PICTURES OF INDIAN FORESTS 100 YEARS AGO – PART 2 (Post No.10,535)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,535

Date uploaded in London – –    6 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

I am a lover of Nature. I had been to forests in Tamil Nadu and Karnataka as a Botany student. I browse through any book that has bird or animal or trees. I went through three volumes on Indian Forests. Though there are hundreds of images in the book , most of them are not of good quality or reproduceable. So, I am posting here some good pictures, all are in black and white:

Book Title – THE FORESTS OF INDIA , 3 VOLUMES

BY E.P.STEBBLING

PUBLISHER – JOHN LANE THE BODLEY HEAD LIMITED , LONDON.

YEAR – MCMXXII (YEAR 1922)

part 2

 —subham–

tags– forest pictures-2

LET NO ONE HATE ME -TAMIL VALLALAR & ATHARVANA VEDA (Post No.10,534)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,534

Date uploaded in London – –    6 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HYMN TO EARTH BHUMI SUKTAM OF ATHARVANA VEDA (AV) CONTINUED

MANTRA 18 OUT OF 63

A beautiful prayer is in this mantra.

“Let no one hate me. Let me shine like gold”.

And note the adjectives “big and great speed of earth”.

Is it not amazing to see the attributes BIG EARTH, GREAT SPEED?

3000 years ago (date of AV 1000 BCE or before) there was no mobile phone or internet. Not much transport either between two places. And yet the poet describes “Earth! You are Vast and Mighty”.

“Your speed is also mighty”. Now only we know it rotates at the speed of 1000 miles per hour

“Consider the movement of the earth’s surface with respect to the planet’s center. The earth rotates once every 23 hours, 56 minutes and 4.09053 seconds, called the sidereal period, and its circumference is roughly 40,075 kilometers. Thus, the surface of the earth at the equator moves at a speed of 460 meters per second–or roughly 1,000 miles per hour”—Scientific American

And

“As schoolchildren, we learn that the earth is moving about our sun in a very nearly circular orbit. It covers this route at a speed of nearly 30 kilometers per second, or 67,000 miles per hour. In addition, our solar system–Earth and all–whirls around the center of our galaxy at some 220 kilometers per second, or 490,000 miles per hour. As we consider increasingly large size scales, the speeds involved become absolutely huge”- Scientific American

But this information was not available to anyone a few hundred years ago. Hindu saints knew it through their intuition or observation from space!

And let us continue with the same mantra……

The “Moving and Shaking of the Earth”- The Big Blue Marble!

Though Earthquakes are referred to in later Hindu scriptures and 2000 year old Sangam Tamil literature, AV poet also did not miss it.

And look at the beautiful prayer…..

O Mother Earth! MAKE US SHINE FORTH WITH THE BRIGHTNESS OF GOLD.

VEDIC SOCIETY WAS VERY RICH. Very rarely we see the word poverty. The reference to gold and golden jewellery are numerous. It was an agricultural society. Tamils wished everyone to live as many years as the number of stars or number of sand particles on the shore or as many as drops of rain. But one AV hymn says “as many as the grains”. It was a pukka agricultural community.

CHESS & MATHS

Vedic Hindus were great mathematicians. The whole world agrees that Chatur Anga, now known as Chess, is invented by the Hindus. One saint went to a king and taught this beautiful board game chess. The king was amazed and was ready to offer anything he asked. The Hindu saint smiled at him and said, “Not much, put one grain in square 1 of the chess board and then put 2 grains in square and go on doubling like this until you cover all the 64 squares on the chess board. The king thought that he could do it easily.

On the entire chessboard there would be 264 − 1 = 18,446,744,073,709,551,615 grains of wheat, weighing about 1,199,000,000,000 metric tons. This is about 1,645 times the global production of wheat (729,000,000 metric tons in 2014 and 780.8 million tonnes in 2019).”

No one would have thought it. Hindus were great geniuses. There are many secrets with numbers in the Vedas. Westerners who translated Vedas 150 years ago knew nothing about other fields. So, they ignored the big numbers as fancy numbers with no special meaning.

Now we know they were idiots and not scholars.

XXX

Look at the last request of the poet in this mantra…………..

LET NO ONE HATE ME.

Even God would hesitate to say YES to his request.

Every one of us falls in love with someone without any rhyme or reason. In the same way our boss in the office hates one person for no reason and loves or likes someone else for no reason. An actor known as MGR in Tamil film world was liked by millions of people. All women were after him. But he died without an issue! He even attracted an article in the Readers Digest magazine. Million uneducated, illiterate and educated used to wait all through the night to see him. He never came to the meeting right on time. Everywhere he was stopped by surging crowd. I believe it is due to his previous births as king or a popular emperor. God or a real Guru only can cancel any bad Karma from our previous births.

We are also subject to anger and jealousy. We say something in anger and the reactions follow us as like our own shadow. Hatred develops. One of the great Tamil saints is Ramalinga Swamikal also known as Vallalar of Vadalur. He prays to God Let me not hate anyone. Let others also not hate me. I don’t want to call any one You silly fellow! Dog or ghost (Tamil words rhyme with Chi/Nay/Pey)

xxxx

Sanskrit words used in this mantra 18 are Mahat , Mahati, Mahaan, Hiranyam/gold, Mahaan Vega /great speed

And the poet concludes saying “such a beautiful earth is protected by UNERRING Inrda/God”.

Everything in the universe go by mathematical calculations. If there is a mistake that is one millionth of a fraction of a second, universes would collapse. Knowing this, poet says UNERRING god (Indra stands for God) protect the earth. It is very true. Space scientists knew this very well. A very small error will send the satellite billions of miles away from the target.

Here is the poem from Vallalar:-

  ஈயென்று நானொருவரிட நின்று கேளாத
        இயல்பு மென்னிட மொருவரீ
        திடுவென்ற போதவர்க் கிலையென்று சொல்லாம
        லிடுகின்ற திறமும் இறையாம்
    நீயென்று மெனைவிடா நிலையும் நானென்று முன்
        னினை விடா நெறியு மயலார்
        நிதியொன்று நயவாத மனமு மெய்ந்நிலை நின்று
        நெகிழாத திடமு முலகில்


    சீயென்று பேயென்று நாயென்று பிறர்தமைத்
        தீங்கு சொல்லாத தெளிவும்


        திரமொன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
        திருவடிக் காளாக்கு வாய்
    தாயொன்று சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
        தலமோங்கு கந்த வேளே
        தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
        சண்முகத் தெய்வ மணியே.

To be continued……………………

tags- tags- chess, hate, hatred, shine, gold, bhumi sukta, grain

தமிழர்கள் சொன்ன அதிசய முனிவர்கள் –பகுதி 2 (Post. 10,533)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,533

Date uploaded in London – –    6 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நேற்று “தமிழர்கள் சொன்ன அதிசய முனிவர்கள் பற்றி புதிய தகவல் ? TIME TRAVEL காலப் பயணம் செய்யலாம்! ” என்ற தலைப்பில்  வெளியேயான கட்டுரையின் இரண்டாவது பகுதி இது.

அதர்வண வேத (அ .வே ) 19ஆவது காண்ட 53, 54 ஆவது மந்திரங்கள் அளிக்கும் மேலும் வியப்பான அறிவியல் செய்திகள் இதோ:-

ஏழு என்ற எண்ணை பல்வேறு பொருள்களில் புலவர் பயன்படுத்துகிறார்.; 700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சாயனர் திணறுவது போலவே வெள்ளைக்கார வியாக்கி யானக்காரர்களும் மூச்சு முட்டித்  திணறுகிறார்கள்.

நான் கண்ட விஞ்ஞானக் கருத்துக்களை மட்டும் சொல்கிறேன்.

வான சாஸ்திரம் (ASTRONOMY AND PHYSICS) படித்தவர்களுக்கும் பெளதீக சாஸ்திரம் படித்தவர்களுக்கும் ஒரு வியப்பான செய்தி தெரியும். உலகில் எல்லாப் பொருட்களும் செயல்பட்டுக்கொண்டே இருக்கும். நகர்ந்து கொண்டே இருக்கும் இதை பாரதியார், மாணிக்க வாசகர் முதலியோர் அழகாக  பாடியுள்ளனர் . நம் பூமி தன்னைச் சுற்றுவதோடு, சூரியனைச் சுற்றுவதோடு சூரியனுடன் ஓடிக்கொண்டே இருக்கிறது. சூரியனோவெனில் எல்லாக் கிரகங்களையும் இழுத்துக்கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறது . அதாவது பிரபஞ்சம பலூன் போல ஊ

திக் கொண்டே இருக்கிறது. இதை உணர்ந்த இந்துக்கள் பூமிக்கும் பிரபஞ்சசத்துக்கும் அண்டம் = EGG SHAPED,GLOBULAR  பிரம்மாண்டம் BIG EGG என்றெல்லாம் பெயர் சூட்டி வெள்ளைக்காரர்களை முந்திச் சென்றனர். உலகிலுள்ள எல்லாப் பொருட்களுக்கும் ஈர்ப்பு விசை GRAVITY உண்டு; வானிலுள்ள பிரமாண்டப் பொருட்களுக்கு அதைவிட அதிகம் ஈர்ப்பு விசை உண்டு என்று அவைகளுக்கு கிரஹம் GRAHA  என்று அறிவியல் பெயர் சூட்டினார்கள். கிரக என்றால் பிடித்தல், பற்றுதல், ஈர்த்தல் ; ஆங்கிலத்தில் உள்ள கிராவிடி, கிரிப், கிராப் GRAVITY, GRIP, GRAB= GRAHA எல்லாம் ஸம்ஸ்க்ருதச் சொற்களே.

முதல் மந்திரத்தில் முனிவர்கள் சூரியனுடன் பயணம் செய்வதை, முதல் கட்டுரையில் சொன்னேன். சூரியனை வருணிக்கும் புலவன், ” எல்லா புவனங்களும் அவனுடைய சக்கரங்கள் என்கிறான். ஆக அவர்களுக்கு வட்ட வடிவ (WHEEL LIKE) கிரகங்களும் தெரியும். அது பால்வெளி MILKY WAY மண்டலத்தில் ஒடிக் கொண்டு இருப்பதும் தெரியும் . அவைகள் தன்னைத் தானே சுற்றுவதும் தெரியும். இதனால் சுற்றும் சக்கரத்தை உவமையாயாக்கினார்கள் !!!!

அவை எல்லாம் எங்கே செல்கின்றன? இதற்கும் மந்திரம் பதில் சொல்கிறது ” இந்த புவனங்களை எல்லாம் ஒன்று சேர்த்து முதற் தேவனுக்குச் செல்கிறான் ;  இந்த வரிகள் சூரியன், பிரம்ம லோகத்தையோ, சத்திய லோகத்ததையோ நோக்கி ஒடிக்கொண்டு இருக்கிறான் என்று பொருள்படும்  .

உலகில் இந்துக்கள் சொல்லும் கால அளவு மட்டுமே விஞ்ஞான கருத்துக்களுடன் பொருந்தி நிற்கினறன ; நாம் மட்டுமே பிரம்மாவுக்கு கோடிக்கணக்காண ஆண்டுகளை ஆயுளாகக் கற்பித்துள்ளோம். பிரம்மாவும் கல்பம் தோறும் மாறுவார்  என்கிறோம். இவை எல்லாம் ஊன்றி ஆராயப்படவேண்டிய விஷயங்கள்.

மூன்றாவது மந்திரத்தில் ஒரு அற்புதமான வரி வருகிறது பூரண கும்பம் என்பதை வெள்ளைக்காரர்கள் பீக்கர் என்று மொழி பெயர்த்துள்ளனர். இது பொங்கி வழிவதாக மந்திரம் பேசுகிறது. இதைக் காலம் பொங்கி வழிகிறது என்று கொண்டால் , பல விதமாகக் கருத்து சொல்லலாம். சூரியன் என்று கொண்டால் , மிகவும் பொருத்தமாக இருக்கும். சூரியனில் ஒவ்வொரு நொடியிலும் பல கோடி ஹைட்ரஜன் குண்டுகள் வெடித்தவண்ணம் இருக்கின்றன. ஹைட்ராஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் என்னும் மூலகமமாக மாறிக்கொண்டே இருக்கின்றன. அப்போது வீசும் சுவாலைகளின் உயரமே பல மில்லியன் மைல்கள் . இதை பொங்கி வழியும் பூரண கும்பம் என்று புலவர் வருணிக்கிறார் போலும்.

1400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் பிரபஞ்ச வெடிப்பு BIG BANG ஏற்பட்டது. இது நிறைய இடங்களில் தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் வருகிறது . என்ன முடிவு என்பதும் அறிவியல் அறிஞர்கள் ஊகத்தில் மட்டுமே உளது. இந்துக்கள் இதை ஸ்வயம்பூ (தானாகவே உருவான) தெய்வீக சக்தி என்கின்றனர். இது ஒன்பதாவது பத்தாவது மந்திரத்தில் வருகிறது ; வேத கால இந்துக்களுக்கு எவ்வளவு விஞ்ஞான சிந்தனை, அணுகுமுறை இருந்தது என்பதை அறியும் போது வியப்பாக இருக்கிறது.

காஸ்மாலஜி COSMOLOGY எனப்படும் அண்டப் பிறப்பியல் தொடர்பான ரி.வே.(RV, அ .வே. (AV) துதிகள்  அனைத்தும் கேள்வி வடிவத்தில் இருக்கும். இது ஒரு பாணி, ஸ்டைல் STYLE, GENRE என்பதை அறியாத வெள்ளைக்காரர் கள், ‘பார்த்தீர்களா, ரிஷிகளுக்கு அந்தக் காலத்திலேயே சந்தேகம் எவ்வளவு இருந்தது!  என்று எழுதி உளறித் தள்ளிவிட்டார்கள் . சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் கவிதை பாடிய தாயுமானவ சுவாமிகள் கூட

அங்கிங் கெனாதபடி யெங்கும் பிரகாசமா 

      யானந்த பூர்த்தியாகி

   யருளொடு நிறைந்ததெது? தன்னருள் வெளிக்குளே 

    யகிலாண்ட கோடி  யெல்லாந்

தங்கும்படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்

   தழைத்ததெது? மனவாக்கினிற்

  றட்டாம னின்றதெது சமய கோடிகளெலாந்

   தந்தெய்வ மெந்தெய்வ மென்

றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவு நின்றதெது?

   எங்கணும் பெருவழக்காய்

  யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமா

   யென்றைக்கு முள்ள தெது? மேற்

கங்குல் பகலற நின்ற வெல்லை யுள தெது?வது

   கருத்திற்கிசைந்த ததுவே

கண்டன எல்லாம் மோன உருவெளியது  ஆகவும்

    கருதி அஞ்சலி செய்குவாம்

என்று எது ? , எது ? என்று கேள்வி கேட்டு நம்மை சிந்திக்க வைத்து, இறைவனே அது என்பார்; க (யார்) என்று பல்லவி உடைய ஒரு ரி.வே.(RV) பாடல் உளது. அது கூட மாக்ஸ் முல்லருக்குப் புரியவில்லை! ரிஷிகள் ‘சந்தேகப் பேர்வழிகள்’ என்று விமர்சித்துள்ளார்.

ஆங்கிலத்தில் விரிவான கட்டுரை உளது. இரண்டாவது துதியில் (AV .LIV .BOOK  19) உள்ள அறிவியல் விஷயங்கள் இதோ:-

மாபெரும் பிரபஞ்ச வெடிப்பில் BIG BANG  1400 கோடி ஆண்டு சித்திரத்தில் – வரை படத்தில் – எதற்குப் பின்னர் எது தோன்றியது?  என்று கால அட்டவணை கொடுத்து இருக்கிறார்கள் அறிஞர்கள். அதே போல இந்த துதியானது , டைம் டேபிள் கொடுக்கிறது.

பத்தொன்பதாவது காண்டம், பாடல் 53, 54 ( சூக்தங்கள் 569 , 570 ; தலைப்பு-காலன் )

“Sages inspired with holy knowledge mount him” (SAGES CAN DO TIME TRAVEL)

“Kāla created yonder heaven, and Kāla made these realms of
   earth. (BILLIONS OF EARTHS)


  By Kāla, stirred to motion, both what is and what shall be
   expand.” (EXPANDING UNIVERSE)

“He made, he stirred this universe to motion” (BIG BANG )

“In Kāla erst the text produced what is and what is yet to be.”

“On Time is laid an overflowing beaker” (Boiling Sun?)

நிலம், நீர், நெருப்பு , வளி , அண்ட வெளி, பல உலகங்கள் , பிரம்மம் என்று அடுக்கிக்கொண்டே போகிறார் புலவர் . ஆங்கில மொழி பெயர்ப்பாளர்களும் கூட தெய்வீக சக்தி என்று எழுதியுள்ளனர் இது எல்லாம் 100 ஆண்டுகளுக்கு முந்தைய மொழி பெயர்ப்பு. அப்போது வான சாஸ்திரம், அண்டத்தின் தோற்றம், கருந்துளைகள் பற்றி அதிகம் தெரியாது.வேதங்களுக்குப் பின்னர் வந்த பகவத் கீதை முதலியவற்றில் உள்ள காலம் TIME, கருந்துளைகள் BLACK HOLES ஆகியவற்றையும் பின்னணியாகக் கொண்டு பார்க்கையில் நமக்கு முழு சித்திரம் கிடைக்கிறது!

–SUBAHAM—

சூரியன், வாலகில்யர் , சுடர்கொடு, திரிதரும்,  முனிவர்

வள்ளிமலை ஶ்ரீசச்சிதாநந்த ஸ்வாமிகள்-Part 2 (Post No.10,532)

WRITTEN BY B. KANNAN, DELHI

Post No. 10,532

Date uploaded in London – –    6 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

            Written By  B. Kannan, New Delhi

“ஆத்மா த்வம் கிரிஜா மதி:” என்ற சுலோகத்தை விளக்குகிறார். ” நம் உடலே ஐயனும் அம்மையும் உறையும் திருக்கோயில். நாம் நுகர்வது அனைத்தும் அவர்களுக்குச் செய்யும் வழிபாடுகளே. நம் உறக்கமே சமாதிநிலை வழிபாடு. நடந்து செல்வதெல்லாம் அவர்களை வலம்வருதல் போன்றதே.பேசும் சொற்கள் எல்லாம் அவர்களை ஏத்தும் தோத்திரங்களே. நம் செயல்கள் அனைத்தும் ஆராதனைக்கு ஒப்பாகும். இவையெல் லாம் நம்மைத் தவநிலைக்கு உயர்த்துகிறது என அறிந்துகொள்,”  என்றவர் மேலும் தொடர்ந்துக் கூறலானார்,

” இனி நீ வெளிப்படையாகப் பூஜை செய்தால் மட்டும் போதாது. உன் எண்ணங்களும், செயல்களும் உனக்காக எனக் கருதாமல், அனைத்தும் தெய்வத்தின் பொருட்டே என்ற மனநிலையை அடைந்துவிட்டால் ‘நான்-பிறர்’ என்ற பேதம் பாராட்டாத உயர்ப் பதவியை அடைவாய். ஆமாம்,இதே பொருள் கொண்ட பாடல் ஏதேனும் திருப்புகழில் உள்ளதோ?” என்று ஏதும் தெரியாதது போல் மகான் வினவ, ‘மைசூரு சாமி’, வேகமாகத் தலையை ஆட்டி “இருக்கிறது,சுவாமி! அது,’ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம மானபூ வைத்து….(1212) என்ற பாடல் தான், என்ன ஒற்றுமை!” என வியந்தார்.

    (உன் மீது ஆசை மிகுந்த பக்தியை உடைய நான்,மனம் என்ற தாமரை மலரை வைத்து,இடையில் அன்பு எனும் நாரைக் கொண்டு,நாக்கு என்ற இடத்திலே அழகான ஒரு மாலையைத் தொடுத்து,அந்த மாலையின் மீது ஒப்பற்ற ஞானம்  என்ற நறுமணத்தைத் தடவி, அது மேலும் ஒளியுடன் விளங்க அதைச் சுற்றிக் குற்றமற்ற ஒரு அறிவு எனும் வண்டு மொய்த்துப் பாடவும்,மாத்ருகா மந்திர மாலையான  இப் பூமாலையை அழகியப் பவளம் போல் சிவந்த உன் பாதங்களில் அணிவிக்கும் பாக்கியத்தை எப்போது பெறுவேனோ?) -சுப்ரமண்ய பராக்ரமம் என்ற நூலில் இடம் பெறும் மாத்ருகா மந்திரம் முருகன் ‘அ’ முதல் ‘க்ஷ’ முடிய உள்ள 51 அக்ஷர உருவில் இருப்பதை விளக்குகிறது.

மகான் மிகவும் மனம் மகிழ்ந்து,”அப்பனே! திருப்புகழே மகா மந்திரம்.அதுவே உனக்குப் போதுமானது,வேறு நூல்கள் படிக்க வேண்டாம். கந்தபுராணத்தில் கூறப்பட்டிருக்கும் முருகன்-வள்ளி வசிக்குமிடமான வள்ளிமலைக்குச் சென்று உன் தவ வாழ்வை மேற்கொள்” என்று ஆணையிட்டார்.

ஶ்ரீசேஷாத்திரி மகானே இனி உன் குரு என்று சொல்லாமல் சொல்லத்தான் தன்னைப் போய்விடு என்று ரமணர் கூறியதன் பொருள் இப்போது புரிந்தது சச்சிதானந்தருக்கு.

குருநாதரின் சொற்படி நடக்கலானார். வள்ளிமலை, முருகனின் இச்சாசக்தியும். கானசுந்தரியுமான வேடர்குல நம்பிராஜனின் மகளாகப் பிறந்து, தினைப்புனம் காத்து,தவமியற்றி முருகனை மணந்த வள்ளியின் பீடம். காட்பாடி-அரக்கோணம் வழித்தடத்தில் திருவலம் ரயில்நிலையத்துக்கு வடக்கே 15கி.மீ. தொலைவில் உள்ள வள்ளிமலைக்கு 1916-ம் ஆண்டு கோயில் கும்பாபிஷேகம் நடந்த சமயம் வந்தவர்அங்கு பர்வதராஜன்-கன்னிக் குன்றுகளுக்கிடையே ஆசிரமம் அமைத்துக் கொண்டார். அங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் திருப்புகழின் மேன்மையை விளக்கி,பாடல்களை ராகம்-தாளங்களுடன் கற்றுக் கொடுத்து வந்தார். நாளடைவில் அவரது மகிமையும், புகழும் நாடெங்கும் பரவியது. திருப்புகழ் சுவாமிகள் என்ற புதுப்பெயரும் அவருடன் ஒற்றிக் கொண்டு விட்டது.

சுவாமிகள் தானே கைப்படத் தயாரித்த நான்கு தந்திகளுடைய அரிய இசைக் கருவி ஜதி வாத்தியமாகும். இதை ஒரு பெரிய கோல் மற்றும் சிறிய கோல் ஒன்றால் மீட்டி , மனமுருகத் திருப்புகழ் பஜனை இவர் செய்வது கேட்போர் மனதை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்திவிடும். அப்பொழுதுதான் வள்ளி-கந்தன் இருவரையும் நேரில் சந்திக்கும் பாக்கியத்தை அவர் பெற்றார். வள்ளி மீது அளவுகடந்தப் பக்தி கொண்டவர், அவளைத் திருப்புகழ்ப் பாடல் மூலமே புகழ்ந்துப் பாட வேண்டும் எனவும்,அப்போதுதான் அவள் நாம் வைக்கும் கோரிக் கைகளை முருகனிடம் எடுத்துச் சொல்வாள் என்றும் கூறுவார்.

ஒருசமயம், திருப்புகழ் பாடியபடி வள்ளிமலையில் சென்றபோது அவர்முன்னால் ஓர் சிறுமி திடீரென்றுத் தோன்றி,அவரது பாட்டையே பொங்கிப் பொங்கிச் சிரித்து மகிழ்ச்சியுடன் பாடியவாறு மறைந்து விட்டாள்.அதுவுமில்லாமல் அவர் கையிலிருந்த வாத்தியத்தைக் கண்களுக்குப் புலப்படாமல் எடுத்து மீட்டி,. பாட்டிசைத்து மகிழ்ந்தாளாம். யோகிகள் உணரும் சங்கோதை நாதம் மூலம் (கிண்கிணி,சிலம்பு,மணி,சங்கம்,யாழ்,தாளம்,வேய்ங்குழல்,பேரி,மத்தளம்,முகில்)அச் சிறுமி வள்ளிதான் என்று புலப்பட்டு விட அவர் பரவசமடைந்தார். அதனாலேயே வள்ளியை அன்றிலிருந்து ‘ பொங்கி ‘ என்றே அழைக்கலா னார்.அவள் வாசித்த வாத்தியத்தைப் ‘பொங்கி வாத்தியம்’ எனப் பெயரிட்டார்.ன (பொங்கி=உற்சாகம்/செல்வம் பெருகுவது).

முருகன் அவருக்கு நேரிடையாக வேதியர் உருவிலும்,இஸ்லாமியப் பெரியவரா கவும்,அன்னதானமிடும் சாதாரண அடியாராகவும் காட்சியளித்து அருள் பாலித்த துண்டு. வள்ளி அவரிடம் பல சித்து விளையாடல்களைக் காட்டியுள்ளாள்.

அவரிடம் உபதேசம் பெற்றுச் சென்றவர்கள் வாழ்வில் அதிசயங்கள் பல நடந்தேறியுள்ளன. அவர்களுள் ஒருவரான ஸ்வாமி அன்வானந்தாவின் கனவில்தோன்றிய வள்ளி,தனக்கு ஒரு கோயில் எழுப்ப ஆணையிட்டாள். அதற்குத் தகுந்தாற் போல் யாரோ ஒரு வியாபாரி அவரிடம் சிலை ஒன்றைக் கொடுத்து விட்டுச் செல்ல அதுவே ஓர் அரிய வைஷ்ணவி சிலை என்பது உறுதியாயிற்று.

சென்னை அம்பத்தூர் அருகில் திருமுல்லைவாயில் தலத்தில் அம்மனைப் பிரதிஷ்டை செய்தார்.  12-1-1950-அன்று ஶ்ரீசச்சிதானந்தர் ‘திவின்திர கன்பு வகாப்பு’ என்ற முறையில் அமைந்திருந்தத் திருப்புகழைப் பாடியபடியே அங்கி ருந்த வைஷ்ணவிதேவி சிலைக்குள் தன் சக்தி முழுவதையும் மாற்றினார். 1954ல் ஆலயம் எழுப்பப்பட்டது. பக்தர்களுக்கு அந்த அம்மன் மூலம் திருப்புகழ்ச் சாமியின் அருளும்,ஆசியும் கிடைத்து வருகின்றது.

திருப்புகழைப் பரப்புவதற்கு அவர் கையாண்ட மற்றொரு வழி காலத்தின் கட்டா யமாகக் கருதப்பட்டது. ஆங்கிலேயர்கள் ஆண்ட அந்நாளில்,புதுவருட நாளன்று மேலதிகாரிகளான துரைமார்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறி,பரிசுப் பொருட் களை அளிப்பது வழக்கம்.இதைக் கண்டு ஆறாத் துயரமடைந்த சுவாமிகள், தணிகைத் துரையைப் போற்றி வழிபடாமல் இருக்கிறார்களே என்று அங்க லாய்ந்தார்.அதற்கு மாற்றாக ,நாட்டுப் பற்றுடன், ஆன்மிகத்திலும் ஈடுபாடு கொள்ளச் செய்யப் படி உற்சவ நிகழ்ச்சியை டிசம்பர் 31,1917, ஜனவரி 1, 1918 முதல் நடத்தலானார். படியேறி வேலனைத் தரிசிக்க மொத்தம் 365  படிக் கட் டுகள் உள்ளன. அவை வருடத்தின் ஒவ்வொரு நாளையும் குறிப்பதாக அமைந் துள்ளன. அன்று பல பஜனைக் குழுக்கள் ஒன்றுகூடி மலை மேல் ஆலயத்தில் மாலைத் தீபம் ஏற்றிய வுடன்,அடிவாரத்தில் முதல் படியிலிருந்து ஒவ்வொரு படிக்கும் ஒரு திருப்புகழ்ப் பாடல் பாடி,நிவேதனம் செய்து ஆரத்தி எடுப்பார் கள்.’தணிகை மலை முருகனுக்கு அரோகரா’ என்ற அடியார்களின் பக்தி கோஷம் விண்ணைப் பிளக்கும்!

சுவாமிகளுக்குப் பின்னர்,’திருப்புகழ் மணி’ டாக்டர் கிருஷ்ணஸ்வாமி மற்றும் மௌனகுரு சுவாமிகளால் இப்படித் திருவிழா

பிரபலமானது. ‘அடியார் திருக் கூட்ட இறைப் பணிமன்றம்’ என்ற அமைப்பின் மூலம் இவ் விழா தடையின்றி இன்றளவும் நடைப் பெற்று வருகிறது.365 படிகளையும் ஆராதித்துப் படியேறி னால் புத்தாண்டு முழுவதும் நற்பலன்கள் விளையும் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கை!

to be continued…………………………..

tags- வள்ளிமலை சுவாமிகள்,part 2

ஶ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் – 3 (Post No.10,531)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,531
Date uploaded in London – – 6 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஶ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் – 3
ச.நாகராஜன்

சங்கதி என்று இன்று பிரபலமாகி இருக்கும் சங்கீத அமைப்பை தியாகராஜரே உருவாக்கினார் என்பது ஒரு சுவையான இசைச் செய்தியாகும்.
ஒரே ராகத்தில் பல கிருதிகளை அவர் இயற்றியிருந்தாலும் ஒவ்வொன்றும் தனிச் சுவையுடன் மிளிரும். தோடி ராகத்தில் அவர் இயற்றியுள்ள பல கீர்த்தனைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

THYAGARAJA ARADHANA HELD IN LONDON 


13வது வயதில் நமோ நமோ ராகவய்யா என்ற முதல் கீர்த்தனையை அவர் இயற்றினார். தொடர்ந்து தனது வாழ்நாளில் அவர் மொத்தம் 24000 கிருதிகளை இயற்றியுள்ளார். இந்தக் கிருதிகளில் இராமாயணம் முழுவதையும் காணலாம். ஆதிகவியான வால்மீகி முனிவர் 24000 ஸ்லோகங்களில் இராமாயணத்தை இயற்றியுள்ளார். அவரே தியாகராஜராக அவதரித்ததாக பக்தர்கள் கூறுவதில் வியப்பில்லை.
அவருக்கு ஏராளமான சீடர்கள் சேர்ந்தனர். தஞ்சாவூர் ராமாராவ், வீணை குப்பையர், வாலாஜா பேட்டை வேங்கடரமண பாகவதர், அவரது குமாரர் கிருஷ்ண பாகவதர், உமையாள் புரம் கிருஷ்ண பாகவதர், அதே ஊர்க்காரரான சுந்தர பாகவதர், சித்தூர் ராதாகிருஷ்ணையர் உள்ளிட்ட பலரும் அவரது சீடர்களே.


ராம நீ சமான மெவரு – ராமா! உனக்கு நிகரானவர் யார்? கரகரப்ரியா ராகத்தில் அமைந்தது இது.


ராமபக்தி சாம்ராஜ்ய – இது சுத்தபங்காள ராகம்.
சாந்தமுலேக சவுக்கியமுலேது – சாமா ராகத்தில் உள்ள இந்த கீர்த்தனை சாந்தம் இல்லை எனில் சௌக்யமில்லை என்கிறது.
பண்டுரீதியில் என்னை சேவகனாக ஏற்றுக் கொள் என்கிறார்.
இந்த கிருதிகளைத் தவிர, பிரகலாத பக்த விஜயம், நவுகா சரித்திரம், சீதாராம விஜயம் ஆகிய மூன்று இசை நாடகங்களையும் அவர் படைத்துள்ளார். அவரது கிருதிகளில் தியாகராஜ என்ற அவரது முத்திரையைக் காணலாம்.


சுமார் 700 கிருதிகளுக்கும் மேற்பட்ட அளவில் இவரது பிரபலமான கிருதிகள் இப்போது கச்சேரிகளில் இசைக்கப்பட்டு வருகின்றன. தியாகோபநிஷத் என்றே சொல்லுமளவு ஏராளமான கட்டுரைகள் இவரது கிருதிகளை விளக்கி எழுதப்பட்டு வருகிறது.

1845ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று அவரது மனைவியார் காலமானார்.
தியாகராஜரின் இறுதிக் காலத்தில் அவர் துரீயாஸ்ரமம் ஸ்வீகாரம் செய்து கொண்டார். 1847ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதிக்குச் சமமான பராபவ வருடம் தை மாதம் பகுள பஞ்சமி நாளன்று திருவையாறு தலத்திலேயே அவர் சித்தியாகி மோக்ஷம் அடைந்தார். அவரது இறுதி நாளன்று அனைவரையும் ராம நாமம் கூறுமாறு பணித்த அவர், மனோஹரி ராகத்தில், ‘பரிதாபமு கனியாடின பலுகுல மரசிதிவோ’ என்னும் கிருதியைப் பாடினார்; அவரது கரம் சின் முத்திரையைக் காட்டிக் கொண்டிருந்தது. அப்போது அவரது சிரத்திலிருந்து ஒரு ஜோதி கிளம்பி ராம விக்ரஹத்தில் சென்று ஐக்கியம் அடைந்தது.


அவரது உடல் காவிரி ஆற்றங்கரையில் அவரது குருவான சொண்டி வெங்கடரமணய்யர் சமாதிக்கருகில் தகனம் செய்யப்பட்டது. பின்னர்
காவேரிக் கரையோரத்தில் அவரது சமாதி கோவிலாக எழுப்பப்பட்டுள்ளது.
உலகெங்கும் உள்ள இசைக் கலைஞர்கள் திருவையாற்றில் தியாகராஜர் ஆராதனை இசை விழாவில் நாட, கவுள, ஆரபி, ஶ்ரீ ராகம், வராளி ஆகிய ஐந்து கனபஞ்சக ராகங்களில் அவர் பாடியுள்ள பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி, அவரை தங்கள் சங்கீத கானத்தால் போற்றி வணங்குகிறார்கள். இந்த ஆராதனையில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கு பெறுகின்றனர். சுமார் 174 வருடங்களாக இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இசையால் பிரபஞ்சத்தைக் கவர்ந்தவர் தியாகராஜர் என்று சொல்வது ஒரு புகழுரையாகக் கருதக் கூடாது; புத கிரகத்தில் உள்ள ஒரு பெருவாய் எனப்படும் Craterக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது பொருத்தம் தானே! இந்திய அரசாங்கம் அவரைப் போற்றும் விதத்தில் தபால்தலையை வெளியிட்டுள்ளது.
எந்தரோ மஹானுபாவலு அந்தரிகி வந்தனமுலு என்று சாதாரணமாகக் கூட இன்று மேடைகளில் கூறப்படும் வார்த்தைகளிலிருந்து பக்கல நிலபடி கொலிசே, ராம நீ சமானமெவரு என்ற உச்ச பக்தி கீர்த்தனைகள் பாடப்படுவது முடிய அங்கு இசைமயமாக தியாகராஜர் இருக்கிறார்; என்றும் இருப்பார்!
இசையால் இறைவனை வழிபட்டு இசை மூலம் முக்தி அடைந்த பெரும் மகானான தியாகராஜரைப் போற்றுவோம்; அவரது கிருதிகளைப் பாடுவோம்; பரப்புவோம்.
நன்றி, வணக்கம்!
*** முற்றும்

TAGS– தியாகராஜ ஸ்வாமிகள் – 3

PICTURES OF INDIAN FORESTS 100 YEARS AGO – PART 1 (Post No.10,530)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,530

Date uploaded in London – –    5 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

I am a lover of Nature. I had been to forests in Tamil Nadu and Karnataka as a Botany student. I browse through any book that has bird or animal or trees. I went through three volumes on Indian Forests. Though there are hundreds of images in the book , most of them are not of good quality or reproduceable. So, I am posting here some good pictures, all are in black and white:

Book Title – THE FORESTS OF INDIA , 3 VOLUMES

BY E.P.STEBBLING

PUBLISHER – JOHN LANE THE BODLEY HEAD LIMITED , LONDON.

YEAR – MCMXXII (YEAR 1922)

(Please note the size of humans and the trees) 

tags – Indian Forests, Forest images.

to be continued………………………….

to be continued…………………..

வள்ளிமலை ஶ்ரீசச்சிதாநந்த ஸ்வாமிகள்-Part 1(Post No.10,529)

WRITTEN BY B. KANNAN, DELHI

Post No. 10,529

Date uploaded in London – –    5 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

            Written By  B. Kannan, New Delhi

ஞானமயம் பகிரும் தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் தில்லியிலிருந்து கண்ணன் அநேக நமஸ்காரம்.

19-20-ம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த ஒரு மகானின் சரிதத்தைத் தான் இன்று பார்க்கப் போகிறோம். வாருங்கள் பயணிக்கலாம்……..

வள்ளிமலை சென்று வணங்குவார் மாநிலத்தில்

வெள்ளிமலை போல மிகவோங்கி-உள்ளியன

எல்லாம் பெறுவர் இனியராய் இன்புறுவர்

பல்லாண்டு வாழ்வர் பரிந்து.

    -திருமுருக கிருபானந்தவாரியார்

முருகு என்ற சொல்லுக்கு இளமை,அழகு,தெய்வத்தன்மை எனும்பதினேழு வித அர்த்தங்களைச் சுட்டுகிறது தமிழகராதி. அப்படிப்பட்ட ஆறுமுகன் நமக்கு உணர்த்துவது என்ன,அவனருள் நம்மை என்ன செய்யும், பார்க்கலாமா………

ஒன்றே பரம்பொருள் எனக் காட்டுவான்,இரு வினைகளைப் போக்குவான், மும்மலங்களை அகற்றுவான்,நான்கு வேதங்களின் கருத்தைத் தருவான், ஐந்து புலன்களை அடக்குவான், ஆறு முகங்களின் மூலம் ஆறு ஆசிகளை வழங்குவான், ஏழு நாட்களும் நல்லவையே என்று உணர்த்துவான், எட்டு திசைகளும் உகந்ததே எனக் குறிப்பிட்டு, ஒன்பது கிரகங்கள் விளைவிக்கும் தீமைகளை விரட்டி அடித்து, வாழ்வில் பத்துக்குப் பத்து தந்திடுவான் நம் வேலவன்!  (நன்றி: கௌமாரம்)

தைப் பூசம், வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை ஆகிய விழாக்களில் அப்படிப்பட்டஆறுமுகனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல், நடப்பு ஆண்டின் இறுதி தினம் மற்றும் வரும் புத்தாண்டின் முதல் நாளும் அழகன் முருகனின் “புகழ்”பாடி ஆராதிக்கும் பொன்னாளாகத் தணிகையிலும், சுவாமிமலையிலும் படித் திருவிழா வாகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கடந்து போகும் ஆண்டில் விளைந்த நன்மைகள் போல் வரவிருக்கும் வருடத்திலும் நல்லவையே நடந்து, வாழ்வை வளமாக்க,மனமுறுகி முருகனை வேண்டி “மைசூரு சுவாமிகள்” அனுகிரகத்தால் நடத்தப்படும் விழாவே இது.

யார் இந்த “மைசூரு சுவாமிகள்”?

அதன் பின்னணி விவரங்களைச் சுவாமிகளுடன் கூடவே இருந்து,நெருங்கிப் பழகிய ஆனையாம்பட்டி சாது ஶ்ரீகுஹாநந்த பாரதி சுவாமிகள், திரு கல்யாண சுந்தரம் (1957),சுவாமி அன்வாநந்தா (1975),பி.எஸ்.கிருஷ்ணய்யர் ஆகியோரின் நேரடி அனுபவக் கட்டுரைகளின் வாயிலாகவும், வடதிருமுல்லை வாயில் ஶ்ரீவைஷ்ணவி தேவி ஆலய வெளியீடு ‘வள்ளிமலை வள்ளல்’ என்ற நூல் மூலமும் அறிய முடிகிறது.

கொங்கு நாட்டில் பவானி நகருக்கு அருகில் பூநாச்சி கிராமத்தில் வசித்த சிதம்பர ஜோசியர்-லஷ்மியம்மாள் தம்பதிக்கு வெகுநாட்களாகப் புத்திரப் பாக்கியமில்லாமல் வருந்தினார்கள். ஒரு சமயம் திருச்செங்கோட்டு ஈசனை வழிபட நாகத்தின் மூலம் சமிக்ஞை கிடைக்கப் பெற்று அதன்படி அனுசரிக்க, அவர்களுக்கு 25-11-1870-ல் கார்த்திகை மூல நட்சத்திரத்தில் ஓர் ஆண்மகவு பிறந்தது. மகேசனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக  அக்குழந்தைக்கு அர்த்தநாரி எனப் பெயரிட்டு வளர்த்தனர்.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்ததால் படிப்பில் நாட்டமில்லாமல் கிராமியக் கலைகளில் ஈடுபாடு கொண்டார். தனது ஒன்பதாவது வயதில் ‘குழந்தை திருமணம்’ செய்விக்கப் பட்டதும் மைசூருக்குக் குடி பெயர்ந்தார். அங்கு அரண் மனையில் தலைமைத் தவசிப்பிள்ளையாக இருந்த உறவினரிடம் உதவியா ளராகச் சேர்ந்து விரைவிலேயே சமையற்கலையின் நுணுக்கங்களைக் கற்று, நளபாகத்தில் கைதேர்ந்தவரானார். அரச சமூகத்தின் தனிப்பட்டத் தலைமைத் தவசிப்பிள்ளையாகவும் பரிணமித்தார்.

அதுவரை அவரை அணைத்துச் சென்ற அதிர்ஷ்டதேவதை இப்போது விலக ஆரம்பித்து விட்டாள். ஒரு கல்யாணத்துக்குச் சென்றவரை விதி விட்டுவிட வில்லை. அசல் மாப்பிள் ளையைத் தவிர்த்து இவரை மணாளனாக்கி இரண்டாம் திருமணம் செய்து வைத்து விட் டனர். துன்பத்துக்கு மேல் துன்பத்தை அவர் அனுபவித்தக் காலம் அது. மூன்று வருடத் துக்குப் பின் முதல் மனைவி, மூன்று மகள்கள் இயற்கை எய்தினர். தொடர்ந்து 1907-ல் இரண்டாவது மனைவியின் இரு பெண் குழந்தைகளும் இறந்தனர். அத்துடன் தீராத வயிற்று வலியும் சேர்ந்துகொள்ள வாழ்க்கையே வெறுத்துவிட்டது அவருக்கு. பழநி ஆண்டவரின் அபிஷேகத் தீர்த்தத்தை அருந்தினால் உபாதை நீங்கும் எனத் தோழர் கூற 1908-ல் மனைவி,எஞ்சிய ஒரே மகன் நரசிம்மனுடன் பழநி சென்றடைந்தார். அங்கு அன்றாட ஆலயக் கைங்கர்யத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு,அபிஷேகத் தீர்த்தத்தை அருந்திவர வாட்டியக் குன்மநோயும் அரவே அகன்றது. அத்துடன் முருகனின் திருவிளையாடலும் ஆரம்பித்தது.

அக்காலத்தில் மூலவரின் அபிஷேகத்தின் போது திருப்புகழ்ப் பாட்டுக்கு நடனமாடுவதுண்டு. ஒருசமயம் மதுரை தேவதாசி ஒருவர் “வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய,கொந்தார மாலை குழல் ஆரமொடு தோள் புரள…”. (813)பாடலுக்கு நாட்டி யமாட,அதில் லயித்து ஓர் ஆனந்தப் பரவசநிலையை அடைந்தார். திருப்புகழ்ப் பாடலைப் படித்து ரசிக்க நினைத்தாலும் எழுத்தறிவு இல்லாமை தடங்கலாக நின்றது.

அப்போது அவருக்கருகில் திடீரெனத் தோன்றிய ஒரு மாயச் சிறுவன் (வேறுயார், ‘அழகன்’ தான்!)தமிழ் சொல்லிக் கொடுக்க முன்வர, துரிதகால இடைவெளியில் கற்றுத் தேர்ந்து,திருப்புகழ் பாடுவதில் புலமைப் பெற்றார்.‌ ஓர் இனந்தெரியாத உள்ளுணர்வு அவரை ஆன்மிக யாத்திரை மேற்கொள்ள அறிவுறுத்த,  திருச் செந்தூர்,  திருவண்ணா மலை, இலங்கை எனப் பல தலங்களைத் தரிசித்து விட்டுத் திரும்பவும் அண்ணாமலை வந்தடைந்தார். பகவான் ரமணரைச் சந்தித்து அவருக்குப் பணிவிடை செய்தும், திருப் புகழ்ப் பாடி மகிழ்வித்தும் வந்தார். ரமணர் அவர் கண்களுக்குத் தண்டாயுதபாணி யாகவே காட்சியளித்தார். அங்கு திருப்புகழின் அனைத்துக் காண்டங்களையும் கற்றறிந்தார். அர்த்தநாரியின் எதிர்காலத்தைத் தன் யோகசித்தியால் அறிந்து கொண்டவர் அவரை வட இந்தி யத் தலங்களைத் தரிசித்து வரப் பணித்தார். இமயமலைச் சாரலில் சந்தித்த ஒரு சித்தரால் ஈர்க்கப்பட்டு,அவரிடமே தீட்சைப் பெற்று,சித்தரின் ஆக்ஞைப்படி துறவறம் ஏற்று, ஶ்ரீசச்சிதானந்த சுவாமி எனும் சன்னியாச நாமத்தையும் பெற்றார். நான்கு வருட இடைவெளிக்குப் பின் ஆவலுடன் ரமணமகரிஷியைப் பார்க்க வந்தவருக்கு ஓர் அதிர்ச்சிக் காத்திருந்தது.

வந்ததும் வராததுமாய் அவரை ‘உடனே மலையடிவாரம் திரும்பிச் செல்!’ என மகரிஷி கட்டளையிட, ஒன்றும் புரியாதவராய்த் திரும்பினார். அவரது துறவற வாழ்வில் மற்றொரு திருப்புமுனையாக அமைந்துவிட்டது அச்சம்பவம். கீழே இறங்கியவரை உடலெல்லாம் சேறும் சகதியுமாய் ஓடி வந்து அணைத்துக் கொண்டார் மகான் ஶ்ரீசேஷாத்திரி சுவாமிகள். சேறும் சகதியும் சந்தன மணம் வீசியது! “வாரும்,வாரும்!சின்ன சாமி அனுப்பினாரா?” என்று வினவியவர், ஶ்ரீசச்சிதானந்தருக்கு ஆதிசங்கரரின் சிவமானஸ ஸ்தோத்திரத்தை உபதேசித்தார்.

XXXXX

to be continued……………..

tags — வள்ளிமலை ,ஶ்ரீ   , சச்சிதாநந்த , ஸ்வாமிகள், 

தமிழர்கள் சொன்ன அதிசய முனிவர்கள் பற்றி புதிய தகவல் ? TIME TRAVEL காலப் பயணம் செய்யலாம்! (10,528)

THUMB SIZED MEN IN GULLIVER’S TRAVELS OF JONATHAN SWIFT 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,528

Date uploaded in London – –    5 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புறநானூற்றில் புலவர் நரசிம்மன் !

ஜெயலலிதாவுக்கு ஏன் பரிதாபச் சாவு ?

பிரேமதாசாவின் உடல் சிதறுவது பாபாவுக்குத் தெரியும்!

வாலகில்யர்கள் என்னும் கட்டைவிரல் அளவேயுள்ள முனிவர்கள் 60,000 பேர் சூரியனுடம் வலம் வருவது பற்றி புறநானுறு , சிலப்பதிகாரம், திருப்புகழ் ஆகியன என்ன சொல்கிறது என்பதை பத்து ஆண்டுகளுக்கு முன்னர் “சூரியனுடன் சுற்றிவரும் குள்ள முனிவர்கள் யார் ? “ என்ற தலைப்பில் எழுதினேன் (2011 ம் ஆண்டு கட்டுரை இணைப்பு கீழே உள்ளது )

இப்பொழுது அதர்வண வேதத்தைப் படித்தபொழுது புதிய தகவல் கிடைத்திருக்கிறது 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இது தமிழர்களுக்கும் தெரியும் என்பது சங்க இலக்கியக் குறிப்புகளால் தெளிவாத் தெரிகிறது. அதர்வண வேதத்தின் ( அ. வே)  கடைசி காண்டங்கள் – அதாவது பத்தொன்பதாவது, இருபதாவது காண்டங்கள் — ரிக் வேத செய்யுட்களை மீண்டும் கூறுகின்றன. அதாவது உலகிலேயே பழைய நூலான ரிக்வேதத்தின் மறு  பதிப்பு !

அதில் உள்ள முக்கிய வரிகளைக் குறிப்பிட்ட பின்னர் எனது வியாக்கியானத்தைத் தருகிறேன்:–

பத்தொன்பதாவது காண்டம், பாடல் 53, 54 ( சூக்தங்கள் 569 , 570 ; தலைப்பு-காலன் )

தமிழில் காலன் என்றால் யமன்; காலம் என்றால் நேரம்.

இரண்டும் நம்மை விழுங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாள் நமக்குக் கழிந்தால், யமனுடைய வீட்டுக்குப் போக தயார் ஆகிறோம் என்று பொருள்.

அதர்வண வேதத்தில் ( அ. வே)   சூரியனுடன் சவாரி செய்யும் முனிவர்கள் பற்றிய குறிப்பு வருகிறது . வியாக்கியனக்காரர்கள் அங்கு வாலகில்யர் என்னும் குள்ள முனிவர்கள் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் புறநானூற்று வரி அப்படியே உள்ளது.

சுடரொடு திரிதரும் முனிவரும்” என்பது சிலப்பதிகார வரி. “சுடரொடு கொட்கும் அவிர்சடை   முனிவரும்” என்பது புறநானூற்று வரி . (பாடல் 43) இதை எழுதியவர் பெயர் நரசிம்மன். அதாவது தாமப்பல் கண்ணன்

ஓம்  வஜ்ர நகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி

தன்னோ நரசிம்ஹ ப்ரசோதயாத் — என்பது நரசிம்ம காயத்ரி  மந்திரம்

இதில் தீக்ஷ்ண தம்ஷ்ட்ர  என்பதன் தமிழ் ஆக்கமே “தாமப்பல் “. கண்ணன் என்பது அவர் பெயர் அல்லது குடும்பப் பெயர் என்றும் கொள்ளலாம் .

அ .வே. முதல் துதி சூரியனை போற்றுகிறது. இதில் சூரிய ஒளியில் காணப்படும் 7 வண்ணங்கள் 7 குதிரைகளாக வருணிக்கப்படுகின்றன. இதை நாம் வானவில் ஏற்படுகையில் காண்கிறோம். சூரிய ஒளியை  PRISM  பிரிஸம் என்னும் முப்பட்டைக் கண்ணாடி வழியே பாய்ச்சினாலும் தெரியும் .

முதல் துதியின் முதல் மந்திரத்தில் அறிஞர்களான கவிகள் அவனில் ஏறுகிறார்கள் ; எல்லா புவனங்களும் அவனுடைய சக்கரங்கள் “– என்ற வரிகள் வருகின்றன. ஏனைய ஒன்பது மந்திரங்களில் இன்னும் பல அறிவியல் தகவல்கள் உள்ளன..

அ .வே. மந்திரங்களை இந்திய விஞ்ஞானிகள் உட்கார்ந்து ஆராய்ந்தால் அமெரிக்க, ரஷ்ய விஞ்ஞானிகள் சொல்லுவதற்கு முன்னரே நாம் பல உண்மைகளை சொல்ல முடியும்

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய வாலகில்யர் கட்டுரையில் அவர்கள் அல்ட்ரா வயலெட் கிரணங்களைத் தடுத்து நிறுத்தும் ஓசோன் வளி மண்டலம (OZONE LAYER, Ultra Violet Rays)  போன்றவர்களாக இருக்கலாம் என்று எழுதி இருந்தேன். இப்பொழுது அவர்கள் “காலத்தில் பயணம் செய்யும் முனிவர்கள்” என்ற பொருளும் தொனிப்பதை TIME TRAVELLERS உணர்கிறேன் .

கால யந்திரம் – டைம் மிஷின் TIME MACHINE NOVEL BY H G WELLS  — என்ற கதையை சுமார்  நூறு ஆண்டுகளுக்கு முன்னரே எழுதினார். அது முதற்கொண்டு மனிதன், பழைய காலத்துக்குப் பயணம் செய்ய முடியுமா? வருங்காலத்துக்குப் பயணம் செய்து எதிர்காலத்தைப் பார்க்க முடியுமா ?என்றெல்லாம் விவாதித்து வருகிறான். இதில் இந்துக்களுக்குத் தெளிவான கருத்து உள்ளது.

கடந்த காலத்தில் நடந்தவற்றைப் பார்க்க முடியும் ; குறிப்பாக நம் உடலுக்குள் நம் PREVIOUS BIRTH STORIES முன்பிறவிக் கதைகள் ஒரு பிலிம் சுருள் FILM ROLL போல சுருட்டி வைக்கப்பட்டுள்ள்ளது என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். நம் புராணக் கதைகளும் இதையே புகலும் . சிலப்பதிகாரத்தில் கூட சாமி வந்து ஆடும் பெண்மணி, கண்ணகி, கோவலன் ஆகியோரின் முற்பிறப்பு வரலாறுகளைக் கூறுவதைக் காண்கிறோம்.

சுந்தரரும் அப்பரும் “காலத்தில் பயணம்” TIME TRAVEL  செய்து இறந்த பையனையும் பெண்ணையும் மீட்டு  வந்ததையும் எழுதியுள்ளேன். அவர்கள் இப்போது என்ன வயதுடன் இருப்பார்களோ அப்படி வளர்ந்த நிலையில் திரும்பி வந்தார்கள் என்று சேக்கிழார் பாடுகிறார்; 1000 ஆண்டுகளுக்கு முன்னர் பாடியது. ஆக இந்துக்கள் சொல்லுவது காலம் என்பது வட்டவடிவமானது CYCLICAL. அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை. ஆனால் ஐன்ஸ்டைன் EINSTEIN போன்ற விஞ்ஞானிகள் காலம் என்பது நேர்கோட்டில் பயணம் செய்கிறது என்கிறார்கள். நாம் சொல்லுவதே சரி என்பதை அவர்கள் விரைவில் ஒப்புக் கொள்ளுவர். மேலும் தேவர்கள் ஒளி வடிவில் (DEVA= LIGHT) இருப்பதால் ஒளியின் வேகத்தில் செல்வதோடு மனோ வேகத்திலும் (Speed of Thought) செல்ல முடியும் என்பது இந்துக்களின் கண்டு பிடிப்பு.

ஒளியின் வேகத்தில் ஒருவர் பயணம் செய்தால் அவர்களுக்கு என்றும் 16 வயது; அதாவது நித்திய மார்க்கண்டேயன் என்று ஐன்ஸ்டைன் சொல்கிறார். ஆனால் அந்த வேகத்தில் பயணம் செய்ய முடியாது என்பதும் அதை மிஞ்சவே முடியாதென்பதும் அவர்தம் துணிபு. ஆனால் நாம்,  அதை மிஞ்ச முடியும் எதிர்காலத்தைச் சென்று பார்ப்பதோடு அதில் தலையிடவும் முடியும் என்கிறோம்.

பகவத் கீதையின்   விஸ்வரூப தரிசனக் காட்சியைப் படித்தவர்களுக்கு இது தெள்ளிதின் விளங்கும். அர்ஜுனன், தனது எதிரிகளைக் கொல்லுவதற்கு முன்னமே, அவர்கள் கொல்லப்பட்டு கிருஷ்ணனின் வாயில் புகுவதைக் கிருஷ்ணன் காட்டுகிறார். ஆக எதிர்காலத்தில் நடக்கப்போவதைக் காணலாம்.

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள்,  அரியலூரில் காவிரி வெள்ளத்தில் முழு ரயிலும் அடித்துச் செல்லப்பபோவதை அறிந்து,  எம் எஸ் சுப்புலட்சுமி அந்த ரயிலில் போகவேண்டாம் என்று தடுத்ததை   உலகமே அறியும் . மைக்கேல் ஜாக்சன் தற்கொலை, பிரேமதாச  குண்டு வெடியிப்பில் உடல் சிதறி அழிதல் — இவற்றை முன்னரே அறிந்த சத்ய சாய்பாபா — அவர்களை பார்க்க மறுத்ததையும் பத்திரிக்கைகளில் நாம் படிக்கிறோம்.

இந்திரா காந்தியின் துர் மரணத்தை அறிந்த காஞ்சி பரமாசார்ய சுவாமிகள், அவரைப்      பார்க்க மறுத்தார். ஆனால் சுவாமிகளின்  பரம சீடரான இந்திய ராஷ்ட்ரபதி ஆர். வெங்கடராமன் வேண்டியதன் பொருட்டு சந்தித்தார். அப்போதும் அவர் போக்கு சரியில்லை என்றே சுவாமிகள் எச்சரித்தார் ; காஞ்சி மடத்துக்கு கொடுமை இழைத்த ஜெயலலிதாவின்  பயங்கர, பரிதாபச் சாவினை முன்னரே அறிந்த சங்கராச்சார்யார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்  , ஜெயலலிதாவுக்கு எதிரான ஆபிசார யக்ஞத்தை (தீயில் மிளகாய் போட்டு மந்திரம் சொல்லி எதிரியை ஒழிக்கும் வேள்வி) தடுத்து நிறுத்தினார்.

அவர்களுக்கு எதிர்காலத்தில் நடக்கப்போவது தெரியும். ஆனால் பெரும்பாலும் அதைத் தடுத்து நிறுத்த மாட்டார்கள் . ஏசுவுக்கு தான் அகால மரணம் அடையப்போவது தெரிந்து 13-ஆவது ஆள் காட்டிக் கொடுப்பான் என்கிறார். ஆயினும் “ஏ தேவனே, ஏ தேவனே என்னை ஏன் கைவிட்டீர் (ஏலி, ஏலி லாமா சபக்தானி ) என்று சாதாரண மனிதன் போல சிலுவையில் கதறினார்.

இந்த பிளாக்கில் வெளியான பல நூறு அற்புதங்கள் சாது,  சந்யாசிகள் காலப் பயணம்  TIME TRAVEL செய்ய முடியும் என்பதையும் மிகவும் அரிதாகவே சாதுக்கள் அதில் தலை இடுவர் என்பதையும் காட்டுகின்றன.

நாரத மகரிஷி பற்றிய குறிப்புகள் தமிழில் முதல் தடவையாக சிலப்பதிகாரத்திலும், சம்ஸ்க்ருதத்தில் அதர்வண வேதத்திலும் வருகிறது. த்ரி லோக சஞ்சாரியான அவர் மனோ வேகத்தில் பல உலகங்களுக்குச் சென்று வந்ததை இந்துக்கள் எல்லோரும் அறிவர் .

கட்டுரையின் இரண்டாவது பகுதியில் , இந்த இரண்டு அ.வே . துதிகளில் உள்ள வேறு சில அறிவியல்  கருத்துக்களையும் எடுத்துக் காட்டுகிறேன்.

MY 2011 ARTICLES ON VALAKHILYAS:–

சூரியனுடன் சுற்றி வரும் குள்ள முனிவர்கள் யார்

https://tamilandvedas.com/wp-content/uploads › 2011/12

PDF

(Short but smart Valakhilyas: Ozone layer and Gulliver’s Travel). “நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்.

Valakhilyas: 60000 thumb-sized ascetics who protect Humanity

https://tamilandvedas.com › 2011/12/31

31 Dec 2011 — Tamil and Vedas · Valakhilyas: 60,000 thumb-sized ascetics who protect Humanity.

To be continued……………………….

Tags —  வாலகில்யர், குள்ள முனிவர், சூரியன், அதர்வண வேதம் , காலப் பயணம்

ஶ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் – 2 (Post No.10,527)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,527
Date uploaded in London – – 5 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஶ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் – 2
ச.நாகராஜன்

அப்போது தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னன் அவரை ஆஸ்தான வித்வானாக நியமித்துக் கொள்ள எண்ணி அவருக்கு அழைப்பு விடுத்தான். ஆனால் அதற்கு அவர் இணங்கவில்லை.நிதி சால சுகமா என்ற கீர்த்தனையைப் பாடினார். நிதியா பெரிது, ராம பக்தி அல்லவோ பெரிது என்றார் அவர். மன்னனோ வற்புறுத்தினான். உடனே அவனுக்கு வயிற்று வலி வந்தது. காரணத்தை ஊகித்த அவன் தியாகராஜரிடம் மன்னிப்புக் கேட்க உடனே அவனது வயிற்று வலி நின்றது.

ஒரு சமயம் தல யாத்திரையாகக் கிளம்பிய தியாகராஜர் திருப்பதி மலைக்கு வந்தார். அர்ச்சகர்கள் அவரை உள்ளே விட மறுத்தனர். ஸ்வாமிக்கு முன்னே திரை தொங்கியது. உடனே தியாகராஜர் ‘தெர தீயக ராதா’ என்ற கீர்த்தனையைப் பாடத் தொடங்கினார். உடனே திரை கீழே விழுந்தது. தியாகராஜர் ஸ்வாமி தரிசனம் செய்தார்.
திருப்பதியிலிருந்து காஞ்சீபுரம் செல்லக் கிளம்பினார் தியாகராஜர்.
அங்கே வழியில் புத்தூர் என்ற கிராமத்தில் ஒரு பாலகன் இறந்திருந்தான். அவனை கருணையுடன் உயிர்ப்பித்தார்.
தியாகராஜரின் சம காலத்தில் வாழ்ந்து வந்த பலரும் அவரைச் சந்தித்து அவரிடம் ஆசி பெறுவதில் மிகக் குறியாக இருந்தனர். ஆசியும் பெற்றனர்.

ஶ்ரீ முத்துசாமி தீக்ஷிதர் திருவையாறு சென்று அவரை அடிக்கடி சந்தித்து இசை கேட்டு மகிழ்வது வழக்கம்.

கோபாலகிருஷ்ண பாரதியார் அவரது இல்லத்தின் வாசலில் ஒரு நாள் அமர்ந்து இசையைக் கேட்டுக் கொண்டிருந்தார். வெளியே வந்த தியாகராஜர் அவரிடம் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்க அவர் மாயூரத்திலிருந்து வருவதாகச் சொன்னார். ‘அப்படியா, அங்கு கோபால கிருஷ்ண பாகவதர் என்பவர் சிறப்பாகப் பாடல்களைப் பாடுகிறாரே, அவரை உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார் தியாகராஜர். ‘அடியேன் தான் கோபாலகிருஷ்ணன்’ என்று பணிவுடன் பதிலிறுத்தார் கோபாலகிருஷ்ண பாகவதர். அவரை வரவேற்று மகிழ்ச்சியுடன் உபசரித்த தியாகராஜர், ‘ஆபோகியில் என்ன பாடல் பாடி இருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். தான் ஒரு பாடலையும் ஆபோகியில் இது வரை இயற்றவில்லை என்று பதில் கூறினார் கோபால கிருஷ்ண பாரதியார்.

தியாகராஜர் காவிரி ஆற்றுக்கு காலையும் மாலையும் இரு முறை தவறாது செல்வது வழக்கம். காவிரி ஆற்றுக்கு அவர் சென்று திரும்பி வந்த போது கோபாலகிருஷ்ண பாரதியார், ‘இதோ ஆபோகியில் இப்போது நான் இயற்றிய பாடல் இது’ என்று கூறி ‘சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா’ என்ற பாடலைப் பாடிக் காட்டினார். இது தான் அந்தப் பாடல் பிறந்த கதை!

தியாகராஜரின் அண்ணனுக்கு அவரது பெயரும் புகழும் பிடிக்கவில்லை. ஒரு முறை அவர் பூஜித்து வந்த விக்ரஹங்களை அவர் காவிரி ஆற்றில் எறிந்து விட்டார். விக்ரஹங்களைக் காணாமல் துடிதுடித்துப் போன தியாகராஜர் அழுது புலம்பினார். பல பாடல்களைப் பாடி அரற்றினார். பக்தியும் சற்று சோகமும் ததும்பி இருக்கும் கீர்த்தனைகளாக இவை அமைந்துள்ளன. விக்ரஹங்கள் இருக்கும் இடத்தை இராமர் அருளால் அறிந்த அவர் அவற்றை மீட்டார்.

இதே போல தியாகராஜ ஸ்வாமிகள் இயற்றிய நூற்றுக் கணக்கான கீர்த்தனைகளும் ஒவ்வொரு சுவையான சம்பவத்தைத் தரும்.

ராமாயணத்தில் முக்கிய காண்டம் சுந்தர காண்டம். அதை மையமாக வைத்து ஸ்வாமிகள் புனைந்த கிருதிகள் அபாரமானவை.

தியாகராஜரின் பெண் குழந்தைக்கு சீதம்மா என்று பெயர். சீதம்மாவின் கல்யாணத்தில் அவருக்குப் பரிசாக வந்தவற்றில் சீதா ராம லக்ஷ்மண படமும் ஒன்று. அதைத் தன் பூஜை அறையில் வைத்து ‘நனு பாலிம்ப நடசி வச்சிதிவோ நா ப்ராணநாத’ என்ற கிருதியை இயற்றிப் பாடினார்.

சுமார் 212 ராகங்களில் அவரது கிருதிகள் அமைந்துள்ளன. அவரே உருவாக்கிய சுமார் 66 புதிய அற்புத ராகங்களில் அவர் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். கேஸரி, சுத்த பங்களா, பங்களா, ஜிங்களா,நபோமணி, சுத்த தேசி, கோலாஹலம், வசந்த பைரவி, மஞ்சரி என்று அவர் இப்படி அவர் உருவாக்கிய ஏராளமான அபூர்வ ராகங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். புரந்தரதாஸர் சுமார் 25 ராகங்களைப் படைத்துள்ளார் என்பதும் நினைவில் கொள்ளத் தக்கது.

         ***            

தொடரும்

AMAZING TIME TRAVEL HYMNS IN ATHARVANA VEDA (Post No.10,526)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,526

Date uploaded in London – –    4 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Lot of scientific information in four Vedas is not analysed properly. If Indian scientists sit together and analyse cosmological information in the Vedas, they may predict certain things even before NASA or Russian Space Agencies.

I have already written how Atri Maharishi surprised his disciples by predicting the duration of a Total Solar Eclipse during Rig Vedic period. I also pointed out the Sun Spots referred to in the oldest book in the world, the Rig Veda (AV). Also read my predictions about planets in the Navagraha Stotra. This hymn explains the Hindu knowledge of planets; knowing that every object has gravity they named sun, moon, and other planets as Graha (Grip, Grab, attract). They named the largest planet Jupiter as Guru (heavy and one who elevates you). Only now scientists use the catapulting power of Jupiter to save fuel in space crafts.

Comparison between the first nuclear explosion in America and the Bhagavad Gita by Father of Nuclear explosion Robert Oppenheimer is known to most of you. I added one point by comparing the Viswarupa Darsanam to Blackholes.

I predicted that Mano vegam (Speed of thought or mind) can beat the speed of light, the fastest object in the universe. But I am not still satisfied about my own explanation of 60,000 thumb sized Valakhilyas travelling before Sun. Scientists must probe this Valakhilya ‘Lilliputians’ (Jonathan Swift’s Gulliver’s Travels).

Speed of thought is praised all through the Four Vedas. Devas mean ‘Light’ in Sanskrit. They exist in the form of light and travel at the speed of Mind. Light takes 4.5 light years to reach the nearest star Alpha Centauri, where as thought will take you in a fraction of a second. We have proof for it in the stories of Inter Galactic Traveller Narada Maharishi. (We have  references to Narada in Atharvana Veda (AV) and Silappadikaram in Tamil.).

We have stories of Time Travel in the Vanaparva of Mahabharata, Time Dilation in Revati story of mythology. We have two beautiful episodes of Time Travel by Tamil Saivite saints Sambandar and Sundarar They went back in Time and brought back the dead girl and boy from the Parallel Universe. They came back grown ups according to their age. This shows that Time is Cyclical and everything happens again. Lord Krishna also confirmed it in the Bhagavad Gita by showing Arjuna all the baddies in Mahabharata were dead even before Arjuna killed them.

Hindu scriptures say more about Parallel Universe and Time Travel. Our projection of TIME as cyclical one and Big Shrink will be confirmed by scientific world soon. Big Bang theory and billions of galaxies are in all Tamil and Sanskrit devotional songs. Hindus knew it thousands of years before the West. Even a Hindu child recites a sloka where God is praised as bright as million Suns.

Xxxx

TIME TRAVEL IN AV

I would like to draw the attention of scientists to two hymns in the AV, where TIME is sung. My comments follow the hymns:-

AV; BOOK 19; HYMN LIII

A hymn to  Time

1.Prolific, thousand-eyed, and undecaying, a horse with seven
   reins Time bears us onward.
  Sages inspired with holy knowledge mount him: his chariot
   wheels are all the worlds of creatures.


2.This Time hath seven rolling wheels and seven naves immorality
   is the chariot’s axle.
  This Time brings hitherward all worlds about us: as primal
  Deity is he entreated.


3.On Time is laid an overflowing beaker: this we behold in many
   a place appearing.
  He carries from us all these worlds of creatures. They call him
  Kāla in the loftiest heaven.


4.He only made the worlds of life, he only gathered the worlds
   of living things together.

  Their son did he become who was their Father: no other higher
   power than he existeth.

5.Kāla created yonder heaven, and Kāla made these realms of
   earth.
  By Kāla, stirred to motion, both what is and what shall be
   expand.


6.Kāla created land; the Sun in Kāla hath his light and heat.
  In Kāla rest all things that be: in Kāla doth the eye discern.


7.In Kāla mind, in Kāla breath, in Kāla name are fixt and joined.
  These living creatures, one and all, rejoice when Kāla hath
   approached.


8.Kāla embraces Holy Fire, the Highest, Brahma in himself.
  Yea, Kāla, who was father of Prajāpati, is Lord of All.


9.He made, he stirred this universe to motion, and on him it rests.
  He, Kāla, having now become Brahma, holds Parameshthin up. 


10.Kāla created living things and, first of all, Prajāpati.
  From Kāla self-made Kasyapa, from Kāla Holy Fire was born.

XXXX

HYMN LIV

A hymn to Kāla; a continuation of the preceding hymn

1.From Kāla sprang the Waters, sprang the regions, Brahma,
  Holy Fire.

  The Sun ascends by Kāla, and in Kāla sinks again to rest.


2.By Kāla freshly blows the wind, mighty through Kāla is the
  Earth: on Kāla rests the mighty Sky.


3.In Kāla erst the text produced what is and what is yet to be.
  From Kāla sprang the Richas, and from Kāla was the Yajus
   born. 


4.They formed in Kāla sacrifice, eternal portion for the Gods.
  In Kāla the Gandharvas and Apsarasas and worlds abide.


5.Atharvan and this Angiras in Kāla are supreme o’er heaven.
  Both this world and the world that is most lofty, the pure
   worlds and pure intermediate spaces,—


6.Yea, having conquered all the worlds by Brahma, Kāla as God
  Supreme is supplicated.

XXXX

MY COMMENTS

One should remember that these English translations were done before 1900. They are at least 125 years old. The modern science at that time did not know much about universe or concept of Time.

Germans dealt with these hymns in detail. Comments and translations are available from Ralph TH Griffith, Muir, Ludwig, Scherman , Monier Williams and Ehni.

Even going by this translation one would wonder to read the words :-

“Sages inspired with holy knowledge mount him” (SAGE CAN DO TIME TRAVEL)

“Kāla created yonder heaven, and Kāla made these realms of
   earth. (BILLIONS OF EARTHS)


  By Kāla, stirred to motion, both what is and what shall be
   expand.” (EXPANDING UNIVERSE)

“He made, he stirred this universe to motion” (BIG BANG )

“In Kāla erst the text produced what is and what is yet to be.”

“On Time is laid an overflowing beaker” (Boiling Sun)

Hindu seers sang these hymns thousands of years ago. Whatever that comes in the 19th and 20th book of AV is a repetition of the oldest book in the world RV, according to Western Translators. So they are as old as RV.

KALA has two meanings:- Time, Death

Big Bang theory is evident in these lines. But scientists could not say why the Big Bang happened 1500 million years ago. What or Who made the Big Bang to happen? Hindus have the answer.

First, one must appreciate all the Hymns on Cosmology in the Vedas. The Hindu seers thought about this and sang about this and conclude GOD who is ABOVE or BEYOND time is the cause for it.

Praising GOD as BEYOND TIME (Kalathryateetah) is itself enough to show their scientific approach. Millions of Hindus recite Vishnu Sahasranama even today and the very first stanza describes God as Bhuta Bhavya, Bhavat Prabuhu.

Commenting on these words Adi Shankara, greatest of the ancient commentators, says “The Master of the past, future and present. As He is beyond the sway f time in its three aspects, He is eternal being, and thus His majesty is undecaying. He is therefore the real Prabhu/Lord”

This Hindu concept of one BEYOND or ABOVE time is unknown to Westerners and scientists. All the cosmological hymns in the Vedas raise question after question and conclude One is the cause for this.

Westerners who translated the Vedas did not know this approach and they said the ancient seers had lot of DOUBTS. A Big Joke! Even a Tamil Saint Tayumanavar of 18th century CE, sings a hymn in Tamil with Questions and leave the conclusion to the devotee. This is a genre. You raise lot of questions in the mind of hearer and make him to think about God.

Even a layman in Hinduism believes that God can travel faster than light. He invokes God after purifying himself, worship him or her inside his heart and say good bye at the end so that God can travel back to his abode in the sky. I do it everyday in my Sandhya Vandana ritual. So, Hindus believe in Time Travel.

Xxx

BASIC INTERPRETATION

At the basic level the two hymns on Time may be interpreted as Hymn on Sun. even that is scientific. When sun sets every evening ONE DAY in our life is gone. They play on the words NUMBER SEVEN in these hymns. Though it is Seven colours of Sun Ray (VIBGYOR seen though prism), lot of philosophical or religious interpretations are given.

That may be right. Hindus like coded language, pun, riddles and puzzles. Certain RV and AV hymns are just numbers, numbers only!! One can interpret the way one likes.

But my focus lies in

“Sages inspired with holy knowledge mount him”

That is sages can travel mounting on it. Riding on it.

Those who are very familiar with the life stories of Hindu saints, know that the seers can interfere in Time, they can change future, they can predict what is going to happen. But they do it very rarely. Only one person has explained it in writing. Guruji Golwalkar, second chief of RSS, had miraculous powers that he displayed when he was young. He predicted he death of two people who were guests in his house. After they had lunch and left, he told his mother this prediction. She was very angry to hear that. But it came true. Both died in an accident. His mother chastised him and made him to promise not to use this power again. When reporters asked him to comment on it, very late in his life, he said that one can see TIME RUNNING LIKE A RIVER FROM THE TOP OF A HILL. Sages can go beyond or above time and see past, present and future (It was in one of the old Organiser magazine issues).  Swami Vivekananda also said that everything is inside you in a film roll. You can unwind/unroll  it and see. And he adds he was east bothered about it. For Yogis, it is a child play. They wouldn’t waste time.

The lines “ Sages inspired with holy knowledge mount him” mean a lot. Though out the RV, Bhutakrt is applied to Rishis/seers as well. Later, this epithet goes only with God as in Vihnu Sahsranama. It means Rishis are creators of objects, living beings. Adi Shankara in his commentary explains it thus – the creator and destroyer of all existence in the universe. Ancient Vedic seers had that power!

My old Articles on the same theme:–

EINSTEIN THEORIES SMASHED BY HINDUS ? (Post No.8688)

https://tamilandvedas.com › 2020/09/15 › einstein-theo…

15 Sept 2020 — tamilandvedas.com, swamiindology.blogspot.com. ONE MORE VERSE FROM VAISHNAVITE SAINT NAMMALVAR SHOWS THAT ‘EINSTEINS THEORIES OF RELATIVITY …


Time dilation | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › time-dilation

EINSTEIN THEORIES SMASHED BY HINDUS ? (Post No.8688). WRITTEN BY LONDON SWAMINATHAN. Post No. 8688. Date uploaded in London – –15 SEPTEMBER 2020.

Time Travel | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › time-travel

tamilandvedas.com › 2012/02/14 › timetravel-by-two-… 14 Feb 2012 – Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. TIME TRAVEL by TWO …


TIME TRAVEL by TWO TAMIL SAINTS

https://tamilandvedas.com › 2012/02/14 › time-travel-b…

14 Feb 2012 — If we can invent a time machine then we can sit inside and travel back even to the days of Emperor Asoka or the Rig Veda. One question often …



Black hole in Bhagavad Gita | Tamil and Vedas

tamilandvedas.com › tag › black-hol…

  1.  

8 Aug 2016 – Posts about Black hole in Bhagavad Gita written by Tamil and Vedas.

You visited this page on 06/09/20.



Aliens | Tamil and Vedas

tamilandvedas.com › tag › aliens

  1.  
  2.  

20 May 2012 – My friends get annoyed whenever I say, “it is already said in our Hindu scriptures”, interrupting their scientific discussions. One of my friends …



Do Hindus Believe in ETs and Alien Worlds? | Tamil and Vedas

tamilandvedas.com › 2012/01/28 › d…

  1.  

28 Jan 2012 – We have clear description of aliens and Extra Terrestrials (ET) in our scriptures. The Laws of Physics declared by Newton and Einstein fail in …

How did Tamil Poet and Biblical Prophet Elijah go to Heaven …

tamilandvedas.com › 2014/08/06 › how-did-tamil-poet…

  1.  
  2.  

6 Aug 2014 – We know how the great Rishi Viswamitra tried to send Trishanku straight to heaven with human body. Viswamitra’s fire sacrifice helped him to …



HINDU WONDER – NEW INTERPRETATION OF SOUTHERN …

tamilandvedas.com › 2019/09/01 › hindu-wonder-new-…

  1.  

1 Sep 2019 – The Southern Cross is named after the King Tri Sanku. … mountains’. tamilandvedas.com, swamiindology.blogspot.com. But my latest research is about how and why they did name Southern Cross and Canopus after Trisanku …

THE MAGIC HERB THAT WILL MAKE YOU TO SEE FUTURE …

https://tamilandvedas.com › 2021/12/21 › the-magic-he…

21 Dec 2021 — Hindu’s fourth Veda Known as Atharvana Veda (AV) has very interesting information about magical and miraculous herbs.

Einstein | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › einstein

16 Sept 2021 — EINSTEIN IS 50RIGHT, DARWIN IS 100 % RIGHT – RIG VEDA THROWS MORE LIGHT (Post No.10101). WRITTEN BY LONDON SWAMINATHAN. Post No. 10,101.

Missing: percent ‎| Must include: percent


AMAZING UNITY IN RIG VEDA-4; EINSTEIN IS WRONG …

https://tamilandvedas.com › 2021/11/06 › amazing-unit…

6 Nov 2021 — Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com 33.SPEED OF MIND-Mano Vega; EINSTEIN WRONG?

Atom Bomb to Zoo of the Bhagavad Gita: Part 2 – Tamil and …

https://tamilandvedas.com › 2011/11/23 › atom-bomb-t…

23 Nov 2011 — By S Swaminathan This is Part 2 of a two part series on the A to Z of the Bhagavad Gita. N for Nirvana Nirvana is an interesting term used …


Atom Bomb to Zoo of the Bhagavad Gita: Part 1 – Tamil and …

https://tamilandvedas.com › 2011/11/22 › atom-bomb-t…

22 Nov 2011 — He was a Sanskrit scholar and read Bhagavad Gita in Sanskrit. When he witnessed the first nuclear test ,huge fire … See Part 2 for N to Z.

Valakhilyas: 60000 thumb-sized ascetics who protect Humanityhttps://tamilandvedas.com › 2011/12/3131 Dec 2011 — Tamil and Vedas · Valakhilyas: 60,000 thumb-sized ascetics who protect Humanity.

–subham—

 tags- time travel, time hymns, atharva veda