை அடையலாம்.

ஏகமேவாத்விதீயம் யத் தத் ராஜன் நாவபுத்யசே

சத்யம் ஸ்வர்கஸ்ய சோபானம் பாராவாராஸ்ய நௌரிவ

(மஹாபாரதம், உத்யோக பர்வம்,33-47)

எவ்வாறு படகு ஒன்று கடல், அல்லது, நதியைக் கடக்க உதவுமோ அவ்வாறு சுவர்க்கம் செல்ல சத்யம் என்பது படிக்கட்டாகத் திகழ்கிறது.

ஏ, மன்னனே, நீ இதைப் புரிந்து கொள்ளத் தவறி விட்டாய். இதைவிட வேறொன்றுமில்லை.

(சுவர்க்கம் என்பது மேலே இருப்பதால் மேலேறிச் செல்லும் படி உவமையாக்கப்பட்டது)

Simple-Indoor-Stair-Treads

தர்மத்தின் விளக்கம், இலக்கணம் என்ன?

வேதோக்த: பரமோ தர்ம: தர்மசாஸ்த்ரேஷு சாபர:

சிஷ்டாசாரஸ்ச சிஷ்டானாம் த்ரிவிதம் தர்ம லக்ஷணம்

(மஹாபாரதம், வன பர்வம்,207-83)

தர்மம் என்பது மூன்று இடங்களில் இருக்கிறது:–

வேதத்தில் சொல்லப்பட்ட எல்லாம் தர்மம்

தர்மசாஸ்த்ரம் = நீதி நூல்கள் செப்புவது அனைத்தும் தர்மம்

சிஷ்டாசார: = ஆசாரம் பற்றிய விதிமுறைகலைச் சொல்லுவது எல்லாம் தர்மம் ( இதை ஒவ்வொரு காலத்திலும் குரு அல்லது குடும்பத்திலுள்ள பெரியோர்கள் சொல்லும் மொழிகள் எனக் கொள்ளலாம்)

 krshna eating

மற்றவர்கள் வீட்டில் சாப்பிடலாமா?

கிருஷ்ணர், கௌரவர்களின் பெரிய அரண்மனை விருந்தை விட்டுவிட்டு, தேரோட்டி விதுரன் வீட்டில் தங்கினார். ராமன், சபரி என்னும் வேடுவச்சி கடித்துக் கொடுத்த இலந்தைப் பழத்தைச் சாப்பிட்டார். கண்ணாப்ப நாயனார், எச்சில்படுத்டிக் கொடுத்ததை, சிவ பெருமான் ஏற்றார். ஏன்?

சம்ப்ரீதி போஜ்யான்யன்னானி ஆபத் போஜயானி வா புன:

ந ச சம்ப்ரீயசே ராஜன் ந சைவாபத்கதா வயம்

(மஹாபாரதம், உத்யோக பர்வம்,91-25)

அன்பின் காரணமாக அளிக்கப்பட்ட எதையும் ஏற்கலாம் ( அவர்கள் வீட்டில் சாப்பிடலாம்; அசுத்தமான உணவானாலும், தூய அன்பு, அந்த உணவைச் சுத்தப் படுத்திவிடும்)

ஆபத்துக் காலத்திலும் எங்கும் சாப்பிடலாம் (உயிரைக் காப்பதே முதல் கடமை; சுவர் இருந்தால்தானே சித்திரம்? உயிர் இருந்தால்தானே சாஸ்திரம்!)

–சுபம்-

Satyam Svargasya Sopaanam: Truth is Step to Heaven

longest step

Compiled by London swaminathan

Post No.2238

Date: 12  October 2015

Time uploaded in London: 17-52

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

Mahabaharata, the longest epic in the world, has got thousands of quotable quotes; there are thousands of similes as well. All the great scholars quote such beautiful sentences and phrases in appropriate places, but no one has done them subject wise or indexed them subject wise. One has to go deeper like pearl fishing. Here are some quotations:

Simple-Indoor-Stair-Treads

Truth – Step to Heaven

Ekamevaaadvitiyam tad yad Raajan naavabudhyase

Satyam svargasya sopaanam paaraavaarasya nauriva

–Mahabharatam (Udyoga Parva 33-47)

A boat helps one to cross the ocean and truth helps one to go to Heaven acting like Steps (sopaana); O,King you failed to understand it. There is no second opinion about it.

Eating in Other’s House

You can eat food in others’ houses under two circumstances.

Sampriti = Mutual affection

Apad  = when you are in difficulty

Sampriitibojyaanyannaani apadbojyaani vaa puna:

Na cha sampriiyase Rajan na chaivaapagataa vayam

–Mahabharatam (Udyoga Parva 91-25)

krshna eating

What is Dharma’s Definition?

The definition or the qualities of Dharma (Righteousness) is/are

Vedoktah = As stated in the Vedas

Dharmasastra = As found in scriptures dealing with Rules of Conduct

Sistaacaarah = Code of Conduct

Vedokta: paramo dharma: dharmasaastreshu chaapara:

Sistaachaarascha sistaanaam trivdham dharmalakshanam

–Mahabharatam (Vana Parva 207-83)

Was Draupadi Disrobed

Why did Krishna help Draupadi?

Four Reasons for the Lord to protect Draupadi:

Sambandha = Relationship

Gaurava = Honour

Sakhya = Friendship

Prabhutva = Lordship

Chaturbi: kaaranai: Krishna tvayaa rakshyaasmi nityasa:

Sambandhaad gauravaatsakhyaat prabhutvenaiva Kesava

–Mahabharatam (Vana Parva 12-127)

–subham–

தேவி, அருள் புரி!

durga on lion

நவராத்திரியை ஒட்டி விசேஷ கட்டுரை

 

Compiled by ச.நாகராஜன்

Post No.2237

Date: 12  October 2015

Time uploaded in London: 9-02 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

By .நாகராஜன்

 

 

சித் ரூபிணி பைரவி                                                        

சிவே மனோஹரி                                                                 

பக்த ஜனப்ரிய                                                                     

பாலே தயாபரி

*

பார்வதி சங்கரி                                                                        

காளி சுபகரி                                                                         

பகவதி சாம்பவி                                                                   

தேவி அருள் புரி

15-12-76 5 p.m.

 

தந்தையார் கைப்பட எழுதிய கீதம்

devi santanam

 

 

 

 

 

இது எனது தந்தையார் (V.Santanam) 15-12-1976 அன்று மாலை ஐந்து மணிக்கு இயற்றிய கீதம்.

தினமணியின் மதுரை இதழின் பொறுப்பாசிரியராகப் பல்லாண்டுகள் பணியாற்றிய அவர் பன்முகம் கொண்ட ஒரு உயர் மனிதர்.

ஶ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளுக்குப் பாத்திரமானவர். சென்னை, ஆபட்ஸ்பரிக்கு அழைத்து ஒரே மேடையில் இருக்கும் போது பாபா அவரை பேசுமாறு அருளினார்.

1965 நவம்பர் மாதம் புட்டபர்த்திக்கு மதுரை அன்பர்கள் ஏராளமானோர் அவரவர் கார்களில் கிளம்பி புட்டபர்த்திக்குச் சென்றோம். நவம்பர் 23ஆம் தேதி பிறந்த நாளுக்கு முன்னர் அங்கே சென்று சேர்ந்தோம். அங்கே தான் இயற்றிய கீதங்களை பாபாவிடம் சமர்ப்பித்தார் என் தந்தை.

அந்தப் பாடல்கள் பல்வேறு சங்கீத விற்பன்னர்களால் பல மேடைகளில் நன்கு இசை அமைத்துப் பாடப்பட்டன. பாரத் ரத்னா திருமது எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் சகோதரரான திரு எம்.எஸ்.சக்திவேல் உள்ளிட்டோர் இதில் அடங்குவர்.

இவற்றில் 108 கீதங்கள் பின்னர் தொகுக்கப்பட்டு சத்ய சாயி சேவா சங்கம், மதுரையினால் 1966இல்ஸாயி கீதங்கள்என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது.

*

அதில் எனது தந்தையார் எழுதியுள்ள முகவுரையைக் கீழே தருகிறேன்.

 

முகவுரை

     இந்த கீதங்களைப் புனைந்தவர் ஶ்ரீ இதய சாயி. எழுதுகோல் போன்ற கருவி தான் நான். நூறு நாட்களில் நூற்று எட்டு பாட்டுகளும் நாமாவளிகளும் ஶ்ரீ இதய சாயி கூற நான் எழுதினேன். சில கீதங்கள் ராகம், மெட்டுகளுடன் வந்தன. சிலவற்றிற்கு சங்கீத வித்வான்கள் மெட்டுகள் அமைத்துக் கொடுத்தனர்

     “அவருக்கு சங்கீத ஞானமே கிடையாது. சாஹித்ய ஞானம் கிடையாது. எழுதியதெல்லாம் அவரே மறந்து போய் விட்டார். அவரை வேண்டுமானால் கேளுங்கள்என்று பகவான் ஶ்ரீ சத்யசாயி பாபா இன்னொருவரிடம் இந்த கீதம் எழுதப்பட்ட விதம் பற்றி கூறினார். பகவானின் பாதகமலங்களில் இந்த கீதங்களை சமர்ப்பித்த போது மேற்சொன்ன மொழிகளைப் புகன்று, “பதங்கள் பரதநாட்டியம் போல நடை போட்டுச் செல்கின்றனஎன்று அருளினார் பகவான்.

 

    “இரண்டு இரண்டு பாட்டுக்களாக எழுதி பகவான் பாத கமலங்களில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்என்று ஒரு நண்பர் பகவான் முன்னிலையில் எழுதியவரை நோக்கிக் கூறினார். உடனே பகவான் குறுக்கிட்டுஒவ்வொரு கீதமும் எழுதப்படும் போதே முன்னரேயே சமர்ப்பித்தாகி விட்டதுஎன்று ஆசீர்வதித்தார். அந்த பகவானின் பாத கமலங்களில் மீண்டும் இந்த கீதங்களை சமர்ப்பிக்கின்றேன்.

 

    என்ன ராகம், என்ன மெட்டுகள் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளுங்கள். பதங்களை மட்டும் யாரும் மாற்றவே கூடாது. அது பகவத் அபசாரமாகி விடும்.

 

    இந்த பாட்டுகள் யாவும், இது சம்பந்தப்பட்ட எல்ல உரிமைகளும் மதுரை சத்திய சாயி சேவா சங்கத்துக்கே சமர்ப்பணம்.

மதுரை                                                      வெ.சந்தானம்

1-3-’66   

        

*

     நூலில் முதல் கீதமாக இடம் பெறும் மகா கணபதி பற்றிய கீதத்தைக் கீழே காணலாம்.

 

swastk ganesh

மகாகணபதி

                                                       ஹம்ஸத்வனிஆதி

பல்லவி

மகா கணபதே நமஸ்தே கஜமுக

மகா சுகிர்த வர வல்லப கணபதி

..

தேஹி ஸித்தி புத்தி மங்கள நாதா

ஓங்கார ரூபா விக்னஹர பாதா

சரணம்

கவிகள் நாயகா ஹரன் சிவை புத்ரா

கானம் கல்வி கலை வர அருள் நேத்ரா

நமோ விநாயகா தெய்வநாயகா

பாதகத்துயர் போக்கி சாதக வாழ்வருள்

*

 

BABA PU ALANKARAM

ஒவ்வொரு நவராத்திரியும் ஒன்பது நாட்களிலும் சத்தியசாயி சேவா சங்கம், மதுரையில் சங்கீத கச்சேரி, பாபா பற்றிய சொற்பொழிவுகள், அஷ்டோத்திரம், பஜனை, பூஜை என்று அனைத்து ஆன்மீக நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடக்கும்.

 

அந்தக் கச்சேரிகளில் எனது தந்தையார் இயற்றிய கீதங்களை அபார கற்பனை வளத்துடன் பல வித்வான்கள் பாடி மகிழ்வர்; குழுமி இருப்போரை மகிழ்விப்பர்.

 

பொன்னான காலம் அது. அதை ஒட்டிய மலரும் நினைவுகளை இந்த நவராத்திரி கட்டுரை கொண்டுள்ளது.

*

 Pictures are added now from different sources.Thanks.

Erudition: Four Anecdotes!

M Twain

Compiled by London swaminathan

Post No.2236

Date: 11  October 2015

Time uploaded in London: 19-55

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

Mark Twain once observed sagely, “one should be careful to get out of an experience only the wisdom that is in it – and stop there; lest we be like the cat that sits down on the hot stove lid. She will never sit down on a hot stove lid again – and that is well; but also she will never sit down on a cold one anymore.”

Xxx

When Bernardo Tasso remonstrated with his son, the immortal Torquato, on his injudicious preference of philosophy to jurisprudence, and angrily demanded: “What has philosophy done for you?”

Torquato replied: “It has taught me to hear with meekness the reproofs of a father.”

Torquato_Tasso

picture of Torquato

Xxx

President Woodrow Wilson would sit down beside his green-shaded lamp and take p one paper after another – and work until the small hours. Approval was designated by “Okeh,W.W.” on the margin of a paper.

Someone asked why he did not use the “O.K.”

“Because it is wrong,” Mr Wilson said. He said that the enquirer look up “Okeh” in a dictionary. That he did and discovered that it is a Choktaw word meaning “It is so”.

Xxx

Someone once rudely taunted John Maynard, Lord Commissioner of the Great Seal of England, with having grown old to forget his law.

“True, Sir,” he replied, “I have forgotten more law than you ever learned.”

2.இந்துக் கடவுள்களை இனம் காணுவது எப்படி?- பகுதி 2

IMG_6803

Compiled by London swaminathan

Post No.2235

Date: 11  October 2015

Time uploaded in London: 17-47

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளிடப்பட்டது

d82cc-brahma-stamp

பிரம்மா

நான்கு தலைகள்; ஆனால் பெரும்பாலும் மூன்று தலைகள் மட்டுமே தெரியும். கையில் ஜப மாலை, வேதப் புத்தகம் இருக்கும். சில உருவங்களில் அன்னப் பட்சியும் அருகில் நிற்கும் அல்லது தாமரை மேலமர்ந்தவராகக் காட்சி தருவார். குறிப்பாகப் பாற்கடலில் பள்ளி கொண்ட விஷ்ணுவின் வயிற்றிலிருந்து வருவது போலக் காட்டுகையில் தாமரை மேல் இருப்பார்.

விஷ்ணு

மும்மூர்த்திகளில் மிகவும் எளிதில் அடையாளம் காணக்கூடிய கடவுள்; கைகளில் சங்கு சக்கரம் தாங்கியிருப்பார். நான்கு கைகளில் ஒரு கையில் கதை இருக்கும். தென் கிழக்காசிய நாடுகளில் கூட, தலை மட்டும் காட்டப்பட்டாலும், சங்கு சக்கரம் பொறிக்கப்பட்டு ள்ளதால் எளிதில் கண்டு பிடித்துவிடலாம். சில இடங்களில் கருட வாகனம் இருக்கும்; பாற்கடலில் ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது பள்ளி கொண்ட கோலத்தில் படுத்த நிலையில் இருப்பார். தென் இந்தியக் கோவில்களில் நின்ற, அமர்ந்த, பள்ளிகொண்ட  என்ற மூன்று கோலங்களில் பெரிய சிலைகளாக காட்டப்பட்டுள்ளார்.

df0e0-trimurti_ellora

சிவன் (நடராஜர்)

சிவன் உருவங்களில் நடராஜரை அடையாளம் காண்பது எளிது ஒற்றைக் காலைத் தூக்கிய நிலையில் கைகளில் உடுக்கை, தீ இவற்றுடன் கட்சி தருவார். காலடியில் ஒரு அசுரன் இருப்பான். லிங்க உருவமும் சிவன் ஒருவருக்கே உரித்தாகையால் எளிதில் உணரலாம்.ஆனால் மஹேஸ்வரனாகக் காட்டுகையில் சில இடங்களில் நெற்றிக் கண் இருக்கும். சடை முடியில் சந்திரப் பிறையும், கழுத்தில் பாம்பும் இருக்கும். கைகளில் திரி சூலம் இருக்கும். மான், மழு என்னும் ஆயுதம், டமருகம் என்னும் உடுக்கை கைகளில் இருக்கும்.ரிஷப (காளை/விடை) வாஹனம் மேலும் இருப்பார்.

கணபதி

வெளிநாட்டினரும் எளிதில் நினைவு வைத்துக் கொள்ளக் கூடிய கடவுள் யானை முகம் கொண்ட கணபதி ஆவார். வட நாட்டில் சித்தி, புத்தி என்னும் தேவியருடன் காட்சி தருகிறார்.அருகில் மூஷிகம் என்னும் மூஞ்சூறு அல்லது எலி இருக்கும். கைகளில் மோதகம் என்னும் கொழுக்கட்டை இருக்கும் அல்லது அருகில் தட்டில் படைக்கப்பட்டிருக்கும்.

முருகன்

மயில் வாகனத்துடனும் கையில் வேலுடனும் காட்சி தருகிறார் முருகன். ஆனால் தென் கிழக்காசிய நாடுகளில் இவரை அடையாளம் காண்பது எளிதல்ல. தமிழ் நாட்டில் சில இடங்களில் வள்ளி, தெய்வானை ஆகிய இரு மனைவியருடன் காணலாம். தமிழ்நாட்டில் படங்களில் 12 கைகள், ஆறுமுகங்களுடன் காட்டப்படுகிறார்.

துர்கா

உமா, அல்லது பார்வதியின் மற்றொரு தோற்றம் துர்கா. வடநாடு முழுதும் பல்வேறு பெயர்களில் வழிபடப்படும் தெய்வமான துர்கா புலி அல்லது சிங்கத்தின் மேல் இருக்கிறார். கையில் வாள் இருக்கும். தென்னிந்தியக் கோவில்களில் சங்கு சக்கரத்துடன் (நாராயணி) காட்சி தருகிறார். கையில் வில், அம்பு, திரிசூலம், வஜ்ராயுதம் ஆகியனவும் இருக்கும். எட்டு அல்லது பத்து கைகளுடன் தோன்றுவாள். காளியாக காட்சி தருகையில் கபால (மண்டை ஓட்டு) மாலையும் இருக்கும். மஹிஷன் என்னும் எருமைத் தலை அரக்கனை அழிக்கும் காட்சி மாமல்லபுர குகைக் கோவில் முதல் வடநாட்டுக் கோவில்கள் வரை எல்லா இடங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளது, இந்த மஹிஷாசுரமர்த்தனி கோலம் மிகவும் சிறப்புடைத்து.

lakshmi

லெட்சுமி

செந்தாமரை மலர் மீது வீற்றிருக்கும் லெட்சுமியின் கைகளில் தாமரை மலர் இருக்கும். கஜ லெட்சுமி உருவம் மிகவும் பிரபலமானது. லெட்சுமியின் இருபுறமும் இரண்டு யானைகள் நின்று நீரால் அபிஷேகம் செய்யும். இது நிறைய செல்வத்தையும் மங்களத்தையும் கொடுக்கும். செட்டி நாட்டார் வீட்டுக் கதவுகள் முதல் பல அரண்மனை வாயில்களிலும் டென்மார்க் நாட்டு சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட அண்டாவிலும், நாணயங்களிலும் கஜலெட்சுமி உருவம் இருக்கிறது. சில இடங்களில் ஆந்தை வாகனமும் இருக்கும்.

சரஸ்வதி

சரஸ்வதி சிலை அன்னப் பறவையுடனோ, மயிலுடனோ இருக்கும். கைகளில் ஜபமாலையும், புத்தகமும் இடம்பெறும். வீணை வாசிக்கும் கோலத்திலும், வெண்தாமரை மலர் மீது அமர்ந்தும் காட்சி தருகிறார்.

saraswati

காயத்ரி

ஐந்து முகங்கள், பத்து கைகளுடன் தோன்றும் காயத்ரி தேவியின் கைகளில் சங்கு, சக்கரம், சாட்டை, தாமரை, அமுத கலசம், மழு, கதை, அபய ஹஸ்த முத்திரை முதலியனவற்றைக் காணலாம்.

அனுமன்

குரங்கு முகத்துடன் தோன்றும் அனுமனை, ஆஞ்சநேயரைக் குழந்தைகளும் அடையாளம் கண்டுவிடுவர். படங்களில் கதை அல்லது, சஞ்சீவி மலையைத் தூக்கும் நிலையில் இருப்பார்.

hanuman raman

சோமாஸ்கந்தர்

தென்னிந்தியக் கோவில்களில் பிரபலமான சோமாஸ்கந்தர் விக்ரஹத்தில் உமையுடனும், சிவனுடனும் ஸ்கந்தன் எனும் முருகன்/கார்த்திகேயன் குழந்தை வடிவத்தில் காட்சி தருவார்.

(சஹ + உமா+ ஸ்கந்த= சோமாஸ்கந்த = சிவன் உமையுடனும் கந்தனுடனும்)

இந்திரன், அக்னி, வாயு, யமன், குபேரன், நிருதி

வேதகாலக் கடவுளரான இந்திரன் ஐராவதம் என்னும் யானையின் மீது வஜ்ராயுத்துடன் தோன்றுவார். யானைக்கு ஒரு முகமோ, பல முகங்களோ இருக்கும். அக்னி ஆட்டு வாகனத்திலும், வாயு மான் வாகனத்திலும், யமன் எருமை வாகனத்திலும் இருப்பார்கள். அக்னியின் தலை(முடி) தீச்சுவாலை வடிவிலும், யமன் கைகளில் பாசக் கயிறும் இருக்கும். நிருதி என்பவர் ஒட்டகம் அல்லது கழுதை வாகனத்தில் இருப்பார். சில இடங்களில் பிரேத வாகனம் இருக்கும். குபேரன் குட்டையாக தொந்தியும் தொப்பையுமாக தங்கக் கலசத்துடன் மனித வாகனத்தில் காட்சி தருவார்.

358bc-vishnu

தசாவதாரம் (கிருஷ்ணன்,ராமன்)

தசாவதாரம் என்பது விஷ்ணுவின் பத்து அவதாரங்கள். இந்த மூர்த்தங்களை அடையாளம் காண்பது எளிது:

மச்சாவதாரம்: அடிப்பகுதி மீன் போல இருக்கும்

கூர்மாவதாரம்: அடிப்பகுதி ஆமை போல இருக்கும்

வராஹாவதாரம்: மூக்கு, பன்றி போல இருக்கும்; அதன் மூக்கில் பூமி இருக்கும்

வாமனாவதாரம்: குள்ளமான பிராமணச் சிறுவன்; குடையுடன் காணப்படுவான்

நரசிம்மாவதாரம்: முகம், சிங்கம் போல இருக்கும். ஆக்ரோஷமாக ஹிரண்யகசிபுவை வதம் செய்வதைக் காணலாம்.

பரசுராமாவதாரம்: கையில் அல்லது தோளில் பரசு/கோடரி இருக்கும்.

ராமாவதாரம்: கையில் அம்புடன் நெடிய உருவம்; பொதுவாக லெட்சுமணன், சீதை ஆகியோருடனும் பாதம் இருக்கும் இடத்தில் அனுமனுடனும் காணப்படுவார்.

பலராமாவதாரம்: தோளில் உழும் கலப்பை இருக்கும்; வண்ணப் படங்களில் மஞ்சள் ஆடையுடன் இருப்பார்.

கிருஷ்ணாவதாரம்: தலையில் கிரீடம்; அதில் மயில் தொகை; அருகில் பசு மாடு; வாயில் புல்லாங்குழல்; அருகில் ராதா; வண்ணப் படங்களில் நீலாம்பரதாரியாகக் காட்சி அளிப்பார்.

கல்கி அவதாரம்: வெண்குதிரையில் கைகளில் வாளுடன் வருவார். சில இடங்களில் முகமே குதிரை போலக் காட்டப்பட்டிருக்கிறது.

IMG_6819

நவக்கிரகங்கள்

நவக்கிரகங்களில் ராகு சந்திரனுடனும் கேது – பாம்புடனும் இருப்பர். சூரியன் பின்பக்கம் சூர்யப் பிரபையுடனும் 7 குதிரை, ஒற்றைச் சக்கர ரதத்தில் பவனி வருவார்.சந்திரன் சந்திரப் பிரபையுடன் இருப்பார். ஏனைய கிரகங்களை வாகனம் இல்லாவிடில் அடையாஅள்ம் காண்பது கடினம்.

இந்துக்களின் எண்ணற்ற கடவுள் மூர்த்தங்களை விளக்குவது சாத்தியமல்ல. மேற்கூறிய பட்டியலை வைத்து ஓரளவு சைவ, வைஷ்ணவ திருவுருவங்களை அடையாளம் காணலாம்.

-சுபம்–

b03a6-42bwives2bof2bvishnu

நமது கேள்விகளும் அப்பர் பதில்களும்!

IMG_2990

Written by S NAGARAJAN

Post No.2234

Date: 11  October 2015

Time uploaded in London: 16-28

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

தேவார சுகம்

நமது கேள்விகளும் அப்பர் பதில்களும்!

.நாகராஜன்

 

நல்ல கேள்விகள் கேட்பவர் சிலரே! அதற்குச் சரியான விடைகள் தருபவர் நிச்சயமாக வெகு சிலரே!

நமக்குப் புரிய வேண்டிய பல விஷயங்கள் குறித்து நம்மவரில் பலர் பளிச் பளிச் என்று கேள்விகள் கேட்க அருளாளர் அப்பர் பளார் பளார் என பதில்களை அள்ளி வீசுகிறார்.

எங்கே! தேவாரத்தில்!!

 

கேள்விகளும் பதில்களும் இதோ:-

  • ஞானம் எது? கல்வி எது?

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்

 

  • நன்னெறி காட்டுவது எது? நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே

 

  • நமது வினைகள் ஓடிப் போக என்ன செய்ய வேண்டும்?

ஆடிப்பாடி அண்ணாமலை கை தொழ ஓடிப் போம் நமதுள்ள வினைகளே!

 

  • துன்பப் படுகிறேன், வினை விடவில்லை, பழைய வினைகள் படுத்துகின்றன, நான் என்ன செய்வது?

IMG_3244

அல்லல் என் செயும்? அருவினை என் செயும்?                                    

தொல்லை வல்வினை தொந்தம் தான் என் செயும்?                                  

தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு                                          

எல்லை இல்லதோர் அடிமைப் பூண்டேனுக்கே

 

 

  • காக்கைக்கு உடலை இரையாக்குவார் யார்?

பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்                                    

நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்                                   

ஆக்கைக்கே இரை தேடி அலமந்து                                               

காக்கைக்கே இரையாகிக் கழிவரே             (ஆக்கைஉடல்)

 

crow2

  • இறைவனது திருவடி நீழல் எப்படி இருக்கும்/

மாசில் வீணையும் மாலை மதியமும்                                       

வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும்                                                   

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே                                 

ஈசன் எந்தை இணையடி நீழலே!

 

 

  • சுவர்க்கம் செல்ல வழி என்ன?

துளக்கில் நல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும்

 

road-to-heaven-608763_640 (1)

  • மெய்ந் நெறி ஞானம் என்றால் என்ன?

விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானம் ஆகும்

 

  • நண்பன் யார்?அவனுக்கு என்ன கொடுப்பது?

கண் பனிக்கும்கை கூப்பும்! கண் மூன்றும் உடை நண்பனுக்கு எனை நான் கொடுப்பன்!

 

 

  • நெஞ்சுக்கு உபதேசம் என்ன?

நக்கரையனை நாள்தொறும் நன்னெஞ்சேவக்கரை உறைவானை வணங்கு நீ!!

 

  • ஈசன் யார்க்கு எளியன்? யார்க்கு அரியன்? வஞ்சகர்க்கு அரியர் போலும், மருவினோர்க்கு எளியர் போலும்!

 

 

  • நன்நெறிக் கண் சேராதவர்கள் யார்? “துரிசு அறத் தொண்டு பட்டார்க்கு எளியானை, யாவர்க்கும் அரியான் தன்னை, இன்கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல் தெளியானைத்,

திருநாகேச்சரத்து உளானைச் சேராதார் நன்நெறிக் கண் சேராதாரே!

 

 palanest

  • கிரகமும், நட்சத்திரமும் சரி இல்லை, என்ன செய்வது?  “நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார், கோளும் நாளும் தீயவேனும் நன்கு ஆம்! குறிக்கொண்மினே! (குறித்துக் கொள்ளுங்கள்)

 

  • இடர் தீர வழி? பொன் ஒத்த நிறத்தானும், பொருகடல் தன் ஒத்த நிறத்தானும் அறிகிலாப் புன்னைத் தாது பொழில் புகலூரரைஎன் அத்தாஎன என் இடர் தீருமே!

 

 

  • பிறந்தவர்கள் என்று யாரைச் சொல்லலாம்? வஞ்சர் சிந்தையுள் சேர்விலாதார், கற்றவர் பயிலும் நாகைக்காரோணம் கருதி ஏத்தப் பெற்றார் பிறந்தவரே!                                                  மற்றுப் பிறந்தவர் பிறந்திலரே!!

 

  • துயர் கெட வழி?                                            
  • கந்த வார் பொழில் நாகைக்காரோணனைச் சிந்தை செய்யக் கெடும் துயர், திண்ணமே!

 

  • யாருடைய செல்வத்தை மதிக்கக் கூடாது? ஏன்? சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து தரணியொடு வான் ஆளத் தருவரேனும், மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம், மாதவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்!

 

 

  • யாரைக் கடவுளாக வணங்கலாம்? ஏன்?

அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய், உரித்துத் தின்று உழலும் புலையரேனும், கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளரே!

 

 

  • செத்துச் செத்துப் பிறப்பவர் யார்?

திருநாமம் அஞ்செழுத்து செப்பார் ஆகில்                                      

தீவண்ணர் திறம் ஒரு கால் பேசார் ஆகில்                                

ஒருகாலும் திருக்கோவில் சூழார் ஆகில்                                      

 உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணார் ஆகில்                           

அரு நோய்கள் கெட வெண்ணீறு அணியார் ஆகில்                                    

அளி அற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்                                

பெரு நோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்துப்                              

பிறப்பதற்கே தொழில் ஆகி இறக்கின்றாரே!

 

 

  • குறை இல்லாமல் இருப்பது எதனால்?
  • சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்,                              
  • ஒன்றினால் குறை உடையோம் அல்லோம் அன்றே!

 

இப்படி அள்ள அள்ள குறையாத பதில்கள் அப்பரின் பதிகங்கள் முழுவதும் நிரம்பியுள்ளன.

 

நம் கேள்விகளுக்கு உரிய பதில்கள் மட்டும் அல்ல அவை! அனைத்தும் அற்புத இரகசியங்கள்!

 

***********

Are Children Innocent or Naughty? Why did the Lady Teacher Cry?

Chinese_students_f_3348697k

Compiled by London swaminathan

Post No.2233

Date: 10  October 2015

Time uploaded in London: 22-13

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

Teachers and Class rooms

In the classroom the lady teacher was trying, without success, to quell what looked like a small riot. The principal was passing through the hall, stopped and what all the noise was about.

The pretty young teacher was almost in tears. “I was explaining the students the difference between the concrete and abstract, stating that abstract is something you can’t see, and concrete is something you can see. Then I asked James to give me an illustration.

“My pants are concrete. Yours are abstract, he answered”.

The principal, attempting to repress a smile, helped the teacher restore order to her class, and then, going into the hall, finally gave vent to the laughter he could no longer restrain.

Xxx

Children are Innocent

The day of a big snowstorm, the country school teacher felt called upon to warn her students against playing too long in the snow. She said, “Now, children, you must be careful about colds and over exposure. I had a darling little brother only seven years old. One day he went out in the snow with his new sled and caught cold. Pneumonia set in and three days later he died.”

The room was silent and then a youngster in the back row raised his hand asked, “Where is his sled?.”

Xxx

In English class a small boy was told to write an essay about King Alfred, but was warned not to elaborate overly much on the family story of the cakes. The boy delivered his essay which, after summing up the chief historical facts, concluded with, “There is another incident in King Alfred’s life. One day he visited a house where a certain woman lived – and the less said about that, the better.”

Xxx

bhadravathy sai school

Too beautiful to describe!!

When the pupils are assigned the task of writing an essay on “the most beautiful I ever saw”, the least aesthetic young man in the class handed in his paper first with astonishing speed. It was short and to the point –“The most beautiful thing I ever saw was too beautiful for words.”

Xxx

Stack of One Hundred Dollar Bills U.S.

Stack of One Hundred Dollar Bills U.S.

Million Dollar Question!!

Given the assignment of writing a composition about what they would do if they had a million dollars, all of the children in the class except Willy were busily writing away.

The teacher, becoming of his aware of his idleness, said severely, “Willy, don’t you know that you are supposed to tell what you would do if you had a million dollars?”

“Well”, said the boy, lazily leaning back on his chair, “this is exactly what I would do if I had a million dollars.”

–Subham–

இந்துக் கடவுள்களை இனம் காணுவது எப்படி?- பகுதி 1

IMG_6746 (2)

மதுரை மீனாட்சி கோவில் கோபுரத்திலுள்ள சிற்பத்தின் வரைபடம்

Research article by London swaminathan

Post No.2232

Date: 10  October 2015

Time uploaded in London: 15-01

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

பாரதியார் பாடினார்:

“கணிதம் பன்னிரெண்டாண்டு பயில்வர், பின்

கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்

அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும்

ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்”

— 12 ஆண்டு கணிதம் பயின்ற பின்னர், ஆகாயத்தில் இருக்கும் நட்சத்திரம், கோள் முதலியவற்றின் நிலை என்ன என்று தெரிவதில்லையே என்று வருத்தப்படுகிறார்.

அந்தக் காலத்தில் கிராமப்புற மக்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஒவ்வொருவரும், வானத்திலுள்ள கிரகங்கள் நட்சத்திரங்களின் பெயர்களையும் நிலையையும் அறிந்து வைத்திருந்தனர். தங்களைச் சுற்றியுள்ள மரம், செடி, கொடி, பறவைகள், மூலிகைகள் ஆகியவற்றை அடையாளம் காணவும் அறிந்திருந்தனர். ஏட்டுக் கல்வி வந்த பின்னர், கையில் ‘டிகிரி’ வாங்கிய பின்னரும் கூட அடிப்படை அறிவு இருப்பதில்லை. இதுதான் பாரதியாரிம் வருத்தத்துக்குக் காரணம். சுற்றியுள்ள மரம் செடி, கொடிகளின் பெயர்களும் தெரியாது; வானத்திலுள்ள நட்சத்திரங்கள் என்ன என்றும் சொல்லத் தெரியாது! இதே நிலையில்தான், கோவில் சிலைகள் பற்றிய அறிவும் உளது.

சங்க இலக்கிய நூலான பரிபாடலில் (19ம் பாடல்) ஒரு காட்சி வருகிறது: கணவன், மனைவி ஆகிய இருவர் திருப்பறங்குன்றத் தில் உள்ள ஓவியங்களைக் காணும் போது, ஒரு பூனை ஓவியத்தைப் பார்த்து மனைவி வியக்கிறாள். கணவனிடம் கேட்கவே, உடனே கணவன், “இது உனக்குத் தெரியாதா? இதோ இந்திரன், அகலிகையை மானபங்கப்படுத்திய பின்னர், பூனை வடிவில் பயந்து ஓடுகிறான்” என்று பதில் தருகிறான். மக்களுக்கு ஓவியத்தில் வரும் புராணக் காட்சிகள் எல்லாம் அத்துபடியாக இருந்தன, இது 2000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலை.

இன்றோ நமது குழந்தைகள், ஒரு கோவில் சிலையைக் காட்டி இது யாருடைய உருவம்? கைகளில் என்ன , என்ன இருக்கிறது? என்று கேட்டால் நமக்குச் சொல்லத் தெரியுமா என்பது சந்தேகமே!

இந்தியாவிலாவது பல கடவுள் திரு உருவங்களை அடையாளம் கண்டு விடலாம். தென்கிழக்காசிய நாடுகளின் சிலைகளில் விஷ்ணுவைத் தவிர வேறு எவரையும் அடையாளம் காணமுடியாது. விஷ்ணுவின் தோள்களில் அல்லது கைகளில் சங்கு சக்ரம் இருப்பதால் இது எளிதாகிறது.

IMG_6747 (2)

மியூசியங்களுக்குப் போனால் இதைவிடப் பெரிய குழப்பம் காத்திருக்கும். புத்தமத, சமணமத கடவுளர் சிலைகளையும் ஒரே காட்சிக்கூடத்தில் வைத்திருப்பர். இந்துக் கடவுள் போலத் தோன்றும். ஆனால் வேறு பெயர்கள் எழுதப்பட்டிருக்கும்.

முன்காலத்தில் சிலைகளையும், விக்ரஹங்களையும் வடித்தவர்கள் சம்ஸ்கிருத நூல்களில் ஸ்லோகங்களாக எழுதப்பட்ட மூர்த்திகளின் வடிவங்களை மனதிற்கொண்டு அவைகளைச் செய்தனர். அவைகளைக் ‘காப்பி’ அடித்த புத்த, சமண மதச் சிற்பிகள் அவரவர்களுடைய கற்பனைக்கேற்ப கொஞ்சம் மாற்றி வடிவமைத்தனர். ஆனால் கூர்ந்து கவனிப்போர் எது, என்ன என்று சொல்லிவிடுவர்.

இந்துக் கடவுளரின் பட்டியல் மிக நீண்டது. ஒவ்வொரு ஊரிலும் ஒரு நிகழ்ச்சி நடந்து இருப்பதாலும், பல அசுரர்களைக் கொல்ல பல உருவம் எடுத்ததாலும் சிற்சில வேறுபாடுகள் இருக்கும். இதைத்தவிர உள்ளூர், பிராந்திய கடவுளரும் உண்டு. வடக்கே இருப்பவர்க்கு அய்யனார், சாஸ்தா பற்றித் தெரிய வாய்ப்பு இல்லை. தெற்கே இருப்பவர்க்கு சந்தோஷி மாதா முதலிய உருவங்கள் தெரியாது. ஓரிடத்தில் அனுமார் பிரம்மச்சாரி, இன்னொரு இடத்தில் பிள்ளையார் பிரம்மச்சாரி. ஆகையாலெங்கு மனைவியருடன் தெய்வங்கள் உளதோ அதன் தத்துவ விளக்கங்களையும் கடவுளரின் கையிலுள்ள பொருள்களின் விளக்கங்களையும் அறிந்து வைக்கவேண்டும்.

பிள்ளையாரின் இரண்டு மனைவியரின் பெயர் சித்தி, புத்தி என்று சொன்னால், பிள்ளையாரைக் கும்பிடுவோருக்கு காரிய ‘சித்தி’யும் (வெற்றி), அதை அடைய நல்ல ‘புத்தி’யையும் (அறிவு) கொடுப்பார் என்று பொருள். சூரியனின் மனைவி பெயர் ‘சாயா’ (நிழல்) என்றால் வெளிச்சம் இருக்கும் இடத்தில் பொருள்களின் நிழலும் அதைத் தொடரும் என்பதே பொருள். சம்ஸ்கிருத அறிவு இருந்தால் ஓரளவு பொருளை உணர்ந்து நாமே மற்றவர்க்கும் விளக்கலாம். எல்லாவற்றையும் கதைகள் மூலமும், உவமைகள் மூலமும், அடையாளச் சின்னங்கள் மூலமும் விளக்குவது நம் முன்னோர் இயல்பு. ஆனால் காலப் போக்கில், உணர்த்தவந்த தத்துவத்தை மறந்துவிட்டு, கதைகளை மட்டுமே பரப்பியதால் அவைகள் புராணங்களாகிவிட்டன.

vishnu

கடவுளரின் வாஹனங்கள், அவர்களின் அடையாளச் சின்னங்கள் என்ன, என்ன வென்று தெரிந்து கொண்டால்  வெறும் தலை அல்லது தோள் மட்டும் தெரிந்தால் கூட அது யாருடையது என்று சொல்லிவிடலாம். கட்டுரையின் இரண்டாவது பகுதியில் ஒரு பட்டியலைத் தருகிறேன். அது முக்கியக் கடவுள் திருமேனிகளை அடையாளம் காண ஓரளவுக்கு உதவும்.

–தொடரும்…………………………

God Is Not Dead

goswami1

Book Review by S NAGARAJAN

Post No.2231

Date: 10  October 2015

Time uploaded in London: 7-13 am

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

THIS ARTICLE HAS BEEN PUBLISHED IN www.ezinearticles.com on 1-10-15. Pl log in and go to author’s column select expert author santhanam Nagarajan to real all the articles. For this article the link is:

http://ezinearticles.com/?God-Is-Not-Dead&id=9184178

goswami2

God Is Not Dead

Santhanam Nagarajan

This is the Scientific Age. Man wants proof for everything. Even for the existence of God!

But God is beyond proof. Scientists like Newton believed God. But in this modern age when we are able to explain everything, could it be possible to prove the existence of God.

Toward the end of 19th century, the philosopher Nietzsche declared through one of his fictional characters that ‘God is dead’.
Now based on Quantum Science some scientists are trying to prove the existence of God.  One such person is Amit Goswami. He is a theoretical nuclear physicist and member of The University of Oregon Institute for Theoretical Physics since 1968.

Goswami very strongly believes that the existence of God could be settled by scientific evidence. He claims already it is in God’s favor.

The book has five parts, Introduction, The evidence for downward causation, The evidence for the subtle bodies, Downward causation revisited and Quantum Activism.

He offers two kind of evidence namely ‘the quantum signatures of the divine’ and ‘subtle domains of reality’.

Mental events are acting to cause physical events. This is known as downward causation.

An architect who would like to build a house will start with an idea first and then he would make a blue print of the idea. Then he will start the work.

Similarly now we are able to see the idea of God via Supramental (Body of Laws) and then the blueprint via vital body. The physical body is His work.

The author gives a number of examples based on scientific evidence to prove his point that God Exists. He shows that all the sciences – physics, biology, psychology and medicine – need the hypothesis of downward causation.

goswami3

Once Dalai Lama was asked if there was any scientific research that would ever prompt him to give up his Buddhist beliefs about spirituality. To this Dalai Lama replied that if scientists could ever prove that reincarnation never happens, he might change his mind.

But Stevenson has collected a lot of evidence in proof of reincarnation.

The author himself was invited to join a group of scientists at a conference in Dharma Sala, India in 1999.

The 30 or so scientists presented his or her ideas to the venerable Dalai Lama. The conference was aimed at integrating science and spirituality.

In order to find out God one has to give up materialistic view and adopt the path of  Karma Yoga, doing good without expecting the result there of.

The book has been written in a lucid style, so that even an ordinary reader could understand our origins and how we should live.  Number of anecdotes are interwoven to explain the principles of quantum physics.

Amit Goswami has a knack of explaining things simply. That is his plus point.

Those who believe God, for them no explanation is necessary. Atheists who do not believe God will never accept Him even after getting enough evidence. So this book is for the people who would strengthen their belief once they get new ideas based on scientific evidence.

I very strongly recommend this book for all the people, believers, non-believers and truth seekers. The book is published by Jaico Publishing House, Mumbai, India.

goswami5

Summary:

Toward the end of 19th century, the philosopher Nietzsche declared through one of his fictional characters that ‘God is dead’. Now based on Quantum Science some scientists are trying to prove the existence of God.  One such person is Amit Goswami. He strongly believes that the existence of God could be settled by scientific evidence. He claims already it is in God’s favor. He has a knack of explaining things simply.

Key words

God could be explained, quantum physics shows the way

  1. Nagarajan has written more than 3000 articles in Tamil in 18 magazines and published 19 books. He is revealing Eastern Secret Wisdom through T.V. Programmes, magazine articles, seminars, courses. He has covered various subjects in his wide range of articles which include Mantras,Yantras, Yoga, Meditation, Astrology, Astronomy, Space Science, Science and Spirituality, Hollywood cinema, Womens’ progress, Aura, Significance of Colors, Reincarnation, Divine Geometry, Power of Prayer etc. As an ardent seeker of Truth, he has collected scientific experiments on mantras, mind, Auto suggestion etc. He has written many articles on para psychology

gswami4

–Subham-