2 கதைகள்- பனை விதையும் ஆலம் விதையும் (Post No.5331)

Akbar worshiping Sun

Written by London swaminathan

Date: 17 August 2018

 

Time uploaded in London – 7-34 AM  (British Summer Time)

 

Post No. 5331

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை

வானுற வோங்கி வளம்பெற வளரினும்

ஒருவர்க்கிருக்க நிழலாகாதே –

நறுந்தொகை (வெற்றி வேற்கை)

அதிவீரராம பாண்டியன்

 

இனிமை மிக்க பனையின் ஒரு பழத்தை விதையாக ஊன்றி அது வானோங்கி செழித்து வளர்ந்தாலும் ஒருவர்கூட நிற்கக் கூடிய நிழலை அது தராது.

மொகலாய மன்னனான ஷாஜஹானின் புதல்வனான அவுரங்கசீப் , கல்வி கேள்விகளில் சிறந்தவன்; ஆனால் மஹா மூர்கன். மதவெறியன்; பேராசை பிடித்த கொலைகாரன். தனது மூன்று சஹோதர்களை அவர்களின் புதல்வர்களோடு கூண்டோடு கொலை செய்து சிங்காதனம் ஏறினான். ஷாஜஹானை நீ கட்டிய தாஜ்மஹலை பார்த்துக்கொண்டே செத்துப்போ என்று சாகும் வரை சிறையில் அடைத்தான். ராஜ்யத்தை சரியாக ஆளத் தெரியாமல் குடிமக்களையும் சிற்றரசர்களையும் பகைத்துக் கொண்டான். அனைவராலும் வெறுக்கப்பட்டு, முடிவில் உதவி செய்ய யாரும் இல்லாமல் கஷ்டப்பட்டு செத்தான். அவனோடு மொகலாய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது. பின்னர் பெயரளவுக்கு அரசர் என்று ஓரிருவர் இருந்தனர். அரச சம்பத்து கோடிக்கணக்கில் இருந்தும் அவனோ அவனது குடிமக்களோ மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை. அவன் பனை விதபோல ஓங்கி வளர்ந்தான். ஆனால் ஒருவருக்கும் நிழல் தர முடியவில்லை.

xxx

 

தெள்ளிய வாலின் சிறு பழத்தொரு விதை

தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்

நுண்ணிதே யாயயினும் அண்ணல் யானை

அணிதேர்ப் புரவி ஆள் பெரும்படையொடு

மன்னர்க்கிருக்க நிழலாகும்மே

நறுந்தொகை (வெற்றி வேற்கை)

அதிவீரராம பாண்டியன்

 

தெள்ளி எடுக்கத்தக்க ஆல மரத்தின் சிறு விதையானது, தெளிந்த நீர்க்குளத்தில் உள்ள சிறிய மீனின் முட்டையை விடச் சிறிதானாலும், பெருமை பொருந்திய யானையோடு அழகிய தேரும், குதிரையும் காலாட் படைகளும் கொண்ட மன்னரோடு தங்குவதற்கு நிழல் தரும்.

 

பெரிய விதையுடைய பனை மரம் நிழல் தராது. சிறிய விதையுடைய ஆல மரம் மன்னரின் நாற்படைக்கும் நிழல் தரும். ஆகவே மக்கள் இரு தரப்பட்டவர்கள்; சிலர் பனை மரம்; சிலர் ஆலமரம்.

 

ஹுமாயூன் புத்திரனான அக்பர் நிராதரவற்ற நிலையில், தாயாரான ஹாமிடாவுக்கும் சாப்பாடு போட முடியாத நிலையில் ஸிந்து தேச காட்டுப் பகுதியில் பிறந்தார். அவர் பட்ட கஷ்டம் சொல்லத் தரமன்று; தனது 18ஆவது வயதில் வளர்ப்புத் தந்தையான பைராம்கானை அடக்கிவிட்டு தானே சிங்காதனம் ஏறினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து வட இந்தியா முழுதையும் வசப்படுத்தி ஆட்சி புரிந்தார். அவர் ஆட்சிக் காலத்தில் போர்கள் நடந்தன; ஆனால் மக்கள் கலகம் என்பது கிடையாது. அவரும் ஜாதி மத வேறுபாடின்றி கல்வி, கேள்விகளில் சிறந்தோருக்கு பெரிய பதவிகளைக் கொடுத்தார்.

மக்களின் சௌகரியங்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்தார். எப்போதும் தத்துவ விசாரத்தில் ஈடுபட்ட அறிஞர் குழுவால் சூழப்பட்டு கீர்த்தி பெற்றார். அவர் கூட்டிய தர்பாரில் பொதுமக்கள் யார் சிபாரிசு இன்றியும் மனுக்களைத் தரமுடிந்தது. உடனே அதற்கு நடவடிக்கையும் எடுத்து புகழ் பெற்றார். மக்கள் அவரை பழமரத்தை நாடும் பறவைகள் போல நாடினர்.

 

-SUBHAM-

Odd One Out in a Nudist Colony! Clothing Anecdotes (Post No.5323)

Odd One Out in a Nudist Colony! Clothing Anecdotes (Post No.5323)

 

Compiled  by London swaminathan

Date: 17 August 2018

 

Time uploaded in London –7-05 am (British Summer Time)

 

Post No. 5323

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

Whistler was standing bareheaded in a London hat shop while he was looking for his size hat. A short red faced man with a large waistline burst into the door and, mistaking Whistler for a clerk, exploded, “see, here, you, this hat doesn’t fit”.
The artist casually eyed the man from head to foot, then drawled out,
“Well, neither does your coat, what is more if you will pardon my saying so, I will be hanged if I care much for the colour of your trousers”.

((James Abbott McNeill Whistler (/ˈwɪslər/; July 11, 1834  – July 17, 1903) was an American artist, active during the American Gilded Age and based primarily in the United Kingdom- Wikipedia))


Xxx

Slip Slipped out!

A young lady on her way to business was standing in a crowded New York bus going down fifth avenue one morning. She was worrying over the age old problem of whether or not her slip was showing. Unable to twist around to see, she put the question directly to a small boy standing next to her.
No, Madame, he informed her politely. A few blocks farther she alighted and started to move briskly along crowded Fifth Avenue. Then, to her horror, she was hailed by the voice of the little boy, calling to her as the bus went by, yelling at the top of his lungs, “Your slip is showing now, lady, it’s showing now!”

(( a piece of underwear for a woman or girl that is like a dress or skirt))

Xxx

ODD ONE OUT! in a nudist colony!

There are numerous stories of the embarrassing predicaments that have ensnared public speakers at one time or another. Probably no worse fate ever befell any of them than that of the lecturer who, with some trepidation, had finally consented to address a banquet at a nudist colony.

 

Upon his arrival at the extensive premises, he was greeted by large numbers of men and women in their pristine natural state. He was shown into the headquarters building and it was suggested he might like to prepare for dinner.

Upstairs in the room to which they allotted him, he felt that there was nothing he could do except face the fact that he was expected to divest himself of his garments. In extreme mental anguish, he determined to be equal to the situation. At last, hearing the bell for the dinner, he marched downstairs as bare as Adam, to discover, to his horror, that the colonists had all assumed formal dress in deference to the speaker.
Xxx

Where is the Horse?

When the great Duke of Argyle was one night at the theatre in a side box a person entered the same box in boots and spurs. The Duke arose from his seat and with great ceremony, expressed his thanks to the stranger who, somewhat confused, desired to know for what reason he received those thanks. The Duke gravely replied,
For not bringing your horse into the box.

((SPUR= a device with a small spike or a spiked wheel that is worn on a rider’s heel and used for urging a horse forward.))
Xxx
Nelson Garter
After the death of Nelson, English ladies were fond of wearing the Trafalgar garter on which was inscribed the memorable signal,

“England expects every man to do his duty”.

 

(( GARTER = a band worn around the leg to keep up a stocking or sock.))

Xxx

Lincoln Socks
Old Mrs Smith of South Orange N.J. ,who kept a small shop in Washington during the civil war said,
Abraham Lincoln came in one day asking for socks, I said,
What colour?
Colour, why? I don’t know, I am sure
Finally he stooped down and took hold of the end of his pants.

Why I guess this colour is good enough for me.
He pulled it up. I looked for the socks and saw his bare skin.
Xxx  SUBHAM xxx

அடிமைக்கு அருளிய புத்தர்! (Post No.5330)

Written by S Nagarajan

Date: 17 August 2018

Time uploaded in London – 6-13 AM  (British Summer Time)

Post No. 5330

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

புத்த தரிசனம்

அடிமைக்கு அருளிய புத்தர்!

 

ச.நாகராஜன்

புத்தர் போன்ற பெரும் நிலையில் இருந்த ஒரு மகான் ஒரு ஏழை அடிமைக்கு அருளிய ஒரு சம்பவம் வரலாற்றுப் பிரசித்தி பெற்றதாகும்.

மழைக்காலத்தில் ஓரிடத்தில் சிறிது காலம் தங்குவது பெரியோர்களின் வழக்கம். அதன்படி புத்த பிரான் ஒரு சமயம் ஜேதவான மடாலயத்தில் தங்கி இருந்தார். மழைக்காலம் முடிந்த பிறகு அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானார்.

இதைக் கேள்விப்பட்ட கோசல மன்னன் அவரிடம் வந்து அவர் இன்னும் சிறிது காலம் அங்கேயே தங்கி இருந்து அருள் பாலிக்குமாறு வேண்டினான். அங்கிருந்த சங்கத் தலைவரான அனாத பிண்டிகாவும் புத்தரை அங்கேயே தங்கி இருக்குமாறு வேண்டினார். புத்தரின் சிஷ்யையான விசாகாவும் புத்தரைப் பணிவுடன் வேண்டி அவரை அங்கேயே தங்கி இருக்குமாறு வேண்டினார்.

ஆனால் புத்தர் அதற்கு இசையவில்லை. அவர் கிளம்ப ஆயத்தமானார்.

சங்கத் தலைவர் மனம் நொந்து தனது இருப்பிடம் ஏகினார். அவரிடம் பணியாளாக வேலை பார்த்த ஏழைப் பெண்மணியான புன்னா அவரைப் பார்த்து, “ஐயா, ஏன் உங்கள் முகம் இப்படி வாடி இருக்கிறது?” என்று கேட்டாள்.அதற்கு அவர்,”ஓ! புன்னா, நான் வருத்தப்படுவது உண்மை தான். ஏனெனில் புத்தர் இங்கிருந்து கிளம்பப் போகிறார். என்னால் முடிந்தவரையில் தடுத்துப் பார்த்தேன். என் முயற்சி வெற்றி பெறவில்லை” என்றார்.

உடனே புன்னா, “ஐயா! நான் புத்தரைப் போக விடாமல் தடுத்து நிறுத்துகிறேன்.அப்படி தடுத்து நிறுத்தினால் எனக்கு என்ன தருவீர்கள்?” என்று கேட்டாள்.

“நீ அப்படிச் செய்தாயானால், உன்னை எனது அடிமையாக இருப்பதிலிருந்து உடனடியாக விடுவிக்கிறேன்” என்றார் அவர்.

புன்னா நேரடியாக புத்தர் இருக்குமிடம் வந்து அவரைப் பணிந்து வணங்கினாள்.

“ஓ! மஹானே! போக வேண்டாம்.இங்கேயே இருங்கள்” என்று பணிவுடன் வேண்டினாள்.

புத்தர் புன்முறுவலுடன், நான் போகாததினால் உனக்கு என்ன நன்மை?” என்று கேட்டார்.

“ஐயன்மீர்! நான் ஒரு பெண்.நான் ஒரு அடிமை. நான் ஒரு பணியாள். நீங்கள் போகவில்லை என்றால் என் அடிமைத்தனத்திலிருந்து எனக்கு விடுதலை கிடைக்கும். எனக்கு விடுதலை கிடைத்தால் நீங்கள் கூறிய மூன்று அடைக்கலத்தைப் பெறுவேன். ஐந்து உபதேசங்களையும் எட்டு உபதேசங்களையும் கடைப்பிடிப்பேன்.அப்படிக் கடைப்பிடிப்பதன் மூலம் எனக்குப் பெறுதற்கரிய பேறு கிடைக்கும்” என்றாள் புன்னா.

புத்தர் யோசித்தார். அவரது தயை வெள்ளமெனப் பெருகியது. அவளுக்கு விடுதலை கிடைக்க வேண்டும், அத்துடன் அவள் அர்ஹந்த் என்ற உயரிய நிலையை அடைய வேண்டும் என்று விரும்பினார்.

புன்னாவிடம் அவர், “சரி! நான் இங்கேயே இருக்கிறேன்.” என்று அருளினார்.

இந்தச் செய்தியைக் கேட்ட சாவார்த்தி நகர மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.

கோசல மன்னன், சங்கத் தலைவர், விசாகா ஆகியோரும் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

மன்னனின் அழைப்பை ஏற்காதவர், சங்கத் தலைவராக இருந்த பணக்காரரின் வேண்டுகோளை மறுத்தவர், ஒரு சிஷ்யையின் வேண்டுகோளையும் மறுத்தவர் ஒரு ஏழை அடிமைப் பெண்ணின் வேண்டுகோளை ஏற்றது பெரிய சம்பவமாகக் கருதப்பட்டது – கருதப்படுகிறது – அன்றும், இன்றும்!

தான் சொன்னபடி புன்னாவை அடிமை நிலையிலிருந்து விடுவித்தார் சங்கத் தலைவர்.

புன்னா புத்தரின் உபதேசப்படி வாழ்ந்து உயரிய அர்ஹாந்த் என்னும் நிலையைப் பின்னால் அடைந்தார்.

புத்தரின் தயை எல்லையற்றது. அதை விளக்கும் ஏராளமான சம்பவங்களுள் முக்கியத்துவம் பெற்ற சம்பவம் இது.

***

 

ஒரு கதை- ‘மன்னவர்க்கழகு செங்கோல் முறைமை!’ (Post No.5329)

Written  by London swaminathan

Date: 16 August 2018

 

Time uploaded in London –12-11 (British Summer Time)

 

Post No. 5329

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

மன்னவர்க்கழகு செங்கோல் முறைமை- நறுந்தொகை, அதிவீரராம பாண்டியன்

 

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல் – குறள் 559

 

நீதி முறை தவறி மன்னன் ஆட்சி செய்தால் அவன் நாட்டில் மழை பெய்யாமல் போகும்.

 

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட

பெயலும் விளையும் தொக்கு – குறள்

தர்ம நூல்கள் செப்பும் படி ஆட்சி நடத்தும் மன்னவன் நாட்டில் மழையும் பெய்யும்; விளைச்சலும் பெருகும்.

திருவாரூரில் மனுநீதிச் சோழன் என்பவன் அரசாண்டு வந்தான். இவனது கதை பெரிய புராணத்திலும் , சிலப்பதிகாரத்திலும், பழமொழியிலும் உள்ளது. அவனது மகன் வீதி விடங்கன் என்பவன் சாலை விதிகளை மீறி நூறு மைல் (100 mph) வேகத்தில் தேரை ஓட்டிச் சென்றான். அபோது துள்ளிக் குதித்து வந்த ஒரு பசு மாட்டின் கன்று, தேர்க்கடியிடில் சிக்கி இறந்தது. அந்தக் காலத்தில் போக்குவரத்து போலீஸோ சிக்னல் லைட்டோ (No Traffic Police or Signal light) கிடையாது. ஆனால் அரண்மனை வாசலில் எமர்ஜென்ஸி பெல் (Emergency alarm bell)  உண்டு. யாருக்காவது துயரம் என்றால் உடனே ஓடிப் போய் காலிங் பெல்லை (Calling Bell) அமுக்கினால் அரசின் வேலைக்காரர்கள் அல்லது மன்னர் அல்லது அமைச்சரே நேரே வந்து மனுவை வாங்கிக் கொள்வார். இதை ஒரு பசு மாடும் தினமும் கவனித்து வந்தது. அந்தப் பசு மாட்டின் கன்று ட் ரா ஃபிக் ஆக்ஸிடெண்டில் (Traffic accident) இறந்தவுடன் அந்த வண்டி ‘ஸ்டாப்’ பண்ணாமல் போனவுடன் ஓடி வந்து அரண்மனையின் ‘காலிங் பெல்’லை அடித்தது. அந்த பெல்லின் பெயர் ஆராய்ச்சி மணி. மன்னன் இதுவரை அந்த சப்தத்தைக் கேட்டதே இல்லை. அது துருப்பிடித்து போயிருந்தாலும் நல்ல ஒர்க்கிங் கண்டிஷனில் (good working condition) இருந்தது!

 

மன்னர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் வாயிலுக்கு ஓடி வந்து பார்த்தால் ஒரு பசு மாடு நின்று கொண்டிருந்தது. “ஓஹோ, ஏதோ ஒரு மிஸ்டேக் (mistake)கில் கொம்பு கயிற்றில் மாட்டிக் கொண்டு அடித்தி ருக்கும் அதனால் என்ன, ஒரு கட்டு அகத்திக் கீரை வாங்கிப் போடு! அது போய்விடும்” என்று ஒரு மந்திரி சொன்னார். இப்படி விவாதம் நடக்கையில் அரசு நியமித்த 007 ஜேம்ஸ்பாண்டு   (007  James  Bond) ஓடி வந்து உளவுத் தகவல் சொன்னான்.

“மன்னர் மன்னா! உன் மகன் ஒரு பசுவின் கன்றைக் கொன்றான். அதன் தாய்  இங்கே  வந்து உன் முன்னால் நிற்கிறது என்றான். பசுவின் காதிலும் அது விழுந்தவுடன் எல்லோரையும் பின் தொடர்ந்து வருமாறு அது ‘சிக்னல்’ (Signal) கொடுத்து விட்டு, ஆம்புலனஸ் கார் சப்தம் போடுவது போல ‘நீனா நீனா நீனா’, ‘உய்ந் உய்ந் உய்ந்’ என்று ஓலமிட்டுக் கொண்டே (accident spot) ஆக்ஸிடெண்ட் ஸ்பாட்டுக்கு அழைத்து வந்தது.

 

மன்னனுகுக்கு வருத்தமும் கோபமும் ; என்ன செய்யலாம் என்றான்? உடனே  ஒரு திராவிட அமைச்சர் கேஸை (case) யாருக்கும் தெரியாமல் அமுக்கிவிடலாம் என்றார். அதற்குள் ஒரு பிராஹ்மணன் நூறு தங்க பசுங் கன்றுகள் செய்து பிராஹ்மணாளு க்குத் தந்தால் போதும். அதுதான் பிராயச் சித்தம் என்றார். ஒரு புத்திசாலி அமைச்சர், மநு நீதி சாஸ்திரத்தில் சொன்ன தண்டனையைச் சொன்னவுடன், “அப்படித்தான் செய்யவேண்டும்; ‘பல்லுக்குப் பல், ரத்தத்துக்கு ரத்தம்; கொண்டா என் மகனை என்றான். மன்னன்; ஏறினான் தேரில்;  70 மைல் ஸ்பீடில் (70 mph) போய் மகனைக் கொன்றான்; தேவர்கள் பூமாரி பெய்தனர்.

உன் நேர்மையை மெச்சினோம்; பசுவின் கன்றுக்கும் உன் மகனுக்கும் உயிர்ப் பிச்சை தந்தோம் என்று சொல்ல இருவரும் உயிர் பெற்று நடந்தனர்.

மன்னா! நேர்மையாக நாட்சி நடந்தால் அங்கே பயிர் செய்யாமலேயே தானியங்கள் விளையுமென்று வள்ளுவன் தமிழ் வேதம் செப்புவதை நீ அறியாயோ? காளிதாஸன்  ரகுவம்ஸ காவியத்தின் ஐந்தாவது அத்திய,,,யத்தில் ரகு என்ற மன்னன் கௌத்ஸ முனிவருக்கு 14 கோடிப் பொன்னை குபேரனிடம் வாங்கிக் கொடுத்ததை அறியாயோ? ரகு படை எடுக்க, முதல் நாள் இரவில் ஆயுத ரதத்தை தயார் செய்தவுடன் குபேரனே பயந்து போய் இரவோடிரவாக 14 கோடிக்கும் மேல் அவன் கஜானாவில் கொட்டி நிரப்பினானே. அது போல உன் நாட்டிலும் தன, தான்யம் செழிக்கும் என்று தேவர்கள் சொன்னார்கள்:

சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக்

காலை கழிந்ததன் பின்றையும்- மேலைக்

கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையு மூர்ந்தான்

முறைமைக்கு முப்பிளமை யில் – பழமொழி

 

–subham–

Sheridan bought Boots!! ( Post No.5328)

Compiled  by London swaminathan

Date: 16 August 2018

 

Time uploaded in London –7-13 am (British Summer Time)

 

Post No. 5328

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

Sheridan made his appearance, one day, in a pair of new boots. These attracting the notice of some of his friends, Now guess, said he, how I came by these boots. Many probable guesses then took place. No, said Sheridan, no you have not hit it, nor ever will. I bought them and paid for them.

SHERIDAN PROFILE

Richard Brinsley Sheridan

Irish Playwright

born oct.31, 1751

Died July 7, 1816

Age at death 64

 

PUBLICATIONS

1775 The Rivals

1775 St. Patrick’s Day

1775 The Duenna

1777 The School for Scandal

1779 The Critic

The playwright R B Sheridan is best known for his comedies of manners.

Sheridan was born in Dublin, and theatre was in his blood. His father was an actor, and his mother had written novels and plays. However, his family had money problems, and while Sheridan was away in England being educated, the family moved to France to avoid debtors.

When Sheridan was 19, the family moved back to England, and he joined them in the city of Bath. While there he became involved in a scandal concerning a well- known singer Elizabeth Anne Linley, over whom he later fought two duels. They were married in 1773 and then moved to London.

 

Once in London Sheridan became friends with a group of writers including Dr Johnson and Oliver Goldsmith. Although Elizabeth’s singing career could easily have supported them both, Sheridan decided to earn a living from writing. His first play, The Rivals, was written when he was 23. Two more followed later that year. The success of these plays led directly to Sheridan being offered the job of actor-manager of a London theatre.

 

Sheridan’s The School for Scandal is considered one of the most brilliant comedies of the 18th century. Like all of his plays, it makes fun of types of people Sheridan felt were cruel, stupid or self-important.

 

Sheridan’s theatrical skills made him a natural public speaker. He became a member of the British parliament and served as a minister.

Source- Book of Anecdotes and Who Wrote What When.

–Subham–

 

ஹிந்து ராஷ்ட்ரத்தில் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா? – 2 (Post No.5327)

Written by S Nagarajan

 

Date: 16 August 2018

 

Time uploaded in London – 6-09 AM  (British Summer Time)

 

Post No. 5327

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ஹிந்து ராஷ்ட்ரத்தில் எங்களை நாங்கள் விரும்பும் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா? – 2

 

ச.நாகராஜன்

 

4

கிறிஸ்தவ மதம் எப்படியெல்லாம் பரப்பப்பட்டது என்பதை முதலில் அறிய வேண்டும். அதே சமயம் ஹிந்து மதம் ஒருநாளும் ‘மதமாற்றும் முயற்சியில்’ எந்த நாளும் எந்த தேசத்திலும் எவராலும் செய்யப்படவில்லை என்பதையும் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் இங்கா இனத்தினர் மீது திட்டமிட்ட பிரசாரம் ஒன்று 1524-25இல் மதமாற்றும் பாதிரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஃபிரான்ஸிஸ்கோ பிஜாரோ (Francisco Pizzaro) இதற்கென ஆன்மாக்களை அறுவடை செய்யவும் அதே சமயம் முடிந்த மட்டில் தங்கத்தையும் கூடச் சேர்த்து அறுவடை செய்யவும் புறப்பட்டார்.

இதில் ஒரு முக்கூட்டு அணி  ஒன்று சேர்ந்தது.

ஃபாதர் ஃபெர்னாண்டோ டி ல்யுக் (Father Fernando de-lugue) என்பவர் ஒரு ரோமன் கத்தோலிக்க பாதிரியார். இவர் பிஜாரோவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி அவரது பயணத்திற்கு ஆதரவு தருவேன் என்றும், வளைகுடாவிற்குத் தெற்கே பெரு சாம்ராஜ்யத்தில் உள்ள மாகாணங்களில் இடம் பார்த்து பிடித்து அவர்களை தமக்கென ஆக்குவது என்றும் ஜெயித்த இடங்களை பாதிக்குப் பாதியாக பங்கு போட்டுக் கொள்வது என்றும்  ஃபெர்னாண்டோ ஒப்பந்த உடன்படிக்கை செய்து கொண்டார். இதில் உதவ முன்வந்த இன்னொரு பாதிரியார் ஃபாதர் வெல்வர்ட் ((Father Velverde)  கிறிஸ்தவத்திற்கென ஆன்மாக்களை அறுவடை செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

 

திட்டப்படி தாங்கள் நுழைந்த இடங்களில் எல்லாம் கொள்ளையடித்தனர். பூர்வ குடியினர் அனைவரையும் கொன்று குவித்தனர். என்றாலும் கூட மிக எளிமையாகவும் அஹிம்சை வழியில் இருந்ததாலும், பரந்த மனதுடன் இருந்த இங்கா அரசு அவர்களை மன்னித்தது. தங்களது இனத்தின் மீது இங்கா அரசு மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தது.

 

இங்கா சக்கரவர்த்தி அனுமதியின்றி அரசவையில் நுழைந்த போதிலும் கூட ‘அன்னியர்களை’ வரவேற்றார். அத்தோடு மட்டுமன்றி அவர்களுக்குச் சில பரிசுகளையும் அளித்தார்.

இங்கா சக்கரவர்த்தியிடம் பிஜாரோ தாங்கள் கடல் கடந்த ஒரு நாட்டிலிருந்து வ்ந்திருப்பதாகவும் இங்கா நாட்டின் எதிரிகளைச் சமாளிக்க உதவி புரிய வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Holy Kailash is in China now!

 

1532ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதி பிஜாரோவுக்கும் சக்கரவர்த்தி அடாஹுவால்பாவுக்கும் (Atahualpa) s இடையே ஒரு சந்திப்பு கஜமார்க்கா (Cajamarca) நகரில் ஏற்பாடு செய்யப்பட்டது.

 

ஸ்பெயினில் இருக்கக்கூடிய எந்த அரங்கத்தையும் விட மும்மடங்கு பெரிதான ஒரு அரங்கத்தில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது.

 

சக்கரவர்த்தி தனது சபையினருடன் நிராயுதபாணியாக அங்கு நுழைந்தார். ஆனால் பிஜாரோவோ ஆயுதம் தாங்கிய தனது வீரர்களை அங்கே சுற்றியிருந்த வீடுகளில் ஒளித்து வைத்திருந்தார்.

அரங்கத்திற்குள் நுழைந்த சக்கரவர்த்தி அங்கே யாரையும் காணாமல் வந்திருந்த அன்னியர்கள் எல்லாம் எங்கே என்று கேட்டார்.

 

அப்போது வெல்வெர்ட் பாதிரியார் ஒரு கையில் சிலுவையுடனும் இன்னொரு கையில் பைபிளுடனும் உள்ளே நுழைந்தார். வந்தவர் சக்கரவர்த்தியிடம் அவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்காகவே தாங்கள் வந்துள்ளதாக அறிவித்தார்.

 

கிறிஸ்தவ மதக் கொள்கைகளை விவரித்த வெல்வெர்ட் சக்கரவர்த்தியை கிறிஸ்தவ மதத்திற்கு மாறி ஸ்பெயின் அரசருக்கு கீழ்ப்படிந்த அரசராக இருக்குமாறு கூறினார்.

அடாஹுவால்பா தான் எந்த அரசருக்கும் கீழ்ப்படிந்து இருக்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

“உங்கள் மன்னர் பெரிய மன்னராக இருக்கலாம். இப்படி கடல் கடந்து உங்களை அனுப்பி இருப்பதால் அதில் எனக்குச் சந்தேகம் இல்லை. அவரை எனது சகோதரராக என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். மத நம்பிக்கையைப் பொறுத்த வரை அதை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது. உங்களது கிறிஸ்து அவரால் உருவாக்கப்பட்டவராலேயே சாகடிக்கப்பட்டார். ஆனால் எங்கள் கடவுளோ சொர்க்கத்தில் இருந்து கொண்டு குழந்தைகளாகிய எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்றார் அடாஹுவால்பா.

 

இதைக் கேட்டவுடன் வெல்வெர்ட், பிஜாரோ ஒளிந்திருந்த இடத்திற்குச் சென்று, “இந்த நாய்க்காக நாம் நமது சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.” என்றார்.

உடனே பிஜாரோ சமிக்ஞையைக் காட்ட ஒளிந்திருந்த வீரர்கள் அங்கு நிராயுதபாணியாக இருந்த அனைவரையும் கொன்று குவித்து, அடாஹுவால்பாவைச் சிறைக் கைதியாகப் பிடித்தனர்.

 

உடனே அடாஹுவால்பா அவரிடம் தன்னை விடுவித்தால் அவரது அறை முழுவதையும் தங்கக் கட்டிகளால் நிரப்புவதாகக் கூறினார்.

அப்படியே பிஜாரோ அறை முழுவதும் தங்கக் கட்டிகளால் நிரப்பப்பட்டது.

 

என்ற போதிலும் அடாஹுவால்பா விடுவிக்கப்படவில்லை.

மற்றவர்களுடன் இணைந்து கிறிஸ்தவ மிஷனரி  கிறிஸ்தவ மதத்தைத் தழுவாததன் காரணமாக அடாஹுவால்பாவை உயிருடன் எரிப்பது என்று கையெழுத்திட்டது.

அடாஹுவால்பா மிகப் பெரிய சக்கரவர்த்திக்கே உரித்தான பண்புடன் நடந்த அனைத்தையும் அமைதியாக ஏற்றுக் கொண்டார்.

 

சங்கிலியால் கட்டப்பட்டு சிதையில் அடாஹுவால்பா கிடத்தப்பட்டார்.

வெல்வெர்ட் பாதிரியார், கொள்ளையடிக்கப்பட்டதில் சம பங்கு கேட்டவர், இறுதி முயற்சியாக அடாஹுவால்பாவின் ஆன்மாவைக் கடைத்தேற்ற அவரை கிறிஸ்தவ மதம் தழுவுமாறு கேட்டார்.

 

மதம் மாறுமாறு மீண்டும் கேட்கப்பட்ட போது மன்னர் திடமாக அதை மறுத்து விட்டார்.

மதம் மாறினால் அவர் உயிருடன் எரிக்கப்பட மாட்டார் என்று வெல்வெர்ட் மீண்டும் கூறவே அந்த இக்கட்டான நிலையில் அடாஹுவால்பா மதம் மாற ஒப்புக் கொண்டார்.

 

கிறிஸ்தவ பாதிரிகள் சொன்ன வார்த்தையை மீறவில்லை.

அடாஹுவால்பா உயிருடன் எரிக்கப்படவில்லை. அவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டார்.

இது தான் முதல் அமெரிக்க கிறிஸ்தவரின் கதை.

  • சோகக்கதை!

வரலாறு முழுவதும் எடுத்துப் பார்த்தால் அடாஹுவால்பா பிஜாரோவுக்குக் கொடுத்த பிணைத் தொகை தான் மிகப் பெரியது என்பது கின்னஸ் புக் ஆஃப் வோர்ல்ட் ரிகார்ட்ஸை எடுத்துப் பார்த்தால் தெரிய வரும்.

இந்தப் பிணைத் தொகையை இன்றைய பணமதிப்பில் மாற்றிப் பார்த்தால் அது 1700 லட்சம் டாலர் ஆகும்.

(இந்திய ரூபாய் மதிப்பில் 113900 லட்சம் ரூபாய் ஆகும்!)

இப்படித்தான் தென் அமெரிக்காவில் கிறிஸ்தவ மதம் பரவ ஆரம்பித்தது.

 

அற்புதமான தங்கச் சிலைகள் உருக்கப்பட்டன. அவற்றை கப்பலில் ஏற்றி ஸ்பெயினுக்கு அனுப்பினர். இங்கா நாடு முற்றிலுமாக காலியானது. செல்வத்தை இழந்தது.

இதைப் பார்த்த பிரிட்டிஷ் அரசு தனது கொள்ளைக்காரர்களை அனுப்பி கப்பலில் ஏற்றி வரப்பட்ட கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை கொள்ளையடிக்க முயற்சித்தது.

 

ஃபிரான்ஸில் ட்ரேக் (Francis Drake), ஹாகின்ஸ் (Hawkins) போன்றவர்கள் இதற்காக அனுப்பப்பட்டனர்.

இந்த கொள்ளைக்காரர்களைத் தான் இன்றைய பிரிட்டிஷ் பள்ளிக் குழந்தைகள் பெரும் ஹீரோவாக கொண்டாடுகின்றனர்.

 

அமெரிக்காவின் பூர்வ குடியினர் இன்று ஏழ்மையில் வாடுகின்றனர். 98 சதவிகிதம் நிலப்பரப்பு சில குடும்பங்களைச் சேர்ந்ததாக இன்று இருக்கிறது. இந்த நிலப் பிரபுக்கள் ஸ்பானிஷ் கொள்ளைக்காரர்களின் வமிசாவளியினர். மிகுந்த துயரமான நினைவுகளுடனும் ஏழ்மையுடனும் தங்கள் சொந்த மொழியைப் பேசிக் கொண்டு தங்கள் நம்பிக்கை வழியில் நடக்கிறார்கள் ஒரிஜினல் பூர்வ குடியினர்.

 

 

இவர்களுக்கு துயரத்திலிருந்து என்று விடுதலை கிடைக்கும் என்பது தெரியவில்லை!

காலம் அவர்களுக்குக் கை கொடுத்து அவர்களை உயர்த்துமா?

– தொடரும்

***

 

‘Vande Mataram’ Poem by Bharati (Post No.5326)

Compiled  by London swaminathan

Date: 15 August 2018

 

Time uploaded in London –17-48 (British Summer Time)

 

Post No. 5326

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

Poet Bharati composed this poem VANDE MATARAM

 

1).‘Vande Mataram’ we will sing!

These words throughout our land shall ring!

‘Vande Mataram’ we will say!

Mother land ,hail! to you we pray!

 

2).No more talk of caste and creed,

No more talk of birth and breed’

Who first drew breath in this our land,

Brahmin or other caste, with us he will stand.

 

3).What if an outcaste? Does he not live

With us right here and his labour give?

Has he become a Chinese man

And will harm us the way an alien can?

 

4).A thousand castes we have, oh dear!

But outsiders have no place here,

However they quarrel, can the sons of one mother

Cease to brothers of one another?

 

5).Only united, true life we attain

Divided go down, and none of us gain;

This is the lesson we all have to heed;

Once we know this, what else do we need?

 

6).Whatever fruits our efforts will bear

All of us equally in them will share;

For all thirty crores of us there shall be life,

Or for all thirty crores of us death after strife!

 

7).A pittance we preferred as serfs in a cottage

Forsaking our birth right for a mess of pottage;

This scandal and shame we have got to erase,

Spit on it, spurn it, and end the disgrace!

Note: The translation here given follows the Tamil original as published in ‘India’ magazine. Bharati revised this later. Stanza 6 was substituted by the following stanza when Bharati published it in 1907, the pamphlet entitled Swadesa Gitankal

 

Stanza 6

Our Bharat-Devi ‘ll quell all our evils

And confer on us boundless grace benign;

Unto the golden feet of the Mother

Dedicate body, life and possessions

 

It should also be mentioned here that Bharati restored the original version, later.

Translation by Professor P S Sundaram.

Source: Bharati Patlakal, Tamil University, Thanjavur, 1989

Editor T N Ramachandran

Tamil Original

 

This is Vandemataram poem of Bankim Chandra Chatterji

வந்தே மாதரம் என்போம் – வந்தே மாதரம்

வந்தே மாதரம் என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குதல் என்போம். (வந்தே)

ஜாதி மதங்களைப் பாரோம்- உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே- அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)

ஈனப் பறையர்க ளேனும்-அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத்த ராய்விடு வாரோ?-பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)

ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்
சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே-நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)

எப்பதம் வாய்த்திடு மேனும்-நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம்- வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்
(வந்தே)

புல்லடி மைத்தொழில் பேணிப்-பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர- இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி
(வந்தே)

 

-subham–

 

 

H G Wells, a Hat Thief! (Post No.5325)

Written  by London swaminathan

Date: 15 August 2018

 

Time uploaded in London –15-21 (British Summer Time)

 

Post No. 5325

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

H G Wells has such a big head that he has trouble getting hats to fit. Once when he found one that balanced nicely on his head he just walked off with it, and blandly penned a note to its owner, E S Peck of Cambridge, Massachusetts,USA.
I stole your hat, wrote the author,
I like your hat; I shall keep your hat. Whenever I look inside it I shall think of you and of your excellent sherry and of the town of Cambridge. I take off your hat to you.

 

H G WELLS PROFILE

BORN SEP.21, 1866

DIED AUG.13, 1946

AGE AT DEATH – 79

PUBLICATIONS

1895 THE TIME MACHINE

1896 THE ISLAND OF DR MOREAU

1897 THE INVISIBLE MAN

1898 THE WAR OF THE WORLDS

1899 WHEN THE SLEEPER AWAKES

1901 THE FIRST MEN IN THE MOON

1908 THE WAR IN THE AIR

1920 THE OUTLINE OF HISTORY

1933 THE SHAPE OF THINGS TO COME

1939 THEHOLY TERROR

 

The English writer H G Wells is often regarded as the father of modern science fiction.

Herbert George Wells was born in Bromley, in the south of England. His family was not wealthy, and he only escaped a career as a shop assistant by winning a scholarship to a science school in London. In college, his tutor was Thomas Huxley, a famous scientist who taught him about Darwin’s Theory of Evolution, which states animals evolve in response to changes in their environment. Wells was fascinated by what this idea might mean for the future of humanity wand explored it in many novels.

 

Wells worked as a book keeper, tutor and journalist until he was 29, when he became a full time writer. In his career, he wrote over 80 stories and novels. Some of these were science fiction; some were novels about political and social ideas. Wells also wrote a popular history book, The Outline of History.

 

The Time Machine, Well’s first novel, is one of his best-known works. It is about a time traveller who journeys to future and witness the dying moments of the planet earth. Wells describes how, in future, human beings, have evolved into two species, the useless Eloi and the practical Morlocks. In another famous novel, The War of the Worlds, Wells describes how Martitians invade the Earth and are only defeated by common human germs.

Wells had great faith in the potential of science and technology to solve the problems of the human race. However, as he grew older, he began to feel that human beings are too cruel and selfish to use technology for good rather than for evil.

 

–subham–

 

வறிஞர்க்கழகு வறுமையில் செம்மை! (Post No.5324)

Written  by London swaminathan

Date: 15 August 2018

 

Time uploaded in London –11-40 am (British Summer Time)

 

Post No. 5324

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

வறிஞர்க்கழகு வறுமையில் செம்மை- நறுந்தொகை , அதிவீர ராம பாண்டியன்

 

அவந்தி தேசத்தில் அக்கிரஹரரத் தெருவில் ஒரு ஏழைப் பார்ப்பனன் இருந்தனன். அவன் பெயர் குசேலர் அல்லது சுதாமா. அவன் ஏழ்மையோடு வேறு ஒரு பிரச்சனையும் சேர்ந்து கொண்டது. அவனுக்கு 27 பிள்ளைகள்!! எப்போது பார்த்தாலும் அம்மா பசிக்குதே! அப்பா பசிக்குதே! என்ற பல்லவியுடன் சோக கீதம் ஒலித்துக் கொண்டே இருந்தது வீட்டீல்!

வறிஞர்=ஏழைகள்

குசேலனின் மனைவி அவரை நச்சரித்தாள்; கரப்பான் பூச்சி போல அவரை என்றும் மொய்த்தாள்; பிய்த்தாள்.

என்னங்க ஒரு காசுக்கும் வழி தேட மாட்டிங்கிறீங்க; உங்கள்(classmate )கிளாஸ்மேட், கிருஷ்ண பரமாத்மா துவாரகாவில் பெரிய ராஜா என்று தினமும் பீத்திக்கிறீங்க! சோத்துக்கு வழி இல்லையே: அவர் கிட்ட போய் கொஞ்சம் கடன் வாங்கிட்டு வரக்கூடாதா? அல்லது அவர்தான் பெரிய மனசு பண்ணி, சம்திங் (something) கொடுக்கக்கூடாதா?

‘செல்வத்தின் பயனே ஈதல்’ என்று பெரியவங்க சொல்லுவாங்க. அவரும் தருவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு என்றாள்.

 

ஆனால் குசேல ஐயர்  மிகவும் மானம் மரியாதை உள்ளவர். என்ன இது? யாசகம் என்று கையேந்திப் போனால் அவமானம் இல்லையா? ‘ஏற்பது இகழ்ச்சி’ என்று பெரியோர் சொன்னதை அறியாயோ பெண் பிள்ளாய்? என்றார்.

அவள் சொன்னாள்; ‘ஏற்பது இகழ்ச்சி’ என்று சொன்ன கிழவி ‘ஐயமிட்டு உண்’ என்றும் சொல்லி இருக்கிறாளே. நான் கொஞ்சம் சோற்றுக்குத் தானே கெஞ்சுகிறேன் என்றாள்

 

வறுமையிலும் செம்மை தவறாத குசேலர் ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ என்னும் (principle) பிரின்ஸிபிள் உடையவர். ஆகையால் கந்தைத் துணிகளைக் கசக்கிக் கட்டிக் கொண்டார்; புறப்பட்டார்.

 

இந்தாங்க, கொஞ்சம் நில்லுங்க; பெரியவங்களைப் பார்க்கப் போனால் கையில் பழம் வெற்றிலை பாக்கு, ஸ்வீட் (sweet) எல்லாம் எடுத்துட்டு போகனும்; ஒன்னும் இல்லாட்டி வெறும் கையோடு போகாம ஒரு எலுமிச்சம் பழமாவது எடுத்துட்டு போகனும். நான் அடுத்தவீட்டு அம்மாளிடம் கடன் வாங்கிய அவல் கொஞ்சம் மிச்சம் இருக்கு. அதையாவது சாஸ்திரத்துக்குக் கொண்டு போய் கொடுங்களேன் என்றாள் மனைவி.

 

குசேலரோ நாணிக் கோணிக் குறுகி, இந்தக் கந்தல் ஆடையோடு போனால் காவல்காரன் என்ன அடிச்சு விரட்டுவான். இந்தக் கந்தல்ல அவலா? என்றார்.

இந்தாங்க! ‘சபரி’ங்கற கிழவி கடிச்சுக் கொடுத்த இலந்தைப் பழத்தைக்கூட ராமன் சாப்பிட்டதாக வால்மீகி எழுதி இருக்காராமே; அன்போடு கொடுத்தா, அது கோதுமை அல்வா கொடுப்பது போல என்றாள்.

அவரும் அரை மனதோடு அவலுடன் சென்றார். பழைய ஒரு சாலை மாணாக்கணாகிய கண்ணனைக் காணும் ஆவலுடன் – ஒரு கைப்பிடி அவலுடன் சென்றார்.

 

எதிர் பார்த்தது போலவே வாயிற் காரனும், ஏய் பிச்சைக்காரா, இது அரண்மனை, அக்கிரஹாரத்துல [ போய் பிச்சை கேளு என்று தடியை உயர்த்தினான்.

 

குசேலர் மிக தயக்கதோடு நானும் க்ருஷ்ணனும் ஒரே ஸ்கூகுல் (School) என்றும் ஒரே கிளாஸ் (class) என்றும் திரும்பத் திரும்ப சொன்னார். எல்லோரும் ‘கொல்’ என்று சிரித்தனர். அவர்களில் ஒரு நல்ல ஆத்மா ஐய்யோ பாவம், ஐயரை பார்த்தா பாவமா இருக்கு. இவர் சொல்றது பொய்யுன்னா நம்ம ராஜாவும் சிரிப்பார். அவருக்கும் ஒரு ஜோக் (joke) சொன்ன மாதிரி ஆச்சு என்று போய் ஆள் (address) அடரஸ், குலம், கோத்ரம் எல்லாம் சொன்னான்.

கண்ணனின் முகத்தில் ஆயிரம் செந்தாமரை உதித்தது போன்ற பொலிவு தோன்றியது குசேலன் என்ற பெயரைக் கேட்டவுடன். அங்க வஸ்திரம் காற்றில் பறக்க ஓடி வந்தான் அரண்மனை வாயிலுக்கு; கட்டி அணைத்தான் குசேலரை; அவரோ அன்பில் திக்கு முக்காடிப் போனார். “அண்ணி, எனக்கு என்ன கொடுத்து அனுப்பினாள்? வெறும் கையோடு அனுப்ப மாட்டாளே; வா, உள்ளே வா, ருக்மினி சத்ய பாமா எல்லாரையும் இன்ட் ர ட்யூஸ் (introduce) பண்ணுகிறேன். மனைவி, குழந்தைகளையும் அழைத்து வரக்கூடாதா? ‘பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க’ என்பார்களே? 16 பெற்றாயா? என்றெல்லாம் வினவினார். குசேலன் செப்ப முடியுமா 27 குழந்தைகள் என்று.

 

உள்ளே போனவுடன் கந்தல் முடிச்சை அவிழ்த்தார்; கண்ணன் எடுத்தான் ஒரு பிடி அவலை; போட்டான் வாயில்;அடடா ஏமி ருசிரா! ராம நாமத்தைவிட ருசியாக இருக்கிறதே என்று சொல்லி எடுத்தான் இன்னும் ஒரு பிடியை.

ருக்மினி தடுத்தாள்! ஏழை வீட்டு அவலைத் தின்றால் காலரா வாந்தி பேதி வநது விடும் என்பதற்காக அல்ல. கண்ணன் முதல் பிடி சாப்பிட்டவுடனேயே அரண்மனையில் பாதி,  குசேலர் வீட்டுக்குப் போய்விட்டது. கடவுள அருளுடன் சாப்பிட்டால் அவருடைய செல்வம்- விபூதி-  மற்றவர்களுக்கும் கிடைக்கும். ருக்மினிக்குப் பயம்; இவர் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் செல்வம் எல்லாம் பறந்தோடிப் ஓய் விடுமோ என்று.

அன்பில் திளைத்த குசேலருக்கு வந்த காரியமே மறந்து போச்சு; பைஸா விஷயத்தை மறந்து விட்டு வெளியே நைஸா வந்தார். இவருடைய நட்பைத் தெரிவித்தாளே மனைவி மகிழ்ச்சி கொள்ளுவாள். அது வைர நெக்லஸ் வாங்கிப் போட்டது போல என்று குசேலர் நினைனத்தார். பாவம் பெண்ணின் ஸைகாலஜி (woman psychology) தெரியாதவர்!.

 

 

ஊருக்குத் திரும்பி அக்ரஹாரத்துக்குள்ள நுழைஞ்சா இவர் வீட்டக் காணல்ல; அடப் பாவி, இருந்த வீடும் போச்சே! இது என்ன ஆட்சி? யாரவது பட்டா போட்டு மாத்தி விட்டானோ என்று மலைப்பதற்குள் அப்பா! என்று 27 குழந்தைகளும் பட்டாடை உடுத்திய வண்ணம் கையில் பஞ்சுமிட்டாயுடன் ஓடி வந்தன.

‘மாயமோ மாயமோ என்று என்று பாடத் துவங்கும் முன் , ‘குறை ஒன்றும் இல்லை கோவிந்தா’ என்று குசேலர் மனைவி பாடிக்கொண்டே வந்தாள்.

கதையும் இனிதே முடிந்தது. யாசகம் கேட்கப்போன இடத்திலும் வறிஞர்க்கழகு வறுமையில் செம்மை தவறாத குசேலர் பிச்சை கேட்கவில்லை.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?என்று வியந்தார்.

 

-சுபம்–

 

நடுநிலை கடைப்பிடித்த நல்லவர்! (Post No.5322)

Sri Venkataraman Santanam and Srimati Rajalakshmi Santanam

Written by S Nagarajan

 

Date: 15 August 2018

 

Time uploaded in London – 6-15 AM  (British Summer Time)

 

Post No. 5322

 

Pictures shown here are taken from various sources saved by my brothers S Srinivasan, S Suryanarayanan, S.Meenakshisundaram and articles written by S Nagarajan (posted by S Swaminathan)

 

 

நல்லவருக்கு அஞ்சலி

நடுநிலை கடைப்பிடித்த நல்லவர்!

 

ச.நாகராஜன்

நடுநிலை நாளிதழ் என்று போட்டுக் கொண்டு ஒரு பக்கமாய் சார்ந்து எழுதுவது ஊடகங்களின் இன்றைய போக்காக மாறி விட்டது.

 

ஆனால் நடுநிலை நாளிதழான தினமணியின் மதுரைப் பதிப்பின் பொறுப்பாசிரியராக நீண்ட காலம் பணியாற்றிய எனது தந்தையார் திரு வெ.சந்தானம் நடுநிலை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்.

அலுவலகப் பணியில் மட்டுமல்ல, அன்றாட வாழ்விலும் அவர் கடைப்பிடித்த எள்ளளவும் பிசகாத, தராசு நுனி போன்ற நடுநிலை வியக்க வைக்கும் ஒன்றாகும்.

வீட்டிலும் சரி நாட்டிலும் சரி உரிய முறையில் உரிய விஷயத்தில் நடுநிலையுடன் நடக்கும் பாங்கு அவருக்கு இயல்பாகவே இருந்தது.

 

நூற்றுக்கணக்கான சம்பவங்கள் மனதில் நிழலாடினாலும் சில சம்பவங்களை இங்கு  குறிப்பிடுகிறேன்.

அரசியல் கட்சியில் எல்லா அணிகளையும் சம நோக்குடன் பார்ப்பார் அவர்.

 

 

With Swamiji Krishna of Aykkudi, near Tenkasi

காமராஜர் முதல் அமைச்சர்.

சுதந்திர தியாகிகளை அங்கீகரிக்க அவர்களுடன் சிறையில் கூட இருந்த ஒருவர் யாரேனும் அப்படி கூட இருந்ததைக் குறிப்பிட வேண்டுமென்ற விதி வந்தது.

 

இப்படி ஒருவரிடம் கடிதம் வாங்க வேண்டுமென்ற ஆசையோ அல்லது நினைவோ கூட இல்லாமல் இருந்தார் என் தந்தை.

ஆனால் பல தியாகிகளும் இதை ஏன் இன்னும் வாங்கவில்லை என்று கேட்ட வண்ணம் இருந்தனர்.

 

மதுரையில் காங்கிரஸ் கட்சியின் மாபெரும் மாநாடு தமுக்கம் மைதானதில் நடந்தது.  இரவு நேரம்.

 

தினமணி நிருபராக வெகு காலம் பணியாற்றியவரும் என் தந்தையின் பால் மிக்க மரியாதையும அன்பும் கொண்டவரான திரு திருமலை மைதானத்தில் ஏற்பாடுகளைப் பார்வையிட வந்த காமராஜரிடம் இந்தக் கடிதம் பற்றிக் குறிப்பிட்டார்.

 

இப்படி யார் வேண்டுமென்கிறார்கள் என்று கேட்டார் திரு காமராஜர். இது அரசால் கொண்டுவ்ரப்பட்ட ஆணை என்றவுடன் சிரித்தவாறே அந்த மைதானத்திலேயே அந்தக் கணமே ஒரு டைப்ரட்டரைக் கொண்டுவரச் சொல்லி அதில் ஒரே ஒரு வரி ஆங்கிலத்தில் அடிக்கச் சொன்னார்.

திரு வெ.சந்தானம் என்னுடன் சிறையில் இருந்தார் என்பதே அந்த ஒரு வரி.

என் தந்தை அந்தக் கணமே அரசின் கணக்கின் படி ‘சுதந்திரப் போர் தியாகி’ ஆனார்.

ராஜாஜிக்கு என் தந்தை பால் பரிவும அன்பும் உண்டு. கல்யாண ரிஸப்ஷனில் என் தந்தையும் தாயும் நாற்காலியில் அமர்ந்திருக்க அந்தப் பெரிய்வர் பின்னால் நிற்கும் காட்சியைக் காண்பிக்கும் அதிசய போட்டோ எங்கள் இல்லத்தில் இன்றும் இருக்கும் ஒரு பொக்கிஷம்.

 

முத்துராமலிங்கத் தேவரின் தேச பக்தியும் தெய்வ பக்தியும் நாடறிந்த விஷயம். அவரது கூட்டங்களுக்கு மதுரையில் என் தந்தையார் தலைமை வகிப்பதுண்டு. அவர் என் தந்தையிடன் கொண்டிருந்த பேரன்பும் மரியாதையும்  வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

 

அரசியலில் மட்டுமல்ல காஞ்சி பெரியவாள், சிருங்கேரி ஆசார்யாள் உரைகளை அவ்வப்பொழுது தினமணி ஏடு தாங்கி வரும்.

 

சிருங்கேரி ஆசார்யாளின் பக்தர்கள் எழுத்தை எண்ணிக் கொண்டு வருவார்கள். ஏன் காஞ்சி பெரியவருக்கு மட்டும் இரண்டு காலம் இருக்கிறது, ஏன் இத்தனை எழுத்துக்கள் சிருங்கேரி பெரியவரின் உரைக்கு குறைந்திருக்கிறது என்றெல்லாம் தீவிர பக்தியில் கேட்பார்கள்.

 

 

 

 

 

 

அவர்களுக்கு முக்கியத்திற்கு முதலிடம், விஷயத்தின் முக்கியம் போன்றவற்றை எடுத்துச் சொல்லி அவர்களின் மனத்தை மகிழ்விப்பார். நடுநிலையுடன் எதையும் அணுகும் மனப்பாங்கை நாளடைவில் அனைவரும் புரிந்து கொண்டு வெகுவாகப் பாராட்ட ஆரம்பித்தனர். இரு ஆசார்யர்களின் அனுக்ரஹமும் எங்கள் குடும்பத்திற்கு ஏராளம் உண்டு.

சிருங்கேரி ஆசார்யர் வீட்டிற்கே வந்து அனுக்ரஹம் புரிந்த நிகழ்ச்சி மிக சுவாரசியமான ஒன்று.

 

ஸ்ரீ சத்ய சாயிபாபா என் தந்தையார் மீது மிகுந்த அன்பு கொண்டு அனுக்ரஹம் புரிந்தார். ஆபஸ்ட்பரியில் நடந்த கூட்டத்தில் உரையாற்ற பிரத்யேகமாக அழைப்பு விடுத்தார்.

அரசியல், ஆன்மீகம் மட்டுமல்ல, அன்றாடப் பொழுது போக்குகளுக்கும் கூட அவர் உரிய இடத்தைத் தருவார்.

இசை நிகழ்ச்சிகள் தவறாமல் தினமணியில் இடம் பெறும். இசைக் கலைஞர்கள் வெகுவாக மதிக்கப்படுவர் தினமணியில்.

 

கிங்காங் மல்யுதத நிகழ்ச்சிக்கென மதுரை வந்தவர் என் தந்தையைப் பார்க்க நேரில் வந்தார். அவருக்கு ஒரு பிரம்பு நாற்காலி போட அதில் உட்கார ஆரம்பித்தவுடன் அந்த நாற்காலி முறிந்து போக உடனே ஸ்ட்ராங்கான கட்டிலில் சிரித்தவாறே அமர்ந்து உரையாட ஆரம்பித்தார்.

 

தினமணியில் சென்னை ஆபீஸில் ஸ்ட்ரைக். சென்னைப் பதிப்பு சித்தூரிலிருந்து சில காலம் வந்தது.

எழுத்தாளர்களின் கதை, கட்டுரை படைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மதுரைக்கு வந்தது.

அந்தக் கால கட்டத்தில் ஏராளமான புது எழுத்தாளர்கள் அறிமுகமாயினர்.

Kanchi Paramacharya in Madurai Dinamani office.

 

யார் எழுதினார்கள் என்று பார்க்காமல் எழுத்து எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்பார் என் தந்தை.

ஜியாவுடீன் என்ற இஸ்லாமிய இளைஞர் ஃபாரஸ்ட் ரேஞ்சராகப் பணியாற்றி வந்தார். அழகுற கதைகள் எழுதுவார். அவர் எழுத்து பிரசுரிக்கப்ப்ட்டவுடன் அவருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. பொங்கிய மகிழ்ச்சியுடன் ஓடோடி வந்து தந்தையிடன் தன் வியப்பையும் அன்பையும் ம்கிழ்ச்சியையும் தெரிவித்தார்.இதே போல அலுவலகம் ஒன்றில் கணக்குப் பிரிவில் பணியாற்றிய சங்கர ராம் என்பவர் புனைபெயரில் நல்ல எழுத்தாளரானார். சேதுபதி பள்ளியில் கணக்குப் பிரிவில் பணியாற்றிய திரு ராமகிருஷ்ணன் அற்புதக் கவிஞர் ஆனார்.

 

நா.பார்த்தசாரதி அவருடன் கூடவே வரும் பட்டாபிராமன் ஆகியோரின் படைப்புகள் வெளி வரலாயின.

சாலமன் பாப்பையா உள்ளிட்ட பட்டிமன்றப் பேச்சாளர்கள் எங்கள் இல்லத்தில் அமர்ந்து தினமணி பட்டிமன்றம் தலைப்பு குறித்து விவாதிப்பர். தினமணி பட்டிமன்றம் என்பது பட்டிமன்றத்திற்கான ‘ஸ்டாண்டர்ட்’ ஆனது!

Kanchi Shankaracharya Sri Jayendra Swamikal with Dinamani Team

இப்படி இசைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், பட்டி மன்றப் பேச்சாளர்கள், தலைவர்கள், ஆன்மீகவாதிகள் உள்ளிட்ட அனைவருமே இறுதி வரை தந்தையின் பால் நேசத்தையும் பாசத்தையும் கொட்டினர்.

 

ஒரு பெரியவருடன் கூடப் பழகும் போது நாளுக்கு நாள் அது மெருகேறி வளர்பிறை போல வளர்ந்து கொண்டே போகும் என்பதை பற்பல ஆண்டுகள் பழகிய அனைவரும் அனுபவத்தில் கண்டு மகிழ்ந்தனர்.

 

அவரின் நினவைப் போற்றும் நாள் ஆகஸ்ட் 15.

சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர், 1998ஆம் ஆண்டு., ஆகஸ்ட் 15ஆம் தேதி.

மதுரை எல்லிஸ் நகரில் கொடி ஏற்றியாகி விட்டதா என்று கேட்ட பின் தன் இன்னுயிரை விண்ணுலகம் நோக்கி ஏக விட்டார்.

 

அவரை நினைத்து அஞ்சலி செய்வதில் ஒரு தனி அர்த்தம் இருக்கத்தானே செய்யும்?!

 

ARTICLES ON SANTANAM POSTED EARLIER:-

  1. திருவெ.சந்தானம் | Tamil and Vedas

tamilandvedas.com/tag/திரு-வெ…

Posts about திரு வெ.சந்தானம் written by Tamil and Vedas

  1. வெ.சந்தானம்| Tamil and Vedas

tamilandvedas.com/tag/வெ…

Posts about வெ.சந்தானம் written by Tamil and Vedas

–subham—

***