மறைந்திருக்கும் ஆற்றல்- PART 3 (Post No.4126)

Written  by S NAGARAJAN

 

Date: 4 August 2017

 

Time uploaded in London:- 5-59 am

 

 

Post No.4126

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

யோகிகளின் ஆற்றல்

மறைந்திருக்கும் ஆற்றல் – முதல் பகுதி கட்டுரை எண் 4008 17-6-17இல் வெளியானது

மறைந்திருக்கும் ஆற்றல் – இரண்டாவது பகுதி கட்டுரை எண் 4079 14-7-17இல் வெளியானது

இந்த இரு கட்டுரைகளையும் படித்த பின்னர் இந்தத் தொடரின் இறுதிக் கட்டுரையை இப்போது படிக்கலாம்.

 

மறைந்திருக்கும் ஆற்றல் : அலெக்ஸாண்டர் கானானின் புத்தகம் – 3

 

ச.நாகராஜன்

 

 

அலெக்ஸாண்டர் கானானின் ‘தி இன்விஸிபிள் இன்ஃப்ளூயன்ஸ்  (The Invisible Influence): Alexander Cannon ) என்னும் புத்தகம் பல சுவையான சம்பவங்களைக் கொண்டிருக்கிறது. 168 பக்கங்கள் அடங்கியது இது.

 

 

  கடைசியாக இன்னும் ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்.

சீனாவில் தான் இது வரை சென்றிராத பகுதிகளில் கானான் பயணம் மேற்கொண்ட போது பிச்சைக்காரன் போலத் தோற்றமளித்த பலரிடமிருந்து அவர் மேல் உலகத்திற்குத் தேவையான ஏராளமான விஷயங்களைத் தெரிந்து கொண்டாராம். (பக்கம் 34)

 

 

அவரது லக்கேஜ் மொத்தம் 35 பெரிய பெட்டிகள் அடங்கியது.

ஒரு முறை அவர் ஒரு நதியின் வழியே பயணப்பட்டார். ஏழு நாட்கள் அந்தப் பயணம் தொடர்ந்தது. அவரது 34 பெட்டிகள் மட்டும் அவருடன் வந்தன. நம்பர் 9 என்ற பெட்டியை மட்டும் காணோம்.பெட்டியின் மேல் நம்பர்கள் வெள்ளை வர்ணத்தில் பூசப்பட்டிருக்கும். அந்தப் பெட்டி இப்போது எங்கிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க அந்தக் கலையில் வல்லவரான ஒரு மகானை அணுகினார் கானான்.

 

பழைய கோட்டை ஒன்றில் காலியாக இருந்த ஒரு அறையில் அந்தப் பெட்டி இருப்பது தெரிய வந்தது. ஒரு வாரத்திற்கு முன்னர் தான் அந்தக் கோட்டையை விட்டு வெளியே வந்தார் கானான்.

 

 

அடுத்து அதை எப்படிப் பெறுவது?அந்தக் காலத்தில் தந்தி கிடையாது. தபால் என்றால் அங்கு போய்ச் சேர பத்து நாட்கள், பதில் வர இன்னும் ஒரு பத்து நாட்கள் ஆகும். தனி ஒரு நபரை அனுப்பலாம் என்றால் 16 நாட்களுக்குக் குறைந்து ஒருவர் அங்கு போய்த் திரும்ப முடியாது. ஒரே ஒரு விஷயத்தால் மட்டும் தான் பெட்டியைப் பெற முடியும். டெலிபதியை உபயோகிப்பது தான் அது!

 

 

ஆனால் சீன மொழி கானானுக்குத் தெரியாது என்பதால் அந்த வேலையைத் தனக்குத் தெரிந்த மகானிடம் அவர் ஒப்படைத்தார்.

 

 

பத்து நிமிடத்தில் அந்த மகான் ஆழ்ந்த சமாதி நிலைக்குச் சென்றார்.அவரது உடல் குளிர்ந்து போனது. அவர் மூச்சு விடுவதும் நின்றது. அவரது இதயத் துடிப்பு ஸ்டெதாஸ்கோப் வைத்துக் கேட்டாலும் கூடக் கேட்க முடியாத படி ஆனது.அவரது நெற்றியிலிருந்து வியர்வை வழிந்தோடியது. இதே நிலையில் சுமார் மூன்று மணி நேரம் அவர் இருந்தார்.

பின்னர் சுய நிலைக்குத் திரும்பினார். அவர் உடலை வளைத்தார். ஏதோ முணுமுணுத்தார்.

 

அவர் சக்தியெல்லாம் இழந்து களைத்துப் போயிருந்தார். அவருக்கு பிராந்தியும் பாலும் கொடுத்து அவரது களைப்பைப் போக்க கானான் உதவினார்.

 

 

முழு சுய உணர்வுக்குத் திரும்பிய மகான்  எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது என்று கூறினார். இன்னும் பத்து நிமிடங்களில் வராமல் தங்கி விட்ட ஒன்பதாம் நம்பர் பெட்டி கப்பலில் ஏற்றப்பட்டு விடும் என்று உறுதி படக் கூறினார். இன்னும் எட்டு நாட்களுக்குள் அது வந்து விடும் என்றார் அவர். அதே போல எட்டே நாட்களில் அந்தப் பெட்டி வந்து சேர்ந்தது.

 

 

அந்தப் பெட்டியைக் கொண்டு வந்தவரிடம் கானான், அந்தப் பெட்டி பழைய கோட்டையில் காலியான ஒரு அறையில் இருந்ததை அவர் எப்படி அறிந்தார் என்றும் தனக்கு அந்தப் பெட்டி வேண்டும் என்பதை அவர் எப்படி அறிந்தார் என்றும் கேட்டார்.

 

அந்தக் காலத்தில் அந்தி நேரம் ஆன பின்னர் யாராவது ஒருவர் வீட்டிற்கு வந்தால் யார் அது என்று சத்தம் போட்டுக் கேட்பர். வந்தவர் தனது பெயரையும் அடையாளத்தையும் சொன்ன பின்னரே கதவு திறக்கப்படும். பெரும்பாலும் கதவைத் திறக்காமலேயே செய்திகளைக் கேட்டுக் கொண்டு வந்தவரைத் திருப்பி அனுப்பி விடுவது தான் சாதாரணமாக நிலவி வந்த பழக்கம்.

 

 

இந்த சமயம் போலீஸ் கமிஷனரின் கதவு தட்டப்பட்டது. எப்போது கானானின் நண்பராக அமைந்த மகான் சமாதி நிலைக்குப் போனாரோ அதே சமயம் இது நிகழ்ந்தது. கமிஷனர் கானானின் நண்பரான மகானின்  குரலை அவர் வெளியிலிருந்து எப்படிப் பேசுவாரோ அப்படித் தெளிவாகக் கேட்டார்.

 

 

கமிஷனருக்கு எந்த வித சந்தேகமும் எழவில்லை. கானானின் நண்பராக இருந்த மகான் குரல் அவருக்கு நன்கு பரிச்சயமான குரல். அதன்படியே அவர் நடந்து கொண்டார். ஒன்பதாம் நம்பர் பெட்டி உடனே அனுப்பப்பட்டது.

 

மறு நாள் கமிஷனர் அந்த மகானைத் தேடிய போது அவர் அந்த ஊரில் இல்லை. கமிஷனர் கானானுக்கு கடிதம் எழுதி மகான் அங்கு வரவே இல்லை என்பதை அறிந்து அதிசயப்பட்டார்.

 

இப்படிப் பட்ட பல சம்பங்கள் கீழை நாடுகளில சகஜம் என்கிறார் கானான்.

 

சிப்பாய் கலகம் நடந்த நாட்களில் பிரிட்டிஷ் படையினரின் நடமாட்டம் முழுவதும் டெலிபதி மூலமாகவே இடத்திற்கு இடம் அனுப்பப்பட்டதாம். ஆங்கிலேயர் எப்படி தமது படையினரின் நடமாட்டங்களை அனைவரும் அறிகின்றனர் என்று திகைத்துப் போனார்களாம்.

 

வாம சார மற்றும் தக்ஷிணாசார மார்க்கம் மூலமாக மறைந்திருக்கும் ஆற்றல் ஹிந்து வீரர்களை வழி நடத்தியது.

கானானின் புத்தகம் இது போன்ற பல சுவையான தகவல்களைத் தருகிறது.

ஹிந்து யோகிகளின் ஆற்றலைத் தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளோர்  படிக்க வேண்டிய நூல் இது.

நூலை முழுதுமாகப் படிக்க விரும்பும் அன்பர்கள் இணைய தளத்திலிருந்து இதை இலவசமாகத் தரவிரக்கம் (டவுன்லோட்) செய்து கொள்ளலாம்.

 

டவுன்லோட் செய்து கொள்ள வேண்டிய தொடுப்பு இது :

https://archive.org/details/invisibleinfluen015654mbp

 

 

 

***                                                                                                 இந்தக் குறுந் தொடர் இத்துடன் நிறைவுறுகிறது

Story of Athena and Ganga Devi! (Post No.4125)

Written by London Swaminathan

Date: 3 August 2017

Time uploaded in London- 21-09

Post No. 4125

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

pictures by london swaminathan.

The story of Athena, the Greek Goddess, is a symbolic one. We have such symbolism in the Vedic literature. Athena personifies wisdom, like Goddess Sarasvati. She was a virgin and is the protective genius of the City nation .

Our tourist guide in Athens compared Ganga’s (Ganges) descending from heaven and Shiva holding her in his head and Ganga emerging from his head

The myth of the birth of Athena illustrates the compromises necessary in the progression of thought. Greek god Zeus and the Titan Metis (cunning intelligence) were her parents. A prophesy had claimed that Metis would bear a goddess equal to Zeus in wisdom, so the god devoured his wife in an attempt to prevent the birth. But one day Zeus had a raging head ache and asked the craftsman god Hephaistos to split his head open with an axe. Hephaistos did so and Athene emerged, fully formed and armed, from her father’s head. True to the prophesy, Athene rivalled Zeus in wisdom and was symbolised by owl. Owl is considered wisest of all the birds.

 

 

This is similar to Lakshmi emerging from ocean after the churning of ocean. Lakshmi also has owl as her vehicle. Owl is derived from the Sanskrit word Uluka. Owl’s name is a suffix for poets and saints in Tamil and Sanskrit (Aanthai in Tamil, Kausika in Sanskrit).

This is to show that wisdom dawns upon in someone. We have such symbolic stories in Vedic literature.

 

When there was a referendum to select the representative Athens , Athene gave them the gift of Olive tree. Olive branch stands for pece. So the Athenians preferred her. This shows that peace is more important than other things for the progress and prosperity of a country. Rig Veda ends with hymn praying for Shanti/ Peace.

 

Or guide explained that Pericles was the father of democracy. But it is wrong. Rig Veda refers to Samiti and Sabha elected by people. English word committee was pronounced as samite at one time. Committee is derived from Samiti. Moreover, Valmiki Ramayana refers to Dasaratha’s consultation with the elders of the city before appointing Rama as his heir.

Greece had three Pre -historic civilizations: Mycenaean, Cycladic and Minoan.

Greek has three different types of columns/ Pillars.

Greeks like blue and white than other colours.

— Subham —

 

 

எதென்ஸ் நகரமும் இந்துசமயத் தொடர்பும் (Post No. 4124)

Written by London Swaminathan
Date: 3 August 2017
Time uploaded in London- 17-44
Post No. 4124
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

pictures by london swaminathan.

 

 

கிரேக்க நாட்டின்   தலைநகரான ஏதென்ஸ் நகரத்துக்கு ஜூலை மாதக் கடைசியில் (2017) போய் வந்தேன்— 9000 ஆண்டுப் பழமையுடையது என்று பெருமை பேசும் நகரில் நின்றது மகிழ்ச்சி தந்தது. இந்த நகரம் பற்றிய விஷயங்கள் இந்து மதத்துடன் நெருங்கிய தொடர்புடையது. எங்களுக்கு வரலாற்றுப் பெருமைகளை விளக்குவதற்கு ஒரு பெண்மணி முன்வந்தார். அவருக்கு 100 யூரோ கொடுத்தோம். அதற்கு முன் ஒவ்வொருவரும் ( 11 பேர்) 30 யூரோ கொடுத்து டிக்கெட்டும் வாங்கினோம்.

எங்களுக்கு கிரேக்க நாட்டின் சரித்திரத்தை விளக்கிய பெண்மணி நாங்கள் இந்தியர்களா என்று கேட்டுவிட்டு சிவபெருமான் முடியில் தாங்கிய கங்காதேவியையும் அதீனா தேவியையும் ஒப்பிட்டார். அதற்கு முன் சில விஷயங்களைச் சொல்லுகிறேன்.

அதீனா தேவியின் பெயரில் உருவான நகரம் ஏதென்ஸ். இது போல நகரங்களைப் பெண்களாகக் கருதும் வழக்கமும், நகரங்களுக்கு பெண் தெய்வங்களின் பெயரை இடும் வழக்கமும் இந்து வழக்கம். மும்பயி, கல்கத்தா, மதுரை, கன்யாகுமரி முதலிய நூற்றுக் கணக்கான நகரங்கள் பெண் தெய்வங்களின் பெயர்களை உடையன. மதுரையின்   பெண் தெய்வம் பற்றி சிலப்பதிகாரம் பேசுகிறது. மணிமேகலை, தெய்வம் அயோத்யா தேவி முதலியன பற்றி மணிமேகலை, ரகுவம்சம் ஆகியன பேசுகிறது. நகரங்களைப் பெண்களாகக் கருதுவதை தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் காணலாம்.

 

அதீனா தேவி ஒரு கன்னிப் பெண்; இதனால் அவளை அதீனா பார்தினோஸ் (Athena Parthenos) என்பர்; நாம் கன்யாகுமரி என்று சொல்லுவதற்கு இணையானது அதீனா பார்த்தினோஸ். கன்னிகள் மூலம் பிறந்த பலர் இந்து மதத்தில் உண்டு. பஞ்ச பாண்டவர்கள், சீதா தேவி, ஆண்டாள், திரவுபதி போன்றோர் சில எடுத்துக்காட்டுகள்.

 

அதீனா தேவி கோவில், ஏதென்ஸில் ஆக்ரோபொலிஸ்(Acropolis) என்னுமிடத்தில் உயர்ந்த குன்றில் உள்ளது. அந்தச் சிலை இருந்த கோவிலை பார்த்தினான் (Parthenon) என்பர். அது கிரேக்க நாட்டின் முக்கியச் சின்னம். அதிலிருந்த அதீனா தேவியின் சிலையை கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் சேர்ந்து அ ழித்தனர். சமீப காலத்தில் முஸ்லீம் பயங்கரவாதிகள் எப்படி பாமியன் புத்தர் சிலைகளையும், சிரியாவிலுள்ள பல்மைரா கட்டிடங்களையும் அழித்தனரோ அப்படி வெள்ளையர்களும் முஸ்லீம்களும் திட்டமிட்டு அழித்தனர். பார்த்தினான் கோவிலை சர்ச்சாகவும் மசூதியாவும் மாற்றினர். இந்தக் கதைகள் எல்லாம் விக்கிபீடியாவில் விரிவாக உள்ளது நானும் கட்டுரையின் இரண்டாவது பகுதியில் தருவேன்.

பார்த்தினான் கோவிலைக் கட்டிய சிற்பி பிடியாஸ் (Phidias). அதீனாவின் சிலை மிக உயரமான சிலை. தங்கத்தினாலும் தந்தத்தினாலும் ஆனது. அதை குண்டுவைத்து தகர்த்துவிட்டனர். பார்த்தினான் கோவிலின் சலவைக் கற்களை வெள்ளையர்கள் கொள்ளை அடித்தனர். பெரிய கொள்ளைக்காரன் வெள்ளைகாரன்தான்- அதாவது பிரிட்டிஷ்காரனான எல்ஜின்.  எல்ஜின் மார்பிள் என்ற பெயரில் பல துண்டுகள் பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ளன. மற்ற துண்டுகள் நியூயார்க் ரோம், ஏதென்ஸ் முதலிய மியூசியங்களில் இருக்கின்றன.

 

எங்களுக்கு விளக்க வந்த கைடு, எல்ஜின் மார்பிள் என்ற பெயரில் அவை இருப்பதை ஆட்சேபித்தார். அதை பிடியாஸ் மார்பிள் அல்லது பார்த்தினான் மார்பிள் என்றல்லவா சொல்லவேண்டும். கொள்ளை அடித்த எல்ஜின் பெயரில் எப்படி அழைக்கலாம்?என்றார்.

 

பார்த்தினான் கோவில், கி.மு 440 வாக்கில் கட்டப்பட்டது. அதற்கு முன்னரும் ஒரு கோவில் இருந்ததாக ஐதீகம்.

 

— subham—

உடனே தூக்கம் வரும் அதிசயம்! (Post No.4123)

Written  by S NAGARAJAN

 

Date: 3 August 2017

 

Time uploaded in London:- 16-28

 

 

Post No.4123

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

நாட்டு நடப்பு – உண்மை நிகழ்ச்சி!

 

உடனே தூக்கம் வரும் அதிசயம்! அறியத் துடித்த ஒரு அமெரிக்கரின் சுய சரித்திரம்!

ச.நாகராஜன்

 

 

அது அந்தக் காலம்!

ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் ஏதோ ஒரு வருடம், ஏதோ ஒரு நாள்.

 

அப்போதெல்லாம் மதுரையில் உள்ள தெய்வ நெறிக் கழகத்தில் காலையிலும் மாலையிலும் விவேகானந்தர் பற்றிய சொற்பொழிவுகளை ஆற்றுவது எனது வழக்கம்.

தெய்வநெறிக் கழகத்தின் சார்பில் சமயஜோதி என்று ஒரு பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. அத்ற்கான அலுவலகம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் ஒரு சிறிய சந்தில் இருந்தது.

ஒரு நாள் அங்கு சென்ற நான் அங்கு ஒரு அமெரிக்கர் உட்கார்ந்திருத்தைப் பார்த்தேன். வயதில் இளைஞர். ஆனால் அரையில் காவித் துணி ஆடை!

 

ஆழ்ந்த யோசனை.

 

பேசுவதாகக் காணோம்.

 

அவரிடம் பேச்சுக் கொடுக்க எனக்கு ஆசை.

எங்கிருந்து வருகிறீர்கள்?

 

எப்படி தெய்வநெறிக் கழகத்திற்கு வந்தீர்கள்?

இந்தியா பிடித்திருக்கிறதா?

இந்தியாவைப் பற்றிய உங்கள் எண்ணம் என்ன?

ஊஹூம்.. எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை.

அலுத்துப் போன நான், “அமைதியாக இருக்கிறீர்களே! உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் அதை நான் மற்றவர்களுக்கும் சொல்வேனே” என்று சொல்லி விட்டு வீட்டிற்குக் கிளம்ப யத்தனித்தேன்.

 

அவர் என்னைப் பார்த்து உட்காரச் சொன்னார். ஆங்கிலத்தில்  பேசலானார்.

“நான் யாரிடமும் பேசுவதில்லை. உண்மை தான்! எனது கதையைக் கேட்க விருப்பமா?”

“ஆமாமாம்” என்று பலமாகத் தலையாட்டினேன்.

 

*

அவர் அமெரிக்காவின் மிகச் சிறந்த பணக்காரர்களில் ஒருவரின் மகனாம்.

தொலைக்காட்சி வராத அந்தக் காலத்தில் உலகமே சினிமா மயம். சினிமாவிற்கு அடிமை மயம்.

சிறு பையனாக இருந்த அவருக்கு ஏழ்மை, பசி போன்ற எதுவும் தெரியாதாம்.

 

தெரிந்தது இரண்டே இரண்டு.

 

ஒன்று சினிமா பார்ப்பது.

இன்னொன்று ஊர் சுத்துவது. ஜாலியாக டூர் போகப் பிடிக்கும். புதிய இடங்கள்,புதிய மக்களைப் பார்க்கலாம்…. நன்கு செலவழிக்க முடியும். காசுக்குப் பஞ்சமில்லை.

ஆனால் இந்த சினிமா பார்ப்பது ஒரு போதைப் பழக்கமாக மாறி இரவு பகல் அதில் கழிய ஆரம்பித்து பல பக்க விளைவுகள் ஏற்படலாயின.

 

 

உறக்கம் போயிற்று. சிந்திக்கும் ஆற்றல் போயிற்று. படிப்பதிலும் ஆர்வம் போயிற்று.

யாராலும் திருத்த முடியாத கேஸ்!

 

மருத்துவம் போன்ற எதனாலும் திருத்த முடியாத கேஸ்!

தந்தை நொந்து போனார்; வருத்தப்பட்டார். என்ன செய்வது?

அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

 

 

“சினிமா பார்ப்பதை நிறுத்த உனக்கு ஒரு வழி இருக்கிறது. ஊர் ஊராகச் சுற்றிப் பாரேன். உன்னை விட மாறுபட்ட மக்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று அவர்கள் வாழ்க்கை முறையைப் பாரேன்” என்று யோசனை கூறினார் தந்தை.

“டூர் போ” என்பதைப் பிடித்துக் கொண்டான் பையன்.

உலக வரைபடத்தில் (அவனது நல்ல காலமாக) தேர்ந்தடுத்த இடம் – இந்தியா!

 

இந்தியாவில் அவனுக்குப் பணம் தரும் ஏற்பாடுகளைத் தந்தை செய்து முடித்தார்.கேட்கும் போது பணம் வரும். எங்கும் போகலாம்.

காசியில் கங்கை நதிக் கரையோரம் போன பையனுக்கு எதிலும் ஆச்சரியம்; எங்கும் ஆச்சரியம்.

ஊர் உராகச் சுற்றியதால் சினிமா நினைவே வரவில்லை.

ஒரு நாள் ஒரு கிராமத்தில் வயக்காட்டின் வழியே அவன் சென்று கொண்டிருந்த போது ஆனந்தமான ஜிலுஜிலு காற்று. அருகே ஒரு தென்னந்தோப்பு.

 

 

அதில் ஒரு ஏழைக் குடியானவன் மண்கலத்தில் மனைவி கொண்டு வந்த சாப்பாட்டைச் சாப்பிட்டு விட்டு மனைவிக்கு விடை கொடுத்து விட்டு ஒரு துண்டை உதறி தென்னை மரத்தின் அடியில் போட்டுப் படுத்தான்.

ஒரே ஒரு கணம்; ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்தான் அந்தக் குடியானவன்.

 

 

இதைப் பார்த்த நம் அமெரிக்க இளைஞனுக்கு ஆச்சரியம் தாளவில்லை.

எப்படி ஒரு கணத்தில் தூக்கம் வரும்.

 

 

தான் நல்லபடியாகத் தூங்கிப் பல வருடங்கள் ஆயிற்றே. கஷ்டப்பட்டு உடல் அயர்ந்தாலும் உறக்கம் வராதே!

அங்கேயே தென்னை மரத்தின் அருகில் உட்கார்ந்த இளைஞன் அந்தக் குடியானவன் எழுந்தவுடன் ஆவலுடன் அவனை விசாரித்த கேள்வி: “எப்படி இவ்வளவு சீக்கிரம் உ’றங்க முடிகிறது?”

 

 

மொழிபெயர்ப்பாளர் மூலம் அவனுக்கு கிடைத்த பதில்” இதில் என்ன ஆச்சரியம். எங்கள் வாழ்க்கை முறை எளிது. எங்கள் கிராமத்தில் ஏன் எங்கள் தேசத்தில் நூற்றுக்கு நூறு பேரும் படுத்தவுடன் உறங்கி விடுவோம்.இது ஆச்சரியப்படும் விஷயம் இல்லை. அன்றாடம் நடக்கும் சாதாரண விஷயம் இது!”

அமெரிக்க இளைஞனுக்கு அந்தச் சாதாரண வார்த்தைகள் வாழ்க்கையின் அர்த்தத்தை விளக்கின.

 

 

எளிய வாழ்க்கை முறை!  அது என்ன எளிய வாழ்க்கை முறை? இந்திய வாழ்க்கை முறை!

 

அதை ஆராயப் புகுந்தான் அந்த இளைஞன். நேர்மையும் எளிமையும் இணைந்த வாழ்க்கை முறை வாழ்வதற்கு இனிதானது என்பதை அறிந்தான்.

 

விளைவு: இன்று நான் கண்ட இ:ளைஞனாக ஆகி இருக்கிறான்!

ஹிந்து வாழ்க்கை முறை மிகவும் எளிமையானது. கல்மிஷமற்றது. ஆரவாரமற்றது. மிகவும் நேர்மையானது.

வேலையைக் கவனி; பலனைப் பற்றி அதிகமாக யோசிக்காதே

எல்லாம் வரும்; தேவையானது தேவைப்படும் நேரத்தில் தானாக வரும்.

 

 

வழக்கமாக அடிக்கடிப் பணம் கேட்கும் தன் பையன் பணமே கேட்காததைப் பற்றி பதறிப் போனார் தந்தை.

‘உடனே வரவா’ என்று தந்தி அடித்தார்.

“வேண்டாம்” என்ற மகன், “இங்கு புதிய பல விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். பணமே வேண்டாம். மாறியவனாக வருகிறேன்” என்று பதில் தந்தி அடித்தான்.

*

 

“அந்த இளைஞன் தான் நான்”

தன் கதையை முடித்தார் அமெரிக்கர்.

நேரம் ஓடியிருந்தது. நான் வியந்து போனேன்.

எந்த ஒரு கிராமத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கு வாழும் சாமானிய மக்கள் அதிக ஆரவாரமின்றி அன்புடனும் பண்புடனும் வாழ்ந்து வருவதை நேரில் கண்டிருக்கிறேன் நான் – சத்திய சாயி சேவா தளப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது!

 

 

ஹிந்து வாழ்க்கை முறையின் அடிப்படை எளிமை; எளிமை; எளிமை! நேர்மை, நேர்மை, நேர்மை!

சிறு நகரங்களிலும் கூடப் பெண்கள் மாலையில் கோவிலுக்குச் செல்வது விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம், பஜனைப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள் ஆகியவற்றைச் சொல்வது என்றிருந்தனர்.

*

ஆனால் இன்றோ.. மாறி விட்ட பரபரப்பான வாழ்க்கை முறையில் முதலில் அடிப்பட்டிருப்பது – எளிமை தான்!

கோவில்களில் கூட ஒரு வணிக முறையிலான பரபரப்பு!

எல்லோருக்கும் எல்லாவற்றின் மீதும் எப்போதும் ஆசை!

இலவசங்களைக் காட்டி ஏமாற்றும் அரசியல்வாதிகள்!

 

 

கிராமம் தோறும் ஒவ்வொருவரிடமும் இருக்கும் மொபைலும் மோட்டார் சைக்கிளும் காலத்தையும் தூரத்தையும் சுருக்கி விட்டன. அது போலவே அவர்கள் மனத்தையும் சுருக்கி விட்டன. விசாலமான மனம் எங்கே போனது?

 

 

கையில் சிறிது பணம் சம்பாதிக்கும் தகுதி வந்தவுடன் பெண்களின் “தோரணையே’ மாறி உறவுகள் அடிபடும் நிலை.

எல்லா ஜாதிகளிலும் தான்! எல்லா நகரங்களிலும் தான்!

பண்பாட்டின் அடிப்படை உருவான பெண்களே இப்படி என்றால் ஆண்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?

*

 

 

அமெரிக்க இளைஞனைக் கண்டு ஐம்பது ஆண்டுகள் ஓடி விட்டன. பெங்களூரில் சி.வி.ராமன் நகரில் பள்ளியிலிருந்து வரும் பேரக் குழந்தையை அழைத்து வரும் கால கட்டம். ஒரு பதினைந்து நிமிடங்கள் பஸ்ஸுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும்.

 

நான் நிற்கும் இடத்திற்கு எதிரில் ஒரு அழகிய இளம் பெண். 25 வயது இருக்கும். ஜீன்ஸ் பேண்ட். ஸ்லீவ்லெஸ் ஷர்ட். வாயில் ஒரு சிகரட். சுழல் சுழலாக டிசைன் டிசைனாக புகையை ஊதி வானத்தில் விடுவதில் அந்தப் பெண்ணுக்கு ஒரு ஆனந்தம். நான் அதிர்ந்து போனேன்.

 

எனது பார்வையை அலட்சியமாக எதிர் நோக்கிய பெண் இன்னொரு சிகரட்டை பற்ற வைத்தாள்.

 

நாளடைவில் எனக்கு இந்தக் காட்சி பழக்கமானது. அந்தப் பெண்ணுக்காக பிராத்தனை தான் என்னால் செய்ய முடிந்தது. அருகில் அவளது ஆண் நண்பர்கள் நாலைந்து பேர் ஆளுக்கு ஒரு சிகரட் கொடுத்து உதவுவார்கள். நல்ல உதவி!

 

 

இது சாதாரணம் என்று சொன்ன எனது அண்டை வீட்டார் பெங்களூரில் ஒரு குறிப்பிட்ட தெருவில் எப்போது போனாலும் ஏராளமான பெண்கள் புகை பிடிப்பதைக் காணலாம் என்றனர்.

காலம் மாறுகிறது.

 

எது முன்னேற்றம்! உலகளவில் சுருங்கியதோடு மனதளவிலும் சுருங்கி உடல் அளவிலும் சுருங்கி ஈசல் போல மின்மினி போலச் செத்தொழிவதா!

 

அல்லது அமெரிக்க இளைஞன் பார்த்த நேர்மையாகவும் எளிமையாகவும் வாழும் குடியானவன் போல வாழ்ந்து மகிழ்வதா?

 

*

‘வாழ்க்கை முறை காலத்திற்குக் காலம் மாறும், சார்!’ என்பர் சிலர்.

சரி தான்!

 

வேக யுகம். பரபரப்பான வாழ்வு. எல்லாமே அர்ஜெண்ட், வெரி அர்ஜெண்ட், வெரி வெரி அர்ஜேண்ட் தான்.

ஆர்டினரியே இன்று கிடையாது.

 

இன்று சினிமாவுடன் தொலைக்காட்சி சீரியல்கள் வேறு.

ஒரே நாளில் பரபரப்பான சீன்களாக, கடத்தல், கற்பழிப்பு, கொலை,கொள்ளை, விஷம் வைத்தல் இத்யாதி காட்சிகளை தொலைக்காட்சி சேனல்கள் ஒலிபரப்புகின்றன. அவற்றைக் கண்டு கண்டு கண்டு…..

 

வாழ்க்கை முறை மாறி வரும் சூழ்நிலையில் அந்த அமெரிக்க இளைஞர் போல நாமும் “உறக்கம் எப்படி உடனே வருகிறது” என்ற அதிசயத்தைக் கேட்டு அதைக் கற்க வேண்டிய நாள் விரைவில் நெருங்கி வருமோ?!

—- Subham —-

Parthenon of Athens and its Hindu Links! (Post No.4122)

Written by London Swaminathan
Date: 2 August 2017
Time uploaded in London- 21-39
Post No. 4122
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

pictures by london swaminathan.

 

Parthenon was the temple of Goddess Athena in the capital city Athens in Greece.

I went to Athens on 27th of July and spent almost a full  day visiting Acropolis, Parthenon and the Acropolis museum. An approved tourist guide approached us ( a group of 11 people0and explained everything in two hours for the price of 100 Euros. This is in addition to the ticket price of 30 Euros per head. As a history student, first I objected to hiring her, the tourist guide. But after listening to her, I said I was happy. she gave the whole history of Greece in two hours. Above all, looking at us she asked whether we were from India. We said we were of Indian origin, but at the moment coming from London, Sydney and New Zealand. The reason she asked us about our origin was that she compared the Goddess River Ganges (ganga devi) with the Goddess Athena. The comparison does not stop there. I will explain it one by one in my article today.

 

Athens was named after the goddess Athena Parthinos. Naming a city after a goddess is typical Hindu custom. We have the famous Mumbai, Kolkata, Madurai, Kanyakumari and hundreds of towns in India named after Hindu goddesses. Athena Parthenos means Virgin Goddess, i.e. Kanya Kumari.

Raghuvamsa of Kalidasa, Ramayana of Valmiki and Silappadikaram and Manimegalai , the Tamil epics – all these talk about the goddesses of the towns such Lanka Devi, Mathura Devi, Manimeghala, goddess of Ayodhya etc.

The tourist guide beautifully explained how the Christians and Muslims systematically destroyed the building Parthenon and the wonderful Athena statue inside the Parthenon temple. They converted the building as a church and then a mosque and then arms depot. at one time they torpedoed the statue like Muslim terrorists who bombed the tallest Buddha staue in the Bhamiyan cave of Afghanistan. The Greek tourist guide angrily accused the British for plundering the marbles in the Parthenon temple and placed them in the British Museum in London as Elgin marbles. She blamed that Elgin stole them and why did they call Elgin marbles. She rightly told that it should be called Parthennon marbles or Phydias marbles and should be returned to Greece. Immediately I remembered the British looting of Kohinoor and the Victoria looting Sapphire of Madurai Goddess Meenakshi.

Now let us look at the structure of Parthenon:

 

Parthenon was the temple of Athena Parthinos (the Virgin). It was built on top of Acropolis in Athens. Phydia,s the sculpto,r supervised it and the architects Callicractes and Ictinus built it. It had a beautiful statue of Goddess Athena, made up of gold and ivory. It was a tall statue. The rectangular building is the best specimen of Doric style. It has 8 pillars or columns on one side and 13 columns lengthwise. It is called golden ratio.

The tourist guide added some information which I did not find in the encyclopaedias. Proportionately the Parthenon structure is similarto A 4 size paper. So it is a perfect size. Since it is not on a flat surface the lines drawn from the columns will meet at five kilometres above the Parthenon and it will form a pyramid.

It was built between 447 and 438 BCE. But people believe that there was another building before that.

 

Parthinogensis means birth without a male’s participation. That is virgin birth. We have Draupadi, Sita, Andal, Five Pandava brothers and several others in this category.

I will compare the birth of Athena and the Ganga in the second part. The story of birth of Athena is a symbolic story like the symbolism we find in the Rig Veda and the Brahmanas. It symbolises the dawn of wisdom. I will also explain how Christians and Muslims destroyed the temple. It is also a repeat of what they did in India and Sri Lanka. The Muslim terrorists who destroyed Bhamiyan Buddha and Syrian Palmyra just imitated the Christians and Muslims of Europe. They were the roll models for these terrorists. The full history of destruction is in Wikipedia and other encyclopaedias. I will just tell you what the tourist guide told us.

 

–to be continued………………….

 

 

 

தமிழர்களின் குமரிக் கண்டம் அழிந்தது எப்படி? (Post No.4121)

 

 

Written by London Swaminathan
Date: 2 August 2017
Time uploaded in London- 15-54
Post No. 4121
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

pictures by london swaminathan.

 

 

சிந்து சமவெளி நாகரீக அழிவுக்கும்  , குமரிக்  கண்ட மறைவுக்கும்   கிரேக்க எரிமலை வெடிப்புக்கும் தொடர்பு?

 

கிரேக்க நாட்டுத் தீவில் இன்பச் சுற்றுலா – பகுதி 2 (முதல் பகுதி நேற்று வெளியானது)

 

 

 

சான்டோரினி (Santorini Islands) தீவு அழகான பிரமிப்பூட்டும் காட்சிக்கு மட்டும் பெயர்போன இடம் என்று எண்ணிவிடக்கூடாது. அந்த மண்ணில் நின்றபோது எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்துக்கு அளவே இல்லை. ஏன் என்றால் நான் சிந்து/ சரஸ்வதி நதிச் சமவெளி நாகரீகம் பற்றி எழுதிய 20, 25 கட்டுரைகளுக்கும், ஆரிய- திராவிட ‘புருடா’, ‘கப்ஸா’, ‘பொய் பித்தலாட்டம்’ பற்றி எழுதிய 20, 30 கட்டுரைகளுக்கும் எனது தேரா (Thera/ Santorini சாண்டோரினி) தீவு விஜயத்துக்கும் தொடர்பு உண்டு.

வரலாற்றையே மாற்றிய ஒரு மிகப் பெரிய எரிமலை வெடிப்பு கி.மு 1630ல் ஏற்பட்ட எரிமலை வெடிப்பாகும். அதற்கு முன்னரும் பின்னரும் இந்த தேரா/ சாண்டோரினி எரிமலை பல முறை சீறி இருக்கிறது.

 

எரிமலை வெடித்து அதற்குள் ஏற்படும் பள்ளங்களில்  நீர் நிரம்பி ஏற்படும் சமுத்திரப் பகுதிகளை கால்டெரா எனபர். அப்படிப்பட்ட கால்டெரா (Caldera) வில்தான் நான் நின்றேன்.

 

இந்த பிரம்மாண்ட தேரா வெடிப்பு பற்றி பல மர்மங்கள் உள்ளன. தமிழர்களாகிய நாம் குமரிக் கண்டம் மறைந்தது பற்றி எப்படி அங்கலாய்க்கிறோமோ அதே போல கிரேக்க நாட்டு எழுத்தாளர்களும் புலவர்களும் அட்லாண்டீஸ் (Atlantis) என்னும் மர்ம கண்டம் முழுகியது பற்றி நிறைய எழுதி வைத்துள்ளனர். அதை ஏற்காதோரும் இந்த எரிமலை வெடிப்பால் மினோவன் (Minoan Civilization) நாகரீகம் அழிந்ததை ஒப்புக் கொள்வர். இந்த எரிமலை சீற்றத்துக்கும் 3600 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட சீன ஆட்சிக் குழப்பத்துக்கும், எகிப்திய ஆட்சிக் குழப்பத்துக்கும் (கி.மு.1600) இதுவே காரணம் என்பது வரலாற்றாய்வா ளர்களின் ஊகம். இதை எல்லாம் பார்க்கும் போது நமது குமரிக் கண்டம் மறைந்ததற்கும் சிந்து / சரஸ்வதி நதி தீர நாகரீகம் க்ஷீணம் அடைந்து படிப்படியாக மறைந்ததற்கும் தொடர்பு இருக்கிறது என்பது என் கணிப்பு. ஆகையால்தான் நான் இந்த மண்ணில் நின்றபோது ஒரு பிரமிப்பு, ஆனந்தக் களிப்பு!

2000 தீவுகள் உடைய நாடு!!

 

கிரேக்க நாட்டுக்குச் சொந்தமாக 2000க்கும் மேலான தீவுகள் உள்ளன.

கடலிடையே உள்ள சிறிய குன்றுகளையும் கணக்கில் சேர்த்தால் 6000 தீவுகள் என்றும் சொல்லுவர்.

 

இவ்வளவு தீவுகள் இருந்தாலும் (Crete) க்ரீட் எனப்படும் மினோவன் நாகரீக தலைமையிடமும் இந்த சாண்டோரினி தீவும்தான் முக்கியமானவை.

 

சாண்டோரினி தீவின் தலை நகர் Fபிரா. (Fira)–இயா என்னும் கிராமத்தில் (Oia) சூரிய அஸ்தமனத்தைக் காண ஏராளமானோர் வருவர். கழுதையில் சுற்றிப் பார்க்கவும் வசதி உண்டு. எல்லாவற்றுக்கும் கட்டணம்தான். ஏதன்ஸ் நகரை விட உணவும் உறைவிடமும் அதிக செலவு பிடிக்கும் இடங்கள்.

 

இந்த இடம் ஒரு குறிப்பிட்ட வகை ஒயின் (Wine) செய்வதற்கும் பெயர் பெற்ற இடம். ஆகையால் பழங்காலத்தில் எப்படி ஒயின் செய்தனர் என்பதைக் காட்டும் மியூசியமும் (Winery Museum)  உள்ளது.

அக்ரோதிரி (Akrotiri) என்னும் இடத்தில் தொல்பொருட் துறையினர் மினோவன் நாகரீக தடயங்களைக் கண்டு எடுத்துள்ளனர். அங்கு ஒரு காட்சி சாலையும் இருக்கிறது.

கருப்பு நிற மணல் கடற்கரையும் சிவப்பு மணல் கடற்கரையும் ஒரே தீவில் இருப்பது இயற்கை அதிசயமே.

 

நாங்கள் இயா (oia) கிராமத்தில் கடைத் தெருவில் நின்றபோது நம் ஊரில் மார்கழி மாத பஜனை கோஷ்டி வருவது போல ஒரு கோஷ்டி இசை முழக்கத்துடன் சென்றது. தினமும் நடக்கும் கிரேக்க இசை நடன ஷோவுக்கு விளம்பரம் தேடி துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்துச் சென்றனர்.

 

ஒரு பழங்கால மொனாஸ்ட்ரிக்கும் (Monastery) சென்று வந்தோம். கிரேக்க நாட்டில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் வகுப்பினர் (Greek Orthodox) அதிகம். இது பிராடெஸ்டண்ட், கதோலிக்கத்திலிருந்து வேறுபட்டது.

 

சுற்றுலா வரும்படியை நம்பியே மக்கள் வாழ்கின்றனர். கிரேக்க நாடு சலவைக் கல் எனப்படும் மார்பிள் (marble) கற்களை அதிகம் உற்பத்தி செய்கிறது. உலக உற்பத்தியில் ஏழு சதவிகிதம் இவர்களுடையதே. கிரேக்கர்களுக்கு என்று சில விசேஷ உணவு வகைகளும் உண்டு. நாங்கள் கிரீக் சாலட் (Greek salad) முதலிய வெஜிட்டேரியன் வகைகளை மட்டும் சுவைத்தோம்.

 

அடுத்த கட்டுரையில் ஏதென்ஸ் அதிசயங்களை எழுதுகிறேன்.

TAGS:- தேரா மினோவன், சிந்துவெளி, குமரிக்கண்டம்

–சுபம்–

MY TRIP TO SANTORINI ISLANDS IN GREECE (Post No.4120)

Written by London Swaminathan
Date: 2 August 2017
Time uploaded in London- 6-13 am
Post No. 4120
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

pictures by london swaminathan.

We went to Athens and Santorini Islands in Greece for six days in July 2017. The islands are volcanic islands and Hot water springs are in the middle of the sea. The ferry took us to the place where the sea water was heating up due to the volcanic rocks underneath. Tourists jumped from the boat into ocean and swam for 15 minutes and then all of them returned to the boat. I was just watching from the deck of the boat. Even children were swimming with the help of floating life jackets.

One young couple boarded the wrong boat and tried very hard to jump from one boat to other.  Husband succeeded but his wife with bikinis was struggling with fear and embarrassment. At last she managed to jump into our ferry.

If you look at all the pictures you can see the water colour changes from blue to green to yellow. The spot where the color of the water is yellow is the hottest place. swimmers go up to the point to get good hot water bath with sulphur content which will cure skin diseases. Volcanoes underneath is heating the water.

There are two important beaches in Santorini, one is with black sand beach and another is red beach. This is due to the volcanic activity in the islands. I have taken these pictures from the black sand beach. Santorini buildings are in white and blue colours. The churches have six or ten bells at the top. The domes of the churches are in Muslim’s mosque style. People come here for relaxing and to enjoy the breath taking views of the Agean sea , part of the Mediterranean sea. Palm leaf umbrellas are in thousands all along the coast which the tourists hire. They relax themselves there and get tanned in the sun bath.

 

Greece has 2000 islands and out of them 225 are inhabited. If you count all the protruding rocks you may say Greece has 6000 islands.

 

Biggest Volcanic Eruption

 

These volcanic islands have a long history. The biggest eruption happened around 1660 BC. and the Minoan civilization was destroyed because of the tsunami following the explosion or eruption. People believed that the Mysterious Atlantis continent disappeared because of this huge eruption. It must have affected Indus Valley Civilization and the legendary Tamil Kumari Kandam (Lemuria continent). The climatic changes after the biggest eruption in human history affected everyone on earth in one way or other.

Greece survive by tourism. Boarding and Lodging are more expensive in Santorini than in Athens. But the breath-taking views make the trip worthwhile. The blue sea and dry climate give plenty of time to do outdoor activities.

 

One of the emblems of Santorini is donkeys. This helped the people before the modern transport was introduced

There is a monastery in the islands. The islands are famous for the wine. It has a particular type of wine. There is a winery museum.

 

Sunset along the west coast is watched b thousands of people. Sunset point at Oia village attracts thousands of tourists. There is a bazar with lot of shops selling specialised, localised artefacts

 

Fira is the capital of the islands. All the islands were created by the volcanic eruption.

While we were doing shopping in the narrow streets of Oia in Santorini, The White Door Theatre group marched with a band distributing their leaflets of daily show.

 

–Subham–

QUOTES ON CONCENTRATION (Post No.4119)

Compiled  by S NAGARAJAN

 

Date: 2 August 2017

 

Time uploaded in London:- 5-13 am

 

 

Post No.4119

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

Without Concentration nobody could achieve anything.

Here are the best quotes on Concentration.

 

  • The five essential entrepreneurial skills for success: Concentration, Discrimination, Organization, Innovation and Communication.

Harold S. Geneen

  • (To) have one’s ideas exclusively focused on one central interest

– Sigmund Freud

 

  • What does it take to be a champion? Desire, dedication, determination, concentration and the will to win.

Patty Berg

 

  • Beware of dissipating your powers, strive constantly to

concentrate them.

Johann W. Von Gothe

 

 

  • When you want a thing deeply, earnestly and intensely, this feeling of desire reinforces your will and arouses in you the determination to work for the desired object. When you have a distinct purpose in view, your work becomes of absorbing interest. You bend your best powers to it; you give it concentrated attention; you think of little else than the realization of this purpose; your will is stimulated into unusual activity, and as a consequence you do your work with an increasing sense of power.

Grenville Kleiser

 

  • Concentration is my motto – first honesty, then industry, then concentration.

Andrew Carnegie

 

  • When you write down your ideas you automatically focus your full attention on them. Few if any of us can write one thought and think another at the same time. Thus a pencil and paper make excellent concentration tools.

Michael Le Boeuf

  • I have admired two principles. The first one is to train hard and get into the best possible physical condition. The second is to forget all about the other fellow until you face him in the ring and the bell sounds for the fight.

Rocky Marciano

 

9) Concentration of the mind is in a way common to both Knowledge and Yoga. Yoga aims at union of the individual with the universal, the Reality. This Reality cannot be new. It must exist even now, and it does exist.

Ramana Maharshi

 

10) The first law of success in this day, when so many things are clamoring for attention, is concentration – to bend all the energies to one point, and to go directly to that point, looking neither to the right nor to the left.

 

William Matthews
****
 

 

கிரேக்க நாட்டுத் தீவில் இன்பச் சுற்றுலா (Post No.4118)

Written  by London Swaminathan
Date: 1 August 2017
Time uploaded in London- 20-12
Post No. 4118
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நான் எனது குடும்பத்துடன் ஜூலை (2017) மாதம் கடைசி ஆறு நாட்களுக்கு கிரேக்க நாட்டின் தலை நகர் ஆதென்சுக்கும் (Athens) எரிமலைத் தீவான சாண்டோரினிக்கும் (Santorini Islands) சென்று வந்தேன். நமது இந்து மதம் தொடர்பான விஷயங்களை இரண்டு மூன்று கட்டுரைகளில் தருகிறேன்.

சாண்டோரினி தீவுகள் ஏதென்ஸிலிருரிந்து சுமார் 128 மைல் தொலைவில் உளது. இதன் சிறப்புகள்:

 

  1. இது எரிமலை சீறி, கடலிலிருந்து வீசிய கற்பாறைக் குவியலினால் உண்டான தீவு. வழி நெடுகிலும் கருகிய கற்கள், பெரிய கருமையான பாறைகள் இவைகளைத் தாண்டி மலையேறிச் சென்றால் புகை வெளியே வரும் பெரிய எரிமலைப் பாறையைக் கணலாம். ஆனால் தீப்பிழம்போ, உருகிய எரிமலைக் குழம்போ ( Lava லாவா) கிடையாது. அடுப்பை அணைத்த பின் எவ்வளவு புகையுமோ அவ்வளவுதான்!

 

  1. பின்னர் எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு கந்தக, அமிலப் பாறைகள் வழியே சென்று உடல்நலத்தைக் கெடுக்க வேண்டும் என்று கேட்கலாம். அவர்களே, கர்ப்பமான பெண்கள் வரக்கூடாது. கந்தகப் புகை கருவைப் பாதிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள். நாக்கில் நுரை தள்ள ஆயிரக் கணக்காண அடிகள் உயரே செல்லக் காரணம்……………….?

 

3.பிரமிப்பூட்டும் கண்கொள்ளா இயற்கைக் காட்சிகள். அதள பாதாளத்தில் கடலும் அதில் பவனி வரும் கப்பல்களும் படகுகளும் கண்கொள்ளாக் காட்சி. காமெரா உள்ளவர்கள் தொடர்ந்து படம் எடுத்த வண்ணம் இருப்பர். எத்தனை முறை படம் எடுத்தாலும் ஏதோ புதுப் புது காட்சிகளை எடுப்பது போலவே தோன்றுகிறது. இதில் சூரியனின் வண்ண ஜாலங்கள் வேறு! கடலே பொன்னிறமாக மாறிவிடும்.

 

 

4.இந்தத் தீவில் 90 சதவிகித கட்டிடங்கள் வெள்ளை நிற, நீல நிறக் கலவைதான். நாம் எப்படிக் கோவிலுக்கு சிவப்பு வெள்ளை பயன்படுத்துகிறோமோ அப்படி இவர்கள் வெள்ளை நிறச் சுவர்களின் மேலேயுள்ள கும்பம் போற இடங்களுக்கு நீல நிறம் அடித்திருக்கிறார்கள். இது கிரேக்கர்களுக்கு மிகவும் பிடித்த, புனிதமான வண்ணமாம்.

 

5.சூடான கடல் நீர்!

 

எரிமலையுள்ள இடத்துக்கு பெரிய படகில் சுமார் 100, 200 பேர்களை அழைத்துச் செல்லுவர். அதைப் பார்த்த பின்னர் சூடான வெப்ப நீர் ஊற்று உள்ள கடல் பகுதிக்கு அழைத்துச் செல்லுவர் . யார் யாருக்கு நீந்தத் தெரியுமோ அவர்கள் அனைவரும் கடலில் குதிக்கலாம் என்று அறிவித்தவுடன் அழகிகள், கிழவிகள், குமரன்கள், தொண்டுக் கிழங்கள் எல்லோரும் கடலில் குதிப்பார்கள். அவர்கள் கடலுக்கு அடியில் உள்ள எரிமலைகளால் சூடுபடுத்தப்பட்ட நீருள்ள பகுதிக்குச் சென்று நீந்துவார்கள். பத்து நிமிடம் ஆன பின்னர் அவர்கள் கப்பலுக்கு (படகுக்கு) திரும்பிவரவேண்டும்.

 

ஒரு இளம் காதல் ஜோடி அருகில் இருந்த கப்பலுக்கு நீந்திச் சென்று ஏறிவிட்டன. உடையோ உடலில் மிக மிகக் குறைவு. கணவன் எங்கள் கப்பலில் கு தித்துவிட்டான். அந்தப் பெண்ணோ பயந்து நடுங்கி ‘’மதில் மேல் பூனையாக’’ தவித்தாள். பின்னர் அனவைரும் வேடிக்கைப் பார்க்கையில் எங்கள் கப்பலுக்குள் குதித்தாள்.

 

இந்த இரண்டு இடங்களுக்குச் சென்று கப்பலில் திரும்பி வர தலைக்கு 20 (Euro) யூரோ கட்டணம். இது சாண்டோரினி தீவுகளில் ஒரு நிகழ்வு. இது போல பல வீரதீர செயல்கள் செய்யலாம்.

 

 

6.ஒவ்வொரு சர்ச் (Church)  மீதும் மணிகலைளை மூன்று அல்லது ஆறு அல்லது பத்து என்று ஒரு பிரமிடு வடிவத்தில் தொங்க விட்டிருக்கிறார்கள்

 

7.கடற்கரை ஓரம் நெடுகிலும் நூற்றுக் கணக்கான ஓலைக் குடைகள் அதற்குக் கீழே இரண்டு படுக்கைகள்; இவை அனைத்தும் வாடகைக்கு விடப்படுகின்றன. ஒரு ஜோடி படுக்கைக்கு பத்து யூரோ. கீழே அரை நிர்வாண,,,, இல்லை முழு நிர்வாண அழகிகள், கணவர்களுடன் (???) படுத்திருப்பர். அவ்வப்பொழுது கடலில் குதிப்பர். சன் க்ரீமைத் (Sun Cream)  தடவிச் சூரியக் குளியல் எடுப்பர். எதற்காக இப்படிச் செய்கின்றனர்? சன்கிரீமைத் தடவி சூரியக்(Sun bath) குளியல் எடுத்தால் தோலின் நிறம் தாமிரக் கலராக — Copperகாப்பர் கலராக மாறிவிடும். நம்முடைய கோவில் செப்புத் திருமேனிகள் போல அழகிகள் ஜொலிப்பர்!!

 

 

அடுத்த கட்டுரையில் கழுதைக்கு ஏற்பட்ட கிராக்கி, சூரிய அஸ்தமன தரிசனம், தொல்பொருட் துறை மியூசியம், கி.மு 1660 வாக்கில் ஏற்பட்ட (Volcanic Eruption) எரிமலை வெடிப்பு அதனால் ஒரு (Minoan Civilization) நாகரீகம் அழிந்த கதை, அது நமது நாகரீகத்தின் மீது ஏற்படுத்திய தாக்கம், சுனாமிப் பேரலைகளால் (Atlantis) அட்லாண்டிஸ் அழிந்த கதை, கிரேக்க அர்த்தடாக்ஸ் (Greek Orthodox Monastery) மொனாஸ் ட் ரீ, இயா (Oia) கிராமம், வரவு செலவுக் கணக்கு பற்றிச் சொல்லுகிறேன்

 

TAGS: சாண்டோரினி தீவு, எரிமலைப் பாறை, கருப்பு மணல், வெப்ப நீரூற்று

 

–Subham–

கஜினியும் ஹிட்லரும்: ரஷியர்களும் ஹிந்துக்களும்! (Post No.4117)

Written by S NAGARAJAN

 

Date: 1 August 2017

 

Time uploaded in London:- 4-51am

 

 

Post No.4117

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

இரண்டு கோர ராட்ஸசர்கள் : எதிர் விளைவு பற்றிய ஒரு ஒப்பீடு

 

 

கஜினியும் ஹிட்லரும்: ரஷியர்களும் ஹிந்துக்களும்! விசித்திரமான எதிரெதிர் மனப்போக்கு!!

 

by ச.நாகராஜன்

 

நம் கண் முன்னே வரலாறு கண்ட இரு மாபெரும் பாவிகள் கஜினியும், ஹிட்லரும்!

ஹிட்லரை சமீப காலத்திலேயே அனைவரும் பார்த்து விக்கித்து விட்டனர்.

இப்படி ஒருவன் தோன்ற முடியுமா என்ற திகைப்பும், மலைப்பும் அனைவருக்கும் உண்டு.

அரவிந்தர் அவனுக்கு ஆன்மாவே கிடையாது என்று கூறி இருக்கிறார்.

 

அப்படி ஒரு கோரமான படைப்பு; படைப்பு விசித்திரம்!

இதே அளவு கோரமான கொடூரன் கஜினி முகமது.

அவனுக்கும் ஆன்மா இருந்திருக்காது; கோரமான படைப்பு.

ஹிட்லரால் பாதிக்கப்பட்டவர்கள் ரஷியர்கள்.

அவர்களால் இந்த கோர ராட்ஸசனின் கொடுமைகளைத் தாளவே முடியவில்லை.

ஆகவே ரத்தத்திற்கு ரத்தம்; சாவுக்கு சாவு என்று சபதம் எடுத்தனர் அவர்கள்.

BLOOD FOR BLOOD; DEATH FOR DEATH என்பதே அவர்கள் முழக்கமாகவும் சபதமாகவும் அமைந்தது.

 

ரஷியாவிலிருந்து வெளிவரும் கம்யூனிஸ்ட் பத்திரிகையான பிராவ்தாவைப் பற்றி அனைவரும் அறிவர். அதில் 22-8-1941 மாஸ்கோ ரேடியோவில் ஒலிபரப்பான ஒலிப்ரப்பு பற்றிய தலையங்கம் ஒன்று வெளியானது.

 

 

ஆங்கிலத்தில் அதை அப்படியே கீழே பார்க்கலாம்:

“BLOOD FOR BLOOD; DEATH FOR DEATH ‘ is the title of an editorial in the ‘Pravda’, the organ of the Communist party quoted by the Moscow radio on 22-8-1941. The article which gives details of atrocities perpetrated by the Nazis of Soviet citizen says, “no words can express the intensity of feeling and the wrath which prevails in the hearts of Soviet men and women on hearing the news of the atrocities carried out by the German hordes on their bloody way.

 

 

Intense hatred which knows no pity and which knows no mercy is the only rule of fighting against biped animals which constitute the German Fascist armies.

 

(இந்த வரியை அப்படியே கஜினி முகமதுவிற்கும் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களும் கூடச் சொல்லலாம்)

 

 

Wherever its armies pass they leave behing hem a morbid trail fo muder and robbery. The HITLER DOGS  have covered with shame not only German army but also all  GERMAN PEOPLE. To redeem its shame, to resore to itself the place in the family of peoples the German nation must clear itself of the HITLER VERMIN. Every hour brings news of crimes carried out by the Fascists on Soviet soil.”

 

The article goes on to give details of almost unspeakable horrors carried out by the Nazis in search for military information citing such instances as men, women and children soaked in petrol in a village square and burned alive.

A nine year old boy shot in front of his mother who then joined the guerillas. The journal declares, “corpses, corpses and again corpses, all totured and killed people, the same scenes in every village, in every town where the Germans have passed.”

 

“What army ever committed such crimes?” asks the Pravda. “Does the Fascist gang of robbers deserve the name of army for these monstrosities, for all these crimes are not isolated cases, they are a mass phenomenon, a system taught by the German Fascist army command.”

After giving an extract from the note-book of a dead German soldier referring to mass exefutions of population it quotes an excerpt from the secret instruction of a German army commander. This instruction states, “It is necessary to emphasise once more the fundamental problems arising from conditions of warfare on the eastern front. Here more than on other front it is necessary to develop in the German soldier a feeling of mercilessness. A feeling of COMPASSION towards anybody irrespective of age or sex  CANNOT BE TOLERATED.

Every initiative of German soldiers likely to spread fear of the German army must be encouraged. It is necessary to inculcate in every German soldier a feeling of personal interest in this war.

 

The Soviet people will never forget nor will it forget these crimes. The blood calls for CRUEL AND MERCILESS VENGEANCE.

 

This Vengeance will come; it’s hour is near. The Soviet people have arisen in the Fatherland war and they will not lay down their arms until the enemy is crushed and annihilated.

“BLOOD FOR BLOOD , DEATH FOR DEATH.”

 

இந்த கட்டுரையில் உள்ள வார்த்தைகளில் ஹிட்லர் அல்லது நாஜி என்பதற்கு பதிலாக கஜினி முகமது அல்லது அவன் படை என்றும் சோவியத் மக்கள் என்பதற்கு பதிலாக ஹிந்து மக்கள் என்றும் போட்டுப் படித்துப் பார்த்தால அதிசயமாக அப்படியே கட்டுரை பொருத்தமாக இருக்கிறது அல்லவா?

ரஷியர்கள் தாங்கள் நினைத்தபடி ரத்தத்திற்கு ரத்தம்; சாவுக்கு சாவு என பழி வாங்கினார்கள்.

 

 

சரித்திரம் காட்டும் சித்திரவதை முகாம்களையும் ஸ்டாலினின் வன் கொடுமைகளையும் படித்தவர்கள் இதை அறிவர்.

(உண்மையில் ஹிட்லரை விட அதிகமான பேரைக் கொன்று முதலிடத்தைப் பிடிப்பது ஸ்டாலின் என்பது அதிசயமான செய்தியாக இருக்கலாம்; ஆனால் அது உண்மை!)

இப்போது ஹிந்து தேசத்திற்கு வருவோம். ரஷியர்கள் போல ரத்தத்திற்கு ரத்தம் ;சாவுக்கு சாவு என்ற அணுகுமுறையில் ஹிந்துக்கள் ஒரு போதும் இருந்ததில்லை.

 

 

கஜினி முகமது தொட்டு ஔரங்கசீப் வரை, கிழக்கிந்த கம்பெனி வணிகன் முதல் இறுதியான மவுண்ட்பேட்டன் பிரபு வரை ஹிந்துக்களுக்குச் செய்த கொடுமைகள் எவ்வளவு?

ஒரே வரியில் பிரிட்டிஷாரைப் பார்த்து விவேகானந்தர் சொல்லி விட்டார்: “நீங்கள் எங்களுக்குச் செய்த கொடுமைகளுக்கு ஹிந்து மஹா சமுத்திரம் அடியில் உள்ள சேற்றை முழுதுமாக வாரி உங்கள் மீது இறைத்தாலும் நீங்கள் எங்களுக்குச் செய்த தீங்கிற்குத் தினையளவும் பதில் செய்ததாக ஆகாது.

 

 

உண்மை; இது கஜினிக்கும் பொருந்தும் தானே!

 

    ஆனால் வழிவழியாக வந்த உயர்ந்த சிந்தனா பாரம்பரியம் கொண்ட ஹிந்துக்கள், முஸ்லீம்களை ஒட்டு மொத்தமாக அழிக்க எண்ணம் கூடக் கொள்ளவில்லை. மதமாற்றவும் நினைக்கவில்லை!!      

    பிரிட்டிஷாரை ஒட்டு மொத்தமாக ரத்தத்திற்கு ரத்தம் சாவுக்கு சாவு என்று முழங்கி அழிக்க முற்படவில்லை.

 

இஸ்லாமியரை இன்று வரை வாழ வைத்து மதிப்புடன் நடத்தி வருகிறோம். அனைத்து இஸ்லாமிய நாடுகளுடன் தோழமை உறவு தொடர்கிறது.

 

பிரிட்டிஷாரை மிகவும் நேர்மையாகவும் நியாயமாகவும் கடைசி வரை நடத்தினோம் – சுதந்திரத்திற்குப் பின்னரும் கூட.

இது தான் ஹிந்து பாரம்பரியத்திற்கும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ பாரம்பரியத்திற்கும் உள்ள வேற்றுமை.

 

இஸ்லாம் தன்னை ஒப்புக்கொள்ளாதவனை ஒப்புக் கொள்ளாது. காபிர் காபிர் தான்!

கிறிஸ்தவமும் ஏசுவிடம் “ஓப்புக் கொடுக்காதவரை ஒப்புக் கொள்ளாது.

 

ஆனால் ஹிந்து மதமோ அப்படியில்லை; ஒரு ஹிந்துவானவன், “அனைவரும் வாழ வேண்டும்; கொள்கையில், வாழ்க்கை முறையில், மதத்தில், இனத்தில் வேறுபட்டிருந்தாலும் கூட என்று எப்போதும் எண்ணி வந்திருக்கிறான்; எண்ணி வருகிறான்; இனியும் எண்ணுவான்.

இதுவே ஒரே வித்தியாசம்.

 

இதே அணுகுமுறை இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வருமானால் அப்போது “உலகத்தில் கலி அழிந்தது; கிருத யுகம் எழுந்தது மாதோ என்று உரக்கக் கூறலாம்.

****