Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
S K B
To:swami_48@yahoo.com
Tue, Oct 12 at 8:27 PM
Dear Sir,
I am a retired scientist, interested in Ancient Indian History. I understand that you have written a paper on the dating of the Mahabharata war and found the year as 3137 BCE. May I request you kindly to send me a pdf copy of the same.
Regards,
S K. B
Xxxx
I tried but could not get any contact number till now. I am in USA and I don’t have any personal contact in Tamilnadu.
I look forward to hearing from you. SKB
xxxx
Dear Swamiji,
It will be very kind of you if you can send me a copy of the Tamil inscription dated 865 CE, if possible with English translation of at least the portion that talks about the Kali yuga.
I look forward to hearing from you and thanks
S K.B.
Xxxx
My Reply
Book Name in Tamil Kalvettu – Or Arimukam
(Inscription – An Introduction)
Published by
Tamil Nadu Arasu, Tol Porut Thurai Ayvu Veliyeedu, 1976
(Tamil Nadu Government, Archaeological Research Department , 1976)
Page 15
ஆய்குல மன்னன் கோ கருநந்தடக்கனின்
பார்த்திவசேகரப்புரச் செப்பேடுகள்
தமிழ்ப் பகுதி
ஸ்வஸ்தி ஸ்ரீ கலியுகக் கோட்டு நாள் பதினான்கு நூறாயிரத்து நாற்பத்து
ஒன்பதினாயிரத்து எண்பத்து ஏழு சென்ற நாள்
ஸ்வஸ்தி ஸ்ரீ கோக் கருநந்தடக்கனுக்கு யாண்டு ஒன்பது நாள் பதினைஞ்சு
இந் நாளால் முடால நாட்டு பசுங்குளத்துப் படுநிலத்தில் ………………..
Explanation given on page 63
பார்த்திவசேகரபுரச் செப்பேடுகள்
வேணாட்டை ஆண்ட ஆய்குல மன்னன் கோக் கருநந்தடக்கன் என்ற மன்னன் அளித்த செப்பேடு இது.
இது பார்த்திவசேகரபுரம் என்ற ஊரை மன்னன் ஏற்படுத்தியத்தைக் குறிக்கிறது . ஆதலின் இதை பார்த்திவசேகரபுரம் செப்பேடுகள் என்று அழைப்பர்.
இச்செப்பேடு சில சிறப்புகளை உடையது . இச்செப்பேட்டில் கலியுக ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது .
கலியுக ஆண்டும் நாட்களில் குறிக்கப்பட்டுள்ளது 14,49,087 – ஆம் நாள் என்று கூறுகிறது .நூறாயிரம் என்ற கணக்கு இருந்ததை இது காட்டுகிறது . இது கலி ஆண்டு 3967, ஆடி மாதம் 15- ஆம் தேதி ஆகும்; சற்றேறக் குறைய கி.பி 865 ஆகும்
My rough translation of the relevant Tamil parts:-
Ay Kula King Ko Karunanthatakkan Paarthiva sekarapuram Copper Plates
Swasti Sri Kaliyuga written day fourteen hundred thousand, forty nine thousand, nine thousand eighty seven days past,
Swasti Sri Ko Karunanthatakkan year Nine fifteenth day Mudala country Tank, in the field ………………………………
xxxx
Explanation given on page 63
This is the copper plate given by Ay Kula (Yadava King) King Ko Karunanthatakkan who ruled Venaadu.This talks about the establishment of a town called Paarthivasekarapuram. So it is known as Paarthiva sekara puram Copper Plates.
This Copper Plate hs got a few special features. Kali Yuga year is mentioned. Even that Kali Yuga is mentioned in days. 14, 49, 087th day is mentioned. This also shows the number one hundred thousand. This is Kali Yuga 3967 Aadi month 15th day. It is approximately 865 CE.
We did not get the complete set of copper plates .
xxx
My Comments
Second stanza in the plate mentioned the ruling year of the king as 9 years 15 day. It is a custom to mention the ruling year of the king when an inscription was inscribed or a proclamation is made by the king.
Tamil Month Aadi corresponds to July.
Nowadays Hindus use Laksha (lakh) instead of One Hundred Thousand.
Rest of the inscription talks about the erection of a Vishnu temple and establishment of Vedic School.
‘Ay Kula’ literally means ‘Cowherd Clan’ which is Yadava clan.
These plates throw much light on the Vedic education 1200 years ago in Kerala.
Venaadu is the Travancore area in Kerala. At that time it was a Tamil speaking area. Now its sister language Malayalam is spoken in Travancore. PARTHIVAPURAM IS IN TAMIL NADU NOW.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண் பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்
காகங்கள் பல கூடி ‘கா, கா’ என்று கரையும் போது குயிலின் இனிமையான ஓசை எடுபடுமோ? ரௌடிகள் பலர் கூடி தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருக்கும் போது அறிவாளியான ஒருவன் மௌனமாகவே இருக்க வேண்டும்.
Does the cooing of a cuckoo appeal pleasing amidst the din and noise created by a flock of crows? When wicked people are arguing with each other a wise man should always keep silent.
*
சத்சங்காத் பவதி ஹி சாதுதா கலானாம்
சாதூனாம் ந ஹி கலசங்கமாத் கலத்வம் |
ஆமோதம் குஸுமபவம் ம்ருதேவ தத்தே
ம்ருதகந்தம் ந ஹி குஸுமானி தாரயந்தி ||
கெட்டவர்களும் கூட நல்லவர்கள் சேர்க்கையால் நல்லவர் ஆவர். ஆனால் நல்லவர்களோ கெட்டவர் சேர்க்கையால் கெட்டவர் ஆக மாட்டார். பூமியானது மலர்களின் சுகந்த வாசனையால் வாசனையுறுகிறது. ஆனால் மலர்களோ பூமியின் கெட்ட நாற்றத்தைத் தாம் கொள்வதில்லை.
Bad people become good in the company of the good. But the good do not become bad in the company of the bad. The earth bears the fragrance of the flowers. But the flowers do not carry the smell of the earth.
*
சுஜனோ ந யாதி வைரம் பரஹிதநிரதோ விநாசகாலேபி |
சேதேபி சந்தனதரு: சுரபயதி முகம் குடாரஸ்ய ||
ஒரு நல்லவன் மற்றவர்களுக்கு நல்லதைச் செய்யும் போது தான் அழிந்தாலும் கூட கெடுதலைச் செய்ய மாட்டான். சந்தன மரமானது தன்னை வெட்டித் தள்ளும் கோடாலியைக் கூட மணக்க வைக்கிறது.
A virtuous person engaged in doing good to others does not become inimical even at the time of (his own) destruction. The sandal wood tree makes the blade of the axe fragrant even when it is being cut.
*
சத்பிஸ்து லீலயா ப்ரோக்தம் ஷிலாலிகிதமக்ஷரம் |
அசத்பி: ஷபதேனாபி ஜலே லிகிதமக்ஷரம் ||
விளையாட்டாக ஒரு நல்லவன் பேசினாலும் கூட அது கல்லில் எழுதப்பட்டது போல ஆகி விடும். ஆனால் துஷ்டர்கள் வாக்குறுதி அளித்தாலும் கூட அது ஜலத்தின் மீது எழுதப்பட்ட வார்த்தைகள் போல ஆகி விடும்.
Even the casual speech made by righteous people is (like) words engraved on a stone. The promise made by the wicked persons are (as transitory) as words drawn on water.
*
வதனம் ப்ரஸாதசதனம் சதயம் ஹ்ருதயம் சுதாமுசோ வாச: |
கரணம் பரோபகரணம் சேஷாம் கேஷாம். ந தே வந்த்யா: ||
சாந்தமான முகம், கருணை நிரம்பிய இதயம், அமுதம் போன்ற வாக்கு, எப்போதும் பரோபகார உதவி செய்யும் செயல்கள் கொண்ட நல்லோரை யார் தான் மதிக்காமல் இருப்பார்கள்?
Who does not respect the (kind people) whose face is the abode of tranquility, heart is full of compassion, speech, nectar and whose deeds consist in doing good to others?
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை அக்டோபர் 17-ம் தேதி 2021
ஆம் ஆண்டு
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./காணலாம்.
XXXX
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்
வங்கதேசத்தின் கொமில்லா நகரில் உள்ள இந்து கோவிலில் குர்ஆனை அவமதித்ததாக வதந்தி பரவியதையொட்டி, அந்த நகரில் இந்து கோவில்களும், துர்கா பூஜை பந்தல்களும் அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டன.
இதனையடுத்து, கொமில்லாவிற்கு அருகிலுள்ள மேலும் மூன்று நகரங்களில் கோவில்களும், துர்கா பூஜை பந்தல்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் கொமில்லா பகுதியில் தொடங்கிய கலவரம் மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இந்தக் கலவரத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், 22 பேர் காயமடைந்துள்ளதாகவும் வங்கதேச ஊடகங்கள் கூறுகின்றன.
இதையடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த வங்கதேசத்தின் 22 மாவட்டங்களில் பாராமிலிட்டரி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே வங்கதேச காவல்துறை, இந்து கோவில்கள் மற்றும் துர்கா பூஜை பந்தல்களைச் சேதப்படுத்தியது தொடர்பாக 43 பேரை கைது செய்துள்ளனர்.
, வங்கதேசத்தில் இந்து கோவில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, இந்திய தூதரகம் வங்கதேச அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், “வங்கதேசத்தில் மதக் கூட்டங்கள் மீதான தாக்குதல்கள் குறித்த சில செய்திகளை நாங்கள் பார்த்தோம். வங்கதேச அரசாங்கம் அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பதையும் கவனத்தில் கொண்டுள்ளோம். துர்கா பூஜை கொண்டாட்டங்கள் வங்கதேசத்தில் தொடர்கின்றது. அதிகாரிகளுடன் நமது தூதரகம் நெருங்கிய தொடர்பில் உள்ளது” என தெரிவித்துள்ளார்.
ஹிந்து கோவில்களில் துர்கா பூஜை விழா தடையின்றி நடக்கவும், பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், 22 மாவட்டங்களில் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஹிந்து கோவில்களை தாக்கியவர்கள் எம்மதமாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்: வங்கதேச பிரதமர்
வங்கதேசத்தில் துர்கா பூஜை பந்தலுக்குள் புகுந்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி சிலைகளை சேதப்படுத்தியது. கலவரத்தில் நால்வர் உயிரிழந்தனர். ஹிந்து கோவில்களை தாக்கியவர்கள் எம்மதமாக இருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்துள்ளார்.
கலவரத்தை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க 22 மாவட்டங்களுக்கு துணை ராணுவப் படை அனுப்பப்பட்டுள்ளது.
தசாரா விழாவுக்காக டாக்காவில் உள்ள தாக்கேஸ்வரி ஹிந்து கோவில் நிகழ்ச்சியில் பிரதமர் ஷேக் ஹசீனா பங்கேற்றார். “குமில்லாவில் நடந்த கலவர சம்பவங்கள் முழுமையாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. யாரும் தப்ப முடியாது. அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமல்ல. அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.” என்றார்.
Xxxx
நவராத்திரி கொண்டாடிய இலங்கை பிரதமர் ராஜபக்சே
நவராத்திரிவிழாவை, இலங்கை பிரதமர் ராஜபக்சே, தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார்.
தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமரின் இல்லத்தில் அக்டோபர் 14 ம் தேதி நடந்த நவராத்திரி விழாவில், ராஜபக்சே, குடும்பத்தினர், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி , மற்றும் நண்பர்கள் அவருக்கு நெருக்கமானவர்கள் கலந்து கொண்டனர். கொலு வைக்கப்பட்டு பாரம்பரிய பூஜை, வழிபாடுகள் நடந்தது.
டுவிட்டரில் ராஜ பக்சே பதிவேற்றியது, எனது நீண்டகால நண்பர் மற்றும் சகாக்களுடன் நவராத்திரி கொண்டியது மிகவும் மகிழ்ச்சி. அனைவருக்கும் பாதுகாப்பான, வளமான , ஆசீர்வதிக்கப்பட்ட நவராத்திரியாக அமைய வாழ்த்துக்கள். கடவுளின் ஆசிர்வாதங்களுடன் நாம் பயணிக்கும் பாதையில் வெற்றி ஒளிர வேண்டும். இவ்வாறு ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணிய சாமி, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் அழைப்பின் பேரில் 2 நாள் தனிப்பட்ட பயணமாக இலங்கை சென்றுள்ளார். கொழும்புவில் உள்ள பிரதமர் ராஜபக்சேவின் அலுவலக இல்லத்தில் நடந்த நவராத்திரி பண்டிகை கொண்டாட்டத்தில் சுப்பிரமணிய சாமி கலந்து கொண்டார்.
தனது இல்லத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் தனது நண்பர் சுப்பிரமணிய சாமி கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக ராஜபக்சே தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.
தனது பயணத்தில் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சாமி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார்.
xxxxx
ராமர், கிருஷ்ணருக்கு தேசிய கவுரவம்; சட்டம் நிறைவேற்ற அலகாபாத் ஐகோர்ட் உத்தரவு
‘இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கடவுள்களான ராமர், கிருஷ்ணருக்கு தேசிய கவுரவம் அளிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என, அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மனு தாக்கல்உத்தர பிரதேசத்தின் சத்ரசைச் சேர்ந்த ஆகாஷ் ஜாதவ் என்பவர், சமூக வலைதளத்தில் ஹிந்துக் கடவுள்களை அவமதித்து பதிவு வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அவர், ஜாமின் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
ஹிந்துக் கடவுள்களான ராமர், கிருஷ்ணர், காப்பியங்களான ராமாயணம், பகவத் கீதை, அவற்றை எழுதிய மகரிஷி வால்மீகி, மகரிஷி வேத வியாசர் ஆகியோர் போற்றப்பட வேண்டும். நம் நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் அவர்களுக்கு தேசிய கவுரவம் அளிக்கும் வகையில் பார்லிமெண்டில், சட்டம் இயற்ற வேண்டும்.இந்திய கலாசாரத்தை குழந்தைகள் தெரிந்து கொள்ளும் வகையில் அவற்றை பள்ளிகளில் பாடங்களாக சேர்க்க வேண்டும்.
அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், ‘ராமர் நம் கலாசாரத்தின் ஆன்மா; ராமர் இல்லாமல் இந்தியா முழுமை பெறாது’ என கூறியுள்ளது.ஒருவர் நாத்திகராக இருக்க அரசியல் சாசனம் அனுமதி அளிக்கிறது. அதற்காக மதங்களை இழிவுபடுத்த எவருக்கும் அதிகாரம் இல்லை. தான் வாழும் நாட்டின் கலாசாரம், கடவுள்களை மதிக்க வேண்டும். இதுபோன்று அவதுாறாக கருத்து தெரிவிக்கக் கூடாது.
Xxxx
மைசூரு தசரா 411-வது ஆண்டு விழா – தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி தேவி
மைசூரு தசராவின் முக்கிய நிகழ்வான 750 கிலோ தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி தேவியை யானை சுமந்து செல்லும் நிகழ்ச்சி அக்டோபர் 15ம் தேதி நடைபெற்றது.
கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெறும் தசரா விழா உலக புகழ் பெற்றது. இது நவராத்திரி மற்றும் விஜயதசமியையொட்டி 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் விழாவாகும். கர்நாடக காவல் தெய்வமாக கருதப்படும் மைசூரு சாமுண்டி மலையில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மன், மகிஷாசூரனை வதம் செய்த நாள்தான் விஜயதசமி நாளாகவும், தசரா விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு கொண்டாடப்படும் தசரா விழா 411-வது தசரா விழா ஆகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான 750 கிலோ தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி தேவியை யானை சுமந்து செல்லும் நிகழ்ச்சி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, யானை மீது அம்பாரியில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி தேவியை மலர் தூவி வணங்கினார். தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அரண்மனை வளாகத்திற்குள் 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Xxxx
பாகிஸ்தான் என்றும் மாறாது ” – மோகன் பகவத் பேச்சு
‛‛ தலிபான்கள் மாறியிருக்கலாம். ஆனால், பாகிஸ்தான் மாறப்போவது கிடையாது” என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில், விஜயதசமியை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பிரிவை அதிகப்படுத்தும் கலாசாரம் நமக்கு தேவையில்லை. ஆனால், நாட்டை ஒற்றுமைபடுத்தவும், அன்பை முன்னிலைப்படுத்தும் கலாசாரம் தான் நமக்கு முக்கியம். பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள் போன்ற சிறப்பு பண்டிகைகளை அனைவரும் இணைந்து கொண்டாட வேண்டும்.
நாடு பிரிவினை செய்யப்பட்டது வரலாற்றில் சோகமான நாள். இழந்த பெருமையை மற்றும் ஒற்றுமையை மீட்கவும், வரலாற்றை புதிய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், உண்மையான வரலாற்றை நாம் எதிர்கொள்ளவது அவசியம். இந்திய கலாசாரத்தை மதிக்க வேண்டும். தற்போதைய இந்திய கலாசாரம், மதம், வரலாற்றை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது.
தலிபான்கள் வரலாறு நமக்கு தெரியும். சீனா மற்றும் பாகிஸ்தான் ஆதரவு அளிக்கிறது. தலிபான்கள் கூட மாறியிருக்கலாம். ஆனால் பாகிஸ்தான் மாறவில்லை, அது மாறாது. இந்தியா குறித்த சீனாவின் நோக்கம் மாறி உள்ளதா? நமது எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த கொள்கையை உருவாக்குவதுடன். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்திற்காக ஆர்எஸ்எஸ் பாடுபடுகிறது.கோவிட் 3வது அலையை எதிர்கொள்ள தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
ஓடிடி தளங்களில் எதை காட்ட வேண்டும் என்பதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. கோவிட் பரவலுக்கு பிறகு குழந்தைகளின் கைகளில் மொபைல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இதனை தடுப்பது எப்படி? இதன் மூலம் கிடைக்கும் வருமானம் தேசவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவது அவசியம்.
மக்கள் தொகை கொள்கையை மீண்டும் பரிசீலனை செய்து, அடுத்து 50 ஆண்டுகளுக்கு ஏற்றவாறு புதிய கொள்கை உருவாக்கி அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்
Xxxx
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியல் வருமானம் ரூ29 லட்சம்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அக்டோபர் 13 உண்டியல் திறக்கப்பட்டது. அதில் பக்தர்கள் செலுத்திய சுமார் ரூ 29 லட்சம் வருமானம் கிடைத்தாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. அதில் பக்தர்கள் செலுத்திய சுமார் ரூ.29 லட்சம் வருமானமாக கிடைத்தாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒரே கல்லினால் ஆன 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இவை 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்படும். அந்த வகையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் உள்ள காணிக்கை பக்தர்கள் மூலம் எண்ணப்பட்டன.
அந்த உண்டியலில் ரூ.28 லட்சத்து 92 ஆயிரத்து 819 ரொக்கம் இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் நரசிம்மசாமி கோவில் உண்டியலில் ரூ.2 லட்சத்து ஆயிரத்து 647 ரொக்கம், 15 கிராம் தங்கம், 100 கிராம் வெள்ளி இருந்தது.
கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி உண்டியல் திறக்கப்பட்டபோது ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில் ரூ.34 லட்சத்து 19 ஆயிரம் ரொக்கம், 26 கிராம் தங்கம், இருந்தது குறிப்பிடத்தக்கது.
xxxx
பாளையங்கோட்டையில் தசரா திருவிழா:12 அம்மன் கோவில் சப்பரங்கள் அணிவகுப்பு
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை தசரா திருவிழாவுக்கு புகழ்பெற்ற இடமாகும். இங்கு உள்ள ஆயிரத்தம்மன், பேராத்து செல்வி அம்மன், முப்பிடாதி அம்மன், முத்தாரம்மன், உச்சிமாகாளி அம்மன், உலகம்மன் உள்ளிட்ட 12 அம்மன்கள் சப்பரங்களில் வீதி உலா வந்து, பாளையங்கோட்டை ராமர் கோவில் திடல், கோபாலசாமி கோவில் திடல், மார்க்கெட் ஆகிய இடங்களில் அணிவகுத்து நிற்கும்.
போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே மாரியம்மன் கோவில் முன்பு சப்பரங்களில் எழுந்தருளும் அம்மன்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து அங்கு நடைபெறும் சூரசம்ஹார விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, கோவில்களுக்கு உள்ளேயே தசரா திருவிழாவை எளிமையாக நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
நேற்று ஆயிரத்தம்மன், பேராட்சி அம்மன், முத்தாரம்மன், உச்சிமாகாளியம்மன், உலகம்மன், முப்புடாதி அம்மன் உள்ளிட்ட 12 அம்மன் கோவில்களிலும் காலையில் துர்கா ஹோமமும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது. இரவு 10 மணிக்கு 12 அம்மன்களும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் பவனி வந்தனர்.
இதைத் தொடர்ந்து 12 அம்மன் சப்பரங்களும் பாளையங்கோட்டை போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள மாரியம்மன் கோவில் மைதானத்தில் ஒன்றுகூடி அணிவகுத்து நின்றன. அப்போது சூரசம்ஹாரம் நடந்தது. பின்னர் 12 அம்மன்களுக்கும் தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் VAISHNAVI ANAND
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Namaste , Namaskaram to Everyone
This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.
Compiled from popular newspapers of India
Read by NITHYA SOWMY
This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at
TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.
Even if you miss our live broadcast on SUNDAYS
you can always visit us on FACEBOOK.COM– slash- Gnana Mayam 24 hours a day.
Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’
Read by NITHYA SOWMY
XXX
Bangladesh PM vows to punish Durga Puja violence instigators
Following reports of vandalism in Durga Puja pandals in Bangladesh, Prime Minister Sheikh Hasina issued a warning to the miscreants and said they would taken to task. “Incidents in Cumilla are being investigated. Nobody will be spared. It doesn’t matter which religion they belong to. They will be hunted down and punished,” she said during an event at Dhakeshwari National Temple in Dhaka.
The Bangladesh Prime Minister’s remarks come after four people died in the violence that broke out at Hindu temples in various parts of Bangladesh, including Chittagong.
Attacks were carried out on Durga Puja sites and temples in Cumilla on October 13 after rumours surfaced that a copy of the Quran was allegedly placed near the feet of a Durga idol.
Attacks were also reported in Noakhali, Chandpur, Cox’s Bazaar, Chittagong, Chapainawabganj, Pabna, Moulvibazara and Kurigram.
The Bangladesh government deployed paramilitary forces in 22 districts to curb the violence. “Investigations are underway and we are identifying the culprits using camera footage,” deputy inspector general Anwar Hossain said.
There are more than 3,000 Durga Pujas in Bangladesh, where Hindus make up for nearly 10 per cent of the population.
XXX
NEWS FROM UTTAR PRADESH
Allahabad HC Judge Wants a Law Giving Heritage Status to Ram, Krishna, Bhagavad Gita
Justice Shekhar Kumar Yadav of the Allahabad high court is at it again.
He made news recently for his remarks that parliament should make a law declaring the cow a “national animal” and include cows within the ambit of fundamental rights. Justice Yadav made these remarks while denying bail to a man accused of cow slaughter.
On Friday, while granting bail to a man accused of making obscene remarks against Lord Rama and Krishna on Facebook, the judge observed that Lord Ram, Lord Krishna, the Ramayana, Gita and its authors Maharishi Valmiki and Maharishi Ved Vyas respectively, are part of the country’s heritage, and should be so recognised by the Indian parliament, by enacting a law.
The judge described the obscene remarks made by the accused as an injury to the faith of the majority of the people of this country and as spoiling the peace and harmony in society, with innocent people being made to bear the brunt of it. Justice Yadav said that if the court was lenient in this case, it would be a morale booster for similar accused, whose conduct would harm the country’s harmony.
However, he granted bail to the accused, taking note of the fact that he had been in jail for 10 months when the trial has not yet started, and is unlikely to end in the near future. The judge gave the accused conditional bail,
Making a reference to the Supreme Court’s judgment in the Babri Masjid-Ram janmabhoomi title case, Justice Yadav said that the apex court had given a verdict in favour of those who believe in Lord Ram.
Justice Yadav also urged mandatory inclusion of lessons for children in all schools on India’s heritage.
XXXX
NEWS FROM ANDHAR PRADESH
Vijayawada’s Kanaka Durga temple hosts 80,000 devotees on Moola Nakshatram
The auspicious occasion of Moola Nakshatram attracted scores of people to take the blessings of Goddess Kanaka Durga Devi, who blessed the devotees in the avatar of Sri Saraswati Devi, on the sixth day of Dasara.
Till 5 pm on Tuesday, close to 80,000 devotees offered prayers at Sri Durga Malleswara Swamy temple atop Indrakeeladri in Vijayawada
“When compared to the previous year, the number of devotees seeking blessings on the day of Moola Nakshatram has risen by over 30 per cent and the number is expected to touch more than one lakh.
Devotees were forced to wait in the queue, braving the rain which lashed the city for a while, as Chief Minister YS Jagan Mohan Reddy visited the temple to offer silk clothes at around 3 pm.
Moola Nakshatram has a special significance as it is the birth star of Goddess Kanaka Durga. Sri Saraswati Devi is the Goddess of education, literature and music. On this day, students queue up at the temple to seek the blessings of the Goddess.
XXX
NEWS FROM KARNATAKA
Trishula Deeksha in Mangaluru
The ‘Trishula Deeksha’ of activists of pro-Hindu outfits held at the Vishwa Hindu Parishad (VHP) office in Mangaluru, on the occasion of Ayudha Puja, has invited criticism from various quarters, prompting Mangaluru City Police Commissioner N Shashi Kumar to instruct his department to verify the matter.
It may be recalled that as many as 150 activists of VHP and Bajrang Dal were given ‘trishulas’ during Ayudha Pooja, under the leadership of VHP Mangaluru divisional secretary Sharan Pumpwell and Bajrang Dal leader Raghu Sakleshpura at the VHP office in Kadri.
Similar training camps were held in Udupi, as well as some other taluks of Dakshina Kannada, and the new members were allegedly asked to “make use of trishul”.
Sharan told TNIE that it is an annual programme observed by the organisation, which could not be held for two years owing to the pandemic. “It is organised as per law where we symbolically offer ‘trishulas’ to new members. This is a training camp for the new activists and they are given ‘deeksha’ here. It is not a weapon and nobody can be harmed by it. We have not conducted the event at a public place. Trishula is given to the activists, motivating them to work and fight for the organisation,” he said.
Meanwhile, the commissioner told reporters that the organisers have stated that they held the programme every year, but he has instructed the headquarters’ ACP to verify it.
Xxxx
MORE NEWS FROM KARNATAKA
Religious conversions: Karnataka govt to survey Christian missionaries
The Backward Classes and Minorities Welfare Department in Karnataka has ordered the officers to conduct a survey of both official and non-official Christian missionaries functioning in the state, according to sources.
The order is being issued in the backdrop of discussion of rampant religious conversions in the state. The decision was taken in the meeting held at Vikasa Soudha on Wednesday by the Backward Classes and Minorities Welfare Committee.
Chief Minister Basavaraj Bommai has reiterated that the government will bring anti-conversion law to impose a ban on forceful conversion activities in the state. “The government is studying laws implemented in this regard by the various state governments in the country. The law in this regard will be enacted soon in Karnataka,” he said.
Xxxx
RSS LEADER’S SPEEACH ON KASHMIR TERRORISTS
RSS chief Mohan Bhagwat on Friday called population control as the need of the hour and cautioned the government about maintaining extra vigil on the borders.
In his Vijaydashmi address IN Nagpur in Maharashtra, Bhagwat said India should be cautious about the Taliban. “The Taliban may have changed, but have Pakistan and China changed?” he asked. “We need to be careful about all our borders,” he said.
Bhagwat said people in Jammu and Kashmir are getting the benefits of doing away with Article 370. “Terrorists want to re-establish fear in the minds of people for their survival, that is why they are doing targeted killings,” he said. “We must give a befitting reply to the terrorists,” he said, speaking on the killings of civilians in J&K.
Bhagwat also called for freeing Hindu temples from the state control.
“We should shun our small egos and embrace everyone,” Bhagwat said in a message to the Hindus. “As Hindus we must all try to remain united and use our power to remain together,” Bhagwat said.
“Everyone should understand that in this land we are all Hindus,” he reiterated.
xxxxx
News from Tamil Nadu
500 kg of temple gold melted so far, TN tells Madras HC
The government had proposed to melt 2,137 kg of gold jewellery at the government mint in Mumbai into bars, which would then be deposited at nationalised banks.
In the wake of a chorus against the Hindu Religious and Charitable Endowments (HR&CE) department’s action to melt temple gold into bars and deposit them in banks, the Tamil Nadu government on Tuesday told the Madras High Court that such a gold monetisation scheme has existed for about 44 years.
Representing the State government, Advocate General R Shanmugasundaram submitted that certain persons were creating a furore over the gold monetisation scheme without realising it has existed since 1977.
“About 500 kg of gold has been melted into bars so far, and deposited at banks. This has earned Rs 11 crore through interest,” the A-G told a division bench comprising Justices R Mahadevan and Abdul Quddhose, when two petitions challenging the melting of gold came up for hearing.
Earlier, appearing for one of the petitioners, advocate Gopal Sankaranarayanan, said the devotees had no clue on the jewellery of the temples as no register was properly maintained by the department, though the court had issued an earlier order regarding the same.
The petitions, filed by M Saravanan and Gopalakrishnan, had sought to quash the September 9 G.O., and a circular dated September 22, citing that deprivation of precious temple property is a violation of the constitutional right to property under Article 300-A of Constitution. The petitions were posted to October 21. The government’s move to melt temple gold donated in the last 10 years has stirred up a controversy with right-wing outfits crying foul over the State’s intentions and its hold over the administration of temples.
XXXX
News from Kerala
Vidyaarambham celebrated in Kerala
Temples and social organisations usually conduct elaborate functions on Vijayadasami Day , when lakhs of children are initiated into the world of letters.
Vidyaarambham, the ritual of initiating children into the world of letters, is held on Vijayadasami day which marks the culmination of Navaratri festivities.
Temples and social organisations usually conduct elaborate functions where lakhs of children are initiated into the world of letters. Social organisations used to organise functions where prominent personalities write the first letters on the tongue of the child using gold ring dipped in honey. At temples priests used to conduct the function.
This time the Travancore Devaswom Board has granted permission to temples to conduct the function as a low-key affair.
At Chottanikkara Devi temple, the temple provided rice in arecanut leaf plates in which the parents can make kids write the first letters.
At Panachikkadu Saraswathi Temple, around 4,000 people have booked for Vidyarambham virtually.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரே சொல் பல இடங்களில் வந்திருந்தாலும் ஒரு இடம் அல்லது சில இடங்களே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதல் எண் பகவத் கீதையின் அத்தியாய எண் ; இரண்டாவது எண் ஸ்லோக எண்
“நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் அது எல்லையை மாற்றும், அது வேண்டாம்! ஆனால் ஏழ்மையின் மீது போர் தொடுத்தால் அது மனித குலத்தின் தொல்லையை மாற்றும்!அதைச் செய்வோம்!!”
தமிழர் தம் அறிவுச் செல்வமான ஔவை மூதாட்டி, ‘கொடியது எது’ என்று கேட்ட போது கூறிய வார்த்தைகள் பொருள் பொதிந்தவை. எந்தக் காலத்திற்கும் பொருந்துபவை. “கொடியது கேட்கின் நெடிய வெவ் வேலோய் ! கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை” என்கிறார் ஔவையார். உலகில் இன்றுள்ள ஜனத்தொகை மொத்தம் 780 கோடி. இதில் பத்து சதவிகிதம் பேர் இன்றும் வறுமையில் வாடுகின்றனர்.
வறுமை என்பதை எப்படி வரையறுப்பது? ஒரு மனிதன் இந்தப் பூவுலகில் உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளை இழந்து வாழ்வதே வறுமை எனச் சுருக்கமாகக் கூறி விடலாம். உணவு, உடை, உறைவிடம், குடிக்க பாதுகாப்பான நல்ல நீர், கல்விக்கான வாய்ப்பு, வாழ்க்கையில் சமூக மதிப்புடன் வாழ்தல் ஆகியவை ஒவ்வொருவருக்கும் இருந்தால் வறுமை இல்லை என்று பொருள். இந்த நிலையை 2030க்குள் எட்டி விட வேண்டும் என்று ஐ.நா. உள்ளிட்ட நிறுவனங்களும் சமூக ஆர்வலர்களும் விரும்புகின்றனர். உலகில் மொத்தம் 3 சதவிகிதம் தான் வறுமை இருக்கிறது என்ற நிலையை அடைந்தால் கூட போதும் என்பதே இன்றைய குறிக்கோள்!
ஒரு குடும்பத்தின் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத வறுமை முழு வறுமை என்று சொல்லப்படுகிறது. ஒப்பீட்டு வறுமை என்பது இரு நிலைகளை வைத்து ஒப்பிட்டு ஏற்றத் தாழ்வை நிர்ணயித்து உன்னிடம் இருப்பதை விட என்னிடம் இருப்பது குறைவு என்று ஒப்பிட்டு உரைப்பதாகும். இதில் முழு வறுமை முதலில் நீக்கப்பட வேண்டும் என்பதே உலகின் இன்றைய குறிக்கோள்.
அமெரிக்கா, ஸ்விட்ஸர்லாந்து, சிங்கப்பூர், அரபு நாடுகள் உள்ளிட்டவை செல்வச் செழிப்புள்ள நாடுகளாக இருக்கும் போது ஆப்பிரிக்க நாடுகளில் (புருண்டி, மத்திய ஆப்பிரிக்கா, காங்கோ, மலாவி, நைஜீரியா, மொஜாம்பிக், லைபீரியா, தெற்கு சூடான், கொமொரோஸ், மடகாஸ்கர் உள்ளிட்ட) பலவும், இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளும் வறுமையை ஒழிக்க வேண்டிய வறுமை நிறைந்த நாடுகளாக இன்று உள்ளன.
வறுமை எவ்வளவு கொடுமை என்பதை ஒவ்வொரு மனிதனும் அவசியம் உணர வேண்டும். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என்பது போல நைஜீரியா திரைப்படத் துறையை நோலிவுட் என்றும் ஜிம்பாப்வே திரைப்படத் துறையை ஜோலிவுட் என்றும் கூறுகின்றனர்.இங்கிருந்து வெளியாகியுள்ள பல திரைப்படங்கள் (The First Grader -2010 – Kenya உள்ளிட்ட ஏராளமான படங்கள்) வறுமையின் கோரத்தைக் காண்பிக்கும் போது உள்ளம் உருகாதவர்கள் இருக்க முடியாது.
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின் கசிவந்த சொல்லயர் மேல் காமுறுதல் பத்தும் பசி வந்திடப் பறந்து போம்
என்ற ஔவையின் வாக்கு அப்படியே திரைக்காட்சிகளாக மிளிர்கின்றன. வறுமையில் குழந்தைகளும் பெண்களும் வாடி வதங்கும் காட்சிகள் திடமான மனத்தையும் கலங்க வைக்கும்.
ஒரு நாளைக்கு 183 ரூபாய் (இரண்டரை அமெரிக்க டாலர்) வருமானம் கூட இல்லாமல் உலகின் பாதி ஜனத்தொகையினர் (780 கோடியில் பாதிப் பேர்) வாழ்கின்றனர். 130 கோடி பேருக்கோ ஒரு நாளைக்கு 92 ரூபாய் (ஒண்ணே கால் அமெரிக்க டாலர்) தான் வருமானம். 9 பேர் உள்ள ஒரு குடும்பம் இரு அறைகளே உள்ள ஒரு கூரை வீட்டில், மண் தரையில் ஆங்காங்கே வாழ்வதையும் உலகெங்கும் பார்க்க முடிகிறது.
100 கோடி குழந்தைகள் வறுமையில் வாழ்கின்றனர். ஒரு நாளைக்கு 22000 குழந்தைகள் வறுமையினால் இறப்பதாக யுனிசெஃப் (UNICEF) தெரிவிக்கிறது. 75 கோடி பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் டயரியா உள்ளிட்ட வியாதிகளால் ஒரு நாளைக்கு 2300 பேர் உலகில் இறக்கின்றனர்.
இதைப் போக்க :
ஊடகங்களும் தனி மனிதர்களும் நிறுவனங்களும் இணைந்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தல் வேண்டும்.
2) ஏழ்மையில் வாடும் ஒரு குழந்தைக்கேனும் ஆகும் கல்விச் செலவை வசதியுள்ளோர் தனி மனிதனாக இருந்து தம் தம் பொறுப்பில் ஏற்க முன் வர வேண்டும்.
3) பணமாக உதவி அளிக்க முடியாதோர் புத்தகமாகவோ, உணவுப் பொருள்களாகவோ தானமாகக் கொடுத்து முடிந்த அளவில் ஏழ்மையை ஒழிக்கலாம்.
4) பெண்களை இழிவு படுத்தாமல் அவர்களுக்கான சமூக நீதியை உறுதி செய்து ஆணுக்குப் பெண் சமம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
5) உலகளாவிய விதத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்
6) அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதி, நல்ல நீர் கிடைக்கும் தன்மை ஆகியவற்றை பகுதி வாரியாக உறுதி செய்ய வேண்டும்.
7) கல்வி அறிவில்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். யுனிசெஃப்பின் கணக்கீட்டின் படி இன்று 100 கோடி பேருக்கு எழுத்தறிவு இல்லை.
வறுமை ஒழிப்பு என்பது ஒவ்வொரு மனிதனுக்குமான கடமை என்ற விழிப்புணர்வே இன்றைய அவசியத் தேவை; அவசரத் தேவையும் கூட!
வறுமைக்கான காரணங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதமாக அமைந்துள்ளன. ஓரிடத்தில் குடிநீர் இல்லை என்றால் இன்னொரு இடத்தில் போரின் பாதிப்பினால் மக்கள் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
ஒரு நாட்டில் பெண்களுக்கான சமூக நீதி மறுக்கப்படுகிறது என்றால் இன்னொரு இடத்தில் எதிர்பாரா இயற்கைச் சீற்றங்கள், சீதோஷ்ண நிலை மாறுதல் ஆகியவை பாதிப்பை உருவாக்குகின்றன.
ஊட்டச் சத்து இல்லாமல் குழந்தைகள் நோஞ்சான்களாக ஓரிடத்தில் இருக்கும் போது தரமான கல்வி இல்லாமல் இன்னொரு இடத்தில் குழந்தைகள் வாடுகின்றனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக ஜனத்தொகைப் பெருக்கம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
இப்படிப் பல காரணங்கள்! இவை அனைத்தையும் ஒட்டு மொத்தமாக நீக்குவதே வறுமை ஒழிப்பு நாளின் உலகளாவிய நோக்கமாகும். அந்த நாள் தான் அக்டோபர் 17.
1987இல் அக்டோபர் 17ஆம் தேதியன்று பாரிஸில் ஒரு லட்சம் மக்கள் ஒன்று கூடி வறுமையை ஒழிக்க உறுதி பூண்டனர். அந்த நாளை ஐ.நா. 1992ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக உலக வறுமை ஒழிப்பு நாளாக அறிவித்தது.
கொடிய வறுமை மனித குலப் பாதுகாப்பிற்கான பொதுவான அச்சுறுத்தலாகும். குற்றங்களுக்கும் தீவிரவாதத்திற்கும் அடிப்படை தாள முடியாத வறுமையே.
செய்யாத ஒரு குற்றத்திற்கான தண்டனையே வறுமை.
நன்கு ஆளப்படும் ஒரு நாட்டில் உள்ள வறுமை அந்த நாட்டின் வெட்கக் கேடு.
ஒரு நாட்டின் வரலாற்றை செல்வந்தர்கள் மட்டும் எழுதவும் கூடாது; பழிகளை மட்டும் ஏழைகள் மீது அவர்கள் போட்டு விடவும் கூடாது.
ஆகவே தான் வறுமை இல்லாத நாட்டைக் கனவு கண்ட திருமூலர் அன்றே சொன்னார் ‘யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி’ என்று கூறி உண்ணும் போது அடுத்தவரை நினைத்து அவருக்கும் ஒரு பிடி கொடு என்றார். அத்துடன் அவர் கூடவே சொன்னார்:
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே
ஏழைக்கு ஒன்றைத் தரும் போது அது இறைவனுக்கும் சேரும்; ஆகவே இருவரையும் அது சேர்வதால் இரட்டிப்பு பலனைத் தரும் என்பது அவர் வாக்கு.
‘தேடு கல்வி இலாததோர் ஊரை தீயினுக்கு இரையாக மடுத்தல்’ என்றார் மகாகவி பாரதியார். ஆக கல்வியும், உணவும், நல்ல நீரும் இருப்பதை ஒவ்வொரு மனிதனும் உறுதிப் படுத்த சூளுரை எடுக்க வேண்டிய நாளாக அக்டோபர் 17 அமைகிறது.
வறுமை இல்லாத உலகை உருவாக்குவோம். மனித குலம் என்றும் வளமுடன் நீடித்து இருக்க நமது பங்கை ஆற்றுவோம்!
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
ஆதிசைவப் பிரபாவம்! : ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் வெளியீடு!!
ச.நாகராஜன்
கள்ளக்குறிச்சி ஆதிசைவர்கள் நலவாழ்வு மையத்தின் நிறுவனரான தில்லை சிவஸ்ரீ கார்த்திகேய சிவம் சிறப்பு மிக்க பழைய நூல்களை வெளியிட்டு சிவப்பணியைச் செய்து வரும் சிவத் தொண்டர். நூற்றாண்டுகளுகு முன்பே ஆதிசைவர்களின் பெருமையை உரைக்கும் நூலாக இருக்கும் ஆதிசைவப் பிரபாவம் என்ற நூலானது காலவெள்ளத்தில் அழிந்துவிடாமல் உயிர் பெற வேண்டுமென்ற நல் நோக்கத்தில் இந்த நூலை அவர் 2017 டிசம்பரில் பதிப்பிட்டுள்ளார். 1880ஆம் ஆண்டு இந்த நூல் முதன் முதலாகப் பதிக்கப்பட்டது.
இந்த நூலை எழுதியவர் ஸ்ரீ சோமசுந்தர நாயகர் ஆவார். இவரது காலம் 1846 முதல் 1901 முடிய ஆகும். இவர் சுமார் 126 நூல்களை எழுதியதாகத் தெரிகிறது. தனது உத்யோகத்தை விட்டு விட்டு இவர் சைவப் பணி ஆற்ற களத்தில் இறங்கினார். இவரது சிறப்பான சைவ சமயப் பணிகளைக் கண்டு வியந்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள், இவருக்கு “வைதிக சைவ சித்தாந்த சண்டமாருதம்” என்ற பட்டத்தைச் சூட்டினார்.
பாஸ்கர சேதுபதி மன்னர் விவேகானந்தர் அமெரிக்காவில் வெற்றிக் கொடி நாட்டி விட்டு தாயகம் திரும்பும்போது அவரைப் பெரும் வரவேற்புக் கொடுத்து வரவேற்றவர். அவர், விவேகானந்தரை தமது அரசவையில் சோமசுந்தர நாயகரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். அப்போது நாயகர் விவேகானந்தரிடம் வேதாந்தம் போன்று ஆகமங்களின் சாரமாக விளங்கும் சைவசித்தாந்த தத்துவத்தை எடுத்துக் கூறினார். விவேகானந்தர் அது கேட்டு வியப்புற்றார் என்பது தெரிய வருகிறது. பரசமயங்களின் தத்துவங்களை அக்கு வேறு ஆணிவேறாக ஆராய்ந்து அவற்றைத் தவிடு பொடியாக்கும் சூரர் என்பதால் இவருக்கு திருவாவடுதுறை ஆதீனம் “பரசமயக் கோளரி” என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்கள்.
நூல் முழுவதும் ஆதி சைவர்களின் சிறப்பைக் காணலாம். அத்துடன் மட்டுமல்லாமல் “சைவ வேடம் பூண்டு திரியும் வஞ்சகப் பேய்களை” இவர் சாடுவதையும் காணலாம்.
ஆசாரியர் என்பவர் யார்? நாலு வேதம் ஆறு அங்கங்களை அறிந்தவரகவும், ஞான பாதங்களை நன்கு போதிப்பவராகவும், கிரியா பாதத்தில் சமர்த்தராகவும், யோக பாதத்தில் அப்பியாசம் உள்ளவராகவும், சரியா பாதப் பிரகாரம் நடத்தை உள்ளவராயும், சிவபூஜை, சிவாகினி இவைகளைத் தப்பாமல் நடத்துகின்றவராயும் உள்ளவரே ஆசாரியர் ஆவார்.
ஆதி சைவர் சிவத்விஜர் . மஹா சைவர் பிராம்மணர்கள். அநு சைவர் க்ஷத்திரியர் மற்றும் வைசியர்கள். அவாந்தர சைவர் சூத்திரர்கள். பிரவர சைவர்கள் என்பவர் சவர்ன அம்பஷ்ட மத்யஸ்த குலாலர்கள், அந்த ஜாதியார் அந்ய சைவர் ஆவார்.
சகலபிராணிகளுக்கும் ஹிதத்தைச் செய்பவனே ஆசாரியன் ஆவான்.
ஆசாரிய நிதிகளாகிய சிவ வேதியரே சரவ அநுக்ரஹத்வாதி பரம தர்மங்களை உடையவராய் விளங்குவர்.
இப்படி இந்த நூல் ஆதி சைவரின் பெருமையை தகுந்த பிரமாணங்களுடன் சித்தரிக்கிறது. பர சமயங்களை நிராகரிக்கிறது.
சோமசுந்தர நாயகர் இயற்றியுள்ள 47 நூல்களின் பட்டியலை நூலின் இறுதியில் காணலாம்.
48 பக்கங்கள் உள்ள இந்த நூல் அழகிய தாளில் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. ஸ்ரீ சோமசுந்தர நாயகர் வரலாற்றைச் சுருக்கமாக தில்லை சிவஸ்ரீ கார்த்திகேய சிவம் தந்துள்ளார்.
சைவத்தில் பற்றுள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது. ஆதிசைவர்கள் நிச்சயம் இதைத் தங்களுடன் வைத்திருக்க வேண்டும். அத்துடன் மட்டுமல்லாமல் ஏன் சைவம் அல்லாத பர சமயங்கள் நிராகரிக்கப்படுகிறது என்பதற்கு அடிப்படையான வாதங்களையும் இந்த நூல் தருகிறது.
பதிப்பாசிரியர் தில்லை சிவஸ்ரீ கார்த்திகேய சிவம் நமது பாராட்டுக்குரியவர்.
40 ரூபாய் விலையுள்ள 48 பக்கங்கள் கொண்ட இந்த நூலை அன்பர்கள், ஆதி சைவர்கள் நலவாழ்வு மையம், குளத்து மேட்டுத் தெரு, கள்ளகுறிச்சி, 606 202 (போன் 97518 47933) என்ற முகவரியிலிருந்து பெறலாம்.