

Post No. 14,342
Date uploaded in London – 3 April 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பிராங்பர்ட் வழியாகச் சென்னையில் தரை இறங்கியவுடன் ஒரு நாள் ஓய்வு. மறுநாள், அதாவது மார்ச் 15 ஆம் நாள் (15-3-2025) , முதலில் காஞ்சி காமாட்சியைத் தரிசித்தோம்; பின்னர் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்துக்குச் சென்றோம். கோவிலில் நல்ல கூட்டம்;காரணம் மாசி மகம் உற்சவம். பொறுமையாக வரிசையில் நின்று காமாட்சியைத் தரிசித்தோம். முன்னரே பலமுறை அம்மனைத் தரிசனம் செய்ததால் விரிவாக எழுதத் தேவையில்லை . பழைய கட்டுரைகளில் விவரங்கள் உள்ள. போகும் வழியில் உலகளந்த பெருமாள் கோவில் கச்சபேஸ்வரர் கோவில் ஆகியவற்றை படம் எடுத்தேன்.
மடத்திற்குள் எப்போதும் பூட்டிக்கிடக்கும் பெரியவரின் — காஞ்சீ மஹாசுவாமிகளின் (1894-1994) – பிருந்தாவனம் (சமாதி) – திறந்து இருந்தது; ஆனால் அவரது மற்றும் இளையவரது பிருந்தாவனங்களில் அபிஷேகம் நட ந்து கொண்டிருந்தது; சுமார் நூறு பேர் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். நாங்களும் தரிசனம் செய்தோம்; இளையவரது சமாதியில் யாரோ ஒரு சந்நியாசி நின்று கொண்டு அவ்வப்போது கூட்டத்தைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கீழேயே பக்தர்களுடன் அமர்ந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் . பிருந்தாவனத்தில் நிற்க அனுமதித்து இருக்கக்கூடாது.
பின்னர் சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி பூஜை நடைபெறப்போகும் சந்திர மெளளிஸ்வர பூஜை மண்டபத்துக்கு வந்தோம்; சுவாமிகள் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்கள் என்று அதிகாரிகள் சொன்னார்கள்; அந்த கொஞ்ச நேரம், 15 நிமிடங்களுக்கு வராததால் மதிய உணவினை ஒரு வெஜிட்டேரியன் உணவுவிடுதியில் முடித்துக் கொண்டு வைத்தீஸ்வரன்கோவிலை நோக்கி விரைந்தோம்
மடங்களில் பூஜை நேரங்களை எழுதிப்போடுவது நல்லது; ஸ்வாமிகள் வரும் நேரத்தினை முறையாக, சரியாக அறிவிப்பதும் காலத்துக்கு ஏற்ற உத்திகளாகும்; ஏனெனில் எங்களைப் போல பலரும் வெளியே சென்றதையும் பார்த்ததால் இதை எழுதுகிறேன். மடத்து அதிகாரிகள் இதைக் கவனிப்பார்களாக
மடத்தின் புஸ்தகக் கடைகளில் நிறைய புதிய புஸ்தகங்கள் வந்துள்ளன. மடத்தின் சுவர்களில் ஏராளமான நல்ல விஷயங்களை பொறித்துள்ளார்கள்; பயனுள்ள முயற்சி .

Kanchi Kamakshi Temple Lion




Ulakalantha Perumal Temple










TO BE CONTINUED>>>>>>>>>>>>>>>>>>>>..
OLD ARTICLES
6 நாட்களில் 30 கோவில்கள்! சூறாவளி சுற்றுப் பயணம்! புதிய உண்மைகள்! (Post No.6224)
MORE TAMIL TEMPLE WONDERS (Post no. 6223)
14 IMPORTANT VISHNU TEMPLES IN KANCHIPURAM! (Post No.6226)
108-ல் பதினான்கு காஞ்சியில்! கோவிலில் தங்க மழை! (Post No.6228)
பள்ளிகொண்டானும் பல்லிகொண்டானும் (Post No.6231)
Next Post
LIZARD WORSHIP IN TAMIL NADU AND ROME (Post No.6232)
வரதராஜப் பெருமாள் கோவில் அதிசயங்கள்! (Post No.6235)
AURANG ZEB, ROBERT CLIVE AND VARADARAJA SWAMI TEMPLE (Post No.6236)
காஞ்சி காமாட்சி கோவிலுக்குள் வைணவத் …
https://tamilandvedas.com › கா…
13 Mar 2023 — கோவிலுக்குள் மேலும் ஒரு அதிசயம்! காமாட்சி கோவில் கர்ப்பக்கிரகத்தில் அரூபலட்சுமி. காமாட்சி சந்நிதி 24 தூண்கள் உள்ள காயத்ரீ மண்டபத்தில் அமைந்துள்ளதையும் காயத்ரீ மந்திரம் 24 அக்ஷரங்களால் அமைக்கப்பட்டுள்ளதையும் அனைவரும் அறிவர்.
QUIZ காஞ்சிபுரம் 40 QUIZ- PART 1 (Post No.12940)
https://tamilandvedas.com › quiz-…
6. காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலை அறியாதோர் இல்லை ; அங்கு அன்னைக்கு எத்தனை கரங்கள்? அவற்றில் என்னென்ன இருக்கின்றன ? Xxxx. 7. காமாட்சி …
ஓரிக்கை மணி மண்டப தரிசனமும், உண்மைச் …
https://tamilandvedas.com › ஓர…
2 Apr 2023 — காஞ்சிபுரத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஓரிக்கை மணி மண்டபத்ததைத் தரிசிக்கும் பாக்கியம் பிப்ரவரி 2023 ஆம் ஆண்டில்தான் கிடைத்தது. எத்தனையோ முறை காஞ்சிபுரம் சென்றாலும் மணிமண் டபத்தைக் கடக்கும் நேரம் அது மூடப்பட்ட …
A blog exploring themes in Tamil and vedic literature | Page 471
https://tamilandvedas.com › page
tamilandvedas.com, swamiindology.blogspot.com … காஞ்சி காமாட்சி கோவிலுக்குள் வைணவத் தலம், லெட்சுமி சிலை! … காமாட்சி சந்நிதி 24 தூண்கள் …
https://tamilandvedas.com › கா…
14 Apr 2013 — காசி விசுவநாதர் கோவில் 23.காஞ்சி காமாட்சி … சந்நிதி ஆஞ்சநேயர் கோவில் 65.வளத்தீஸ்வரர் கோவில் 66.வியாச …
–subham—
Tags –, திவ்ய தரிசனம், காஞ்சி சங்கராச்சாரியார், மடம், மஹாசுவாமிகளின் (1894-1994) , பிருந்தாவனம் (சமாதி) Part 1