1.மீனாட்சி கல்யாணத்தால் உண்டான நதியின் பெயர் என்ன?
xxxxx
2.கோவில் குளத்தின் பெயர் என்ன
xxxxxx
3.மீனாட்சி அம்மனுக்கு தங்கத்தில் காலணிகள் செய்த வெள்ளைக்கார கலெக்டர் பெயர் என்ன ?
xxxxxx
4.மதுரை மீனாட்சி கோவில் மதிலின் பெயர் என்ன ?
xxxxxx
5.மதுரை மீனாட்சி கோவிலுக்கு எத்தனை நுழை வாயில்கள் ?
xxxxxx
6.உயர்ந்த கோபுரம் எது ?
Xxxx
7.மீனாட்சி பிறந்த போது அம்மா, அப்பா என்ன கவலைப்பட்டார்கள் ?
xxxxx
8.மீனாட்சியின் ஒரிஜினல் பெயர் என்ன ?
xxxxxx
9.மீனாட்சி அம்மனின் தந்தை, தாயார் பெயர்கள் என்ன ?
xxxxx
10.முஸ்லீம் சுல்தானால் 40 ஆண்டுக்காலம் பூட்டிக்கிடந்த மீனாட்சி கோவிலை யார் மீண்டும் திறந்தார்?
xxxx
Answers விடைகள்
1.கல்யாணச் சாப்பாடு மிஞ்சிவிடுமே என்று பெண் வீட்டார் கவலைப்பட்டபோது, சிவனின் குட்டிபூதமான குண்டோதரன், அனைத்தையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டு தண்ணீர் தாக்கத்தில் தவித்தான் . சிவன் ‘வை கை’ என்று சொல்லி பூமியில் கையை வைக்கச் சொன்னார். ‘வை’ ‘கை’ நதி ஊற்றாகப் பொங்கி எழுந்தது.
Xxxxxx
2.பொற்றாமரைக்குளம் ; தங்கத் தாமரை மலர்ந்த இடம்.
Xxxxx
3.பீட்டர் ரோஸ் ; பெரிய மழையில் கட்டடத்தின் மீது இடி விழும் முன் பச்சைப் பாவாடையுடன் வந்து எழுப்பி, தன உயிரையே காப்பாற்றியதால் மீனாட்சிக்கு தங்கச் செருப்பு அணிவித்தார்.
Xxxxxx
4.கபாலி மதில் ; திருஞான சம்பந்தர் தேவாரத்தில் வருகிறது
Xxxxxx
5.ஐந்து ; 4 பெரிய கோபுரங்கள் + அம்மன் சந்நிதி வாயில்
Xxxxx
6.தெற்கு கோபுரம் . மொத்தம் சிறிதும் பெரிதுமாக 14 கோபுரங்கள் உள்ளன . தெற்கு கோபுரத்தின் உயரம் 170 அடி (சுமார் 52 மீட்டர்)
Xxxxx
7.அந்தச் சிறுமிக்கு 3 முலைகள் இருந்தன. ஆனால் அவள் தனக்குரிய கணவனைக் காணும்போது மூன்றாவது முலை மறைந்துவிடும் என்று அசரீரி எழுந்தது .அவர்களுடைய கவலையும் மறைந்தது. சுந்தர ஈஸ்வரர் என்னும் சொக்க நாதனைக் கண்டவுடன் அவருடைய மூன்றாவது மார்பகம் மறைந்தது
Xxxxx
8.தடாதகைப் பிராட்டி. சம்பந்தர் தேவாரத்தில் அங்கயர் கண்ணி ;
அங்கயர் கண்ணி = சம்ஸ்க்ருதத்தில் மீனாட்சி.
Xxxxxx
9.தந்தை – மலயத்வஜ பாண்டியன் , தாயார் – காஞ்சன மாலா
Xxxxx
10.விஜயநகர சாம்ராஜ்ய படைத்தலைவர் கம்பண்ண உடையார். அந்த அற்புதத்தை அவர் கூடவே வந்த அவருடை ய மனைவி கங்கா தேவி , மதுரா விஜயம் என்ற நூலில் ஸம்ஸ்க்ருத கவிதைகளாக எழுதி வைத்துள்ளார்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
காலன் வரும் முன்னே காலன் வர மாட்டான்! – 6
ச.நாகராஜன்
12-6-2023 அன்று பகோடா, கொலம்பியாவிலிருந்து வந்த பத்திரிகை செய்தி இது:
கொலம்பியா அமேஸானில் கடந்த 40 நாட்களாகத் தொலைந்ததாகக் கருதப்பட்ட குழந்தைகள் காட்டிலிருந்த கொட்டைகள், வேர்கள், தாவரங்கள் உள்ளிட்டவற்றைச் சாப்பிட்டு உயிருடன் இருந்தனர். அவர்கள் அவற்றைச் சாப்பிடக்கூடியவை தான் என்பதை அறிந்திருந்தனர்- அவர்களது வளர்ப்பு அப்படி!
கொலம்பியாவின் ராணுவத் துருப்புகள் கொலம்பியா காடுகளில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் அவர்களால் குழந்தைகளைக் கண்டுபிடிக்க முடிந்தது – உயிருடன்!
ஒன்று முதல் 13 வயது முடிய இருந்த நான்கு குழந்தைகள் மே முதல் தேதி நடந்த ஒரு விமான விபத்தில் சிக்கிப் பிழைத்தனர். அந்தக் குழந்தைகளின் தாயார், விமான பைலட், இன்னும் ஒரு வயதானவர் ஆகியோர் விபத்தில் இறந்தனர்.
‘புதர்க் குழந்தைகள்’ என்று அந்தக் குழந்தைகளின் பாட்டனாரால் அழைக்கப்பட்ட குழந்தைகள் யுக்கா மாவைச் (Yucca Flour) சாப்பிட்டு உயிருடன் இருந்தனர். யுக்கா மாவு அந்த விமானத்தில் ஏற்றப்பட்டிருந்தது. அத்தோடு அவர்களைத் தேடிச் சென்ற ஹெலிகாப்டர்கள் போட்ட உணவு பார்சல்களிலிருந்தவற்றையும் அவர்கள் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தனர்.
அமேஸான் பிரதேசத்தில் இருந்த கிழங்குகள், கொட்டைகள், வேர்கள் ஆகியவற்றையும் உண்டு அவர்கள் உயிருடன் இருந்தனர் என்று Luis Acosta of the National Indigenous Organaisation of Columbia கூறியது.
“நாம் இயற்கையுடன் ஒரு குறிப்பிட்ட தொடர்பைக் கொண்டிருக்கிறோம்” என்று ஜேவியர் பெடன்கோர்ட் (Javier Betancourt) என்ற இன்னொரு ONICE தலைவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், “ காட்டில் வாழ்ந்து அதைக் காத்து வரும் குடிமக்கள் போல உலகம் இப்படிப்பட்ட விசேஷ தொடர்பை இயற்கையுடன் கொண்டிருக்க வேண்டும்” என்றார்.
பகோடாவில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரி ஒன்றில் குழந்தைகள் நல்ல உற்சாகத்துடனுன் ஆரோக்கியத்துடனும் இருக்கச் செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவும் (Gustavo Petro) இதர அதிகாரிகளும் சென்று பார்த்தனர்.
பாதுகாப்பு மந்திரி இவான் வெல்ஸ்குயஸ் (Defence Minister Ivan Velsquez குழந்தைகள் குழுவைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்ட 13 வயதான பெண்ணான லெஸ்லி முகுடியை (Lesly Mucutuy) புகழ்ந்தார்.
“அவளது தைரியத்தை போற்றுவதோடு நிற்காமல் அவளது தலைமையையும் நாம் உணர வேண்டும். அவளால் தான் – அவளது காடு பற்றிய அறிவினால் தான் – இதர மூன்று குழந்தைகளும் அவளது பாதுகாப்பினால் உயிருடன் இருந்தனர்” என்றார் அவர்.
லெஸ்லியின் ஒன்பது வயதான தங்கை சொலினி (Soleiny) “நிறையப் பேசுகிறாள்” என்று குழந்தைகள் காப்பக இயக்குநரான ஆஸ்ட்ரிட் சஸெரஸ் (Astrid Caceres) கூறினார்.
ஐந்து வயதான குழந்தை டியன் படிப்பதற்கு புத்தகங்கள் கேட்கும் போது ஒரு வயதான குழந்தை நர்ஸுகளுடன் நம்ப முடியாத அளவில் அமைதியுடன் இணக்கமாக இருக்கிறது” என்றார் அவர்.
இரண்டு இளம் குழந்தைகளின் தந்தையான மானுவல் ரானொகு (Manuel Ranoque) ஞாயிறு அன்று கூறுகையில், லெஸ்லி அவளது தாயார் நான்கு நாட்கள் வரை உயிருடன் இருந்ததாகத் தெரிவித்தாள்” என்றார்.
இறப்பதற்கு முன்னர், இடிபாடுகள் நிறைந்த அந்த இடத்திலிருந்து “போய் விடுங்கள்” என்று அவர் கூறினாராம்.
இதற்கு மேல் அவர் எதையும் கூறவில்லை.
அந்தப் பகுதியைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் நூறு ராணுவ வீரர்களுடன் இணைந்து “ஆபரேஷன் ஹோப்” (Operation Hope) என்ற பெயரில் தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர்.
காடுகளின் அந்தப் பகுதி பற்றிய தகவல்கள் அவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்தது.
ராணுவ ஹெலிகாப்டர்கள் குழந்தைகளின் பாட்டி அவர்களின் ஹுயிடோடோ (Huitoto) மொழியில் “ஒரே இடத்தில் இருக்குமாறு” கூறியதை ஒலிபரப்பியது.
இந்த விபத்தினால் காட்டில் இருந்த சமயத்தில் இரு குழந்தைகளின் பிறந்த நாளும் வந்தது. டியனுக்கு ஐந்து வயதானது. கிறிஸ்டினுக்கு ஒரு வயதானது.
குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டம் இனி தான் நடக்க இருக்கிறது’ என்று இயக்குநர் சஸெரஸ் கூறினார்.
அற்புதமான இந்த செய்தி உணர்த்தும் உண்மை – காலன் வரும் முன்னே காலன் வர மாட்டான்! – என்பதைத் தான்!
**
நன்றி : கல்கத்தாவிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழ் –
பெங்களூரிலுள்ள முக்கியமான 19 கோவில்களைக் கடந்த இரண்டு தினங்களில் கண்டோம். இனி பெங்களூருக்கு வெளியேயுள்ள கோவில்களைக் காண்போம்
TEMPLE PICTURES ARE TAKEN FROM WIKIPEDIA; THANKS
Part 3
சிறிய , புதிய கோவில்களுக்கு எண் (Number) கொடுக்கவில்லை
20. CHIKKA TIRUPATI சிக்க திருப்பதி
சிக்க திருப்பதி என்றால் சின்ன திருப்பதி என்று பொருள்.. பெங்களூர் நகரிலிருந்து 31 கிலோமீட்டர் தொலைவில் திருப்பதி பாணியில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோவில் இது.
ஐந்து நிலைக் கோபுரத்துடன் அமைந்த கோவிலில் வெங்கடேஸ்வரர் நின்ற திருக்கோலத்தில் அபய ஹஸ்தத்துடன் காட்சி தருகிறார் . கருட மண்டபம் பெரிதாக உள்ளது. குளமும் அருகில் இருக்கிறது ஆண்டு தோறும் நடக்கும் பிரம்மோற்சவம், தேர்த்திருவிழா , காவடித் திருவிழாவுக்கு மக்கள் 15 , 20 கிலோமீட்டர் பாத யாத்திரையாக வருகின்றனர் . கோடிக்கணக்கான ரூபாய் வரவு இருப்பதால் அரசாங்க அறநிலையத் துறை எடுத்துக்கொண்டுவிட்டது !!.
XXXXX
முக்திநாகா கோவில்Mukthi Naga Temple
இதுவும் அண்மைக்கால கோவில்தான்
16 அடி உயரமுள்ள , ஒரே கல்லில் ஆன நாகர் உருவமிங்குள்ளது. அதன் எடை 36 டன்! சுப்ரமண்யர் சிலையும் உளது.பெங்களூர் நகரிலிருந்து 18 20 கிலோமீட்டர் ; ராமோஹள்ளி அருகில் இருக்கிறது அதையும் தாண்டிச் சென்றால் தொட்ட /பெரிய ஆலமரத்தைக் காணலாம். 400 ஆண்டு வயதுள்ள ஆலமரம் 3 ஏக்கர் பரப்பை வியாபித்துள்ளது .
XXXXX
பெங்களூர் நகரிலிருந்து 21 கி.மீ. தொலைவில், கனகபுரா சாலையில் பண்டிட் ரவி சங்கரின் ART OF LIVING ASHRAM வாழும் கலை ஆஸ்ரமம் இருக்கிறது. அங்கு வேத பாடசாலை, சுமேரு மண்டபம், தியான மண்டபம், முதலியன கட்டப்பட்டுள்ளன
XXXX
ராஜ ராஜேஸ்வரி கோவில், மைசூரு ரோடு.Raja Rajeshwari Temple
அண்மைக்காலத்தில் திருச்சி சுவாமிகளால் கட்டப்பட்ட கோவில் இது மகாமேரு, ஸ்ரீ சக்ரம் உள்ளன ; வேதாகம பாடசாலையும் உள்ளது .பஸ் நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டர்
XXXXX
கனகபுரா சாலையில் கெப்பே தொட்டி கிராமத்தில் பிரமிட் த்யான கேந்திரம் அமைக்கப்பட்டுள்ளது PYRAMID MEDITATION CENTRE
XXXX
SATHYA SAI ASHRAMAM AT WHITE FIELD
பெங்களூர் நகரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் ஓயிட்பீல்ட் பிருந்தாவனத்தில் அமைந்த பிருந்தாவனம் எனும் சத்ய சாய் பாபா ஆஸ்ரமும் குறிப்பிடத்தக்கது.
XXXX
21.போக நந்தீஸ்வர கோவில்
SHRI BHOGANANDUSHWARA TEMPLE
பெங்களூர் நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் நந்தி ஹில்ஸ் NANDI HILLS அமைந்துள்ளது . இதன் அடிவாரத்தில் .போக நந்தீஸ்வர கோவில் இருக்கிறது. இது சோழர், ஹொய்சாளர், விஜய நகர வம்சத்தினரால் சிறப்பிக்கப்பட்ட பழம் பெருமைமிக்க கோவில்.
போக நந்தீஸ்வரர், உமா மஹேஸ்வரர் , அருணாசலேஸ்வரர் மூர்த்திகள் உள; .சோழர் கால யோக நந்தீஸ்வரர் கோவில் மலை மேல் இருக்கிறது .
நுளம்ப வம்சம், கங்க வம்சம் என்று ஒவ்வொருவராக அமைத்த பல சந்நதிதிகளைக் காணலாம். 1200 ஆண்டு பழமையான கல்வெட்டுகள் இந்த இடத்தைக் குறிப்பிடுகின்ற்ன. உமா மஹேஸ்வரர் இணைந்திருப்பதால். புதுமண தம்பதிகள் வந்து ஆசிபெறுகின்றனர்.. மிகவும் பழமையும் கலை வேலைப்பாடு மிக்க சபா மண்டபமும் உள்ள இந்த இடம் தொல்பொருட் துறையினரின் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளது . அருமையான கல்யாணி புஷ்கரணி என்னும் குளமும் இந்தக் கோவில் வளாகத்திற்கு அழகு சேர்க்கிறது.
சிக்கபல்லபூர் ,அருகிலுள்ள பெரிய ஊராகும் .
கர்நாடகத்தின் பொறியியல் வல்லுநர், ராஜதந்திரி விஸ்வேஸ்வரய்யா பிறந்த முத்தனஹள்ளி இந்த மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
XXXXX
22.கடி சுப்ரமண்யர் கோவில் Ghati Subramanya
பெங்களூர் நகரிலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் தொட்டப்பல்லபூர் அருகில் இந்த சுப்ரமண்யர் கோவில் இருக்கிறது 600 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடைத்து..
இந்தக்கோவிலின் சிறப்பு நரசிம்ம மூர்த்தியும் சுப்ரமண்யர் கோவிலில் இருப்பதாகும். இதனால் ஷஷ்டி, நரசிம்ம ஜெயந்தி எல்லாம் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன . மேலும் சுப்ரமண்யரை நாக பிரதிஷ்டை செய்து வழிபட்டால் குழந்தை இல்லாதோர் குழந்தை கிடைக்கப்பெறுவர் என்ற நம்பிக்கை இருப்பதால் கோயில் அருகில் ஆயிரக் கணக்கில் நாகர் சிலைகளைக் காணலாம்..
ஏழு தலை நாகத்துடன் சுப்ரமண்யர் கிழக்கு நோக்கி நிற்கிறார்.; அருகில் மேற்கு நோக்கிய வண்ணம் நரசிம்ம மூர்த்தி நிற்கிறார் இருவரையும் ஒரே நேரத்தில் தரிசிக்க வசதியாக கர்ப்பக் கிரகத்தின் அருகில் பெரிய கண்ணாடியும் நிறுவப்பட்டுள்ளது. இத்தகைய அபூர்வக் காட்சியை வேறு எங்கும் காண்பது அரிது
இரண்டு சிலைகளும் பூமியிலிருந்து தானாக எழுந்த ஸ்வயம்பூ மூர்த்திகள் என்ற நம்பிக்கையும் உளது.
TO BE CONTINUED………………………………..
TAGS- கர்நாடகம், 108 கோவில், பகுதி 3, சிக்க திருப்பதி, நந்தி ஹில்ஸ்
1.நால்வரில் ஒருவரான சுந்தரரின் இரண்டு மனைவிகள் பற்றி நாம் அறிவோம்? அவர்களுடைய முற்பிறப்பு என்ன?
XXXX
2.சுந்தரர் பிறந்த ஊர் எது ? பெற்றோர் யாவர்?
XXXX
3.இளமையில் அவரை வளர்த்தவர் யார்?
xxxx
4. சுந்தரர் கல்யாணத்தில் என்ன கலாட்டா/ ரகளை நடந்தது?
xxxxx
5.சிவபெருமான் சுந்தரருக்கு வழங்கிய பெயர் என்ன ?
xxxxx
6. சுந்தரர் ஏது பாடுவதென்று திகைத்து நின்ற காலையில் சிவனே எடுத்துக்கொடுத்த பாடல் அடி என்ன?
Xxxxx
7.சுந்தரரின் 2 மனைவியர் யாவர் ?
xxxxx
8.செங்கற்களே தங்கக்கட்டியாக மாறி சுந்தரரை வியப்பில் ஆழ்த்திய ஊர் எது?
xxxxx
9.ஒரு ஊரில் ஆற்றில் போட்டு, மறு ஊர்க்குளத்தில் தங்கக்காசுகளை எடுத்த கதை என்ன ?
xxx
10.முதலை விழுங்கிய பிள்ளையை Parellel Universe பாரல்லல் யூனிவெர்சிலிருந்து வளர் அடைந்த நிலையில் மீட்டுக்கொடுத்த ஊர் எது?
Xxxxx
விடைகள்
1.கயிலை மலையில் சிவபெருமானுக்கு நெருங்கிய தொண்டர் ஆலால சுந்தரர். அங்கு உமை அம்மையாரின் சேடிகளாக விளங்கிய அநிந்திதை , கமலினி மீது அவர் காதல் கொண்டார். அவர்களும் அப்படியே மையல் கொண்டனர். ஆக மூவரையும் இகலோக சுகம் அனுபவித்த பின்னர், பரலோகம் வர அம்மையும் அப்பனும் ஆசீர்வதித்தனர் . மூவரும் நம்பி ஆரூரர் , பரவை , சங்கிலி என பூவுலகில் அவதரித்தனர்.
Xxxxx
2.திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலூரில் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் நம்பி ஆரூரர் . தந்தை பெயர் –சடையனார். தாயார் பெயர் — இசை ஞானியார்.
xxxxx
3.திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்க முனையரையர் , வீதி உலா வருகையில் முகப்பொலிவுடன் விளங்கிய சுந்தரரைக் கண்டு வியந்து, பெற்றோர் அனுமதியுடன் தனது பிள்ளை போல வளர்த்தார் .
xxxxx
4.சிவ பெருமான் ஒரு வேதியர் வடிவத்தில் வந்து இந்தப் பையன் எனக்கு அடிமை. அந்த விஷயம் முடிவுக்கு வந்த பின்னர் திருமணத்தை நடத்தலாம் என்கிறார். வாக்குவாதம் வளரவே, முதியவர் ஊரான திருவெண்ணெய் நல்லூருக்குச் சென்று ஒரிஜினல்/ மூல ஓலையைப் பார்த்து சுந்தரர் அடிமைதான் என்று முடிவு செய்தனர் . முதியவரின் முகவரியைக் கேட்டபோது அவர் ஆலயத்துக்குள் சென்று மாயமாய் மறைந்தார் சிவ பெருமானே அவரை ஆட்கொள்ளவந்ததை அறிந்து அனைவரும் பிரமித்து நின்றனர்.
xxxxx
5. வன் தொண்டன்
மற்றுநீ வன்மை பேசி வன்றொண்ட னென்னு நாமம்
பெற்றனை; நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனை பாட்டே யாகு; மாதலான் மண்மே னம்மைச்
சொற்றமிழ் பாடு’ கென்றார் தூமறை பாடும் வாயான்.
xxxxxx
6.நானும் நீயும் வாதிட்டபோது நீ என்னை பித்தன் என்று ஏசினாய். அதையே சொல்! பாடல் வரும் என்றார் சிவா பெருமான் . உடனே சொற்றமிழ் பாடல் ஊற்று போல வெளியே பொங்கியது :–
திருவெண்ணெய்நல்லூர் பாடல் எண் : 1
பித்தாபிறை சூடீபெரு
மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாய்இனி
அல்லேனென லாமே.
xxxxx
7.கயிலையில் இருந்த கமலினி , பூவுலகில் பரவை நாச்சியார் என்ற பெயரில் பிறந்தார். அவர் முதல் மனைவி..
அநிந்தினி , வேளாளர் குடியில் ஞாயிறு என்னும் ஊரில் சங்கிலியார் என்ற பெயரில் பிறந்தார். அவர் சுந்தரரின் இரண்டாவது மனைவி
xxxxx
8.திருப்புகலூரில் செங்கற்களை தலையணையாகப் பயன்படுத்தி உறங்கும்போதுப் பணம் வேண்டுமே என்ற கவலையில் உறங்கினார் . காலையில் கண்விழித்தபோது கற்கள் அனைத்தும் தங்கக்கட்டிகளாக மாறியிருந்ததைக் கண்டார் .
xxxxx
9.திருமுது குன்று சென்று சிவனை வேண்டியபோது பன்னீராயிரம் பொற்காசுகள் கிடைத்தது. அதை மணிமுத்தாற்றில் போட்டுவிட்டு திருவாரூர்க் குளத்தில் மூழ்கி எடுத்தார் . இப்போது இவைகளை சைன்ஸ் பிக்ஸன் (Science Fiction Films) திரைப்படங்களில் டெலி ட்ரான்ஸ்போர்டேஷன் Tele Transportation என்ற பெயரில் காண்கிறோம். .
xxxxx
10.சேரமான் பெருமாள் நாயனாரைக் காண மலைநாட்டுக்குச் செல்லுகையில் திருப்புக்கொளியூரில் ஒரு வீட்டில் மேள தாளமும் எதிர் வீட்டில் அழுகையும் ஒலித்ததைக்கண்டு காரணம் வினவினார். இரு வீட்டுப் பையன்களும் பல ஆண்டுகளுக்கு முன்னர் குளத்திற்குச் சென்ற பொழுது ஒரு சிறுவனை முதலை விழுங்கியதால் அந்த வீட்டுக்காரர்கள் அழுகின்றனர் என்று ஊர்மக்கள் விளம்பினார்கள் .மடுவின் கரைக்குச் சென்று பதிகம் பாடவே அந்தச் சிறுவனை முதலை கொண்டுவந்து கொடுத்தது.
(இறுதியில் சுந்தரர் வெள்ளை யானையில் ஏறி கயிலை செல்லுகையில் சேரமான் பெருமாள் நாயனார் குதிரையில் பின்தொடர்ந்து கயிலைக்கு ஏகி னார் ;அதே நேரத்தில் பிள்ளையார் தன் துதிக்கையால் அவ் வையாரையும் அவர்களுக்கு முன்னதாகவே கயிலைக்கு கொண்டு சென்றதாக ஒரு கதை உண்டு.)
–subham—
Tags–சுந்தரர், நம்பி ஆரூரர், பரவை , சங்கிலியார் , பித்தா பிறை சூடி , சொற்றமிழ் பாடு , அர்ச்சனைப்பாட்டு , அடிமை, வழக்கு , சேரமான் பெருமாள் நாயனார், முதலை
answers
–subham—Tags–சுந்தரர், நம்பி ஆரூரர், பரவை , சங்கிலியார் , பித்தா பிறை சூடி , சொற்றமிழ் பாடு , அர்ச்சனைப்பாட்டு , அடிமை, வழக்கு , சேரமான் பெருமாள் நாயனார், முதலை
சிஸ்டர் நிவேதிதா (Sister Nivedita) என்று அழைக்கப்பட்ட , சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான , மார்கரெட் நோபிளின் (Margaret Noble) சிலை, சென்ற சனிக்கிழமை, ஜூலை 1, 2023ல் லண்டனின் தென்பகுதி பேட்டையான விம்பிள்டனில் (Wimbledon, London) திறக்கப்பட்டது
முதலில் அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு அற்புதத்தைக் காண்போம்.
1902-ம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி காலை 9-10 க்கு சுவாமி விவேகானந்தா சமாதி அடைந்தார் அப்போது நிவேதிதா அங்கு இல்லை. ஆனால் அன்றிரவு அவருக்கு ஒரு கனவு ஏற்பட்டது. விவேகானந்தரின் குரு வான ராமகிருஷண பரமஹம்சர் , அவருடைய உடலிலிருந்து மீண்டும் ஒரு முறை செல்வது போன்ற கனவு அது. இதன் பொருள் விளங்காமல் திகைத்தார். மறுநாள் காலையில் பேலூர் மடத்திலிருந்து சுவாமி சாரதானந்தர் , ஒரு துறவி மூலமாக கடிதம் அனுப்பினார். அதில் சுவாமி விவேகானந்தரின் சமாதி செய்தி இருந்தது மறுநாள் காலை 7 மணிக்கு சுவாமிஜியின் சடலம் இருந்த அறைக்குள் சிஸ்டர் நிவேதிதா நுழைந்தார் . சடலத்தின் தலைமாட்டில் உட்கார்ந்துகொண் டு விசிறியால் வீசினார் . அன்று, அதாவது ஜூலை 5 பிற்பகலில் சடலம் தகனம் செய்யப்பட்டது. சுவாமிஜியின் சடலம் காவித் துணியால் சுற்றப்பட்டிருந்தது . அதிலிருந்து ஒரு சிறிய துண்டினை வெட்டி மற்றோர் சிஷ்யையான Josephine MacLeod ஜோசபைன் மக் லியொடுக்கு அனுப்ப விரும்பினார் . சுவாமி சாரதானந்தா அதற்கு அனுமதி கொடுத்தார். மனதில் ஏதோ ஒரு தயக்கம் ஏற்படவே நிவேதிதா அதைச் செய்யவில்லை. எல்லோரும் மயானத்துக்குச் சென்றனர் . சடலம் ‘தகதக’ என்று எரிந்து கொண்டிருந்தது . அனைவரும் வருத்தத் தோடு அக்காட்சியைக் கண்டு கொண்டிருந்தனர் . மாலை ஆறு மணி ஆனது . சிதைத் தீ அவிந்துகொண்டிருந்த தருணத்தில் திடீரென்று காற்று வீசியது. ஏதோ ஒன்று சிதைத் தீயிலிருந்து பறந்துவந்து நிவேதிதா அருகில் விழுந்தது. அதை அவர் காணவில்லை. யாரோ ஒருவர் தன்னுடைய உடையை இழுப்பது போல உணர்ந்தார். அப்போதுதான் அருகில் விழுந்த துண்டு, தான் வெட்டி எடுக்க நினைத்த, காவித்துண்டு என்பதை உணர்ந்தார் சுவாமிஜியே அதைத் தனக்கு அனுப்பிய தாகக் கருதி , அதை விரும்பியவாறே ஜோசப்பைனுக்கு அனுப்பிவைத்தார். அவருக்கு எழுதிய கடிதத்தில் நிவேதிதா குறிப்பிடுகிறார் : நான் வெட்டி எடுக்க நினைத்த 2, 3 அங்குலத் துணி திடீரென்று பறந்துவந்து என் காலடியில் விழுந்தது . தோள்பட்டையை யாரோ உலுக்கியது போல உணர்ந்தேன் . இதை சுவாமிஜி அனுப்பிய கடிதம் என்றே கருதலாம் என்று ஜோசப்பை னுக்கு 1902 செப்டம்பர் 14ம் தேதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
xxxx
சிஸ்டர் நிவேதிதாவுக்கு விம்பிள்டனில் சிலை ஏன் ?
வட அயர்லாந்தில் (இப்போது பிரிட்டனின் பகுதி; இது தவிர, தென் பகுதி அயர்லாந்து உள்ளது அது தனி நாடு) பிறந்த மார்கரெட் நோபிள் 17 வயதிலேயே ஆசிரியர் பணியாற்றினார் . பின்னர் அவரே விம்பிள் டன் பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்றைத் துவங்கி புதுமையான திட்டங்களை செயல்படுத்தினார். சுவாமி விவேகாநந்தரைச் சந்தித்து கல்கத்தாவுக்கு வந்த பின்னரும் ஒரு பள்ளிக்கூடத்தைத் திறந்தார். இப்போது லண்டனின் மெர்ட்டன் கவுன்சிலின் கீழ் வரும் விம்பிள்டன் பேட்டையில் ரிச்சர்ட் லாட்ஜ் பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் முன்னால் , லேக் ரோடில் சிலை திறக்கப்பட்டுள்ளது. இது கல்கத்தாவிலிருந்து இங்கே கொண்டுவரப்பட்டது.
xxxx
சிலையை யார் திறந்தனர் ?
மெர்ட்டன் மேயரும் இங்கிலாந்தின் டாரிங்டன் ஊர் மேயரும் சிலையைத் திறந்தனர் Mayor Councillor Doug Smyth Mayor of Great Torrington where w sister Nivedita Celebrations have installed another statue of Nivedita . it was donated by West Bengal Government
Second Person is the Madam Mayor Jill Manly she is the mayor of Merton where the statue is installed now ).
xxxx
டாரிங்க்டனுக்கும் நிவேதிதாவுக்கும் என்ன சம்பந்தம்?
நிவேதிதா , இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கில் இறந்தார். ஆயினும் அவருடைய அஸ்தி, அவரது குடும்ப கல்லறை டாரிங்டனில் (Great Torrington, Devon, England) இருப்பதால் அங்கே புதைக்கப்பட்டுள்ளது. அங்கே ஏற்கனவே மேற்கு வங்க அரசு அனுப்பிய ஒரு சிலை நிறுவப்பட்டுள்ளது . ஆக விம்பிள்டன் சிலை இரண்டாவது சிலை ஆகும் .
xxxx
சிலைத் திறப்புவிழாவில் டாக்டர் உமா பாசு அருமையாக நிவேதிதா படலைப் பாடினார் . இன்னும் ஒரு பாடலை சுதீப் சக்ரவர்த்தி பாடினார் . சபை நிறைந்த கூட்டம். லண்டனில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் கேந்திர தலைவர் சுவாமிஜி சர்வஸ்தானந்தா , பிரேசில் நாட்டு ராமகிருஷ்ணா மிஷன் கேந்திர தலைவர் நிர்மலாத்மானந்தாஜி ஆகியோர் சிலைக்கு மாலையிட்டு அஞ்சலி Rev Swami Nirmalatmanandaji maharaj Minister in charge of Sao Paolo Brazil , Rev Swami Sarvasthanandaji MIC London ) செலுத்தினர் . கூட்டத்தில் பேசிய அனைவரும் சிஸ்டர் நிவேதிதா ஆற்றிய சேவையைக், குறிப்பாக, பெண்கள் கல்விக்கு ஆற்றிய சேவையை, புகழ்ந்தனர். பெண்கள் பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி கே பேஜ் (Mrs K Page) பேசுகையில் பள்ளி மாணவிகள் வந்து கூட்டத்தில் தொண்டாற்றியமைக்கு நன்றி கூறினார் . வருங்காலத் தலைமுறைக்கு நிவேதிதா ஊற்றுணர்ச்சி தருவார் என்றார். திருமதி சாரதா சர்க்கார் (Mrs Sarda Sircar) அனைவருக்கும் நன்றி நவின்றார் .
சிலைத் திறப்பு விழாவினை ஒட்டி ஒரு மலரும்(Souvenir) வெளியிடப்பட்டது .
லேக் ரோட் , விம்பிள்டனில் (Lake Road, Wimbledon, London) உள்ள சிலையை எவரும் எப்போதும் தரிசிக்கலாம்.
xxxxxxx
நிவேதிதா வாழ்க்கையில் சில மைல் கற்கள்
Sister Nivedita (பிறப்பு 28 October 1867 – மறைவு 13 October 1911)
1867, October 28
இயற் பெயர் –Margaret Elizabeth Noble (later called Sister Nivedita by Swami Vivekananda) iதாயார் – Mary Isabel Hamilton and தந்தை —Samuel Richmond Noble of Scotch Street, பிறந்த ஊர் –Dungannon, Northern Ireland.
சகோதரர்–:Richmond Noble, சகோதரி —May Noble (Wilson)
1891-94
விம்பிள்டனில் பள்ளி ஆசிரியை வேலை
1894
Margaret co-founds the Sesame Club, சீசேம் கிளப் துவக்கம்
1895 November.
Margaret meets Swami Vivekananda at a lecture at Isabella Margesson’s residence at West End, London. சுவாமி விவேகானந்தருடன் சந்திப்பு
1898, January 28.
கப்பல் மூலம் கல்கத்தாவுக்கு வருகை
1898, March 17.
சாரதா தேவியுடன் சந்திப்பு
1898, March 25.
பிரம்மச்சர்ய ஆஸ்ரமம் ஏற்பு . நிவேதிதா என்று சுவாமிஜி பெயர் சூட்டல்
1898, May 11.
இமயமலைக்குப் பயணம் with Swamiji and fellow disciples Sara Bull and Josephine McLeod.
xxxx
1898, November 13.
நிவேதிதா துவக்கிய பெண்கள் பள்ளியை சாரதா தேவி துவக்கிவைத்தல்
1899, March.பிளேக் நோய் பரவல்; கல்கத்தாவில் நிவேதிதா சேவை
1899, May 28.
காளி மாதா வழிபாடு பற்றி வீர கர்ஜனை மிகுந்த சொற்பொழிவு Kali Worship at the Kalighat Temple.
1899, June 20.
சுவாமிஜியுடன் ல ண்டன் பயணம் Nivedita leaves for England with Vivekananda and Turiyananda to raise funds for the school. In London, Vivekananda meets her family for the first time.
1900, February 27.
அமெரிக்காவில் ராமகிருஷ்ணா உதவி அமைப்பு ஏற்படுத்தல் Nivedita establishes the “Ramakrishna Guild of Help” in America,
1900, 8 July.காளி மாதா பற்றிய நூல் வெளியீடு
Nivedita’s book Kali the Mother is published.
1900, 29 August.நிவேதிதாவுக்கு சுவாமிஜி வாழ்த்து
Nivedita receives Swamiji’s now famous benediction at Perros-Guirec village, in Brittany, France. “Be thou to India’s future son / The mistress, servant, friend in one.”
1901 May. நார்வே நாட்டுக்குப் பயணம்
1901 September-December. பிரபல விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸின் புஸ்தகம் வெளியிட உதவி
4 Dec 2018 — This is a non- commercial blog. I went to Dungannon, the birth place of Sister Nivedita, disciple of Swami Vivekananda. The Mayor of the town …
11 Dec 2018 — This is a non- commercial blog. Greatest of the Modern Tamil Poets Subrahmanya Bharati met Sister Nivedita on his way back to Madras from the …
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மாறி வரும் மும்பை!
ச.நாகராஜன்
மும்பை மாறி வருகிறதாம்!
இணையதளத்தில் ஒரு அன்பர் இதை வெளியிட அது எங்கும் பரவி வருகிறது.
என்ன தான் சொல்கிறார் அந்த அன்பர் என்பதைப் பார்ப்போம்.
முடிவு மும்பைவாசிகளுடையது தான்!
அவரது பார்வை அவரது வார்த்தைகளிலேயே இதோ:
மும்பையை ஒரு சுற்று சுற்றி வாருங்கள்
டீ, நொறுக்குத் தீனிகள், முட்டை ஆம்லெட், தண்ணீர் ஆகிய அனைத்தும் கடற்கரையிலும் தெருக்களிலும் இஸ்லாமியரே கடைகளை வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் மற்ற வெளி மாநிலங்களிலிருந்து மும்பைக்கு வந்தவர்கள் அல்லது ரோஹிங்யாக்கள்!
சாலை ஓரம் இருக்கும் தள்ளுவண்டிகளில் தேங்காய்களும் கறிகாய்களும் விற்பனை செய்கிறார்களே அவர்கள் அனைவரும் பெரும்பாலும் இஸ்லாமியரே.
மனீஷ் மார்கெட், க்ராஃபோர்ட் மார்கெட், க்ராண்ட் ரோட் ஆகிய இடங்கள் ஒரு காலத்தில் மராத்தியருக்கும் மார்வாரிகளுக்கும் சொந்தமாக இருந்தது. இன்றோ நீங்கள் ஒரு மார்வாரியையோ மராத்தியரையோ அங்கு பார்க்க முடியாது.
இந்த மாற்றம் திடீரென்று ஏற்பட்ட ஒன்று அல்ல.
ஆஜ்மி அல்லது நவாப் மாலிக் போன்றோர் இதற்காகவே வரிந்து கட்டிக் கொண்டு வேலை பார்த்து வந்தனர். தேசீயவாதிகளும் சிவசேனாக்காரர்களும் அவர்களுக்கு ஆதரவைத் தந்தனர்.
இவர்கள் ஒரு நிறுவனத்தை உருவாக்கினர். உத்தரப்பிரதேசத்திலிருந்து வரும் ஒரு இஸ்லாமியர் அல்லது பீஹார், பங்களா தேஷ், வங்காளம் அல்லது ஒரு ரோஹிங்யா தங்கள் இடத்திலிருந்து மும்பை வந்தவுடன் அருகிலிருக்கும் ஒரு மசூதிக்குச் செல்வார். அங்கிருந்து அவர்கள் நவாப் மாலிக் அல்லது அபு ஆஜ்மி நடத்தும் ஒரு என் ஜி ஓ அலுவலகத்திற்குக் கூட்டிச் செல்லப்படுவார்.
அவர்களின் ஆட்கள் யார் யார் எங்கு எங்கு என்ன என்ன தொழிலை நடத்துகிறார்கள் என்பதை நன்கு தெரிந்து வைத்திருப்பவர்கள்.
வருகின்ற ஆளுக்கு ஒரு தள்ளு வண்டி தரப்படும். முழு சாதனங்களும் தரப்படும். அவர் எங்கு செல்ல வேண்டும் என்ன தொழில் செய்ய வேண்டும் என்பதும் சொல்லித் தரப்படும். வருகின்ற வருமானத்தில் ஒரு சிறிது தொகையை கமிஷனாக அவர் என் ஜி ஓ விற்குத் தர வேண்டும்.
மும்பையின் ஜனத்தொகை இப்படியாக வெகு வேகமாக மாறி வருகிறது.
மிரா ரோட், கார், க்ராண்ட் ரோட், பைகுல்லா, அப்துல்ரஹ்மான் வீதி, மொகம்மது அலி ரோட், பாம்பே சென் ட் ர ல், க்ராஃபோர்ட் மார்கெட், சாந்தாக்ரூஸ், அந்தேரி வெஸ்ட், ஜோஹேஸ்வரி, ஓஷிவாரா, ராம் மந்திர் ஸ்டேஷன், கோரேகான் வெஸ்ட், மல்வானி, சார்கோப் மற்றும் இதர பல பகுதிகள் இஸ்லாமியரின் வலிய கோட்டையாக மாறி வருகிறது.
இப்போது இந்தப் பகுதிகளில் ஒரு ஹிந்து தேர்தலில் நின்று நிச்சயம் ஜெயிக்க முடியாது.
என் சி பி தலைமையில் மேலே சொல்லப்பட்ட என் ஜி ஓக்கள் ஒரு புதிய இயக்கத்தைத் துவங்கி உள்ளனர்.
அது என்னெவெனில் மும்பை காவல் படையில் அதிகமதிகம் இஸ்லாமியரைச் சேர்ப்பது தான்.
இதற்காகப் பல பயிற்சி மையங்கள் ஸதாரா கோல்ஹாபூர், சாங்லி, ராய்காட், அஹ்மத்நகர், புனே, நாக்பூர், மும்பை ஆகிய இடங்களில் துவங்கி உள்ளன. இவைகள் உத்தரபிரதேசம், பீஹார், வங்காளம் ஆகிய இடங்களிலிருந்து வரும் இஸ்லாமியருக்கு மராத்தி மொழியைக் கற்பிக்கின்றன. ஆகவே அவர்கள் எளிதாக போலீஸ் சோதனைத்தாள்களை எதிர் கொள்ள முடியும்.
அவர்களுக்குத் தங்குமிடம் இலவசம். மாதம் உதவித்தொகை ஒவ்வொருவருக்கும் 8000 ரூபாய் வழங்கப்படுகிறது.
2023ஆம் ஆண்டுக்குள் மஹராஷ்டிரா போலீஸ் படையில் 30 சதவிகிதம் பேர் இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை ஒரு கடிதத்தில் நவாப் மாலிக் தெரிவித்துள்ளது வெளி வந்திருக்கிறது.
‘மராத்தி மண் எனக்கே’ என்று சொல்லிக்கொண்டு மார் தட்டும் மராத்திய வீரனுக்கு இப்படி கோஷம் போடத் தான் தெரியுமே தவிர உண்மையான நாட்டு நடப்பு என்ன என்பதே தெரியாது.
அட, என்ன ஒரு பரிதாபம்!
இப்படி முடிகிறது கட்டுரை.
மும்பைவாசிகள் தான் இதைப் பற்றி யோசித்து, அங்குமிங்கும் சென்று பார்த்து உண்மையைச் சொல்ல வேண்டும்!
நன்றி : கல்கத்தா ஆங்கில வார இதழ் ட்ரூத் தொகுதி 91 இதழ் 8
3a.சாளுக்கியரின் தலைநகர்; இப்போது கர்நாடகத்தில் குடைவரைக் கோவில் உள்ள இடம் (go up)
4 a .பலவகைப் பூக்களைத் தொடுத்தால் அதை இப்படி அழைப்பர்
6., ரகுவம்சம் குமார சம்பவம் முதலியவற்றை புலவர் பெயருடன் இப்படிச் சொல்வோம்
7.பவுத்தர்களின் புனித நூல் (go up)
8.பல ஆயிரம் ஆண்டு தவம் செய்து கங்கையைக் கொண்டுவந்த புராண புருஷன் (go up)
9.மான் கொம்பு முனிவரின் ஸம்ஸ்க்ருதப் பெயர்
10.வேதத்தின் ஒரு பிரிவு; ஆர் எஸ் எஸ் .காரர்கள் தினமும் சந்திக்கும் கிளை (Go diagonal)
11.ஒரு தேசம்; நள சக்ரவர்த்தி நாடு , (go up)
11. வண்ணம் என்பதன் தமிழ்ச் சொல்
13.கிருஷ்ணருடைய குலம்
14.செயல், வேலை என்பதற்கு எல்லோரும் பயன்படுத்தும் ஸம்ஸ்க்ருதச் சொல்
17. ஒருவன் குடும்பஸ்தனாக மாறி மனைவி மக்கள் வந்துவிட்டால் இப்படிச் சொல்லுவோம், (go up)
Xxxxx
விடைகள்
2.அமிர்தம்;3.தாகம், (left to right);4.மகரம்; 4.மலபார்(left to right); 5.கீதம்(left to right); 6.காதம்பரி; 11.நிவேதிதா; 12.சவ்யசாசி; 15.விறகு; 16.ஹம்சம்
Xxxxxxxxxxxxxxxxx
DOWN கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)
On the auspicious day of 6 July 2023, between 11 am and 12 noon, it has been decided by the elders of Vivekanandan and Ramaswami families that the wedding between
Chiranjeevi Viswanathan
(the Dauhitran of Shrimathi Mathangi, grandson of Ramachandran and son of Vivekanandan)
( Note dauhitra—grandson (daughter’s son))
and
Sowbhagyavathi Visalakshi
(Dauhitri of Shrimathi Shyamala, granddaughter of Ramanathan and daughter of Ramaswami)
In Part 9 , we learnt about Purushasukta Homam, Sri Sukta Homam and Gayatri Homam.
In Part 10 , we learnt about Bhagavad Gita homa, Pratyangara Sarabha Sulini Homa and Chandi Homa
xxxx
Now Part 11
Sudarsana Homam is one of the powerful Homas to control enemies and eliminate evil forces. It is done as a ghost busting homa as well. If one is worried about some inimical activities of enemies Sudrsana Homam is the best solution to nullify the evil effects. Vaishnavites don’t do Saivite Homas and so they do Sudarsana Homa.
Sudarsana is the wheel in the right hand of Vishnu. It has eliminated many of his and Krishna’ enemies. Hindus, and not Australian aborigines, invented boomerang. If Sudarsana wheel is thrown in a particular angle it will finish the intended action and comes back to the thrower. Mythology lists a long list of victories that obtained through Sudarsana wheel. In all the Tamil Vaishnavite tempes there is a shrine for Sudarsana Chakra/wheel. In Tamil it appears as a man amidst wheel and it is called Chakra (th) Alvar.
Xxx
How to do it ?
We need priests who know the Vedic rituals to do it. It contains all the preliminaries of erecting a fire pit and Sankalpa (purpose).
There are special Sudarsana mantras to be used in the homa. Varuna is invoked in the water filled metal pots.
Then Sudarsana is worshipped with the Dhyaana Mantra. Pancha Puja (Chandan, Pushpa/flowers, Doopa, Deepa, Naivedyam) offering is done.
Main Homa
With rice and ghee, with Sweet Pongal, with Naayuruvi Samiththu (Plant Achyranthes aspera)336 times or 1008 times offerings are placed in the fire. During this Sudarsana mantras are used.
Priests recite Purusha suktam, Vishnu Suktam and Narayanasuktam from the Vedas.
Final offering (Purnaahuti) is done with the relevant mantras.
This Homa is done in the houses as well as in the temples.
Vaishnavite priests are very familiar with the rituals.
–subham–
Tag- Sudarsana Homa, Chakraththalvar, Wheel, Hindu Boomerang