Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-19;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,719)

Written by London Swaminathan

Post No. 15,719

Date uploaded in London –10 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 19

தில்லைத் திருச்சித்ரகூடம் (சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகம்)

சைவ வைணவ ஒற்றுமைக்கு இலக்கணமாகத் திகழும் கோவில் சிதம்பரம் நடராஜர் கோவில்; ஒரே கோவிலுக்குள் பாடல்பெற்ற வைணவ சைவ தலங்கள் இருப்பது இதன் தனிச் சிறப்பு
108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம், சிதம்பரம் நடராஜர் கோயிலின் உள்ளே அமைந்துள்ளது.

மூலவர் – கோவிந்தராஜன், போகசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.

உத்ஸவர் – தேவாதிதேவன், பார்த்தஸாரதி, வீற்றிருந்த திருக்கோலம். சித்திரகூடத்துள்ளான் என்ற மற்றொரு உத்ஸவரும் உபயநாச்சிமாருடன் ஸேவை ஸாதிக்கிறார்.

தாயார் – புண்டரீகவல்லி (தனி நாச்சியார் ஸந்நிதி) .

தீர்த்தம் – புண்டரீக புஷ்கரிணி.

விமானம் – ஸாத்விக விமானம்.

ப்ரத்யக்ஷம் – தில்லைமூவாயிரவர், பாணினி, பதஞ்சலி, வ்யாக்ரபாதர்.

இந்தக் கோவில் தில்லை தீக்ஷதர்களின் நிர்வாகத்தில் உள்ளது. நடராஜப்பெருமான் உள்ளிட்ட தில்லை மூவாயிரவர் இவரைத் துதிக்க இங்கு வந்ததாகவும், தன்னெதிரே நடனமாடிய நடராஜப் பெருமானது தாண்டவத்தைப் பெருமாள் ரஸித்ததாகவும் ஐதிஹம்.

பாணினி சிவன் ஆடும் ஆனந்தத் தாண்டவத்தைக்கண்டு பரவசமடைந்து வியாகரணம் செய்த இடம்.. பரதமுனிவர் நாட்டிய சாஸ்த்ரத்தை ஏற்படுத்திய ஸ்தலம். கோவில் புஷ்கரிணியில் வடக்கே உள்ள புஷ்கரணியில் புஷ்கரக்ஷேத்திரத்தில் உள்ளதைப்போல் மீன்கள் தரையில் வந்து யாத்ரீகர்களிடமிருந்து பொறி கடலை வாங்கி சாப்பிடுறது.

சிதம்பரத்தில் நாட்டிய முத்திரைகள்  

பரதநாட்டியத்தின் 108 கரணங்களும் சிற்ப வடிவில் செதுக்கப்பட்டுள்ளன. சிதம்பரம் கோயிலில் கீழைக்கோபுரத்தின் கிழக்குப்பகுதியில் தெற்குச் சுவரிலும் வடக்குச் சுவரிலும்  நான்கு வரிசையாக வரிசைக்கு 8 சிற்பங்கள் என்ற வகையில் 32 + 32 = 64 சிற்பங்கள் உள்ளன. மேற்குச் சுவரில் தெற்குப் பகுதியில் 24 சிற்பங்களும், வடக்குப் பகுதியில்  20 சிற்பங்களும் உள்ளன.

தில்லை நடராஜர் பற்றி சம்பந்தர் அப்பர்

தேவாரம் பாடிய மூவரும் அதற்கு முன்னாள் மாணிக்க வாசகரும் பாடியதால் சிதம்பரம் — தமிழில்  சிற்றம்பலம் — கோயில் 1400 ஆண்டுக    க்கும் மேலான பழமை உடைத்து .

தில்லை நடராஜர் (சிதம்பரம்) கோயில் நாயன்மார்களால் போற்றப்படும் தலமாகும். திருஞானசம்பந்தர் (2 பதிகங்கள்) மற்றும் திருநாவுக்கரசர் எனப்படும் அப்பர் (8 பதிகங்கள்) தில்லை சிவனின் நடனத்தை தேவாரத்தில் பாடி மகிழ்ந்துள்ளனர். திருநாவுக்கரசர் (அப்பர்): தில்லைப் பெருமானின் அருட்சிறப்பை, “பொன்னார் மேனியனே” போன்ற பதிகங்கள் மூலம் போற்றியுள்ளார். இறைவனின் ஆடல் கண்டு மகிழ்ந்த அவர், தில்லை சிவனின் திருவருளைப் புகழ்ந்துள்ளார்.திருஞானசம்பந்தர்: தில்லைக் கூத்தனின் நடனத்தையும், சிவனடியார்களின் சிறப்பையும் தனது பதிகங்களில் பாடியுள்ளார். இத்தலம் தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் தில்லைவனம் என்று அழைக்கப்பட்டது

தில்லையில் திருமாலின் திருக்கோலத்தைத் திருக்கோவையாரில் மாணிக்கவாசகர் குறிப்பதும் நம் ஆய்வுக்குத் துணை நிற்கும். “வரங்கிடந்தான் தில்லையம்பல முன்றலில் அம் மாயவனே” என்பது மாணிக்கவாசகரின் அருள் வாக்கு.

தில்லைத் திருச்சித்திர கூடத்தில் பல்லவ மன்னன் திருமாலை எழுந்தருள்வித்தான்.

     “பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து

     புடைமன்னவன் பல்லவர் கோன் பணிந்த

     செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த

     தில்லைத் திருச் சித்திர கூடம்”

என்று திருமங்கையாழ்வாரால் அருளப்பட்டது. எனவே தில்லைத்

திருச்சித்திர கூடத்தில் திருமாலை எழுந்தருள்வித்தவன் நந்திவர்மனே (730-795) .

     “தில்லை நகர்த் திருச்சித்திர கூடந் தன்னுள்

     அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த……”

என்று குலசேகர ஆழ்வாரும் தில்லைத் திருமால் மீது பாடியிருப்பதும் கணிக்கத்தக்கது.

திருச் சித்திர கூடம்

பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் இத்திருக்கோவில் மேம்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

***

கோவிந்தராஜப் பெருமாள் மீது குலசேகராழ்வார் (11 பாசுரங்கள் – பெருமாள் திருமொழி) மற்றும் திருமங்கையாழ்வார் (10 பாசுரங்கள் – பெரிய திருமொழி) ஆகியோரால் பாடப்பட்ட நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாடல்கள் திருச்சித்ரகூடம் பாசுரங்கள் எனப்படும். இப்பாசுரங்கள், இத்தல எம்பெருமானை இராமபிரானாகவே பாவித்து, தில்லை வாழ் அந்தணர்கள் துதிக்கச் சேவை சாதிப்பதாகப் போற்றுகின்றன. 

குலசேகராழ்வார் (பெருமாள் திருமொழி – பதிகம் 10):

அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி…” – இப்பாசுரம், இராமவதாரம் முடித்து வைகுந்தம் புகுந்த ராமனாக, தில்லைத் திருச்சித்ரகூடத்தில் வீற்றிருக்கும் கோவிந்தராஜனைப் போற்றுகிறது.

தில்லைநகர் திருச்சித்ர கூடந்தன்னுள்அந்தணர்களொரு மூவாயிரவரேத்த…” – தில்லை அந்தணர்கள் தினமும் வணங்கும் எம்பெருமானாகச் சித்தரிக்கிறார்.

குலசேகராழ்வார் இத்தலப் பெருமாளை இராமாயணக் கதையோடு தொடர்புபடுத்தி, அனுமனுடன் காட்சி தரும் சித்திரகூட ராமராகவே பாடியுள்ளார்.

திருமங்கையாழ்வார் (பெரிய திருமொழி):

ஊன் வாட நீண்ட நாள்… தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே” – கடினமான தவங்கள் செய்ய வேண்டாம், தில்லை திருச்சித்ரகூடம் சென்று கோவிந்தராஜனை நினைத்தாலே போதும் என, இத்தலத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் பாசுரம்.

வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய்…” – வராஹ அவதாரத்தில் பூமி தேவியை மீட்ட பெருமாள் தில்லைத் திருச்சித்ரகூடத்தில் இருப்பதாகப் பாடுகிறார்.

***

இரண்டாம் ஆயிரம்

திருமங்கை ஆழ்வார்

பெரிய திருமொழி

தில்லைத் திருச்சித்திரகூடம் 1

1157    ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு

      உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து

தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா-

      தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்

கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே

      கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்த்

தேன் ஆட மாடக் கொடி ஆடு தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே             (1)

1158    காயோடு நீடு கனி உண்டு வீசு

      கடுங் கால் நுகர்ந்து நெடுங் காலம் ஐந்து

தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா

      -திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்

வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர்

      மறையாளர் நாளும் முறையால் வளர்த்த

தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்கு தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே             (2)

1159    வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய்

      விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த

வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான்

      அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர

பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து

      படை மன்னவன் பல்லவர்- கோன் பணிந்த

செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே             (3)

1160    அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய்

      அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த

பெருமான் திருநாமம் பிதற்றி நும்-தம்

      பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்

கரு மா கடலுள் கிடந்தான் உவந்து

      கவை நா அரவின்-அணைப் பள்ளியின்மேல்

திருமால் திருமங்கையொடு ஆடு தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே             (4)

1161    கோ மங்க வங்கக் கடல் வையம் உய்ய

      குல மன்னர் அங்கம் மழுவில் துணிய

தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித்

      தவ மா முனியைத் தமக்கு ஆக்ககிற்பீர்

பூ-மங்கை தங்கி புல-மங்கை மன்னி

      புகழ்-மங்கை எங்கும் திகழ புகழ் சேர்

சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (5)

1162    நெய் வாய் அழல் அம்பு துரந்து முந்நீர்

      துணியப் பணிகொண்டு அணி ஆர்ந்து இலங்கு

மை ஆர் மணிவண்ணனை எண்ணி நும்-தம்

      மனத்தே இருத்தும்படி வாழவல்லீர்

அவ் வாய் இள மங்கையர் பேசவும் தான்

      அரு மா மறை அந்தணர் சிந்தை புக

செவ் வாய்க் கிளி நான்மறை பாடு தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே             (6)

1163    மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து

      மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த

தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு

      திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்

கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்

      கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள்

தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே            (7)

1164    மா வாயின் அங்கம் மதியாது கீறி

      மழை மா முது குன்று எடுத்து ஆயர்-தங்கள்

கோ ஆய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன்

      குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர்

மூவாயிரம் நான்மறையாளர் நாளும்

      முறையால் வணங்க அணங்கு ஆய சோதித்

தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே             (8)

1165    செரு நீல வேல் கண் மடவார்திறத்துச்

      சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்

அரு நீல பாவம் அகல புகழ் சேர்

      அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்

பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து எங்கும்

      வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள

திரு நீலம் நின்று திகழ்கின்ற தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே             (9)

1166    சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய தில்லைத்

      திருச்சித்ரகூடத்து உறை செங் கண் மாலுக்கு

ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப

      அலை நீர் உலகுக்கு அருளே புரியும்

கார் ஆர் புயல் கைக் கலிகன்றி குன்றா

      ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்

பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப்

      பல காலம் நிற்கும்படி வாழ்வர்-தாமே             (10)

******

741.  

அங்கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்*  அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி*

வெங் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி*  விண் முழுதும் உயக் கொண்ட வீரன்தன்னைச்*

செங்கண் நெடுங் கரு முகிலை இராமன்தன்னைத்*   தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*

எங்கள் தனி முதல்வனை எம்பெருமான்தன்னை*  என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே (2)      

742.  

வந்துஎதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி*  வருகுருதி பொழிதர வன்கணை ஒன்றேவி*

மந்திரம்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து*  வல்லரக்கர் உயிருண்ட மைந்தன் காண்மின்*

செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்*  தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*

அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த*  அணிமணி ஆசனத்திருந்த அம்மான் தானே. 

743.  

செவ்வரி நற் கருநெடுங்கண் சீதைக்கு ஆகிச்*  சினவிடையோன் சிலையிறுத்து மழுவாள் ஏந்தி* 

வெவ்வரி நற் சிலைவாங்கி வென்றி கொண்டு*  வேல்வேந்தர் பகை தடிந்த வீரன்தன்னைத்*

தெவ்வர் அஞ்சு நெடும்புரிசை உயர்ந்த பாங்கர்த்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*

எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை*  இறைஞ்சுவார் இணையடியே இறைஞ்சினேனே*

744.  

தொத்து அலர் பூஞ் சுரிகுழல்-கைகேசி சொல்லால்*  தொல் நகரம் துறந்து துறைக் கங்கைதன்னைப்*

பத்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்கு*  பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து*

சித்திரகூடத்து இருந்தான்தன்னை இன்று- தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*

எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற*  இருநிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார்தாமே  

745.  

வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று*  வண்டமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி*

கலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக்*  கரனோடு தூடணன்ற னுயிரை வாங்கி*

சிலைவணக்கி மான்மரிய வெய்தான் றன்னைத்*  தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*

தலைவணக்கிக் கைகூப்பி யேத்த வல்லார்*  திரிதலால் தவமுடைத்தித் தரணி தானே.

746.  

தனம் மருவு வைதேகி பிரியல் உற்று*  தளர்வு எய்திச் சடாயுவை வைகுந்தத்து ஏற்றி*

வனம் மருவு கவியரசன் காதல் கொண்டு*  வாலியைக் கொன்று இலங்கைநகர் அரக்கர்கோமான்*

சினம் அடங்க மாருதியாற் சுடுவித்தானைத்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*

இனிது அமர்ந்த அம்மானை இராமன்தன்னை*  ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே*

747.  

குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து*  குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி*

எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன்*  இன்னுயிர் கொண்டு அவன்தம்பிக்கு அரசும் ஈந்து*

திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்தன்னைத்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*

அரசு-அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்*  அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே*

748.  

அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி*  அரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான்*

தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி*  உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்*

செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*

எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்*  பருகுவோம் இன்னமுதம் மதியோம் ஒன்றே*

749.  

செறி தவச் சம்புகன்தன்னைச் சென்று கொன்று*  செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த

நிறை மணிப் பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னைத்*  தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்டத்

திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான்தன்னைத்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்

உறைவானை மறவாத உள்ளந்தன்னை*  உடையோம் மற்று உறுதுயரம் அடையோம் அன்றே

750.  

அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி*  அடல் அரவப் பகையேறி அசுரர்தம்மை*

வென்று இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற*  விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி*

சென்று இனிது வீற்றிருந்த அம்மான்தன்னைத்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*

என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி நாளும்*  இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே* 

751.  

தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*  திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை*

எல்லை இல் சீர்த் தயரதன்தன் மகனாய்த் தோன்றிற்று*  அது முதலாத் தன் உலகம் புக்கது ஈறா*

கொல் இயலும் படைத் தானைக் கொற்ற ஒள்வாள்*  கோழியர்கோன் குடைக் குலசேகரன் சொற் செய்த*

நல் இயல் இன் தமிழ்மாலை பத்தும் வல்லார்*  நலந் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே* 

1158.  

ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு*  உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து*

தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா*  தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்*

கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே*  கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்த்*

தேன் ஆட மாடக் கொடி ஆடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே. (2)

1159.  

காயோடு நீடு கனி உண்டு வீசு*  கடுங் கால் நுகர்ந்து நெடுங் காலம்*

ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா*  திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*

வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர்*  மறையாளர் நாளும் முறையால் வளர்த்த*

தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்கு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்றுசேர்மின்களே. 

1160.  

வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய்*  விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த*

வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான்*  அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர*

பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து*  படை மன்னவன் பல்லவர்கோன் பணிந்த*

செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த*   தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

1161.  

அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய்*  அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த*

பெருமான் திருநாமம் பிதற்றி*  நும்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்*

கரு மா கடலுள் கிடந்தான் உவந்து*  கவை நா அரவின்அணைப் பள்ளியின்மேல்*

திருமால் திருமங்கையொடு ஆடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

1162.  

கோ மங்க வங்கக் கடல் வையம் உய்ய*  குல மன்னர் அங்கம் மழுவில் துணிய*

தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித்*  தவ மா முனியைத் தமக்கு ஆக்ககிற்பீர்*

பூமங்கை தங்கி புலமங்கை மன்னி*  புகழ்மங்கை எங்கும் திகழ*

புகழ் சேர் சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

1163.  

நெய் வாய் அழல் அம்பு துரந்து*  முந்நீர் துணியப் பணிகொண்டு அணி ஆர்ந்து*

இலங்கு மை ஆர் மணிவண்ணனை எண்ணி*  நும்தம் மனத்தே இருத்தும்படி வாழவல்லீர்*

அவ்வாய் இள மங்கையர் பேசவும் தான்*  அரு மா மறை அந்தணர் சிந்தை புக*

செவ் வாய்க் கிளி நான்மறை பாடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

1164.  

மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து*  மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த*

தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு*  திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*

கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்*  கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள்*

தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

1165.  

மா வாயின் அங்கம் மதியாது கீறி*  மழை மா முது குன்று எடுத்து*

ஆயர்தங்கள் கோ ஆய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன்*  குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர்*

மூவாயிரம் நான்மறையாளர்*  நாளும் முறையால் வணங்க அணங்கு ஆய சோதித்*

தேவாதிதேவன் திகழ்கின்ற*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

1166.  

செரு நீல வேல் கண் மடவார்திறத்துச்*  சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்*

அரு நீல பாவம் அகல புகழ் சேர்*  அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்*

பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து*  எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள*

திரு நீலம் நின்று திகழ்கின்ற*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

1167.  

சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய*  தில்லைத் திருச்சித்ரகூடத்து உறை செங் கண் மாலுக்கு*

ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப*  அலை நீர் உலகுக்கு அருளே புரியும்*

கார் ஆர் புயல் கைக் கலிகன்றி*  குன்றா ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்*

பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப்*  பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே. (2)

1168.  

வாட மருது இடை போகி*  மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு*

ஆடல் நல் மா உடைத்து*  ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்*

கூடிய மா மழை காத்த*  கூத்தன் என வருகின்றான்*

சேடு உயர் பூம் பொழில் தில்லைச்*  சித்திரகூடத்து உள்ளானே. (2) 

1169.  

பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட*  பிள்ளை பரிசு இது என்றால்*

மா நில மா மகள்*  மாதர் கேள்வன் இவன் என்றும்*

வண்டு உண் பூமகள் நாயகன் என்றும்*  புலன் கெழு கோவியர் பாடித்*

தே மலர் தூவ வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.  

1170.  

பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று*  ஆய்ச்சியர் கூடி இழிப்ப*

எண் திசையோரும் வணங்க*  இணை மருது ஊடு நடந்திட்டு*

அண்டரும் வானத்தவரும்*  ஆயிரம் நாமங்களோடு*

திண் திறல் பாட வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே. 

1171.  

வளைக் கை நெடுங்கண் மடவார்*  ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப*

தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத்*  தண் தடம் புக்கு அண்டர் காண*

முளைத்த எயிற்று அழல் நாகத்து*  உச்சியில் நின்று அது வாடத்*

திளைத்து அமர் செய்து வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.

1172.  

பருவக் கரு முகில் ஒத்து*  முத்து உடை மா கடல் ஒத்து*

அருவித் திரள் திகழ்கின்ற*  ஆயிரம் பொன்மலை ஒத்து*

உருவக் கருங் குழல் ஆய்ச்சிதிறத்து*  இன மால் விடை செற்று*

தெருவில் திளைத்து வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.

1173.  

எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க*  வரு மழை காப்பான்*

உய்யப் பரு வரை தாங்கி*  ஆநிரை காத்தான் என்று ஏத்தி*

வையத்து எவரும் வணங்க*  அணங்கு எழு மா மலை போல*

தெய்வப் புள் ஏறி வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே .(2) 

1174.  

ஆவர் இவை செய்து அறிவார்?*  அஞ்சன மா மலை போல*

மேவு சினத்து அடல் வேழம்*  வீழ முனிந்து*

அழகு ஆய காவி மலர் நெடுங் கண்ணார்*  கை தொழ வீதி வருவான்*

தேவர் வணங்கு தண் தில்லைச்*  சித்திரகூடத்து உள்ளானே.

1175.  

பொங்கி அமரில் ஒருகால்*  பொன்பெயரோனை வெருவ*

அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு*  ஆயிரம் தோள் எழுந்து ஆட*

பைங் கண் இரண்டு எரி கான்ற*  நீண்ட எயிற்றொடு பேழ் வாய்ச்*

சிங்க உருவின் வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.

1176.  

கரு முகில் போல்வது ஓர் மேனி*  கையன ஆழியும் சங்கும்*

பெரு விறல் வானவர் சூழ*  ஏழ் உலகும் தொழுது ஏத்த*

ஒரு மகள் ஆயர் மடந்தை*  ஒருத்தி நிலமகள்*

மற்றைத் திருமகளோடும் வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.

1177.  

தேன் அமர் பூம் பொழில் தில்லைச்*  சித்திரகூடம் அமர்ந்த*

வானவர் தங்கள் பிரானை*  மங்கையர் கோன்மருவார்*

ஊன்அமர் வேல் கலிகன்றி*  ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்*

தான் இவை கற்று வல்லார்மேல்*  சாரா தீவினை தானே.  (2)

—Subham—

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-19;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்

Leave a comment

Leave a comment