அக்டோபர் 2015 காலண்டர்

arunagiri annamalai

அருணகிரிநாதர் சிலையின் படம்

(மன்மத வருடம் புரட்டாசி/ஐப்பசி)

இந்த மாதக் காலண்டரில், அருணகிரிநாதர் பாடிய, சந்தத் தமிழ் திருப்புகழ் மேற்கோள்கள் இடம்பெறுகின்றன.

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Compiled  by London swaminathan

Date: 28  September 2015

Post No: 2195

Time uploaded in London :– 16-10

(Thanks  for the pictures) 

முக்கிய நாட்கள்: அக்டோபர் 2 காந்தி ஜயந்தி, 12 மஹாளய அமாவாசை ,13 நவராத்திரி ஆரம்பம்,21 சரஸ்வதி பூஜை, 22 விஜயதசமி, 24 மொகரம்;

8, 13 ஏகாதசி , 27 பௌர்ணமி

முகூர்த்த நாட்கள்: 19, 22,25, 26

amman gold

அக்டோபர் 1 வியாழக்கிழமை

முத்தமிழடை வினை முற்படு கிரிதனில்

முற்பட எழுதிய முதல்வோனே

முப்புரம் எரிசெய்த அச்சிவனுறை ரதம்

அச்சது பொடிசெய்த அதிதீரா.

அக்டோபர் 2 வெள்ளிக்கிழமை

தினைவேடர் காவல் தங்கு மலை காடெலாமுழன்று

சிறுபேதை கால் பணிந்த குமரேசா

திரையாழி சேது கண்டு பொரு ராவணேசனை வென்ற

திருமால் முராரி தங்கை  அருள்பாலா.

அக்டோபர் 3 சனிக்கிழமை

சந்ததம் பந்தத் தொடராலே

சஞ்சலந்துஞ்சித் திரியாதே

கந்தனென்றுற் றுனைநாளும்

கண்டுகொண் டன்புற்றிடுவேனோ.

அக்டோபர் 4 ஞாயிற்றுக்கிழமை

இரவுபகல் மோகனாகியபடியில் மடியாமல் யானுமுன்

இணையடிகள் பாடி வாழ என்நெஞ்சிற் செஞ்சொல் தருவாயே.

அக்டோபர் 5 திங்கட்கிழமை

உயர் கருணை புரியும் இன்பக் கடல் மூழ்கி

உனையெனதுள் அறியும் அன்பைத் தருவாயே

amman lakshana

அக்டோபர் 6 செவ்வாய்க்கிழமை

மங்கை அழுது விழவே யமபடர்கள்

நின்று சருவமலமே யொழுக வுயிர்

மங்கும் பொழுது கடிதே மயிலின்மிசை வரவேணும்.

அக்டோபர் 7 புதன்கிழமை

மதித்துச் திண்புரம் சிரித்துக் கொன்றிடும்

மறத்திற் றந்தைமன் ரினிலாடி

மழுக்கைக் கொண்ட சங்கரர்க்குச் சென்றுவண்

டமிழ்சொற் சந்தமொன்  றருள்வாயே.

அக்டோபர் 8 வியாழக்கிழமை

புரக்கைக்குன் பதத்தைந்தெனக்குத் தொண்டுறப்பற்றும்

புலத்துக்கண் செழிக்கச் செந்தமிழ் பாடும்

அக்டோபர் 9 வெள்ளிக்கிழமை

மங்கைமார் கொங்கைசேரங்க மோகங்களால்

வம்பிலே துன்புறாமே

வண்குகா நின்சொரூபம் ப்ரகாசங்கொலே

வந்து நீயன்பில்  ஆள்வாய்.

அக்டோபர் 10 சனிக்கிழமை

துன்பநோய் சிந்த நற்கந்தவேள் என்றுனைத்

தொண்டினால் ஒன்றுரைக்க  அருள்வாயே

a o maa

அக்டோபர் 11 ஞாயிற்றுக்கிழமை

அறிவால் அறிந்து இருதாளிறைஞ்சும்

அடியார்  இடைஞ்சல் களைவோனே

அழகான செம்பொன் மயில்மேல் அமர்ந்து

அலைவாயுகந்த பெருமாளே

அக்டோபர் 12 திங்கட்கிழமை

தீப மங்கள ஜோதி நமோ நம

தூய அம்பல லீலா நமோ நம

தேவ குஞ்சரிபாகா  நமோ நம  –அருள்தாராய்.

அக்டோபர் 13 செவ்வாய்க்கிழமை

அபகாரநிந்தைப் பட்டுழலாதே

அறியாத வஞ்சரைக் குறியாதே

உபதேச மந்திரப் பொருளாலே

உனை நான் நினைந்தருட் பெறுவேனோ.

அக்டோபர் 14 புதன்கிழமை

அவமாயை கொண்டு உலகில் விருதா அலைந்து உழலும்

அடியேனை அஞ்சலென வரவேணும்

அறிவாகமும் பெருக இடரானதும் தொலைய

அருள்ஞான இன்பமது புரிவாயே.

அக்டோபர் 15 வியாழக்கிழமை

பிணிபட்டு உணர்வற்று அவமுற்றியமற்

பெறுமக் குணமுற் றுயிர்மாளும்

பிறவிக்கடல் விட்டுயர் நற்கதியைப்

பெறுதற்கு அருளைத் தரவேணும்

kolu3

அக்டோபர் 16 வெள்ளிக்கிழமை

கமல விமல மரகதமணி

கனகமருவும் இருபாதங்

கருத அருளி எனது தனிமை

கழிய அறிவு தரவேணும்.

அக்டோபர் 17 சனிக்கிழமை

வானே காலே தீயே நீரே

பாரே பருக் குரியோனே

மாயா மானே கோனே மானார்

வாழ்வே கோழிக் கொடியோனே.

அக்டோபர் 18 ஞாயிற்றுக்கிழமை

நானே நீயாய் நீயே நானாய்

நானா வேதப் பொருளாலும்

நாடா வீடா யீடே றாதே

நாயேன் மாயக் கடவேனோ.

அக்டோபர் 19 திங்கட்கிழமை

ஓதம் பெறுகடல் மோதுந்திரையது

போலும் பிறவி  லுழலாதே

ஓதும் பல அடி யாருங் கதிபெற

யானுன் கழலினை பெறுவேனோ.

அக்டோபர் 20 செவ்வாய்க்கிழமை

ஆலத்தை ஞாலத்து ளோர்திக்கு வானத்த

ராவிக்கள் மாள்வித்து மடியாதே

ஆலித்து மூலத் டேயுட்கொ ளாதிக்கு

மாம்வித்தை யாமத்தை யருள்வோனே

original

அக்டோபர் 21 புதன்கிழமை

ஏறு தோகை மீதேறி யாலித் திடும்வீரா

ஏழு லோகம் வாழ்வான சேவற் கொடியோனே

சீறு சூரர் நீறாக மோதிப் பொரும்வேலா

தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே.

அக்டோபர் 22 வியாழக்கிழமை

ஆடலழ கொக்க ஆடுமயி லெற்றி

ஆண்மையுயுட னிற்கு முருகோனே

ஆதியர ரனுக்கு வேதமொழி முற்றி

யார்வம்விளை வித்த அறிவோனே

அக்டோபர் 23 வெள்ளிக்கிழமை

செருக்கழியத் தெழித்துதிரத்

திரைக்கடலிற் சுழித்தலையிற்

றிளைத்த  அயிற் கரக்குமரப் பெருமாளே

அக்டோபர் 24 சனிக்கிழமை

வடகிரி தொளைபட அலைகடல் சுவறிட

மற்றுத் திக்கெனு மெட்டுத் திக்கிலும் வென்றிவாய

வலியுட னெதிர்பொரு மசுரர்கள் பொடிபட

மட்டித் திட்டுயர் கொக்கைக்குத்திம லைந்தவீரா

அக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை

பருகுத லரியது கந்த தீதிது

உளதென குறளிகள் தின்று மேதகு

பசிகெட வொருதனி வென்ற சேவக மயில்வீரா

Navaratri2

அக்டோபர் 26 திங்கட்கிழமை

மயிலு மியலறி புலமையு முபநிட

மதுர கவிதையும் விதரண கருணையும்

வடிவு மிளமையும் வளமையு மழகிய பெருமாளே

அக்டோபர் 27 செவ்வாய்க்கிழமை

கால சங்கரி சீலா சீலித்ரி சூலிமந்த்ர சுபாஷா பாஷனி

காள் கண்டிக பாலீ மாலினி கலியாணி

காமதந்திர லீலா லோகினி வாமதந்திர நூலாய் வாள்சிவ

காமசுந்தரி வாழ்வே தேவர்கள் பெருமாளே

அக்டோபர் 28 புதன்கிழமை

ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்

ஆதியருணாசலம்  அமர்ந்த பெருமாளே

அக்டோபர் 29 வியாழக்கிழமை

முட்டா மற்றா ளைச்சே விப்பார் முற்பா வத்தைக் களிவோனே

முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமளே

அக்டோபர் 30 வெள்ளிக்கிழமை

வித்தகத் திப்பவள தொப்பையப் பற்கிளைய

வெற்றிசத் திக்கரக முருகோனே

வெற்புமெட் டுத்திசையும் வட்டமிட் டுச்சுழல

விட்டபச் சைச்சரண மயில்வீரா

kolu1

அக்டோபர் 31 சனிக்கிழமை

நீலமே னிக்குலத் தோகைமே லுற்றுநிட்

டூரசூர் கெட்டுகப் பொரும்வேலா

நேசமாய் நித்தநிற் றாலைநீ ளச்சமற்

றோதநீ திப்பொருட் டரவேணும்

–Subham–

கண்ணாடி முன்னர் ஷேக்ஸ்பியரும், கம்பனும்!

symposiumIII

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Wriiten  by S NAGARAJAN

Date: 28 September 2015

Post No: 2194

Time uploaded in London :– 15-12

(Thanks  for the pictures)

 

கம்பன் காவிய இன்பம்

கண்ணாடி முன்னர் ஷேக்ஸ்பியரும், கம்பனும்!

.நாகராஜன

 

கண்ணாடி

உலக மகாகவி கம்பன் என்று சொன்னால் உதட்டைப் பிதுக்குவர் ஆங்கில இலக்கியம் நன்கு அறிந்தோர் – பழைய காலத்தில்!

அது ஆங்கிலேயர் அரசாண்ட காலம். தமிழைப் படிக்க வாய்ப்பில்லை. வாய்ப்பிருந்தாலும் தமிழில் ஒன்றும் இல்லை என்று சொல்வது ஒரு வித கௌரவம்!

இரண்டு மொழிகளின் இலக்கியங்களையும், கூடவே சம்ஸ்கிருத இலக்கியங்களையும் படித்தோர் இன்று மனமார ஒப்புக் கொள்வர் கம்பன் உலக மகா கவி தான் என்று.

உதாரணத்திற்கு ஒரே ஒரு வார்த்தையை எடுத்துக் கொள்வோம்.

ஆடி! கண்ணாடி!!

mirror2

வள்ளுவரின் கண்ணாடி

வள்ளுவர், குறளில் எதிரில் இருப்பதை உள்ளபடி கண்ணாடி பிரதிபலிப்பது போல நெஞ்சம் கடுத்ததைக் காட்டி விடும் முகம் என்றார். கண்ணாடிக்கு அவர் பயன்படுத்திய சொல் பளிங்கு.

“அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம்” (குறள் 706)

வள்ளுவரிலிருந்தே கண்ணாடி உவமை பல்வேறு விதமாக காவியங்களில் இடம் பெற்று வந்துள்ளது.

mirror1

ஆலங்குடி வங்கனாரின் கண்ணாடி

குறுந்தொகையில் ஒரு பாடல் (எண் 8). ஆலங்குடி வங்கனார் என்ற புலவர் பாடிய பாடல் இது.

பரத்தை ஒருத்தி வீட்டிலிருந்து தன் இல்லம் ஏகிய தலைவன் ஒருவனை, அந்தப் பரத்தை தன் பெண்டாட்டி சொன்னபடி அவன் ஆடுவதாக எல்லோரும் கேட்க (எரிச்சலுடன் நையாண்டியாக) இதைக் கூறுகிறாள்.

கழனி மாஅத்து விளைந்து உகு தீம்பழம்

பழன வாளை கதூஉம் ஊரன்

எம்மில் பெருமொழி கூறித் தம்மில்

கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப்பாவை போல

மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே

வயலில் இருக்கும் மரம் ஒன்றிலிருந்து கீழே விழும் இனிய பழத்தைக் குளத்தில் உள்ள வாளை மீன்கள் கவ்விப் பிடிக்கும் நாட்டவனான ஊரன், என்னுடைய வீட்டில் இருக்கும் போது பெரும் பேச்சைப் பேசுவான் (அதாவது பரத்தை வீட்டில் ஆட்டம் போடுவான்) ஆனால் தன் இல்லம் ஏகி விட்டாலோ கண்ணாடி முன்னால் கையைத் தூக்கினால் அதுவும் தூக்குவது போல தன் மனைவிக்குப் பணிவிடை செய்வான். (அவள் பேச்சு தான் அங்கே; அங்கு ஆட்டம் மாறும் – அவள் சொல்வதற்கு ஆடுவான்! அதாவது விளையாட்டு விதிகளே மாறி விடும்).

என்ன ஒரு பாடல் பாருங்கள், கண்ணாடியை மையமாக வைத்து! செய்ததைச் செய்யும் கண்ணாடி போல ஆகி விடுவானாம் அங்கே. மனைவி கையைத் தூக்கினால் இவனும் ஆடி போலத் தூக்கி ஆட வேண்டியது தான்!

big_square_gilt_mirror_left

முகுரவானனன்

திருதராஷ்டிரனை விவரிக்க வந்த வில்லிப்புத்தூரார் வில்லி பாரதத்தில் முகுரவானனன் என்று கூறுகிறார் (ஆதிபருவம் சம்பவச் சருக்கம் பாடல் 115)

முகுரம் என்றால் கண்ணாடி. ஆனனம் என்றால் முகம். கண்ணாடி போன்ற முகத்தை உடையவன் என்று பொருள். கண்ணாடி எப்படி தான் பிறரால் காணப்பட்டு பிறரைத் தான் காணும் உணர்ச்சி அற்று இருக்கிறதோ அது போல திருதராஷ்டிரனை அனைவரும் பார்க்க முடிந்தாலும் அவர்களைக் காண முடியாத பிறவிக் குருடன் அவன் என்பதை இந்தப் பெயர் விளங்கச் சொல்கிறது.

இனி உலக இலக்கியத்திற்கு வருவோம்.

ஷேக்ஸ்பியரின் கண்ணாடி

ஷேக்ஸ்பியர்! இலக்கியப் பிரியர்கள் விழிகளை விரிப்பர். அவர் இயற்றிய 43 நூல்களில் எட்டு லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து நானூற்றி இருபத்தியொன்று (8,84,421) வார்த்தைகள் இருப்பதாக எழுத்தெண்ணிப் படித்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த எட்டு லட்சத்து எண்பத்திநான்காயிரம் + வார்த்தைகளில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியாத வார்த்தைகள் 10. அதில் கண்ணாடியும் ஒன்று!

அவரது படைப்பான Measure for Measure இல் (II.II) ஒரு காட்சி. இஸபெல்லாவின் சகோதரனான க்ளாடியோவுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது – லார்ட் ஏஞ்சலோவின் ஆணைப்படி. இஸபெல்லா தன் சகோதரனை விடுவிக்க வேண்டும் என்று ஏஞ்சலோவிடம் மன்றாடுகிறாள் இருவரும் மனிதர்களிடம் உள்ள குறைபாடுகளைப் பற்றி விவாதிக்கின்றனர். அப்போது, “Mankind’s glassy essence’ என்று ஷேக்ஸ்பியர் கூறுகிறார். இதன் அர்த்தம் யாருக்கும் சரிவர இன்று வரை விளங்கவில்லை. Glassy என்றால் கண்ணாடி போல உடை படுவதா? அல்லது பிரதிபலிப்பதா? அல்லது குணாதிசயம் அல்லது மனநிலை என்ற உளவியல் பொருளை எடுத்துக் கொள்வதா? இதுவரை ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. (அர்த்தம் சரிவர விளங்காத ஷேக்ஸ்பியருடைய இதர ஒன்பது வார்த்தைகள்: Armgaunt, balk’d, Braid, Cock- a-hoop, Demuring, Eftest, Impeticos, Portagem Watch-case)

427-Kambar

கம்பனின் இரு கண்ணாடிகள்

இனி கம்பனுக்கு வருவோம்:

சுந்தரகாண்டம், கடல் தாவு படலத்தில் ‘எழுந்தோடி’ எனத் தொடங்கும் 41வது பாடல்!

அநுமன் கடலிலிருந்து எழுந்த மைநாக மலையைப் பார்க்கும் காட்சி!

அழுங்கா மனத்து அண்ணல் (அற்புதமான இந்த சொல் தொடரைப் பற்றிய எமது கட்டுரை ஞான ஆலயம் இதழில் வெளியிடப்பட்டுள்ளதைப் படிக்கலாம்)

‘எழுந்து ஓங்கி விண்ணோடு மண் ஒக்க, இலங்கும் ஆடி

உழுந்து ஓடு காலத்திடை, உம்பரின் உம்பர் ஓங்கிக்

கொழுந்து ஓடி நின்ற கொழுங் குன்றை வியந்து நோக்கி,

அழுங்கா மனத்து அண்ணல், ‘இது என் கொல்?’ எனா அயிர்த்தான்’

எதற்கும் சலியாத மனத்தினாகிய அநுமன் விளங்குகின்ற கண்ணாடி ஒன்றின் மீது  இட்ட ஓர் உளுந்து உருள்கின்ற காலத்திற்குள்ளே ஆகாயத்திற்கும் மேலாக வியாபித்து மேலும் கீழும் எங்கும் முடியும் அடியும் படர்ந்து நின்ற மைநாக மலையை ஆச்சரியத்துடன் பார்த்து , ‘இது என்ன’  எனச் சந்தேகித்தான்.

கண்ணாடி ஒன்றில் உளுந்து ஒன்றை உருட்டிப் பாருங்கள். அது எந்த வித உராய்வுமின்றி விரைந்து ஓடும் ஒரு க்ஷணத்திற்குள்ளாகவே. இதில் உள்ளிருந்த மைநாக மலை பிரதிபலிப்பு போல வந்ததையும் பிரதிபிம்பம் காட்டும் கண்ணாடி உவமை எடுத்துக் காட்டுகிறது.தடையின்றி இயங்குதல், விரைவு, பிரதிபிம்பம் ஆகிய மூன்றை கண்ணாடியில் உருளும் உளுந்து காட்டுகிறது.

இலங்கை நகரை வர்ணிக்க வேண்டும். ராவணனின் இலங்கையை யாராலாவது சரியாக வர்ணிக்க முடியுமா? உலகப் பெரும் புலவராக இருந்தாலும் சரி தான்! முடியுமா?

இப்போது கண்ணாடியின் உதவியை நாடுகிறான் கம்பன். இன்னொரு கண்ணாடியைக் கம்பன் உவமையாகக் காட்டுகிறான். இலங்கை நகருக்காக! அந்த அருமையான பாடல் இது:-

அநுமன் இலங்கைக்கு இப்பால் உள்ள பவள மலை மீது கால் பதிக்கிறான். இலங்கையை நோக்குகிறான்.

மண் அடி உற்று, மீது வான் உறு வரம்பின் தன்மை

எண் அடி அற்ற குன்றில் நிலைத்து நின்று எய்த நோக்கி,

விண்ணிடை, உலகம் என்னும் மெல்லியல், மேனி நோக்கக்

கண்ணடி வைத்தது அன்ன இலங்கையைத் தெரியக் கண்டான்

(பாடல் 79, கடல் தாவு படலம்)

நிலவுலகின் அடிப்பாகம் வரையிலும் வேர் ஊன்றப் பெற்று,உச்சியோ வானுலகில் பொருந்துதலால், உலகத்தின் மேல் மற்றும் கீழ் எல்லை நிலையை மதிப்பிடுவது போன்றதும் தன்னுடைய பாதம் தங்கியதுமான அந்தப் பவள மலையின் மீது நின்று அநுமன், வானத்திலுள்ள தேவலோகமாகிய பெண் தனது வடிவழகைப் பார்ப்பது போல  நிலைக் கண்ணாடி வைத்தது போல விளங்குகின்ற இலங்கையைப் பார்த்தான். வானுலகத்தின் மறுபதிப்பு அல்ல, அல்ல, பிரதிபிம்பமே இலங்கை.

mirror-03

நமக்கு நாமே உருவகப்படுத்த வேண்டும்

கண்ணாடி உவமை கவிஞனின் வேலையைக் கவினுற முடித்து விட்டது. கண்ணாடியின் மீது உளுந்து ஓடுவதை எந்த ஒருவராலும் தானே எளிதில் செய்து பார்க்க முடியும். தடையின்மை, வேகம், பிரதிபிம்பம் ஆகியவற்றை நேரில் உணர முடியும். இலங்கை கண்ணாடியோ ஒவ்வொருவரின் கற்பனையைப் பொருத்து அமையும். தேவலோகம் பற்றிய கற்பனையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் செய்து கொள்ளலாம். அதன் பிரதிபிம்பமே இலங்கை.

கற்பனை செய்து கண்டு கொள் என்ற இந்த உத்தி, உலக மகா கவிகளுள்ளே உன்னதமான ஒருவருக்கு மட்டுமே உதிக்க முடியும்! கம்பன் அப்படிப்பட்ட அருமையான கவி. உலக மகாகவியைக் கண்ணாடி முன்னால் நிறுத்தினால் அதன் பிரதிபிம்பமாக கம்பன் அமைவான். (இங்கும் அவனது கண்ணாடி உவமை தான் உதவுகிறது!!!)

உலகின் ஒப்பற்ற கவிஞன் கம்பன்

இப்போது பார்ப்போம் :- வள்ளுவரின் கண்ணாடி உளவியல் ரீதியிலான நெறி முறைக் கண்ணாடி. ஆலங்குடி வங்கனாரின் கண்ணாடி வாழ்வியல் அங்கத்தின் நாடக பாணியிலான கண்ணாடி. வில்லிப்புத்தூராரின் கண்ணாடி ஒரு மனிதரை விளக்க வந்த கண்ணாடி. ஷேக்ஸ்பியரின் கண்ணாடி தெளிவற்ற கண்ணாடி. கம்பனின் இரு கண்ணாடிகளோ ஒன்று செய்முறைக்கு எளிது; இன்னொன்றோ கற்பனைக்கும் அரிது; அவரவர் மனக்குதிரையின் வேகத்தையே அது பொருத்திருக்கும்.

இப்போது எடை போட்டுப் பார்த்தால் கண்ணாடி (முன்னாடி) முன்னர் ஷேக்ஸ்பியர், கம்பரில் யார் ஜொலிக்கிறார்கள்?!

முடிவு உங்கள் கையில்!

***********

OCTOBER 2015 CALENDAR

dance siva uma

Quotations from Swami Ramdas

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Compiled  by London swaminathan

Date: 27 September 2015

Post No: 2193

Time uploaded in London :– 16-56

(Thanks  for the pictures) 

WE ARE GIVING 31 BEAUTIFUL QUOTATIONS FROM SWAMI RAMDAS’ (1922-1963) WRITINGS. HE FOUNDED ANANDASHRAM NEAR KANHANKADU IN NORTH KERALA.

Every month Quotations from Hindu sources are given in the Good Thoughts Calendar.

Important Days:

OCTOBER 2 GANDHI JAYANTHI 8 and  23 EKADASI 12 MAHALAYA AMAVASAI/NEW MOON,13 NAVARATRI BEGINS,21 SARASWATHI PUJA,22 VIJAYA DASAMI,24 MOHURAM, 27 PURNIMA /FULL MOON.

AUSPICIOUS DAYS: 19,22, 25, 26.

Jammu, aUGUST 27 An artist dressed up as Shri Krishna dance during shoba yatra on the eve of Janmashtami in Jammu city on Tuesday. Photo by Vishal Dutta

Jammu, Janmashtami

October 1 Thursday

Let life be like a flower – born in full bloom and given away utterly – petals, scent and all to the gardener who brought it into existence.

October 2 Friday

God works in His own mysterious ways and, wherever we turn, His hand is visible.

October 3 Saturday

You cannot dislike people and expect God’s grace to come to you.

October 4 Sunday

Contentment is a gift of God which we get through faith in and submission to Him.

October 5 Monday

To soothe the aching heart, to infuse courage into the drooping spirit, to bring upon smile the face pale with woe, to assuage sorrow by loving word are the works of a God-lover.

amman lakshana

October 6 Tuesday

A saint is a real redeemer and a saviour of the fallen soul, for a saint is God himself manifest in flesh and blood.

October 7 Wednesday

Let the flame of life burn with the splendour that heals, uplifts and serves humanity.

October 8 Thursday

Universal love is not a thing to believed or not believed. He who possesses a universal vision spontaneously lives it.

October 9 Friday

Be a blazing flame of Truth, be a bounteous blossom of love and be a soothing balm of peace.

October 10 Saturday

We want a religion that knits man to man, irrespective of any apparent distinctions, into a common community on earth.

baktas

October 11 Sunday

Love makes life gentle, soft and sweet. Love is the crown of spiritual experience. Love embodies the highest realization of Godhead.

October 12 Monday

It is not philosophy, however high soothing, that can really sweeten life. It is simple love and joy that elevates, ennobles and liberates it.

October 13 Tuesday

Peace dawns in the soul when the tumult of passion ceases.

October 14 Wednesday

Every blade of grass, plant and tree says: “Give your all like us and make world’s life beautiful”.

October 15 Thursday

The sea speaks incessantly: “Thy heart be like my billows – Rise and fall with love and compassion.”

bhakta mira friends

Picture of Bhakta Meera

October 16 Friday

Love fills the heaven above and the earth below. Love alone survives and all passes away.

October 17 Saturday

Let your eyes look with kindliness, your tongue speaks with mildness and your hand touch with softness.

October 18 Sunday

The secret of true joy lies in self-sacrifice and not in self-seeking.

October 19 Monday

When thy heart glistens with purity and peace,

That is the Temple of Lord.

October 20 Tuesday

Life is a beautiful gift of God. It is intended to be placed at His feet like a dedicated flower.

IMG_2080

Hindu Yogi from Cambodia, Ashmolean Museum, Oxford.

October 21 Wednesday

You are neither a weak, nor a puny, nor a faulty creature, but you are the radiant child of a resplendent Mother whose song of power and victor resounds through worlds and space.

October 22 Thursday

The whole world is good to us if we are good.

October 23 Friday

Worshipping brass images and conceiving hatred for men is not devotion.

October 24 Saturday

To suffer calmly, act nobly and live peacefully is the purpose of life.

October 25 Sunday

Do repeat the Mantra constantly. It is the seed of everlasting peace.

kanchi river bank

Kanchi Shankaracharya (1894-1994); one of the greatest saints of our time.

October 26 Monday

Life is immortal. Life is glorious. Life is a positive expression of the Divine. Know that this is the truth about your life.

October 27 Tuesday

Love travels quicker than thought – it is invisible, mystic touch.

October 28 Wednesday

Life is sweet when it is spent in the service of saints.

October 29 Thursday

Guru and God are one. Guru is who he satisfies the spiritual hunger of the aspirant.

IMG_6786 (2)

Tumburu and Narada with their musical instruments.

October 30 Friday

God realisation is nothing but the manifestation of one’s own divinity.

October 31 Saturday

We want a religion which brings love and joy to the heart, and light and wisdom to the head.

–Subham–

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! – 8

bharati stat4

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES;

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Compiled  by S NAGARAJAN

Date: 27 September 2015

Post No: 2192

Time uploaded in London :– 14-12

(Thanks  for the pictures) 

ச.நாகராஜன்

Subramania Bharati  –  Patriot and Poet

அருமையான இந்த ஆங்கில நூலை எழுதியவர் பி.மஹாதேவன். 1957, செப்டம்பரில் இது அத்ரி பப்ளிஷர்ஸ், சென்னை-17ஆல் வெளியிடப்பட்டது. அப்போது இதன் விலை மூன்று ரூபாய். 231 பக்கங்கள். ஆங்கிலத்தில் பாரதி பற்றி அறிய விரும்புவோர் நிச்சயம் வாங்க வேண்டிய நூல் இது.

 

பத்தொன்பது அத்தியாயங்களில் பாரதியார் வாழ்க்கை

 

பத்தொன்பது அத்தியாயங்கள் : Roots, Nonage, Prodigy, Northward Ho!, Interest in Politics, In Search of a Job, Hack-work and Politics, Vande Matharam, Boycott and Swadeshi, Poet and Patron, The Congress Split, The Split and After, At Pondicherry, The Return of the Native, Back in Madras, Bharati the Man, The Bharati Circle, Bharati’s works: Poems, Bharati’s Prose Works, Conclusions என்ற அத்தியாயங்களின் தலைப்புகளைப் பார்த்தாலேயே விஷயம் எவ்வளவு நுணுக்கமாகப் பகுக்கப்பட்டு சொல்லப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து விடலாம்.

 

அழகிய ஆங்கில நடை; விஷயங்களை அதிகாரபூர்வமாக ஆராய்ந்து சொல்லி இருக்கும் பாங்குபடிப்பவரை நன்கு கவரும்.

வைர வியாபாரியும் பாரதியாரும்

பாண்டிச்சேரியில் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி விரிவாக இதில் காணலாம்.

நூலிலிருந்து சில சிறிய பகுதிகள்:

 

“The coming together of such noted fire-brands as Sri Aurobindo, V.V.S.Aiyar and Bharati made the British Government uneasy. Indian Police officials naturally came to the conclusion that they would organize more terrorism from Pondicherry and direct operations in British India without exposing themselves to the risks of arrest or imprisonment.”

 

“On another occasion, it was a ‘diamond merchant’ who came to him with samples of his stock in trade, expatiating upon the virtues of stones, and speaking with quiet assurance of flaws and defects sure that he was dealing with another emissary of the C.I.D. the alleged merchant glanced about the house with furtive looks, like one in search of a hidden object and very evidently making mental notes of all that he saw. After some minutes, Bharati opened his counter-attack. ‘Very well, my dear sir.’ He said, ‘I too have quite a varied assortment of diamonds and all other precious stones. I suppose you buy and sell; so will you please help me to dispose of some of my stock?’ Though unprepared for such a poser, the merchant was equal to the occasion, and replied: ‘That depends: I must have a look at them. What other stones do you have besides diamonds – rubies, emeralds..?’ “Yes, all the nine varieties.” replied Bharati briskly, and reaching out for some his note-books on the table, offered them to the merchant. ‘There’ exclaimed Bharati in a tone of sublime pride, ‘are my precious stones, not even millionaires can find the money to buy them; please take them to your masters, and tell them to recommend to the government to purchase them from me.’ ‘I don’t quite follow you’ faltered the merchant, when Bharati replied: ‘I feared you wouldn’t. These are my poems which the government will not allow me to publish: they are more priceless than all your diamonds!’ The bogus merchant collapsed, fell at the feet of Bharati and begged his pardon.

 

ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு பதம். நூல் முழுவதும் நிரம்பிக் கிடக்கும் சுவையான சம்பவங்களின் நடை இது தான்.

 

ஆங்கில மொழிபெயர்ப்பு

மஹாகவியின் கவிச்சுவையையும் ஆசிரியர் விட்டு வைக்கவில்லை. பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு ஆகியவற்றில் சில பகுதிகள் அற்புதமாக ஆங்கில ஆக்கம் செய்யப்பட்டுள்ளன.

 

Dhrupad’s daughter you stacked last –

    Dhrishtadhymuna’s sister

A fatal throw of the dice you cast,

    And said, “Mong slaves I list her!”

Past all endurance is this shame –

      Sahadev, prepare a brand –

For having sulled our holy flame

    Let us burn up his hand!’

 

துருபதன் மகளைத்திட்டத் துய்நனுடற் பிறப்பை

இருபகடை என்றாய்ஐயோ! இவர்க்கு அடிமை என்றாய்.

இது பொறுப்பதில்லைதம்பி! எரிதழல் கொண்டு வா

கதிரை வைத்திழந்தான்அண்ணன் கையை எரித்திடுவோம்

என்ற வீமனின் உரையை நூலாசியர் மொழி பெயர்த்துள்ளதை மேலே பார்க்கிறோம்.

இத்துடன் பாரதியாரின் ஆங்கிலப் படைப்புகள் சிலவும் பிற்சேர்க்கையில் காணலாம்.

மொத்தத்தில் பாரதியார் பற்றிய சுவையான ஆங்கில விருந்து.

தமிழ் பாரதியை உலகெங்கும் அறிமுகப்படுத்த எடுத்த இந்த முயற்சியைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

பேராசிரியர் மகாதேவனின் தொண்டு மறக்க முடியாத தொண்டு!

 

************

As the King, so are the People: Yatha Raja Thatha Praja!

chola-flag-2

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES;
THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
Compiled  by London swaminathan
Date: 26 September 2015
Post No: 2191
Time uploaded in London :– 18-38
(Thanks  for the pictures) 

There is a proverb in Sanskrit ‘yatha raja, thatha praja’. Like the king, people are. If the king is corrupt, ministers become more corrupt and people become the most corrupt. There are two anecdotes to illustrate this proverb:

Nausherva of Persia was reputed to be a just king. Once he went on a hunting expedition. He hunted any animals in the forest and the lunch time came. Everyone was hungry. Suddenly the king and his retinue realised that they forgot to bring salt for eating the meat. When the food was cooked the king also came to know about it. He, therefore, asked one of his servants to go into the village nearby and get the salt. But he added, “Don’t forget to pay for it. Otherwise the whole village will be ruined.”

Hearing this the servant was greatly surprised. So he said, “Your Majesty, how could a pinch of salt, obtained without payment, cause the devastation of the whole village?”

Naushervan answered, “If the king, exercising his authority, plucks and eats even only one fruit from the garden of any of his subjects, then his servants, following his example, will destroy the whole garden, root and branch.”

Maharana-Pratap-Stamp

Following  story proved this correct:

A revenue officer was camping near a village for collection of tax. He called his servant and told him, “My wife and children like fresh rice. So go to the fields and pluck some and bring here. Make sure no one sees you.” So the servant went during night time and entered a field illegally and plucked some paddy and brought it to the officer. Other servants came to know about it from the man who went into the field.

Taking the hint from the officer servants started collecting rice from each and every field. When the officer went for tax collection, the harvest shown on records were lower than the usual quantity. Then he started questioning his servants. What happened? Why the harvest is very much lower this season? Who was stealing the crops?

The servant who went into the field for the first time answered, “Sir, it is the secret permission you gave me the other day. I took some rice for my family. My colleagues also took some rice for their families. That is all.”

The officer said nothing. He was like a thief stung by a scorpion. He can’t cry aloud.

“Yatha raja ,thatha praja”. If the officers are themselves corrupt, they have no moral authority to question anyone! Even if he says something, it would not have any effect. All will laugh at him, behind his back.

–Subham–

சூரியனிடத்தில் ஆரோக்கியத்தைக் கேள்: ஆரோக்கியம் தொடர்பான பொன்மொழிகள்

boat suprabadh

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by London swaminathan

Date: 26 September 2015

Post No: 2190

Time uploaded in London :– காலை  7-14

(Thanks  for the pictures) 

1).ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத் – பூஜா ப்ரகாச:

சூரியனிடத்தில் ஆரோக்கியத்தைக் கேள்

(சூரியன் மூலம் வைடமின் ‘டி’ கிடைக்கிறது. கண், ஒளி பெறுகிறது. இதை அறிந்த முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே இப்படிச் சொல்லிவைத்தனர்; ஒப்பிடுக: கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரமா?)

2).காய: கஸ்ய ந வல்லப: – பஞ்ச தந்திரம்

யாருக்குதான் உடல் மீது பற்று/ ஆசை இல்லை?

3).இதம் பஸ்மாந்தம் சரீரம் – ஈஸாவாஸ்ய உபநிஷத்

(ஒப்பிடுக: முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு பிடிசாம்பராய் வெந்து மண்ணாவதும் கண்டு…………..பட்டினத்தார்)

falls

4).நீரையும் சீராடு

நீரை முறையாகப் பயன்படுத்தி ஆரோக்கியம் பெறலாம்.

5).உடம்பைக் கடம்பால் அடி

கடம்ப மரக் கட்டில் மிகவும் நல்லது

6).லங்கணம் பரம ஔஷதம்

பட்டினி கிடந்தால் பல நோய்கள் பறந்தோடிவிடும்

7).கிமிவ ஹி மதுராணாம் மண்டனம் நாக்ருதீனாம் –சாகுந்தலம்

அழகுக்கு எதுதான் அழகு சேர்க்காது?

8).தர்மார்த்த காம மோக்ஷாணாம் ஆரோக்யம் மூலம் உத்தமம் – சரக சம்ஹிதை

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பேறுகளையும் அடைய ஆரோக்கியமே சிறந்த சாத்னம்/கருவி.

9).சுட்ட எண்ணையைத் தொடாதே, வறுத்த பருப்பை விடாதே!

ஒரு முறை சூடாக்கிய எண்ணையையோ, நெய்யையோ மீண்டும் சூடாக்கினால், கெட்ட ‘’கொலஸ்ட்ரால்’’ அதிகரிப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது

10).திகஸ்து கலு மானுஷ்யம் – வால்மீகி ராமாயணம்

மனிதப் பிறவி வேண்டத் தக்கது ( பெறுதற்கரிய பேறு)

ந சரீரம் புனப் புன: — சாணக்ய நீதி தர்ப்பண:

அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது

colourful field walk

11).ஸ்யேம நு சூர்யமுச்சரந்தரம்  – ருக் வேதம்

தலைக்கு மேல் சூரியனை எப்போதும் காண்போமாக (நூறாண்டுக் காலம் நல்லபடி வாழ்வோமாக)

12).பஸ்யேமஸ் சரதஸ்சதம், ஜீவேம சரதஸ்சதம் – யஜூர், அதர்வ வேதங்கள்

நூறாண்டுக் காலம் நாம் காண்போமாக; நூறாண்டுக் காலம் நாம் வாழ்வோமாக

(நூறாண்டுக் காலம் வாழ்க; நோய்நொடியிலாமல் வாழ்க)

13).பஹிஸ்ஸரதி நிஸ்வாஸே விஸ்வாச: க: ப்ரவர்ததே – மஹாபாரதம்

வெளியே போன மூச்சு திரும்பிவரும் என்று எப்படி நம்புவது?

(போன மூச்சு திரும்பிவரும் என்று உத்தரவாதம் கிடையாது)

போனால் போச்சு, பொழுது விடிந்தால் ஆச்சு!

தூங்குகையில் வாங்குகிற மூச்சு, அது சுழி மாறிப்போனாலும் போச்சு!

14).மரணம் ப்ரக்ருதி: சரீரிணாம் – ரகு வம்சம்

பிறந்தோரெல்லாம் இறப்பது இயற்கை

மரணம் ப்ரக்ருதி சரீரிணாம் விக்ருதி ஜீவிதம் உச்யதே புதை:
க்ஷணமப்யவதிஷ்டதே ஸ்வசன்யதி ஜந்துர்நனு லாபவானசௌ
(ரகுவம்சம் 8-87)

பொருள்: உடல் எடுத்த பிராணிகளுக்கு மரணமானது இயற்கையானது; பிழைத்திருப்பதுதான் எதிர்பாராதது என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். பிராணியானது ஒரு கணமேனும் ஜீவித்திருக்குமாயின் இப் பிராணிக்கு பெரிய லாபம்தான்!!

((ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யு: — பிறந்தவர் எல்லாம் இறப்பது இயல்பு; இறந்தவர் எல்லாம் பிறப்பது உறுதி –கீதை 2-27))

15).ரம்யாணாம் விக்ருதிரபி ஸ்ரியம் தனோதி – கிராதார்ஜுனீயம்

அழகுள்ளவரித்தில் செயற்கையான பொருள் இருந்தாலும் அது அழகே சேர்க்கும்

16).பூஷாபி: கிம் சுந்தரோ ய: ப்ரக்ருத்யா

அழகானவர்களுக்கு அலங்காரம் எதற்கு?

train watr falls

17).சரீரமாத்யம் கலு தர்மசாதனம் – குமாரசம்பவம்

அறப் பணிகள் செய்வதற்கு ஆதாரமானது இந்த உடல்தான்.

(சுவரை வைத்துத்தான் சித்திரம்)

xxxxxxxxxxxxxxxxx

மனிதரில் எத்தனை வகை? வள்ளுவரின் பதில்!

IMG_3384

திருக்குறள் தெளிவு

மனிதரில் எத்தனை வகை? வள்ளுவரின் பதில்!

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by S NAGARAJAN

Date: 26 September 2015

Post No: 2189

Time uploaded in London :– 6-15 AM

(Thanks  for the pictures) 

 

.நாகராஜன்

 

அரசவையில் வள்ளுவர்

வள்ளுவர் வருகிறார் என்ற செய்தி கேட்டு மன்னம் ஓடோடி வந்து அவரை அரசவைக்குள் அழைத்துச் சென்றான். அப்பா! அரசவை சற்று நேரத்திற்குள் ததும்பி வழிந்தது. வள்ளுவர் மஹிமை!

மன்னர் வள்ளுவரை நோக்கிக் கரம் கூப்பினார். கேட்டார்:-“ஐயனே! நீண்ட நாளாக ஒரு சந்தேகம்! பெறுதற்கரிய மனிதப் பிறப்பை அடைந்தோர் ஏராளம். இந்த மனிதர்களில் எத்தனை வகை உண்டு?”

“மன்னா! மனிதர்களின் வகைகள் தானே தெரிய வேண்டும்! இதோ மக்களே பதில் சொல்வர்.“ என்ற வள்ளுவர், “ பல கிராமங்களின் வழியே வந்தேன் அல்லவா!   பல கிராமங்களிலிருந்தும் மக்களில் பலர் என்னுடன் இங்கு வந்துள்ளனர்.” என்று அரசவையில் மக்களோடு குழுமி இருந்த அவர்களைச் சுட்டிக் காட்டினார்.

1935 valluvar2

 

இறை என்று வைக்கப்படும்

அவர்களில் ஒருவரை அழைத்த வள்ளுவர், “நேற்று உங்கள் கிராமத்தில் என்ன நடந்தது? சொல்லுங்கள்!” என்றார்.

மன்னர், ராணி உட்பட அனைவரும் அவரை நோக்கினர்

“மன்னருக்கு வணக்கம். தெய்வப் புலவருக்கு வணக்கம்” என்று வணக்கம் செலுத்திய அவர் சொல்லத் தொடங்கினார். “இதுவரை நடந்திராத ஒரு சம்பவம் நேற்று எங்கள் கிராமத்தில் நடைபெற்றது. ஊரை ஒட்டி ஓடும் நதியில் பெரு வெள்ளம்! வெள்ள நீர் கிராமத்தில் புகுந்து விட்டது. இதனால் குழப்பம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டோர், பாதிப்புக்கு உள்ளாகாதோர் என்று இரு பிரிவுகளாக கிராமமே பிரிந்து மோதல் சூழ்நிலை ஏற்பட்டது. கொள்ளையர் சிலர் வேறு ஊருக்குள் புகுந்து அகப்பட்டதைக் கொள்ளையடிக்க நினைத்தனர்..”

மன்னர் பதைபதைத்தார். “அப்புறம்?” அவர் குரலில் வேகமும் அவசரமும் தொனிக்க மன்னரை இடைவெட்டி கிராமவாசி தொடர்ந்தார்.

“மன்னா! கவலைப்பட வேண்டாம். ஊரில் நீங்கள் அமைத்திருக்கும் கிராமத் தலைவர்கள் உடனடியாக இரு பிரிவுகளையும் இணைத்தனர்.. அவரவர்க்குத் தேவையானதை ஒரே நாழிகையில் கொடுத்து உதவவே கிராமமே ஒன்றானது. கிராமத்தில் இருந்த அரசு அதிகாரிகள் உடனடியாக வெள்ளம் உள் புகாமல் தடுப்புச் சுவரை எடுத்தனர். அதிகாரிகளில் இன்னொரு பிரிவினர் உணவுக்கு ஏற்பாடு செய்து அனைவருக்கும் வயிறார உணவைப் பரிமாறினர். கிராம காவல் படையினரோ கொள்ளையரை அடித்துப் பிடித்து இதோ உங்கள் முன்னிலையில் கொண்டு வந்துள்ளனர். அவர்களை தளபதி வசம் ஒப்புவித்து விட்டோம்.”

“இப்படி நிலைமை ஒரே நாளில் சீர் பட என்ன காரணம்?” வள்ளுவர் அந்த கிராமவாசியை நோக்கிக் கேட்டார்.

“ஐயனே! நம் மன்னரின் ஆட்சியில் அனைத்தும் முறைப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் எதையும் கோராமலேயே நேரம் அறிந்து நிலை அறிந்து அரசு அதிகாரிகள் உதவினர். எங்களிடம் பொருள் பெறுவதில்லை அவர்கள்! தங்கள் கைப்பொருளையே செலவழித்தனர். அதுவே காரணம்”

IMG_5641

வள்ளுவர் அனைவருக்கும் கேட்கும்படி கூறினார்:

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு                      

இறை என்று வைக்கப்படும் (குறள் 388)

மக்கள் ‘ஹாஹா’வென்று கூவினர். அரசன் இருக்கையிலிருந்து ராணி பின் தொடர எழுந்தோடி வந்து வள்ளுவரின் பாதங்களில் விழுந்து வணங்கினான்.

“ஐயனே! இறை என்பதைத் தலைவன் என்ற பொருளில் எடுத்துக் கொள்கிறேன்” என்று அவன் முடிப்பதற்குள், “எங்கள் மன்னா! எமக்கு இறைவா! நீ வாழ்க” என்று மக்கள் எழுந்து நின்று ஒரே குரலாகப் பெரு முழக்கம் செய்தனர்.

வள்ளுவர் புன்சிரிப்பு பூக்க, “அவர்கள் இறை என்பதற்கு என்ன அர்த்தம் எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ!” என்றார்.

 

தெய்வத்துள் வைக்கப்படும்

 

வள்ளுவர் அனைவரையும் அமரச் செய்தார். இன்னொரு கிராமத்திலிருந்து வந்தவரை அழைத்தார்.” நேற்று உங்கள் கிராமத்தில் என்ன நடந்தது?”

“ஐயனே! எங்கள் கிராமத்தில் நூறு வேலி நிலம் கொண்ட பெரும் பணக்காரர், -சிற்றரசருக்கு நிகரானவர் -இருக்கிறார். ஆனால் அவர் எதையும் தனக்கெனக் கொள்ளாமல் மக்களாகிய எங்களுக்கே தருகிறார். காலை முதல் இரவு வரை எங்கள் வாழ்க்கையை நல்வழிப் படுத்துவதே அவரது ஒரே தொழில். அவர் நடப்பதைப் பார்த்து நாங்கள் நடக்கிறோம். நேற்று வெள்ளம் போக்க அவர் அனைத்தையும் செய்தார். ஒரு கேடும் நிகழவில்லை. உரிய நேரத்தில் மாலையில் கோவில் பூஜையையும் முடித்து வழக்கம் போல சாவடியில் இராமாயணம் கூறவும் வந்தார் ஐயா!

நேற்றைய தினத்தை எங்களால் மறக்கவே முடியாது. பிரளயம் வந்தது என நினைத்தோம். அது பாற்கடல் ஆனது” என்றார்.

kanchi best anbe sivam

வள்ளுவர் இப்போது கூறினார்:-

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்                     

தெய்வத்துள் வைக்கப்படும் (குறள் 50)

‘ஹா ஹா’ என்றனர் மக்கள். ஒருவரைத் தலைவனாக வைத்தார். இன்னொருவரை தெய்வமாக வைத்தார்.

உயிர்வாழ்வாருள் வைக்கப்படும்

 

அடுத்து..

இன்னொரு கிராமத்திலிருந்து வந்த ஒருவரை அழைத்தார். அவர் கேளாமலேயே தன் கிராம நிகழ்வைச் சொல்ல ஆரம்பித்தார்.

“இதோ, எங்கள் அருகில் நிற்கிறாரே, இவர் ஒரு சாது! எங்கள் நினைவு தெரிந்த நாளிலிருந்து இவர் தேகம் பிறருக்காகவே இருக்கிறது. மருத்துவத் தொண்டு செய்வார். கோவில்களில் உழவாரப் பணி செய்வார். கூட்டு பிரார்த்தனைக்கு மக்களை அழைப்பார். ஏழைகளுக்கு உணவைத் தயார் செய்து தருவார். இவரிடம் பணம் ஏதுமில்லை என்றாலும் இதையெல்லாம் இவரால் செய்ய முடிகிறது, இவரது மூச்சு விடுவது ஏனையோருக்காகவே, ஐயனே!”

வள்ளுவர், ‘அந்த ‘உயிர் வாழ்வானை’ மன்னனுக்கு முன்னர் கூட்டி வா’ என்றார்.

‘உயிர் வாழ்வானா’? மன்னன் முகத்தில் சிறிது சந்தேகம் தோன்ற, “ஐயனே! அவர் தான் உயிர் வாழ்வானா? எல்லோரும் தானே உயிர் வாழ்பவர்கள்?!” என்றான்

வள்ளுவர் கூறினார்:

ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்                              

செத்தாருள் வைக்கப்படும்    (குறள் 214)

மக்கள் ‘ஹாஹா’ வென்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பிறருக்கு சேவை செய்பவனே உயிர் வாழ்பவன். ஏனையோர் இருந்தும் இறந்தவரே! உயிருடன் இருந்தாலும் செத்த பிணமே!

DRAGON3

அலகையா வைக்கப்படும்

 

இறுதியாக இன்னொரு கிராமவாசியை அழைத்தார் வள்ளுவர்.

அவர் தன் கிராமக் கதையைக் கூறலானார்:”ஐயனே! அவமானம்! சொல்லவே நாக்கு கூசுகிறது! எங்கள் கிராமத்தில் புல்லறிவு படைத்த ஒரு இளைஞன் இறைவனே இல்லை என்கிறான். தன்னுடன் அறியாப் பிள்ளைகளைத் திரட்டிக் கொண்டு தில்லை நடராசரையும் ஶ்ரீரங்கநாதரையுமே வன்முறையில் மிரட்டுகிறான்! கோவிலை இடி என்கிறான். ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி அவனுக்கு எவ்வளவோ நல்லுபதேசம் செய்தோம். அவன் பெற்றோரும் உறவினரும் கூட அவனைத் துறந்து விட்டனர்.”

அவன் முடித்தவுடன் வள்ளுவர் கூறினார்:-

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து                               

அலகையா வைக்கப்படும்   (குறள் 850)

ஆஹா! உலகோர் அனைவரும் உண்டு என்று சொல்லும் ஒன்றை இல்லை என்பான் வையத்தில் பேயாக வைக்கப்படுவான்.

மக்கள், ‘வள்ளுவர் வாழ்க’ என்று முழக்கம் செய்தனர்.

மன்னனோ, “ஐயனே ஒருவனை இறையாகவும் ஒருவனை தெய்வமாகவும் இன்னொருவனை உயிர் வாழ்பவனாகவும் ஏனோயோரை நடைப்பிணமாகவும், இன்னொருவனை பேயாகவும் வைத்தீர்களே!” ஆஹா! மனிதரில் இத்தனை வகையா!” என்று புளகாங்கிதத்துடன் கூறினான்.

மக்களில் பதரும் மிருகமும்

“ஐயனே! எனது அரசின் கீழ் உள்ள மக்களில் மோசமானவர் யாரேனும் உண்டோ, ஐயனே?”

வள்ளுவர் கூறினார்:

பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல்

மக்கட் பதடி எனல் (குறள் 196)

ஆஹா! பயனற்ற சொல் சொல்பவன் மக்களில் பதர் போன்றவனா? அவனை ஒதுக்கித் தள்ள வேண்டும். மனிதருள் பதரைச் சொல்லி விட்டாரே!

“ஐயனே! மக்களில் மக்களாக இல்லாதவர் யாரேனும் உண்டோ?”

“விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்                       கற்றாரோடு ஏனை யவர்”   (குறள் 410

ஆஹா! எந்தக் கேள்விக்கும் வள்ளுவரிடம் இருக்கிறது பதில். இலங்கு நூல் கற்காதவன் மிருகமே!

முறையுடன் மக்களைக் காப்பவன் தலைவன். அவனே மக்களால் இறை எனப்படுவான்.

வாழ்வாங்கு வாழ்பவன் தெய்வம்.

பிறருக்காக வாழ்பவனே உயிருடன் இருப்பவன். தனக்காக மட்டும் வாழ்பவன் இருந்தும் இறந்தவனே!

உலகத்தார் உண்டு என்பதை இல்லை என்பவன் பேய்!

பயனற்ற சொல் பேசுபவன் பதர்.

நல்ல நூல் கற்காதவன் மிருகம்!! மனிதருள் இத்தனை வகையா?!

இலங்கு நூல் என்கிறாரே! இலங்கு நூல் எது?

அவர் கையில் இருந்த ஒரு சிறிய சுவடிக் கட்டை மன்னன் நோக்க அனைவரும் அதை நோக்கினர்.

“ஐயனே! நாங்கள் அனைவருமே உயர் நிலைக்குச் செல்ல ஆவலுடன் உள்ளோம்! உங்கள் கையில் உள்ள நூலை எங்களுக்குத் தர முடியுமா? அதில் இன்னும் ஏராளமான வகைகளைப் பற்றியும் வாழ்வாங்கு வாழும் முறை பற்றியும் நாங்கள் அறிய முடியுமே!”

வள்ளுவர் புன்முறுவலுடன் திருக்குறளை மன்னனிடம் அளிக்க கூட்டம் ஆரவாரம் செய்தது.

“இதல்லவோ தெய்வச் சுவடி! நாம் அனைவரும் இதைக் கற்று அதன்படி வாழ்வோம். உயர்வோம்!” என்று சபத மொழி கூறினான் மன்னன்.

“நன்று, நன்று” என்றனர் நல்லோர்! வள்ளுவர் சிரித்தார். வான் சிரித்தது. இலேசான தூறல் வீச, பூமித் தாய் மனம் குளிர்ந்தாள்.

திருக்குறள் வாழ்க! தெய்வத் தமிழ்ப் புலவர் வாழ்க!!

**************

Name is the only Remedy!

Sant-Tukaram-1608---1650

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by London swaminathan

Date: 25 September 2015

Post No: 2188

Time uploaded in London :–  21-05

(Thanks  for the pictures) 

Tukaram was a great saint of Maharashtra. He lived in a place called Dehu. He was spending all his time in singing God’s name, talking about His glories and performing Kirtan in the company of devotees. At home, he was sitting in a corner engaged in chanting the name of the favourite God, Vitoba of Pandharpur.

One day, when he was absorbed in the chanting of Vitoba’s name “Vittal, Vittal”, one of his children took ill and was rolling on the gound with stomach ache. Tukaram’s wife was very much upset over the child’s condition and told Tukaram to go and fetch a physician. But Tukaram taking no notice of what his wife said, went on singing god’s name. Tukaram’s wife got wild over his indifference. But Tukaram kept quiet.

Soon after, the child vomited and all the indigestible stuff in its stomach was thrown out. The child immediately ceased groaning from stomach pain. It sat up and was perfectly cheerful. Then Tukaram seeing the recovery of the child went up to his wife and said “the child has now recovered from its pain by God’s grace. If I had called in a physician to treat it as suggested by you we would have to pay him his fees for the treatment. Will you kindly pay me the fees which you would have paid the physician so that I can use the amount for feeding the poor”. The wife turned away from him without giving him any reply.

Story told by Swami Ramdas of Anandashram at Knanhankadu in North Kerala.

இயேசு இறந்தது காஷ்மீரிலா?! -2

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Compiled  by S NAGARAJAN

Date: 25 September 2015

Post No: 2187

Time uploaded in London :– 11-20 am

(Thanks  for the pictures) 

 

 

இயேசு மரணம் பற்றிய ஆய்வு

 

இயேசு இறந்தது காஷ்மீரிலா?! -2

.நாகராஜன்

இயேசுவின் மரணம் காஷ்மீரிலே!

மௌலானா ஜலாலுத்தீன் ஷம்ஸ் (J.D.Shams)  என்பவர் “Where did Jesus Die” என்ற ஆய்வுப் புத்தகத்தில் இயேசுவின் மறைவு குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளார். இந்தப் புத்தகத்தை எஸ்.எஸ். ஹஸன் அபூபக்கர் என்பவர் தமிழில் ‘இயேசுவின் மரணம் காஷ்மீரிலே’ என்று மொழி பெயர்த்துள்ளார்,.(அக்டோபர் 1970  அஞ்சுமன் அஹ்மதியா, மேலப்பாளையம், திருநெல்வேலி-5, தமிழ்நாடு வெளியீடு, 215 பக்கங்கள்)

இந்த நூலில் லண்டனிலிருந்து வெளி வரும் சைகிக் நியூஸ் தனது ஏப்ரல் 20, 1946 தேதியிட்ட இதழில் இயேசுவின் கல்லறை காஷ்மீரில் ஶ்ரீநகரில் .இருப்பதாக நம்பப்படும் ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டதோடு கல்லறையின் போட்டோவையும் வெளியிட்ட செய்தி குறிப்பிடப்படுகிறது.

அஹ்மதிய்யா இயக்கத்தவர் இயேசுவின் வாழ்க்கையில் பெரிதும் ஆர்வம் கொண்டு இது சம்பந்தமான பல புத்தகங்களை வெளியிட்டுள்ளனர்.’The Tomb of Jesus என்ற 55 பக்கங்கள் அடங்கிய ஒரு குறு நூல் ஜனவரி 2010  வெளியீடாக சூஃபி முதியூர் ரஹ்மான பெங்காளி (Sufi Mutiur Rahman Bengalee) என்பவரால் எழுதப்பட்டு 2013ஆம் ஆண்டு (பெங்களூரில்) நடந்த புத்தக கண்காட்சியில்  இலவசமாகத் தரப்பட்டது.

இந்த நூலிலும் ஏராளமான விவரங்கள் தரப்பட்டுள்ளன.

போட்டோக்களைக் காட்டும் ஒரு தளம்

சரி, கல்லறையின் போட்டோ மற்றும் இதர விவரங்களை இணையதளத்தில் படிக்க முடியுமா என்று கேட்டாலோ ஏராளமான தளங்கள் விவரங்களைத் தருகின்றன.

குறிப்பிடத் தகுந்த ஒரு தளத்தை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.

https://mail.google.com/mail/u/0/#inbox/147283ca00435afd

இந்த தளத்தில் ‘Jesus In India’ என்ற தலைப்பில் வந்துள்ள ஆய்வுக் கட்டுரை அனைத்து விவரங்களையும் சுருக்கமாகத் தருவதோடு கல்லறையின் போட்டோக்களையும் தருகிறது.

கருத்துக்களின் சுருக்கம்

இப்படி ஏராளமாகக் கிடைக்கும் தகவல்களைச் சுருக்கினால் வரும் விஷயம் இது தான்:-

  • இயேசு காஷ்மீரில் வசித்தார். 80 வயது வரை வாழ்ந்தார்.
  • ஜெர்மானிய விஞ்ஞானிகள் இயேசுவின் மீது போர்த்தப்பட்டிருந்த சவப் போர்வையை விரிவாக எட்டு ஆண்டுகள் ஆராய்ந்தனர். ஆய்வு முடிவை அவர்கள் போப் அரசருக்குத் தெரிவித்தனர். அவர் மௌனமாகவே இருக்கிறார்.
  • இந்தச் சவப் போர்வை ஒரு வெள்ளிப் பேழையில் இருந்தது. இத்துணியை பிரான்ஸ் மக்கள் பிரான்ஸில் காட்சிப் பொருளாக்கிப் பெரும் பணத்தைப் பெற்றனர். 1898ஆம் ஆண்டில் இத்தாலிய அறிஞர் பயா (Pia) என்பவர் அதைப் போட்டோ பிடித்தார்.
  • 1931ஆம் ஆண்டில் அது மீண்டும் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டபோது கிசிப்பி என்ரிக் (Guisepe Enric) என்பவர் திருச்சபையின் முக்கியமான பிரமுகர் ஒருவர் முன்னிலையில் 6000, 20000 வோல்ட்டுகள் ஒளிதரும் மின்சார சிம்னிகளின் உதவியோடு அத்துணியை ஒரு புகைப்படம் பிடித்தார்.இந்தத் துணி இரத்தத்தை உறிஞ்சி இருக்கும் அடையாளங்களைத் தருகின்றன. ஆகவே இதன் அடிப்படையில் பெறப்படும் உண்மை சிலுவையில் இயேசு உயிரோடு இருந்திருக்கிறார். அவர் கீழே சிலுவையிலிருந்து கீழே இறக்கப்பட்ட போதும் உயிருடனேயே இருந்திருக்கிறார் என்பது தான்.
  • ரஷிய ஆராய்ச்சியாளரான நோடோவிச் இந்தியாவில் புத்த மடாலயம் ஒன்றில் பழைய புத்தக பிரதி ஒன்றைப் பார்த்தார். அதில் இயேசு இந்தியாவில் ஒர்சிஸ் (orsis ஒரிஸா) மாநிலத்தில் ஜக்கர்நாத்திற்கு (ஜகன்னாதர்) சென்றார். பிரம்மாவைத் துதிக்கும் வெள்ளைப் பூசாரிகள் அவருக்கு வேதங்களை வாசித்து விளங்கிக் கொள்வதற்கும் பிரார்த்தனை மூலம் நோய்களைக் குணப்படுத்துவதற்கும் கற்றுக் கொடுத்தார்கள்.

  • சிலுவையிலிருந்து மீண்ட பின்னர் – அதாவது “உயிர்த்தெழுந்த” பின்னர் அவர் காஷ்மீரை வந்தடைந்தார். அவரது இறப்பிற்குப் பின்னர் அவர் செய்யத் நாஸிருத்தீன் அவர்களுடைய கல்லறைக்கு அடுத்த கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
  • இந்திய அரசாங்கம் “The Roza Bal Shrine of Srinagar” என்ற டாகுமெண்டரியை வெளியிட்டுள்ளது. இதில் யுஸா ஆஸஃப் – அதாவது – இயேசு கிறிஸ்துவின் கல்லறை பற்றி குறிப்பிடப்படுகிறது. இந்தியாவிற்கு வந்த பின்னர் இயேசு பஞ்சாப், ராஜஸ்தான் வழியே சென்று பூரி ஜகன்னாத், ராஜ்கிரஹம், இமாயலப் பகுதி ஆகிய இடங்களில் வசித்தார். இந்த டாகுமெண்டரி அராபிய, பாரசீக, சம்ஸ்கிருத நூல்கள் இதை உறுதிப்படுத்துவதாகக் கூறுகிறது.
  • இந்த ‘ரோஜா பால் கொள்கையின்’ படி காஷ்மீரில் வாழ்ந்த இயேசு மணமுடித்துக் கொண்டார். பல குழந்தைகளைப் பெற்றார். இங்குள்ள காஷ்மீரிகளில் பலர் தாங்கள் இஸ்ரேலின் 10 பூர்வீக குடிகளின் வழித் தோன்றல்கள் என்று சொல்லிக் கொள்கின்றனர்.
  • இந்த டாகுமெண்டரியை எழுதி இயக்கியவர் யஷேந்த்ர ப்ரஸாத். அவர், ஒரு பேட்டியில், “இயேசு காஷ்மீரில் இருந்தது பற்றிய பிரச்சினையில் இந்திய அரசு நடுநிலைமை வகிக்கிறது. இந்தப் பிரச்சினையில் எந்த வித அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பது இந்திய அரசின் கொள்கை. தனிப்பட்ட முறையில் எனது விருப்பம் இந்திய அரசு நவீன மரபணு சோதனைகளை கல்லறையில் கையாள வேண்டும் என்பது தான். ஆனால் சூழ்நிலை இதற்கு ஒத்து வரவேண்டும். பல சக்திகள் இதை விரும்பவில்லை.” என்றார்.
  • பல கிறிஸ்தவ ஆராய்ச்சி நிபுணர்கள், “இத்தகைய கூற்றிற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்பதால் விஞ்ஞான முறையிலான சோதனை தேவையற்றது” என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அழியாது புகழ்

ஆக இயேசுவின் மரணம் காஷ்மீரில் தான் என்ற ஆய்வு ஒரு புறம் தீவிரமான கருத்துக்களை முன் வைக்க அதை அதிகாரபூர்வமான கிறிஸ்துவின் தலைமை இடம் ஏற்கவில்லை.

இந்த ஒரு ஆராய்ச்சியால் இயேசுவின் போதனைகள் சிறிதளவும் கீர்த்தியில் குறைவு படப் போவதில்லை. இந்தியர்கள் உள்ளிட்ட உலக மக்கள் அவர் காஷ்மீரில் இறந்தார் என்பதை ஏற்றாலும் அவர் புகழ் அணுவளவேனும் மாசுபடப் போவதில்லை.

ஆனால் அவரது சத்தியமான போதனைகளுக்கு அப்பாற்பட்டு ‘உயிர்த்தெழுதல்’ போன்ற சம்பவங்களைக் கூறி வரும் தேவாலயத் தலைமைக்கு ஒருவேளை இதனால் சங்கடங்கள் நேரிடலாம். ஆகவே அவர்கள் இதை ஒருபுறமாக ஒதுக்கித் தள்ளுவதில் ஆச்சரியமும் இல்லை.

என்றாலும் தகவல் புரட்சியுடன் கூடிய மரபணு சோதனை யுகத்தில் மக்கள் இதில் ஆர்வம் காட்டுவது இயல்பே!

நாளைய உலகில் என்னென்ன சோதனைகள் தோன்றுமோ, அதில் என்னென்ன முடிவுகள் வெளி வருமோ, யார் அறிவார்?!

இயேசு காப்பார் – எப்போதும்! இது கிறிஸ்தவர்களின் உள்ளார்ந்த நம்பிக்கை!!

நன்றி: இக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்ட பல்வேறு நூல் ஆசிரியர்கள், வெளியீட்டாளர்கள், படங்கள், இணைய தளங்களுக்கு இந்த ஆய்வாளரின் நன்றிகள்.

**************                                                                   இயசுவின் மரணம் பற்றிய இந்த ஆய்வு முற்றும்

வாழ்க வடுவூர் அய்யங்கார்!

IMG_5797

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by London swaminathan

Date: 25 September 2015

Post No: 2186

Time uploaded in London :–  10-36 am

(Thanks  for the pictures) 

வடுவூர் துரைசாமி அய்யங்கார் நாற்பதுக்கும் மேலான தமிழ் நாவல்களை எழுதினார். 1880 ஆம் பிறந்த அவர் 1942 ல் இறந்தார். தஞ்சை மாவட்டம் வடுவூரைச் சேர்ந்தவர். அவருடைய புத்தகங்களை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கிவிட்டதால் யாரும் வெளியிடலாம். அவரைப் பற்றி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெறும் அளவுக்கு தமிழ் வளர்ச்சிக்கு, குறிப்பாக நாவல் வளர்ச்சிக்கு, உதவியுள்ளார். இன்று அவரது படைப்புகள் மறுபதிப்பு செய்யப்பட்டுவிட்ட போதிலும், மேலும் பல திரைப்படம் ஆக்கப்பட்டுவிட்ட போதிலும் அவரது காலத்தில் இப்புத்தகங்கள் எப்படி வெளியாயினவோ அந்த ஒரிஜினல் வடிவத்தில் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ளன. எதிர்கால ஆய்வாளருக்காக இதோ சில மாதிரிகள்:

IMG_5796 (2)

IMG_5804 (2) - Copy

IMG_5798 (2) - Copy

IMG_5888 (2)

IMG_5805 IMG_5806 (2) IMG_5811 (2) IMG_5812 (2) IMG_5814 IMG_5815 (2) IMG_5816 (2) IMG_5817 IMG_5819 (2) IMG_5820 (2) IMG_5821 (2) IMG_5822 (2) IMG_5823 (2)

IMG_5887

IMG_7410