ஜீனியஸாக ஆக ரைகாவ் எஃபெக்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! (Post No.11,120)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,120

Date uploaded in London – –    20 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஜீனியஸாக ஆக ரைகாவ் எஃபெக்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!

ச.நாகராஜன்

தனக்கு ஆர்வமுள்ள துறையில் பிரகாசிக்க முடியவில்லையே என்ற கவலை பலருக்கு; ஜீனியஸாக ஆக முடியவில்லையே என்ற கவலை சிலருக்கு!

ஏதேனும் வழி இருக்கிறதா, எண்ணியதை அடைய?

இருக்கிறது என்கிறார் விஞ்ஞானி ரைகாவ்!

இவரது ஆய்வு ‘ரைகாவ் எஃபெக்ட்’ என்று அழைக்கப்படுகிறது.

டாக்டர் விளாடிமிர் ரைகாவ் என்பவர் ஒரு ரஷிய விஞ்ஞானி. மூளையியல் நிபுணர். (Dr Vladimir Raikov – Neuropshychologist)

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் மூளை பற்றிய ஒரு ஆய்வை அவர் மேற்கொண்டார்.

தனது ஆய்விற்காக அவர் சில கல்லூரி மாணவர்களை அழைத்தார்.

அவர்களை ஆழ்ந்த ஹிப்நாடிஸ நிலையில் கொண்டு சென்று அவர்கள் உண்மையிலேயே மிகப் பெரிய ஜீனியஸ் என்று நம்புமாறு செய்தார்.

விளைவு அவர்கள் அப்படியே ஆனார்கள்.

இவர்களில் ஒரு பெண்மணி இருந்தார். அவர் வண்ண ஓவியங்கள் தீட்டுவதில் வல்லவர் என்பதை அவர் நம்பும்படி செய்யவே அவர் அற்புதமான ஓவியங்களைப் படைக்க ஆரம்பித்தார்.

ரைகாவ் கூறும் அடிப்படை வழிமுறைகள் இவை:

ஹிப்நாடிஸம் மூலமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு ஒருவரைக் கொண்டு சென்று தான் எதுவாக ஆக விரும்புகிறாரோ அதை நம்பச் செய்வது முதல் வழி. (Hypnosis and Deep trance)

இரண்டாவது பூரண ஓய்வான நிலை அடைதல். (Relaxation)

தான் நினைத்ததை அடைய பூரண ஓய்வான நிலையை ஒருவர் அடைய வேண்டும். அதற்கு சில சுவாசப் பயிற்சி  முறைகள் உண்டு. மிக அமைதியான சூழ்நிலையில் வெளி உலக தொந்தரவு இல்லாமல் ஒருவர் இருக்க வேண்டும்.

அடுத்து அகக்கண்ணில் காணல் (Visualization)

ஆழ்ந்த ஓய்வான நிலையில் தனது ஆதர்சமான ஒருவரை ஒருவர் அகக்கண்ணில் பார்க்க வேண்டும். அது மொஜார்ட்டாக இருக்கலாம் அல்லது அவரது துறையில் மிக வல்லவராக இருக்கலாம். அவரை ஆழ்மனதில் நினைக்க ஆரம்பிக்கவே அவரது நடை உடை பாவனைகள் திறமைகள் அனைத்தும் வர ஆரம்பிக்கும்.

அடுத்து யோசனை கூறல் (Suggestion)

தனக்குத் தானே யோசனை கூறல் அடுத்த வழி. யோசனைகள் மூலம் வலுவான எண்ணங்களை உருவாக்க முடியும். அது நிபுணராக ஆக வழி வகுக்கும்.

ஆக்கபூர்வமாக எண்ணல் (Positive Thinking)

அடுத்து பாஸிடிவ் திங்கிங்  எனப்படும் ஆக்கபூர்வமான அணுகுமுறையும் எண்ணும் மனப்பான்மையும் ஜீனியஸாக ஆவதற்கான முக்கியமான வழிமுறையாகும். திட்டமிட்டபடி தனது நிலையை உயர்த்த அது சம்பந்தமான ஆக்க பூர்வமான அணுகுமுறை பற்றி எண்ணி தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

நம்பிக்கை. (Belief)

தான் நினைத்த நிலையை அடைந்து விட்டதாகவே உறுதியாக நம்புதல் முக்கியமான ஒன்று. இதையும் பயிற்சி செய்து விட்டால் நிஜமாகவே ஒரு ஜீனியஸ் ஆகி விடலாம்.

இறுதியாக மாடலிங்  (Modeling).

தான் எப்படி ஆக வேண்டுமென்று நினைக்கிறாரோ அப்படியே ஆனதாக நினைத்து நடை உடை பாவனைகளை மேற்கொள்ளல்.

இந்த வழிமுறைகளை இதைப் பற்றிச் சிறிதும் நம்பாதவர்களுக்கும் ரைகாவ் சொல்லிக் கொடுத்தார்; பயிற்றுவித்தார்.

விளைவு அபாரமாக இருந்தது!

அனைவரும் ரைகாவின் நடைமுறைகளைத் தெரிந்து கொண்டு அதை ரைகாவ் எஃபெக்ட் என அழைக்க ஆரம்பித்தனர்.

இப்போது உளவியலாளர்கள் இதில் சில மாற்றங்களைச் செய்து அனவைருக்கும் பயிற்றுவிக்கின்றனர்.

சுய முன்னேற்றத்தை ஊக்குவித்துக் கற்றுத் தரும் பயிற்சியாளர்கள் இந்த அடிப்படையில் தமது பயிற்சி வகுப்புகளை அமைத்துக் கொண்டிருக்கின்றனர்.

நாமும் ஜீனியஸ் ஆக ஒரு வழி : – ரைகாவ் எஃபெக்ட்!

ரைகாவ் எஃபெக்ட் மூலமாக எதை எதை அடையலாம் என்பதற்கு ஒரு பட்டியலே இருக்கிறது.

தன்னம்பிக்கையைக் கூட்டிக் கொள்ளலாம்.

உடல் எடையைக் குறைத்துக் கொள்ளலாம்.

நினைவாற்றலைக் கூட்டிக் கொள்ளலாம்.

படைப்பாற்றலை அதிகரிக்கலாம்.

புது திறமை ஒன்றை தெரிந்து கொண்டு, வளர்த்துக் கொள்ளலாம்.

ஆக்க பூர்வமான அணுகு முறையை எதிலும் மேற்கொள்ளலாம்.

எதிர்மறை எண்ணங்களை அறவே அகற்றலாம்.

அன்றாட வாழ்வில் நிம்மதி, மகிழ்ச்சி, திருப்தி நிலையை அடையலாம்.

ஆளுமைத் திறனைக் கூட்டலாம்.

கவலையை ஒழிக்கலாம்.

கவனத் திறனைக் கூட்டிக் கொள்ளலாம்.

சுய மரியாதையை அதிகரித்துக் கொள்ளலாம்.

ஒழுக்கம், கட்டுப்பாடு கொண்ட உயர் வாழ்வை அமைக்கலாம்.

நிதி நிலையில் மேம்படலாம்.

மொத்தத்தில் செயல் திறனை அதிகரித்து வெற்றியாளராகத் திகழலாம்.

***

tags-  ரைகாவ் எஃபெக்ட் ,

புத்தக அறிமுகம் – 3

நடந்தவை தான் நம்புங்கள்

(சிரிக்கவும், சிந்திக்கவும்)

ச.நாகராஜன்

பொருளடக்கம்

முன்னுரை

அத்தியாயங்கள்

  1. நடந்தவை தான் நம்புங்கள்! – 1                                1. கண்பார்வையற்றவரின் த்ரில்!                              2. ஒரு டி.வி.வேண்டுமே!                                       3. ஒரு ஆட்டிற்கு இவ்வளவு தீனியா?
  2. நடந்தவை தான் நம்புங்கள்!  – 2                              1. இரண்டு எதிர்மறை பதங்கள்                               2. வேலைக்கான அனுபவம்
  3. நடந்தவை தான் நம்புங்கள்! – 3                               1) 24 எழுத்தில் பதில்!                                          2) பார்வை இருந்தும் பார்க்காதவர்கள்                       3) பிகாஸோவின் ஓவியங்கள்
  4. நடந்தவை தான் நம்புங்கள்!  – 4                              1) கடவுளைக் காட்டு!                                           2) ஷூர்                                                          3) வக்கீலின் தவறும் டாக்டரின் தவறும்
  5. நடந்தவை தான் நம்புங்கள்!  – 5                               1) தோல்வி அடைந்த சர்வே!                                  2) அரசியல்வாதி யார்?                                         3) நரகம் பற்றிய விளக்கம்
  6. நடந்தவை தான் நம்புங்கள்! – 6                               1) அவ்விடத்து ஞானம்!                                        2) பயிற்சியின் மகிமை!                                        3) ஒரு கம்பி வயலினில் வாசிப்பு!
  7. நடந்தவை தான் நம்புங்கள்! – 7                               1) இரண்டு அருமையான மகன்கள்!                           2) அரைகுறை ஆங்கிலம் தெரிந்த போலிஷ்காரர்!
  8. நடந்தவை தான் நம்புங்கள்! – 8                               1) சந்தைக்குச் சென்ற சாக்ரடீஸ்                              2) உண்மையான காதலன்                                     3) அட, எருமையே!
  9. நடந்தவை தான் நம்புங்கள்! – 9                               1) அம்மாவை விட அதிகம் வயதான பெண்                 2) மிஷனரியை “வச்சு வாங்கிய” ஐயர்
  10. நடந்தவை தான் நம்புங்கள்! – 10                               1) தாடியின் நீளத்திற்குத் தக அறிவு!                              2) காலைப் பார்; பேரைச் சொல்லு!                              3) முகம் கழுவ ஒரு டாலர்: முடி வெட்டவும் அதே டாலர்!                                                     4) குதிரையும் கழுதையும்                                      5) கடவுள் கூட எட்டாத நிலை!
  11. நடந்தவை தான் நம்புங்கள்! – 11                               1) மாமியாரைக் கொன்று விட்டேன்!                           2) கிளியின் வயது என்ன?                                     3) கரைசலில் காசு கரையுமா?
  12. நடந்தவை தான் நம்புங்கள்! – 12                                1) கடவுளும் காமன்வெல்த்தும்                                2) பயிற்சி மாஹாத்மியம்!                                       3) வருத்தப்பட்டது உண்மை, ஆனால்…!                       4) யார் போக்கிரி?!
  13. நடந்தவை தான் நம்புங்கள்! -13                          மூன்று அம்மாக்கள்                                            1) ஜாக் வெல்ச்                                                  2) தாமஸ் ஆல்வா எடிஸன்                                   3) மணலில் விழுந்த பையன்
  14. நடந்தவை தான் நம்புங்கள்! – 14                        மூன்று விளையாட்டு வீரர்கள்                                 1) நீ பாதி; நான் பாதி, நண்பா!                                 2) 19 ஒலிம்பிக் மெடல் வென்ற ‘கவனக்குறைவு வியாதி’ கொண்ட வீரர்!                                                  3) ஸ்கோர் என்ன?
  15. நடந்தவை தான் நம்புங்கள்! – 15                                   1) தூக்க ஊக்கிகள்!                                             2) நகரக் காவலன்                                              3) நக்ஷத்திரங்களுக்கு நன்றி!                                  4) மூன்று நிபுணர்களின் ஆலோசனை
  16. நடந்தவை தான் நம்புங்கள்! – 16                              1) மனச்சாட்சியுடன் பயணம் செய்பவர்கள்                   2) அரை டிக்கட்டா, முழு டிக்கட்டா?                          3) டிக்கட் கலெக்டரின் பேச்சை சமாளித்த நண்பர்
  17. நடந்தவை தான் நம்புங்கள்! – 17                              1) உள்ளது உள்ளபடி பதில்! உடனுக்குடன் பதில்!!            2) பெண்களிடம் பிடிப்பது என்ன?                              3) இரண்டு மனைவிக்காரனுக்கு என்ன தண்டனை?         4) எப்படி வண்ணக் கலவையை உருவாக்குகிறீர்கள்?       5) மாமியாருக்கு மறு பெயர் என்ன?
  18. நடந்தவை தான் நம்புங்கள்!  – 18                 விதவிதமான புத்திசாலிகள்                                                1) வக்கீலின் தர்ம சங்கடம்                                    2) ஸ்வீடன் மன்னருக்கும் தெரியாத விஷயம்                3) மூன்று கடித உறைகள்!
  19. நடந்தவை தான் நம்புங்கள்! – 19                 விதவிதமான பதில்கள்                                        1) ரோஜா மலரே, சண்டைக்காரி                              2) வஞ்சப் புகழ்ச்சி                                               3) அது தான் இல்லையே!                                      4) அழகான பேச்சு                                              5) ஜீரண சக்தி உள்ள டியூக்!
  20. நடந்தவை தான் நம்புங்கள்! – 20                              1) மார்க் ட்வெயினின் குடை                                   2) தனித்து விடப்பட்ட தீவில் செஸ்டர்னுக்குப் பிடித்த புத்தகம்!                                                         3) ஹெச்.ஜி.வெல்ஸின் கடைசி வார்த்தைகள்!                4) அம்மாவும் அப்பாவும்                                       5) சர்ச்சிலின் வார்த்தைகள்
  21. நடந்தவை தான் நம்புங்கள்! – 21                              1) திருமண கவுன்ஸலிங்!                                       2) ட்வெயினின் மனைவியின் கோபம்!                        3) பயனுள்ள வாக்கியம்!                                       4) கடவுளுக்கான மார்க்!                                        5) க்வீன் எலிஸபத்திற்குத் தேவையில்லாத புத்தகம்
  22. நடந்தவை தான் நம்புங்கள்! – 22                              1) ஜான் ட்ரைடனின் மனைவி                                 2) பெர்ஃபெக்ட் ஜெண்டில்மென்!                                3) மனைவியுடன் வாதாடுவது!
  23. நடந்தவை தான் நம்புங்கள்! – 23                               1) கல்லறை ‘கால்’கள்!                                         2) வீதியில் கூட்ட்ஃம்! வெலவெலத்துப் போன அதிகாரிகள்!                                                      3) ஜோதிடருக்கே ஜோஸ்யம்!                                   4) ஒரு உண்மையான ஜோஸ்யக் குறிப்பு
  24. நடந்தவை தான் நம்புங்கள்! – 24                              1) விவேகானந்தரை மிரட்டிய இளம் பெண்கள்!               2) முட்டாள்களைப் பார்ப்பது முதல் முறையல்ல!           3) ‘நெட்’டைப் பயன்படுத்தத் தடை                             4)  கணிதப் பேராசிரியரின் வாக்கியம்!
  25. நடந்தவை தான் நம்புங்கள்! – 25                              1) கணவனும் மனைவியும் ஒருவரே!                         2) உலகத்தில் வாழ்ந்ததிலேயே மிக உயர்ந்தவர் யார்?       3) உனக்கு நஷ்டம்                                               4) கல்லறையும் நாடும்                                          5) ஒரு டெமாக்ரட்டும் ஒரு ரிபப்ளிகனும்!
  26. நடந்தவை தான் நம்புங்கள்! – 26                              1) கூடுதலாக வந்த நாணயங்கள்!                             2) ஒரு அணாவுக்கு இருவர் எடை பார்ப்பது எப்படி?         3) மொழிக் குழப்பம்
  27. நடந்தவை தான் நம்புங்கள்! – 27                              1) கொசுக்கள் பற்றிய புள்ளி விவரம் தேவையா?           2) மெஜாரிட்டியும் லாஜிக்கும்!                                   3) டீயே மதுரம்!                                                 4) டைம் அண்ட் ஸ்பேஸ்                                      5) பெர்னார்ட் ஷா ஒரு இசைப் பிரியரா?                      6) டிக்‌ஷனரியை ஜான்ஸன் தொகுத்தது எப்படி?

முடிவுரை

நூலில் நான் தந்திருக்கும் முன்னுரை இது:

முன்னுரை

மாபெரும் மேதைகளின் வாழ்விலிருந்து பல முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

சிலரது புத்திசாலித்தனம் அவர்களது பேச்சில் மின்னும்; சிலரது கிண்டலும், கேலியும், நையாண்டியும், நகைச்சுவையும் அவர்களது சொற்களில் ஒளிரும்.

மக்களிடையே பிரபலமானவர்களது செயல்களும் சுவையான சம்பவங்களும் பலராலும் தொகுக்கப்பட்டு வழி வழியாக அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

சில சமயங்களில் மேதைகளையும் அறிஞர்களையுமே சாமான்யர்கள் மடக்கி விடுவதுமுண்டு.

அன்றாடம் ஆங்காங்கே நடக்கும் சில சுவையான சம்பவங்களிலும் நகைச்சுவை நன்கு பரிமளிக்கும்!

இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான சம்பவங்களைத் தொகுத்து வைத்துள்ளேன். நெட்டிலும், பல தமிழ், ஆங்கில இதழ்களிலும், புத்தகங்களிலுமிருந்து தொகுக்கப்பட்டவை இவை.

இவற்றைத் தமிழில் தர வேண்டுமென்ற நோக்கத்தில் ‘நடந்தவை தான் நம்புங்கள்’ தொடரை லண்டன் திரு எஸ். சுவாமிநாதன் அவர்களின் www.tamilandveads.comஇல் அவ்வப்பொழுது வெளியிட்டு வந்தேன்.

நூறுக்கும் குறைவான சம்பவங்களே இந்தத் தொடரில்  தரப்பட்டுள்ளது. இவை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.

தொடரை உற்சாகமாக அனைவரும் வரவேற்றனர்.

இதை வெளியிட்ட லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களுக்கும், படித்து ஊக்கமூட்டிய அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

இந்தத் தொடரை நூல் வடிவில் வெளியிட முன்வந்த  Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!

.

நன்றி.

சான்பிரான்ஸிஸ்கோ                   ச.நாகராஜன்

11-7-2022

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***

சுவையான சமண மத உவமைகள்- கர்ம வினை என்ன செய்யும்? (Post No.11,119)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,119

Date uploaded in London – –    19 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஒருவன் செய்த செயல்கள் என்ன செய்யும் என்பதற்கான இந்துமத உவமையை  திருவள்ளுவர் அளித்தார்.

புத்தமத உவமையை கவுதம புத்தர் அளித்தார்.

வள்ளுவர் சொன்னார்,

தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை

வீயாது அடிஉரைந்தற்று (குறள் 208)

பொருள்

தீய செயல்களைச் செய்தவர்கள் தீச்செயலின் பயனை அனுபவித்து அழிவது உறுதி. இது ஒருவனுடைய நிழல் அவனோடு பின் தொடர்ந்து சென்று அவன் அடியில் இருப்பது போன்றது.

ஒருவனுடைய நிழல் ஒருவனை எப்படித் தொடர்கிறதோ அப்படி அவன் செய்த செயல்களும் அவனுடன் வரும்.

புத்தர் சொன்னார்

ஒருவன் கெட்ட எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்குத் துன்பம், வண்டி மாட்டின் மீது அந்த வண்டிச் சக்கரங்கள் எப்படி தொடர்ந்து வருகின்றனவோ அப்படி வரும்.

 ஒருவன் நல்ல எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்கு இன்பம், ஒருவனுடைய நிழல் எப்படி அவனைத் தொடர்ந்து வருகின்றதோ அப்படி வரும்.- தம்மபதம் 1,2

XXX

மஹாவீரர் முதலிய சமண சமய தீர்த்தங்கரர்கள் அளித்த செய்திகளை சமண மதத்தினர் அர்த்தமாகதி மொழியில் செய்யுட்களாகத் தொகுத்து வைத்துள்ளனர்.அவற்றைக் காண்போம்.

(ஸம்ஸ்க்ருதம் அறிந்தவர்கள் பிராகிருத மொழியின் எந்த வகையையும்  எளிதில் புரிந்து கொள்ளுவார்கள். அது கொச்சைமொழி; அதாவது பேச்சு வழக்கு. தமிழிலும் பிராகிருதம் உண்டு. பழந்தமிழ்  இலக்கியங்கள் செம்மொழி.;  இப்பொழுது வரும் தமிழ் நாவல்கள், கதைகள் பிராகிருதம் போன்ற கொச்சைத் தமிழ் மொழி .)

தேணே ஜஹா ஸந்திமுகே  கஹீயே

ஸகம்முணா கிஞ்சஇ  பாவகாரீ 

ஏவம் பயா பேச்ச இஹம் ச லோயே

கடா ண கம் மாண ந மோக்கு அத்தி

பொருள்

வீட்டில் கன்னம் வைத்து திருடும் திருடன் எப்படி அவன் அந்த கன்னத்தா லேயே அழிவானோ அதே போல ஒருவன் செய்த தீ வினையாலேயே அவன் அழிவான் . அவ்வாறே ஒருவர் செய்த கர்மம்/ வினைகள் இப்பிறப்பிலும் மறு பிறப்பிலும் அவரைத் தொடர்ந்து வரும் ; தப்பிக்கவே முடியாது.

இந்த ஸ்லோகத்துக்கு உரை/ வியாக்கியானம் எழுதிய தேவேந்திரா , நம் மனக் கண் முன்னர், இரண்டு காட்சிகளை வைக்கிறார்.

( வீட்டின் சுவரில் ஓட்டை போட்டுத் திருடுவதைக் கன்னம் வைத்தல் என்பர். இதுபற்றிய விவரங்களை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சூத்ரகர் என்பவர் மிருச்சகடிகம் என்னும் நாடகத்தில் ஸம்ஸ்க்ருதத்தில் எழுதியுள்ளார். அதை பண்டித கதிரேச செட்டியார் மண்ணியல் சிறுதேர் என்று தமிழாக்கம் செய்துள்ளார். அதில் திருட்டு நூல் பற்றிய பல சுவையான விஷயங்கள் வருகின்றன. திருடர் கடவுளான முருகனை அவன் வழிபட்டுவருவதும் , திருடப் போகும் வீட்டின் சுவரைப் பார்த்துவிட்டு அதற்குத் தக்க வடிவத்தை ஆராய்ந்து எடுத்து, ஓட்டை போடுவதும் வருகிறது. எந்தெந்த சுவருக்கு என்ன என்ன வடிவம் சிறந்தது என்பதை அந்த நூல் விளம்புகிறது. திருடன் கூட ஒரு கலைஞன் ; வீட்டிற்குத் தக்க தாமரை, அல்லது பறவை அல்லது மிருகம் வடிவில் ஓட்டை போட்டுத் திருடுவான்.)

xxx

தேவேந்திரா எழுதிய உரை சொல்வதாவது —

திருடர்கள் முதலில் கால்களைக் கன்னம் (ஓட்டை) வழியாக நுழைப்பர்.. சப்தம் கேட்டு வீட்டுக்காரர் வந்துவிட்டால் அவர் அவன் கால்களைப் பிடித்து இழுத்து யார் அவன் என்பதைக் காண முயல்வார். அதே நேரத்தில் அவன் போடும் கூச்சலைக் கேட்டு அவனுடைய கூட்டாளி அவன் தலையைப் பிடித்து இழுப்பான். அந்த நேரத்தில் வீட்டின் சுவர் இடிந்து மண்ணுக்குள் புதைந்து திருடன் உயிர் இழப்பான்.

இரண்டாவது  காட்சி

ஒரு திருடன்,  வீட்டின் சுவரில் ஒரு சிறிய அழகான சித்திரம் வரைந்து கன்னம் வைத்து வீட்டிற்குள் நுழைந்து திருடிவிட்டுப் போகிறான். மறுநாள் அந்த ஊர் மக்கள் அனைவருக்கும் செய்தி பரவிவிடுகிறது. அவர்கள் எல்லாரும்  திருடன் போட்ட சித்திரக் கன்னத்தைப் பார்த்து வியக்கின்றனர். எவ்வளவு அழகான வடிவத்தில் கன்னம் வைத்தான் என்பர் சிலர்; அட, இத்தனை சிறிய ஓட்டைக்குள் அவன் உடல் எப்படி நுழைந்தது என்று வியப்பர் மற்றும் சிலர். நகர காவற்காரரும் திருடனைப் பிடிக்க, தடயம் இருக்கிறதா என்பதைக் காண அங்கு வருவார்கள். அதே நேரத்தில் திருடனுக்கும் தன் திறமை பற்றி ஊர் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்கும் ஆசை பிறந்து அங்கே வருகிறான்.

ஒவ்வொருவர் விமர்சனம் செய்யும்போதும் அவன் முக பாவம் மாறுபடுகிறது. இதை எல்லாம், ஊர்க் காவலர்கள் (போலீஸ்) பார்த்து விடுகின்றனர். ஒருவர் இத்தனை சிறிய ஓட்டைக்குள் அவன் உடல் எப்படித்தான் புகுந்ததோ என்று விமர்சிக்கும்போது, திருடனும் தன் உடலைத் தானே அளந்து, வியந்து மகிழ்கிறான். போலீஸ்காரர்கள் அவனைப் பிடித்து உதைத்தபோது அவன் திருடியதை ஒப்புக்கொள்கிறான்  .

இதுதான் இந்த ஸ்லோகத்தின் பொருள் என்கிறார் உரைகாரர்.

இதனால்தான் திருட்டு முழி முழிக்கிறான் பார் என்ற வசனத்தையும், தினை விதைத்தவன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற வசனத்தையும் தமிழர்கள் அடிக்கடி பயன்படுத்துவர்.

XXX

இன்னும் ஓரிரு உவமைகளைக் காண்போம் :

ஜஹா மஹாதலாகஸ்ய ஸன்னி ருத்தே  ஜலாகமே

உஸ் சி ஸணா யே தவணா யே கமேண ம்  ஸோ சணா பவே

ஏவம் து ஸஞ்ஜயஸ்ஸா வி  பாவ கம்ம நிராசயே

பாவ கோடீ ஸஞ்சியம் கம்மம் தவஸா நிஜ்ஜ ரிஜ்ஜயி

பொருள்

ஒரு பெரிய ஏரிக்குள் வரும் தண்ணீர் நின்று போனவுடன் (கோடை காலத்தில்) ஏரியிலுள்ள நீரைப் பயன்படுத்துவதாலும், வெய்யிலில் ஆவியாவதாலும் நீர் வற்றிப் போகும். இதே போல கோடிக்கணக்கான பிறவிகளில் ஒரு சந்நியாசி சேர்த்துவைத்த கர்ம வினைகள் யாவும் புதிய கர்மம் செய்யாததால் அழிந்து போகும்.

(இங்கு கர்ம வினைகள் தண்ணீருக்கும், வற்றிப்போவது ஒருவர் செய்யும் தவத்துக்கும் உவமையாக வருகின்றன)

xxx

அடுத்த பாடலில் சுரைக்காய் உவமை, வேர் அற்றுப்போன மர உவமைகள் வருகின்றன..

வேர் அழிந்துவிட்டால், என்னதான் தண்ணீர் ஊற்றினாலும் மரம் வளராது. ஆசை என்னும் மோகம் அழிந்த பின்னர் கர்மங்கள் / வினைகள் துளிர் விடா.

ஒரு காய்ந்த சுரைக் காய் நீரில் மிதக்கும். அதன் மீது மண் படிந்து கனம் ஆகிவிட்டாலோ அது தண்ணீரின் அடிமட்டத்துக்குப் போய்விடும்.. ஒருவர் கர்ம வினைகள் என்னும் மண் படியப்  படிய  கீழ் பிறப்புகளை அடைவர். மண் அடுக்குகள் நீங்கினால் எப்படி சுரைக்குடுக்கை எப்போதும் நீர் மீது மிதக்குமோ அவ்வாறே கர்மவினைகள் விடுபட்டால், சித்தர்கள் வசிக்கும் சித்த சீலாவுக்கு ஆன்மா போகும். மீண்டும் பிறவி ஏற்படாது .

இவற்றைப் படிக்கும்போது, விவேக சூடாமணியில் ஆதி சங்கர் சொல்வதையும் , பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்வதையும் நம் மனம் ஒப்பிட்டுப் பார்க்கும்.

புத்த, சமண, சீக்கிய மதங்கள் , இந்துக்கள் சொல்லும் கர்ம வினைக் கொள்கையை அப்படியே ஏற்கின்றன. யூத , கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் இவற்றை ஏற்பதில்லை. அவர்களுக்கு கர்மா பற்றியோ மறு பிறப்பு பற்றியோ தெரியாது .

–சுபம் –

Tags-  சுவையான, சமண மத, உவமைகள், கர்ம வினை,  கன்னம் வைத்தல், கர்ம வினை,

TEACHER- STUDENT JOKES; Not Easy to be a Teacher! ( Post No.11,118)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,118

Date uploaded in London – 19 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞானமொழிகள்-98

Ambani : ” If I start driving my car at sunrise, I will not be able to cover half of my estate properties even by sunset “

Sardarji : ” Even I had such a useless car but I sold it.. “

XXX

*Teacher:* ”Construct a sentence using the word “sugar”

*Pupil:* ”I drank tea this morning.”

*Teacher:* ”Where is the word sugar.”

*Pupil:* ”It is already in the tea..!!”

*Not Easy to be a Teacher !!!!!*

XXX

*TEACHER*: Our topic for today is Photosynthesis.

*TEACHER* : Class, what is photosynthesis?

*Student*: Photosynthesis is our topic today.

*Not Easy to be a Teacher !!!!!*

XXX

*TEACHER* : John is climbing a tree to pick some mangoes. ( Begin the sentence with Mangoes)

*Student* : Mangoes, John is coming to pick you…

*Not Easy to be a Teacher !!!!!*

XXX

*TEACHER* : What do you call mosquitoes in your language?

*Student*: We don’t call them, they come on their own…

*Not Easy to be a Teacher !!!!!*

XXX

*TEACHER* : Name the nation, people hate most

*Student*: Exami-nation…

*Not Easy to be a Teacher !!!!!*

XXX

*TEACHER* : How can we keep our school clean?

*Student*: By staying at home…

*Not Easy to be a Teacher !!!!!*

XXX

*TEACHER* : One day our country will be corruption free. What tense is that??

*Student*: Future impossible tense…

*AND THE STRUGGLE CONTINUES!!!!!

XXX

God Bless Our, Teachers 😂😂

Tags- ஞானமொழிகள்-98

விநாயக் தாமோதர் சவர்கார்! (Post No.11,117)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,117

Date uploaded in London – –    19 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

(சாவர்க்கரின், அரிய படங்கள், லண்டன் பல்கலைக்கழக நூலக புஸ்தகங்களிலி ருந்து எடுக்கப்பட்டன.)

விநாயக் தாமோதர் சவர்கார்!

ச.நாகராஜன்

இந்தியாவில் ஹிந்துத்வத்தை வலியுறுத்திய மாபெரும் மனிதர் விநாயக் தாமோதர் சவர்கார்.

காங்கிரஸை மிக கடுமையாக எதிர்த்ததால் அவரை சுதந்திரத்திற்குப் பின்னால் வந்த காங்கிரஸ் அரசு சரியாகக் கண்டு கொள்ளவில்லை.

மஹாத்மா காந்திஜியின் அஹிம்ஸை கொள்கையை அவர் ஆதரிக்கவில்லை. வலிமையாக எதிர்த்தார்.

காந்திஜி கோட்ஸேயால் கொலை செய்யப்பட்டவுடன், சவர்கார் மும்பையில் அவர் இருந்த வீட்டில் கைது செய்யப்பட்டார்.

ஆனால் பின்னர் நடந்த விசாரணையில் அவருக்கும் காந்திஜி கொலைக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டது. விடுதலையானார்.

1883ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி நாசிக் அருகில் உள்ள பாகூர் என்ற கிராமத்தில் மராத்திய சித்பவன் பிராமண குடும்பத்தில் சவர்கார் பிறந்தார்.

1903ஆம் ஆண்டு மித்ர மேளா என்ற ஒரு புரட்சி இயக்க சங்கத்தைத் தன் சகோதரருடன் சேர்ந்து அவர் ஆரம்பித்தார். பிரிட்டிஷ் ஆட்சியை அப்புறப்படுத்தி ஹிந்து கௌரவத்தைக் காக்க வேண்டும் என்ற கொள்கையில் பிறந்தது இந்த இயக்கம்.

மக்களின் ஆதரவை அவர் வெகுவாகப் பெற்றார். ஆனால் பிரிட்டிஷ் அரசு அவரைக் கைது செய்து இரட்டை ஆயுள் தண்டனையை வழங்கியது.

தீவாந்தர தண்டனை விதிக்கப்பட்டவுடன் அவரது 28ஆம் வயதில் 1911 ஜூலை 4ஆம் தேதி அந்தமானுக்குக் கொண்டு செல்லப்பட்டார் அவர்.

அங்கு மாடு போல செக்கு இழுக்க வைக்கப்பட்டார்.

இன்னும் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்தார்.

1924ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி ரத்னகிரியை விட்டு அகலக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

மக்களிடம் எழுச்சி ஊட்ட அவர் ஏராளமான கட்டுரைகளை எழுதினார்; கூட்டங்களை நடத்தினார்.

ஹிந்து மஹா சபா என்ற மாபெரும் இயக்கத்தை ஆரம்பித்தார். பல்லாயிரக் கணக்கில் அவரது பேச்சைக் கேட்க மக்கள் அவரது கூட்டத்திற்குத் திரண்டு வந்தனர்.

1948ஆம் ஆண்டு ஜனவரியில் நாதுராம் கோட்ஸேயால் காந்திஜி சுடப்பட்டவுடன் அந்தக் கொலையில் இவருக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று அவர் கைது செய்யப்பட்டார்.

கொலை செய்வதற்கு முன்பு ஜனவரி 17, 1948 இல் நாதுராம் கோட்ஸே சவர்காரின் ஆசிர்வாதம் பெற அவர் இல்லம் சென்றார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் தீவிர விசாரணையிலும், அவரது நெருங்கிய நண்பர்களுடனான அவரது  உரையாடல்களிலும் ஒரு போதும் அவர் காந்திஜி கொலை செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டதில்லை என்பது உறுதியானது.

மக்களே பூரண அஹிம்சை என்ற கொள்கையை நிராகரிக்க வேண்டும் என்பதே அவரது முடிந்த முடிவான கருத்தாக இருந்தது.

1963ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் நாள் அவரது மனைவி யமுனாபாய் மறைந்தார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு அவர் தனது மரணத்தைப் பற்றி நினைக்க ஆரம்பித்தார்.

ஆத்ம ஹத்யா ஆனி ஆத்ம சமர்பண் என்ற தலைப்பில் சஹ்யாத்ரி என்ற மராத்தி மாத இதழில் ஜூலை 1964இல் ஒரு கட்டுரையை அவர் எழுதினார்.(Aatma hatya aatma samarpan – Suicide and self-sacrifice)

அந்தக் கட்டுரை அற்புதமான ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

தன்யோஹம் தன்யோஹம் கர்தவ்யம் மே ந வித்யதே கிஞ்சித்

தன்யோஹம் தன்யோஹம் ப்ராப்தவ்யம் சர்வமத்யா சமர்பணம்

“Blessed am I, Blessed am I, I know of no duty now,

Blessed am I, Blessed am I, I have fulfilled what I wished to achieve”

தன்யனானேன், தன்யனானேன், எனக்கு ஒரு கடமையும் இப்போதில்லை

தன்யனானேன் தன்யனானேன் நான் எதை அடைய வேண்டும் என்று விரும்பினேனோ அதை அடைந்து விட்டேன்.

இந்தக் கட்டுரையில் குமாரில பட்டர், சைதன்ய மஹா பிரபு, த்யானேஸ்வர், சமர்த்த ராமதாஸர், ஏகநாத், துகாராம் ஆகியோரின் இறுதியை அவர் விவரித்து எப்படி அவர்கள் தங்கள் ஆத்ம சமர்ப்பண மனோபாவத்துடன் தங்கள் உடலை உகுத்தார்கள் என்பதை விவரமாகத் தெரிவித்திருந்தார் அவர்.

ஆத்ம சமர்ப்பணம் என்ற கருத்து வந்தவுடன் அவர், உணவு உண்பதை நிறுத்தி விட்டார். அவருக்கு ஜீரணக் கோளாறுக்கான மருந்துகள் தரப்பட்டிருந்தன. அதையும் எடுக்க மறுத்து விட்டார்.

நாளுக்கு நாள் உடல் பலஹீனமாயிற்று. 1966இல் பிப்ரவரி மாதத்திலிருந்து அவர் வழக்கமாக அருந்தும் தேநீரையும் அருந்தவில்லை.

1966, பிப்ரவரி 24ஆம் நாள் அவர் உடல் நிலை மிக மோசமாக ஆனது.

26ஆம் தேதி காலை சுமார் 8.30க்கு எழுந்த அவர் ஜுரத்தால் பீடிக்கப்பட்டிருந்தார். கீமாடியிலிருந்து ழே இறங்கி வந்தார். அங்கு அவரது மகண் விஸ்வாஸ், மருமகள் சுந்தர், மகள் ப்ரபாத், மாப்பிள்ளை மாதவராவ் சிப்லுங்கர் பேரக் குழந்தைகள் விதுலா, மாதுரி ஆகியோர் கவலையுடன் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

11.10 மணிக்கு அவரது ஆவி பிரிந்தது.

சவர்கார் ஒரு நாத்திகர்.

தனது உயிலில் அவர் பல கருத்துக்களைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

தன் மறைவை ஒட்டி ஒரு ஹர்த்தாலோ அல்லது கடைகள் மூடப்படுதலோ கூடாது என்றும் மின்சார மயானத்தில் தன் உடல் எரிக்கப்பட வேண்டும் என்றும், (10ஆம் நாள், 13ஆம் நாள் உள்ளிட்ட) எந்த ஒரு இறுதிச் சடங்கும் நடத்தப்படக் கூடாது என்றும் வேத மந்திரங்கள் மட்டும் முழங்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

.

சவர்கார் சதனில் அவரது உடல் மால 4.30 மணியிலிருந்து மறு நாள் மதியம் 3.30 மணி வரை வைக்கப்பட பல்லாயிரக்கணக்கானோர் வரிசையாக வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அவர் உடலை ஊர்வலமாகக் கொண்டு செல்ல ராணுவ பீரங்கி வண்டி ஒன்றை அரசிடம் அனைத்து மக்களும் கோரினர். அரசு மறுத்து விட்டது.

பிரபல டைரக்டர் சாந்தாராம் உடனே தனது ஸ்டுடியோவிலிருந்து அதே போன்ற வண்டி ஒன்றைக் கொண்டு வந்தார்.

பிப்ரவரி 27ஆம் நாள் இறுதி யாத்திரை ஊர்வலம் கிளம்பியது. மும்பை வீதிகளின் வழியே சென்ற ஊர்வலம் மின் மயானத்தை அடைய  6 மணி நேரம் ஆனது.

50000 முதல் ஒரு லட்சம் பேர் வரை அதில் கலந்து கொண்டனர்.

ஸ்வாதந்த்ர்ய வீர் சவர்கார் அமர் ரஹே, ஹிந்து ராஷ்ட்ர கி ஜெய் என்றும் கோஷங்கள் தொடர்ந்து முழங்கிக் கொண்டே இருந்தன.

அவரது இறுதி விருப்பப்படி அவரது அஸ்தி சௌபாத்தி, தாதர் கடலில் கரைக்கப்பட்டது.

1965ஆம் ஆண்டு ஆர்கனைஸர் தீபாவளி இதழுக்காக அவரை ஶ்ரீதர் தேல்கர் என்பவர் ஒரு பேட்டி எடுத்தார்.

அதில் அவர் மிக விவரமாகத் தன் கருத்துக்களை எடுத்துரைத்தார்.

“சுதந்திரம் அடைந்தவுடன் நமது புரட்சி ஒரு முடிவுக்கு வந்து விட்டது.  நமது நாடு அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டதைப் பார்க்க உயிரோடிருப்பதை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன்.  உலகு உள்ள வரை இந்த புராதனமான தேசம் – நமது உயரிய பாரதவர்ஷம் – – தனது அனைத்துப் புகழுடன் விளங்கும்.”

என்ற இந்தக் கருத்துடன் அவர் பேட்டியை முடித்திருந்தார்.

வாஜ்பாயி பிரதமரானவுடனும் மோடி பிரதமரானவுடனும் இவருக்கு உரிய மரியாதைகள் தரப்பட ஆரம்பித்தன.

இந்திய அரசு 1970இல் அவர் நினவாக ஒரு விசேஷ தபால்தலையை வெளியிட்டது.

2002 இல் அந்தமான் நிகோபார் விமானநிலையத்திற்கு வீர் சவர்கார் பன்னாட்டு விமான நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டது.

2003இல் அவரது உருவப்படம் இந்திய பாராளுமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டது.

அந்தமானில் செல்லுலர் ஜெயிலில் அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஹிந்து ராஷ்டிரத்திற்காகப் பாடுபட்ட வீர சவர்காரைப் பற்றிய சரித்திரத்தை ஒவ்வொரு ஹிந்து மகனும் அறிய வேண்டியது தலையாய கடமை அல்லவா?!

****

TAGS- சாவர்க்கர் , சவார்க்கர் , ஹிந்து ராஷ்ட்ரம், ஹிந்து மஹா சபை

புத்தக அறிமுகம் – 2

ஆலயம் அறிவோம்!

( இரண்டாம் பாகம்)

30 திருத்தலங்கள் யாத்திரை

ச.நாகராஜன்

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்

1)  புதுவை மணக்குளத்து விநாயகர் ஆலயம்

2) சூரியனார் கோவில்

3) திங்களூர்

4) திருவெண்காடு  

5) திருஇரும்பூளை என்னும் ஆலங்குடி 

6) திருக்கஞ்சனூர் 

7) திருநள்ளாறு

8) திருநாகேச்சரம்

9) ஸ்ரீ காளஹஸ்தி

  10) ஸ்ரீ சைலம்

  11) தஞ்சை பிரதீஸ்வரர்

  12) சீர்காழி

  13) திருவிடைமருதூர்

  14) மயிலை கபாலீஸ்வரர்

  15) திருவையாறு

  16) சிருங்கேரி ஸ்ரீ சாரதா தேவி

  17) கூத்தனூர் ஸ்ரீ சரஸ்வதி தேவி

  18) திருநின்றவூர்

  19) திருக்கருகாவூர்

  20) ஆஜ்மீர் புஷ்கரில் மணிபந்த் சக்திபீடம்

  21) கல்கத்தா காளி

  22) திருப்பரங்குன்றம்

  23) திருச்செந்தூர்

  24) பழநி

  25) திருத்தணி

  26) குக்கி சுப்ரமண்யர்

  27) திருமாலிருஞ்சோலை

  28) ஸ்ரீரங்கபட்டிணம்

  29) திருவள்ளூர்

  30) அஞ்சனா பர்வதம்,

வாரந்தோறும் இனிமையாக இதை ஞானமயம் ஒளிபரப்பில் வழங்கி அனைவரது பாராட்டையும் பெற்றவர் திருமதி ப்ரஹன்நாயகி சத்யநாராயணன் அவர்கள்.

திருமதி ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்

நூலில் என்னுரையாக நான் தந்திருப்பது இது:

என்னுரை

ஆலயம் தொழுவது சாலவும் நன்று!

கொன்றைவேந்தனில் உள்ள 91 பாக்களில் இரண்டாவது பாடலில் ஔவையார் தரும் அன்புரை இது!

உலகநாத பண்டிதர் இயற்றிய உலக நீதியில் அவர் தரும் அறிவுரை இது – ‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’.

இன்னும் ஆலயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் பாடல்கள் தமிழில் ஏராளம்.

ஆலயம் அகவாழ்வு மற்றும் புறவாழ்வு ஆகியவற்றின் மையம். அதை வைத்தே நமது வாழ்க்கை சுழன்றது. சுழல்கிறது. சுழலப் போகிறது.

இந்திய நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள கோவில்களின் எண்ணிக்கை எண்ணுக்கு அடங்காதது.

இப்படிப்பட்ட கோவில்கள் இருக்கும் திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு தம் ஆன்மீக வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டு வாழ்ந்தனர் அறிவு சால் நம் பாரத மக்கள்.

கன்யாகுமரியிலிருந்து கைலாயம் வரை உள்ள கோவில்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு.

அன்பர்கள் குடும்பத்தோடும், சுற்றத்தோடும் தலம் தலமாக யாத்திரை மேற்கொண்டு அங்கு இருக்கும் சிறப்புகளை அறிந்து அவற்றை எங்கும் பரப்பி வந்தனர்; அருளாளர்கள் பல நூல்களின் வாயிலாக அவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வந்தனர்.

இப்படிப்பட்ட ஆலயங்கள் பற்றிய சிறப்புகளைச் சொல்வதற்கான அரிய வாய்ப்பு லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியின் வாயிலாகக் கிடைத்தது.

நிகழ்ச்சியை இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் உள்ள அன்பர்கள் கேட்டனர்; பாராட்டினர்.

அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

ஞானமயம் நிகழ்ச்சியை நடத்தும் திரு சுவாமிநாதன் அவர்களுக்கும் திரு கல்யாணசுந்தர சிவாச்சாரியார் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றி.

ஆலயம் அறிவோம் உரைகளை 2019 செப்டம்பர் இறுதியில் தொடங்கி தொய்வின்றி வாரந்தோறும் லண்டனிலிருந்து ஒளிபரப்பாகிய ஞானமயம் நிகழ்ச்சியில் இனிய குரலில் வழங்கியவர் திருமதி பிரஹன்நாயகி சத்யநாராயணன். அவருக்கும் எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

Facebook.com/gnanamayam மற்றும் YOUTUBEஇல் ஆலயம் அறிவோம் தொடரை வாரந்தோறும் கேட் பல அன்பர்களும் இந்த உரைகளை அப்படியே நூல் வடிவாக வெளியிட வேண்டும் என்று கூறவே இந்த நூல் இப்போது வெளி வருகிறது.

முதல் பாகத்தில் 30 திருத்தலங்கள் பற்றிப் பார்த்தோம். இப்போது இந்த இரண்டாம் பாகத்தில் இன்னும் அடுத்த 30 தலங்களைப் பற்றிய வியத்தகும் செய்திகளைப் பார்க்கப் போகிறோம்.

இதை வெளியிட முன்வந்த  Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!

வாருங்கள், திருத்தலங்களுக்குச் செல்வோம்..

சான்பிரான்ஸிஸ்கோ                   ச.நாகராஜன்

23-6-2022

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்.

***

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-67 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post.11116)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,116

Date uploaded in London – –    18 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-67 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம்

ஸ க்தம்  18-22  பற்றி இருத்தல்

ஸ க்தாஹா  3-25  பற்றுள்ள

ஸ கா 4-3 நண்பன் , தோழன்

ஸ கீன் 1-26 நண்பர்கள்

ஸ கே  11-41 ஓ  நண்பா

ஸ க் யுஹு  11-44 நண்பனுடைய

ஸகத்  கதம் 11-35  தழுதழுத்த குரலில்

ஸக ரஹிதம் 18-23 பற்றுதலின்றி

ஸங்கவர்ஜிதஹ 11-55 பற்றற்ற

ஸங்க விவர்ஜிதஹ  12-18 பற்றற்றவன்

ஸங்கம் 2-48 பற்று

ஸங்கஹ 2-47  பற்று

ஸங்காத் 2-62  பற்றிலிருந்து

ஸங்க்ராமம் 2-33 சண்டையை, போர்

ஸ சராசரம் 9-10 அசையும் பொருள், அசையாப் பொருள்

ஸ சேதஹ 11-51 மனத் தெளிவு

ஸ ச்சப்தஹ 17-26  ஸத் என்னும் சொல்

ஸஜ் ஐதே 3-28  பற்று  அடைதல்

ஸஜ் ஐந்தே  3-29 பற்று அடைகிறார்கள்

ஸததா யுக்தானாம் 10-10 நிலைபெற்ற உள்ளமுடையோர்        20 words

ஸததா யுக்தாஹா  12-1 நிலைபெற்ற மனத்தினராய்

ஸததம் 3-19  எப்போதும்

ஸதஹ 2-16 உண்மைப் பொருளுக்கு

ஸதி 18-16   ஏவம் ஸதி  இங்கனம் இருக்க

ஸத்  9-19 இருப்பு, இருத்தல்

ஸத்காரமான பூஜார்த்தம் 17-18  உபசாரம், வெகுமானம்,பூஜை இவற்றைக் கருதி

ஸத்யம் 10-4 உண்மை, வாய்மை

ஸத்வவதாம் 10-36  சாத்வீகரிடத்தில்

ஸத்வ ஸமாவிஷ்டஹ 18-10  சத்வ குணம் நிரம்பியவன்

ஸத்வ ஸம் சுத்திஹி  16-1 மனத்  தூய்மை

ஸத்வஸ்தாஹா 14-18 ஸத்துவ குணம் உடையோர்

ஸத்வம் 10-36  சத்வ குணம்

ஸத்வாத் 14-17  சத்துவத்திலிருந்து

ஸத்வானுரூபா 17-3 அவரவர் உள்ளத்துக்கு ஏற்றபடி

ஸத்வே 14-14  சத்வ குணம்

ஸத் அஸத் யோனி ஜன்மஸு 13-21 நல்லதும் கேட்டதுமான யோனிகளில் பிறப்பதற்கு

ஸதா 5-28   எப்போதும்

ஸத்ருசம் 3-33  ஒத்துப்போகும்

ஸத்ருசஹ  16-15 சமமான

ஸத்ருசி  11-12 ஒப்பாக சமமாக  40 words

ஸதோஷம் 18-48  குற்றம் உடையது

ஸத்  பாவே 17-26  உள்ளது என்ற பாவனை

ஸநா தனம்  4-31 எப்போதுமுள்ள, சாஸ்வதமான

ஸநா தனஹ 2-24  என்றுமுளது

ஸந்தஹ   3-13  சாதுக்கள்

ஸபத்னான் 11-34  எதிரிகளை

ஸப் த  10-6  ஏழு

ஸமக்ஷம்   11-42  பொதுமக்கள் உள்ள இடத்திலும்

ஸமக்ர ம்  4-23 முழுதும்

ஸம சித்தத்வம்  13-9  ஸம சித்தம்  , ஒரே பார்வை

ஸமதா 10-5  சம நிலை

ஸம தீதானீ  7-26  சென்றுவிட்டன, நடந்தன   52 words

கீதை சொற்கள் இன்டெக்ஸ் 67,

52 words are added from part 67 of Gita Tamil Words Index

Tags- Gita, Word Index 67

ஞான மொழிகள்-97 (Post No.11,115)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,115

Date uploaded in London – 18 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

சென்னையில் ஒரு கிளையில் நான் காசாளராக பணிபுரிந்து கொண்டிருந்த போது ஒரு நாள் வாடிக்கையாளர் ஒருவர் வந்து இரண்டாயிரம் ரூபாய்க்கான காசோலையை என் மூக்கருகே நீட்டினார். என்ன செய்வது, அவருக்கு கை நீளம். நான் அதை வாங்கி கணினியில் எல்லா விபரங்களையும் தட்டச்சு செய்து கையெழுத்தையும் சரிபார்த்துவிட்டு “எப்படி வேணும்” என்று கேட்டேன்.

“பணமாவே குடுத்துடுங்க..” என்றார்.

இந்த மாதிரி பதில்களுக்கு ஏற்கெனவே என்னுடலில் எதிர்ப்பு சக்தி அபரிதமாக இருந்ததால், நான் அசரவில்லை. “இல்ல… எந்த ரூபா நோட்டு எவ்வளவு வேணும்.?.”

அவர் உடனே “ஒரு நிமிஷம்.. என் வொய்ஃபை கேட்டு சொல்றேன்..” என்றபடி கைபேசியில் பேச ஆரம்பித்தார்.

அதற்குள் இன்னொரு வாடிக்கையாளர் அவசரமாக ஒரு ‘வித்ட்ராயல் ஸ்லிப்’ பை கண்ணாடிக் கூண்டுக்குள் நுழைத்தார். “ஒரு நிமிஷம் இருங்க.. அவரை முடிச்சுட்டு வரேன்..” என்றேன்

“ஆஸ்பத்திரிக்கு போகணும் சார்.. கீழே ஆம்புலன்ஸ் வெயிட்டிங்ல இருக்கு..” என்றார். வழக்கமாக ‘ஆட்டோ வெயிட் பண்ணுது’ ‘கால்டாக்ஸி காத்துண்டிருக்கு’ என்று வாடிக்கையாளர்கள் சொல்வது தான் வாடிக்கை. இந்த வசனம் எனக்குப் புதிதாக இருந்தது.

“என்ன சொல்றீங்க.. பேஷன்ட்டை கூட்டிட்டு போற வண்டி உங்களுக்காக பேஷன்ட்டா வெயிட் பண்ணுதா.. நம்பற மாதிரி இல்லியே.. “

“அதுல நோயாளி யாருமில்ல சார்.. நான் தான் அதோட டிரைவர்.. “ என்றாரே பார்க்கலாம்.

அதற்குள் முதல் வாடிக்கையாளர் தொலைபேசி உரையாடலை முடித்து விட்டு “ரெண்டாயிரம் ரூபா நோட்டுகளாவே குடுத்துடுங்க சார்..” என்றார்.

“நீங்க செக் போட்டதே 2000-த்துக்கு… ஒரேயொரு நோட்டுதான் தரமுடியும்.. அதென்ன ‘நோட்டுகளாவே’-ன்னு பன்மையில சொல்றீங்க..” என்று தன்மையாகக் கேட்டு விட்டு இரண்டாயிரம் ரூபாய்த் தாளை எடுத்து அவரிடம் கொடுத்தனுப்பினேன்.

பிறகு ஆம்புலன்ஸ் ஓட்டுநரை வித்ட்ராயல் ஸ்லிப்பின் பின்புறம் அவரது கைபேசி எண்ணை எழுதச் சொல்லி விட்டு, கணிப்பொறியில் எல்லாச் சடங்குகளும் செய்து, அவருக்கான தொகையைக் கொடுத்தேன்.

மீண்டும் அந்த இரண்டாயிரம் ரூபாய்க்காரர் திரும்பி வந்து, “சார் எதுக்கும் நாலு ஐநுாறா குடுத்துடுங்க.. இந்த நோட்டு திடீர்னு செல்லாம போயிடும்கறாங்க..” என்றார். நான் சற்றும் உணர்ச்சிவசப்படாமல் அவர் கேட்டபடி மாற்றிக் கொடுத்தேன்.

பிறகு வேறொரு வாடிக்கையாளர் பணம் கட்ட வந்தார். அவர் கொடுத்ததை எல்லாம் பரிசோதித்து, எண்ணி முடித்து அவரது கணக்கில் வரவு வைத்து ரசீதை கொடுத்தனுப்பியதும் மறுபடியும் ‘இரண்டாயிரம்’ கஸ்டமர் கவுன்டரில் பிரசன்னமானார். “இப்ப என்ன..?” என்றேன்.

“சார்.. ஒரு ஐநுாறு ரூபாய்க்கு மட்டும் சில்லரை வாங்கிட்டு வரச்சொன்னாங்க என் வொய்ஃப்..”

“உங்களுக்கு எத்தனை மனைவி” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். அவ்வினா, வங்கியாளர் – வாடிக்கையாளர் உறவில் விரிசல் ஏற்படுத்துமென்று நினைத்து கேட்காமல் விட்டு விட்டேன். ஐந்து நுாறு ரூபாய்த் தாள்களை அவரிடம் நீட்டினேன். திருப்தியுடன் வாங்கிச் சென்றார்.

பிறகு எங்கள் கரன்ஸி செஸ்ட்டிலிருந்து ஆயுதப் பாதுகாப்போடு வந்த பணக்கட்டுகளை எண்ணி சரிபார்த்து இரும்புப் பெட்டியில் வைத்து பூட்டி, கணினியில் அதற்கான வேலைகளை முடித்து விட்டு நிமிர்ந்து பார்த்தால்.. மீண்டும் அவரே தான்.. ! கையில் நுாறு ரூபாய் நான் கண்களை மூடி பூமாதேவியை மனதிற்குள் தியானம் செய்ய ஆரம்பித்தேன். “சார்.. கோவிச்சுக்காதீங்க.. பஸ்ஸிலே போகணும்.. இந்த நோட்டை குடுத்தா கண்டக்டர் கன்னாபின்னான்னு திட்டுவாரு.. தயவுசெஞ்சு ஒரு அம்பது.. ஒரு இருவது.. ரெண்டு பத்து.. ரெண்டு அஞ்சு… சில்லரையா குடுங்களேன்..”

‘CUSTOMER IS ALWAYS RIGHT’ என்று சொன்ன மகானுபாவன் மட்டும் என் கையில் கிடைத்தால் அவனை ‘லெஃப்ட் அண்ட் ரைட்’ வாங்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், ஐந்து ரூபாய்க்கும் குறைவான மதிப்பில் பணத்தாள்கள் புழக்கத்தில் இல்லாததால், அவர் இனி திரும்பி வர மாட்டார் என்று நம்பிக்கை பிறந்தது. நேயர் விருப்பப்படியே நுாறு ரூபாய்க்கு சில்லரை மாற்றிக் கொடுத்து விட்டு கேஷ் கவுன்டரை இழுத்து மூடி மதிய உணவுக்குச் சென்று விட்டேன்.

சாப்பிட்டு முடித்து பயந்தபடியே இருக்கைக்குத் திரும்பினேன். நல்லவேளையாக “அவர்” மறுபடியும் வரவில்லை. பிற்பகலில் ஒருசில பட்டுவாடாக்கள் மட்டுமே இருந்தன. நான்கு மணி சுமாருக்கு என்னிடமிருந்த எல்லாப் பணத்தையும் கூட்டி, கணினி காண்பித்த கையிருப்புத் தொகையோடு சரிபார்க்கத் தொடங்கினேன்.

சரியாக மூன்று அறுபதுக்கு, கையில் ரூபாய் நோட்டுகளுடன் பணம் கட்ட ஒருவர் கவுன்டரில் வந்து நின்றார். நிமிர்ந்து பார்த்தேன்.

‘விடாது கருப்பு’ மாதிரி ‘என்னை விடாத கஸ்டமர்’.. இரண்டாயிரம் ரூபாய் கிராக்கி.

“மன்னிச்சுக்கோங்க சார்… வீட்டுக்கு போகலாம்னு இவ்வளவு நேரமா பஸ் ஸ்டாப்ல நின்னேன்.. 27D வரவேயில்லை.. அதுக்குள்ள என் வொய்ஃப் போன் பண்ணி வேற ஒருத்தர்கிட்டேயிருந்து 2000 ரூபா கிடைச்சிடுத்து.. அதனால, அக்கவுன்ட்லருந்து எடுத்த தொகையை திருப்பி கட்டிடச் சொன்னாங்க.. கையில இருந்தா செலவாயிடுமாம்.. அதான்.. செலான் எழுதி கொண்டாந்துட்டேன்…” என்றார்.

எனக்கு ஈரேழு உலகங்களும் கண்முன்னே தெரிய ஆரம்பித்தன. மேகத்தில் மிதப்பது போலவும் இருந்தது.

காலையில் வந்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு தட்டுத் தடுமாறி போன் பண்ணி ஈனஸ்வரத்தில், “ஒரு எமர்ஜென்ஸி.. சீக்கிரம் வண்டியை எடுத்துட்டு வரமுடியுமா.. என்னை ஐசியூ-லே அட்மிட் பண்ணனும்..” என்றேன்.

படித்ததில் பிடித்தது.

xxxx

Tags- ஞான மொழிகள்-97

காந்திஜிக்கு அமைக்கப்பட்ட மணப்பெண் அறை! (Post No.11,114)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,114

Date uploaded in London – –    18 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

காந்திஜிக்கு அமைக்கப்பட்ட மணப்பெண் அறை!

ச.நாகராஜன்

கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் அழைப்பை ஏற்று மஹாத்மா காந்திஜி சாந்திநிகேதனுக்கு வரப் போகிறார் என்ற செய்தி சாந்தி நிகேதன் முழுவது பரவியது.

அனைவருக்கும் ஒரே சந்தோஷம்!

மூன்று நாள் விஜயமாக அது திகழும் என்பது அதிக சந்தோஷத்தை அனைவருக்கும் அளித்தது.

மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள் என அனைவரும் உற்சாகமாக காந்திஜியை வரவேற்பதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.

அந்த நாளும் வந்தது.

பண்டிட் ஜவஹர்லால் நேரு, மஹாதேவ தேசாய் சதீஷ் பாபு ஆகியோருடன் காந்திஜி சாந்திநிகேதனுக்குள் நுழைந்தார்.

ஒரே ஆரவாரம், குதூகலம்.

ரவீந்திரநாத் தாகூர் தானே காந்திஜியின் நெற்றியில் சந்தன, குங்குமம் வைத்து அவரைத் தழுவி வரவேற்றார்.

ஆரவாரத்துடன் காந்திஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர்  காந்திஜியை அவரது அறைக்கு தாகூர் அழைத்துச் சென்றார்.

அறையைப் பார்த்த காந்திஜி திகைத்துப் போனார்.

ஒரே அலங்கார மயம். வண்ணப் பூக்கள் உள்ளிட்டவை அழகுற அலங்கரிப்பட்ட அறை அது.

‘இது என்ன மணப்பெண்ணுக்கான அறையா, என்ன?’ என்று கேட்டார் காந்திஜி

தாகூர் சளைக்கவில்லை. “நீங்கள் ஒரு கவிஞரின் இருப்பிடத்தில் இருக்கிறீர்கள் என்பது ஞாபகம் இருக்கட்டும்” என்று பதில் தந்தார்.

“அது சரி, மணப்பெண் எங்கே?” என்று கிண்டலாகக் கேட்டார் காந்திஜி.

அதற்கும் சளைக்கவில்லை தாகூர்.

“அதுவா, சாந்திநிகேதன், இதயங்களின் இதய ராணி உங்களை வரவேற்கிறாள்” என்றார்.

காந்திஜியும் விடவில்லை :”நிச்சயமாக அவள் பொக்கை வாய் ஏழையை ஒரு முறை பார்க்கக் கூட யோசிப்பாள்!” என்றார்.

“இல்லை” என்று திடமாக காந்திஜியை மறுத்த தாகூர், “ எங்கள் ராணிக்கு சத்தியம் என்றால் மிகவும் பிடிக்கும். நெட்ட நெடுங்காலமாக அவள் அதைத் தான் வழிபடுகிறாள்” என்றார்.

ஆக, “இந்த பொக்கை வாய் கிழவனுக்குக் கூட நம்பிக்கை இருக்கிறது என்கிறீர்கள்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் காந்திஜி.

இன்னும் சற்று நேரம் குதூகலமாகப் பேசிய தாகூர் அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார்.

மறுநாள் காலை 4.30க்கு மணிக்கு பிரார்த்தனை ஆரம்பமானது.

அனைவரும் பிரார்த்தனைக்கு ரெடி.

தாகூர் மெதுவாக காந்திஜியின் அறைக்கு சென்றார்.

அறையைப் பார்த்த அவர் திடுக்கிட்டுப் போனார்.

ஒரே அலங்கோலம்.

பூக்கள் அங்கும் இங்குமாக சிதறிக் கிடந்தன.

கட்டிலோ அறைக்கு வெளியில் இழுத்து போடப்பட்டிருந்தது. காந்திஜி எப்போதும் திறந்த வெளியில் படுப்பவர். ஆகவே கட்டில் வெளியில் கொண்டு வந்து போடப்பட்டிருந்தது.

பூச்செடிகள் வைக்கப்பட்டிருந்த தொட்டிகள் அறையில் ஒரு மூலையில் தள்ளப்பட்டிருந்தன.

ராட்டினமும் சில பைல்களும் நடுவில்  வைக்கப்பட்டிருந்து, அறையை ஆக்கிரமித்திருந்தன.

இப்போது தாகூரின் முறை வந்தது. சிரித்தார். ஹரே ஹரே ராம் என்று கூவினார்.

“எங்கே போனது மணப் பெண் அறை? நான் ஒரு மணப்பெண்ணின் அறையை அல்லவா பார்த்தேன். அந்த ஏழை மணப்பெண் எங்கே, ஓடிப் போய் விட்டாளோ?” என்றார் தாகூர்.

குறும்பு தவழ, காந்திஜி தாகூரை நோக்கி, “நான் தான் முன்பே எச்சரித்தேனே, மணப்பெண் பொக்கை வாய் கிழவனை ஏறெடுத்தும் பார்க்க மாட்டாள் என்று!” என்றார்.

அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

இந்த நிகழ்ச்சியால் காந்திஜியின் சாந்திநிகேதன விஜயம் மறக்க முடியாத ஒன்றாக ஆயிற்று.

அலங்காரத்தில் பிரியம் கொண்ட கவிஞர் ஒரு புறம்; எளிமையில் விருப்பம் கொண்ட மஹாத்மா மறு புறம்!

சாந்திநிகேதன் அமைதியாக இரண்டையும் பார்த்துச் சிரித்தது!

***

Tags-  தாகூர் ,காந்திஜி , மணப்பெண் அறை, சாந்திநிகேதன்

புத்தக அறிமுகம்

ஆலயம் அறிவோம்!

(முதல் பாகம்)

30 திருத்தலங்கள் யாத்திரை

ச.நாகராஜன்

30 திருத்தலங்களைப் பற்றிய முக்கிய விஷயங்களைக் கொண்ட நூல் இது.

இதனுடைய பொருளடக்கம் பின் வருமாறு :

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்

  1. மும்பை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்
  2. மதுரை ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயம்
  3. காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோவில்
  4. காமாக்யா ஆலயம்
  5. கன்யாகுமாரி
  6. ஸ்ரீ வைஷ்ணவி தேவி ஆலயம், ஜம்மு-காஷ்மீர்
  7. உஜ்ஜயினி
  8. திருவானைக்காவல்
  9. மைசூர் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஆலயம்,
  10. கொல்லூர் மூகாம்பிகை
  11. ராமேஸ்வரம்
  12. சிதம்பரம்
  13. திருவண்ணாமலை
  14. வைத்தீஸ்வரன் கோவில்
  15. காசி
  16. கேதார்நாத்
  17. சோம்நாத்  
  18. கைலாயம்
  19. பத்ரிநாத்
  20. ரிஷிகேஷ்
  21. மதுரா
  22. பிருந்தாவனம்
  23. த்வாரகா
  24. பண்டரிபுரம்
  25. புரி ஜகந்நாத்
  26. திருப்பதி
  27. குருவாயூர்
  28. திருவனந்தபுரம்
  29. ஒப்பிலியப்பன்
  30. ஸ்ரீரங்கம்

நூலில் என்னுரையாக நான் தந்திருப்பது இது:

என்னுரை

ஆலயம் தொழுவது சாலவும் நன்று!

கொன்றைவேந்தனில் உள்ள 91 பாக்களில் இரண்டாவது பாடலில் ஔவையார் தரும் அன்புரை இது!

உலகநாத பண்டிதர் இயற்றிய உலக நீதியில் அவர் தரும் அறிவுரை இது – ‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’.

இன்னும் ஆலயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் பாடல்கள் தமிழில் ஏராளம்.

ஆலயம் அகவாழ்வு மற்றும் புறவாழ்வு ஆகியவற்றின் மையம். அதை வைத்தே நமது வாழ்க்கை சுழன்றது. சுழல்கிறது. சுழலப் போகிறது.

இந்திய நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள கோவில்களின் எண்ணிக்கை எண்ணுக்கு அடங்காதது.

இப்படிப்பட்ட கோவில்கள் இருக்கும் திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு தம் ஆன்மீக வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டு வாழ்ந்தனர் அறிவு சால் நம் பாரத மக்கள்.

கன்யாகுமரியிலிருந்து கைலாயம் வரை உள்ள கோவில்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு.

அன்பர்கள் குடும்பத்தோடும், சுற்றத்தோடும் தலம் தலமாக யாத்திரை மேற்கொண்டு அங்கு இருக்கும் சிறப்புகளை அறிந்து அவற்றை எங்கும் பரப்பி வந்தனர்; அருளாளர்கள் பல நூல்களின் வாயிலாக அவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வந்தனர்.

இப்படிப்பட்ட ஆலயங்கள் பற்றிய சிறப்புகளைச் சொல்வதற்கான அரிய வாய்ப்பு லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியின் வாயிலாகக் கிடைத்தது.

நிகழ்ச்சியை இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் உள்ள அன்பர்கள் கேட்டனர்; பாராட்டினர்.

அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

ஞானமயம் நிகழ்ச்சியை நடத்தும் திரு சுவாமிநாதன் அவர்களுக்கும் திரு கல்யாணசுந்தர சிவாச்சாரியார் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றி.

ஆலயம் அறிவோம் உரைகளை 2019 செப்டம்பர் இறுதியில் தொடங்கி தொய்வின்றி வாரந்தோறும் லண்டனிலிருந்து ஒளிபரப்பாகிய ஞானமயம் நிகழ்ச்சியில் இனிய குரலில் வழங்கியவர் திருமதி பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

Facebook.com/gnanamayam மற்றும் YOUTUBEஇல் ஆலயம் அறிவோம் தொடரை வாரந்தோறும் கேட்ட பல அன்பர்களும் இந்த உரைகளை அப்படியே நூல் வடிவாக வெளியிட வேண்டும் என்று கூறவே இந்த நூல் இப்போது வெளி வருகிறது.

இதை வெளியிட முன்வந்த  Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!

30 திருத்தலங்கள் முதல் பாகத்தில் இடம் பெற, அடுத்த பாகத்தில் இன்னும் பல தலங்கள் இடம் பெறும் என்ற நற்செய்தியுடன் உங்களை திருத்தல யாத்திரைக்கு அழைக்கிறேன்.

சான்பிரான்ஸிஸ்கோ                   ச.நாகராஜன்

18-6-2022

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்.

தொலைபேசி எண் : 9980387852.

நூல் அழகிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அச்சுப் பதிப்பு நேர்த்தியாக உள்ளது.

***

Tags-  தாகூர் ,காந்திஜி , மணப்பெண் அறை, சாந்திநிகேதன், ஆலயம் அறிவோம்(முதல் பாகம்)

ஐந்திரம் உள்பட எட்டு இலக்கணங்கள் ! (Post No.11,113)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,113

Date uploaded in London – –    17 JULY 2022       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஐந்திரம் என்னும் இலக்கணம் பற்றி நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகளைப்  படித்துவிட்டேன். அதைப்  பற்றிக்  கதைப்பவர்களுக்கு தமிழில் ஐந்திரம் என்னும் சொல் இருப்பதும், தொல்காப்பியர் அதில் பெரிய அறிஞர் என்பதும் தெரியவே இல்லை. தமிழ் பற்றியோ, தொல்காப்பியர் பற்றியோ  பேச்சு மூச்சு இல்லை !

தொல்காப்பியத்துக்குப்  பனம்பாரனார்  எழுதிய பாயிரம் இதோ:-

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து

வழக்கும் சொல்லும் ஆயிரு முதலின்

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு

முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்

புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து

அறங்கறை நாவின் நான்மறை முற்றிய

அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து

மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி

மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்த படிமை யோனே.

இதில் கூறப்படும் செய்தி : நிலம்தரு திருவில் பாண்டியன் அவையில் தொல்காப்பியம் அரங்கேறியது. நான்கு வேதங்களைக் கற்ற, சத்தியம் மட்டும் வாயில் தவழும் அதங்கோட்டு ஆசார்யார் , ஐந்திரம் அறிந்த தொல்காப்பியன் எழுதிய நூலுக்கு நற்சான்றிதழ் கொடுத்தார். அவர் குத்திய ‘அக்மார்க் முத்திரை’யால் திருப்பதிக்கும் கன்னியாகுமரிக்கும்  இடையேயுள்ள தமிழ் கூறு நல்லுலகம் அதை ஏற்றுக்கொண்டது.

இதில் ஐந்திரம் என்பதற்கு இரண்டு பொருள் உள்ளது. ஓவிய நூல், இலக்கண நூல் (காண்க 1935ம் ஆண்டு ஆனந்த விகடன் தமிழ் அகராதி மற்றும் சிங்காரவேலு முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணி).

இந்திரன் எழுதியது என்பது வடமொழி இலக்கணப்படி ஐந்திரம் என்ற சொல்லாக உருப்பெறும்.

இந்த ஐந்திரம் பற்றி சம்ஸ்க்ருதத்தில் என்ன உள்ளது என்பதைக் காண்போம்.

உலகப் புகழ் பெற்ற பாரதியாரால் புகழப்பட்ட பாணினி, இதுபற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் பாணினி வேறு ஆறு இலக்கண கர்த்தாக்களினின் பெயர்களை மட்டும் சொல்கிறார். அவருக்கு முன்னர் 64 இலக்கண வித்தகர் இருந்தனர் என்று சொல்லி அவர்களின் பெயர்களையும் சொல்கிறது வடமொழி இலக்கிய வரலாறு  (அதில் இந்திரன் பெயர் இருக்கும் என்று நான் நம்புகிறேன்)

ஹர்ஷரின் நைஷத சரிதத்துக்கு வித்யாதரர் என்பவர் எழுதிய உரையில் , ஹர்ஷர் எல்லா துறைகளிலும் வல்லவர் என்று புகழ்கையில் அவர் எட்டு வகை இலக்கணங்களில் வல்லவர் என்பதையும் குறிப்பிடுகிறார்.

பாணினியின் இலக்கணத்துக்கு விரிவுரை கண்ட நூல்கள் குறைந்தது பத்து ஆகும். அவையாவன –

பாணினி எழுதிய வியாகரண நூல், அதாவது இலக்கண நூல், அஷ்டாத்யாயீ / எட்டு அத்தியாயங்கள் எனப்படும் . அதை நூல் எழுதிய ஆசிரியரின் பெயரில் பாணினீயம் என்றும் பகர்வர்

அதன் மீது எழுந்த உரை நூல்கள்

1.காத்யாயன வரருசியின் வார்த்திகம்

2.பதஞ்சலியின் மஹாபாஷ்யம்

3.பர்த்ருஹரியின் வாக்கபடீயம்

4.ஜயாதித்யர், வாமனர் ஆகிய இருவர் எழுதிய காசிகா வ்ருத்தி

5.ஜினேந்திர புத்தி எழுதிய ந்யாஸ

6.சரண தேவ எழுதிய துர்கத வ்ருத்தி

7.ராமசந்திர எழுதிய ப்ரக்ரிய கெளமுதி

8.பட்டோஜி தீக்ஷிதர் எழுதிய சித்தாந்த கெளமுதி

9.நாகேச எழுதிய பரி பாஷேந்து சேகர

10.நாகேச எழுதிய வல்யாகரான சித்தாந்த மஞ்சூஸா

இவைகளில் முதல் எட்டு நூல் களைத்தான்  வித்யாதரர்  ஹர்ஷர் படித்ததாகச் சொல்கிறாரோ என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். ஏனெனில் வித்யாதரர் உரை 13ம் நூற்றா ண்டைச் சேர்ந்தது; ராமசந்திர உரை 14ம் நூற்றா ண்டைச் சேர்ந்தது. ஆக மேற்கூறிய பட்டியலில் ஆறு உரைகள்தான் தேறு கின்றன.

வித்யாதரர் பயன்படுத்திய சொல் அஷ்டெள  வியாகரணானி . ஆகையால் பாணிணிக்குப் பின்வந்த உரைகாரர் என்று பொருள்கொள்ளாமல் அக்காலத்தில் நிலவிய வெவ்வேறு எட்டு வகை வியாகரணம் என்று பொருள் கொண்டால் அவை என்ன என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும்.

 வித்யாதரர் உரையில் அவரே பல இடங்களில் காதந்தர வியாகரணம் பற்றியும் குறிப்பிடுகிறார்.

வோபதேவ என்பவர் கவி கல்பத்ரும நூலில் ஒரு ஸ்லோகத்தில் எட்டு வகை இலக்கணம் கிடைக்கிறது . அவையாவன

இந்த்ரஸ் சந்த்ரஹ காஸக்ருத்ஸ்னாபிசாலி சாகடாய

பாணீனியமரஜைநேந்த்ரா ஜயந்த்யாதிஷ்ட திஸாப்திகஹ

முதலில் வருவது இந்திரன் பெயர். அவர்தான் நாம் இப்போது சொல்லும் ஐந்த்ர இலக்கணத்தின் கர்த்தா என்று ஊகிக்கலாம் . ஆனால் அப்படி ஒரு இலக்கண நூலும் கிடைக்கவில்லை. யஜுர் வேதத்தின் தைத்ரீய சம்ஹிதைதான், ‘இந்திரனை இலக்கணம் எழுதியவர்’ என்று குறிப்பிடும் பழைய நூல்’ ஆகும்.

காசிநாதர் எழுதிய ஸாரஸ்வத வ்யாகரண பாஷ்யமும் ‘இந்திரனை இலக்கணம் படைத்தவர் என்று சொல்லும்

மேற்கூறிய ஸ்லோகம் குறிப்பிடும் இரண்டாவது இலக்கண கர்த்தா  சந்திர என்பதாகும் .அவருடைய முழுப்பெயர் சந்திர கோஸ்வாமின். . அவர்படைத்த இலக்கணம் காஸ்மீர், திபெத், நேபாளம், இலங்கையில் பயன்படுத்தப்பட்டது. அதன் பிரதி ஒன்று திபெத்தில் கிடைத்தது. அதை 1902ல் ஜெர்மனி வெளியிட்டது .

மூன்றாவது பெயர் காச கிருத்ஸ்ணா ; அவர் பாணினிக்கும் முந்தியவர். காசிகா உரையில் அவர் குறிப்பிடப்படுகிறார்.; அவர் 3 அத்தியாயங்கள் கொண்ட நூலை எழுதினார்

நாலாவது பெயர் ஆபிஸாலி. அவருடைய இலக்கண விதிகளை பாணினியே குறிப்பிடுவதால், சம காலத்தவராகவோ முந்தியவராகவோ இருக்கலாம்.

அடுத்தவர் சாகடாயனர் . பாணினி, பதஞ்சலி , நிருக்தம் எழுதிய யாஸ்கர்

ஆகியோர் இவர் பெயரைக் குறிப்பிடுகின்றன.அவர் ஊனாதி சூத்திரங்களை எழுதி இருக்கலாம் .

(மற்றோர் சாகடாயனர் உண்டு 3200 சூத்திரங்கள் உடைய அந்த நூல் கி.பி.1025ல் எழுதப்பட்டது)

இவர்களுக்கு அடுத்தபடியாக பாணினியின் பெயர் வருகிறது ; உலகமே போற்றும் இலக்கண  கர்த்தாவுக்கு  அறிமுகம் தேவை இல்லை

அவருக்கு அடுத்தபடியாக வருவது அமர என்னும் பெயர் . அமரகோசம் என்னும் அகராதியை உலகம் அறியும். ஆனால் அது இலக்கண நூலன்று. அவரே ஒரு இலக்கண நூல் எழுதி அழிந்துபோனதா அல்லது வேறு ஒருவரா என்பது தெரியவில்லை  ஒருசாரார் , அமரகோஷம் என்னும் அகராதியை வேத பாடசாலைகளில் , வியாகரணம் என்ற வுகுப்பில் சொல்லித் தருவதால் அதுவும்  இலக்கண நூல் என்பர்.. அமரகோச நூலின் உண்மைப் பெயர் நாமலிங்கானுசாசனம் நாம NOUN , லிங்க GENDER ஆகிய இரண்டும் இலக்கணத்தின் இரண்டு முக்கிய அம்சங்கள் ஆகும்.. பதஞ்சலி கூட சப்தானுசாசனம் பற்றிப் பேசுகிறார்.

கடைசி பெயர்  ஜைநேந்த்ர என்பதாகும் . ஒரு சமண முனிவர் இதை சமணர்களுக்காக எழுதி இருக்கலாம்; வோபதேவ என்பவர் ஜினேந்திர என்ற பெயரில் ஒரு இலக்கண கர்த்தா இருந்ததாகவே எண்ணுகிறார். திகம்பர வகுப்பு ஜைனர்கள் மஹாவீரர் இலக்கணம் எழுதி இந்திரனுக்கு சொல்லிக்கொடுத்ததாகவும் கதைப்பார்கள்.

பூஜ்யபாத தேவநந்தி என்பவர் எழுதிய ஒரு இலக்கண நூலை காசியிலுள்ள பாரதீய ஞான பீடம் 1956-ல் வெளியிட்டுள்ளது

xxx

பவிஷ்ய புராணத்திலும் எட்டு வகையான இலக்கணங்கள் பற்றிய ஸ்லோகங்கள் உள்ளன . ஆனால் அவர்கள் எல்லோரும் கடவுளர்கள் – பிரம்மா, இந்திரன், யமன், ருத்ரன், வாயு, வருணன், சவிதா, விஷ்ணு என்னும் எட்டுப் பேர் ஆவர் .

காதந்த்ர இலக்கணத்துக்கு கெளமார இலக்கணம், கலாப  இலக்கணம் என்ற பெயர் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

1568 வரை இலக்கண நூல்கள் எழுந்தன. ஸ்ரீ மல்லதேவ என்ற அஸ்ஸாம்/ காமரூப மன்னரின் ஆதரவில் புருஷோத்தம பட்டாச்சார்ய வித்யா வாகீச எழுதிய ‘பிரயோக ரத்னமாலா வியாகரண’ நூல் குறிப்பிடத்தக்கது .

நூற்றுக் கணக்கான இலக்கண நூல்கள்  தோன்றியமையும், 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பாணினிக்கு முன்னர் 64 பேர் இருந்ததும், பாணினியே ஆறு பேரைக் குறிப்பிடுவதாலும், சம்ஸ்க்ருத மொழி பல்லாயிரம் ஆண்டு பழமையுடையதென்பதும் சொல்லாமேயே விளங்கும். உலகில் சீன, தமிழ், கிரேக்க, பாரசீக , அவஸ்தன், எபிரேய/ஹீப்ரு , லத்தீன் மொழிகளுக்கு இப்படிப்பட்ட இலக்கண வரலாறு இல்லை என்பதும் குறிப்பிட்டது தக்கது.

–சுபம் —

tags-  ஐந்திரம் , எட்டு இலக்கணங்கள்

FUNNY LEAVE APPLICATIONS (Post No.11,112)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,112

Date uploaded in London – 17 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

“War is a place where young people who don’t know each other, and don’t hate each other, kill each other, by the decision of old people who know each other, and hate each other, but don’t kill each other”*

– Erich Hartmann

Xxxxxx

Leave applications.

(murdering English language)

Infosys, Bangalore:

“Since I have to go to my village to sell my land along with my wife ,

please sanction me one-week leave.”

________________________________

Oracle, Bangalore:

From an employee who was performing the “mundan” ceremony of his 10 year old son:

“As I want to shave my son’s head , please leave me for two days..”

________________________________

Leave-letter from a CDAC employee who was

performing his daughter’s wedding:

“As I am marrying my daughter, please grant a week’s leave..”

________________________________

From H.A.L. Administration Dept:

“As my mother-in-law has expired and I am only one responsible for it please grant me 10 days leave.”

________________________________

Another employee applied for half-day leave as follows:

“Since I’ve to go to the cremation ground at 10 o’clock and I may not return, please grant me half day casual leave”

________________________________

A leave letter:

“I am suffering from fever, please declare one-day holiday.”

________________________________

A leave letter to a headmaster:

“As I am studying in this school I am suffering from headache. I request you to leave me today”

________________________________

Another letter written to a headmaster:

“As my headache is paining , please grant me leave for the day.”

________________________________

Covering note:

“I am enclosed herewith…”

________________________________

Another one:

“Dear Sir: with reference to the above , please refer to my bottom…”

________________________________

Actual application for leave:

“My wife is suffering from sickness and as I am her only husband at home I may be granted leave”.

________________________________

Letter writing:

“I am well here and hope you are also in the same well.

xxxx

Laugh and pass…

Those who can’t understand, please forgive me. Sophie asks a taxi driver:

“How much does it cost to take me to the airport?”

– 250 bucks

“What if we take my husband too?”

– Same 250 bucks.

Sophie turns to John:

-Haven’t I told you, you are actually worthless.

Xxx

*India has 2 popular types of Agarbatti*🥢

1. For the Gods

2. For the mosquitoes

However, God doesn’t appear and mosquitoes don’t disappear !!

Xxx

tags- ஞானமொழிகள்- 96, funny, leave application,

—subham—

புத்த பூமி ஹாங்காங்! (Post No.11,111)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,111

Date uploaded in London – –    17 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

புத்த பூமி ஹாங்காங்!

ச.நாகராஜன்

12-7-2022 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

உலகின் அழகிய நகரம்

தென் கிழக்கு ஆசியாவில் சீனாவின் விசேஷ நிர்வாகப் பகுதியாக இப்போது விளங்கும் நகரம் ஹாங்காங்.

1841 வாக்கில் பிரிட்டிஷார் வசமான ஹாங்காங் ஒருவழியாக அவர்கள் பிடியிலிருந்து 1997இல் மீண்டது. இடையில் 1941 முதல் 1945 வரை ஜப்பான் வசம் இருந்தது.

420 சதுரமைல் பரப்பளவைக் கொண்ட ஹாங்காங்கில் 70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். சுமார் 200 தீவுகளைக் கொண்டுள்ளது இது.

இங்கு வாழும் பண்பாடுள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உயரியது; சராசரி ஆயுள் 81 வயது. வெப்ப நிலை குறைந்த பட்சம் 14 டிகிரி செல்ஸியஸ். அதிக பட்சம் 31 டிகிரி செல்ஸியஸ்.

ஸ்கைஸ்க்ரேபர்ஸ் எனப்படும் வானளாவிய  கட்டிடங்கள் உலகிலேயே அதிகமாக உள்ள இடம் ஹாங்காங் தான்!  7687 அடுக்கு மாடி கட்டிடங்களும் 303 ஸ்கைஸ்க்ரேபர்களும் இங்கு உள்ளன. இவற்றின் உச்சியிலிருந்து ஹாங்காங்கை எந்தப் பக்கம் பார்த்தாலும் அழகு தான்! பன்னாட்டு வணிக வளாகம் 1607 அடி உயரம் உள்ளது. இது தான் இங்கு உயரமான கட்டிடம்.

பொதுவாகவே உலகின் அழகிய நகரங்களுள் சிறந்தது ஹாங்காங் என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு உண்மை. ஒரு புறம் காடுகள் அடர்ந்த மலை, இன்னொரு பக்கம் வானளாவிய கட்டிடங்கள், இன்னொரு புறம் நீலத் திரைகடல் ஓரம் அமைந்துள்ள விக்டோரியா துறைமுகம் என இப்படி பல்முக பரிமாண அழகு கொண்டது இந்த நகரம்.  

ஃப்ராக்ரண்ட் ஹார்பர்

ஹாங்காங் துறைமுகத்தை மணம் வீசும் துறைமுகம் (Fragrant Harbour) என்ற செல்லப் பெயரால் உலக மக்கள் அழைக்கின்றனர்.

ஏனெனில் சுமார் எழுநூறு வருடங்களுக்கு முன்பு ஹாங்காங் நகரின் சுற்றுப்புறம் எங்கும் மணம் வீசும் ஈகிள்வுட் அல்லது அகர்வுட் எனப்படும் அகுயிலரியா வகை மரங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தன. இவற்றின் பிசினால் மணம் வீசும் பத்திகள் தயாரிக்கப்பட்டன. ஒரு கிலோ பிசின் சுமார் ஆறு லட்சம் ரூபாயிலிருந்து ஆரம்பித்து அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்தது. சீன காண்டோனீஸ் மொழியில் ஹாங் மற்றும் காங் என்பது மணம் வீசும் வாசனை ஹார்பர் என்பதற்கான சொற்கள். இதுவே ஹாங்காங் என்ற பெயர் வரக் காரணம் ஆனது.

இப்போது இந்த வகை மரங்களை வெட்டக்  கூடாது என்று அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. ஏனெனில் இப்போது ஹாங்காங்கில் சுமார் 300 மரங்களே எஞ்சி உள்ளன!

ஹாங்காங்கைப் பார்ப்பதற்கு பல்வேறு பயணத் திட்டங்கள் உள்ளன.

ஓரியண்டேஷன் டூர் என்று போனால் நகரை ஒரு நாளிலோ இரு நாளிலோ சுற்றிப் பார்த்து விடலாம். குங் பூ ரசிகர் என்றால் குங் பூ டூரை மேற்கொள்ளலாம். புத்தரின் எல்லையற்ற கருணையைப் பெற வேண்டுமெனில் புத்தா டூரை மேற்கொள்ளலாம்.

புதன்கிழமை மியூஸியங்கள்

முதலில் இங்குள்ள பல மியூஸியங்களைப் பார்த்து விட வேண்டும். புதன்கிழமையன்று மட்டும் அனுமதி இலவசம். ஆகவே கூட்டமும் சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால் அனுமதிக் கட்டணமும் குறைவு தான். 10 ஹாங்காங் டாலர் தான்! (ஒரு ஹாங்காங் டாலரின் இந்திய மதிப்பு பத்து ரூபாய் எட்டு பைசா!) ஹாங்காங் ஹெரிடேஜ் அருங்காட்சியகம், கலைக் காட்சியகம், டாக்டர் சன் யாட் சென் அருங்காட்சியகம், கடற்கரை பாதுகாப்பு அருங்காட்சியகம், வரலாற்று அருங்காட்சியகம், அறிவியல் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம் என ஏராளமானவை பார்க்க உள்ளன.

க்ரூஸ் சொகுசு கப்பல் பயணம்

இங்கு ‘ஏழு நாட்கள் சொகுசுக் கப்பல் பயணம் என்ற திட்டத்தில் அழகிய கப்பல் பயணத்தை மேற்கொண்டு இயற்கையை ரசிக்கலாம். கட்டணம் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு சுமார் நூறு ஹாங்காங் டாலர் ஆகும்.

புத்தா டூர்

ஹாங்காங் புத்த பூமி என்றே சொல்லலாம். பிரம்மாண்டமான எட்டு புத்த ஆலயங்கள் இங்கு உள்ளன.

மான் மோ ஆலயம் இங்குள்ள மிகப் பழம் பெரும் ஆலயம்.

வாங் தாய் சின் ஆலயம் பிரமிக்க வைக்கும் வரலாற்றைக் கொண்டது. வாங் தாய் சின் என்பவர் அபூர்வ தெய்வீக சக்தி கொண்ட புத்த துறவி.  அவர் பெயரால் அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் யார் என்ன வேண்டிக் கொண்டாலும் அது நடக்கும் என்பது வழி வழியாகச் சொல்லப்பட்டு வரும் மரபு வாக்கியமாகும்.

சீ குங் ஆலயம் என்பது சாங் வமிசத்தில் ராணுவ தளகர்த்தராக இருந்த சீ குங் என்பவரின் பெயரை கௌரவப்படுத்தும் ஒரு ஆலயம். அவர் காலரா உள்ளிட்ட வித விதமான வியாதிகளை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்தினார் என்பது வரலாறு, பல போர்களில் வென்றவர் அவர். அவர் மறைந்த போது அவரை கௌரவிக்கும் வண்ணம் இந்த ஆலயம் நிறுவப்பட்டது.

அருகில் உள்ள லண்டாவ் தீவில் டியான் டான் ஆலயம் உள்ளது. இங்கு அமர்ந்த நிலையில் புத்தர் காட்சி தருகிறார். துன்பத்தைப் போக்கும் வண்ணம் அவரது வலது கை இருக்க சந்தோஷத்தைக் குறிக்கும் வண்ணம் அவரது இடது கை உள்ளது. 34 மீட்டர் உயரத்தில் உள்ள  250 டன் வெண்கலத்தால் அமைக்கப்பட்ட  இந்த சிலை அமைக்க

பத்து ஆண்டுகள் ஆனது; 1993ஆம் ஆண்டு இந்த ஆலயம் திறந்து வைக்கப்பட்டது.

லண்டாவ் தீவிற்கு கேபிள் கார் சவாரி மூலமாகவோ அல்லது கார், பஸ் மூலமாகவோ போகலாம். ஹாங்காங்கிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இதை அரை மணி நேரத்தில் சென்று அடைய முடியும்.

பத்தாயிரம் புத்தர் ஆலயம்

அடுத்து வியக்க வைக்கும் பத்தாயிரம் புத்தர் ஆலயம் நம்மை பிரமிக்க வைக்கும். ஆம், பத்தாயிரம் புத்தர் சிலைகள் ஒரே இடத்தில் உள்ள ஆலயம் இது. ஹாங்காங் நகரிலிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் பாய் தா கிராமத்தில் ஷா டின் என்ற இடத்தில் உள்ளது இது. மடாலயம் என்று இது அழைக்கப்பட்டாலும் கூட, இங்கு துறவிகள் யாரும் வசிப்பதில்லை. சுமார் 430 படிகள் வழியே உச்சியை அடையும் போது ஆங்காங்கே மலை மற்றும் மலை சார்ந்த இயற்கைக் காட்சிகளைப் பார்த்து மகிழ்வதோடு போட்டோவும் எடுத்துக் கொள்ளலாம். பத்தாயிரம் புத்தர்கள் நிஜமாக இருக்கிறார்களா என்று எண்ணிப் பார்க்கத் தேவையில்லை. ஏனெனில் எண்ணிப் பார்த்தவர்கள் பதிமூன்றாயிரத்திற்கும் அதிகமான புத்தர் சிலைகள் நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் வெவ்வேறு வடிவங்களில் இருப்பதை உறுதிப் படுத்தி இருக்கின்றனர். 1951இல் இது கட்ட ஆரம்பிக்கப்பட்டு ஆறு வருடங்களில் முடிக்கப்பட்டது. தங்கத்தினால் ஆன புத்தர் சிலைகளும் இங்கு உண்டு.

இந்த புத்த மடாலயம் ஹாங்காங் நூறு டாலர் நோட்டின் பின்புறம் இருப்பதால் உலகின் எந்த இடத்தில் நீங்கள் இருந்தாலும் உங்கள் கையில் அந்த பழைய நோட்டு (1985-2002 காலத்தியது) இருந்தால் பார்க்க முடியும்.

குங் பூ டூர்

ஹாங்காங் என்றவுடனேயே அனைவரின் நினைவுக்கும் வருவது ப்ருஸ் லீயின் பெயரும் எண்டர் தி ட்ராகன் திரைப்படமும் தான்.

குட்டி டிராகன் என்று அழைக்கப்பட்ட ப்ரூஸ் லீ மின்னல் வேக அதிரடி மன்னன். சீன ஜோதிடத்தின் படி ட்ராகன் ஆண்டில் ட்ராகனைக் குறிக்கும் மணி நேரத்தில் பிறந்தவர்.

அவரது சிலை ஹாங்காங்கில் நிறுவப்பட்டிருக்கிறது. அவர் எண்டர் தி ட்ராகனை எடுத்த விக்டோரியா ஹார்பர் உள்ளிட்ட பல இடங்களும் இந்த குங் பூ டூரில் இடம் பெறும்.

உலகின் அதிவேக மின்னல்தாக்கு வீரனான ப்ரூஸ் லீ (பிறப்பு 27-11-1940 மறைவு 20-7-1973) பற்றிய ஏராளமான அறிவியல் ஆய்வுகள் நடத்தப்பட்டு விட்டன. அனைத்து ஆய்வுகளும் வியப்பது அவரது ஒன் இன்ச் பஞ்ச் என்பது பற்றித் தான். ஒரு அங்குல தூரத்தில் இருந்து அவர் எதிராளியின் மீது விடும் ஒரு குத்து இடியெனப் பாய்ந்து அவரை வீழ்த்தும். இந்த ஒரு அங்குல இடைவெளியிலிருந்து பாயும் மின்னல் குத்துக்கு காரணம் அவரது மூளையில் விசேஷமான அமைந்திருந்த வெண் பொருள் (White matter) என்ற முடிவிற்கு மூளை இயல் நிபுணர்கள் இப்போது வந்திருக்கின்றனர்.

தன் வாழ்நாளில் ப்ரூஸ் லீ யாரிடமும் தோற்றதில்லை. தனக்கென சில விசேஷமான கொள்கைகளை அவர் வகுத்திருந்தார்; அதைக் கடைசி வரைக் கடைப்பிடித்தார். அதைக் கடைப்பிடிப்போருக்கு வெற்றி என்பதையும் உறுதிப் படுத்திச் சொல்லி வந்தார்.

வாழ்க்கையில் வெற்றி பெற அந்த மின்னல் மன்னன் தந்த கொள்கைகளின் சுருக்கம் இதோ:

 “பத்தாயிரம் முறை உதையைப் பயிற்சி செய்த ஒருவரைக் கண்டு ஒருபொதும் நான் பயந்ததில்லை; ஆனால் ஒரே உதையை பத்தாயிரம் முறை பயிற்சி செய்பவரைப் பார்த்துத் தான் நான் பயப்படுகிறேன்” என்றார் அவர்.

ஒரு குத்து அல்லது ஒரு உதை, அதை எடுத்துக் கொள்; அதைப் பயிற்சி செய்; அதில் கவனம் செலுத்து; அது உன் திறமையை அதிகரிக்கும். உனது திறனைக் கூட்டுவிக்கும் என்றார் அவர்.

தற்காப்புக் கலைக்கு மட்டுமல்ல; வாழ்க்கையில் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் உதவும் அறிவுரை இது.

“ஒரே வடிவில் இருக்க வேண்டாம்; அதை ஆரம்பமாகக் கொண்டு முன்னேறுங்கள். உங்களுக்கு உரியதைக் கட்டமையுங்கள். அது வளரட்டும்; தண்ணீர் போல  இருங்கள்” என்று வெற்றிக்கான வழியைக் கூறிய அவர், ‘சூழ்நிலைகள் எக்கேடும் கெட்டுப் போகட்டும்; நான் வாய்ப்புகளை உருவாக்குவேன்’ என்றார்.

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக அதிரடி படங்களைத் தயாரித்தவர் சர் ரன் ரன் ஷா. 107 வயது வாழ்ந்து 2014இல் மறைந்த இவரது தயாரிப்பில் உருவான படங்கள் அனைவராலும் பேசப்படும் படங்கள்! அவரால் ஆதரிக்கப்பட்ட அதிரடி மன்னன் ஜாக்கிசானின் ஊரும் ஹாங்காங் தான்!

ப்ரூஸ் லீ மற்றும் குங் பூ படங்கள், பயிற்சி மையங்கள் பற்றிய அனைத்தையும் குங் பூ டூரில் அறியலாம்.

கடை வீதிகள்

ஹாங்காங்கில் ஏராளமான கடைவீதிகள் உண்டு. பிரசித்தி பெற்ற இரவு நேரக் கடை வீதியில் இரவில்  சென்று வாங்க முடியும். அங்கு அவர்கள் கேட்ட விலையையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நன்கு பேரம் செய்து வாங்கலாம்.

ஹாங்காங் சென்றவர்கள் பல்வேறு உணவு வகைகளை ருசித்துப் பார்க்கலாம். உலகில் உணவு விடுதிகளுக்குப் பெயர் பெற்ற இடம் ஹாங்காங் தான்! விதவிதமான தயாரிப்புகள், சுவையோ சுவை!

பன்னாட்டு விமான நிலையம்

ஹாங்காங் விமான நிலையத்தைப் பற்றிச் சொல்லவில்லையே என்று நினைக்க வேண்டாம். 24 மணி நேரமும் இயங்கும் உலகின் மிக சுறுசுறுப்பான இந்த நிலையத்தைப் பற்றி வர்ணிக்கப் போதுமான வார்த்தைகளே கிடைக்காது. 180 நகரங்களை 100 ஏர்லைன்ஸ் கம்பெனிகளின் மூலம் இணைக்கும் இந்த விமான நிலையத்திற்கு வருடத்திற்கு சுமார் 7 கோடி பயணிகள் வருகின்றனர்.

இங்கு நான் காலடி வைத்த ஐந்து நிமிடங்களுக்குள் எனக்கு விமான நிலையத்திலிருந்து இணையதள இணைப்பு சேவை (இலவசம் தான்) கிடைத்தது. அனைவருடனும் தொடர்பு கொள்ள முடிந்தது. சுமார் நான்கு மணி நேரம் சுற்றிப் பார்த்தேன். அவ்வளவு பிரம்மாண்டமான அழகான நிலையம். தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது!

ஒரு வரியில் ஹாங்காங்

ஹாங்காங் பற்றி ஒரு வரி சொல்லுங்களேன் என்றால் புகழ் பெற்ற ஒரு வாக்கியத்தைத் தான் அனைவரும் சொல்வர்- அது இது தான் ;

ஹாங்காங்கை விட்டு நீங்கள் பிரிந்தாலும் அது உங்கள் நினைவை விட்டு ஒருபோதும் பிரியாது!

***

tags- ஹாங்காங்