உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தலம் ;இங்குதான் கண்ணன் குழந்தைப் பருவத்தில் தனது விளையாட்டுகள் மூலம் எல்லோரின் அன்பையும் பெற்றார் ; இன்றும் வீடுகளில் சேட்டை செய்யும் சிறுவர்களைக் கண்ணனுக்கு ஒப்பிடுவதைக் காணலாம்.
திருவாய்ப்பாடி (கோகுலம், கோகுல்)
மதுரா ஜங்ஷனிலிருந்து 3 மைல் தூரமுள்ள யமுனைப் பாலத்தைக் கடந்து அங்கிருந்து 5 மைல் பஸ்ஸில் சென்று இவ்வூரை அடையலாம்.
மூலவர் – நவமோஹன கிருஷ்ணன், நின் திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் – ருக்மிணி ஸத்யபாமா பிராட்டியார்கள்.
தீர்த்தம் – யமுனா நதி.
விமானம் – ஹேமகூட விமானம்.
ப்ரத்யக்ஷம் – நந்தகோபர்.
ஆழ்வார்கள் பாடிய கோவில்களோ மூர்த்திகளோ ஒன்றும் இப்போது இல்லை. இப்போது உள்ளவை எல்லாம் பிற்காலத்தவை. கோகுல் என்ற இடத்துக்கு சுமார் முக்கால் மைல் தூரத்தில் “புராணா கோகுல்” (பழைய கோகுலம்) என்று ஓர் ஆலயத்தை ஸ்தாபித்துள்ளனர். கோவில் வாசலிலேயே யமுனை ஓடுகிறது. நந்தகோபர், யஸோதா, பலராமர் விக்ரஹங்களுக்கடியில் குழந்தை கிருஷ்ணன் ஒரு சிறிய மரத்தொட்டிலில் ஸேவை ஸாதிக்கிறார். இவை எல்லாம் மர விக்ரஹங்கள். இந்த இரண்டு கோகுலங்களில் எது உண்மையானது என்று தெரியாது.
கண்ணனின் குழந்தைப்பருவ லீலைகள் நிறைந்த கோகுலம் (ஆயர்பாடி) பற்றிய சிறப்புகள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள பல பாசுரங்களில் போற்றப்பட்டுள்ளன. ஆண்டாள் அருளிய திருப்பாவை, பெரியாழ்வார் திருமொழி மற்றும் நம்மாழ்வார் பாசுரங்கள் கோகுலத்தின் அழகையும் கண்ணனின் லீலைகளையும் விவரிக்கின்றன. துவாபரயுகத்தில் திருமாலின் ஒரு அவதாரமான கண்ணனின் குழந்தைப்பருவ லீலைகள் நடந்த இடமே கோகுலம். கண்ணன் சின்னஞ்சிறுவனாக இருந்து இந்த ஆயர்பாடியில் செய்த லீலைகள் எல்லாம் எண்ணற்ற நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெண்ணெய் உண்டது, இளங்கன்னிமார்களை ஏய்த்தது, சிற்றில் சிதைத்தது. நந்த கோபாலனாக வளர்ந்தது, மாடு மேய்க்கப் போனது என்றிவ்வாறான பலவித லீலைகளை நடத்திய இந்த கோகுலம் முழுவதையும் ஆழ்வார்கள் தம் பாக்களில் பாடியுள்ளனர்.
திருப்பாவை (ஆண்டாள்):ஆயர்பாடியில் அவதரித்த கண்ணனின் பெருமைகளையும், கோகுலத்துப் பெண்களின் மார்கழி நோன்பையும் விவரிக்கும் முப்பது பாசுரங்களின் தொகுப்பு இது. “கீசுகீசென்றெங்கும்” எனத் தொடங்கும் பாசுரம், கோகுலத்தில் பறவைகள் எழுப்பும் ஓசையையும், பெண்களின் விடியலையும் அழகாகக் கூறுகிறது.
பெரியாழ்வார் திருமொழி:கண்ணனைத் தன் குழந்தையாக பாவித்து, கோகுலத்தில் அவன் செய்த குறும்புத்தனங்களை (வெண்ணெய் திருடியது, உரலில் கட்டியது, ஆய்ச்சிகளிடம் வம்பு செய்தது) பெரியாழ்வார் மிகச் சுவையாகப் பாடியுள்ளார். “மாணிக்கம் கட்டுண்டாய்” மற்றும் “கண்ணன் பிறந்த அணிமணி அரங்கத்து” போன்ற பாசுரங்கள் ஆயர்பாடியின் சிறப்பைப் போற்றுகின்றன. திருவாய்மொழி (நம்மாழ்வார்):கண்ணனின் மீது அதீத அன்பு கொண்டு, அவனது லீலைகளை வியந்து பல பாசுரங்களை அருளியுள்ளார். கோகுலத்தில் கண்ணன் ஆடிய லீலைகள் இப்பாசுரங்களில் சிறப்பிடம் பெறுகின்றன.
திவ்யதேச பாசுரங்கள்
132.
தீய புந்திக் கஞ்சன் உன்மேல்* சினம் உடையன் சோர்வு பார்த்து*
ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவ தலம்.. இத்தலம் வைஷ்ணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது.
1) முதல்பிரிவு – கீழ்த்திருப்பதி, கோவிந்தராஜப் பெருமாள், கோவில்
மூலவர் – கோவிந்தராஜப் பெருமாள், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் – புண்டரீகவல்லி.
விசேஷங்கள் – இங்கு, ஆண்டாள், உடையவர், முதலியவர்களின் ஸந்நிதிகள் உள்ளன.
2) இரண்டாம் பிரிவு – திருமலை.
மூலவர் – திருவேங்கடமுடையான், ஸ்ரீ நிவாஸன், வெங்கடாசலபதி, பாலாஜி, நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
ஆதீவராஹர் ஸந்நிதி – ஸ்வாமி புஷ்கரிணியின் வடமேற்கு மூலையில் கோவில் கொண்டுள்ள இப்பெருமாளக்கு தளிகை ஸமர்ப்பித்த பிறகே, அது ஸ்ரீநிவாஸனுக்கும் ஸமர்ப்பிக்கப்படுகிறது. ஏழு பர்வதங்கள் வெங்கடாத்ரி, சேஷாசலம், வேதாசலம், கருடாசலம், வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, ஆனந்தாத்ரி என்ற பெயர்களுடன் இருக்கின்றன. இதன் மத்தியில் கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ நீவாஸன் எழுந்தருளுவதற்கு முன் ஆதிவராஹன் இத்தலத்தில் ஸேவை ஸாதித்ததனால் ஆதிவராஹரைஸேவித்த பிறகுதான் ஸ்ரீநிவாஸனை ஸேவிக்கவேண்டும்.
3) மூன்றாம் பிரிவு – திருச்சானூர் (அலர்மேல் மங்காபுரம்)
மூலவர் தாயார் – அலர்மேல்மங்கை (பத்மாவதி) , கிழக்கே திருமுக மண்டலம்.
தீர்த்தம் – பத்மஸரோவரம்.
விசேஷங்கள் – இக்கோவிலில் ஸ்ரீ க்ருஷ்ணனுக்கும் ஸெனந்தரராஜனுக்கும் ஸந்நிதிகள் உள்ளன. இந்தக்கோயிலை ஸ்ரீநிவாஸன் நியமனப்படி, தொண்டைமான் என்ற அரசர் கட்டி பகவான் மிக்க ஆனந்தத்துடன் எழுந்தருளியதால் ஆனந்த விமானம் என்று பெயர் உண்டானதாக ஸ்தலவரலாறு.
திருமலைமேல் கல்யாண உத்ஸவம், ப்ருஹ்மோத்ஸவம் முடியளிப்பது ஏராளமான பிரார்த்தனைகள் செலுத்தப்படகின்றன. காணிக்கைகளின் காரணமாக உலகத்திலேயே பணக்காரக் கோவில் இதுதான்.
சென்னை – பம்பாய் ரயில்பாதையிலுள்ள ரேணிகுண்டாவிலிருந்து சுமார் 7 மைல் தூரத்திலுள்ள ரயில்வேஸ்டேஷன் திருப்பதி.. திருப்பதி, திருமலை, திருச்சானூர் என்ற மூன்று முக்ய பிரிவுகளிலும், தேவஸ்தான சத்திரங்களும் ஹோட்டல்களும் மற்ற எல்லா வசதிகளும் உள்ளன.
சென்னையிலிருந்து 108 கி.மீ. ரயில், விமானம், சாலை வழியாகச் செல்லலாம் சாலை வழியாகச் சென்றால் கோவிலுக்கு மிக அருகில் போகலாம். இயற்கை வனப்புமிக்க 7 மலைகளையும் காணலாம்..பத்தொன்பது கி.மீ தூரம். சுமார் நாற்பது நிமிடங்கள் பிடிக்கும்.
மலை அடிவாரத்திலிருந்து, மலை உச்சியிலுள்ள வெங்கடாசலபதி கோவிலுக்கு நடந்து போனால் 11 கிமீ. மூன்று மணி முதல் ஆறு மணி நேரம் பிடிக்கும். எல்லோரும் போகும்பாதை அலிபிரி பாதை எனப்படும்; 3500 படிகளுக்கு மேல் உள்ளது.
***
திருப்பதி அதிசயங்கள்
திருப்பதி சென்று திருமலையில் ஏறினால் அதிசய வெங்கடாசலபதி நமக்கு தரிசனம் தருவார். இந்த மலையப்ப சுவாமி, ஏழு மலை வாசன் பற்றி புஸ்தகம் புஸ்தகமாக எழுதலாம். அவ்வளவு அற்புதங்களை பகதர்கள் வாழ்வில் செய்துள்ளார். ஆயினும் எல்லா விஷயங்களையும் புல்லட் பாயிண்டில் பார்ப்போம்.
உலகின் பணக்கார வழிபாட்டுத்தலங்களில் திருப்பதி, முன்னிலையில் நிற்கிறது தினமும் 4 முதல் 6 கோடி ரூபாய் வரை உண்டியலில் விழுகிறது!
பாலாஜி என்றும் வெங்கடேஸ்வரன் என்றும் அழைக்கப்படும் பெருமாள் உலகில் அதிகமான பக்தர்களைக் கவர்ந்து இழுக்கிறார்.
பெருமாளே ஒரு அதிசயம்தான். வைஷ்ணவ, சைவ சின்னங்களுடன் காட்சிதருகிறார். இதனால் அருணகிரிநாதர் 500 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய திருப்புகழில் இவர் முருகப் பெருமானே என்று பாடிவிட்டார்.
மக்கள் நாட் கணக்கில் நின்று தரிசிக்கும் ஒரே கடவுள் இவர்தான்.
இந்தியாவில் அதிகமான கல்வெட்டுகள் உள்ள கோவிலும் இதுதான்.
பக்தர்களால் அதிகம் பாடப்பட்ட துதிக்கப்பட்ட கடவுளும் இவர்தான் அன்னமாசார்யா மட்டுமே ஆயிரக்கணக்கில் கிருதிகளை செய்துவிட்டார்.
சுமார் 2000 ஆண்டு வரலாறு உடைய கோவில் இது.
தமிழின் மிகப்பழைய நூலான தொல்காப்பியமே வட வேங்கடத்தைக் குறிக்கிறது.
இன்றுவரை பாலாஜி, வெங்கடேஸ்வரன், வெங்கடாசலபதி, சீனிவாசன், வெங்கட் என்ற பெயர்களை இந்துக்கள் குழந்தைகளுக்குச் சூட்டி வருகிறார்கள்.
தமிழ் இலக்கியம் குறிப்பிடும் பழைய கோவிலும் இதுதான்.
இது 108 வைஷ்ணவ தலங்களில் ஒன்று.
****
திருப்பதி லட்டு
இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் புகழ் பெற்றது. இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானத்தினரைத் தவிர வேறெவரும் தயாரித்து விற்கமுடியாது ; 1931 ஆம் ஆண்டு திருப்பதியில் லட்டுப் பிரசாதத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் கல்யாணம் ஐயங்கார் எனும் பெரியவர்.
****
நான் 24 AUGUST 2019-ல் எழுதிய கட்டுரையிலிருந்து முக்கியத் தகவல்கள்
திருப்பதியில் அதிசயம்- உலகிலேயே அதிகமான கல்வெட்டுகள் (Post No.6925)
திருப்பதி என்றவுடன் வெங்கடாசலபதியும் அவருடைய உண்டியலும், லட்டு-ம் தான் நம் கண்ணுக்கு முன்னே வரும். அங்கு மிகப்பெரிய வரலாற்றுப் புதையல் , தமிழ் வரலாற்றுப் புதையல்- இருப்பது பலருக்கும் தெரியாது. அதுவும் தமிழ் வரலாற்றுப் புதையல்.
2000 ஆண்டுக்கும் மேலாக வேங்கட மலை உச்சியில் நின்றுகொண்டு, போகும் வருவோரின் பணத்தை எல்லாம் வாங்கிக் கொண்டு, உலக அரசியல்வாதிகளைத் தன் கோவிலுக்கு வரவழைக்கும், காலடியில் விழ வைக்கும் வேங்கட நாயகனுக்கு பல சிறப்புகள் உண்டு. அருணகிரிநாதர் அவரை முருகா என்று பாடுகிறார்; பேயாழ்வரோ அவரை சிவனே என்று பாடுகிறார்; குல சேகர ஆழ்வாரோ உனது மலையில் எனக்குப்
பறவையாகவோ, புதராகவோ, சுனையாகவோ இருக்க அருள் புரி; அதுவும் முடியாவிட்டால், Please, At least ப்ளீஸ், அட் லீஸ்ட் என்னை வெற்றிலை எச்சில் துப்பும் தட்டாகவாது செய்து விடு என்று இறைஞ்சுகிறார்.
சிலப்பதிகார இளங்கோவோ பாடிப்பரவுகிறார். புரந்தரதாசரோ 600 ஆண்டுக்கு முன்னரே அவரை கிண்டல் செய்கிறார்; நீ ஒரு சரியான செட்டிப்பயல்; காசிலே கறாரான கெட்டிப் பயல் என்று கன்னடத்தில் பாடி சந்தோஷப்படுகிறார்.
kAsu tappidare paTTi baTTi kAsu biDade kaNDu kaTTi
இதில் எல்லாம் மயங்கிப் போன நமக்கு அங்குள்ள தமிழ்க் கல்வெட்டுகள் பற்றி அதிகம் தெரிவதில்லை. எனக்கும் தெரியாது . நேற்று லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரிக்குச் சென்று ஆறு தடித் தடிப் புஸ்தகங்களைத் தூக்கி வந்து படித்தபோது நிறைய அதிசயச் செய்திகள் கிடைத்தன. சில செய்திகளைக் காண்போம்.
பல்லவர் காலம் முதல் அண்மைக்காலம் வரை கல்வெட்டு மூலமே 800 ஆண்டு வரலாறு கிடைக்கிறது இவ்வளவு நீண்ட வரலாறு ஒரு கோவிலில் உலகில் வேறு எங்கும் கிடைக்காது!
திருப்பதி கோவிலிலும் புனித மலை வளாகத்திலும் 1150 கல்வெட்டுகள் உள்ளன. இது 1930ம் ஆண்டு கணக்கு! அவைகள் பெரும்பாலும் தமிழ் மொழியில்தான் இருக்கின்றன. ஏன் தெரியுமா?
சிவன் உடுக்கை அடித்தபோது ஒரு புறம் தமிழ் ஒலியும் மறுபுறம் ஸம்ஸ்க்ருதமும் வந்ததாம். இதற்குச் சான்று தமிழ் இலக்கியத்தில் உள்ளது பரஞ்சோதி முனிவர் பாடிய திருவிளையாடல் புராணம் அகஸ்தியரும், பாணினியும் எப்படி இரண்டு மொழிகளை சிவ பெருமானிடமிருந்து பெற்றனர் என்று பாடி இருக்கிறார்.
ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகளோடு கவிஞர்கள் பாடிய பாடல்கள் அடங்கிய 3000 தாமிர சாசனங்கள் இருக்கின்றன. இதில் அன்னமாச்சார்யா பாடிய கீர்த்தனைகளை அறியாத சங்கீத வித்துவான் கிடையாது.
ஆக உலகிலேயே அதிக கல்வெட்டுகள் நிறைந்த ஒரு வழிபாட்டுத் தலம், உலகிலேயே கல்வெட்டு மூலமே 800 ஆண்டு வரலாற்றைச் சொல்லும் ஒரு இடம், உலகிலேயே அதிகமான தமிழ்க் கல்வெட்டுகள் உள்ள இடம், உலகிலேயே அதிகமான தாமிர சாசனங்கள் உள்ள இடம், உலகிலேயே அதிகமான பக்தர்கள் வரும் இடம், உலகிலேயே அதிகமான வசூல் செய்யும் சாமி என்று எல்லா வகையிலும் வேங்கட +அசல+ பதி சாதனைப் புத்தகத்தில் நுழைந்து விடுகிறார்.
1150 கல்வெட்டுகளையும் படியெடுத்து வெளியிட்ட பெருமை சாது சுப்ரமண்ய சாஸ்திரியைச் சாரும். அவர், சிறப்புக் கல்வெட்டு பயிற்சி பெற்ற திருப்பதி கோவில் தொல்பொருட் துறை அறிஞர்; அவரை முன்னின்று நடத்திய பெருமை தேவஸ்தான விசாரண கர்த்தா சுவாமி மஹந்த் பிரயாகதாஸ்ஜியைச் சாரும். 1930ம் ஆண்டிலேயே இவைகளை வெளியிட்ட பெருமை கோவிலைச் சாரும். இவைகளை சேர்த்துவைத்து இலவசமாகப் படிக்க அனுமதிக்கும் பெருமை லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியைச் சாரும்.
1150 கல்வெட்டு பற்றியும் ஒவ்வொரு கட்டுரை எழுதலாம். இவைகளை ஆராய்ந்து பத்து டாக்டர் பட்டம் பெறலாம் ; அவ்வளவு விஷயம்.
பல்லவன் தந்திவர்மன் அவனது 51ஆவது ஆட்சியாண்டில் ஒரு கல்வெட்டு வழங்கியுள்ளான்.
51 ஆண்டுக்காலம் ஆண்ட மன்னன் தந்திவர்மன்!
ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் முதலியோர் கல்வெட்டுகளும் உள.
பழங்கால பல்லவ, பாண்டிய, சோழ , விஜய நகர மன்னர்களின் 236 கல்வெட்டுகள் ஆங்கில மொழிபெயர்ப்புடன் முதல் தொகுதியில் உளது.
ஏனைய 5 தொகுதிகளில் உள்ள கல்வெட்டுகள் :-
சாளுவ நரசிம்மன் -169 கல்வெட்டுகள்,
கிருஷ்ணதேவராயர்- 229 கல்வெட்டுகள்,
அச்யுதராயர்- 251 கல்வெட்டுகள்
சதாசிவராயர்-147 கல்வெட்டுகள்
ஆரவீடு வம்சாவளி- 135 கல்வெட்டுகள்
இவர்களில் வண்னமிகு மன்னன் – மாமன்னன், சக்ரவர்த்தி– கிருஷ்ண தேவராயர் ஆவார்; 35 முறை வெங்கடாசலாதி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தவர். ஆமுக்த மால்யதா எழுதி ஆண்டாள் புகழ்
பாடியவர் அவருக்கு நான்கு மனைவிகள். இது போன்ற ஏராளமான வரலாற்றுத் தகவல்கள், கலெட்டுகளுக்குப் பின்னணியாக தரப்பட்டுள்ளன.
*****
திருப்பதி மலைமேல் முருகன் !
(எனது பழைய அக்கட்டுரையில் ஒரு பகுதி)
திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை– 9
அருணகிரிநாதரால் பாடப்பட்டு நமக்குக் கிடைத்துள்ள அற்புதமான 1300+ திருப்புகழ் பாடல்களில் பல அழகான சொல்லாக்கமும், சொல்லாட்சியும், சொற்சிலம்பமும் இருப்பதை கண்டோம். அவர் போடும் பல புதிர்களுக்கு விடை கிடைக்காமல் அறிஞர்கள் திண்டாடுகிறார்கள் ஒரு மூன்று புதிர்களை மட்டும் இங்கே காண்போம்.
1. திருவேங்கட மலையில் முருகன் கோவில் இருப்பதாகப் பாடுகிறார். நமக்குத் தெரிந்து வேங்கடாசலபதி (பாலாஜி ) கோவில் இருக்கிறது. அப்படியானால் முருகன் கோவில் ஒன்று இருந்து அழிந்துவிட்டதா? அல்லது இப்போதைய பாலாஜி கோவில் ஒருகாலத்தில் முருகன் கோவிலாக இருந்ததா? இது அவர் போடும் புதிர்.
திருப்பதி (திருவேங்கடம்) பற்றி அருணகிரி நாதர் பாடியது இதுதான்:
வேந்த குமார குகசேந்த மயூர வட
வேங்கட மாமலையில் உறைவோனே
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது
வேண்டவெறாது உதவு பெருமாளே
****
திருவேங்கடத்தில் பாடிய இன்னும் ஒரு திருப்புகழில்
ராவணார் முடி பொடியாகச்
சிலை வாங்கிய நாரணார் மரு
மகனாம் குகனே பொழில் சூழ்தரு
திருவேங்கடமாமலை மேவிய பெருமாளே
என்று பாடுகிறார்.
திருப்பதி கடவுள் பற்றி நிறைய புதிர்கள் உள்ளன. வேறு எந்த வைணவ தலங்களிலும் இல்லாத உருவ அமைப்பும், பல நடைமுறைகளும் பூஜைகளும் திருவேங்கடநாதருக்கு இருக்கின்றன. ஆனால் சிலப்பதிகார காலம் முதல் ஆழ்வார்கள் காலம் வரை அங்குள்ள விஷ்ணுவையும் பாடி இருக்கிறார்கள் அப்படியானால் முருகன் கோவில் எங்கே? இதுவரை ஏழு மலைகளில் முருகன் கோவில் கண்டுபிடிக்கப்படவில்லை.
வேங்கடேசன் என்று சிவனைப் போல ‘ஈஸ்வரன்’ என்று பெயர் வைக்கிறோம். பொதுவாக ‘ஈசன், ஈஸ்வரன்’ என்பது சிவனையே குறிக்கும். எதற்காக ஈசன் பெயரைச் சேர்க்கிறார்கள்? ‘வேங்கட சுப்ரமணி’யனென்றும் பெயர் வைக்கிறோம். வேங்கடத்தில் (திருப்பதி-திருமலை) சுப்பிரமணியன் எங்கே இருக்கிறார்? குன்று தோராடும் குமரன் தமிழக வட எல்லையான வேங்கடத்தில் கட்டாயம் கோவில் கொண்டிருப்பாரே? அது எங்கே? சிலர் விஷ்ணு கோவில் (பாலாஜி), முதலில் முருகன் கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள். அதற்கும் ஆணித்தரமான ஆதாரங்கள் இல்லை.
இருதரப்பு வாதங்களையும் படித்த பின்னர் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஒருவேளை இரண்டு கோவில்களும் இருந்து ஒன்று மறைந்திருக்கலாம். தமிழ் நாட்டில் கூட சிதம்பரம் போன்ற இடங்களில் சிவனும் விஷ்ணுவும் அடுத்தடுத்து இருப்பதைப் பார்க்கிறோம். “அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு” என்ற பொன்மொழியை அறிந்தவர்களுக்கு இது வியப்பு தராது. காலப் போக்கில் ஒன்று மறைந்திருக்க வாய்ப்பு உண்டு. தமிழ்நாட்டில் பலகோவில்களில் பலராமன் வழிபாடும் இருந்தது. ஆனால் இன்று அறவே இல்லை. புறநானூற்றிலும் சிலப்பதிகாரத்திலும் பலராமன் வழிபாடு உள்ளது. பழமுதிர்ச்சோலை காணாமற்போகவே நமது காலத்தில் நாமாக புதிய பழமுதிர்ச்சோலையை உருவாக்கினோம்.
நமது ரெகுலர் வாசகரும் பேரரறிஞருமான காலஞ்சென்ற நஞ்சப்பா அவர்கள் தரும் தகவல்
R.Nanjappa
/ August 24, 2019
Tirupathi- the abode of Balaji,the most famous and wealthy of our Hindu temples- is it a wonder or mystery?
If we follow the ancient Tamil tradition of the five-fold division of the land with a Deity for each, then the hilly region of Tirumala-Tirupati qualifies as Kurinji land, of which the presiding Deity is Subrahmanya, the eternal Kumara ie Balaji! So claims are made that this was originally a Subrahmanya temple.
On the other hand, ancient Tamil literature gives the extant of the land of the Tamil speaking people as “lying between Venkatam in the North and Kumari in the South”. The interesting inference here is that as Kumari is the famous seat of Devi, which is the southern border, the northern border could as well have been a seat of Devi!. In fact we see the image of lion on the four corners of the Gopuram in Tirupati, and lion is the va-hana of Devi!
When Swami Brahmananda [ Rakhal Maharaj] the spiritual son and direct disciple of Sri Ramakrishna and the first President of the RK Math and Mission visited Tirupati around 1911/12, he had a mystic experience there. He felt the presence of Devi there. He asked the priests there about the Deity. And the priests confirmed that it had been a De-vi temple. This is clearly stated in the book ‘Swami Brahmananda As We Knew Him’, published by RK Math, Chennai.
So there is enough mystery surrounding this temple. Wish someone will unravel it with-out bigotry and prejudice.
****
திருப்பதி கோவில் அறிவிப்பு
திருமலையில் பிறந்தார் அனுமன்!
’திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள, சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்ரி என்ற மலை தான், அனுமனின் பிறப்பிடம்’ என, திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமான ஆதாரங்களுடன் அறிவித்தது.
ராம பக்தரான அனுமன் பிறந்த இடம் குறித்து, புராணங்களிலும், இதிகாசங்களிலும் பல்வேறு குறிப்புகள் உள்ளன. வெங்கடாசல மகாத்மியம் உள்ளிட்ட சில புராணங்களில் அனுமன் பிறந்த இடம், திருமலையில் அமைந்துள்ள அஞ்சனாத்ரி மலை என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆய்வு செய்ய, தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் முரளி தர சர்மா தலைமையில், பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் அடங்கிய குழுவை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் நியமித்தது. இக்குழுவினர், நான்கு மாதங்களாக ஆய்வு நடத்தி, தங்கள் அறிக்கையை நேற்று வெளியிட்டனர். அதில், ‘திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள சோஷாசல மலைத் தொடரில் ஒன்றான, அஞ்சனாத்ரி மலையில் தான், அனுமன் பிறந்தார்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விளக்க உரை மற்றும் ஆதாரங்கள் அடங்கிய, 20 பக்க கையேடும் வெளியிடப்பட்டது.
இந்தப் பணிக்காக ஆய்வு செய்யப்பட்ட, 12 புராணங்களிலும் அனுமன் திருமலையில் பிறந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், 12 மற்றும் 13ம் நுாற்றாண்டுகளில் எழுதப்பட்ட பல புராணங்களில் அஞ்சனாத்ரி பற்றிய குறிப்புகள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
****
QUIZ திருப்பதி பத்து QUIZ (Post No.12,291)
Post No. 12,291
Date uploaded in London – 18 July , 2023
1.திருப்பதியில் இருப்பது முருகனே என்று பாடியவர் யார் ?
****
2.திருப்பதியில் எத்தனை கல்வெட்டுகள் இருக்கின்றன ?
****
3.திருமலையில் உள்ள புதராகவோ பறவையாகவோ , சுனையாகவோ பிறந்தாலும் போதும் என்று பாடியவர் யார்?
****
4.திருமலையில் உள்ள பெருமாள் மீது அதிக துதிகளை இயற்றியவர் யார்?
****
5.வெங்கடேச சுப்ரபாதத்தை இயற்றியவர் யார் ? ஸுப்ரபாதத்தின் முதல் வரி எங்கிருந்து எடுக்கப்பட்டது ?
****
6.திருப்பதி மலையை தமிழ் பாட்டுக்கள் எப்படிக் குறிப்பிடுகின்றன?
****
7.திருப்பதியில் உள்ள அருவியின் பெயர் என்ன?
****
8.ஏழு மலையான் என்று ஏன் பெருமாளை அழைக்கின்றனர்?
****
9.பெருமாள் எப்படி உலகிலேயே பணக்கார கடவுள் ஆனார்?
****
10.வெங்கடாசலபதியைத் தரிசிக்கும் பக்தர்கள் உடனே வழிபடும் திருமலைக்குக் கீழேயுள்ள கோவில் எது ?
****
விடைகள்
1.முருகனே என்று பாடியவர் அருணகிரி நாதர் (திருப்புகழில் ); சிவனே என்று பாடியவர் பேயாழ்வார்.
திருப்பதி (திருவேங்கடம்) பற்றி அருணகிரி நாதர் பாடியது இதுதான்:
வேந்த குமார குகசேந்த மயூர வட
வேங்கட மாமலையில் உறைவோனே
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது
வேண்டவெறாது உதவு பெருமாளே
திருவேங்கடத்தில் பாடிய இன்னும் ஒரு திருப்புகழில்
ராவணார் முடி பொடியாகச்
சிலை வாங்கிய நாரணார் மரு
மகனாம் குகனே பொழில் சூழ்தரு
திருவேங்கடமாமலை மேவிய பெருமாளே
என்று பாடுகிறார்.
கச்சியப்ப சிவாசாரியார் திருவேங்கடத்தில் முருகன் இருந்தான் என்பதற்கு ஒரு வரலாற்றைச் சொல்கிறார்………. … தாமரைமலர் போன்ற வடிவுடைய சிவந்த திருக்கத்தில் வேலாயுதத்தை ஏந்திய குமரக் கடவுளே குகையின் வழியாக வந்து வெளிவந்த மலையாகிய சிகரத்தையுடைய திருவேங்கடமலை மீது எழுந்தருளியுள்ள பெருமாளே…என்கிறார்
****
2.திருமலை-திருமலை கோவிலிலும் அதன் கீழ் வரும் பகுதியிலும் 1150-க்கு மேலான கல்வெட்டுகள் உள்ளன. உலகிலேயே அதிக கல்வெட்டுகள் உள்ள வழி பாட்டுத் தலம் இதுதான். பல்லவர் காலம் முதல் 800 ஆண்டு வரலாற்றைக் கல்வெட்டுகள் மூலம் அறியலாம் .
****
3. குலசேகர ஆழ்வார்
****
4.திருப்பதி பெருமாள் குறித்து அதிகமான பாடல்களை இயற்றியவர் அன்னமாச்சார்யா
****
5.பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியாரால் ஸம்ஸ்க்ருத மொழியில் இயற்றப்பட்டது.
இதன் முதல் வரி கெளசல்யா ஸுப்ரஜா சந்த்யா பிரவர்த்ததே — என்பது வால்மீகி ராமாயணத்தில் உள்ள வரி .
திருமலையில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று ஆகாச கங்கை. இங்கிருந்து தான் தினமும் திருமலை ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்ய நீர் கொண்டுவரப்படுகிறது. இந்த நீரில் பக்தர்களும் பொது மக்களும் குளித்து மகிழ அனுமதி உண்டு. இந்த இடம் ஸ்ரீ வாரி திருக்கோயிலில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
****
8.திருமலை வெங்கடாசலபதி, ஏழு குன்றுகள் இடையே காட்சி தருகிறார். அவையாவன:
Vrushabhadri – விருஷபாத்ரி
Anjanadri – அஞ்சனாத்ரி (ஹனுமான் பிறந்த இடம்)
Neeladri – நீலாத்ரி
Garudadri or Garudachalam – கருடாத்ரி
Seshadri or Seshachalam – சேஷாத்ரி
Naraynadri–நாரதாத்ரி அல்லது நாராயணாத்ரி
Venkatadri – வேங்கடாத்ரி
****
9.திருப்பதி பாலாஜி தன் திருமணத்துக்காக குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், கடனை அடைப்பதற்காக பக்தர்களிடம் காணிக்கை வாங்குகிறார் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். 600 ஆண்டுகளுக்கு முன்னர் கீர்த்தனை பாடிய புரந்தரதாசரோ நீ சரியான செட்டிப்பயல் என்று பெருமாளை கிண்டல் செய்கிறார்.
****
10.திருப்பதியிலி ருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள திருச்சானூர் என்றும் அலமேல் மங்காபுரம் என்றும் அழைக்கப்படும் புனிதத் தலத்தில் பத்மாவதி தாயாரின் அழகிய திருக்கோவில் உள்ளது.
****
தொல்காப்பியர் காலத்தில் திருப்பதி
தொல்காப்பியத்துக்கு பாயிரம் (முன்னுரை) எழுதிய பனம்பாரனார் பாடுகிறார்:-
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ் கூறு நல்லுலகத்து
வழக்கும் செய்யுளும் ஆ இரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கைச் சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு……………………………
பொருள்:-
வடக்கே வேங்கட மலையும் தெற்கே குமரி முனையும் ஆகிய இந்நிலத்திற்கு இடைப்பட்ட செந்தமிழ் பேசும் தமிழகத்தில் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்ற இரு வழக்குகளில் உள்ள எழுத்து, சொற்கள், பொருள்களை நன்கு ஆராய்ந்து (தொல்காப்பியர் நூல் இயற்றினார்).
புராணங்களில் வரும் 56 தேசங்களில் திராவிட தேசத்துக்கும் தெற்கில்தான் பாண்டிய சோழ தேசங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆக திராவிட என்ற சொல்லையும் தமிழ்நாட்டுக்குப் பயன்படுத்த வில்லை.
கம்பன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்;
வடசொற்கும் தென்சொற்கும் வரம்பு ஆகி
நான் மறையும் மற்றை நூலும்
இடைசொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய்
நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறு
புடை சுற்றும் துணை இன்றிப் புகழ் பொதிந்த
மெய்யேபோல் பூத்துநின்ற
அடைசுற்றும் தண்சாரல் ஓங்கிய
வேங்கடத்தில் சென்று அடைதீர் மாதோ
பொருள்:-
வடமொழிக்கும் தென்மொழியாகிய தமிழ் மொழிக்கும் எல்லையாகியும், நான்கு வேதங்களுக்கும், ஆறு அங்கங்களுக்கும் மற்றுமுள்ள நூல்களுக்கும் முடிவான பொருளைக் காட்டுவதாகவும் நல்லறங்களின் மேன்மையாகவும், ஈடு இணை இல்லாததும் புகழ்மிக்கதும், எல்லோரும் வணங்கக்கூடியதுமான, குளிர்ந்த மலைப்பகுதியான வேங்கட மலையில் போய்த் தேடுங்கள்.–கிட்கிந்தா காண்டம், நாடவிட்ட படலம்- கம்ப ராமாயணம்.
சீதையைத் தேடச் செல்லும் வானரப் படைகளுக்கு கட்டளையிட்டபோது இச்செய்யுள் கூற்று வருகிறது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 42
திருவல்லா
திவ்ய தேசம் திருவல்லவாழ் – ஸ்ரீ வல்லப க்ஷேத்திரம்
மூலவர் கோலப்பிரான், திருவாழ் மார்பன், ஸ்ரீ வல்லபன்
தாயார் செல்வத்திருக்கொழுந்து நாச்சியார், வாத்சல்ய தேவி
திருக்கோலம் நின்ற திருக்கோலம்
திருமுகமண்டலம் கிழக்கே திருமுக மண்டலம்
பாசுரங்கள்
மங்களாசாசனம் நம்மாழ்வார் 11 பாடல்கள்
திருமங்கை ஆழ்வார் 11 பாடல்கள்
தீர்த்தம் கண்டாகர்ண தீர்த்தம் பாம்பா நதி
விமானம் சதுரங்க கோல விமானம்
இக்கோயிலில் தினமும் கருடனுக்குச் செய்யப்படும் சிறப்பு வழிபாடும், பிரம்மாண்டமான கொடிமரமும் மிகவும் பிரசித்தி பெற்றவை.
கருடபுராணம், மத்ஸ்யபுராணம் போன்றவற்றில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
இந்த திவ்ய தேசம் ஸ்ரீவல்லப ஷேத்ரம் என்று மிகவும் பிரபலம். இங்கு எழுந்து அருளி இருக்கும் எம்பெருமான் பிரம்மச்சார்ய விரதம் அனுஷ்டிக்கிறார். மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்தின் அன்றும், சித்திரை மாதத்து விஷு (வருடப்பிறப்பு) அன்றும் மட்டுமே, எம்பெருமானுக்கு திருமார்பு தரிசனம் என்பதால், இத்தலத்தில் அந்த இரண்டு தினங்கள் மட்டும் பெண்கள் சன்னதி சென்று வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற எல்லா நாட்களிலும், பெண்கள் சன்னதிக்கு வெளியில் இருந்து சேவிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
மாசி மாதம், பூச நட்சத்திரத்தில் ஆறாட்டு என்ற விழா நடைபெறுகிறது. இது ஒரு பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா ஆகும். மார்கழி திருவாதிரை அன்று சிவன் எம்பெருமானின் கோலத்தை காண வந்ததாக ஐதீகம், அதனால் இந்த திருத்தலத்தில் விபூதி பிரசாதமும் அளிப்பார்கள். கண்டாகர்ணனின் சிவபக்தியைக் குறிக்கும் வகையில், சுதர்சன ஆழ்வார் சந்நிதியில் விபூதி வழங்கப்படுகிறது.
மே மாதத்தில், ஒரு நாள் திருவிழா நடத்தப்படுகிறது, அருகிலுள்ள கோயில்களில் இருந்து 3 பகவதிகள் (காவில் கோயில் தேவதை, படப்பட் கோயில் மற்றும் ஆலம்துரத் கோவில்கள்) இந்த கோவிலுக்கு அழைத்து வரப்படுகிறார்கள். கோவில் வடக்கு வாசலில் இருந்து போத்திகளால் சிறப்புப் பல்லக்குகளில் இந்த தெய்வங்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த நாளில் மட்டுமே, இந்த கதவு திறக்கப்படுகிறது.
மற்ற கேரளக் கோயில்களைப் போலவே, இந்த திருக்கோவிலும் கர்ப்பகிரகம் வட்ட வடிவில் உள்ளது. கிழக்குப் பக்கம், வல்லபப் பெருமானின் சன்னதியும், இக்கோயிலுக்குப் பின்னால் சுதர்சன ஆழ்வாருக்கு ஒரு சிறிய சன்னதியும் உள்ளது.
இந்த திருத்தலத்தில் உள்ள பெரிய குளம் தானாகவே உண்டானது என்றும் இன்றும் கூட பூமிக்கு அடியில் இருந்து ஊற்றுக்கள் மூலம் இந்தக் குளத்திற்கு தண்ணீர் வருவதாகச் சொல்லப் படுகிறது. மலையாளத்து பாணியில் இந்த திருத்தலத்திலும் பக்தர்களுக்கு பூக்களும் சந்தனமும், பிரசாதமாக ஒரு இலையில் அளிக்கப்படுகிறது.
இங்கு உள்ள இன்னொரு ஆச்சரியமான விஷயம், 50 அடி உயரம் 2 அடி சுற்றளவும் உள்ள ஓங்கி உயர்ந்து நிற்கும் கருங்கல். இந்த கல் பூமிக்கடியில் இதே 50 அடி ஆழத்தில் சென்று இருந்தாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை. மேலும் இந்த சுற்றுப்புறத்தில் பாறைகளே இல்லை என்பது இன்னொரு தகவல். இந்த கல் தூணின் மீது பஞ்சலோகத்தால் உருவான ஒரு கருடாழ்வாரை வைத்து உள்ளார்கள். கருடாழ்வார் தமது ஒரு கரங்களையும் விரித்து உடனே புறப்படுவதை போல் உள்ளது. இந்தக் கல்தூண் துவஜஸ்தம்பத்திற்கு (கொடிக் கம்பம்) சற்று பின்புறம் அமைந்துள்ளது. நாலாம்பலம் (துவஜஸ்தம்பத்தைச் சுற்றியுள்ள பகுதிகள்) கிரானைட் கற்களால் ஆனது. த்வஜஸ்தம்பத்தின் உச்சியில் சுமார் 3 அடி உயரத்தில் கருடன் பஞ்சலோக சிலை உள்ளது. கோயில் மிகப் பெரியது, த்வஜஸ்தம்பமும் பெரியது.
மலையாள திவ்ய தேசங்களில், சுதர்சன ஆழ்வாருக்கு தனி சன்னதி இருக்கும் திருத்தலம் இது. அதே போல, துவஜஸ்தம்பத்திற்கு பொன் தகடு வேயப்பட்டுள்ளதும் மற்றொரு தனிச் சிறப்பாகும்..
இந்த கோவிலில் துர்வாச ரிஷியின் சிலை உள்ளது, மேலும் அவர் ஒவ்வொரு இரவும் பெருமாளுக்கு பூஜை செய்வதாக நம்பப்படுகிறது.
குழந்தைப்பாக்கியம் இல்லாதவர்கள் மக்கள் செல்வம் வேண்டி அவ்வப்போது கதகளி நிகழ்ச்சியை இங்கு ஏற்பாடு செய்வது வழக்கம். அந்நிகழ்ச்சியின் மூலமாக எம்பெருமானிடம் புத்திரப்பேறு வேண்டுவது என்பது இதன் பொருள்.
ஸ்தல வரலாறு
சங்கரமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், இந்த திவ்ய தேசத்திற்கு வந்து ஏகாதசி விரதம் இருந்து துவாதசியன்று அதிதிகளுக்கு உணவு படைத்து அதன்பின் விரதத்தை முடிக்கும் பழக்கத்தை கொண்டு இருந்தாள். அப்படி அவள் இந்த விரதத்தில் அதில் மிகுந்த பக்தி சிரத்தையுடன் ஈடுபட்டிருந்தாள். தோலகாசுரன் என்னும் அரக்கன் ஒருவன் இந்த விரதத்திற்கு இடையூறு செய்து. துன்பம் விளைவிக்கவே, அந்த பெண், இந்த அரக்கனை வதம் செய்ய எம்பெருமானை வேண்டிக் கொண்டாள். எம்பெருமான் அவளுக்கு தெரியாமல் அந்த அசுரனை வாமன ரூபத்தில் வந்து, சக்ராயுதத்தை ஏவினார். அது அவனை பல துண்டுகள் ஆக்கியது. அப்படி வதம் செய்து அவசரம் அவசரமாக துவாதசி பாரணை (விரதம் முடிக்க) செய்யவரும் போது, எம்பெருமான் திருமார்பில் மறைத்து வைத்து இருந்த மகாலக்ஷ்மியை தரிசனம் செய்து, இந்த சிறுவன் எம்பெருமான் தான் என்று நிச்சயம் செய்து, அவனிடம் எம்பெருமானின் திருமார்பு தரிசனம் வேண்டி இந்த பெண் மோக்ஷம் பெற்றாள் என்பது வரலாறு. அவளின் வேண்டுகோளின்படியே எம்பெருமான் இங்கே, திருவாழ்மார்புடன் இன்றும் பக்தர்கட்கு அருள்புரிவதாக ஐதீஹம். இதனையொட்டியே திருவல்லவாழ் என்ற பெயர் இந்த திருத்தலத்திற்கு உண்டானதாக வரலாறு.
துர்வாசர் இந்த பெருமாளை பிரதிஷ்டை செய்ததாகவும் சொல்கிறார்கள். அவர் அப்படி செய்யும் போது 12000 வாழை பழங்கள் எம்பெருமானுக்கு சமர்பித்ததாகவும், அதே போல இன்றும் வருடம் ஒருமுறை இந்த விழா, பன்னீராயிரம் விழா என்று இந்த கோவிலில் கொண்டாடப்படுகிறது.
கேரளாவின் கோட்டயம் (Kottayam) மற்றும் செங்கன்னூர் (Chengannur) நகரங்களிலிருந்து சாலை மார்க்கமாக எளிதில் அடையலாம்.
மலை நாட்டு திவ்ய தேசங்கள் பதின்மூன்று :
திருவனந்தபுரம், திருவண்பரிசாரம், திருகாட்கரை, திருமூழிக்களம், திருச்சிறு புலியூர், திருசெங்குன்றூர், திரு நாவாய், திரு வல்லவாழ், திரு வண்வண்டூர், திருவாட்டாறு, திருவித்துவக் கோடு, திருக்கடித்தானம் , திருவாறன் விளை (ஆரம்முளா).
கொல்லத்திலிருந்து எர்ணாகுளம் செல்லும் புகைவண்டி மார்க்கத்திலும் திருவல்லா புகைவண்டி நிலையத்தை அடையலாம். அங்கு இருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் இந்த திருதலம் உள்ளது. திருவல்லாவை தொடர்ந்து அதனை சூழ்ந்த மற்ற ஐந்து திவ்ய தேசங்களைச் சேவிக்கலாம்.
கோட்டயத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் செங்கனாச்சேரி
செங்கனாச்சேரியிலிருந்து 3 கீ.மி. தூரம் திருக்கடித்தானம்.
திருக்கடித்தானத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் திருவல்லா.
திருவல்லாவிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் திருவண்வண்டூர்
திருவண்வண்டூரிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் திருச்செங்குன்றூர்.
திருச்செங்குன்றூரிலிருந்து மேற்கே சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் திருப்புலியூர்
***
பாசுரங்கள்
1808.
தந்தை தாய் மக்களே* சுற்றம்என்று உற்றவர் பற்றி நின்ற,*
பந்தம்ஆர் வாழ்க்கையை* நொந்து நீ பழிஎனக் கருதினாயேல்,*
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருமாலிருஞ்சோலை (அ) அழகர் கோவில்
திருமாலிருஞ்சோலை என்றால் பொதுமக்களுக்குத் தெரியாது ; இந்த இடத்தின் தற்போதைய பெயர் அழகர் கோவில் ; மலை அடிவாரத்தில் பெருமாள் கோயில்இருக்கிறது; மலையில் ஏறிச் சென்றால் அறுபடை வீடுகளில் ஒன்றான முருகப்பெருமானின் பழமுதிர்ச் சோலையைத் தரிசிக்கலாம் ; அதற்கும் மேலே மலையேறிச் சென்றால் நூபுர கங்கை என்னும் சின்ன அருவி; இதிலிருந்து ஒடிய சிலம்பாறு ஒருகாலத்தில் பெரிய நதியாக இருந்திருக்க வேண்டும் .
மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் அழகர் கோயில் உள்ளது; அங்கு அழகர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள திருமால் கோயிலை திருமாலிருஞ்சோலை என்றும் மாவிருங்குன்றம் என்றும் சோலை மலை என்றும் வைணவர்கள் அழைத்தார்கள்; இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று.
கருவறையில் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி .
உற்சவ மூர்த்தி அழகர், அல்லது சுந்தரராஜப் பெருமாள்
பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோரின் திருப்பணிகளை இக்கோயில் கொண்டுள்ளது.
தாயார் : ஸ்ரீ சுந்தர வல்லி
மூலவர் : திரு மாலிரும் சோலை நம்பி
மண்டலம் : பாண்டியநாடு
கடவுளர்கள்: கள்ளழகர் கல்யாணசுந்தரவல்லி
***
சித்திரைத் திருவிழா
இந்த விழாவை தற்போதைய வடிவில் அமைத்த மன்னர் திருமலை நாயக்கர் ஆவார் .மீனாட்சி திருக்கல்யாணம் (திருமணம்) விழாவையும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வையும் ஒரே திருவிழாவாக இணைத்தார்..
1. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் 💍
மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில்-ல்
மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரரின் திருமணம் மிக விமர்சையாக நடைபெறும்.
2. தேர் திருவிழா
பெரிய தேரில் தெய்வங்கள் நகரை சுற்றி வருவது பக்தர்களுக்கு மிகப் பெரிய ஆனந்தம்.
3. அழகர் வருகை :அழகர் கோவிலிலிருந்து
கள்ளழகர் மதுரைக்கு வந்து, வைகை நதியில் இறங்குவது இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சி ஆகும் ; வரும்போதும் அழகர் திரும்பிப்போகும் போதும் பல லட்சம் மக்கள் கூடிக் கொண்டாடுவர்; முக்கியமாக கள்ளர் மரபினர் பழங்கால வேடம் அணிந்து தண்ணீர் பைகளிலிருந்து தண்ணீரைப்பீச்சி அடித்த வண்ணம் வருவார்கள் ;அதைக் காணக் கண்கோடி வேண்டும்
அழகர் தனது சகோதரி மீனாட்சியின் திருமணத்திற்கு வருகிறார். ஆனால் அவர் தாமதமாக வந்து, திருமணம் முடிந்துவிட்டதை அறிந்து, கோபத்தில் வைகை ஆற்றில் இறங்குவதாக நம்பப்படுகிறது.
இது சைவம் மற்றும் வைணவம் ஆகிய இரு சமயங்களின் ஒற்றுமையை காட்டுகிறது
வைகை ஆற்றின் கரையோரமுள்ள நூற்றுக் கணக்கான மண்டகப்படிகளில் மக்களுக்கு இலவச உணவுப் பிராசதம் கிடைக்கும்.
***
கோயில் கலைச் சிறப்புகள் :
முழுமை அடையாத இராஜ கோபுரம்
மூலவரின் கருவறை மீது எழுப்பப்பட்டுள்ள சோமசந்த விமானம் வட்ட வடிவமானது.
ஆரியன் மண்டபத்தில் கொடுங்கைகள் மற்றும் இசைத் தூண்கள் உள்ளன. இசைத் தூணின் உச்சியிலுள்ள சிங்கத்தின் வாயில், சுழலும் நிலையில் ஆனால் வெளியே எடுக்க முடியாதபடி உள்ளது.
திருக்கல்யாண மண்டபத்தில் நரசிம்மர் அவதாரம், கிருஷ்ணன், கருடன், மன்மதன், ரதி, திரிவிக்கிரமன் அவதாரம், இலக்குமி வராகமூர்த்தி ஆகிய பெயர்களைக் கொண்ட கற்றூண்களில் உள்ள சிற்பங்கள் நாயக்கர் கால சிறந்த படைப்புகளாகும்.
வசந்த மண்டபத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் அழகிய ஒவியங்கள் உள்ளன.
கோயிலின் காவல் தெய்வம் பதினெட்டாம்படிக் கருப்பசாமி சந்நிதியில் உள்ள கோபுரம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது.
இராயகோபுரம் திருமலை மன்னரால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறா நிலையில் உள்ளது.
கோவிலைச் சுற்றி உள்கோட்டை மற்றும் வெளிக்கோட்டை எனப்படும் இரணியன் கோட்டை , அழகாபுரிக் கோட்டை அமைந்துள்ளது.
***
மதுரையில் வியாழன் ஞாயிற்றுக் கிழமைகளில் பெரிய சந்தையொன்று, திலகர் திடலில் கூடும்; அப்போது நூற்றுக்கணக்கான மூலிகைகளும் கீரைவகைகளும் ஒரு பகுதியில் இருக்கும்; மாவடு விற்போர் அந்தந்த சீசனில் வருவார்கள்; இன்னுமொரு பக்கம் மாகாளிக்கிழங்கு குவிந்து கிடக்கும்; அத்தனையும் அழகர் மலையிலிருந்தது வந்தவை ; பிற்காலத்தில் ஆண்ட அரசியலவாதிகள் அந்த வாராந்திர மார்க்கெட்டை அடியோடு அழித்தார்கள். ஒரு காலத்தில் காடுகளும் ஆறுகளும் நிறைந்த இந்தப் பகுதி இப்போது நூற்றில் ஒரு சதவிகிதம் மிஞ்சி இருக்கிறது என்று சொல்லலாம்.
****
நாலாயிர திவ்ய பிரபந்தம்
முதல் ஆயிரம்—ஆண்டாள்–நாச்சியார் திருமொழி
586 சிந்துரச் செம்பொடிப் போல்
திருமாலிருஞ்சோலை எங்கும்
இந்திர கோபங்களே
எழுந்தும் பரந்திட்டனவால்
மந்தரம் நாட்டி அன்று
மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத்தோளுடையான்
சுழலையினின்று உய்துங் கொலோ? (1)
587 போர்க்களிறு பொரும்
மாலிருஞ்சோலை அம் பூம்புறவில்
தார்க்கொடி முல்லைகளும்
தவள நகை காட்டுகின்ற
கார்க்கொள் பிடாக்கள் நின்று
கழறிச் சிரிக்கத் தரியேன்
ஆர்க்கு இடுகோ? தோழீ
அவன் தார் செய்த பூசலையே (2)
588 கருவிளை ஒண்மலர்காள்
காயா மலர்காள் திருமால்
உரு-ஒளி காட்டுகின்றீர்
எனக்கு உய் வழக்கு ஒன்று உரையீர்
திரு விளையாடு திண் தோள்
திருமாலிருஞ்சோலை நம்பி
வரிவளை இற் புகுந்து
வந்திபற்றும் வழக்கு உளதே? (3)
589 பைம்பொழில் வாழ் குயில்காள்
மயில்காள் ஒண் கருவிளைகாள்
வம்பக் களங்கனிகாள்
வண்ணப் பூவை நறுமலர்காள்
ஐம் பெரும் பாதகர்காள்
அணி மாலிருஞ்சோலை நின்ற
எம்பெருமானுடைய
நிறம் உங்களுக்கு என் செய்வதே? (4)
590 துங்க மலர்ப் பொழில் சூழ்
திருமாலிருஞ்சோலை நின்ற
செங்கண் கருமுகிலின்
திருவுருப் போல் மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள்
தொகு பூஞ்சுனைகாள் சுனையிற்
தங்கு செந்தாமரைகாள்
எனக்கு ஓர் சரண் சாற்றுமினே (5)
591 நாறு நறும் பொழில்
மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய்
வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த
அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான்
இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ? (6)
592 இன்று வந்து இத்தனையும்
அமுது செய்திடப் பெறில் நான்
ஒன்று நூறாயிரமாக்
கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்
தென்றல் மணம் கமழும்
திருமாலிருஞ்சோலை தன்னுள்
நின்றபிரான் அடியேன்
மனத்தே வந்து நேர்படிலே (7)
593 காலை எழுந்திருந்து
கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லி
மருள் பாடுதல் மெய்ம்மைகொலோ?
சோலைமலைப் பெருமான்
துவாராபதி எம்பெருமான்
ஆலின் இலைப் பெருமான்
அவன் வார்த்தை உரைக்கின்றதே (8)
594 கோங்கு அலரும் பொழில்
மாலிருஞ்சோலையிற் கொன்றைகள்மேல்
தூங்கு பொன் மாலைகளோடு
உடனாய் நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திருமுகத்து
மடுத்து ஊதிய சங்கு ஒலியும்
சார்ங்க வில் நாண்-ஒலியும்
தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ? (9)
595 சந்தொடு காரகிலும்
சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறு
உடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனைச் சுரும்பு ஆர்
குழற் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார்
திருமாலடி சேர்வர்களே (10)
****
திருவாய்மொழி–பத்தாம் பத்து
மணத்தின் வாசியறிந்து, வேர் சூடுவார் மண்ணையும் சேர்த்துச் சூடுவர்.
அதுபோல் ஞானயிரின் ஞான பரிமளம் வீசும் தேகத்தை எம்பெருமான் விடுவதில்லை. பரம பக்தி சபலனான எம்பெருமான் ஆழ்வாரை இத்திருமேனியோடு பரமபதத்திற்கு அழைத்துச் செல்ல ஆசை கொண்டான்.
அந்த எம்பெருமானே திருமாலிருஞ்சோலை எம்பெருமான் என்று இப்பகுதி அறிவிக்கின்றது.
***
3733. செஞ்சொற் கவிகாள்!உயிர்காத்தாட்
செய்மின் திருமா லிருஞ்சேலை,
வஞ்சக் கள்வன் மாமாயன்
மாயக் கவியாய் வந்து,என்
நெஞ்சு முயிரு முள்கலந்து
நின்றார் அறியா வண்ணம்,என்
நெஞ்சு முயிரும் அவையுண்டு
தானே யாகி நிறைந்தானே.
திருமாலிருஞ்சோலையான் என் உயிரை உண்டுவிட்டான்
3734. தானே யாகி நிறைந்தெல்லா
உலகும் உயிரும் தானேயாய்,
தானே யானென் பானாகித்
தன்னைத் தானே துதித்து,எனக்குத்
தேனே பாலே கன்னலே
அமுதே திருமா லிருஞ்சோலை,
கோனே யாகி நின்றொழிந்தான்
என்னை முற்றும் உயிருண்டே..
ஆ!அம்மான் திருவருள் இருந்தவாறு என்னே!
3755. என்னை முற்றும் உயிருண்டென்
மாய ஆக்கை யிதனுள்புக்கு,
என்னை முற்றும் தானேயாய்
நின்ற மாய அம்மான்சேர்,
தென்னன் திருமா லிருஞ்சோலைத்
திசைகை கூப்பிச் சேர்ந்தயான்,
இன்னம் போவே னேகொலோ!
என்கொல் அம்மான் திருவருளே?
எம்பெருமான் என்னைக் கைவிடமாட்டான்
3736. நண்ணா அசுரர் நலிவெய்த
நல்ல அமரர் பொலிவெய்த,
எண்ணா தனகள் எண்ணும்நன்
முனிவ ரின்பம் தலைசிறப்ப,
பண்ணார் பாடல் இன்கவிகள்
யானாய்த் தன்னைத் தான்பாடி,
தென்னா வென்னும் என்னம்மான்
திருமா லிருஞ்சோ லையானே.
திருமால் என்னை ஆள்கின்றான்
3738. திருமா லிருஞ்சோ லையானே
ஆகிச் செழுமூ வுலகும்,தன்
ஒருமா வயிற்றி னள்ளேவைத்
தூழி யூழி தலையளிக்கும்,
திருமா லென்னை யாளுமால்
சிவனும் லெய்தி யடிபரவ
அருளை யீந்த அம்மானே.
எல்லா மூர்த்திகளின் மயக்கங்களையும் போக்குபவன் திருமால்
3739. ‘அருளை ஈயென் அம்மானே!’
என்னும் முக்கண் அம்மானம்,
தெருள்கொள் பிரமன் அம்மானும்
தேவர் கோனும் தேவரும்,
இருள்கள் கடியும் முனிவரும்
ஏத்தும் அம்மான் திருமலை,
மருள்கள் கடியும் மணிமலை
திருமா லிருஞ்சோ லைமலையே.
என்னை ஒரு நொடியும் பிரியாதவன் திருமால்
3740. திருமா லிருஞ்சோ லைமலையே
திருப்பாற் கடலே என்தலையே
திருமால் வைகுந் தமேதண்
திருவேங் கடமே எனதுடலே,
அருமா மாயத் தெனதுயிரே
மனமே வாக்கே கருமமே,
ஒருமா நொடியும் பிரியானென்
ஊழி முதல்வன் ஒருவனே.
மனமே!திருமாலை விடாமல் பிடி
3741. ஊழி முதல்வன் ஒருவனே
என்னும் ஒருவன் உலகெல்லாம்,
ஊழி தோறும் தன்னுள்ளே
படைத்துக் காத்துக் கெடுத்துழலும்.
ஆழி வண்ணன் என்னம்மான்
வாழி!மனமே கைவிடேல்
உடலும் உயிரும் மங்கவொட்டே
நானேயாகி என்னை அளித்தவன் திருமால்
3742. மங்க வொட்டுன் மாமாயை
திருமா லிருஞ்சோ லைமேய,
நங்கள் கோனே!யானே c
யாகி யென்னை யளித்தானே,
பொங்கைம் புலனும் பொறியைந்தும்
கருமேந் திரியும் ஐம்பூதம்,
இங்கிவ் வுயிரேய் பிரகிருதி
மானாங் கார மனங்களே.
3743. மானாங் கார மனங்கெட
ஐவர் வன்கை யர்மங்க,
தானாங் கார மாய்ப்புக்குத்
தானே தானே யானானை,
தேனாங் காரப பொழில்குருகூர்ச்
சடகோ பன்சொல் லாயிரத்துள்,
மானாங் காரத் திவைபத்தும்
திருமா லிருஞ்சோ லைமலைக்கே.
****
திவ்யதேச பாசுரங்கள்
71.
உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தம் இல் மருவி* உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும்*
கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிர* கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி*
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மைத்ரேயி
Maitreyī (मैत्रेयी).—வேதகாலப் பெண் அறிஞரான மைத்ரேயி, பிரம்மவாதினியாகத் திகழ்ந்து சிறந்த தத்துவ விவாதங்களில் ஈடுபட்டவர் . கார்க்கி, சுலபா, ஆகியோருடன் இணைந்து, வேத காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராகக் கல்வியிலும் அறிவிலும் சிறந்து விளங்கினர் என்பதை மைத்ரேயி உறுதிப்படுத்துகிறார். மைத்ரேயி–யாக்ஞவல்கியர் தத்துவ உரையாடல் பற்றிய தகவல் பிருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ளது.
பிரம்மரிஷியான யாக்ஞவல்கியருக்கு மைத்ரேயி மற்றும் காத்யாயனி என இரு மனைவியர் இருந்தனர். தத்துவ ஞானத்தை நாடிய மைத்ரேயி மற்றும் இல்லற வாழ்வில் நாட்டம் கொண்ட காத்யாயனி, யாக்ஞவல்கியரின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றினர். எதனால் பிரம்மத்தை அறிந்த்து பேரின்பம் அடையலாம் என்ற விவாதத்தில் மைத்ரேயி தனக்கு சொத்து சுக்கங்கள் வேண்டாம் என்கிறார் ; காத்யாயபி இல்லற இன்பத்தில் நாட்டம் கொள்கிறார் ; இது 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெண்களின் வேதாந்த வேட்கையை அறிய உதவும் சம்பாஷணை ஆகும் .
***
மலையத்வஜ பாண்டியன் / மீனாக்ஷி
மஹாபாரதம், திருவிளையாடல் புராணம் ஆகியவற்றில் மலையைக் கொடியாகக்கொண்ட பாண்டிய மன்னன் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன ; சூர சேன மன்னனின் மகளான காஞ்சன மாலாவை மணந்துகொண்ட அவருக்கு குழந்தைகள் இல்லாததால் அஸ்வ மேத யாகம் செய்தார் ; யாகத்தீயில் மூன்று மார்பகங்களுடன் பெண் குழந்தை தோன்றியது ; தடாதகை என்று பெயர் சூட்டினார்கள்; அவளுக்குரிய ஆண்மகனைச் சந்திக்கும்போது மூன்றாவது முலை மறைந்துவிடும் என்ற அசரீரி கேட்டது ; அதுபோலவே எட்டுத் திக்குகளில் திக் விஜயம் மேற்கொண்ட அவர் சுந்தரேஸ்வரர் என்ற சிவபெருமானைக்கண்டவுடன் அந்த மார்பகம் மறைந்தது. நாணித் தலை குனிந்து அவருக்கு மாலையிட்டாள். இன்றும் மதுரை மீனாட்சி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவில் மீனாட்சியின் திக் விஜயம், கல்யாணம் ஆகியன நடைபெறுகின்றன; மீனாட்சி பற்றி பண்டேயா அரசி என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க தூதன் மெகஸ்தனிஸ் குறிப்பிட்டுள்ளார் . 1400 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரைக்கு வந்த திருஞான சம்பந்தர் அங்கயற் கண்ணி என்று மீனாட்சியின் பெயரைத் தமிழ் மொழியில் பாடிப் பரவியுள்ளார்
மகாபாரதப் போரில், பாண்டவர்களுக்கு ஆதரவாக கலந்துகொண்டு, போரிட்ட மலையத்வஜனை அஸ்வத்தாமன் கொன்றான்
****
மாளவிகாக்னிமித்ரம்
காளிதாசனின் மூன்று நாடகப் படைப்புகளில் மாளவிகாக்னிமித்ரம் முதலாவது நாடகம் என்று ஆராய்ச்சியார்கள் கருதுகிறார்கள்.
சம்ஸ்கிருத மொழியில் அந்தக் காலத்திலேயே 640 நாடகங்கள் இருப்பதை ஜவஹர்லால் நேரு பெருமையுடன் குறிப்பிட்டு எழுதியுள்ளார் அக்கினி மித்ரன் என்ற அரசனுக்கும் மாளவிகா என்ற பணிப்பெண்ணுக்கும் இடையேயான காதல் கதை இது . இதில் அக்கால ஓவியக் கலை, நாடகக் கலை பற்றிய அரிய செய்திகள் கிடைக்கின்றன முதல் மனைவியான தாரிணியின் பணிப்பெண்களின் ஓவியத்தைக் கண்டவுடன் காதல் மலர்கிறது ; இருவர் உதவியுடன் காதல் கைகூடும் தருணத்தில் மாளவிகாவும் ராஜ குமாரி என்ற சர்ப்ரைஸ் செய்தி கிடைக்கிறது; தாரிணியும் மனமுவந்து கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறாள்; இந்து ராஜாக்கள் ஒருவருக்கு மேல் இன்னும் பலரைக் கல்யாணம் கட்ட சாஸ்திரம் அனுமதிக்கிறது. ராம பிரான் ஒருவன் மட்டுமே ஏகபத்தினி விரதன் என்பதால் உலகமே அவனைப் பாராட்டுகிறது.
***
மனஸ்/ மனம்
சங்க காலம் முதல் திருக்குறள் காலம் வரை- இன்று வரை –தமிழ் மொழியில் பயன்படுத்தும் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லியிருந்தான் மைண்ட் MIND என்னும் ஆங்கிலச் சொல்லும் பிறந்தது; இதன் பொருள் – உள்ளம், எண்ணம், கிடக்கை , புத்திசாலித்தனம், புரிந்து கொள்ளும் உணர்வு, விருப்பம் என்பன ஆகும் ; மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது தமிழ்ப் பழ மொழி . மனம் ஒரு குரங்கு என்று பல அடியார்களும் பாரதியாரும் பாடியுள்ளனர்.
***
மண்டிலம்/ மண்டலம்
Maṇḍala (मण्डल).— வட்டமான , அல்லது ஒரு எல்லைக்குட்பட்ட பகுதி ; கண்ணாடி. ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் (பிரிவுகள் ) உள்ளன . காலக்கணக்கீட்டில் 41 நாட்கள் ; சபரி மலை ஐயப்ப பக்தர்கள், ஆந்திரத்தில் விஜயவாடா கனக துர்க்கை அம்மன் கோவில் தீட்சை விரதம் இருப்போர் 40, 41, 44 நாட்கள் என்ற பல கால எண்ணிக்கையை மண்டலம் என்பார்கள்.
தமிழ் நாட்டினை ஆண்ட சோழர்கள் தமிழர்கள் அல்ல ; புறநானூறும் சிலப்பதிகாரமும் வடமேற்கு இந்தியாவை அந்த சிபிச் சக்ரவர்த்தியைத் தங்களுடைய முன்னோர்கள் என்று பெருமையுடன் செப்புகின்றன ; அந்த வழியில் வந்த மாந்தாதா , முசுகுந்தன் ஆகியோரையும் கல்வெட்டுகளும் சாசனங்களும் கம்பராமாயணமும் சூரிய குல ராஜாக்களாகப் போற்றுகின்றன ; மாந்தாதா , ஒரு ஆணுக்குப் பிறந்தவன் என்ற சுவையான கதை மகாபாரதத்தில் உள்ளது ; ஆணுக்கு குழந்தை பிறந்த செய்தி அபூர்வமாக மேலை நாடுகளிலும் நடந்துள்ளது.
யுவனாஸ்வன் மகனான மாந்தாதா தேவர்களையும், அசுரர்களையும், மனிதர்களையும் வீழ்த்தியவனாவான். தேவர்களான அசுவினி இரட்டையர்கள், அவனை {மாந்தாதாவை} அவனது தந்தையின் {யுவனாஸ்வனின்} கர்ப்பப்பையில் இருந்து அறுவைச் சிகிச்சையின் மூலம் வெளியே எடுத்தனர். (மாந்தாதாவைக் குறித்து வனபர்வம் பகுதி 126ல் குறிப்பிடப்பட்டுள்ளது).
ஒரு சமயம் மன்னன் யுவனாஸ்வன், காட்டில் மானைத் துரத்திச் சென்ற போது, மிகவும் தாகமடைந்தான், ஒரு வேள்விசாலையை அடைந்து, அங்கே சிதறிக் கிடந்த புனிதமான வேள்வி நெய்யைக் குடித்தான் ;இதனால் அந்த மன்னன் கருவுற்றான்.
தேவர்கள், தங்களுக்குள் ஒருவருக்கொருவர், “இந்தக் குழந்தை எதனால் உயிர் வாழும்?” என்று வினவினர். அப்போது இந்திரன், “குழந்தை என் விரல்களைச் சப்பட்டும் ” என்றான். இதனால் மாந்த்தாதா என்ற பெயர் ஏற்பட்டது இவன் ராம பிரான், சோழர்கள் ஆகியோர் தோன்றிய சூரியகுல மன்னன் ஆவான் ; முசுகுந்தன் கதை பாகவதத்தில் உள்ளது.
***
மங்கலதேவி/ கண்ணகி
வரலாற்றுச் சிறப்புமிக்க மங்களதேவி/ கண்ணகி கோயில் தமிழக-கேரள எல்லையில் உள்ள வண்ணாத்தி பாறையில் அமைந்துள்ளது.
கர்நாடக மாநில மங்களூரிலும் , கேரளத்திலும் மங்கலதேவி கோவில்கள் உள்ளன . இவற்றில் கேரளத்திலுள்ள கோவில் பத்தினித் தெய்வமான, சிலப்பதிகார கண்ணகிக்கு எழுப்பப்பட்ட கோவில் என்று மக்கள் நம்புகின்றனர் ; கண்ணகியின் கணவனான கோவலனைப் பாண்டிய மன்னன் தவறுதலாகக் கொல்ல உத்தரவிட்டதால், வெகுண்ட கண்ணகி மதுரையின் ஒரு பகுதியை எரித்துவிட்டு, கேரளத்துக்கு வந்து புஷ்பக வியமானத்தில், கோவல னுடன் சொர்க்க லோகம் சென்றதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. தமிழக – கேரளா எல்லையில் உள்ள இடுக்கியில் 5000 அடி உள்ள மலை பகுதியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கோவில் (சித்ரா பௌர்ணமி) திறக்கப்படும் .
***
மங்கள சூத்ரம்
இது ஹிந்துப் பெண்கள் திருமணத்தின் போது அணியும் மஞ்ச்சள் குங்கும தடவிய புனிதமான கயிறு ஆகும் ; தாலி என்ற சொல்லும் இதைக் குறிக்கும். சேயிழை , அணியிழை என்ற பெயர்களில் சங்கத் தமிழ் நூல்கள் இதைப் போற்றுகின்றன ; கணவன் உயிருடன் இருக்கும்வரை இதைப் பெண்கள் அணிவார்கள்
***
மாங்கல்யதாரணம்
தாலி என்னும் மங்கல சூத்ரத்தை அணியும் கல்யாண நிகழ்ச்சிக்கு மாங்கல்ய தாரணம் — மாங்கல்யத்தைத் தரித்தல்/ அணிதல் – என்று பெயர் .
***
மணிபல்லவம்
மணிபல்லவம் என்பது ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியத்தில் குறிப்பிடப்படும் ஒரு புராணத் தீவு ஆகும்.இலங்கையில் யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள நயினாத் தீவுதான் மணிபல்லவம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மணிமேகலா தெய்வம், மணிமேகலையை பூம்புகாரிலிருந்து இந்தத் தீவிற்கு அழைத்துச் சென்றது. புத்தரின் பாதச்சுவடுகள் பொறிக்கப்பட்ட அற்புதம் வாய்ந்த தர்மபீடிகை இங்கு உள்ளது. இதன் மீதுள்ள மலர்களைத் தொழுதால் முற்பிறவி நினைவுகள் தோன்றும் ; மக்களின் பசியைப் போக்கும் ‘அமுதசுரபி’ என்ற அட்சய பாத்திரம் இந்தத் தீவில் உள்ள கோமுகி என்னும் பொய்கையிலிருந்து தோன்றியது என்று மணிமேகலை குறிப்பிடும்.
மேலும், இது பிரபல எழுத்தாளர் தீபம் நா. பார்த்தசாரதி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலின் பெயரும் ஆகும்.மணிபல்லவம் நாவல் – காவிரிப்பூம்பட்டினம், இலங்கை மற்றும் சோழ நாட்டுப் பின்னணியில் எழுதப்பட்ட வரலாற்று நாவல் ஆகும்.
***
மனிஷா பஞ்சகம்
மனீஷா பஞ்சகம் என்பது ஆதிசங்கரரால் அருளப்பட்ட ஐந்து ஸ்லோகங்களைக் கொண்ட ஒரு புகழ்பெற்ற தத்துவ நூலாகும். “மனீஷா” என்றால் உறுதியான ஞானம் அல்லது தெளிந்த அறிவு என்று பொருள். அனைத்து உயிர்களிலும் இறைவன் சமமாக இருக்கிறான் என்ற அத்வைத தத்துவத்தை இது விளக்குகிறது.தோன்றிய வரலாறு:ஆதிசங்கரர் காசியில் கங்கையில் நீராடிவிட்டுத் திரும்பும்போது, எதிரே நாய்களுடன் ஒரு சண்டாளர் (புலையன்) வந்தார். சங்கரரின் சீடர்கள் அவரை விலகிச் செல்லுமாறு கூறினர். அதற்கு அந்தச் சண்டாளர், “இந்த உடலை விலகிப் போகச் சொல்கிறீர்களா அல்லது உடலுக்குள் இருக்கும் ஆன்மாவை விலகிப் போகச் சொல்கிறீர்களா? உடலால் அனைவரும் சமம் தானே?” என்று ஒரு தத்துவக் கேள்வியைக் கேட்டார்.அவருடைய கேள்வியின் ஆழத்தைப் புரிந்துகொண்ட ஆதிசங்கரர், சாதி, மத பேதங்களைக் கடந்து, அனைத்து உயிர்களிலும் பரம்பொருள் நிறைந்திருக்கிறது என்ற உண்மையை உணர்ந்தார். அந்த ஞானத்தை வெளிப்படுத்தும் விதமாக ஐந்து ஸ்லோகங்களை இயற்றினார்.பிரம்மத்தை (இறைவனை) உணர்ந்த ஞானி, அவன் எந்த சாதியாக இருந்தாலும், அவனே தனக்கு குரு என்று ஆதிசங்கரர் இந்த நூலில் கூறுகிறார்.பிரம்மமே உண்மை: இந்த உலகம் மாயையானது, எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கும் சைதன்யம் (உயிர்) ஒன்றே என்பதை இந்த ஸ்லோகங்கள் வலியுறுத்துகின்றன.ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலும், “இதுவே எனது உறுதியான அறிவு” (மனீஷா மம) என்று ஆதிசங்கரர் பாடியுள்ளார்.இந்த நூலின் மூல ஸ்லோகங்கள் மற்றும் விளக்கங்களைப் படிக்க, Vaidika Vignanam வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.
புலையனாக வந்தது வேத வியாசர் என்றும் அவருடன் வந்த நான்கு நாய்கள் நான்கு வேதங்கள் என்றும் உரைகாரர்கள் விளம்புவர்.
***
மன்மதன் / மதன/ மாரன்/காம தேவன்
காதல் தெய்வத்தின் பெயர் ; மனைவி ரதி தேவி; அவருடைய கொடி- மகரக் கொடி; அதாவது முதலை என்றும் சுறாமீன் என்றும் சொல்வர். சங்கத் தமிழ் இலக்கியத்தில் மன்மதனைப் பற்றிய குறிப்புகள் உள. தாரகாசுரனை அழிக்க கார்த்திகேயன் என்னும் முருகன் பிறக்க வேண்டும் என்றும் அதற்கு சிவனும் பார்வதியும் முனைய வேண்டும் என்றும் தேவர்கள் திட்டமிட்டனர் . மன்மதனை அனுப்பி ஐந்து மலர்க்கணைகளை எய்தி காம உணர்வு எழுப்புவதற்கு சிவ பெருமானிடம் அனுப்பினார்கள் சிவன் நெற்றிக் கண்ணைத் திறக்கவே காம தேவன் சாம்பலானான் ; ரதி அழுது புலம்பவே அவன் அனங்கனாக (உடல் அற்ற / உருவம் இல்லாத) மனித உலகில் சஞ்சரிப்பான் என்று வரம் அளித்தார் ; இன்றும் எல்லோருக்கும் காம உணர்வினை ஏற்படுத்துபவன் அவன்தான்.
****
மந்திரம்
மனதில் தியானித்தால் அவர்களைக் காப்பாற்றும் கருவி என்பது சொல்லின் பொருள்
Manas: Meaning “mind” Trai or Tra: Meaning “tool,” “instrument,” or “protection
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். (குறள் 28
பொருள்: நிறைவான சொல் ஆற்றல்கொண்ட சான்றோர்களின் –அதாவது ரிஷி முனிவர்களின்— பெருமையை, இந்த உலகத்தில் அவர்கள் அருளிய மந்திரச் சொற்களே (மறைமொழி) எடுத்துக் காட்டிவிடும். இது தொல்காப்பியத்திலும் இருக்கிறது .
நான்கு வேதங்களிலும் உள்ள காயத்ரீ மந்திரமும் ஓம் என்னும் பிரணவமும் எல்லோருக்கும் பொதுவானது .
அகராதியில் மந்திரம் (Mantra) கடவுளை வழிபடவோ அல்லது தியானிக்கவோ திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படும் புனிதமான சொல், வாக்கியம் அல்லது ஓசை (எ.கா: ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய .
ஏனைய பொருள்- மந்திராலோசனை : இரகசிய விவாதம் (Counsel): அரசர்கள் அல்லது தலைவர்கள் கூடிப் பேசும் இரகசிய ஆலோசனை அல்லது அமைச்சரவை சபை.
(Slogan): ஒரு நபர் அல்லது குழு தங்களின் அடிப்படை நம்பிக்கையாக அல்லது குறிக்கோளாகக் கொண்டு அடிக்கடி உச்சரிக்கும் வாசகம் (எ.கா: “வாடிக்கையாளரே தெய்வம்”).
மறைபொருள் / சூனியம் (Magic/Spell): ஆன்மீக அல்லது மாந்திரீக சக்திகளைக் கொண்டதாக நம்பப்படும் மந்திரச் சொற்கள்
மந்திரம் என்பது சில குறிப்பிட்ட ஒலிகள், வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களை மீண்டும் மீண்டும் உச்சரிப்பதன் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி, நேர்மறை ஆற்றலையும் அமைதியையும் பெற உதவும் ஒரு ஆன்மீகச் சொல்லாகும். மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பிரபலமான சில மந்திரங்கள்:ஓம் (பிரணவ மந்திரம்): இதுவே பிரபஞ்சத்தின் ஆதி ஒலி. மன அமைதிக்கு இது மிகச் சிறந்ததாகும்.ஓம் நம சிவாய: இது அறியாமையை அகற்றி ஞானத்தையும், முக்தியையும் தரக்கூடிய பஞ்சாட்சர மந்திரமாகும்.ஓம் சரவணபவ: முருகப் பெருமானின் அருள் பெறவும், தடைகள் நீங்கவும் உச்சரிக்கப்படும் ஆற்றல் மிக்க மந்திரம்.
வைணவர்களின் முக்கிய மந்திரம்– ஓம் நமோ நாராயணாய .
****
மனு / மன்வந்தரம்
மனித குலத்தைத் தோற்றுவித்தவர் மனு; ஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒரு மனு வருவார் ; இப்போது நாம் வைவஸ்வத மனுவின் ஆட்சியில் உள்ளோம்; பிராமணர்களும் ,புரோகிதர்களும் பூஜைக்கு முன்னர் இதைச் சொல்லி பூஜை அல்லது சடங்குங்களைத் துவங்குவர் ; மன்வந்தரம் என்பது குறிப்பிட்ட மனுவின் ஆட்சிக்காலம்.
மன்வந்தரம்
இந்து சமய காலக் கணக்கீட்டின்படி, மனிதகுலத்தின் மூதாதையான ஒரு மனுவின் (Manu) ஆட்சிக்காலம் மன்வந்தரம் (Manvantara) எனப்படுகிறது. ஒவ்வொரு மன்வந்தரமும் ஒரு குறிப்பிட்ட மனு, சப்தரிஷிகள், மற்றும் இந்திரன் ஆகியோரின் கீழ் இயங்குகிறது.: ஒரு கல்பத்திற்கு 14 மன்வந்தரங்கள் உள்ளன.தற்போதைய காலம்: நாம் தற்போது 7-வது மன்வந்தரமான ‘வைவஸ்வத மன்வந்தரத்தில்’ வாழ்ந்து வருகிறோம்..
கால அளவு: ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர யுகங்களைக் கொண்டது. அதாவது பிரம்மாவின் ஒரு நாள் .
14 மனுக்கள் பெயர்கள்
சுவாயம்புவ மனு,
சுவாரோசிஷ மனு,
உத்தம மனு,
தாமச மனு,
ரைவத மனு,
சாக்ஷுஷ மனு,
வைவஸ்வத மனு (நாம் தற்போது இருக்கும் காலம்),
சாவர்ணி மனு,
தக்ஷ சாவர்ணி மனு,
பிரம்ம சாவர்ணி மனு,
தர்ம சாவர்ணி மனு,
ருத்ர சாவர்ணி மனு,
தேவ சாவர்ணி மனு (அ) ரௌச்ய மனு,
இந்திர சாவர்ணி மனு
***
மனு ஸ்ம்ருதி
முரண்பட்ட பல ஓலைச் சுவடிகளை ஆராய்ந்து வெள்ளைக்காரர்கள் கொடுத்த கல்கத்தா சுவடியின் பதிப்புதான் தமிழிலும் ஆங்கிலயத்திலும் இப்போதுள்ளது; இதில் சூத்திரர்களுக்கு எதிரான 40 ஸ்லோகங்கள் சுங்க வம்ச காலத்தில் சேர்க்கப்பட்டவை; அதை வெள்ளைக்கார்கள் அப்படியே வைத்துக்கொண்டனர் ; ஆகையால் இப்போதைய பதிப்பு ஒருதலைச் சார்பானது ; நமபத்தக்கதல்ல.
மனு பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்திலேயே வருவதாலும்,மனு சரஸ்வதி நதி தீரம் பற்றிப் பேசுவதாலும், சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் பற்றி எதுவும் பேசாததாலும் அவர் ஹமுராபி (Hamurabi, 1810 BCE) போன்றோருக்கு முந்தியவர் என்பதில் ஐயமில்லை. ஆனால் காலப்போக்கில் அதில் புதுச் சரக்கு சேர்ந்தது என்பதில் ஐயமில்லை. மனு நீதி நூலை முழுதுமாகப் படிப்போருக்கு முரண்பட்ட சில விஷயங்கள் வருவதைக் காணலாம்.. காந்தி போன்றோர் இதிலுள்ள முரண்பட்ட விஷயங்களை ஒதுக்கினால் இது மிகப்பெரிய படைப்பு என்று சொல்லி ஏற்றுக்கொண்டனர்.
மனு நீதி நூலில் உள்ள மொத்த சம்ஸ்கிருத ஸ்லோகங்களின் எண்ணிக்கை–2647
மொத்தமுள்ள அத்தியாயயங்கள்- 12
வெளிநாட்டினர் கருத்துப் படி இதன் காலம் – கி.மு இரண்டாம் நூற்றாண்டு; என்னுடைய கணிப்பு; கி.மு 2000க்கு முந்தியது.
முதல் அத்தியாயத்தில் வரும் விஷயங்கள்
மனுவின் சிறப்பு
வேதத்தின் சிறப்பு
பிரளயம்
பிரபஞ்சத்தின் தோற்றம்- படைப்பு
நாராயண சப்,தத்தின் பொருள்
பிரம்மனின் தோற்றம்
மஹத் தத்துவம் முதலான சிருஷ்டி
தேவர் முதலானோரின் தோற்றம்
பிராணிகளின் தொழில்
விராட புருஷனின் தோற்றம்
மநுப் பிரஜாபதியின் தோற்றம்
மரீசி முதலானோரின் தோற்றம்
சராசரங்க ளின் உற்பத்திக் கிரமம்
தினப் பிரளயம்
மஹாப் பிரளயம்
இந்த நூல் தோன்றிய வரலாறு
காலக் கணக்கு
யுகக் கணக்கு
மன்வந்தரக் கணக்கு
யுக தருமம்
வர்ண தர்மம்
பிராமணன் சிறப்பு
பெண்கள் பற்றி மனு எச்சரிக்கை
உலகின் முதல் விரிவான சட்டப் புத்தகத்தை எழுதிய மனு, பெண்களை மதிக்காதவர்கள் அடியோடு அழிந்து போவார்கள் என்று எச்சரிக்கிறார். பெண் பாவம் பொல்லாதது, பெண்களை அவமதிப்பது கடவுளுக்கும் பிடிக்காது என்று எச்சரிக்கிறார்.
‘’யார் நலம் பெற விரும்புகின்றனரோ, அவர்கள் எல்லாம் பெண்களை ஆராதிக்கவேண்டும். தந்தையர், சகோதரர், கணவன், மைத்துனர் ஆகியோர் பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும்’’. (மனு3-.55)
‘’எங்கே பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ அங்கே கடவுள் ஆனந்தம் அடைகிறார். எங்கே பெண்கள் மதிக்கப் படுவது இல்லையோ, அங்கே செய்யப்படும் புனிதச் சடங்குகள் பலன் இல்லாமல் போகும்’’. (மனு.3-56)
‘’உறவுக்கார பெண்கள் எங்கே கண்ணீர் வடிக்கின்றனரோ அங்கே அந்தக் குடும்பம் அடியோடு நாசமாகும். எங்கே பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் செழித்துத் தழைத்து ஓங்கி வளரும்’’(மனு.3-57
‘’எந்த வீடுகளில் பெண்கள் சரியாக நடத்தப் படவில்லையோ அந்த இடங்களில் பெண்களின் சாபம், மந்திர மாயா ஜாலத்தில் பொருள்கள் மறைவதைப் போல வீடுகளை முற்றிலும் அழித்துவிடும்’’(மனு.3-58)
‘’ஆகையால் யாரெல்லாம் நலம் பெறவும் வளம் அடையவும் விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் பெண்களை விழாக் காலங்களிலும், விடுமுறைக் காலங்களிலும் ஆராதிக்க வேண்டும். எப்படி? துணிமணிகள், நகைகள்,அறுசுவை உணவு படைத்துப் போற்றவேண்டும்’’(மனு.3-59)
மனுவை விட வேறு யார் பெண்களுக்கு இவ்வளவு ஆதரவு தர முடியும்? இருக்கிறார், ஒரு ஆசாமி, அவர் பெயர் வள்ளுவர். அவர் நம்மை மாயாஜால (சிலர் மூட நம்பிக்கை) உலகுக்கே அழைத்துச் செல்லுகிறார். பத்தினிப் பெண்கள் மழையைப் பெய் என்றால் பெய்யுமாம் (குறள் 55).
சதி அநசுயா, சத்தியவான் சாவித்திரி, சீதா தேவி கதைகளைப் படிப்பவர்கள் வள்ளுவனை நம்பியே ஆகவேண்டும். ‘’கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா’’? என்று முனிவர்களையே எள்ளி நகையாடும் புள்ளி மான்கள் உலவிய நாடல்லவா இது!
To be continued……………………………….
Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 64; இந்து மத கலைச்சொல் அகராதி-64, மைத்ரேயி , மனு, மனு ஸ்ம்ரிதி, மங்கலதேவி, கண்ணகி, பெண்கள் பற்றி மனு, தாலி, மன்மதன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திவ்யதேசம் திருச்சேறை / பஞ்சஸார க்ஷேத்திரம்
மூலவர்- ஸாரநாதன்
உத்ஸவர் – மாமதலைப்பிரான்
தாயார் – ஸாரநாயகி /ஸார நாச்சியார் / பஞ்ச லக்ஷ்மி
திருக்கோலம்- நின்ற
திசை – கிழக்கு
பாசுரங்கள் — 12
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 12
சாரநாதன் என்ற எம்பெருமான், சாரநாச்சியார் என்ற தாயார், சார புஷ்க்ரணி, சாரவிமானம் மற்றும் சார க்ஷேத்திரம் என்ற ஐந்தும் சேர்ந்து பஞ்ச சார க்ஷேத்திரம் என்று ஆயிற்று.
ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, மஹாலக்ஷ்மி, சார நாச்சியார் என்று ஐந்து தேவிகளுடன் எம்பெருமான் காட்சி அளிக்கிறார். இங்குள்ள மூலவர் தனது வலது கையில் பத்மம் வைத்துள்ள காட்சி பரமபதம் எனப்படும் வைகுண்டத்தில் எம்பெருமான் தனது வலதுகரத்தில் பத்மம் வைத்துள்ளதற்கு ஓப்பானதாகும்.
எம்பெருமான் காவிரி தாய்க்கு ப்ரத்யக்ஷம். குளக் கரையில் காவிரியம்மனுக்கு சன்னதி உள்ளது. காவிரித் தாயின் தவத்தின் பலனாக அவரது மடியில் பெருமாள் குழந்தையாகத் திகழ்ந்ததோடல்லாது, அவருக்கு ஸ்ரீதேவி, பூதேவி, நிளாதேவி, மகாலட்சுமி, சாரநாயகி ஆகிய ஐந்து தேவியருடன் காட்சியளித்தார்
ராஜகோபாலன் சன்னதி உள்ளது. புஷ்கரணிக்கு வடமேற்கு திக்கில் உள்ள ஆஞ்சநேயரும் அவசியம் தரிசிக்க வேண்டிய சன்னதி.
குடவாசலிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிலும் கும்பகோணத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்சேறை அமைந்துள்ளது .
கும்பகோணத்திற்கு குடத்தின் மூக்கு என்று சொல்வதை ஒட்டி, குடத்திற்கு வாசல், குடவாசல் என்ற அருகில் உள்ள ஊர். இந்த திவ்யதேசம், குடத்தின் சாரம், அதாவது மத்திய பாகம்.
மார்க்கண்டேயர் முக்தியடைந்த தலம் இது
திருச்சேறை, சாரநாதப் பெருமாள் (பஞ்சஸாரக்ஷேத்ரம்) மற்றும் செந்நெறியப்பர் (சிவன்) ஆகிய இரு முக்கிய கோவில்களைக் கொண்ட தலம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த (13 பாசுரங்கள்) மற்றும் தேவாரப் பதிகங்கள் (சம்பந்தர், அப்பர்) பாடியுள்ள சிறப்புமிக்க தலம்.
திருமங்கையாழ்வார் இந்த திவ்யதேச எம்பெருமானை பற்றி பாடும் போது, இந்த எம்பெருமானின் திருவடிகளை வணங்கும் எல்லா பக்தர்களையும், ஆழ்வார் தன்னுடைய தலையில் தாங்குவதாக கூறி உள்ளார். “செல்வத் தண்சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே” (பெரிய திருமொழி 7.4.1)
கண்கள் சுழன்று சோரவும், வெப்பக் குருதி வெள்ளம் வெளிப்படவும், தீத்தழல்போல் சிவந்த கூந்தலுடைய பூதனையின் முலைப்பாலை குடித்து மடியச்செய்த பச்சிளம்பிள்ளையே ! வானவர் தலைவனே ! வானில் திரியும் இளம்பிறை வயிற்றைத் தொடும் மணி மாளிகைகள், செல்வம் வாய்த்ததுமாகிய திருச்சசேறை எம் பெருமானைத் தோழுவர்தம் திருவடிகளைத் தலைமேல் ஏற்பேன்.
1579
அம் புருவ வரி நெடுங்கண்
அலர்மகளை வரை அகலத்து அமர்ந்து
மல்லல் கொம்புருவ விளங்கனி மேல்
இளங் கன்று கொண்டெறிந்த கூத்தர் போலாம்
வம்பலரும் தண்சோலை
வண்சேறை வானுந்து கோயில் மேய
எம்பெருமான் தாள் தொழுவார்
எப்பொழுதும் என்மனத்தே இருக்கின்றாரே
அழகிய புருவத்துடன் நீள்விழிகளும் உடைய மலர்மகளைத் தனது திருமார்பில் வைத்தவன், தழைத்த கிளைகளில் விளங்கனிகளின் மேலே இனங்கன்றைக் குறுந்தடியாக எறிந்தவன், மணம் பரவியும் குளிர்ந்த சோலைகள் சூழும் திருச்சேறை திருக்கோயிலில் வாழ்கின்ற பெருமானுடைய திருவடிகளைத் தொழுவார்கள் எல்லோரும் எப்போதும் என் மனத்தில் வாழ்கின்றார்கள்.
தோ் நடத்த வல்லவனும் வாளை ஏந்தியவனுமான இராவணனின் இலங்கையைக் போரில் வில்லை ஏந்திக் கொடிய அம்புகளை ஏவி அழித்த இராமனே ! திருத்துழாய் மாலையுடன் விளங்கும் திருமார்புடையவனே, மேலுலங்களையும் காக்கும் பெருமையுடைய திருச்சேறை எம்பெருமானுடைய திருப்பெயர்களை ஓதிப் போற்றும் பெரியோர்களைக் கணப்போதும் நான் பிரியமாட்டேன்.
1582
வந்திக்கும் மற்றவர்க்கும்
மாசுடம்பின் வல்லமணர் தமக்கும் அல்லேன்
முந்திச் சென்று அரி உருவாய்
இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்
சந்தப்பூ மலர்ச்சோலைத்
தண்சேறை எம்பெருமான் தாளை
நாளும் சிந்திப்பார்க்கு என்னுள்ளம்
தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே
இரணியன் வலிமையை அழித்த பெருமானுக்கே நான் உரியவன். வலிந்து வாது செய்யும் சமணர்க்கும், மற்றும் பெளத்தர்கட்கும் நான் உரியேன் அல்லேன். சந்தனமலர்ப் பொழில்கள் சூழந்த திருச்சேறை எம்பொருமானுடைய திருவடிகளை நாள்தோறும் எண்ணுவார்க்கு என் உள்ளம் தேன் அடர்ந்தது போல எல்லாக் காலமும் இன்புறுகின்றது.
1583
பண்டேனமாய் உலகை அன்றிடந்த
பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணையல்லால்
துணையிலேன் சொல்லுகின்றேன்
வண்டேந்தும் மலர்ப்புறவில்
வண்சேறை எம்பெருமான் அடியார் தம்மை
கண்டேனுக்கு இது காணீர்
என் நெஞ்சம் கண் இணையும் களிக்குமாறே
முன்னர் வராகமாய் உலகைக் குத்தியெடுத்த நீர்மையனே ! உன்னை துதித்துத் தொண்டானேன் நான் : தேவரீர் திருவடிகளே எனக்குக் காப்பு . இவை தவிர வேறு புகலிடம் இல்லை என்று உறுதியாக சொல்லுகிறேன். வண்டுகளைக்கொள்ளும் மலர்ச் சோலை சூழ்ந்த நிலங்களுடைய திருச்சேறையில் உறையும் எம்பெருமானின் அடியார்களைக் கண்ட இப்பேறு, என் கண்களையும் நெஞ்சையும் களிக்கச் செய்கிறது.
1584
பைவிரியும் வரியரவில்
படுகடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும்
மைவிரியும் மணிவரைபோல்
மாயவனே என்றென்றும் வண்டார் நீலம்
செய்விரியும் தண்சேறை யெம்பெருமான்
திருவடியைச் சிந்தித்தேற்கு
என் ஐயறிவும் கொண்டானுக்கு ஆளானார்க்கு ஆளாம்
என் அன்புதானே
திருப்பார்கடலிலே திருவனந்தாழ்வான் மேல் கண்வளரும் எளியோனே! என்றும் அருள் படர்ந்த நீலமணி மலை போல் திருமேனித் திருமாலே! பலகாலும் வண்டுகள் அமரும் கருநெய்தல் கழனிகளிலே மலரும் தண்சேறை எம்பெருமானை சிந்திக்கின்றேன். என் ஐம்பொறிகளால் விளையும் அறிவூற்றிப் பெருமானை தனக்கே ஆக்கிக்கொண்டு அடிமைப்பட்டவர்பால் என்னுடைய அன்பும் அடிமைப்படும்.
வயல்களில் முளைத்துள்ள நெய்தல் மலர்களைக் களைந்ததால் மணம் பரவும் திருச்சேறைப் பெருமானது திருவடிகளை நாள்தோறும் மனத்தில் வைத்து நினைப்பவரை எனது மனம் நெகுழும். இப்பேறு எவ்வாறு எனக்குக் கிடைத்தது. நான் இறைவனுக்குரிய உள்ளுயிரை எனது என்று நினைக்கும் கள்வன், வஞ்சக நெஞ்சினன், ஆதலால் துன்பப் பெருங்கடலில் அழுந்தியிருப்பவன். எனக்கும் இப்பேறு கிட்டும்.
1587
பூமாண்சோ் கருங்குழலார் போல் நடந்து
வயல் நின்ற பேடையோடு
அன்னம் தேமாவின் இன்னிழலில் கண்துயிலும்
தண்சேறை யம்மான் தன்னை
வாமான் தோ்ப் பரகாலன்
கலிகன்றி ஒலிமாலை கொண்டு தொண்டீர்
தூ மாண்சோ் பொன்னடிமேல் சூட்டுமின்
நும் துணைக்கையால் தொழுது நின்றே
பூச்சூடிய கருங்கூந்தல் பெண்கள் போல் வயல்களிலே அன்னம் பெடையோடு உலாவி, தேமா மரத்தின் குளிர்ந்த நிழலில் உறங்குகின்ற திருச்சேறையில் உறையும் பெருமானைத் தாவிப்பாயும் குதிரைகள் பூட்டிய தேரில் ஏறி, பகைவர்களை வெல்லும் கலிகன்றி ஆழ்வார் பாடிய பாடல்களைப் பாடும் பக்தர்களை அழகு மிக்க தூய பெருமானதுத் திருவடிகளின் மேலே கைகளைக் குவித்து வணங்குவீர்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தொல்காப்பியம் – பாயிரம் – நச்சினார்க்கினியர் உரை – சந்தேகம்
Inbox
R K
Wed 1 Apr, 16:58 (2 days ago)
to Santhanam, me
நமஸ்காரம்
மதிப்பிற்குரிய திரு சுவாமிநாதன் ஐயா அவர்களுக்கு
நான் இதற்கு முன்பாக ஒன்றிரண்டு முறை சில சந்தேக விளக்கங்களுக்காக தங்களுக்கு எழுதி பதில் பெற்றிருக்கிறேன்.
தற்போது மேலும் ஒரு விளக்கம் வேண்டி இதை எழுதுகிறேன்
தொல்காப்பிய பாயிரத்தில் வரும் நான்மறை என்ற சொல் நான்கு வேதங்கள் என்று நான் புரிந்து வைத்துள்ளேன்.
ஆனால் சமீபத்தில் என் நண்பன் ஒருவன்
தொல்காப்பிய உரையாசிரியரான நச்சினார்க்கினியர் மற்றும் சில தமிழறிஞர்கள், ‘நான்மறை’ என்பது ஆரிய வேதங்களுக்கு முந்தைய தமிழ் மறைகளை மட்டுமே குறிக்கும் என்று வாதிடுகின்றனர். அவர்களின் கூற்றுப்படி, இவை தமிழ் மொழியில் இயற்றப்பட்டவை என்றும்
தைத்திரீயம்
பௌடிகம்
தலவகாரம்
சாமம் (அல்லது அதர்வணம்)
என்றும்
நான்மறை என்பது பொதுவாக சமஸ்கிருத வேதங்களைக் குறிக்கும் சொல்லாக இருந்தாலும், தமிழ் மரபில் அது பழமையான தமிழ் மூல மறைகளைக் குறிப்பதாகவும் ஒரு வலுவான கருத்து நிலவுகிறது
என்றும் கூறுகிறார்.
இந்த பாயிரத்திற்கு நச்சினார்க்கினியர் எழுதிய சரியான (உண்மை) விளக்கம் கிடைக்குமா?
அவர் எழுதிய உரை டிஜிட்டல் புத்தக வடிவில் தங்களிடம் இருந்தால் அதையும் விளக்கத்துடன் சேர்த்து அனுப்பும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
தங்கள் விளக்கத்தை எதிர்நோக்கி உள்ளேன்
சிரமத்திற்கு மன்னிக்கவும்
நன்றி
ரா…. கு…..
மதுரை
*****
London Swaminathan’s Reply:
காஞ்சி ஜகத்குரு சங்கராசார்ய சுவாமிகள் (1894-1994) இதற்குப் பதில் கொடுத்துள்ளார். அவரைவிட வேதங்களைப் பற்றிப் பேசுவதற்கு வேறு எவருக்கும் தகுதி இருக்கமுடியாது . நச்சினார்க்கினியர் செய்த தவற்றினை அவர் தெய்வத்தின் குரலில் இரண்டு இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளார் மொழியியல் பற்றி அபாரமான, அற்புதமான மிக நீண்ட உரையை அனைவரும் படிக்க வேண்டும்
“சங்க நூல்களின் உரையாசிரியர்களுல் முக்யமானவரான நச்சினார்க்கினியர் தொல்காப்பியத்துக்கு எழுதிய உரையில் ‘தைத்திரீயம், பௌடிகம், தலவகாரம், ஸாமம்’என்று நாலு வேதங்கள் இருந்ததாகச் சொல்லியிருக்கிறார். இவர் சாகைகளையே வேதம் என்று தவறுதலாகச் சொன்னாலும்கூட, இதிலிருந்தே ஆதியில்
தமிழ்நாட்டில் தலவகாரம் என்பதே ஒரு முழு வேதம் மாதிரியான ஸ்தானத்தைப் பெற்றிருந்தது என்றும் தெரியவருகிறது அல்லவா?தைத்திரீயம் என்பது கிருஷ்ண யஜுர் வேதத்தைச் சேர்ந்த தைத்திரீய சாகை. பௌடியம் என்பது ‘பௌஷ்யம்’ எனப்படும். ரிக் வேதத்தில் ஸாங்காயன சாகையைச் சேர்ந்த கௌஷீதகீ
ப்ராம்மணத்துக்குத்தான் பௌஷ்யம் என்றும் பெயர். இங்கே ‘பௌடியம்’என்று இவர் சொல்வது ஆழ்வார் வாக்கிலே ‘பௌழியா’என்று வருவதிலிருந்தும் ‘ட’வுக்கும் ‘ழ’வுக்கும் உள்ள தொடர்பு தெரிகிறது. ஆக இப்படி வேத சாகைகளில் உள்ள உச்சாரண பேதத்தை வைத்தே, அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள பாஷைகளில் தனித் தன்மையுள்ள எழுத்து உண்டாயிருக்கிறது.”
***
“தமிழில் தொல்காப்பியம் என்று மிகப் பழைய இலக்கண நூல் இருக்கிறதல்லவா? அது அகஸ்திய சிஷ்யர்கள் பன்னிரண்டு பேர்களுல் ஒருவரான திருணதூமாக்கினியால் செய்யப்பட்டது. அந்தப் புஸ்தகத்துக்கு பனம்பாரனார் செய்துள்ள சிறப்புப் பாயிரத்தில், ‘அறங்கறை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசான்’ என்று வருகிறது. இதற்கு நச்சினார்க்கினியர் உரை எழுதும் போது, ‘இங்கே ரிக்-யஜுஸ்-ஸாம- அதர்வ வேதங்களை நான்மறை என்று சொல்லவில்லை. அல்பாயுஸும், அநேக வியாதிகளும், ஸ்வல்பமே அறிவும் கொண்ட கலிகால ஜனங்களான ‘சின்னாட் பல்பிணிச் சிற்றறிவின’ரின் ஸெளகரியத்தை முன்னிட்டு, மஹா ஸமுத்ரமாயிருந்த வேதங்களை வியாஸர் நாலாகப் பிரிப்பதற்கும் முற்பட்ட காலத்தில் தொல்காப்பியம் உண்டாயிற்று. ஆகையால், இங்கே நான்மறை என்பவை தைத்தரியம், பௌடிகம், தலவகாரம், ஸாமம் என்ற ஆதிகால வேத பாகங்களே என்று எழுதியிருக்கிறார். திவ்வியப் பிரபந்தத்தில், ‘பௌழியா சந்தோகா’என்று வருகிறது. அதில் ‘சந்தோகம்’ என்பது ஸாமவேதம். ‘பௌழியம்’என்பதே மேலே சொன்ன ‘பௌடிகம்’. ரிக்வேத சாகைகளில் ஒன்றைச் சேர்ந்த ‘கௌஷீதகீ ப்ராஹ்மணம்’என்ற ‘பௌஷ்யம்’தான் பௌழியம் என்றும், பௌடிகம் என்றும் ஆகியிருக்கிறது. தலவகாரம், தைத்ரீயம், பௌழியம் என்பவை முறையே ஸாமவேதம், க்ருஷ்ண யஜுர்வேதம், ரிக் வேதம் ஆகியவற்றைச் சேர்ந்த வேத சாகைகளின் பெயர்கள். ஸாமம் மட்டுமே முழுவேதத்தின் பெயர்.
மலையாளத்தில் உள்ள நம்பூத்ரிப் பிராம்மணர்கள் யாவரும் வேதாத்தியயனம் செய்வார்கள். லௌகிகப் பிரவிருத்தி உள்ளவர்கள்கூட இளமையில் வேதாத்தியயனம் பண்ணினவர்களாகத்தான் இளமையில் வேதாத்தியயனம் பண்ணினவர்களாக இருப்பார்கள். ஈ.எம். எஸ். நம்பூத்ரிப்பாடு என்று முதன் மந்திரியாக இருந்த கம்யூனிஸ்டு தலைவர்கூட, பால்யத்தில் அத்யயனம் பண்ணியவர்தான். சமீப காலம் வரை அங்கே பிரம்மச்சாரிகள் கௌபீனம், கிருஷ்ணாஜினம் (மான்தோல்) தண்டம், ஸமிதாதானம் முதலியவைகளை விடாமல் கைக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இப்பொழுது அவர்கள்கூட மாறிக் கொண்டு வருகிறார்கள். …………………..
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல் நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து அறங்கறை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமை யோனே.
***
எனது பதில் :
This is a very good book by Tiruvavduthurai Adeenam
உச்சி மேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உரை இல்லாவிடில் பாதி தமிழ் இலக்கியத்துக்குப் பொருள் தெரிந்திருக்காது அவர் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்தான் அவருக்கு முன்னரே சாயனர் முதலி யோர் 4 வேதங்களுக்கும் உரை எழுதிவிட்டனர் ஒவ்வொரு உரையை முடிக்கும்போதும் மதுரை பாரத்வாஜ கோத்திர நச்சினார்க்கினியர் என்று பெருமையோடு சொல்லிக்கொள்கிறார் நச்சி.
காஞ்சி பரமாசார்ய சுவாமிகள், நச்சி. செய்த ஒரு தவற்றினைத்தான் சுட்டிக்காட்டி இருக்கிறார் . ஆனால் P T சீனிவாச அய்யங்கார் போன்றோர் நச்சி. செய்த பல தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளனர் .
அவர் தொல்காப்பியரின் பெயர் த்ருண தூமாக்கினி என்கிறார் தொல்காப்பியர் – அகஸ்தியர் மோதல் , ராவணன்-பாண்டியர் மோதல் பற்றி அவர் சொன்ன கதைகளையும் நம்புவோர் இந்த நான் மறை கப்சாவையும் நம்பலாம் !
****
My article posted on September 9, 2012
WHO WAS TOLKAPPIYAR?
There is an interesting story about Tolkappiar in the commentary written by Nachinarkkiniar (abbreviated as Nachi.) Nachi was a Brahmin who lived in 14th century Tamil Nadu. He wrote commentary after commentary like the greatest commentator of India, Adi Shankara. Nobody has beaten Adi Shankara in Sanskrit and Nachi in Tamil. Nachi was a Tamil enthusiast and so he believed Tolkappiam was written even before the Vedas were classified in to four by Veda Vyasa. So he committed many blunders. In spite of his blunders, still he is held in high esteem by all the Tamil scholars for his sheer qualitative and quantitative Tamil commentaries.
(Kanchi Paramacharya Swamikal has pointed out the blunder committed by Nachi. without naming him in one of his lectures. See his 1932 lectures in Madras)
Tolkappiyar’s name was Trnadumagni and he was one of the 12 disciples of Agastya was the old story. Agastya’s wife was Lopamudra.
Now I give the version of PT Srinivasa Iyengar’s translation from his book “History of the Tamils”, page 224)
“ The worst myth is what what Nachinarkiniyar tells us in his commentary on the prefatory ode to the Tolkappiyam, called Payiram, that Agathiyanar asked his disciple, Trnadumagni, to escort the master’s wife, Lopamudra of Vidarbha to the Podhiya Hill. He at the same time warned his disciple not to approach his wife nearer than the length of four rods. When Trnadumagni and Lopamudra had to cross the river Vaigai, the river was in flood, and fearing that she would be washed away by the river, he extended his walking stick to her and asked her to cling to it. He thus isobeyed his master’s solemn injunctions, for in crossing the river, he was but one rod’s length from her.The irate master, when he heard of this, exclaimed, “ May you two not reach Swarga”. The pupil in turn said, “ As you have cursed us for no fault of ours, may you not reach svarga”. This legend was invented perhaps to explain the fact tht the Agathiyam has perished, where as the Tolkappiyam has not.”
My Comments:
People who wanted to date Tolkappiyar must remember certain facts:
1. The Payiram says that it was launched at the court of Nilam Tharu Thiru Vil Pandyan in front of the teacher Athangottu Asan, who was well versed in the four Vedas.
2. Tolkappiar’s Tamil is not very far from Sangam Tamil. So there was not a big gap between the two.
3. Tolkappiayar mentioned Vedic Gods Indra and Varuna as Tamils’ Gods. He also mentioned Dharma Artha Kama Moksha (Aram Porul Inbam Veedu).
4. He also mentioned the palmyra flag of Balarama, Krishna’s brother.
5. He used the word Adhikaram for the three sections like Tirukkural and Sillpadikaram.
6. If anyone argues any of the above as interpolation, then we have to reconsider everything in Tolkappiyam. We are shaking the very foundations of Tamil. My guess is, if given into computer, his vocabulary will show that he belongs to 5th century or fourth century AD. No body dared to probe into this for the fear being dubbed as a Tamil Traitor.
7. If he was proved to be a Brahmin belonging to Kappiya Gotra and his original name was Trna Dumagni or Trna Bindu, he must be the person who invented the special Tamil letter (247th in Tamil Alphabet known as Aytha Ezuthu). Trna Bindu means Three Dots= Aytha Ezuthu of Tamil language.
நச்சி உரைகளை மெச்சுவோம் / அவர் சொன்ன கப்ஸாக்களைத் தள்ளுவோம் .
Hindu Dharma
The Universal Way of Life
Bharatiya Vidya Bhavan , Mumbai, Year 2000
Pages 305, 744 (about Nachinarkiniyar’s mistke)
ஆங்கிலத்தில் விவரம் வேண்டுவோர் ஹிந்து தர்மா – பாரதீய பவன் வெளியீட்டில் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் உரையில் பக்கம் 305, 744 ஆகியவற்றில் நச்சி செய்த தவறினை விளக்கியிருக்கிறார்.
****
On Nachi’s Mistakes
HISTORY OF THE TAMILS
P T SRINIVASA IYENGAR
YEAR 1930
RE EDITION 1982 BY ASIAN EDUCATIONAL SERVICES
PAGES 220, 224, 238, 399 ON NACCINAARKINIYAR
****
This is also a gook book.
நான்மறை என்றால் நான்கு வேதங்கள் , அந்தணர் என்றால் பிராமணர்கள் என்று சங்க இலக்கியம் கூறுவதை உ.வே சா உரைகளில் காணலாம் . இது பற்றி என்னுடைய பிளாக்குகளில் நிறைய கட்டுரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் உள்ளன
-subham–
tags-Q & A தொல்காப்பியம் – பாயிரம் – நச்சினார்க்கினியர் உரை – சந்தேகம், London Swaminatha Reply
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
English version was posted yesterday; here is the Tamil version:
கனகாபிஷேகம்
கனகாபிஷேகம் என்பது 90 அல்லது 100 வயது நிறைவடைந்த தம்பதிகளுக்கு, தங்கக்காசுகளால் அபிஷேகம் செய்து, நடத்தப்படும் ஒரு விழா.
பொருள்: ‘கனகம்’ என்றால் தங்கம். தங்கக் காசுகளால் தம்பதியர் மீது அபிஷேகம் செய்வது.
காலம்: பொதுவாக 90-வது , சில சமயங்களில் 100-வது வயதிலும் இந்த விழா நடத்தப்படுகிறது.
ஞானிகள் அல்லது கலைஞர்களுக்குத் தங்கக் காசுகளால் செய்யப்படும் ஒரு சிறப்பு கௌரவ நிகழ்வாகும்.
சிவார்க்க மணி தீபிகை என்ற நூலை அப்பைய தீட்சிதர் இயற்றினார்; அதனால் மகிழ்ந்த சின்னபொம்ம நாயக்கர், தீக்ஷிதருக்கு கனகாபிஷேகம் செய்தார். அந்தப் பணத்தைக் கொண்டு அவர் பார்வதி சமேத ஸ்ரீ காலகண்டேஸ்வரர் ஆலயத்தை அடையபலத்தில் நிறுவினார்.
60 வயதில் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயதில் சதாபிஷேகம், 90 வயதில் கனகாபிஷேகம் கொண்டாடப்படுகின்றன.
அப்போது அந்தப் பெரியவர்களிடம் அனைவரும் ஆசீர்வாதம் பெறுவார்கள் ; காஞ்சி பரமாசார்ய சுவாமிகளுக்கு நடந்த கனகாபிஷேகத்தை நமது காலத்தில் பலரும் நேரில் கண்டார்கள்; இப்போதும் வீடியோ மற்றும் யூ ட்யூபில் காணலாம்.
***
கேனோபநிஷத்
கேனோபநிஷத், சாமவேதத்தைச் சேர்ந்த உபநிஷத் ஆகும்., தலவாகர உபநிஷத் என்றும் இதற்குப் பெயர். ‘கேன’ (எவரால்) என்ற கேள்வியுடன் தொடங்கும் ஒரு முக்கியமான உபநிஷத் . ‘கேன’ என்றால் ‘எவனால்’ அல்லது ‘யாரால்’ என்று பொருள். மனம், வாக்கு மற்றும் புலன்கள் யாருடைய சக்தியால் இயங்குகின்றன என்ற கேள்வியுடன் இது துவங்குகிறது.
இது நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு பகுதிகள் பிரம்மத்தின் இயல்பை விளக்குகின்றன, அடுத்த இரண்டு பகுதிகள் தேவர்களின் வெற்றி மற்றும் ‘யக்ஷ தரிசனம்’ (தெய்வீக தரிசனம்) கதையின் மூலம் ஞானத்தை உணர்த்துகின்றன.
கண்களால் பார்க்க முடியாத, ஆனால் கண்களுக்குக் கண், காதுக்குக் காது, மனதிற்கு மனம் என எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கும் அந்த பரப்பிரம்மமே உண்மையான இறைவன் என இது போதிக்கிறது. ஆதிசங்கரர் மற்றும் மத்வர் ஆகியோர் இந்த உபநிஷத்திற்கு உரைகள் எழுதியுள்ளனர்.
***
கேது கிரஹம்
உண்மையில் கிரகம் அல்ல ; வானத்தில் காண முடியாது; சாயா / நிழல் கிரகம் ஆகும் .
Astronomically, Ketu and Rahu denote the points of intersection of the paths of the Sun and the Moon as they move on the celestial sphere.
சூரியனும் சந்திரனும் சுற்றும் பாதைகளில் (கோடுகள்) ஒன்றை ஒன்று வெட்டும் இடம் இது .
கேது, பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய சுவர்பானு என்ற அசுரனின் உடற் பகுதியாகும். மோகினி வடிவில் வந்த விஷ்ணு, அமுதம் அருந்திய அசுரனின் தலையை வெட்டியபோது, உடற்பகுதி கேதுவாகவும், தலைப்பகுதி ராகுவாகவும் மாறியது.
கேது சர்ப்பத்தின் தலையையும், மனித உடலையும் கொண்டதாக சித்தரிக்கப்படுகிறது. கேதுவின் அதிதேவதை கணேசர்
ஜோதிடத்தில் துறவு, மோட்சம், ஆன்மீகம் மற்றும் உலகியல் பற்றற்ற தன்மையுடன் கேது தொடர்புடையது. ஒருவரின் ஜாதகத்தில் கேது வலுவாக இருந்தால், அவர் சிறந்த அறிவாளியாகவும், தத்துவ ஞானியாகவும் அல்லது மருத்துவத் துறையில் வல்லுநராகவும் திகழ்வார் .
பொதுவான அர்த்தம்– கொடி, வால் நட்சத்திரம்.
***
கீசகன்
பீமனால் கொல்லப்பட்ட விராட தேச படைத்தலைவன்.
விராட தேச ராணி சுதேஷ்ணையின் சகோதரன். மல்யுத்தத்தில் வல்லவன், பாண்டவர்களின் ஓராண்டு மறைவு வாழ்க்கையின் போது (அஞ்ஞாதவாசம்), திரௌபதி மாறுவேடத்தில் சைரந்திரி என்ற பெயருடன் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தாள். அவளைத் தவறான முறையில் கீசகன் அணுகியவுடன் பீமனுடன் சேர்ந்து திட்டம் போட்டாள்; இரவு நேரத்தில் தனியிடத்துக்கு வருமாறு சொல்லவே அவன் ஆசையுடன் வந்தான் .அங்கே படுத்திருந்த பீமனை திரௌபதி என்று எண்ணி அணுகியபோது பீமன் அவன் மீது பாய்ந்து சண்டையிட்டுக் கொன்றான்
***
கோலாட்டம் / கும்மி
தென் இந்தியாவில் பெண்கள் ஆடும் நாட்டுப்புறக் கலை. பெண்கள் வட்டமாக நின்று ஒருவருடன் ஒருவர் கோல் எனும் குச்சிகளை அடித்து பாடிக்கொண்டே சுற்றுவார்கள் கும்மி என்பதில் குச்சிகளுக்குப் பதிலாக கைகளை ஒருவருடன் ஒருவர் தட்டுவார்கள் அப்போது பாட்டும் தாளமும் இருக்கும் ; பொதுவாக தெய்வீக இந்துசமய கிராமீயக் கலை இது ; கோவில் திரு விழாக்கள்லங்களிலும் சம்பிரதாய பஜனைகளிலும் இன்றும் இடம்பெறுகிறது ; பெரும்பாலும் மார்கழி மாதத்தில் நடைபெறுகிறது.
குஜராத்திலும் டாண்டியாயென்ற பெயரில் நவராத்ரி காலத்தில் கோலாட்டம் ஆடுகிறார்கள் ; ராஜஸ்தானிலும் கோலாட்டம் உண்டு; தண்ட , கோல் என்ற இரண்டு சொற்களுக்கும் கம்பு, குச்சி என்றே பொருள்.
***
கோவலன் / கண்ணகி
சிலப்பதிகாரம் என்னும் தமிழ் காப்பியம் கோவலன் / கண்ணகி கதையை எடுத்துரைக்கிறது; கோவலனும் கண்ணகியும் காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த இரு பெரும் வணிகர்களின் புதல்வனும் புதல்வியும் ஆவார்கள் ; இருவரும் தீ வலம் வந்து இந்து சம்பிரதாயப்படி கல்யாணம் செய்துகொண்ட பின்னர் கோவலன், மாதவி என்னும் ஆடலரசியின் வலையில் வீழ்கிறான் ; பின்னர் கண்ணகியிடம் வந்தபோது , அவளும் கணவனே கண் கண்ட தெய்வம் என்று ஏற்று புதிய வாழக்கை நடத்துவதற்காக மதுரைக்குச் செல்கிறார்கள் ; சாப்பாட்டுக்கு வழி தேடுவதற்காக கண்ணகி தன்னுடைய கால் சிலம்பினைக் கொடுக்கவே அவன் மதுரைக் கடைத்தெருவுக்குச் செல்கிறான்; அங்கே ராணியின் கால் சிலம்பினைத் திருடிய பொற்கொல்லன், கோவலனைத் திருடன் என்று பொய் சொல்லி பாண்டிய மன்னன் முன் நிறுத்தவே அவன் விசாரணை செய்யாமல் கோவலனுக்கு மரண தண்டனை கொடுத்துவிடுகிறான்; இதை அறிந்த கண்ணகி சீறி எழுந்து மன்னர் அரசவைக்குள் புகுந்து தன்னுடைய சிலம்பில் மாணிக்கம் இருக்கும் , ராணி சிலம்பில் முத்துக்கள் இருக்கும் என்று சொல்லி சிலம்பினை உடைக்கிறாள்; மன்னனும் ராணியும் தவறை உணர்ந்து மாரடைப்பில் செத்து விழுகிறார்கள்; கண்ணகி தன்னுடைய ஒரு முலையைத் திருகி எறிந்து மதுரையில் உள்ள தீயோரை மட்டும் அழிக்க அக்கினி தேவனுக்கு கட்டளை இடுகிறாள்; பின்னர் சேர நாட்டுக்குச் சென்று கோவலனுடன் விமானத்தில் தேவலோகம் செல்கிறாள் இந்தக் காட்சியைக் கண்ட கானவர்கள், இந்த அற்புத நிகழ்சசியை சேர மன்னனுக்குத் தெரிவிக்கவே இளங்கோ அடிகள் சிலப்பதிகார காவியத்தில் நமக்கு இதை பாடல் வடிவில் தந்தார் பிற்காலத்தில் கண்ணகியை ஒரு முலை இழந்த திருமா பத்தினி என்ற பெயரில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் மக்கள் வணங்கினார்கள் .
***
கிருஷ்ண / கேசவ
கிருஷ்ண என்றால் கருப்பன் ; பிறப்பில் கிருஷ்ணன் கருப்புத் தோலுடனும் அவனுடைய அண்ணன் பலராமன் வெள்ளைத் தோலுடனும் பிறந்தார்கள் .
கேசவ என்றால் கேசி என்னும் அசுரனைக் கொன்றவன் என்றும் அலக்கான கேசத்தை / தலை முடியை உடையவன் என்றும் பொருள் ; விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணனின் முழு லீலைகளையும் மகாபாரதத்திலும் பாகவத புராணத்திலும் காணலாம் .சம்ஸ்க்ருதத்தில் கிருஷ்ண என்பது ஆணின் பெயர்; கிருஷ்ணா என்ற நெடிலுடன் வந்தால் பெண்ணின் பெயர். திரவுபதியும் ஒரு கருப்பி; அவளுக்கு கிருஷ்ணா என்று பெயர் .
***
க்ரியா யோகா
கிரியா யோகா என்பது மூச்சு மற்றும் உயிர்சக்தியை (பிராணன்) கட்டுப்படுத்துவதன் மூலம் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தி, ஆன்மீக வளர்ச்சியை விரைவுபடுத்தும் ஒரு தியானம். இது பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி), மந்திரம் மற்றும் முத்திரைகளின் ஒருங்கிணைந்த கலவையாகும்.
பாபாஜியால் புத்துயிர் பெற்று, லாஹிரி மஹாசயரால் பரப்பப்பட்டது, பின்னர் பரமஹம்ஸ யோகானந்தர் இதை மேலை நாடுகளில் பரப்பினார் மன அமைதி , மன அழுத்தக் குறைவு, உடல் ஆரோக்கியம் ,ஆன்மீக ஞானம் போன்ற தெய்வீக குணங்களை வளர்த்தல் இதன் நோக்கம் ஆகும். யோகதா சத்சங்க சொஸைடி (YSS) கிரியா யோகாவைப்ப பரப்புவதில் முதலிடம் வகிக்கிறது.
***
க்ருபாச்சார்ய – க்ருபி
இவர்கள் இருவரும் இரட்டைப் பிறவிகள் ; கானகத்தில் விடப்பட்ட இவ்விருவரையும் சந்தனு மஹாராஜா வளர்த்தார் ; கிருபாச்சார்யார் கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சகல ராணுவக் கலைகளையும் கற்பித்தார் . கிருபை , துரோணாச்சார்யாவை மணந்து அஸ்வத்தாமாவைப் பெற்றாள் . மஹாபாரத யுத்தத்தில் 11 படைத்தலைவர்களில் ஒருவர் க்ருபாச்சார்ய . கடைசி வரை வாழ்ந்த இவரை சப்த/ ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவர் என்று இந்துக்கள் போற்றுவர் ; ஆயினும், யுத்தம் முடிந்தவுடன் பாண்டவர் கூ டாரத்துக்கு தீ வைத்த மூவரில் இவரும் ஒருவர் ; பின்னர் பாண்டவ வம்சத்தில் வந்த பரீட்சித்துக்கும் ஆசிரியர் ஆனார் .
****
கிரௌஞ்ச த்வீபம்
இந்துக்களின் புராண பூகோள சாஸ்திரப்படி ஏழு கண்டங்களில் ஒன்று ; இது ஒரு மலைக்கும் பெயர் ; அதை முருகன் உடைத்ததால் அவருக்கு கிரௌஞ்ச பேதனார் என்ற பெயரும் உண்டு ; கிரௌஞ்ச என்பது கொக்கு/ நாரை வகைப் பறவைக்கும் ஒரு பெயர்; இதே போல வடிவத்தில் வியூகம் அமைத்த செய்தி மஹாபாரதத்தில் வருகிறது; வியூகம் என்றால் படை அணிவகுப்பு; தற்காலத்தில் கிரௌஞ்ச த்வீபம் என்பதைச் சிலர் அண்டார்ட்டிகா என்றும் கிழக்கு ஆப்ரிக்கா என்றும் ஐரோப்பாவை ஒட்டிய பகுதி என்றும் கற்பனையுடன் வருணிக்கின்றனர். கிரௌஞ்ச பறவை ஒன்றினை வேடன் வீழ்த்தியத்தைக் கண்ட வால்மீகி தனது சோகத்தால், ஸ்லோக மழை பொழிந்து ராமாயணத்தை நமக்கு அளித்தார்.
The book under review titled ‘Damn Good Advice’ written by the Ad Guru George Lois has been written based on his experience and hence worth reading.
It is a well-known fact that Lois is a Supernova, the original Mr Big Idea. Since 1950’s he has had a titanic influence on world culture.
He has 120 valuable tips to lead a creative and successful life.
Lois was born in New York in 1931.He is an advertising legend and the creator of Big Idea advertising.
Lois first wants the leader to identify himself choosing the type to which he belongs to.
There are only four types of persons.
Very bright, Industrious (You are perfect)
Very bright, lazy (A damn shame)
Stupid, lazy (You are a wash)
Stupid, industrious (You are dangerous)
He cautions us, ‘If you are number 1 or a 2, you will get a lot out of this book. If your are a number 3 or 4, you need not read this book.’
Very true.
All the tools in the world are meaningless without an essential idea. Hence always go for a big idea. Whatever you want to communicate to the world it should be communicated in a nanosecond. He quotes Lincoln who did not have time to contemplate, correct and edit his letter wrote a very long letter to his friend and express his apology citing the above reasons!
Energy begets energy. Playing War games may help you. Sports and the intense intellectualism of the game of chess help drive and sustain the creative ethos. Lois quotes Thomas Huxley. “The chessboard is the world, the pieces are the phenomena of the universe, the rules of the game are what we call the laws of Nature.”
Age is not a barrier. Charles Darwin was 50 when he wrote On The Origin of Species.
At 52, Ray Kroc started MacDonald.
A.C.Bhakthivedanta Swami Prabhupada founded the Hare Krishna movement when he was 69, with $7 to his name.
A little courage is needed. A great deal of talent is lost to the world for want of a little courage. The Webster dictionary zeroes in on the meaning of the word “courage”, marked by bold resolution in withstanding the dangerous, alarming or difficult .. a firmness of spirit that faces danger or extreme difficulty without flinching or retreating.
And in his 120th advice he recalls the sufferings of Nelson Mandela. While incarcerated at Robben Island and Pollsmoor prisons for 27 years, recited Invictus, the iconic poem written in 1875 by the English poet William Ernest Henley to his fellow prisoners, empowering all with its message of self mastery. The last four lines of the poem is worth remembering ever:
It matters not how strait the gate,
How charged with punishments the scroll,
I am the mater of my fate.
I am the captain of my soul.
The book is not only for the persons in advertisement field but for all.
We may choose the tips applicable to us and customize some of the other tips.
To lead a creative life we need exclusive tips to suit the modern world.
This book will certainly help.
Note: Published in www.ezinearticles.com on 12017. Santhanam Nagarajan is an expert Platinum author in ezinearticles.com
புத்தக மதிப்புரை : எல்லையற்ற பரிபூரணத்தை நோக்கி ..
Book Review
A Journey towards the Infinite Absolute…
Santhanam Nagarajan
The book under review titled,’A Journey towards the Infinite Absolute’ is written in Tamil language by a retired professor of mathematics, Mr M.Subbiah Doss.
Many mathematics professors, scholars have tried successfully in describing and measuring God with their mathematical stick.
We have Swami Ramathirtha who was a great advadic scholar as well as a mathematics professor.
In his eight volumes ‘In the Woods of God Realization’ we have beautiful mathematical analogies explaining God.
The great genius Ramanujan declared that ”An equation for me has no meaning unless it represents a thought of God”.
The present work is also trying to measure the immeasurable things.
The book has three parts with eighteen chapters. Six chapters explain the various principles of spirituality with the help of simple mathematical principles.
Mandukya Upanishad explains the three dimensional world and four dimensional world
The ancient sages have discovered everything with their intuition. Even though the physical heart is on the left side of the body the spiritual heart is in the right side of the body.
When the author emphasize this point we remind ourselves about the saying of Bhagawan Ramana Maharishi, the sage of Arunachala, who also emphasized this point with his own experience.
The fourth dimension is always a curious subject. The great author J.W.Dunne (1875-1949) has explained it in his world famous book, ’An Experiment with Time’.
The author explains three dimensional world and four dimensional world with many simple sketches.
Man is determined by his karma which in turn is due to his own thoughts. The next birth is determined by his own thoughts of previous birth, this birth and the balance one brings from previous karmas.
The ancient sages by their inner vision have seen the hexagonal symbol in the northern pole of the planet Saturn and arranged to carve it in the Saturn temples roof. Now the spacecraft Cassini sent by Nasa proves this by sending photos of Saturn.
After illustrating the above points the author narrates an incident from Sri Sathya SaiBaba’s divine life. Once a girl met Baba in the river Chitravathi at Puttaparthi, in Andhra Pradesh, India. Baba had taken a statue from the river. That was the statue which was worshipped by the girl’s grandfather. Including this statue everything is being saved as a thought form.
Living within the limits of Space and Time and Cause and Effect is one thing. In order to free from these things one has to choose the spiritual path.
To understand God, mathematics is a helpful tool.
All the above points are all very interesting. In 147 pages the author gives us a complete picture about the hitherto unexplained principles.
A fitting foreword has been given by R.Panneerselvam, a Scholar in his own rights.
Many quotes from Swami Vivekananda, Swami Yogananda, Swami Chitbavananda and Ramakrishna mutt sages makes the book interesting reading.
The book is neatly printed and I congratulate the author for his painstaking research.
புத்தக விவரம்:
எல்லையற்ற பரிபூரணத்தை நோக்கி ..
எம்.சுப்பையாதாஸ்
147 பக்கங்கள்
விலை ரூ 150/
கிடைக்குமிடம்:
THAASU PUBLICATIONS
14, II CROSS STREET, VISWANATHAPURAM
MADURAI 625014 TAMILNADU INDIA
PHONE 0452 2641945
EMAIL : subdoss2014@gmail.com
Summary
The book under review titled,’A Journey towards the Infinite Absolute’ is written in Tamil language by a retired professor mathematics, Mr M.Subbiah Doss. To understand God, mathematics is a helpful tool. Many mathematics professors, scholars have tried successfully in describing and measuring God with their mathematical stick. The author explains three dimensional world and four dimensional world with many simple sketches. Many quotes from Swami Vivekananda,Swami Yogananda, Swami Chitbavananda and Ramakrishna mutt sages makes the book interesting reading.
Keyword
Mathematics is a tool to explain the absolute, three dimension and four dimensional wonders, explained
Nagarajan has written more than 3000 articles in Tamil in 18 magazines and published 52 books. He is revealing Eastern Secret Wisdom through T.V. Programmes, magazine articles, seminars, courses. He has covered various subjects in his wide range of articles which include Mantras, Yantras, Yoga, Meditation, Astrology, Astronomy, Space Science, Science and Spirituality, Hollywood cinema, Women’s progress, Aura, Significance of Colors, Reincarnation, Divine Geometry, Power of Prayer etc. As an ardent seeker of Truth, he has collected scientific experiments on mantras, mind, Auto suggestion etc. He has written many articles on para psychology also. His email id is snagarajans@gmail.com