தமிழ்ச் சொல்லா ? பள்ளிக்கூடம், பள்ளிவாசல், பள்ளி அறை , மடப்பள்ளி (Post No.10,819)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,819

Date uploaded in London – –    7  APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பள்ளி என்ற சொல் திருச்சினாப் பள்ளியில் மட்டும் ஒட்டிக்கொண்டு இருக்கவில்லை. கர்நாடகத்தில் ஹல்லி என்று முடியும் நூற்றுக்கணக்கான ஊர்ப் பெயர்களிலும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. தொல்காப்பியம் முதல் பள்ளன்கோவில் செப்பேடுவரையுள்ள இந்தச் சொல் தமிழ்ச் சொல்லா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

Sanskrit dictionary

https://www.wisdomlib.org/definition/palli

Palli (पल्लि) or Pallī (पल्ली).—f.

1) A small village; पल्लीघोषान् समृद्धांश्च बहुगोकुलसंकुलान् (pallīghoān samddhāśca bahugokulasakulān) (apaśyat) Mb.12.325.2; also a settlement of wild tribes.

2) A hut.

3) A house, station.

4) A city or town (at the end of names of towns); as त्रिशिर- पल्ली (triśira- pallī) (Trichinopoly).

5) A house-lizard.

6) A creeping-plant.

Derivable forms: palli (पल्लिः).

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Shabda-Sagara Sanskrit-English Dictionary

Palli (पल्लि).—f.

(-lli) 1. A small village. 2. Any village. 3. A house. 4. A number of houses. 5. Any place or station. 6. A house-lizard: see palla.

Palli can also be spelled as Pallī (पल्ली).

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Cappeller Sanskrit-English Dictionary

Palli (पल्लि).—[feminine] a small village, [especially] a settlement of wild tribes.

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Monier-Williams Sanskrit-English Dictionary

1) Pallī (पल्ली):—[from palla > pall] a f. See below.

2) Palli (पल्लि):—[from pall] a f. a small village, ([especially]) a settlement of wild tribes, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

3) [v.s. …] a hut, house, [ib.]

4) Pallī (पल्ली):—[from pall] b f. a small village etc. (= palli), [Kathāsaritsāgara]

5) [v.s. …] a hut, house, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

6) [v.s. …] a city ([especially] ifc., in Name of towns e.g. triśira-p, = Trichinopoly)

7) [v.s. …] a [particular] measure of grain, [Kātyāyana-śrauta-sūtra [Scholiast or Commentator]]

8) [v.s. …] a small house-lizard, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

9) Palli (पल्लि):—b pallī See under √pall.

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Yates Sanskrit-English Dictionary

Palli (पल्लि):—(lli) 2. f. A small village; a house; a place; a house lizard.

Source: DDSA: Paia-sadda-mahannavo; a comprehensive Prakrit Hindi dictionary (S)

Palli (पल्लि) in the Sanskrit language is related to the Prakrit word: Palli.

தமிழில் ‘ப’ என்றால் கன்னடத்தில் ‘ஹ’. நாம் பத்து என்றால் கன்னடக் காரர்கள் ‘ஹ’.த்து என்பர். சுவரில் ஓடும் பல்லியும் சரி, மாணவர் செல்லும் பள்ளியும் சரி கர்நாடகத்தில் ஹல்லி -தான்.

திருச்சி நகர வரலாற்றைப் படிப்போர் பள்ளி என்ற சொல், சமணர் தொடர்பினால் வந்தது என்பர். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சிம்மவர்மனின் பள்ளன்கோவில் செப்பேடுகள் (Pallankoil Copper Plates of Simhavarman) அந்தப் பல்லவ மன்னன்,  வஜ்ராநந்திக் குரவர்க்கு பள்ளிச்சந்தமாக (கி.பி.550) இடம் கொடுத்ததாக செப்புகிறது. பள்ளிச் சந்தம் என்பது சமண, பவுத்த மதத்தினருக்கு மன்னர்கள் அளிக்கும் ஊர் ஆகும்.

பிராமணர்களுக்கு நிலம் கொடுத்தால் அது பிரம்மதேயம் ; மங்கலம் என்று ஊர்ப்பெயர்கள் முடியும்; கோவில்களுக்குக் கொடுத்தால் அது தேவதானம். இவை எல்லாம் ஸம்ஸ்க்ருதச் சொற்கள். அப்படியானால் பள்ளிச் சந்தமும் ஸம்ஸ்க்ருதம்தானே !! மேலும் தமிழில் ‘ச’ சொற்கள் வரக்கூடாது என்று தொல்காப்பியர் தடை போட்டுள்ளார். சங்க இலக்கியத்தில் உள்ள சுமார் ஒரு லட்சம் தமிழ்ச் சொற்களிலும் ‘ச’ – சொற்கள். கை  விரல்களில்  எண்ணும் அளவுதான். அவையும் ஸம்ஸ்க்ருதச்  சொற்கள்

தொல்காப்பியத்தில் 1-100, 1-102ல் ‘பள்ளி’ வருகிறது. சங்க இலக்கிய நூல்களிலும் ‘பள்ளி’ வருகிறது. ஆயினும் பிற்காலத்தில் இதை ஏன் முஸ்லீம்களுக்கும் சமண, பவுத்த மதத்தினருக்கும் பயன்படுத்தினர் என்பது விளங்கவில்லை.

xxx

முதலில் சில, பல சொற்களைக் காண்போம்

பள்ளி வாசல் – முஸ்லீம்கள் தொழும் இடம் MOSUE

பள்ளி ச்சந்தம் – சமண, பவுத்தர்களுக்கு தானம் செய்யப்பட்ட ஊர் GIFT TO JAINS AND BUDDHISTS

பள்ளி – இடம் (தொல்காப்பிய முதல் அதிகாரம்) PLACE

பள்ளிக்கூடம் – SCHOOL ஸ்கூல்; இன்றும் இலங்கைத் தமிழர்கள், லண்டனில் கூட பாடசாலை என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லைத்தான் பயன்படுத்துவர்.

பள்ளி அறை – BED ROOM பெட் ரூம், படுக்கை அறை .

மதுரை மீனாட்சி கோவில் பள்ளி அறை BED ROOM OF GODDESS MEENAKSHI IN MADURAI தீபாராதனையைக் காண நாங்கள் எல்லாம் எங்கள் தந்தையுடன் ஓட்டம் ஓட்டமாக ஓடிச் செல்லுவோம். தினமும் இரவு பத்துமணிக்கு சற்று முன்னால் , மீனாட்சி தேவியின் பெட் ரூமு BED ROOM க்கு திருவாளர் சொக்கநாதர் MR SOKKANATHAR  வருவார். சின்ன ‘டொமுக்கு டொமுக்கு’TOM TOM  கொட்டுடன் நாயனமும் இருக்கும்.

பள்ளி அறையை சுந்தரேசர் — தமிழில் சொக்கநாதர் — நெருங்கியவுடன். மீனாட்சி ‘பெட் ரூம்’ கதவைத் திறப்பதற்காக பெரிய அன்னன்ஸ்

மென்ட்ANNOUNCEMENT  / அறிவிப்பு வரும்

ராஜாதி ராஜ , ராஜ மார்த்தாண்ட , ராஜ கம்பீர, நாடாளு நாயக , பிரம்மாண்ட நாயக, அகிலாண்ட கோடீஸ்வர , சுந்தரேசர் பராக், பராக் ……………….

என்று சொன்னவுடன் பள்ளி அறை = BED ROOM பெட் ரூம் கதவுகள் திறக்கும். பின்னர் தீபாராதனை. அருமையான நறுமணம் கமழும் பாலும், ஆளுக்கு எண்ணி பத்து சுண்டலும் கையில் விழும். மறக்க முடியாத காட்சி.

பள்ளி அறைக்கு இவ்வளவு மரியாதை.

நாம் மனைவியின் பள்ளி அறைக்குள் செல்லும்போது கிடைக்கும் மரியாதையோ “பட்டுப் புடவை, தங்க நெக்லஸ், வைர அட்டிகையை”ப் பொறுத்தது !!!!!

XXXX

மடைப்பள்ளி /மடப்பள்ளி – கோவில் சமையல் அறை

பள்ளிக்கட்டு – ஐயப்ப பக்த்தர்களின் இரு முடி

பள்ளிப் படை – ஈமக்கடன் , ஞாபகார்த்தக் கோவில்

பள்ளியோடம் – படகு வகை

XXX

ஆனந்த விகடன் அகராதி மேலும் பல பொருள் தருகிறது —

அறை , ஒரு ஊர், ஒரு சாதி , நித்திரை, கல்லூரி, பட்பெண் ,

மருத நிலத்தூர், அரண்மனை, தூக்கம், சாலை, விலங்கு தூங்குமிடம் (DEN, CAVE, ROCK SHELTER,,

வன்னிய சாதி, பள்ளத்தி, குறும்பர், இடைச் சேரி , முனிவர் வாசம் , தேவர் கோவில் , பள்ளிக்கூடம்

XXX

1943-44-ம் ஆண்டுகளில் ஆங்கில மொழியில் தமிழ் சொல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிய டாக்டர் ஆர்.பி சேதுப்பிள்ளை DR R P SETHUPILLAI மேலும் பல தகவல்களைத் தருகிறார்.

நாஞ்சில் நாடு எனப்படும் தென் திருவாங்கூரில் கிறிஸ்தவ சர்ச்சுக்கும் பள்ளி என்று பெயர் சூட்டப்பட்டதைக் காட்டுகிறார்.- சவுரியார் கோயில் பள்ளி

சிலப்பதிகாரத்தில் , அறவோர் பள்ளி என்ற வரி இந்திர விழா எடுத்த காதையில் வருகிறது இதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையில் அருகர் பள்ளி, புத்தர் பள்ளி என்று குறிப்பிடுகிறார்.

முதலில் சமண, பவுத்த முனிவர்கள் வசிப்பிடமாக இருந்து பின்னர் அவர்கள் கொள்கைகளைப் போதிக்கும் இடமாக மாறியதால் , கவ்வி கற்கும் இடங்களுக்கு பள்ளிக்கூடம் SCHOLL, COLLEGE என்று பெயர் வந்ததாக சேதுப்பிள்ளை சொல்கிறார்.

XXX

என் கருத்து

சமண மதம் பரவாத இலங்கையில் இந்துப் பள்ளிகளை இலங்கைத் தமிழர்கள்  இன்றும் பாடசாலை என்று அழைக்கும்போது இது சரி என்றே தோன்றுகிறது. தமிழ்நாட்டில் இன்று பாடஸாலை என்பதை வேதம் கற்கும் இடத்தோடு மட்டும் பயன்படுத்துகிறோம்.

டாக்டர் சேதுப்பிள்ளை,  ‘மாதவர் பள்ளி, ஆசீவகர் பள்ளி, திண்ணைப் பள்ளிக் கூடம்’ என்ற சொற்களையும் எடுத்துக் காட்டியுள்ளார்

XXX

சம்ஸ்க்ருதத்தில் பள்ளி

சம்ஸ்க்ருத மொழியில் 16 பொருள்கள் உள்ளதாக விஸ்டம் லைப்ரரி WISDOM LIBRARY இணையதளம்/ வலைத்தளம் சொல்கிறது. அதைப் பார்க்கையில் பள்ளி என்பது தமிழ்ச் சொல் இல்லை என்றே தோன்றுகிறது. தொல்காப்பியரை சமண முனிவராகவும், சபரிமலை அய்யப்பனை ஒரிஜினல் புத்தர்- சமணர் கோவில் என்று வாதிப்போருக்கும் பள்ளி, பள்ளிக்கட்டு சொற்கள் பயன்படுகின்றன .

தொல்காப்பியரை பழந்தமிழர் என்று நம்பினால் அதற்குப் பின்னர் எழுந்த சங்க இலக்கியத்தில் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதையும் காண்போம் முதலில் விஸ்டம் லைப்ரரி https://www.wisdomlib.org/definition/palli கொடுக்கும் சொற்கள் இதோ —

Sanskrit dictionary

https://www.wisdomlib.org/definition/palli

Palli (पल्लि) or Pallī (पल्ली).—f.

1) A small village; पल्लीघोषान् समृद्धांश्च बहुगोकुलसंकुलान् (pallīghoān samddhāśca bahugokulasakulān) (apaśyat) Mb.12.325.2; also a settlement of wild tribes.

2) A hut.

3) A house, station.

4) A city or town (at the end of names of towns); as त्रिशिर- पल्ली (triśira- pallī) (Trichinopoly).

5) A house-lizard.

6) A creeping-plant.

Derivable forms: palli (पल्लिः).

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Shabda-Sagara Sanskrit-English Dictionary

Palli (पल्लि).—f.

(-lli) 1. A small village. 2. Any village. 3. A house. 4. A number of houses. 5. Any place or station. 6. A house-lizard: see palla.

Palli can also be spelled as Pallī (पल्ली).

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Cappeller Sanskrit-English Dictionary

Palli (पल्लि).—[feminine] a small village, [especially] a settlement of wild tribes.

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Monier-Williams Sanskrit-English Dictionary

1) Pallī (पल्ली):—[from palla > pall] a f. See below.

2) Palli (पल्लि):—[from pall] a f. a small village, ([especially]) a settlement of wild tribes, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

3) [v.s. …] a hut, house, [ib.]

4) Pallī (पल्ली):—[from pall] b f. a small village etc. (= palli), [Kathāsaritsāgara]

5) [v.s. …] a hut, house, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

6) [v.s. …] a city ([especially] ifc., in Name of towns e.g. triśira-p, = Trichinopoly)

7) [v.s. …] a [particular] measure of grain, [Kātyāyana-śrauta-sūtra [Scholiast or Commentator]]

8) [v.s. …] a small house-lizard, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

9) Palli (पल्लि):—b pallī See under √pall.

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Yates Sanskrit-English Dictionary

Palli (पल्लि):—(lli) 2. f. A small village; a house; a place; a house lizard.

Source: DDSA: Paia-sadda-mahannavo; a comprehensive Prakrit Hindi dictionary (S)

Palli (पल्लि) in the Sanskrit language is related to the Prakrit word: Palli.

TO BE CONTINUED………………………………………………

பள்ளிவாசல் , பள்ளிக்கூடம், பள்ளி அறை , மடப்பள்ளி, ஹள்ளி , பள்ளி

கல் ரிஷபம் எழுந்து கடலையை உண்ண வைத்த சிவப்பிரகாசர்! (Post No.10,818)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,818

Date uploaded in London – –     7 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

கொங்குமண்டல சதகம் பாடல் 49

கல் ரிஷபம் எழுந்து கடலையை உண்ண வைத்த சிவப்பிரகாசர்!

ச.நாகராஜன்

சிவப்பிரகாசர் பெரும் அருளாளர். ஒரு சமயம் நவகோடி சித்தவாசபுரமான திருவாவடுதுறையில் எழுந்தருளி இருந்த அவர் திருச்செங்கோடு திருத்தலத்திற்கு வந்தார்.

 வரும் வழியில் அவர் பல அற்புதங்களை நிகழ்த்தினார். அதைக் கண்ட மக்கள் மனம் மகிழ்ந்தனர். அவர் புகழ் எங்கும் பரவியது.

இதைக் கண்ணுற்ற சில அறிவிலிகள் அவர் மீது பொறாமை கொண்டனர்.

‘அப்படி நிஜமாகவே அவர் அற்புதங்கள் நிகழ்த்தி இருப்பாரேயானால் இங்குள்ள கோவிலில் துவஜ ஸ்தம்பத்திற்கு அருகில் உள்ள கல் இடபத்தை எழச் செய்து நாங்கள் வைத்திருக்கும் கடலையை உண்ணச் செய்யட்டும் பார்ப்போம்’ என்று சவால் விடுத்தனர்.

அருகிலிருந்த சிவப்பிரகாசரின் அடியார்களுக்கு இந்த இழி வசனம் பொறுக்க முடியாது போயிற்று,

உடனே அவர்கள் தம் ஆசிரியரான சிவப்பிரகாசரை வேண்டினர்.

உடனே சிவப்பிரகாசர், ‘சிவபெருமான் அருள் இருப்பின் இது ஒரு பெரிய காரியமா என்ன’ என்று சொல்லி விட்டு விபூதியைக் கையில் எடுத்துக் கொண்டார்.

வில்லார் பொதுச் சபையின் வித்தகா நீயுமுனங்

கல்லானைக் கிக்கருத்திக் காட்டியவன் – வல்லாண்மை

கட்டுரையே யாயினிந்தக் கல்லே றெழீஇக் கடலை

இட்ட இவர் முன்றினச் செய் யே

என்ற வெண்பாவை இயற்றிப்  பாடினார்.

உடனே கல் நந்தியானது அனைவரும் திடுக்கிடும்படி எழுந்தது.

அங்கு வைக்கப்பட்டிருந்த கடலையை உண்டது. மீண்டும் பழையபடியே படுத்தது.

இந்த சம்பவத்தை கொங்கு மண்டல சதகம் 49ஆம் பாடலில் கூறிப் புகழ்கிறது.

பண்பார் சிவப்பிர காசனைத் துட்டர் பழிக்கவவர்

கண்பார்க்க ‘வில்லார் பொதுச்சபை யின்வித்த கா’ வெனவோர்

வெண்பா சொலக் கல் விடபங் கடலையை மென்று தின்னும்

வண்பா வலர் வரு செங்கோடை யுங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள்:

சிவப்பிரகாசரை யார் என்று உணராத சில துஷ்டர்கள் அவரைப் பழித்தனர். உடனே அவர்கள் நேரில் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கும் போதே “வில்லார் பொதுச்சபையின் வித்தகா’ என்ற ஒரு வெண்பாவை இயற்றிப் பாடினார். உடனே கல் இடபமானது எழுந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த கடலையை மென்று தின்றது. அப்படிப்பட்ட மகிமையைப் பெற்ற திருச்செங்கோடு தலமும் கொங்கு மண்டலமே என்பதாம்.

இந்த அரிய சம்பவத்தை திருச்செங்கோடு குறவஞ்சியும் பெருமையுடன் இப்படிக் குறிப்பிடுகிறது:

பொன்னின் மழை பொழிந்த தெங்கள் நாடு – வண்ணப்

    பூமலரின் மாரிமிகப் பொழிந்த தெங்கள் நாடு

கன்னி யுமைக்கிடம்பகர்ந்த நாடு – நல்ல

    கல்லிடபங் கடலை தின்று சொல்லுயர்ந்த நாடு

வில்லார் என்று தொடங்கும் வெண்பா ‘அத்துவித வெண்பா’ முகவுரையாக அமைகிறது.

வேலூரில் இருந்த விருபாக்ஷிராயர் மந்திரியைக் காணுமாறு வீர சைவ தீக்ஷையை இவர் பெற்றதாகச் சரித்திரம் தெரிவிக்கிறது.

இதனால் இந்தச் சம்பவம் நடந்த ஆண்டு கி.பி. 1467 முதல் 1485க்கு இடைப்பட்ட காலமாக இருத்தல் வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்தச் சரிதத்தின் விரிவு அத்வைத வெண்பா – திருச்செங்கோட்டு மான்மியத்திலும் , சேலம் ஜில்லா கெஜட்டிலும் காணலாம்.

***

Tags- திருச்செங்கோடு, சிவப்பிரகாசர், கல் ரிஷபம் , கடலை

RIG VEDIC KINGS AND THEIR DATES (Post No.10,817)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,817

Date uploaded in London – –    6 APRIL  2022          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Prof.Thaneswar Sarmah of Gauhati university has written more than 30 books mainly covering the Vedic period of India. In his book ‘New Trends in the Interpretation of the Vedas’, published in 2006, ,he has discussed some important historical events in the Rigveda.

Rigvedic hymn 10-98 is ascribed to one Devapi Arstisena. The story in brief runs thus:

There were three brothers Devapi ,Valhika and

Santanu , who were born in the line of Kurus, a branch of the Bharatas. At the death of their father Paratapa or Rstisena ,  the youngest of the three princes had to ascend the throne, as the eldest and the middlemost brothers declined to do so under certain compelling circumstances.

After Santanu’s ssumption of the throne of Hastinapur , a long draught extending for 12 years hit the state. People began to speak ill of the ruling king. They said that the draught was hurled by the gods upon them, because Santanu, the youngest of the princes took charge of the kingdom in violation of the tradition instead of the eldest Devapi, who was still alive. This has incurred the wrath of the gods, they said. Then Santanu apprised his elder brother Devapi of the situation, who did a big Yaga to bring rain. At the end of the Yaga there was abundant rainfall in the country.

This account is given Yaska’s ‘Nirukta’ , followed by the commentaries. This event was not very remote in time from the Mahabharata war.

Adopting the traditional Kaliyuga date Mr Sarmah fixed the dates of the kings.

Krishna died 37 years after the war. Abhimanyu died in the war at the age of 16 and Drona at the age of 86. Bhisma was the eldest son of Santanu.

Pratipa , his son Santanu, his son Vichitravirya.

Through Vyasa, Vichitravirya’s queen gave birth to Drtarashtra, Pandu and Vidura.

Through Kunti and Madri five Pandavas were born.

One of them, Arjuna had  Abhimanyu as son.

These five generations  are given 136 years (4X30+16 for Abhimanyu)

Added with Kaliyuga 3102 BCE+37+136 = 3275 BCE as the date of Devapi and Santanu.

Vyasa would have compiled the Vedas around 3215 BCE

The genealogy of Bharatas reveals that the Divodasa of Panchala line and his contemporary Ruchira of Hastinapura lived 14 generations prior to Arjuna. That means 14X30= 420 years before Arjuna.

Probably most of the hymns of Sixth Mandala of the Rig Veda, where Divodasa was referred to, are from this period.

xxx

Harappan war

Hariyuupiyaa was is also mentioned in RV.6-27.

In the same way Sarmah calculated the date of

Hariyupiya war as 3575- 3530 BCE.

The relevant piece of genealogy is :

Trksa -Bharata II- Devavaata- Srnjaya and Cayamaana-

Ahyaavartin

Srnjaya -Pijavana – Sudas

All these take us to a period around 3500 BCE.

One must remember the Mahabharata story talks about Amba, Ambika, Ambalika swayamvaram in Kasi where Bhisma did his adventure. So the Vedic period covers kingdoms in Uttarpradesh. In fact Mahabharata lists lot of kingdoms covering Bihar, Assam and Afghanistan.

Source – Thaneswar Saramah’s ‘New Trends in the Interpretation of the Vedas’.

–subham–

Tags- Rig Veda, Kings, Devapi, Santanu, Sudas, Arstisena, Bharata

பகவத் கீதை சொற்கள் இன்டெக்ஸ்-50; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் (Post.10,816)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,816

Date uploaded in London – –    6 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத் கீதை சொற்கள் இன்டெக்ஸ் -50; கீதை மூலம் சம்ஸ்க்ருதம்

புத்தி நாஸாஹா  2-63 புத்தி நாசம்; விவேகம் அழிவு

புத்தி நாஸாத்  2-63  புத்தி நாசத்தினால்

புத்தி பேதம் –  3-26 புத்தி மாறாட்டத்தை, மனக் கலக்கத்தை

புத்தி மதாம் 7-10  புத்திமான்களின்

புத்தி மான் 4-18 புத்திசாலி

புத்தி யுக்த 2-50 சம புத்தியுடன் கூடியவன்

புத்தி யுக்தாஹா 2-51 சம புத்தியுடன் கூடிய

புத்தி யோகம் 10-10 பகவத் விஷயங்களைத் தெளிவாக்கண்டு பகவானையே நாடும் அறிவு

புத்தி யோகாத்  2-49 சம புத்தியுடன் செய்யும்

நிஷ்காம கர்மத்தை விட

புத்திம் -3-2 அறிவை

புத்திஹி  2-39 புத்தியானது

புத்தெள  2-49 சமத்துவ புத்தி யோகத்தில்

புத்யா 2-39 புத்தியுடன்

புத்த்வா 3-43 அறிந்து

புதஹ 5-22 அறிவாளி

புதாஹா 4-19 அறிவாளிகள்

ப்ருஹத் சாம 10-35 பிருஹத் சாமம்

ப்ருஹஸ்பதிம் 10-24 ப்ருஹஸ்பதி

போத்தவ்யம்  4-17 அறிய வேண்டுவதுண்டு

போதாயந்தஹ 10-9 விளக்கிக்கொள்பவர்கள்

ப்ரவீமி 1-7 கூறுகிறேன்

ப்ரவீஷி   10-13 சொல்லுகிறாய்

ப்ரஹ்ம 3-15 வேதம்

ப்ரஹ்ம கர்ம  18-42 பிராமண கர்மங்கள்

ப்ரஹ்ம கர்ம சமாதினா 4-24 கருமமாகிய பிரம்மத்தில் சமாதி எய்தும்

ப்ரஹ்மசர்யம்  8-11 ப்ரஹ்மசர்யம்

ப்ரஹ்மசாரி வ்ரதே 6-14 பிரம்மச்சர்ய விரதத்தில்

ப்ரஹ்மணஹ 4-32 வேதத்தின்

ப்ரஹ்மணா   4-24 பிரம்மத்தால்

ப்ரஹ்மணி  5-10 பிரம்மனிடத்தில்

ப்ரஹ்ம நிர்வாணம் 2-72 பிரம்மத்தில் கலந்த முக்தி நிலை

ப்ரஹ்ம பூதம் 6-27 பிரம்மமே ஆகிவிட்டவன்

ப்ரஹ்ம பூதஹ  5-24 உயிர்வாழும்போதே பிரம்மமாய்

ப்ரஹ்ம பூயாய  14-26 பிரம்மம் ஆவதற்கு

ப்ரஹ்ம யோக யுக்தாத்மா 5-21 பிரம்மத்துடன் கூ டிய அந்தக் கரணமுடன்

ப்ரஹ்ம வாதினாம் 17-24 வேதம் அறிந்தவர்கள்

ப்ரஹ்ம விதஹ  8-24 பிரம்ம ஞானிகள்

ப்ரஹ்ம ஸம்ஸ்பர்சம் 6-28 பிரம்ம ஞானத்தில் பிறந்த

ப்ரஹ்ம சூத்ர பதைஹி  13-4 பிரம்மத்தைக் குறிக்கிற பதங்களாலும்

ப்ரம்மாஹ்னவ் 4-24 (அக்கினியாகிய) பிரம்மத்தில்

ப்ரஹ்மாணம்  11-15 பிரம்மாவையும்

ப்ரஹ்மோத்பவம் 3-15 வேதத்தினின்று உண்டானது

ப்ராஹ்மண க்ஷத்ரிய விசாம் 18-41

ப்ராஹ்மணாஹா 9-33 ப்ராஹ்மணர்களும்

ப்ராஹ்மணஸ்ய 2-46 பிராமணனுக்கு

ப்ராஹ்மீ 2-72 பிரம்மத்துடன் ஒன்றுபட்ட நிலை

ப்ரூஹி 2-7 கூறு

 47 WORDS ADDED IN PART 50

TAGS – GITA WORDS , INDEX 50

To be continued …………………………………..

ஆரஞ்சுப் பழம் தமிழ் சொல் இல்லை? (Post No.10,815)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,815

Date uploaded in London – –    6 APRIL  2022          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

நாரத்தங்காய் = நாரங்க= ஆரஞ்சு ???

Nāraṅga (नारङ्ग).—m. An orange tree, [Suśruta] 1, 209, 6.

ஆரஞ்சுப் பழம் தமிழ் சொல் என்றும் உலகம் முழுதும் இதை அராபியர்கள் பரப்பினர் என்றும் இதுவரை கருதப்பட்டது. அது தவறு என்னும் வகையில் விஸ்டம் லைப்ரரி wisdomlibrary.com குறிப்புகள் இருக்கின்றன. அதன்படி 2600 ஆண்டுகளுக்கு முன்னரே, அதாவது தமிழ் எழுத்துக்கள், தமிழ் இலக்கியம் துவங்குவதற்கு முன்னரே அது சம்ஸ்க்ருதத்தில் உள்ளது புலப்படுகிறது

டாக்டர் ஆர். பி. சேதுப்பிள்ளை ‘சொற்களும் அதன் சிறப்பும் என்ற  WORDS AND THEIR SIGNIFICANCE புஸ்தகத்தை சென்னை பல்கலைக்கழக  மூலம் 1952-ல் வெளியிட்டார் அதில் இது தமிழ் சொல் என்று காட்டுகிறார்.

அராபியர்கள் கேரளத்துடன் வணிகம் செய்த காலத்தில் இதை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்றதாகவும் நாரங்க என்ற சொல் பல மொழிகளில் இருப்பதாகவும் காட்டுகிறார். ஆரஞ்சுப் பழம், எலுமிச்சை, நாரத்தங்காய் என்று பல வகைப் பழங்களாக கிடைக்கும், புளிப்புச் சுவை பழங்கள்,  அனைத்தும் தாவர இயல் ரீதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை .

சம்ஸ்க்ருதத்தில்- நாரங்க, நாகரங்க

மலையாளத்தில் நாரன்ன

பாரசீக மொழி – நாரங்

அராபிய மொழி- நாரஞ்

இத்தாலிய மொழி- நாரன்சியா

போர்ச்சுகீய மொழி – லாரஞ்சா LARANJA

ஆங்கிலத்தில் – ஆரஞ்சு ORANGE

பிரஞ்சு மொழி- ஆரஞ்சு

பாரசீக மொழி அல்லது அராபிய மொழி மூலமாக இது இத்தாலிய மொழிக்குச் சென்று ஐரோப்பாவில் பரவியதாக டாக்டர் சேதுப்பிள்ளை எழுதியுள்ளார்.

நாரும் சுளையும் உள்ள பழம் நாரத்தை என்று சொல்லலாம். ஏனெனில் சம்ஸ்க்ருத சொற்பிறப்பியல் மூலம் இதற்கு விடை காண முடியவில்லை. அதாவது மூலம் = வேர்ச்சொல் = தாது ROOT இல்லை.

ஆனால் மலையாள மொழி அகராதி தயாரித்த டாக்டர் குண்டெர்ட் (GUNDERT’S MALAYALAM DICTIONARY ) இது திராவிட மொழிச் சொல்லாக இருக்கவேண்டும்; ஏனெனில் நாரத்த என்பது நாற்றம் = மணம் (HOLDING FRAGRANCE)  மிக்க பழம் என்ற பொருளுடைத்து என்கிறார்.

Nāraṅga (नारङ्ग).—m. An orange tree, [Suśruta] 1, 209, 6.

CITRUS AURANTIUM (Botanical Term)

ஆனால் எல்லா ஸம்ஸ்க்ருத்ச் சொற்களுக்கும் விளக்கம் தரும் விஸ்டம் லைப்ரரி வெப்சைட் இது சுஸ்ருதர்  எழுதிய சம்ஸ்க்ருத மொழி நூலில் இருப்பதாக குறிப்பும் தருகிறது. சுஸ்ருதர் உலகில் முதல் முதலில் மருத்துவ நூல் எழுதியவர். அவரது காலம் கிமு. ஆறாம் நூற் றாண்டு ; ஏறத்தாழ புத்தர் காலம்.

ஆனால் எந்தெந்த மொழியில் இந்தச் சொல் வந்தது என்று கால வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டும். சங்க இலக்கியத்தில் நாரத்தை, நார்த்தங்காய் என்ற பெயரில் இது காணப்படவில்லை. ஆரஞ்சு  என்பது ஆங்கில மொழி வழக்கு என்பதை அறிவோம் ..

மொழியியல் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு சுவையான விஷயம் உளது. ‘நார’ என்பதில் ‘நா’ என்பது ஏன் ‘ஆ’ ஆனது ? போர்ச்சுகீசிய மொழியில் அது எப்படி ‘லா’ ஆக மாறியது? என்ன காரணம் ? ஒரு எழுத்து மாறியவுடன் விளக்கம் சொல்லி ஆய்வுக்கட்டுரை எழுதும் மொழி இயல் ஆராய்சசியாளர்களின் முழி பிதுங்க வைக்கும் மாற்றங்கள் இவை.

ஒரே நாய் குரைப்பதை  பத்து ஐரோப்பிய மொழிகள் வெவ்வேறு விதமாக எழுதுகின்றனர் . தமிழில் நாய் ‘லொள் லொள்’ என்று குரைத்ததாக கதைகளில் படிக்கிறோம். ஐரோப்பிய மொழிகளில் இது வினோதமான முறையில் மாறுகிறது. சொல்லப்போனால் நாய்கள், மொழி இயல் ஆராய்ச் சியாளர்களைப் பார்த்து கேலி செய்கின்றன .

–subham—

TAGS–  ஆரஞ்சு , நாரங்க, தமிழ் சொல், ஆர். பி. சேதுப்பிள்ளை, நாரத்தங்காய்

அனுபவித்து மகிழ அமெரிக்க நகரங்கள்! (Post No.10,814)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,814

Date uploaded in London – –     6 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

4--4-2022 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

அனுபவித்து மகிழ அமெரிக்க நகரங்கள்!

ச.நாகராஜன்

பிரம்மாண்டமான ஒரு வல்லரசை, ஜனநாயக நாட்டை, இன்ப புரியை யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காவை, இந்தக் கட்டுரையில், ஒரு சில வரிகளில் அடக்கி விட முடியுமா, என்ன? 50 மாநிலங்கள் கொண்ட இந்த நாட்டை பல பகுதிகளாகப் பிரித்துத் தான் பார்க்க முடியும்!

முதலில் தூங்கா நகரத்தை, யாரையும் தூங்க விடா நகரத்தை –  லாஸ் வேகாஸை – மாலை நேரத்தில் ஆறு மணிக்கு மேல் கிளம்பி – ஒரு விஸிட் செய்வோம்!

தூங்கா நகரம், யாரையும் தூங்க விடா நகரம் – லாஸ் வேகாஸ்!

இந்த நகரத்திற்குச் செல்லப் பெயர்கள் பல உண்டு. பாவ நகரம் – சின் சிடி – (SIN CITY) என்று ஒரு பெயர்!

காம்ப்ளிங் காபிடல் . (சூதாட்டத்தின் தலைநகரம்) என்று இன்னொரு பெயர்.

மெடோஸ் எனப்படும் புல்வெளி என்ற அர்த்தத்தைத் தருவது லாஸ் வேகாஸ் என்ற பெயர்!

இந்த நகரம் தானும் தூங்காது; இங்கு வருபவரைத் தூங்கவும் விடாது!

அமெரிக்காவின் தங்க (ம் அதிகம் உள்ள) மாநிலம் என்ற பெயரைப் பெற்றுள்ள நிவாடாவில் அமைந்துள்ளது லாஸ் வேகாஸ். குன்றுகள் சுற்றி இருக்க வருடத்தில் 310 நாட்கள் சூரிய ஒளி அதிகம் திகழ சூரிய ஒளி நகரமாகத் திகழும் இது இரவு நேரத்தில் சூரிய ஒளி இல்லாவிட்டாலும் ஒளி வெள்ளத்தில் திகழ ஆரம்பிக்கும். 

ஆம், எங்கு பார்த்தாலும் ஒளி வெள்ளம் பாய்ச்சும் வண்ண வண்ண விளக்குகள்.

மலைக்க வைக்கும் 50 லட்சம் விளக்குகள் இரவு முழுவதும் எரியும்.

சூர்யன் அஸ்தமித்தவுடன் மாலையில் நடக்க ஆரம்பித்தால் சூரிய உதயம் வரை பார்க்க இடங்கள் உள்ளன. இங்கு நைட் க்ளப் (க்ளப் என்றாலே இங்கு நைட் க்ளப் தான்) ஏராளம்!

சூதாட்ட விளையாட்டுக்கள் அடங்கிய காஸினோக்கள் ஏராளம் – நெடுக போய்க் கொண்டே இருக்கும்.

தங்குவதற்கு பயமே இல்லை. 1,50,000 ஹோட்டல்கள் உள்ளன. உலகில் மிகப் பெரிய ஹோட்டல்கள் 20. அதில் 14 இங்கு தான் உள்ளன.

பையில் டாலரை வைத்து செலவழிக்க மாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர் கூட இங்கு சில “விளையாட்டுகளில்” ஈடுபட்டு டாலரை இழப்பது வழக்கம். ஆனால் அந்த விளையாட்டுகளில் ஐந்து டாலர் ஜெயித்து விட்டாலோ இழந்ததைச் சொல்லாமல் ஜெயிப்பதை மட்டுமே சொல்வர். அப்படி அனைவரையும் மயக்கும் ஒரு மாயபுரி லாஸ் வேகாஸ்.

கொரிப்பதற்கும் உண்பதற்கும் எண்ணற்ற உணவு வகைகள்! ஓய்வாக அமர, பூங்காக்கள், காலார நடந்து செல்லும் போதே பார்க்க பல நிகழ்ச்சிகள் ..

தைரியமாக சாகஸ நிகழ்ச்சிகள் செய்ய விரும்புவோர் ‘த்ரில் ரைட்ஸ்’ (Thrill Rides) செல்லலாம். மணிக்கு 45 மைல் வேகத்தில் 160 அடி உயர எழும்பி ஒரு ஆட்டம் ஆடலாம்.

ஸ்ட்ராடோஸ்பியர் டவர் 110 அடுக்கு மாடிகள் கொண்ட ஒரு வியத்தகு கட்டிட அற்புதம். 1149 அடி உயரம் கொண்ட அதில் மேலே சென்று வானளாவிய உயரத்திலிருந்து இந்த நகரத்தைப் பார்ப்பது ஒரு கண் கொள்ளாக் காட்சி. ஒரு சில நிமிடங்களில் கண் இமைக்கும் நேரத்தில் லிப்ட் நம்மை மேலே ஏற்றி விடும்; நம்மை பிரமிக்க வைக்கும்.

1940ஆம் ஆண்டிலிருந்து வெளியான ஏராளமான ஹாலிவுட் திரைப்படங்களில் லாஸ் வேகாஸ் காஸினோக்களை காணலாம். ஜேம்ஸ் பாண்ட் படமான ‘டயமண்ட்ஸ் ஆர் ஃபார் எவர்’ படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த காஸினோ காட்சியை அப்படியே நேரில் பார்த்து ரசிக்கலாம்.

காஸினோ வாசலில் அழகிகள் நடனமாடுவதைப் பார்க்கலாம்! அந்த அழகிகளுக்குப் பிடித்தது? அங்கு வரும் அனைவரையும் புன்னகை செய்து வரவேற்கப் பிடிக்கும்! பிடிக்காதது நீளமான உடை. (அரை மீட்டர் பிட் துணி இருந்தாலே அதுவே அவர்களுக்கு அதிகம் தான்!)

காஸினோவில் 21 வயது மேற்பட்டவர்கள் தான் சூதாட்ட விளையாட்டில் பங்கேற்க முடியும். ஆனால் எந்த வயதினராலும் சரி, மற்றவர்கள் பார்க்க அனுமதி உண்டு.

2021ஆம் ஆண்டு மட்டும் 425 லட்சம் பேர் இங்கு வருகை புரிந்துள்ளனர்.

இந்த நகரில் வருடத்திற்கு 22,000 கருத்தரங்குகள்/ கண்காட்சிகள் நடைபெறுகின்றன என்பதிலிருந்தே இதன் வணிக முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம். புதிய கண்டுபிடிப்புகள், புதிய தயாரிப்புகள் முதலில் கண்காட்சிக்கு வைக்கப்படும் இடம் இங்குள்ள அரங்கங்களிலேயே! எந்த சமயத்தில் சென்றாலும் ஏதேனும் ஒரு கண்காட்சியைப் பார்த்து ரசிக்க முடியும்!

தானும் தூங்காமல், உள்ளே வந்தவரையும் பிரமிக்க வைத்துத் தூங்க விடாமல் செய்யும் இந்த நகரம் சூரிய உதயம் வந்தவுடன்… அட, விளக்குகள் அணைந்து விட்டனவே, பரவாயில்லை தூங்கா நகரம் வரப்போகும் அடுத்த இரவை நோக்கிக் காத்திருக்கும்……!!

லாஸ் ஏஞ்சலஸ்

லாஸ் வேகாஸிலிருந்து நான்கு மணி நேரம் காரில் சென்றால் அடுத்த பிரமிப்பூட்டும் நகரான லாஸ் ஏஞ்சலஸை அடைந்து விடலாம். கலிபோர்னியாவின் தென் பகுதியில் அமைந்துள்ளது இது. ஸ்பானிஷ் மொழியில் வான தூதர்கள் என்ற வார்த்தையிலிருந்து தோன்றியது லாஸ் ஏஞ்சலஸ் என்ற பெயர்!

வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என்று சொல்லும் அழகிய நகரான இதில் பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன.

நாம் பார்க்க வேண்டிய முக்கிய  இடத்திற்கு  முதலில் செல்வோம்.

டிஸ்னி லேண்ட்

1955இல் ஆரம்பிக்கப்பட்ட டிஸ்னிலேண்டிற்கு லக்ஷக் கணக்கில் மக்கள் திரள் திரளாக உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

ஸ்டார் வார்ஸ். ஃபேண்டஸி லேண்ட், டுமாரோ லேண்ட் என ஏராளமான இடங்கள் பார்ப்பதற்கும் சாகஸ செயல்களுக்கும் உள்ளன.

அனைவரும் தவறாமல் செல்வது ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்’ என்ற இடத்திற்குத் தான்.

நெடு நேரம் க்யூவில் நின்றாலும் நிச்சயம் நமக்கு ஒரு சான்ஸ் உண்டு. ரெயில் ரைட் (Rail Ride), நீர்வீழ்ச்சியில் குதிப்பது, படகில் சவாரி என நம்ப முடியாத நிகழ்ச்சிகளில் நாம் பங்கு கொண்டு செல்வது ஒரு வாழ்நாள் அனுபவமாக ஆகி விடும்.

‘பேய்கள் உலகில்’ பயத்துடன் தான் நுழைய வேண்டும்.  பயப்படவே மாட்டேன் என்று சவால் விட்ட ஒருவர், கூடவே தைரியமாக வந்தார். உள்ளே சென்ற போது ஒரு திருப்பத்தில் ‘ஹாஹா’ என்று இரைச்சலுடன் ஒரு எலும்புக்கூடு கைகால்களை விரித்து ஆடி மண்டை ஓடு சிரிக்க மோதுவது போல வந்து கச்சிதமாக ஆறு அங்குலத்தில் நின்ற போது, சவால் விட்டவரின் அலறலில் எலும்புக் கூடே பதறி விட்டது. அப்படி ஒரு அருமையான வடிவமைப்பு செய்யப்பட்டுள்ள இடம் இது! கச்சிதமாக மேலே படாமல் எலும்புக் கூடு எப்படி ஆறு அங்குலம் தள்ளி நின்றது? (சென்ஸர் ஏதாவது இருக்குமோ?!)

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ‘எந்த நிகழ்ச்சியையும் விட்டு விடாதீர்கள். இருந்து க்யூவில் நின்று பார்த்து மகிழுங்கள்’, என்பது தான் அங்கு சென்றவரின் அன்புரையாக அமையும்.

யுனிவர்ஸல் ஸ்டுடியோஸ்

உலகையே மயக்கும் ஹாலிவுட்  லாஸ் ஏஞ்சலிஸில் தான் உள்ளது. ஆகவே இயல்பாகவே ஏராளமான திரைப்பட நடிக, நடிகையர், திரைப்படத் துறை வல்லுநர்கள் இங்கு உள்ளனர்.

இங்கு உள்ள யுனிவர்ஸல் ஸ்டுடியோஸ் தீம் பார்க்கைப் பார்க்காமல் யாராலும் திரும்ப முடியாது.

இது ஒரு லைஃப் டைம் எக்ஸ்பீரியன்ஸ் என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம்.

ஜுராஸிக் வோர்ல்ட் என்று ஒரு ரைட். இதில் நாம் செல்லும் போது பழைய காலத்தில் இருந்த பிரம்மாண்டமான டைனோஸர்களைப் பார்த்து பிரமிப்போம்.

ஹாலிவுட் படங்கள் எப்படி எடுக்கப்படுகின்றன என்று ஒரு நிகழ்ச்சி. திரைப்படங்களில் நமது கதா நாயகன் குதிரை  மீது அமர்ந்து –  (அல்லது காரில் காதலியுடன்) செல்லும் காட்சியில் நாம் காணும் மலைத் தொடர்கள், நீர் வீழ்ச்சிகள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும்.

இது எப்படி எடுக்கப்படுகிறது என்பதை இங்கு நேரில் காண்பிக்கும் போது சிரிக்காதவர் யாரும் இருக்க முடியாது. கதாநாயகன் குதிரையில் அமர்ந்து கையையும் காலையும் ஆட்ட பின்னால் ஒரு திரை வேகமாக நகரும். அதில் மலைத் தொடர், நீர் வீழ்ச்சி உள்ளிட்ட பல காட்சிகள் நகர்ந்து கொண்டே இருக்கும். அவ்வளவு தான், திரைப்படமாக எடிட் செய்யப்பட்ட போது நாம் திரையில் காணும் பிரமிப்புக் காட்சிகள் எப்படி தோன்றுகின்றன என்பதையும்  நம்மால் உணர முடிகிறது, இந்த நிகழ்ச்சியால்!

இதே போல ஸ்டண்ட் காட்சிகள் எப்படி எடுக்கப்படுகிறது என்பதைச் செய்து காட்டுகிறார்கள்!

கதாநாயகன் கடலில் உயிருக்குப் போராடும் ஒரு காட்சி.

சுமார் 3000 சதுர அடி பரப்பளவு, ஒரு எட்டு அடி ஆழம் இருக்கும். வறண்ட குளம் போல உள்ள அந்தப் பகுதியை முதலில் பார்க்கிறோம். நாலா பக்கங்களிலிருந்து பைப்பில் நீர் வந்து கொட்ட அந்த பரப்பு சிறிய குளம் போல ஆகிறது.

காற்றுக் குமிழிகளால் அலைகள் கோரமாக உயர எழும்ப, நம் கதாநாயகன் தன் சீரியஸான முக பாவத்துடன் கையையும் காலையும் அந்தக் குளத்தில் ஆட்டுகிறார்.

நாம் சிரிக்கிறோம். ஆனால் திரையில் கண்டு களிக்கும் கடலில் கதாநாயகன் போராடும் பிரமிப்பான காட்சி எடுக்கப்பட்டு விட்டது.

பல காட்சிகளை நாம் பார்க்கும் போதே எதிர்பாராத திகைப்பூட்டும் சம்பவங்களும் நடைபெறும்.  ஒரு காட்சியை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டே இருக்கும் போது நமது அருகில் ஒரு கரடி (நிஜக் கரடி தான்) போகும். அலறி அடித்துக் கத்த மாட்டாமோ, என்ன!

யுனிவர்ஸல் ஸ்டுடியோ ஒரு ‘மஸ்ட் விஸிட் ஸ்பாட்” – நிச்சயம் செல்ல வேண்டிய இடம்.

எல்லே, எல்லே (எல். ஏ. – லாஸ் ஏஞ்சலஸ்) என்று அழைக்கப்படும் லாஸ் ஏஞ்சலஸ் அமெரிக்காவில் நியூயார்க்கிற்கு அடுத்தபடி அதிக ஜனத்தொகை (39.7 லட்சம்) கொண்ட நகரம்.

எல்லே (LA) விழுந்தது என்றால் அமெரிக்காவே விழுந்தது போல் தான் என்பது இதன் சிறப்பைக் குறிக்கும் ஒரு வரியாகும்.. 

எல்.ஏ. இரண்டு நாளைக்கு ஒரு தரம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு புது மாதிரியாகக் காட்சி அளிக்கிறது என்பது இதைப் பற்றிய இன்னொரு புகழ் மொழியாகும்.

லெகோ லேண்ட்

லாஸ் ஏஞ்சலிஸிலிருந்து 91 மைல் தூரத்தில் உள்ளது நாம் பார்க்க வேண்டிய இன்னொரு அற்புத இடமான லெகோ லேண்ட். இரண்டு மணி நேரக் கார் பயணத்தில் இதை அடைந்து விடலாம்.

இது 10 வயதுக்கும் கீழ்ப்பட்ட குழந்தைகளுக்கான தீம் பார்க். லெகோ ப்ளாக்குகளை வைத்து விளையாடும் குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் லெகோ லேண்டில் நிறைய ரைடுகளும் கண்காட்சி அரங்கங்களும் உண்டு. லெகோ ப்ளாக்குகளை வைத்துக் குழந்தைகளே அணையைக் கூட இங்கு கட்டலாம்.

குழந்தைகளே இங்கு எலக்ட்ரிக் கார்களை தாமாகவே ஓட்ட வசதியும் உள்ளது. சரியாக ஓட்டினால் அவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸும் தரப்படும்!

இது வரை உலகில் தயாரித்து, குழந்தைகள் விளையாடும் லெகோ ப்ளாக்குகளை ஒன்றன் மீது ஒன்று வைத்தால் அது சந்திர மண்டலத்தைத் தொட்டு விடும் என்பது இங்கு நமக்குத் தரப்படும் செய்தி. உலகில் அவ்வளவு லெகோ விளையாட்டு ப்ளாக்குகளை குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன என்பது ஒரு அபூர்வ செய்தி தானே!

இது வரை நாம் பார்த்தது அமெரிக்காவின் ஒரு சிறு பகுதியைத் தான். மற்றதையும் பார்க்காமல் விடலாமா என்ன, பின்னர் பார்ப்போம்.

இப்படி ஒரு பயணத்தை மேற்கொள்வதால் ஏற்படும் உடனடிப் பயன் என்ன?

மனம் விசாலமாகிறது. உலகின் பல்வேறு நாட்டு மக்களை , சிறு வயதிலிருந்து மிக மிக மூத்த வயதினரை, பல்வேறு மொழி பேசுவோரை, பல்வேறு இனம், மதத்தினரைப் பார்க்கும் போது வேற்றுமை உணர்வு இல்லாமல் போகிறது.

நாம் அனைவரும் மனித இனம் என்ற ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களே என்ற உணர்வு மேலோங்குகிறது.

அமெரிக்கர்களும் இந்தியர்களும் பரஸ்பர மரியாதை, அன்பு கொண்டவர்கள் என்பதால் எங்குமே பிரச்சினை ஏற்பட வாய்ப்பே இருப்பதில்லை. உள்ளார்ந்த அன்பு ஒன்றே மனித குலத்தின் ஒரே சொத்து என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

மனமுவந்து உதவி செய்வதில் அனைவரும் குறியாய் இருப்பதால்  மயங்குகிறோம், மகிழ்கிறோம்.

அமெரிக்க விமான நிலையத்தில் இறங்கும் போதிலிருந்து உற்சாகம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். சீனியர்களுக்கு தனி மரியாதை, முன்னுரிமை உண்டு. கச்சிதமான ஒரு பயணத் திட்டத்தை வகுத்துக் கொண்டால் பயணத்திலிருந்து நாம் அள்ளிக் கொண்டு வருவது மகிழ்ச்சியையே!

***

 tags-  லெகோ லேண்ட்.,ஹாலிவுட் ,யுனிவர்ஸல் ஸ்டுடியோ, லாஸ் வேகாஸ்

0RANGE – A TAMIL WORD OR A SANSKRIT WORD? (Post No.10813)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,813

Date uploaded in London – –    5 APRIL  2022          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

The Arab merchants introduced the name of Indian fruit Naaranga into European languages during their trade with European countries. The etymology of the word in English dictionaries traced it to Arab and then to Persian.

From the Arabs the Italians got ‘narancia’, the Spaniards ‘naranja’, the Portuguese ‘laranj’a and the French’ Orange’. In Sanskrit it appears in two forms

Nagaranga

Naranga

But no satisfactory etymological explanation is given in Sanskrit. So Gundert’s Malayalam dictionary traced it to Dravidian root. We know that ‘naar’ is fibrous substance. So people thought it is a fruit with fleshy , fibrous part inside. In Malayalam it is called naranna. But Gundert traced it to naar / to smell. People thought it went into Arab and then into Persian during Arab’s commercial intercourse with Malabar coast in Kerala.

Nāraṅga (नारङ्ग).—m. An orange tree, [Suśruta] 1, 209, 6.

But Wisdom library says it is in Susruta Samhita. He belongs to sixth century BCE. If it is correct then Oranage is not a Tamil word. Naranga may have smell/naarram in Tamil, Naranaga may have Naar/fibres inside but yet it is not found in early Tamil literature. But Susruta has it. Then it must be a Sanskrit word that travelled around the world via Arabic and Persian languages.

Further research is required to find the date of its occurrence in every language. As far as I know it is not in Sangam Tamil literature.

The citrus family is very big family with various fruits from lemon to orange.

orange

/ˈɒrɪn(d)ʒ/

Origin

late Middle English: from Old French orenge (in the phrase pomme d’orenge ), based on Arabic nāranj, from Persian nārang .

Following is from Wisdomlib. website

Nāraṅga (नारङ्ग).—m. An orange tree, [Suśruta] 1, 209, 6.

–subham–

tags- Orange, Naranga, Arab, Persian, Susruta, Tamil

AKKADIAN-SUMERIAN LINK குரீர, வடு, திமில் – சொல் ஆராய்ச்சிக் கட்டுரை -3 (Post.10,812)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,812

Date uploaded in London – –    5 APRIL  2022          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

கட்டுரையின் மூன்றாம் பகுதி இது

திமில் THIMIL (படகு, கப்பல், மீன், தோணி ), திமிலர்/மீனவர்  , திமி-ங்கிலம் THIMIN-GILA, பற்றி நேற்று கண்டோம் .

இத்துடன் தொடர்புடைய சொல் தியாமத TIAMATA என்னும் சுமேரிய தெய்வம் அல்லது பிராணி.

 தைமாத TAIMAATA என்னும் அதர்வண வேதச் சொல் என்றும் கண்டோம்.

தை மாத ஒரு பாம்பு என்று அதர்வண வேதம் 5-13-6 கூறுகிறது :

வில்லின் வில் நாணைப் போல ,எப்போதும் வெற்றி பெறும்  கரும்பாம்பு தைமாதன் , பழுப்பு நிற அப்போதகன்  ஆகியோரின் கோபத்தை/ விஷத்தை நான் ரதங்களைப் போல விலக்குகிறேன் என்பது மந்திரத்தின் பொருள் ஆகும். ரதத்தைப் போன்ற  வேகத்தில் என்ற இதே உவமை,  ரிக் வேதம் 10-10-4 லும்  வருகிறது.

ஆனால் தைமத மட்டுமின்றி இதற்கு அடுத்து வரும் அலிகி , விளிகி போன்ற பாம்புகளின் பெயர்களும் சுமேரிய மொழி புராணக் கதைகளில் உள்ளது. யார் எங்கிருந்து எப்போது கடன் வாங்கினார் என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். மேலும் கட்டு விரியன் என்றும், நல்ல பாம்பு என்றும், கொம்பு ஏறி மூர்க்கன் என்றும், நாம் பாம்புகளுக்குப் பெயர் இடுகிறோம். இவற்றி ல் சில பாம்பு என்று சொன்னால்தான் நமக்குத் தெரியும் ஏனெனில் அதில் பாம் பு என்ற சொல்லே இல்லை. ‘நல்ல’, ‘கட்டு’, ‘கொம்பு ஏறி’ போன்ற சொற்களை நாம் வேறு இடங்களிலும் வேறு பொருள்களிலும் உபயோகிக்கிறோம். அப்படிப் பார்த்தால் அபோதகன் என்பதற்கு ஆப + உதக (தண்ணீர் +தண்ணீர் ) என்றும் பொருள் சொல்லலாம். மற்ற பாம்புகளின் பெயர்களில் ஸம்ஸ்க்ருத சொல் என்பதற்கு மூலமும், வேரும் இல்லை. ஆகையால் சுமேரியாவிலிருந்து கடன் வாங்கி இருக்கலாம்.

தியமத என்ற சொல் சுமேரியாவில் , கடல் அரக்கி என்ற பொருளில் வருகிறது. இதை தியா மத என்றும் உச்சரிப்பர். அப்படிப் பார்த்தால் சம்ஸ்க்ருதத்தில் தேவ மாதா என்றும் பொருள் சொல்லலாம் அதைவிட முக்கியமானது சுமேரிய கதை ஆகும். இது பாபிலோனிய பிரபஞ்சத்  தோற்றக் கதையிலிருந்து வந்த அக்கடியன் மொழிச் சொல் என்று பிரிட்டிஷ் நூலகம் வெளியிட்ட நூல் விளம்புகிறது. தியாமத் என்றால் கடல். நாம் தமிழில் பார்த்த திமில் – உடன் தொடர்புடையது .

ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் கந்தர்வர்கள் , அசுரர்கள் ஆகியோர் முற்காலத்தில் சிந்து வெளி நாகரிக பூமியில் இருந்தவர்கள் என்று புஸ்தகம் எழுதிய மாலதி ஷிங்ட்டே என்பவர் அக்கடியர்கள் சொல்லும் விஷயம் ரிக் வேதம் 10-10-4ல் உள்ள கந்தர்வர்- மனைவி பற்றிய கதை என்றும் சொல்கிறார்.

கதையைக்  காண்போம்

அந்தக் காலத்தில் வானம் என்பதற்கு பெயரே இல்லை; பூமி என்ற பகுதிக்கும் யாரும் பெயர் சூட்டாத காலம் அது” – என்று பிரபஞ்சம் பற்றிய கவிதை துவங்குகிறது.

இது ரிக் வேத பிரபஞ்ச தோற்றக் கவிதைகளை ஒத்திருக்கிறது

கதை மேலும் சொல்கிறது ,

“தியாமத் என்னும் உப்பு நீர்க்கடலுடன், அப்ஸு என்ற தூய நீர்ப் பரப்பும் மட்டுமே இருந்தன. (இதில் அப்ஸு என்ற சொல் ஆப / தண்ணீர் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் ஆகும்). தினமும் பிராமணர்கள் மூன்று வேளையிலும் இந்த ‘ஆப என்ற தண்ணீர்’ மந்திரத்தைச் சொல்லித்தான் சந்தியா வந்தனம் செய்கின்றனர். வீட்டைச் சுத்தப்படுத்தும், தீட்டுகளை போக்கும் புண்யாஹ வசன மந்திரத்திலும் இந்த ‘ஆபோ’ஹிஷ்டா – தண்ணீர் மந்திரம்தான் முக்கியம்.

முதலில் அதர்வண வேத மந்திரத்தில் வந்த இந்த ‘ஆப உதக = தண்ணீர் தண்ணீர்’ என்பதை அப்போதகன் என்ற பாம்பு என்று எழுதிவிட்டு இது இனம் கண்டறியப்படாத புதுவகைப் பாம்பு என்றும் கிரிப்பித் (R T Griffith ) உளறியுள்ளார்.

சுமேரியக் கதையிலும் ‘அப்ஸு = சுத்த நீர்’ Abzu என்ற பொருளில்தான் வருகிறது.

இதற்குப் பின்னர் வரும் கதையும் இந்து மத புராணத்தை ஒட்டியே வருகிறது.

தியாமத் பெண் என்றும் அப்ஸு ஆண் என்றும் இரண்டு கடல்களும் கலந்து அரக்கர்களையும் தெய்வங்களையும் உண்டாக்கியதாகவும் அவற்றி ன் சப்தம் பொறுக்காதபடி அவர்களைக் கொல்ல  நினைத்தனர் என்றும் மார்டுக் Marduk என்னும் தெய்வம் தைமத / தியாமதவின் தலையைப் பிளந்து ஒரு பகுதியை பூமியாகவும், மறு  பகுதியை வானமாகவும் செய்ததாகவும் கதை நீளு கிறது . அந்த பெண்ணின் முலைகள் மலைகளாக மாறின; கண்களில் இருந்து டைக்ரிஸ், யூப்ரதீடீ ஸ் நதிகள் ஆறாக ஓடின என்றெல்லாம்  கதை  போகிறது. (2 கடல்களும் கலந்து அ ரக்கர்களை உருவாக்கியது, கடல் கடைந்து அமிர்தம் எடுத்த புராணக் கதையை நினைவுபடுத்துகிறது. அதிலும் அரக்கர்- தேவர் பணியும் 14 பேர் தோன்றிய கதையும் வருகிறது )

இந்துக்களும் தேவியின் உடல் பகுதி விழுந்த பகுதிகள் சக்தி பீட க்ஷேத்திரங்கள் ஆயின,; சிவன் தலையிலிருந்து கங்கை வந்தது என்றெல்லாம் சொல்கிறோம்.

ஆக தண்ணீர் என்பதிலும், கடல் என்பதிலும் தியாமத் = தை மாத சொற்கள் பொருந்துகின்றன ; தமிழ்ச் சொல்லான திமில், திமிலை (ஒரு வகை மீன்) ஆகியனவும் இதற்கு நெருங்கி வருகிறது . 2400 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி இலக்கணத்துக்கு குறிப்பு எழுதிய வரருசி திமிங்கிலம், திமிங்கிலத்தை உண்ணும் திமிங்கிலகிலம் பற்றியெல்லாம் பேசுகிறார். கி.மு. முதல் நூற்றாண்டில் ரகு வம்ச காவியம் எழுதிய காளிதாசனோ திமிங்கிலம் மூச்சு விடும்போது எழும் தண்ணீர் கம்பம் பற்றிப் பாடுகிறார். வால் மீகி ராமாயணமோ அனுமன் சந்தித்த மூன்று கடல் அரக்கிகள் பற்றிப் பேசுகிறது..

பாமர மக்களுக்கு பெரிய பூகோள/புவிஇயல், வான சாஸ்திர/ விண்வெளி விஷயங்கள் புரியாது என்பதற்காக இப்படிச் சொன்ன கதைகள் காலப் போக்கில் பொருள் விளங்காது போய் ‘ஆப உதக’ என்பது அப்போதன் என்ற இனம் தெரியாத பாம்பு என்று வந்து விடுகிறது. அதாவது அதர்வண வேதப் புலவர் பாம்பு மந்திரத்தில் இதை உபயோகித்தாலும் அது சிலேடைப் பொருளில் வருவது சுமேரிய புராணங்களை படித்தவர்களுக்கே தெரியும். ஹாம்ப்டன் பிரிட்ஜ் Hampton Bridge in Chennai  என்னும் பாலம் சென்னையில் அம்பட்டன் வாராவதி ஆன கதைதான் !

திமில் = திமிங்கில = தியமத =தை மாத தொடர்புகளைக்  கண்டு உணர்க. 

இது ஒரு சொல் மட்டுமல்ல. டாக்டர் வட்டல் (Dr Waddell)  என்பவர் சுமார் 100 சுமேரிய சொற்கள், சம்ஸ்க்ருதச் சொற்கள் என்று பட்டியலிட்டுள்ளார்..

–SUBHAM–

tags- தியா மத , தைமத , சுமேரிய, அக்கடிய , சம்ஸ்க்ருத, தமிழ், திமில் , திமிங்கிலம்

அறிவியல் வியக்கும் அங்க லட்சணம்! (Post No.10,811)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,811

Date uploaded in London – –     5 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

அறிவியல் வியக்கும் அங்க லட்சணம்!

ச.நாகராஜன்

பேரழகியான ராஜகுமாரி ஒருத்தி நூறு சதவிகிதக் கற்பு விரதம் பூண்டவள்! கணவனைத் தவிர வேறு எந்த ஆணையும் பார்ப்பதில்லை என்ற சபதத்தை விவரம் தெரிந்த நாளில் எடுத்துக் கொண்டாள்.

பேரழகியாகத்தான் இருக்கட்டுமே, கன்னியைப் பார்க்காமல் எந்த ராஜகுமாரன் தான் மாலையிடுவான்?

ராஜாவிற்குக் கவலை மேலிட மந்திராலோசனை நடந்தது. மந்திரி ஒரு வழி சொன்னார்.

‘ராஜகுமாரி திரைக்குள் இருக்கட்டும். கால் விரல் நகத்தை மட்டும் காண்பிக்கட்டும்; மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றார் அவர்.

ராஜகுமாரியும் இணங்கினாள். எந்த ஆணையும் பார்க்க முடியாது என்ற அவள் கண்டிஷன் மீறாமல் ஓவியன் ஒருவன் அவள் கால் நகத்தை வைத்தே அவளது முழு உருவத்தையும் வரைந்து விட்டான்!

கதையல்ல இது, நமது தேசத்தில் நடந்த உண்மைச் சம்பவம் இது என்பார்கள்!

பேரரசன் திருமலை நாயக்கரின் மனைவி சிலையை சிற்பி செதுக்கும் போது சிலையின் தொடையில் மறைவிடத்தில் உளி செதுக்க, மச்சம் ஒன்று விழுந்தது.

சிற்பி திகைத்துப் போனான். ஆனால் சிலையை மேற்பார்வையிட வந்த அமைச்சரான

நீலகண்ட தீக்ஷிதர். ‘அதை அப்படியே விடுமாறு’ கூறினார்.

சந்தேகம் அடைந்த மன்னன் அவரை அவைக்கு அழைத்து வருமாறு சேனாதிபதிக்கு உத்தரவிட, பூஜை செய்து கொண்டிருந்த தீக்ஷிதர் வாசலில் சேனா வீரர்கள் வந்திருப்பதை அறிந்து கற்பூரத்தைத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டார்.

கண் பார்வை போனது.

‘அரசர் கொடுக்க நினைத்த தண்டனையை தானே தீக்ஷிதர் நிறைவேற்றிக் கொண்டார்’ என்று அரசரிடம் சொல்லுங்கள் என்றார் தீக்ஷிதர்.

அரசன் நடந்ததை அறிந்து திகைத்துப் போனான். அங்க லட்சணம் அறிந்த ஒருவர் அதை சுலபமாக ஊகிக்க முடியும் என்பதை அறிந்த அவன் தீக்ஷிதரின் மேன்மையையும் அறிவையும் உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.

அரச சேவையில் நாட்டமில்லாத அவர் அத்துடன் தன் அரச சேவையை முடித்துக் கொண்டார்.

இது நடந்த உண்மை வரலாறு!

இதெல்லாம் எப்படி சாத்தியம்? சாமுத்ரிகர் என்னு முனிவர் இதற்கு விடையைத் தருகிறார்!

“மனித உடல் அமைப்பில் அனைத்து உறுப்புக்களும் ஒன்றுக் கொன்று தொடர்பு கொண்டது. அதோடு அவரவர் உடல் அமைப்பு வாழ்க்கையோடு தொடர்புடையது’ என்று (உள்ளுணர்வால்) ‘கண்ட’ அவர் சாமுத்ரிகா லட்சண சாஸ்திரத்தை இயற்றினார்.

இன்னின்ன உடல் அவயவம் இன்னின்ன படி உள்ளோர் இப்படி இருப்பர் என்பதே அவரது நூல்.

அங்க அளவு, அமைப்புகள் சீராக இருப்பவர்களை லட்சணம் பொருந்தியவர்கள், வெற்றி அடைபவர்கள் என்று கூறுகிறார் சாமுத்ரிகர்.

இதையே மேற்கும் அறிவியல் ஆராய்ச்சிக்குப் பின்னர் இன்று ஒப்புக் கொள்கிறது!

வாழ்க்கையே உடலின் இரு பாதிகள் நடத்தும் விளையாட்டு!

இந்த விளையாட்டில் நல்ல முடிவுகள் வேண்டும் என்றால் இரண்டும் பொருத்தமுடையவையாக இருக்க வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள்!

சீரான அங்க லட்சணங்கள் பொருந்தியவர்கள் ஆரோக்கியமாகவும் அதிக கவர்ச்சி உடையவர்களாகவும் இருக்கின்றனர். சீரற்ற அளவுள்ள அவயவங்கள் உள்ளோர் யாரையும் கவர்வதில்லை என்கிறது அறிவியல் ஆய்வு ஒன்று!

சீரான அங்கமுடைய ஆண்கள் அதிக பிள்ளைகளைப் பெறும் சக்தி உள்ளவர்கள்; சீரான அங்கமுடைய மங்கையர்க்கு மார்பக புற்று நோய் வருவது மிகக் குறைவு என்கிறது அறிவியல் ஆய்வு முடிவுகள்!

மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பிரபல பயாலஜிஸ்ட் ராபின் பேகர், “உடலின் சரியான அளவு விகிதம் லேசாக ஒதுக்கி விட முடியாதபடி அதிகம் அர்த்தமுள்ளது” என்கிறார்!

மனித மற்றும் மிருகங்கள் சீரை (Symmetry) விரிவாக ஆய்ந்த அவர்களின் ஆய்வு ஜெனிடிக் கொள்கையால் நாம் எப்படி ஆளப்படுகிறோம் என்பதை உறுதிப் படுத்துகிறது!

பந்தயக் குதிரை வேகத்திலிருந்து, மார்பகப் புற்று நோய் வரை சீராக இருப்பதற்கும் இவை அனைத்திற்குகே சம்பந்தம் உள்ளது என்கிறார் அவர்.

சின்னச் சின்ன சீரற்ற அவயவங்களை அளந்து விடுவதாலேயே ‘ஜெனிடிகல்  ஃபிட்னெஸ்’ எப்படி இருக்கிறது என்பதைக் கண்டுவிடலாம் என்கிறது அவரது ஆய்வு முடிவு!

மனித நடத்தைகள் பற்றி சில வருடங்களுக்கு முன்பு வியன்னாவில் நடந்த மாநாட்டில் பேசிய போது அவர் சாமுத்ரிகா லட்சணம் சரியாக அமையப் பெற்றால் ஏற்படும் நலன்களை விவரித்தார்.

அவரது பெரிய ஆராய்ச்சிக் குழு சுட்டுவிரல் நீளம், மணிக்கட்டு, முழங்கை ஆகியவற்றை உடலின் இருபுறமும் அளவெடுத்தது.

சரியான, சீரான அளவு இருபுறமும் உள்ளவர்களின் செக்ஸ் உணர்வு, செய்கைகளும் பரிசோதிக்கப்பட்டன.

சீரான அவயவம் உள்ளவர்களே செக்ஸ் உறவில் அதிக உயிரணுக்களை வெளிப்படுத்துகிறார்கள் என்று பேகர் விவரித்தார்.

சீரான அவயவம் உடையோரையே பரஸ்பரம் ஆண், பெண் இருவரும் – ரதியை மன்மதன் விரும்புவது போல – அதிகம் விரும்புகின்றனர்!

அது மட்டுமின்றி, இப்படிப்பட்ட ஆண்களுக்கு இதய நோய் அதிகம் வருவதில்லை என்றும் கூறும் அவர், இந்த ஆய்வின் முக்கிய முடிவையும் கூறினார்.

ஆச்சரியமாக உள்ள அந்த விஷயம் இது தான்!

சீரான் உடல் பற்றிய அறிவியல் ஆய்வு, இந்த அவயவங்கள் முழுவதையும் ஒரே ஒரு ஜீன் மட்டுமே நிர்ணயிக்கிறது என்கிறது!

மனிதனின் இரு பாதிகளும் சீராக இருப்பவரே வெற்றிகரமாகச் செயலாற்ற முடியும் என்ற முடிவு தெரிந்த பின்னர் நமது வேலை சுலபம் தானே!

ஒரு ஸ்கேலை எடுத்து அளக்க ஆரம்பிக்க வேண்டியது தான்! – பாரத தேச முனிவரின் பெருமையை எண்ணிப் பாராட்டியவாறே!!

***

Tags- சாமுத்ரிகா லட்சணம் ,அங்க லட்சணம், நீலகண்ட தீக்ஷிதர் ,திருமலை நாயக்கர்

TWO TAMIL WORDS SHOW AKKADIAN, SUMERIAN LINK (Post No.10,810)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,810

Date uploaded in London – –    4 APRIL  2022          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

TAMIL WORDS ‘VADU’ AND ‘THIMIL’ ARE INTERESTING WORDS BECAUSE  THEY SHOW A LINK WITH SUMERIAN AND AKKADAN LANGUAGES. BOTH THE LANGUAGES WERE SPOKEN IN IRAQ (MESOPOTAMIA).

‘Vadu’ in Tamil means a scar, a mole or a wound. But in at least two places it was used for a bachelor, Brahmachari, a youth. It is derived from Sanskrit Vadu or Badu for Brahmachari. Even today Tamil Brahmins print VADU in their Punul Kalyana/ sacred thread ceremony invitation, requesting the elders to come and bless the Vadu.

Ainkuru Nuru is one of the 18 Sangam Tamil books. It has Vadu to mean youth or a Brahmachari/bachelor in verses 14 and 213. In one of the Akananuru poems, the tip of the breast is called Vadu. In other places they meant only a scar or a wound or a mole.

What is more interesting is in Akkadian language also, it meant Youth. They used Batuulu or Baduulu. In Marathi Bataki is sevant maid and Badulaa is a stupid youth, like we have child and childish in English with two different meanings.

My opinion is that  it should have gone from Vedic Sanskrit to other languages if we believe Hindus migrated to different parts of the world to civilize the world. Rig Veda itself commands the Hindus to go around the world to civilise people.

Another interesting point is in Akkadian, letter B is used in Batuulu and in Tamil letter V is used in Vadu. So this B=V change is seen from Kanyakumari  to Iran covering Semitic languages and Indian languages.

Earlier in another article (Tamil- Avestan Link)  I showed AsVa is changed to AsPa in Avestan. Purananuru and Tirukkural changed TaPas into TaVam (B=V).

My question is who asked these people to change B=V? It smashes the arguments of people like Caldwell, Burrow and Emmaus. Those fellows came with a fixed Anti- Hindu notion and bluffed with many “Scholarly” writings!

Then how did these changes happen? Like Vedic Pratisakhyas say, these are natural. There is no rhyme or reason to fix a date or a geographical boundary for such changes. Otherwise how can one explain the B=V changes found in Tamil, Avestan, Marathi, Sanskrit and Akkadian covering a vast area from Iran to Kolkata. Bengalis change all Vs in to Bs.

Xxxx

Thimil

Thimil is a more interesting word because of its connection with Sumerian language.

The word Thimil in Tamil meant sea, boat, fish, whale, killer whale etc.

Thimilar meant fishermen. Over 30 places, we come across Thimil in Tamil verses which are 2000 years old. They are called Sangam Tamil poems.

Panini’s sutra of seventh century BCE was explained by Vartika of Fourth century BCE. In writing gloss over Panini Sutra 6-3-70 , Katyayana Vararuchi gives Timim- gila/whale, Timingila- kila / killer whale etc. Later we see it in Maha Bharata and  Katha Sarit Sagara for fish and whales.

Valmiki Ramayana and later Kalidasa also mentioned huge sea creatures. Hanuman met three sea monsters on his way to Sri Lanka. Kalidasa even mentioned the water sprout caused by the breathing of whales (Raghuvamsa 13-10; also Narrinai poems in Tamil).

xxx

Tiamat in Sumer and Taimaata in Atharvana Veda

Now let us compare Thimil with Sumerian literature and Atharvana Veda.

Taimaata is a sea dragon/snake in Atharvana Veda 5-13-6

One of the foreigners translated it as a white Taimaata in reddish brown water. Others said the meaning was obscure

xxxx

DICTIONARY OF ANCIENT NEAR EAST, published by the British Museum says,

“Tiamat is an Akkadian name meaning sea. This female creature is personification of the primeval salt waters in the Babylonian epic of creation by its opening words ‘enuma elis’ =  ‘when on high’.

“When on high the heavens were not yet named, and below the earth was not called by a name”,  according to this unique Babylonian account (which differs from other Mesopotamian narratives of the earliest periods in the development of the world), the only creatures were in existence were Tiamat and Apsu. The latter represented the sub terranean fresh waters.

In the epic Tiamat and Apsu are female and male respectively. Then there is a mythological story like our puranas.

Marduk killed Tiamat and opened her skull and formed heaven with one half and the earth with the other half; her breasts formed the mountains and rivers Tigris and Euphrates flowed from her eyes, and her spittle formed the clouds.

Akkadians were familiar with this myth , and when the gandharva was called Apsu  and his wife the aqueous nymph apyaa ca yosaa, the poet of Rigveda 10-10-4 was referring to this myth, says Malati J Shendge in her book The Language of the Harappans

R V 10-10-4

Shall we do now what we have never done I the past? We who spoke righteously now talk impurely?

Gandharva in the floods, the Dame of Waters – such is our bond, such our most lofty kinship.

All these stories are already in the creation verses of the Rig Veda and later Puranas which explain the body Parts of Goddess Parvati forming various structures on earth (Ref. 51 or 108 Shakti Peethas)

More over Sumerain names are in Sanskrit Apsu= Apa= water in Sanskrit.

Tia maata = Deva Mathaa

Xxx

Now look at what R T Griffith says in his translation of Atharvana Veda ,

Taimaata and Apodaka (waterless, non aquatic) are unidentifiable varieties of snakes; they were described as black and brown snakes.

Actually Apa+ Udaka is water+ water. (apa= aqua; Udaka=Vodka)

May be Atharvana Veda seer wans to say something in a symbolic language. Or he might have used known names for some snakes . Even cobra is called Good Snake (Nalla Paambu) and krait is called (Spreaded Nodes/Joints/Divisions) in Tamil. So one cat take them literally.

But Sumer and Sanskrit link Taimata with water and creature/dragon/snake.

Last but not the least even Tamil word Thimil and Sanskrit Thimin- gila are not far from Tiamata of Sumer or Atharvana Veda.

–subham–

 tags- Akkadian, Sumerian, Vadu, Badu, Taimaata, Taimata, sea , snake, dragon, Thimil, Thimingila, Whale