MAY 2019 GOOD THOUGHTS CALENDAR (Post No.6318)

WRITTEN  by London swaminathan

swami_48@yahoo.com


Date: 28 April 2019


British Summer Time uploaded in London – 9-01 am

Post No. 6318

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

31 QUOTATIONS ON KNOWLEDGE AND WISDOM

Auspicious Days – May 2, 8,10,16,17,23,29
Festival Days- 1 May Day, 7 Akshaya Trutyai, 18 Vaikasi Visakam, May 23- Indian Election Results

New moon- 4, Full moon-18 , Ekadasi fasting days 15, 30


May 1 Wednesday

He who sees all beings as oneself is the truly learned –

–Chanakya Niti 6-2


May 2 Thursday

Wisdom is the weapon which defends against destruction; it is the inner fortress that baffles the enemy’s entry- Tirukkural 421 (Tamil Veda)


May 3 Friday 

Self – knowledge is the ultimate knowledge

–Sanskrit saying


May 4 Saturday 

Not to let the mind roam where it will, to withdraw it from evil and direct it to that which is good- that is wisdom –Tirukkural 422 (Tamil Veda)


May 5 Sunday 

Knowledge is shrouded in ignorance and all beings deluded thereby

–Bhagavad Gita 5-15


May 6 Monday 

To discern the truth in everything, from whomsoever it may be heard, is wisdom -Tirukkural 423 (Tamil Veda)

May 7 Tuesday 
The blind man is better than the ignorant

–Kahavatratnakar


May 8 Wednesday

The wise express even profound thoughts in simple terms,

But would grasp the subtlities of all what others say –Tirukkural 424 (Tamil Veda)


May 9 Thursday

Nothing is gained by the holy gab when the truth remains unknown. –Kahavatratnakar

May 10 Friday

The wise are universal friends, equal minded without too much blooming or glooming – Tirukkural 425 (Tamil Veda)

May 11 Saturday

How can a hunter ever know the value of a priceless pearl?

–Kahavatratnakar


May 12 Sunday

To live in conformity with the world is wisdom- Tirukkural 426 (Tamil Veda)


May 13 Monday

Does a donkey know ( can smell) the fragrance of camphor?

–Tamil proverb


May 14 Tuesday

The wise have foresight of events; the ignorant do not forsee- Tirukkural 427 (Tamil Veda)


May 15 Wednesday

If one knows oneself, all harms can be avoided

Tamil saint Tirumular in Tiru manthiram

May 16 Thursday

It is folly not to fear what should be feared; to fear that which should be feared is the way of the wise- Tirukkural 428 (Tamil Veda)

May 17 Friday

Seeing One (god in everything) is the true vision – Tamil poetess Avvaiyar


May 18 Saturday

The wise, who coming ills foresee,

From future dreaded shocks are free

– Tirukkural 429 (Tamil Veda)

May 19 Sunday

What is the use of enlightening the enlightened? –Kahavatratnakar

May 20 Monday

Wisdom is the fruit of penance

–Bharatamanjari

May 21 Tuesday

Those who possess wisdom, possees everything; those who have not wisdom, whatever else they possess, have nothing- Tirukkural 430 (Tamil Veda)



May 22 Wednesday

Knowledge alone is the greatest strength

–Subhasita ratna khanda manjusa

May 23 Thursday

Listening and learning from the wise is the treasure of treasures- Tirukkural 411 (Tamil Veda)


May 24 Friday

Buddhiman balavan- Sanskrit saying (Intellectuals are stronger than musclemen)


May 25 Saturday

Even the creator fails to please the dull- witted dunce

–Niti satakam -2,Hitopadesam 1-56


May 26 Sunday

When there is no food for the ear, a little food will be given to the stomach too- Tirukkural 412 (Tamil Veda)


May 27 Monday

No eye greater than knowledge – –Subhasita ratna khanda manjusa

May 28 Tuesday

Listen to whatever is good, however little; little as it may be, it will bring you much greatness- Tirukkural 416 (Tamil Veda)

May 29 Wednesday

Numeracy and literacy are two eyes – Kondrai venthan

May 30 Thursday

Nothing in this world is as sacred as wisdom —

Bhagavad Gita 4-38

May 31 Friday

Everyone does not know everything

–Mudraraksasa

Swami’s Cross word 27419 (Post No.6317)

heavenly singer

WRITTEN  by London swainathan

swami_48@yahoo.com


Date: 27 April 2019


British Summer Time uploaded in London – 20-29

Post No. 6317

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Across

1. PRIDE

3. – BIG

6.– CALL, INVOCATION

9.– POLE STAR; BOY IN THE HEAVEN

10. EIGHT IN NUMBER; BRIGHT, SWEET

11. – NO LIMIT, BUNDLESS, LIMITLESS

12. – BEGINNING, WIND, WARRIOR, HORSEMAN

13. – SLAVE OF RAMA; MANY SAINTS OF INDIA HAVE THIS NAME

15. – NAME OF A FAMOUS HINDU KING; PART OF VETAL/GHOST STORIES

16. – OPPOSITE OF DHARMA; THAT WHICH IS NOT RIGHTEOUS

Down

1. – HEAVENLY SINGERS

2.- LORD SHIVA IN VEDAS; 11 IN NUMBER

4. – NOT IN ORDER

5. SOUTH INDIANS ARE TAUGHT THIS RAGA FIRST; WITH GANAPATI SONG- VATAPI…..

7. – CHEST, BREAST

8. – MUSICAL NOTE, VOICE, VOWEL

10. VAISAK PURNIMA OCCURS WITH THIS STAR; BIRTH STAR OF BUDDHA

14.-EARTH

–subham—

தங்கப் பல்லக்கில் ஏற மறுத்த ராஷ்டிரபதி! (Post No.6316)

WRITTEN  by S Nagarajan

swami_48@yahoo.com


Date: 27 April 2019


British Summer Time uploaded in London – 12-19

Post No. 6316

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

தங்கப் பல்லக்கில் ஏற மறுத்த ராஷ்டிரபதி!

ச.நாகராஜன்

மஹா புருஷர்கள் மஹா புருஷர்கள் தான்! உயர்ந்த மனிதர்கள் உயர்ந்த மனிதர்கள் தான்!

இதை விளக்கும் ஒரு சம்பவம் பாரதத்தின் முதலாவது ராஷ்டிரபதி பாபு ராஜேந்திரபிரசாத் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளது. அவர் கண்ட மஹா புருஷர்  ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு சந்திரசேகர பாரதீ மஹாஸ்வாமிகள்  ஆவார்.

1954ஆம் ஆண்டு. ஆகஸ்ட் மாதம். சிருங்கேரிக்கு மஹாஸ்வாமிகளை தரிசிக்க சிருங்கேரி வந்தார் பாபு ராஜேந்திர பிரசாத்.

அவருக்காக பலத்த வரவேற்பு ஏற்பாடாகி இருந்தது.

மஹாஸ்வாமிகளின் அந்தரங்க காரியதரிசியாக இருந்த ஸ்ரீ  ஜி.எஸ்.நரசிம்மய்யா ராஷ்டிரபதியின் வருகையையொட்டி அவர் வருவதற்கு முதல் நாள் பிற்பகலில் மடத்தில் இருந்த வெள்ளிப் பல்லக்கை எடுத்து வெளியில் வைத்துச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஆசார்யர் சாதுர்மாஸ்ய விரதத்தை மேற்கொண்டிருந்தார். விரதத்திற்காக அவர் சந்திரமௌலி தொட்டி என்ற கட்டிடத்தில் தங்கி இருந்தார். வெள்ளிப் பல்லக்கு சுத்தப்படுத்தப்படும் போது அந்தக் கட்டிடத்தில் உள்ள இரு கூடங்களை இணைக்கும் பாதை வழியாக ஆசார்யர் வந்தார். சுவர் வழியே இருந்த ஜன்னல் வழியாக வெள்ளிப் பல்லக்கு சுத்தம் செய்யப்படுவதைக் கண்டு நரசிம்மய்யாவிடம் விஷயம் என்ன என்று விசாரித்தார்.

பல்லக்கு ராஷ்டிரபதிக்காகத் தயார் செய்யப்படுகிறது என்பதைத் தெரிந்து கொண்ட அவர் ராஜேந்திர பிரசாத்தைப் பற்றி விசாரித்தார்.

அவரது உயர் குணங்கள் அவரை ஈர்த்தன.தேசத்திற்காக அவர் செய்த தியாகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் நரசிம்மய்யா ஒரு சில நிமிடங்களில் விவரித்து விட்டார். உடனே ஆசார்யர், ‘அவர் அப்படிப்பட்டவர் என்றால் அவரைத் தங்கப் பல்லக்கிலேயே அழைத்து வரலாமே’ என்றார்.

ஆசார்யரின் அபிப்ராயத்தைத் தெரிந்து கொண்ட நரசிம்மய்யா உடனே தங்கப் பல்லக்கை ஏற்பாடு செய்து விட்டார்.

ராஷ்டிரபதி தனது காரில் வந்து இறங்கினார்.

அவருக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. உள்ளூர்ப் பிரமுகர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். பின்னர் தங்கப் பல்லக்கு காரின் அருகில் கொண்டு வரப்பட்டது.

அதில் ஏறி அமருமாறு ராஜேந்திர பிரசாத் வேண்டிக் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

பல்லக்கைப் பார்த்த ராஜேந்திர பிரசாத் தயங்கினார். அதைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

அது ஜகத்குரு மட்டுமே பவனி வரும் பல்லக்கு என்பதை அறிந்து திடுக்கிட்டார்.

தன்னைச் சுட்டிக் காட்டி, “அது அப்படி இருக்கும் போது என்னை அதில் ஏறச் சொல்கிறீர்களே” என்று கூறி பல்லக்கில் ஏற மறுத்து விட்டார்.

காரிலேயே சென்றார். பல்லக்கு எனக்கு முன்னால் போகட்டும் என்றார் அவர்.

அவர் தங்குமிடம் சந்திரமௌலி தொட்டியிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“இங்கு யார் தங்குவது வழக்கம்?” என்றார் ராஜேந்திர பிரசாத்.

சாதுர்மாஸ்ய விரதத்திற்காக ஜகத்குரு அவர்களே இங்கு வந்து பின்னால் உள்ள ஒரு அறையில் தங்கி இருக்கிறார் என்று பதில் வந்தது.

இதைக் கேட்டுத் திகைத்துப் போனார் அவர்.

ஜகத்குரு தங்குமிடத்தில் தன்னைப் போன்ற “சாமானியன்” தங்கலாமா என எண்ணினார் போலும்!

“இந்தப் புனிதமான கட்டிடத்தில் நான் எப்படி சாப்பிடவோ தூங்கவோ முடியும், அது பெரும் அபசாரம் அல்லவா, என்னால் முடியாது” என்று பரபரப்புடன் சொல்லி விட்டார் அவர்.

அவரை அனைவரும் சமாதானப்படுத்த ஆரம்பித்தனர்.

அவர் அங்கு தங்குவது தான் ஜகத்குருவிற்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்று முத்தாய்ப்பாக அவர்கள் கூறியவுடன் அதை ஏற்று அங்கேயே தங்கினார் அவர்.

விசேஷ அர்ச்சனை நடந்தது. இரு முறை இரு ஜகத்குருக்களின் தரிசனமும் ஆசீர்வாதமும் அவருக்குக் கிடைத்தது.

பெரும் மகிழ்ச்சியுற்றார் அவர்.

நான் முன்பே இங்கு வந்திருக்க வேண்டும் என்று தனது எண்ணத்தை வெளியிட்டார் அவர்.

மகத்தான ஆசார்யர்களை உயர்ந்த மனிதர்கள் சந்திக்கும் போது ஏற்படும் வெளிப்பாடுகள் பார்ப்பவரைப் பரவசமாக்குகின்றன!

***

ஆதாரம் : ஸ்ரீ  ஜி.எஸ்.நரசிம்மய்யா எழுதியுள்ள கட்டுரை-

இடம் பெற்ற நூல் :- 

ஸ்ரீ குரு கிருபா விலாஸம் மூன்றாம் பாகம், 333 பக்கங்கள், விலை ரூ 150/ வெளியிட்டோர் : ஸ்ரீ சந்திரசேகர பாரதீ ப்ரஹ்ம வித்யா டிரஸ்ட். கிடைக்குமிடம் : ஸ்ரீ சிருங்கேரி மடம், சிருங்கேரி.

***

Number Three in Sanskrit and Tamil Literature (Post No.6315)

WRITTEN  by London swaminathan
swami_48@yahoo.com


Date: 27 April 2019


British Summer Time uploaded in London – 9-35 am

Post No. 6315

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

TAMILS GAVE SO MUCH IMPORTANCE TO NUMBER THREE.

(SEE MORE TAMIL 3s IN MY TAMIL ARTICLE)

–SUBHAM—

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பெண்களைக் கவர மூன்று வழிகள்- தமிழர் கண்டுபிடிப்பு (Post No.6314)

WRITTEN  by London swaminathan
swami_48@yahoo.com


Date: 27 April 2019


British Summer Time uploaded in London – 9-17 am

Post No. 6314

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

பெண்களைக் கவர மூன்று வழிகள்!

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி26419 (Post No.6313)

WRITTEN  by London swaminathan
swami_48@yahoo.com


Date: 26 April 2019


British Summer Time uploaded in London – 18-54

Post No. 6313

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1.உலகின் முதல் இலக்கண நூல்;பாணினி எழுதியது (6 எழுத்துக்கள்)

4.புஸ்தகம் (2); துணி நெய்யவும் உதவும்

5.உறவு; பிணைப்பு ; (4 எழுத்துக்கள்)

6.பாத்திரம், கதுப்பு, தட்டம் ; (4 எழுத்துக்கள்)

7.பார்ப்பனர்  வாழுமிடம்; தமிழின் முதல் எழுத்து; ஒரு ஊரின் பெயர்– வலமிருத்து இடம் செல்க; (4 எழுத்துக்கள்)

8.மல்யுத்தக் கலை; (5 எழுத்துக்கள்)

10.குறைவான (3)

11.வால்மீகி எழுதிய தத்துவ நூல்—(7  எழுத்துக்கள்)

12.புனித இடங்கள் — வலமிருத்து இடம் செல்க

13.ராமர் கை வில்லில் இருப்பது(3)

15.மீதி; பாக்கி(4)

கீழே

1.காலை முதல் மாலை வரை நடக்கும் ஆன்மீகப் பயிற்சி; சுவாமி சித்பவாநந்தர் நடத்தியது (7)

2.ஆடம்பர, படாடோப வாழ்க்கை (7)

3.ஒரு நாளின் 6 பிரிவுகளில் இரவுப் பொழுது;இடக்கை மேளம்;  (4)

4. நூல்களைப் படிக்க வழங்கும் இடம்(4)

7.தேவர்களின் உணவு ; கடலிலிருந்து வந்தது–(5 எழுத்துக்கள்)

9. எட்டாம் நாள்; கண்ணன் பிறந்த திதி –(4 எழுத்துக்கள்)

10.பானை வாத்தியம் –(3 எழுத்துக்கள்)

14.நவபாஷாணங்களில் ஒன்று(4) —கீழிருந்து மேலே செல்க

16.ஜலம், நீர், அசைவு (3)

Xxxxxxxxxxxxxxxx

பாண்டியன் சேனைக்கு அன்னம் தந்து உதவிய அன்னத்தியாகி! (6312)

WRITTEN  by S Nagarajan
swami_48@yahoo.com


Date: 26 April 2019


British Summer Time uploaded in London – 13-49

Post No. 6312

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

கொங்கு மண்டல சதகம்

பாண்டியனின் சேனைக்கு அன்னம் தந்து உதவிய அன்னத்தியாகி!

ச.நாகராஜன்

கொடும் பஞ்சம் நிலவிய காலம் அது. பாண்டிய நாட்டில் தன் சேனை வீரர்களுக்கு அன்னம் கொடுக்க முடியாமல் வருந்தினான் பாண்டிய மன்னன்.  தன் சேனையின் ஒரு பகுதியை முளசை வேலப்பன் என்பவரிடம் அனுப்பினான்.

வேலப்பனோ பெரு மகிழ்ச்சி எய்தினார். பாண்டிய நாட்டின் பஞ்சம் தீரும் வரையில் அந்தப் படைவீரர்களுக்கு அமுதூட்டி மகிழ்ந்தார். இயல்பு நிலை திரும்பியவுடன் படை வீரர்கள் பாண்டிய நாடு திரும்பினர்.

வேலப்பனின் இந்த அற்புதமான செயலைக் கண்டு மகிழ்ந்த பாண்டிய மன்னன் அவருக்கு அன்னத்தியாகி என்ற பட்டத்தை அளித்தான்.

இந்தச் செய்தியை வரலாறு கூறுகிறது.

“தென்னவன் படைக்குச் செழிப்புறு வரையி

லன்ன மளித்த அன்னத் தியாகி”

என்று இவ்வாறு முளசையார் மெய்கீர்த்தி கூறுகிறது.

இந்த வரலாற்று வீரனை கொங்கு மண்டல சதகம் தனது 77ஆம் பாடலில் பாடிச் சிறப்பிக்கிறது.

பாடல் இதோ:

பன்னப் படாதருந் தப்புன லற்றிடோர் பஞ்சமுற்றுங்

கன்னித் துறைப்பாண் டியன்படைக் கெல்லாங் களித்தமுதிட்

டன்னத்தியாகி யெனவச் செழிய னழைக்க வுயர்

வன்னப் பரிவேன் முளசையுஞ் சூழ்கொங்கு மண்டலமே

இந்தப் பாடலின் திரண்ட கருத்து : உண்ணுதற்குத் தண்ணீரும் கூட அகப்படாத கொடிய பஞ்ச காலத்தில் பாண்டியனின் சேனைக்கு அமுதூட்டி அன்னத்தியாகி என்று புகழ் பெற்ற வேலன் என்பவனது முளசை நகரும் கொங்கு மண்டலத்தில் உள்ளதேயாம்.

மாசிவிழாப் பூசவிழா வைகாசித் திருநாண்மண் டபங்கடாமும்

பூசைபடி தினமாறு படிமாலை திருவிளக்கும் புரிந்தெந்நாளும்

தேசமது புகழ்ந்திடவே யேவைவளம் பதியன்னத் தியாகராசர்

நேசமுடன் பணிமலைவா ழுமைபாகர் தமைவணங்கி நிலைநின்றாரே

என்ற திருச் – திருப்பணிமாலைப் பாடலும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

    இந்த அன்னத்தியாகியின் மரபில் வந்த ஒருவன் அடங்காத ஒரு குதிரையின் மீது ஏறி அதை அடக்கிய ஆற்றலைக் கண்டு வியந்த பாண்டிய மன்னன் பெருத்த வெகுமதியையும் அதிகாரத்தையும் கொடுத்தான் என்ற வரலாறும் உள்ளது.

    அன்னத்தியாக பட்டன் என்னும் ஒரு புலவர் குடும்பத்தார் இன்றும்  வாழ்ந்து வருவது குறிப்பிடத் தகுந்த ஒரு விஷயம்.

     சின்னச் சின்ன சிறப்பான செய்திகளை இன்று நாம் மறந்து விட்டோம்.

இப்படிப்பட்ட பாடல்கள் நமக்கு உத்வேகம் ஊட்டும் என்பதில் ஐயமில்லை.

***

‘SAY HELLO , REST WILL FOLLOW’ (Post No.6311)

George Gershwin

WRITTEN  by London swaminathan

swami_48@yahoo.com


Date: 26 April 2019


British Summer Time uploaded in London – 9-45 am

Post No. 6311

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Max Dreyfus

–subham–

அது கழுதைக்குக் கூட தெரியும்– சங்கீத மேதை பாய்ச்சல் (Post No.6310)

WRITTEN  by London swaminathan

swami_48@yahoo.com


Date: 26 April 2019


British Summer Time uploaded in London – 9-07 am

Post No. 6310

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

GEORGE GERSHWIN

MAX DREYFUS

ஹிந்து மதம் கூறும் நாற்பது ஸம்ஸ்காரங்கள் – 2 (Post No.6309)

ஹிந்து மதம் கூறும் நாற்பது ஸம்ஸ்காரங்கள் – 2 (Post No.6309)

WRITTEN  by S NAGARAJAN

swami_48@yahoo.com


Date: 25 April 2019


British Summer Time uploaded in London – 16-34

Post No. 6309

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஹிந்து மதம் கூறும் நாற்பது ஸம்ஸ்காரங்கள் – 2

ச.நாகராஜன்

ஒரு மனிதன் தான் எடுத்த பிறவியில் முயன்று அடைய வேண்டிய ஆத்ம குணங்கள் எட்டு. அவற்றைச் சற்று விரிவாகப் பார்ப்போம் :

1)தயை

எட்டு ஆத்ம குணங்களில் முதலாவதாக் அமைவது தயை. எல்லா உயிர்களிடத்தும அன்பு பாராட்டி அவற்றிற்கு உதவும் குணம் மிக முக்கியமான ஒன்றாகும். பிறர் துன்பப்படுகையில் வருந்தி தன்னால் இயன்றவரை உதவி செய்யும் குணம் தயை. பிறர் வருந்தும் போது தான் வருந்துவது, பிறர் சந்தோஷப்படுகையில் தான் சந்தோஷப் படுவது என்பது அற்புதமான குணமாகும். அது தான் தயை.

2)க்ஷமா

நமக்கு யாரேனும் தீங்கு இழைத்து விட்டால் அதைப் பொறுத்து மன்னிக்கும் குணம் க்ஷமா. அப்படித் தீங்கு செய்தோர் மீது கோபம் கொள்ளாமை, அவர்களைத் திட்டாமை, அவர்களுக்கு உடனே தீங்கு செய்ய எண்ணாதிருத்தல், தீங்கு செய்யாதிருத்தல் அனைத்தும் க்ஷமா. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று எண்ணி மற்றவரை மன்னித்தல் சிறந்த குணம்.

3) அநஸூயா

பொறாமைப் படாமல் இருப்பது அநஸூயா. பிறர் செல்வத்துடன் இருப்பது, பிறர் சந்தோஷத்துடன் இருப்பது, பிறர் நல்ல அதிகார பதவியில் இருப்பது என்பன போன்றவற்றைச் சகிக்காமல் தனக்கு அப்படி இல்லையே என்று மனம் பொங்கிப் புழுங்குவது பொறாமை. இதனால் தனக்கே தீங்கு தான் விளையுமே தவிர ஒரு நன்மையும் ஏற்படாது. பிறரது வளம் கண்டு வாழ்த்த வேண்டுமே தவிர மனம் பொங்காமல் புழுங்காமல் வாழ்வதே சாலச் சிறந்தது.

4)ஸௌஸம்

ஸௌஸம் என்றால் சுத்தம் என்று பொருள். உடல், வாக்கு, மனம் ஆகிய மூன்றிலும் சுத்தம் வேண்டும். உடலில் உள்ள அழுக்கை நீக்கிச் சுத்தமாக இருப்பது உடல் சுத்தம். அதை துஷ்பிரயோகம் செய்யாமல் – குடி, அதிக போகம் போன்றவற்றை விலக்கி உடலை போஷிக்க சாத்விக உணவைத் தேவையான அளவு உண்ணுதல் உடலால் அடையும் சுத்தம். பிறரை தூஷிக்காமை, பொய் சொல்லாமை, சத்யம், ஹிதம், பிரியமான சொற்களைப் பேசுவது வாக் சுத்தம். பிறருக்கு மனதாலும் தீங்கு இழைக்காமல் இருத்தல், பிறர் பொருளை அபகரிக்க எண்ணாமை மனதால் அடையும் சுத்தம். இந்த மூன்று சுத்தங்களையும் ஒருவன் அடைய வேண்டும்.

5) அனாயாஸம்

சிரமம் இல்லாமை அனாயாஸமாகும். உடலுக்கு அதிக சிரமத்தைத் தரக் கூடாது. பொருளுக்காக மிகவும் அலையக் கூடாது. பிறருக்கும் சிரமத்தைத் தரக் கூடாது. உடலை மிகமிக வருத்தி உபவாஸம் இருப்பது, உடலை வருத்திப் பயிற்சிகள் செய்வது, கை கால் தளரும் படி வேலை செய்வது, ஓயாமல் உழைத்து மனதையும் உடலையும் வருத்துவது கூடாது. இந்த சிரமத்தை அளவோடு கொள்ளுதலே நலம் பயக்கும் வாழ்வாகும்.

6) மங்களம்

அழுக்கில்லாத, சுத்தமான, ஆடம்பரம் இல்லாத, பகட்டு இல்லாத ஆடை அணிதல், நெற்றிக்குத் திலகமிட்டு எப்போதும் மலர்ச்சியுடனும் சிரித்த முகத்துடனும் காட்சி அளிப்பது மங்களமாகும். கெட்ட சொற்களை மறந்தும் கூறாமல் நெகடிவ் சொற்களை விடுத்து பாஸிடிவ் சொற்களை மட்டுமே கூறுதல், சுப சொற்களைக் கூறுதல் மங்களமாகும்.ஐயோ, ஐயையோ, எழவு, சனியனே போன்ற அபஸ்வரமான அவலமான சொற்களை ஒருபோதும் கூறக் கூடாது. அவலமான காலங்களிலும் கூட சிவ சிவா, ராம ராமா, கிருஷ்ண கிருஷ்ணா என்று கூறுவது மரபு. ஈர வேஷ்டியைத் தரிக்கக் கூடாது. அழுக்கை அப்புறப்படுத்த வேண்டும். அனாவசியமான சொற்களைப் பேசக் கூடாது. இது மங்களத்திற்கான வழி.

7)அகார்ப்பண்யம்

கார்ப்பண்யம் இல்லாதிருப்பது அகார்ப்பண்யம். அதாவது எப்போதும் தைரியமாக இருக்க வேண்டும். எதையும் தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். ஏழ்மையிலும் பிறருக்கு உதவுவது, பிறரிடம் கை ஏந்தாமல் இருப்பது, எந்த நிலையையும் தர்ம வழியில் எதிர் கொள்வது – இது அகார்ப்பண்யம். எடுத்த இந்த ஜென்மத்தில் ஆத்ம விசாரம் செய்வது,  ஜீவனுக்கு  முடிந்த வழிகளில் எல்லாம் நன்மை தேடுவது தான் அகார்ப்பண்யம்.

8) அஸ்ப்ருஹா

ஸ்ப்ருஹை என்றால் பற்று என்று பொருள். அஸ்ப்ருஹா என்றால் பற்றில்லாமல் இருத்தல் என்று பொருள். தன் பொருளிலும் பிறர் பொருளிலும் தன் உடமையிலும் பிறர் உடமையிலும் பற்றில்லாமல் வாழ வேண்டும். அடுத்தவரைப் பார்த்து அவரிடம் உள்ள அனைத்தும் தன்னிடம் இல்லையே என ஏங்குவது, அதற்காக ஆசைப்படுவது போன்றவற்றை விடுத்துத் தனக்கென உள்ளதை போதும் என்ற மனதுடன் அனுபவித்தல் அஸ்ப்ருஹா. தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்க்கையை சுகமாக அனுபவிப்பது அஸ்ப்ருஹா.

இந்த ஆத்ம குணங்களுடன் பகவத் கீதையில் பதினாறாம் அத்தியாயத்தில் தைவீக குணங்களாக கிருஷ்ணர் கூறும் குணங்களையும் இங்கு நினைவு கூறலாம்.

பயமில்லாமை, மனத்தூய்மை, ஞான யோகத்தில் நிலையாக இருத்தல், தானம், வெளியில் உள்ள புலன்களை அடக்குதல், வேள்வி செய்தல், வேதம் ஓதுதல், தவம் புரிதல், நேர்மை, அஹிம்ஸை, சத்யம், கோபமின்மை, தியாகம், புலனடக்கம், கோள் சொல்லாமை (புறங்கூறாமை), வஞ்சகமில்லாமை, தற்பெருமையில்லாமை, இவைகள் தெய்வ ஸம்பத்தை முன்னிட்டுப் பிறந்தவனுக்கு உடன் பிறந்த குணங்களாகும்.

 இந்த குணங்கள் இல்லாதவர் இவற்றை முயன்று அடைதல் வேண்டும்.

ஆக நல்ல மனிதனாக வாழ ஹிந்து மதம் கூறும் குணங்களின் பட்டியல் மனித குலம் முழுமைக்கும் பொதுவானதாக அமைவதைக் கண்டு இன்புறலாம்.

***