விளக்கு வைத்து சாப்பிடுவது ஏன்? (Post No.4656)

Written by London Swaminathan 

 

Date: 24 JANUARY 2018

 

Time uploaded in London – 7-36 AM

 

Post No. 4656

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

(தமிழை வளர்க்க விரும்புபவர்கள், தன் மனைவி, மகன்கள், கணவ்ர்கள்
ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

விளக்கு வைத்து சாப்பிடுவது ஏன்? என்பதற்கு நேற்று ஒரு பேய்க்கதை சொன்னேன்; சொக்கா சொக்கா சோறுண்டோ சோழியன் வந்து கெடுத்தாண்டோ- என்ற பழமொழியின் பின்னாலுள்ள கதை அது.

 

நடேச சாஸ்திரியார் தொகுத்து 1886 ஆம் வெளியிட்ட ‘திராவிட பூர்வகால கதைகள்’ புத்தகத்தில் மேலும் ஒரு கதை உளது. பழந்தமிழில் உள்ள கதையை புதுக்கியும் சுருக்கியும்   வரைவது என் சித்தம்.

முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒரு பிராஹ்மணன் இருந்தான். அவனுக்குக் கல்யாணம் நிச்சயமாயிற்று. ஒரு தொண்டுக் கிழம் அவருடைய கடைசி பெண்ணை விவாஹம் செய்துவிட்டு உயிர்விடக் காத்திருந்தது. கல்யாணமும் சுகமே முடிந்தது. அன்றிரவு சாந்தி முகூர்த்தம்; மாப்பிள்ளை சுத்த வைதீகப் பிராஹ்மணன்; ஆகையால் மாலைச் சந்தியாவந்தனத்தை முடிக்க குளக்கரைக்குச் சென்றான். அந்த ஊரில் முதலைகள் அதிகம்; அது பற்றி புது மாப்பிள்ளையை யாரும் எச்சரிக்கவில்லை. அவர்கள் இதெல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்து விட்டார்கள் போலும்.

 

குளத்தில் இறங்கிய புது மாப்பிள்ளையின் காலை ஒரு முதலை கவ்வியது. மாப்பிள்ளைக்கு ஒரே நடுக்கம்; இருந்தபோதிலும் சுதாரித்துக் கொண்டு,

 

“முதலை மாமா! முதலை மாமா! ஒரே ஒரு விண்ணப்பம். நான் இப்போதுதான் கல்யாணம் கட்டி, சாந்தி முகூர்த்தத்துக்கு காத்திருக்கிறேன்; நீ என்னை சாப்பிடுவதானால் சாப்பிடலாம்; ஆனால் நான் போய் என் மனைவியுடன் படுத்துவிட்டு, விஷயத்தைப் புரியவைத்துவிட்டு, அனுமதி வாங்கி வந்து விடுகிறேன்; என்னை நம்பி ஒரு பெண்ணும், அவளது தந்தை ஒரு தொண்டுக் கிழமும் இருக்கின்றனர். நான் போகாவிடில் இருவரும் உயிர் விடுவர். நீ மூன்று உயிர்களைப் பறித்த பாவத்துக்கு ஆளாவாய். மேலும் பிராஹ்மணர்கள் ஸத்யம் தவறாதவர்கள் என்பது உனக்குத் தெரிந்திருக்கும்;நான் கட்டாயம் திரும்பி வருவேன். என்னை விடுவாயா?” என்று கேட்டனன்.

Karthik Raghavan’s picture from Kaladi; Adi Shankara story

முதலை சொன்னது:

“உன்னை இப்போது சாப்பிட்டாலும் நாளை சாப்பிட்டாலும் எனக்கு ஒன்றுதான்; போய் வா மகனே, போய் வா! இன்று போய் நாளை வா!”

 

அவன் மனைவியிடம் சென்றான்; சாந்தி முகூர்த்தம் தடபுடலாக நடந்தது. நள்ளிரவில் மனைவியிடம் எல்லா வற்றையும் சொன்னான். அவள் சொன்னாள்—“ நாளை வரை காத்திராதீர்கள் இப்போதே போங்கள்”.

 

அவனும் புறப்பட்டான்; இந்த மாதிரி கொலைகார மனைவியிடம் வாழ்வதைவிட ஒரு முதலையின் பசியைத் தீர்ப்பது சாலச் சிறந்தது. இரண்டு மணி நேரம் சுகம் அனுபவித்த பின், முதலையிடம் என்னைப் பலி கொடுக்கத் தயாராகி விட்டாளே! என்று மனதுக்குள் வசை பாடிக்கொண்டு குளத்துக்கு வந்தான்.

 

“முதலை மாமா! நீ நாளை வரை காத்திருக்க வேண்டாம்; என் மனைவியே என்னை அனுப்பி விட்டாள்; என்னைச் சாப்பிடு என்றான்.

முதலையும் தாவிப் பாய்ந்தது.

அப்போது ‘பளிச்’ என்று ஒரு வெளிச்சம் தோன்றி மறைந்தது; மீண்டும் இருள் சூழ்ந்தது.

 

முதலை சொன்னது,

“அடக் கடவுளே! சாப்பிட வந்த போது விளக்கு அணைந்துவிட்டதே. நான் உன்னைச் சாப்பிடக்கூடாது. சாப்பிடும் போது விளக்கு  அணைந்தாலும், விளக்கு இருந்தாலும் சாப்பிட மாட்டேன். நீ போகலாம்” என்று அனுப்பிவிட்டது.

 

திரும்பிப் பார்த்தான்; அவன் மனைவி ஒரு சட்டியில் அணைந்த  விளக்குடன் ஓடி வந்தாள். அவள் சொன்னாள்,

“என் பிராண நாதா! சுவாமி! நீங்கள் எந்த விக்கினமும் இல்லாமல் திரும்பி வரவேண்டும் என்று உலகிள்ள எல்லா ஸ்வாமியையும் பிரார்த்தித்தேன். என் பிரார்த்தனை பலித்தது” என்று சொல்லி அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.

 

விளக்கின் மஹிமை இத்தகையது. மிருகங்களும் ஸத்தியத்துக்குக் கட்டுப்படும். இதனால் மனிதர்கள் யாரும் விளக்கு ஏற்றாமலோ , விளக்கு அணைந்தாலோ சாப்பிட மாட்டார்கள்.

 

(மின்சார விளக்குகள் ஜகஜ்ஜோதியாக இருக்கும் லண்டனில் கூட என் வீட்டில் சாப்பிடும் போது ஒரு விளக்கையும் அனைக்கக் கூடாது என்பது என் மனைவியின் கட்டளை; நானும் எனது மகன்களும் இன்றும் அந்த சட்டத்துக்குக் கீழ்ப்படுகிறோம்)

 

-சுபம், சுபம்-

 

 

tags–விளக்கு, முதலை, பிராஹ்மணன், சாந்தி முஹூர்த்தம்

 

இயற்கைக்கு ஊறு விளைவிக்காதீர்கள் (Post No.4655)

Picture: Students celebrate Forest Day

 

Date: 24 JANUARY 2018

 

Time uploaded in London- 5-54 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4655

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் முதலாவது உரை

 

 

  1. இயற்கைக்கு ஊறு விளைவிக்காதீர்கள்

ச.நாகராஜன்

 

இயற்கை தன்னைத் தானே காத்துக் கொள்ளும் வல்லமை படைத்தது. மனிதன் அதன் செயல்பாட்டில் குறுக்கிடாமல் இருந்தாலே போதும். அது வளமான பூமியை மனிதர்களுக்கும், பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் அளிக்கும்.

 

 

அமெரிக்க விஞ்ஞானக் கழகத் தலைவரான க்ரெசி மாரிசன் இறைவன் இருக்கிறானா, இல்லையா என்று ஆராயப் புகுந்தார். தனது ஆய்வின் முடிவில் இறைவன் இருக்கிறான் என்பதற்கு அவர் ஏழு காரணங்களை உலகினர் முன் வைத்தார். அதில் ஒன்று இயற்கையின் ஒப்பற்ற சமன்பாட்டுத் தத்துவம்.

இயற்கையில் காணும் ஒப்பற்ற சிக்கன அமைப்பைச் சற்று உற்றுக் கவனித்தபோது அது எல்லயற்ற, பரந்த ஒரு பேரறிவினால் இயக்கப்படுவதையும் அதில் முன்யோசனையும் அதற்குத் தகுந்த ஏற்பாடுகளும் இருப்பதையும் அவர் கண்டார்.

 

 

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆஸ்திரேலியாவில் ஓரிடத்தில் சப்பாத்திக் கள்ளி வெகு விரைவில் பரவி பயிர்களுக்கும், மக்களுக்கும் துன்பம் தந்தது. விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் தேடி சப்பாத்திக் கள்ளியை மட்டும் தின்று வாழும் ஒரு வகைப் பூச்சி இனத்தைக் கண்டுபிடித்து வந்து ஆஸ்திரேலியாவில் விட்டார்கள். அவை அந்த விரும்பத்தகாத செடியை அழித்தன. சிக்கலும் தீர்ந்தது.

 

Forest on fire in California, USA

இது போன்று தாவரம் மற்றும் விலங்குக் கூட்டங்களிடையே இயற்கைக் கட்டுப்பாடுகளும் தடைகளும் தானே அமைந்துள்ளன. வேகமாகப் பெருக்கமடையும் பூச்சிகள், பிராணிகள் இவற்றின் உடலிலேயே அவற்றின் உருவையோ அல்லது வலிமையையோ கட்டுப்படுத்தும் அமைப்புகள் இருப்பதால் தான் மனிதன் இன்றும் வாழ முடிகிறது.

 

 

ஆக இந்த இயற்கை விதியை மனதிலே பதித்துக் கொள்ளாமல் பல்வேறு காரணங்களுக்காக இயற்கை அன்னை பாதுகாத்து வரும் யானை, சிங்கம், புலி, மான் போன்ற விலங்குகளை வேட்டையாடுவதும், அரிய பறவை இனங்களை உணவுக்காகவும் இதர காரணங்களுக்காகவும் வேட்டையாடு சுற்றுப்புறச் சூழ்நிலையை அழித்து விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும்.

இதை மனதில் கொண்டு வாழ்வோமாக!

***

பாரதி போற்றி ஆயிரம் – 34 (Post No.4654)

Date: 24 JANUARY 2018

 

Time uploaded in London- 5-44 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4654

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

SHARE IT WITH AUTHOR’S AND BLOG’S NAME; DON’T DELETE IT; PICTURES ARE NOT OURS. BEWARE OF COPYRIGHT LAWS.

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 34

  பாடல்கள் 194 முதல் 197

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : .நாகராஜன்

கண்ணதாசன் பாடல்கள்

மரணத்தை வென்ற மகாகவி

ஆசை தனக்கொரு காணிநிலம்என்று

   அற்புதப் பாட்டிசைத்தான் – அன்று

ஆறறிவற்றவர் தம்மிடையே தமிழ்

   ஆனந்தக் கூத்தடித்தான்!

மீசை துடித்திட மேனிகொதித்திட

   வீரக்கனல் வடித்தான் – கவி

வேந்தன் உலகத்து மாகவிவாணரை

   வெல்லும் தமிழ் கொடுத்தான்

 

 

தந்தையர் நாடென்ற பேச்சினிலேஒரு

    சக்தி பிறக்குதென்றான் – அவன்

சாப்பிடும்  சோற்றுக்கு வைக்கவில்லைகவிச்

    சந்ததி வைத்துச் சென்றான்

சிந்தையணுவிலும் ரத்தத்திலும் இந்த

    தேசத்தில் பாசம்வைத்தான் – அட!

தீயொரு பக்கமும் தேனொரு பக்கமும்

    தீட்டிக் கொடுத்து விட்டான்!

 

சந்திரர் சூரியர் உள்ளவரையிலும்

   சாவினை வென்றுவிட்டான் – ஒரு

சாத்திரப் பாட்டினில் பாரததேசத்தின்

   தாய்மையை வார்த்துவிட்டான்

இந்திர தேவரும் காலில்விழும்படி

   என்னென்ன பாடிவிட்டான் – அவன்

இன்றுநடப்பதை அன்றுசொன்னான்புவி

   ஏற்றமுரைத்து விட்டான்!

 

வங்கத்து நீரினை மையத்துநாட்டுக்கு

   வாரிக்கொணர் என்றான் – அந்த

வானம் அளந்துவிஞ் ஞானம்படைத்திட

   வாரும்தமிழ ரென்றான்

சிங்க மராட்டியர் கற்பனைக்கீடொரு

   சேரத்துத் தந்தமென்றான் -இந்த

தேசபெருமைக்கு ஆரம்பம் செய்தவன்

   பாரதித்தேவன் என்பான்!

 

தொகுப்பாளர் குறிப்பு:  இந்தக் கவிதை 1978ஆம் ஆண்டில் கல்கி வார இதழில் கண்ணதாசன் எழுதி வந்த ‘கண்ணதாசன் பக்கம் என்ற தொடரில் வெளியாகியுள்ளது.

10-9-1978 அல்லது 17-9-1978 தேதியிட்ட இதழாக இருக்கலாம். (இதழில் ஒன்பதாம் பக்கத்தில் வெளியாகியுள்ளது)

 

கவிஞர் கண்ணதாசன்: கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

 

‘***

 

 

28 MORE QUOTATIONS FROM KALIDASA’S WORKS (Post 4653)

FEBRUARY 2018 CALENDAR (Post No.4653)

Written by London Swaminathan 

 

Date: 23 JANUARY 2018

 

Time uploaded in London – 19-06

 

Post No. 4653

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

FESTVAL DAYS: FEB.13 MAHA SHIVARATRI, 15- SURYA GRAHANAM (IN SOUTH AMERICA)

EKADASI/ HINDU FASTING DAYS- 11, 26

AMAVASYAI/ NEW MOON- 15 (PARTIAL SOLAR ECLIPSE IN SOUTH AMERICAN COUNTRIES)

Auspicious Days in February- 4, 5, 7, 11, 18, 19, 26

ABBREVIATIONS: AS-ABignjana Shakuntala VU- Vikramorvaseeyam, MA- Malavikagnimitram KSKumara Sambhavam, RV- Raghu vamsam

February 1 Thursday

Absorption

By your own self, you come to know yourself, by your oneself, you create yourself. When you have completed your work, you become absorbed in yourself.

-KS 2-10

 

February 2 Friday

Acumen

every old poem is not good just because it is old nor is every new poem to be blamed because it is new. Sound critics, after proper scrutiny, chose one or other. The blockhead is guided by others.

MA ,Nandi sloka 2

 

February 3 Saturday

Administration

The anxiety of acquiring dominion gives extreme pain and when it is fairly established the cases of supporting the nation incessantly harass the sovereign just as a large umbrella, the staff of which a man carries in his hand tires him while it also shades him.

AS  Act.5-

 

February 4 Sunday

Admirartion

Admiration usually follows shapes of surpassing beauty

MA Nandi sLoka

 

February 5 Monday

Age

In regard to people spiritually old, age is not a criterion for respect.

KS 5-16

 

February 6 Tuesday

Aid

Even a person who can see his eys, cannot see without light an object in the darkness.

MA, act 2

 

February 7 Wednesday

Alliance

Matrimonial alliances effected by the good hardly go wrong or end badly

MA Act 1

February 8 Thursday

 

Ambition

The great men of this world with extreme difficulty rise to the summit of ambition but from it they also easily and swiftly descend

AS, Act 4

 

February 9 Friday

Amiss

Who does not feel, in the silence o contentment, that something is wrong, the hearts ache or a twinge of grief?

Rtusamhara, Canto 2, 17

 

February 10 Saturday

Assistance

While fire becomes extremely brilliant from the sun’s aid, the moon also acquires splendour when favoured by the night.

MA act 1

 

February 11 Sunday

Beauty

She was created by god as if with a desire to see all the loveliness in one place with the collection of all objects of comparison set in their proper places

KS 1-49

 

February 12 Monday

 

Though dark moths may settle on the head of a water lily, it is still beautiful. The moon, with its dewy beams, is rendered yet brighter by its dark spots.

AS, Act 1

February 13 Tuesday

A beautiful figure is charming in whatever state it may be.

AS, Act 6

 

February 14 Wednesday

Benefactor

With ripening fruits, trees bend;on account of fresh water, the clouds hang low; with prosperity the good become humble, Such is, in truth, the real nature of the benefactors.

AS Act 4

February 15 Thursday

 

Butcher

A butcher who sells meat and whose actions are cruel, may have a tender heart.

AS ,Act 6

 

February 16 Friday

 

Calm

A good man never allows grief to triumph. Even in a tempest the mountains are calm.

AS, Act 6

February 17 Saturday

 

Choice

Your longing to own this rustic maiden when you have already bright jewels in your palace is like the fancy of one who has lost his appetite for dates and yearns for the tamarind.

AS Act 2

February 18 Sunday

Conceit

All men are likely to think favourably of themselves

AS Act 2

 

February 19 Monday

Dancing

Dancing is the principal amusement of mortals though their tastes vary

MA Act 1

 

February 20 Tuesday

The art of dancing is a matter of practice

MA act1

 

February 21 Wednesday

Discernment

The reception of an unpromising pupil reveals a teacher’s lack of discernment.

MA Act 1

 

February 22 Thursday

Discrimination

The learned capable of discriminating between the good and the evil, should attend to this performance for it is only when tested in the fire the purity of gold is determined.

RV 1-10

February 23 Friday

 

Doubts

Doubts, which for a long time confuse the good, are soon removed by their strong actions.

AS Act 1

February 24 Saturday

Empire

The haughty canopy spreads its shade of universal empire over the world. The footstool of dominion, set with gems, is torn from the glittering brows of prostrate kings.

VU Act 3, Scene 2

February 25 Sunday

The very palm of his hand bears the mark of empire.

AS Act 7

February 26 Monday

Excuse

Women are so clever in finding ready excuses

AS, Act 5

February 27 Tuesday

Age

The proverb that is a lovely person can never be sinful is never untrue.

KS 5-36

 

February 28 Wednesday

Fitness

Nature, not age, gives fitness- VU Act 5

 

 

SOURCE BOOK- THE GOLDENT TREASURY OF INDIAN QUOTATIONS, R.N.SALETORE, STERLING PUBLISHERS PRIVATE LIMITED,  1999; THER ARE NEARLY 3000 QUOTATIONS FROM SANSKRIT, TAMIL, HINDI AND OTHER LANGUAGES.

 

–Subham—

 

ஒருபேய்க் கதை! சொக்கா, சொக்கா சோறுண்டோ? (Post No.4652)

ஒருபேய்க் கதை! சொக்கா, சொக்கா சோறுண்டோ? சோழியன் வந்து கெடுத்தாண்டோ

 

Written by London Swaminathan 

 

Date: 23 JANUARY 2018

 

Time uploaded in London – 8-21 AM

 

Post No. 4652

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

இது ஒரு பேய்க் கதை; பழமொழிக் கதை

சொக்கா, சொக்கா சோறுண்டோ? சோழியன் வந்து கெடுத்தாண்டோ

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

‘திராவிட பூர்வகாலக் கதைகள்’ என்ற பெயரில் நடேச சாஸ்திரி என்பார் பழங் கதைகளைத் தொகுத்து 100 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டுள்ளார். அவை பழந்தமிழில் இருப்பதால் அவற்றைப் புதுக்கியும் சுருக்கியும் தருகிறேன்.

 

 

வீட்டில் விளக்கு ஏற்றுவது ஏன்?

ஒரு ஊரில் ஒரு குடியானவன். அவனுக்கு இரண்டு புதல்விகள்; ஒருவருக்கு உள்ளூரிலேயே திருமணம் முடிந்தது. மற்றொரு மகள், அயலூரிலுள்ள  ஒரு சோழியனுக்கு வாக்குப்பாட்டாள். காலம் உருண்டோடியது. கிழக் குடியானவன் இறந்தான்; மூத்த மகளின் கணவனும் இறந்தான். அவளது தங்கையோ அடுத்த ஊரில் கணவனுடன் சுகமாக வாழ்ந்து வந்தாள். மூத்த மகளுக்கு சந்ததியும் இல்லை. ஆகையால் வயிற்றுப் பிழைப்புக்காக நிலத்தில் விவசாய கூலி வேலை செய்து வந்தாள்.

தினமும் இரண்டு படி அரிசி சமைத்து உண்பாள்; அப்படியும் பசி தீராது. யாரிடமும் சொல்லவும் வெட்கம். ஆகையால் காரணத்தை அறியவில்லை.

 

ஒரு நாள் அயலூரிலுள்ள அவளுடைய தங்கை, தன்னுடைய அக்காளைப் பார்க்க சொந்த ஊருக்கு வந்தாள். அக்காளும் வயல் வெளி வேலைகளை முடித்துக் கொண்டு மாலையில் பொழுது சாயும் முன் வீட்டிற்கு வந்தாள். அன்று தனது தங்கையும் பார்க்க வந்திருக்கிறாளே என்று கருதி, இரண்டரைப் படி அரிசியை எடுத்தாள்.

 

தங்கை சொன்னாள்,

“முதலில் விளக்கேற்றிவிட்டு சமை; இருட்டில் சமைக்கக்கூடாது. மேலும் என் வீட்டில் நான் விளக்கு வெளிச்சத்தில்தான் சாப்பிடுவேன்” என்றாள்.

அடுத்ததாக, அவள் பகன்றாள்,

“இது என்ன இரண்டரைப் படி அரிசி; இதில் பத்துப் பன்னிரெண்டு பேர் சாப்பிடலாமே! உனக்கு என்ன பைத்தியாமா?”

 

இதற்கு அக்காள் மறு மொழி நுவன்றாள்,

“இதோ பார் நான் தினமும் இரண்டு படி அரிசியில் சோறாக்குவேன்; நீ வேறு வந்திருக்கிறாய்; அதற்காக கூடுதல் அரைப்படி சேர்த்தேன் . என்னிடம் விளக்கிற்கு எண்ணெய் வாங்கும் அளவுக்கு காசு பணம் கிடையாது. நான் பாட்டுக்குச் சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கி விடுவேன்.”

தங்கை சொன்னாள்,

“எனக்கு சோறு கூட வேண்டாம்; விளக்கு இல்லாமல் ஒரு நிமிடம் கூட இரவுப் பொழுதைக் கழிக்க மாட்டேன். பூச்சி, பொட்டு, பாம்பு வந்தால் என்ன செய்வத? முதலில் கொஞ்சம் அரிசியைக் கொடுத்து யாரிடமாவது எண்ணெய் வாங்கி வா” என்றாள்

 

அக்காளும் அரை மனதுடன் சென்று எண்ணெயுடன் திரும்பி வந்தால்; சாப்பிடத் துவங்கினர். கால் வாசி பானை சோறு கூடத் தீரவில்லை; இருவருக்கும் வயிறு நிறைந்தது.

 

 

தங்கை சொன்னாள், “பார்த்தாயா? நான் சொன்னேன்; நீ கேட்கவில்லை; இவ்வளவு சோறு மிச்சம்”

 

அக்காள் சொன்னாள்,

“இதோ பார், எனக்கே புரியவில்லை; தினமும் இரண்டு படி சோறு வடித்தும் என் வயிறு காயும்; இன்று என்னவோ கொஞ்சம் சாப்பிட்ட உடனே பசி போய்விட்டது; எல்லாம் நீ வந்த முஹூர்த்தம் போலும்” என்றாள்

அப்போது திடீரென்று ஒரு சப்தம்

 

சொக்கா சொக்கா சோறுண்டோ?

சோழியன் வந்து கெடுத்தாண்டோ

 

வா நாம் போவோம்– என்று.

 

உடனே அக்காள் கேட்டாள்,

‘ஏய், யார் அங்கே? யார் சொக்கன்?’

 

அப்போது ஒரு குரல் ஒலித்தது,

“நான் தான் சொக்கன்; நான் ஒரு பேய்; நானூம் எனது நண்பனான பேயும் விளக்கில்லாத வீட்டுக்குப் போய் சாப்பிடுவோம். இதனால் அந்த வீட்டில் அதிகமாக சமைப்பார்கள்; இன்று ஒரு சோழியன் அயலூரில் வந்து கெடுத்துவிட்டாள் என்று என் நட்புப் பேயிடம் செப்பினேன். நாங்கள் இருவரும் வேறு வீட்டுக்குப் போய் விடுகிறோம்”.

 

இதக் கேட்ட அக்காளுக்கும் தங்கைக்கும் ஒரே ஆச்சர்யம், அதிசயம்!

 

அன்று முதல் அவள் அக்காள், வீட்டில் விளக்கு ஏற்றாமல் சமைப்பது இல்லை; எல்லோரும் சாப்பிடும் அளவு சோறுண்ட பின் அவள் வயிறும் நிறைந்தது; வாழ்வும் சிறந்தது.

 

இதுதான் சொக்கா சொக்கா சோறுண்டோ?

சோழியன் வந்து கெடுத்தாண்டோ

பழமொழியின் பின்னாலுள்ள கதை.

வாழ்க தமிழ்! 20, 000 பழமொழிகளுக்கும் கதையோ காரணமோ, அனுபவ அறிவோ உண்டு. எனது கட்டுரைகளைப் படித்து அறிக.

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

சுபம்

பரபரப்பூட்டும் விண்வெளி ஆய்வுத் தகவல்கள்! (Post No.4651)

 

Date: 23 JANUARY 2018

 

Time uploaded in London- 6-11 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4651

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

19-1-2018 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 48வது) கட்டுரை

 

பரபரப்பூட்டும் விண்வெளி ஆய்வுத் தகவல்கள்!

ச.நாகராஜன்

 

 

வானம் கண்களுக்கான தினசரி உணவு!” – ரால்ப் வால்டோ எமர்ஸன்

(The sky is the daily bread of the eyes! – Ralph Waldo Emerson)

 

1

பறக்கும் தட்டைப் பார்த்த பைலட்!

 

 

விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டு பிடித்தவற்றில் ‘டாப் ஸ்டோரீஸ்’ எவை என்று அறிய ஆவலாக இருக்கிறதா?

விண்வெளிப் பத்திரிகைகள் தொகுத்து விட்டன.

அவற்றில் முதலிடம் பெறும் சிலவற்றைக் காண்போம்.

அமெரிக்க சூப்பர்சானிக் ஜெட்டின் பெயர் F18. இதனுடைய வேகத்தை விட அதிகமாகப் பறந்த ஒன்றை விஞ்ஞானிகள் இப்போது அறிந்துள்ளனர்!

 

 

அது பறந்த வேகத்தில் கீழே இருந்த கடல் கொதித்துக் கொந்தளித்தது!. எங்கிருந்து வந்தது, எங்கு போனது என்பதைக் கண்டுபிடிக்க முடியாதபடி மாயமாய் அது மறைந்து விட்டது!

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு ஒரு கடற்படையைச் சேர்ந்த ஒரு பைலட் இந்த தகவலை அளித்துள்ளார். டேவி ஃபேவர் என்ற அந்த பைலட் இப்படிப்பட்ட பறக்கும் தட்டை 2004இல் பார்த்தாராம். அது பறந்த வேகத்தைப் போல இன்னொரு பொருளை நான் வாழ்நாளில் பார்த்ததில்லை என்பதை பிரமிப்புடன் அவர் பதிவு செய்திருக்கிறார்

 

 

2007ஆம் ஆண்டு அமெரிக்க அரசு இப்படிப்பட்ட பறக்கும் தட்டுகளைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டது. 2012இல் இந்த ஆய்வுக்கான செலவு  220 லட்சம் டாலர் என்ற தொகையை எட்டிய போது செலவைத் தாக்குப் பிடிக்க முடியாமல் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் டைம்ஸ் பத்திரிகையோ இந்தத் திட்டம் இன்னும் இருக்கிறது என்று அழுத்தம் திருத்தமாக இப்போது தெரிவித்துள்ளது.

 

1950களில் காணப்பட்ட பறக்கும் தட்டுகளைப் பற்றிய இரகசிய ஆவணங்களை அமெரிக்க புலனாய்வு ஏஜன்ஸி 2016இல் வெளியிட்டுவிட்டது. இந்தப் பறக்கும் தட்டு செய்தி தான் இன்றைய பரபரப்புச் செய்தி!

 

2

நம் மண்டலத்திற்கு வந்த விருந்தாளி ஔமுவாமுவா!

 

இன்னொரு செய்தி, 2017ஆம் ஆண்டு, நமது சூரிய மண்டலத்திற்கு வருகை புரிந்த ஒரு “விருந்தாளியைப்” பற்றிச் சொல்கிறது!

அது எங்கிருந்து வந்தது என்பது புரியவில்லை. ஆனால் உற்சாகமடைந்த விண்வெளி ஆர்வலர்கள் அது பல்வேறு கிரகங்களுக்கு இடையே பறக்கும் ‘இண்டர்ஸ்டெல்லர் விண்கலம்’  என்று குதூகலப்படுகின்றனர்.

 

 

ஹவாயில் பான் STARRSI என்ற ஒரு அரியவகை டெலஸ்கோப்பை வைத்து ஆராயும் போது இது சென்ற 2017 அக்டோபரில் தென்பட்டது.

 

இது செல்லும் பாதையை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அது சூரிய மண்டலத்தையும் விட்டுத் தாண்டிச் சென்று ஓடும் ஒரு பாதையில் செல்லும் விண்கலம் என்று கண்டுபிடித்துள்ளனர். சும்மா போகிற போக்கில் இது நமது சூரிய மண்டலத்தை எட்டிப் பார்த்திருக்கிறது.

 

டிசம்பரில் இது பற்றிய ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள் இதற்கு ஔமுவாமுவா (Oumuamua) என்ற பெயரைச் சூட்டினர். இது ஒரு ‘காமட்’டாக இருக்கலாம் என்பது அவர்களின் கணிப்பு.

சூரியனால் அது எப்படி தகிக்கப்படாமல் இருக்கிறது? இதற்கு விஞ்ஞானிகள் சொல்லும் சமாதானம் அந்த விண்பொருளைச் சுற்றி கார்பன் நிறைந்த பூச்சு இருந்து அதைச் சூரிய உஷ்ணத்திலிருந்து காத்திருக்கக்கூடும் என்கின்றனர். இதன் சிக்னலைக் கண்டுபிடிக்க பல ரேடியோ அலைவரிசையில் முயன்று பார்த்தும் இது சிக்கவில்லை. ஆகவே மறைந்திருந்து தாக்கும் ஒரு ரகசிய முறையில் இது பறந்திருக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். அப்படியானால் இது அயல் கிரகம் ஒன்றிலிருந்து வந்த பறக்கும் பொருள் என்று ஆகி விடும்.

 

 

3

அயல்கிரக பாக்டீரியா!

 

அடுத்த செய்தி ரஷியாவிலிருந்து வருகிறது. ரஷிய விண்வெளி வீரரான ஆண்டன் ஷ்காப்லெரோவ் (Anton Shkaplerov)  2017 நவம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பாக்டீரியாவைப் பற்றித் தகவல் அளித்திருக்கிறார்.பன்னாட்டு விண்வெளி நிலையமான இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு வெளியில் காணப்பட்ட இந்த பாக்டீரியா அயல்கிரகம் சார்ந்த ஒன்று என்கிறார். ரஷிய அரசு செய்தி நிறுவனமான டாஸ் நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் விண்வெளி ஸ்டேஷனின் முகப்பிலிருந்து சேகரிக்கப்பட்ட சாம்பிள்கள் பூமிக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்கிறார்.

ஆனால் சில ஆய்வாளர்களோ இது பூமியிலிருந்து ஏற்பட்ட தொற்றுக் கிருமி தான் என்கின்றனர். இப்படி விண்வெளி உயிரினம் பற்றி ரஷியா 2014இல் ஒரு பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளது. அதை அப்போதே அமெரிக்கா மறுத்தது. இப்போதும் இந்த செய்தி ரஷிய செய்தி என்பதால் “என்னத்தைச் சொல்வது” என்கிறது!

 

4

செவ்வாயில் நீர் ஆதாரம் இல்லை!

இன்னொரு செய்தி செவ்வாய் கிரகம் பற்றியது! அவ்வப்பொழுது செவ்வாயில் நீர்ப் பரப்பு இருக்கிறது; நிச்சயமாக இருக்கிறது என்று தகவல்கள் வரும். 2015இல் இப்படி நீர் இருப்பதற்கான அறிகுறியை அறிவியல் ஆய்வு உறுதி செய்தது. ஆனால் 2016இல் இப்படி நீர் இருப்பது ஒருவேளை விண் மண்டலத்திலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு வந்து விழுந்ததோ என்ற ஐயப்பாட்டை இன்னொரு ஆய்வு ஏற்படுத்தியது.

ஆனால் 2017இல் நடத்தப்பட்ட இரு ஆய்வுகள் மூலமாக அங்கு நீர் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று அறியப்படுகிறது!

 

 

5

உஷ்ண கிரகத்தில் டைட்டானியம் பனி!

கொசுறுத் தகவல் ஒன்று! ஹப்பிள் டெலஸ்கோப்பை வைத்து விண்வெளியை ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள் கெப்ளர் – 13 Ab என்ற கிரகத்தை ஆராய்ந்த போது அவர்கள் திகைத்தனர். இது ஒரு எக்ஸோபிளானட். அதாவது சூரிய மண்டலத்திற்கு அப்பால் இருக்கும் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வரும் கிரகம்!

இது பிரம்மாண்டமான வியாழ கிரகத்தை விட ஆறு மடங்கு பெரியது. 1730 ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கிறது. (இதை மைல் கணக்கில்  கணக்கிட்டால் மலைப்பு தான் வரும்). இதன் உஷ்ணம் 2760 டிகிரி செல்ஸியஸ்! இந்த கிரகத்தில் டைட்டானியம் டை ஆக்ஸைடு பனி போல படர்ந்திருக்கிறதாம்!

மிக அதிக உஷ்ணநிலை கொண்ட கிரகத்தில் டைட்டானியம்  எப்படிப் படர முடியும். விஞ்ஞானிகள் பல்வேறு கொள்கைகளை முன் வைக்கின்றனர்.

ஆக இப்படிப் பல மர்மங்களை விண்வெளி நமக்குத் தருகிறது.

விஞ்ஞானிகள் ஆர்வத்துடன் “துப்புத் துலக்கும்” வேலையை ஷெர்லாக்ஹோம்ஸ் போலச் செய்து வருகின்றனர்.

எல்லையற்ற பிரபஞ்சவெளியில் எல்லையற்ற மர்மங்கள்!!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல கணித மேதையும் விஞ்ஞானியும் தத்துவ ஞானியுமான ப்ளெய்ஸ் பாஸ்கல் (Blaise Pascal பிறப்பு 19-6-1923 மறைவு 23-11-1662) வாழ்நாள் முழுவதும் உடல் வியாதியால் அவஸ்தைப்பட்டவர். பதினெட்டாம் வயதிலிருந்து தினமும் வலியினால் துடித்து வந்தவர்.

அவருக்கு 1654ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதியன்று ஒரு விசித்திரமான சம்பவம் நடைபெற்றது. இரவு 10.30லிருந்து 12.30க்குள் ஒரு அபூர்வமான ஆன்மீக அனுபவத்தை தனது பாரிஸ் வீட்டில் படுத்துக் கொண்டிருந்த போது அவர் அனுபவித்தார். அதை அவரது வரலாற்றை எழுதிய ஆசிரியர்கள் ‘தி நைட் ஆஃப் ஃபயர்’ (The night of Fire)  என்று பெயர் சூட்டிக் குறிப்பிடுகின்றனர்.

தனது அனுபவத்தை அவர் ஒரு சின்ன பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டார். அதை வாழ்நாள் முழுவதும் இரகசியமாகப் பாதுகாத்தார். அந்த பேப்பரை தனது சட்டையின் உள் பையில் வைத்துக் கொண்டே வாழ்ந்தார்.

 

அப்படி ஒரு பேப்பர் இருப்பது அவர் இறந்த பிறகு தான் தெரிந்தது. அந்த வரிகளுக்கு மெமோரியல் (Memorial) என்று பெயர்.

அந்த ஜொலிக்கும் தீயில் அவர் கண்டது என்ன? தனது தெய்வீகக் காட்சியைக் கண்டவுடன் அவர் உடனடியாக எழுதியது இது:

God of Abraham, God of Isaac, God of Jacob, not of the philosophers and scholars. Certitude, certitude, feeling, joy, peace. God of Jesus Christ. My God and your God. Thy God will be my God.

 

இப்படி ஆரம்பித்துத் தொடர்கிறது வரிகள். ‘இயேசு கிறிஸ்துவுக்கு முழுதுமாக சரணாகதி’ என்ற இந்த அனுபவத்தைத் தொடர்ந்து அவர் கணிதத்தையும் அறிவியலையும் விட்டு விட்டார்.

ஆன்மீக திசையில் அவர் பாதை திரும்பியது.

“என்னைக் கடவுள் ஒருபோதும் கைவிட வேண்டாம்” (May God never Abandon me) என்பது தான் அவர் இறப்பதற்கு முன் எழுதிய கடைசி வரி!

அபூர்வமான ஆன்மீக அனுபவம் பெற்ற உலகின் ஒரே அதிசய விஞ்ஞானி பாஸ்கல் தான்!

***

 

 

 

 

Where is Heaven? Sangam Tamil Poets and Chanakya Answer !! (Post No.4650)

Written by London Swaminathan 

 

Date: 22 JANUARY 2018

 

Time uploaded in London – 20-22

 

Post No. 4650

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

There are many amazing similarities between Sangam Tamil poets and Chanakya. There is a time gap of at least five hundred years and there is a distance gap of at least two thousand miles between the two. But yet they had similar views on life. Where is Heaven? They answer in the same way!

 

Pisiranthaiyaar was a famous Tamil poet of Sangam age. He must have lived in the first or second century of our era. And we all knew that Chanakya lived in the third century BCE. Chanakya was a great genius and his Niti shastra and Arthashastra are very famous.

What is the secret of black hair? 

 

Stress triggers or complicates most of the diseases is a modern discovery. But a Tamil Cankam/ Sangam poet called Pisiranthaiyar who lived 2000 years ago gives the secret of his black hair at a ripe old age in a beautiful Tamil poem.

When Pisiranthaiyar went to see the great Chola king Kopperun cholan (who was starving himself to death following an ancient Tamil rite) all were amazed to see an old poet without any grey hair. When they asked about the secret of his black hair, he sang;

“How can it be you don’t have any grey hair, through you have lived for many years?

You have asked the question and I will give you an answer!

My children have gone far in learning. My wife is rich in her virtue!

My servants do what I wish and my king, who shuns corruption, protects us!

And in my city there are many noble men who through deep knowledge, have acquired calm, have become self -controlled, and the choices they make in their lives are built on the quality of restraint.”

-(Purananuru 191 by Pisiranthaiyar)

To put it in a nutshell:

My son is well educated ( so obedient)

My wife is very cooperative

My servants are obedient

My king is a good ruler

My town is full of scholars

If one has all these, one need not worry. If you lead a care free life, you won’t be stressed. You will be ever young like Markandeya. Modern science says that stress triggers blood pressure, heart diseases, cancer and diabetes.

Now look at what Chanakya says about the same topic

 

“He whose son is obedient, whose wife acts as per his wish and who is contented with what he has, for him the heaven is here, in this world. Itself.”

Chanakya  Niti, chapter 2, sloka 3

 

Yasya putra vasiibhuutho bhaaryaa chandaanugaaminii

Vibhave yasya santhaanushti tasya svarga ehaivahi

 

Xxx

Education in Low Family 

‘In extremity, one is permitted to learn even the Vedas from someone who is not a Brahmin and to walk behind him and obey him like a Guru as long as the instruction lasts’ — Manu 2-241

It is interesting that Tamil king Nedunchezian who lived 2000 years ago also said the same about education in verse 183 of Purananuru.

A rough translation of the verse runs like this:

“Learn by all means, spend money on education, render help to your Guru. The reason is that even mothers favour the learned among her sons. Even the king would call for service the learned even if he is the youngest in a family. Even among the four castes, if a low caste man is educated, the high caste would respect him and follow him”

 

Tamil poet Tiruvalluvar who lived 1500 years ago also said the same:-

“Though high born, an unlettered man is lower than a learned man of lower birth” – Kural  409

 

Chanakya says,

“What has one to do with a high family where there is no education? One born in a low family, if learned is adored even by gods”.

Chapter 8, sloka 19

Kim kulena visaalena vidhyaahiinena dehinaam

Dushkuliino api vidhvaamsca devairapi supuujyate

Great Men Think Alike!!!

Subham

 

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா QUIZ (Post No.4649)

Written by London Swaminathan 

 

Date: 22 JANUARY 2018

 

Time uploaded in London – 17-40

 

Post No. 4649

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா — என்றெல்லாம் பெருமையாகச் சொல்லிக் கொள்வோம்; அந்தப் பெருமைக்குரியவர் நீங்களா என்பதை கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதில் தந்து நிரூபியுங்கள் பார்க்கலாம். இந்த வாசகங்களை யார் சொன்னார்கள்?

 எந்த நூலில் சொன்னார்கள்?

 

1.கண்ணாடிக் கன்னத்தைக் காட்டி என் உள்ளத்தைப்

புண்ணாக்கிப் போடாதே, போ போ மறைந்துவிடு

xxxxxxxx

 

2.மா முது பார்ப்பான் மறைவழி காட்டிட

தீவலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை!

xxxxxx

 

3.செயற்கரிய செய்வார் பெரியார்

 

xxxxx

 

4.அஞ்சுவதி யாதொன்றுமில்லை அஞ்ச வருவதுமில்லை

 

xxxxx

 

5.வடகலை தென்கலை வடுகு கன்னடம்

இடம் உள பாடை யாது ஒன்றின் ஆயினும்

xxxxxx

 

6.அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்

திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பிமறம் கந்தாக நல் அமர் வீழ்ந்த நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க!

xxxxx

 

7.வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை, ஐயோ!

எலி இழுத்துப் போகின்றது, என்?

xxxxx

 

8.ஐயநா வழித்தாளுக்கு அங்காந்திட

வையம் ஏழும் கண்டாள் பிள்ளை  வாயுளே

xxxxxxxx

 

9.சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே

தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம்;

நீதிநெறியினின்று பிறர்க்குதவும்

நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்

xxxxxx

 

10.தமிழ்ச் சொல் வடசொல் என்னும் இவ்விரண்டும்

உணர்த்தும் அவனை உணரலும் ஆமே

 

xxxxxx

 

ANSWERS:-

  1. பாரதிதாசன் பாடல்கள், 2. இளங்கோ, சிலப்பதிகாரம், 3. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 4. அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 5. கம்பன் கம்பன், கம்ப ராமாயணம், 6. சங்க கால அவ்வையார் ,புறநானூறு, 7. காளமேகம், , தனிப்பாடல்கள், 8. பெரியாழ்வார் திருமொழி, திவ்யப் பிரபந்தம், 9. பாரதியார் பாடல்கள், 10. திருமூலர் எழுதிய திருமந்திரம்

 

–SUBHAM–

 

 

சிறந்த மூலிகை எது? சாணக்கியன் தகவல் (Post No.4648)

Written by London Swaminathan 

 

Date: 22 JANUARY 2018

 

Time uploaded in London 8-17 am

 

 

 

Post No. 4648

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

கௌடில்யர் என்றும் சாணக்கியன் என்றும் பெயர் கொண்ட மேதாவி 2300 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வாழ்ந்தார். ஏழையாகவும், அவலட்சணமாகவும் இருந்த அந்த ப்ராஹ்மணன், மகத சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தார். பல நீதி நூல்களை யாத்தார். உலகின் முதல் பொருளாதார நூலான அர்த்தசாஸ்திரத்தையும் எழுதினார். அவர் டாக்டர் அல்ல. ஆயினும் போகிற போக்கில் பல மருத்துவக் குறிப்புகளையும் பாடி வைத்துள்ளார். மூலிகையில் சிறந்தது எது என்றும்,  நீரின் மஹிமை, நெய்யின் சக்தி என்ன   என்றும் சொல்லிவைத்தார்.

 

இதோ மூலிகையில் சிறந்தது எது என்ற ஸ்லோகம்:-

 

ஸர்வௌஷதீனாம் அம்ருதா ப்ரதானா

ஸர்வேஷு ஸௌக்யேஷ்தசனம் ப்ரதானம்

ஸர்வேந்த்ரியானாணாம் நயனம் ப்ரதானம்

ஸர்வேஷு காத்ரேஷு சிரஹ ப்ரதானம்

சாணக்ய நீதி, அத்யாயம் 9, ஸ்லோகம் 4

 

பொருள்:

எல்லா மூலிகைகளிலும் சிறந்தது அம்ருதா

மகிழ்ச்சியான விஷயங்களில் சிறந்தது   உணவு உண்ணல்;

ஐம்புலன்களில் சிறந்தது கண்;

உடல் உறுப்புகளில் சிறந்தது தலை.

 

எண்சாண் உடம்புக்கு சிரசே (தலை) பிரதானம் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் இவர் சொல்லக்கூடிய அம்ருதாவை அம்ருதவல்லி என்ற மூலிகையாக வியாக்கியானக்காரர்கள் கருதுகின்றனர்

 

எது அமிர்தவல்லி என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. தமிழில் சீந்தில் கொடி என்றும் இந்தியில் ‘குடூசி’

என்றும் சொல்லுகின்றனர். இதனுடைய தாவரவியல் பெயர் கொக்குலஸ் கார்டிபோலியஸ்  (Cocculus Cordifolius OR Tinospora cordifolia) என்று சாணக்கிய நீதியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த அறிஞர் சத்ய வ்ரத சாஸ்திரி சொல்கிறார். கார்டிபோலியஸ் என்றால் இருதய வடிவிலான இலை என்று பொருள்; இந்த மாதிரி இருதய வடிவு இலைகள் அரச மரத்துக்குக் கூட உண்டு.

 

 

சீந்தில் கொடிக்கு பல    மருத்துவ குணங்கள் உண்டு; இது சர்க்கரை வியாதி, புற்று நோய் ஆகியவற்றுகும் வேறு பல நோய்களுக்கும் மருந்து என்று ஆயுர்வேத நூல்கள் பகரும்.

 

 

சிலர் அமிர்தவல்லி, ஓம வல்லி என்றும் சொல்லுவர். எப்படியாகிலும் குறிப்பிடப்படும் எல்லா மூலிகைகளுமே நன்மை பயக்கக்கூடியவையே.

XXX

நெய்யின் மஹிமை

 

சாணக்கியன் நெய், மாமிசம், பால் பற் றிப் பல சுவையான விஷயங்களைக் குறிப்பிடுகிறான். இதோ ஸ்லோகங்கள்:

 

அன்னாத் தசகுணம் பிஷ்டம் பிஷ்டாத் தசகுணம் பயஹ

பயசோ அஷ்ட குணம் மாம்ஸம் மாம்ஸாத் தசகுணம் க்ருதம்

சாணக்ய நீதி, அத்யாயம் 10, ஸ்லோகம் 19

 

 

அரிசியைவிட பத்து மடங்கு சக்தி வாய்ந்தது மாவு; மாவை விட பத்து மடங்கு சக்தி வாய்ந்தது பால்;  பாலை விட எட்டு மடங்கு சக்தி வாய்ந்தது மாமிஸம்; மாமிஸத்தை விட பத்து மடங்கு சக்தி வாய்ந்தது நெய்.

 

XXXX

 

சாகேன ரோகா வர்தந்தே பயஸா வர்ததே தனுஹு

க்ருதேன வர்ததே வீர்யம் மாம்ஸான் மாம்ஸம் ப்ரவர்ததே

சாணக்ய நீதி, அத்யாயம் 10, ஸ்லோகம் 20

 

 

பொருள்

காய்கறிகள் மூலம் வியாதிகள் வருகின்றன; பால் மூலம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது; நெய் மூலமாக ஆண்களின் விந்து பெருகுகிறது; மாமிஸம் மூலம் உடலில் மாமிஸம் கூடுகிறது.

 

இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்; கழுவாத காய்கறிகளோ, கெட்டுப்போன காய்கறிகளோ உடலுக்குக் கேடு விளைவிக்கும். மேலும் மேலை நாட்டு வைத்திய முறையில் இல்லாத பத்தியம் என்பது ஆயுர்வேதம், சித்த மருத்துவ சிகிச்சைகளில் உண்டு; சிற்சில சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளும் போது சிற்சில காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும் என்று நாட்டு வைத்தியர்கள் சொல்லுவர். அந்த வகைகளிலும் காய்கறிகள் நோயை உண்டாக்கும் என்ற வாசகம் பொருந்தும்

 

மாமிஸத்தால் உடல் மாமிஸம் அதிகரிக்கும் எனபது வள்ளுவனும் சொன்ன அருமையான வாக்கு ஆகும்

 

 

தன்னூன் பெருக்கற்குத்தான் பிறிது ஊனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள் (குறள் 251) என்பார்

 

“தன் உடம்பைப் பெருக்குவதற்கு பிற உயிரின் ஊனைக் கொன்று தின்பவனுக்கு வாழ்க்கையில் அருள் எப்படி இருக்க முடியும்? “(குறள் 251)

வள்ளுவனின் கேள்வி நல்ல கேள்வி.

 

XXX

 

நீரின் மஹிமை

 

இன்னும்  ஒரு பாட்டில் நீரின் மஹிமை பற்றி செப்புகிறார்:

அஜீர்ணே பேஷஜம் வாரி ஜீர்ணே வாரி பலப்ரதம்

போஜனே வாரி சம்ருதம் வாரி போஜனாந்தே விஷப்ரதம்

—சாணக்ய நீதி, அத்யாயம் 8, ஸ்லோகம் 7

 

 

பொருள்

அஜீர்ணக் கோளாறு உள்ளவர்கள் தண்ணீர் சாப்பிடுவது மருந்து போலாகும்; ஜீரண சக்தியோடு உடலுக்குப் பலத்தையும் தரும்; சாப்பாட்டுடன் நீர் அருந்துவது அமிர்தத்துக்கு ஒப்பாகும்; சாப்பிட்டு முடித்த பின்னர் குடிக்கும் நீர் விஷத்துக்குச் சமம்.

 

இவ்வாறு சாணக்கியன் சொல்லும் பல மருத்துவக் குறிப்புகள் நீதி வாசகங்களுக்கு இடையே உள்ளன.

 

–SUBAHM–

 

தேர் ஓடத் தன் தலைமகன் பலி (Post No.4647)

Date: 22 JANUARY 2018

 

Time uploaded in London- 8-04 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4647

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

தமிழ் இன்பம்

தேர் ஓடத் தன் தலைமகனைப் பலி கொடுத்த வேணாடன்!

 

ச.நாகராஜன்

கொங்கு மண்டலத்தின் பெருமையை நூறு பாடல்களில்  கூறும் கொங்கு மண்டலச் சதகம் தேர் ஓடுவதற்காகத் தன் தலை மகனைப் பறி கொடுத்த வேணாடனைப் பற்றிப் புகழ்ந்து கூறுகிறது.

சரித்திரம் இது தான்:-

தென்கரை நாடு தாராபுரத்தை அடுத்த கொற்றனூரில்           வீ ற்றிருக்கிறார் இறைவன் அப்பிரமேயர். அவர் எழுந்தருளியுள்ள தேர் ஒரு சமயம் நிலை விட்டுப் பெயரவில்லை.

அந்தக் காலத்தில் தேர் ஓட்டத் திருவிழா நடை பெறும் போது தேர் நிலைக்கு வந்து சேர்ந்த பின்னர் தான் பெரியோர் உண்ணுவது வழக்கம்.

இங்கோ தேரே நகரவில்லை. ஆகவே ஊர் மக்கள் அனைவரும் வருந்தினர். என்ன செய்வது என்று தெரியாத நிலை!

பல ஆட்களைக் கூட வைத்து தேரை இழுத்துப் பார்த்தனர்.

ஒவ்வொரு முறையும் தேர் வடம் அறுந்ததே தவிர தேர் நகர்ந்தபாடில்லை.

அப்போது அங்கு வந்திருந்த சிறுமி ஒருத்தி ஆவேசமுற்றுப் பேசலானாள்.

“மயங்க வேண்டா. இது ஒரு பூதத்தின் செய்கை. ஒரு மகனாக இருக்கும் தலைப் பிள்ளையை வெட்டிப் பலி கொடுத்தால் தேர் நிலை பெயரும். கவலை தீரும்” என்று கூறினாள் அவள்.

அந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த பெரிய குலத்தானான வேணாடன் இதனைக் கேட்டான்.

“ஏராளமானோர் நலனுக்காக ஒரு பிள்ளையை பலி இடுதல் ஒரு பெரிய காரியமா, என்ன” என்று கூறித் தன் தலைமகனான ஒரே பிள்ளையைத் தேர்க்காலில் பலி கொடுத்தான்.

உடனே தேர் நகர்ந்தது. பின்னர் நிலை வந்து சேர்ந்தது.

அனைவரும் அமுதுண்டனர்.

இதனைக் கேள்விப் பட்ட விஜயநகர மன்னன் (விஜயநகர ராயர்) இந்த அரிய செயலை மெச்சி அவருக்குப் பல மேன்மகளை அளித்தான்.

இப்படி ஒரு அரிய வீ ரன் வாழ்ந்த மண்டலம் கொங்கு மண்டலம் என்று புகழ்கிறா கொங்கு மண்டல சதகத்தை இயற்றிய விஜயமங்கலம் கார்மேகக் கவிஞர்.

பாடலைப் பார்ப்போம்:

கொற்றையிற் வீற்றரு ளப்பர மேயர் கொடிஞ்சி செலப்

பெற்ற தன் பிள்ளையை வெட்டிவிட் டானற் பெருமையுற

உற்றன ராயர் பொற் சிம்மா தனத்தி லுவந்து வைத்த

மற்றெறி நீள்புய வேணாடன் வாழ்கொங்கு மண்டலமே

(பாடல் எண் : 94)

இந்த மாவீரனைப் பாராட்டி உள்ள இன்னொரு வெண்பா இது:

 

நாத னிரதம் நடவாது செய்கொடிய

பூத மகலப் புதல்வனைவி – நோதமுற

வெட்டிப் புகழ்படைத்தான் வேணுடையான் கோற்றையான்

எட்டுத் திசைமகிழ வே

 

இப்படிப்பட்ட தியாகங்களை நினைக்கவே பிரமிப்பாயிருக்கிறது!