உலக இந்து சமய செய்தி மடல் 11-7-2021 (Post.9840)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9840

Date uploaded in London –11 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


இன்று ஞாயிற்றுக் கிழமை JULY 11 -ஆம் தேதி —  ,2021


உலக இந்து   சமய செய்தி மடல்


தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN


 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXXX

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான 306 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு: அமைச்சர் தகவல்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 1866 ம் ஆண்டு 330 ஏக்கர் நிலம் இருந்தது. தற்போது, 24 ஏக்கர் மட்டுமே கோயில் நிலங்கள் உள்ளன என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 1866 ம் ஆண்டு 330 ஏக்கர் நிலம் இருந்தது. தற்போது, 24 ஏக்கர் மட்டுமே கோயில் நிலங்கள் உள்ளன. மற்ற இடத்தில் குடியிருப்புகளும், கடைகளும் கட்டப்பட்டு ஆக்கிரமிப்புகளாக உள்ளது. அதில் இருப்பவர்கள் உரிய மனு அளித்தால், வாடகைதாரர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவர். கோயில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் நோய்த் தொற்றில் இருந்து விடுபட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும், இயற்கையையும் வேண்டுவோம், மக்களும் வேண்டிக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

xxx

கூசமூக வலைதளத்தில் கணக்கு துவங்கிய ஆர்.எஸ்.எஸ்.

‘கூ’ சமூக வலைதளத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் கணக்கு துவக்கப்பட்டுள்ளது.

‘டுவிட்டர், பேஸ்புக்’ போன்ற சமூக வலைதளங்களை போல், ‘கூ’ என்ற பெயரில் சமூக வலைதளத்தை இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அப்ரமேயா ராதாகிருஷ்ணா, மயங்க் பிடாவட்கா ஆகியோர் துவக்கினர். இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ட சட்டவிதிகளை ஏற்க மறுத்து வருவதால், டுவிட்டருக்கும், மத்திய அரசுக்கும் மோதல் நீடித்து வருகிறது. இதையடுத்து இந்தியர்கள் பலரும், கூ சமூக வலைதளத்தில் கணக்கு துவக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ளே உள்ளிட்ட பலர், கூ சமூக வலை தளத்தில் இணைந்து உள்ளனர். இந்நிலையில் கூ சமூக வலைதளத்தில், ஆர்.எஸ்.எஸ்., சார்பில் கணக்கு துவக்கப்பட்டு உள்ளது.

இது பற்றி ஆர்.எஸ்.எஸ்., செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘தொண்டர்கள் மற்றும் மக்களை, இந்திய மொழிகளில் தொடர்பு கொள்ளும் நோக்கில், கூ சமூக வலைதளத்தில் ஆர்.எஸ்.எஸ்., இணைந்துள்ளது’ என்றார்.

கூ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘கூ சமூகவலைதளத்தில், 65 லட்சத்துக்கும் அதிகமான பயனாளர்கள் உள்ளனர்.இப்போது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு கணக்கு துவக்கியுள்ளதால், விரைவில் பயனாளர்கள் எண்ணிக்கை, ஒரு கோடியை தாண்டும்’ என, கூறப்பட்டுள்ளது

XXX

முஸ்லிம்கள் ஆபத்தில் இல்லை” – மோகன்பகவத்

காஸியாபாத்: இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் யாருக்கும் ஆபத்து இல்லை. முஸ்லிம்கள், இந்துக்கள் என்ற இரு குழுக்கள் வேண்டாம். இணைந்து வாழ்வதே நாட்டின் வளர்ச்சிக்க உகந்தது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் உபியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் கூட்டம் காசியாபாத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் மோகன் பகவத் பேசியதாவது:

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறுபவர்கள் இந்துக்களே அல்ல . வழிபாட்டை வைத்து மக்களை வேறுபடுத்த முடியாது. அனைத்து இந்தியர்களுக்கும் டிஎன்ஏ ஒன்றுதான் . இந்தியா போன்ற ஒரு ஜனநாயகத்தில், இந்துக்கள் அல்லது முஸ்லிம்களைக் காட்டிலும் இந்தியர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும் .முஸ்லிம்கள் இங்கு வாழக்கூடாது என்று கூறுபவர் ஒரு இந்து அல்ல. பசு புனிதமானது. இதனை கொல்வது தவறு, இதுபோல் ஒரு மனிதனை கொல்வதும் இந்து தர்மத்திற்கு எதிரானது. இவர்கள் மீது சட்டம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 40,000 ஆண்டுகளாக நாம் அனைவரும் ஒரே மூதாதையர்களின் வழி வந்தவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரே மரபணு தான் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்கிற சதி வலையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். முஸ்லிம்களுக்கு எந்த விதமான ஆபத்திலும் இல்லை. நாட்டில் ஒற்றுமை இல்லை என்றால் வளர்ச்சி சாத்தியமில்லை. ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் ஒருவருக்கு ஒருவர் பேசுவது அவசியம் இவ்வாறு அவர் கூறினார்.

XXXX

செருப்பு அணிந்து பூஜை, உதயநிதிக்கு கண்டனம்

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், சென்னையில் நடந்த, புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட பூமி பூஜையில், செருப்பு காலுடன் உதயநிதி பங்கேற்றதற்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார்: சென்னை, வியாசர்பாடி எம்.ஜி.ஆர்., நகரில், புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நடந்தது. தேர்தலுக்கு முன், ‘நான் கடவுள் நம்பிக்கை அற்றவன்’ என்று பேசிய உதயநிதி, காலில் செருப்பு அணிந்து, ஹிந்து சமய கடவுள் படங்களை அவமதிக்கும் வகையில் நடந்து உள்ளார்.

கருணாநிதி சமாதிக்கு, செருப்பு அணியாது செல்லும் உதயநிதி மற்றும் அமைச்சர்கள், ஹிந்து கடவுள்களை, செருப்பு அணிந்து அவமதித்தது ஏற்க முடியாதது. இதற்கு உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்.

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா: தங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றால், பூமி பூஜை நிகழ்வுகளில், கலந்து கொள்வதை தவிர்க்கலாம். ஆனால், கடவுளை அவமதிப்பது போல, காலில் செருப்பு அணிந்து கொண்டு, பூஜை செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

XXXX

திருப்பதி கோவில் பிரசாதங்களின் விலை உயர்வு

திருப்பதி பாலாஜி வெங்கடேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு தினமும் பல்வேறு வகையான பூைஜகள் நடந்து வருகிறது. அர்ஜித சேவைகள் மற்றும் பூைஜகளின்போது மூலவர் ஏழுமலையானுக்கு வடை, அப்பம், தோசை, முறுக்கு, ஜிலேபி, லட்டு உள்பட 12 வகையான பிரசாதங்கள் நைவேத்தியமாக வைக்கப் படுகின்றன. இந்தப் பிரசாதங்கள் கோவில் உள்ளே மடப்பள்ளியில் 

தயாரிக்கப்படுகின்றன. திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பிரசாதங்களின் விலையை உயர்த்தி உள்ளது.

முறுக்கு, ஜிலேபி 100 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகவும், 25 ரூபாய் இருந்த சிறிய லட்டு 50 ரூபாயாகவும், 100 ரூபாய் இருந்த பெரிய லட்டு 200 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று அதிகாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணிவரை திருப்பாவாடை சேவை நடப்பது வழக்கம். அதில் மூலவருக்கு முறுக்கு, ஜிலேபி ஆகியவை நைவேத்தியம் செய்து, அவைகளை முன்பதிவு செய்த வி.ஐ.பி. பக்தர்களுக்கு மட்டும் கொடுப்பது வழக்கம். அதில் பிரசாதம் மீதியானால் தேவஸ்தான உயர் அதிகாரிகள், போலீஸ் உயர் 

அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்குவார்கள். ஒருசில நைவேத்திய பிரசாதம் எக்காரணத்தைக் கொண்டும் பக்தர்களுக்கு விற்கப்பட மாட்டாது.

ஆனால் தற்போது முறுக்கு, ஜிலேபி பிரசாதங்களின் விலை 4 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இனி இந்த நைவேத்திய பிரசாதங்கள் விற்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. ைநவேத்திய பிரசாதங்களின் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வர உள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகார சபை ஒருங்கிணைப்பாளரும், கூடுதல் முதன்ைமச் செயல் அலுவலருமான ஏ.வி.தர்மாரெட்டி தெரிவித்துள்ளார்.

XXXXX

புரி ரத யாத்திரை செல்லும் பகுதிகளில் 11 முதல் 13-ந் தேதி வரை 144 தடை – கோவில் நிர்வாகக்குழு முடிவு

ஒடிசாவில் ஆண்டுதோறும் நடைபெறும் உலக புகழ்பெற்ற புரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை, வருகிற 12-ந்தேதி நடைபெறுகிறது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் ரத யாத்திரையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் ரத யாத்திரை செல்லும் பகுதிகளில் தடையை மீறி பக்தர்கள் பங்கேற்காமல் இருப்பதற்காக, ரத யாத்திரை செல்லும் கிராண்ட் சாலையில் 144 தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி வருகிற 11-ந்தேதி இரவு முதல் 13-ந்தேதி காலை வரை இந்த தடை அமல்படுத்த கோவில் நிர்வாகக்குழு முடிவு செய்துள்ளது.

யாத்திரை செல்லும் பகுதிகளில் சாலையின் இருபுறமும் இருக்கும் வீடுகளில் வசிக்கும் பக்தர்கள் இந்த யாத்திரையை தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

புகழ்பெற்ற 3 தேர்களையும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் சேவையாளர்கள் இழுத்து செல்வார்கள் எனவும், இதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும் கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த சேவையாளர்களுக்கு தேவையான வசதிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புரியில் மட்டும் யாத்திரை : உச்ச நீதிமன்றம் உத்தரவு

‘கொரோனா வைரஸ் பரவல் உள்ள நிலையில் எந்த துணிச்சலான நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஒடிசாவின் புரியில் மட்டுமே ரத யாத்திரை நடத்த வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்தாண்டு புரியில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் ரத யாத்திரை நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.மாநிலம் முழுதும் ரத யாத்திரை நடத்த அனுமதிக்கக் கோரி வழக்குகள் தொடரப்பட்டன.அவற்றை ஒடிசா உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அதை எதிர்த்து வைரஸ் பரவலால் கடந்தாண்டைவிட இந்தாண்டு அதிக பலியை சந்தித்துள்ளோம்.மாநிலம் முழுதும் ரத யாத்திரை நடத்துவது சரியாக இருக்காது. கடவுள் விரும்பினால் அடுத்தாண்டு சிறப்பாக கொண்டாடலாம். புரியைத் தவிர மற்ற இடங்களில் ரத யாத்திரை நடத்த அனுமதிக்க முடியாது.இவ்வாறு உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

XXXX

பெண் அர்ச்சகர் நியமனம் அவசியமா?

‘தமிழக கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டப்படி, அடுத்த 100 நாட்களில் பணி நியமனம் வழங்கப்படும். முக்கிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். அது குறித்து அறிவிப்பு பலகையும் வைக்கப்படும். ”அது மட்டுமல்ல, தமிழகத்தில் பெண்களையும் அர்ச்சகராக்கும் திட்டம் உள்ளது. அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அர்ச்சகர் பற்றாக்குறை உள்ள கோவில்களில் பெண்கள் நியமிக்கப்படுவர்,” என, ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சில நாட்களுக்கு முன் தெரிவித்தார்.

இது, தமிழக அரசியல்வாதிகள், ஆன்மிகவாதி களிடையே பெரும் விவாதப் பொருளானது. தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் நாகசாமி, இதுபற்றி கூறியதாவது:அர்ச்சகர்கள் என்பவர்கள், அரசு ஊழியர்கள் அல்ல; அவர்கள் பூஜிக்கும் கடவுளின் ஊழியர்கள். அவர்கள், வணங்கும் கடவுளுக்கும், பூஜை செய்யும் கோவிலின் ஆகம விதிகளுக்கும் கட்டுப்பட்டவர்களாகவே இருப்பர்.ஆகம விதிகளை பின்பற்றி பூஜை செய்யும் கோவிலுக்கு செல்லும் முன், அர்ச்சகர்கள், தங்கள் வீடுகளிலும், வழிபாடுகளை நடத்துவர். மணமானவர்கள், ஆச்சார்யார்கள், வாழ்நாள் அர்ச்சகர்கள் என, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான விதிகள் உள்ளன. விதிகளை கடைப்பிடிக்கும் முன், முறைப்படி தீட்சையும் பெறுகின்றனர்.


அர்ச்சகர்கள் கோவிலுக்குள் நுழையும் முன், பஞ்ச சுத்திகரணா என்னும், ஐந்து வித சுத்தத்தை கடைப்பிடிப்பர்.. இந்த விதிகளை தொய்வில்லாமல் பின்பற்றுவோர், அந்தந்த கோவிலுக்கு உரிய ஆகம விதிகளுக்கு உட்பட்டு அர்ச்சகராகலாம். சமூக சமத்துவம் என்ற பெயரில், அனைத்து கோவில்களிலும் பெண்களை அர்ச்சகராக்கலாம் என்பது, மேற்கத்திய கலாசாரத்தை ஒன்றிய கருத்தாக இருக்கலாம்.ஹிந்து மதத்தில், பெண்கள் தெய்வத்துக்கு நிகராக மதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மதங்களில் இல்லாத வகையில், பெண் தெய்வ வழிபாடும் உள்ளது. பெண்கள் வழிபடும் இல்லங்களில், தேவதைகள் வசிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பெண்கள் அர்ச்சகராவதில் பல சிக்கல்கள் உள்ளன.

அரசு என்பது மதச்சார்பற்ற கொள்கை உடையது. கோவில்கள் என்பவை, மதச் சின்னங்கள். இதில், அரசு தலையிடுவது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே, பெண் அர்ச்சகர் நியமனத்தில், அனைத்து தரப்பு வல்லுனர் குழுவை நியமித்து, கருத்து கேட்டு முடிவு எடுப்பதே சிறந்தது.இவ்வாறு அவர் கூறினார். நாகசாமி தொல்லியல் அறிஞர் –

XXX

சிவகிரி மடத்தின் முன்னாள் தலைவர் சுவாமி பிரகாஷானந்தா, 99 வயதில் இறந்தார்

சிவகிரி மடத்தின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலத்தின் பழமையான ஆன்மீகத் தலைவர்களில் ஒருவருமான சுவாமி பிரகாஷானந்தா வயது தொடர்பான வியாதிகளால் இறந்தார் என்று மட வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன. அவருக்கு வயது 99.

ஆன்மீகத் தலைவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தவர்களில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் அடங்குவர்.

பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில், சுவாமி பிரகாஷானந்தாவை அறிவு மற்றும் ஆன்மீகத்தின் கலங்கரை விளக்கம் என்று பாராட்டினார்.

“சுவாமி பிரகாஷானந்தா ஜி அறிவு மற்றும் ஆன்மீகத்தின் ஒரு கலங்கரை விளக்கமாக இருந்தார். அவரது தன்னலமற்ற சேவை செயல்கள் ஏழை ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தன. உன்னதமான எண்ணங்களை பிரபலப்படுத்துவதில் அவர் முன்னிலை வகித்தார்
ஸ்ரீ நாராயண குரு. அவரது மறைவால் வேதனை. ஓம் சாந்தி, ”என்று ட்வீட் TWEET செய்துள்ளார்.

சுவாமி பிரகாஷானந்தா, -சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவால் நிறுவப்பட்ட சிவகிரி மடத்தை உலகளவில் மதிக்கப்படும் ஆன்மீக மையமாக மாற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்திருந்தார்.

XXXX

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN


நன்றி, வணக்கம்

XXXXXXXXXXXXX

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH 11-7-2021 (Post No.9839)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9839

Date uploaded in London –11 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Compiled from popular newspapers of India

Read by SUJATHA RENGANATHAN .

XXX

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.

Even if you miss our live broadcast on SUNDAYS

you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

Read by SUJATHA RENGANATHAN .

XXX

Almost all of us are descendants of Hindus says Assam CM Himanta Biswa

Asserting that Hindutva is a way of life, Assam Chief Minister Himanta Biswa Sarma has said that adherents of most religions are descendants of Hindus.

“Hindutva is a way of life. How can I or anybody stop it? It has been flowing through the ages. Almost all of us are descendants of Hindus. A Christian or a Muslim has also descended from Hindus at some point in time,” PTI quoted Sarma as saying on Saturday.

He further stressed that the Hindutva began 5,000 years ago and it cannot be stopped.

While addressing a press conference organised to mark the completion of the second month of his government in the state, the BJP leader said Hindutva cannot be “removed” as it will mean “moving away from one’s roots and motherland”.

Assam CM backs ‘Love Jihad’ law

Backing the law against ‘Love Jihad’ to check the menace of men marrying women by concealing their religious identity and other information, the Assam chief minister said he has reservations for the term but asserted that nobody will be allowed to cheat a woman.

“The government will not tolerate any woman being cheated by anyone – whether Hindu or Muslim. Appropriate action will be taken against such offenders to ensure the safety and security of our sisters,” he said.

xxxx

Uttarakhand govt to send Gangajal in tankers if Kanwar yatra not allowed

With Kanwar Yatra on hold, the Uttarakhand government is planning to transport Gangajal in tankers to other states such as Uttar Pradesh, Delhi, Haryana, Madhya Pradesh and Bihar to ensure that yatris do not miss the annual pilgrimage and are able to perform the rituals without travelling to Haridwar.

The Uttarakhand state government had on June 30 issued orders cancelling the yatra in view of the Covid-19 situation, but has been requested by its Uttar Pradesh counterpart to reconsider the decision.

“In case, the yatra is not permitted due to recent strict stance of the high court on religious gatherings, the Uttarakhand government is planning to transport Gangajal in tankers to the states from where maximum number of pilgrims arrives. The final decision on the yatra will be taken soon. If it is permitted, then it will be with restrictions,” said a state government official.

Maximum Kanwar yatris come to Haridwar from the states of Delhi, UP, Haryana, Rajasthan, Punjab, Bihar, Odisha, Jharkhand, Chhattisgarh and MP.  In 2019, over 3.5 crore devotees had visited Haridwar in the auspicious month of SRAWAN.

XXX

RSS Joins Koo App

Amidst the faceoff between American microblogging platform Twitter and the Government of India, Twitter’s rival and indigenous microblogging platform Koo on Friday said the Rashtriya Swayamsevak Sangh (RSS) has joined its platform to connect with people in Indian languages.

Koo, which has been projected as an alternative to Twitter, is witnessing an exceedingly increasing userbase on the made in India platform. Koo is widely being adopted by the BJP leaders and also those among the citizens who are vocally criticising Twitter for flouting Indian laws especially the new IT rules.

“With over 5 million members, RSS is the progenitor and leader of a large body of organisations with a presence across various facets of Indian society,” the company said in a statement.  

Founded by serial entrepreneur Aprameya Radhakrishna, founder of TaxiForSure, and Mayank Bidawatka, who previously formed companies like MediaAnt and Goodbox, Koo now has over 6.5 million users.  

“A made in India platform, Koo enables organizations to strengthen local reach and connect with communities in various parts of India. The RSS’s official spokesperson, Rajiv Tuli, has also joined Koo,” the company said.

‘Those who indulge in lynching are against Hindutva’: RSS chief Mohan Bhagwat

Rashtriya Swayamsevak Sangh chief Mohan Bhagwat on Sunday said the concept of Hindu-Muslim unity is misleading because there is nothing to unite as they are no different. Speaking at an event organised by Muslim Rashtriya Manch, which is the Muslim wing of the RSS, Bhagwat said there can never be any dominance of either Hindus or Muslims. “There can only be the dominance of Indians,” Bhagwat said, as news agency PTI reported.

“It has been proven that we’re descendants of the same ancestors from the last 40,000 years. People of India have the same DNA,” the RSS chief said adding that politics can’t unite people. “There are some works that politics can’t do. Politics can’t unite people. Politics can’t become a tool to unite people but can become a weapon to distort unity,” he said, as quoted by news agency ANI.

Those who are indulging in lynching are against Hindutva, the RSS chief said but he also mentioned that sometimes some false cases of lynching have also been registered against people.

Bhagwat said Muslims are not in danger in India as development is not possible without any unity in the country and for unity, dialogue is needed, not discord. “Don’t get trapped in the cycle of fear that Islam is in danger in India,” he said.

xxxx

Pollution in Yamuna: Mathura priests ban entry of politicians

The priests have put up a huge banner on the Ghats of the river in Mathura, saying “They all are liars who swear on Yamuna ji. They are only seen when elections are near. These culprits of mother Yamuna and officials are banned from roaming around the Yamuna River and performing puja.” 

A local priest, Radhey Shyam, said, “Several political leaders visit the Yamuna River during elections but disappear after winning polls. But this time we will not let that happen and are making our intentions clear through this banner.” 

He further said, “Political leaders have assured us time and again that Yamuna would be cleared of pollutants but nothing has changed on the ground.” 

National president of Akhil Bhartiya Teerth Purohit Mahasabha, Mahesh Pathak, also said that the river water was getting worse every day despite the fact that a party, which claims to understand the Hindu sentiments attached to the river, was in power in the state.” 

Xxx

Odisah CM Naveen Patnaik asks admin to complete Rath Yatra rituals on time

Chief Minister Naveen Patnaik on Thursday asked Puri district administration and other stakeholders to ensure that all rituals of the Rath Yatra on July 12 are completed on time.

Reviewing the preparations at a high-level meeting virtually, the Chief Minister said the Rath Yatra will be held this year during a very critical period like last time. Devotees from the entire world can have a darshan of Lord Jagannath through television and social media, he added.

The Chief Minister sought the cooperation of all sevayats and people of Puri for completion of the festival on time. He thanked all for completion of last year’s Rath Yatra in a hassle-free manner. 

The State government has exempted Puri town from weekend shutdown on Saturday in the interest of general public as curfew has been clamped by the district administration from July 11 to  July 13 in view of the Rath Yatra.

Xxx

People perform rituals at Triveni Sangama

As the district administration has given permission to the people to perform rituals for the deceased members of their families at Triveni Sangama in Bhaganandala, the ‘Asthi Visarjana’ was carried out by people on Tuesday.

Following the Covid-19 lockdown, there was a ban on religious rituals for the last two months. Many people had requested the district administration to permit to carry out the ‘Asthi Visarjana’ ritual as the process has to be done within 16 days of the death.


Triveni Sangama is known to the best place to carry out the ritual, owing to religious beliefs.

XXX

THAT IS THE END OF NEWS FROM AKASA DHWANI

READ BY SUJATHA RENGANATHAN

PLEASE WAIT FOR TAMIL NEWS

tags –  hindu news, 1172021

பிரம்மா பற்றி பாடிய அமெரிக்க கவிஞர் ரால்ப் வால்டோ எமர்சன் (Post No.9838)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9838

Date uploaded in London –11 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Brahma

BY RALPH WALDO EMERSON

If the red slayer think he slays,

Or if the slain think he is slain,

They know not well the subtle ways

I keep, and pass, and turn again.

Far or forgot to me is near;

Shadow and sunlight are the same;

The vanished gods to me appear;

And one to me are shame and fame.

They reckon ill who leave me out;

When me they fly, I am the wings;

I am the doubter and the doubt,

I am the hymn the Brahmin sings.

The strong gods pine for my abode,

And pine in vain the sacred Seven;

But thou, meek lover of the good!

Find me, and turn thy back on heaven.

அமெரிக்காவின் 19-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கட்டுரையாளர் , புலவர் எமர்சன் (RALPH WALDO EMERSON) ஆவார் . இந்து மதமும் இந்தியாவும் இவரது கட்டுரைகளிலும் கவிதைகளிலும் பரிணமிக்கிறது. பிரம்மா முதலிய இந்து தெய்வங்கள் இவருடைய கவிதைகளில் பிரகாசிக்கின்றனர். ஆயினும் இவர் இந்துமதம் பற்றி மட்டுமே பாடியவர் என்று நினைத்துவிடக் கூடாது.

எமர்சன், ஒரு பாதிரியாரின் மகன். பாஸ்டன் நகரில் பிறந்தார். பாஸ்டன் பிராமணர்கள் (Boston Brahmans) என்ற அறிஞர்கள் வரிசையில் இவரது குடும்பத்தினரும் உண்டு. தந்தையை எட்டு வயதிலேயே இழந்த போதும் அவர் சேகரித்த இந்தியா, இந்து மதம் பற்றிய புஸ்தகங்களை இவர் படித்ததை இவரது படைப்புகள் மூலம் அறியலாம். அமெரிக்க பண்பாட்டின் வளர்ச்சியில் இவரது பங்களிப்பு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

தந்தையைப் போலவே ஹார்வர்டில்(Harvard) கற்றார். அவரைப் போலவே கிறிஸ்தவ மதப் பிரச்சாரகர் ஆனார். ஆனால் 29 வயதில் இவருக்கும் கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சர்ச்சிலிருந்து வெளியேறினார். அதே ஆண்டில் இங்கிலாந்துக்கு விஜயம் செய்த்தார் . பிரபல எழுத்தாளர் தாமஸ் கார்லைலுடன் (Thomas Carlyle)  நட்பு மலர்ந்தது.

அமெரிக்காவுக்குத் திரும்பிய பின்னர் மாசாசூசெட்ஸ் பகுதியில் கான்கார்டில் (Concord)  குடிபுகுந்தார். கல்லூரி விரிவுரையாளராகவும் கட்டுரையாளராகவும் மாறினார். 33 வயதில் , அவருடைய முதல் புஸ்தகம் நேச்சர் (Nature)  அச்சாகியது. அதில் தன்னுடைய எண்ணங்களை பிழிந்து தந்தார்.

பாரம்பர்ய எண்ணங்களின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு தனித்துவம் இருக்க வேண்டும். தன்னைத்தானே சார்ந்து வாழ வேண்டும் என்ற கருத்துக்களை விதைத்தார். உங்களுடைய சுய புத்தியைப் பயன்படுத்தி நல்லது கெட்டதைப் பகுத்தறியுங்கள் . இயற்கையோடிணைந்த  எளிய வாழ்க்கை வாழுங்கள் என்று எழுதினார்.

இவருடைய விரிவுரைகள், சொற்பொழிவுகள் இவரைப் புகழ் பெற வைத்தன. ஐரோப்பிய செல்வாக்கிலிருந்து அமெரிக்கா  விடுபடவேண்டும்; .புதிய அமெரிக்க கலாசாரத்தை உருவாக்குவோம் என்று அறைகூவல் விடுத்தார். 38 வயதில் அவர் வெளியிட்ட முதல் கட்டுரைத் தொகுப்பில் இவற்றைக் காணலாம்.

அதற்கு பெரிய வரவேற்பு கிடைத்தவுடன், 44-ஆவது வயதில் முதல் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டார். பின்னர்  அடிமை ஒழிப்பு இயக்கத்திலும், பெண்ணுரிமை இயக்கத்திலும் ஈடுபட்டார்.

பிறந்த தேதி -மே 25, 1803

இறந்த தேதி- ஏப்ரல் 27, 1882

வாழ்ந்த ஆண்டுகள் – 78

இவரது இலக்கிய படைப்புகள் –

1836 – NATURE

1841 – ESSAYS

1844 – ESSAYS

1847 – POEMS

1850- REPRESENTATIVE MEN

1856- ENGLISH TRAITS

1860-  THE CONDUCT OF LIFE

1867 – MAY DAY AND OTHER PIECES

1870- SOCIETY AND SOLITUDE

1893- NATURAL HISTORY OF INTELLECT

Xxxx

எனது முந்தைய கட்டுரைகளிலிருந்து …..

பிளாட்டோவும் நானும் ஒன்றே!

ரால்ப் வால்டோ எமர்சன் (R W EMERSON) என்பவர் அமெரிக்காவின் புகழ்மிகு கவிஞர், தத்துவ அறிஞர், கட்டுரையாளர்.

அவர் ஒரு முறை கிரேக்க அறிஞர் பிளாட்டோவின் நூல் ஒன்றை பக்கத்து வீட்டு கிராமத்தானுக்குப் படிக்கக் கொடுத்தார். அந்த கிராமத்து ஆசாமி கொஞ்ச நாட்களுக்குப் பின்னர் அதைத் திருப்பிக் கொடுத்தார்.

எமர்ஸன் கேட்டார்:

புஸ்தகத்தைப் படித்தீர்களா? எப்படி இருந்தது? உங்கள் அபிப்ராயம் என்ன?

அந்தப் பட்டிக்காட்டான் சொன்னான்,

படித்தேனே! பிளாட்டோ என்னைப் போலவே கொள்கை உடையவர். என்னுடைய அச்சுதான் அவர்!

xxxx

HITCH YOUR WAGON TO A STAR

அமெரிக்கக் கவிஞரும் கட்டுரையாளருமான ரால்ப் வால்டோ  எமர்சன் (1803-1882) ஒரு கட்டுரையில் எழுதிய வாசகம் ஆங்கில நூல்களில் ‘ஊக்கமுடைமை’ பற்றிய சிறந்த மேற்கோளாகப் பயன்படுத்தப்படுகிறது. உனது வாகனத்தை (பிறர் உதவியுடன்) நட்சத்திரத்தை நோக்கி நகர்த்து Hitch your wagon to a star’ என்றார். இதன் உட்பொருள் உயர்ந்த குறிக்கோள் உடையவனாக இரு. ஏற்கனவே வெற்றி பெற்றவரின் பாதையைப் பின்பற்று என்பதாகும்

இதில் வியப்பான விஷயம் என்ன வென்றால் இதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே சோழ மன்னன் கோபெருஞ்சோழன் சொல்லியிருக்கிறான்:–

புறம் 214 (கோப்பெருஞ் சோழன்): யானை வேட்டைக்குப் போகிறவன் வெல்வான். யானையுடன் திரும்பி வருவான். குறும்பூழ் வேட்டைக்குப் போவோன் அது இல்லாமலும் திரும்புவான். உயர்ந்த குறிக்கோளுடன் கூடிய உயர்ந்தோனாக விளங்குக. இமயம் போல் புகழ் அடைக.

யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே

அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு (புறம் 214)

ஆங்கிலப் பழமொழிகள்

இதை வேறு சில ஆங்கிலப் பழமொழிகளிலும் காணலாம்.

He who aims at the moon may hit the top of a tree; he who aims at the top of a tree unlikely to get off the ground.

நிலவை எட்டிப் பிடிக்க முயல்பவன் மரத்தின் உச்சியையாவது தொடுவான்; மரத்தின் உச்சியை அடைய முயல்பவன், தரையை விட்டுக்கூட எழுதிருப்பது சந்தேகமே- என்கிறது ஆங்கிலப் பழமொழி.

See mickle, and get something; seek little and get nothing (mickle = much)

இன்னொரு பழமொழியும் இதை வலியுறுத்தும். ‘நிறையக் கேட்டால் கொஞ்சமாவது கிடைக்கும்; கொஞ்சம் கேட்டால் ஒன்றும் கிடைக்காது’ என்று சொல்கிறது இப்பழமொழி!

 நன்கொடை வசூலிக்கப் போகிறவர்களுக்கு இது நன்கு விளங்கும். ஆயிரம் ரூபாய் நன்கொடை கேட்டால், கொடுப்பவன் பாதியாவது கொடுப்பான். விற்பனையாளர் தந்திரமும் இதுதானே! ஒரு பொருளின் விலையை ஆயிரம் ரூபாய் என்பான். நாம் நூறு ரூபாய்க்குத் தருகிறாயா? என்போம். கடைசியில் 500 ரூபாயில் பேரம் முடிவடையும். ஆக வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள் இருந்தால்தான் நாம் முன்னேறுவோம். குறிக்கோளே இல்லாதவர் இறந்தர்க்குச் சமம். மரக்கட்டையும் அவர்களும் ஒன்றே என்பான் வள்ளுவன் (குறள் 600).

வள்ளுவனும் ஊக்கமுடைமை என்னும் அதிகாரத்தில் இரண்டு குறள்களில் மிக அழகாகச் சொல்கிறான்:

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்தனையது உயர்வு – திருக்குறள்  595

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளாமை தள்ளினும் நீர்த்து– குறள் 596

ஆனால் மேற்கூறிய எல்லா மேற்கோள்களுக்கும் முன்னதாகவே கண்ணபிரான் இக்கருத்தை பகவத் கீதையில் முன்வைத்துவிட்டான்:-

உத்தரேத் ஆத்மனாத்மானம் நாத்மானம் அவசாதயேத் – பகவத் கீதை (6-5)

ஒருவன் தன்னாலே தன்னை உயர்த்திக்கொள்ளவேண்டும். தன்னையே தன்னைத் தாழ்த்தக் கூடாது; உனக்கு நீயே நண்பன், நீயே பகைவன்.

புறநானூற்றில் இமயம் போல உயர்ந்து புகழ் அடைவாயாக (பாடல் 214) என்பது கீதையிலும் இருக்கிறது

(கீதை 11-33) எழுந்திரு ! புகழடை!! உத்திஷ்ட ! யசோ லப !!

—subham–

tags –  பிரம்மா , அமெரிக்க கவிஞர், ரால்ப் வால்டோ எமர்சன் , Emerson, Brahma poem,

எதிர்க் கட்சிகள் தேவையே; எதிரிக் கட்சிகள் கூடாது! ((9837

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9837

Date uploaded in London – 11 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜனநாயகம் சிறக்க எதிர்க் கட்சிகள் தேவையே; எதிரிக் கட்சிகள் கூடாது!

ச.நாகராஜன்

ஆட்சி முறைகளில் சிறந்ததாகக் கருதப்படுவது ஜனநாயக ஆட்சி முறையே. அதில் பல குறைபாடுகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. காசுக்கு ஒட்டு போடுவது, நல்ல விஷயங்களை அரசியலாக்கிக் கெடுப்பது. லஞ்சத்தை அனைத்துத் துறைகளிலும் புகுத்துவது உள்ளிட்ட பல குறைகள் உள்ளன என்றாலும் மக்கள் நினைத்தால் ஊழல் புரிவோர்களையும் சொந்த லாபம் கருதி அராஜகம் செய்வோரையும் தூக்கி எறியும் சக்தியை ஜனநாயகம் தருகிறது.

ஆட்சியாளர்கள் தவறு செய்தோலோ, ஒரு விஷயத்தில் முடிவு எடுக்கத் தடுமாறினாலோ எதிர்க் கட்சிகள் தட்டிக் கேட்கும்; தக்க ஆலோசனையையும் தரும்.

இஸ்ரேலை ஒரு லட்சிய நாடாகப் பார்க்க முடிகிறது – தேசத்திற்கு ஒரு ஆபத்து வருகிறது என்கின்ற போது அங்கு கட்சிகள் நடக்கும் விதத்தைப் பார்த்து!

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நேடானியாஹுவின் (Benjamin Netanyahu) பதவிக்கு ஆபத்து. நாற்காலி ஆடியது. உடனே அவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பென்னி கான்ட்ஸை (Benny Gantz) ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்தார். இதற்கிடையில் இஸ்லாமிய தீவிரவாதிகளான ஹமாஸுக்கும் (Hamas) இஸ்ரேலுக்கும் ஒரு போர் ஆரம்பித்தது. போர்க்காலம் முழுவதும் எதிர்க்கட்சியும் பென்னி கான்ட்ஸும் பிரதமர் பெஞ்சமின் நேடானியாஹுவிற்கு ஆதரவு அளித்தது. காஸா ஸ்ட்ரிப்பில் (Gaza Strip) ஹமாஸுடனான போரைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று கூறியது எதிர்க்கட்சி. பென்னி புது அரசை அமைப்பதைப் பற்றி ஹமாஸ் போர் முடிந்தவுடன் ஆலோசனை செய்வதாக பிரதம மந்திரியிடம் தெரிவித்தார்.

பதவியில் அமர அவர் ஆசைப்படவில்லை.

இங்கு இந்தியாவிற்கு வருவோம். பாகிஸ்தானுக்கும் பங்களா தேஷுக்கும் போர். அப்போது இந்தியா பங்களா தேஷை ஆதரித்தது. இந்திரா காந்தி முழு ஆதரவையும் அளித்தார். பாகிஸ்தான் இரண்டானது. பங்களா தேஷ் உருவானது. அப்போது எதிர்க்கட்சியின் பிரதான தலைவராக இருந்த வாஜ்பாய் இந்திரா காந்தி அவர்களை துர்கா மாதா என்று கூறிப் புகழாரம் சூட்டினார். இந்திரா காந்தியே வியந்து போனார் – இப்படிப்பட்ட புகழாரத்தைக் கண்டு.

தேச நலனையே முன் வைத்தார் வாஜ்பாயி.

இப்போது? இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக்கை செய்த போது எதிர்க்கட்சிகள் பாராட்டவில்லை. அட, சும்மாவாவது இருந்தார்களா? இல்லை.

ராகுல் காந்தி ராணுவத்தின் திறமையைப் பற்றியும் வீரத்தைப் பற்றியும் சந்தேகப்பட்டார். எதற்காக சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்று கேள்வி கேட்டார். ராணுவத்திற்கு முழு மனதுடன் ஆதரவு தெரிவிக்காமல் சர்ஜிகல் ஸ்டிரைக் செய்வதற்கு காரணம் என்ன, அதற்கு ஆதாரம் எங்கே என்று கேள்வி கேட்டார்!

இஸ்ரேலில் எதிர்க்கட்சித் தலைவர் புதிய அரசை  தன் தலைமையில் ஆரம்பிக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும், அவர் ஹமாஸை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுங்கள், உறுதுணையாக இருக்கிறோம் என்று பிரதம மந்திரிக்கு உறுதி அளித்தார். ஆதாரங்கள் எதையும் கேட்கவும் இல்லை, இஸ்ரேல் ராணுவத்தின் திறமை குறித்து சந்தேகத்தையும் எழுப்பவில்லை. தேசமே முக்கியம் என்ற நிலைப்பாட்டை எடுத்தார் எதிர்க்கட்சித் தலைவர்.

   ஆனால் இங்கோ புல்வானா ஒரு பிரச்சினையே இல்லை, அது தேர்தலுக்காக எழுப்பப்பட்டது என்று ராகுல் காந்தியும் அவருடன் இணைந்த எதிர்க்கட்சியினரும் கூறினர்.

இஸ்லாமிய தீவிரவாதிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று இஸ்ரேலிய மக்கள் ஒருமித்தமாக ஒன்று இணைகின்ற போது இங்கு நம்மை ஆக்கிரமிக்க நினைக்கும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தால் அதைக் கூட கேள்வி கேட்கின்றன நமது எதிர்க்கட்சிகள். இவை எதிர்க் கட்சிகள் அல்ல, எதிரிக் கட்சிகள். இந்த நிலை மாற வேண்டும்!

ஆனால் பாரத மக்கள் புத்திசாலிகள்! அவர்களுக்கு 1947லிருந்து என்ன நடக்கிறது என்பது தெரியும். ஆகவே அரசுக்கு ஆதரவு தெரிவித்து அரசைப் பலப்படுத்துகின்றனர்.

எதிர்க் கட்சிகள் தேசத்திற்கு ஒரு பிரச்சினை என்று வந்தால் தாங்கள் இன்னொரு கட்சி என்பதை மறந்து ஒரே கட்சி என்ற நிலைக்கு வர வேண்டும். அப்படி வந்தால் சீனாவைக் கண்டும், பாகிஸ்தானைக் கண்டும் இந்தியா அவை என்ன செய்யப் போகின்றன என்று யோசிக்குமா என்ன?

வாஜ்பாயி போன்ற அரசியல் முதிர்ச்சியும் தேசபக்தியும் கொண்ட தலைவர்களே இன்று நாட்டுக்குத் தேவை – எதிர்க் கட்சிகளில்.

தீவிரவாதிகள் எங்கிருந்து வந்தால் தான் என்ன, ஒரே குரலாக இந்தியர்கள் 130 கோடி பேரும் சேர்ந்து ஜெய்ஹிந்த் என்று முழங்கினால் இந்தியா வெல்லும், வெல்லத்தானே செய்யும்!

ஜெய்ஹிந்த்!

***

INDEX

இஸ்ரேல், ஹமாஸ் போர், பிரதம மந்திரி பெஞ்சமின் நேடானியாஹுவின் அழைப்பு, எதிர்க்கட்சி தலைவர் பென்னி கான்ட்ஸ், இந்தியா, வாஜ்பாயி- இந்திரா காந்தி, பங்களா தேஷ் போர், புல்வானா, எதிர்க் கட்சிகள், ஜெய்ஹிந்த்

tags- எதிர்க் கட்சிகள் ,எதிரிக் கட்சிகள் , இஸ்ரேல்

PLEASE JOIN US TODAY SUNDAY 11-7- 2021

11-7-2021 SUNDAY PROGRAMME

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 5 MTS

Prayer

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON MumbaiSri Siddhi Vinayakar Temple10 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR  AND GROUP–  15 mts

Kumari Hiranmayi Raghavan

Mrs Kavitha Subramanian 

Mrs Latha Murthy

Mrs Radhika Shrikanth recite Thiruppugaz.

***

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN,London

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL  by RANI SRINIVASAN

–25 MINUTES

***

TALK BY  SRI THIRUKOODAL MUKUNTHA RAJAN ON ALVARKAL  SARITHTHIRAM -15 MTS

DURATION-  Appr. 70 minutes 

XXX

INTRODUCTION TO GNANAMAYAM BROADCASTING

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES (tamilandvedas.com) TO HIS CREDIT AND AUTHOR OF FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

TAG- publicity11721

RIG VEDA IN BHAGAVAD GITA (Post No.9836)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9836

Date uploaded in London –10 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

All the gods are addressed as Friends in the Rig Veda in hundreds of hymns. The seers called their colleagues  ‘comrades’. The same type of relationship exists in the Bhagavad Gita. Arjuna treated Lord Krishna as his friend and Krishna also treated him the same way. In later period Hindu Gods were portrayed in different roles such as husband, father, mother, boss, servant and friend. All these originated in the Rig Veda where Gods and Goddesses were described as sister, brother, father, mother and friend.

Rig Veda has some remarkable mantras to show that they were the source of Bhagavad Gita. ‘One who cooks for himself is a sinner’ – is found in both the Rig Veda and the Bhagavad Gita. ‘Fire sacrifices cause rains’ is also found in both. In the first part of the article,  I will compare some slokas/couplets of Bhagavad Gita with the Rig Vedic mantras.

Xxx

RV 1-24-7

Varuna, King, of hallowed might, sustaineth erect the Tree’s stem in the baseless region

Its rays, whose root is high above, stream downward. Deep may they sink within us, and be hidden RV 1-24-7

In Bhagavad Gita 15-1 we come across with the same upside down TREE simile:-

The Blessed Lord said,

Uurdhvamuulam adhassaakham

Asvattham praahur avyayam ……

They speak of imperishable Aasvattham (Peepal tree) as having its root above and branches below. Its leaves are the Vedas and he who knows this is the knower of Vedas.

In Katha Upanishad also we have,

‘With root above and branches below, this world tree is eternal’.

In Taittiriya Upanishad we have

‘I am the originator of world tree’.

So, The Tree of Life imagery, particularly upside-down tree image has its origin in the Rig Veda. In other cultures, of a later period, we see Tree of Life, but not upside down.

The thinking of ancient Hindus was same for thousands of years.

Xxx

RV 1-25-6

THIS, WITH JOY, THEY BOTH ACCEPT IN COMMON; NEVER DO THEY FAIL

THE EVER FAITHFUL WORSHIPPER.

In Bhagavad-Gita 9-31, we read

Ksipram bhavati dharmatmaa

……

Na me bhaktah pranasyati

“Swiftly does he become a soul of righteousness and obtain lasting peace. O Son of  Kunti, know thou for certain that MY DEVOTEE PERISHES NEVER”.

Rama also said the same in Valmiki Ramayana,

To him who seeks My protection even once and requests help of Me saying, I am yours , I shall give him fearlessness from all beings. This is my resolve- Ramayana  

xxx

1-31-3/4

In the Rig Vedic hymn 1-31 we hear all the famous persons of an older period. Manu, Vivasvan, Yayati, Nahusa, and Kuru appear in the hymn.

This shows the link to 4-1 of Bhagavad Gita, where we see Vivasvan and Manu.

In Bhagavad Gita 4-1, Lord Krishna says,

The Blessed Lord said ,

“I proclaimed this imperishable yoga to Vivasvan,; Vivasvan told it to Manu and Manu spoke it to Iksvaku”.

Hindus believe the root of Dharma is in the Vedas. Upanishads are the gist of Vedas and the Bhagavad Gita is the gist of all Upanishads. Famous acharyas like Sankara commented on these scriptures. Thus we see all the beliefs and customs have its origin in the Rig Veda. Even the Rtus/ seasons are six in both the Rig Veda and Sangam Tamil literature. Elsewhere the seasons are four. Walking Seven Steps with a guest is in the Rig Veda and Sangam Tamil literature. Rivers are feminine, Earth is Mother and Heaven is Father and hundreds of such things are common.

–subham–

tags- Gita and Veda, Rig Veda in Gita

குழந்தைகளுக்கு கதை எழுதிய பிரெஞ்சு ஆசிரியர் லா பாந்தேன் (9835)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9835

Date uploaded in London –10 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸம்ஸ்க்ருதத்திலுள்ள பஞ்ச தந்திரக் கதைகளையும் கிரேக்க மொழியிலுள்ள ஈசாப் கதைகளையும் தழுவி பிரெஞ்சு மொழியில் கதை எழுதியவர் லா பாந்தேன்

ஷான் தெ லா பாந்தேன்  (JEAN DE LA FONTAINE)  கதைகள் பல மொழிகளில் வெளிவந்தன.

பிறந்த தேதி – ஜூலை 8, 1621

இறந்த தேதி – ஏப்ரல் 13, 1695

வாழ்ந்த ஆண்டுகள் 73.

லா பாந்தேன் (La Fontaine)  , மத்திய பிரான்ஸிலுள்ள ஷாதோ தேரியில் பிறந்தார்.அவருடைய தந்தை ஒரு அரசாங்க அதிகாரி. தனது மகனை கத்தோலிக்க ஏசுமத கல்லூரியில் படிக்க வைத்தார் . லா பாந்தேன்  , நன்கு படித்து வழக்கறிஞர் ஆனார். தந்தை போல அரசு பணியில் சேர்ந்து பல்வேறு துறைகளில் வேலை செய்தார் . போதுமான பணம் கிடைக்கவில்லை.

26 வயதில் ஒரு பணக்கார பெண்மணியை (heiress) மணந்தார் . அது நீடிக்கவில்லை. 1658ல் அவரது மனைவி பிரிந்து சென்றார். பின்னர் எழுத்துத் துறையில் இறங்கினார். ஆயினும் புஸ்தகம் அச்சிடக் கையில் காசு இல்லாததால் வள்ளல்களின் (Patrons) ஆதரவை நம்பி வாழ்க்கை நடத்தினார் .

அவருக்கு 43 வயதான போது குட்டிக் கதைகள் என்ற கதைத் தொகுப்பை வெளியிட்டார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இத்தாலிய கதாசிரியரான ஜியோவன்னி பொக்காஸியோ (Boccaccio) போன்றோரின்  கதைகளை கருவாக வைத்து வேடிக்கைக் கதைகள் எழுதினார். காதல் கதைகளை கிண்டலும் நக்கலும் நிறைக்கும்படி எழுதினார்.

அது அவரது வாழ்நாளிலேயே நான்கு பதிப்புகளைக் கண்டது. ஆயினும் கடைசி தொகுதியை பிரெஞ்சு அதிகாரிகள் தடை செய்தனர். அதிக ஆபாசம் இருப்பதாகக் குற்றம்சாட்டி தடை செய்தனர். அவரும் பிற்கால வாழ்வில் தான் இப்படி எழுதியது தவறே என்று வெட்கப்பட்டார்; வருத்தமுற்றார்.

குழந்தைகளுக்காக, மிருகங்களை (Animal Fables) கதாபாத்திரங்களாக வைத்து, நீதிக்கதைகளை எழுதினார். அப்போது அவருக்கு வயது 47. கிரேக்க நாட்டு ஈசாப் (Aesop) போலவே பிராணிகள் பேசின. இறுதியில் ஒரு நீதியும் இருந்தது. அதில் நகைச் சுவையையும் கலந்தார். வாழ்ககையை நல்லபடி நடத்துவது எப்படி என்று அறிவுரை வழங்கிய போதிலும் லா பாந்தேன் கதைகள் சுற்றி வளைத்துப் பேசின. இதனால் கதைகளின் நீளமும் அதிகரித்தது .

இதனுடைய இரண்டாவது தொகுப்பு வருகையில் ஸம்ஸ்க்ருத பஞ்ச தந்திரக் கதைகள் முதலிய கீழை தேசத்தியக் கதைகளைத் தழுவி எழுதினார். இது முன்னைய படைப்புகளைவிட மேம்பட்டு இருந்தன. பிராணிகள் இடையே நடைபெறும் உரையாடல்களும் சிறப்பாக அமைந்தன. பிரெஞ்சு இலக்கியத்துக்கு அவர் ஆற்றிய தொண்டினைக் கருதி அவர் பிரெஞ்சு மொழி அகாடமிக்கு தேர்தெடுக்கப்பட்டார்.

அகாடமி உறுப்பினர் பதவி மிகவும் கௌரவம் மிக்க பதவி.

இலக்கிய படைப்புகள்

1664 – SHORT TALES

1668- FABLES, FIRST VOLUME

1679- 1694 FABLES, SECOND VOLUME

–SUBHAM–

tags – குழந்தை கதை,   பிரெஞ்சு ஆசிரியர்,  லா பாந்தேன், La Fontaine

நடிகையின் காலில் சுட்ட பின்னர் கூறப்பட்டது : இது இந்தியா இல்லை! (9834)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9834

Date uploaded in London – 10 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ச.நாகராஜன்

1   

அவள் ஒரு நடிகை. தனது சொந்த நாட்டில் நடித்து அந்த மக்களின் பணத்தாலேயே வாழ்ந்து கொண்டு பிரபலமான நடிகை அவள். கஷ்டமான ஒரு சூழ்நிலையில் சொந்த நாடு இருக்கும் போது நாட்டின் எதிரிகளுக்கு ஆதரவாக தன் சொந்த தேசத்திடமே தேசத்திற்கு விரோதமான சில கேள்விகளைக் கேட்டாள் அவள்.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் அவள் காலைக் குறி பார்த்துச் சுட்டனர்; சுட்டு விட்டுச் சொன்னார்கள் – “இது ஒன்றும் இந்தியா இல்லை!”

இந்தியாவில் தேச துரோகம் செய்து கொண்டே பிரபலமாகவும் இருக்கலாம்; தேசத்திற்கே துரோகம் விளைவிக்கும் கேள்விகளும் கேட்கலாம்! எப்படி இருந்தாலும் கவலை இல்லை.

ஆனால் இஸ்ரேல் அப்படி இல்லை; தகுந்த தண்டனையை அந்த நடிகைக்குக் கொடுத்தது – வாழ்நாள் எல்லாம் ஞாபகம் இருக்கும் தண்டனை!

இஸ்ரேலே, உனக்கு ஒரு சல்யூட்!

2  

ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகங்கள் – மீடியாக்கள்! ஆனால் அந்த அருமையான தூணை கேலிக் கூத்தாக்கும் சேனல்கள் உலகெங்கும் (இந்தியாவில் எண்ண முடியாத அளவில்!) உள்ளன.

அல் ஜஜீரா ( Al Jazeera) என்று ஒரு சேனல்! இந்த அல் ஜஜீரா இஸ்ரேலைப் பற்றித் தொடர்ந்து அவதூறான செய்திகளையும் பொய்ச் செய்திகளையும் பரப்பிக் கொண்டே இருந்தது. இஸ்ரேல் ஒரே ஒரு மணி நேரத்தில் அந்த சேனலின் தலைமையகத்தைப் பொடி பொடியாக்கியது. அது மட்டுமல்ல, இஸ்ரேல், இந்தியா அல்ல என்ற ஒரு செய்தியையும் தந்தது. இந்தியாவில் எவன் வேண்டுமானாலும் எதில் வேண்டுமானாலும் தேசத் துரோகக் கருத்தைச் சொல்லலாம். பிரிவினை வாதத்தைத் தூண்டலாம், சொல்லலாம்.

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்லலாம்; ஜெய்ஹிந்த் என்பதை கவர்னர் உரையிலிருந்து நீக்கலாம்; அதை சபாஷ் போட்டு ஒரு எம்.எல்.ஏ.சபையில் பேசலாம். என்ன வேண்டுமானாலும் இந்தியாவில் நடக்கும்.

இந்திய அரசு இஸ்ரேலின் வழியில் நடக்க வேண்டும்.

நடந்தால் பல நடிக, நடிகையர், டைரக்டர்கள் நொண்டிக் கொண்டு தான் நடக்க வேண்டி வரும் – வாழ் நாள் முழுவதும்!!

3

யாஸர் அராஃபத், தீவிரவாதி இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவித்தவுடன் அதற்கு ஆதரவு தெரிவித்தது யார் தெரியுமா?

சவூதி அரேபியாவா – இல்லை!

பாகிஸ்தானா – இல்லை!

ஆஃப்கானிஸ்தானா – இல்லை!

இராக்கா – இல்லை!

துருக்கியா – இல்லை!

நன்கு யோசித்துப் பாருங்கள்? யார் உடனே அதை அங்கீகரித்து ஆதரவு தெரிவித்தது.

நாம் தான் இருக்கிறோமே, செகுலர் கண்ட்ரி என்று!

இந்தியா தான் அங்கீகரித்தது!

இந்திரா காந்தி வழக்கம் போல முஸ்லீம்களை தாஜா செய்ய பாலஸ்தீனை அங்கீகரித்தார். ராஜீவ் காந்தியோ அராஃபத்துக்கு ப்ன்னாட்டு புரிதலுக்காக ஜவஹர்லால் நேரு (Jawaharlal Nehru Award for International Understanding) பரிசை அளித்தார்.

அது மட்டுமல்ல, அவர் உலகம் முழுவதும் சுற்ற ஒரு போயிங்கை வேறு பரிசாக அளித்தார்.

அதே அராபத் நன்றி கெட்டு, காஷ்மீரை பாகிஸ்தானின் பகுதியே தான் என்று ஓ ஐ சியில் – இஸ்லாமிய நாடுகளுக்கான நிறுவனத்தில் (Organisation of Islamic Countries) கூறினார். எப்படிப்பட்ட நன்றி உணர்வு பாருங்கள்!

அது மட்டுமல்ல, அவர் சொன்னார் :” எப்போது பாகிஸ்தான் வேண்டுகிறதோ அப்போது எனது வீரர்கள் காஷ்மீரின் சுதந்திரத்திற்காகப் போரிடுவார்கள்”.

இந்த அராஃபத் 103 நாடுகளில் தீவிரவாதி என்று அறிவிக்கப்பட்ட ஒரு ஆள்!!

6 விமானங்களை கடத்தியவர். 2000 அப்பாவிகளைக் கொன்று குவித்தவர். அப்படிப்பட்ட ஆசாமிக்குத் தான் நமது இண்டர்நேஷனல் அவார்ட்!

எப்படிப்பட்ட நாடு இந்தியா பாருங்கள்!! ராஜீவ் காந்தி, ‘நேரு புரஸ்காரை’ (புரஸ்கார் – பரிசு) தந்தார். அதாவது அதற்கு உரித்தான ஒரு கோடி ரூபாயை அளித்தார். 200 கிராம் தங்கத்தினால் ஆன ஒரு ஷீல்டு வேறு அவருக்குக் கொடுக்கப்பட்டது!

1988இல் அளிக்கப்பட்ட அதன் இன்றைய மதிப்பை சும்மா ஒரு கணக்குப் போட்டுப் பாருங்கள் – எவ்வளவு? விழி பிதுங்குகிறதா!.

4

இதே அராஃபத் காஷ்மீருக்காக பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக இருப்பவரை இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஆதரிக்க வேண்டும். பாலஸ்தீனத்திலும் இந்தியாவிலும் முஸ்லீம் அல்லாதோரால் முஸ்லீம்கள் கொல்லப்படுகிறார்கள். ஆகவே இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் என்றார் அஃராபத்.

5

இப்படிப்பட்ட சமீப கால சரித்திரத்தைக் கொண்ட காங்கிரஸ்காரர்கள் இன்றைய அரசுக்கு நமது வெளிநாட்டுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லித் தர விழைகிறார்கள்!

அட பரிதாபமே!

நன்றி :புதுராஜன் ஸ்ரீதரன், ஐ பிஎஸ்(Puthurajan Sridharan, IPS)

Source : Thanks to Truth Weekly magazine, Vol 89 Issue 10 Dated 18-6-2021

***

tags-  நடிகை, இந்தியா, ,அல் ஜஜீரா, இஸ்ரேல்

ரிக் வேதத்தில் பகவத் கீதை! (Post.9833)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9833

Date uploaded in London –9 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை இந்து மதத்தின் பிரிவுகளான அறு சமயத்தாருக்கும் பொதுவானது. ஏனெனில் அதிலுள்ள கருத்துக்கள் உபநிஷத்தின் சாரம் . உபநிஷதங்களும் எல்லோருக்கும் பொதுவானது என்பதை சமய ஆச்சார்யார்கள்  உரை எழுதி ஒப்புக்கொண்டுள்ளனர். பகவத் கீதைக்கும் எல்லோரும் உரை எழுதியுள்ளனர்  உபநிஷதங்கள் வேதத்தின் சாரம். அதை வேதத்தின் முடிபு, துணிபு என்ற பொருளில் வேத + அந்தம்= வேதாந்தம்  என்பார்கள் .

வேதம்தான் தர்மத்தின் மூலம் ; வேதமே இந்துமதத்தின் ஆணிவேர் என்றெல்லாம் சொல்லுகிறார்கள்.; அதற்கு ஆதாரம் காட்ட வேண்டாமா.? வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபன் என்றெல்லாம் நம்மாழ்வாரைப் போற்றுகிறார்கள்; இவை அவ்வளவும் உண்மையே என்பதை ரிக் வேதத்தை ஊன்றிப் படிப்போருக்குத் தெள்ளிதின் விளங்கும் . திருவாசகம், தேவாரத்திலுள்ள வரிகள் ரிக் வேதத்தின் எதிரொலியே ; விறகில் தீயினன் , பாலில் படுநெய் போலப் பரவியவன் என்ற தேவார வரிகள் அப்படியே உள்ளது. அக்கினி என்ற பகவான் பெயரை சிவன் என்று தலைப்பிட்டுவிட்டால் அப்படியே பொருந்துகிறது.

விஷ்ணு என்ற பெயர் பல இடங்களில் தெளிவாக வருகிறது. ஆயினும் சங்கத் தமிழ் இலக்கியம், தொல்காப்பியம் முதலியவற்றில் “சிவன்” என்ற சொல் இல்லாதது போலவே ரிக் வேதத்திலும் இல்லை. ஆனால் சிவனைக் குறிக்கும் வேறு அடை  மொழிகள் புற  நானூற்றில் உள்ளது போலவே ரிக் வேதத்திலும் உண்டு ஒரே ஒரு இடத்தில் சிவ என்ற சொல் வருவது உரிச்  சொல் (adjective) அல்ல, பெயர்ச் சொல்லே (proper noun) ; அது சிவ பெருமானையே குறிக்கும் என்று வில்சன் எடுத்துக் காட்டியுள்ளார்.

நான் வேறு ஒரு சுருக்கு வழி  வைத்துள்ளேன். அக்கினி தேவனைப் போற்றும் துதிகளை எல்லாம் சிவன் என்று கருதினால் போதும். நல்ல பொருத்தம் இருக்கிறது சிவனே நெற்றிக் கண்ணில் தீயை உடையவன்;. நடராஜர்  கையிலும் அனல் உண்டு.

சுருக்கமாகச் சொன்னால் வேத கால அக்கினியே சிவனாகவும் முருகனாகவும் வழிபடப்படுகின்றார்கள் .

xxx

இப்போது பகவத் கீதைக்கு மூலமான வேத மந்திரங்களைக் காண்போம்.

RV 1-24-7

மூலமில்லாத சுத்த வானிலே வசிக்கும் சுத்த வலிமையுள்ள அரசனான வருணன், மேலே மூலமுள்ளவையும், கீழே நோக்குபவையுமான கதிர்களிருக்கும் ஒளித் தூணை உச்சத்திலே ஏந்துகிறான் . அந்தக் கிரணங்கள்/ ஒளிக்  கற்றைகள் எங்களுக்குள் இறங்கி மறைவாக நிற்கட்டும் (சீவனுக்கு காரணமான ரசிமிகள் ராணங்களாக  எண்ணில் ஸ்தாபனமாகுக- Jambunathan) RV 1-24-7

Varuna, King, of hallowed might, sustaineth erect the Tree’s stem in the baseless region

Its rays, whose root is high above, stream downward. Deep may they sink within us, and be hidden RV 1-24-7

பகவத் கீதை

ஊர்த்வமுலமத:சாகமச்வத்தம் ப்ராஹு ரவ்யயம்

ச்சந்தாம்ஸி யஸ்ய பர்ணானி யஸ்தம் வேத  ஸ வேத வித் 15-1

பொருள்

மேலே வேருள்ளதும், கீழே கிளையுள்ளதுமான  அசுவத்தமாக முடிவற்றதாய் தோன்றும் ஸம்ஸாரத்தை பேசுகிறார்கள்.எதற்கு இலைகள் வேதங்களோ அந்த மரத்தை எவன் அறிந்தவனோ  அவன் வேதத்தை அறிந்தவன் ஆவான்

இதில் மர உவமையும் அதன் மேல், கீழ்ப் பகுதி விளக்கங்களும் ஒப்பிடத் தக்கவை.

Xxx

RV 1-25-6

THIS, WITH JOY THEY BOTH ACCEPT IN COMMON; NEVER DO THEY FAIL

THE EVER FAITHFUL WORSHIPPER

மித்திரனும், வருணனும் மகிழ்ச்சியுடன் இதை ஏற்கிறார்கள் நம்பிக்கையுடன் தொழும் பக்தர்களை அவர்கள் எப்போதும் கைவிட்டதில்லை. RV 1-25-6

பகவத் கீதை 9-31

க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா சச்வச்  சாந்திம் நிகச்சதி

கௌந்தேய ப்ரதி ஜானீஹி ந மே பக்த :ப்ரண ச்யதி  9-31

விரைவில் தரும சிந்தனையுடையவன் ஆகின்றான்.சாசுவதமான சாந்தியைப் பெறுகிறான் . குந்தீ புத்திரனே  என்னுடைய பக்தன் நாசம் அடையவே மாட்டான் . இந்த உண்மையை உணர்ந்து உலகுக்கு உரைப்பாயாகுக.

xxxx

1-31-3/4

இந்த இரண்டு மந்திரங்களில் அக்நியானது விவஸ்வா னுக்கும் மனுவுக்கும் முதலில் புலப்பட்டதாக ரிஷிகள் பாடுகின்றனர்.

இதே வரிசை பகவத் கீதையின் நாலாவது அத்தியாயம் முதல் ஸ்லோகத்திலும் உளது..அதற்குப்பின்னர் பாண்டவர்களின் முன்னோர்களா ன யயாதி, புரு முதலியோர் பெயர்களும் வருகின்றன .

பகவத் கீதை 4-1

நான் இந்த அழிவற்ற யோகத்தை முதலில் விவஸ்வானுக்கு உபதேசித்தேன். விவசுவான் மநுவுக்கு உபதேசித்தார். மநு இக்ஷ்வாகுவுக்கு உரைத்தார். -பகவத் கீதை 4-1

நண்பன் என்ற சொல் நூற்றுக்கணக்கான ரிக்வேத மந்திரங்களில் வருகிறது. கடவுளரையும் சகா க்களையும் ரிஷிகள் நண்பர்களே என்றுதான் அழைக்கின்றனர். அர்ஜுனன் – கிருஷ்ணன் உறவும் நட்பின் அடிப்படையிலே அமைந்தது என்பது வெளிப்படை. விசுவ ரூப தரிசனம் காட்டிய பின்னரும் கூட கிருஷ்ணன் அர்ஜுனனைக் கட்டாயப்படுத்தாமல் , நான் சொல்லுவதைச் சொல்லிவிட்டேன்; ஏற்பதும் ஏற்காததும் உனது ரிமை என்று சொல்லிவிடுகிறான்.

குரு  வம்சத்தின் மூதாதையர்களான யயாதி, நஹுஷன் பெயர்களும் இதே துதியில் வருவது குறிப்பிடத்தக்கது இது பகவத் கீதை, மஹாபாரத காலத்தை நிர்ணயிக்கவும் உதவும்..

–subham–

tags – Bhagavad Gita, Rig Veda, Gita in Veda,

2000 கவிதைகளை பெட்டிக்குள் வைத்துவிட்டு இறந்த அமெரிக்க பெண்மணி (Post.9832)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9832

Date uploaded in London –9 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எமிலி டிக்கின்ஸன் (EMILY DICKINSON) என்ற அமெரிக்கப் பெண் கவிஞரின் வாழ்வு மிகவும் மர்மம் மிக்கது. அவர் உயிருடன் இருந்த போது ஏழு கவிதைகள் மட்டுமே வெளியாகின. அவர் இறந்துபோன பின்னர் அவருடைய பெட்டி ஒன்றை சகோதரி திறந்து பார்த்து பிரமித்துப் போனாள் . அதில் 2000 கவிதைகள் இருந்தன.அவர் இறந்து 60 ஆண்டுகளுக்குப் பின்னர் அவை முழுதும் அச்சாகின.இன்று அவர் புகழ் அமெரிக்கா முழுதும் பரவி இருக்கிறது. ஆங்கிலக் கவிதை ரசிக்கப்படும் எல்லா இடங்களிலும் எமிலியின் கீர்த்தி பரவிவிட்டது .

எமிலி திருமணம் செய்துகொள்ளவே இல்லை. எப்போதும் வெள்ளை உடையையே அணிந்தார். பல ஆண்டுகளுக்கு வீட்டுக்குள்ளேயே முடங்கி எவரையும் சந்திக்க மறுத்தார். ஆயினும் கடிதங்களை எழுதிக் குவித்தார். அவற்றின் மூலம் எல்லோரையும் தொடர்பு கொண்டார். மரணத்தைத் தனது நண்பன் என்றும் , அதைச் சந்திக்கத் தயார் என்றும் எழுதினார். பிற்காலத்தில் இவர் புகழ் பரவியபோது இவரது வாழ்வைத் சித்தரித்தோர் அவரை  அமைதியான எரிமலை (Silent Volcano) என்றும். பிரஷர் குக்கர் (Pressure Cooker)  என்றும் வருணித்துள்ளனர்

பிறந்த தேதி – டிசம்பர் 10, 1830

இறந்த தேதி – மே 15, 1886

வாழ்ந்த ஆண்டுகள் – 55

எமிலியின் வாழ்க்கை விந்தையானது; புதிரானது. ஒரு சன்யாசினிபோல ஏன் வாழ்ந்தார் என்பது எவருக்கும் விளங்கவில்லை ; இதுவரை புரிபடவும் இல்லை. எல்லா குடும்பங்களிலும் நடை பெறும் பிரச்சனைகள்தான் இவரது சகோதரி, சகோதரர் வாழ்விலும் இருந்தன. அம்மா மிகவும் கண்டிப்பானவர். அப்பா, வேலை  நிமித்தம் வெளியூர் சென்றாலும் குழந்தைகளின் படிப்பில் நல்ல கவனம் செலுத்தினார். நல்ல வசதியான குடும்பம்தான் .

 அமெரிக்காவின் மாசசூசட்ஸ் பகுதியில் ஆமர்ஸ்ட்(Amherst)  என்ற கிராமத்தில் அவர் பிறந்தார். அவருடைய தந்தை வழக்கறிஞர்.. பள்ளிக் கல்வியை முடித்த எமிலி, ஒரே ஒரு ஆண்டு மட்டும் வீட்டை விட்டு வெளியே வாசித்தார். அது ஒரு பெண்கள் கல்லூரி ஹா ஸ்டல். வீட்டுக்குத் திரும்பியவுடன் அம்மாவுக்கு அடிக்கடி சுகவீனம் ஏற்பட்டதால் தங்கையுடன் சேர்ந்து குடும்பப் பொறுப்புகளை வகித்தார்.

பகல் முழுதும் ரொட்டி சுடுதல், தையல் வேலை, தோட்ட வேலை, நாயை கூட்டிக்கொண்டு உலா வருதல்; இரவு முழுதும் எல்லோரும் உறங்கச் சென்ற பின்னர் படித்தல், கவிதை எழுதல் என்று தன வாழ்க்கையை வகுத்துக்கொண்டார். அன்பு, வாழ்க்கை, வலி, வேதனை, மரணம், இயற்கை என்று பல விஷயங்களை கவிதையில் வடித்தார்.

கவிதையைக் காதலிக்கத் தொடங்கியதிலிருந்து மனிதர்களைச் சந்திக்க மறுத்தார். 40 வயது முதல் வீட்டை விட்டு வெளியேறியதே இல்லை. தோட்டத்தின் வேலிதான் அவருக்கு எல்லை. அதைத் தாண்டவுமில்லை. புது முகங்களை சந்தித்ததும் இல்லை. ஏன் இந்த மாறுதல்? இதுவரை எவருக்கும் புரிபடவில்லை. அவரும் எழுதி வைக்கவில்லை. அவர் எழுதிய ஏராளமான கடிதங்களையும் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 2000 கவிதைகளையும் வைத்து ஊகிக்கத்தான் முடிகிறது. அப்போதும் புதிர் விடுபடவில்லை .

அவர் வாழ்ந்தகாலத்தில் ஒரு சில கவிதைகளே வெளியிடப்பட்டன. அவைகளையும் சிலரே புரிந்து கொண்டனர். அவருடைய காலத்துக்குப் பொருந்தாத விஷ யங்கள்; பொருத்தமில்லாத சொற்கள்  ; ; புதிய எண்ணங்கள்; ஆழ்ந்த பொருள் படைத்தவை. இவரைத் தவிர மற்ற கவிஞர்கள் வார்த்தைகளைக் கொண்டு இந்திரஜாலம் செய்த காலம் அது. சொல் வேட்டுவர்களுக்கு சுவை தரும் கவிதைகளை மற்றவர்கள் எழுதினர்.

அவர் 55 வயதில் இறந்த பின்னர், அவனுடைய தங்கை ஒரு பெட்டியைத் திறந்துபார்த்தபோது சுமார் 2000 கவிதைகள் இருந்தன. 1955ம் ஆண்டு வாக்கில்  அவை முழுதும் அச்சுக்கு வந்தன.

இவ்வளவு கவிதைகளையும் ஆயிரத்துக்கு மேற்பட்ட கடிதங்களையும் எழுதிவிட்டு சந்நியாசி போல வாழ்ந்ததால் இவரைப் பற்றி பல திரைப்படங்களும், புஸ்தகங்களும், டெலிவிஷன் தொடர்களும், வானொலி நிகழ்ச்சிகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆமெர்ஸ்ட்(Amherst)  என்னும் அமெரிக்க கிராமத்தில் உள்ள அவருடைய இல்லத்தை அமெரிக்க அரசு தேசீய வரலாற்றுச் சின்னமாகஅறிவித்துள்ளது.

எமிலி இறந்த பின்னர் வெளியான அவரது கவிதை நூல்கள் –

1890 – POEMS BY EMILY DICKINSON

1891 – POEMS SECOND SERIES

1896  – POEMS THIRD SERIES

1914 – THE SINGLE HOUND

1955 – THE COMPLETE POEMS OF EMILY DICKINSON

IN THREE VOLUMES

1958 – THE LETTERS  OF EMILY DICKINSON

IN THREE VOLUMES

1961 – FINAL HARVEST

–சுபம்-

tags- 2000 கவிதை, பெட்டி, , அமெரிக்க பெண்மணி, எமிலி டிக்கின்ஸன் ,EMILY DICKINSON,