பால் பிரண்டனின் மகன் காஞ்சி பரமாசார்யரைத் தரிசித்த அனுபவம்! (Post No. 5664)

Written by S Nagarajan

Date: 15 November 2018

GMT Time uploaded in London –10-37 am
Post No. 5664

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

A SEARCH IN SECRET INDIA

பால் பிரண்டனின் மகன் காஞ்சி பரமாசார்யரைத் தரிசித்த அனுபவம்! (Post No. 5664)

.நாகராஜன்     

பால் பிரண்டன் (Paul Brunton ) பிரிட்டனைச் சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர். அவரது இயற்பெயர்  ராபேல் ஹர்ஸ்ட்  (Raphael Hurst ; பிறப்பு 21-10-1898  மறைவு 27-7-1981)

1898இல் லண்டனில் பிறந்த இவர் 1930ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்தார். காஞ்சி பரமாசார்யரை தரிசித்த இவருக்கு அதிசய அனுபவம் ஏற்பட்டது. அவரது வழிகாட்டுதலின் பேரில் 1931ஆம் ஆண்டில் ரமண மஹரிஷியைச் சந்தித்தார். மஹரிஷியின் முன்னர் அமர்ந்திருந்த போது பெரும் ஒளி வெள்ளத்தைக் கண்டு ஆனந்தமுற்றார்.

ஆனால் ரமணாசிரமத்தில் அவரால் நெடுங்காலம் தங்க முடியவில்லை. ஆசிரமத்தின் நடைமுறை க் கட்டுப்பாடுகளை மஹரிஷியின் பூர்வாசிரம சகோதரரான ஸ்வாமி நிரஞ்சனானந்தா நிர்வகித்து வந்தார்.

ரமணாசிரம நிர்வாகத்திற்கு பிரண்டனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே அவர் அங்கிருந்து சென்றார். ஆனால் இறுதி வரை ரமண மஹரிஷியை அவர் மறக்கவில்லை.

அவரது பிரசித்தி பெற்ற புத்தகமான A Search In Secret India என்ற

பால் பிரண்டன் (Paul Brunton ) பிரிட்டனைச் சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர். அவரது இயற்பெயர்  ராபேல் ஹர்ஸ்ட்  (Raphael Hurst ; பிறப்பு 21-10-1898  மறைவு 27-7-1981)

1898 இல் லண்டனில் பிறந்த இவர் 1930ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்தார். காஞ்சி பரமாசார்யரை தரிசித்த இவருக்கு அதிசய அனுபவம் ஏற்பட்டது. அவரது வழிகாட்டுதலின் பேரில் 1931ஆம் ஆண்டில் ரமண மஹரிஷியைச் சந்தித்தார். மஹரிஷியின் முன்னர் அமர்ந்திருந்த போது பெரும் ஒளி வெள்ளத்தைக் கண்டு ஆனந்தமுற்றார்.

ஆனால் ரமணாசிரமத்தில் அவரால் நெடுங்காலம் தங்க முடியவில்லை. ஆசிரமத்தின் நடைமுறை க் கட்டுப்பாடுகளை மஹரிஷியின் பூர்வாசிரம சகோதரரான ஸ்வாமி நிரஞ்சனானந்தா நிர்வகித்து வந்தார்.

ரமணாசிரம நிர்வாகத்திற்கு பிரண்டனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே அவர் அங்கிருந்து சென்றார். ஆனால் இறுதி வரை ரமண மஹரிஷியை அவர் மறக்கவில்லை.

அவரது பிரசித்தி

1934ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இன்று வரை சுமார் இரண்டரை லட்சம் பிரதிகள் இந்தப் புத்தகம் விற்பனை ஆகியுள்ளது.

இந்தப் புத்தகம் மேலை உலகினருக்கு ரமண மஹரிஷியின் அவதார மஹிமையை விளக்கியது.

ரமணாசிரமத்திலிருந்து சென்ற பால் பிரண்டன் மைசூர் மஹாராஜா நான்காம் கிருஷ்ண ராஜா உடையார் அவர்களின் அழைப்பின் பேரில் மைசூர் சென்று சில காலம் வசித்தார். மஹராஜா தேர்ந்த அறிவாளி. பல நூல் கற்ற வித்தகர். ஆன்ம ஞானம் கொண்டவர். கலா ரஸிகர். அவரும் ரமண மஹரிஷியை திருவண்ணாமலை வந்து தரிசனம் செய்து ஆனந்தித்தவர்.

 

மைசூர் ராஜாவின் ராஜ குருவான சுப்ரமண்ய ஐயருடன் பால் பிரண்டன் நெருங்கிய தொடர்பு கொண்டு ஆன்மீக விஷயங்களைப் பற்றி விவாதித்து வந்தார்.

தன் வாழ்நாளில் பல புத்தகங்களை பிரண்டன் வெளியிட்டார். தனக்குத் தோன்றிய ஆன்மீகக் குறிப்புகளை உடனடியாக கையில் கிடைக்கும் பேப்பரில் எழுதி வைக்கும் பழக்கம் பிரண்டனுக்கு இருந்தது. இந்தக் குறிப்புகளை பொருள்வாரியாகப் பின்னர் கட்டுரைகளாகப் படைப்பது அவர் வழக்கம்.

தனது 83 வருட வாழ்க்கையில் அவர் சுமார் இருபதினாயிரம் பக்கங்களை எழுதியுள்ளார் எனில் அவர் எவ்வளவு படித்திருக்க வேண்டும், எவ்வளவு சிந்தித்திருக்க வேண்டும் என்பதை எளிதில் ஊகித்துக் கொள்ளலாம்.

அவர் தனது சிந்தனைப் போக்குக்குத் தக தனியாக ஒரு cult ஆரம்பிக்க விரும்பவில்லை; ஆரம்பிக்கவும் இல்லை.

இன்று நம்மிடையே அவரது 13 புத்தகங்கள் உள்ளன.

பல ஆன்மீக மகான்களைத் தரிசித்து பின்னர் அவர் இங்கிலாந்து திரும்பினார். மூன்றாவது உலக மகாயுத்தம் ஒன்று வரப் போகிறது என்று அவர் நம்பினார். தன் வசிப்பிடத்தை ஸ்விட்ஸர்லாந்தாக மாற்றிக் கொண்டார். இருபது ஆண்டுக் காலம் அங்கு வசித்து வந்த அவர் அங்குள்ள வெவே என்னுமிடத்தில் மறைந்தார்.

பால் பிரண்டனின் மகனான கென்னத் தர்ஸ்டன் ஹர்ஸ்ட் தனது தந்தையின் வழியில் புத்தகம் பிரசுரமான ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் 1984இல் இந்தியா வந்தார். முதலில் ரமணாசிரமம் சென்ற அவர் அங்கு  தனது தந்தை தங்கியிருந்த சிறு பங்களாவைப் பார்த்தார். ரமணாசிரமத்தைப் பார்த்து ஆனந்தித்த பின்னர் காஞ்சி பரமாசார்யரை தரிசிக்க ஆவல் கொண்டார். அப்போது ஆசார்யருக்கு வயது 91.

நேராக அவர் அப்போது தங்கியிருந்த ஊருக்குச் சென்றார். அங்கு தரிசிக்க முடியுமோ முடியாதோ என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. அவரிடம் ஒரு பக்தர் அவரது கார்டை ஆசார்யரிடம் சமர்ப்பிக்குமாறு கூறினார். அதன் படியே செய்த அவருக்கு வியப்பு காத்திருந்தது.

ஆசார்யர் கூட்டம் அதிகமாக இருப்பதால் கோவிலின் பின்புறத்திற்கு வருமாறு அருளினார்.

தான் பால் பிரண்டனின் மகன் என்று அவர் ஆசார்யரிடம் தெரிவித்த போது, அது அவருக்குத் தெரியும். உங்களைப் பார்க்கத் தான் காத்துக் கொண்டிருக்கிறார் என்று மொழிபெயர்ப்பாளரிடமிருந்து பதில் வந்தது. அவருக்கு எப்படித் தனது வருகை தெரியும் என்பதை எண்ணி ஆச்சரியமுற்றார் கென்னத். ஆசாரியர் 38 வயதாக இருந்த போது எடுத்த போட்டோவைப் பிரசுரித்திருந்த புத்தகத்தை கென்னத் அவரிடம் காட்டிய போது, எனக்குத் தெரியும் என்ற பதில் வந்தது.

உலகின் இன்றைய நிலை பற்றிப் பல்வேறு கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று எண்ணியிருந்த கென்னத் உள்ளம் நெகிழ்ந்தார். அவருக்கு ஒன்றுமே கேட்கத் தோன்றவில்லை. சாஷ்டாங்கமாக கீழே விழுந்து நமஸ்கரித்தார்.

ஆசார்யர் அவருக்கு ஆசி கூறி சந்தனத்தால் ஆன ஒரு ருத்ராட்ச மாலையையும் அவரது கழுத்தில் அணிவித்தார். அதை வாழ்நாள் முழுவதும் போட்டு வர ஆரம்பித்தார் பால் பிரண்டனின் மகனான கென்னத்.

அவர் பால் பிரண்டனைப் பற்றி எழுதிய குறிப்பையும் ஆசார்யருடனான சந்திப்பையும் பற்றி அவரே எழுதிய ஆங்கில மூலக் கட்டுரைகளைக் கீழே படிக்கலாம்.

 

A PERSONAL NOTE

Dr. Paul Brunton died July 27, 1981, in Vevey, Switzerland. Born in London in 1898, he authored thirteen books from “A Search in Secret India” published in 1934 to “The Spiritual Crisis of Man” in 1952. Dr. Brunton is generally recognized as having introduced yoga and meditation to the West, and for presenting their philosophical background in non-technical language.

His mode of writing was to jot down paragraphs as inspira- tion occurred. Often these were penned on the backs of envelopes or along margins of newspapers as he strolled amid the flower gardens bordering Lac Leman. They later were typed and classified by subject. He then would edit and meld these paragraphs into a coherent narrative.

Paul Brunton had lived in Switzerland for twenty years. He liked the mild climate and majestic mountain scenery. Visitors and correspondence came from all over the world. He played an important role in the lives of many.

“P.B.”, as he is known to his followers, was a gentle man. An aura of kindliness emanated from him. His scholarly learning was forged in the crucible of life. His spirituality shone forth like a beacon. But he discouraged attempts to form a cult around him: “You must find your own P.B. within yourselves,” he used to say.

KTH

FOREWORD TO THE REVISED EDITION                            A Search in Secret India was an instant success when published in 1934.It continues to be popular after many reprintings, and has been translated into several languages. Written at  the age of thirty-five, it was my father’s first book. To mark   the occasion, he adopted the pen name of Paul Brunton.

This is the story of his personal odyssey, his search for holy men to guide him on his quest. To this task he brought all his professional journalistic skills coupled with an extensive background in spiritual research.

 

My father was a pathfinder. In this book he introduced the terms yoga and meditation to the Western world. He travelled the length and breadth of the sub-continent interviewing yogis, fakirs, and mystics, exploring a side of India previously unknown to foreigners. His story became a tale of high spiritual adventure.

Fifty years later I retraced my father’s steps and journeyed around India giving “in memoriam” lectures in his honor. I learned that his name is still held in highest esteem. Many Indians told me they discovered their country’s spiritual dimension from this very book. I made a pilgrimage to the same ashram he discovered and offered my obeisance in the meditation hall where Ramana Maharshi had lived. I saw the small bungalow my father had inhabited, and I gazed up at towering Arunachala.

The highlight of my trip was my encounter with His Holiness Shri Shankara Acharya, the Spiritual Head of South India, whom my father describes in Chapter VIII. I had no prior intention of meeting him, but upon leaving the Ramanashram, decided to seek him out. After driving along country roads for three hours and locating the village where he was staying, history seemed to repeat itself as I was told there was no chance of my being granted an audience with him. However, a friendly disciple agreed to submit my card and returned with the news that His Holiness would received me at the rear of the temple, to avoid the crowds milling in front. His slight figure, clad in a saffron robe, reflected his ninety-one years. I told him I was the son of Paul Brunton. He replied briefly. The interpreter informed me, “He knows!” His Holiness spoke again. “He has been waiting for you! He has been expecting you,” said the interpreter. But how did he even know of me? How did he know I was in India, I wondered to myself? I held out a copy of this book and showed him his photograph, taken when he was thirty-eight. “I know!” was his comment.

At this point I had hoped to elicit his views on the world situation as had my father previously. But suddenly all questions melted, as I felt an onrush of peace and love. All I could do was prostrate myself in the time-honored tradition at the feet of His Holiness as he gave me his blessing. He then put around my neck a sacred mala, a garland fashioned from fragrant sandalwood. I wear it daily.

Thus the wheel came full circle half a century later.

Kenneth Thurston Hurst August, 1985

மரத்தடியர்களுக்கு ஒரு க்விஸ் + சொல் தேடும் போட்டி+ Crossword (Post No.5663)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 14 November 2018

GMT Time uploaded in London –15-31
Post No. 5663

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

மரத்தடியர்களுக்கு ஒரு Quiz க்விஸ் + சொல் தேடும் Word search போட்டி (Post No.5663)

மரத்தின் மீது காதல்கொண்டு அதன் அடியில் அமர்ந்து இயற்கை அழகை ரசிப்பவர்கள் மரத்தடியர்கள்

‘மரத்’துக்கு ‘அடி’யில் இருப்பவர் மரத்தடியர்

கீழ் கண்ட கட்டத்தை குறுக்கெழுத்துப் CROSS WORD போட்டியாகவோ, கேள்வி பதில் QUIZ நிகழ்ச்சியாகவோ அல்லது சொல் தேடும் WORD SEARCH போட்டியாகவோ மூன்று மட்டங்களில் விளையாடலாம்.

கேள்வி பதில் எளிமையான level லெவல்

சொல் தேடும் போட்டி (Word search)  அதைவிடக் கொஞ்சம் கடினம்.

கேள்விக்கான எண்களையும் விளக்கங்களையும் மட்டும் பார்த்து மரங்களின் பெயர்களைக் கண்டு பிடிப்பது   குறுக்கெழுத்துப் போட்டி (Croos word puzzle)— மிகவும் கடினமான வேலை.

குறைந்து 36 மரங்கள் உள.

இதோ அவற்றைக் கண்டுபிடிக்க உதவும் TIPS துப்புகள்.

இந்த விளக்கங்களுடன் எது? என்ன? என்ற கேள்வியைச் சேர்த்துக் கொண்டால் இதை கேள்வி-பதில், QUIZ வினா-விடை நிகழ்ச்சியாக நடத்தலாம்.

குறுக்கே

2.அண்மைக் காலமாக பிரபலமாகி வரும் டானிக், க்ரீம் , பூச்சு ; மணம் தரும் மலர்; கைதை என்றும் அழைப்பர்

3.‘பரம்பரை பரம்பரையாக’– என்று சொல்லப் பயன்படும் மரம். திருப்பழனம், திருக்குடவாசல், திருப்பைஞ்ஞீலி முதலிய கோவில்களில் தல மரம்

4.நமது நாட்டிற்கே பெயர் தரும் மரம்

5.முக்கனிகளில் ஒன்று; கிளிகளுக்குப் பிடித்தமானது

6.முக்கனிகளில் ஒன்று; மலையாளத்தில் பாயஸம் வைப்பர்.

  1. நெருப்பு என்று பெயர்;பஞ்ச பாண்டவர்கள் ஆயுதங்களை ஒளித்து வைத்த மரம்.

8.அதியமான் அவ்வைப் பாட்டிக்கு கொடுத்த கனியுடை மரம்

9.-நுங்கு தரும் மரம்

  1. -நாரைக் கொண்டு கயிறு திரிப்பர்

12.நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி…….,……,  பல்லுக்கு உறுதி என்று சொல்லும் இரண்டு மரங்களில் ஒன்று.

15.நம்மாழ்வார் ஞானோதயம் பெற்ற மரம்; தான்ஸேனுக்கு குரல் கொடுத்த மரம்

16.வெற்றி பெற்றவர் சூடும்……………….  பூவுடை மரம்

17.நாநிலத்தில் ஒரு நிலத்திற்கு தமிழர்கள் பெயர் வைத்த மரம்; XXXX மலை கோவில் தல மரம்; அர்ஜுன என்ற பெயர் பெற்ற மரம்; ஊர் பெயர்களில் இடம்பெற்ற மரம்

18.ஸம்ஸ்க்ருதத்தில் மரத்தின் பெயர்; ஆங்கிலச் சொல் TREE ட் ரீ கொடுத்த மரம்; கற்பகம், பாரிஜாதம் முதலிய 5 மரங்களைக் குறிக்கும் மரம்

19.அவிநாசி, கொரநாட்டுக் கருப்பூர் முதலிய கோவில்களில் தல மரம்; பாடலம் என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர் உடைத்து; ஊருக்கும் பெயராக அமைந்த மரம்

21.விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் ‘உடும்பரா’ என்ற பெயருடன் வரும் மரம்; பூவாது காய்க்கும் மரம்

21.சீதையின் சோகம் போக்கிய மரம்

23.இந்தியாவிலேயே மிகப்பெரிய மரம்

27.திருவிடைக்கழலி கோவிலின் தல மரம்; சமணர்களும் போற்றும் மரம்

கீழே

1.மதுரை மீனாட்சி கோவிலின் தல மரம்

11.ராம பிரானுக்கு சபரி கொடுத்தாளாம்; அவ்வைக்கு முருகன் கொடுத்த பழம் உடைமரம் என்றும் செப்புவர்.

  1. கசப்பாய் கசக்கும்; ஆனால் அருமருந்து உடைய மரம்

12.புலியின் பெயருடைத்து; சங்க இலக்கியத்தில் பெண்கள் ‘புலி புலி’ என்று கூவி ஆண்களின் கவனத்தை ஈர்த்த மரம்

13.மாணிக்கவாசகர் குரு அமர்ந்த மரம்- அவர் ஞானோதயம் பெற்ற மரம்

14.மூவிலை மரம்; சிவனுக்குப் பிரியமானது

  1. மயிலம் முருகன் கோவில் தல வ்ருக்ஷம்
  2. சுடு மணல் நிறைந்த பிரதேசத்தில் விளைவதால் அந்தப் பெயர் உடைத்து

20.அதியமானின் முன்னோர்கள் கொணர்ந்த மரம்; இக்ஷ்வாகு வம்சத்துக்குப் பெயர் தந்த மரம்.

20.பாக்கு தரும் மரம்

  1. புத்தர் ஞானோதயம் பெற்ற மரம்
  2. மாட்டுக்குக் கொடுத்தால் புண்ணியம்; துவாதஸி பாராயண உணவு; ஒரு நட்சத்திரம், முனிவரின் பெயருடைத்து

22.சிதம்பரத்தின் பெயருடைத்து.

24.வாசனை தரும், சோப்பு செய்யலாம்; சென்ட் போடலாம்

25.பெண்களின் கூந்தலுக்கு மணம் ஊட்டிய புகை என தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியங்கள் புகழும் மரம்

26.திருவொற்றியூர், திருவண்ணாமலை முதலிய பல கோவில்களில் தல மரம்- வகுளம், பகுளம் என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர் உடைத்து; நேமிநாதர் என்ற சமண தீர்த்தங்கரர் முக்திபெற்ற மரம்

XXXXXXXXXXXXXXXX

 

 

ANSWERS

1.கடம்ப மரம்- மதுரை மீனாட்சி கோவிலின் தல மரம்

2.தாழை- அண்மைக் காலமாக பிரபலமாகி வரும் டானிக், க்ரீம் , பூச்சு ; மணம் தரும் மலர்; கைதை என்றும் அழைப்பர்

3.வாழை- ‘பரம்பரை பரம்பரையாக’– என்று சொல்லப் பயன்படும் மரம். திருப்பழனம், திருக்குடவாசல், திருப்பைஞ்ஞீலி முதலிய கோவில்களில் தல மரம்

4.நாவல் (நாவலந்தீவு, ஜம்பூத்வீபம்) – நமது நாட்டிற்கே பெயர் தரும் மரம்

5.மா – முக்கனிகளில் ஒன்று; கிளிகளுக்குப் பிடித்தமானது

6.பலா – முக்கனிகளில் ஒன்று; மலையாளத்தில் பாயஸம் வைப்பர்.

7.வன்னி – நெருப்பு என்று பெயர்;பஞ்ச பாண்டவர்கள் ஆயுதங்களை ஒளித்து வைத்த மரம்

8.நெல்லி- அதியமான் அவ்வைப் பாட்டிக்கு கொடுத்த கனியுடை மரம்

9.பனை மரம் –நுங்கு தரும் மரம்

  1. தென்னை மரம் -நாரைக் கொண்டு கயிறு திரிப்பர்

11.இலந்தை- ராம பிரானுக்கு சபரி கொடுத்தாளாம்; அவ்வைக்கு முருகன் கொடுத்த பழம் உடைமரம் என்றும் செப்புவர்.

12.வேல- நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி…….,……,  பல்லுக்கு உறுதி என்று சொல்லும் இரண்டு மரங்களில் ஒன்று

12.வேப்ப மரம் – கசப்பாய் கசக்கும்; ஆனால் அருமருந்து உடைய மரம்

12.வேங்கை – புலியின் பெயருடைத்து; சங்க இலக்கியத்தில் பெண்கள் ‘புலி புலி’ என்று கூவி ஆண்களின் கவனத்தை ஈர்த்த மரம்

13.குருந்த மரம் – மாணிக்கவாசகர் குரு அமர்ந்த மரம்- அவர் ஞானோதயம் பெற்ற மரம்

14.வில்வ மரம் – மூவிலை மரம்; சிவனுக்குப் பிரியமானது

15.புளிய மரம்- நம்மாழ்வார் ஞானோதயம் பெற்ற மரம்; தான்ஸேனுக்கு குரல் கொடுத்த மரம்

15.புன்னை மரம் – மயிலம் முருகன் கோவில் தல வ்ருக்ஷம்

16.வாகை -வெற்றி பெற்றவர் சூடும்……………….  பூவுடை மரம்

17.மருத மரம் – நாநிலத்தில் ஒரு நிலத்திற்கு தமிழர்கள் பெயர் வைத்த மரம்; XXXX மலை கோவில் தல மரம்; அர்ஜுன என்ற பெயர் பெற்ற மரம்; ஊர் பெயர்களில் இடம்பெற்ற மரம்

18.தரு – ஸம்ஸ்க்ருதத்தில் மரத்தின் பெயர்; ஆங்கிலச் சொல் TREE ட் ரீ கொடுத்த மரம்; கற்பகம், பாரிஜாதம் முதலிய 5 மரங்களைக் குறிக்கும் மரம்

19.பாதிரி – பாதிரி மரம்- அவிநாசி, கொரநாட்டுக் கருப்பூர் முதலிய கோவில்களில் தல மரம் ; பாடலம் என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர் உடைத்து; ஊருக்கும் பெயராக அமைந்த மரம். பாடலிபுத்ரம், திருப்பாதிரிப்புலியூர்

  1. பாலை- சுடு மணல் நிறைந்த பிரதேசத்தில் விளைவதால் அந்தப் பெயர் உடைத்து

20.கரும்பு – அதியமானின் முன்னோர்கள் கொணர்ந்த மரம்; இக்ஷ்வாகு வம்சத்துக்குப் பெயர் தந்த மரம்

20.கமுகு – பாக்கு தரும் மரம்

21.அரச – புத்தர் ஞானோதயம் பெற்ற மரம்

21.அத்தி- விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் ‘உடும்பரா’ என்ற பெயருடன் வரும் மரம்; பூவாது காய்க்கும் மரம்

21.அகத்தி- மாட்டுக்குக் கொடுத்தால் புண்ணியம்; துவாதஸி பாராயண உணவு; ஒரு நட்சத்திரம், முனிவரின் பெயருடைத்து

21.அசோக – சீதையின் சோகம் போக்கிய மரம்

22.தில்லை – சிதம்பரத்தின் பெயருடைத்து

23.ஆல்- இந்தியாவிலேயே மிகப்பெரிய மரம்

24.சந்தன மரம் — வாசனை தரும், சோப்பு செய்யலாம்; சென்ட் போடலாம்

25.அகில்- பெண்களின் கூந்தலுக்கு மணம் ஊட்டிய புகை என தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியங்கள் புகழும் மரம்

26.மகிழ மரம்- திருவொற்றியூர், திருவண்ணாமலை முதலிய பல கோவில்களில் தல மரம்- வகுளம், பகுளம் என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர் உடைத்து; நேமிநாதர் என்ற சமண தீர்த்தங்கரர் முக்திபெற்ற மரம்

27.குரா மரம்- திருவிடைக்கழலி கோவிலின் தல மரம்; சமணர்களும் போற்றும் மரம்

MICHELANGELO AND THE CRITIC (Post No.5662)

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 14 November 2018

GMT Time uploaded in London –10-57 am
Post No. 5662

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

 

A shallow poet took Piron (FRENCH DRAMATIST)  into his confidence and entrusted him a long manuscript, assuring the critic that the verses contained therein were the best he had ever written . With an air condescension, he asked Piron to put a cross before each line which he thought might possibly be improved. When he asked for his manuscript a few days later Piron handed it to him without a word. Leafing hastily through it, the author exclaimed delightedly,
Why I don’t see a single cross on my paper.
No, returned Piron dryly,
I didn’t want to make a graveyard of it.

Xxx

 

MICHELANGELO AND CRITIC


When Michelangelo had completed his great sculptural work, the David, Gonfalonier Soderini of Florence who had ordered it came to inspect his purchase. Among his other criticisms he objected to the nose, pronouncing it to be out of all proportion to the rest of the figure, and added, that he wished some reduction should take place in its size. Angelo knew well with whom he had to deal; he mounted the scaffold for the figure upwards of twelve feet high, and giving a few sonorous but harmless blows with his hammer on the stone, let fall a handful of marble dust which he had scrapped up from the floor below; and then descending from his station turned to the Gonfalonier with a look expectant of his approbation. At, exclaimed the sagacious critic; now you have given it life indeed.

Michelangelo was content, and receiving his four hundred scrudi for his tasks, wisely said no more . It would have been no gratification to a man like him, to have shown the incapacity of a presumptuous critic like Soderini.

Xxx

DRAMA-TIC CRITICISM

Professor Brander Mathews was a great stickler for proprieties. At an opening night he had gone to review a play. The next day he was asked for his opinion by one of his students at Colombia university.
Well, gentlemen, said Professor Mathews, the play was in four acts, and I was there as the guest of the author.
After the first act the audience sat silent and I applauded. After the second act I sat quiet while the audience hissed.

The professor took a long drawn and reminiscent pull at his cigarette, then held it at arm’s length and flicked off the ashes.
And the third act?
Well gentlemen, and there was a gleam of satisfaction in the Professor s eye, after the third act I went out and bought standing room and came back and hissed too.

Xxxx Subham xxx

 

மனிதரின் ஐந்தாயிரம் முகங்கள் அறியும் திறன்! (Post No.5661)

Written by S Nagarajan

Date: 14 November 2018

GMT Time uploaded in London –10-17 am
Post No. 5661

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு முப்பத்தி ஏழாம் கட்டுரை)

அத்தியாயம் 401

 மனிதரின் ஐந்தாயிரம் முகங்கள் அறியும் திறன்!

ச.நாகராஜன்

மனத்தையும் மூளையையும் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி முன்னேற முன்னேற நாளுக்கு ஒரு பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்பை அறிந்து வருகிறோம்.

இந்த வகையில் இப்போது அறிவியல் ஆய்வு ஒன்று தரும் முடிவு ஒரு மனிதன் தனது வாழ்நாளில் சுமார் 5000 முகங்களைத் தெளிவாக அடையாளம் காண முடியும் என்று அறிவிக்கிறது. சில மனிதர்கள் சுமார் பத்தாயிரம் முகங்களைக் கூடத் தெளிவாக அடையாளம் காண்கிறார்கள் என்றும் ஆய்வு கூறுகிறது.

உலகில் அன்றாடம் நாம் ஏராளமான முகங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். இவர்களில் தெரிந்தவர்கள் சிலர்; தெரியாதவர்கள் பலர்.

அறிவியல் இதழான ஸயின்ஸ் இதழில் ஃப்ராங்கி ஷெம்ப்ரி, இது பற்றி எழுதுகையில் இப்படிப்பட்ட ஆய்வு உலகில் இது தான் முதல் தடவை எனக் குறிப்பிடுகிறார். முகங்களை இனம் கண்டு அடையாளம் காணும் ஆய்வுகள் பல ஏற்கனவே நடைபெற்றிருந்தாலும் எத்தனை பேரை ஒரு மனிதன் அடையாளம் காண முடியும் என்பதைப் பற்றித் துல்லியமாக அறிவதற்கான ஆய்வு இதுவரை நடந்ததில்லை.

பிரிட்டனைச் சேர்ந்த யார்க் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் ராப் ஜென்கின்ஸ் தலைமையிலான குழு இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டது.

இந்த ஆய்வின் முடிவுகள் ‘ப்ரொசீடிங்ஸ் ஆஃப் தி ராயல் சொஸைடி பி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்காக தன்னார்வத் தொண்டர்களை க்ளாஸ்கோ பல்கலைக் கழக மற்றும் அபெர்டீன் பல்கலைக் கழக மாணவ சமுதாயத்திலிருந்து ஆய்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.

அவர்களுக்கு இரு சோதனைக்ள் தரப்பட்டன. முதல் சோதனையில் ஒரு மணி நேரத்தில் தனக்குத் தெரிந்த குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், பள்ளித் தோழர்கள், பல்துறை வித்தகர்கள் உள்ளிட்டோரில் எத்தனை பேரை சரியாக அடையாளம் காட்ட முடியும் என்று கேட்கப்பட்டது. சோதனையில் பங்கு கொண்டோர் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்ல வேண்டும் என்பது கூட இல்லை. இவர் எனது பள்ளித் தோழர், இவர் எனது தெருவில் வசிப்பவர் என்று சொன்னால் கூடப் போதும். அவரைப் பார்த்தால் தெளிவாக இன்னொரு முறை அடையாளம் காட்ட முடியும் என்ற தகுதி இருந்தால் போதும், அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஒரு மணி நேர சோதனையில் நேரம் ஆக ஆக, அடையாளம் காணும் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. களைத்துப் போன சோதனையாளர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக சோதனை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

சோதனையின் அடுத்த கட்டமாக 3441 பிரபலங்களின் போட்டோக்கள் அவர்களிடம் காட்டப்பட்டன. அதில் அவர்களுக்கு யாரையெல்லாம் தெரியும் என்று கேட்கப்பட்டது. யாரையும் அவர்கள் விட்டு விடக் கூடாது என்பதற்காக, பிரபலங்கள் ஒவ்வொருவரின் இரு வெவ்வேறு போட்டோக்கள் காட்டப்பட்டன.

 இந்த இரு சோதனைகளின் முடிவுகளும் இணைந்து பார்க்கப்பட்ட பின்னர் சோதனையில் பங்கு கொண்டோர் ஆயிரம் முதல் பத்தாயிரம் பேர்களின் முகங்களைத் தெளிவாக அடையாளம் காண்கிறார்கள் என்று கண்டறியப்பட்டது.

சராசரியாகச் சொல்வதென்றால் ஒரு மனிதனால் 5000 பேர்களை அடையாளம் காட்ட முடியும்!

ஆயிரம் முதல் பத்தாயிரம் என்ற அளவிற்கு, இவ்வளவு பெரிய வேறுபாடு மனிதருக்கு மனிதர் ஏன் ஏற்படுகிறது என்ற கேள்விக்கு, சிலருக்கு முகங்களை மிகச் சுலபமாக இனம் காணுவது இயல்பாகவே இருக்கிறது என்று ஆய்வாளர்கள் பதில் அளித்தனர். இதற்கு இன்னொரு காரணமும் இருக்கக் கூடும் என்கிறார் ஆய்வாளர் ஜென்கின்ஸ்.

சமூகச் சூழ்நிலையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் அவர். சிலர் மிகவும் அதிகமாக ஜனத்தொகை உள்ள இடத்தில் வாழ்வதால் அதிகம் பேரை அறியக் கூடிய வாய்ப்பு இருந்திருக்கலாம் என்பது அவரின் கணிப்பு.

ஆய்வாளரில் ஒருவரான யார்க் பல்கலைக்கழக் உளவியல் நிபுணர் மைக் ப்ருடன், “ ஆய்வு முடிவு தரும் மிக அதிகமான எண்ணிக்கை எங்களுக்கே ஆச்சரியத்தைத் தருகிறது. ஏனெனில் மிகப் பண்டைய காலத்தில் மனிதர்கள் வாழ்ந்த போது அவர்கள் நூறு பேருக்கும் கீழாக இருந்த கூட்டத்திலேயே வாழ்ந்து வந்தனர். ஆனால் இப்போதோ இப்படி மிக அதிகமான அளவில் மனிதர்களை இனம் காண முடிவது ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் தான் “ என்கிறார் அவர்.

இந்த ஆய்வு ஒரு முக்கியமான விஷயத்திற்குப் பயன்படும். கணினிப் பயன்பாட்டில் முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருளை இன்னும் மேம்படுத்த இது உதவும் என்கிறார் அவர்.

   ஆய்வின் அடுத்த கட்டம் சற்று சிக்கலானது. வயதாக ஆக, இந்த நினைவாற்றல் திறன் எப்படி ஆகும் என்பது தான் அது. இப்போது சோதனையில் பங்கேற்றவர்களின் வயது 18 முதல் 61 முடிய இருந்தது. இவர்களின் சராசரி வயது 24.

மிக அதிகமாக முகங்களைக் கண்டறியும் உச்ச பட்ச வயது என்று  ஒன்று இருக்கிறதா என்பதை ஆய்வின் அடுத்த கட்டம் எடுத்துச் சொல்லும் என்கிறார் அவர்.  ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின்னர் எந்த முகமும் நினைவில் பதியாதோ என்பதையும் ஆய்வு கண்டறியும்.

சுவையான இந்தச் செய்திக்காக நினைவாற்றல் திறனில் அக்கறை கொண்டுள்ளோரும், சாஃப்ட்வேர் வடிவமைப்பாளர்களும்  காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆய்வு தொடர்கிறது.

எண்ணங்கள் பற்றிய பழைய ஆய்வுகளில் ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சுமார் நாற்பதினாயிரம் எண்ணங்களை எண்ணுகிறான் என்பது கண்டறியப்பட்டது. அதாவது எண்பது வயது கொண்ட ஒருவர் தனது வாழ்நாளில் நூற்றிப்பதினாறு கோடியே எண்பது லட்சம் எண்ணங்களை எண்ணுகிறார்.

ஆயுளுக்கு 117 கோடி எண்ணங்கள் என்ற பிரமிப்பிற்கு அடுத்த கட்டமாக ஆயுளுக்கு ஐயாயிரம் முதல் பத்தாயிரம் முகங்களை அடையாளம் காட்டும் மனிதனின் திறன் பற்றிய ஆய்வு இப்போது 2018 அக்டோபரில் வெளியாகி நமக்கு இன்னும் அதிக வியப்பை ஊட்டுகிறது!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

எண்பத்துமூன்று வயது ஆகும் அமெரிக்க டாக்டர் ஹெர்பர்ட் பென்ஸன் (Herbert Benson  – பிறப்பு 1935) யோகா பற்றி அறிவியல் பூர்வமாக ஆராய்ந்த பிரபலமான டாக்டர். மனிதனுக்கு யோகா மூலமாக என்னென்ன சக்திகள் ஏற்படக் கூடும் என்பதை அறிவதற்காக ஹார்வர்ட் மெடிகல் ஸ்கூலின் மருத்துவப் பேராசிரியரும் பென்ஸன் – ஹென்றி இன்ஸ்டிடியூட்டின் டைரக்டருமான அவர் ஆயிர்த்தி தொள்ளாயிர்த்து எண்பதுகளில் இமயமலைக்கு வந்து ஆய்வுகளை நடத்தினார்.

சிறப்பான டும்மோ (Tummo) என்ற ஒரு யோகா பயிற்சியை மேற்கொண்ட ஒரு துறவியின் கை விரலின் நுனி 17 டிகிரி அளவு வெப்பத்தை அதிகரித்துக் காட்டியதைக் கண்டு அவர் வியந்தார். எப்படி அதைச் செய்கிறார் என்பதை யாராலும் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லைல் 

சிக்கிமுக்கு சென்ற போது அவர்கள் யோகிகள் தங்கள் ஆற்றலினால் 64 சதவிகிதம் உடல் இயக்கங்களை மாற்றிக் காட்டியதைக் கண்டு அயர்ந்து போயினர்.

15000 அடி உயரத்தில் இமயமலையில் இருக்கும் யோகிகள் கம்பளிப் போர்வை கூட இல்லாமல் அப்படிப்பட்ட கடும் குளிரில் இயல்பான உடல் வெப்பத்தினால் மட்டுமே   வாழ்வது வீடியோ பிலிம் எடுக்கப்பட்டது.

பிரக்ஞையின் மூலம் உடல் இயக்கங்களை மாற்றிக் காட்டலாம் என்பதை நேரில் கண்ட பென்ஸன் 12 புத்தகங்களை எழுதியுள்ளார். இவை பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனை ஆகியுள்ளன. தி ரிலாக்சேஷன் ரெஸ்பான்ஸ், தி மைண்ட் பாடி எஃபெக்ட், யுவர் மாக்ஸிமம் மைண்ட் உள்ளிட்ட அவரது புத்தகங்களில் மனம் பற்றிய விஞ்ஞானிகளின் அபூர்வ சோதனைகள் விளக்கப்பட்டுள்ளன.

****

A B C D POEM REVIEW –1 2 3 4 ! (Post No.5660)

 

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 13 November 2018

GMT Time uploaded in London –11-51 am
Post No. 5660

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

CRITICS ANECDOTES

According to Richard Aldington, in the early days of Dada (predecessor of surrealism) I received for review a book which contained the following poem
A B C D E F
G H I J K L
M N O P Q R
S T U V W X
Y Z

on which I commented,

1 2345
678910

I still think that was the most snappy review I ever wrote; but unfortunately The Times refused to print it.
Xxx

WHO WILL MAKE A NAME?

Richard Aldington tells that,
An American friend of mine was then editing the Outlook, and asked me to write an article telling his readers about young writers and picking out those I thought would make a name. I made a choice which I modestly think wasn’t bad for 1919 :
James Joyce, T S Eliot, d h Lawrence, Aldous Huxley, and marcel Proust. I received a letter from the editor in these terms,
For God’s sake, Richard, can’t you think of somebody who has been heard of or is ever likely to be heard of?
I protested, and my article was submitted to the judgement of that eminent expatriate, Mr Logan Pearsall Smith, who decided that my writers never would be heard of; and the article was rejected. If I had chosen such mediocrities as Jack Squire, Hugh Walpole, Frank Swinner town, I should have received a cheque and a crown of wide parsley.

Xxx

BURY THE CRITIC
A man said he was afraid he was going to be of no use in the world because he had only one talent.
Oh that need not discourage you, said his pastor. What is your talent?
The talent of criticism.
Well, I advise you, said his pastor, to do with it what the man of one talent in the parable did with his. Criticism may be useful when mixed with other talents, but those whose only activity is to criticise the workers might as well be buried, talent and all.

Xxx

 

BEATING A BIG DRUM

Jerrold admired Carlyle, but objected that he did not give definite suggestions for the improvement of the age which he rebuked.
Here, said he, is a man who beats a big drum under my windows, and when I come running down stairs, has nowhere for me to go.

Xxx

DR JOHNSON ON CRITICISM

A friend of Dr Johnson s, in conversation with him, was lamenting the disagreeable situation in which those persons stood who were eminent for their criticisms. As they were perpetually expected to be saying clever things, it was a heavy tax on them.
It is indeed, said Dr Johnson, a very heavy tax on them; a tax which no man can pay who does not steal.

XXXX SUBHAM XXXX

ஏழு நகரம், ஏழு நதி பெயர் தெரியுமா? (Post No.5659)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 13 November 2018

GMT Time uploaded in London –11-23 am
Post No. 5659

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

இந்துக்களுக்குப் புனிதமான ஏழு நகரங்களும், ஏழு நதிகளும்

இந்தக் கட்டத்தில் மறைந்திருக்கின்றன. கண்டுபிடியுங்கள்.

விடையும் கீழே உளது

னை மு தி ஸ்
தா கா சி ந் தி கா
ஞ்  ரி யோ xxx ரா து
ர் சி பு த் வா கா xxx
ந் xxx யா மா ங் கா
xxx து கா வே ரி தா கோ

 

 

Answer:–

கங்கா, சிந்து, காவேரி, யமுனை, சரஸ்வதி,

நர்மதா, கோதாவரி,

அயோத்யா புரி, மதுரா, மாயா, காசி, காஞ்சி,

அவந்திகா,  துவாரகா புரி

ரேவா= நர்மதா

மாயா= ஹரித்வார்

அவந்திகா= உஜ்ஜயினி

Tags:- Tamil 7 rivers, 7 cities word search

 

–subham–

CAN YOU FIND THE 7 HOLY RIVERS AND 7 HOLY CITIES IN INDIA? (Post No.5658)

 

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 13 November 2018

GMT Time uploaded in London –9-36 am
Post No. 5658

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

ANSWER ISGIVEN AT THE END

I T A V S A R A S
R A Y A M K A S I
A W O A A A N I K
V A D Y T R U N A
A N H A H A M D V
H T Y M U W A H E
D I A R D Y U R
O K k A N C H I
G A N G A W E R

 

 

SEVEN HOLY RIVERS (GANGASINDHUS CHA KAVERI YAMUNA CHA SARASVATI,REWA,GODHAVARI…)

SARASVATI

KAVERI

SINDHU

GANGA

REWA=NARMADHA

YAMUNA

GODAVARI

SEVEN HOLY CITIES (AYODHYA MATHURA MAYA KASI KANCHI AWANTIKA DWARAKAPURI…..)

AWANTIKA= UJJAIN

AYODHYA

KANCHI

MATHURA

KASI

DWARAKA

MAYA=HARIDWAR

–SUBHAM–

தகைமாதொடு வருவன்! (Post No.5657)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 13 November 2018

Time uploaded in London – 5-21 AM (GMT)

Post No. 5657

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

நவம்பர் 13, 2018 ஸ்கந்த ஷஷ்டி

தகைமாதொடு வருவன்!

ச.நாகராஜன்

நெஞ்சேயினி செஞ்சேவடி

                நிலையாமெனப் பணிய

அஞ்சேலென அருள்நோக்குடன்

                நெடுவேலொடு குமரன்

தஞ்சேவலங் கொடியோடொரு

                ஜகமேவிய மயிலில்

தஞ்சேயிடைத் துயரோடிட

               தகைமாதொடு வருவன்!

(தம் சேவல் அம் கொடியோடு ஒரு ஜகம் மேவிய மயிலில்

தம் சேயிடைத் துயர் ஓடிட தகை மாதொடு வருவன்)

குறிப்பு : – 7-11-1967 அன்று இயற்றியது.

***

சூழும் துன்பத் தளைபோக்கி

     சுழலும் மனதைச் சீராக்கி

வாழும் படிக்கு வைத்திடுமோர்

     வடிவேல் முருகன் பாதமவை

தாழுஞ் சென்னி தன்னோடும்

     தளரா பக்தி யதனோடும்

பாழும் கலியை மறந்திட்டுப்

     பணிவாய் நாளும் வணங்கிடுவோம்!

***

வாடி வதங்குதடி நெஞ்சம்!

ஏடி! கதிர்வேலன் என்னை யினியின்று

நாடி வருவானோ நல்வரம்தான் தருவானோ

வாடி வதங்குதடி நெஞ்சம்

சேடி!  உளமெல்லாம் தேர்ந்திட்ட வேலனின்னும்

நாடி வரக்காணேன் உளங்குளிர வருவானோ

வாடி வதங்குதடி மஞ்சம்!

பாடி மகிழ்ந்ததையும் பக்கென்று மறந்தானோ

ஆடி யதுமறந்தான் அத்திறம்நீ கேட்டுவுடன்

வாடி, வதங்குதடி நெஞ்சம்!

****

 

அழகுமயில் மீதேறி மோகனமாய்

     அழகுக்கும் அழகன் வந்தான்

அழகுமயில் அலங்காரம் அதிசயித்து

     அழகுக்கும் அழகெ தென்றேன்

அழகுநகை சிந்தியபின் அழகனவன்

    அழகுக்கும் அழகு கோடி

அழகு சிந்து புவனமென்றான்

–SUBHAM–

Missing College Board (Post No.5656)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 12 November 2018

GMT Time uploaded in London –11-54 am
Post No. 5656

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

Students and Class Room Anecdotes

Missing College Board

A tradition of Haverford College centers around the administration of its famous President, Dr William Wistar Comfort. On the occasion of the erecting upon the campus of a beautiful metal sign proclaiming the name of the College, an enterprising group of seniors stole the sign and concealed it. It was missing for many days, during which Dr Comfort instituted a search, located the sign, and caused it to be removed to a place of concealment of his own . There upon he announced a joke was a joke but that unless the culprits returned the sign by the following Saturday night, all privileges of the senior class would be indefinitely revoked.

The dismay of the culprits was great when they were unable to find their trophy and comply with the ultimatum. Accordingly, an extremely glum and down in the mouth body of senior s assembled in chapel the Sunday morning after the deadline. Dr Comfort stepped in to the pulpit, surveyed the faces before him, and opened the great bible for the reading of the morning text, which was,
A wicked and adulterous generation seeketh for a sign and there shall be none given unto them.

Xxxx

Udder Committee

A little girl who was attending a progressive school had a cold one morning and her mother suggested that she remain home from school.
But I can’t Mother, the little girl insisted.

This is the day when we started to make a clay model of a cow and I am chairman of the uddder committee.

Xxxx subham xx

கம்பன் பாட்டில் ஏழு கடல்கள் (Post No.5655)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 12 November 2018

GMT Time uploaded in London –11-20 am
Post No. 5655

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

இந்துக்கள்  இயற்கைப் பொருட்களையும் செயற்கைப் பொருட்களயும் கடவுளரையும் ஏழு ஏழாகப் பிரித்து இருப்பதை நாம் அறிவோம்.

பழங்கால சிறுவர் கதைகளிலும் இதனால் ‘ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, ஏழு குகை தாண்டி’ என்றெல்லாம் எழுதினர்.

நாம் உலகை ஏழு த்வீபங்களாக (பெருநிலப்பரப்பு) பிரித்தோம். கடல்களை ஏழாகப் பிரித்தோம்.

உதிரம் = இரத்தம்

1000 ஆண்டுகளுக்கு முன்னர், கம்பன் காலத்தில், மக்களுக்கு இவை நன்கு தெரிந்து இருந்ததால்  கம்பன் இது பற்றி ஒரு பாடலில் பாடுகிறான்.

உப்புதேன் மதுஒண் தயிர் பால் கரும்பு

அப்புத்தான் என்று உரைத்தன ஆழிகள்

துப்புப்போல் குருதிப் புனல் சுற்றலால்

தப்பிற்று  அவ் உரை இன்று ஓர் தனிவினால்

-யுத்த காண்டம், மூல பல வதைப்படலம்

பொருள்

பவழம் போன்று சிவந்த உதிர நீர், எங்கும் சூழ்ந்ததால், உப்பு, தேன், நெய், தயிர், பால், கரும்புச் சாறு,சுத்த நீர் என்று பிரிந்து ஏழு கடல்கள் என்று கூறப்படும் பெயர் மறைந்து, எல்லாக் கடல்களுமே உதிரக் கடல் என்று கூறும்படி ஆயின.

ஸம்ஸ்க்ருதத்தில்  இவற்றை லவண (உப்பு), க்ஷீர (பால்), க்ருத (நெய்), ததி (தயிர்),  சுரா (மது), இக்ஷு (கரும்புச் சாறு), ஜல (தண்ணீர்) சாகரங்கள் என்பர்

TAGS–

-subham–