5 ஜோதிகளும், 4 விளக்குகளும்: திருமூலர், அப்பர் தரும் அரிய தகவல் (Post No.3482)

Written by London swaminathan

 

Date: 25 December 2016

 

Time uploaded in London:-  8-09 AM

 

Post No.3482

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

உலகிலேயே மிகப் பழைய நூலான ரிக்வேதம் முதல் முதலில் கடவுளை ஜோதி வடிவில் கும்பிட எல்லோருக்கும் காயத்ரீ மந்திரத்தைச் சொல்லித் தந்தது.

 

ஓம் பூர் புவஸ்ஸுவஹ, தத்சவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹீ

தியோ யோநஹ பிரசோதயாத்

–என்ற இந்த மந்திரத்தை எல்லோரும் அறிந்து பயன் பெறுவதற்காக மஹாகவி பாரதியார்

செங்கதிர்த் தேவன் ஒளியினைத் தேர்ந்து தெளிகின்றோம் அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக

—-என்று அழகிய தமிழில் மொழிபெயர்த்து அருளினார்.

 

ரிக்வேதத்துக்குப் பின்னர் வந்த பிருஹத் ஆரண்யக (பெருங்காட்டு) உபநிஷத்தில் தமஸோ மா ஜ்யோதிர் கமய (இருளிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்வாய்) என்ற மந்திரத்திலும் ஒளி இடம் பெற்றது.

அருணகிரிநாதரோ திருப்புகழில் தீப மங்கள ஜோதீ நமோ நம என்று பாடினார். அவருக்குப் பின்னர் வந்த அருட்பிரகாச வள்ளலாரோ அருட் பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை என்று பாடினார்.

 

அருணகிரிக்கும் வள்ளலாருக்கும் முன்னால் வாழ்ந்த திருமூலர் ஐந்து ஜோதிகள் பற்றிப் பாடினார். திருமூலருக்கும் முன்னால் வாழ்ந்த அப்பரோ நான்கு விளக்குகள் பற்றிப் பாடினார்.

 

இந்த ஐந்து ஜோதி (ஒளி), நான்கு விளக்குகள் பற்றிப் புரிந்துகொள்ள பாரதியாரின்  சில வரிகள் உதவும்:-

 

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் எல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்  – என்று பாரதி பாடினார்.

 

நமக்குத் தெரிந்த ஒளி எல்லாம் விளக்கின் மூலம் வரும் ஒளிதான். ஆனால் ஞானிகளுக்கும் கவிஞர்களுக்கும் மனத்தின் ஒளி (உள்ளத்தில் ஒளி), அறிவு ஒளி (ஞானதீபம்) முதலியனவும் தெரியும்.

 

எப்படி சூரியன் சந்திரன் அக்னி (நெருப்பு) ஆகிய மூன்றும் ஒளியை உண்டாக்கி இருளகற்றுகின்றனவோ அதே போல ஞான ஒளி அறியாமை என்னும் இருளை அகற்றும்.  நம்மைப் போன்ற ‘கண்ணிருந்தும் குருடராய்’ வாழ்வோரை வாக்கினிலேயுள்ள ஒளி மூலம் பெரியோர்கள் கரை ஏற்றுவர். பாரதியார் சொன்னதைப் போலவே அவருக்கும் 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தேவார மூவரும் திருவாசகப் பெரியாரும், திருமூலரும் பாடி வைத்தனர்.

 

 

சோதி=  ஜோதி= ஒளி = விளக்கு

 

அப்பர் காட்டும் 4 விளக்கு

 

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது

சொல்லக விளக்கது சோதி யுள்ளது

பல்லக விளக்கது பலருங் காண்பது

நல்லக விளக்கது நமச்சி வாயவே.

அப்பர் தேவாரம் 4-11-8

 

 

பொருள்

 

1.இல்லத்தினுள் உள்ள விளக்கானது இருளை கெடுப்பது. அதாவது ஒளி தருவது;

 

  1. சொல்லினுள் உள்ள விளக்கானது ஜோதி வடிவில் உள்ளது;

3.பலருடைய மனதில் உள்ள விளக்கு அது எல்லோரும் காண்பது.

 

4.நல்லவர்களின் மனதில் உள்ள விளக்கு நமச்சிவாய” என்ற மந்திரம்

 

நமச்சிவாய என்னும் விளக்கு அறியாமை எனும் இருளை அகற்றும்; சிவஜோதியில் கலக்க உதவும்.

 

 

திருமூலர் சொல்லும் 5 ஜோதி

அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்

பிண்ட ஒளியுடன் பிதற்றும் பெருமையை

உண்டவெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது

கொண்டகுறியைக் குலைத்ததுதானே

–திருமூலரின் திருமந்திரம் 1975

 

பொருள்:-

மானிடர் உடம்பைச் சூழ்ந்துள்ள அண்ட ஒளியானது, உலகில் வானமண்டலத்தில் விளங்கும் ஒளியுடன்  — உடலிலுள்ள உட்கருவிகளின்  அறிவால் பிதற்றும்  வீணான பெருமையை விழுங்கி —  உடல் கடந்துள்ள ஆகாய வெளியில் திகழும்  ஒளியினுள்ளே மறைந்தது. அதனால் உடலின் அமைப்புகள் காணாமல் போகும்; உடலும் ஒளியாய்த் திகழும்.

 

ஐந்து வகை ஜோதிகள்:-

 

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் — என்ற மாணிக்க வாசகரின் (திருவாசக/திருவெம்பாவை) பாடலுக்கு உரை எழுதிய திரு தண்டபாணி தேசிகர் மேற்கூறிய திருமந்திரப் பாடலை மேற்கோள் காட்டிப் பின் வருமாறு எழுதுகிறார்:-

 

“சோதியுள் அண்ட ஜோதி, பிண்ட ஜோதி, மன ஜோதி, ஞான ஜோதி, சிவ ஜோதி என ஐந்து என்பார் திருமூலர். அவற்றுள் அண்ட ஒளி ஒவ்வோர் அண்டங்களிலும் உள்ள சூரியன் சந்திரன் அங்கி (தீ), விண்மீன் முதலியன (திருமந்திரம் 1975).

பிண்ட ஒளி உடம்போடு கூடிய உயிர் அறிவின் கண்ணதாய் —  மல நாசம் விளைக்க உபாயமாகும் பசுஞான ஒளி (பாடல் 1985);

உயிரைச் சூரியன், சந்திரன், அனல், கலையாகிய நான்குமாக அறிதல் மனவொளி (பாடல் 1990);

ஞான ஒளி பர நாதத்தின் செயலாய்  வைகரியாதி வாக்குகள் உதயமானதற்கு இடமாய் இருப்பது.

 

Kartikai Deepa on top of Tiruvannamalai

சிவ ஒளி :-

முற்கூறிய நான்கு ஒளிகளும் சிவ ஒளியின் முன், இருள் போல அகன்றொழியும் —  குடங்கள் தோறும் (அதிலுள்ள நீரில்) சூரிய ஒளி தோன்றினும், அந்தக் குடங்களின் வாயை மூடச் சூரிய ஒளி அந்தக் குடங்களில் மட்டும் அடங்கியதாகச் சொல்ல முடியாததுபோல எல்லா உயிர்களிடத்தும் விளங்குவதாயிருப்பது அகண்ட ஒளி எனப்படும்.

 

இம்மந்திரத்தினுள்ளும் அண்ட ஒளி, பிண்ட ஒளி, பிதற்றும் பெருமையை உண்ட வெளியாகிய மனத்துள் விளங்கும் ஒளியாம் மனவொளி, அவ்வொளிக்குள் ஒளியாகிய ஞான ஒளி, அகண்ட ஒளி என்று ஐந்து கூறுதல் காண்க. இவ்வண்ணம் இறைவன் நால்வகை ஒளியினும் சிறந்து, பெரிய ஒளியாகிய சிவஞானமாகிய முதற்படியில் நின்றாரும் அரிதற்கரிதாய் இருத்தலின் அரும்பெருஞ் சோதியை  என்றார் மாணிக்கவாசகர்.

 

திருவெம்பாவை இயற்றப்பட்ட இடம் திருவண்ணாமலையாதலின் திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் தேடி அறிய முடியாத ஒளிப் பிழம்பாக நின்றார் இறைவன் என்னும் தல புராண வரலாற்றை அடக்கிக் கூறியதாக உரைத்தலுமாம்” — என்பது தண்ட பாணி தேசிகரின் உரை.

பாரதியாரும் சோதிமிக்க நவகவிதை என்று பாடுவதைக் காண்க.

 

–சுபம்-

 

 

Book Review: Brindavan Express by Mr V.Desikan (Post No. 3481)

74231-sundal

Written by S NAGARAJAN

 

Date: 25 December 2016

 

Time uploaded in London:- 6-17 am

 

Post No.3481

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

 

This article first published in www.ezinearticles.com under expert author : santhanam Nagarajan

 

 

Brindavan Express by Mr V.Desikan

 

Santhanam Nagarajan

 

The book under review Brindavan Express written by Mr V Desikan is a fantastic book.

 

Mr Desikan belongs to Tamilnadu.

 

He has obtained his  degree in electronics from the Madras Institure of Technology and joined in Defence Research and Development organization at Bangalore. He is the recipient of ‘Scientist of the Year (1983) DRDO  award from the late Prime Minister of India Mrs Indira Gandhi

 

He has jotted down his thoughts systematically from time to time and like a sculptor creates his dream statue, has written down articles weaving his beautiful thoughts with a  humorous touch.

 

The book has 73 articles under twelve captions namely My roots, Emotions, Life is a game, My living town – Bangalore, Food, Music and Novels, Future Tense, Language, Growing old, Science and Engineering, What is in a name and Mixture.

 

One of his friends Mr RV Rajan induced him to publish these article in a book form.

 

The articles were published in a leading English daily Deccan Herald. His style is lucid.

 

Each and every article kindles readers thought process. His conclusions are compelling and convincing.

 

As a scientist he dreams towards a better future where every thing is perfect. He points out that the future lies in Nano technology.

 

There are  many quotations through out the book from great men like Rabindranath Tagore, Harry Emerson Fosdick, Shakespeare, G.K.Chesterton etc.

 

The book makes an interesting reading. He has

 

The book is neatly printed and can be obtained from leading book shops.

 

Some excerpts from the book:

f31bf-sundal2b2

About his Boss:

 

My boss Burman, a confirmed bachelor was in charge of system integration. He was a chain smoker.If he liked someone,he would call him an ‘idiot’ or ‘a fool’ –  I was one of his favorite idiots!

 

On seeing his dream vehicle,  the 40 feet long SANGAM:

I went towards my favorite SANGAM  and stood there for a long time. I looked at her and gently whispered (what Brutus told Cassius):

‘Forever and forever farewell, my dear

If we do meet again, why, we shall smile.

If not, why then this parting was well made.’

 

About Sundal :

If there be Chat Centres, fast food outlets all over our cities, why can’t someone open a ‘Sundal Center’?

 

About KDK (Kumbakonam Degree (Coffee) Kaapi :

Thank you KDK

You bring me joy in the morning

You bring me joy in the morning;

 

About the requirement of a positive newspaper :

I have a real problem on hand. All my life I have enjoyed sipping my morning coffee, reading the morning newspaper. I have recently discontinued my habit as it is no more a pleasant experience. Now I need a ‘Positive Newspaper’ badly.

 

I have a dream:

My idea of Next-gen city is that it should be

Totally green and with Zero pollution

With efficient and complete public transportation

With minimum private vehicles

Total Connectivity – Airports, roads, sea (where applicable)

Full Safety

 

I congratulate Mr Desikan for releasing this wonderful book. I strongly recommend this book for the book lovers.

 

*********

திரு/ ஸ்ரீ என்ற சொல் ‘ஸர்’ ஆக மாறியது எப்படி? (Post No. 3480)

73ed7-shri

Research Article Written by London swaminathan

 

Date: 25 December 2016

 

Time uploaded in London:-  6-01 AM

 

Post No.3480

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

திரு என்ற சொல்லுக்கு செல்வம், அதிர்ஷ்டம், வளமை, லெட்சுமி, ஒளி— என்று பல பொருள் உண்டு. தற்காலத்தில் பெயருக்கு முன்பாகவும் கோவில், புனித நூல்கள், ஊர்கள், நாடுகளுக்கு முன்பாகவும் இதைப் பயன்படுத்தி வருகிறோம்.

9cf2c-shri-ganesh

மொழி இயல் ரீதியில் பார்த்தால் இது ‘ஸ்ரீ’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லிலிருந்து (S=T) வந்தது தெரியும். அது மட்டுமல்ல; இதுவே ஆங்கிலத்தில் ஸர் SIR என்னும் பட்டத்தையும் ஸார் Sir (ஐயா) என்ற சொல்லையும் கொடுத்தது என்பதும் புலப்படும். திரு என்ற சொல்லுக்கு என்ன பொருள் உண்டோ, என்ன என்ன உபயோகம் உண்டோ அது அததனையும் சம்ஸ்கிருதத்திலும் ஸ்ரீ — என்ற சொல்லுக்கும் உண்டு. 3000 ஆண்டுகளுக்கு முன் இரண்டு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து பிரிந்து இரண்டு பெரிய மொழிகளாக உருவாயின. பிரித்தாளும் சூழ்ச்சியுடைய வெளி நாட்டார் திராவிட மொழிக் குடும்பம் என்ற ஒன்றை செயற்கையாக உருவாக்கி புதுக் கதைகளை எட்டுக்கட்டிவிட்டனர். உலகிலுள்ள பழைய மொழிகளின் சொற்களை தமிழ் அல்லது சம்ஸ்கிருத மூலத்துடன் எளிதில் தொடர்பு படுத்தலாம். ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள் இருப்பதே இதற்கு எடுத்துக்காட்டு.

 

ஆங்கில நாட்டில் ஒரு காலத்தில் வீரதீரச் செயல்கள் செய்தோருக்கு ‘ஸர்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. இதற்கு 13-ஆம் நூற்றாண்டிலிருந்து சான்றுகள் உள. ஆனால் பிற்காலத்தில் சிறப்பான செய்கைகள் சாதனைகள் புரிந்தோர் அனைவருக்கும் இப்பட்டம் கொடுக்கப்பட்டது. பிரிட்டிஷார் ஆட்சியிலுருந்து வெளியேறி பின்னர் காமன்வெல்த்COMMON WEALTH என்னும் அமைப்பிலுள்ள நாட்டு சாதனையாளருக்கும் இப்பட்டம் வழங்கப்படுகிறது.

 

‘ஸ்ரீ’ என்ற சொல்லின் இடமாறு தோற்றப் (Sri = Sir) பிழைதான் ஸர். நாம் எப்படி மதுரை என்பதை மருதை, குதிரை என்பதை குருதை, வாயில் என்பதை இல்வாய் என்றெல்லாம் மாற்றிச் சொல்ல்கிறோமோ அது போலத்தான் ச்ரீ என்பது ஸர் ஆகியது. இந்தியில் கூட தர்ம என்ற சொல்லை தரம் என்பர்.

 

இதற்கு இன்னொரு முறையிலும் விளக்கம் உண்டு. திரு என்பதே ஸர்(ரு) ஆனது என்று. ‘ச’ அல்லது ‘ஸ்’ என்பத ‘த’ அல்லது ‘த்’ ஆக மாறும். ஆழ்வார்களும் நாயன்மார்களும் வி’த்’தை என்பதை வி’ச்’சை என்பர். த்யூதம் என்ற சொல் தமிழில் சூது எனப்படுகிறது. ஆங்கிலத்தில் எடுகேடியான் EDUCATION என்று எழுதி அதை எடுகேஷன் என்று உச்சரிப்பர். இவ்வாறு நூற்றுக்கணக்கான சொற்கள் டியான் TION என்று எழுதபட்டாலும் ஷன் SION என்றே உச்சரிக்கப்படும் அங்கும் டி என்பது ஷ ஆக மாறியதைக் காணலாம்.

 

ஆங்கிலத்தில் ஸர் SIR  பட்டம் சாதனை புரிந்தோருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. நமது நாட்டிலும் திரு, ஸ்ரீ என்பன எல்லாம் புனித அல்லது சாதனையாளருக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. இப்போழுது சர்வ சாதாரணமாக திருவாளர், திருமதி என்று எல்லோர் பெயர்க்கு முன்னாலும் போடத் துவங்கி விட்டோம். ஸர் என்பதும் ஒருவரை மரியாதையாக ஸார் (ஐயா Sir) என்று கூப்பிடுவதும் தொடர்புடைய சொற்களே. எப்படி நாம் திரு என்பதை மலிவான சரக்காக்கி எல்லோருக்கும் பயன் படுத்துகிறோமோ அப்படி அவர்களும் ஸார் என்பதை பயன்படுத்தத் துவங்கிவிட்டனர்.

74595-sri

அது சரி, உங்கள் இஷடப்படி இப்படி வியாக்கியானம் செய்கிறீர்களே. ஆங்கிலத்தில் ஆக்ஸ்போர்ட் (ETYMOLOGICAL) அகராதி போன்ற நூல்கள் இந்த சொல்லின் பிறப்பு (etymology) பற்றி என்ன கூறுகிறது? என மொழியியல் அறிஞர் வினவலாம். அவர்களும் பேந்தப் பேந்த முழிக்கிறார்கள். இது லத்தீன் மொழியில் அல்லது பழைய பிரெஞ்சு மொழியில் (Latin or Old French) இருந்து வந்திருக்கலாம் என்று ஆயிரம் ஆண்டுக் கதையை மட்டுமே சொல்லுவர். அதற்கு முன் லத்தீனும் அதிலிருந்து தோன்றிய பிரெஞ்சு முதலிய மொழிகளும் சம்ஸ்கிருத மூலத்தை உடையவை என்பதை அவர்களே ஒப்புக்கொள்ளுவர்.  கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையே! என்போர் கதையாக சம்ஸ்கிருதம் என்பதை நேராக ஒப்புக்கொள்ளாமல் அதற்கும் ஒரு மூல மொழி இருந்ததாகவும் அதிலிருந்து பிரிந்ததாக்கும் என்றும் தட்டி மழுப்புவர்!

 

மேலும் அவர்கள் கூறும் பழைய சொற்கள் இன்றும் உலகில் புழக்கத்தில் உள்ளன. அவர்கள் இது செரி SERE என்பதிலிருந்து ஸர் SIR ஆகி இருக்கலாம் என்பர். இன்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஸ்ரீ என்பதை செரி SERE என்றுதான் எழுதுகின்றனர். இன்னும் சிலர் செயுர், சிர், சிரி என்பனவற்றிலிருந்து மருவியிருக்கலாம் என்பர். அதையும் இலங்கையில் காணலாம அவர்கள் ஸ்ரீ மாவோ என்பதை சிறீ (siri) மாவோ என்பர். சிறீலங்கா (SRI LANKA) என்றே எழுதுவர். ஸ்ரீ லங்கா என்றால் ஒளிமிகு இலங்கை என்று பொருள்.

 

இந்தியாவில் ஸர் (SIR) பட்டம் பெற்றோர்:

ரவீந்திரநாத் தாகூர், ஜகதீஷ் சந்திர போஸ், சி.பி.ராமஸ்வாமி அய்யர், அண்மையில் சசின் டெண்டூல்கர் மற்றும் பலர்.

 

திரு அல்லது ஸ்ரீ அடை மொழி உடைய நூல்கள், ஊர்கள் (சில எடுத்துக்காட்டுகள் மட்டும்):-

 

ஸ்ரீ சைலம், ஸ்ரீ நகர், ஸ்ரீ பெரும்புதூர்

d6814-shri-symbol-svg

திருவாரூர், திருவையாறு முதலிய 400 பாடல் பெற்ற சிவ, விஷ்ணு தலங்கள்.

 

திருவாசகம், திருக்கோவையார் முதலிய நூல்கள்

ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம்

 

–Subham–

 

Origin of Sri= Sir = Thiru (Sanskrit/English and Tamil) – Post No. 3479

Research Article Written by London swaminathan

 

Date: 24 December 2016

 

Time uploaded in London:-  15-22

 

Post No.3479

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

Believe it or not, the Sanskrit word ‘Sri’, English honorific title ‘Sir’ and Tamil word ‘Thiru’ all mean the same. Sir and Thiru came from the Sanskrit word Sri.

Sri is written as ‘Siri’ (as in Sirimao Bhandaranayake) in Sri Lanka and ‘Sere’ in South East Asia.

 

In India, Sri is also written as Shree, Sree, Shri and Sree. Sri means wealth and Goddess Lakshmi. Sri also means light, resplendent etc.

 

In the name of a country Sri Lanka , the meaning of Sri is ‘replendednt’.

 

Nowadays Hindus use it before a male’s name to give him respect. It is used as Mr and in Tamil Tiru. If it is a woman, then Srimati (in Tamil Tirumati) is used. It may mean respectful or enlightened.

 

Sri= Lakshmi, Wealth, Fortune, Prosperity, Light, Resplendent (nowadays Mr)

 

Tamil word Thiru or Tiru is also derived from Sanskrit Sri. In Tamil also the meaning is similar to Sanskrit.

According to linguistic rules ‘S’ and ‘T’ are interchangeable. That is why all the English words with ‘TION’ ending is pronounced ‘SION’ ((E.g) Education, Fruition, Cognition. Even in Tamil literature Tamil saints changed Vithyai as Viccai (Vidhya=Vithyai- vicchai) in Tevraram and Tirvasagam and Divya prabandham. The oldest portion of these Tamil devotional literature is at least 1500 year old.

Sir—Honorific Title

English people who are knighted are given the title ‘Sir’. In India scientists like Sir C V Raman, Sir Jagadish Chandra Bose, Literaturs like Ravindranatha Tagore and judges like Sir C Ramaswami Iyer, sportsmen like Sachin Tendulkar were awarded this ‘SIR’ title by the British Queen.

 

The etymology of the word according to Oxford dictionary is as follows:-

The word Sir derived from the Middle English ‘Sire’ according to the dictionary. It was first used in 1297. All these are forced etymology, because it doesn’t explain where the Old French or Latin got it. As everyone knows that Germanic languages and Romance languages are derived from Sanskrit , the root of Sir can be easily traced.

 

Sri is found in the Vedas. There is a Suktam (Poem/verse/hymn) named after Sri. Names such as Srimati, Sri, Sridharan, Srinidhi, Srinivas are common even today. Oldest Shasranama Vishnu sahasranama has several names beginning with Sri. Several town names (Srisailam, Sriperumpudur) and book names (Sri Bhagavata, Srimad Bhagavd Gita) also have the Sri as prefix.

Following the Hindus, the world used sir(i) in other European langauges. We have proofs for such usage even today in Sri Lanka (Siri) and South East Asia (sere). Change in the position of the letter ‘I’ or change in the position of sound cause such spellings. For instance Dharma is written as Dharam in Hindi. The famous city of Tamil Nadu Madurai is pronounced as Marudai and Kuthirai (horse) is pronounced as Kuruthai. No wonder Sri ischanged to Sir or Siri or Sere in other languages!

 

–Subham–

 

 

‘தேவர் கோ அறியாத தேவ தேவன்’ யார்? திருவாசகக் கதை (Post No.3478)

Written by London swaminathan

 

Date: 24 December 2016

 

Time uploaded in London:-  5-59 AM

 

Post No.3478

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

திருவாசகத்தில் மாணிக்க வாசகர் பாடுகிறார்: சிவ பெருமானே உன்னை இந்திரனாலும் கண்டு கொள்ள முடியவில்லையே! என்று.

 

தேவர் கோ அறியாத தேவ தேவன்

செழும்பொழில்கள் பயந்து காத்தழிக்கும் மற்றை

மூவர் கோனாய் நின்ற முதல்வன்

பாடல் 30, திருச்சதகம்

இன்னொரு பாட்டிலும் இதே கருத்தை முன்வைக்கிறார்

மேலை வானவரும் அறியாததோர் கோலமே யெனை ஆட்கொண்ட கூத்தனே — பாடல 43, திருச்சதகம்

 

தேவர் கோ= தேவர்களுக்கு அரசனான இந்திரன்; வானவர்=தேவர்கள்

 

 

அது என்ன கதை?

இந்திரன் தலைமையிலுள்ள தேவர்கள் ஒருமுறை அசுரர்களை வென்றவுடன் தலைக் கனம் ஏறிவிட்டது. ஆண்டவன் அருளால் கிடைத்த வெற்றியைத் தாங்களே போராடிக் கிடைத்த வெற்றி என்று யான், எனது என்னும் செருக்கில் (அஹங்காரம் – யான், மமகாரம்/மமதை=எனது) மிதந்தார்கள் இவர்களுடைய இறுமாப்பை வெட்டி வீழ்த்த சிவபெருமான் அவர்கள் முன்னால் ஒரு யக்ஷனாகத் தோன்றினார். யக்ஷன் என்பது மரங்களில் வாழும் பேய். ஒரு பெரிய ஆசனத்தில் உடகார்ந்தார். அது இந்திரலோகத்தில் இந்திரன் அமரும் ஆசானத்தைவிடப் பெரியது. இந்திரனுக்கு யார் இந்த ஆள் என்று தெரியவில்லை. உடனே அக்னியை அழைத்து, நீ போய் யார்?  என்ன? என்று விசாரித்து வா ஏன்று அனுப்பினான்.

 

அக்னி போய் கேள்வி மேல் கேள்வி கேட்ட உடனே யக்ஷன் கேட்டான்:

நீ யார்?

நானா? நாந்தான் அக்னி/நெருப்பு;  எதையும் எரிக்கும் வல்லமை படைத்தவன்.

யக்ஷன் சிரித்துக்கொண்டே, அப்படியா? இதோ ஒரு துரும்பு; இதை எரித்துக்காட்டு என்றான்

அக்னி எவ்வளவு முயன்றும் ஒன்றும் செய்ய முடியவில்லை. உடனே இந்திரனிடம் உள்ளதை உள்ளபடியே சொல்லிவிட்டான்.

 

இந்திரன் வியப்புற்று, அப்படியா சேதி? என்று சொல்லி வருண பகவானை அழைத்தான். அவன் அங்கே சென்றபோது அந்த யக்ஷன், துரும்பை நனைக்க முடியுமா  என்று கேட்டான். வருணன் சிரித்துக் கொண்டே துரும்பின் மீது மழையைக் கொட்டுவிப்போம் என்று சங்கல்பித்தான். ஆனால் ஒரு சொட்டுத் தண்ணீரும் விழவில்லை. அவன் பயந்துபோய் இந்திரனிடம் சொல்லவே வாயு பகவனை அனுப்பினான். அவனும் எதையும் நகர்த்த சக்தி இல்லாதவனாக திரும்பி வந்தான்.

 

உடனே இந்திரன் நான் போய் என் வலைமையைக் காட்டுவேன் என்று புறப்பட்டான். முதலில் யக்ஷனைப் பார்த்து யார் என்று கேட்டான. உடனே யக்ஷன் வடிவில் வந்த சிவபெருமான் மறைந்தார். அப்போது உமையம்மை அவன் முன் தோன்றி, அவனுடைய கேள்விக்குப் பதில் சொன்னாள்:- யக்ஷன் வடிவில் வந்தவர் தனது கணவரே என்றும் அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்றும் சொன்னாள். அப்போதுதான் தேவர்களின் செருக்கு அழிந்தது. பின்னர் இந்திரனும் சிவனை வழிபட்டு பெரும்பேறு பெற்றான் என்ற கதை கேனோபநிஷத்தில் இருக்கிறது. இது சிவ பெருமானே முழுமுதற் கடவுள் என்பதைக் காட்டும் கதை ஆகும்.

 

இப்போது  திருவாசகப் பாடலைப்  படித்தால் பொருள் நன்கு விளங்கும்:-

 

மேலை வானவரும் அறியாததோர்

கோலமே எனை ஆட்கொண்ட கூத்தனே

ஞால மேவிசும்பே வந்து போங்

காலமேயுனை என்று கொல் காண்பதே (43)

 

பொருள்:-

மேலான பதவிகளில் உள்ள தேவர்களும் அறிய முடியாத ஒப்பற்ற திருவுருவே! அடியேனையும் ஒரு பொருட்டாகக் கருதி ஆட்கொண்டவனே! மண்ணும் விண்ணும் தோன்றி அழிதற்குக் காரணமான கால வடிவானவனே! உன்னை நான் காண்பது எப்போது?

 

தேவர் கோ அறியாத தேவ தேவன்

செழும்பொழில்கள் பயந்து காத்தழிக்கும் மற்றை

மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி

மூதாதை மாதாளும் பாகத் தெந்தை

யாவர்கோன் என்னையும் வந்தாண்டு கொண்டான்

யாமார்க்கும் குடியல்லோம் யாதும் அஞ்சோம்

மேவினோம் அவன் அடியார்  அடியாரோடு

மேன்மேலுலுங் குடைந்தாடி யாடுவோமே

பாடல் 30, திருச்சதகம்

பொருள்:-

தேவர்களின் அரசனான இந்திரனும் அறியப்படாத தேவ தேவனும், செழுமையான உலகங்கள் அனைத்தையும் படைத்துக் காத்து அழிக்கும் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவர்க்கும் தலைவனாய் நிற்கும் முதற்பொருளும், அம்மூவர் வடிவும் தன் மேனியில் கொண்டவனும், அவர்கட்கு மூதாதையும், உமாதேவியை இடப்பக்கத்தில் வைத்தாடும் எந்தையும் யாவர்க்கும் தலவனாக இருப்பவன் சிவன்; அவன் அடியேனையும் வலிய வந்து ஆட்கொண்டான். ஆகையால் நாம் எவர்க்கும் அடிமையல்ல; எவர்க்கும் அஞ்சோம்; அவனுடைய அடியார்க்கும் அடியார் ஆவோம்; மேலும் மேலும் இந்த ஆனந்த வெள்ளத்துள் மூழ்கிக் குடைந்தாடுவோம்.

(இந்தப் பாட்டிலுள்ள வரிகளை அப்பரும் நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் என்ற பாட்டில் பயன்படுத்துவது குறிப்பிடத் தக்கது. அப்பர் தேவாரத்தில் மாணிக்க வாசகரின் தாக்கத்தை தனி ஒரு கட்டுரையில் காண்போம்.)

 

–சுபம்–

 

ஏ.கே.செட்டிடாரின் குமரி மலர் கட்டுரைகள் (Post No.3477)

Written by S NAGARAJAN

 

Date: 24 December 2016

 

Time uploaded in London:- 4-55 am

 

Post No.3477

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

 

பாரதி இயல்

 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 16

 

ஏ.கே.செட்டிடாரின் குமரி மலர் கட்டுரைகள்

 

ச.நாகராஜன்

 

 

ஏ.கே. செட்டியார்

 

திரு ஏ.கே. செட்டியார் உலகம் சுற்றிய தமிழர். நேதாஜியைப் பற்றிய அழகிய திரைப்படம் (டாகுமெண்டரி) தயாரித்தவர். சிறந்த தமிழ் ஆர்வலர்.பழமையைப் போற்றுபவர். பாதுகாப்பவர்.

 

 

நட்புக்கு முதலிடம் தருபவர்.

 

குமரி மலர் என்ற மாதப் பத்திரிகையை சென்னையைத் தலமையிடமாகக் கொண்டு நடத்தி வந்தார்.

பத்திரிகை பக்க அளவில் சிறிது என்றாலும் உள்ளிருக்கும் விஷயங்கள் மிக கனமானவை. தேடித் தேடிக் கண்டு பிடிக்கப்பட்டவை. இதரர்களால் சுலபமாக அணுக முடியாத அற்புத விஷயங்களைக் கொண்டவை.

சிறந்த குணநலன்களைக் கொண்ட இவர் முகம் எப்போதும் புன் முறுவல் பூத்தபடியே இருக்கும்.

 

 

எனது தந்தையார் (மதுரைப் பதிப்பு – தினமணி பொறுப்பாசிரியர் திரு வெ.சந்தானம்) அவர்களின் நெருங்கிய நண்பர். குமரி மலரின் சந்தா தொகை மிக அற்பமான ஒரு தொகை. அதை வசூல் செய்வதற்காக, தன்னுடைய சொந்தப் பணத்தில் பெரிய தொகையைச் செலவழித்துக் கொண்டு, நேரில் வருவார். நண்பர்களைப் பார்க்க இது ஒரு வாய்ப்பு என்று கருதியே வீடு வீடாகச் செல்வார்.

 

மதுரையில் எங்கள் வீட்டில் இவர் வரும் போது சுடச்சுட இட்லியில் தேன் விட்டுச் சாப்பிடுவார். இவரது உயரிய டேஸ்டே தனி!

 

பின்னர் டிவிஎஸ் ஸ்தாபகர் திரு சுந்தரம் ஐயங்காரின் மகனான திரு ராஜம் அவர்களின் மகன் திரு ஆர். ராமச்சந்திரன் அவர்களை (மதுரை ஆர்.ஆர்) சென்று பார்ப்பார். இப்படி அனைத்து நண்பர்களைப் பார்ப்பதுடன் பழைய கால பத்திரிகைகளைத் தேடும் பணியும் கூடவே நடக்கும். மதுரை பிரம்மஞான சபையில் அபூர்வமான இதழ்கள் கிடைக்கும். எனது ஆசிரியரும் பாரதியின் அணுக்க பக்தருமான திரு வி.ஜி. சீனிவாசன் அவர்கள் இப்படிப்பட்ட அரிய விஷயங்களைத் தரும் பத்திரிகைகளை இனம் காண்பிப்பார்.

 

ஆக, இப்படி ஊர் ஊராகச் சென்று பழைய இதழ்களைத் தேடி அதில் வியக்கத்தக்க செய்திகளை இனம் கண்டு எடுத்து தொகுத்து குமரி மலரில் பிரசுரிப்பார்.

 

குமரி மலரின் பழைய இதழ்கள் ஒரு பொக்கிஷம். பாரதி அன்பர்களுக்கோ அது ஒரு அபூர்வமான வர பிரசாதம்.

ஏராளமான பாரதியார் கட்டுரைகளையும், பாரதியார் பற்றி பல நண்பர்கள், பாரதியாரோடு பழகியவர்கள் ஆகியோர் எழுதிய கட்டுரைகளையும் பழைய இதழ்களில் காணலாம்.

 

 

இவற்றில் சில புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டதுண்டு.

தமிழ்நாடு என்ற ஏ.கே செட்டியாரின் பயணக்கட்டுரைகள் அடங்கிய நூலில் பாரதியார் சுதேசமித்திரன் 1919 ஜனவரி மாத இதழில் எழுதிய பாபநாசம் என்ற கட்டுரையை அவர் வெளியிட்டார். அதை பாரதி ஆர்வலர் திரு ரா.அ.பத்மநாபன் தான் தொகுத்த பாரதி புதையல் – மூன்றாம் தொகுதியில் வெளியிட்டுள்ளார்.

 

 

ஏ.கே. செட்டியார் குமரி மலர் நவம்பர் 1971 இதழில் பாரதியார் சக்திதாஸன் என்ற பெயரில் எழுதிய விநோதச் செய்திகள் என்ற கட்டுரையை வெளியிட்டிருந்தார். அதையும் பாரதி புதையல் மூன்றாம் தொகுதியில் பார்க்கலாம்.

பாரதியார் பற்றியும் அவருடன் தொடர்பு கொண்டவர்கள் பற்றியும் வெளியாகியுள்ள அனைத்து குமரி மலர் கட்டுரைகளையும் தொகுத்தால் அதுவே ஒரு சிறந்த புத்தகமாக அமையும்.

 

 

சில குமரி மலர் கட்டுரைகளை மட்டும் இங்கு காணலாம்:

  • அர்ச்சுனன் புலம்பல் என்ற பாரதியார் கவிதை – பரலி சு.நெல்லையப்பர் தினமணி சுடர் 10-9-1967 இதழில் வெளியிட்டது – (செப்டம்பர் 1973 குமரி மலர் இதழ்)
  • பாரதியாரும் தமிழும் – இளசை மணியன் வெளியிட்ட பாரதி தரிசனம் என்ற நூலி வெளியான கட்டுரை (ஜ்னவரி 1975 இதழ்)
  • மது பானம் – சி.சுப்பிரமணிய பாரதி (1909)
  • இராமதாஸ் ஸ்வாமிகள் கோட்டை – சி.சுப்பிரமணிய பாரதி (1907)
  • மௌனத்தின் வலிமை – பாரதியாரின் சக்ரவர்த்தினி பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை. பாரதியாரால் எழுதப்பட்டிருக்கக் கூடும் என்ற அனுமானம் தெரிவிக்கப்படுகிறது.
  • பட்டினத்துப் பிள்ளையின் சரித்திரம் – சி.சுப்பிரமணிய பாரதி (1906)
  • திருவல்லிக்கேணியில்ப் பொதுக்கூட்டம் – சி.சுப்பிரமணிய பாரதி (1907)
  • இறவாமை – சி.சுப்பிரமணிய பாரதி
  • பாரதியாரின் இந்தியா – இந்தியா இதழில் வெளியான 7 கட்டுரைகள்
  • பாரதியாரின் கர்மயோகி – கர்மயோகி இதழில் வெளியான 3 கட்டுரைகள்
  • பாரதியார் நூல்கள் மதிப்புரை – சுவதேச கீதங்கள் (1907) பாரதியாரின் கவிதைத் தொகுப்பிற்கு மதுரையிலிருந்து வெளியான் செந்தமிழ் பத்திரிகை தந்த மதிப்புரை

 

மதிப்புரையில் ஒரு வரி:-

“இயற்கையில் இனிய கவிகள் பாட வல்ல பாரதியார் தம் சக்தியை இத்தகைய புது வழியில் திருப்பி உபயோகப்படுத்தியிருப்பது நம்மவர்க்கு ஒரு நல்ல வழியைக் கற்பிக்கின்றது.”

 

 

  • பாஞ்சாலி சபதம் (1913) நூலுக்கு ஞானபாநு மாதப் பத்திரிகையின் ஆசிரியர் எஸ்.சுப்ரமணிய சிவா தந்துள்ள மதிப்புரை

மதிப்புரையில் ஒரு வரி:-

பாஷாபிமானிகளும் தேசாபிமானிகளும் அவசியம் படிக்க வேண்டிய புஸ்தகம் இது. விலை அணா எட்டு. தபாற் செலவு வேறு. வேண்டியவர்கள் நமது ஆபீசுக்கேனும் அல்லது பிரஹ்ம ஸ்ரீ ஸி.சுப்பிரமணிய பாரதியவர்கள், புதுச்சேரி யென்ற விலாசத்திற்கேனும் எழுதிப் பெற்றுக் கொள்ளலாம்.

          சென்னை நவம்பர் 1913

 

 

  • புதுச்சேரி பற்றிய கவிதை – பாரதியார் வாழ்ந்த ஊர் பற்றிய வெண்பா (எழுதியவர் பெயர் குறிப்பிடப்படவில்லை)

பாரதி வாழ்ந்த ஊர்; பண்பார்ந்த செந்தமிழின்

சீரதிகம் பெற்றுச் சிறந்த ஊர் – கார்கடலின்                        ஓசை முழங்கும் ஊர்; ஒய்யாரமான ஊர்,                         வாசம் வளர்ப் புதுவை நகர்

 

 

  குமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகளின் தலைப்புகளை அடுத்து காண்போம்

****

 

                                             

Kalidasa and Tamil Poets on God! (Post No.3476)

Written by London swaminathan

 

Date: 23 December 2016

 

Time uploaded in London:- 18-23

 

Post No.3476

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

Kalidasa, the greatest poet of India, believed in the concept of One God. Like every Hindu, he also worshipped him in various forms through his poems and yet he made it very clear that God is one echoing the thought of the Rig Vedic seer: Ekam sat vipraa: Bahuta vadanti.He refers to all the important gods and goddesses in his seven works; His list includes Brahma, Vishnu, Siva and Vedic Gods Indra, Agni, Yama, Tvastra, Rudra, Surya, Prajapati,Varuna, Kubera, Kartikeya and Goddesses Kali, Lakshmi, Sarasvati, Uma, Sapta Mata and demi gods.

 

After referring to various Gods in various places in his works, he says:

Siva is divided threefold (Brahma, Vishnu and Siva) which points to Monism.

“May the Eternal One who is attainable by firm faith and meditation; who is hailed as the Supreme Spirit in the Vedanta, who pervades and is present in the whole of heaven and earth; to whom alone the name of Lord, not signifying any other being, is properly applied; and who is sought within themselves by those desirous of salvation by restraining the vital breaths, Prana and others, bestow upon you the highest bliss (Vikramorvasia 1-1)

The two other plays of Kalidasa open with similar benedictory stanzas in praise of Shiva.  The Raghuvamsa too opens with a salutation to Shiva. In the Megaduta and Kumarasambhava also, we come across several appreciative references to Siva (This shows he lived long before the Gupta Kings who were Parama Bhagavatas (Worshippers of Vishnu).

All these show that he was a great devotee of Lord Siva. But we must remember that he praised Brahma and Vishnu as well.

 

In Kumarasambhava (7-44), he praised Siva as: “That was but one form which divided itself in three ways. Their seniority or juniority is common (interchangeable); sometimes Siva is prior to Vishnu or Vishnu to Siva; sometimes Brahma to them both; and sometimes the two to Brahma”.

This sloka shows his understanding of oneness. People of his days believed in such oneness. That is why he makes a passing remark in the middle of the Kavya without much empahsis.

 

In the Sakuntala (1-1) he praised Siva as follows:-

“The First Creation of the Creator;

The Bearer of oblations offered with Holy Rites;

That one who utters the Holy Chants;

Those two that order Time;

That which extends, World-Pervading

in which sound flows impinging on the ear;

That which is proclaimed the Universal Womb of Seeds;

That which fills all forms that that breathe with the Breath of Life.

May the Supreme Lord of the Universe

who stands revealed in these Eight Forms

perceptible preserve you.

The most popular prayer of Kalidasa in the Raghuvamsa is taught to every child on the very first day when they go to learn Sanskrit:-

 

Vagarthaviva sampriktau vagarthah pratipattaye | Jagatah pitarau vande parvathiparameshwarau || – Raghuvamsha 1.1

 

 

I pray to the parents of the world, Lord Shiva and Mother Parvathi, who are inseparable as word and its meaning to gain knowledge of speech and its meaning.

 

 

Tamils followed Kalidasa

Tamils also followed Kalidasa. Sangam Literature which was nearly 2000 year old has more praise for Shiva in the Prayer. These prayers were added when they compiled the anthology in the fourth or fifth century CE, that is after Kalidasa who lived in the First Century BCE. Purananauru, Akananauru, Ainkurunuru, Pathtrupathu and Kalitokai beging with an invocation to Lord Siva. Kuruntokai has a prayer for Lord Skanda and Natrinai has a Vishnu Sahasranama Sloka (in Tamil) as its prayer. Paripatal begins with a poem on Lord Vishnu and Pathupattu begins with a poem on Lord Skanda (Murugan in Tamil). Most of the prayer songs were done by on Mr Mahadevan who translated Mahabharata in Tamil. His name in tamil is Bharatam Patiya Perunthevan (Mahadevan who sand Bharata).

 

Since Sangam period Tamil Poets used over 200 similes of Kalidasa (out of 1200) ,Kalidasa must have lived in first century BCE or earlier (Please see my research paper written a few years ago and posted here).

–Subham–

மாணிக்கவாசகரின் உண்மைப் பெயர் என்ன? (Post No. 3475)

Written by London swaminathan

 

Date: 23 December 2016

 

Time uploaded in London:- 8-27 AM

 

Post No.3475

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாற்றில் எல்லாம் ஒரே மர்மம்தான். அவர் வாழ்ந்த காலம் என்ன? ஒரே புதிர்! இருந்தபோதிலும் அப்பர் நரி-பரி ஆன லீலையைக் குறிப்பிடுவதால் சம்பந்தருக்கும் அப்பருக்கும் முன்னர் வாழ்ந்தவர் என்று தெரிகிறது. (நான் சில ஆண்டுகளுக்கு முன் இதே பிளாக்கில் எழுதிய எனது ஆய்வுக் கட்டுரையில் மேலும் பல சான்றுகளைக் கொடுத்துள்ளேன்).

 

 

அது சரி! அப்படியானால் இவர் ஏன் அப்பரையும் சம்பந்தரையும் குறிப்பிடவில்லை. அவர்கள் ஏன் இவர் பெயரைச் சொல்லவில்லை? ஒரே மர்மம்

 

அது போகட்டும்? இவரை 63 நாயன்மார்களில் சேர்க்காதது ஏன்? ஒரே புதிர்! திருத் தொண்டத்தொகையிலும் பாடவில்லை ( ஆனால் நான் இவர் பெயர் சத்ய வாகீஸ்வரர் என்று கண்டுபிடித்துள்ளேன்; அதை பொய்யடிமை இலாத புலவர் என்று திருத்தொண்டத் தொகையும் குறிப்பிடும்)

 

எனினும் எல்லோரும் அவர் பெயரை எங்குமே சொல்லாமல் திருவாதவூரர் என்றும் இறைவன் கொடுத்த மாணிக்க வாசகர் என்ற பெயரையுமே பயன்படுத்துகின்றனர். அப்பா, அம்மா வைத்த பெயர் என்ன என்பது எழுத்தில் எங்ஙனும் இல்லை. மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் திருவாதவூரில் பிறந்ததால் ஊர்ப்பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது.

 

 

சரி, பெயர்தான் தெரியவில்லை. சத்யவாகீஸ்வரன் என்பதெல்லாம் ஊகமே. கடவுள் ஏன் இவரை “மாணிக்க வாசக” என்று அழைத்தார்?

 

இவர் பாடிய 656 பாடல்களில், 3000 வரிகளுக்கு மேலுள்ள திருவாசகத்தில் அருமையான சொற்பிரயோகம் இருப்பதை தமிழ் ஆர்வலர் எல்லோரும் ரசிப்பர். ஒரு சில சொற்களை மட்டும் காண்போம்.

 

இரும்பின் பாவை

நம் எல்லோருக்கும் மரப்பாவை (மரப்பாச்சி), மண் பொம்மைகள் (சுதை) தெரியும். பார்த்து இருக்கிறோம். பஞ்சலோக விக்ரஹம் எனப்படும் ஐம்பொன் சிலைகளும் தெரியும். பாவை விளக்கு போன்ற பித்தளை பொம்மைகளையும் பார்த்து இருக்கிறோம். இவரோ தன்னை “இரும்பின் பாவை” என்று சொல்லுகிறார். யாருக்கும் இல்லாத ஒரு கற்பனை! இதற்கு உரை எழுதிய ஆன்றோர், இறைவன் காந்தம் என்றும் அவரால் இவர் கவர்ந்திழுக்கப்பட்டதால் இரும்பின் பாவை என்றும் சொல்லுகிறார் என்பர். மிகப் பெருத்தமகவே தோன்றுகிறது. ஏனெனில் இரும்பு-காந்த உவமையை காளிதாசன், திருமூலர், ஆதிசங்கரர் போன்ற பலரும் பயனன்படுத்தியுள்ளனர்.

 

 

வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று

போதுநான் வினைக்கேடன் என்பாய் போல

இனையனானென்றுன்னை யறிவித்தென்னை

ஆட்கொண்டெம்பிரானாய் இரும்பின் பாவை

அனைய நான் பாடேனின் றாடே நந்தோ

அலறிடேன், உலறிடேன் ஆவி சோரேன்

முனைவனே முறையோ நானானவாறு

முடிவறியேன் முதல் அந்தம் ஆயினானே

 

பொருள்:

கடவுளே! தோற்றம், இறுதிக்குக் காரணமானவனே! இருவினைக் குவியலில் கிடந்து வருந்தும் என்னை வலிய ஆட்கொண்டு, ” வா, உன் வினைகளை ஒழிப்பேன் என்று கூறுவது போல சொல்லி என்னை அடிமையாக ஏற்றாய்.  நானோ இரும்பின் பாவை போல இருக்கிறேன். உன்னைப் பாடவில்லை; ஆடவில்லை; வாய் உலரவில்லை;  உயிர் மயங்கவில்லை. நான் இப்படி இருப்பது முறையா? இதன் முடிவை அடியேன் அறிகின்றேன். இல்லை

 

பொல்லாமணி

புகவேதகேன் உனக்கன்பருள்

யானென் பொல்லா மணியே

தவே யெனை யுனக் காட்கொண்ட

தன்மையெப்புன்மையரை

மிகவேயுயர்த்திவிண் நோரைப்

பணித்தியண்ணாவமுதே

நகவேதகும் எம்பிரான் என்னை

நீ செய்த நாடகமே

–திருச்சதகம் பாடல் 10, திருவாசகம்

பொருள்:

என் முழு மாணிக்கமே! யான் உன் அடியார் கூட்டத்தில் புகவே தகுதி இல்லாதவன். அங்கனம் இருந்தும் என்னை ஏற்றுக் கொண்டாய்? இது உனக்கு பெருமை தருமா? எவ்வளவு இழிந்தவரானாலும் அவர்களை  மிகவும் உயரச் செய்கிறாய். உயர்ந்த தேவர்களைத் தாழ்த்துகிறாய். தந்தையே! அமுதமே! எம்பிரானே! நீ செய்த நாடகம் தான் என்ன? இது நகைப்புக்கு இடம் தருகிறதே!

 

இதில் பொல்லாமணி என்ற சொல் மிகவும் முக்கியமானது. பொள்ளல் என்றால் துளைபோடுதல் என்று பெயர். முத்து, பவளம் போன்ற நவரத்னங்களை மாலையாகக் கட்டுகையில் அதில் துளைபோட்டுக் கோர்க்கமுடியும். ஆனால் வைரம், மாணிக்கம், மரகதம் போன்ற உயர்ந்த ரத்னக் கற்களைத் துளையிட முடியாது; அதாவது பொள்ள முடியாது. ஆகையால் இறைவா நீ ஒரு முழு மாணிக்கம். (இதைத் தங்கத்துக்கிடையே வைத்துதான் மாலை கட்டலாமே தவிர ஓட்டை போட முடியாது. ஆகையால் பொல்லா மணியே என்றழைக்கிறார்.)

 

நான்கு முறை ஓம்காரம்!

 

போற்றியோ நமச்சிவாய

புயங்கனே மயங்குகின்றேன்

போற்றியோ நமச்சிவாய

புகலிடம் பிறிதொன்றில்லை

போற்றியோ நமச்சிவாய

புறமெனப் போக்கல் கண்டாய்

போற்றியோ நமச்சிவாய

சயசய போற்றி போற்றி

—–திருச்சதகம் பாடல் 64, திருவாசகம்

 

பொருள்:-

ஓம் நமச்சிவாய போற்றி. பாம்பை அணிந்தவனே மயங்குகின்றேன். ஓம் நமச்சிவாய போற்றி. அடைக்கலம் புகுவதற்கு வேறு வழியொன்றும் இல்லை. ஓம் நமச்சிவாய போற்றி. அடியேனைப் புறத்தே தள்ளிவிடாதே; ஓம் நமச்சிவாய போற்றி. ஜய ஜய போற்றி

 

இதில் ஓம் நமச்சிவாய என்ற பிரணவ பஞ்சாக்ஷரம் நான்கு முறை வந்திருத்தல் காண்க.

 

வேதங்களைப் போலவே ஓம்காரத்துடன் துவங்கி அதிலேயே முடிக்க வேண்டும் என்று கருதி திருவாசகத்தில் முதல்பாட்டையும் (சிவ புராணம்), கடைசி பாட்டையும் (அச்சோ பதிகம்) ஓம்காரத்துடன் அமை த்துள்ளார் என்பதை முன்னரே ஓம்காரம் பற்றிய கட்டுரையில் கொடுத்துள்ளேன்.

 

இது போல இன்னும் நிறைய சொற்கள் உள்ளன. நேரம் கிடைத்தபோது பகிர்வேன்.

 

–சுபம்—

பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 2 (Post No. 3474)

Written by S NAGARAJAN

 

Date: 23 December 2016

 

Time uploaded in London:- 5-18 am

 

Post No.3474

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 16

 

இந்தக் கட்டூரையில் பரிபாடலில் வரும் இரண்டாம்  பாடலில் வேதம் பற்றியும் அந்தணர் பற்றியும் வரும் குறிப்புகளைக் காணலாம்..

 

 

       பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 2

 

                        ச.நாகராஜன்

 

பரிபாடல்

 

பரிபாடலின் இரண்டாம் பாடல் 76 அடிகளைக் கொண்டுள்ளது.

இதைப் பாடியவர் கீரந்தையார். இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் நன்னாகனார். பாடல்  முழுவதும் திருமாலின் பெருமையைக் காணலாம்.

 

திருமாலின் பெருமையில் ஊழிகளின் தோற்றம், வராக கற்பம், திருமாலின் நிலைகள், திருமாலின் சிறப்பு, படைச் சிறப்பு, திருமாலின் திருமேனியின் ஒளி முதலிய சிறப்புகள், பல் புகழும் பரவலும் என பல அரிய செய்திகளைக் கண்டு பிரமிக்கிறோம்.

 

 

வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த                    கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும் (வரிகள் 24, 25)

 

வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் என்று மாசில்லாத உயர்ந்த கொள்கையை உடைய முனிவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். அவர்கள் ஆய்ந்தது கெடு இல் கேள்வி. கெடு இல் கேள்வி என்பதால் ஒரு பிழையும் தவறும் இல்லாதது உயர்ந்த வேதம் என்பது பெறப்படுகிறது. நடு ஆகுதலும் என்பதால் அந்த அற்புதமான வேதத்தின் நடுவாக உட்பொருளாக அமைபவன் திருமால் என்பது பெறப்படுகிறது.

 
சாயல் நினது, வான் நிறை-என்னும் 
நாவல் அந்தணர் அரு மறைப் பொருளே: 
அவ்வும் பிறவும் ஒத்தனை; உவ்வும் 
எவ் வயினோயும் நீயே.  (வரிகள் 56 முதல் 60 முடிய)

 

 

சாயல் நினது, வான் நிறை  என்பதால் வானம் பொழிவது போன்று உனது அருள் ஒவ்வொருவரின் மீதும் பொழிகிறது என்கிறார் புலவர். நாவன்மை பொருந்திய அந்தணர் ஓதும் அருமறையின் – வேதத்தின் – பொருளே என்ற பொருளில் நாவல் அந்தணர் அருமறைப் பொருளே என திருமாலை இங்கு விளிக்கிறார் புலவர் பெருமான்.

அதுவும் அதற்கு மேலாகவும் இருப்பவன் நீ என்பதை அவ்வும் பிறவும் ஒத்தனை என்பதால் குறிப்பிடும் புலவர் உவ்வும் எவ்வயினோயும் நீயே என்பதால் நீயே இதர அனைத்துப் பொருள்களிலும் இருப்பவன் என்று முத்தாய்ப்பாகக் கூறி விடுகிறார்.

 
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்
படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித் 
திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்
நின் உருபுடன் உண்டி;
பிறர் உடம்படுவாரா 
நின்னொடு புரைய 
அந்தணர் காணும் வரவு.  (வரிகள் 61 முதல் 68 முடிய)

 

 

இந்த வரிகளின் பொருள் :- நீயே வேதத்தின் சாரம். அந்தணர்களுக்கு, பசுக்கள் பிடிக்கப்பட்டு, ஜ்வாலை உள்ள அக்னியுடன் உள்ள ஹோமத்தில் உணவுகள் படைக்கப்பட்டு வேதங்கள் ஓதப்பட்டு செய்யப்படும் சடங்குகள் உள்ள வேதங்களில் காணப்படும் பல்வேறு வடிவங்களாய் இருப்பவன் நீயே. நம்பாதவர்கள் கூட நம்பி ஒப்புக் கொள்ளும்படி உடன்பட வைப்பவன் நீ.

 

அனைத்தும் அறிந்த புலவர் பிரான் திருமாலின் பெருமையை அருமையாகத் தக்க விதத்தில் இப்படிப் புகழ்ந்துரைக்கிறார்.

ஆகவே உன்னை தலை உற வனங்கினேம், உன்னை ஏத்தினேம், வாழ்த்தினேம் என்று பாடலை முடிக்கிறார்.

என்ன அற்புதமான் பாடல். ஆழ்ந்த பொருளைக் கொண்ட அற்புதமான சொற்கள்.

பல முறை படித்து மகிழ வேண்டிய அழகிய பரிபாடல் பாடல் இது!

*******

நமசிவாய படகில் போகலாம்– மாணிக்கவாசகர் (Post No. 3473)

Written by London swaminathan

 

Date: 22 December 2016

 

Time uploaded in London:- 10-26 AM

 

Post No.3473

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

பிறப்பு-இறப்பு என்னும் பெருங்கடலில் இருந்து தப்பிக்க என்ன வழி என்று அப்பரும், மாணிக்க வாசகரும் சொல்லும் வழிகள் இலக்கிய நயம் படைத்த பாடல்கள் ஆகும். முதலில் மாணிக்க வாசகர், திருவாசகத்தில் கூறியதைப் பார்ப்போம்:-

 

தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத்

தடத்திரையா லெற்றுண்டு பற்றொன்றிக்

கனியை நேர் துவர் வாயாரென்னும் காலால்

கலக்குண்டு காமவாள் சுறவின் வாய்ப்பட்

டினி யென்னே யுய்யுமாறென்றென்றெண்ணி

அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை

முனைவனே முதலந்தமில்லா மல்லற்

கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே (27)

திருவாசகம் திருச்சதகம்

 

 

பொருள்:

கடவுளே! நான் பிறவிப் பெருங்கடலில் (ஒப்பிடுக- குறள் “பிறவிப் பெருங்கடல் நீந்துவார்…..) விழுந்தேன்; துன்பங்கள் என்ற அலைகள் என்னை ஆட்டிப் படைக்கின்றன; கொவ்வைக்கனி போல சிவந்த வாயுடைய பெண்கள் என்ற புயற்காற்றும், காமம் என்னும் சுறாமீன்களும் (ஒப்பிடுக-ஆதிசங்கரரின் விவேக சூடாமணி ஸ்லோகம்  79, 141) என்னைப் பிடித்துவிட்டன. என்ன செய்வதென்று திகைத்தபோது ஐந்தெழுத்து என்னும் படகு கிடைத்தது. அதைப் பற்றிக்கொண்டு விட்டேன்; நீ என்னைக் காத்தருள்வாயாக.

பிறவிப் பெருங்கடல் என்பது கீதை முதலிய சம்ஸ்கிருத நூல்களில் காணப்படும் சம்சார சாகரம் என்பதன் தமிழ் வடிவமாகும்.

 

பக்தர்கள் இரண்டு வகை. பூனைக்குட்டி, குரங்குக் குட்டி போல இரண்டு வகையினர். ஆனால் மாணிக்க வாசகரும் அப்பரும் அதற்குப் பதிலாக ஏணியையும் தோணியையும் (படகு, தெப்பம்) பயன்படுத்துகின்றனர். ஐந்தெழுத்து என்பது நமசிவாய என்னும் அரிய பெரிய மந்திரம். யஜூர்வேதத்தில் ருத்ரம் என்னும் பகுதியில் அமைந்த மந்திரம் ஆகும்.

 

மற்கட நியாயம், மார்ஜர நியாயம்

இதை பல தருணங்களில் பல விஷயங்களை விளக்கப் பயன்படுத்தலாம். இருந்த போதிலும் பக்தர்களின் வகைகள் எத்தனை என்று விளக்க இதைப் பெரும்பாலும் பயன்படுத்துவர்.

பக்தி இலக்கியத்தைப் படைத்தவர்கள் பொதுவாக பக்தர்களை இரண்டு வகையாகப் பிரித்து இருக்கின்றனர். குரங்கு போன்ற பக்தர்கள், பூனை போன்ற பக்தர்கள் என்று.

குரங்குகள் என்ன செய்யும்? மரத்தை விட்டு மரத்துக்கு தாவிக் கொண்டே இருக்கும். அதனுடைய குட்டியும் கூடவே செல்ல வேண்டும்.. இதற்கு என்ன வழி? குரங்குக் குட்டி தனது தாயை இறுகக் கட்டிப் பிடித்துக் கொள்ளும். எத்தனை உயரத்தில் இருந்து குரங்குகள் கீழே குதித்தாலும், மேலே தாவினாலும் மிக மிக அபூர்வமாகவே குட்டி கீழே விழும். ஆக பக்தர்களில் குரங்கு போன்ற பக்தர்கள் தாமாகவே சென்று இறைவனைப் பிடித்துக் கொள்வார்கள். தமிழில் ‘குரங்குப் பிடி’ என்ற சொற்றொடரே இருக்கிறது.

 
மாணிக்கவாசகர் போன்ற அடியார்கள், “சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே” என்று பாடுவர்.

பூனைகள் என்ன செய்யும். குட்டி போட்ட பின்னர், தாய்ப் பூனை இடம் விட்டு இடம் போனால் குட்டியை தானே வாயில் கவ்விக் கொண்டு போகும். குட்டிகளோ வெறும் ஜடம் போல சும்மா இருக்கும். அதாவது எல்லாப் பொறுப்புகளையும் அம்மாவிடம் விட்டுவிட்டு அம்மாவே பார்த்துக்கொள்ளட்டும் என்று குட்டிப் பூனை பேசாமல் இருந்துவிடும். இது மற்றொரு வகை பக்தர்களுக்கு எடுத்துக்காட்டு.

சுருக்கமாக, நாமே சென்று கடவுளைச் சிக்கெனப் பிடித்தால் நாம் குரங்கு போன்ற பக்தர்கள். எதையுமே கேட்பதில்லை. கடவுள் விட்ட வழி என்று அவனைச் சரண் அடைந்து இருப்பவர்கள் பூனை போன்ற பக்தர்கள்.

இதே மற்கட, மார்ஜர நியாயத்தை அப்பர் பெருமான் தனக்கே உரிய பாணியில் வழங்குகிறார். அவர் பக்தர்களை 1.ஏணி வகை, 2.தோணி வகை என்று இரண்டாகப் பிரிக்கிறார்.

 

ஏணி என்ன செய்யும்? தாமாக மேலே ஏற முயன்றவர்களை மேலே ஏற்றிச் செல்லும். நாம் தான் ஜாக்கிரதையாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். இது மற்கட நியாயத்துக்கு சமம். எப்படிக் குரங்குக் குட்டிகள் தாயை இறுகப் பற்றியதோ அப்படி நாமும் ஏணியைப் பிடிக்கவேண்டும். இது ஏணி நியாயம்.

தோணி (படகு) வகைப் பக்தர்கள் எப்படிப்பட்டவர்கள்? படகில் ஏறிவிட்டால், படகோட்டியே நம்மை அக்கரைக்குக் கொண்டு செல்லுவான். அதற்குப் பின்னர் நம் வேலை எதுவும் இல்லை. இது பூனை வகை பக்தர்களுக்குச் சமம். இறைவனைச் சரணடைந்துவிட்டு ஆண்டவனே நீயே என்னை அக்கரைக்கு கொண்டு செல் என்று அவன் கையில் பொறுப்பை ஒப்படைத்து விடும் பக்தர்கள் இந்த வகையில் வருவர். இது தோணி நியாயம்.

இதோ பாருங்கள், அப்பர் பெருமானின் ஆறாம் திருமுறை தேவாரப் பாடலை:–
பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை
பித்தர் தம் அடியார்க்கு முத்தி காட்டும்
ஏணியை, இடர்க்கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு,
இளைகின்றேற்கு அக்கரைக்கே ஏற வாங்கும்
தோணியை, தொண்டனேன் தூய சோதிச்
சுலா வெண்குழையானை, சுடர் பொன்காசின்
ஆணியை, — ஆவடுதண்துறையுள் மேய
அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்தேனே (6—461)

 

பொருள்: பிறை சூடிய பெருமான் (சிவன்), அவனுடைய பக்தர்களை முக்தி பெற அழைத்துச் செல்லும் ஏணி ஆவான். பிறவிக் கடல் என்னும் துன்பக் கடலில் சிக்கித் தவிக்கும் என்னை அக்கரைக்கு , அதாவது, முக்திக்கு அழைத்துச் செல்லும் தோணி போன்றவன் அவன். காதில் ஆடும் அழகான வெள்ளை நிறக் குழை அணிந்தவன். பொற்காசை உரைத்து பார்க்கும் கட்டளைக்கல் போன்றவன். குளிர்ந்த ஆவடுதுறையில் வசிக்கும் அவனைக் கடையனுக்கும் கடையேனாகிய நான் அடைந்து உய்வுபெற்று விட்டேன்.

 

இவ்வாறு திருக்குறள், விவேக சூடாமணி, தேவாரம், திருவாசகம் ஆகிய பல நூல்களில் ஒரே கருத்து நிலவுவது பாரதீய அணுகுமுறை ஒன்றே என்பதை எடுத்துக்காட்டும்.

 

–Subahm–