கூஜா, குடை, தயிர்சாதம், ஊறுகாய் பயணம் (Post No.5674)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 18 November 2018

GMT Time uploaded in London –9-43 am
Post No. 5674

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

நூறு வருஷங்களுக்கு முன்னால், யாத்திரை போகும் மக்கள், கூஜாவில் தண்ணீர், கையில் குடை, படுக்கை, பெட்டி, கட்டுச் சாதம் , ஊறுகாய், மாவடு, மோர் மிளகாய், கைவிளக்கு முதலியன கொண்டு செல்வர். பின்னர் டார்ச் லைட், தண்ணீர் பாட்டில் என்று காலம் மாறியது. இப்போதோ கிரெடிக் கார்டு அல்லது பணம் + மொபைல் போன் இருந்தால் போதும், மீதி எல்லாம் ஆங்காங்கே வாங்கிக் கொள்ளலாம் என்றாகி விட்டது. ஆயினும் அந்தக் காலத்தில் மக்கள் என்ன செய்தார்கள் என்பதை அறிவதில் பலருக்கும் ஆவல் உண்டு. குறிப்பாக வரலாற்று நவீனங்களைப் படிப்போருக்கும் யாத்திரை வரலாற்றைப் பயில்வோருக்கும் சுவை தரும் விஷயங்கள் இவை.

அநதக் காலத்தில் ஊர் பேர் தெரியாத ஒரு தமிழ்ப் புலவர் அருமையாகப் பாடி வைத்த நூல் விவேக சிந்தாமணி. அதில் யாத்திரை பற்றி இரண்டு பாடல்கள் உள. அவற்றைப் படித்துச் சுவைப்போம்.

யாத்திரைக்கு அழகு!

தண்டுல ,மிளகின் றூள் புளியுப்பு

தாளிதம் பதார்த்த மிதேஷ்டம்

தாம்பு நீர் தோற்ற மூன்றுகோலாடை

சக்கிமுக்கி கைராந்தல்

கட்டகங் காண்பான் பூஜை முஸ்தீபு

கழல் குடை யேவல் சிற்றுண்டி

கம்பளி யூசி நூலடைக் காயிலையைக்

கரண்டகங் கண்ட கேற்றங்கி

துண்டமுறிய காகரண்டி நல்லெண்ணெய்

தட்டன் பூட்டுமே கத்தி

சொல்லிய தெல்லாங் குறைவறத்தி ருத்தித்

தொகுத்துப் பற்பலவினு மமைத்துப்

பெண்டுக டுணையோ டெய்து வங்கன்னாயம்ப

பெருநிலை நீர்நிழல் விறகு

பிரஜையுந் தங்குமிடஞ் சமைத்துண்டு

புறப்படல் யாத்திரைக் கழகே.

–விவேக சிந்தாமணி

பொருள்

அரிசி (தண்டுலம்), மிளகுப்பொடி, புளி, உப்பு, மிகுதியான தாளிதப் பதார்த்தக் கறிவடகம், கயிறு, தண்ணீர், அளவறிய ஊன்றுகோல், வஸ்திரங்கள் (ஆடை), சக்கிமுக்கிக் கல் அல்லது நெருப்பு உண்டாக்கும் கருவி, கைராந்தல், அரிவாள், பாதரட்சை (செருப்பு), குடை, வேலையாள், சிற்றுணவு அல்லது பலகாராதிகள், கம்பளி, ஊசி, நூல், எழுத்தாணி, ஊறுகாய்த் துண்டு, கரண்டி, நல்ல எண்ணெய், துட்டு, பூட்டு, கத்தி இவை முதலாகச் சொல்லப்பட்டவைகள் எல்லாம் குறைவில்லாமல் திருத்தத்தோடு பல வகைகளுஞ் சேகரித்து பெண்கள் துணையோடு, சரியான வாகனத்தோடு, பெருத்த நிலையான  நிலம், நல்ல நிழல், விறகு, ஜனங்கள், தங்குமிடங்கண்டு பிரயாணஞ் செய்தல் யாத்திரைக்கு அழகாம்.

Tags– விவேக சிந்தாமணி, யாத்திரை, அழகு

xxxxxxxxxxxx SUBHAM xxxxxxxxxxxxxxxxx

ஷாலின் ஆலயமும் போதிதர்மர் மர்மமும்! (Post No.5673)

 

picture from wikipedia

Written by S Nagarajan

Date: 18 November 2018

GMT Time uploaded in London –6-55 am
Post No. 5673

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

ஷாலின் ஆலயமும் போதிதர்மர் மர்மமும்!

ச.நாகராஜன்

இந்தியாவிலிருந்து கி.பி. 527 ஆம் ஆண்டு வாக்கில் சீனா சென்ற போதிதர்மரைப் பற்றிய ஏராளமான கதைகள் உண்டு.

குங் பூ உள்ளிட்ட விஷேச சண்டைப் பயிற்சிகள், சில விசேஷ தியான முறைகள், தர்மத்தைக் கற்பிக்கும் முறைகள், அவற்றை உள்ளடக்கிச் சொல்லும் குறைந்த சொற்களுடைய கோயன் எனப்படும் செய்யுள்கள் ஆகியவை போதிதர்மருடன் தொடர்பு படுத்திச் சொல்லப்படுகின்றன.

ஷாலின் மடாலயம்  சான் பிரிவின் தலைமையகம். ஐந்தாம் நூற்றாண்டில் இது மிகவும் பிரபலமான ஒரு தலமாகத் திகழ்ந்தது. இது ஹெனான் மாகாணத்தில் டெங்ஃபெங் என்ற பிரதேசத்தில் அமைந்த ஒரு ஆலயம்.

ஷாலின் போதித்த புத்த மதப் பிரிவின் தத்துவத்தைப் பின்பற்றுவாருக்கு இன்றும் இது தான் பிரதான மையமாக இலங்குகிறது.

2010ஆம் ஆண்டு இது யுனெஸ்கோ உலக கலாசார பாதுகாப்பு இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

ஷாலின் ஆலயம் சென்ற போதிதர்மர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஒன்பது வருடங்கள் குகையின் சுவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஏழு வருடங்கள் தூங்கி விட்டதாகவும், உடனடியாக தன் கண் இமைகளை அறுத்துக் கொண்டு தூங்காமல் இருந்ததாகவும் ஒரு செய்தி உண்டு.

பின்னர் அங்குள்ள பிக்குகளுக்கு குங்பூவையும் விசேஷ தியானமுறையையும் கற்பித்தார்.

எதையும் சுருக்கமாகச் சொல்லும் கோயன் எனப்படும் செய்யுளும் சான் புத்தமதப் பிரிவும் அவராலேயே துவக்கப்பட்டது.

சீன மன்னருடனான அவரது சந்திப்பும் பல விதமாகக் கூறப்படுகிறது.

அதே போல மர்மமும் புனிதமும் கொண்ட ஷாலின் ஆலயம் பற்றியும் அதில் போதிதர்மரின் வருகை பற்றியும் கூட விதவிதமான கதைகள் உண்டு.

இவற்றில் எது சரி, எது மிகைப்படுத்தப்பட்டது என்பதை அறிய முடியாது.

இதில் அடங்கியுள்ள உண்மைகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.

எது எப்படி இருந்த போதிலும் மிகப் பெரிய மாற்றத்தை புத்த தர்மத்திற்குத் தந்தவர் போதிதர்மர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அவரைப் பற்றிய சில சம்பவங்களைப் பார்ப்போம்:

வு சக்கரவர்த்தியை போதிதர்மர் சந்தித்தார். அப்போது நடந்த உரையாடல் இது:

வு : புத்த பிக்குகளை உருவாக்கவும் புத்த மடாலயங்களைக் கட்டவும், சூத்ரங்களை பிரதி எடுக்கவும், புத்தரின் சிலைகளை நிர்மாணிக்கவும் நான் எந்த அளவு புண்ணிய கர்மத்தைக் கொண்டுள்ளேன்?

போதிதர்மர் : ஒன்றுமில்லை! உலகியல் நோக்கில் செய்யப்படும் கர்மாக்கள் நல்ல கர்மாக்களைக் கொண்டு வந்து  தரும். ஆனால் புண்ணியத்தைத் தராது.

வு: ஆக, எது பெரிய உண்மையின் அர்த்தம்?

போதி தர்மர்: பெரிய உண்மை என்று ஒன்று இல்லவே இல்லை. சூனியம் தான் இருக்கிறது.

வு: அப்படியானால், என் முன் நிற்பது யார்?

போதிதர்மர் : அது எனக்குத் தெரியாது, மன்னரே!

கோயன்களைக் கொண்டுள்ள, “Blue Cliff Record’இன் முதல் கோயன் இது தான்!

போதிதர்மரின் பதிலால் வு மன்னர் திருப்தியுறவில்லை. போதிதர்மர் இதன் மூலம்  என்ன போதித்தார் என்பது அவருக்குப் புரியவும் இல்லை.

போதிதர்மரோ யாங்ட்ஸே நதியைத் தாண்டி வடக்கே சென்று விட்டார்.

picture from wikipedia

பின்னால் போதிதர்மர் மறைந்து விட்ட செய்தியைக் கேட்டதும் அவரை விட்டு விட்டோமே என்று பெரிதும் வருந்திய வு கீழ்க்கண்ட கவிதையை இயற்றிப் புலம்பினார்:

அந்தோ! அவரைப் ‘பார்க்காமல்’ பார்த்தேன்!

அவரைச் ‘சந்திக்காமல்’ சந்தித்தேன்!!

அவரிடம் போதனை பெறாமல் போதனை பெற்றேன்!!!

இப்போது இதோ வருந்துகிறேன்!!!!

போதி தர்மரைப் பற்றிய ஏராளமான சுவையான சம்பவங்கள் உண்டு. அதில் ஒன்று கிளி பற்றிய சம்பவம்.

அந்தக் கிளி கூண்டில் அடைக்கப்பட்டிருந்தது.

அது தெருவில் சென்று கொண்டிருந்த போதி தர்மரைப் பார்த்தது.

அவரைப் பார்த்து கிளி கேட்டது:

மேற்கிலிருந்து மனம் வருகிறது,

மேற்கிலிருந்து மனம் வருகிறது,

தயவுசெய்து எனக்கு ஒரு வழியை போதித்தருளுங்கள்,

இந்தக் கூண்டிலிருந்து தப்பிக்க!

எந்த மக்களுக்காக போதி தர்மர் வந்தாரோ அவர்கள் அவரைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆகவே, இந்தக் கிளியையாவது உய்வு பெறச் செய்வோம் என்று எண்ணிய போதி தர்மர் இப்படி பதில் கூறினார்:

கூண்டிலிருந்து விடுதலை பெற,

கூண்டிலிருந்து விடுதலை பெற,

உன் இரு கால்களையும் நேராக வை,

இரு கண்களையும் இறுக்கி மூடு!

கூண்டிலிருந்து நீ தப்பிக்க இதுவே வழி!!

புத்திசாலி கிளி இதன் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொண்டது.

அது இறந்தது போல கூண்டில் படுத்தது! இரு கால்களையும் முடக்கி நேராக வைத்தாது. கண்களை இறுக்க மூடியது.

கூண்டில் அடைத்து வைத்திருந்த கிளியின் சொந்தக்காரர் கிளியைப் பார்த்துத் திடுக்கிட்டார்.

கிளி இறந்து விட்டதோ?

கூண்டைத் திறந்தார்.கிளியைக் கையில் தூக்கி வைத்தார். அதன் மூச்சு கூட வரவில்லை. ஆனால் உடல் வெப்பம் குறையவில்லை. அவர் கையை உயரத் தூக்கினார் ஒரு கணம். அதே கணத்தில் கிளி கால்களைப் பரப்பி, கண்களைத் திறந்து மேலே பறந்தது!

விடுதலை பெற்றது!!

இந்தக் கோயன் இன்றும் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதன் உண்மைப் பொருள் என்ன?

கிளி என்பது பிரக்ஞை.

கூண்டு என்பது உடல்.

இறுக்க மூடு. கால்களை ஒடுக்கு என்பது புலன்களின் எல்லைக்குட்பட்ட கட்டுப்பாட்டிலிருந்து உன்னை விடுவித்துக் கொள். உடலுக்கு அப்பாற்பட்டு உன்னை விடுவித்துக் கொண்டு உயரே பற! என்ற அர்த்தத்தைத் தருகிறது.

இது போன்ற உபதேசங்களை ஆங்காங்கே அருளிச் சொல்லியவாறே போதிதர்மர் சென்றார்.

இப்படி ஏராளமான அதிசய சம்பவங்களை உள்ளடக்கிய போதி தர்மரின் வாழ்க்கை தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று!

Tags– போதிதர்மர்,ஷாலின் ஆலயம்

***

WHY DO PEOPLE COME TO MY MEETING? GERMAN PHILOSOPHER EXPLAINS (Post No.5672)

WHY DO PEOPLE COME TO MY MEETING? GERMAN PHILOSOPHER EXPLAINS (Post No.5672)

COMPILED by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 17 November 2018

GMT Time uploaded in London –17-51
Post No. 5672

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
While he was dramatic critic on the old Denver Post, Eugene Field was given an assignment to report on a performance of King Lear, his review was brief but pointed

Last night at the Tabor Opera House, So and So played King Lear. He played it as though under the premonition that someone was about to play the Ace.

Xxxx

Lecture Anecdotes

Professor Agassiz, the naturalist, had declined to lecture before some lyceum or public society, on account of the inroads which previous lectures given by him had made upon his studies and thought. The gentleman who had been deputed to invite him continued to press the invitation, assuring him that the society was ready to pay him liberally for his services.

That is no inducement to me, replied Agassiz, I cannot afford to waste my time in making money.

Xxxx

 

I HAVE NOTHING TO SAY ON WIT AND HUMOUR

Artemus Ward was once about to lecture on American Wit and Humour, but the chairman spoke at such length on the subject when Artemus rose he said,
The chairman has said all that needs to be said on the American Wit and Humour, so instead of taking that subject, I shall lecture on Indian Meals, and he did.

Xxx

MY AUDIENCE
The German philosopher and theologian , Frederich Schleilermarcher , once attempted to explain to a questioner the type of people who composed his audiences.

My audience is composed mainly of students, young women and soldiers. Student s come because I am a member of the Board of Examiners. The young women come because of the student s. And the soldiers come because of the young women.

XXX SUBHAM XXX

திருக்குறளில் ஸ்ரீ தேவி, மூதேவி (Post No.5671)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 17 November 2018

GMT Time uploaded in London –17.24
Post No. 5671

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

Jyeshta picture, posted by Lalgudi Veda

திருவள்ளுவர் தீவிர இந்து. ஆரம்பத்திலேயே பகவான் பெயருடன் குறளை ஆரம்பிக்கிறார். அது மட்டுமல்ல; அவர் காலத்திலேயே வாழ்ந்த ஒரு புலவர் அவரைத் திருவள்ளுவ மாலையில் பாராட்டுகையில், நல்லவேளையாக இதைப் பாடினீர்களே; இவ்வளவு காலமாக வேதம் போன்ற ஒரு ஸம்ஸ்க்ருத நூல் தமிழில் இல்லையே என்று கவலைப் பட்டேன். நீர் தமிழ் வேதத்தைப்பாடி அந்தக் குறையை நிவர்த்தி செய்துவிட்டீர்’ என்று பாராட்டுகிறார். அவர் கொடுத்த பெயர்தான் தமிழ் வேதம்= தமிழ் மறை.

திருக்குறளில் இந்திரன் என்னும் வேத கால தமிழ்க் கடவுளின் பெயர் வருவதை எல்லோரும் அறிவர். இந்திரனையும் வருணனையும் தமிழ்க் கடவுள் என்று தொல்காப்பியம் செப்பும். இன்னும் ஒரு குறளில் வேந்தன் என்றும் இந்திரனைக் குறிப்பிடுகிறார். அடி அளந்தான் என்று வாமன/ த்ரிவிக்ரம அவதாரத்தை ஒரு குறளில் பாடுகிறார். பல் மாயக் கள்வன் என்று கண்ண பிரானை மறைமுகமாக ஒரு குறளில் பாடிப் பரவுகிறார்.

JYESHTA DEVI POSTED BY  LALGUDI VEDA

தேவ லோகம் (புத்தேள் உலகு), தேவர்கள் (அமரர்), அமிழ்தம் (அம்ருத), ஏழுபிறப்பு (எழுமை), அணங்கு (அப்ஸரஸ் அழகிகள்), வேள்வி (யாகம்), பிராமணாள் (அறு தொழிலோர், பார்ப்பான்,அந்தணர்), யமன் (கூற்றுவன்) ,பிரம்மா (உலகு இயற்றினான்),மஹா லக்ஷ்மி (திரு)— பற்றி அதிகாரத்துக்கு அதிகாரம் பாடிப் போற்றுகிறரர்; பிரம்மா, கூற்றுவன் (யம தர்மன்), தேவர் போன்றோரை சில இடங்களில் கோபத்தில் ஏசுகிறார்.

திருக்குறளைப் படிக்கையில் இவர் ‘பக்கா ஹிந்துத்வா’ பேர்வழி என்பது தெரிகிறது. ஏனெனில் அதர்மம் செய்வோருக்கு மரணதண் டனை கொடுப்பது பற்றி இரண்டு குறள்களில் ஆதரவு தெரிவிக்கிறார். கருமிகள் கையை முறுக்கி முகவாய்க் கட்டையில் ஒரு குத்து விட்டு பணம் பறி என்கிறார். இது எல்லாம் பலருக்கும் தெரிந்த விஷயமே. முதல் குறளை ஸம்ஸ்க்ருதத்தில் துவக்கி கடைசி குறளை  ஸம்ஸ்க்ருதத்தில் முடித்து தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒன்றே என்றும் காட்டினார். ஒரு அதிகாரம் கூட   ஸம்ஸ்க்ருதச் சொல் இல்லாமல் பாடக்கூடாது என்ற பாலிஸியையும் கடைப் பிடித்தார்.

மநு தர்ம நூல், காம சாஸ்திரம், பகவத் கீதை ஆகியவற்றை அழகியகு றள்களில் வடித்துக் கொடுக்கிறார். கடந்த நூற்றாண்டில் இவ்வளவற்றையும் பலரும் பதின்மர் உறை கொண்டு பறை சாற்றிவிட்டனர்.

ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் ஸ்ரீதேவியைப் பாடிய– திருமகளைப் பாடிய — திருவள்ளுவர் மூதேவியையும் பாடி இருக்கிறார் என்பதாகும்.

இதோ  திருமகள் பற்றிப் பாடிய குறள்கள்

179, 519, 617, 920

அறனறிந்துவெஃகா அறுவுடையார்ச் சேரும்

திறன் அறிந்தாங்கே திரு-179

பிறர் பொருளை மனதிலும் நாடாதவன் வீட்டுக்கு லக்ஷ்மீ தானாகவே போவாள்

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக

நினைப்பானை நீங்கும் திரு – 519

உண்மையாக உழைப்பவனை , ஒருவன் தப்பாக எடை போட்டால்,லக்ஷ்மீ (செல்வம்) அவனை விட்டுப் போய்விடுவாள்.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திரு நீக்கப்பட்டார் தொடர்பு – 920

விலைமாதர், கள், சூதாட்டம்-இவை மூன்றும் திருமகளால் கைவிடப்பட்டாரின் அடையாளங்கள்..

இங்கு ஒரு இயல்பான சந்தேகம் எழும்; ‘திரு’ என்பதை எல்லாம் செல்வம் என்று பொருள் கொண்டால் லக்ஷ்மி என்ற இந்துக் கடவுள் மறைந்து போவாளே! என்று.

இந்துக்கள் மட்டுமே நம்பும் ‘முகடி’ என்னும் மூதேவியை (ஜேஷ்டா தேவி) அவர் மேலும் இரண்டு குறள்களில் வைத்துப் பாடியதும் பதின்மரின் உறையும் திரு என்பது லக்ஷ்மியையும், முகடி என்பது மூதேவியையுமே குறிக்கும் என்பதைத் தெளிவாக்கும்.

இதோ முகடிக் குறள்கள்

617, 936

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாளுளாள் தாமரையினாள்- 617

சோம்பல் உள்ளவனிடத்தில் மூதேவியும், சுறுச்சுறுப்பானவர் இடத்தில் தாமரை மலரில் வீற்றிருக்கும் லக்ஷ்மியும் வாழ்வதாக சான்றோர்கள் பகர்வர்.

அகடரார் அல்லல் உழப்பர் சூதென்னும்

முகடியால் மூடப்பட்டார் -936

சூதாட்டம் என்னும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், சோற்றுக்கே வழியின்றித் தவிப்பர்

இப்படி மூதேவியையும் திருமகளையும் ஒப்பிட்டுப் பாடுவதால் திருவள்ளுவன் தெய்வீக ஹிந்து என்பதும் தெளிவுபடும்.

Tags– ஸ்ரீ தேவி, மூதேவி, திருவள்ளுவர்

–சுபம்–

அப்பர் தெரிவிக்கும் இரகசியமும், எறும்புகளின் அணிவகுப்பும்! (Post No.5670)

Written by S Nagarajan

Date: 17 November 2018

GMT Time uploaded in London –7-09 am
Post No. 5670

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

அப்பர் தெரிவிக்கும் இரகசியமும், எறும்புகளின் அணிவகுப்பும்!

ச.நாகராஜன்

1

அப்பர் தனது பாடல்களில் நூற்றுக்கணக்கான இரகசியங்களைப் போகிற போக்கில் தெரிவித்துக் கொண்டே இருப்பார்.

அதை ஊன்றிக் கவனித்து அறிய வேண்டியது நமது கடமை.

ஐந்தாம் திருமுறையில் பொதுப் பாடலாக அமையும் ஒரு பாடலை இங்கு பார்ப்போம்.

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்                                                                          ஆறு கோடி நாராயண ரங்ஙனே                                                                               ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர்                                                                    ஈறி லாதவன் ஈசன் ஒருவனே. 

ஈசனின் வயது என்ன என்ற இரகசியத்தை போகிற போக்கில் இப்படி அப்பர் சொல்கிறார்.

இதுவரை நூறு கோடி பிரம்மாக்கள் பிறந்து இறந்து விட்டனர்.

அதே போல ஆறு கோடி நாராயணர்கள் அவதரித்து மறைந்து விட்டனர்.

இந்திரனைப் பற்றிச் சொல்லப் போனாலோ, கங்கை ஆற்றின் மணலை எண்ண முடியுமா? அதை எண்ணிப் பார்த்தால் எவ்வளவு எண்ணிக்கை வருகிறதோ, அந்த அளவு தோன்றி மறைந்து விட்டனர்.

ஆனால் ஈறு இல்லாதன் – முடிவே இல்லாதவன் – ஈசன் ஒருவனே என்பதை அறியுங்கள்.

Picture posted by Lalgudi Veda

2

பிரம்மாவின் ஆயுள் என்ன என்பதை வேதம் கூறுகிறது.

ஒரு மனித வருடம் – ஒரு தேவ அஹோராத்ரம் (அதாவது தேவரின் ஒரு பகலும் இரவும்)

360 தேவ அஹோராத்ரம் – 1 தேவ வருடம்

12000 தேவ வருடம் – ஒரு சதுர் யுகம்

ஒரு சதுர் யுகம் – ஒரு கிருதயுகம், ஒரு த்ரேதா யுகம், ஒரு த்வாபர யுகம், ஒரு கலியுகம் கொண்டது.

    ஒரு கலியுகம் – 4,32,000 மனித வருடங்கள்

ஒரு த்வாபர யுகம் – 8,64,000 மனித வருடங்கள்

ஒரு த்ரேதா யுகம் – 1,296,000 மனித வருடங்கள்

ஒரு கிருத யுகம் – 1,728,000 மனித வருடங்கள்

ஆக ஒரு சதுர் யுகம் – 4,320,000 மனித வருடங்கள்

71 சதுர் யுகம் – ஒரு மன்வந்தரம்

14 மன்வந்தரம்  ஒரு கல்பம்

2 கல்பம் – பிரம்மாவின் ஒரு பகல் ஒரு அஹோராத்ரம்

360 நாட்கள் – ஒரு பிரம்ம வருடம்

100  பிரம்ம வருடம் பிரம்மாவின் ஆயுள்

*

சிவ புராணத்தில் (7.4 TIME CALCULATION) பிரம்மாவின் ஆயுள் பற்றி இப்படி கூறப்படுகிறது.

பிரம்மாவின் ஒரு வருடம் = 1000 கல்பங்கள்

ஒரு பிரம்ம யுகம் என்பது அப்படிப்பட்ட 8000 வருடங்கள் கொண்டது.

ஒரு பிரம்ம சவனம் என்பது அப்படிப்பட்ட 1000 யுகங்களைக் கொண்டது.

பிரம்மாவின் ஆயுள் அப்படிப்பட்ட 3000 சவனங்களைக் கொண்டது.

இப்படிப்பட்ட பிரம்மாவின் ஆயுளுக்குள் ஐந்து லட்சத்து நாற்பதினாயிரம் இந்திரர்கள் வந்து போகின்றனர்!

பிரம்மாவின் முழு ஆயுள் விஷ்ணுவிற்கு ஒரு நாள்.

விஷ்ணுவின் முழு ஆயுளும் ருத்ரனுக்கு ஒரு நாள்.

ருத்ரனின் முழு ஆயுளும் சிவனுக்கு ஒரு நாள்.

சிவனின் ஆயுள் காலத்தில் ஐந்து லட்சத்து நான்காயிரம் ருத்ரர்கள் வந்து போகின்றனர்.

முழு விவரங்களுக்கு சிவ புராணத்தை கீழ்க்கண்ட தளத்தில் பார்க்கலாம்.

https://books.google.com/books?id=r6QZDQAAQBAJ&pg=PT221&lpg=PT221&dq=vishnu%27s+lifespan+equal+to+brahma%27s&source=bl&ots=77XFjyI4zQ&sig=PO8gS18WiJof4FvbVPRKyIyZmow&hl=ta&sa=X&ved=2ahUKEwiukIbt-9TeAhWnrFQKHWzLA14Q6AEwCXoECAcQAQ#v=onepage&q=vishnu’s%20lifespan%20equal%20to%20brahma’s&f=false

ஆக, அம்மாடியோவ் என்று இருக்கிறது கணக்கு!

 

3

பிரம்ம வைவர்த்த புராணத்தில்  கிருஷ்ண ஜன்ம காண்டத்தில் ஒரு சம்பவம் குறிப்பிடப்படுகிறது.

இந்திரனுக்கு எங்கும் இல்லாத ஒரு அரண்மனை அமைக்க ஆசை. விஸ்வகர்மாவைக் கூப்பிட்டு அப்படி ஒரு அழகிய அரண்மனையை அமைக்கப் பணித்தான். விஸ்வகர்மாவும் தன் திறமையை எல்லாம் காட்டி ஒரு நகரையே அமைத்தான். ஆனால் இந்திரன் திருப்தியுறவில்லை. இன்னும் அதிகமாக எதிர்பார்ப்பதாகக் கூறிக் கொண்டே இருந்தான்.

சோர்ந்து போன விஸ்வகர்மா பிரம்மாவிடம் முறையிட நாளை உன் பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும் என்று அருளினார்.

அடுத்த நாள் காலை இந்திரனின் வாசலில் ஒரு பிரம்மச்சாரி பிராம்மணன் வந்து சேர்ந்தான். அவனை வரவழைத்த இந்திரன் அவன் வந்த் நோக்கத்தைக் கேட்கவே, “நீங்கள் ஒரு அழகிய நகரை நிர்மாணிப்பதாகக் கேள்விப்பட்டேன். இன்னும் எத்தனை வருடங்கள் ஆகும் அது முடிய? இதுவரை எந்த இந்திரனும் செய்யாத ஒரு அரிய காரியத்தை ஆரம்பித்திருக்கிறாயே!”  என்றான்.

இந்திரன் சிரித்தான்.

“இது வரை எத்தனை இந்திரர்களை நீ பார்த்திருக்கிறாய்?” என்று கேட்டான்.

அதற்கு அந்த பிராம்மண பையன் ஒவ்வொருவரின் ஆயுளையும் விவரமாக எடுத்துரைக்க ஆரம்பித்தான்.

 “கணக்கிலடங்கா எத்தனை உலகங்கள். நீர்க்குமிழிகள் போல உடைந்து உடைந்து எத்தனை பிரபஞ்சங்கள். எத்தனை பிரம்மாக்கள். எத்தனை இந்திரர்கள்“ என்று விவரமாக ஒரு சொற்பொழிவையே ஆற்றிச் சிரித்தான்.

அப்போது அங்கு எறும்புகளின் அணிவகுப்பு ஒன்று சென்றது. அந்த எறும்புகளைப் பார்த்துச் சிரித்தான் அவன்.

“எதற்குச் சிரிக்கிறாய்?” என்று இந்திரன் கேட்டான்.

“இதோ, போகின்றனவே, கணக்கிலடங்கா எறும்புகள். இவை அனைத்துமே ஒரு காலத்தில் இந்திரர்களாக இருந்தவர்களே. புண்ணியம் போன பின் அந்த இந்திரர்கள் இதோ, இந்த எறும்பாக ஊர்கின்றனர்” என்றான்.

இதைக் கேட்ட இந்திரன் திடுக்கிட்டு பூரண ஞானத்தை அடைந்தான். கர்வ பங்கம் அடைந்தான்.

கர்மத்தினாலேயே ஒருவன் நல்ல பதவியை அடைகிறான் என்றும் அதே கர்மத்தினாலேயே அவன் கீழ் நிலையையும் அடைகிறான் என்பதையும் உணர்ந்து கொண்டான்.

எறும்புகளின் அணிவகுப்பு (The Parade of Ants)!

இதைப் படித்தால் எல்லையற்ற பிரபஞ்சத்தின் முடிவற்ற காலம் என்பது பற்றி அறிய முடியும்.

*

அப்பர்  பிரான் இந்தக் கணக்கையெல்லாம் எண்ணி எண்ணி வியந்தார்.

அந்தமில்லா – ஈறு ஒன்று இல்லா – பிரானின் பெருமை அவரை விக்கித்தது. உடனே, தனக்குத் தெரிந்த கால இரகசியத்தை உள்ளடக்கி, ஈறு இல்லா ஈசனைப் போற்றிப் பாடினார் :

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்                                                                          ஆறு கோடி நாராயண ரங்ஙனே                                                                                ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர்                                                                    ஈறி லாதவன் ஈசன் ஒருவனே.
ஈசனின் வயது என்ன – ஈறு இல்லை – என்ற இரகசியத்தை போகிற போக்கில் இப்படி அப்பர் சொல்கிறார்.அப்பர் பிரானின் பாடல்கள் ஆழ்ந்த ரகசியங்களை விளக்குபவை; பொருளாழம் கொண்டவை.
தேவாரம் படிப்போம்; இரகசியம் அறிவோம்!!

 

TAGS- எறும்புகளின்,அணிவகுப்பு

****

MARK TWAIN’S FAMOUS LECTURE! (Post No.5669)

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 16 November 2018

GMT Time uploaded in London –20-56
Post No. 5669

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

After a great deal of urging, Mark Twain’s friends in San Francesco persuaded him to give a lecture on the interesting things he had seen in the Hawaiian Islands during his visit in the fall of 1866. In order to encourage the new lecturer, they promised to place hearty laughers at strategic points among the audience.

Tell them not to investigate my jokes, but to respond at once, Clemens (Mark Twain) said.
When he came out on the platform his knees were so violently that his backers thought that he would not last long enough for the hearty laughers to get into action. But Clemens needed no support, for he won the day by his inimitable opening,
Julius Caesar is dead,
Shakespeare is dead
Napoleon is dead
Abraham Lincoln is dead
And I am far from well myself

When the lecture was over, the audience had been laughing much they were too weak to leave their seats.

Xxxx


Mark Twain in his lecturing days , reached a small Eastern town one afternoon and went before dinner to a barbers to be shaved.
You are a stranger in town, sir? The barber asked.
Yes, I am a stranger here, was the reply.
We are having a good lecture here tonight, sir, said the barber, a Mark Twain lecture. Are you going to it?

Yes, I think I will, said Clemens.
Have you got your ticket yet? The barber asked.
No, not yet, said the other.
Then, sir, you will have to stand.
Dear me, Mr Clemens exclaimed, it seems as if I always do have to stand when I hear that man Twain lecture.

XXXXX

 

Mark Twain profile
American Children’s Writer
Born Nov.30, 1835
Died Apr. 21, 1910
Age at Death 74

Mark Twain is one of America’s great humorous writers. He created two famous characters— Tom Sawyer and Hhuckleberry Finn .
Twain was born Samuel Leghorne Clemens in Florida, Missouri, the fifth of six children. His father suffered ill health, and the family was poor . In 1839 they moved to Hannibal, a rapidly growing town on the Mississippi River, where Twain went to the local school. When he was 12, his father died and Twain had to leave school to find work.

At age 22 Twain became a river pilot at a time when there were 1000 boats a day on the Mississippi. He followed this trade for four years and loved it, but river traffic ended during the American civil war.
Becoming a full time reporter in 1862, he soon began to use the pen name Mark Twain. He published his first important story at age 32 and his first successful novel, the humorous travel book The Innocents Abroad, when he was 34.

In 1870 Twain married Olivia Langdon, with whom he had five children. He wrote his classic children s stories The Ad,,,, and the adv,,,in his 40s. Twain had become increasingly disillusioned by modern life and personal tragedies, and the book s provided an opportunity for him to relieve the golden days of his boyhood on the Mississippi. Both stories give a realistic picture of life around the Mississippi and are full of adventure and humour. The ad h f , ,, considered his master piece, is noted for its accurate and sympathetic depiction of adolescent life.

Publications

1867 The Celebrated Jumping Frog of Calaveras County and Other Sketches
1869 The Innocents Abroad
1872 Roughing It
1876 The Adventures of Tom Sawyer
1881 The Prince and The Pauper
1884 The Adventures of Huckleberry Finn
1894 Pudd’n head Wilson A Tale

TAGS- Mark Twain Profile, Mark Twain’s lecture
Xxxx

அயோடினும் நெப்போலியனும், அயோடினும் மருத்துவமும் (Post No.5668)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 16 November 2018

GMT Time uploaded in London –17-34
Post No. 5668

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

அடடா, அடடா, அயோடின் -டா கட்டுரையின் இரண்டாம் பகுதி

நேற்று வெளியான முதல் பகுதியில் சில சுவையான சம்பவங்களைக் கொடுத்தேன். இதோ மேலும் சில சுவையான சம்பவங்கள்.

நெப்போலியன் பிரான்ஸ் நாட்டை ஆண்ட காலத்தில், பிரான்சுக்கும் பிரிட்டனுக்கும் இடையே பல ஆண்டுகளுக்கு யுத்தம் நடந்தது. அப்பொழுது வெடிமருந்து, வெடிகுண்டு செய்யத் தேவையான பொட்டாஸியம் நை ட் ரே ட் பிரான்ஸுக்குக் கிடைக்காமல் இருப்பதற்காக பிரிட்டன் கடற்படையை வைத்து பிரான்ஸை முற்றுகையிட்டது. பிரெஞ்சுக்காரகள் வேறு எவ்வகையில் பொட்டாஸியம் நை ட் ரே ட் செய்யலாம் என்று ஆராயத் துவங்கினர். கடற் பாஸியில் உள்ள ரசாயனப் பொருளை பயன்படுத்தலாம் என்று அதோடு பொட்டாஸியம் உள்ள பல பொருட்களைச் சேர்த்தனர்.

அப்போது ஒரு அதிசயம் நடந்தது. பள பளப்பான கறுப்பு நிற படிகங்கள் குடுவையில் சேர்ந்தன .அதை சூடாக்கிப் பார்த்தபோது ஊதா நிற ஆவி வந்தது. பெர்னார்ட் கூர்த்வா என்பவர் இதைக் கண்டுபிடித்தார். ஆனால் அவர் வேறு இருவரிடம் கொடுக்கவே அது ஜோசப் கே லுசக் என்பவர் கைக்கு வந்தது. அவர் இது ஒரு தனி மூலகம் என்பதை அறிந்து கிரேக்க மொழியில் ஐயோட்ஸ் என்று பெயரிட்டார். இதன் பொருள் ‘வயலெட் நிறம் போன்ற’– இதிருந்து பிறந்த சொல்தான்  அயோடின்.

இதை மேற்கொண்டு சோதனைக்காக பிரிட்டனை சேர்ந்த ஹம்ப்ரி டேவிக்கு அனுப்பினர். பிரான்ஸ்- பிரிட்டன் போரையும் பொருட்படுத்தாது அவரை பாரிஸ் நகருக்குள் நுழைய நெப்போலியன் அனுமத்தித்தான். அவர் ஹோட்டல் அறையில் தங்கியவாறே சோதனைகளைச் செய்து, இது தனி மூலகமே என்றார்.

வழக்கமாக மற்றவர்கள் செய்ததை  பிரிட்டிஷார் திருடி அதை தமது சாதனை போலக் காட்டுவர். ஆகையால் ஹம்ப்ரி டேவிதான்  (Humphrey Davy) அயோடினை கண்டுபிடித்தவர் என்று பறை அறிவித்தனர்.

இந்த சர்ச்சை 100 ஆண்டுகளுக்கு நீடித்தது. பிரெஞ்சுக்காரர்கள் விடவில்லை. அயோடின் கண்டுபிடித்த நூற்றாண்டு விழா என்று 1913ல் பாரீஸில் பெரிய விழா கொண்டாடிவிட்டனர்.

மருத்துவத்தில் அயோடின்

இப்படி அயோடின் பற்றிய சர்ச்சை ஒரு புறம் இருக்க, அனைவரும் அயோடினின் மருத்துவப் பயனைக் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் துவங்கினர். அந்தக் காலத்தில் முன்கழுத்துக் கழலை

நோய் என்பதற்கு (கழுத்தில் கட்டி) கடற்பாஸியைக் கொடுத்து கட்டுப்படுத்தினர். இதை உணர்ந்த டாக்டர் ஜீன் பிரான்ஸ்வா காயின்டே என்பவர் பொட்டாஸியம் அயோடைட் திரவத்தை  நோயாளிகளுக்குக் கொடுத்தார். ஆனால் அது கடுமையான வயிற்று நோவை உருவக்கியது. பின்னர் அது கைவிடப்பட்டது. ஆனால் இதன் மூலம் டிங்சர் அயோடின் என்ற கிருமி கொல்லும் மருந்து கிடைத்தது. இப்போதும் காயங்களுக்கு டிங்சர் அயோடின் போடுகின்றனர்.

மனிதர்களின் கழுத்தில் தைராய்ட் (Thyroid Glands) சுரப்பி உளது இது இரண்டு வகை ஹார்மோன்களை உற்பத்தி செய்யும். இது அதிகம் ஆனாலும் நோய் வரும். குறைந்தாலும் நோய் வரும் .இது குறைந்தால் முன்கழலை,உடலில் குளிர், மனத்தொய்வு, காய்ந்து போன சருமம், களைப்பு என்று பல பிரச்சினைகள் வரும் . அதிகம் ஆனாலோ அமைதியினமையும் அதிக அலட்டலும் உண்டாகும். ஆகையால் ரத்தத்தில் அயோடின் உள்ள அளவைக் கொண்டு  இதை தீர்மானித்து மருந்து கொடுக்கத் துவங்கினர்.

கர்ப்பிணிகளுக்கு அயோடின்

கர்ப்பமான பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களில் தேவையான அளவுக்கு அயோடின் இருந்தால்தான் குழந்தையின் நரம்பு மண்டலம் வளர்ச்சி பெறும். இதனால் இப்போது கர்ப்பிணிப் பெண்களையும் இந்த கோணத்தில் அதிகம் கவனிக்கின்றனர்.

இயற்கையாக முட்டைக் கோசு, காளான், சூரிய காந்திச் செடி விதைகள், பல வகை மீன்கள் ஆய்ஸ்டர் (Oysters) எனப்படும் சிப்பியில் இருக்கும் பிராணி ஆகியவற்றில் இது அதிகம் இருக்கிறது. ஆரோக்கிய வாழ்வுக்கு அயோடின் அவஸியம்.

–subham–

சிலைகளைக் காத்துக் கலைக்கூடம் அமைத்த பாஸ்கரத் தொண்டைமான்! (Post No.5667)

Written by S Nagarajan

Date: 16 November 2018

GMT Time uploaded in London –5-59 am
Post No. 5667

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

சிலைகளைக் காத்துக் கலைக்கூடம் அமைத்த பாஸ்கரத் தொண்டைமான்!

ச.நாகராஜன்

1

   தமிழகத்தில் சிலை திருடிக் கடத்தும் மாபாவிகளைப் பற்றித் தினமும் ஒரு செய்தி வருகிறது.

தோண்டத் தோண்ட சிலைகள் – வீடுகளில், வயல்வெளிகளில் என!  செய்திகளைப் படித்தால் பகீர் என்கிறது.

தமிழகத்தின் பழம் பாரம்பரியத்தைப் பற்றிப் பேசி தமிழால் வயிறை வளர்த்து, கொள்ளை அடித்துச் சொத்துச் சேர்த்த மாபாவிகள் சிலைகளின் மேலும் கை வைத்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம்.

முகலாயர்களின் வழியேயும், ஆங்கிலேயர்களின் வழியேயும் வந்தோர் சிலைகளை உடைத்தனர்; கடத்தினர். இப்போது தமிழை வைத்து வணிகம் செய்வோர் சிலைகளையும் வணிகச் சரக்காக்கி விட்டனர். ஐயோ, தமிழகமே!

இந்தச் சிலைகளை அமைக்க மன்னர்கள் பட்ட பாடு எத்தனை; சிற்பிகள் தம்மை அர்ப்பணித்து ஆற்றிய சேவை எத்துணை பெரிய சேவை. எதிலாவது தம் பெயரை எந்த மன்னனாவது, சிற்பியாவது பொறித்தது உண்டா?

ஆனால் இப்போதோ?!

எங்கு பார்த்தாலும் ஒரு போர்டு, ஒரு சிலை. கக்கூஸ் திறந்தாலும் கல்வெட்டு; கல்லறைக்குப் போனாலும் கல்வெட்டு.

அங்கங்கு ஆர்ச். போகும் தெருக்களின் பெயர்களெல்லாம் பொல்லாதவர்களின் பெயர்கள்.

இதில் சிலை திருட்டும் இப்போது சேர்ந்து கொண்டது.

இப்படிப்பட்ட சிலைகளைக் காக்க எப்படிப்பட்ட முயற்சிகளை நம் மக்கள் மேற் கொண்டனர். அதைத் தொகுக்க வெண்டும். அது ஒரு பெரும் கலைக் களஞ்சியமாக அமையும்.

இதில் ஒரு சரித்திர ஏடு தான் தஞ்சைக் கலைக்கூடம்!

அதை அமைக்கப்பாடுபட்டவர் திரு பாஸ்கரத் தொண்டைமான். ( பிறப்பு: 22-7-1904 மறைவு 1965)

 

2

1951ஆம் ஆண்டு தஞ்சாவூரில் நடந்த ஒரு சம்பவம் இது. கல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தொல்பொருள் ஆய்வாளர் ஒரு சிலை கேட்பாரற்றுக் கிடக்கிறது என்றும் அதைத் தஞ்சாவூரிலிருந்து கல்கத்தா கொண்டு செல்ல அனுமதி தரவேண்டும் என்றும் மாவட்ட அரசு அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க, அதிகாரிகளும் சிலை எங்கேயாவது சரியாக இருந்தால் சரி என்று அனுமதியை வழங்கினார்கள்.

சிலையைப் பார்க்க ஒரு கூட்டம் கூடியது. கரந்தை நகரைச் சேர்ந்த பொது மக்கள் சிலையை எங்கும் எடுத்துச் செல்லக் கூடாது என்று ஒரேயடியாக கோஷம் போட்டார்கள்.

அப்போது அந்த சம்பவத்தைப் பார்த்த ஒரு இளைஞர் இப்படிப்பட்ட சிலைகளை எல்லாம் ஓரிடத்தில் கொண்டு சேர்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணினார்.

அவர் தான் பாஸ்கரத் தொண்டைமான்.

ராஜாஜி, டி.கே.சி., கல்கி உள்ளிட்ட ஏராளமானோரின் அன்புக்குரியவர்.

அவர் கவனிப்பாரின்றிக் கிடந்த சிலைகளை எல்லாம் சேர்த்து தஞ்சையில் கலைக்கூடம் அமைத்தார்.

நாடே அவரைப் பாராட்டியது.

எங்கு சிற்பம், சிலை என்றாலும் அங்கு பாஸ்கர தொண்டைமான் சென்று விடுவார்.

அவர் எழுத்தராகப் பணி புரியத் தொடங்கி கலெக்டராகப் பதவி உயர்வு பெற்றவர்.

கலா ரஸிகர்.கவிதை ரஸிகர். எழுத்தாளர். சிறந்த நிர்வாகி. வேங்கடம் முதல் குமரி வரை என்ற நூலை எழுதியவர். ஒவ்வொரு ஆலயத்திற்கும் சென்று அதைப் பற்றி எழுதியவர்.

3

செப்டம்பர் 2005இல் ‘கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக்களஞ்சியம்’ என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் சிலைகளை அமைக்கக் காரணமாக அமைந்த நிகழ்ச்சியும் அவரது அரும் பணியும் விவரிக்கப்பட்டுள்ளது.

பாஸ்கரத் தொண்டைமானின் புதல்வியார் திருமதி ராஜேஸ்வரி நடராஜன் பக்கங்கள் என்பதில் வரும் ஒரு பகுதியை அப்படியே கீழே காணலாம்:

திரு தொண்டைமான் அவர்களைத் தஞ்சை ஜில்லாவிலே பதவியேற்கச் செய்தது இறைவன் திருவுள்ளம் என்று தான் கூற வேண்டும். இராஜராஜ சோழன் கல்லால் இழைத்த காவியமாகிய பெரிய கோயிலை எடுப்பித்து வான்புக தேடிக்கொண்ட தஞ்சையிலே தான், தொண்டைமான் அவர்களும் கலைக்கூடம் அமைத்து அழியாப் புகழைத் தேடிக் கொண்டார்கள்.

    கலைக்கூடம் தோன்றிய வரலாறே ரசமானது. ஒரு நாள் தஞ்சைக்கருகில் உள்ள கருத்தட்டாங்குடிக்கு தொண்டைமான் சென்றார்கள். அங்கே கையிழந்த பிரம்மா ஒருவர் கவனிப்பாரற்றுக் கிடந்தார். கலையழகில் தோய்ந்த தொண்டைமானுக்கு, இப்படி வயல்வெளிகளிலும், ரோட்டுப் புறங்களிலும், சந்து பொந்துகளிலும்  சீந்துவாரற்றுக் கிடக்கும் தெய்வத் திருவுருவங்களை எல்லாம் ஒன்று சேர்த்து உயிர் கொடுத்தால் என்ன என்று தோன்றியது. அவ்வளவு தான். பிரம்மா தஞ்சை நோக்கிக் கிளம்பினார். அதுவரை ஏறிட்டுப் பார்க்காதவர்கள் கூட எதிர்ப்பைக் கிளப்பினார்கள். எதிர்ப்பை எல்லாம் சமாளித்துக் கொண்டு தஞ்சை அரண்மனை வந்து அமர்ந்து விட்டார் பிரம்மா. இதுவே பெரும் சாதனைக்குப் பிள்ளையார் சுழியாக அமைந்தது.

    அது முதல் தஞ்சை ஜில்லாவிலே கேட்பாரற்றுக் கிடந்த சிலைக்ளுக்கெல்லாம் அடித்தது யோகம். திரு தொண்டைமானவர்களின் ஆர்வமும் தூண்டுதலும் ரெவினியூ இலாகாவினரிடையேயும் மக்களிடையேயும் புது விழிப்பையும் உற்சாகத்தையுமே ஊட்டி விட்டன. ‘நான் முந்தி, நீ முந்தி’ என்று சிலைகளைக் கொண்டு வந்து குவித்தார்கள். பழைய அரண்மனையின் ஒரு பகுதியிலேயே இவை குடியேறின. சிற்பங்களுக்கேற்ப பீடங்களும், விளக்கங்களும் அமைக்கப்பட்டன.

குறைந்த கால அளவில் கவினார் கலைக்கூடம் ஒன்று உருவாகிவிட்டது. தொண்டைமானவர்களது விடா முயற்சியால். பொருளாதார நிலையைச் சரிக்கட்ட கலை விழாக்களும் நடத்தப் பெற்றன. தஞ்சையில் இதுபோல முன்னும் நடந்ததில்லை.பின்னும் நடந்ததில்லை என்னும் அளவுக்குப் புகழ் பெருகியது. கலைக் கூடத்திலே இன்று சேர்த்து வைக்கப்பட்டுள்ள கலைச் செல்வங்களின் மதிப்பு சுமார் மூன்றரைக் கோடி ரூபாய் என்று மேல் நாட்டு நிபுணர்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள் என்றால் தொண்டைமான் அவர்களின் பணியின் உயர்வையோ சிறப்பையோ நான் சொல்ல வேண்டியதில்லையல்லவா?

4

பாஸ்கரத் தொண்டைமானின் அரும் பணியைப் பற்றி இன்று எத்தனை பேர் அறிவர்? அவரது பணியின் சிறப்பைச் சொல்வார் இன்று இல்லையே!

சிலைகளை இன்று கடத்தியோர் பற்றிப் பெரிதாக மக்களிடையே விழிப்புணர்வு

ஏற்பட்டதாகக் காணோம். அதைக் கண்டுபிடித்த போலீஸ் அதிகாரியும் பெரிதும் பாராட்டப்படக் காணோம்.

மாறாக காமக் கவிஞன் அழைத்த கதையும், சினிமாக் கதை திருட்டுக் கதையா, இல்லையா அதில் வருபவரின் பெயர் யாருடையது என்பதைப் பற்றியும் தான் ‘விழிப்புணர்வும்’, சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது.

நொடிக்கு ஒரு செய்தி; நாளுக்கு ஒரு வீடியோ!

சமூக அவலங்கள் பற்றிய விழிப்புணர்வுச் செய்திகள் தேவை தான்.

அத்துடன் கூட, தமிழ் மக்கள் சிலைகளின் மீதும் கருத்தை வைக்க வேண்டிய தருணம் இது!

நமது பாரம்பரியத்தை உணர்த்தும் சிலைகளைக் காப்போம்; சந்ததிகளுக்கு அளிப்போம்!

****

Iodine Wonders- Napoleonic Wars and Secret Rains (Post No.5666)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 15 November 2018

GMT Time uploaded in London –15-33
Post No. 5666

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

Iodine is one of the 118 elements and has the Atomic Number 53 in the Periodic Table. There are very interesting titbits about this Common element. All of us know about tincture iodine that is applied on injuries and wounds. But there are more roles played by iodine in the fields of photography, artificial rain, treatment for goitre. Iodised salt, Napoleons interest in iodine, controversy about who discovered iodine, Chernobyl and thyroid cancer and foods rich in iodine.

Let me give some interesting information first

Secret tests carried out by the British defence department caused the death of 31 people in Lyn mouth in 1952. The experiment was done to see whether they can stop advancing enemy tanks in the battle field by creating floods. They tried to produce artificial rain by seeding the clouds with silver iodide. It caused sudden floods in West of England causing natural disaster.

Silver iodide can be used to seed the cloud and thereby initiate rainfall. One gram of silver iodide can provide trillion seed crystals around which water vapour condescend into water and fall to earth as rain .



Chemical details
Chemical symbol ‘I’ ( I for India, I for Iodine)
Atomic number 53
Melting point 114 degree C
It is a black, shiny, non-metallic element and belongs to halogen group in the Periodic Table.

Chernobyl and Thyroid Cancer
Radioactive iodine-131 was released into atmosphere following Chernobyl nuclear accident in 1986. Though the isotope has a half-life of eight days it was picked up by grazing animals. The milk from those animals and the water with the isotope caused thyroid cancer in lot of children. Potassium iodide tablets can counter the bad effects of this isotope, but it was too late for Chernobyl people.

Iodine in photography
In 1839, Louis Daguerre used it in photography. He used a piece of plated silver which had been exposed to iodine vapour. That formed the light sensitive silver iodide. The stronger the light, the more silver iodide was converted back to silver metal. The iodine formed in this was washed resulting in a positive image. Later they replaced it with a wet plate with silver iodide film on glass.


400000 tonnes from the sea
About four lakh tonnes of iodine escape from the oceans every year as iodide in sea spray or as iodine produced by marine organisms. When they are deposited on land micro organisms, fungi and other plants pick some of it and the rest reaches the sea again through river water.

Iodine is used in many industries
Pharmaceuticals account for 25%
Animal feeds 15%
Printing inks and dye s 15%
Industrial catalysts 15%
Photographic chemicals 10%
Miscellaneous uses 20%

Iodine is turned into iodide s of silver, titanium , potassium and zirconium in these industries.



Iodine and Napoleon

Iodine was discovered as an indirect result of the Napoleonic Wars of the early nineteenth century. British navy blockaded France in an effort to cut off the supply of saltpetre—potassium Nitrate —that was needed to make gunpowder. A cottage industry sprang up quickly to supply the saltpetre. Bernard Courtois, a chemist, made saltpetre from seaweed ash. In this process, he saw some beautiful crystals and gave it to two friends. At the end Joseph Gay Lussac proved it as a new element and named it Iode, from the Greek ‘iodes’ meaning violet like.

Iodine crystals produce purple fumes when they are heated.

English man Humphrey Davy confirmed it. English said that he discovered it. This controversy lasted for 100 years. The French celebrated the discovery of iodine in 1913. Napoleon gave permission to English man Humphrey Davy to visit Paris even though the two countries were at War. Davy was given a sample of iodine and he worked on it in his hotel room using his travelling chemistry set.

Iodine in Medicines

In 1820, Dr Jean Francois Coindet used iodine solution and potassium iodide for treating goitre. He knew sea weed which was used in goitre treatment contained iodine. Though his medicine failed to treat goitre it was found a good germs killer. It was used to treat open wounds. This is tincture iodine.

Iodine is needed in the first three months of pregnancy for the development of baby’s nervous system. Body needs iodine for its proper function. Most of it is in the thyroid glands in the neck. Thyroid glands produce two hormones, Thyroxine and Tri iodo thyronine, which regulate several metabolic functions including body temperature. Too little iodine in the body results in goitre— swollen neck— feels cold, dry skin, tiredness and even depression. Too much iodine results in hyperthyroidism with its associated restlessness and hyper activity

Iodine is found in large quantity in natural conditions in Chile, Colorado ,New Mexico in America
It is produced from natural brine and oil well brine. Chile and Japan produce 70% of iodine in the world

Every one of us needs iodine and it is in seaweed, cabbage, mushrooms, fish and oysters. Where ever iodine deficiency is, iodised salt is used in food. India and other countries use iodised salt.

— Subham—

அடடா! அடடா! அயோடின் Iodine-டா! (Post No.5665)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 15 November 2018

GMT Time uploaded in London –11-35 AM
Post No. 5665

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

அயோடின் என்பது என்ன?

118 மூலகங்களில் ஒன்று.

மூலகம் என்றால் என்ன?

எப்படி வீடு கட்ட செங்கல் தேவையோ,அது போல இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்க ஹைட் ரஜன், நைட் ரஜன், ஆக்ஸிஜன், முதலிய 118+ அடிப்படைப் பொருட்கள் தேவை. அதில் ஒன்று அயோடின்.

இது மனித உடலுக்குத் தேவையான ஒரு இரசாயனப் பொருள்; அயோடின் கூடினாலும் கஷ்டம்; குறைந்தாலும் கஷ்டம்!

சுவையான செய்திகள்

முதலில் அயோடின் IODINE பற்றிய சுவையான செய்திகளைக் காண்போம்.

செயற்கை மழை பொழிவிக்க உதவுவது சில்வர் அயோடைடு (SILVER IODIDE வெள்ளி அயோடைட்) என்னும் பொருள் ஆகும். ஒரு கிராம் சில்வர் அயோடைட் தூவினால் அது ஒரு ட் ரி ல்லியன் (TRILLION) படிகங்களை உருவாக்கும்.  அதைச் சுற்றி மேகத்திலுள்ள நீர்த் திவலைகள் சேர்ந்து கொட்டோ கொட்டு என்று மழை கொட்டிவிடும். அது சரி! மேகம் இருந்தால்தானே கொட்டும். அதற்கு நாம் எங்கே போக வேண்டும் என்று கேட்காதீர்கள்!

விமானத்தை விண்ணில் மேகத்துக்கு இடையே விமானத்தை பறக்கச் செய்து புகைபோல அயோடின் உப்பு தூவப்படும். இப்படி 1952 ஆகஸ்டில் பிரிட்டிஷார் ஒரு ரகசிய சோதனை நடத்தினர். இது இங்கிலாந்தின் மேற்குப் பகுதியிலுள்ள லின்மவுத் என்னும் ஊரில் அதி பயங்கர மழையைக் கொட்டி திடீர் வெள்ளத்தை உண்டாக்கி 31 பேரைச் சாகடித்தது!

ஏன் ரஹஸிய சோதனை நடத்தினர்? எதிரி நாட்டில் படைகளை அடக்க, மடக்க இது உதவுமா என்று பிரிட்டிஷ் ராணுவ இலாகா செய்த சோதனை இது. டாங்குகள் அணிவகுத்து வருகையில் இப்படி வெள்ளத்தை உண்டாக்கினால் அவை சகதியில் சிக்கி, முன்னேற முடியாதல்லவா? இது என்னாடா பெரிய சோதனை! பெரும் ரோதனையாகப் (அழுகை) போய்விட்டதே என்று மக்கள் அங்கலாய்த்தார்கள்.

கொஞ்சம் வேதியியல் பாடம் நடத்திவிட்டு மேலும் ஒரு சுவையான  செய்தி  சொல்லுவேன்.

 

அயோடின் என்பது உலோகம் அல்ல; இது பளபளப்பான கறுப்பு நிற படிகங்கள். இதை சூடாக்கினால் பர்ப்பிள் என்னும் ஊதா நிற புகையை வெளியிடும். இதன் ரஸாயன குறியீடு ‘ஐ’ I ஐ I ஃபார் இண்டியா; ஐ ஃபார் அயோடின்.

இதன் அணு எண் 53. அதாவது பிரியாடிக் டேபிள் PERIODIC TABLE எனப்படும் மூலக அட்டவணையில் 53 ஆவது இடம். உருகு நிலை 114 டிகிரி சி.

இது மருத்துவத் துறையிலும் புகைப்படத் தொழிலிலும் நிறைய பயன்படுகிறது.

நிற்க.

சுவையான செய்தி என்னவென்றால்,

ஒவ்வொரு ஆண்டும் கடல் அலை வீசும் நீர்த் திவலைகள் மூலமும், கடல்பிராணிகள் தாவரங்கள் மூலமும் 4 லட்சம் டன் அயோடின்  காற்று மண்டலத்துக்குள் நுழைகிறது. மீண்டும் இவை நிலத்தில் விழுந்து ஆறுகள் வழியே கடலில் கலக்கிறது. இடையே கடற் பாஸி, காளான், முட்டைக்கோசு முதலிய தாவரங்கள் கொஞ்சம் கிரஹித்துக் கொள்ளும்.

செர்னோபிள் CHERNOBLE பற்றிய சோகச் செய்தி

ரஷ்யாவில் செர்னோபிள் என்னும் இடத்தில்1986 ஆம் ஆண்டில் அணு உலை உருகி உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது பழைய செய்தி. இது நிறைய பெயரைப் பலி வாங்கியது. இடி அயோடினும் ஒரு குற்றவாளி! அயோடிந்131 IODINE-131 என்ற கதிரியக்க ஐஸ்டோப் அப்போது வெளியேறியது . இது விரைவில் அழியக்கூடியதே. ஆனால் அது கீழே விழுந்து புல்லில் கலந்து அதை மேந்த ஆடு மாடுகள் தந்த பாலின் வழியே குழந்தைகள், மனிதர்கள் ரத்தத்தில் கலந்து தைராய்ட் THYROID CANCER புற்று நோயை உண்டாக்கியது. தண்ணீரில் கலந்ததும் ஒரு காரணம். பொடாஸியம் அயோடைட் என்னும் உப்பைக் கொடுத்தால் இந்தக் கெடுதியை சரி செய்யலாம் என்பது பின்னர் தெரிந்தது. ஆனால் எல்லாம் நடந்தபின் வந்த இந்த செய்தி கண் கெட்டுப்போனவன் சூரிய நமஸ்காரம் செய்த கதை போல் ஆயிற்று.

புகைப்படத் தொழிலில் புரட்சி

தென் அமெரிக்காவில் சிலி நாட்டிலும் அமெரிக்காவில் கொலராடோ நியு மெக்ஸிகோ பகுதியிலும் இயற்கையாகவே

ஏராளமான அயோடின் உப்பு கிடைக்கிறது

இதைக் கொண்டு புகைப்படங்கள் எடுப்பதைக் கண்டுபிடித்தனர். 1839ல் லூயிஸ் டாகர் என்பவர் ஒரு வெள்ளித் தகட்டில்  அயோடின் ஆவியைப் பாய்ச்சினார். அது சில்வர் அயோடைடை உண்டாக்கியது. அதன் மீது வெளிச்சம் பட்டால அது  மாறி விடும். எவ்வளவு வெளிச்சம் படுகிறதோ அந்த அளவுக்கு சில்வர் அயோடைட் சில்வராக (வெள்ளி) மாறிவிடும். இதைப் புகைப்படக் கருவியில் வைத்து புகைப்படம் எடுத்த பின்னர் அயோடினை கழுவிவிடலாம். அப்போது தகட்டில் உருவம், புகைப்படம் மட்டும் மிஞ்சும். பிற்காலத்தில் கண்

ணாடி மீது சில்வர் அயோடைட் உப்பை படியச் செய்து இந்த பணியைச் செய்தனர். இப்போதைய யுகத்தில் மொபைல் MOBILE PHONE ஐ பேட் I-PAD வந்த பின்னர் காமெரா பிலிம் வேலைகளும் புகைப் படம் கழுவுதலும் மறைந்து வருகிறது. இனி இவைகளை கண்காட்சி சாலையில் காணலாம்.

இப்போது அயோடினை  உப்புக் கரைசல்களில் இருந்தும் எடுக்கின்றன.

அயோடின்  உபயோகம்

மருத்துவத் துறை- 25 சதவிகிதம்

பிராணிகளின் தீவனம் 15 %

பிரிண்டிங் இங்க், சாயம்- 15 %

தொழிற்சாலை பயன்பாடு 15 %

புகைப்பட ரசாயனம் 10%

ஏனைய பயன்கள் – 20 %

இவை டைட்டானியம், சில்வர், சிர்கோனியம் அயோடைடுகளாக மாற்றப்பட்டு பயன்படுத்தப் படுகின்றன.

கட்டுரையின் இரண்டாவது பகுதியில் அயோடினின் மருத்துவ உபயோகம், அயோடினால் வரும் நோய்கள், பிரிட்டிஷார் செய்த திருட்டுத்தனம், நெப்போலியனும் அயோடினும் முதலிய விஷயங்களைச் செப்புவேன்.

–தொடரும்

–சுபம்—