19-10-20 பங்களூர் செய்தி மடல்.(Post No.8829-D)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 8829-D

Date uploaded in London – –20 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வணக்கம்.

ஞானமயம் வழங்கும் பங்களூர் செய்தி மடல்.

வழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.

தலைப்புச் செய்திகள்

பங்களூரில் ஹலசூரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சரஸ்வதி பூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள்

பன்னிரெண்டரை அடி உயரமுள்ள விவேகானந்தர் சிலை பங்களூரு ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட இருக்கிறது.

புகழ்பெற்ற புண்ய ஸ்தலமான குக்கி சுப்ரமண்ய தலம் பற்றிய ஒரு சிறு அறிமுகம்

இனி, விரிவான செய்திகள் :-

பங்களூரில் ஹலசூரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சரஸ்வதி பூஜையை ஒட்டி அக்டோபர் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் காலை 5 மணிக்கு வேத பாராயணமும் காலை ஏழரை மணிக்கு பூஜை மற்றும் தேவி மாஹாத்மிய பாராயணமும் மாலை 6 மணிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண  ஆரத்தியும் நடைபெறும். அக்டோபர் 24ஆம் தேதியன்று காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர் நிகழ்ச்சிகள் உண்டு. அக்டோபர் 25ஆம் தேதி ஆயுத பூஜையை ஒட்டியும், அக்டோபர் 26ஆம் தேதி விஜயதசமி அன்றும் இதே போல சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அடுத்து பங்களூரில் ஹலசூரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,

விவேகானந்தர் சிலை நிறுவுதல் பற்றிய ஒரு சிறப்புச் செய்தியை அறிவிக்கிறது. பன்னிரெண்டரை அடி உயரமுள்ள வெங்கலத்தினால் ஆன ஸ்வாமி விவேகானந்தரின் சிலை ஒன்று KSR பங்களூர் சிடி ரெயில்வே ஸ்டேஷன் மூன்றாவது வாயிலில் நிறுவப்பட இருக்கிறது. பக்தர்கள் இந்த நல்ல பணிக்குத் தாராளமாக நிதி உதவ வேண்டுமென்று வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. நிதி செலுத்த வேண்டிய வங்கி மற்றும் விவரங்களை மடத்திலிருந்து பெறலாம். மடத்தின் மின்னஞ்சல் முகவரி halasuru@rkmm.org

அடுத்து புகழ்பெற்ற புண்ய ஸ்தலமான குக்கி சுப்ரமண்ய தலம் பற்றி ஒரு சிறு அறிமுகத்தை வழங்குகிறோம்.

குக்கி சுப்ரமணியசுவாமி கோயில் கர்நாடக மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த காட்டில் குமாரமலையில் குக்கி சுப்ரமண்யா என்ற அழகிய கிராமத்தில் அமைந்துள்ள ஒரு புனித கோவிலாகும்.

பங்களூரிலிருந்து சுமார் 320 கிலோமீட்டர் தொலைவிலும் மங்களூரிலிருந்து சுமார் 103 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ள இந்த ஸ்தலம் இயற்கை வனப்புடன் கூடிய அடர்ந்த காட்டில் அமைந்துள்ளது. இருபுறமும் நெடிதுயர்ந்த மரங்கள் உள்ள சாலையின் வழியே சென்று இதை அடையலாம்.

குமார பர்வதம் மேற்குத் தொடர்ச்சி மலையில் 4000 அடி உயரமுள்ள மலையாகும். மலையின் உச்சியை அடைய சாலை வழியே 18 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். இந்த மலையே ஆதி சேஷன் வடிவத்தில் அமைந்திருப்பது வியப்பூட்டும் ஒரு அதிசயமாகும்! இங்கு சேஷ பர்வதம், சித்த பர்வதம், குமார பர்வதம் ஆகிய மூன்று மலைகள் உள்ளன. குமார பர்வதத்தில் குமாரஸ்வாமியின் இரு பாதச் சுவடுகள் கல்லிலே அமைந்துள்ளன. பக்தர்கள் இதை பயபக்தியுடன் வணங்கி வழிபடுகின்றனர்.

இந்தப் பாதச் சுவடுகளிலிருந்து இரு வேறு திசைகளில் நீர் பெருகுவதைக் காணலாம். ‘உபய குமார தாரா’ என்று அழைக்கப்படும் இரு நதிகள் சுமார் 8 மைல் தூரம் தனித்தனியே பாய்ந்து பின்னர் ஒன்று சேர்வது ஒரு அற்புதமான காட்சியாகும்.

குக்கி சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தில், கோயிலின் முன் மண்டபத்திற்கும் கர்ப்ப கிரஹத்திற்கும் நடுவே வெள்ளித்தூண் ஒன்று உள்ளது. இதை வலம் வந்து வெள்ளித் தூணில் அமைந்துள்ள கருடனை வழிபடுதல் மரபு, இதனால் சர்ப்பங்கள் கக்கும் விஷம் ஒன்றும் செய்யாது என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் நம்பிக்கை. இங்குள்ள முருகன் ஸ்வயம்பு மூர்த்தி. மூர்த்தியின் தலை மீது ஐந்து தலை நாகர் உள்ளது.

நாகங்களின் தலைவியான வாசுகிக்கு முருகன் அருள் பாலித்த தலம் இது.

ஆகவே சர்ப்பஹத்தி தோஷம், கால சர்ப்ப தோஷம் உள்ளிட்ட நாக தோஷம் உள்ளவர்கள் அதைப் போக்க இங்கு வந்து வழிபடுதல் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாக உள்ளது.

மிகச் சிறப்பான புராண வரலாறைக் கொண்டது இந்த ஸ்தலம்.

குக்ஷி என்றால் குகை என்று பொருள். அது மருவி இப்போது குக்கி ஆகியிருக்கிறது.

ஸ்கந்த புராணம் இதை குமரனின் நேத்ராக்னி ஸ்தலமாகச் சொல்கிறது. தாருகாசுரன், சூரபத்மன் உள்ளிட்ட பல அசுரர்களை வதம் செய்த பின்னர் விநாயகருடன் சுப்ரமணியர் இங்கு வந்து தங்கினார். அப்போது இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் அவர்களை வரவேற்றனர். தனது மகளான தேவசேனையை இந்திரன் மகிழ்ச்சியுடன் சுப்ரமணியருக்கு மணம் செய்து கொடுக்க விரும்பவே, அதை ஏற்று சுப்ரமணியர் தேவசேனையை இந்த குமாரமலையில் மணந்தார். பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தேவர்களும் இங்கு வருகை புரிந்து ஆனந்தமடைந்தனர். இங்கு குக்கி லிங்கம், பைரவர், உமா மஹேஸ்வரர், நரசிம்மர் உள்ளிட்ட தெய்வ விக்ரஹங்களும் வழிபாட்டுக்கென அமைந்துள்ளன..

காலம் காலமாக மக்கள் பக்தியுடன் வணங்கி வரும் குக்கி ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

இதுவரை நீங்கள் கேட்டது பங்களூர் செய்தி  மடல்.

வழங்கியது ப்ரஹன் நாயகி சத்யநாராயணன். நன்றி.

tags-bengaluru191020

19-10-2020 உலக இந்து சமய செய்தி மடல் (8829-C)

SAINTS CONFERENCE IN KASI/VARANASI

WRITTEN BY LONDON SWAMINATHAN (NEWS EDITOR)

Post No. 8829-C

Date uploaded in London – –20 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அக்டோபர் 19-ம் தேதி —   திங்கட் கிழமை

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.

உங்கள் பேட்டை, நகரத்தில் நடைபெறும் விழாக்கள், உற்சவங்கள் பற்றி எங்களுக்கு செய்தி அனுப்புங்கள்.

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்

XXXX

நாட்டு மக்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நவராத்ரி வாழ்த்துக்களைத் தெரிவித்து இருக்கிறார். சென்ற 17ம் தேதிய ன்று ஒன்பது நாள் நவராத்ரி உற்சவம் துவங்கி விட்டது.

ஜகன் மாதா ஜகஜ்ஜனனீ,

அனைவர்க்கும் அமைதியையும் ஆனந்தத்தையும் அருளட்டும்! ஜெய் மாதா தி!

என்று TWEET  ட்வீட் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

முதல் நாளன்று மலை மகள் – சைல புத்ரி என்று தேவியை வண ங் குகிறார்கள். அந்த அன்னை அனைவர்க்கும் ஆரோக்கியத்தை அருளட்டும் –அத்தோடு வறுமை மிஞ்சி வாடுவோரின் வாழ்வில் வளம் பெருக உதவட்டும் என்றும் வேண்டிக்கொண்டு இருக்கிறார்.

XXX

இதற்கிடையில் நவம்பர் 3ம் தேதி நடைபெறப்போகும் அமெரிக்க அதிபர் தேர்தலில் DONALD TRUMP   அவர்களை  எதிர்த்துப் போட்டியிடும் BIDEN பைடனும் தமிழ் வம்சாவளி பெண்மணியான KAMALA HARRIS கமலா ஹாரிஸும் அமெரிக்கா வாழ்  இந்துக்களுக்கு  நவராத்ரி நல்  வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்

இதோ தமிழ்நாட்டுச் செய்திகள்…………..

தமிழ் நாட்டில் எல்லா கோவில்களிலும் நாராத்ரி உற்சவம் கோலாகலமாகத் துவங்கிவிட்டது. ஆயினும் பக்தர்கள் எல்லோரும் முன்போல தரிசிக்க முடிவதில்லை. மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உள்பட பல கோவில்களும் வெப் சைட், வாட்ஸ் அப் , இன்டெர்நெட் மூலம் நிகழ்சசிகளைக் காட்டிவருகின்றன.

மாயூரத்தில் துலா காவேரி ஸ்னானமும் துவங்கி விட்டது. மயூர நாத சுவாமி அம்பிகை சமேதராக ஆற்றங்கரைக்கு எழுந்தருளும் பவனியும் நடந்து வருகிறது.

XXX

ஜம்மு-காஷ்மீர்  மாநிலத்தின் ஜம்மு பகுதியில் புகழ் பெற்ற வைஷ்ணவ தேவி ஆலயம் இருக்கிறது. இது ஒரு குகைக் கோவில். இங்கு நவராத்ரி திருநாளை ஒட்டி    கூட்டம் பெருகி வருகிறது. உலக அமைதிக்காக வேத கோஷ முழக்கத்துடன் மகா சண்டி யக்ஞமும் துவக்கப்பட்டுள்ளது..

வைஷ்ணவ தேவி கோவிலைச் சுற்றி மலர் அலங்கரம் செய்யப்பட்டுள்ளது. அன்னையை தரிசிக்க வசதியாக தினமும் டெலிவிஷன் ஒளிபரப்பும் நடைபெறுகிறது

xxxxx

உத்தரப் பிரதேச மாநிலச் செய்திகள்…………..

அயோத்தி : ‘அயோத்தியில் அக். 17ல் துவங்கவுள்ள ராம்லீலா வைபவம் சமூக வலைதளங்களில் 14 மொழிகளில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டுள்ளது.
உ.பி., மாநிலம் அயோத்தியில் ஆண்டு தோறும் நடக்கும் ராம்லீலா வைபவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இந்த ஆண்டுக்கான ராம்லீலா நிகழ்ச்சி அக். 17ல் துவங்கி 25ம் தேதி வரை   நடக்கிறது  . கொரோனா பரவல் காரணமாக இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. முக்கிய பிரமுகர்கள் கோவில் நிர்வாகிகள் விழாக் குழுவினர் மட்டும் பங்கேற்பர். இந்த ஆண்டு உற்சவம் நடத்தும் பொறுப்பு டில்லியில் உள்ள ராம்லீலா அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.


xxxxxx

சமஸ்கிருதம் படிக்கும் மாண வர்களுக்கு இலவச சாப்பாடும் பிற வசதிகளும் வழங்கப்படும்  என்று உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். சம்ஸ்கிருதக் கல்வியை வளர்க்க மாநிலம் எல்லா நடவாடிக்கைகளையும் எடுக்கும் என்றும் தேவையானால் அரசு சார்பற்ற நிறுவனங்களின் உதவியை நாடும் என்றும் அறிவித்துள்ளார். சம்ஸ்கிருத சிக்ஷர sikshaa பரிஷத் வெப்சைட்டை website துவக்கி வைத்து அவர் பேசினார். குருகுல வழக்கப்படி சம்ஸ்க்ருதம் கற்பிக்கப்படும் போதே அவர்களுக்கு கணிதம், கம்ப்யுட்டர், அறிவியல் ஆகியவையும் கற்பிக்கப்படும் என்றார்

XXXX 

பல மாநிலங்களிலும் இந்து மத சாது சன்யாசிகள் படுகொலை செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி சாது சன்யாசிகளுக்கு தக்க பாதுகாப்பு வழங்கா விடில் நாடு முழுவதும் கிளர்ச்சி நடத்தப்படும் என்று சன்யாசிகள், துறவிகள், முனிவர்களின் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்து சன்யாசிகளின் தலைமை அமைப்புக்கு அகில பாரத சாந்த் சமிதி என்று  பெயர். இந்த அமைப்பின் கூட்டம் இந்துக்களின் புனிதத் தலமான காசியில் நடந்தது . பொதுக் காரீயதரிசி ஜிதேந்திரா  நந்த சரஸ்வதி  இதை அறிவித்தார். பின்னர் பேசிய பாபா பாலக் தாஸ் எல்லா இந்து அமைப்புகளும் கிளர்ச்சிக்கு ஆதரவு நல்கும் என்று அறிவித்தார்.

ஏப்ரல் 16ம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் இரண்டு  சன்யாசிகளை போலீசார் முன்னிலையில் ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. இது போன்று பல  தாக்குதல்களை நக்சல்பாரி இயக்கத்தினர் நடத்துவதாகக் கூறி பல சம்பவங்களையும்  கூட்டம் பட்டியலிட்டது . ராஜஸ்தானிலும் உத்தர பிரதேசத்திலும் கோவில் அர்ச்சகர்கள், புரோகிதர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.ஒரு சன்யாசி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காணாமற் போனதற்கு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூட்டம் சுட்டிக்காட்டியது.

Xxxxxx

இனி கேரள மாநில செய்திகள்

நவராத்திரி விழாவுக்கு தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் சுவாமி சிலைகளுக்கு, எல்லைப்பகுதியான களியக்காவிளையில் இருமாநில போலீசாரும் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்புடன் மரியாதை செலுத்தினர். குமரியிலிருந்து நவராத்திரி விழாவிற்கு திருவனந்தபுரம் செல்லும் சுவாமி சிலைகள் பாரம்பரிய முறைப்படி பல்லக்கில் சுமந்து செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையொட்டி இன்று காலை சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை சிலை பல்லக்கில் சுமந்து நவராத்திரி விழாவிற்காக திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றது. புதன் இரவு பத்மநாபபுரம் அரண்மையில் இருந்து பல்லக்குகளில் பவனியாக புறப்பட்ட சுவாமி சிலைகளை களியக்காவிளை பகுதியில் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதையுடன், தமிழக போலீசார் கேரளா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஆண்டு தோறும் இந்த பவனி நடைபெறுகிறது. நவராத்ரி காலத்தில் நிறுவனத்தை புறத்தில் மூன்று இடங்களில் சுவாமி விக்ரகங்கள் வழிபாட்டிற்கு வைக்கப்படும்.

Xxxxx

சபரிமலையில் ஐயப்பன் கோவில் ஆறுமாதங்களுக்குப் பிறகு முதல் தடவையாக பதர்களுக்குத் திறந்து  விடப்பட்டது. இது மாதம் தோறும் நடை திறப்பதன் ஒரு பகுதி. ஆயினும் 6 மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட வில்லை. இப்பொழுது கடும் வைரஸ் பரிசோதனைகளுக்குப் பின்னர் 60 வயதுக்கும் குறைந்த பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். 6 மாதங்களுக்குப்  பக்தர்கள் மீது  விதித்த தடையால் கோவிலுக்கு 150 கோடி ரூபாய் வருவாய் இழப்பு நேரிட்டது

xxxx

இனி ஆந்திர மாநிலச் செய்திகள்

விஜயவாடாவில் இந்திர கேலாத்ரி மலையிலுள்ள  கனக துர்கா கோவிலில்

நவராத்ரியின் முதல் நாளன்றே 12, 000 பக்தர்கள் வரிசையில் நின்று துர்கா தேவியை வணங்கினார்கள். முதல் நாளன்று ஸ்வர்ண அலங்காரத்தில் தேவி தரிசனம் தந்தது பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது

xxx

இதற்கிடையில் அருகாமையிலுள்ள தெலுங்கானா மாநிலத்தில் இந்து சமய பெண்கள் பதுகம்மா என்னும் மலர்த்   திருவிழாவைக் கொண்டாடி தேவியை மலர் வடிவத்தில் வணங்கி வருகிறார்கள். நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் இந்துக் குடும்பங்களை சேர்ந்த ஆண்  மக்கள்  பகல் நேரத்தில் பூக்களை சேகரித்து வருவர். பின்னர் குடும்பத்தினர் அனைவரும் பல்வேறு வண்ண மலர்களால் ஆன பதுக்கம்மா வடிவத்தைச் செய்து அதன் மீது மஞ்சள் குங்குமம் வைத்து வணங்குவர். பெரும்பாலும் வறட்சியில் வாடும் தெலுங்கனா மாநிலத்தில் இவ்வாண்டு அணைகள் நிரம்பி எங்கும் பசுமைக் காட் சி தென்படுவதால் மக்கள் இரு மடங்கு உற்சாகத்துடன் விழாவைத் துவக்கியுள்ளனர்.

xxxx

பாலாஜி கோவில் பணத்தை மத்திய மாநில அரசுகளின் செக்யுரிட்டி security  பத்திரங்களில் முதலீடு செய்ய திருப்பதி- திருமலை தேவஸ்தானம் முடிவு செய்திருப்பதை பாரதீய ஜனதா கட்சி கண்டித்துள்ளது . கோவில் உண்டியல் பணத்தை முதலீ டு செய்து வட்டி பெறுவது முறையற்றது என்றும் அதற்குப் பதிலாக தர்ம கைங்கர்யங்களிலும், பக்த்ர்களுக்காகவும் அந்தப் பணத்தைப் பயன்ப டுத்தவேண்டும் என்றும் பாரதியஜனதா கட் சி கோரியிருக்கிறது

Xxx

அடுத்ததாக பெங்களூரிலிருந்து திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் , கர்நாடகச் செய்தி மடலை வழங்குகிறார்.

 இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு

வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம் ……………….

xxxxxx

TAGS– TAMILNEWS191020

19-10-20 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH (8829-B)

WRITTEN BY LONDON SWAMINATHAN (NEWS EDITOR)

Post No. 8829-B

Date uploaded in London – –20 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Namaste , Namskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Read by SUJATHA RENGANATHAN .

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at 2 pm London Time and 6-30 Pm Indian Time Every Monday.

Even if you miss our live broadcast on Mondays, you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day. 

 Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘AaKaasa DwaniI’ — Read by SUJATHA RENGANATHAN .

xxxxx

Prime Minister Narendra Modi on Saturday wished people on the first day of the nine-day festival of Navratri, hoping for a safe, healthy and prosperous planet as the country and the world battles the coronavirus disease (Covid-19), which has affected and killed millions across the globe.

“Many congratulations on the auspicious festival of Navratri. May jagat janani Ma Jagadamba bring happiness, peace and prosperity to all of you. Jai Mata Di!” PM Modi tweeted.

The Prime Minister also invoked Goddess Shailaputri, meaning the daughter of the mountains and one of the nine manifestations of Durga, who is worshipped the first day of Navratri.

“Pranams to Maa Shailputri on Day 1 of Navratri. With her blessings, may our planet be safe, healthy and prosperous. May her blessings give us strength to bring a positive change in the lives of the poor and downtrodden,” he added.

xxxx

There is some good news from Uttar Pradesh,

Uttar Pradesh chief minister Yogi Adityanath on Thursday directed officials to improve facilities in Sanskrit schools. He said students in Sanskrit schools should be provided with free meals and other facilities.

Launching the website of Madhyamik Sanskrit Shiksha Parishad, the chief minister said  to promote Sanskrit, it is pertinent to link the subject with modern relevance. He said, “Alongside the traditional way of teaching the subject, students should be taught about Mathematics, sciences and computers.”

He said his government is determined to promote Sanskrit language in the state if necessary, with help of NGOs.

Xxx

Here is another important news from Varanasi in Uttar Pradesh……………………………..

Enraged over the killings of priests and seers reported from several states in the recent past, Akhil Bharatiya Sant Samiti, an umbrella body of Hindu seers, has said it will launch a nationwide stir if the government does not provide security to seers.

The demand for security for the seer community was made at a meeting of seers from across the country was held and presided over by the samiti’s general secretary Swami Jeetendrananda Saraswati in Varanasi on Monday.

Speaking on the occasion, Patalpuri Matt’s mahant Baba Balakdas Maharaj alleged that Naxals were behind the attacks on seers.

On April 16 this year, two sadhus and their driver were travelling from Mumbai to attend a funeral in Gujarat’s Surat when their vehicle was stopped and they were  attacked and killed by a mob in a village in Palghar town of Maharashtra in the presence of police.

On October 7, a priest was allegedly set afire in Rajasthan’s Karauli district, and four days later, on October 11, a priest was attacked in Gonda district of Uttar Pradesh.

Three years ago, prominent seer Mahant Mohandas, the pontiff of Shri Panchayati Akhara Bada Udasin went missing while on his way to Mumbai from Haridwar on a personal visit. He was last seen at Meerut railway station and his mysterious disappearance led to major resentment among the saint community.

Now, even after three years, the police have not been able to trace or get a clue about Mohandas’ whereabouts.

Xxxx

Now some news coming from Kerala……

The Sabarimala Ayyappa temple in Kerala has resumed darshan for pilgrims as the temple opened for monthly pooja on Friday evening. Pilgrims who reached the base camp are allowed to go up the hill after conducting Covid-19 tests;  only those testing negative are allowed into the temple. This is the first time pilgrims are allowed after six month break due to virus scare IT LOST A REVENUE OF RS.150 CRORES IN THE LAST SIX MONTHS BECASE OF BAN ON PILGRIMS.

COVID protocol announced by the Kerala Government includes

  • All  pilgrims will have to register on the portal — https://sabarimalaonline.org
  • COVID negative certificate is mandatory for darshan 
  • Children and elders will not be allowed to visit temple 
  • Ghee Abhishekam, bathing at Pampa river will not be allowed

ANOTHER INTERESTING NEWS FROM THIRUVANANTHAPURAM , CAPITAL CITY OF Kerala is the visit of Tamil Nadu Gods from the neighbouring state.

The Navarathri idols from Padmanabhapuram Palace that were taken out in a procession from Thuckalay in Kanyakumari district were brought to Padmanabhaswamy temple in Thiru Anantha Puram on Friday. The Navarathri pooja began on Saturday the 17th of October.

The idols are brought to the temple every year during the Navarathri pooja. The idols were brought in a procession as usual in the traditional way.

The idol procession was given traditional salute by the police of Tamil Nadu and Kerala  The idols are placed in three places for nine nights,  and devotees  offer prayers starting Saturday .

xxx

And here is news from Andhra Pradesh

The nine-day Dasara festival at Sri Durga Temple atop Indrakeeladri in Vijayawada, kicked off on Saturday. The presiding deity Sri Kanaka Durga Devi’ was decorated in the ‘Swarna Kavacha   Alankaaram  .

Though pilgrims from various parts of the state reached the temple early morning, they were allowed for darshan around 10 am. 

According to temple officials, around 12,000 devotees thronged the temple on the very first day and took blessings of the goddess.

Xxxx

In the meantime,

Bathukamma, Telangana’s major cultural festival, has doubled the joy of residents.

With Telengana’s hinterland becoming verdant stretches of bumper Kharif crops, and its lakes and reservoirs teeming with water, the festival of colours is turning out to be very different from the ones that Telangana has known before.

The nine-day Bathukamma  festival is the  quintessence of Telangana culture .

During these nine days, the menfolk of the house in rural areas would go out every morning into the agriculture fields or forests to pluck flowers. The entire family would then sit together and help each other arrange these flowers into a Bathukamma. 

Comprising seven concentric layers, the Bathukamma is stacked in the shape of a temple’s ‘Gopura’. Gauramma, a symbolic idol of Goddess Gowri made of turmeric, is placed on top of the flowers.

This little floral mountain is worshipped as Goddess Bathukamma. Flowers of various hues and species are used in the arrangement.

Xxxx

Maathaa Vaishnava Devi Cave temple is one of the holiest places for Hindus in North India.

The nine-day long Navratri festival at Goddess Vaishnava Devi shrine began with Chandi Maha Yagya and chanting of Vedic hymns along with other rituals last week

The ‘Maha Yagya’, being performed at the holy cave shrine nestled in Trikuta hills in Jammu division for peace, prosperity and health of humanity, will conclude with Purna Ahuti on Mahanavami or the ninth day of the Navratri festival.

The Chandi Maha Yagya is telecast from 12.30 p.m. to 1.30 pm daily during Navratri festival.

xxxxxx

And last but not the least is some good news from London

Every ten years a big International Stamp Exhibition is held in London. This year it has to be held virtually because of the COVID virus scare. N. Ragupathy, an avid stamp collector from Nagappattinam in Tamil Nadu , has displayed his stamps in the London Exhibition. He has been collecting stamps on Hindu Gods and Hindu festivals from different countries. He displayed his stamps in Four Large Frames in the London Stamp Exhibition. Mr Ragupathu has won several awards for his Hindu Stamp Collection.

xxxx

 THAT IS THE END OF ‘AaKaaSA Dwani’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –

READ BY SUJATHA RENGANATHAN.

Please Wait for our Tamil News Bulletin

Now I pass it on to VAISHNAVI ANAND

……………………………………………..

TAGS- HINDUNEWS191020

LONDON GNANA MAYAM PROGRAMME- WHAT HAPPENED YESTERDAY (8829-A)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8829-A

Date uploaded in London – –20 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

THANKS FOR JOINING US EVERY MONDAT AT 2 PM LONDON TIME AND 6-30 PM INDIAN TIME AT FACEBOOK.COM/GNANAMAYAM.

PROGRAMME BROADCAST/TELECAST VIA ZOOM AND FACEBOOK ON 19TH OCTOBER 2020

YOU CAN VIST THE ABOVE SITE AND SEE WHAT HAPPENED YESTERDAY

CURRENT AFFAIRS SECTION

NEEDAMANGALAM MRS JAYASHRI UMASHANKAR RENDERED THE PRAYER SONG.

MRS SUJATHA RENGANATHAN READ THE WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH.

MRS VAISHNAVI ANAND READ THE WORLD HINDU TAMIL NEWS ROUND UP

MRS BRAHAN NAYAKI SATHYANARAYANAN PRESENTED KARNATAKA NEWS REPORT

HEALTHCARE MAGAZINE EDITOR RAJA PRESENTED A REPORT ON NELLAI APPAR- KANTHIMATHI TEMPLE AT THIRUNELVELI IN TAMIL NADU

MISS VIDULA NATARAJAN INTERVIEWED MRS JAYANTHI SUNDAR ON HER NARAYANEEYAM AND THIRUPPUGAZ CLASS

MRS JAYANTHI SUNDAR OF LONDON EXPLAINED THE METHOD OF HER TEACHING THIRUPPUGAZ.

XXX

QUESTION AND ANSWER SESSION

SIDDHA DOCTOR SRINIVASAN FROM CHENNAI ELABORATED ON THE CODE LANGUAGE USED BY TAMIL SIDDHAS AND COMPARED IT WITH THE JARGON IN OTHER FIELDS

MR S NAGARAJAN FROM BENGALURU EXPAINED THE WORD ARYA IN BHARATIYAR SONGS AND COMPARED IT WITHSANGAM LITERATURE AND DEVOTIONAL LITERATURE

DR NARAYANAN KANNAN EXPLAINED ALVAR PASURAMS WHERE ONE VERSE USE THE WORD ‘DEFECTIVE VEDAS’.

A VIDEO CLIP FROM KANCHI SHANKARACHARCHYA SRI VIJAYA INDRA SARASVATI’S  ANUGRAHA BASHAN WAS BROADCAST .

LONDON SWAMINATHAN, NEWS EDITOR, GNANAMAYAM, PRODUCED THE PROGRAMME.

STUDIO ENGINEER HARROW SRIDHAR RENDERED THE TECHNICA HELP.

SRI KAYANA SUNDARA SIVACHARIYAR OF LONDON IS ORGANISING THE WEEKLY PROGRAMME ON BEHALF OF WORLD HINDU ORGANISATION.

SEE YOU ALL NEXT MONDAY .

TAGS- GNANAMAYAM191020

–SUBHAM—

TAMIL WORDS IN ENGLISH – PART 5 (Post No.8828)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8828

Date uploaded in London – –19 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part 5

CONTINUED FROM PART 4 POSTED YESTERDAY

I AM SHOWING THE ORIGIN OF ANCIENT TAMIL WORDS; THAT IS WHY I AM GIVING SANSKRIT BASIS AS WELL. THAT WILL PROVE BOTH ORIGINATED FROM SAME SOURCE.

C.79. CHEAT- KAYAMAI; ALSO RELATED TO GREEK WORD CLEFT= KALAVU IN TAMIL; கயமை

C.80. CONCUBINE – SUCCUBUS- SAKKALATHI IN TAMIL; BUT SAKALAI/CO-BROTHER IS

SANSKRIT BASED ; சக்களத்தி, சகளை ; சக்குபாஸ் என்பது ஆண்களை மயக்கும் அரக்கன்

SAKALAI IS HUSBAND OF WIFE’S SISTER

C.81. COFFIN- SAVAM- DEAD BODY; SANSKRIT BUT USED IN TAMIL சவம்,

C.82. CUSTODY – KAITHU/ARREST  கைது

C.83. COUGH- KAAPHA; USED IN TAMIL MEDICAL BOOKS; BUT SANSKRIT கபம்,

C.84. CEYLON – SIMHALA; SANSKRIT SIMHA – ALAYA ; LOCATION OF LION HEARTED PEOPLE சிங்களம்/ஸிம்ஹளம்

C.85. CHIDE – CIDU CIDU, KADU KADU ;PETULANT, IRRITABLE; SCHOLD சிடு, சிடு

C.86. CRY – KARAI ; CROW CRY/ KARAI , கரை

C.87. COLLUDE- KULAVU/ குலவு,

C.88. CRUMB- KARAMBU; BREAD CRUMBS கரம்பு

C.89. CYPRUS – COUNTRY OF COPPER; SEPPU, SEMBU IN TAMIL சைப்ரஸ் ,

C. 90 . CEREMONY – KARANAM IN TOLKAPPIAM, OLDEST TAMIL BOOK; BUT SANSKRIT WORD கரணம்

C.91. CACKLE – KEKKALI; RELATED TO TAMIL MUSICAL INSTRUMENTS AS WELL, கெக்கலி 

C.93. CHEW – SUVAI/TASTE; KAVAI-KKU UTHAVAATHU சுவை/ கவைக்கு உதவாத

C.94. CHAPEL- KOVIL—P and  B are inter changeable with V and  W in all Indian languages கோவில்

C .95. CLEPTO – GREEK WORD – KALAVU IN TAMIL களவு

C.96. CULL/ KILL – KOL கொல்

C.97. CARBON – KARUPPU /BLACK கருப்பு

C.98.COURTSHIP – KUUDU/JOIN  TOGETHER கூடு

C.99. CALM – KAMUKKAM; SAANTHI IN SANSKRIT, கமுக்கம்

C.100. COQUETT – SEE C.80. CONCUBINE/SUCCUBUS, சக்களத்தி

C.101. CONNOTATION – KANNOTTAM, கண்ணோ ட்டம்

SEE ‘CON’ கண் , IS ALWAYS LINKED TO ‘KAN’/ EYE IN MANY WORDS

C.102. CHARISMA /CHARM – SIRI IN TAMIL AND CHARU IN SANSKRIT சிரிப்பு

C.102. CAPTURE/CATCH  – KAVAR கவர்

C.104. CLOD – KATTI; SEE CYST AS WELL கட்டி

C.105. CUR – DOG; KURAI/BARK குரை

C.106. CASTRATE – KAAYADI காயடி

C.107. CROCODILE – KARAAM IN SANGAM LITERATURE கராம்

C.108. CERTAIN- KATTAAYAM கட்டாயம்,

C.109. CHOROI IN GREEK- KUUTHAR, KUUTHI; LATER MEANING PROSTITUTE, கூத்தர் , கூத்தி /யாள்

C.110. CORK – SORUKU/ INSERT IN BOTTLE; VERBAL NOUN சொருகு

C.111.CLICHE – KILI MOLI OR KILI SOL/ PARROTTING – KILI= PARROT கிளி, கிளி மொழி , கிளிச்சொல்

C.112. CATTLE – KOTTIL; CATTLE SHED கொட்டில்,

 CUP – KOPPARAI ; COVERED ALREADY ;KOPPAI கொப்பரை ,

C.113. CLANDESTINE – RELATED TO GREEK CLEFT/KALAVU IN TAMIL களவு/மணம்

C.114.CLAW/CLIP/GRIP- KIDUKKI /CLAMP; ALSO GRIP கிடுக்கி ( D and  L  are interchangeable; Dipi in Persian became Lipi in Sanskrit ad Glyph )

C.115. CITY – KUTI; குடி, ,

C.116. CONDUIT – SANTHU/LANE சந்து

C.117 – CAMP – KAMPANA / ARMY CAMP கம்பண

TO BE CONTINUED………………………

tags — Tamil words-5, in English-5

PLEASE JOIN US AT FACEBOOK.COM/GNANAMAYAM

PLEASE MEET US AT   FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME AND 6-30 PM INDIAN TIME MONDAY TO DAY FOR WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH FOLLOWED BY TAMIL PROGRAMMES.

நோய்களைத் தீர்க்கும் நவரத்தினங்கள் (Post No.8827)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8827

Date uploaded in London – – 19 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹெல்த்கேர் அக்டோபர் 2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

நோய்களைத் தீர்க்கும் நவரத்தினங்கள் : பதார்த்த குண சிந்தாமணி

ச.நாகராஜன்

பதார்த்த குண சிந்தாமணி நூலில் நவரத்தின வகை என்ற தலைப்பில் ஒவ்வொரு ரத்தினமும் எந்தெந்த வியாதிகளைக் குணமாக்கும் என்பது விவரமாகத் தரப்பட்டுள்ளது.

மாணிக்கத்தின் குணம்

சுரரோகஞ் சந்நிகளின் தோட மதிதாக

முரமான மேக மொழியுந்- திரமாக

வூணிக்கோ ணேத்திரநோ யோடுமர வீன்றவொளி

மாணிக்கத்தால் வசிய மாம்

பொருள் : (சர்ப்பம் கக்கிய) மாணிக்கத்தினால் சரீரத்தில் ஏற்படும் அனைத்து விதமான ஜுரங்கள், சந்நிபாத தோஷங்கள், திரிதோஷதாக ரோகம், வாத பிரமேகம், கண் நோய்கள் ஆகிய இவைகள் ஒழியும். அத்துடன் வசீக்ரம் உண்டாகும்.

(பழைய உரை ‘சர்ப்பம் கக்கிய மாணிக்கம்’ என்று கூறினாலும் அப்படி ஒரு மாணிக்கம் கிடைக்குமா என்பது சர்ச்சைக்குரியதாக இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.)

வைரத்தின் குணம் – இதுவே வஜ்ஜிரம் எனப்படும்

ஆறு விதமாம் வயிரம் அவ்வவற்றுண் மாரசங்கள்

வீறிநிலைத் திருக்கும் மேன்மையினாற் – கூறுமவைக்

கெப்பிணியும் நீக்கும் இணையில வனப்பும் உண்டாஞ்

செப்பிணையின் மாமுலையாய் செப்பு

பொருள் : செப்பைப் போன்ற மார்பகத்தை உடையவளே, தேவ, பிரம, சத்திரிய, வைசிய, சூத்திர, சங்கர என்னும் ஆறு வகை வைரங்கள் உண்டு. அவற்றினுள் மகா ரசங்கள் தங்கி இருப்பதனால் அவைகளுக்கு கண்களில் வரும் நோய் உள்ளிட்ட பற்பல ரோகங்களை விலக்கும் சக்தி உண்டு. அழகும் உண்டாகும்.

வைடூரியத்தின் குணம்

சீத வாதத்தொடு சிலேஷ்மம் புளியேப்பங்

காதுசூலைப் பிணிக ளத்தகுமை – மோதுபித்த

மென்று உரைக்கும் நோய்கள் அறும் எப்போதுந் தோடமிலை

நன்று வைடூரியத்தி னால்

பொருள் : வைடூரியத்தினால் சிலேஷ்ம வாத தோஷம், கபம், புளியேப்பம், வருத்துகின்ற கீல் பிடிப்பு வாதகுன்மம், பைத்தியம், அபத்திய முதலிய சப்த தோஷங்கள் நிவர்த்தியாகும்.

கோமேதகத்தின் குணம்

வாதபித்த கோபத்தை மாற்றுமல கட்டறுக்கு

மோது மந்தாக்கினியை ஓட்டுங் காண் – மீதி

லழறரு விகார மகற்று மொளி செய்யுங்

கழறுகின்ற கோமேத கம்

பொருள் : கோமேதகமானது வாதபித்தமிஸ்ரம், மலச்சிக்கல் மற்றும் ஜுரத்தால் ஏற்படும் துர்க்குணம் ஆகியவற்றை அகற்றும். மினுமினுப்பையும் தரும்.

புஷ்பராகத்தின் குணம்

வீரிய விர்த்தியது மேன்மேலு முண்டாகுங்

கூரிய நற்புத்தியுண்டாங் கூறுங்காற் – பாரிற்

பிணிவருக்க மேகும் பெரும் புட்பராக

மணியாற் புகழுமுண்டாம் வாழ்த்து

பொருள் : புஷ்பராகத்தினால் விந்து விருத்தியாகும். நல்ல நுண்ணறிவு ஏற்படும். புகழ் ஓங்கும். மேக முதலிய நோய்க் கூட்டமும் நீங்கும்.

பவளத்தின் குணம்

சுரதோட மையமுத் தோட சுரங்காச

மருசி கீடத்தாலா மாதம் – பெரும்விந்து

நட்ட மதிதாக நாவறட்சி போமொளியுங்

கிட்டும் பவளத்தாற் கேள்

பொருள் : பவளத்தினால் ஜுர தோஷம் நீங்கும். கபம் சந்நிபாத ஜூரம் விலகும். இருமல் போகும். அருசி, கீட விஷம், விந்து நஷ்டம் ஏற்படுவது ஆகியவை போகும்.நா வறட்சி போகும். அத்துடன் சரீர காந்தி ஏற்படும்.

முத்தின் குணம்

அத்திசுரஞ் சோபை யருசிதுர்ப் பலங்கண்ணோய்

பித்துவிடஞ் சீதளநோய் பேசுகபஞ்-சத்தத்

தயிரிய நட்டத்தோடு தாதுநட்ட மும்போ

முயிறுநண் முத்திருந்தா லோது

பொருள் : (ஜீவரத்தினம் என்னும்) முத்தினால் அஸ்தி ஜுரம் , வீக்கம், அருசி, தேக மெலிவு, விழி நோய், அக்கினி கீட விஷம், சுட்க சிலேஷ்மம், குரல் வளையில் ஏற்படும் கோழை, அதைரியம், வீரிய நாசம் ஆகிய அனைத்தும் போய் விடும்.

மரகதத்தின் குணம்

தாது தரும் பூதபை சாசந் தமையோட்டு

மீதுவரு புண்ணை விலக்குங்காண் – டீதுபுரி

மச்சை யகற்றும் மதுமேகம் போக்கும்

பச்சை யதுமதுரம் பார்

பொருள் : இனிப்புள்ள மரகதம் விந்துவை தரும். 18 விதமான பூத பைசாசங்க்ளை ஓட்டி விடும். பல விஷங்களை அகற்றும் சக்தி கொண்டது. மதுமேக வியாதியையும் போக்கும்.

நீலத்தின் குணம்

குதிவலி மேகபித்தங் கூறரிய பாண்டு

மதிமயக்க மெல்லா மருளு- மதிநுதலே

புத்தியொடு மென்மேலும் போகசுக முண்டாகுஞ்

சுத்தநறு நீலத்தாற் சொல்

மதி நுதலைக் கொண்டவளே! நீலத்தினால் குதி கால் நோவு தீரும். மேகநீர்,

அதி பித்தம், பாண்டு போகும். மனச்சோர்வு நீங்கும். நல்லறிவு ஏற்படும். சுக்கிலம் மிகுதியாகும். போக சுகம் உண்டாகும்.

*

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ரத்தினமும் ஒரு கிரகத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறது. நற்பலனை அதிகரிக்கவும் தோஷங்கள் நீங்கவும் இந்த ரத்தினக் கற்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.  அதே போல நியூமராலஜி எனப்படும் எண்கணித சாஸ்திரத்தின் படியும் ஒவ்வொரு எண்ணுடனும் ஒரு கிரகம் தொடர்பு படுத்தப்படுகிறது. விவரப் பட்டியல் இதோ :-

ரத்தினம்           உரிய கிரகம்    உரிய எண்  உரிய ராசி

மாணிக்கம்          சூரியன்          1        சிம்மம்

முத்து              சந்திரன்          2        கடகம்

பவளம்             செவ்வாய்        9    மேஷம், விருச்சிகம்

மரகதம்           புதன்               5    மிதுனம், கன்னி

புஷ்பராகம்        வியாழன்           3    தனுர், மீனம்

வைரம்           சுக்கிரன்            6    ரிஷபம், துலாம்

இந்திரநீலம்       சனி                8    மகரம், கும்பம்

கோமேதகம்       ராகு               4     கன்னி

வைடூரியம்       கேது               7      விருச்சிகம்

முன்னோர்கள் காலம் காலமாகச் சோதித்து இப்படி, பரிந்துரைக்கும் நவரத்தின வகைகளை தோஷம் இல்லாமல் பார்த்து வாங்கி அணிவது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாக இருந்து வருகிறது. வெடிப்பு, கொப்புளம், கீறல், ஒளி மங்கி இருத்தல், கரடு முரடாக இருப்பது, இயற்கையில் கிடைக்காமல் சிந்தடிக்காகச் செய்து ரத்தினங்களின் பெயரை அவற்றிற்குச் சூட்டல் ஆகியவை இல்லாமல் நல்ல அசல் ரத்தினக் கல்லே உரிய நல்ல பலனைத் தரும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாழ்க வளமுடன்!

tags– நோய், நவரத்தினம்

***

TAMIL WORDS IN ENGLISH – PART 4 (Post No.8826)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8826

Date uploaded in London – –18 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – part 4

ஆங்கிலத்தில் ஒரு சொல் இருந்தால் அது சம்ஸ்க்ருத மூலம் உடையது என்பதை மொழி இயல் அறிஞர்கள் ஒப்புக்கொள்கின்றனர் .திராவிட மொழி என்பது வானத்தில் இருந்து குதித்த உலக மொழி என்றும் ‘கப்ஸா’ விட்டு தமிழர்களின் மூளையைக் குழப்புகின்றனர். உண்மையில் உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும் இந்திய மொழியே மூலம். அதில் சம்ஸ்கிருதமும் தமிழும் அடக்கம். ஏனெனில் இவ்விரு மொழிகளும் ஒரே மூலத்தில் இருந்து தோன்றியவை. பழங்கால மொழிகளில் உள்ள பெரும்பாலான சொற்களை தமிழ் அல்லது சம்ஸ்க்ருத மூலத்தில் கண்டு பிடித்துவிடலாம். எனது நீண்ட பட்டியல்கள் அதை உறுதி செய்கின்றன.

LET ME CONTINUE WITH LETTER ‘C’

C.37. C’ANIS’- NAAY; S’VANA’ IN SANSKRIT நாய், (see interchange of letters ‘nais’-canis);

Kwanem in Latin and Kuon in Greek from Svana in Sanskrit.

C .38. CHAMPION – PANDYAN KINGS WERE CALLED SEMBIAN; செம்பியன், காம்போஜ, கம்போடியா, கம்பூசியா IT MEANS ‘FIGHTER’ IN OLD GERMANIC ‘KAMBIJO’ WHICH CAME FROM ‘KAAMBOJA’ IN SANSKRIT (also Kamboja-Cambodia-Kampuchea)

C.39.CURSE- IN TAMIL KARITHU கரி-த்துக் கொட்டு , (MAKE HIM BLACK, MAKE HIM BURNT)

C.40. COIN/CURRENCY – KAZANJU- கழஞ்சு CURRENCY

C.41. CALLOUS – KAL NENJU – கல் நெஞ்சு, STONE HEARTED; ALSO SEE CAL-CULATE

C.41. CO-OPT – KUUTTU/ கூட்டு, GATHER

C.42.CAPSISE – KAVIL/KAVIZ கவிழ் (p/b are interchangeable with v/w in all Indian languages)

C.43. COLD – KULIR; குளிர், BRANCHED OUT INTO SANSKRIT JALADOSHA/ WATER CAUSED SICKNESS

C.44. CROOKED – KURUKIYA/NARROW MINDED குறுகிய,

C.45.CUP – KOPPAI கோப்பை,

C.46. CHILD/KINDER- KUZANTHAI(KINDERGARTEN) குழந்தை

C.47.CURVE/SURVE- SUZIVU/SULIVU சுளிவு , சுழி, , (r and l are interchangeable in all world languages)

C.48.COTTON – SATTAI/SHIRT IS CLOTHE MADE OF COTTON, சட்டை,

C.49. CURL/ CORRUGATED- சுருள் SURUL/ROLL (C=S)

C.50. CUTE- SUTTI (CUTE BOY) (C=S) சுட்டி,

C.51. COASTAL – KATAL/SEA SIDE, கடல் ஒர

C.52. COROMANDAL – SOZA/CHOZA/CHOLA MANDALA (C=S; R=L) சோழமண்டல

C.53.CHATEAU – KOTTAI /FORT, கோட்டை,

 (FRENCH WORD CAME FROM Sanskrit)

THIS SHOWS HOW OLD INDIAN LANGUAGE CAN BRANCH OUT INTO TWO DIFFERENT WAYS)

C.54.COBBLER – SAKKILIYAN சக்கிலியன்,

C.55. CELLULOID – KOLU/GOLU (DOLL) கொலு,

C.56.CAESAR – KESA ARI/HAIRED ANIMAL/LION; ARI=ANIMAL IS IN TAMIL

JULIUS CAESAR, AUGUSTUS CAESAR ALL HAVE SANSKRIT ‘KESARI/CESA ARI. கேசரி.ஸீஸர் ,

INCIDENTALLY, LEO/ LION IS ALSO SANSKRIT; YALI IS MIRRORED AS LIYA/LEO/LION

IT IS CALLED MIRROR IMAGE IN LINGUISTICS. YOU SEE REVERSE ORDER IN A MIRROR யாளி/லியோ

C.57.CROWD- KUUTTAM கூட்டம்,

C.58.CELE-BRATE – KALI MEANS PLAY; KALI ATTAM -CELE BRATE களி , களிப்பு

C.59.CHER-CHARM/ING – SIRI/LAUGHING/SMILING சிரி , சிரிப்பு

C.60.COARSE- S/CORA, S/CORA சொற, சொற, ,

C.61. CHAOS – KUZAPPAM/GREAT CONFUSION குழப்பம்

C.62.CORN – KURUNAI/POWDERED FORM குருணை

C.63. CYST – C/KATTI கட்டி, கரிக்குருவி,

C.64. COLLY BIRD – KARI/BLACK BIRD கரிக்குருவி,

C.65. COTTAGE – KUTISAI; ALSO HUT-KUTISAI குடிசை,

KUTI IS A VERY COMMON WORD WITH ALL THE HAMLETS; IT IS A SANSKRIT WORD AS WELL

C.66. CURRICULUM – GURU-KULAM; SYLLABUS STUDIED UNDER GURU, குருகுலம், கண்டி

C.67.CONDEMN – KANDI கண்டி

C.68.COIL- SEE CURL/SURUL; ALSO TAMIL SUZAL/WHIRL  சுழல் சுருள்,

C.69. CUB- KUTTI குட்டி

C.70.COWARD- KOZAI/KOLAI (LONG O AS IN OM); KLAIBHYAM IN BHAGAVAD GITA கோழை ,

C.71. CHALICE – KALASA/KALAYA/KALAM; COMMON TO TAMIL AND SANSKRIT கலச

C.72.CLOTH – TUKIL (inter change of letters th/c/l=thukil); also Sanskrit துகில்,

C.72.COOLY – KUULI கூலி 

C.73. CRINGE- KURUGU/SHRINK; KUUNIK KURUKU- SHRUNKEN OUT OF SHAME குறுகு

C.74. CODE – KOT- PAADU/RULES; IT BRANCHED OUT INTO SATTA/SYSTEM IN SANSKRIT கோட்பாடு, சட்டம்

C.75. CLUSTER – C/KOTHU; KUZU குழு , கொத்து,

C.76.CUSTOM- C/SUNGAM ; CUSTOM TAX IN PORTS OF ANCIENT TAMIL NADU சுங்கம்

C.77. KURUKU- CRANE/HERON , குருகு ,

C.78. CRACK /CRAZY– KIRUKKU/ கிறுக்கு

ADDITION ; earlier we saw cauldron- kalam, kangaalam; குவளை kuvalai , kaalavaay may be added.

To be continued …………………………

மாரியாத்தாளைப் பெண்டுபிடிக்கிறவனுக்குப் பூசாரி பெண்சாதி எம்மாத்திரம் ? (8825)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8825

Date uploaded in London – –18 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மாரியாத்தாளைப்  பெண்டுபிடிக்கிறவனுக்குப்  பூசாரி பெண்சாதி எம்மாத்திரம் ?– பெண்கள் பவளக்கொடி, காத்தாயி, அறப்பத்தினி ,காமாட்சி /மீனாட்சி, சுந்தரி பெயரில் உள்ள மேலும் ஐந்து பழமொழிகளைக்  கண்டுபிடியுங்கள்

1.அழகிலே பிறந்த பவளக்கொடி , ஆற்றிலே பிறந்த சாணிக் கூடை

2.அழகு பெண்ணே பவளக்கொடி, உன்னை அழைக்கிறாண்டி கூத்தாடி

3.அறப்பத்தினி ஆமுடையானை அப்பா என்று அழைத்த கதை

4.உம்  என்கிறாளாம் காமாட்சி , ஒட்டிக்கொண்டாளாம் மீனாட்சி

5.மாயப்பெண்ணே சுந்தரி , மாவைப்  போட்டு கிண்டடி

tags —  மாரியாத்தா,பவளக்கொடி,பவளக்கொடி, சுந்தரி,

–subham–

ஒரு திருப்புகழில் இரு திருப்புகழ் பாடல்கள்! – 3 (Post No.8824)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8824

Date uploaded in London – – 18 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

கரந்துறை திருப்புகழ் பாடலில் முதலாவது பாடல் பற்றிய கட்டுரை எண் 8277   (வெளியான தேதி 3-7-2020). இரண்டாவது பாடல் பற்றிய கட்டுரை எண் 8817 (வெளியான தேதி 16-10-2020)

ஒரு திருப்புகழில் இரு திருப்புகழ் பாடல்கள்! – 3

ச.நாகராஜன்

ஒரு திருப்புகழுக்குள் அமைந்துள்ள இன்னொரு (கரந்துறை) திருப்புகழ் பாடல்களில் இரண்டைப் பார்த்தோம். மூன்றாவது திருப்புகழ் பாடல் இது:

தத்தித் தத்திச் சட்டப் பட்டுச்

      சத்தப் படுமைக்                கடலாலே

   சர்ப்பத் தத்திற் பட்டுக் கெட்டுத்

      தட்டுப் படுமப்                 பிறையாலே

சித்தத் துக்குப் பித்துற் றுச்சச்

     சித்ரக் கொடியுற்                றழியாதே;

    செப்பக் கொற்றச் சிற்பப் பத்திச்

      செச்சைத் தொடையைத்        தரவேணும்

கொத்துத் திக்குப் பத்துட் புக்குக்

    குத்திக் கிரியைப்              பொரும்வேலா

  கொச்சைப் பொச்சைப் பொற்பிற் பச்சைக்

    கொச்சைக் குறவிக்            கினியோனே;

சுத்தப் பத்தத் தர்க்குச் சித்தத்

    துக்கத் தையொழித்            திடும் வீரா

  சொர்க்கத் துக்கொப் புற்றக் கச்சிக்

   சொர்க்கப் பதியிற்              பெருமாளே!

பாடலின் பொருளைப் பார்ப்போம் :

த்டைப்பட்டு தடைப்பட்டுக் குழறிப் பேசித் தவறுதலான வழியிலே சென்று கெட்டுப் போகின்ற இந்த பொய்க்கூட்டமாய் நிறைந்த சட்டையாகிய இந்த குடிசை என்னும் வியப்பூட்டும் சுமையை விரும்புகின்ற

 சிக்கு (தடை) நீங்கப் பெற்று, உட்கு ( உள்-கு உள்ளத்திலே கருணை எண்ணம் வாய்க்கப் பெற்று, பரிசுத்தமானதும் சித்தியை(நற்கதியை, முக்தியைத் தர வல்லதுமான தமிழை (தமிழ்ப் பாடல்களை) திட்டத்துக்குப் பூரணமாக, லக்ஷணமாக, செவ்வையாகச் சொல்லும் (பாடும்) பாக்கியத்தைப் பெறுவேனோ!

 அங்கிட்டு இங்கிட்டு (அங்கும் இங்குமாகப் பல இடங்களிலும்)போர் செய்ய சபதத்துடன் துணிந்து (கிட்டியிட்டு) சமீபத்தில் நெருங்கி எதிர்த்து அஸ்திரங்களைப் (படைகளை- ஆயுதங்களை) எற்றி (செலுத்தி) விரைவிற் சண்டை செய்த சூரன் –

உடம்பு கெட்டுப் போய், ஆயுதங்களைக் கை விட்டு (இல்லாதொழிந்து) அல்லது, தனது சேனைகளை விட்டுத் தன்னந் தனியனாய், பயம் அடைந்து, கடலினுள்ளே புகுந்து வேதனைப் பட்டு, (மா) மர உருவத்தை அடைந்து நிற்க

(தக்குத் திக்குத் தறுகண்) – தறுகண் அஞ்சாமையுடன் இருந்த வீரம் எல்லாம் தக்குத் திக்கென தடுமாற, தொக்குத் தொக்குற்றது கண் – (தொக்கு – ஸ்பரிச உணர்ச்சி அறியும் இந்திரியம்) (முதலிய) துவையலாகி (அழிந்து பட) அந்த இடத்தும் (அந்த நிலையிலும் கூட) கைக்கொட்டு இட்டு இட்டு – கையை மிகவும் கொட்டியவாறே ஆர்ப்பரித்து உடலுடன் சில பொழுது (நேரம்) ஆடி (போர்செய்து)

வேற்படை குத்தினதால், (துடியில் சத்திக்க) துடித்துக் கதறி ஒலி செய்ய (அல்லது துடி – உடுக்கைப் பறையின் முழக்கம் போலக் கூவிக் கதற) கைச் சமர் செய் – ஒழுங்கான போரைச் செய்த பெருமாளே! சத்திப் பெருமாளே – வேல் கொண்ட பெருமாளே கச்சிக் குமரப் பெருமாளே (தமிழைப் புகலப் பெறுவேனோ)

அலைகள் தாவிச் சென்று தாவிச்சென்றி ஓர் ஒழுங்கு முறையிலே தொழிற்பட்டு ஒலி செய்கின்ற கருங்கடலாலும்-

   (சர்ப்பத்தின் தத்தில் பட்டு) கிரகணத்தின் போது ராகு கேது எனப்படும் பாம்பால் பிடிபடுதல் என்னும் ஆபத்திற்கு உட்பட்டு, கெடுதல் உற்று, தடைபடுகின்ற சந்திரனாலும்-

  சித்தத்துக்கு (மனதிலே) பித்து உற்று (காம வெறி கொண்டு) (உச்சம்) அதன் அதிகமான நிலையை இந்த அழகிய கொடி போன்ற பெண் அடைந்து அழிவு படாமல்

   உனது (செப்பமானதும்) செவ்வையானதும் (கொற்றம்) வீரத்துக்கு அறிகுறியானதும், (சிற்பம்) தொழில்திறம் காட்டுவதும் (பத்தி) வரிசையாய் அமைந்ததுமான வெட்சிமாலையைத் தந்தருள வேண்டும்.

   நிறைந்துள்ள (திக்குப் பத்துள்) வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, தென்மேற்கு , மேல, கீழ் எனப்படும்) பத்துத் திசைகளிலும் வேலால் குத்திக் கிரௌஞ்சகிரியுடன் (அல்லது) ஏழு கிரியுடன் சண்டை செய்த வேலவனே!

  திருந்தாப் பேச்சு பேசுபவளும் (பொச்சை) காடு மலைகளில் இருப்பவளு அழகிலே பச்சை நிறம் கொண்டவளும், இழிகுலமாம் குறக் குலத்தவளுமான வள்ளிக்கு இனியவனே!

 பரிசுத்தமான (பத்தத்தர்) பக்த அத்தர்-பத்தியில் உயர்ந்தோர்களுடைய மனத்தில் உள்ள துக்கங்களை ஒழித்திடுகின்ற வீரனே!

   சொர்க்கத்துக்கு (தேவருலகுக்கு) ஒப்பான கச்சி எனப்படும் அழகிய திருப்பதியில் வீற்றிருக்கும் பெருமாளே!

(செச்சைத் தொடையைத் தரவேணும்)

மேற்கண்ட பதவுரை தணிகைமணி ஸ்ரீ வ.சு.செங்கல்வராய பிள்ளை அவர்கள் அளித்த ஒன்றாகும். இவர் தமிழுக்கு ஆற்றியுள்ள அரும் பணியைப் போற்றி புகழ வார்த்தைகளே இல்லை.

இந்த பாடலில் இறுதி வரி ஒவ்வொன்றையும் எடுத்துத் தொடுத்துப் பார்த்தால் அது ஒரு தனித் திருப்புகழாக இப்படி அமைகிறது :

சத்தப் படுமைக் கடலாலே

   தட்டுப் படுமப் பிறையாலே

சித்ரக் கொடியுற் றழியாதே

   செச்சைத் தொடையைத் தரவேணும்

குத்திக் கிரியைப் பொரும்வேலா

   கொச்சைக் குறவிக் கினியோனே

துக்கத் தையொழித் திடும்வீரா

   சொர்க்கப் பதியிற் பெருமாளே

இதன் பொருள்: ஒலி செய்கின்ற கரிய கடலாலும்

எதிர்ப்படும் சந்திரனாலும்,

அழகிய கொடி போன்ற இப்பெண் அழிவுறாமல்

(உனது) வெட்சி மாலையைத் தரவேணும்;

குத்தி மலையைப் பொருத வேலனே!

இழிகுலக் குறத்திக்கு இனியவனே!

துக்கத்தை ஒழிக்கும் வீரா!

சுவர்க்கப் பதியில் (அமராவதியிற்) பெருமாளே!

இதுவரை மூன்று கட்டுரைகளில் மூன்று  கரந்துறைப் பாடல்களைப் பார்த்தோம்.

திருப்புகழில் ஏராளமான சித்ர கவிகள் உள்ளன. பக்தியுடன் திருப்புகழ் ஓதுவதோடு சித்ர கவிகளை அறிந்து ரசித்தல் தமிழர்களாகிய நமக்குப் பெரும் பாக்கியமே!

tags–  இரு திருப்புகழ் பாடல்

–subham—