31 பாரதியார் பொன் மொழிகள் (Post No.5714)

 

compiled by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 29 November 2018

GMT Time uploaded in London – 16-17

Post No. 5714
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

டிசம்பர் 2018 நற்சிந்தனை காலண்டர்

பண்டிகை நாட்கள் டிசம்பர் 11- பாரதியார் பிறந்த நாள்;16- மார்கழி மாதம் ஆரம்பம்;18- வைகுண்ட ஏகாதஸி, கீதா ஜயந்தி; 23-ஆருத்ரா தரிசனம்/திருவாதிரை; 25-கிறிஸ்துமஸ்

அமாவாஸை- 6, பௌர்ணமி- 22; ஏகாதஸி உபவாஸ நாட்கள்- 3, 18.

சுப முகூர்த்த நாட்கள்- 12, 13, 14

டிசம்பர் மாத (கார்த்திகை/மார்கழி) காலண்டரை பாரதியார் பொன்மொழிகள் அலங்கரிக்கின்றன.

டிசம்பர் 2018 காலண்டர்; விளம்பி கார்த்திகை-மார்கழி மாதம்

 

டிசம்பர் 1 சனிக்கிழமை

அருவி போலக் கவி பொழிய-எங்கள்

அன்னை பாதம் பணிவேனே

குருவிப்பாட்டை யான்பாடி- அந்தக்

கோதை பாதம் அணிவேனே

டிசம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை

மாணுயர் பாரத தேவியின் மந்திரம்

வந்தே மாதரமே

டிசம்பர் 3 திங்கட்கிழமை

அச்சப்பேயைக் கொல்லும் படையாம்

வித்தைத் தேனில் விளையும் கனியாய்

வாராய், நிலவே வா

டிசம்பர் 4 செவ்வாய்க்கிழமை

மந்திரம் கூறுவோம், உண்மையே தெய்வம்

கவலையற்றிருத்தலே வீடு, களியே அமிழ்தம்,

பயன்வரும் செய்கையே அறமாம்.

டிசம்பர் 5 புதன் கிழமை

ப்ராண வாயுவைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக

அபாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக

வ்யாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக

உதாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக

ஸமாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக

டிசம்பர் 6 வியாழக் கிழமை

கடல் நமது தலை மேலே கவிழவில்லை

ஊர்கள் கலைந்து போகவில்லை

உலகம் எல்லா வகையிலும் இயல்பெறுகின்றது

இஃதெல்லாம் அவளுடைய திருவருள்

டிசம்பர் 7 வெள்ளிக் கிழமை

சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஒரு குமிழியாம்

சக்திப் பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர்

சக்தி அநந்தம், எல்லையற்றது, முடிவற்றது

 

டிசம்பர் 8 சனிக்கிழமை

புகழே, புகழே, புகழே

புகழுக்கோர் புரையுண்டாயின்

இகழே, இகழே, இகழே

டிசம்பர் 9 ஞாயிற்றுக்கிழமை

இன்பம் இன்பம் இன்பம்

இன்பத்திற்கோர் எல்லை காணில்

துன்பம் துன்பம் துன்பம்

டிசம்பர் 10 திங்கட்கிழமை

நாதம், நாதம், நாதம்

நாதத்தேயோர் நலிவுண்டாயின்

சேதம், சேதம், சேதம்

டிசம்பர் 11 செவ்வாய்க்கிழமை

தாளம், தாளம், தாளம்

தாளத்திற்கோர் தடையுண்டாயின்

கூளம், கூளம், கூளம்

டிசம்பர் 12 புதன் கிழமை

பண்ணே, பண்ணே, பண்ணே,

பண்ணிற்கோர் பழுதுண்டாயின்

மண்ணே, மண்ணே, மண்ணே

டிசம்பர் 13 வியாழக் கிழமை

ஆதியாலாதியப்பா!- கண்ணா!

அறிவினைக் கடந்த விண்ண்கப் பொருளே

சோதிக்குச் சோதியப்பா!– என்றன்

சொல்லினைக் கேட்டருள் செய்திடுவாய்!

டிசம்பர் 14 வெள்ளிக் கிழமை

பெண்டீர் தமையுடையீர்!பெண்களுடன் பிறந்தீர்

பெண் பாவமன்றோ? பெரியவசை கொள்வீரோ?

கண்பார்க்க வேண்டும் என்று கையெடுத்து கும்பிட்டாள் (திரவுபதி)

 

டிசம்பர் 15 சனிக்கிழமை

பேயரசு செய்தால்பிணம் தின்னும் சாத்திரங்கள்

டிசம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை

‘தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும்

தருமம் மறுபடி வெல்லும்’ எனுமியற்கை

மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்

வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான்

டிசம்பர் 17 திங்கட்கிழமை

கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும்

தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்

டிசம்பர் 18 செவ்வாய்க்கிழமை

கோயிற் பூசை செய்வோர் சிலையக் கொண்டுவிற்றல் போலும்

வாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்திழத்தல் போலும்

ஆயிரங்களான நீதி யவை உண்ர்ந்த தரும

தேயம் வைத்திழந்தான், சீச்சீ சிறியர் செய்கை செய்தான்

டிசம்பர் 19 புதன் கிழமை

ஆங்கொரு கல்லை வாயிற்படி என்

றமைத்தனன் சிற்பி,மற்றொன்றை

ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்

றுயர்த்தினான், உலகினோர் தாய் நீ!

டிசம்பர் 20 வியாழக் கிழமை

யாங்கனே எவரை, எங்கனஞ்சமைத்தற்

கெண்ணமோ அங்கன்ம் சமைப்பாய்

ஈங்குனைச் சரணென்றெய்டினேன், என்னை

இருங்கலைப் புலவனாக்குதியே

டிசம்பர் 21 வெள்ளிக் கிழமை

இடையின்றி அணுக்களெல்லாம் சுழலுமென

இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்

இடையின்றி கதிர்களெலாஞ் சுழலுமென

வானூலார் இயம்புகின்றார்.

 

டிசம்பர் 22 சனிக்கிழமை

இடையின்றித் தொழில்புரிதல் உலகினிடைப்

பொருட்கெல்லாம் இயற்கையாயின்

இடையின்றிக் கலை மகளே! நினதருளில்

எனதுள்ளம் இயங்கொணாதோ?

டிசம்பர் 23 ஞாயிற்றுக்கிழமை

‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்- அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக’ என்பதோர் நல்ல மங்களம்  வாய்ந்த சுருதி மொழி கொண்டு வாழ்த்தியே

(காயத்ரி மந்திரத்தின் மொழி பெயர்ப்பு)

டிசம்பர் 24 திங்கட்கிழமை

‘கிழவியர் தபசியர் போல்- பழங்

கிளிக்கதை படிப்பவன், பொறுமையென்றும்

பழவினை முடிவென்றும்- சொலிப்

பதுங்கி நிற்போன், மறத் தனமையிலான்

வழ வழ தருமன்’

டிசம்பர் 25 செவ்வாய்க்கிழமை

நல்லது தீயது நாமறியோம் அன்னை

நல்லது நாட்டுக1 தீமையை ஓட்டுக!

டிசம்பர் 26 புதன் கிழமை

ஒன்பது வாயிற் குடிலினைச் சுற்றி

யொருசில பேய்கள் வந்தே

துன்பபடுத்துது, மந்திரஞ்செய்து

தொலைத்திட வேண்டுமையே!

டிசம்பர் 27 வியாழக் கிழமை

வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு

பூணும் வட நீ எனக்கு, புது வயிரம் நானுனக்கு

 

டிசம்பர் 28 வெள்ளிக் கிழமை

தில்லித் துருக்கர் செய்த வழ்க்கமடி! பெண்கள்

திரையிட்டு முகமலர் மரைத்து வைத்தல்

வல்லியிடையினையும் ஓங்கி முன்னிற்கும்- இந்த

மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்

டிசம்பர் 29 சனிக்கிழமை

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை- முகச்

சோதி மறைத்துமொரு காதலிங்குண்டோ

டிசம்பர் 30 ஞாயிற்றுக்கிழமை

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே

அதை தொழுது படித்திடடி பாப்பா!

உயிர்களிடத்தில் அன்பு வேணும்- தெய்வம்

உண்மையென்று தானறிதல் வேணும்

டிசம்பர் 31 திங்கட்கிழமை

சாமி நீ! சாமி நீ! கடவுள் நீயே!

தத்வமஸி, தத்வமஸி, நீயே அஃதாம்

HAPPY NEW YEAR

TAGS- பாரதியார், பொன் மொழிகள், டிசம்பர் 2018, நற்சிந்தனை, காலண்டர்

 

–SUBHAM–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: